தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, November 23, 2021

கூந்தலில் மருக்கொழுந்து சூடிய ஈஞ்ச நாடன் கதை -கோணங்கி ===============================================================

கூந்தலில் மருக்கொழுந்து சூடிய ஈஞ்ச நாடன் கதை -கோணங்கி

===============================================================

ஆம்புராவில் உருவி எடுத்த செந்நிற அரவத்தை கையில் விட்ட வேடன் மறைந்த கனவில் உடல்மேல் தொட்டு நெளிந்து சுற்றி காமுக ஈர்ப்பில் உறிஞ்சி நகரும் அரவத்தின் பல்அடுக்கு ஆயிரம் குமிழ் குமிழாய் உதிரம் தொட்டு எலும்புடன் ஊறும் அருவி விலாவெலும்பில் இரைத்துபாய சுருதிமேல் பறந்தது செந்நிறமாய் விண் நோக்கி, கமகங்களின் வளைவில் கீழ்பாய்ந்த ஆதித் தோட்டத்து மரக் கிளையில் இலையில் ஒன்றாகி ஏன் எங்கே எனக் கேட்ட அரவத்தின் விழிப்பில் கட்புலனாகா பாசிக்கண் தோன்றிச் சுழியும் நீரில் மிதந்து கொண்டிருந்த பார்வை சுழன்று எல்லாத் திசையிலும் பாய்ந்த செந்நிற அரவம் பாசி ஒளி மூடியிருந்த குகையில் உதிரும் வர்ண மூலிகை ஒளிச் சாறு கசிந்து முதிர முதிரப் புலப்பட்ட கனவு நெளிந்து செந்நிறக் குகையில் தீட்டிய பாறைப் படிவுகளில் நிறம்பல தோன்றி ஆயிரம் நரம்புத்தொகை கொண்ட ஈஞ்சநாட்டு அரக்கர் இனத்தின் பேரியாழ் ஈஞ்சமரங்கள் சூழ்ந்த திணையில் மௌனமாய் கரையும் கருதிகள் வளைந்து கமகங்கள் படர்ந்த இலைகளுடன் ஈஞ்சாள் எனும் கீழை ஸ்திரீயின் முன் தோன்றியிராத செந்நிற கதாச்சுரள் சுருண்டு கொண்டது பாசிக்கண்ணில் நீர் முள்ளிப்பாசிகள் மெல்ல நகர்ந்து அவள் உடலை மூடியிருந்தன பச்சையால். 

மயங்கிப் பரவிய கண்ணாடிச் சட்டத்துக்குள் எப்போதும் பூட்டியிருக்கும் அவ்வீட்டு ஈச்ச நிழலில் ஆடும் ஊஞ்சலில் ஈஞ்சாளின் தாயின் தாத்தா செதிலாய் சுருண்டு வளைந்து வயோதிக மூச்சில் ஆயிரம் நெல்கதிரேந்தி உதிர் நரம்புகளில் விரல் அசைய கிழவனின் நிர்வாண உடல் பாசிபடர்ந்து ஒவ்வொரு நெல் ஈக்கியிலும் பூதகண சுரவரிசை ஒற்றைச் சடைக்குதிரைவாலிக் கதிர் அடுக்கைக் கொண்டு பூமியில் குனிந்து நாணி தன் வேரைத்தொட குதிரைவாலி உதிர்ந்தோடும் விண்பரப்பில் அதிரும் சோகம் கட்புலனாகா ஈஞ்சம்பூவின் அடியில் பதுங்கும் செந்நிற அரவம் படர்ந்த கன்னிகை ஈஞ்சாளின் நீள விரல்கள் நேர்த்தியான சுரங்கள் நெல்லின் ஒளிக்கோர்வைகளாக மாறி மறைந்த நிலத்தின் வெண்பளிங்கு மிருகங்கள் பெயர்ந்து உறும வயலில் உறைந்துவிட்ட அலை கர அடுக்கைத் துளைத்து மேல் எழும் குதிரைவாலிக் கதிரடுக்கு சடைசடையாய் அகரனின் யாழ் நரம்பில் குதிரைவாலித்தவசம் சுழன்று உருள சிங்கங்கள் மயங்கும் செந்நிற அரவின் புலத்தில் திறந்த கதவுவழியே வந்த ஊஞ்சலில் ஆடும் கிழவன் உடல் செவுளில் புதைந்து செம்மஞ்சள் பிடறி முடிகளில் சிலிர்த்து படபடவென விதிர்த்து இரவெல்லாம் உரசி லயிக்கும் அசைவற்ற வன ராசாக்களான சிங்க முகங்கள் தோன்றி விசும்பிய கால்தூக்கி கிழவன் தோள்களில் வைத்து நாக்கால் தடவும் சடை முடியை 

க 


122 

மரச்சதுரத்தினின்று வெளியேற ஆடிக் கொண்டிருக்கிறான் ஊஞ்சலில். கையிலேந்திய ஒவ்வொரு கதிரினாலும் ஈஞ்ச ஓலையில் சுருண்டிருந்த ஒவ்வொரு நரம்புகளினூடே கீறியவாறிருந்த சங்கேத குறிகளை நூறுவகை நெல்லாக மாற்றி உதிரும் நாற்று வர்ண மடலை மடித்து அடுத்தகதிரை எடுத்தான் கிழவன். உயரமான கதிரிலிருந்த நெல் உதிர்ந்து தரையில் சிந்தியவாறு உருளும். வீட்டுக்கு வெளியேயும் சிதறிய மணிகளில் கிழவன் கீறிய கோடுகள் இருக்கும். வெளியில் எடுத்துச் செல்ல முடியாத பேரியாழில் பதிந்து கிடக்கும் நெல்மணிகளோடு ஈஞ்சாளும், நெல் நிரம்பிய அவள் எலும்புத்தண்டில் பாயும் நரம்பு அருவி வளைய எண்புகளில் கற்றி வடிவமைந்த பல வெப்ப ரத்தப்பிறவிகளாய்த் தொடரும் ஈஞ்ச யாழைத் தேடி புலப்படா நிலங்களின் தொன்மம் அலைந்த வாறிருக்கும். 


ஈஞ்சவயல் எனும் பழைய ஊரின் இழப்பிலிருந்து மறைந்த யாழ் ஐந்து நிலங்களில் மயங்கி அலைவுறுகிறது. கரடிமுடியடர்ந்த ஈஞ்சானின் உடலில் முதுகுச் சுழிகள் சுற்றி வந்தன ஏறுபூறாணாய். இறங்குபூறாணின் விதிவசத்தால் இடிமேல் இடிச் சுழிகள், சுவர் தேள் கடந்து செல்கிறது பாசி மூடிய யாழை. விருச்சிக விரல்கள் தந்தியில்பட்டு விஷஒலி அதிர ராசி மண்டலத்தில் மறைந்து தேய்ந்தது. நிர்வாணியின் கையில் வரைந்த நகராத பச்சை விருச்சிகம் மெல்ல நகர்ந்து முணுமுணுத்தது அந்தரங்கத்தில், தரைக்குப் பதிலாய் பச்சை வெள்ளை சதுரங்கக் கட்டங்களில் மாறிமாறிச் செல்லும் ஊஞ்சலின் இரு நிழல்களில் வேறு யாரோ நகர்ந்து வருகிறார்கள் அவனிடம். ஊசி ஊசியான ஈஞ்சம் பூக்களை வைத்து வெள்ளைக்கட்டங்களில் மறைந்திருக்கிறான் ஈஞ்சான். அவனிடம் தோற்றுப் போன வேடர்கள் வில்யாழின் ஒற்றை நாண் அதிரப் பச்சைக் கட்டங்களில் மறைந்தவாறே அழைக்கிறார்கள் மிருகங்களை, ஓடிச் செல்லும் வேடர் கையில் முதல் வில்லில் அதிர்ந்த நரம்பே யாழின் ஆதி ஸ்ருதி என வாதாடுகிறான் வேடன் பூக்களிடம். தலைகவிழ்ந்த ஈஞ்சானின் கண்களின் ஆழத்தில் பூக்களின் மர்மம் ஒளிந்திருக்கக்கூடும். எல்லா நிறங்களின் ஸ்ருதி எல்லையில் மயங்கும் தேரிப்பூவின் மெலிவு மெலிவுக்கு மெலிவு சமன் வலிவு வலிவுக்கு வலிவு என ஐந்து தாளங்களில் ஊசிப் பூக்கள் மாறி மாறி வெள்ளைப் பூவின் விநோதம் அவன். 


கண்ணைக் குருடாக்கும் இருளால் தைக்கப்பட்டிருந்த ஈஞ்சாளின் இமையுள் பதிந்த நெல் மெல்லத் திறந்து வெளிர் மஞ்சலான நீளமான இரு உமியில் கோடு கோடாய் கீறியிருந்த கதா ஒளி வயல் நிலத்தில் காயும் கதிர்கள் மீது படிய எல்லா மணிகளிலும் பால் ஒளி உறைந்து அறுப்பறுக்கும் இருளடைந்த ஜனத்தின் பாடு குருதியோடு நெல்லுக்குள் மறைந்துவிட ஈஞ்சாள் ஏந்தி வந்த கர்ப்பத்தில் ஒரு நெல்லின் உரிமை கொண்டாடி மரபாய் தரைதொட்டு எழுந்த எலும்புக் கருக்கறிவாள் வீசி வீசி உரையாடலைத் தொடங்க அவர்கள் பின்னே விட்டுச் சென்ற கட்டைத்தாள் ஈஞ்சாளின் காலால் மிதிக்கப்பட்டபோது குத்தியது. சிறு சிறு வெண் மேகங்கள் சூரியனை மெதுவாய் கடக்கும்போது வயல் வழியாக நிழல்பாய்ந்தோடியது, 


அறுப்புக்காரர்கள் குனிந்து நகர அவர்கள் பின்னே அலாதியாக இருட்டிவரும் சிறுபெண் ஈஞ்சாள் சிந்தின கதிரை சேகரித்து வந்தாள். 


மெல்லிய மூச்சுடன் அசையும் ஈச்சமரங்களிடையே நீண்ட முடிவளர்த்த ஈஞ்ச நாட்டு அறுப்புக்காரர்கள் சிணுக்கோலியால் முடிசிலுப்பி கோணல் கொண்டை 


123 

ஊசி சொருவி முடிந்த குழலில் உண்ணிப்பூவும் மருக்கொழுந்தும் சூடித் திரிந்தார்கள் தேரியில், செடிகள் மறைக்க கூந்தல் விரித்த ஆண்கள் கள்ளிக் குடி.அருவாள் வீச்சில் நீண்டு வளைந்து கிடந்த நிலப்பரப்பில் நேருக்குநேர் கழுத்தைக் குடைந்து எடுத்த ஈச்சங்கள் ஊறி நுரைத்துப் புளித்த கல்சுவரில் உதிரும் யாழ் வடிவங்களைப் பார்த்தவாறு முன் அறியப்படாத காலத்துள் இடறி விழுந்து மருதத்தில் பொங்கும் தேரைக் கலயங்களுடன் கள் உண்ட வெறி கண்களில் சிவந்து பழுத்து வாய குலவை ஒலி ஈஞ்சங்காட்டு மிருகங்களைக் கூவி அழைக்கும். தானே எழுந்து வளைந்த தேரி நில வெண்வெளி சுருண்டு ஹோ ஹோ வென மனதில் அலறி வெளியில் மௌனம் காத்த கற்பகோடி வருஷ உருளலில் மிதந்த சுருதியசைவில் சமைந்த கூரைவீடுகளின் வாசல் ஜன்னல் கற்களில் ஒளிர்புகை நீலஅவாந்திரம் காத்திருந்தது எட்டிப் பார்த்தவாறு. தொலைவில் அசையும் காற்று கிளைகளில் தங்காமல் போய் வீடுகளின் ஈச்ச ஓலைகளில் ஒலிப்படாமல் உறைந்து துயிலும் நிசப்தத்தில் ஈஞ்சநாட்டார் விழித்த கண் உருட்டி எதிரியின் கழுத்தைக் குடைந்து எடுத்த கள்ளில் கடிக்கும் காடி உறுமலில் வனமே நுரைத்தது பாறைகளில் சிரிப்பும் ஊளையும் கொண்ட நரிகள் தேரை குடித்த வெறியில் கால் தூக்கி வால் சுழற்றி ஏன் ஏன் எனக்கேட்டு தன் வாலுடன் பேசும். வேடர் வில்யாழ் அதிர்வுகளை நரிதன் குரலில் ஊளையிட ஒற்றை நரம்பை முறுக்கி கானில் ஓடும் வேடர் காலோசை திடுதிடுமெனக் கேட்டது தொலைவில், நகரும் பாறைகள் மீது ஜந்துக்கள் ஊர்ந்து குரல்பலவாய் வந்து ஈக்கியாய் கரைந்து ஆயிரமாயிரம் நரம்புத்தொகை கொண்ட மிருகயாழ் ஈஞ்ச நிலத்தில் எரிய தீவிர மயக்கத்தில் ஈஞ்சர்களும் நரியாய் கூகையாய் வெருளாந்தையாய் அகவி வௌவாலாய் மாறிப்பறந்து ஊஞ்சலில் ஆடும் கிழவன் உடலில் சிறகடித்து மறைகிறார்கள். அவை கீறிய குரல்கோடுகளை கற்றையாக ஏந்திய நெல்கதிரில் சேர்த்து பிடித்திருந்தான் ஈஞ்சான். ஊருக்குள் பூனைவேட்டை நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள் பெண்கள், உணவுக்காக வெளியில் அலைந்து கொண்டிருக்கிறான் எங்கோ. வாயோரம் உறைந்திருந்த ரத்தத் துளிகளோடு முணங்குகிறான் கிழவன். ரத்தவாடை கண்ட மிருகமாய் மேலும் கீழும் இருநிழல்கள் நடமாடக்கூடும். வேடர்கள் பின் தொடர்கிறார்களா. இரவு முழுவதும் வேடர் களுடன் வாதாடிக் கொண்டிருக்கிறான் தானாகவே. கண்ணாடிச் சட்டத்தின் திருகாணிகளில் பூனைரத்தம் பட்டு கிறுகிறுத்து உளறி நடுங்கும் ஆணிகள், கண்ணாடியைக் கரும்பும் சப்தம் இரவுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. வந்து பார்த்தால் கிழவன் பற்கள் அசைபோட்டவாறு பீங்கானை விழுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. குடலை அறுத்துக் கொள்ள விரும்புகிறான் போலும். குடலுக்குள் வளர்ந்த காளான் ஏற்படுத்திய உணர்வுகளால் புராதன வீதிகளில் நடமாடக்கூடும். குடல்வயிற்றை அறுத்து காளானைப்பார்க்க விரும்பினான். முட்டைக்காளானுடன் பேசி வறக்காளான் பொறுக்கி வேகவைக்காமல் அசை போட்டது வாய். குமிழ்விட்டுவந்த வாக்காளான் காடுகளில் அனந்தவெளி அசைவதைப் பார்த்தான். அவளால் ஒன்றும் பேசமுடிவதில்லை அவனோடு விநோதப்பழக்கங்களுக்கு ஆளான வயோதிகனின் சித்தம் இசையும் ரத்தமும் கலந்து வெளிப்பட்டது தீராமல். அறையுள் வௌவால் ஒன்று பறந்து பறந்து கிழவனை எச்சரித்தும் சிரித்தும் கூக்குரலிட்டும் பாடிக்கொண்டிருந்தது. அவனிடத்தில் உலர்ந்த நெல்வாடை வீசியது. அறுவடைக்காலம் துவங்கி விட்டதென்று நெல்லின் காற்று வீசிக் கொண்டிருந்தது அருகே. காய்ந்த 


124 

நெல்கதிரின் மணம் - அலையலையாய் பாவி விருட்சங்களிடையே போய் பொடிப்பறவைகளை தேன் சிட்டுக்களை தொட்டு வயல் ஏவின. 


