Pages

Thursday, May 15, 2014

ஏழு வண்ணங்களையும் உடையவள் - கே.சி.செந்தில் குமார்

ஏழு வண்ணங்களையும் உடையவள் - கே.சி.செந்தில் குமார்

திடப் பொருளும்
திரவப் பொருளும்
வாயுப் பொருளுமல்லாது
அவள் கிடைத்தாள்

நான் மூச்சுவிடப் போதுமான
இடைவெளி விட்டென் இதயத்துள்
நிரப்பினேன்

அதனுள்ளவள்
ஆடவும், பாடவும், கால்களை
தொலை தூரங்களுக்கு அழைத்துப்
போகவும்
அனுமதியளித்தேன்

நான் எப்பொருளுமின்றியலையும் சில
வார்த்தைகளை உடைத்தெறியும் போது
எங்கிருக்கிறாள் எனக்குள்ளே
எனக் கேட்டேன்

உனக்கு தெரியுமா ?
ஏழு வண்ணங்களையும் குழப்பித்
தீட்டினால் அவள் கிடைப்பாள்
என்றெதன் மௌனம்

-உன்னதம் 6 (அக்டோபர் - 1996)