தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, June 23, 2017

மாற்கு எழுதிய வேதாமகம் - Original- ஜோர்ஜ் லூயி போர்ஹஸ் (மொ.பெ பிரம்மராஜன்).

மாற்கு எழுதிய வேதாமகம் - Original- ஜோர்ஜ் லூயி போர்ஹஸ் (மொ.பெ பிரம்மராஜன்).

AUTOMATED GOOGLE-OCR
PDF Collection -Suyaanthan.
https://www.facebook.com/saravanakarthikeyanc?fref=ufi

இந்த நிகழ்ச்சிகள் யூனின் நகரத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லா கொலோராடோ கால்நடைப்பண்ணையில் 1928 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கடைசி நாட்களில் நடந்தன. இதன் பிரதான பாத்திரம் பால்த்தளலார் எஸ்பினோசா என்ற பெயர் கொண்ட மருத்துவம் படித்த மாணவன், இப்போதைக்கு அவனை நாம் போனஸ் அயர்சில் இருந்து வந்த சாதாரண இளைஞர்களில் ஒருவனாகச் சித்தரிக்கலாம். அவனிடமிருந்த ஏறத்தாழ ஒரு எல்லையற்ற கருணையும், மேடைப் பேச்சுக்கான திறனும் தவிர வேறு எதுவும் அவனிடம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கவில்லை. இரண்டாவது அவனுக்கு ரமேஸ் மெஜியாவில்இருந்த ஆங்கிலப்பள்ளியில் பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது. விவாதம் செய்வதை அவன் விரும்பவில்லை. கேட்டுக் கொண்டிருப்பவனே தன்னை விட சரியின் பக்கம் இருப்பதை விரும்பினான். அவன் விளையாடிய எந்த விளையாட்டிலும் அடங்கியிருக்கும் யதேச்சைத் தன்மையின் சாத்தியப்பாடுகள் அவனைக் கவர்ந்தாலும் அவன் ஒரு மோசமான ஆட்டக்காரனாகவே இருந்தான். காரணம், ஜெயிப்பது அவனுக்கு எந்தவித சந்தோஷத்தையும் கொடுக்கவில்லை. அவனது விரிவான அறிவுக்கூர்மை திசைப்படுத்தப்படாமலிருந்தது. முப்பத்து மூன்று வயதாகியும் பட்டப்படிப்பை முடிப்பதற்கான மதிப்பெண்கள் ஒரு பாடத்தில் அவனுக்குக் குறைவாக இருந்தது - அவனை அதிகம் ஈர்த்த பாடத்தில், அவனுடைய அப்பா (அவர் காலத்திலிருந்த எல்லாக் கனவான்களைப் போலவும்) ஒரு சுதந்திரச் சிந்தனையாளராக இருந்தார். அவனுக்கு ஹெர்பர்ட் ஸ்பென்சரின் பாடங்களை அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அவன் அம்மா, மாண்ட்டி விடியோவுக்குப் பயணம் கிளம்பு முன் ஒரு முறை அவனிடம் ஒவ்வொரு இரவும் கர்த்தருக்கான பிரார்த்தனையைச் சொல்லி சிலுவைக் குறி இடும்படி கேட்டுக் கொண்டாள். இத்தனை வருடங்களில் அவன் அந்த வாக்குறுதியை மீறவே இல்லை. 