வந்தேறி ஜனம் வயலில் குடிபோட்டு அறுவடையான வயலின் குறுக்கே நெல் பெட்டியுடன் பாதைபோட்டுச் செல்ல மேகத்தின் நிழல்கள் உருவை மாற்ற வயல்மேல் செல்வதை அண்ணாந்து பார்த்தாள். ஆயிரம் நரம்புத்தொகை கொண்ட பாசிக் கண்ணில் மேகங்கள் சிதறி வளைந்து கீழே சரிய நீரில் சலன மடைந்தவாறு முன் ஜனத்தின் ஆதிச்சருக்கத்தை பேரியாழின் அதிர்வு வழி சொல்லத் தொடங்கினான் கிழவன் ஒரு ராத்திரியில். 


ஏதோ மழை இரவுகளில் பழுப்பு நிற தினைமணிகள் கண்திறந்து பேசிய படபடத்த இமைமேல் வரிவரியாக கீறிய பாராயணத் தாள்கள் வெளிறி உதிர ஆவி விளக்கின் செந்நிற சுடரில் வந்த பார்வை தீண்டி நகர்ந்த வரிகளில் குமிழ்விட்ட பாறை முகங்களின் கற்பனா வீரர்கள் கிளம்பி ஊரை அரசிருக்க வந்து சுவர் ஓரம் ஒளிந்து கேட்டனர் தங்கள் மீதான புராதனத்தின் ஏற்ற இறக்கமான குரலின் ராகத்தை. தினைக்காட்டின் ஊடே போன வண்டிச் சக்கரம் மத்தளமாய் முழங்கி தூர முணுமுணுத்தது தினையுடன். அம்பாரமாய் அறுத்து குவிந்த தினைக்கதிர் பொடிச்சுடர்களாய் விழித்து ஊர்மடத்தில் கூடிய தலைகள் சாய்த்து அதிசயத்தில் புகுந்து கேட்ட பெரிய எழுத்துத்தாளில் உதிர்ந்தோடிய தினைவாசனை வீசும் காடு பழுப்புநிறமாய் தோன்றி அசைந்தது. யாரோ காய்ந்த தினைக் காட்டின் ஊடே ஓடி வருகிறார்கள். காடுசூழ்ந்த கூரை மடத்து பெரியவரின் கந்து கந்தலான ஆடைமேல் பாராயணவாசகம் காயும். பெண்களும் முதியவர்களும் யுவர்களும் கண்விழித்துப் பார்த்த தேரிவெளியில் எல்லாக் கோடுகளுமே வளைந்தது வெளியுடன். எதையும் கண்ணால் சுருட்டி கற்பனை காண இருந்த பழுப்புக் கதிர் தினைமுளைத்து வெளிவந்து பாராயணம் கேட்போர் மனம் குமுறியது. மடத்தின் விளக்கடியில் புஸ்தகப்பலகையில் கீறிய மரங்களின் நிகண்டு வரிசைமாறி பின்புலமானது ஊர்ப்புராணம். வரிவிளக்கில் அசையும் வீச்சின் நிழல்கள் விருட்சங்களின் அந்தரங்கப்பாதையில் செல்ல ஜனம் கூடி இருட்டுத் தலைகள் திறந்த ஏடுகளில் கற்பனை வலியும் வசீகரஉருக்களும் சுடர்களாய் அசைந்து தினைக்கதிர் திறந்து ஆயிரம் எழுத்தில் விசும்பி எழுந்த வீரர் ஜனத்தின் தாந்திரீக 

மூளைகளில் விநோதமாய் வளைந்து வருகிறார்கள் திசாதிசையில். 

அப்பால் ஜனம் ஊழியில் திருகிய காலச்சுழியில் எரியும் சுருதிகள் நெல்கதிர்களில் பற்றி இசைக்கப்பட்ட வரப்பில் துவண்டு கிடக்கும் வெளிர்மஞ்சள் கதிர்களிடையே கால்வைக்காமல் தாண்டி நடந்தாள் ஈஞ்சாள். அவர்கள் அறுப்பறுக்கும் வயலில் குனிந்து எதையோ வாதாட விடுகதிர் சேகரித்தவாறே ஈஞ்சாளின் பாசிக்கண் திறந்து கொட்டிய முன் காணா நீள நெல்லை அவர்கள் பார்த்து தரை மேலே முகம் குப்புற விழுந்து அழுது ஈக்கி நெல்மணிகளை கையிலேந்தி அதில் இருட்டு இனத்தின் ஜாடை வெளிப்படக் கண்டு கதறினார்கள். அது தரையில் , விழுந்தபோது ஓசையும் ஒளியும் உண்டானது. வானத்திலிருந்து விழுந்த ஆலங் கட்டியின் குளிர்கொண்ட ஈக்கி நெல்லை விரல்களுக்கிடையே மூடினார்கள் - நடுங்கியவாறே 

அறுப்பு அம்பாரத்தின் மேல் அவளை அமரவைத்து “ராஜாத்தியே உன்கையும் காலும் காணாமல்போன தகப்பனும் மகனும் போலிருப்பதேன். எங்கள் 


125 

சாடையில் விழிக்கப் பண்ணுவதேன் உன் கண்கள். வனாந்திரத்திலிருக்கும் நமது குடியிருப்பில் திரியும் காட்டுப்பகடையின் மிருகத்தொலியால் உனை மூடுவோம். தொலைவாகப் போன அறுப்புக்காரர்கள் வந்து பார்க்கும் வரை எங்களோடிரு குச்சிலிலே. காடிக்கஞ்சியில் கை நனைத்து பகிர்ந்து கொள் மகளே. உன் முக வெட்டு தைலான் பறவை போலவும் தண்ணிப்பார்வை குடும்பனின் மண் வெட்டியாகவும் இருக்கிறதே. அவன் பட்டினவாசலில் காத்திருக்கிறான் நெல் மணக்க. நகரத்தார் வந்து, அவனை மோந்து பார்ப்பதில்லை. நெல் சுமையோடு காணாமல்போன முத்து வேலை அமைத்துவா'' என்றார்கள். அவளும் பட்டன வாசலில் நிற்கக்கூடும். அவள் திரும்பாவிட்டால் நீயொருத்தி ஆதரவாக இருந்துவிடு குட்டியே என கூவினார்கள் பச்சைப்பெண்கள். தற் செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்தவயல் நிலம் ஈஞ்சாளின் வமிசத்தாரின் முன் வயலாக இருக்கும். பாசிக் கண்ணைப் பார்த்து பலரும் கூடி குலவையிட்டு கதிர் பிடித்து அறுத்தார்கள். உலந்த வயல்மீது எழுந்த காற்று அடுக்கடுக்காய் ஊர் நாட்களின் பகல் ஒலி மாறி வந்தது. 

இலைகள் படர்ந்த ஈஞ்சாள் ஜன்மதேசத்திலிருந்து முன் அறிந்திராத ஜனங்களிடத்தில் வந்து வயல் மேட்டில் வைக்கோல் வெளிறிய கூரை நிழலில் வாசமாயிருந்தாள். அதிசயித்திருந்தன காடுகள். வனாந்திரப்பட்சிகளெல்லாம் வயலிறங்கி அவள் தடத்து வழிநடந்து ரேகையிலிருந்து ஒலியை திரும்பக்கூறி கூச்ச மடைந்து ஈக்கி நெல் தேடி அந்த ஊரில் படர்ந்திருந்த கிளைகளில் தாமசித்தன சத்தங்களோடு. கனி மரங்கள் பூத்து வண்டுகள் கரகரத்து உராய்ந்து சிலிர்த்து சொரிந்த தித்திப்பான கனிகளையுதிர்த்து சூதெறும்புகள் அறியாவண்ணம் கனி வாசத்தில் சிரித்தன மயங்கி. 


பிழைக்க வந்த இடத்துக்கு வயதுசென்ற அத்தையோடு கூட வந்த கனவின் செந்நிற அரவம் வழிநடந்த தேசாந்திரங்களில் மறைந்து விட நீரைக்காணாமல் சத்தமிட்டு அழுத மாடுகளோடு சேர்ந்து அழுதார்கள். சுருட்டைமாடுகள் உயரத்தில் * காதசைத்து பாறைக்குள் உருளும் தாய்ப்பசுவின் கண்ணீர் திரும்பிய திசை யெல்லாம் தாகத்தில் அலைந்தமாடுகள் பின்னே சென்றார்கள் ஈஞ்சாளும் அத்தைக்காரியும், இரவெல்லாம் கனவின்றி புலம்பி அழுதாள் அத்தைக்காரி. உலர்ந்த நில நீலவிந்தில் சுருண்டு உயிரின் அனந்தத்தில் கனவிருந்த செந்நிற அரவு திரும்பி வந்து அவள் முன் நெற்றிவரை விசும்பி படமெடுத்து வனாந்திரத்தில் பசித்திருந்த தாது வருஷத்தின் நினைவுகளை வதைபடும் காதையாக உரைத்தது புராணவிநோதத்தில். எழுத்தாணிகளில் இறங்காத துடி துயரங்கள் கூந்தப் பனைகாயும் கூம்பறுத்து சரியும் பாழ்தேரி ஓலையாய் சரசரத்து வளைந்து கூட்டிய ஓலைக்கூடில் ஈக்கி முற்றி பாலறுந்து கிடந்தது பெண்பனை. 


“நான் வயது சென்றவள். ஒரு புருஷனோடும் வாழத்தக்கவள் அல்ல. திரும்பிப் போய்விடு மகளே. வேண்டாம் என்னைப் பின் தொடர, திரும்பி விடு மகளே." என்றாள் ஊசி நெல்லை இழந்த அத்தை. அவள் கிழிந்த காதுடனே அதிகக் சுசப்பான பாதையில் தனியே நடக்க விரும்பினாள். அவள் காதுத் தோடில் இருந்த சிவப்புக் கல் தெறித்து உருண்டது. ஆறுகல்லில் மிஞ்சிய ஒன்றும் கிடுகிடுத்தது. களிம்பேறிய கம்மலில் இருந்த காலக் கருப்பு இருட்டி அழைத்தது உள்ளே. 


126 இழந்துவிட்ட தேரியில் நின்ற பனைகளையும் ஈஞ்சமரங்களிடையே திரிந்த புருஷனையும் வழிநெடுக நினைத்துப் புலம்பினாள் அத்தைக்காரி. 


அவர்கள் கால்களை அடக்கிக் கொள்ளாமல் ஊரைவிட்டு வெளியேறி பிழைக்க விரும்பி அலைவுற்று வந்தனர். கதவு மூடிக்கிடந்த பல ஊர்களில் திரிகருத்த விளக்குகளிடம் சென்று வருந்தி காயங்களைக் காட்டி மருகினார்கள் இருவரும். குடியிருப்பு இல்லாத நூற்றி முப்பத்தாறு கிராமங்களில் கருத்த மாடாக்குழியில் முட்டைவிளக்கு மட்டும் அணையாதிருக்கும். ஊரைவிட்டே போனவர்கள் ஒரு சில நெல்லையும் போணித் தண்ணீரையும் லாடஞ்செம்பையும் பனை விசிறியையும் வைத்து சுடரில்வாதாடி அழுதிருப்பார்கள். நெல் அளக்கும் மரக்காளை தீபத்தருகில் யார் வந்தும் எடுத்துச் சென்று மணிகளை அளந்து கொள்ள வைத்திருந்தனர். லாடஞ்செம்பிலிருந்த நீரை எறும்புகளும் வாயில்லாப்பட்சிகளும் வந்து குடித்திருக்கும். நீர் குறையக்குறைய விளக்கும் சுண்டிச் சுருங்கிவரும். வனாந்திரங்களில் இல்லாத கீதாரிகள் குடியிருந்த கிராமங்களும் கண்மலையில் குடியிருப்பவர்களும் காணாமல் போன வனங்களும் அதில் மறைந்திருக்கும் ஊர்களும் மெல்ல நகர தெற்கிலுள்ள பட்டனங்களும் அடைக்கப்பட்டன. அவைகளைத் திறப்பாருமில்லை. 


நடவாதிருந்த பாதைகளில் போய் பட்டனத்தின் வாயிலில் நின்று கூவினார்கள் மனிதரை. அபயக்குரல் சுழன்று சென்று சுவர்களில் மோதி வளைவாய் எதிரொலித்தது. நகரை உருட்டும் எலிகள் வந்து பாசிக்கண்களால் எதிரில் ஈஞ்சாளையும் அத்தைக்காரியையும் பார்த்து புலம்பியது. தன் இருபாசிக் கண்களில் நகரில் திரியும் அனாதைகளை பைத்தியக்காரிகளை வெளிப்படுத்தி உள்ளே வருமாறு கெஞ்சின பாசிக்கண்களால். அவற்றோடு குனிந்து பலவாறு சொல்லிமாலாது தீராது உருகினாள் அத்தை. விளக்குத் தூண்களில் மினுக்கிக் கொண்டிருந்த திரியும் நகரத்தாரின் கண்ணீரும் எழுதப்பட்டிருக்கிறது. தொலைவே போய் தண்ணீர் எடுக்கப் போன பிள்ளைகளுக்காக அடைக்கப்பட்ட பட்டிணப்பெண்கள் காத்திருக்கிறார்கள் வாசலில். நீர்காணா பட்டிணக்காரைகள் பாளம்பாளமாய் பிழந்து தாகத்துடனிருந்தன. காற்றுக்காக ஏங்கிய பட்சிகள் கோட்டை வாயிலில் தொங்கி மறந்து போன நீரில் சுழலும் பாசிக் கண் தோன்றி எலிகளோடு வருவதைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் சுவர் மறைவில். ஒவ்வொரு உடலிலிலும் புகுந்த பாசிக் கண் எலிகளுடன் உறக்கமின்றி அலைந்தவாறிருந்தன. பஞ்சத்தால் வருந்துவாரும் தாது வருஷத்தில் தேசாந்திரத்தில் அலைவாரும் புகுந்த வீதிகளே வெம்பியிருக்கும். பட்டணத்திலிருந்து போன பிள்ளைகள் தண்ணீர் தேடி அது கிடையாமல் அவர்கள் நாவு தாகத்தால் வறலும் போது உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும் பள்ளத்தாக்குகளில் ஊற்றுகளையும் திறந்து சிலர் காணா நீருக்குள் போய் திரும்பாமலிருந்தனர். நீர்த்துறையில் நின்று பட்டணத்தை எட்டும்படி மனிதரைக் கூவினர். பட்டணத்துள்ளே அடக்கிக் கொண்ட கால்களையுடைய பெண்களும் தகப்பன்மார்களும் சுவர்களில் தலை கீழாய் தொங்கி குழாய்களையும் காங்ரீட் கம்பிகளையும் கடித்து பைத்தியமாகி அலறி பிள்ளைகளைக் கூவி மறுகுரல் கொடுத்தாலும் பட்டணத்தின் வெளிமதில்களை எட்டவேயில்லை கூக்குரல். நீரின் மர்மஊற்றுகள் அடைபட்டுப் போன பட்டணங்களைக் கடந்து கானல் அசைந்து கொண்டிருந்தாலும் வறண்ட 


