தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, August 13, 2022

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் ஸல்மான் ருஷ்டி

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் ஸல்மான் ருஷ்டி****தமிழில் - தேவதாஸ்

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் 

ஸல்மான் ருஷ்டி 

காப்ரியேல் என்கிற மனிதர் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவர் என்ற சந்தேகம் நெடுங்காலமாக இருந்து வந்தது தான். இதனால் அச்சகங்களில் அற்புதங்கள் நடந்தபோது காத்திருந்தவர்களாகத் தலையசைத்தோம். ஆனால் அவருடைய மாயாஜால வித்தைகளை அறிந்து வைத்திருந்ததால் அவற்றின் வசியத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்றால் முடியவில்லை. வசப்பட்டு மரப்பெஞ்சுகளிலிருந்தும் தோட்டத்து ஊஞ்சல்களிலிருந்தும் எழுந்து வந்து ஈக்களைக் காட்டிலும் வேகமாகப் புத்தகங்களை வெளித்தள்ளும் அச்சகங்களுக்கு மூச்சிறைக்க ஓடிப் போனோம். கைகளை நீட்டுவதற்குள் புத்தகங்களும் தாவி வந்தன. கிளம்பிய புத்தக வெள்ளம் சந்துபொந்துகளிலும் வீதிகளிலுமாகப் பாய்ந்து மைல்பல் தூரத்திலுள்ள வீடுகளின் தரையெல்லாம் நிறைப்ப கதையிலிருந்து யாரும் தப்பமுடியாதபடிக்கு. பார்வை இல்லாமல் இருந்தாலா கண்களை இறுக்க மூடிக் கொண்டாலோ காதருகே உரத்துப் பேசும் குரல்கள் கேட்டவாறு. "உங்களுடைய சுயசரிதம் தான்" என்று ஒவ்வொருவரையும் திருப்திப் படுத்துகிற திறன் கொண்டிருக்கும் இவற்றிடம் கன்னிகாஸ்திரீகளைப் போல மயங்கிப் போயிருக்கிறோம். எங்களுடைய தேசத்தை நிரப்பிவிட்டு புத்தகங்கள் சமுத்திரத்தை நோக்கிப் போகின்றன. மாயமிக்க அச்சகங்களிலிருந்து கிளம்பும் முடிவற்ற புத்தகங்களால் சமுத்திரங்களும் மலைகளும் சுரங்க ரயில்பாதைகளும் பாலைவனங்களும் அடைபட்டுத் திணறுகிற வரை, பூமியின் பரப்பு முழுதுமாக நிரம்புகிற வரை ஓயாது என்பதைப் புரிந்து கொள்கிறோம். 

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலை எழுதிப் பதினைந்து வருஷங்கள். நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. மூல ஸ்பானிய மொழியில் மட்டும். மொழிபெயர்ப்புகளாக எத்தனை விற்பனை தெரியவில்லை. புதிய புத்தகம் வருகிறதென்றால் ஸ்பானிய அமெரிக்க தினசரிகளில் செய்தி முதல்பக்கம். தள்ளுவண்டிப் பையன்கள் தெருவில் பிரதிகளை விற்கிறார்கள். பாராட்டுவதற்கு வார்த்தைகளின்றி விமர்சகர்கள் மாய்ந்து போகின்றனர். ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை சமீபத்திய நாவலின் முதல் பதிப்பு பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் போனது. 

கற்பனையை இயக்குகிற மாபெரும் சக்தி பாட்டியின் நினைவு. எழுத்துக்கான உத்வேகத்தை அளித்தவர்களாக அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் ஃபாக்னர், ஜோர்ஜ் லூயி போர்ஹெ அப்புறம் Epitaph of a Small Winner, Quincas Barba மற்றும் Dom Casmuno நாவல்களை எழுதிய மச்சாடோ டி ஆஸிஸ் போன்றவர்கள். ஃபாக்னரின் தாக்கத்தை ஒப்புக்கொள்கிறார். 308 


குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலில் லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றின் சர்வாதிகாரியை கடனுக்குப் பதிலாக நாட்டின் சமுத்திரத்தைத் தருமாறு அமெரிக்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கிற ஆச்சரியத்தைப் பார்க்க முடிகிறது. "ஏப்ரல் மாதத்தில் அவர்கள் கரீபியக் கடலை எடுத்துச் சென்றனர். தூதுவர் எவிஸ்கின் கடற்படைப் பொறியாளர்கள் இலக்கமிடப்பட்ட துண்டுகளாக கடலை எடுத்துச் சென்று அரிஸோனாவின் குருதிச்சிகப்புவிடியல்களில் பதித்து வைத்தனர்" என்று எழுதுவதற்கு வருஷக்கணக்காக திரைக்கதை எழுதிய அனுபவம் உதவியிருக்கும். இவற்றையெல்லாம் விட பாட்டிதான் கதைகளுக்கான முக்கிய உந்துசக்தி. 