எஸ்பினோசா ஆர்வத் துருதுருப்பில் குறைந்தவனல்ல. கோபம் என்பதை விட அதிக அக்கறையின்மையினால், பல்கலைக் கழக எதிர்ப்பு ஊர்வலத்தில் சேரச் சொல்லிக் கட்டாயப்படுத்திய சக மாணவர்களுடன் சில குத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறான். எதிர்ப்பின்றி உடன்பட்டு விடும் தனது தன்மையால் அவன் கேள்விக்குரிய கருத்துக்களை, அல்லது, மனதின் பழக்கங்களைக் கொண்டிருந்தான். அர்ஜன்டீனாவை விட, உலகத்தின் பிற பகுதியில் வசிப்பவர்கள் நம்மை சிவப்பிந்தியர்கள் என்று எண்ணி விடக்கூடும் என்ற பயமே அவன் மனதை அதிகம் ஆக்கிரமித்திருந்தது. பிரான்ஸ் நாட்டினை வழிபட்டான். ஆனால், பிரெஞ்சுக்காரர்களை வெறுத்து ஒதுக்கினான். அவன் அமெரிக்கர்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்ற போதும் போனஸ் அயர்சில் இருந்த தங்களது உயரமான கட்டிடங்களைப் போலவே அமெரிக்காவில் நிறைய இருந்தன என்ற உண்மையோடு அவனுக்கு உடன்பாடு இருந்தது. மலை அல்லது குன்றுப் பிரதேசத்து மாட்டுக்காரர்களை விட சமவெளியில் இருந்த மாட்டுக்காரர்கள் கூடுதல் சிறப்பான குதிரை சவாரிக்காரர்கள் என்று நம்பினான். கொலோராடோவில் கோடை மாதங்களைக் கழிக்க அவனது மாமா பிள்ளை டேனியல் அவனை அழைத்தபோது அவன் உடனடியாக சரி என்று சொல்லிவிட்டான். கிராமப்புறம் அவனுக்கு நிஜமாகவே பிடித்திருந்தது என்பது மட்டுமல்ல இயல்பாகவே அவனிடமிருந்த தன்னிறைவினாலும், மற்றும், இல்லை என்று சொல்வதற்குப் பல காரணங்களைக் கற்பனை செய்வதை விட சரி என்று சொல்வது சுலபமாக இருந்த காரணத்தாலும் அவன் டேனியலின் அழைப்பை ஏற்றுக் கொண்டான். 

கால்நடைப் பண்ணையின் பிரதான விடு பெரியதாகவும், சிறிது பராமரிப்பு இல்லாமலும் இருந்தது. தலைமைப் பண்ணையாளான குட்ரெவின் குடியிருப்பு அதற்கு அருகிலேயே இருந்தது. குட்ரெயின் குடும்பத்தில் மூன்று அங்கத்தினர்கள். தந்தை, வழக்கத்திற்கு மாறான அசிங்கமான தோற்றமுடைய ஒரு மகன், யாருக்குப் பிறந்தாள் என்று தெளிவாகத் தெரியாத ஒரு மகள். அவர்கள் வலுவானஎலும்புகளுடன், உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார்கள். அவர்களின் தலை முடி சிவப்பு என்று சொல்லும்படியாகவும், முகங்கள் சிவப்பிந்திய பிறப்பினையும் தெரிவித்தன. அவர்கள் சரியாகப் பேசத் தெரியாதவர்களாக இருந்தார்கள் தலைமைப் பண்ணை யாளின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய் விட்டாள். 

கிராமப்புறத்தில் எஸ்பினோசா முன்பின் தெரியாத, கனவிலும் நினைத்துப் பார்த்திராத பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எடுத்துக் காட்டாக, குடியிருப்புகளை நெருங்கும் போது குதிரையை நான்குகால் பாய்ச்சலில் ஒட்டக் கூடாது என்பதையும்,ஏதாவது ஒரு விசேஷமான நோக்கத்திற்கு தவிர வேறு விஷயங்களுக்கு குதிரையில் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் தெரிந்து கொண்டான் போகப் போக, பறவைகளின் குரல்களை வைத்தே அவற்றை வேறுபடுத்திச் சொல்லத் தெரிந்து கொண்டான். 

சில நாட்களுக்குப் பிறகு, சில கால்நடைகளின் விற்பனையை முடிப்பதற்காக டேனியல், போனஸ் அயர்சுக்குக் கிளம்ப வேண்டி வந்தது. அதிகபட்சமாகப் போனால் இந்தச் சிறு வேலையை முடிப்பதற்கு அவனுக்கு ஒரு வாரம் பிடிக்கலாம். ஏற்கனவே பெண்களைப் பொறுத்தவரையிலான அவனுடைய இடையறாத அதிர்ஷ்டம் பற்றியும் நவநாகரிக ஆடைகளில் அவனுக்கு இருந்த அளவற்ற ஈடுபாடு பற்றியும் கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருந்த எஸ்பினோசா தன்னுடைய பாடப்புத்தகங்களுடன் கால்நடைப் பண்ணையிலேயே தங்கிவிடுவது என்று முடிவெடுத்தான். ஆனால் வெய்யிலோ தாங்க முடியாததாக இருந்தது. இரவும் இதற்கான தணிப்பைக் கொண்டு வரவில்லை. விடியல் நேரத்தில் ஒரு நாள் காலை இடிச்சத்தம் அவனை எழுப்பி விட்டது. வீட்டுக்கு வெளியிலே காற்று ஆஸ்திரேலிய பைன் மரங்களை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தது. மழையின் கனத்த தொடக்கத் துளிகள் விழும் ஓசையைக் கேட்டு கடவுளுக்கு நன்றி சொன்னான். உடனடியாகக் குளிர்ந்த காற்று உள்ளே உருண்டோடி வந்தது. அந்த மதியம் சாலாடோ நதியில் வெள்ளம் கரை புரண்டது. 

