தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, December 30, 2019

பொம்மை ராணி - கார்லோஸ் புயன்டஸ் தமிழில் : சா.ஜோதி விநாயகம் ::: கல்குதிரை உலக சிறுகதைகள் சிறப்பிதழ்

D மெக்ஸிகோ . 

பொம்மை ராணி - கார்லோஸ் புயன்டஸ்
கார்லோஸ் புயன்டஸ் (பிறப்பு 1929) மெக்ஸிகோவில் பிறந்தவர். அரசு அதிகாரியின் மகனான அவர் பல்வேறு வட, தென் அமெரிக்க தலைநகரங்களில் கல்வி கற்றார். அவர் 1953ல் சட்டக் கல்லூரியை விட்டு வெளியேறியபோது அவருடைய இலக்கிய வாழ்வு ஆரம்பமானது. 1954ல் அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. 1958ல் வெளிவந்த அவருடைய முதல் நாவலான ''காற்று தூயதாய் இருக்கும் இடத்தில்'' மெக்ஸிக புரட்சிக்குப் பிறகு சமூகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த ஒரு மலையேறும் குழு அவர்களுடைய அதிர்ஷ்டத்தை உருவாக்குவதை சித்தரித்தது. சோதனை ரீதியான நடை வெளிப்படையாக பாஃக்னர், டாஸ் பாஸோஸ் ஆகியோரிட மிருந்து வந்தது. அவருடைய இரண்டாவது நாவல் "நல்ல மனசாட்சி'' 1959 ல் வெளி வந்தது. அது புரட்சிக்குப் பிந்திய மெக்ஸிகோவையும் லட்சிய பூர்வமான இளைஞர்கள் அவர்களுடைய வாழ்க் கையில் முன்னேறும்போது எப்படி அவர்களுடைய லட்சியங்களுக்குத் துரோகம் செய்கிறார்கள் என்பதையும் கையாண்டது. 1962ல் அவருடைய இரண்டு படைப்புகள் வெளி வந்தன. 'ஒளி வட்டம்'' என்ற குறுநாவலில் அடையாளம் என்பது கதைக் கருவின் பகுதியாக அமைந்தது. "அர்ட்டி மியோ குரூஸின் மரணம்" ஒருவேளை அவருடைய மிகப் பிரபலமான நாவல், பிளாஸ் பேக்குகளை பயன்படுத்தி, ஒருவரின் சாவுப் படுக்கையில், அவருடைய புரட்சிகர லட்சியத்தையும், இளமைப் பருவக் காதலையும் நினைவுபடுத்தி காதலற்ற திருமணம், அதிகாரத்திற்கு உயர்ந்த பிறகு அவ ருடைய வாழ்க்கையைச் சித்திரிக்கும் கொடூரம் ஆகியவற்றின் முரண்பாட்டை கூர்மையாக வெளிப் படுத்தியது. 1964ல் வெளிவந்த புயன்டஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான 'குருடர்களின் கதைகள்'' என்பதிலிருந்து இந்தக் கதை எடுக்கப்  பட்டுள்ளது. 1967ல் வெளி வந்த ''புனிதத்தலம்'' என்ற நாவல் ("முச்சிலுவை'' தொகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளது.) தெலிமாச்சஸ் புராணக் கதையின் போலியான நகலாக, எதிர் மறைப் பாலின் ஆடையை அணியும் சதைக் கருவை எடுத்துச் சொல்லியது. 1967ல் 'தோல் மாற்றம்' என்ற நாவல் நான்கு மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியது. 1969ல் வெளிவந்த ''பிறந்தநாள்'' ஒரு சிறு நாவல். அவருடைய படைப்புகள் சர்வதேச ரீதியாக பிரபலமானவை. அவற்றில் சிலவற்றுக்கு திரைப்பட உரிமையை விற்றுள்ளார். அவரே நிறைய திரைக் கதைகளை எழுதியுள்ளார். மெக்ஸக அடையாளம் குறித்த தேசிய அக்கறை, நவீன வாழ்க்கையில் மெக்ஸிகோவின் கடந்த காலத்தின் பங்கு ஆகிய   விஷயங்களை அவர் (முக்கியமாக அவருடைய ஆரம்ப கால படைப்புகளில்) பல மெக்ஸிக எழுத்தாளர்களோடு பகிர்ந்து கொண்டவர். 

191 | கல்குதிரை

அந்தப் கார்டு-அப்பேர்ப்பட்ட விநோதமான கார்டு - அவளுடைய இருப்பை எனக்கு ஞாபகப்படுத்தியதால் நான் போனேன். சிறுபிள்ளைத்தனமான அழகிய கையெழுத்துடன் இணைந்த பூதத்தை என்னிடம் மறு உயிர்ப்பூட்டிய, மறந்து போன புத்தகத்தின் பக்கங்களில் அதை நான் கண்டேன். நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக நான் என்னுடைய புத்தகங்களை வேறு விதமாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். உயர்ந்த அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டதிலிருந்து சில புத்தகங்கள் நீண்ட காலத்திற்கு மேல் படிக்கப்படவில்லை என்ற ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்ட காலத்திற்கு முன்பே பக்கங் களின் ஓரங்கள் துளாகி இருந்தன. முதலில் கனவுகளில் கண்டு, பிறகு நாம் போன பாலே நடனத்தின் ஏமாற்றும் யதார்த்தத்தில் சில உடல்களில் பூசப் பட்ட வார்னிலை நினைவு படுத்தும் வகையில் தங்கத்தூசியும் பழுப்பு நிறத் 

கல்குதிரை / 192 

தாள்த் துண்டுகளும் என்னுடைய திறந்த உள்ளங்கையில் விழுந்தது. அது எங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்து வந்து புத்தகத்திலிருந்து - ஒரு வேளை அநேக குழந்தைகளினுடைய புத்தகத்திலிருந்து வந்தது- அநேகமாக எதிர்ப்புணர்ச்சிக்கு உதாரணமான தொடர்க்கதைகளாக, அவற்றை மேலும் மேலும் கேட்பதற்காக எங்களுடைய மூத்தவர்களின் காலடிகளில் உட்கார எங்களை விரையச் செய்யும்: ஏன்? தங்கள் பெற்றோரிடம் நன்றி உணர்ச்சி, அற்ற குழந்தைகள்; பாயும் குதிரை வீரர்களால் கடத்திச் செல்லப்பட்டு அவமானத்தோடு வீட்டிற்குத் திரும்பி வந்த கன்னிகள்-விருப்பப்பட்டு வீட் டையும் குடும்பத்தையும் துறந்தவர்கள், காலங்கடந்த அடமானத்திற்கு மாற்றாக நிர்க்கதியான குடும்பத்தின் இனிய, நீண்ட காலமாக அதிகத் துன்பம் அனுபவித்து வரும் மகளின் கரத்தைக் கோரும் கிழவர்கள் ...ஏன்? அவர் களுடைய பதில்களை நான் நினைவு கூரவில்லை. கறைபடிந்த பக்கங்களி லிருந்து, அமிலாமியாவின் மிக மோசமான கையெழுத்துடன் கூடிய ஒரு வெள்ளைக் கார்டு பறந்து வந்து விழுந்தது மட்டும் எனக்குத் தெரியும். அமிலாமியா அவளுடைய நல்ல நண்பனை மறக்க மாட்டாள் நான் அதை வரைந்துள்ளதைப் போல இங்கு வந்து என்னைப் பார்க்கவும். 

அந்தக் கார்டின் பின்புறத்தில் உள்ள வரைபடத்தில், குறிப்பிடப்பட்ட X லிருந்து புறப்படும் பாதை, சந்தேகத்திற்கிடமில்லாமல், பரிந்துரைக்கப் பட்ட, அலுப்பூட்டக்கூடிய கல்விக்கு எதிராக கலகம் செய்யும் இள வட்டமாகிய நான், என்னுடைய வகுப்பறை ஒழுங்கை மறந்து விட்டு பலமணி நேரங்களைக் கழிப்பதற்காக உண்மையிலேயே என்னால் எழுதப்படாத புத்தகங்களைப் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கக் கூடிய பூங்காப் பெஞ்சிலிருந்து புறப்படுவதாகத் தோன்றும்: அந்தக் கடற் கொள்ளைக்காரர்களின் கப்பல்கள், அந்த ஜாரின் தூதுவர்கள், அந்தப் பெரும் அமெரிக்க நதிகளில் நாள் முழுவதும் மேலும் கீழுமாகப் படகுகளை ஓட்டிச் செல்லும் என்னை விட இளையவர்களான பையன்கள், எல்லாமே என்னுடைய கற்பனையிலிருந்து உதித்தவை என்பதை யார் சந்தேகிக்க முடியும்? அது ஒரு மாயச் சேணத்தின் வெளியுரு என்பதைப் போல அந்தப் பூங்காப் பெஞ்சின் கைப் பிடியைப் பற்றிக் கொண்டிருந்த நான் முதலில், கற்கள் பாவிய தோட்டப் பாதையில் ஓடிவந்து என் பின்னால் நின்ற அந்தச் சிறு பெண்ணின் மெல்லிய காலடியோசையைக் கேட்கவில்லை. அது அமிலாமியா. அவளுடைய குறும்புத் தனம், ஒரு மத்தியானத்தில் மஞ்சள் பூப்பூத்த காட்டுச் செடியின் அருகிலிருந்து ஓடிவந்து, அவளுடைய உதடுகளைப் பிதுக்கி, புருவத்தைச் சுழித்து என் காதை ஸ்பரிசித்திருக்காவிட்டால் அந்தக் குழந்தை எவ்வளவு காலம் எனக்கு மௌனத் துணையாக இருந்து வந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. 

193 | கல்குதிரை 

அவள் என்னுடைய பெயரைக் கேட்டு, அதைமிகத் தீவிரமாக பரிசீலித்த பிறகு, அவளுடையதை ஒரு புன்னகையோடு சொன்னாள், அப்போது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், ஒத்திகை பார்த்ததாக இல்லாத தன்மையுடன். அவளுடைய பிராயத்தின் சோபையற்ற தன்மைக்கும், நன்கு வளர்க்கப்பட்ட குழந்தைகள் அறிந்திருக்க வேண்டிய முதிர் பிராயத்தினரின் பாவனைக்கும் இடைப்பட்ட ஒரு வகை உணர்வு வெளிப்படுத்தலை, குறிப்பாக அறிமுகம், பிரிவு ஆகிய கண்ணியமான கணங்களுக்கானதை அமிலாமியா அறிந்து கொண்டாள் என்பதை விரைவில் நான் உணர்ந்து கொண்டேன், அறிந்து கொள்ளுதல் என்பதுதான் வார்த்தை என்றால். அமிலாமியாவின் தீவிரத்தன்மை, தெளிவான இயற்கையின் வரப்பிரசாதம், அதே போதில் அவளுடைய உத்வேகம், அதற்கு முரணாக, செயற்கையாகத் தோன்றும். நான் அவளை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவேன், மத்தியானத்திற்குப் பிறகு மத்தியானமாக, புகைப்பட வரிசைகளின் தொடர்ச்சியாக, அவற்றின் முழுமையில் முழு அமிலாமியாவைக் கொடுக்கும். நான் அவள் உண்மையிலேயே இருப்பது போலவே அவளைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை. அல்லது அவள் எப்படி அசலாக நகர்வாள், ஒளிர்வாள், கேள்வி கேட்டுக் கொண்டு, அவளைச்சுற்றியும் நிரந்தரமாக நோக்கிக்கொண்டு என்பதை நினைவு கூர முடியவில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துவதை நிறுத்த வில்லை. அவளை ஒரு புகைப்பட ஆல்பத்தில் போல, காலத்தில் பொருத்தப் பட்டவளாக நான் நினைவு கூரவேண்டும். அமிலாமியா தூரத்தில், ஒரு இடத்தின் ஒரு புள்ளியில் காட்டுப் புதர்களிலிருந்து மலைச் சமவெளியை நோக்கிச் சரிய, அச் சமவெளியில் நான் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, வழக்கமாகப் படிக்க: நிழலும் சூரிய ஒளியும் அசையும் ஒரு புள்ளி, மலையின் உயரத்திலிருந்து என்னை நோக்கி அசையும் ஒரு கை, அமிலாமியா மலையிலிருந்து கீழிறங்கும் அவளுடைய பறத்தலில் உறைந்து, அவளுடைய குட்டைப் பாவாடை விரிய, அவளுடைய பூப் போட்ட உள்ளாடை எலாஸ்டிக்கினால் அவளுடைய தொடைகளுடன் இறுகித் தெரிய, அவளுடைய வாய் திறந்து அவளுடைய கண்கள் நீரோட்டமாய் பாயும் காற்றில்பாதி-மூடி இருக்க, குழந்தை மகிழ்ச்சியில் கதறினாள். யூகலிப்டஸ் மரங்களுக்கு அடியில் அமர்ந்திருந்த அமிலாமியா கதறுவதைப்போல பாவனை செய்தாள். ஏனென்றால் நான் அவளிடம் செல்லவேண்டும் என்பதற்காக. அமிலாமியா கையில் ஒரு பூவுடன் குப்புறப்படுத்துக் கிடந்தாள்: அந்த மலரின் இதழ்கள் இந்தத் தோட்டத்தில் மலர்ந்தவை அல்ல என்பதை நான் பின்னால் அறிந்து கொண்டேன், ஆனால் வேறு எங்கோ, ஒரு வேளை அமிலாமியாவின் வீட்டுத் தோட்டத்தில், ஊதாக்கட்டம் போட்ட அவளுடைய மேல்கவுனின் ஒரே பையில் அடிக்கடி அந்த வெள்ளைப் பூக்கள் நிறைந்திருக்கும். அமிலாமியா நான் படிப்பதை கவனித்துக் கொண்டு, பச்சை பெஞ்சின் கம்பிகளை இரண்டு 

