Pages

Sunday, July 20, 2014

ஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)

ஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)

கனவில் மூழ்கிக் கிடக்கும் கடல்மீது
கிழக்கே உதிக்கிறான் சிவந்த சந்திரன்.
சப்தம் செய்யாமல் வரும் இரவினுள்
கரிய பனை ஒன்று பெருமூச்சு விடுகிறது.

தூரத்தே கூட்டுக்குத் திரும்பும்
ஒரு தனிப்பறவையின் குரல்
கதகதப்பு மறையாத கரையை
குளிர்ந்த சிற்றலைகள் வந்து தொடுகின்றன.

இதயத்தின் வேதனைபோல்
உன்மத்தம் கொண்ட ஆநந்த போதை.
என் தேவை எதையும் புரிந்து கொள்ளும் இதயம்.

ஆழ்ந்துறங்கும் நிழல்களிலிருந்து
புலம்பி எழுகிறது ஓர் இனிய பறவைக்குரல்.
ஒலியற்ற இரவின் காற்று கனன்று கனக்கிறது

ஆனால் என் இதயத்தில் வேதனைபோல்
உன்மத்தம் கொண்ட ஆநந்த போதை

1927 -31.