Pages

Wednesday, January 23, 2013

பசுவய்யாவின் 'சவால்', விக்கிரமாதித்தனின் 'மண் கீறி புதைத்து வை'


பசுவய்யாவின்  'சவால்

நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.

வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்.

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.

எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.

நன்றி 
http://mdmuthukumaraswamy.blogspot.in/2013/01/9.html


மண் கீறி
புதைத்து வை
வான் பார்க்க
வருவேன்
முளை விட்டு

-விக்கிரமாதித்தன்




“நெஞ்சு படபடக்கிறது
அருவியை யாராவது
நீர்வீழ்ச்சி

என்று சொல்லிவிட்டால்..!”

-விக்கிரமாதித்யன்.