-க.25 

கல்குதிரை | 194 

கைகளாலும் பிடித்துக் கொண்டு அவளுடைய சாம்பல் நிற கண்களால் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பாள்: அந்தப்பக்கங்களிலிருந்து பிறந்த உருவங்களை அவள் என் கண்களில் காணமுடியும் என்பதைப்போல, நான் என்ன படித்துக்கொண்டிருக்கிறேன் என்று அவள் எப்போதும் என்னிடம் கேட்டதில்லை என்பதை நான் நினைவு கூர்கிறேன். நான் அவளை இடுப்பைப் பிடித்துத்துக்கி என் தலைக்கு மேலே சுற்றும் போது அமிலாமியா மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டிருப்பாள்; இந்த மெதுவான பறத்தலில் இந்த உலகத்தைப்பற்றி ஒரு புதிய தெளிவை அலள் அடைந்ததாகத் தோன்றும், அமிலாமியா பின்புறமாகத்திரும்பிக்கொண்டு அவளுடைய கையை உயரமாகத் தூக்கி, விரல்கள் எழுச்சி பெற்று அசைய, என்னை நோக்கி குட்பை என்று கையசைப்பாள் அமிலாமியா. அவள் என்னுடைய பெஞ்சைச்சுற்றித் தோன்றுகிற அந்த ஆயிரக்கணக்கான தோற்றங்களில், தலை கீழாகத் தொங்கிக்கொண்டு, அவளுடைய சட்டை பெரும் அலையாய் மேலெழுந்து கொண்டிருக்கும்; கற்பாவலில் கால்களைப் பின்னிக்கொண்டு நாடியைக் கைகளில் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்; அவளுடைய இடுப்புப் பட்டனை சூரியனுக்குக் காட்டிக் கொண்டு புல்லின் மேல் படுத்திருப்பாள்; மரக்கிளைகளையும் மிருகங்களையும் ஒரு மாக்குச்சியால் மண்ணில் வரைந்து கொண்டு, பெஞ்சின் கம்பிகளை நக்கிக்கொண்டு, இருக்கைக்கு அடியில் மறைந்து கொண்டு, புராதனமான மரக்கிளைகளிலிருந்து ஓடிந்த கொப்புகளை மௌனமாக முறித்துக் கொண்டு, மலைக்கு அப்பால் உள்ள அடிவானத்தை வெறித்துக் கொண்டு, கண்களை மூடி ராகமிழைத்துக்கொண்டு, பறவைகளின், நாய்களின் பூனைகளின், கோழிகளின், குதிரைகளின் குரல்களைப் போல செய்து கொண்டு, எல்லாம் எனக்காக, ஆனால் இதற்கு மாறாக ஒன்றுமில்லை. அது அவள் என்னுடன் இருக்கிற முறை, இவை எல்லாமும் எனக்கு நினைவில் உள்ளன, அதே நேரத்தில் அது அவள் பூங்காவில் தனியே இருக்கிற முறையும். ஆமாம், ஒரு வேளை அவளைப் பற்றிய என்னுடைய நினைவு பின்னமானது. ஏனென்றால், ஒளியின் பிரதிபலிப்பில் ஒருபோதில் கோதுமை நிறமாகவும், இன்னொரு போதில் எரிந்த செஸ்ட்நட் நிறமாகவும் மாறும் மென்மையான கூந்தலைக் கொண்ட வட்டவடிவமான கன்னம் கொண்ட அந்தப் பெண்ணைப் பற்றிய கற்பனை என்னுடைய படிப்புக்கு மாற்றாக அமையும்; அமிலாமியா என்னுடைய வாழ்க்கைக்கு ஆதரவான இன்னொரு விஷயத்தை, என்னுடைய சமாதானமடையாத குழந்தைப் பருவத்திற்கும், என்னுடைய படிப்பினால் என்னுடையதாகியிருந்த நம்பிக்கை பூமியாகிய வெளி உலத்திற்கும் இடையில் பதட்டம் ஏற்படுத்திய அந்த விஷயத்தை எவ்வாறு அந்தக் சணத்தில் நிறுவினாள் என்று இன்றே நான் நினைத்தேன். 

அப்போது அல்ல. அப்போது நான் என்னுடைய புத்தகங்களில் உள்ள பெண்களைப் பற்றிக் கனவு கண்டேன், சாராம்சமான பெண்ணைப்பற்றி 

195 / கல்குதிரை 

இந்த வார்த்தை என்னைத் தொந்தரவு செய்கிறது--நெக்லஸை ரகசியமாக வாங்குவதற்காக ராணியைப் போன்ற வேடம் போடக்கூடியவளைப்பற்றி, தொல்கதைகளின் கற்பனைப் பிறவிகளைப் பற்றி - பாதி அடையாளம் காணக் கூடியது, பாதி வெள்ளை மார்பு கொண்டது. ஈரவயிறு கொண்ட பல்லிகள் அவர்களுடைய படுக்கையில் இளவரசர்களுக்காகக் காத்திருப்பவர்கள். இவ்வாறு, பார்வைக்குப் புலனாகாதவாறு, நான் என்னுடைய குழந்தைப் பருவத்துணையிடம் புறக்கணிப்பு என்ற நிலையில் இருந்து குழந்தையின் வசீகரத்தையும், தீவிரத்தையும் ஒத்துக் கொள்கிற நிலைக்கு மாறினேன். அங்கிருந்து எனக்குப் பிரயோஜனமற்றதாக மாறிய ஒரு இருப்பை எதிர் பாராமல் ஒதுக்கித் தள்ளுகிற நிலைக்கு மாறினேன். கடைசியாக அவள் என்னை எரிச்சல் படுத்தினாள். பதினான்கு வயதான நான், இன்னும் ஞாபகமாகவோ, பழக்க வாசனையாகவோ மாறாத, சிடந்தகாலமாகவும் அதனுடைய யதார்த்தமும் ஆசமட்டுமே உள்ள ஏழு வயதான அந்தக் குழந்தையால் எரிச்சல்படுத்தப்பட்டேன். நான் என்னை பலஹீனத்தின் வழியில் இழுத்துச் செல்லப்பட அனுமதித்தேன். நாங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு அந்தப் புல்வெளியின் ஊடே ஒன்றாக ஓடினோம். ஒன்றாக பைன் மரங்களை உ.லுக்கினோம். அமிலாமியா அவளுடைய மேல் கவுன் பையில் பொறுமையோடு பாதுகாத்த பைன் பழங்களைப் பொறுக்கினோம். நாங்கள்: ஒன்றாக காகிதக் கப்பல்களைச் செய்து, மகிழ்ச்சியாகவும், ஆரவாரத்தோடும் கழிவோடையின் சடைசி எல்லை வரை அவற்றைத் தொடர்ந்தோம். அந்த மத்தியான ஆரவாரக் கூச்சல்களுக்கிடையில் நாங்கள் மலையிலிருந்து உருண்டோம். அதன் அடிவாரத்தில் உருண்டு சேர்ந்தோம். அமிலாமியா என்னுடைய மார்பில், என்னுடைய உதடுகளுக்கிடையில் அவளுடைய கூந்தல், இனிப்புகளால் பிசுபிசுத்த அவளுடைய சிறிய கைகள் என்னுடைய கழுத்தில், நான் கோபத்தோடு அவளுடைய கைகளைத் தூரத் தள்ளி அவளை விழச் செய்தேன். அமிலாமியா காயமடைந்த அவளுடைய முழங்காலையும், கணுக் காலையும் தேய்த்துக் கொண்டு அழுதாள். நான் என்னுடைய பெஞ்சிற்கு வந்தேன். அதற்குப் பிறகு அமிலாமியா போனாள், அடுத்தநாள் அவள் வந்தாள், ஒரு வார்த்தையும் இல்லாமல் காகிதத்தை என்னிடம் கொடுத்தாள், ராகமிழைத்துக்கொண்டு காட்டினினடயே மறைந்து போனாள். அந்தக் கார்டை கிழிப்பதா அல்லது / பண்ணையில் மத்தியானங்கள் | என்ற புத்தகத்தின் பக்கங்களில் வைப்பதா என்று தயங்கினேன். என்னுடைய படிப்போ அமிலாமியாவினால் குழந்தைத்தனமாக மாறிப்போனது. அவள் அந்தப் பூங்காவிற்குத் திரும்பி வரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு நான் என்னுடைய விடுமுறைக்காகப் போய்விட்டேன். நான் திரும்பியபோது என்னுடைய தயாரிப்புப்பள்ளியின் முதல் ஆண்டு கடமைகளுக்காக அது இருந்தது. அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. 

கல்குதிரை / 196 
II
விநோதமாக இல்லாமல், வழக்கத்தில் இல்லாததாக இருக்கிற, ஆனால் அதிக உண்மையாக இருப்பதால் அதிக வேதனை தருவதாய் இருக்கிற பிம்பத்தை நான் இப்போது மறுத்து, மறக்கப்பட்ட அந்தப் பூங்காவிற்கு நான் மீண்டும் வந்து அந்தப் பைன், யூகலிப்டஸ் மரக் கூட்டங்களின் முன் நின்று கொண்டு என்னுடைய கற்பனையின் அதீத விரிவுக்குப் போதுமான இடமளிக்கும் வண்ணம் என்னுடைய நினைவு, வலியுறுத்திய பெருக்கத்துடன் சித்தரிச்க அந்தப் புதர் மண்டிய வேலிப்பகுதியின் சிறிய தன்மையை நான் அங்கீகரித்தேன், பார்க்கப்போனால் ஸ்டிரோசோப், உறக்கின்வெரி, மில்டே டி வின்டர் , ஜெனி வியிவ் டி பிராபான்டே ஆகியோர் இங்கு பிறந்து, வாழ்ந்து, இறந்து போயிருக்கிறார்கள்: அங்குமிங்குமாக பழைய புறக்கணிக் கப்பட்ட மரங்கள் நடப்பட்ட, காட்டுச் செடிகள் பின்னிய இரும்புக் கிராதிகளால் சூழ்ந்த, வண்ணப் பூசப்பட்டு மரம் போலத் தோன்றக் கூடிய, என்னுடைய அழகிய உருக்கு இருட்டு பச்சை வண்ணம் பூசப்பட்ட பெஞ்சு எப்போதுமே இருந்ததில்லை அல்லது என்னுடைய ஒழுங்கான, கடந்த காலத்தை பின்நோக்கிய வியப்பின் ஒரு பகுதி என்று என்னை வலிய நம்ப வைக்கக் கூடிய ஒரு காங்கிரீட் பெஞ்சால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தோட்டம். அந்த மலை... பறந்து திரிந்த அமிலாமியா அவளுடைய தினசரி வருகையிலும் போகையிலும் இதில் ஏறியும், இறங்கியும் இருந்தாள் என்றும், நாங்கள் இருவரும் இணைந்து உருண்ட அந்த ஆழமான சரிவு இது என்றும் நான் எவ்வாறு நம்ப முடியும்? என்னுடைய நினைவு உருவாக்கிய உயரங்களையும் ஆழங்களையும் தாண்டாத உயர்த்த மட்டுமே பட்ட திட்டான கருங் குச்சிகள். 

நான் அதை வரைந்துள்ளதைப் போல என்னை இங்கு வந்து பார்க்கவும். எனவே நான் தோட்டத்தைக் கடக்க வேண்டும், மரங்களைப் பின் விட்டு, மூன்று மூன்று படிகளாகத் தாண்டி மலையை விட்டு இறங்கி குறுகிய செஸ்ட் நட் மரத் தோப்பு வழியே சென்று - இங்கேதான், நிச்சயமாக, அந்தக் குழந்தை வெள்ளை நிற இதழ்களைச் சேகரித்து கிறீச்சிடும் பூங்காக் கதவைத் திறந்து, திடீரென நினைவு கூர்ந்து... தெரியும்... தன்னைத் தெருவில் கண்டு, ஒருவனுடைய இளம் பருவத்தின் எல்லா மத்தியானங்களையும் உயர்ந்து, ஒரு மாய மந்திரம் போல, வெள்ளப் பெருக்கான விசில்கள், மணிகள், குரல்சன், விசும்பல்கள், என்ஜின்கள், ரேடியோக்கள், சாபங்கள், ஆகியவற்றை இல்லாமல் ஆக்கி, சூழ்ந்துள்ள நகரத்தின் துடிப்பை அறுப்பதில் அவன் வெற்றி கண்டான். எது உண்மையான காந்தம், மௌனமான தோட்டமா அல்லது காய்ச்சல் பதட்டம் கொண்ட நகரமா? 

