Pages

Monday, August 05, 2013

பொழிவு -சு. வில்வரத்தினம்.

பொழிவு -சு. வில்வரத்தினம்.

மின்னி முழங்கி
பொழிந்தாற்றான் பொழிவா
பொழிந்த பெருமழைக்கு பின்னால்
மெல்லக்
காத்திருந்து எழுமே ஓர்
பேர் மௌனப்பெருக்கு

அடைமழைக்குப் பின் முளைக்கும்
கதிர்விரிக்காலையில்
வழியுமே
ஓர் எல்லையற்ற பேரமைதி

கழுவி துடைத்த வானின்
நட்சத்திர விழிகள்
சொரியுமே
ஒரு ஸ்ருதிச் சுத்தம்

புலன்கள் உறைந்து போக
இவற்றின்
பொழிவில் நனைந்திலையா

இலையுதிர்த்த நெடுமரமாய்
ஏகப்பெருவெளியின்
சங்கீதம் குளித்திலையா ?

-சு. வில்வரத்தினம்.


Thanks to http://mkmani-sulal.blogspot.in/