லூயி ஹார்ஸ் மற்றும் பார்பரா டோமன் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் பாட்டிதான் மொழிவளத்துக்குக் காரணமானவள் என்கிறார். "அப்படித்தான் பேசினாள். பெரிய கதைசொல்லி." பாராட்டுகிறார். இந்திய துணைக்கண்டத்திலும் கதைகளைச் சுழல் விடுபவர்களாகப் பெண்கள் இயங்குவதை எழுத்தாளர் அனிதா தேசாய் சுட்டிக்காட்டுகிறார். லத்தீன் அமெரிக்காவில் இதே நிலைமைதான். தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட மார்க்வெஸ் அம்மாவைச் சந்திக்கும்போது எட்டு வயதாகி விடுகிறது. எட்டு வயதுக்குப் பிறகு தம்முடைய வாழ்க்கையில் சுவாரசியமாக ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிடுவது முக்கியமானது. "ஆவிகள் நிறைந்த பெரிய வீடு தாத்தா பாட்டியுடையது. மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். சட்டென்று மனதில் பதிந்துவிடக் கூடியவர்கள். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் எலும்புக்கூடுகளும் நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன. மாலையில் மணி ஆறுக்குப் பிறகு அறையை விட்டுக் கிளம்ப தைரியம் வராது. மாயத்தன்மை கொண்ட, திகில்களாலான உலகம்" என்கிறார் பேட்டியில், 

வீட்டைப் பற்றிய நினைவைக் கொண்டும் பாட்டியின் கதைசொல்கிற முறையைக் கொண்டும்தான் மக்காந்தோவைக் கட்டமைக்கத் துவங்குகிறார். பாட்டிக்கு அப்புறமாகவும் அவரிடம் நிறைய விஷயங்கள். குழந்தைப்பருவத்தில் அரக்காடக்கா ஊரில் வசித்துவிட்டு இளைஞனாகும் முன்பு கிளம்பி நகர உலகத்துக்கு வந்துவிடுகிறார். நகர எதார்த்தம் குறித்த இலக்கணம் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் உலகத்தின் பேரழகி ரெமெடியோஸ் சொர்க்கத்தை அடைவது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாக விவரிக்கப்பட, மக்காந்தோவுக்கு முதன்முதலில் ரயில் வருகிற செய்தி கிராமத்துப்பெண் ஒருத்தியை அலறியடித்துக்கொண்டு ஓடவைக்கும் அளவுக்கு பயடிமுட்டுகிறது. "சமையல் அறை ஒன்று ஊரையே இழுத்துக்கொண்டு வருவதாக" ரயிலைச் சொல்கிறாள். இந்த இரண்டு நிகழ்வுகள் பற்றியதான நகர மனிதர்களின் விவரணையும் எதிர்வினையும் தலைகீழாக ஆகிப்போகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிராமத்தின் பிரபஞ்சப் பார்வையை நகரத்தின் நோக்கத்துக்கு மேலானதாக வைத்துக்காட்ட இங்கே முயற்சிக்கிறார். இதுதான் கதைகளின் மாயத்துக்கான ஆதாரம். 

309 


லத்தீன் அமெரிக்காவின் எதார்த்தத்துக்கு ஏற்பட்ட அபாயம் கலாச்சாரம் சார்ந்த அளவுக்கு அரசியல் சார்ந்ததும். என்னவென்று கொள்ளமுடியாத படிக்கு எதார்த்தம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது மார்க்வெஸின் அனுபவம், நிஜம் எப்போதும் கூறப்படும் பொய். தீவிரமான அரசியல் கண்ணோட்டம் கொண்ட மார்க்வெஸிடம் புறநிகழ்வுகள் பெரும் உருவகங்களாக மாறிப்போவது இதனால்தான். ராணுவ வாழ்க்கையை மேற்கொள்கிற கர்னல் அவ்ரலியனோ புண்டியாவும் எதிரி ஒருத்தனை விருந்தாக விழுங்கிய பின் வெகு தூங்கிப் பிறகு மாலைநேரத்தைக் காலை என்று தீர்மானித்து சூரிய வடிவத்திலான அட்டைகளை ஏந்தியவாறு இரவெலாம் ஜன்னலோரங்களில் ஜனங்களை நிற்க வைத்த சர்வாதிகாரியும் நாவல்களில் இப்படித்தான் முடிகிறது வாழ. 

ஸர்ரியலிஸத்திலிருந்து உருவாகி மாற்றம் பெற்றுள்ள அற்புத எதார்த்தம் மார்க்வெஸினுடையது. மூன்றாம் உலகப் பிரக்ஞையை வெளிப்படுத்துவதாகும். அசாத்தியமான, பழமை திகைக்க வைக்கிற நவீனத்தை எதிர்கொண்டு விடுகிறதும் ஊழல்களும் தனிப்பட்ட கவலைகளும் மேற்கத்திய உலகத்தைக் காட்டிலும் உறுத்தும் வகையில் காணப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்கிற பரப்பின் மீது நூற்றாண்டுக்கால் சொத்தாகிய நினைவும் அதிகாரமும் கெட்டிதட்டிப் போன அழுக்குகளை உண்டாக்கியுள்ள அரைகுறை சமுதாயங்கள் என்று வி எஸ் நைப்பால் குறிப்பிடுவதுடன் நாவல்கள் ஒத்துப்போகின்றன. நம்பமுடியாத பட்டப்பகலில் சம்பவங்கள். இலக்கிய உலகத்தை மார்க்வெஸ் பிரத்தியேகமாகக் கண்டுபிடித்த ஒன்றாகவோ சுயசரிதைக் குறிப்புகளாகவோ மூடுண்ட அமைப்பாகவோ அணுகுவது தவறு. அந்தரத்தில் தொங்கும் உலகத்தைப் பற்றி அல்லாமல் வாழ்கிற உலகத்தையே இப்படியெல்லாம் எழுதுகிறார். மக்காந்தோ இருப்பது அதன் மாயத்தன்மை. "கார்சியாப் பிரதேசம்" என்பதான தொல்கதையை உருவாக்க தொடர்ந்து முயல்வதாகக்கூடத் தோன்றுகிறது. உதாரணமாக ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலின் முதல் வாக்கியத்தைப் பார்க்கலாம். 

மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தனது மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நிற்கிற துப்பாக்கிக்காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில்தான் கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸை முதன்முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப்போன தூரத்து மத்தியானப்பொழுதானது நினைவுக்கு வரத் துவங்கியது. 

ஏற்கனவே கொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலின் முதல் வாக்கியத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. 