197 | கல்குதிரை 

நான் விளக்கு மாறி எதிர்த்த நடை பாதைக்கு கடப்பதற்காகக் காத்திருந்தேன், போக்குவரத்தை நிறுத்திவைத்திருக்கும் சிவப்பு வண்ண விளக்கை விட்டு என் கண்களை அகற்றாமல், நான் அமிலாவியாவின் தாளைப் பார்த்தேன், எல்லாவற்றிற்கும் மேலாக நான் வாழ்ந்து கொண்டிருக்கும் கணத்தின் உண்மையான காந்தம் அந்த அரைகுறையான வரைபடமே. அதைப்பற்றி நினைப்பதே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. என்னுடைய பதினான்கு வயதின் இழந்து போன மத்தியானங்களுக்குப் பிறகு நான் ஒழுங்கின் வழிகளை பின்பற்ற நிர்பந்தித்துக் கொண்டேன்; என்னுடைய இருபத்தியொன்பதாவது வயதில், ஒரு டிப்ளமோவைப் பெற்று, ஒரு அலுவலகத்தைச் சொந்தம் கொண்டு நடுத்தரமான வருமானம் உறுதி செய்யப்பட்டு, இன்னும் ஒரு பிரம்மச்சாரியாக, பராமரிக்க குடும்பம்: எதுவும் இல்லாமல், செக்ரட்டரிகளுடன் படுப்பதில் இலேசாக அலுப்புக் கொண்டு எப்போதாவது கிராமப்புறத்திற்கோ அல்லது கடற்கரைக்கோ போவதில் அரிதாக வியப்புக் கொண்டு, என்னுடைய புத்தகங்களால், என்னுடைய பூங்காவால், அமிலாமியாவால் எனக்கு அளிக்கப்பட்டு வந்ததைப் போன்று ஒரு மையக் கவர்ச்சியின் இழப்பை உணர்ந்து கொண்டு இருப்பதாக இப்போது என்னை நான் காண்கிறேன். சாம்பல் நிறமும் தாழ்ந்த கட்டிடங்களும் கொண்ட இந்தப் புற நகர்ப் பகுதியின் தெருவில் நான் நடக்கிறேன். கதவுகளில் வண்ணம் உரிந்த ஒற்றை மாடி வீடுகள் அலுப்பூட்டுமாறு ஒன்றிற்கு அடுத்தாற்போல் ஒன்றாக இருந்தன. அருகாமையிலுள்ள வீடுகளின் பலஹீனமான ஒலிகள் பொது ஒருமையை வெறுமே ஊடுருவ மட்டுமே செய்தன: இங்கே ஒரு கத்திச் சாணை பிடிப்பவனின் கிறீச்சிடுதல், அங்கே ஒரு செருப்பு ரிப்பேர் பார்ப்பவனின் சுத்தியல் ஒலி, அருகாமையிலுள்ள வீடுகளின் குழந்தைகள் ஓய்ந்த தெரு வோரங்களில் விளையாடிக் கொண்டிருந்தன. தெருவில் ஆர்கன் வாசிப்பவரின் இசை, குழந்தைகளின் விளையாட்டு கூச்சல்களுடன் சேர்ந்து என்னுடைய காதுகளை எட்டியது. நான் ஒரு கணம் நின்று உணர்ச்சியோடு அவர்களைக் கவனித்தும், வேகத்தோடு கடந்தும், அமிலாமியா இந்தக் குழத்தைக் கூட்டங்களுக்கு நடுவே இருக்கக் கூடும், அடக்கமில்லாமல் அவளுடைய பூப்போட்ட உள்ளாடையைக் கட்டிக் கொண்டு, ஏதாவது பால்கனியிலிருந்து அவள் முழங்கால்களில் தொங்கிக் கொண்டு, விளையாட்டு அதீதங்களில் இன்னமும் விருப்பத்தோடு அவளுடைய பையில் வெள்ளை இதழ்களை நிரப்பிக் கொண்டு நான் புன்னகைத்தேன். இருபத்திரெண்டு வயதான இளம் பெண், இந்த முகவரியில் இன்னும் வாழ்ந்தாலும், என் னுடைய நினைவுகளைக் கண்டு சிரிப்பாள் அல்லது அந்தத் தோட்டத்தில் கழித்த மத்தியாயங்களை ஒரு வேளை மறந்திருப்பாள் என்று முதன் முறையாக என்னால் கற்பனை செய்ய முடிந்தது. 

கல்குதிர ! 198 

மற்ற எல்லா வீடுகளோடும் ஒத்ததாக இருந்தது அந்த வீடு. கனமான துழைவுக் கதவு, ஷட்டர்கள் மூடப்பட்ட இரண்டு கிரில் ஜன்னல்கள். ஒரு ஒற்றை மாடி வீட்டின் சிறு தூண்கள் கொண்ட போலியான நவ-புராதன சுற்றுச் சுவர். அநேகமாக அந்த மொட்டை மாடியின் நடை முறைகளை மறைத்துக் கொண்டிருக்கும், கொடிகளில் தொங்கும் துணிகள், தண்ணீர் தொட்டிகள், வேலைக்காரர்களின் குடியிருப்புகள், ஒரு கோழிக் கூடு. நான் அழைப்பு மணியை அழுத்துவதற்கு முன்னால் எந்தவிதமான பிரமையிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அமிலாமியா இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவன் ஏன் ஒரே வீட்டில் பதினைந்து ஆண்டுகள் வசிக்க வேண்டும். அதோடு அவளுடைய வயதை மீறிய சுதந்திரம், தன்மை ஆகியவற்றால் அவள் நன்றாக வளர்க்கப்பட்ட, நல்ல நடத்தை உள்ள ஒரு பெண்ணாகத் தோன்றினாள். இந்தக் குடியிருப்புகள் நளினமானதாக இல்லை; அமிலாமியாவின் பெற்றோர்கள் சந்தேகத்திற்கிடமில்லாமல் இந்த இடத்தை விட்டு காலி செய்து போயிருப்பார்கள். ஆனால் ஒரு வேளை புதிய குடித்தனக்காரர்களுக்கு அவர்கள் எங்கு போயிருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கக் கூடும். 

நான் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். நான் மீண்டும் அழுத்தினேன். இங்கே இன்னொரு எதிர்பாராத நிகழ்ச்சி; ஒருவரும் வீட்டில் இல்லை. மீண்டும் என்னுடைய இளம் பருவத்துத் தோழியைப் பார்ப்பதற்கான தேவையை நான் உணருவேனா? இல்லை. ஏனென்றால் என்னுடைய இளம் பருவத்தில் உள்ள ஒரு புத்தகத்தை இரண்டாம் முறையாகத் திறந்து தற்செயலாக அமிலாமியாவின் கார்டைக் கண்டு பிடித்துப் பார்ப்பது சாத்தியமல்ல. நான் என்னுடைய அன்றாடக் காரியங்களில் இறங்கி, எதனுடைய முக்கியத்துவம் அதன் விரையும் ஆச்சரியத்தில் பொதிந்திருக்கிறதோ, அந்தக் கணத்தை மறந்து விடுவேன். 

நான் மீண்டும் ஒரு முறை அழுத்தினேன். என்னுடைய காதை கதவில் அழுத்தினேன். நான் ஆச்சரியமடைந்தேன். நான் ஒரு கடுமையான சீரற்ற மூச்சு விடுதலை மறுபக்கத்தில் கேட்க முடிந்தது; சிரமப்பட்டு மூச்சு விடுகிற சத்தம், பழைய புகையிலையின் மூச்சுப் பிடிக்க முடியாத நாற்றத்துடன் கலந்து ஹாலின் சுவர் விரிசல் வழியே வெளியே கசிந்தது. 

"குட் ஆப்டர் நான். நீங்கள் சொல்ல முடியுமா?...'' 

என்னுடைய குரலைக் கேட்ட உடனேயே அந்த ஆள் கனமான நிச்சயமற்ற காலடிகளுடன் தூர நகர்ந்தார், நான் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினேன், இந்தத் தடவைக் கத்திக் கொண்டு: 

"கதவைத் திறங்கள்! என்ன விஷயம்? நான் பேசறது கேக்கலையா?" 

199 / கல்குதிரை 

ஒரு பதிலுமில்லை. நான் தொடர்ந்து அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தேன், எந்த விளைவும் இல்லாமல். சிறு விரிசல்களில் வெறித்துக் கொண்டு, தூரம் எனக்கு ஒரு பார்வையைக் கொடுக்கும் அல்லது ஊடுருவலைக் கூட என்பதுபோல நான் கதவருகில் இருந்து பின்னால் நகர்ந்தேன். அந்தப் பாழாய்ப் போன கதவின் மேல் என்னுடைய கவனம் பூராவும் குவிந்திருக்க நான் தெருவைக் கடந்தேன், பின்பக்கமாக நடந்து. கடூரமான விசில் ஒலியைத் தொடர்ந்த ஒரு துளைக்கக் கூடிய கூச்சல் என்னைத் தக்க நேரத்தில் காத்தது; மோதி, யாருடைய குரல் என்னைக் காத்ததோ அந்த நபரை நான் அடைந்தேன். ஒரு கார் தெருவில் விரைவதையும், என்னுடைய எரிகிற வியர்க்கிற தோலுக்கு குளிர்ந்த ரத்தம் விரையும்போது பாதுகாப்புக் கொடுப்பதை விட அதிகமான ஆதரவு கொடுத்த ஒரு பிடியோடு நான் ஒரு விளக்குக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை மட்டும் நான் கண்டேன். அமிலாமியாவினுடையதாக இருந்து கொண்டிருந்த, இருந்த, உறுதியாக அவளுடையதாகிய அந்த வீட்டை நான் பார்த்தேன். அங்கு என்னென்ன தொங்கிக் கொண்டிருந்தது என்று எனக்குத் தெரியாது 

குட்டைப் பாவாடைகள், பைஜாமாக்கள், பிளவுஸ்கள்- எனக்குத் தெரியாது. மொட்டை மாடியின் வெள்ளைச் சுவரில் ஒரு இரும்புக் கம்பத்திற்கும் ஒரு ஆணிக்கும் நடுவே கட்டப்பட்ட ஒரு நீண்ட கொடியில் துணி பின்களால் மாட்டப்பட்டுக் கிடந்த கஞ்சிப் பசை போடப்பட்ட சிறிய ஊதாக் கட்டம் போட்ட மேல் கவுனை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. 

III
பதிவாளர் அலுவலகத்தில் அந்தச் சொத்து செனார்' ஆர். வால்டிவியா என்பவர் பெயரில் உள்ளது, அவர் வாடகைக்கு விட்டுள்ளார் என்று என்னிடம் கூறினார்கள். யாருக்கு? அது அவர்களுக்குத் தெரியவில்லை. வால்டிவியா யார்? அவர் தன்னை ஒரு வியாபாரி என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் எங்கு வாழ்கிறார்? நீங்கள் யார்? அத்த இளம் பெண் அகந்தையுடன் கூடிய ஆர்வத்துடன் என்னைக் கேட்டாள். ஒரு அமைதியான நிச்சயமான தோற்றத்தைக் கொடுக்க என்னால் முடியவில்லை. என்னுடைய நரம்புக்களைப்பைத் தூக்கம் நீக்கவில்லை. வால்டிவியா. நான் பதிவாளர் அலுவலகத்தை விட்டு நீங்கியதும் சூரியன் என்னைத் தாக்கியது. மேகங்களுக்குள் மறைந்த சூரியன் மேகங்களின் வழியாகக் கசிந்து அதன் மூலம் தீவிரமாக-தூண்டிய வெறுப்பை நான் ஈரமான நிழல் செறிந்த பூங்காவிற்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசையுடன் இணைந்தேன். அது அமிலாமியா அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறாளா, அவர்கள் ஏன் என்னை வீட் 

1 செனார் -ஸ்பானிஷ் மொழிபேசும் மனிதனுக்கு உரிய பட்டம்

கல்குதிரை / 200 

டிற்குள் விட மறுத்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆசை மட்டும்தான். ஆனால் என்னை இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்க வைத்த அபத்த எண்ணத்தை நான் ஒதுக்கித் தள்ளுவதே நான் முதலில் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய வேலை. அவள் பூக்களைப் பாதுகாத்து வைத்திருந்த மேல் கவுன் அந்தத் தாழ்வாரத்தில் காய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து. பதினான்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஏழு வயதுப் பெண் அந்த வீட்டில் வாழ்கிறாள் என்பதை நான் நம்பிக்கொண்டு...அவள் ஒரு சிறு பெண்ணாக இருக்க வேண்டும். ஆமாம் அமிலாமியா இருபத்தி ரெண்டு வயதில், அதே மாதிரி உடை உடுத்துகிற, அதே மாதிரி இருக்கிற, அதே விளையாட்டுக்களை விளையாடுகிற, அதோடு - யாருக்குத் தெரியும் ஒருவேளை அதே பூங்காவிற்குப் போய்க் கொண்டு இருக்கிற ஒரு பெண்ணுக்குத் தாயாக இருக்க வேண்டும். ஆழ்ந்த சிந்தனையில் நான் மீண்டும் அந்த வீட்டின் கதவின் முன்னால் வந்து விட்டேன். நான் அழைப்பு மணியை அழுத்திவிட்டு கதவின் அடுத்த பக்கத்தில் விசிலடிப்பது போன்ற மூச்சுச் சத்தத்திற்காகக் காத்திருந்தேன். நான் தவறாக நினைத்து விட்டேன். ஐம்பது வயதுக்கு மேல் இருக்க முடியாத ஒரு அம்மாளால் கதவு திறக்கப் பட்டது. ஒரு சால்வையை மூடிக் கொண்டு கறுப்பு ஆடை உடுத்தி கறுப்பு லோ-ஹில் ஷூக்கள் அணிந்து, மேக்கப் போடாமல், கறுப்பும் வெள்ளையும் கலந்த கூந்தலை கொண்டை போட்டுக் கொண்டு, அவள் இளமை என்ற பசப்பலோ அல்லது பிரமையோ எல்லாவற்றையும் கைவிட்டவளாகத் தோன்றினாள்' அவள் இரக்கமற்ற விழிகளால் அநேகமாக கொடூரமாகத் தோன்றியவற்றால் என்னைக் கவனித்தாள். 

''உங்களுக்கு எதாவது வேணுமா?'' 