அடுத்த நாள், பிரதான விட்டின் மேல்தளத்திலிருந்து, வெள்ளத்தில் மூழ்கிய வயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது, பாம்ப்பா பிரதேசத்தை ஒரு கடலுக்கு ஒப்புமையாகச் சொல்லும் வழக்கமான உருவகம் முற்றிலுமாகத் தவறானதல்ல என்று நினைத்தான்-டபிள்யூ. ஹெச். ஹட்சன் என்பவர், கடல் அகலமாகத் தெரிவதற்குக் காரணம் குதிரையின் மேலிருந்தோ, கண்பார்வையின் தளத்திலிருந்தோ பார்க்காததும், கப்பலின் மேல்தளத்திலிருந்து நாம் பார்ப்பதுமே என்று கூறியிருந்த போதும்-குறைந்த பட்சம் அந்தக் காலை நேரத்தில்-மேற்படி ஒப்புமை மிகவும் சரியாகவே இருந்ததாக எண்ணிக் கொண்டான் அவன். மழை விடவே இல்லை. குட்ரெ குடும்பத்தார் நகரவாசியான எஸ்பினோசாவால் இடைஞ்சல் செய்யப்பட்டோ, அல்லது உதவப்பட்டோ, கால்நடைகளில் பெரும்பான்மையானவற்றை வெள்ளத்திலிருந்து மீட்டனர். ஆனாலும், பல கால்நடைகள், மூழ்கிப் போயின. லா கொலோராடோவை நோக்கி வந்தவை மொத்தம் நான்கு சாலைகள் எல்லாமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டிருந்தன. மூன்றாவது நாள் அன்று குட்ரெ குடும்பத்தார் இருந்த வீடு ஒழுகலினால் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்ததால் பிரதான விட்டிற்குப் பின்பக்கம் இருந்த கருவிகள் வைக்கும் கொட்டகைக்கு அருகிலிருந்த ஒரு அறையை எஸ்பினோசாஅவர்களுக்கு ஒதுக்கித் தந்தான். இது அவர்கள் எல்லோரையும் நெருக்கமாக இணைத்தது. பெரிய உணவருந்தும் கூடத்தில் அவர்கள் எல்வோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். உரையாடல் நடத்துவது கடினமாக ஆகியது. கிராமப்புறம் பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருந்த குட்ரெ குடும்பத்தாருக்கு அவற்றை விளக்கிச் சொல்வது கடினமாக இருந்தது. ஓர் இரவின் போது யூனின் பகுதியில் பிரதேசக் கட்டுப்பாடு அமைந்திருந்த சமயம் நிகழ்ந்த சிவப்பிந்தியர்களின் தாக்குதல்கள் பற்றி ஞாபகம் இருக்கிறதா என்று எஸ்பினோசா கேட்டான். அதற்கு அவர்கள் ஆம் என்று பதில் சொன்னார்கள். ஆனால் முதலாம் சார்லஸ் அரசனின் தலை வெட்டப்பட்டது குறித்த கேள்விக்கும் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார்கள். கிராமப்புறத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு நீண்டநாள் உயிரோடிருத்தலும் நிஜத்தில் ஒரு மோசமான ஞாபக சக்தியின் விஷயமாகவோ, தேதிகள் பற்றிய மங்கலான கருதுதலும் ஆகவோ இருக்கக் கூடும் என்று அவன் அப்பா சொன்னதை நினைவு கூர்ந்தான். மாட்டுக்காரர்கள் தங்கள் பிறந்த வருடம் என்னவென்று அறியாமலும் தங்களைப் பெற்றெடுத்தவனின் பெயரை அறியாமலும் இருக்கத் தகுந்தவர்கள் தான் 

