Pages

Saturday, June 25, 2011


வலை

 பிரமிள்

மாலைக் கதிர் வாள் வெட்டு
பரிதிப் புறாத் துடிப்பு
நெஞ்சின் பால் வெளiயில்
பாலைத் தகட்டுப்
படபடப்பு.
நடை தளர்ந்தது.
இது எல்லை?
ஊத்ந்த தொடர்ந்த நிழலின்
விரல் விளiம்பு.
எதிரே
நில விரிப்பு - வாழ்வு
வலை விரிப்பா? - வாழ்வா?
திரும்பிப் பார்த்தேன்.
தசைத்திரள் உருகி வழிந்து
தார் பாறையாக நீண்டு
வான் கடல் படுகைத்
தொடுவான் வரை கிடந்த
நிழலின் இழிப்பு.
கால் விரல் கண்ணியில்
நான்.


கேள்விகள்



தாய்ப்பரிதி ஆகர்ஷண
முலையுரிஞ்சும் பூமிக்கு
வானெல்லாம் தொட்டிலோ?

சந்திரனில் வழிகின்ற
விந்தின்னும் கருவுற்றுத்
திரளாத காரணமென்?

தீ முளைத்துக் காற்று எனும்
பூமியிலே வேரைவிட்டால்
பூக்கிறது எத்திசையில்?

தெரியாது?

அறிவின் குரலடைத்த
கவிதைக் கவளத்தைக்
கக்கி எறிந்துவிடு.
ஞானத்துப் பயணத்தில்
இடறும் கற்பனையின்கல்
எட்டி உதைத்துப் போ.

மூளை மலர்த்தடத்தில்
ஏதோ நாற்றமிது
மூக்கைப் பொத்தி நட.

அப்பால்....

பதிலின் இழையற்ற
கேள்வித் திரையகலும்...
பாதை எதிர் செல்லும்..


பிரமிள் கவிதைகள்
தொகுப்பு: கால சுப்ரமணியம்
லயம் வெளியீடு
அக்டோபர், 1998
327 பக்கங்கள்

 Thanks R.Mahalingam,Bangalore 
mahauma@hotmail.com

பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/?prd=&page=products&id=6091 வாங்கலாம்.


No comments:

Post a Comment