"செனார் வால்டிவியா என்னை அனுப்பியிருக்காரு" நான் இருமி, என்னுடைய கையால் என்னுடைய முடியைத் துழாவினேன். நான் என்னுடைய கைப்பெட்டியை என்னுடைய அலுவலகத்திலிருத்து எடுத்து வந்திருக்க வேண்டும். அது இல்லாமல் என்னுடைய பாத்திரத்தை நான் நன்றாக நடிக்க முடியாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். 

''வால்டிவியா?" அந்த அம்மாள் பதட்டமில்லாமல் ஆர்வமில்லாமல் கேட்டாள். 

"ஆமாம். இந்த வீட்டுச் சொந்தக்காரர்" 

ஒரு விஷயம் தெளிவு. அந்த அம்மாள் அவளுடைய முகத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. அவள் அமைதியாக என்னைப் பார்த்தாள்... 

201 | கல்குதிரை 

"ஓ ஆமாம். இந்த வீட்டுச் சொந்தக்காரர்.'' 

“ நான் உள்ளே வரலாமா" 

மோசமான நகைச்சுவை நாடகங்களில் பயணம் செய்யும் விற்பனையாளன் அவள் முகத்தில் கதவை அறைந்து சாத்தி விடாமல் இருப்பதற்காக கதவுக்கு உள்ளே ஒரு காலை வைத்துக் கொண்டிருப்பதாக நான் நினைத்தேன். நான் அதையே செய்தேன், ஆனால் அந்த அம்மாள் பின்னால் நடந்து அவளுடைய கையசைவால் ஒரு காரேஜாக இருக்கக் கூடிய ஒன்றிற்குள் என்னை வரச் சொல்லி வரவேற்றாள். ஒரு பக்கத்தில் அதனுடைய வண்ணம் மங்கிய ஒரு கண்ணாடிக் கதவு இருந்தது. நான் வாயிற் புறத்தின் மஞ்சள் கற்களைத் தாண்டிக் கதவை நோக்கி நடந்தேன்' சிறிய காலடிகளோடு என்னைப் பின் தொடர்ந்து வந்த அந்த அம்மாளைப் பார்த்துத் திரும்பி நான் மீண்டும் கேட்டேன்: 

"இந்த வழியாகவா?'' 

அவளுடைய வெள்ளைக் கைகளில் ஒரு ஜெபமாலையை வைத்திருந்ததையும் ஓய்வற்று அதை உருட்டிக் கொண்டேயிருந்ததையும் நான் முதன் முறையாகக் கவனித்தேன். என்னுடைய சிறு வயதுக்குப் பிறகு அந்த மாதிரியான பழைய மோஸ்தர் ஜெபமாலைகளில் ஒன்றை நான் பார்த்ததேயில்லை. நான் அதைப் பற்றி விமர்சிக்க எண்ணினேன். ஆனால் அந்த அம்மாள் கடூரமாகவும் திட்டவட்டமாகவும் கதவைத் திறந்த விதம் எந்த விதமான வேண்டாத பேச்சையும் பேசுவதைத் தடுத்தது. நாங்கள் ஒரு நீண்ட குறுகிய அறைக்குள் நுழைந்தோம். அந்த அம்மாள் விரைந்து ஷட்டர்களைத் திறந்தாள். ஆனால் சைனாக் களிமண்ணால் செய்யப்பட்ட சட்டிகளில் வளர்க்கப் பட்ட பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய பெரிய செடிகள் நான்காலும், கடினமான கண்ணாடிப் பானைகளாலும் அந்த அறை நிழல் சூழ்ந்து இருந்தது. அந்த அறையிலிருந்த மற்ற பொருட்கள் உயர்ந்த பின்பக்கத்தை உடைய, பிரம்பால் நேர்த்தியாக்கப்பட்ட பழைய சோபாவும் ஒரு ஆடும் நாற்காலியும் மட்டுமே. ஆனால் அந்தச் செடிகளோ, மேஜை நாற்காலிகளின் குறைவோ என்னுடைய கவனத்தைக் கவரவில்லை. 

அந்த அம்மாள் அவள் அந்த ஆடும் நாற்காலியில் உட்காருவதற்கு முன்னால் என்னைச் சோபாவில் உட்காரச் சொன்னாள், எனக்குப் பின்னால் சோபாவின் பிரம்புக் கை மேல் ஒரு திறந்த பத்திரிகை கிடந்தது. 

செனார் வால்டிவியா நேரில் வராததற்காக அவருடைய மன்னிப்பைக் கோரச் சொன்னார்.'' 

-க. 26 

கல்குதிரை / 202 

அந்த அம்மாள் இமைக்காமல் சாய்வு நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தாள். நான் என்னுடைய கடைக் கண் வழியாக அந்த காமிக் புத்தகத்தைச் சிரமப்பட்டுப் பார்த்தேன். 

“அவர் அவருடைய வாழ்த்துக்களை அனுப்பினார். அதோடு...'' 

நான் அந்த அம்மாளிடமிருந்து ஒரு எதிர்வினையை எதிர்பார்த்து நிறுத்தினேன். அவள் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தாள். சிவப்புப் பென்சில் கிறுக்கல்கள் அந்தப் பத்திரிக்கையில் நிறைந்து இருந்தது. 

"அதோடு இன்னும் சில நாட்களுக்கு உங்களைத் தொந்தரவு செய்வார் என என்னைத் தெரிவிக்கச் சொன்னார்.'' 

என்னுடைய கண்கள் விரைவாகத் தேடியது. 

''வரி செலுத்துவதற்காக இந்த வீட்டின ஒரு புதிய மதிப்பீடு தயாரிக்க வேண்டியிருக்கிறது. அது செய்யப்படவில்லை என்று தோன்றுகிறது... 

நீங்கள் இங்கே எப்போதிருந்து வாழ்கிறீர்கள்...'' 

ஆமாம். சிறு தடிமனான லிப்ஸ்டிக் அந்த நாற்காலிக்கு அடியில் கிடக்கிறது. அந்த அம்மாள் புன்னகைத்தால், அது ஜெபமாலையைத் தடவி மெதுவாக நகரும் கைகளால் மட்டுமே; அவளுடைய அம்சங்களைத் தொந் தரவு செய்யாத ஒரு கிண்டலின் வரையும் ஒளிர்வை ஒரு சணத்திற்கு நான் உணர்ந்தேன். அவள் இன்னும் பதில் சொல்லவில்லை. 

''அநேகமாக பதினைந்து ஆண்டுகளாக, அது உண்மை இல்லையா?" 

அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அவள் மறுக்கவும் இல்லை. அந்த வெளுத்த மெலிந்த உதடுகளில் லிப்ஸ்டிக்கின் சுவடே இல்லை. 

"நீங்கள், உங்கள் கணவர் அதோடு...'' 

என்னைத் தொடரச் சொல்லி சவால் விடுபவளைப் போல அவளுடைய பாவனையை மாற்றாமலே என்னை வெறித்துப் பார்த்தாள். அவள் ஜெய மாலையை உருட்டிக் கொண்டு, நான் என்னுடைய முழங்காலில் கைவைத்து முன்னால் குனிந்து ஒரு கணம் மெனமாக அமர்ந்திருந்தோம். நான் எழுந்தேன், 

"நல்லது. அந்தப் பேப்பர்களோடு நான் மத்தியானம் வருகிறேன்...'' 

அந்த அம்மாள் தலையசைத்துக் கொண்டே மெளனமாக அந்த லிப்ஸ்டிக்கையும், அந்தக் காமிக் புத்தகத்தையும் எடுத்து அவற்றை அவளுடைய சால்வையின் மடிப்புகளுக்குள் மறைத்துக் கொண்டாள். 

203 | கல்குதிரை 

IV 

அந்தக் காட்சி மாறவில்லை. இந்த மத்தியானத்தில் நான் என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் பொய்யான எண்களை எழுதிக் கொண்டு மந்தமாக்கப் பட்ட தரைப் பலகைகளின் தரத்தைப் பற்றியும் அந்த வசிக்கும் அறையின் நீளம் பற்றியும் நிறுவுவதில் ஆர்வமிக்கவனாக பாவலா செய்து கொண்டிருக்க, அந்த ஜெபமாலையின் முப்பது ஆண்டுகள் அவள் கைகளின் வழியே முனகிக் கொண்டிருக்க, அந்தப் பெண் ஆடிக் கொண்டிருந்தாள். அந்த வசிக்கும் அறையிலுள்ள சாமான்களின் விவரப் பட்டியல் என்பது போன்ற ஒன்று முடிந்தவுடன் நான் பெரு முக்சு விட்டேன். அந்த வீட்டின் அடுத்த அறைகளுக்குப் போவதற்கு நான் அந்த அம்மாளிடம் அனுமதி கேட்டேன். அந்த அம்மாள் கறுப்பு-அணிந்த அவளுடைய கரங்களை ஆடும் நாற்காலியின் இருக்கையில் பலமாக ஊன்றிக் கொண்டு, அவளுடைய குறுகிய, எலும்பான தோள்களில் சால்வையைச் சரி செய்து கொண்டு எழுந்தாள். 

அவள் தெளிவில்லாத சண்ணாடிக் கதவைத் திறந்தாள். கொஞ்சமே கூடுதலாக மேஜை நாற்காலிகள் உள்ள உணவருந்தும் அறைக்குள் நாங்கள் துழைந்தோம். ஆனால் அலுமினியக் கால்கள் உள்ள மேஜை, நான்கு நிக்கல் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகள் -ஆகியவை, வசிக்கும் அறை மேஜை நாற்காலிகளிலிருந்து சிறு மாறுதல் கூட உள்ளவையாய் இல்லை. உருக்கு இரும்பு கிரில்கள் உள்ள இன்னொரு ஜன்னலும் மூடிய ஷட்டர்களும் சில நேரங்களில், ஷெல்ப்களோ, பீரோவோ இல்லாத வெற்றுச் சுவரைக் கொண்ட இந்த உணவு அருந்தும் அறைக்கு வெளிச்சம் கொடுக்கும். அந்த மேஜையின் மேல் இருந்த ஒரே பொருள் ஒரு கறுப்புத் திராட்சைக் கொத்து, இரண்டு பீச் பழங்கள், வளையமாக ரீங்கரித்துக் கொண்டிருக்கும் ஈக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பழக் கிண்ணம் மட்டுமே. அந்த அம்மாள் கைகளைக் கட்டிக் கொண்டு அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். அந்தப் பொருட்களின் ஒழுங்கைக் குலைக்கிற அபாயத்தை நான் எடுத்துக் கொண்டேன்: நான் உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிற எதையும் இந்த அறைகள் எனக்குச் சொல்லாது என்பது வெளிப்படை. 

''நாம் மொட்டைமாடிக்குச் செல்ல முடியாதா?'' நான் கேட்டேன். “அதுதான் மொத்தப் பரப்பையும் அளப்பதற்கான சிறந்த வழி என்று நான் நம்புகிறேன்." 

அந்த அம்மாள் என்னைப் பார்க்கும் போது அவள் கண்கள் ஒளி கொண்டன அல்லது ஒரு வேளை நிழல் செறிந்த அந்த உணவருந்தும் அறைக்கு எதிரிணையாக அது மட்டும் தான் இருந்தது. 

கல்குதிரை / 204 

“எதற்காக'' அவள் இறுதியாகச் சொன்னாள் “செனார் ...வால்டிவியாவுக்கு...பரிமாணங்கள் எல்லாம் நன்றாகத் தெரியும்.'' 

அந்த இடைவெளிகள், அந்த வீட்டுச் சொந்தக்காரரின் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் விட்ட இடைவெளிகள் தான் அந்த அம்மாளை ஏதோ ஒன்று கடைசியில் தொந்தரவு செய்து விட்டது என்பதற்கான முதல் அறிகுறிகள் அந்தத் தொந்தரவே, அவளைப் பாதுகாப்பாக, குறிப்பிட்ட அளவு எதிரணியாகச் சொல்ல அவளைக் கட்டாயப் படுத்தியது. 

'எனக்குத் தெரியாது. நான் புன்னகைக்க முயற்சித்தேன். ''ஒரு வேளை மேலிருந்து கீழாகப் போவதையே நான் விரும்புவேன். மற்றபடி...'' என்னுடைய போலிப் புன்னகை வடிந்து விட்டது. 

'... கீழிருந்து மேல் இல்லை .'' 

"நான் காட்டுகிற வழியில் நீங்கள் போக வேண்டும்." அந்த அம்மாள் சொன்னாள், அவளுடைய கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, வெள்ளிச் சிலுவை அவளுடைய கறுப்பு வயிற்றில் தொங்கிக் கொண்டிருக்க. 