அந்த முழு விட்டிலும், Farm Journalன் ஒரு தொகுதி, கால்நடை மருந்து பற்றி ஒரு கையேடு, உருகுவே தேசத்து காவியமான Tabre வின் டீலக்ஸ் பதிப்பு, History of Short Horn Cattle in Argentina என்ற நூல், காமத்துவமான அல்லது துப்பறிதல் தொடர்பான கதைப் புத்தகங்கள், சமீப நாவலான Don Segunda Sombra, இவை தவிர வேறு படிக்கக் கூடிய விஷயங்கள் இருக்கவில்லை. எஸ்பினோசா, தவிர்க்க இயலாத இரவு உணவு இடைவேளையை ஏதோ வகையில் சரிகட்டுவதற்காக இந்த நாவலின் சில அத்தியாயங்களை, படிக்கவும் எழுதவும் தெரியாத குட்ரெ குடும்பத்தாருக்கு படித்துக் காட்டினான். துரதிர்ஷ்டவசமாக தலைமைப் பண்ணையாளும் நாவலின் நாயகனைப் போல கால்நடை ஓட்டிச் செல்பவனாக இருந்திருப்பதால், கதை நாயகனின் செயல்கள் அவனது ஈடுபாட்டினைக் கூர்மைப்படுத்தவில்லை. அந்தக் கதை லேசானது என்று கூறிய குட்ரெ, கால்நடை ஒட்டிச் செல்பவர்கள் எப்போதும் தங்களுக்குத் தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் சுமந்து கொண்ட பொதிக்குதிரையில் பயணம் செய்தார்கள் என்றும், அவன் ஒரு கால்நடை ஓட்டுபவனாக இல்லாமல் போயிருந்தால் மிகவும் தூரத்திலிருந்த லாகுனா த கோமஸையும், பிரேகடோ நகரினையும், சாகாபூகோவில் நுநெஸ் குடும்பத்தினரின் பெருக்கத்தையும் என்றைக்குமே பார்த்திருக்க முடியாது போயிருக்கும் என்றும் கூறினான். சமையல்கட்டில் ஒரு கிட்டார் வாத்தியம் இருந்தது. நான் விவரிக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன்பு, பண்ணையாட்கள் வட்டமாக உட்கார்ந்து கொள்வது வழக்கம். யாராவது ஒருவர் கிடாரை வெறுமே சுருதி சேர்த்துக் கொண்டிருப்பார், வாசிக்கும் நிலைக்கு வராமலே இதற்குப் பெயர் கிடார் விழா ஆகும். 

தாடி வளர்த்து விட்டிருந்த எஸ்பினோசா, கண்ணாடியின் முன் நின்று அவனது முகத்தின் புதிய வடிவத்தை ஆராயத் தலைப்பட்டான் போனஸ் அயர்ஸ் திரும்பிய பிறகு தன் நண்பர்களை சேலோடா வெள்ளம் பற்றிய கதையைச் சொல்லி எப்படிச் சலிக்க வைப்பான் என்பதை நினைத்து இப்போது அவன் சிரித்துக் கொண்டான். விநோதமான விதத்தில் அவன் அடிக்கடி சென்றறியாத, அல்லது, போகத் தலைப்படாத இடங்களைப் பற்றிய இழப்புணர்வு அவன் மனதில்இடம் பிடித்தது. கேப்ரெரா தெருவில் தபால்பெட்டி இருந்த ஒரு ஒரம், பிளாஸ்ா தல் ஒன்ஸ்க்கு சில கட்டிடங்கள் தள்ளி ஜூஜூயி தெருவின் மீதிருந்த ஒரு வெளி வாயிலில் இருந்த சிமெண்ட் சிங்கங்களில் ஒன்று; அதன் அமைவிடம் எதுவென்று அவன் அறிந்திராத, ஒடுகள் பதித்த தரை கொண்ட ஒரு பழைய மதுவருந்தும் விடுதியையும். அவன் அப்பாவையும் சகோதரர்களையும் பொறுத்தவரை, அவன் தனிமைப்பட்டுவிட்டான் -அர்த்த மாறுதல் வரலாற்று வகையில் சொல் மிகப் பொருந்தி வந்தது-வெள்ளத்தினால் என்று அவர்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டிருப் பார்கள். 