127 பூமி வழி ஈஞ்சாள் நடந்துபோய் பார்த்தாள் நீர் கேணிகள் விருவோடி விட்டிருந்தன உ ணத்தில்.. – 


தேசத்திலே மழையில்லாத பொழுது தரைவெடித்திருந்தது. சம்சாரிகள் வெட்கி தங்கள் தலையை மூடிக்கொண்டனர். ஊர் கழுதைகள் மேடுகளில் நின்று வலு சர்ப்பங்களைப் போல் உட்கொண்டன காற்றை. புல் இல்லாததால் கண் சொருகிய மாடுகள் கட்டுத்தரையை விட்டுகாணாமல் மறையும். கிராம வீதிகளில் பஞ்சத்தில் வாடிய வீடுகளும் வெளிச்சமும் புழுதிபடர்ந்திருந்தது. புருஷனை இழந்த அத்தையின் கண்களிலிருந்து இரவும் பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். அவள் ஒன்றுவிட்ட சகோதரன் குமாரத்தியான ஈஞ்சாள் மகா வேதனையாலும் கொடிய காயத்தினாலும் ஜனத்துடன் சேதப்பட்டிருந்தாள். அப்பொழுது ஈஞ்சாள் சத்தமிட்டு அழுதவாறு "கூட வருவேன் உன்னோடு. நீ மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைவேன்" என்றாள். கிலேசப்பட்ட அத்தைக்காரி குமாரர் இருவரை இழந்து தனித்தவளானாள். சுவரில் ஏறும் சூதெறும்புகளைப் பின்தொடர்ந்து வெறித்தவாறு படுத்திருந்தாள் அலாதியில். கண்ணீரின்றி உலர்ந்துவிட்ட அவள் முகத்தில் எதை எதையோ தேடினாள் ஈஞ்சாள். அவள் பிடிவாதமாய்கூட வருவதைப்பற்றி அதற்குப்பின் அவள் ஒன்றும் சொல்லாமலிருந்தாள். இருவரும் வந்து சேர்ந்த ஈஞ்சவயலில் நெல் அறுப்பு துவங்கியிருந்தது. ஈஞ்சவயலுக்கு அவர்கள் திரும்பிவந்தபோது ஊரார் எல்லோரும் அவர்களைக்குறித்து ஆச்சரியப்பட்டு இவள் காடல்குடியில் வாழ்க்கைப்பட்ட முத்துவேல் என்று பேசிக் கொண்டார்கள். அதற்கு அவள் “நீங்கள் என்னை கிழக்கிலிருந்து வந்த முத்துவேல் என்று சொல்லாமல் ஈஞ்சவயல் காரி முத்துவேல் என்று சொல்லுங்கள். நான் கசந்து போனவள். வெறுமைப்பட்டு வந்தேன். இதோ இந்தக் குட்டி ஈஞ்சவயலிலே மூப்படைந்த தொண்டுக்கிழவனின் பேத்தி ஈஞ்சாள். என்னைக்கிலேசப்படுத்திவிட்ட தேசத்திலிருந்து வந்தேன்'' என்றாள். ஊரார் கேட்டதற்கெல்லாம் வெட்கி லெட்ஜைப்பட்டாள் அத்தை. காடல்குடி பற்றியும் கிழக்கில் இருந்த ஆயிரம்பனை கூட்டத்தில் புருஷன் தாயாதிகள் விட்ட ஆவி களையும் வேப்பங்குளத்து வமிசத்தாரின் தாஷ்டிகமான களவு பற்றி சொன்னாள் கண்கவிழ்ந்து. பெருநாழிச் சந்தையில் கண்ட எத்தனையோ ஆப்பநாட்டு பெண்களின் இடுப்பிலிருந்த சூரி கம்பரக்கத்தி நவதானியப் பெட்டிமேல் வந்த சேவலைப் பற்றி விநோதமாகக் கூறினாள் முத்துவேல். படபடத்த கண்களுடன் புகுந்த நாட்டுக் காடுகளை நினைத்து வெம்பினாள் ஆதூரத்தில். கண்களில் நெல் உதிர்ந்தது. பழுத்திருந்த முத்துவேல் முகம் பார்த்து வயலே அழுதது. அவர்கள் வந்திருந்த இடத்தில் கூடி.விட்ட வயல்காரிகளுக்கு யாரென்று தெரிந்துவிட்டது. அவள் கையைப்பற்றி இழுத்தார்கள். அதுவரை முத்துவேல் காணாத தன்னூர் வழி நடைத்தோற்றங்கள் சோகத்தில் எழுந்து வசீகரம் கொள்ள இருந்தது. அவள் சும்மலிலிருந்த ஒற்றைச் சிகப்புக்கல் உதிர்ந்து தெருவில் சிதறியது ஒளிப்பிழம்பாய், எல்லாம் இருண்டது ஒரு கணம். பிறந்த ஊர் சுவர் பொந்துகளிலிருந்து சில பூச்சிகள் வெளிவந்து அவளைத்தொட்டு ஓடின குதூகலத்தில், செடிகளுக்குத் தெரியும் முத்துவேலின் கண்களிலிருந்த சுருமணியை - அடையாளம் காண இருந்த தாவரங்கள் - வளைந்து அசைத்த இலைகளில் ஒளிந்தது பாழ், ஒவ்வொரு தெருவாகப் போய்ப் பார்த்தாள் கால் பதியாமல், தரையடிக்கற்களின் முனகல். சுரிந்து இழுத்த நீரோட்ட அலைகள் அவள் பாதவிரல்களை கவ்வி ஈர்த்தன 


128 

வேகத்தில், முன் காணாத மரங்களும் ஈச்ச ஓலை வீடுகளும் இடிந்த பழைய வடிவங்கள் மேல் அமைத்திருந்தார்கள். எட்டிய தூரம் வரை வயல் முணங்கியது அவளோடு, பார்வை எட்டிய கால நீட்சியில் பழுத்துக் காய்ந்த வெளிறிய மஞ்சள் வயல் பரவி அசைந்து சுருண்டது தோற்றத்தின் அழியாத படலமாய். தெரு கடந்து நெல் மூடைகளுடன் போன மொட்டை வண்டியை வயதானவர் ஓட்டிச்செல்ல மாட்டு வாசனை அவளைச் சுற்றிப் படரும். தெரு அசைந்து வண்டிச் சக்கரத்தில் கல் உடையும் ஓசை, வண்டிக்குப்பின்னே நெடுக நடந்து போய் ஈஞ்சவயலில் ஆடியவாறு பேரியாழின் நரம்புகளிடையே வீடுகள் பேசின துயரத்தின் சாயல் வயதான தடித்த பாட்டிகளின் தனிமையில் அந்த நரம்புகள் அதிர்ந்து ஒலித்தன. முத்துவேல் பிறந்த வீட்டின் இருண்ட அறையில் நெல் கற்றையுடன் கிழவன் இருந்தான். இவ்வளவு நெடிய காலம் வாழ்ந்த கிழவன் அங்கு வேறு யாருமே இருக்கவில்லை. கிழவன் கண்களை உற்றுப்பார்த்தாள் முத்துவேல். அதில் எல்லா நிறங்களும் பிரிந்து அவளுக்கான சம்பிரதாயமும் ஒளிந்திருக்கக்கூடும். அதுவரை காணாதிருந்த பூச்சிகள் சுவர்களில் இரைந்து கத்தின. தெருவில் அப்போது தோன்றிய மர்மமான பாசிக்கண்களுடன் கிழவன் நெல் ஏட்டில் புலப்படாத சுரங்களை வாசிக்க மறைவாக இருந்த பல ஈஞ்சமரங்கள் ஈக்கிகளுக்கிடையே வெண்பூவின் பூர்வீக இழையானது ஈஞ்ச இனத்தின் வாழ்வாகத் தொடர்ந்து வந்த முடிவளர்த்த ஆண்கள் சிணுக்கோலியால் முடியை கோதியவாறு ஈச்ச நிழலில் மறைந்திருக்கிறார்கள். ஈச்ச மரத்தின் கழுத்தைக் குடைந்து பால் எடுத்தார்கள். 


கிழவன் இருந்த ஊஞ்சலைச் சுற்றிலும் பூனைகள் வாலைப் பரசி அவளை அருகில் வரவிடாமல் பயமுறுத்தின. அறைச் சுவரிலிருந்த கண்ணாடிச் சட்டமிடப்பட்டு பாசிபடர்ந்த ஓவியத்திலிருக்கும் வேறொரு அதே கிழவனை அருகில் சென்று முகம்முகமாய் பார்த்து எதை எதையோ பேசியவாறிருந்தான் கிழவன். சுவரில் திட்டுத்திட்டாய் மிருகங்களின் இறைச்சியும் வாலறுந்த பல்லிகளின் நைந்த உடலும் ஒட்டியிருந்தது. அந்த அறையே ரத்தமும் மாம்சத்தின் நெடியும் பரவி வெறிபிடித்த கண்களுடன் பார்த்தது அவளை. 


பழைய யுத்தத்தில் பதிந்த வடு ஈஞ்சானின் மார்பில் உடும்பாக ஒட்டியிருந்ததை பார்த்தாள் முத்துவேல். நேருக்கு நேர் நாள் குறித்து படுகளத்தில் முறிந்த எதிரியின் கொடுவாளிடமிருந்து வெளியேறிய ரத்தம் முன்தோன்றி சுருதிகள் எரிய வாளின் கொடுமையை யாழில் இசைத்தான் கிழவன். ஏனோ ஈஞ்சசவயலில் உறையாத குருதி துர்க்கந்தத்தால் ஊளையிட்டது பேயாகி. யுத்தத்தில் சேகரித்த ரத்தத்தை எப்போதும் கண்ணால் பார்த்து அதை சிந்திவிடாமல் தன் அறையில் பத்திரப் படுத்தி வருகிறான். இளங்குருதியாகும் யுத்தத்தை விரும்பினான்போலும். சேகரித்த குருதியின் நெல்மேனி வெப்பத்தால் மேல் எழுந்து சீறிவர ஈஞ்ச இனத்தின் வீழ்ச்சியை ரத்தமேறிய நரம்புகளில் இசைத்துக்காட்ட இழந்த வயல்களில் மருதோரின் கரங்களுக்குள் கதிர்கள் முளைத்து மறைகின்றன. கிழவன் ஊஞ்சலில் மெதுவாக ஆடியவாறு லெட்ஜையடைந்த முத்துவேலை வெறுமையான கோலத்தில் பார்த்தவாறு ஏந்திய கதிர்களை தழுவினான் ஆதங்கத்தில். கிழவன் அறையை விட்டுப் போய்விடாமல் அந்த வடுவில் யார் யாரையோ அடையாளம் காண இருந்தாள். 129

மயக்கத்தில் வெளிர்பூவிடம் உறவாடிப் பல வார்த்தைகளைச் செடிகளிடம் சொன்னான். அவன் உயரமான உடலில் தாவரங்களின் வாசனை நிறம் நிறமாகப் பிரிந்து வயல் வெளியில் வீசும் காற்றாய் மாறியது. கரைபடாத பேரியாழின் தாகம் ஈஞ்சாளின் முதுகெலும்பின் வடிவத்தில் மாந்திரீக வனத்தில் தோன்றியிருக்கும். ஈஞ்சநாட்டு அரக்கரின் பெரிய சுவட்டில் ஊர் மறைந்திருக்கும். முத்துவேல்ஊர் மறையாத ஈச்சமரங்களிடையே வெளிர் மணல் விரிவு கொண்டது அடிவானுக்கு அப்பால், நரியோடும் சாம்பல் காடுகளில் புதர் மண்டியிருக்கும். மிருதுவான அமைதியில் துயிலும் மணலில் மிருகங்களின் சிறுபட்சிகளின் தடம் கோடு கோடாய் தெரியும். படிவுபடிவாய் மேல்வரும் ஈஞ்சங்காற்றில் குருத்து ஓலைகளின் உரசலில் ஏதேதோ வெள்ளி நாற்றின் சன்னமான துயரமும் முன் நடந்தவைகளும் படிந்த மணலில் கிழவனின் நீளமான பாதம் கடந்து போனது. ஈஞ்சநாட்டார் அரளிப்பான விருட்சங்களுக்குள் எலும்புகளை அசைக்கும் சைகை முதுகாட்டில் புதையுண்ட அரசனை அழைத்தது. கனியான் தீமூண்ட மலைமீது மகுடமடிக்கும் ஒலி பாறைகளைப் பிளந்து வந்தது தேரிவரை. தோல் முழங்கும் பறையில் தீப் பந்தங்கள் சுற்றி ஓடுகிறார்கள் இருளில். சடைமுடி படர்ந்த ஈஞ்சான் வேட்டைக்குப் போன தேரியில் மிருகங்கள் மறைந்து உறுமும் இருட்டு. பாறைகள் மேல் மிருகமூச்சு ஊர்ந்து செல்லும். மெல்லிய இருட்டில் தெரியும் ஈச்ச மரங்களின் கோரையான கூந்தலில் ஆந்தை கீழ் பாய்ந்து போ.. போ வென அரற்றும். குத்துப்பாறைகளில் அசைந்து கொண்டிருக்கும் சாவைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய் மெலிந்து கொண்டிருக்கிறான் துயரில். மறதியிலும் கண்ணில் ஓடும் பைத்திய ரேகையிலும் இடம் விட்டு நகரும் ஊஞ்சலில் அவர்கள் வாழ்வின் அகத்திணை நெல்கதிர் கற்றையாக கிழவன் கையில். ஒவ்வொரு நெல்லாக தொட்டு எதையோ தேடுகிறான் ஈஞ்சான். நெல்லில் ஒளிந்த பேத்தி ஈஞ்சாள் யாழின் நரம்புகளில் பதிந்து வயலில் வெடிக்கும் வெளிர் பூக்களில் மறைகிறாள் உடனே. 


அப்போது முத்துவேலிடம் ஈஞ்சாள் கேட்டாள் “நான் வயல்வெளிக்குப் போய் வயோதிகர் கண்ணில் எனக்குத்தயை இருந்தால் அவர் பிறகே கதிர்களை பொறுக்கி வருவேன்... நோயின் ஆழத்தில் ஈஞ்சானின் நரம்புகள் மறைந்து கொண்டிருக்கிறதால் புதுக்கதிர்களை கொண்டுபோய் அவன் மீது படைப்பேன்" என்றாள். அதற்கு முத்துவேல் "பூட்டனின் வயலில் அவன் காலடி தொட்டுப்போ வேடர்குத்திய கதிரை பொறுக்கிவா மகளே” என்றாள். 