பலஹீனமாகச் சிரிப்பதற்கு முன்னால், எவ்வாறு இந்த நிழலில், என்னுடைய பாவனைகள் வீணானவை, குறியீட்டுத் தன்மை கூடக்கொண்டவை அல்ல என்று நினைக்க என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண் டேன். நான் அந்த நோட்டுப் புத்தகத்தை அட்டையின் மொறமொறப்புச் சத்தத்துடன் திறந்து, அதிக பட்ச சாத்தியமான வேகத்துடன் என்னுடைய குறிப்புகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு, மேலே பார்க்காமல், இந்த வேலையின் எண்களும், மதிப்பீடுகளும், அவற்றின் கற்பனையும் - என்னுடைய கன்னங்களில் உள்ள லேசான வெட்கமும், என்னுடைய நாக்கின் உணரத்தக்க உலர்தலும் என்னிடம் சொல்லியது - யாரையும் ஏமாற்றுவது அல்ல. அந்த வரைபடத்தாளை அபத்தக் குறிகளாலும் ஸ்குயர் ரூட்களாலும், அல்ஜிப்ரா பார்முலாக்களாலும் நிரப்பிக் கொண்டு, விஷயத்திற்கு வருவதிலிருந்தும், அமிலாமியாவைப் பற்றிக் கேட்பதிலிருந்து, இங்கிருந்து ஒரு திருப்திகரமான பதிலோடு வெளியேறுவதிலிருந்து என்னைத் தடுத்து நிறுத்துகிறது என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். எதுவுமில்லை. அதோடு ஒரு பதிலே எனக்குக் கிடைத்தாலும் இந்தப் பாதையில் உண்மை இருக்கப் போவதில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. என்னுடைய மெலிந்த மௌனமான துணை தெருவில் இரண்டாம் முறை பார்க்கக் கூடிய நபர் அல்ல, கரடு முரடான மேஜை நாற்காலிகளோடு கூடிய அநேகமாக ஆள் வசிக்காத இந்த வீட்டில், கூட்டத்தில் அவள் ஒரு அநாமதேய முகமாக 

205 | கல்குதிரை 

இல்லாமல் போவாள், அதோடு மர்மக்கதையின் வழக்கமான கதாபாத்திரமாக மாறிப் போவாள். இவ்விதமானது முரண்பாடு, அமிலாமியாவின் நினைவுகள் கற்பனைக்கான என்னுடைய பசியை இன்னொரு தடவை எழுச்சி பெறச் செய்யுமானால் நான் அந்த விளையாட்டின் விதிகளைப் பின்பற்றுவேன், நான் எல்லாவிதத் தோற்றங்களையும் காலியாக்குவேன், என்னுடைய பாதையில் வரக்கூடிய ஜெப இடங்களின் செனோரா' வின் எதிர்பாராத திரைகளின் பின் ஒளிந்திருக்கும் பதிலை- ஒருவேளை எளிமையும் தெளிவும் ஆனது உடனடியானது, வெளிப்படையானது- கண்டு பிடிக்கும் வரை நான் ஓய மாட்டேன். என்னுடைய சம்மதமற்ற ஆம்பிடிரையானிடம் (Amphirtyon) நியாயப்படுத்த முடியாத அளவுக்கு விநோதத் தன்மையை நான் பரிசளிக்கிறேனா? அது அப்படியென்றால் நான் என்னுடைய கண்டுபிடிப்பின் குறுக்கும் நெடுக்குமான தன்மையில் சந்தோஷம் மட்டுமே கொள்ள வேண்டும். அந்த ஈக்கள் சேதமுற்ற பீச்பழத்தின் நுனியை எப்போதாவது கடந்து லேசாக ஒரு கடி கடித்துக் கொண்டு அந்தப் பழப்பாத்திரத்தை இன்னமும் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. என்னுடைய குறிப்புகள் என்பதன் பேரால் நான் இன்னும் நெருங்கிக் குனிந்து கொண்டேன். சிறிய பற்கள் பழத்தின் வெல்வெட் தோலிலும், வெளிர் பழுப்பு நிறமான சதையிலும் அடையாளங்களை விட்டன. நான் செனோராவைப் பார்க்க வில்லை. நான் குறிப்புகள் எடுப்பதாக பாவலா செய்து கொண்டிருந்தேன். பழம் கடிக்கப்பட்டதாகத் தோன்றியது ஆனால் தொடப்படவில்லை. அதை நன்றாகப் பார்ப்பதற்காக நான் என்னுடைய கைகளை மேஜையின் மீது வைத்துக் கொண்டு, தொடாமல் கடிக்கிற செயலைப் பற்றி வருந்துபவன் போல என்னுடைய உதடுகளை நெருக்கமாக வைத்துக் கொண்டு நான் கீழே குனிந்தேன், நான் கீழே பார்த்தேன். நான் இன்னொரு அடையாளத்தை என்னுடைய காலுக்கு அருகில் பார்த்தேன்; இரண்டு டயர்களின் தடம், சைக்கிள் டயர் களைப் போன்று தோன்றியவை, இரண்டு ரப்பர் டயர்களின் தடம் மேஜையின் விளிம்பு வரை வந்து, தடத்தின் அழுத்தம் குறைந்து, பிறகு மேலும் சென்றது, அறையின் நீளத்திற்கு, செனோராவை நோக்கி... 

நான் என்னுடைய நோட்புக்கை மூடினேன். "நாம் தொடருவோம், செனோரா.'' 

நான் அவளை நோக்கித் திரும்பியபோது அவள் நாற்காலியின் பின்னால் அவளுடைய கைகளை வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருப்பதை நான் காண முடிந்தது. கறுப்பு சிகரெட்டின் புகையை இறுமிக் 

2: செனோரா-ஸ்பானிஷ் மொழி பேசக்கூடிய திருமணமான பெண்ணிற் கான பட்டம். 

கல்குதிரை / 206 

கொண்டு ஒரு மனிதர் கனத்த தோள்களுடனும் மறைந்த கண்களுடனும் அவளுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார்: அந்தக் கண்கள், வீங்கிய சுருக்கம் விழுந்த இமைகளுக்குப் பின்னால் ஆமையின் கழுத்தைப்போல கனத்து வளைந்து தொங்கிக் கொண்டும் எளிதில் வெளியில் தெரியாததாக என்னுடைய ஒவ்வொரு அசைவையும் பார்க்க முடியாததாகத் தோன்றியது. குறுக்கும் நெடுக்குமான வெட்டுக் காயங்களோடு கூடிய பாதி சிரைக்கப்பட்ட சன்னங்கள் முன் துருத்திக் கொண்டிருந்த கன்ன எலும்புகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன. அவருடைய பச்சையான கைகள் அவருடைய கரங்களுக்குக் கீழே மடிக்கப் பட்டிருந்தன. அவர் ஒரு முரட்டு நீலச் சட்டையை அணிந்திருந்தார். அவருடைய கலைந்த தலைமுடி மிகவும் சுருண்டு சிறு மீன் ஒட்டிய கப்பலின் அடிப்பாகம் போல காட்சியளித்தது. அவர் அசையவில்லை. அவர் உயிர் தரித்திருப்பதற்கான உண்மையான அடையாளம் நான் நுழைவு ஹாலில் ஏற்கனவே தண்ணீர்க் குழாய்களில் கேட்டது போன்ற சிரமமான விசிலடிக்கும் மூச்சு விடுதலே. (ஒவ்வொரு மூச்சு விடுதலும் வெள்ளம் போன்ற சளிக்கும், எரிச்சலுக்கும், அவமரியாதைக்கும் வழி திறந்தது.) கிண்டலாக அவர், ''குட் ஆப்டர் நூன்" என்று முணுமுணுத்தார். நான் எல்லாவற்றையும் மறப்பதற்கு விருப்பமுற்றேன். அந்த மர்மம், அமிலாமியா, வீட்டு மதிப்பீடு, சைக்கிள் தடங்கள். அந்த ஆஸ்த்மாக் கொண்ட கிழட்டுக் கரடியின் பயங்கரத் தோற்றம் ஒரு உடனடியான பின் வாங்கலை நியாயப்படுத்தியது. நான் பதிலுக்கு ''குட் ஆப்டர் நூன்,'' என்றேன். அந்தத் தடவை பிரியா விடை கொடுக்கும் தொனிமாற்றத்தோடு. ஆமையின் முகமூடி ஒரு பயங்கரப் புன்னகையாகக் கரைந்தது: அந்தச் சதையின் ஒவ்வொரு அணுவும் கடினமான ஆனால் கிழியக் கூடிய ரப்பராலும் வண்ணம் தீட்டிய உரியக் கூடிய எண் கொய்த் துணியாலும் செய்யப் பட்டது போல இருந்தது. அந்தக் கரம் நீண்டு என்னை நிறுத்தியது. 

"வால்டிவியா நான்கு வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார்,'' அந்த மனிதன் அவனுடைய தொண்டைக்குப் பதிலாக அவனுடைய வயிற்றிலிருந்து வெளிவந்த சோகமான மூச்சடைக்கும் குரலில் சொன்னான்: ஒரு பலஹீனமான. உச்சஸ்தாயிக்குரல். 

அந்த வலிமையான, அநேகமாக வேதனையான இடுக்கிப்பிடிக்கு ஆட்பட்டு நான் பாவலா செய்வதில் பயனில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் என்னைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த மெழுகு, ரப்பர் முகங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அந்த ஒரே காரணத்தினால், எல்லாவற்றிற்கும் மேலாக, கடைசியாக ஒரு தடவை பாவலா செய்வதாக, ''அமிலாமியா...'' என்று நான் சொன்னபோது எனக்கு நானே பேசிக்கொள்வது போல பாவலாச் செய்தேன். 

207 / கல்குதிரை 

ஆமாம்; யாரும் இனிமேல் பாவலாச் செய்ய வேண்டியதில்லை. தோளைத் தொட்டுக் கொண்டிருக்கும் மெழுகுக் கையை எடுக்க எழுவதற்கு முன்னால் என்னுடைய கரத்தை இறுகப் பிடித்த முஷ்டி ஒரு கணத்திற்கே அது தன்னுடைய பலத்தை உறுதி செய்தது, உடனடியாக அந்த இறுகல் தளர்ந்தது, பிறகு அது விலகியது பலஹீனமாசு நடுங்கிக்கொண்டு: செனோரா முதன்முறையாக குழப்பம் கொண்டு ஒரு கலைக்கப்பட்ட பறவையின் கண்களால் என்னைப் பார்த்து, அவளுடைய அம்சங்களின் இறுகிய திகைப்பை மாற்றாத வறண்டதுக்கத்தோடு விசும்பினாள். 

திடீரென்று என்னுடைய கற்பனையின் பூதத்தில் தோன்றிய இரண்டு தனிமையான, கைவிடப்பட்ட, காயமுற்ற முதியவர்கள், கைகுலுக்கலினால் அவர்களை அரிதாகவே ஆறுதல்படுத்திக் கொள்ள முடியும். என்பது என்னை வெட்கத்தால் நிரப்பியது. நான் பங்கிட்டுக் கொள்வதற்கு இன்னமும் உரிமை இல்லாத எதோ ஒன்றால் இந்த வாழ்க்கையிலிருந்து வனவாசம் புரிகிற இரண்டு மனித ஜீவன்களின் அந்தரங்கத்தையும் இரகசியத்தையும் குலைப்பதற்கு என்னுடைய விநோதத் தன்மை என்னை இந்த வெற்று உணவருந்தும் அறைக்குள் கொண்டு வந்தது, நான் என்னை எப்போதும் இதை விடக் கீழானவனாகக் கருதியது இல்லை. ஒருபோதும் இவ்வளவு சிக்கலான வகையில் வார்த்தைகள் என்னை தோற்கடித்தது இல்லை: என்னுடைய எந்தப் பயனையும் வீணானது: நான் அவர்களை அணுகலாமா, நான் அவர்களைத் தொடலாமா, நான் அழையா விருந்தாளியாக நுழைந்ததற்காக மன்னிக்கும்படி அவர்களை வேண்டலாமா? நான் என்னுடைய நோட்டுப்புத்தகத்தை என் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, என்னுடைய துப்பறியும் கதையின் யூகங்களை மறதிக்குத் தள்ளினேன் : காமிக் புக், லிப்ஸ்டிக், லேசாக கடிக்கப்பட்ட பழம், சைக்கிள் தடங்கள், ஊதாக் கட்டம் போட்ட மேல் கவுன்... நான் அமைதியாக வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். கனத்த கண் இமைகளுக்குப் பின்னிருந்து அந்த முதியவர் என்னைக் கவனித்திருக்க வேண்டும். கடினமூச்சுடன் கூடிய குரல் கேட்டது: 

''அவளை உங்களுக்குத் தெரியுமா?'' 

அந்தக் கடந்தகாலம், அவர்கள் தினந்தோறும் அவ்வளவு இயக்கையாக உபயோகப்படுத்தி வருவது, என்னுடைய பிரமைகளை அழித்தது. பதில் உள்ளது. உங்களுக்கு அவளைத் தெரியுமா? எல்லளவு வருடமாக? எவ்வளவு வருடமாக இந்த உலகம் அமிலாமியா இல்லாமல் வாழ்ந்து வருகிறது. என்னுடைய மறதியினால் கொல்லப்பட்டு, நேற்றே துயரமிக்சு, வீர்யமற்ற நினைவால் மீட்கப்பட்டு, எப்போதும் தனிமையிலிருக்கும் தோட்டத்தின் மகிழ்ச்சியில் திகைப்பதை அந்த தீவிர மிக்க சாம்பல் விழிகள் எப்போது 

கல்குதிரை / 208 

நிறுத்தின? எப்போது அந்த உதடுகள் நிறுத்தின? எரிச்சலில் பிதுங்கவோ அல்லது சடங்கான தீவிரத் தன்மையோடு மெலிதாக மூடவோ செய்வதை, நான் இப்போது உணர்கிறேன், அதனால் அமிலாமியா வாழ்கையின் பொருட்களையும், நிகழ்ச்சிகளையும் விரைந்து மறைபவை என்று ஒரு வேளை அவளின் உள்ளுணர்வால் உணர்ந்ததை, கண்டுபிடித்து, புனிதப்படுத்தியிருக்க வேண்டும். 

"ஆமாம். நாங்கள் அந்தப் பூங்காவில் ஒன்றாக விளையாடினோம். நீண்டகாலத்திற்கு முன்பு.'' 

"அவளுக்கு என்ன வயதிருக்கும்?'' அந்த முதியவர் கேட்டார், அவருடைய குரல் இன்னும் மங்கியது . 