வினான நீரினால் இன்னும் சூழப்பட்டிருந்த விட்டினை அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். ஒரு ஆங்கில பைபிள் அவனுக்குத் தட்டுப்பட்டது. பைபிளின் இறுதியில் இருந்த காலிப் பக்கங்களில் குத்ரெவின் முன்னோர்கள் அவர்களின் பாரம்பரியத்தின் பதிவுகளை கையெழுத்தில் விட்டுச் சென்றிருந்தார்கள். அவர்களது சொந்த ஊர் இன்வெர்னஸ். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் புதிய உலகினை அவர்கள் அடைந்த போது சாதாரணத் தொழிலாளர்களாகத் தான் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. சிவப்பிந்தியர்களுடன் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். 1870களில் எப்போதோ, அவர்களுக்குப் படிக்கவும் எழுதவும் தெரியாமல் போன பிறகு, வரலாறு தொடர்ச்சி விட்டுப் போயிருந்தது. இதற்கு அடுத்த சில தலைமுறைகளில் அவர்களுக்கு ஆங்கிலம் மறந்து போய்விட்டது. எஸ்பினோசா அவர்களைத் தெரிந்து கொண்ட சமயத்தில் அவர்களுடைய ஸ்பானிய மொழி அவர்களுக்கு சிரமம் கொடுத்தது. அவர்கள் மதநம்பிக்கை அற்றவர்களாய் இருந்தார்கள். ஆனாலும் மங்கலான தடயங்களைப் போல, கால்வினிஸ்டுகளின் இறுகலான மதவெறியும், பாம்ப்பா பிரதேசத்து செவ்விந்தியர்களின் மூட நம்பிக்கைகளும் அவர்களின் ரத்தத்தில் உறைந்திருந்தன. இந்தக் கண்டுபிடிப்பினை எஸ்பி னோசா அவர்களிடம் பின்னர் கூறினான். அதை அவர்கள் கவனித்தாகவே தெரியவில்லை. 

அந்தத் தொகுதியைப் புரட்டிக் கொண்டிருந்த போது, அவனது விரல்கள் புனித மாற்கு எழுதிய வேதாகமத்தின் தொடக்கத்தில் இருந்தன. மொழிபெயர்ப்பில் ஒரு பயிற்சியாக இருக்கட்டும் என்றோ, அல்லது, ஒரு வேளை அதில் எதையும் குட்ரெ குடும்பத்தார் புரிந்து கொண்டார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியோ, அந்த மாலைச் சாப்பாட்டிற்குப் பிறகு அதைப் படிக்க ஆரம்பிப்பது என்ற முடிவினை எடுத்தான் எஸ்பினோசா, மிக ஆழ்ந்த கவனத்துடன் அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. புத்தகத்தின் மீது அச்சிடப் பட்டிருந்த தங்கமுலாம் எழுத்துக்கள் அதற்கு ஒருவித அதிகார தோரணையை கொடுத்திருக்கலாம். இன்னும் அது அவர்கள் ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று நினைத்தான் எஸ்பினோசா பல தலைமுறையைச் சேர்ந்த மனிதர்கள் பதிவு செய்யப்பட்ட காலகட்டம் முழுக்க எப்பொழுதுமே இரண்டு கதைகளை மாத்திரமே சொல்லியும், திரும்பத் திரும்பச் சொல்லியுமிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. வெகுவாக நேசிக்கப்பட்ட தீவு ஒன்றின் பொருட்டு மத்திய தரைக்கடல் பிரதேசங்களிலெல்லாம் தேடித் தொலைந்து போன கப்பல் ஒன்றின் கதை, மற்றும், கொல்கொதா என்ற இடத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஒரு கடவுள், இப்படி ரேமோஸ் மெஜியாவில் பள்ளி நாட்களிள் பேச்சுப் போட்டிக்காகதனது பயிற்சிப் பாடங்களை நினைவு படுத்திக் கொண்டு, நீதிக் கதைகளுக்கு வந்த போது எஸ்பினோசா தான் சொல்லும் விஷயத்தில் தெளிவாக இருந்தான். வேதாகமத்தைத் தாமதப்படுத்த வேண்டாம் என்பதற்காக நெருப்பில் வாட்டப்பட்ட இறைச்சி யையும், பதனப்படுத்தப்பட்டு திணிக்கப்பட்ட சார்டைன் மீன்களையும் பூட்டி வைக்க ஆரம்பித் தார்கள். ஒரு சிறிய நீலநிற ரிப்பனைக் கொண்டு அந்தப் பெண் அலங்கரித்திருந்த செல்ல ஆடு முள்கம்பியின் பிசிறில் காயம் பட்டுக் கொண்டது. ரத்தப் போக்கினை நிறுத்துவதற்கு அவர்கள் சிலந்தி வலையை காயத்திற்கு இட விரும்பிய பொழுது எஸ்பினோசா ஏதோ மருந்து கொடுத்து ஆட்டைக் குணப்படுத்தினான். இந்த மருத்துவம் அவர்களுக்குள்ளாக விழிப்படையச் செய்திருந்த நன்றியுணர்வு அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.(குட்ரெ குடும்பத்தாரை நம்பாமல் ஆரம்பத்தில் அவன் கொண்டு வந்திருந்த இருநூற்றைம்பது பெசோக்களை அவனுடைய புத்தகங்களில் ஒன்றுக்குள் ஒளித்து வைத்திருந்தான்)இப்போது அந்த இடத்தின் எஜமானர் வெளியில் சென்றிருக்கவே, அவர் இடத்தை எடுத்துக் கொண்டு அவர்களுக்குத் தயக்கத்தோடு கட்டளை களைப் பிறப்பித்தான். அவற்றை அவர்கள் உடனடியாக நிறைவேற்றினார்கள். குட்ரெ குடும்பத்தார் அவன் இல்லாமல் தொலைந்து போய் விட்டவர்களைப் போல் ஒவ்வொரு அறையாக அவனைப் பின் தொடர்ந்து வர விரும்பினார்கள். இவ்வாறே விட்டைச் சுற்றி இருந்த மேல்தளத்திற்குச் செல்லும் போதும் பின் தொடர்ந்தார்கள். அவர்களுக்கு படித்துக் காட்டிக் கொண்டிருக்கும் போது தான் தவறி மேஜை மீது விழ விட்ட ரொட்டித் துணுக்குகளை அவர்கள் ரகசியமாகத் திருடியதைக் கவனித்தான் அவன் ஒரு நாள் மாலை, அவனைப் பற்றி அவர்கள் மரியாதையுடன் சொற்பமான வார்த்தைகளில் பேசிக் கொண்டதை அவர்களுக்குத் தெரியாமல் செவிமடுத்தான்.

