Pages

Tuesday, April 29, 2014

ஊமை - பிரமிள்

ஊமை - பிரமிள்

மனிதனின் பேச்சு அவனுக்கு
பிடிபடாது

பேசாத வேளையில்
ஊமைகளாகின்றன
பாஷைகள்.

நக்ஷ்த்ரங்களைவிட
நிறையவே பேசுவது
அவற்றின் இடையுள்ள
இருள்.

எனவேதான்,
தன் தனி வழியில்
நம்பிக்கை குலையாமல்
பேச்சுக்கும் அப்பால்
தாண்டி,
அவன் கண்ட கலை
சமிக்ஞை.