அவள் வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள். அப்போது ஈஞ்சாளின் பாசிக்கண்ணில் கிழவனின் ரத்ததாகம் கொண்ட சுருதிகள் கிளம்பி நெல்வயலில் சுருதிகள் எரியும் ஆழத்தில் கிழவன் ஊஞ்சலில் சரிந்தவாறு சாவின் அருகே போய் அடுத்த கணம் மீண்டு உயிரில் பரவிய நெல் மூடி திறந்து செந்நெல் குடி கிராமத்தின் உடைந்த கதிர் விதானத்தில் மணிகள் எட்டிப் பார்த்தன இமைகீறி. பழுப்பு வயல்வர்ண வைக்கோலின் சருகு புலம்பி அசைய தலை சாய்ந்து வரப்பில் கண் மூடிக்கிடக்கிறது சோம்பலில் நெல்கதிர்கள். வாட்டமான கதிர் வளைந்து எல்லாப் பக்கமும் நெளிந்து தண்டில் காற்றேறி முணுமுணுத்தது. யாரோ தண்டை அணிந்த நீள நீளமான கால்களுடன் நெல்மீது அழுந்தாமல் தடவி நடக்கும் பாதங்களில் கண் திறந்தது புதுநெல், சம்பா நெல்லின் உதிர் நரம்புகளை கைவிரல்கள் ஆழமாய் தொட்டு ஏங்கும், நெல்கோடு விழுந்த 



130 தொடுவானின் புகைமட்டத்தின் நீலத்துள் புதையுண்ட சாவுடன் உரையாடும் செந்நெல், கம்மாய்க்கரை சுற்றி கீழத்தெரு ஆட்கள் கதிர் அருவாளுடன் எட்டிப் போன வயல் அறுவடையாக வேண்டும். வெயில் அசையும் கரைச் சரிவில் உதிர்ந்த மணிகள் இரவெல்லாம் கண்விழித்துப்பார்த்த சாதாரண மண்தெரு சோகத்தால் கதவுகளைத்தொட்டு துயில்வோரைக் காணும். பாசிமூடியிருந்த ஓவியத்தில் வர்ணமற்று வெளிர்பரப்பாய் விரியும் வெண்பாதையில் தனியே அவன் மட்டும் நடந்து போய் கூவுகிறான் கீழ்திசையில், ஆயிரம் ஒலித்தொகுதி கொண்ட பட்சி ஜாலங்களின் சப்தாசமுத்திரம் புறண்டு மேல் எழுந்து சப்தத்தின் சுழலாய் அவன்முன் அசைய பேத்தியின் விடுகதிரில் ஒவ்வொரு விரல்பட்டு ஈஞ்சானின் மறைவு காலத்தை இசைத்துக் காட்டினாள் எளிய மணிகளில். 


கண்மலையின் வடிவங்களில் உருவமற்ற வேடர் நிழலாகி ஒரே கண் உள்ள மலையின் உச்சிப்பார்வை மெல்ல ஊசியாய் சரிந்து கீழே நகர்ந்து வேகமாய் ஒவ்வொரு மனிதரையும் தொடர்கிறது. தொலைவிலுள்ள கண்கொண்டு பார்த்தனர் இசையின் பாதையை. யுகங்களுக்கு முற்பட்ட மலையின் கண் சாவினுடையதாக இருக்கும். ஒவ்வொருவரையும் சுருட்டிச் சென்றது கண்மலை. வில்யாழின் ஒற்றை நரம்பினால் பாறைகளின் குரலை எழுப்பியது வில். வேடர் நிழல் வில்நாணின் அதிர்வில் தூரம் வரை போய் வேட்டையாடித் திரும்பும். அரக்க இனஈஞ்சர்களோடு யுத்தத்தில் உடல் இழந்த கனியான்களே கண்மலையாகி விட்டிருந்தனர். சரியும் கண் மலையின் இடுக்குகளில் ஊளையிடும் முன்னோரின் ஆவிகளை அழைத்துக் கொண்டு ஈஞ்சவயலில் அதிர்வுறும் வயோதிக அரசன் ஈஞ்சானின் சுரங்களை கேட்டு மயங்கும் வேடர் ஆவிகள் ஈச்ச நிழலைச் சுற்றிச்சுற்றி வந்தன. ஊஞ்சல் சலனமடையாமல் இருக்கும் காற்றில்லாத வேளை வேடர் ஆவிகள் வந்து ஈஞ்ச அரசனை மெல்ல தாலாட்டி அவன் காது களில் கிசுகிசுத்து கனியான் மறந்த பாறையின் அகம் கொப்பளிக்கும் சுருதிகளை இசைக்குமாறு கெஞ்சுகின்றன ஆவிகள். கிழவன் நாண் ஏற்றி வெகு ஆழத்தில் புதைந்த கல்முகமாகி கரகரத்த திகைப்பூண்டுகளின் நெடிப்பூக்களை நுகர்ந்தவாறு எரிமலைகள் குமுறும் ஓசையுடன் ஆயிரம் வில் நாண்கள் பூட்டிய அம்புகள் பாயும் யுத்தகள இசை கண்மலையில் உருள நரிகளின் தோலால் வனைந்த மகுடங்களை கனியான் ஆவிகள் ஒலித்தன கண்மலையில், 

A OU 

அப்போது ரூபவதியான ஈஞ்சாள். கதிர் சாயும் வயல் நடுவே அறுப்பறுக்கும் வேட இன பெண்களுக்குப்பின்னே சிந்திய கதிர் பொறுக்குவதை பார்த்து வயல்காரன் கனியான் "கண் மலையில் இல்லாத ஈக்கி நெல்லில் சுரங்களை உலர்த்தும் சிறு பெண்ணே நீ யாருடையவள். சுரங்களை நிறுத்தாமல் வாசி. நான் தூர இருக்கிறேன்” என்றான், 

“அறுக்கிறவர்களின் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதை உம்மைக் கேட்டதாமல் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன். நான் யாராயிருந்தால் என்ன நான் யாரோ" என்றாள் அலட்சியமாக, அப்போது கங்காணிக்காரன் கனியான் கிட்டத்தில் வந்து “இவள் அனாதை” என்றான். “தூர உறவோ சொந்த பூமியோ வயலோ இல்லை" என்றான். “காலமே துவங்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள். இப்பொழுது அவள் என் குச்சிலுக்கு அருகில் வந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது” என்றான். 


131 அப்பொழுது வயல்காரன் ஈஞ்சாளைப் பார்த்து “பெண்ணே கேள். வேடப்பெண்கள் நீயாரென்று சைகைகாட்டி கண்ணால் சொன்னார்கள் நீ வரும்போதே ஈஞ்ச இனத்தின் கிழ அரசனுக்கு சிந்திய கதிர்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறாய் பறவைகளுடன். பொறுக்கிக்கொள்ள வேறு வயலில் போகாமலும் இங்கே என் அறுப்பறுக்கும் பெண்களோடு கூடவே இரு” என்றான். அப்படியே அவள் அறுப்பறுப்பவர் பக்கம் உட்கார்ந்தாள்.


 "அவர்கள் அறுப்பறுக்கும் வயலைத் தொடர்ந்து நீ போ. உனக்குத் தாகம் எடுத்தால் கண்மலை ஊற்றுநீரை உனக்காக குச்சிலிலே வைத்திருக்கிறேன். தண்ணீர்த் தோண்டி அருகே போய் கூசாமல் குடி” என்றான். அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது “வேடுவப்பெண்களே அவள் அரிக்கட்டுகள் நடுவாந்திரத்தில் பொறுக்கிக்கொள்ளட்டும். அவளை ஈனம் பண்ண வேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும் படிக்கு அவளுக்காக அரிக்கட்டுகளிலே சிலதை பிந்திவிடுங்கள் அவளைத் தொடாதிருங்கள்” என்றான் கனியான். 


அப்படியே அவள் சாயங்காலம் மட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள். பொறுக்கினதை தட்டி அடித்து தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் நெல் கண்டது. 

ஊஞ்சலில் ஆடும் கிழவன் தனக்குள் ஆழத்தில் மெல்லச் சரிந்து புலம்பியவாறிருந்தான். அவன் நிழல் ஆடியது வேகமாய். மற்றொரு நிழல் பார்த்துக் கொண்டிருந்தது சுவரில். அதனருகில் மரக்கால் நெல்லை வைத்து ஒரு சில மணி களை கொண்டுபோய் கிழவன் கையிலுள்ள கதிர் மீது பதித்தாள் அழுகையோடு. அந்த மணிகள் ஜீவனாகத் துடித்து உருண்டன கிழவனின் ஒலிமுகத்தில், 


பின்னே அவள் கரைந்த முகத்தோடு ஈஞ்சமரங்களின் நிழல்பாதையில் இரவுக் களத்தில் நெல் அம்பாரத்தின் மீது மினுக்கும் சிம்ளி விளக்கின் அருகே சென்று ஒவ்வொரு நெல்மணியாக கிழவனின் தோளிலிருந்து முளைத்தநெல் சிலவற்றை திரியுடன் சேர்த்து எரியூட்டினாள். அடர்ந்து எரியும் கிழவனின் கதிர் சுருதிகளை அந்த ஆழ்ந்த இருட்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் கனியானோடு. பொலி நெல்லை கண்மலை வடிவில் குவித்து அம்பாரத்தில் சாணத்தால் சுற்றிவரக் கோடுகள் இட்டாள். ஒருவருக்கொருவர் ஒத்தாசையோடு அந்தரங்கமாய் கதிர்களைப் பகிர்ந்து கொண்டார்கள் இருட்டில். மிருதுவான செடிகள் அருகில் போய் இலைகளை வருடினாள் ஈஞ்சாள். அப்போது அவாந்திர வெளியை ஊடுருவி எழுந்த ஈஞ்சயாழின் சுரத்தை வயல்காரன் கேட்டு இராவெல்லாம் பொலி நெல் அம்பாரத்தில் மயங்கிக் கண்சொருகி அழுதான். வேடர் நிழல்கள் சூழ்ந்து சுருக்கிருட்டில் மெல்ல அவர்களை வில் இசையால் மயக்கி சரிந்துவரும் பார்வைக்குள் ஆட்கொண்டு கூட்டிச் செல்கிறார்கள் கண்மலையின் ஈர்ப்பில், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியுமுன்பே எழுந்து கதிர்களின் பின் சென்றாள் ஈஞ்சாள். 

ப 

ஐப்பசி 

தாது வருஷம் 


Monday, November 01, 2021

4.ஆதிக் கதை - கோணங்கி

 4.ஆதிக் கதை - கோணங்கி


'சாத்தூர் நரிப்பொடி, வாய்ப்பொடி,' புகையிலைத் தடை, கருஞ்சுருட்டு நெடியில் கரகரப்பான கதைக்குரலை புகையிலையாக உலர்த்தி ‘விருதுநகர் சுருட்டாக' விரித்த பாட்டியின் கதாமந்திரப்பரப்பில் காய்ந்த சுருட்டு இலையில் ஓடிய ரகசிய வாசனையால் ஆட்கொள்ளப்பட்ட என் பால்ய காலத்தை கதைச்சுருட்டாக சுருட்டி இன்னொரு உலகைக் கருக்கொண்டிருந்தாள் பாட்டி. 


அப்போதும் தாதுவருஷப் பஞ்சமென்று அறியப்பட்ட பழங்காலத்தில் ஜனங்களின் குடல்வயிற்றுக்குள் சடைசடையாய் முளைத்த குதிரைவாலிக் கதிரால் மண்ணீரல் மீதும் காதுவடித்து பாம்படம் அசைய ஓட்டு வீட்டு திருணைபூராம் கிடந்த பாட்டி உடல் மீதும் எழுதத் தொடங்கி இருந்தேன் முதல் கதையை. 


நாகலாபுரத்திலிருந்து வந்த பாட்டியின் தடித்த சகோதரிகள் பம்பையம்மாளும் வேடபட்டிப் பாட்டியும் மெதுவாகத் தெருவை உரசி நகர்ந்து வந்து ஊர் ஊராய் விருந்தாடி போன ஞாபகங்களையும் அங்குள்ள வம்சாவளி மரத்திலிருந்த கிளைகொத்து உறவுமுறைகளைப் போட்டுப் பார்க்காத பல தாயாதிகளின் விஸ்வரூபங்களை பரம்பரைத் திருடர்களை படுகொலைகாரர்களை கடகப் பெட்டியில் கொண்டு போன 'புள்ளம்மா'வின் ஆவியை பேச வைத்திருந்தனர். வேடபட்டிப்பாட்டி வயது சென்றவள். நெடுங்காலம் புருஷனில்லாமல் காடுகளில் பயறு கிழங்கு வித்து வரும்போது அவளுக்கே தெரிந்த பழம் பாதைகளில் தோன்றிய கட்டுக் கதைகளை வறுமையின் ஆழத்தில் இருந்த கிராமங்களின் உருவங்களோடு சொன்னாள். பஞ்சதந்திரத்தில் இல்லாத 'பூமத்தியரேகை மனிதர்களை' கருப்பு கக்கரை எரிசெவல் தேரிகள் போடுமண் மேவிமேவி எழுந்த வேனல்சார் நிலப்பரப்பை பாட்டி உடல் மீது பார்த்தேன். காடை, வரிக்குயில், ஆக்காண்டி, கல்லாந்தை எல்லாம் பம்பையின் உடம்பில் பறந்து சுற்றும். காட்டிலந்தைப் பழமாகத் தித்திக்கும் அவள்குரல். 


பம்பை, ஆதக்காள், வேடபட்டிப்பாட்டி மூவருமே மண்ணுக்குள் போனபின்னும் செய்வதறியாது கதைகளுக்குள் ஆவியாய் உலவுகிறார்கள். பீர்க்கங்கொடி பாட்டி உடம்புக்குள் பூத்துப் படரும் போது ஈஞ்ச மரங்களுக்கிடையில் கூந்தல் வளர்க்க ஆண்கள் சிணுக்கோலியால் முடி சிலுப்பி மரிக்கொழுந்தும் ஈஞ்சம்பூவும் முடிந்த கொண்டையில் சூடி, வேல்கம்பும் சூரியும் கொண்டு போர்க்குணம் வாய்ந்த இனக்குழுவாக யுத்தத்தின் கொடுமைகளால் பூமியை வெறுமனே உழுது கொண்டிருந்தார்கள் ஈஞ்சநாட்டு வம்சாவழிகள், குதிரைவாலிச் சடைத்தவசத்தை விதைத்தார்கள். அந்த வெப்ப மண்டல மண்புழுக்கள் ஒடிந்த குறு வாட்களைச் சுற்றி நாட்டியமாடும் போது குதிரைவாலிச் சடைக் கொண்டைகள் அசைந்தன. 


அதன் சாம்பல் நீலக்குருதியோடும் பம்பையம்மாள் எழுதுதாளும் மையும் இல்லாமல் அந்த காட்டு வழி நெடுக காடோ செடியாக அலைந்துவரும் காற்றின் குரல் அடுக்கில் குரல்வளைக்குள் ஒற்றை சடைக்குதிரைவாலிக் கதிருடன் கடகப் பொட்டியில் சுமந்த வரகு மேல் 'புள்ளம்மா' ஆவியோடு குலவையிட்டவாறு ஆடிவருகிறாள். அக்கினிச் சட்டிகள் தீ மூண்டு எரிகின்றன. 


நாற்று நடுகிறபோது 

களை எடுக்கிறபோது 

காட்டில் விறகொடிக்கும்போது 

பல்ஜாதிப் பெண்களும் கூட பருத்திக்காட்டல் நின்றபோது –

குனிந்து பெண்களும் ஆண்களும் நெறுநெறுவென்று கதிர் அறுக்கும் போது

நென்மேனிக் கம்மாய்க்குள் கருப்புப் பெண்ணொருத்தி வெள்ளரித்தோட்டத்தைச் சற்றிச் சுற்றிப் படரும்போது –

காது வடித்த கலிங்கமேட்டுப்பட்டிப் ஸ்திரீகள் வயக்காட்டில் குலவை போடும் போது 


கிழக்கே நெடுந்தூரம் பனைவிடலி அருகில் போய் பச்சை ஓலையை மோந்து பார்த்து ராசாத்தி அத்தையின் குமறுகள் சீரழிந்த மண்கூரை வீட்டில் சாணம் மெழுகிய சுவரில் இருந்த சாணக் கோடுகளில் மனித துக்கத்தின் ஆழத்தில் தீத்துக் கல்லால் கீறியிருந்த கோடுகளை நெருங்க நெருங்க தொலைவாய் போய்க் கொண்டிருந்தன சாணக் கோடுகள். 