310 


தன்னைக் கொல்லப்போகிற நாளில் அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்ட ஸான்டியாகோ நஸ்ஸர் பிஷப் வந்துகொண்டிருந்த படகுக்காகக் காத்திருந்தான். 


இரண்டு நாவல்களும் வரப்போகிற மரணத்தைச் சுட்டிக்காட்டி அசாதரணமான பழைய சம்பவத்தை விவரிப்பதில் தொடர்கின்றன. குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலும் மரணத்தில் துவங்கி வாழ்க்கையைச் சுற்றிப் பரவுகிறது. நாவல்களை இணைத்தே வாசிக்கும்படியும் நாவல் ஒன்றை அடுத்ததன் ஒளியில் பரிசீலிக்குமாறும் யாசிக்கிறார். வகைசில பாத்திரங்கள் திரும்ப வருகின்றன. மாஜி சிப்பாய், ஒழுக்கம் கெட்ட பெண், அம்மா, சமரசத்துக்கு முயலும் பாதிரியார், வேதனை கொள்ளும் மருத்துவர். இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். பலர் சேர்ந்து செய்த குற்றத்துக்குப் பொறுப்பாக இன்னொருத்தனைப் பலிகடா ஆக்குவதை அனுமதிக்கும் தீவினைக்காலம் நாவலின் கதை, நம்பவியலாத சோம்பல் வியாதியால் பீடிக்கப்படுகிற, அறிவிக்கப்படுவதும் முன் அறிவிக்கப்படுவதுமான கொலையைக் கூடத் தடுக்கத் தவறுகிற, நகரத்துப் பிரஜைகளை விவரிக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலை எதிரொலிக்கிறது. கதைகளின் நோக்கங்கள், சாதனைகள் வெவ்வேறாக இருந்தாலும் ஒப்புமைகளும் உள்ளன. 

பாட்டியை விடவும் பிரம்மாண்டமான கதையாகிருதி கொண்டவர். படைத்த மக்காந்தோவை விட பூதாகரமாகிவிடுகிறார். ஆரம்பக்கால எழுத்துக்கள் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலுக்கான ஆயத்தங்களாகவே தெரிகின்றன. முதலில் எழுதியபோதும் இரண்டு நகரங்களைப் பற்றித்தான். ஒன்று மக்காந்தோ. அடுத்தது பெயரற்ற ஏதோ நகரம். அந்த நகரம் மக்காந்தோவைப் போலன்றி தொல்கதைத்தன்மை குறைந்ததது. இயற்கையானது. பெரியம்மாவின் நல்லடக்கம் கதையில் வருகிற நகரத்தைப் போல. 

குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் முடிவற்ற வாசகங்கள் வருகிற எல்லையற்ற கொடுங்கோன்மையின் வெளிப்பாடாகின்றன. நவீன வளர்ச்சியின் சாத்தியப் பாடுகளும் மாற்றங்களும் மறுக்கப்பட்டதான சர்வாதிகாரத்தை நாவல் வளைத்துச் சொல்கிறது. சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை காலத்தைக் கட்டிப் போடுகிறது. நாவல் சர்வாதிகாரியின் ஆட்சிக்காலத்துக் கதைகளின் மீது ஏறியும் இறங்கியும் செல்கிறது. நாவலின் வளைகோட்டு வடிவம் ரத்த ஓட்டம் நின்றுபோனதை உணர்வதற்கான சரியான உவமை. 

ஆரம்பகால எழுத்துமுறைக்குத் திரும்புவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் எற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை மீண்டும் புதிய எழுத்து வழி காணும் 

311 


முயற்சியே. நாவல் மரியாதை, அவமரியாதை மற்றும் அவமானம் தொடர்பானது. பயார்டோ ஸான் ரொமானுக்கும் ஏஞ்செலா விக்காரியோவுக்கும் திருமணம். ஆனால் ஸான்டியாகோ நஸ்ஸரைத் தன்னுடைய காதலன் - மாஜி என்று அவள் குறிப்பிடுவதுடன் முதலிரவு முறிந்துபோகிறது. பெற்றோர் வீட்டுக்குத் திரும்புகிறாள். அவள் சகோதரர்களான இரட்டையர்கள் குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்ற ஸாண்டியாகோ நஸ்ஸரைக் கொலைசெய்ய வேண்டிய நிலையில், தங்கள் செயல்பாட்டில் இரட்டையர்கள் காட்டும் தயக்கத்தில்தான் சின்ன நாவலின் மறக்கமுடியாத முக்கியத்துவம். நோக்கம் பற்றி ஓயாமல் பீற்றிக்கொள்ளும் இரட்டையர்கள். ஸான்டியாகோ நஸ்ஸர் பற்றி அறியாமலிருப்பது ஆச்சர்யம்தான். நகரத்தின் அமைதியே இரட்டையர்களை பீதியூட்டும் கொலையைச் செய்யத் தூண்டுகிறது. நிச்சயிக்கப்பட்டவளை மறுக்கவேண்டிய நிலையிலுள்ள பயார்டோ ஸான் ரொமான் பயங்கரமான வீழ்ச்சிக்கு உள்ளாகிறான். "கெளரவம்தான் அன்பு" என்கிறது ஒரு பாத்திரம். அவனைப் பொறுத்தவரையோ அது உண்மையல்ல. இதற்கெல்லாம் மூல காரணமாயிருக்கும் ஏஞ்செலா நிதானமாகத் துயரத்தை எதிர்கொள்கிறாள். 

