Pages

Thursday, September 20, 2018

பிச்சைக்காரி -- சுரேஷ்குமார இந்திரஜித் :: கொல்லிப்பாவை 10

பிச்சைக்காரி
-- சுரேஷ்குமார இந்திரஜித்

காட்சிகள் தீண்டா விழிகள்
நிச்சலனத்தில் அறைந்திருக்க
கெட்டித்த பற்களுடன்
ஒரு கல், முகமாய் பிசைந்திருக்க
புதுச்சக்தியுடன் விரைத்திருந் தாளொரு கிழவி,
சாலையோரம்..
வெளிச்சம் பரப்பி
இவளுள் பக்கங்கள் பார்த்தால் -
பாட்டி- - தாய் - மனைவி - குமரி -
சிறுமி - குழந்தை - சிசு - கரு -
தந்தையும் தாயும் குலவிய
மோஹன சுணங்கள் , . .
விளிம்பில்
உலர்ந்த வாய் பிளந்து
அலைந்த நாவிற்கு
நீரூற்ற ஆளற்று
விரைத்த பிச்சைக்காரி

** டேவிட் சந்திரசேகர் ஒரு கட்டுரையில்   குறிப்பிட்டுருக்கும் கவிதை.




No comments:

Post a Comment