நென்மேனிமேட்டுப்பட்டி வயல்வெளி இரு மேனிகண்ட தாதுவருஷ நினைவில் கோடிநெல் படர்கிறது ஆயிரம் கண்ணுடைய இருக்கன்குடி மாரியின் குத்திநிற்கும் சூலம்வரை. வயல்வெளிமேல் மாரியின் நிழல் ஓடும் அசுரர்களோடு. 


கிழக்கே பரவிக்கிடந்த வளர்ச்சி குன்றிய வெளியாள் அதிகம் வராத கிராமங்களில் வேலாயுதநாடார் பெண்மக்கள் உடம்பில் பனைவாடை சுற்றிச் சுற்றிப் பரவிவரும் போது பதினிப் பானை தூக்கி சுத்துப்பட்டிக்கு போன தடத்தை மோந்து பார்க்கும் நாசியிலும் பனைவாடை வரும். பூமத்திய ரேகை மனிதர்களாய் நெட்டுவசமாய் முளைத்த கரும்பனை உயரத்தில் பேய்கள் அமர்ந்திருக்கும்போது பனையேறி தொண்டைக் கடியில் குடலுக்குள் முளைத்த குருத்துக் கதைகளை குடலைவிட்டு அறுத்தெடுக்கமுடியாமல் பாலைசீவிச் சீவிப்போன கருக்குமட்டையில் கூந்தப் பனை வாசம் தொடர்ந்து விரட்ட அந்த பனைகளின் செதில் உடம்பிலிருந்து ஓலை அறுத்துக் கீறிய வரிகளை பச்சை ஓலையாய் தருவதற்கு கதைமரபு காணும் ஆவலால் தூண்டப்பட்ட நவீன கதை சொல்லிக்கு வேலையிருக்கிறது இன்னும். 


தாவர ராசிகளின் காரவாசனையை நுகர்ந்து பெருமூச்சு விட்ட பாட்டி மயக்கத்தில் பூக்களுடன் உறவாடிப் பல வார்த்தைகளை செடிகளுக்கு சொன்னாள். அவள் பெரிய மூக்கில் தாவரங்களின் வாசனை நிறம் நிறமாகப்பிரிந்து தொலைவான கிராமப்பரப்பில் வீசிக்கொண்டிருந்த அலாதிக் கதைப்பாடலாய் உரசியது பனைகளில். பாட்டியின் உடல் கீறல்களே நட்சத்திரத்தினாலாகும். அவள் உடம்பில் உதிர்ந்த நட்சத்திரம் ஆறாகிறது. அடுக்கடுக்காகப் படிந்த நாகரிகங்களின் ஆறுகளில் கதைமந்திரத்தைத் தக்கவைப்பதற்கு 'சாத்தூர் நரிப்பொடி'த் தடையைத்தான் நம்பியிருந்தாள் பாட்டி. இப்போதும் அவள் நிலவுப்பரப்பில் கால் நீட்டி சாவுடன் அசைந்தவாறு அவள் குரலிலிருந்து வரும் இருண்ட, ஊற்றை நோக்கி வசீகரிக்கும் நிறக்கோடுகளை எங்கிருந்து பெற்றாள் என்பது பேய்களுக்கும் ஊரை அரசாளும் கூந்தப்பனைக்கு மட்டுமே தெரியும். 


உலர்ந்த காற்றில்' வைசூரி வந்த ஆட்டின் வீச்சம்  தெரு முழுவதும் காட்டு பாதையில் சளிக்கோடு கோடாய் வடிந்து கொண்டிருந்தது. புலம்பும் ஆடுகளின் செருமல், இறந்து விழுந்தன. நடக்க ஏலாத ஆடுகள். அவற்றின் மரண இருளில் நடந்து போன கீதாரிகளின் துயரப்பாடலை உலர்ந்த காற்றில் கண்தெரியாத பாட்டி கேட்டாள், இருண்ட கண்ணுக்குள் நூறுவகை தானியங்களுக்கும் பட்டம் பட்டமாக கதையிருந்தது. காற்றில் கலந்து வந்த பயிர்வாடையை இப்போது பாட்டியால் உணரமுடியாமல் போனாலும் ஆள் வில்க இடமில்லாமல் போன பத்துமொய் ஆடுகளும் தெருவையே அடைத்துப்போன நினைவின் ஏக்கத்தில் கடைசிவரை சாவுக்காகக் காத்திருந்தாள். ஆடுகள் வைசூரியால் செத்துமடிந்த ஏக்கம் தீரவில்லை . தெருமுனையில் செருமிய ஆடுகளின் கவுச்சியும் நோயின் வாடையும் பாட்டியின் அந்தராத்மாவில் விழுந்தது. திரைவிழுந்த கண்களுக்கு ஞாபகங்கள் இருந்தன. 

கொள்ளைநோயும் - வைசூரியும் இடைக்காட்டான் பஞ்சமும் கிழக்கத்தி கிராமங்களில் புயல்கொண்டிருந்த காலம். நோயின் ஆழத்தில் அசைந்த வறுமையான மண்வீடுகளில் மூதாதையின் தோற்றங்களை தொலைவிலே பார்க்கிறேன். கும்பினியார் துப்பாக்கி ஊளையில் அடங்காத பனங்காட்டு நரிகளாய் கள்ளர்கள் ஊரின் சருக்கங்களை வேனல்சார் மறைமுக நிலப் பரப்பாக்கியிருந்தார்கள். 

வேட்டையாடப்பட்டு முதுகில் இறங்கிய ஈயரவைகளுக்குக் கவண்கல்லால் பதிலடிகொடுத்து விட்டிபெருமாத்தேவனும் நத்தைக்கண் மாடனும் வெறியனும் துரைச்சாணிகளின் சாரட் குதிரைகளைத் திருடிப் போனார்கள். மாடு திருடும் பரம்பரைப் பழக்கத்தில் மறைந்திருக்கும் கிராமங்களில் வேல்கம்பு நட்டி கும்பினியார் நுழையவிடாமல் தனி எல்லைகளை வைத்திருந்தார்கள். கைநாட்டுச் சட்டமும் செயல்பட்டது. களவுக்குப்போன முறைகாரன் திரும்பி வராவிட்டால் சமைந்த பெண்ணுக்கும் துரட்டிக்கும் தாலிகட்டி குலவையிட்டு வாளை வார்ப்பதிலும் மாடு வளர்ப்பதிலும் சேவக்கட்டு கத்திகள் குறுக்கிட ஒருவருக் கொருவர் குத்துவெட்டும் ரத்தம் உலருமுன்னே ராசியாகி சனம்கூடி கொடை எடுத்து காவு கொடுத்து அறுத்துக்கட்டி பலி தீர்த்து வங்கொலையும் களவும் காய்ச்சிவடித்த சாராயத்தைத் துடியான தேவதைக்குப் படைத்து உடம்பில் ஈட்டக் சுவர்க்குத்தி கழுத்தில் ரத்தநார் தெறிக்கப் பாடி பெண்கள் குலவையிட்டு கோபத்தால் ரத்தமேறிய முட்டிகளால் மண் சுவர்களை முட்டினார்கள். வெறிமிக்க ஈட்டிகள் குருதியில் இறங்கி மூக்கறுப்புப் போரில் மைசூர்ப் படையை விரட்டி விரட்டி வழிநெடுக குருதியின் ரகசியப் பாடலை விட்டுச் சென்றிருந்தனர் எனக்கு முன்னே . 

தன்னரசாண்ட பெருங்காமநல்லூர் கலகத்தில் சுடப்பட்ட பதினாறு தாயாதிகள் ஆவிகளோடு ஒரு பெண் ஆவியும் ஏவிய இந்த மொழியே பாதரஸ ஓநாய்களின் தனிமையாய் உருவெடுத்து புலப்படாத கள்வரைத் தேடிப் பரங்கித் துப்பாக்கிகள் நீண்டுவர கவண்கல் இரும்புத் தொப்பியில் தெறித்த ஒலி இரும்புக்காலத்திற்குத் தாவியது வேகமாய். 


கொக்குப்பறக்கும் கலிங்கல் மேட்டுப்பட்டிக் கம்மாயில் அலைமோதும் மீனிடம் உடைமரத்தில் தொங்கும் குருவியிடம் இழுவங்கிணத்திடம் உப்போடைச் செடியில் கருவாட்டுக் குச்சிமுள்ளில் ஈக்கியில் ஊர் இடுக்கில் , ஈறுவுளியில் பேனிடம் கதாமந்திரப் பரப்பு விரிவு கொள்கிறது. பித்தனின் 'கட்டிலை விட்டிறங்காக் காதலியை' வாஸித்தபின் துரும்பிலும் எறும்பிலும் பாட்டி ஒளித்து வைத்த கதை மரபை அடுக்குப் பானைக்குள் தேடி எடுத்து முந்திச் சேலையில் முடித்தகதை ஓட்டைத் துட்டாகக் கிடந்தாலும் அவள் பாம்படத்தைக் களட்டி மேயும் சேவலை எரியக் கூடியவள். புஷ்கின் தங்கச்சேவல் கதைப்பாடல் மரபு ஏனோ தொடர்கிறது அவளின் கிழிந்த காதுகளின் அசையும் பாம்படத்தில் சுழலும் அண்டகோள சதுர முக்கோண வடிவத்தில். 


கதாச்சுருளிலிருந்து சீறிவரும் அவள் குரல்பட்டு பொருட்கள் யாவும் விந்தை உருவங்களாக தொடரும் அடையாளங்களாக வேறு தோற்றம் கொள்ள என் சுயத்தில் பட்டு வார்த்தை எல்லைகளை மௌனத்தின் எல்லையை மீறிப்பாய்கிற கதை மரபை அதிர்வடையச் செய்தாள் பாட்டி. 


காகிதங்களை அறிந்திராதவளின் ஈரக்குலையில் துடித்துக் கொண்டிருந்த சொல்கதை அச்சு எந்திர நாகரீகம் காணா சுருட்டுக் கிழவியின் குரல் வளைக்குள் ஒளிந்து கொண்டிருந்த மாய உருவங்களைக் காற்றின் குரல்வாள் கொண்டு இருட்டை வெட்டத்தொடங்கிய அவள் நரிப்பொடி நாக்கு அரிக்கும் கார நெடியான கதைக்குள் வாள் வீச்சாய் நீண்டு கிடந்தது தெரு. 


அவள் உடம்புடன் இருந்த புகையிலை வாசனையை சேலையில் இருந்த உவர்மண் நிலப்பரப்பையும் என் கதைகளால் மீட்டெடுக்க முயன்றேன். ஊரைவிட்டு வெளியேறி அந்நியமான நகரங்களில் திரிய நேர்ந்த போது கூடவே கொண்டு போன பாட்டியின் கத்தரிப் பூக்கலர் கண்டாங்கிச் சேலையில் உடல் புதைந்து விஷமேறிப்போன நகர இருளிலிருந்து மீண்டேன் கதைகளோடு. பாட்டியின் சேலையுடன் வந்த ஊர் வண்ணாத்தி கோப்பம்மாளின் பால்யகால உரு எப்போதுமே கதைகளுக்கு நடுவே அலைவுறுகிறது. கோப்பம்மாளின் கதையில் இருந்து தான் அவள் கண்ணீரின் நிழலாய் எழுத்தின் ஊடே உவர்மண் பரப்பைக் காக்க வந்திருக்கிறேன். என் கதை தொடங்குவதற்கு துவைக்கிற கல்லிலிருந்து முடிவற்று நீர்தேங்கிய கண்மாய்க்குள் மண்கூரைகளோடு கோப்பம்மாளின் உரு நீரில் தலைகீழாய் அசைவதை மொழியாக மாற்றி நீரின் ஆழத்தில் கோப்பம்மாளின் உருவைப் படியவிட்டு அவளிடமிருந்து உரையாடலைத் தொடங்கியபோது அவள் உரு கருக்கிருட்டில் மங்கி மங்கிச் சரிந்து மிதந்து அலைவுறும் விதியிலிருந்து விலகிப்போகிற கதையை விவரிக்க முயல்வேன். நீரிலிருந்து அவள் உருவை ஈஸ்வரி அக்காளின் பாடலாக எழுதினேன். அவளுடைய பாடல் எப்போதும் இசைக்கப் படவும் எளிய வாழ்வின் நேசத்தின் ' விதியாக இருக்கவும் விரும்புவேன். 

மேலே பார்த்தால் சொந்தமான நட்சத்திரக்கூட்டம். இடையே கைவிடப்பட்ட கழுதைகள் துக்கத்தில் அசையாது இருளை மென்று கொண்டிருக்கின்றன. அதன் கண்ணுக்குள்ளேயே அலைவுறும் நிலவு. தெருவில் கிடக்கும் பூச்சிகள். எல்லாமே சத்தம் எழுப்பின... ஒவ்வொரு இரவிலும் ஈஸ்வரியக்காள் நிறைந்து கிடக்கிறாள். மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்து யார் கூப்பிட்டாலும் என்ன.. வென்று பதில் குரல் கேட்கும். ஊருக்கு புதுகண்மாய் வந்தபோது வட்டமான கரையைச் சுற்றி புளியங்கண்ணு வைத்தவள் ஈஸ்வரி தான். புளியங்கண்ணுக்காக காடெல்லாம் தேடித்திரிந்தோம். ஈஸ்வரி ஊன்றிய - புளியங்கண்ணுகளே அவ்வளவும். எல்லோரும் சேர்ந்து நீர் ஊற்றி வந்தது. தண்ணீர் இல்லாத பஞ்சத்திலும் கல்வெட்டாங்குழியில் இருந்து சுமந்து ஊற்றிய தண்ணீரில் பிழைத்தன எல்லாம். கண்ணுகள் வளர்ந்து மரமாகிவிட்டன. வெள்ளை அங்கியுடன் ஊருக்குள் வந்தவர்கள் ஈஸ்வரியைக் கூட்டிக்கொண்டு மரங் களுக்கிடையே அசைந்து மறைந்தார்கள். கூடவே போன எல்லோரும் கல் வெட்டாங்குழி வரைபோய் நீர் பார்த்துத் தொலைவில் ஈஸ்வரியைக் கூவி அழைத்தார்கள். நீருக்குள் அக்காளின் முகம் தெரிவதும் மூடுவதுமாய் வந்த அலையில் எல்லோருடைய முகமும் சேர்ந்து நகர்கிறது மெல்ல. கூப்பிட்டுக் கொண்டே நிற்க, கண்ணைவிட்டு மறையும் வரை அவள் உரு மெலிந்து தோற்றம் கொள்ள சிறிது சிறிதாக குரலை மெலிதாக்கி மெளனமான நீரில் முணுமுணுத்தார்கள். சின்ன சத்தம் கேட்டு வெளிப்பட்ட கல்வெட்டாங்குழி முனி தனது மாபெரும் ஒளிமிகுந்த கதையை நீரில் படவிட்டு சாதாரண நீரைத் தொட்டு பச்சைப் பொன்னாக்கியது. தங்கத் தகடாகிவிட்டது எல்லாம். கூவி அழைத்த மீன்கள் கல்வெட்டாங் குழிக்குள் தொங்கி ஊர்ந்து வந்தன. உயிரின் அனந்தத்தின் ஒளிக் கரணத்தால் பிரமித்து நின்றோம். வேறு கதையில் இல்லாத குரலில் பேசியது முனி. நம்பமுடியவில்லை. வைத்தகண் வாங்காமல் பார்த்தாள் நீரிலிருந்த ஈஸ்வரி அக்காள். மயக்கும் வித்தை கற்றிருந்த ஈஸ்வரி அக்கா எங்களை வா வா என அழைத்தாள். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கையைக் கோர்த்து விரல் நடுங்க ஈஸ்வரி அக்காளிடம் கேட்டோம். 'எல்லாம் உன்னுடையது தானா... நிஜம்தானா..' விந்தை அலைகள் பாறைகளில் தத்தித் தத்தி இளைக்கிறது. மூச்சு இரைத்தபடி கெதக்... கென்று உள்ளே தள்ளிவிடும் பயம் கால்களில் அசைய பாறைகளுக்குள் எட்டிப்பார்த்து 'உள்ளே விழுந்துவிடவா...' நீர் இருட்டி காணாமல் போன மீன்களைக் கூவி அழைத்தோம். சிரிசிரியென முனியின் கண்களில் மின்னல் வெட்டி வெட்டிக் கூசியது. நீரின் குளிர் ஊசிகள் உடலில் பற்றி எலும்பை ஊடுருவி அரளிப்பூ நெடித்தது. பூவின் காந்தப் பரப்பின் வசீகரத்தில் சிவந்து வெட்கினோம். வெள்ளை அரளியின் நுனிமூக்கு விம்மி ஈஸ்வரி அக்காளின் குரல் மட்டும் தொலைவில் மெல்லக் கேட்டது. முன்னொரு நாள் விட்டுச் சென்ற ஈஸ்வரியின் குரல் காற்றில் வருவதும் வராது கேட்பதுமாய் சுழன்றடித்தது மேல்காற்று. மரங்கள் இடைமறித்தன. பாறைகளைத் தாண்டித் தாண்டி ஓடிய எங்கள் கால்கள் நகரவில்லை இன்னும் முனியிடமிருந்து. 