நாவலின் கதைவெளிப்பாட்டுமுறை மார்க்வெஸுக்குப் புதிது. கொலை நடந்து இடத்துக்குப் பல வருஷங்கள் கழித்து பெயரற்ற நிழலுருவான கதைசொல்லி வருவதும் கடந்த காலம் குறித்த விசாரணை மேற்கொள்வதுமான உத்தி. கதைசொல்லி மார்க்வெஸ்தான் என்று நாவல் குறிப்பால் சொல்கிறது. வருகிற பெயர்கொண்ட அத்தை ஒருத்தி அவருக்குண்டு. கொலை நடக்கும் இடம் மக்காந்தோவை எதிரொலிக்கிறது. ஜெரினால்டோ மார்க்வெஸ் அங்கே வந்து போகிறார். இன்னொரு பாத்திரத்துக்கு கோட்டஸ் என்று பெயர். 

இடம் மக்காந்தோவோ, இல்லையோமுன்போலன்றி வெகுதூரத்திலிருந்து எழுதுகிறார். நாவலும் கதைசொல்லியும் அரைகுறை நினைவுகள், புதிர்கள் மற்றும் முரண்பட்ட தகவல்களின் பனிமூட்டத்தின் ஊடாக நடந்தது என்ன, ஏன் என்பதை நிறுவ முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் கிடைப்பது தற்காலிக விடைகள் மட்டுமே. வேர்களிலிருந்து விலகிப் போய் சம்பிரதாயமும் சிரமமும் மிக்க திரைகளின் ஊடே எழுதிச் செல்வதனால் இரங்கற்பாவின் தொனியை நாவல் பெறுவது இப்படித்தான். முந்தைய நாவல்கள் உள்ளடக்கம் மீதான கட்டுப்பாடு கொண்டிருக்க, இந்த நாவலில் சந்தேகத்துடன் உள்ளடக்கத்தை அணுகுகிறார். ஒலிம்பஸ் மலையை விட்டு விலகிவந்த தன்னிலை ஒன்றின் பிரமாதமான விவரிப்பாக புதிய தயக்கம் உருக்கொள்கிறது. இதுதான் நாவலின் வெற்றி. நிச்சயமின்மையுடனும் கூறுகாண் வாசிப்புடனும் எழுத்துமுறை இதுவரை எழுதியவற்றையெல்லாம் விட தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. 

312 


மம்தா 

நாவலில் ஒருவித நீதி போதிக்கப்படுவதையும் லேசாக உணர முடியு முந்தைய நாவல்களில் அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் மட நிலைப்பாட்டை எடுப்பார். கதைகளில் வருகிற  வாழைத்தோட்ட அதிபர்களில் நல்லவர்கள் இருக்க முடியாது  குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் கதை பத்திகளிலாவது ஜனங்கள் பற்றிய புனைவு இருக்கும். பற்றி எழுதும் போது குறை 6)சால்வதை இதுவரை தவிர்த்திருக்கிறார். ஏற்கனவே சொல்லப்பட " நாவலில் தம்மை வேறொரு தொலைவான இடத்தில் நிறுத்திக்கொள்கிறார். கனவுக'' தவிர்க்க இயலாமல் போய் கொடூரமான சம்பவங்கள் நிகழக்கூடிய, குறுகிப்போன சமுதாயத்தின் மீது தாக்குதல் கொடுத்த உதவுகிறது. இத்தகைய எதிர்ப்புணர்வுடன் முன்பு இப்படி எழுதியதில்லை. நாவல் நெடுங்கால மெளனத்துக்குப் பிறகே சிறிதுகாலம் கற்பனைப் படைப்பைக் கைவிட்டிருந்தார். மேதைமை பாதிக்கப்படாமல் பாதை மாறியதற்கு நன்றி பாராட்டியாக வேண்டும். இந்த வருஷம் இங்கிலாந்தில் இதைவிடப் பிரமாதமான புத்தகம் வெளிவரப் போவதில்லை .. 

தமிழில் - தேவதாஸ்


at 8/29/2019 09:54:00 pm No comments: 

Email This

BlogThis!

Share to Twitter

Share to Facebook

Share to Pinterest

Saturday, August 13, 2022

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் ஸல்மான் ருஷ்டி

 


பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ்

ஸல்மான் ருஷ்டி

காப்ரியேல் என்கிற மனிதர் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவர் என்ற சந்தேகம் நெடுங்காலமாக இருந்து வந்தது தான். இதனால் அச்சகங்களில் அற்புதங்கள் நடந்தபோது காத்திருந்தவர்களாகத் தலையசைத்தோம். ஆனால் அவருடைய மாயாஜால வித்தைகளை அறிந்து வைத்திருந்ததால் அவற்றின் வசியத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்றால் முடியவில்லை. வசப்பட்டு மரப்பெஞ்சுகளிலிருந்தும் தோட்டத்து ஊஞ்சல்களிலிருந்தும் எழுந்து வந்து ஈக்களைக் காட்டிலும் வேகமாகப் புத்தகங்களை வெளித்தள்ளும் அச்சகங்களுக்கு மூச்சிறைக்க ஓடிப் போனோம். கைகளை நீட்டுவதற்குள் புத்தகங்களும் தாவி வந்தன. கிளம்பிய புத்தக வெள்ளம் சந்துபொந்துகளிலும் வீதிகளிலுமாகப் பாய்ந்து மைல்பல தூரத்திலுள்ள வீடுகளின் தரையெல்லாம் நிறைப்ப கதையிலிருந்து யாரும் தப்பமுடியாதபடிக்கு. பார்வை இல்லாமல் இருந்தாலா கண்களை இறுக்க மூடிக் கொண்டாலோ காதருகே உரத்துப் பேசும் குரல்கள் கேட்டவாறு. "உங்களுடைய சுயசரிதம் தான்" என்று ஒவ்வொருவரையும் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலை எழுதிப் பதினைந்து வருஷங்கள். நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. மூல ஸ்பானிய மொழியில் மட்டும். மொழிபெயர்ப்புகளாக எத்தனை விற்பனை தெரியவில்லை. புதிய புத்தகம் வருகிறதென்றால் ஸ்பானிய அமெரிக்க தினசரிகளில் செய்தி முதல்பக்கம். தள்ளுவண்டிப் பையன்கள் தெருவில் பிரதிகளை விற்கிறார்கள். பாராட்டுவதற்கு வார்த்தைகளின்றி விமர்சகர்கள் மாய்ந்து போகின்றனர். ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை சமீபத்திய நாவலின் முதல் பதிப்பு பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் போனது.