''அவளுக்கு ஏழு வயதிருக்கும். ஏழுக்கு அதிகமில்லை .'' தேடும் கைகளோடு, அந்த அம்மாளின் குரல் உயர்ந்தது: 

அவள் எப்படி இருந்தாள் செனார்? அவள் எப்படி இருந்தாள் என்று தயவு செய்து சொல்லுங்கள் எங்களுக்கு.'' 

நான் என் கண்களை மூடினேன். 

"அமிலாமியா என்னுடைய நினைவும் கூட அவள் தொட்ட, கொண்டு வந்த, பூங்காவில் கண்டுபிடித்த பொருட்களோடு அவளை என்னால் ஒப்பீடு செய்ய முடியும். ஆமாம் நான் இப்போது அவளைப் பார்க்கிறேன் மலையிலிருந்து கீழிறங்கிக்கொண்டிருப்பதை, இல்லை. அது அறுத்த வயலின் தாள் கூட்டம் கொண்ட ஒரு உயர்ந்த இடம் மட்டுமே என்பது உண்மை அல்ல. அது புல்வெளி கொண்ட ஒரு மலை. அமிலாமியா வருவதும் போவதும். ஒரு பாதைத்தடத்தை உண்டுபண்ணி விட்டது. அவள் கீழே வருவதற்கு முன்னால் மேலிருந்து எனக்கு கையசைப்பாள் இசையோடு, ஆமாம், நான் பார்த்த இசை, நான் முகர்ந்த ஓவியம், நான் கேட்டருசிகள், நான் தொட்ட வாசனைகள்... என்னுடைய சித்த பிரமை...'' அவர்கள் என்னைக் கேட்கிறார்களா? 

அவள் கையசைத்துக் கொண்டு வருவாள், வெள்ளை உடை அணிந்து ஊதாக்கட்டம் போட்ட மேல் கவுனோடு... மொட்டை மாடியில் நீங்கள்  
தொங்கவிட்டிருப்பது...'' 

அவர்கள் என் கையைப் பிடித்தார்கள். நான் இன்னும் என் கண்ணைத் திறக்கவில்லை. 

" அவள் எப்படி இருந்தாள் செனார்?'' 

''அவளுடைய கண்கள் சாம்பல் நிறம் அவளுடைய கூந்தலின் நிறம் பிரதிபலிப்புக்கும், மரங்களின் நிழலுக்கும் மாறும்...'' 

209 | கல்குதிரை 

அவர்கள் என்னை மெதுவாக இட்டுச் சென்றார்கள், அவர்கள் இருவரும்; நான் அந்த மனிதனின் சிரமப்பட்ட மூச்சைக் கேட்டேன், ஜெபமாலையிலுள்ள சிலுவை அந்த அம்மாளின் உடலில் மோதியது. - 

''தயவு செய்து எங்களுக்குச் சொல்லுங்கள்...'' 

"அவள் ஓடும் போது காற்று அவளுடைய கண்களில் கண்ணீரைக் கொண்டு வரும்; அவள் என்னுடைய பெஞ்சை அடையும் போது அவளுடைய கன்னங்கள் ஆனந்தக் ஓண்ணீரால் வெள்ளியாய் மின்னும்." 

நான் என்னுடைய கண்களைத்திறக்கவில்லை. நாங்கள் இப்போது மேல்மாடிக்குப் போகிறோம். இரண்டு, ஐந்து, எட்டு, ஒன்பது, பன்னிரெண்டு படிகள் . நான்கு கைகள் என்னுடைய உடலுக்கு வழி காட்டின. 

"அவள் எப்படி இருந்தாள், அவள் எப்படி இருந்தாள்?" 

அவள் யூகலிப்டஸிற்கு அடியில் உட்கார்ந்து கிளைகளால் மாலைகள் பின்னினாள். கதறுவதாக பாவலா செய்வாள். ஏனென்றால் நான் என் னுடைய படிப்பை விட்டு விட்டு அவளிடம் போக வேண்டும் என்பதற்காக...'' 

கதவுக் கீல்கள் கிறீச்சிட்டன. வாசனை எல்லாவற்றிற்கும் மேலிட்டது. அது மற்றப் புலன்களை வாங்கிக் கொண்டது, என்னுடைய சித்தப் பிரமை யின் சிம்மாசனத்தில் ஒரு மஞ்சள் மொகலாயனைப் போல அது அதனுடைய இருக்கையை எடுத்துக் கொண்டது; ஒரு சவப் பெட்டியைப் போல கனத்து இருந்தது, ஒரு வழுக்கும் பட்டின் வழுக்கலைப் போல மெல்ல வழுக்கிக் கொண்டு நுழைந்தது, துருக்கியச் செங்கோலைப் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது, கனிமத்தாதின் ஆழமான தொலைந்த நரம்பைப் போல தெளிவில்லாமல் இருந்தது, ஒரு அழிந்து போன நட்சத்திரத்தைப் போல பிரகாசமாக இருந்தது. அந்தக் கைகள் என்னை மேலும் பிடிக்கவில்லை. விசும்பலை விட முதியவர்களின் நடுங்கலே என்னைச் சூழ்ந்து இருந்தது. மெதுவாக நான் என் கண்களைத் திறந்தேன்: முதலில் என் விழிப்படலத்தின் நடுங்கும் நீர் வழியாக, பிறகு என்னுடைய இமைகளின் வலை வழியாக, அறை நறுமணங்களின் அளவற்ற மோதலில் மூச்சுத் திணறி, இணக்கமற்ற, உறைந்த, அநேகமாக சதை-போன்ற இதழ்களை வெளிப் படுத்தியது: பூக்களின் பிரசன்னம் வலிமை வாய்ந்ததாய் இருந்தது. அவர்கள் இங்கே உயிருள்ள சதையின் தரத்தைக் கருதும் படியாக மல்லிகையின் இனிமை, லில்லிக்களின் நோய் உணர்வு, வெள்ளைப் பூக்கள் கொண்ட ட்யூப் ரோஸ் செடியின் சமாதி, கார்டினியா பூஞ்செடியின் கோவில். வேகமாகப் படபடக்கும் 

--க.27 

கல்குதிரை / 210 


மெழுகுவர்த்திகளின் ஒளிரும் மெழுகு உதடுகளால் ஒளியூட்டப்பட்டு அந்தச் சிறிய, ஜன்னலற்ற படுக்கையறை மெழுகின் ஒளி வட்டத்தோடும் ஈரமான மலர்களோடும் என்னுடைய அடிவயிற்றைத் தாக்கியது. அங்கிருந்து, வாழ்க்கையின் சூரிய வட்டத்திலிருந்து, மெழுகு வர்த்திகளுக்கும் மேலாக சிதறிய பூக்களுக்கு ஊடாக உபயோகப் படுத்தப்பட்ட பொம்மைகளின் குவியலை நான் மீட்கவும் பார்வை கொள்ளவும் செய்தேன்: வண்ண வளையங்கள், சுருங்கிய பலூன்கள், உலர்ந்து கண்ணாடி போன்று தெரியும் செர்ரிப் பழங்கள், மெலிந்த திமில்களைக் கொண்ட மரக் குதிரைகள், ஸ்கூட்டர், குருடான கூந்தலற்ற பொம்மைகள், அவற்றின் மரப் பொடியைச் சிந்தும் கரடிகள், காற்றுப் போன ஆயில்-துணி வாத்துக்கள், பூச்சி கடித்த நாய்கள், பிய்ந்து போன குதி கயிறுகள், காய்ந்து போன மிட்டாய்களைக் கொண்ட கண்ணாடி பாட்டில்கள், பிய்ந்துபோன ஷுக்கள், மூன்று சக்கர சைக்கிள் (மூன்று சக்கரங்கள்? இல்லை இரண்டு, சைக்கிளைப் போல அல்ல கீழே இரண்டு சமமான சக்கரங்கள்) சிறிது உல்லன், தோல் எக்கள்; என்னை நோக்கி, என்னுடைய கைக்கெட்டும் தூரத்தில், தாள்ப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீலப் பெட்டிகளால் அந்தச் சிறு சவப் பெட்டி செய்யப் பட்டிருந்தது. இந்தத் தடவை பூக்கள் வாழ்க்கை அளவிலானவை, கார்னேஷன்கள், சூரிய காந்திகள், பாப்பீகள், டியூலிப்கள், ஆனால் மற்றவை போல சாவுக்கானவை. இவ்வளவும் ஆன்மா சாந்தியடைவதற்கான இந்த இறுதிச் சடங்குச் சூழலில் ஒரு பகுதியாக ஏற்படுத்தப்பட்டு, வெள்ளி முலாம் பூசப் பட்ட சவப் பெட்டியின் உள்ளே, கரும் பட்டுத் துணிகளுக்கு நடுவே, வெள்ளை சாட்டின் தலையணையின் மேல், அந்த அசைவற்ற அமைதியான முகம் வேஸ் துணியால் மூடப்பட்டு, ரோஜா நிற சாயத்தால் அலங்கரிக்கப் பட்டு, கண் இமைகள் லேசாக பென்சிலால் தீட்டப்பட்டு, உதடுகள் மூடி, உண்மையான அடர்த்தியான கண் இமைகளோடு, அவை கன்னங்களில், பூங்காவில் இருந்த நாட்களின் ஆரோக்கியத்தோடு கூடிய நளினமான நிழலை விழச் செய்தன. தீவிரமான சிவப்பு உதடுகள், நான் விளையாட வருவதற்காக அமிலாமியா பரவலாவாகச் செய்வது போல கோபத்தில் பிதுங்கியதைப் போல இருந்தது. கைகள் மார்பின் மீது சேர்க்கப்பட்டிருந்தன. ஒரு சிறு ஜெபமாலை, தாயினுடையதை ஒத்தது, அந்த அட்டைக் கழுத்தை நசுக்கிக் கொண்டிருந்தது. சிறிய வெள்ளைக் கோடித் துணி அந்தத் தூய, 4 பருவம் அடைவதற்கு முந்திய பணிவான உடலின் மேல். முதியவர்கள், விசும்பி, முழங்காலிட்டார்கள். 

நான் என்னுடைய தோழியின் பீங்கான் முகத்தில் என் விரல்களை ஓட விட்டேன். இந்தச் சாவின் ராஜ சபையின் படோ டோபத்தில் தலைமை 

211 / கல்குதிரை 

ஏற்றிருக்கும் பொம்மை ராணியின் வண்ணம் தீட்டப் பட்ட அம்சங்களின் குளிர்ந்து போன தன்மையை நான் உணர்ந்தேன். பீங்கான், அட்டை, பருத்தி அமிலாமியா அவளுடைய நல்ல நண்பனை மறக்க மாட்டாள் நான் அதை வரைந்துள்ளதைப் போல என்னனை இங்கு வந்து பார்க்கவும். 

நான் அந்தப் போலிப் பிணத்திடமிருந்து என்னுடைய கையை பின்னிழுத்துக் கொண்டேன். அந்த பொம்மையின் தோலைத் தொட்ட இடங்களில் என்னுடைய விரல் ரேகைகள் பதிந்திருந்தன. 

மெழுகுவர்த்திப் புகையும் அந்த அறையின் லில்லி பூக்களின் இனிய நெடியும் என் வயிற்றில் குடியேறிப் பிரட்ட ஆரம்பித்தது. அமிலாமியாவின் சமாதியை விட்டுத் திரும்பினேன். அந்த அம்மாளின் கை என் கரத்தைத் தொட்டது. அவளுடைய மிருக வெறித்தல் கொண்ட கண்கள் அவளுடைய அமைதியான நடுங்காத குரலுக்குச் சம்பந்தமுடையனவாய் இல்லை. 

''இனிமேல் வராதீர்கள் செனார். நீங்கள் அவளை உண்மையிலேயே நேசித்தால் மீண்டும் வராதீர்கள்" 

நான் அமிலாமியாவின் அம்மாவின் கையைத் தொட்டேன. என்னுடைய நோய் கண்ட கண் வழியாக அந்த முதியவர் அவருடைய முழங் கால்களுக்கு நடுவில் முகத்தை புதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அறையை விட்டு வெளியே படிக்கட்டுக்கு வந்து, வசிக்கும் அறைக்கு வந்து முற்றத்திற்கு வந்து, தெருவிற்கு வந்தேன். 

V
ஒரு வருடம் ஆகாவிட்டாலும், ஒன்பது அல்லது பத்து மாதங்கள் கடந்தன. அந்த உருவ வழிபாட்டு நினைவு என்னைப் பயமுறுத்தவில்லை. அந்த மலர்களின் வாசனையையும் அந்த கல் பொம்மையின் உருவத்தையும் நான் மறந்து விட்டேன், உண்மையான அமிலாமியா என்னுடைய நினைவுக்குத் திரும்பி விட்டாள், நான் திருப்தி அடையாவிட்டாலும். மீண்டும் மனநிலை சரியானதாக உணர்ந்தேன்; அந்தப் பூங்கா, அந்த வாழும் குழந்தை, என் இளவட்ட படிப்பின் நேரங்கள், ஒரு நோய் வாய்ப்பட்ட சடங்கா சாரத்தின் பேய்களின் மேல் வெற்றி கொண்டு விட்டது. வாழ்வின் பிம்பம் அதிகச் சக்தி வாய்ந்தது. சாவின் கேலிச் சித்திரத்தை வெற்றி கொண்டவளான என்னுடைய உண்மையான அமிலாமியாவுடன் நான் எப்போதும் வாழ்வேன். 