 மாற்கு எழுதிய வேதாகமத்தை படித்துக் காட்டிவிட்ட பிறகு, பாக்கியிருந்த மூன்று ஆகமங்களில் ஒன்றினைப் படித்துக் காட்ட விரும்பினான். ஆனால் கேட்டதன் அர்த்தங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு அவன் அப்பொழுது வாசித்து முடித்திருந்ததை திரும்ப வாசிக்கும்படி வேண்டினார்கள். மாறுதல்களையும் புதுமையையும் விட குழந்தைகள் போல திரும்பக் கூறுதலே அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என்று எஸ்பினோசா நினைத்தான். அன்றிரவு - இது ஒன்றும் ஆச்சரியப்படத் தக்கதல்ல-அவன் ஜலப்பிரளயத்தைக் கனவு கண்டான். பிரளயத் திலிருந்து தப்பிப்பதற்கான சிறுகப்பலைக் கட்டும்போது அடிக்கப்பட்ட சுத்தியல் ஓசை யினால் அவன் விழித்தெழுந்தான், அவை ஒரு வேளை இடியோசையாக இருக்கக் கூடும் என்று அவன் நினைத்தான். நிஜத்தில், விட்டிருந்த மழை மீண்டும் தொடங்கியது. குளிர் கடுமையாக இருந்தது. கருவிகள் வைக்கும் அறையை புயல் சேதப்படுத்திவிட்டதாக குட்ரெ குடும்பத்தார் சொன்னார்கள். தூலங்களை மீண்டும் பொருத்திய பின் அவனுக்குக் காட்டுவதாச் சொன்னார்கள். இப்போது அவன் ஒரு அந்நியன் அல்லன். அவனைக் கெடுக்கும் அளவுக்கு அவர்கள் விசேஷ அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள். அவர்கள் யாருக்கும் காபி பிடிக்காது. ஆனாலும், அவனுக்காக ஒரு சிறிய கோப்பை காபி எப்போதும் இருந்தது. அதில் அவர்கள் எப்பொழுதுமே நிறைய சர்க்கரை போட்டிருந்தார்கள்.