கற்பனையை இயக்குகிற மாபெரும் சக்தி பாட்டியின் நினைவு. எழுத்துக்கான உத்வேகத்தை அளித்தவர்களாக அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் ஃபாக்னர், ஜோர்ஜ் லூயி போர்ஹெ அப்புறம் Epitaph of a Small Winner, Quincas Barba மற்றும் Dom Casmuto நாவல்களை எழுதிய மச்சாடோ டி ஆஸிஸ் போன்றவர்கள். ஃபாக்னரின் தாக்கத்தை ஒப்புக்கொள்கிறார்.

திருப்திப் படுத்துகிற திறன் கொண்டிருக்கும் இவற்றிடம் கன்னிகாஸ்திரீகளைப் போல மயங்கிப் போயிருக்கிறோம். எங்களுடைய தேசத்தை நிரப்பிவிட்டு புத்தகங்கள் சமுத்திரத்தை நோக்கிப் போகின்றன. மாயமிக்க அச்சகங்களிலிருந்து கிளம்பும் முடிவற்ற புத்தகங்களால் சமுத்திரங்களும் மலைகளும் சுரங்க ரயில்பாதைகளும் பாலைவனங்களும் அடைபட்டுத் திணறுகிற வரை, பூமியின் பரப்பு முழுதுமாக நிரம்புகிற வரை ஓயாது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலல லத்தான் அமெரிக்க நாடு ஒன்றன சாவாதிகாரியை கடனுக்குப் பதிலாக நாட்டின் சமுத்திரத்தைத் தருமாறு அமெரிக்க அரசாங்கம் நாபபந்திக்கிற ஆச்சரியத்தைப் பார்க்க முடிகிறது. "ஏப்ரல் மாதத்தில் அவர்கள் கரீபியக் கடலை எடுத்துச் சென்றனர். தூதுவர் எவிஸ்கின் கடற்படைப் பொறியாளர்கள் இலக்கமிடப்பட்ட துண்டுகளாக கடலை எடுத்துச் சென்று அரிஸோனாவின் குருதிச்சிகப்பு விடியல்களில் பதித்து வைத்தனர்" என்று எழுதுவதற்கு வருஷக்கணக்காக திரைக்கதை எழுதிய அனுபவம் உதவியிருக்கும். இவற்றையெல்லாம் விட பாட்டிதான் கதைகளுக்கான முக்கிய உந்துசக்தி.

லூயி ஹார்ஸ் மற்றும் பார்பரா டோமன் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் பாட்டிதான் மொழிவளத்துக்குக் காரணமானவள் என்கிறார். "அப்படித்தான் பேசினாள். பெரிய கதைசொல்லி," பாராட்டுகிறார். இந்திய துணைக்கண்டத்திலும் கதைகளைச் சுழல விடுபவர்களாகப் பெண்கள் இயங்குவதை எழுத்தாளர் அனிதா தேசாய் சுட்டிக்காட்டுகிறார். லத்தீன் அமெரிக்காவில் இதே நிலைமைதான். தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட மார்க்வெஸ் அம்மாவைச் சந்திக்கும்போது எட்டு வயதாகி விடுகிறது. எட்டுவயதுக்குப் பிறகு தம்முடைய வாழ்க்கையில் சுவாரசியமாக ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிடுவது முக்கியமானது. "ஆவிகள் நிறைந்த பெரிய வீடு தாத்தா பாட்டியுடையது. மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். சட்டென்று மனதில் பதிந்துவிடக் கூடியவர்கள். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் எலும்புக்கூடுகளும் நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன. மாலையில் மணி ஆறுக்குப் பிறகு அறையை விட்டுக் கிளம்ப தைரியம் வராது. மாயத்தன்மை கொண்ட, திகில்களாலான உலகம்" என்கிறார் பேட்டியில்.

வீட்டைப் பற்றிய நினைவைக் கொண்டும் பாட்டியின் கதைசொல்கிற முறையைக் கொண்டும்தான் மக்காந்தோவைக் கட்டமைக்கத் துவங்குகிறார். பாட்டிக்கு அப்புறமாகவும் அவரிடம் நிறைய விஷயங்கள். குழந்தைப்பருவத்தில் அரக்காடக்கா ஊரில் வசித்துவிட்டு இளைஞனாகும் முன்பு கிளம்பி நகர உலகத்துக்கு வந்துவிடுகிறார். நகர எதார்த்தம் குறித்த இலக்கணம் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் உலகத்தின் பேரழகி ரெமெடியோஸ் சொர்க்கத்தை அடைவது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாக விவரிக்கப்பட, மக்காந்தோவுக்கு முதன்முதலில் ரயில் மற்செய்தி கிராமத்துப்பெண் ஒருத்தியை அலறியடித்துக்கொண்டு ஓடவைக்கும் அளவுக்கு பயமட்டுகிறது. "சமையல் அறை ஒன்று ஊரையே இழுத்துக்கொண்டு வருவதாக" ரயிலைச் சொல்கிறாள். இந்த இரண்டு நிகழ்வுகள் பற்றியதான நகர மனிதர்களின் விவரணையும் எதிர்வினையும் தலைகீழாக ஆகிப்போகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிராமத்தின் பிரபஞ்சப் பார்வையை நகரத்தின் நோக்கத்துக்கு மேலானதாக வைத்துக்காட்ட இங்கே முயற்சிக்கிறார். இதுதான் கதைகளின் மாயத்துக்கான ஆதாரம்.