கல்குதிரை / 212 

ஒரு நாள் நான் அந்த போலியான மதிப்பீட்டு விவரங்களை எழுதி வைத்த வரைபடத்துடன் கூடிய நோட்டுப் புத்தகத்தை மீண்டும் பார்ப்பதற்கு துணிவு கொண்டேன். அதன் பக்கங்களிலிருந்து, மீண்டும் ஒருமுறை, பயங்கரமான குழந்தைத் தனமான மோசமான கையெழுத்துடன், பூங்காவிலிருந்து அவளுடைய வீட்டிற்குச் செல்வதற்குரிய வரை படத்துடன் கூடிய அமிலாமியாவின் கார்டு கீழே விழுந்தது. நான் புன்னகைத்து அதை எடுத்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பரிசை அந்த எளிய முதியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைத்துக் கொண்டு, நான் அதன் ஓரங்களில் ஒன்றைக் கடித்தேன். 

விசில் அடித்துக் கொண்டே நான் என் சட்டையை அணிந்து டையை முடிச்சுப் போட்டேன். ஏன் அவர்களைப் போய்ப் பார்த்து அந்தக் குழந்தையின் கையெழுத்தோடு கூடிய இந்தத் தாளை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது? 

நான் அந்த ஒற்றை மாடி வீட்டை நெருங்கியபோது ஓடினேன். மழை பெரிய தனித்தனியான துளிகளாக விழ ஆரம்பித்தது. புழுதியில் அதன் வேர் களைக் கொண்டு வாழும் எல்லாவற்றின் வளத்தையும் செழிக்கச் செய்வதாகத் தோன்றிய ஒரு ஈரக் கிருபையின் மணத்தை பூமியிலிருந்து திடீரென்று மாயமாக அந்த மழைத்துளிகள் கொண்டு வந்தன. 

நான் மணியை ஒலித்தேன் . மழை அதிகரித்தது, நான் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தேன். ஒரு கூறிய குரல் கத்தியது, ''நான் போகிறேன்.'' நித்திய ஜெபமாலையுடன் கூடிய அந்த அம்மாளின் உருவம் எனக்காக கதவைத்திறப்பதற்காக நான். காத்திருந்தேன். நான் என்னுடைய உள் சட்டைக் காலரை மேலே தூக்கிவிட்டுக்கொண்டேன். என்னுடைய ஆடைகள், என்னுடைய உடல், கூட, மழையில் வேறுவித மணம் வீசியது, கதவு திறந்தது. 

. ''உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன அதிசயமாக நீங்கள் வந்திருக் கிறீர்கள்?'' 

அங்கஹீனமான பெண் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஒரு கையை கதவுக்கைப்பிடியில் வைத்துக் கொண்டு, என்னை நோக்கி விளக்கிச் சொல்ல முடியாத கைத்த புன்னகை புரிந்தாள். அவள் மார்பில் உள்ள துருத்தல் அவளுடைய ஆடையை அவளுடைய உடலின் மேல் ஒரு திரையாக மாற்றியிருந்தது. ஒரு துண்டு வெள்ளைத் துணி அவளுடைய நீலக்கட்டம் போட்ட மேல் கவுனுக்கு ஒரு சரசத்தன்மையைக் கொடுத்திருந்தது. அந்தச் சிறிய பெண் அவளுடைய மேல் கவுன் பையிலிருந்து ஒரு சிகிரெட் 

213 | கல்குதிரை 

பெட்டியை எடுத்து வேகமாக ஒரு சிகிரெட்டைப் பற்ற வைத்தாள், ஆரஞ்சு வண்ணம் பூசிய உதடுகளால் அதைக் கறைப் படுத்திக்கொண்டு. புகை அந்த சாம்பல் கண்களைக் குறுக்கியது. அவளுடைய தாமிர, கோதுமை நிற, நிரந்தரமாக அலைபாயும் கூந்தலை அவள் சரி செய்து கொண்டாள். அவள் எப்போதும் என்னை, தனிமையான. கேள்வி கேட்கும், நம்பிக்கையான - ஆனால் அதேநேரத்தில் பயந்த - உணர்வோடு பார்த்தாள். 

"இல்லை கார்லோஸ், போய் விடுங்கள். திரும்பிவராதீர்கள்.'' 

வீட்டிலிருந்து அதே கணத்தில் அந்த முதியவரின் மூச்சுத்திணறும் மூச்சு விடுதல், நெருங்கி, நெருங்கி வந்து கொண்டிருப்பதை நான் கேட்டேன். 

''நீ எங்கேயிருக்கிறாய்? நீ கதவைத்திறக்க வேண்டியதில்லை என உனக்குத் தெரியாதா? உள்ளே போ! குட்டிச் சாத்தானே! உன்னை மீண்டும் அடிக்க வேண்டுமா?'' 

மழைத்தண்ணீர் என்னுடைய நெற்றியில் வழிந்து, என்னுடைய கன்னங்களின் மேல் வழிந்து, என்னுடைய வாய்க்குள் வழிந்தது. அந்தச் சிறிய பயந்த கைகள் காமிக் புத்தகத்தை நனைந்த கற்களில் நழுவவிட்டன.

https://www.encyclopedia.com/arts/encyclopedias-almanacs-transcripts-and-maps/doll-queen-la-muneca-reina-carlos-fuentes-1964

The Doll Queen (La Muñeca Reina) by Carlos Fuentes, 1964

Updated Dec 19 2019About encyclopedia.com contentPrint ArticleShare Article
Views 3,293,934Updated Dec 19 2019

THE DOLL QUEEN (La muñeca reina)
by Carlos Fuentes, 1964

"The Doll Queen" originally appeared as "La muñeca reina" in Cantar de ciegos in 1964. It is one of several tales by Carlos Fuentes that involve variations on the theme of the triple lunar goddess (maiden, matron, and witch or hag), deity of birth, love, and death, visible as the new, full, and old or waning moon. Worshiped under many names, the goddess is associated with numerous sacred animals, emblems, and other attributes, as well as with madness, obsession, fertility, spiritual love, and lust, death-in-life and life-in-death. Fuentes, well-acquainted with myths from many cultures, is interested also in the occult and in exotic religions, likewise relevant to understanding "The Doll Queen."
Narrated by a male protagonist, the tale recounts his impulsive search for a long-lost friend, Amilamia, who 15 years before used to play near the place where he studied in a garden or park. Memories of Amilamia reconstruct her as an idealized version of the child or maiden, associated with symbols of the White Goddess: she appears in a "lake of clover," water and three-leaved plants being emblems of the moon goddess. She wears a white skirt (visible sign of virginity) and invariably carries a pocketful of "white blossoms" (associated with the casting of spells). Amilamia is remembered in the wind, "her mouth open and eyes half closed against the streaming air" (the White Goddess traditionally controls the winds). The second stage of the Goddess, nymph or goddess of love, is suggested as a dream of the narrator, "the women in my books, the quintessential female … who assumed the disguise of Queen … the imagined beings of mythology," and as a potential of Amilamia/Aphrodite, insinuated when their last romp acquired unexpected erotic undertones.
Amilamia is not a normal or usual name but one invented by Fuentes, probably referring to the lamia, another legendary being, commonly represented in classical mythology with the head and breast of a woman and the body of a serpent. Lamias were female demons, reputedly vampires, believed to lure youths to where they could suck their blood. In Mexican mythology they are associated with the loss or death of children, specifically with women whose children have died. Amilamia's death proves to be figurative, but such connotations allow Fuentes to suggest the monstrous and to hint at danger while keeping the details of his narrative within the bounds of reality.
After Amilamia disappears from the garden—a microcosm of earth—and the hero goes to seek her, there are analogies with Demeter's search for Persephone (and Amilamia is Kore or Persephone) and with Orpheus seeking Euridice. The hero must figuratively enter the underworld, "descend the hill … cut through that narrow grove," and cross a busy avenue, a figurative Styx, to reach a "gray suburb," "dead-end streets," a tomblike house whose Greek adornments subtly indicate the presence of myth beneath the narrative surface. "Harsh, irregular breathing" heard through the door betrays a sort of Cerberus (watchdog of Hades) whose function is to prevent intercourse between the two worlds, and, indeed, the initial attempt at entry fails. Later description of this guardian terms him an "asthmatic old bear" who wears a "turtle's mask," a composite mythological beast like the lamia and the three-headed hound of Hades with snakes protruding from its neck and shoulders.
Returning under the pretext of conducting an assessment, the narrator discovers a woman of 50, "dressed in black … with no makeup and her salt-and-pepper hair pulled into a knot," with eyes "so indifferent they seem almost cruel." The witchlike appearance and chaplet she carries—a figurative key—identify the woman with Hecate, the Terrible Mother, associated with cruelty and the lower world (death). A clue indicating Amilamia's presence in the tomblike abode is the symbolic fruit "where little teeth have left their mark in the velvety skin and ocher flesh," clearly evoking Persephone and the pomegranate.
When forced to confess the true motive for his visit, the narrator is conducted to the funereal chamber holding the dolls and forgotten toys of Amilamia, with its sickly floral scent and small coffin displaying the "doll queen who presides over the pomp of this royal chamber of death." The doll cadaver maintained in the bedroom is death-in-life, one aspect of the White Goddess. The spectacle convinces the nauseated narrator that Amilamia had died long years before, and he leaves the underworld overcome with sympathy for the bereaved parents. Only chance determines that the story does not end with the supposed revelation of death.
Accidentally discovering the child's card months afterward, he returns in the belief that it may assuage the parent's grief. As he approaches the door, several motifs evoke the goddess of fertility or vegetation (another aspect of the lunar goddess): "Rain is beginning to fall … bringing out of the earth … the odor of dewy benediction that stirs the humus and quickens all that lives." The dwarfish, deformed body of the "misshapen girl" found in the wheelchair with a "hump on her chest" incarnates a degraded variant of the myth; the comic book suggests that she may also be mentally retarded. The guardian's reaction is that of Cerberus preventing contact with the outsider: "Get back! Devil's spawn! Do I have to beat you again?" Persephone imprisoned, Amilamia appears here as the goddess of death-in-life, unable to leave the tomb or to participate in the world beyond.
As a self-conscious writer, an admirable critic, and a literary theoretician well aware of the mythological sources of his inspiration, Fuentes (who is well read and fluent in English) may have been familiar with The White Goddess or The Golden Bough, or he may have used original myths. The usefulness of mythic analysis of Fuentes's works using Aztec deities as the archetypes has been repeatedly demonstrated; classical mythology is a comparably significant instrument.
—Janet Pérez

Thursday, December 19, 2019

வைக்கம் முஹம்மது பஷீர் நினைவிதழ் - கலாகௌமுதி, July 1994 மலையாள இதழிலிருந்து ....




















ബാല്യകാലസഖി
Hmm ... that's ...
They looked strange. So much so, Basheer's successful work on childhood
No chapter for anyone with time for fertilizer
Couldn't tell.
The sun of Kammana vanished. വ്യത്യാസങ്ങളെ
Spread shake with elimination. Come on!
And they knew nothing. Upon learning that Majeed had come to the village, she rushed to the river, embracing the sinful embrace. - Majid doesn't want to see you drowning in white dust
Chandan does not come from the summit of the hill. It was getting worse. Majeed - looking. Couldn't move. The total paralysis was broken and the rural silence was gone.
Wherever Paganam rose. - 'Where?' Suhra's favorite song in the garden is 'In the garden!' Majid heard the reply and sang with a happy smile. The heart-throbbing '' lily continued. Majeed lay down in that old chair while he was still living.
Pankalala, a drowning plantation in anvil in a golden cup. Beetles rushed to the flowers
I could not see enough. The leaves of the aroma continued to swell and the leaves began to move. Come on Majeed
As usual, I am lying in a gray chair,
At the lotus pole, Suhra's foot came close. - Staying oo.! ... '-' Oh, new look. '
So once again, the voice of the unknown - Suhara's sad voice was rolling in "... Majeed's heart ached. Finally Majeed thought:" Not just pain;
The heart was pounding from the heart of the past as if it were broken.
Then she called out: - As it was going to burst
'ഓ!' Suhra slowly asked, Majeed: - 'Do you know me?'
"What was it like?" The silent universe
She said, "No!" ഓർമ്മകൾ ..
'There was nothing. Majeed's eyes were full.
'Then why are you so tired?' She asked again:
Suhra did not say that. Prolonged | , 'It will be with me:'
Maya groaned and said: Majeed looked back slowly. I knew Minyanna ... was a hoax.
- Information. ' Suhra has completely changed! ... The cheeks are clasped with the fingers of their fingers 'ears, saying,' I will never come back.
'Everyone thought so. ഞാൻ ... '

