Pages

Saturday, May 10, 2014

மொழி மீறிய காதல்(கள்) - பிரம்மராஜன்

மொழி மீறிய காதல்(கள்) - பிரம்மராஜன்

இந்தச் செய்தியுன் யோனிவரை சென்று சேருமா
அன்றி அப்படி ஒன்றுனக்கு உளதா எனும் அறிதலின்றியே
கூட
பச்சை உடல்மீது வெண்மையில் மின்னிய தேமல்களின்
சருமத்தில்
எச்சில் அதரங்களை
குவித்துத் தொட்டேன்
உன் தாவரப் பெயர்
என் சகதியின் ஆழ் இருள் நரகத்தில் புதைந்துகிடக்கிறது
மொழி மீறியக் காதல்கள்
எழுதும் பலகையில் விரல்கள் தட்டும்போது
முதல் தொடுதலின் பதற்றக் காய்ச்சல் போல்
விரல்கள் பழுத்துவிட்டன எலக்ட்ரிக் பழங்கள்
மனிதச்சி ஒருத்தி சொன்னதை
என் தீட்டுப்பட்ட சொற்களை மீறி எப்படியாவது
வாழ்வின் பிராணன் ஊறிய என் தோல் செல்கள்
உனக்குத் தெரிவித்தாக வேண்டும்
உன் இதயம் உன் லிங்கத்தில் துடிக்கிறது ( முன்னவள்
சொன்னாள் )
தாவரக் காதலி
என் மனம் உன் பச்சையத்தின் தொடர் மூச்சுகளின்
ரிதம்களை
பின்வருடியும் செல்கிறது
வில் தொடங்குவதன்றி வேறெந்த வர்ணமும்
நமக்கிடையில் நுழையாது முடியாது
சக கிழத்தியாகக்கூட இந்த மலர்கள்
பெருந்திணை என்றுகூடச் சொன்னார்கள் இதை
வக்கிரப்பெருவழுதி நான்
எதை மறுப்பேன்.