குலத்தநதையின் இலையுதிர்காலம் நாவலல லத்தன் அமெரிக்க நாடு ஒன்றன சாவாதிகாரியை கடனுக்குப் பதிலாக நாட்டின் சமுத்திரத்தைத் தருமாறு அமெரிக்க அரசாங்கம் நாபபந்திக்கிற ஆச்சரியத்தைப் பார்க்க முடிகிறது. "ஏப்ரல் மாதத்தில் அவர்கள் கரீபியக் கடலை எடுத்துச் சென்றனர். தூதுவர் எவிஸ்கின் கடற்படைப் பொறியாளர்கள் இலக்கமடப்பட்ட துண்டுகளாக கடலை எடுத்துச்சென்று அரிஸோனாவின் கருகிச்சிகப்பு விடியல்களில் பதித்து வைத்தனர்" என்று எழுதுவதற்கு வருஷக்கணக்காக திரைக்கதை எழுதிய அனுபவம் உதவியிருக்கும். இவற்றையெல்லாம் விட பாட்டிதான் கதைகளுக்கான முக்கிய உந்துசக்தி,

லூயி ஹார்ஸ் மற்றும் பார்பரா டோமன் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் பாட்டிதான் மொழிவளத்துக்குக் காரணமானவள் என்கிறார். "அப்படித்தான் பேசினாள். பெரிய கதைசொல்லி." பாராட்டுகிறார். இந்திய துணைக்கண்டத்திலும் கதைகளைச் சுழல விடுபவர்களாகப் பெண்கள் இயங்குவதை எழுத்தாளர் அனிதா தேசாய் சுட்டிக்காட்டுகிறார். லத்தீன் அமெரிக்காவில் இதே நிலைமைதான். தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட மார்க்வெஸ் அம்மாவைச் சந்திக்கும்போது எட்டு வயதாகி விடுகிறது. எட்டுவயதுக்குப் பிறகு தம்முடைய வாழ்க்கையில் சுவாரசியமாக ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிடுவது முக்கியமானது. "ஆவிகள் நிறைந்த பெரிய வீடு தாத்தா பாட்டியுடையது. மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். சட்டென்று மனதில் பதிந்துவிடக் கூடியவர்கள். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் எலும்புக்கூடுகளும் நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன. மாலையில் மணி ஆறுக்குப் பிறகு அறையை விட்டுக் கிளம்ப தைரியம் வராது. மாயத்தன்மை கொண்ட, திகில்களாலான உலகம்" என்கிறார் பேட்டியில்.

வீட்டைப் பற்றிய நினைவைக் கொண்டும் பாட்டியின் கதைசொல்கிற முறையைக் கொண்டும்தான் மக்காந்தோவைக் கட்டமைக்கத் துவங்குகிறார். பாட்டிக்கு அப்புறமாகவும் அவரிடம் நிறைய விஷயங்கள். குழந்தைப்பருவத்தில் அரக்காடக்கா ஊரில் வசித்துவிட்டு இளைஞனாகும் முன்பு கிளம்பி நகர உலகத்துக்கு வந்துவிடுகிறார். நகர எதார்த்தம் குறித்த இலக்கணம் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் உலகத்தின் பேரழகி ரெமெடியோஸ் சொர்க்கத்தை அடைவது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாக விவரிக்கப்பட, மக்காந்தோவுக்கு முதன்முதலில் ரயில் வருகிற செய்தி கிராமத்துப்பெண் ஒருத்தியை அலறியடித்துக்கொண்டு ஓடவைக்கும் அளவுக்கு பயமூட்டுகிறது. "சமையல் அறை ஒன்று ஊரையே இழுத்துக்கொண்டு வருவதாக" ரயிலைச் சொல்கிறாள். இந்த இரண்டு நிகழ்வுகள் பற்றியதான நகர மனிதர்களின் விவரணையம் எதிர்வினையும் தலைகீழாக ஆகிப்போகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிராமத்தின் பிரபஞ்சப் பார்வையை நகரத்தின் நோக்கத்துக்கு மேலானதாக வைத்துக்காட்ட இங்கே முயற்சிக்கிறார். இதுதான் கதைகளின் மாயத்துக்கான ஆதாரம்.

வத்தீன் அமெரிக்காவின் எதார்த்தத்துக்கு ஏற்பட்ட அபாயம் கலாச்சாரம் சார் அளவுக்கு அரசியல் சார்ந்ததும், என்னவென்று கொள்ளமுடியாத படிக்கு எதார், கட்டுப்படுத்தப்பட்டிருப்பது மார்க்வெஸின் அனுபவம். நிஜம் எப்போதும் கூறப்படும் பொ தீவிரமான அரசியல் கண்ணோட்டம் கொண்ட மார்க்வெஸிடம் புறநிகழ்வுகள் பெ! உருவகங்களாக மாறிப்போவது இதனால்தான். சாணுவ வாழ்க்கையை மேற்கொள் கர்னல் அவ்ரலியனோ புண்டியாவும் எதிரி இருத்தனை விருந்தாக விழுங்கிய பின் கெ தூங்கிப் பிறகு மாலைநேரத்தைக் காலை என்று தீர்மானித்து சூரிய வடிவத்திலா அட்டைகளை ஏந்தியவாறு இரவெலாம் ஜன்னலோரங்களில் ஜனங்களை நிற்க வை! சர்வாதிகாரியும் நாவல்களில் இப்படித்தான் முடிகிறது வாழ,

