Pages

Thursday, April 10, 2014

ரஸவாதம் - பிரமிள்

ரஸவாதம் -  பிரமிள்

இதயத்தில் உன் மறுப்பின்
வேல் புதைந்து
வாய் பிளந்து
பசி என்ற குரல் எடுத்தது
வடு
குரல் மேட்டு
தாய் மன நிலவு
முலை சுரந்தாள்
சொரிந்ததுவோ
துக்கத்தின்
விஷ நீலம்
ஆனால்
பருகிய வடுவின்
இதய வயிற்றுள்
துக்கம் செரித்துப்
பிறந்தது
வேதனை அமிர்தம்.

கொல்லிப்பாவை - 4, 1978

 நன்றி தட்டச்சு  :  வைகறை மாசி 09, 2007