குருமலையில் இடி விழுந்து முதல் கல் உருண்டது சாமி நாயக்கர் என்ற முறட்டு சமுசாரி ரூபத்தில். காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்த விதியை உடைக்கக் கொண்டு டவுணைப் பார்த்து வந்து கொண்டிருந்தார் சாமிநாயக்கர். 

நூறு வருஷங்களுக்குப் பிந்திப்போன நம்ம கீகாட்டு கிராமம் திசை மிரண்டு கிடக்கிறது. இருபது யானைகள் வரிசையாக நின்ற தோற்றத்தில் குருமலை படுத்துக் கிடக்கிறது. கிழக்கில் நீட்டிக் கிடக்கிறது. நம்ம ஊர் ஆட்கள் ஆழிகள் மாதிரி பெரிய பெரிய லகுடுகள். கடும் மொரடுகள். இந்த ஆட்கள் உசுரைக் கொடுக்க வேண்டியதிருக்கு. திரேதாயுகத்துக் கலப்பை திணறுகிறது. மேலே கெடந்தாமேகம், கீழ கெடந்தா தண்ணி நம்ம உயிர்தான மேகம்' என்று சாமி நாயக்கர் சொன்னார். கம்மஞ்சோறு தின்ன கொழுப்பு விடலை. எதுக்கும் பணியமாட்டான் சமுசாரி. சாவன்னா மேழி புடிச்சு உழுதால் கலப்பை திணறும். சாவன்னா உழுதுவிதச்சாத்தான் இந்த வருவும் விளையும். முதல் விதைப்பு. புஞ்சைக்குள் பச்சை லங்கோடு அசைந்தது. 


உழவுமாடுகள் மூக்கந்தண்டு வலிக்க உழைத்து நுங்கு நுரைதள்ளி நூல் நூலாய் வடிகிறது எச்சில். மாட்டை நிறுத்தி தடவிக் கொடுக்கிறான் திம்முரெட்டி. செல்லமாய் வளர்த்த வீட்டுக் காளையை தண்ணிக்குள் முங்கவைத்து வைக்கோலைக் கொண்டு மாறி மாறித் தேய்க்கிறார். இடுப்புத் துண்டை அவுத்து குளித்த மாட்டைத் துவட்டிவிட்டு 'என்ன மாதிரி ஆயிட்ட. இப்படி எலும்பும் தோலுமா ஆகிப் போனயே உன்ன எப்படி வச்சு காப்பாத்தப் போரனோ.. என்று கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினார். மாடு துள்ளாமல் சம்சாரி உயிர் வச்சு இருக்க மாட்டான். தோட்டத்தில் சோளம் கதிர்வாங்கி இருக்கு. குண்டு குண்டாய் கதிரு. சாமி நாயக்கர் தோட்டத்தில் கல்லுப்போல இருக்கு கதிரு. தோட்டத்துக் கடவுக்குள் துள்ளித் துள்ளி குதிக்கிறார் சாவன்னா. நம்ம கௌட்டு எளவு என்ன மாதிரியா துள்ளுது எளவட்டப்பள்ள மாதிரி. '


வெயிலும் மழைகளும் உளறும் மேகாத்தும் அடித்துத்திரட்டிய திரள் மாதிரி திரேகம். பசித்து வெளுத்துப் போன கருசல் தரையைப் போல சாம்பல் ஓடிய முகம். சாவன்னா வெட்டித்தரிசு. பளாரென்று விடிய கோவில்பட்டி டவுணில் தெட்சிணாமூர்த்தித் தெருவில் கைத்தடியூன்றி பெண்டு ஒடிந்த முதுகை நிமுத்தினார். நிமுரவில்லை. தலையைச் சாய்த்து தெருவை நோட்டம் பார்த்தார். 'அடத்தாயளி விடிஞ்ச வீட்டக் காணமே...' தெருவில் எழுந்த முதல் மனிதர்கள் மாதிரி தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கிஹீ கிஹீ... என ஆக்கங்கெட்ட கூகையாட்டம் சிரித்தார். சிரிப்பில் அனல் அடித்தது. சுவர்கள் எதிரொலித்தன. சிரிப்பு இருமியது. பழைய பெட்போடு மோட்டாரைப் போல் பெரிய ஹூங்காரத்துடன் உருமி சளியைத் துப்பினார். 


முனங்கலுடன் கைத்தடி நகர்ந்தது. 'ஏம்மா அப்பிடிப்பாக்குர சமுசாரிதான்மா.. சாமிநாய்க்கன் சமுதாரி தான்மா.. கீழ கொட்ரத போடுமா.. நான் பிச்சைக்காரன் இல்லேம்மா...' பப்புத்தாத்தா பிச்சை எடுக்க விதி செய்தோம். கைத்தடி கேட்ட நூறுகேள்விகள். தண்டவாளங்களில் வெயில் முறுகிக் கனகனக்க தண்ட வாளங்களைத் தாண்டி ஏன்? ஏன்? ஏன்? என்று கேட்கும் கைத்தடியோடு போய்க்கொண்டிருந்தார் சாமிநாயக்கர். 

அரங்கு இருட்டில் அவையும் பிறந்தன. மௌனமும் ஒருவகை இரைச்சலும் தானிய பாரமம் வரும். பிள்ளை பெத்துட்டா பிறந்த மேனியும் தானியமும் கூடி இருட்டு பதமாகிறது. உள்ளே இருந்து வெந்துவிடாத இருட்டு ஒவ்வொரு பிறந்த பிள்ளையுடன் சேர்ந்து வளரும். நெல் விளைவதற்கு வெள்ளாமைவாசி நல்லபடியாக இருப்பதற்கு கருப்பட்டியும் வெளக்கெண்ணயும் கொண்டு தெருப்பெண்கள் காளியம்மா பிள்ளை பெத்ததை பார்க்கப்போனார்கள். பிறந்த பிள்ளையும் தாயாரின் பச்சை உடம்பும் இருட்டைத் தீண்டி வளர்கிறது. 

 தீனமானக் குரலில் பிள்ளை அழுகையும் தாயின் - முனகலும் இருட்டில் வெளிப்படாத சிறுதீப்ம் போல் குணக்கும். பிள்ளை உடம்பு மட்டும் தெரிகிற வெளிச்சம். காளியம்மாளின் முகலெட்சணம் தாயான போது பார்க்க வேண்டும். கிராமம் முழுவதும் அவள் பிள்ளை பெத்த - சேதியில் குளிர்ந்தது. பெண் பிள்ளைகள் ஆறும் தாயாருக்கு அடங்குகிறார்கள், மச்சுவீடு காலியாக இருந்தது. உள்ளே பழம்பெரும் இருட்டு, அரக்கனைப் போல் வாய்திறந்தது. பூனை அழுது நீளும் இரவுக்குள் அரக்கனைக் கண்ட பூனை மெதுவாக 'நடந்து அவள் பின் தொடர்ந்து மறைந்தது. அரங்கு 'வீட்டில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கிய மண்பானைகளும்- மிகப்பழையவை. பல வாய் பிளந்த செம்மண் பானைகளில் மூன்னோர்கள் கொடுத்த தானியங்கள் இருக்கும். கொல்லனுக்கு வாழ்க்கைப் பட்டவள் பாடு தரித்திரமாவது சாஸ்திரநியதி. - தெருவிலிருந்தவர்கள் வந்து பார்த்தார்கள். மீசைக்காரத் தேவர் கோட்டூருக்கு வேண்டிகட்டிக் கொண்டுப்போனார் கொல்லனை. கோட்டூர் வைத்தியன் பார்வை பார்த்துச் சொல்லி விட்டான். 


கொல்லனுக்குப் பச்சவாதம். பரம்பரய்யா இருக்கும். தைலம் தடவி கைகால்களை (முறுக்கி விட்டான் வைத்தியன். திரும்பிக் - கொண்டு வந்தார்கள் கொல்லனை. வருகிற வழியில் கூண்டு வண்டிக்குள் கொல்லன் ஏலாமல் போனது பற்றி தேவர் மடியில் கிடந்து அழுதான். வெள்ளச்சாமி மனசு விடாதப்பா நாங்க இருக்கம்.... உனக்கு ஒரு அழிவும் வராதப்பா மனசாரிக்கோ  வெள்ளைச்சாமி என்றார் சுந்தரத்தேவர். 


கொல்லனைக் கொண்டுவந்து சேர்த்தார்கள். வண்டியிலிருந்து இறக்கி தூக்கிய போது கொல்லன் விசும்பி விசும்பி அழுதான். புள்ளை குட்டிகளும் சேர்ந்து அழுதன குருவு அய்யாவைக் கெட்டிக் கூப்பாடு போட்டது வயசுப்புள்ளை அழுவதைப் பார்த்து தெருவில் இருந்த பெண்கள் மருகினார்கள். அழாதம்மா (குருவு பெரிய புள்ளே அழக்கூடாது, தங்கச்சிகளுக்கு கஞ்சி ஊத்தும்மா போயி அடுப்பப்பாரும்மா” என்றார் சுந்தரத்தேவர் அப்புறம்  தீங்கருதுப்பருவத்தில் கொல்லன் காட்டுக்குப் போனான். கூடவே ஆறு பெண்களும் போனார்கள். பிள்ளைகள் - தின்பண்டத்துக்கு நகலந்து போனது. ரெண்டு பாகம்மங்கருதை நிலக்கசக்காய் கசக்கி கொம்பையை ஊதி வாயில் போடவும் பிள்ளைகளுக்கு ஒரே 'குதிப்பு: 


தட்டையை விலகி வரும்போது தீங்கருதின் அடித்தூரில் குருவி கட்டிய கூடு. காய்ந்த சருகும் பச்சைப்புல்லும் தழையத் தழைய விட்டு அடுக்கிவருகிறது. இன்னும் கட்டி முடியாத கூடு. சாம்பல் புள்ளிவைத்த முட்டையைச் சுற்றி பச்சைப் புல்லை மூடியிருந்தது குருவி. குனிந்து ஆடும் கருதுக்குமேல் பறந்து புர்ர்ர்ர்ர்ர் ரென்று கொல்லனைச் சுற்றி வட்டமடித்தது குருவி. 

உலாந்த காற்று, கோப்பம்மாள,  ஈஸ்வரி அக்காளின் பாட்டு, அப்பாவின் குகையில் இருக்கிறேன் . கொல்லனின் ஆறு பெண்மக்கள். , கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்  

  யதார்த்தத்துடன் உருகும் திரவம நீர்ப்பரப்பில் கிராமத்தின் ஒரு பெண் எப்போதுமே மிதந்தும் நீரடியில் மறைந்தும் கதை போடுகிறாள். உலர்ந்த காற்றில் கண் தெரியாத பாட்டியின் ஈர ரெப்பையின் மீது கருக்கிருட்டில் அசையும் பயிரினத்தில் நினைவும் ஆடுகளை விட்டத்தில் தொங்கும் பூதம் சந்தைக்கு அழைத்துப் போவதும் அரசாங்க டிமாண்டு நோட்டீஸ் கிழவியை மிரட்டும் பூதமாக உரையாடலைத் தொடங்குகிறது. ஒரு சில மிச்சமாயிருந்த ஆடுகளையும் தரகனாய் வேடமணிந்து வந்த பூதம் கூட்டிக்கொண்டு போக யதார்த்தமும் ஆடுகளின் வைசூரி வாடையும் கலந்த நிலப்பரப்பில் மெல்ல நுழையும் சட்டத்தின் பிடியே அதீத ரூபத்தை கொண்டுவிட உலர்ந்த காற்றில் வரும் சிறு சிறு ஒலியிலும் கண்தெரியாத பாட்டி சலனமடைகிறாள். வெவ்வேறு உருவமெடுக்கும் புராணபூதம் நிகழ்காலத்துடன் கதை சொல்லும் பாட்டியுடன் ஆடுகளுடன் இணைந்து கொண்டிருப்பதாகப்படுகிறது. ஈஸ்வரி அக்காளின் பாட்டு, கோப்பம்மாள் இரண்டுமே எழுதப்பட்ட காலம் வேறு வேறாயினும் நீரப் பரப்பிலிருந்து உயிர்பெறக்கூடியவர்கள். பின்னே எழுத நேர்ந்த கதைகள் சில கோப்பம்மாளின் கண்ணின் அடியில் இருந்த மையெடுத்து தீட்டப் பட்டவைகளாக இருக்குமோ, கம்மாய் நீரும் வட்டமான பெரிய கண்ணாக அபாந்திர வெளிபார்த்து உருளும்போது விண்ணக எரிகோடுகளும் கிரக விதிகளும் ஒளிப்புள்ளிகளும் கோப்பம்மாளின் வளையும் கண்பரப்பில் சுழல்வதால் இவ்விருகதைகளும் ஒழுங்கான எதார்த்த அடுக்கை கொண்டிருந்தபோதும் எதார்த்தத்தை மறுக்கும் எதார்த்தங்களுடன் மிதக்கும் பிம்பங்களாக அலைவுறுகிறார்கள். கண்ணின் கருமணியில் இருட்டும் உலகில் கொல்லனின் ஆறு பெண்ருதுக்கள் அரங்கு இருட்டின் கண்களில் ஜனித்திருக்கக்கூடும். 

கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் குறுநாவலும் அப்பாவின் குகையில் இருக்கிறேன் குறுநாவலும் மாறுபட்டவை. கி.ராஜநாராயணனின் முன்னத்தி ஏர் மறைந்துவிட திரேதாயுகத்துக்கலப்பையுடன் அவர் பின்னே சென்ற சாமிநாயக்கரும் பப்புத்தாத்தாவும் (கருவேப்பிலைகள்) அருகருகே சாயல் கொள்ள கி.ராவின் பல சிறுகதைகளில் இருந்தே ஆங்கில மல்லாத பிராந்திய குணங்களுடன் வறட்டுப் பாறைகளுடன் துவங்கிய உரைநடையிலிருந்து பூமணி, பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி ச.தமிழ்ச் செல்வன் மு.சுயம்புலிங்கம் என விரியும் நிலப்பரப்பில் இருந்துதான் முப்பத்தி மூன்று சிறுகதைகளையும் ஒரு குறுநாவலோடு எழுத நேர்ந்தது. கி.ராவின் பேதை, கதவு, ஜீவன், 'கருவேப்பிலைகள்' பூமணியின் பிறகு மு.சுயம்புவின் 'மூளிமாடுகள்', 'மானாவாரி மனிதன்' பா, செயின் தாலியில் பூச்சூடியவர்கள்' ச.தமிழ்ச்செல்வனின் 'கருப்பசாமியின் அய்யா' 'வார்த்தை ' யிலிருந்து உருப்பெற்ற மொழியை இவர்களின்றி அடைந்திருக்க முடியுமா? பின்னே மாறிய கதைகளுக்கும் அவர்களே காரணமாக இருந்திருக்கக் கூடும். வெள்ளைத்தோலும் ஆங்கிலமும் பிஸ்லரி வாட்டர் கேனும் ஏன்? என்பதும் கைத்தடி கேட்ட நூறு கேள்விகளில் ஒன்றுதான். 

பிறந்த பிஞ்சிகளுக்கு சாராயத்தைத் தொட்டு சேணை வைத்து பிள்ளைகளை வளர்க்கும் காட்டுக்கூட்டம். அம்சவல்லிக்கு அறுத்துக் கட்டிய தாலியோடு பல பனை மணந்து வெளியேறினாள், சூரியன் கீழே இருள்மேலே காட்டுப் பாதையில் எழுந்து நடக்கிறாள், தெம்மாங்கு இழந்த காற்று வீசும் கிராமப் பாதை. கல்லோடையில் மலையனோடு புணர்ந்த இரவு வால்நட்சத்திரம் எரிந்து மறைந்தது. கூண்டு வண்டிகள் வைப்பாற்று மணலில் உரசிச் செல்கிறது. ஆழத்தில் விழுந்த மரத்தில் ஒரு பூ விரிந்து கொம்பூதியபடி கருப்பு வம்சம் சுற்றிச் சுற்றி வந்து மறையும். பனைகளின் கூந்தல் அறுந்து விழுந்தது. அறுந்த பனை மேல் இருளில் நகரும் பெண் பறவை அமர்ந்து கூவும். நிலங்களில் ஒடுங்கிய பூர்வகால ஸர்ப்பம் ஒன்று வானம் முழுவதும் எழுந்து மறையும். விருவோடிய நிலங்களைக் கடந்து நடந்தார்கள். காய்ந்த சருகில் மிதித்துக் காடோ செடியாக அலையும் கருப்பு இனம். சாராயம் காய்ச்சித் திரியும். ஊரைச் சுற்றிலும் உடங்காடு. ஊர் எல்லையில் காப்புலிச்சியம்மன் கோயில், வருவும் ஒரு கொடை. சேவலை காவுகொடுத்து சாராயத்துடன் சுருட்டுப் படையல். துடியான தேவிக்கு ஆட்டுத் தலையை அறுத்து வைக்கும் கிராமம். ஆதக்காளின் கிழிந்த காதுகளோடு மேற்கே. நகர்ந்த கூட்டம் கழுத்தை ஒட்டிக் கட்டிய தாலியில் காட்டு மருக்கொழுந்தைச் சுற்றி பிராயத்தில் தாலிகட்டி காதுகளை கிழித்துக்கொள்ளும். சீக்கிரமே பிஞ்சிகளை ஈன்ற பச்சை உடம்பில் வெதுவெதுத்துப் பொங்கிய அமிர்தத்தை உறிஞ்சி வளரும் சிசு. கருப்பு நிற மயிரடர்ந்த உருவங்கள் கையில் தீப்பந்தங்களுடன் ஆடிவரும் புராதன நடனத்தில் தீப்பற்றிய கால்களுடன் ஆடிவருகிறார்கள். அதன் ஒளிபட்டு உருவங்கள் தோன்றி மறையும். நெருப்பைச் சூழ்ந்த ஆதி மகளிர். குலவையிட்ட பாடல். 

கள்வெறி கணக்கும் கண்களுடன் பாளை சீவும் அருவாள்கள் மின்னியது. ஊழிப் பெருவெளியில் பாதை வெட்டிக்கொண்டே போன கருப்பு வமிசம். நெஞ்சில் கருப்பு வடுக்கள் விழுந்து காய்த்துப்போன இருளன். கற்பகவிருட்சம் பாளையில் கள் சுரந்தது. பனையேறிக் கூட்டம். சுற்றிலும் கருப்பு வமிசத்தார் சபையில் இருக்க பனை ஓலைக் குருத்தை முடிந்து தாலியாகக் கட்டி கல்யாணம் நடந்தது. இருளன் கட்டிய தாலியோடு ஆதக்காளின் வமிசம். மண்ணைக் கிண்டி மாளாமல் கொழு முனையில் விழுந்து செத்தார்கள். 

பல்வேறு கதைகளை உபகதைகளாகக் கொண்ட 'மதினிமார்கள் கதை' யின் தொடர்ச்சியை 'பாழ்' கதையில் வரும் பண்டாரமகளிடம் பன்னீர் விருட்சத்தில் மறைந்திருக்கும் விருட்சகன்னியிடம் மரவெட்டி ஒருவன் ஒளிந்திருந்து பார்த்து விருட்சம் திறந்து நிலவொளியில் திராட்சைகளைப் பறித்து உண்டு கொடிக்காலில் வெற்றிலையும் கமுகுமரத்தை அசைத்து குருதி நிறங்கொண்ட வித்துதிர்த்து தாம்பூலம் தரித்து நிர்வாண கன்னி கிணற்றில் இறங்கி நீராடி தன் படர் கூந்தலை சிணறு பூராம் விரித்து முடிசிலுப்பி மோந்துபார்த்து கற்பூரம் வாசனையுடன் மஞ்சள் தண்டு தேய்த்து நீரில் முகம்பார்த்து மரத்துள் போய் மறைவதை முன் கதையாக மறு சொல்லில் மீமனித மாயச்சுருளை முன்னிறுத்தி செம்புக் கூத்தான் பட்சி விடிய விடிய அகவும் விருஷகன்னியைத்தேடி.. இன்று எழுதி முடித்த 'சிணற்றடி ஸ்திரீகளும் ஈஞ்சாளின் நெல்வயலில் அசையும் ஈஞ்சநாட்டு நிலப்பரப்பில் அதிரும் நெல் நரம்பில் மயங்கும் சுருதி வரை மதினிமார்கள் கதையொன்றின் உப கதைகளாக வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து படித்தவர்களால் உணரமுடியும். 

பூவுதிராத 'கம்மங்கதிரில்' தோன்றி நகர்ந்து வரும் நத்தையின் உணர் கொம்புகள் மெல்ல ஊர்ந்து 'நத்தைக் கூடெனும் கேலக்ஸி'யாக வடிவம் எடுத்துள்ளதை ஊர் கம்மாய்க்கரை கருவமரத்தில் ஆடிக் காற்றில் உலர்ந்து ஒட்டிய வெறும் நத்தைக் கூடுகளின் விசில் ஒலி காடுகளில் கேட்கும் போதெல்லாம் சுருளும் ஓசையில் தட்டாண்கள் பறந்து திரிவதை நத்தையுடன் இணைத்து பறக்கவிட்ட பால்யகாலக் கண்சுருளில் மாறும் வடிவத்தை இன்று கேலக்ஸியாக்கினேன். 

கருப்புரயிலில் புறப்பட்டுப்போன முனியம்மாமகன் சிவகாசிக்குப் போய் விட்டான், ரயில் விளையாட்டையெல்லாம் அங்கு வைத்துக் கொள்ள வேண்டியது தான். என் கிராமத்தின் தெருக்களைக் கடந்து இருந்த ஆரம்பப் பள்ளிக்கு போகும் சிமெண்டு வாய்க்கால் வளைந்து வளைந்து செல்லும் கோட்டைச் சுவர்மீது பென்சில் சிலேட் குச்சி கொண்டு கோடு இழுத்த வண்ணம் போவதும் வருவதுமாக இருந்தேன். தெருத் தாண்டும் சாக்கடைப் பொந்துகளில் கோடு உள்போய் அடுத்த விளிம்பில் வெளிவந்துவிடும். பின்னர் எல்லாம் மறைந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு கிராமத்துக்குப் போய் தெருவழி சென்றபோது நான் இழுத்த பென்சில் கோடுகளைக் கண்டு அதிர்ச்சியும் பரபரப்புமடைந்து கூடவே சென்னைக்குப் போன ரயிலில் கோடுகளையும் காலித்தீப்பெட்டிகளில் சுருட்டிக் கொண்டுபோய் தனிமையில் திரிய நேர்ந்தது. அந்த தொலைவான குக்கிராமத்தின் சுவரில் பதிந்த கோடுகளைக் கண்டு தொலைவிலிருந்தே தலைவணங்குகிறேன். திரும்பத் திரும்ப அந்தக் கோடுகளை எழுத முடியுமா? அதைநோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அந்த கருப்பு ரயிலில் தான் என் பிராயகால சகாக்களான கூலு, தங்கராசு, சாமிகேசவன், சித்திரைவேலு, பழத்தோட்ட ராமசாமி பனைவிட்டத்தில் நாண்று கொண்ட தம்பி வீரசின்னுவரை எல்லோரும் போய் மறைந்தார்கள். இன்று அந்த ரயிலுக்காகக் காத்திருக்கிறேன். இனி கிடைக்கப்போவதில்லை என்றாலும் ரயிலைத் தவறவிட்டவனின் பரிதவிப்புடன் பிளாட்பாரத்தில் தவறவிட்ட பொன்வண்டுகளை தீப்பெட்டிகளில் அடைத்து கலர் நூலினால் இடம் விட்டு இடம் இணைத்த பெட்டிகளில் எல்லோரது அதிசய உலகத்தையும் கொண்ட ரயிலுக்காகக் காத்திருக்கிறேன். இருளில் மறைந்த கருங்கோடுகளில் பயணமான அப்பாவின் குகையில் இருக்கிறேன் குறுநாவலும், போடிநாயக்கனூர் பாசஞ்சர் ரயிலும் தனுஷ்கோடி ரயில் நிலையமும் இன்னும் ஆளற்ற வெறும் ஸ்டேஷனில் இலங்கை அகதி ஒருவனின் காத்திருப்பாக துயரம் தொடர அழிந்துபோன தனுஷ்கோடி நகரின் இடிபாடுகளிடையே காணாமல் போன ரயிலில் உல்லாசப் பிரயாணம் போன நூறு சிறுவர்களும் கடலுக்குள் ரயிலோடு மறைந்த தனுஷ்கோடிப் புயலில் காணாமல் போன ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறேன் மணல்வெளி மீது. 

ஆங்கில வகுப்பறையில் சுழலும் நூலகத்தில் மாறிமாறி வந்த காலனிய அடிமைச் சாசனத்துடன் இறக்கப்பட்ட ஆங்கில இலக்கியப் பிரதி மடிப்புக்குள் நெளியும் வெள்ளிப் புழுவாய் ஈயநிறத்தில் வெள்ளைத்தோல் மோகத்திலிருந்து இன்று வரை விடுபடாத படித்த வர்க்கம் பிராந்தியமொழி மரபிலிருந்தே சுயம்புவான கலாச்சாரத்தின் ஆதித்தன்மைகளை விட்டு விலகியே தங்கள் அளவுகோல்களை கம்பனியார் தொப்பிக்குள்ளிருந்து எடுத்து நீட்டினார்கள் போலும். கழுவக் கழுவ கைவிரல்களில் எஞ்சிய சாம்பல் நீலக் குருதியிலிருந்து ஆலீஸை உதறி. 


வெள்ளைத்தோலுக்கும் ஆங்கில மோகத்துக்கும் பலியான நீண்ட இருநூற்றாண்டுகளுக்குப் பின்னும் 'எழுத்து' சிற்றிதழ் வரையும் பிறகும் இலக்கிய மதிப்பீடுகளுக்கு காலனிய அளவுகோல்களைத் தொடர வேண்டிய நிலை என்பதுகளுக்குப்பின் மாறத் தொடங்கியது. 


அலாதியான தமிழ் கலாச்சாரத்தின் நிலத்தோற்றங்களை புதுமைப்பித்தன், வண்ண நிலவன், பூமணி, கி.ரா., ஆர். சண்முகசுந்தரம், கு. அழகிரிசாமி, பா. செயப்பிரகாசம், ஆர். ராஜேந்திர சோழன், நா. முத்துச்சாமி, தமிழவன் என நவீன கதை சொல்லவந்த பிராந்தியக் குணங்களில் இருந்துதான் எண்பதுகள் தொடக்கத்தில் துவங்கிய என் சிறுகதைகளில் கிழக்கில் விரிந்து சிடந்த நிலப்பரப்பின் சமுதாய நினைவுகளை தனிமொழியில் சுருளவைத்து ‘மதினிமார்கள் கதை' 'கொல்லனின் ஆறு பெண் மக்கள்' ஆக முதல் இரு தொகுதிகளில் அடங்கிய முப்பத்து மூன்று கதைகளில் யதார்த்தமும் புனைவும் கலந்த பல கதைகள் இருக்கக்கூடும். புதுமைப்பித்தன் இலக்கிய மரபின் சுற்பனாசக்தி செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்ததும் எதார்த்தம் விலகிய கதைகள் சில அடங்கும். பாழ், இருட்டு, கருப்புரயில், ஆதிவிருட்சம் என முதல் தொகுப்பில் இடம் பெற்ற ஆரம்பக்கதைகளே நான்காவது தொகுதிக்குப் பின் இத்தொகுப்பின் கதைகளில் தொடர இழைக்கதாமந்திரப்பரப்பை விரிக்கவும் தொன்மத்தின் ஆழத்தில் சலனமுறும் மொழிப்படிவுகளில் கதையின் விசை இருப்பதாக அறியமுடியும். மரபு வடிவங்களை விட்டு விலகி வெகுதூரம் வந்து விட்டபின் தொல் மனப்படிவங்களில் உறைந்த தமிழின் அகராதி இடம்மாறிக் கொண்டே புதிய கதைவெளியின் நிகழ்காலத் தொன்மத்தை புராணத்தின் தொல்கதையின் கலவையில் சாத்தியப்படுத்த வேண்டியதாகிறது. ஜப்பானிய மரபில் கபூகி சடங்குகளில் ஓலங்களும் ஓநாய்களின் ஊளையும் புராதனத்தை எழுப்புகின்றன. கணக்குழுக்களின் மந்திரங்களும் கதையும் பாஷாணக்கட்டும் மருத்துவமும் தொடுகுறியும் முன்னுணர்ந்து சொல்லும் கிழ ஆந்தைக் குரல்வளையும் கொண்ட தமிழ்முதுகுடி ராசிமண்டலத்தில் நேரப்போகும் கிரகணத்தின் ஆதிப்பூடக விஞ்ஞானமும் ரஸவாதமும் உப்பும் கஷாயமும் கொதித்துத் திரட்டிய மொழிப்பரப்பில் இருந்துவிலகிய எதார்த்த முகத்தில் எழுத்தைக் காணோம். 