ஸர்ரியலிஸத்திலிருந்து உருவாகி மாற்றம் பெற்றுள்ள அற்புத எதார்த்த மார்க்வெஸினுடையது. மூன்றாம் உலகப் பிரக்ஞையை அசாத்தியமான, பழமை திகைக்க வைக்கிற நவீனத்தை எதிர்கொண்டு விடுகிறதும் ஊழல்களு தனிப்பட்ட கவலைகளும் மேற்கத்திய உலகத்தைக் காட்டிலும் உறுத்தும் வகையி காணப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்கிற பரப்பின் மீது நூற்றாண்டுக்காக சொத்தாகிய நினைவும் அதிகாரமும் கெட்டிதட்டிப் போன அழுக்குகளை உண்டாக்கியுள்ள அரைகுறை சமுதாயங்கள் என்று வி எஸ் நைப்பால் குறிப்பிடுவதுடன் நாவல்கள் ஒத்துப்போகின்றன. நம்பமுடியாத பட்டப்பகலில் சம்பவங்கள், இலக்கிய உலகத்தை மார்க்வெஸ் பிரத்தியேகமாகக் கண்டுபிடித்த ஒன்றாகவோ சுயசரிதைக் குறிப்புகளாகவோ மூடுண்ட அமைப்பாகவோ அணுகுவது தவறு. அந்தரத்தில் தொங்கும் உலகத்தைப் பற்றி அல்லாமல் வாழ்கிற உலகத்தையே இப்படியெல்லாம் எழுதுகிறார். மக்காந்தோ இருப்பது அதன் மாயத்தன்மை, 'கார்சியாப் பிரதேசம்" என்பதான தொல்கதையை உருவாக்க தொடர்ந்து முயல்வதாகக்கூடத் தோன்றுகிறது. உதாரணமாக ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலின் முதல் வாக்கியத்தைப் பார்க்கலாம்.

மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தனது மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நிற்கிற துப்பாக்கிக்காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில்தான் கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸை முதன் முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப்போன தூரத்து மத்தியானப்பொழுதானது நினைவுக்கு வரத் துவங்கியது.

ஏற்கனவே கொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலின் முதல் வாக்கியத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது, தன்னைக் கொல்லப்போகிற நாளில் அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்ட ஸான்டியாகோ நஸ்ஸர் பிஷப் வந்துகொண்டிருந்த படகுக்காகக் காத்திருந்தான். இரண்டு நாவல்களும் வரப்போகிற மரணத்தைச் சுட்டிக்காட்டி அசாதரணமான பழைய சம்பவத்தை விவரிப்பதில் தொடர்கின்றன. தலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலும் மரணத்தில் துவங்கி வாழ்க்கையைச் சுற்றிப் பரவுகிறது. நாவல்களை இணைத்தே வாசிக்கும்படியும் நாவல் ஒன்றை அடுத்ததன் ஒளியில் பரிசீலிக்குமாறும் யாசிக்கிறார். வகைசில பாத்திரங்கள் திரும்ப வருகின்றன. மாஜி சிப்பாய், ஒழுக்கம் கெட்ட பெண், அம்மா, சமரசத்துக்கு முயலும் பாதிரியார், வேதனை கொள்ளும் மருத்துவர். இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். பலர் சேர்ந்து செய்த குற்றத்துக்குப் பொறுப்பாக இன்னொருத்தனைப் பலிகடா ஆக்குவதை அனுமதிக்கும் தீவினைக்காலம் நாவலின் கதை, நம்பவியலாத சோம்பல் வியாதியால் பீடிக்கப்படுகிற, அறிவிக்கப்படுவதும் முன் அறிவிக்கப்படுவதுமான கொலையைக் கூடத் தடுக்கத் தவறுகிற, நகரத்துப் பிரஜைகளை விவரிக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலை எதிரொலிக்கிறது. கதைகளின் நோக்கங்கள், சாதனைகள் வெவ்வேறாக இருந்தாலும் ஒப்புமைகளும் உள்ளன.

பாட்டியை விடவும் பிரம்மாண்டமான கதையாகிருதி கொண்டவர். படைத்த மக்காந்தோவை விட பூதாகரமாகிவிடுகிறார். ஆரம்பக்கால எழுத்துக்கள் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலுக்கான ஆயத்தங்களாகவே தெரிகின்றன. முதலில் எழுதியபோதும் இரண்டு நகரங்களைப் பற்றித்தான். ஒன்று மக்காந்தோ. அடுத்தது பெயரற்ற ஏதோ நகரம். அந்த நகரம் மக்காந்தோவைப் போலன்றி தொல்கதைத்தன்மை குறைந்ததது. இயற்கையானது, பெரியம்மாவின் நல்லடக்கம் கதையில் வருகிற நகரத்தைப் போல,

குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் முடிவற்ற வாசகங்கள் வருகிற எல்லையற்ற கொடுங்கோன்மையின் வெளிப்பாடாகின்றன. நவீன வளர்ச்சியின் சாத்தியப் பாடுகளும் மாற்றங்களும் மறுக்கப்பட்டதான சர்வாதிகாரத்தை நாவல் வளைத்துச் சொல்கிறது, சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை காலத்தைக் கட்டிப் போடுகிறது, நாவல் சர்வாதிகாரியின் ஆட்சிக்காலத்துக் கதைகளின் மீது ஏறியும் இறங்கியும் செல்கிறது. நாவலின் வளைகோட்டு வடிவம் ரத்த ஓட்டம் நின்றுபோனதை உணர்வதற்கான சரியான உவமை,