செவ்வாய்க்கிழமை ஒரு புதுப்புயல் தொடங்கி விட்டிருந்தது. வியாழக்கிழமை இரவு, அவனது அறைக் கதவின் மென்மையான தட்டல் கேட்டு விழித்தெழுந்தான். முன்ஜாக்கிரதையாக அவன் எப்போதும் கதவைச் சாத்தியே வைத்திருந்தான். எழுந்து கதவைத் திறந்தான். அந்தப் பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். இருட்டில் அவளை அடையாளப்படுத்துவது சிரமமாக இருந்தது. ஆனால் அவளுடைய காலடி ஓசையை வைத்து அவள் செருப்பு போடாமல் வந்திருக்கிறாள் என்று சொல்ல முடிந்தது. சில கணங்களுக்குப் பிறகு கட்டிலில் இருக்கும் பொழுது விட்டின் மறுகோடியிலிருந்து அவள் நிர்வாணமாகவே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டான். அவள் அவனை அனைத்துக் கொள்ளவோ, ஒரு வார்த்தை பேசவோ இல்லை. முதல் தடவையாக ஒரு ஆண் மகனை அறிந்து கொள்கிறாள். அவள் அங்கிருந்து கிளம்பியபோது அவனை முத்தமிடவில்லை. அவளுடைய பெயரைக் கூட அவன் தெரிந்து கொள்ளவில்லை என்பதை அவன் உணர்ந்தான். அவன் துருவி ஆராய விரும்பவில்லை ஏதோ காரணத்தால் போனஸ் அயர்ஸ் திரும்பிய பிறகு எவரிடமும் என்ன நடந்தது என்று சொல்லக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானம் செய்தான். 

அடுத்த நாளும் முந்தைய நாட்களைப் போலவே ஆரம்பித்தது. அப்பா குட்ரெ, எஸ்பினோசாவிடம் பேசும் போது, கிறிஸ்துவானவர் பூமியில் உள்ள சகல மனிதரையும் காப்பாற்றுவதற்காகத் தன்னைக் கொல்ல அனுமதித்தாரா என்று கேட்டான். சுதந்திரச் சிந்தனையாளனான எஸ்பினோசா, தான் படித்ததற்கு விசுவாசமான இருக்க வேண்டி பதில் அளித்தான். 

" "ஆம், எல்லோரையும் நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்காக." 

உடனே குட்ரெ கேட்டான். "நரகம் என்பது என்ன?” 

"பூமிக்கு அடியில் ஓரிடத்தில் ஆன்மாக்கள் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கும் ஒரு இடம் அது"

 "ஆணிகளை அடித்த ரோமானிய போர்ச்சேவகர்களுமா காப்பாற்றப் பட்டார்கள்?" 

தனது இறையியல் அவ்வளவு தெளிவாக இல்லாத எஸ்பினோசா "ஆம்" என்றான். அந்த உரையாடலின் போதெல்லாம் தலைமைப் பண்ணையாள் முந்திய இரவின் போது தனது மகளுடன் என்ன நடந்தது என்று கேட்டு விடுவான் எனப் பயந்து கொண்டிருந்தான் எஸ்பினோசா, மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை கடைசி அத்தியாயங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டார்கள். 

எஸ்பினோசா அந்த மதியம் ஒரு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தான் இடைவிடாத சுத்தியல் ஒலிகளாலும், தெளிவில்லாத முன்கூறல்களாலும் இடைஞ்சலுற்ற லேசான உறக்கம். மாலை ஆகும் போது அவன் எழுந்து மேல்தளத்திற்குச் சென்றான். தனக்குத் தானே சிந்திப்பவன் போல அவன் சொன்னான் "வெள்ளம் இறங்கி விட்டது. இனி ரொம்பத் தாமதமாகாது." 

"இனி ரொம்பத் தாமதமாகாது" என எதிரொலி போல, அதை குட்ரெ திருப்பிச் சொன்னான். 

அந்த மூவரும் அவனைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றனர். கல் பாவப்பட்ட மேடை மீது முழந்தாளிட்டு அவனுடைய ஆசீர்வாதங்களை வேண்டினார்கள். பிறகு அவனை அவர்கள் பரிகசித்தார்கள். அவன் மீது காறித்துப் பினார்கள். விட்டின் பின் பகுதிக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள். அந்தப் பெண் அழுதாள். கதவுக்கு அந்தப் பக்கத்தில் அவனுக்காக என்ன காத்திருந்தது என்பதைப் புரிந்துகொண்டான் எஸ்பினோசா கதவை அவர்கள் திறந்த போது வானத்தின் ஒரு பகுதியை அவன் பார்த்தான். குரலெடுத்து ஒரு பறவை பாடியது. தங்க ஃபின்ச் பறவையாக இருக்கும் என்று நினைத்தான், கொட்டகையின் மீது கூரை இருக்கவில்லை. தூலங்களைக் கழற்றி இறக்கி வைத்து விட்டிருந்தார்கள்-சிலுவை செய்வதற்காக,


