Pages

Thursday, April 03, 2014

பிரியும்போது - பிரமிள்

பிரியும்போது - பிரமிள்

அவள் நாடகபாணியில் தலையை நிமிர்த்திக் கொண்டாள்
எனக்கோ களைப்பு. மாலை இருளினுள் புரண்டது. ஏதோ,
சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிரியுமுன்
கைகளைப் பற்றிக் கொண்டோம். சில வேளை, ஒரு
பார்வையின் விபத்து பழைய நினைவுகளைத் தொட்டு
மறைந்திருக்கலாம். விரல் நுனிகளை நோக்கி நழுவிய கைகள்
திடீரென விழித்த பாழ் நிலங்களாயின. உடன் ரத்தமும்
இந்திரியத் துளியுமாய் மலர்கள் வீசின........