ஆரம்பகால எழுத்துமுறைக்குத் திரும்புவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை மீண்டும் புதிய எழுத்து வழி காணும் முயற்சியே. நாவல் மரியாதை, அவமரியாதை மற்றும் அவமானம் தொடர்பானது. பயார்டேர் ஸான் ரொமானுக்கும் ஏஞ்செலா விக்காரியோவுக்கும் திருமணம். ஆனால் ஸான்டியாகோ நஸ்ஸரைத் தன்னுடைய காதலன்-மாஜி என்று அவள் குறிப்பிடுவதுடன் முதலிரவு முறிந்துபோகிறது. பெற்றோர் வீட்டுக்குத் திரும்புகிறாள். அவள் சகோதரர்களான இரட்டையர்கள் குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்ற ஸாண்டியாகோ நஸ்ஸரைக் கொலை செய்ய வேண்டிய நிலையில், தங்கள் செயல்பாட்டில் இரட்டையர்கள் காட்டும் தயக்கத்தில்தான் சின்ன நாவலின் மறக்கமுடியாத முக்கியத்துவம், நோக்கம் பற்றி ஓயாமல் பீற்றிக்கொள்ளும் இரட்டையர்கள். ஸான்டியாகோ நஸ்ஸர் பற்றி அறியாமலிருப்பது ஆச்சர்யம்தான். நகரத்தின் அமைதியே இரட்டையர்களை பீதியூட்டும் கொலையைச் செய்யத் தூண்டுகிறது. நிச்சயிக்கப்பட்டவளை மறுக்கவேண்டிய நிலையிலுள்ள பயார்டோ ஸான் ரொமான் பயங்கரமான வீழ்ச்சிக்கு உள்ளாகிறான். "கௌரவம்தான் அன்பு" என்கிறது ஒரு பாத்திரம். அவனைப் பொறுத்தவரையோ அது உண்மையல்ல. இதற்கெல்லாம் மூல காரணமாயிருக்கும் ஏஞ்செலா நிதானமாகத் துயரத்தை எதிர்கொள்கிறாள்.

நாவலின் கதைவெளிப்பாட்டுமுறை மார்க்வெஸுக்குப் புதிது. கொலை நடந்து இடத்துக்குப் பல வருஷங்கள் கழித்து பெயரற்ற நிழலுருவான கதைசொல்லி வருவதும் கடந்த காலம் குறித்த விசாரணை மேற்கொள்வதுமான உத்தி, கதைசொல்லி மார்க்வெஸ்தான் என்று நாவல் குறிப்பால் சொல்கிறது. வருகிற பெயர்கொண்ட அத்தை ஒருத்தி அவருக்குண்டு. கொலை நடக்கும் இடம் மக்காந்தோவை எதிரொலிக்கிறது. ஜெரினால்டோ மார்க்வெஸ் அங்கே வந்து போகிறார். இன்னொரு பாத்திரத்துக்கு கோட்டஸ் என்று பெயர்.

இடம் மக்காத்தோவோ, இல்லையோ முன்போலன்றி வெகுதூரத்திலிருந்து எழுதுகிறார். நாவலும் கதைசொல்லியும் அரைகுறை நினைவுகள், புதிர்கள் மற்றும் முரண்பட்ட தகவல்களின் பனிமூட்டத்தின் ஊடாக நடந்தது என்ன, ஏன் என்பதை நிறுவ முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் கிடைப்பது தற்காலிக விடைகள் மட்டுமே. வேர்களிலிருந்து விலகிப் போய் சம்பிரதாயமும் சிரமமும் மிக்க திரைகளின் ஊடே எழுதிச் செல்வதனால் இரங்கற்பாவின் தொனியை நாவல் பெறுவது இப்படித்தான். முந்தைய நாவல்கள் உள்ளடக்கம் மீதான கட்டுப்பாடு கொண்டிருக்க, இந்த நாவலில் சந்தேகத்துடன் உள்ளடக்கத்தை அணுகுகிறார். ஒலிம்பஸ் மலையை விட்டு விலகிவந்த தன்னிலை ஒன்றின் பிரமாதமான விவரிப்பாக புதிய தயக்கம் உருக்கொள்கிறது. இதுதான் நாவலின் வெற்றி, நிச்சயமின்மையுடனும் கூறுகாண் வாசிப்புடனும் எழுத்துமுறை இதுவரை எழுதியவற்றையெல்லாம் விட தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.

நிஜத்தில் நாவலில் ஒருவித நீதி போதிக்கப்படுவதையும் லேசாக உணர முடியும் முந்தைய நாவல்களில் அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் மட்டும் தமதான்

எடுப்பார். கதைகளில் வருகிற வாழைத்தோட்ட அதிபர்களில் நல்லவர்கள் இருக்க முடியாது. குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் - பத்திகளிலாவது ஜனங்கள் பற்றிய புனைவு இருக்கும். பற்றி எழுதும்போது சொல்வதை இதுவரை தவிர்த்திருக்கிறார். ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவல்ல தமமை வேறொரு தொலைவான இடத்தில் நிறுத்திக்கொள்கிறார். கனவுகளை தவிர்க்க இயலாமல் போய் கொடூரமான சம்பவங்கள் நிகழக்கூடிய, குறுக "| சமுதாயத்தின் மீது தாக்குதல் தொடுக்க உதவுகிறது. இத்தகைய எதிர்ப்புணர்வுடன் இதற்கு முனபு இப்படி எழுதியதில்லை. நாவல் நெடுங்கால மௌனத்துக்குப் பிறகான போன சிறிதுகாலம் கற்பனைப் படைப்பைக் கைவிட்டிருந்தார். மேதைமை பாதிக்கப்படாமல் பாதை மாறியதற்கு நன்றி பாராட்டியாக வேண்டும். இந்த வருஷம் இங்கிலாந்தில் இதைவிடப் பிரமாதமான புத்தகம் வெளிவரப் போவதில்லை.

தமிழில் - தேவதாஸ்