Pages

Saturday, December 09, 2017

கலைவாணன் இ.எம்.எஸ் அவர்களின் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிலிருந்து

Mayura Rathinaswamy
1.
வீட்டு முன்வாசலில்
ஒத்த விளக்க தொங்கவிட்டு
சாயங்காலம்
ராம ராம ராம ராம
ராம ராம பாகிமா பஜனை பாடி
செற்று முண்டு ஸாரி உடுத்து
விளக்குத்தல நாசுவத்திகளெல்லாம்
நாயராயிட்டாளுக
2.
இந்து கவரான்னு போட்டு
சலுகையில் மெடிக்கலும்
இஞ்சினியரிங்கும் படிச்சுட்டு
ஜாதி சர்டிபிகட்டை
மேசைக்கடியில
ஒளிச்சு வைக்கானுக
எங்க பயக்குளும் குட்டியளும்
3.
நல்லது கெட்டதுக்கு கூப்பிட்டா
ஜாதி தெரிஞ்சுரும்னு
கவர்மெண்டுல வேலைபாக்குறவனுகளும்
பணக்கார நாசுவப்பயலுகளும்
வீட்டுக்கு வரமாட்டானுக
4.
எங்க வகையறாவிலேயே
நல்லா படிச்சு மார்க் எடுத்த
பிள்ளைக்கு கொடுத்த
சவர சங்கத்து
உதவித்தொகையை
வேண்டாம்னுட்டான்
அவளுக்க அப்பன்
செட்டிக்குளம் சலூன் ரவி
ரூபாயில மயிறு மணக்கும்னு.
(கலைவாணன் இ.எம்.எஸ் அவர்களின் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிலிருந்து. வெளியீடு : கீற்று வெளியீட்டகம், 1/47ஏ, அழகிய மண்டபம், முளகுமூடு அஞ்சல், குமரி மாவட்டம் 529 167. விலை ரூ. 75. செல் : 097157 93820)
நாவிதர் சமூகத்திலிருந்து வந்திருக்கும் மிக முக்கியமான பதிவு. அவசியம் வாசியுங்கள் நண்பர்களே.