19. மான்க் ஈஸ்ட்மேன்
இந்த அமெரிக்காவின் அவர்கள் நீலநிறச்சுவர்கள் அல்லது திறந்த வானம் ஆகிய இவற்றின் பின்னணியிலிருந்து துல்லியமாகத் மாறுபட்டுத் தெரியும்படி சாத்வீகமான கறுப்பு நிறத்தில் பிடிப்பான உடையணிந்து, குதிகால் உயர்ந்த காலணிகளைப் போட்டுக் கொண்டு இரண்டு அடியாட்கள் பொருத்தமான கத்திகளின் அபாயகரமான பாலே நடனத்தினை, அவர்களில் ஒருவரின் கத்தி அதன் அடையாளத்தை மற்றவனின் மீது கீறி, காதிலிருந்து சிவப்பு கார்னேஷன் மலர் விரிவது போல் குருதி வரும் வரை ஆடுகின்றனர். தன்னில் குருதிப் பூ விரியப் பெற்றவன் இந்தப் பின்னணி இசையில்லாத நடனத்தை தன் மரணத்தின் மூலமாக நிலத்தின் மீது முடிவுக்குக் கொண்டு வருகிறான். சந்தோஷத்துடன், மற்றவன் தனது உயரமான தலை உச்சி கொண்ட தொப்பியைச் சரி செய்து கொண்டு, அவனது கடைசி வருடங்களை இந்த இருவருக்கான இந்த திருத்தமான சண்டையைப் பற்றித் திரும்பத் திரும்ப சொல்வதில் தனது இறுதி வருடங்களைக் கழிக்கிறான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதுதான் நமது பழைய கால அர்ஜன்டீனிய தலைமறைவு உலகத்தின் சாராம்சம். நியூயார்க்கின் பழைய தலைமறைவு உலகானது இன்னும் கூடுதலாகத் தலை சுற்றச் செய்யும் என்பதோடு இழிவுத்தன்மை கூடியதாகவும் இருக்கும்.
மற்றதின் அவர்கள் நியூயார்க் நகரின் அடியாள் குழுக்களின் வரலாறு (ஹெர்பர்ட் ஆஸ்பரி என்பவரால் ஒன்றுக்கு எட்டு அளவில் நானூறு பக்கங்களைக் கொண்ட கனமான தொகுதியாக 1928 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் வெளிக் கொணரப்பட்டிருப்பது) இயலுலகத் தோற்றகால காட்டுமிராண்டிப் பிறப்புகளிடம் குடிகொண்டிருந்த குழப்பங்களையும், குரூரங்களையும், அவர்களுடைய பிரம்மாண்ட அளவிலான கையாலாகாத்தனங்களின் பெரும்பகுதியையும் உள்ளடக்கிறது-நீக்ரோ சேரிகளில் தேன்கூட்டுப் பொந்துகளாக சாராயம் வடிக்கும் பழைய நிலவறைகள் மூன்று அடுக்குகள் கொண்ட பழைய உளுத்துப் போன நியூயார்க், சாக்கடையின் சுழல்வழிகளில் ரகசிய சந்திப்புகளை நடத்திய ஸ்வாம்ப் ஏஞ்சல்ஸ் என்ற குற்றக் குழுக்கள், Day Break Boys போன்ற பத்துப் பன்னிரண்டு வயதாகாத சிறு வயது கொலைகாரர்களை வேலைக்கு அமர்த்திய குற்றக் குழுக்கள், Plugugies போன்ற ராட்சஷத்தனமான, துணிவான தனிமையாளர்கள்; அவர்கள் மாபெரும் விறைப்பான தொப்பிகள், கம்பளி நூலால் திணிக்கப்பட்டிருக்க அவற்றை, காதுகளை மூடும்படியாக தலைக்கவசம் அணிந்திருப்பவர்களைப் போல அவர்கள் அணிந்திருப்பார்கள் பொவரி காற்றில் கால்சட்டைகளுக்கு வெளியே தொங்க விடப்பட்டிருக்கும் சட்டையின் பின் முனைகள் படபடக்கும் வண்ணமிருந்த