கிராமத்தில் மறைந்து கொண்டிருக்கும் சூனியக்காரிகள் என்மேல் ஆட் கொண்டதால் எதார்த்தவாத எழுத்து முறையை மாற்றி நேர்கோட்டை தலைகீழாகவும் ஈக்கி ஈக்கியாக ஒடித்தும் சிதைத்தும் ஒருமை நோக்கி படரும் கோடுகளை குறுக்கே கீறி வேறுமொழிக்கு மெல்ல உருமாறும் கதைகள் உள்ளுரையாகக்கொண்ட புறநானூறு கலித்தொகைவழி வேனர்சார் திரிந்த திணைசமிக்கையில் கரு, உரி மறைமுக நிலவிலாஸத்தில் சில கதைகளிலிருந்தே மாறிக் கொண்டிருக்கிறது. 

வனராக்கியருக்கு பானபலிகள் இட்டு சடைநாக்கில் தொங்கும் அகரர்களின் மொழியை எழுத்தாக்கும் தொன்மத்தின் அடித்தட்டில் பயங்கரச் சடங்குகளுக்குள் ரத்ததாகம் கொண்ட வழிபாட்டில் இருபத் தோராயிரம் நடுகற்களில் நடுங்கும் தமிழ்க் கதை மரபை யாரும் எழுது வாரின்றி ஊர் ஊராய் எட்டிப்பார்த்து நிற்கிறது நடுகல், 


-தாது வருஷம், பங்குனி மாதம் 



3 : கதாச்சுருள் - கோணங்கி

 3.கதாச்சுருள் - கோணங்கி

--------------------------------
இப்போதெல்லாம் சிறுகதைகள் அவசரப் படுத்துகிற ஒவ்வொரு பொருளையும் விளக்குவதில்லை. எதார்த்த வடிவத்தின் வரம்புக்கு வெளியில் எதிர்புனைவின் சூறாவளியில் குரல்பலவும் சேர வேண்டியிருக்கிறது. இதுவரையான வடிவத்தின் மரபிலிருந்து விலகிய. மாறிக்கொண்டே இருக்கும் கதையை மொழியின் உருக்களாக சேர்க்க விளைகிறேன். தன்னைவிட்டு நெடுந் தொலைவிலிருந்து பிரபஞ்சத்தின் குரல்" உலவும் வெளித்துகளையும் காண நேர்கிறது. துடிக்கும் வார்த்தைகளை தனி மொழியில் வெளிப்படுத்தினேன். நேர்ந்த அனுபவங்களிலிருந்து எல்லாவற்றையும் சொல்லப்போவதில்லை. முக்கியமாக பிளக்கும் இடைவெளியில்தான் மொழி தன்னைப் புத்துருக்கொள்கிறது. ஏனெனில் சாவின் சமீபத்தில் பிறந்த அராபியக் கதைகளின் கட்டமைப்பை ஷீரஸாத் சொல்ல நேர்ந்ததால் புதிய கதை வெளியின் துகள்களை அங்கிருந்தே நெடுங்கனவில் அடைகிறேன். என்விரலால் எழுத நேர்ந்த முன்கதைகளின் வார்த்தைகளைச் சிலுவையாகத் தூக்கிச் சென்றேன் பல சந்தர்ப்பங்களில். என் நிழலே விழாத கதையை முன்னும் பின்னரும் எழுத நேர்ந்தது. எதார்த்த உருக்கள் கரைந்து வேறு ரூபம் கொள்ள இருந்ததும் என்னை விட்டு விலக நேரும் போது நடக்கிறது. அடைத்துக்கொண்ட எழுத்தாளனின் பிம்பமோ கதா மந்திரப் பரப்பை சிதைக்கவும் வசீகரம் இழக்கவும் பயன்படுகிறது. பிரதி முக்கியமென்றாலும் கற்பனையான ஒன்றிலிருந்து துவங்கி குருதியில் இறங்குகிற உப்புக்கத்திகளாக வார்த்தையை கவனமாக விட்டுச் செல்வது எழுத்தாளன் மட்டும்தான். அறிவின் அதிகாரத்தையும் அதை எதிர்த்த அறிவு ஜீவிகளின் சிந்தனைச் சாரளங்களில் எழுத்தாளன் இறந்துவிட்டபிறகு பிரதிகளை அழுத்திப் பிரிக்கும் போதும் தாள் முகமூடிகளை அணிந்தே சும்மாகிடந்த எழுத்தாளனின் சவத்தை அறுக்க நேர்ந்திருக்கிறது. வார்த்தைகளை இணைத்துப் புதியவிளையாட்டைத் தொடர்ந்த போதும் சறுக்கிவிடுகிற கதையின் முன் னறியாத விதிகளை மார்க்வெஸ்ஸிடமிருந்தும் போர்ஹேயிடமிருந்துமே கற்றுக் கொண்டாலும் கீழைக்கதா மந்திரப்பரப்பில் அலைவுறும் ஐந்திணைகளில் இட மாறும் சூனியக்காரிகளை இவர்கள் யாராலும் சமாளிக்க முடியவில்லைதானே.

காகிதத்தில் விழுந்த விரல் ரேகையின் சுழற்சியில் வார்த்தைக்கு முந்திய திரவ மனநிலையில் பழைய வேதி ஏடுகளுடன் ரஸவாதியைச் சந்திக்க நேர்கிறது முதலில். காலனியக் காலத்திற்கு முந்திய உடலையும் புலனையும் தோண்டி எடுத்து எலும்புகளின் ஆய்வுக் குறிப்புகளை அரூபத்துகள் மட்டத்துக்கு சுருக்கிட்டு 'கதை' அழிப்பு நடந்த சில வருஷங்களில் கதைசொல்லியின் கழுத்தை நெறிக்க வந்த அதிநூதனவாதிகளுடன் "சமஸ்கிருதக் கதைமரபே தமிழுக்கு.. வேறு சுயமரபில்லை " என இரும்பு முகமூடிக்கடியில் சிரித்தவர்களும் கர்னாடக முரசு
கொட்டி (Anti Literature) பரப்பிய நான் லீனியர் எழுத்துக்காலமும் - தன் கதையில் வரும் உணர்ச்சிவசப்பட்ட சுதாபாத்திரமாக மாறிப்போன தட்டை அட்டைக் கோட்டு ஒற்றைக் கருத்துருவ நியூஸ்பிரிண்ட் அச்சு எந்திரக் கதைக்காரர்களும் காலந்தவறி வந்த ரயிலை விட்டிறங்கி ஓடிவர நேரமிருக்கிறது இன்னும். பகுத்தறிவின் கூரிய வாட்களுடன் சமூகவியல் எதார்த்த வகை அறிவு ஜீவிகளும் எழுத்தாளர்களும் இழந்த கதைமரபை சமூக உடலில் தேடித் தேடி தோற்றுப்போனார்கள். உடலுக்குள் புலனுணர்வுகளுக்குள் தர்க்கத்தில் உருக்கிவார்த்த கருத்துருவத்துள் அடைத்துப்பார்க்க எந்தக் கூண்டிலும் அடைபடாமல் தோலுக்குமேல் ஒரு இஞ்ச் இடை வெளியுடன் பரவியுள்ள பிதாமந்திரப்பரப்பை ஒவ்வொரு கதைக்காரனின் மரபுரிமையாக அறிவிக்கப்பட வேண்டும். சிறுத்தையின் உடல்புள்ளிகளையே மிருக விநோதச் சுருள் என்பேன், தான்தோன்றியான சிறுத்தைப் புள்ளிகளில் தான் நவீனக் கதைக்காரனின் இருப்புக்கான குறியீடு இடம்பெற்றுள்ளது. குரல்களை தொன்மத்தை நோக்கிய பிலவாயிலில் நின்றவாறு கூவியது நடந்தேறி வருகிறது. புனைவின் வசீகர ஆளுமைகளை, உறங்கும் எலும்புகளின் கனவை, யுத்தங்களால் சேகரிக்கப்பட்ட குருதியின் பழங்கால நினைவுகளை ஊடுருவிப்பாயும் பாட்டிமாரின் கதாமண்டல - தாந்திரீக மொழியைப் புறந்தள்ளிவிட்டுச் சமூகவியலும் ஃபோட்டோ ரியலிஸமும் அ-நேர்கோட்டு மேல் தளத்தில் வெட்டிச் சாய்த்த வேகத்தில் முனிகள் அடைந்த புளியமரங்களும் சாய்ந்ததுதான் துரதிருஷ் டமானது. வீர்யமிக்க யதார்த்த மரங்களைவிட பொந்தாயிரம் புலி ஆயிரம் வாழ்ந்த பேய்க்கதைகள் கூறும் கிராமத்தின் ஆத்மாவை ஒவ்வொரு புளிய இலையின் நடுக்கத்திலும் புளிப்பு வாசத்திலும் பசுமைச் சாறு கசியும் கதாச்சுருள் மரப்பட்டைகளின் விருவுகளில் எறும்புகளாக ஊர்ந்து கால்களை அசைத்துக் கொண்டிருக்கின்றன. கதைக்குள் கூடிவந்த மைய சாராம்ச கலாவேகத்தின் சகாப்தம் முடிந்தபின்னும் மியூசியத்துக்குள் இன்னும் பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.

முகத்தில் வாசித்த எழுத்தை கதைக்குப் பின்னே ரகசிய இழைகளாக வைத்திருக்கிறேன். பழைய வீடுகள் சொன்ன சேதியிலிருந்து கதையின் முதல் வரி துவங்கியிருந்தது. முதல் எழுத்தில் இறங்கிய திரவமனநிலையில் இருட்டுத் தண்ணீருக்குள் போய்க்கொண்டே இருக்கிறேன். தண்ணீரான எழுத்தில் இறங்க இறங்க இழுத்துக் கொண்டிருக்கிறது. மூழ்கிக்கொண்டிருக்கும் போது மடிக்கப்பட்ட தாள் பரப்பில் மனிதர்கள் தீக்குமிழாகச் சுழல்கிறார்கள். ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு முதல்வரி தனித்தனி இடங்களிலிருந்து எதிரும் புதிருமாகத் துவங்கி அறுபடுகின்றன. ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வதில்லை. விலகி விலகி விழும் முதல்வரி அடங்கிய வேறு கதைகள் தாறுமாறாய் சிதறிக்கிடக்கும். எழுதப்போகும் கதைகளுக்கான முதல் வார்த்தை இருட்டுத் தண்ணீரில் சலனமடைந்தவாறு மறையும். எந்த எழுத்தைத் தொட்டாலும் தண்ணீராக மாறிவிடக்கூடிய உருமாற்றம். நான் எழுதிய எழுதாத வார்த்தைகள் குவிந்த அச்சுப் பிரதிகளும் கைப்பிரதிகளும் தொட்டதும் நீராக உருமாறுகின்றன. அவற்றை * திரும்பவும் கதைகளாக மாற்ற, தண்ணீரால் வார்த்தைகளுக்குள் அடங்க முடியவில்லை. சதாவும் சலனமடைந்தபடியே சேர்ந்து சேர்ந்து ஒன்றாகும் வார்த்தைகளை என் விரல்கள் வேக வேகமாகத் தொட்டுக் கொண்டே நகர்கின்றன. உணர்வில் மட்டுமே கரையும் கதைகள் சிலவும் வருகின்றன. தோற்றும் போகின்றன. நீரின் மாயத்திலிருக்கும் கதைகள் முன்னறியாத விதிகளில் இயங்குவதால் எதார்த்தத்தையும் மாயத்தையும் பிரித்தெடுப்பதில் தோற்று விடத்தான் முடியும்.

தேவதைகளைத் தவிர மனிதனுக்குப் பொருத்தமில்லாத விதிகளைத் தான் மீமனித மாயச் சுருள் போல பல என் கதைகள் கொண்டிருப்பதால் மாறுபட்ட விதிகளை ஏற்க மறுப்பதும் நடக்கிறது. மாறிப்போன கதைகளின் வரிசைக் கிரமமான விவரிப்பை நான் கொடுக்க முயற்சிக்கப் போவதில்லை.
கிராம தேவதைகளுக்குப் பலியிடப்பட்ட பன்றி இறைச்சி தொங்கும் உடை மரத்திலிருந்தும் மாமிச வெறியிலிருந்தும் அச்சுறுத்தும் தேவதைகளின் மொழிப் பிராந்தியங்களுடன் எதார்த்தவாதிகள் ஒருபோதும் ஒத்துப் போவதில்லை.
எழுதப்பட்ட வரிகளால் தாறுமாறாய் சிதறிக்கிடக்கும் என் அறை. கதைகள் கொண்டு செல்லும் மீமனித மாயச் சுருளின் அடையாளங்களை காகிதக் கற்றைக்குள் புரட்டிப் புரட்டி கவனமாகத் தடயம் பார்க்க வேண்டி இருக்கும். என் அறை மூலையில் மர ஸ்டேன்டில் வைக்கப்பட்ட பாதரஸ விளக்கில் தனியே மிதக்கும் சுடரில் புகுந்து எரியும் பிரதிகளை தலைகீழாகப் பிடித்திருக்கிறேன். எழுத்துக்கள் உருகி மெலியப் பயன்படுத்திய ரஸக்கரைசலில் நிறக்கோடுகள் உருமாறுவதை சில வேளை யாராவது காணக்கூடும். என் கைப்பிரதியில் படியவிட்ட பாதரஸத் திரியின் சுடர் படபடத்துப் பற்றிக்கொண்டு காகிதம் முழுவதும் பரவிய தீயில் உருகும் கதைக்குள் பாதரஸமாக உருமாறும் வார்த்தைகள் புதுமைப்பித்தன் என்ற ஹடயோகியிடமிருந்து வாழையடி வாழையாக வந்து சேர்ந்திருக்கக் கூடுமோ.
இரவும் வந்த சாகுருவி 'சா' எனக் கத்தும் குரலில் யாரோ இறந்த பயம் நெஞ்சைக் கவ்வ அத்தை அடிக்கடி சாகுருவியிடம் என்னைக்காட்டி என்மீது 'சா' எனச் சொல்லிவிடாமல் சேலைமுந்தியால் மூடி என் தலையை மறைத்தபோது குருவி 'சா'யென சிரித்தது. எப்போதாவது என் தலைக்கு மேல் சாகுருவி 'சா வென்று சொன்னால் நிச்சயம் எழுதுவதை நிறுத்தி விட்டுச் செத்துப்போவதாய் நம்புவதாக இருக்கிறது இன்னும். என் கதைகள் மீதோ நகர்ந்து கொண்டிருக்கும் கதாபாத்திரங்களின் மீதோ சாகுருவி நிழல் விழாமல் அதன் குரல் படாமலும் காத்து வருகிறேன். அது வந்து விடும் ஒவ்வொரு இரவையும் கொண்ட என் எழுபது கதைகளையும் சாகுருவியின் சாவுத்துடி பற்றிக் கொண்டிருப்பதால் அதை வாசகர்கள் கொஞ்சம் இடம் மாறி இடம் மாறி அமர்ந்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பேதை உள்ளான் கதையை எழுதிவிட்டால் உடனடியாக அன்று இரவு சாகுருவி என்மேல் பறக்கக் கூடும். பேதை உள்ளான் கதையை நான் எழுதியிராத போதும் அது மார்த்தாண்டன்பட்டிக்கு வாழ்க்கைப்பட்டுப்போன மூன்று அத்தைகளின் கதையாகத்தான் இருக்கும். என் கதைகளுக்கான ரகசிய இழைகளை அவர்களே அறியக்கூடும். அல்லது குறுக்கே பாயும் 'சா....' வென்ற குரல் சுழற்சியில் சாப எழுத்தும் கதைமரபும் கொண்டு செல்லும் சாகுருவியைக் கேளுங்கள்.