________________

'പറയൂ!' "Suhra burst into laughter. Then she slowly told her husband:
- 'Leia is rude. He didn't care. Then I am a burden and have another wife and two children. How long can it be? Am I not a woman? '
I came home and insisted '? I '
"Then finally the house and house are pledges."
And FIG. Do I have no sisters? - In writing, he made gold and other things
What can i do I refused - - the wedding is over. '
When I say it, it will strike me. 'Then it's exhausting?'
Once worked on my navel. I'm not suhra.
He sank and fell. My say 'Suhra, is this exhausting?'
Tell me, dear. ' 'വിചാരംകൊണ്ട്
She broke her mouth. What the heck? '
A black hole in the tile. '? - o -'
'Surah'
'ഓ!' 'Suhra' o '
'എന്നിട്ട്?'
'_ _ _ *'
'I'm sure I'll be back | മെന്ന്. '
'And then?' 'They were all fixed. Nobody argued my consent. Umma was on fire. I was born three and four years after tying my oldest. No one gives me gold and dowry ... '. 'There is no one who is willing to marry Suhra without paying gold and dowry.' Sure, doesn't it? ' .
'It's not that I don't have faith. I hadn't forgotten for a moment. I cry every night and every day. I pray that no harm will be done to anyone, not even a cure ത്ഥിക്കും. ' .
'I have forgotten Suhra | Suhra thought so, didn't he? '
'I didn't think so. Why not? - 'Not just sent. Often written and not sent. ' . .
'I expect to write every day. Come today. I said, 'I will come tomorrow.' Did I ever say that?
I haven't eaten glue since I went there. Never felt remorse for a moment. I am not a wife, but a maid. I have to beat the throat and make money. The less you hit me, the better. I will not give anything. When I am out '' - 0 - '' Four days in a row. ''
'-
-
'I had to go to bed hungry.' Suhra began to say so. She has so much to say. There are so many secrets in her heart. He often seemed to die. There was only one hope. - 'Come and see one die.'
'Thought so of death | Don't worry. You still have a long life. I believe there is a bright future. ” She sits in front of the chair
He was sitting on his feet. So for a long time, both of them said nothing and looked at the world that was still standing. . 'I'll come in time.' Suhra walked away.
The woman sitting like a parrot. El - Finally Majeed said: Majeed said:
Rabbin Bandya '' Suhra go and eat and understand. 'ആ.
'Who made her that way?' Sleep soundly; നാളെക്കാണാം. ' 'Coconut trees submerged in the light of day
Majeed was angry and sad. 'I don't want to.' Suh watched her go through the hole
'Mona, come and eat something. You wake up
So don't worry Majeed again in the gray chair, Elam says, "Does that make you tired?" Majid and A are sitting. Didn't know the time was gone.
Will make the plain straight. ' ണീറ്റു.
- Um with kerosene lamp in hand. Majid did not sleep that night. Friend Zahra said:
വന്നു. He saw Majeed lying in bed - he did not sleep that night. Paralysis is the mind's trouble. ' A fond mother complained: '
The stream is among them. Don't worry Rana. Go and get well
'What are you doing, Mona? - The walls are between them ... But. Do you? '
They did not sleep. About the future - 'Are you going somewhere tomorrow?' 'Oh, nothing.'
ചിന്തയായിരുന്നു. - 'No.' 'Monte, did you see that friend that long? മാവി ...?
n Kalakaumudi, July 24, 1994
Kalakaumudi 1994, July 24 

Monday, December 16, 2019

ரிஷிமூலம், ஜே. கே., மௌனி, ஜாய்ஸின் 'யுலிஸிஸ்', டால்ஸ்டாய், ராபர்ட் ம்யுஸில்,சுந்தர ராமசாமி - பிரேமிள் ::::: பேட்டி கா. சு:

பிரேமிள்
பேட்டி கண்டவர் : காலப்ரதீப் சுப்ரமணியன் (மீறல் பிரமிள் சிறப்பிதழ்)
காலப்ரதீப் சுப்ரமணியன்: சம்பிரதாயமான ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கலாமா? உங்கள் எழுத்தியக்கத்தின் ‘ரிஷிமூலங்கள்' எவை? 

பிரேமிள்: நதி மூலம் ரிஷிமூலம் கேட்கக்கூடாது என்பார்கள். ஏனென்றால் அவை ரொம்பவும் எளிமையாக இருந்து விடலாம் பிரம்மாண்டமான கங்கையின் நதிமூலமான கங்கோத்ரியில் ஒரு சொட்டு நீர் தான் அவ்வப்போது ஜனிக்கிறது. இதை ஞாபகத்தில் வைத்து என் பதிலைப் பார்க்க வேண்டும்... என் தாயாரின் மூதாதைகளிடையே ஆசுகவிகள் இருந்திருக்கின்றனர். தாயார் கூட, எழுதப் படிக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் நுட்பமான ரசனையும் கவியுணர்வும் கொண்டவர். அவர் பேசும்போதும் சரி சண்டையிடும் போதும் சரி, சில வேளைகளில் அவர் சொல்கிறவை அசாதாரணமாக இருக்கும். இயற்கை, செடிகள், பிராணிகள் மீது அவருக்கிருந்த வாஞ்சைகூட ஒரு கவியுள்ளத்தினைத்தான் காட்டுகிறது. கடுமையான வறுமை, என் ஐந்து வயதிலிருந்து அவ்வப்போது தகப்பனாரால் கைவிடப்பட்ட நிலை, அயலகத்துப் பூசகர்களின் நிலப்பறிப்புகள், நாளாந்த வன்முறைகளுக்கு இலக்காக்கும் சூழல் -- இவை யாவற்றினூடேயும் என் தாயாரின் இந்த ஆழ்ந்த குணாதிசயங்கள் என்னைச் சூழ்ந்து நீடித் திருக்கின்றன. தகப்பனார் கோணத்திலிருந்து இத்தகைய ஆழங்கள் எதுவும் கிடைத்ததில்லை. அவரால் மிகவும் வருத்தப்பட்ட என் தாயின் நிராதரவு தான் என் உணர் வுலகத்தினை நெய்திருக்கிறது என்றும், நிராதரவாக நிற்கும் சீரிய - மதிப்பீடுகளைப் பாதுகாக்க முனையும் என் எழுத் தியக்கத்துக்கு இது ஒரு மனோதத்துவ ரிஷிமூலம் ஆகலாம் என்றும் தோன்றுகிறது.

கா. சு: மிகவும் ஆழமும் கருத்துச்செறிவும் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் கவிதை எழுதும்படி தூண்டிய ஆரம்ப உந்துதல்கள் எவை?

பிரேமிள்: உயர் நிலைப்பள்ளியில் எனக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும்போது, தமிழாசிரியர் பெ. பொ. சிவசேகரம், எங்கள் கிளாஸிற்கு விசித்திரமான 'ஹோம் ஒர்க்' ஒன்று கொடுத்தார். அப்போது பிரபலமாக இருந்த குழந்தைக்கவிஞர் 'அழ. வள்ளியப்பா' எழுதிய 'பூந்தோட்டம்' என்ற கவிதையைப் படித்து ரசித்துக் காட்டினார். (பெ.பொ. சிவசேகரம் 'திருக்கோணமலைக்கவிராயர்' என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். மரபு மாடலில்தான்.] ‘பூந்தோட்டம்' குழந்தைகளுக்கான மரபு மாடல் - இதே போல் எங்கள் ராமகிருஷ்ண மிஷன் ஸ்கூலுக்கு எதிரில் இருந்த பெரிய மைதானத்தைப் பற்றி ஒவ்வொருவரும் கவிதைகள் எழுதிவரவேண்டும் என்பது 'ஹோம் ஒர்க்'. இதை நான் எளிதாக நிறைவேற்றியதுடன் ஒரு வரியும் எழுதவராமல் தவித்த வேறு சில நண்பர்களுக்கும் தனியாக எழுதித் தந்து தங்கள் கவிதை களாக ஆசிரியரிடம் தரும்படி கொடுத்திருக்கிறேன். (இவர்களுள் இப்போது சி. சிவசேகரம் என்ற பெயரில் நீங்கள் காணக்கூடிய அன்பர் அடங்கவில்லை. - அதே கிளாஸில் அவர் இருந்தார் எனினும்.] ‘விளையாட்டு மைதானம்' என்ற இந்த கவிதைதான் முதன் முதலில் நான் எழுதியது. அதுவரை இயற்கையாகவே ஓவியத்திறன் கொண்டவன் நான் என்பதுதான் கணிப்பு. இந்தக் கவிதையுடன் என் புதிய திறன் ஒன்றை நானே கண்டுபிடித் திருக்கிறேன். கவிதையின் எதுகை மோனைச் சொற்களை முதலே தீர்மானித்துவிட்டு இட்டு நிரப்பும் நண்பர் ஒருவரும் கிளாஸில் இருந்தார். அவருக்கு நான் எழுதும் இயல்பான முறை வராததால் என்னை ஒரு விசித்திரப்பிறவியாக எடுத்துக் கொள்வார். ஹோம் ஒர்க்கை படித்த பெ. பொ. சிவசேகரம் தமது கிளாஸில் குட்டி பூதங்கள் நிரம்பியிருப்பதாக கிளாஸியிலேயே சொன்ன போது என்னிடம் கவிதை வாங்கி ஹோம் ஒர்க் பண்ணினவர்கள் என்ன நினைத்தார்களோ. அவர்களுக்கு தலைவலி தீர்ந்தது - எனக்கு பிரசவ வேதனைகள் ஆரம்பித்தன - எனலாம், நாலைந்து வருஷங்களுக்குள் 'எழுத்து' வில், 1960-ல் என் கட்டுரை வந்தபோது என் சீனியர் மாணவர்கள் அதை நான் எழுதியிருக்க முடியாது என்று பெ.பொ. சிவசேகரத்திடம் கூறியதும், அவர் அதை மறுத்து, "எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கோ?" என்றதும் என் காதுக்கு வந்திருக்கின்றன. இந்த ஆரம்பம் எனது கவிதையின் வடிவம் சம்பந்தப்பட்ட மட்டுக்குத்தான். அனுபவத்தின் ஆழமும் வாழ்வைப் பற்றிய விசாரணைகளுமாக என் கவிதைகள் பொருள் ரீதியான மலர்ச்சி பெற மேலும் ஐந்து ஆண்டுகள் ஆயின. அதுவரை என் ஆரம்பகால எழுத்துக்களில் மரபின் பிரதிபலிப்புகள் தான் அதிகம். இருந்தும் அதில் கூட ஒருவித புதுமைத்தொனி இருந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் காலகட்டத்துக் கவிதைகளை நான் பாதுகாக்கவில்லை. கா.சு: உங்களுடைய படைப்பு மனோநிலை பற்றி கூறமுடியுமா? படைக்கும் போது உங்கள் மன நிலை என்ன? பிரேமிள்: படைக்கும் போது ஒரு ஒழுங்கமைப்பை நிறைவேற்றும் நோக்கம்தான் என்னால் உணரக்கூடிய என் மனோநிலை. கூடவே சிருஷ்டிகரமான, ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றும் நிலை. இது தான் படைப்பியக்கத்தின் முக்கியமான களம். ஆனால் இப்படி கருத்துக்கள் பளீரெனப் பிறக்கும் போது என் மனோநிலை என் அவதானத்துக்கு உட்படுவதில்லை. மீண்டும், இவ்விதம் தோன்றுகிற கருத்துக்களை ஒரு ஒருமைப் பாட்டுக்குள் ஒழுங்கமைக்கும் இயக்கமாக மனம் செயல்படும். இதெல்லாம் திருப்திகரமாக நிறைவேறிவிட்டால், முடிவாக ஒருவிதமான சுதந்திர உணர்வு பிறக்கிறது.

கா.சு: எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது பற்றி உங்கள் பார்வை என்ன?

பிரேமிள்: உண்மையை அடைவதற்கு ஒரே வழி மௌனம் தான். எல்லா மார்க்கங்களும் அகந்தையின் பரிபூர்ணமான அடக்கத்தை - ஒடுக்கத்தைத்தான் இந்த மௌனத்துக்கு முக்கியமான ஆதாரமாக்குகின்றன. மௌனத்தை இந்திய தியான முறைகள் வெளிப்படையாக வலியுறுத்தலாம். கிறித்துவ தியானமுறை மௌனம் பற்றி ஒன்றும் குறிப்பிடாதிருக்கலாம். ஆனால் அகந்தையின் ஒடுக்கம் பற்றி எல்லா மார்க்கங்களும் ஒருமித்த பார்வையை வெளிப்படுத்துகின்றன. சரி, எழுதுவது இந்த அகந்தையின் ஒடுக்கத்தைச் சாதித்து விடுமா? ஒண்ணரைக் கவிதையை எழுதி அதை அச்சில் வரப் பார்த்துவிட்ட கவிஞர்களுக்கு அகந்தை எகிறிக் குதிப்பதுதான் தெரிகிறது. பெரிய கவிஞர்களையோ எழுத்தாளர்களையோ எடுத்துக் கொண்டால், அவர்களிடமும் பலரிடத்தில் அகந்தை நாசூக்காகக் கொலு வீற்றிருக்கக் காணலாம். எனவே கவிதை மூலம், எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது எனக்கு அபத்தமான கூற்றாகவே தோன்றுகிறது. ஆனால் எழுதும் போது, நேர்மையும், மன ஓர்மையும் உள்ள ஒருவன் தனது எழுத்தின் மூலம் வெளிப்படுகிறவற்றை - அதாவது தன்னை - அவதானிக்க ஒரு சாத்தியம் உண்டு. மனதின் களேபரமான ஓட்டத்தைச் சீராக்கும் வேலைக்குக் கூட எழுதுதல் ஒரு சாதனமாகும். (ஒவ்வொருவரும் காலையில் சில பக்கங்கள் எதையாவது எழுதி வருவது அன்றாட மனோவாழ்வைத் தெளிவுபடுத்த உதவும்.) இருந்தும் உண்மைத் தேட்டத்தைப் பொறுத்தவரை இது எல்லாம் வெறும் அ, ஆ, தான்; மிக மேலோட்டமான பயிற்சிதான்.

கா.சு: படிப்பதன் மூலம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியுமா? உண்மையை அறிய படிப்பதும் பிறர் உரையைக் கேட்பதும் உதவுமா?

பிரேமிள்: கிருஷ்ண மூர்த்தியிடம் “உங்கள் உடல் மறைந்தபிறகு உங்கள் பிரக்ஞை என்னவாகும்” என்று கேட்ட போது, 'அது அப்படியே போய்விடும். ஆனால் நீங்கள் நான் சொன்ன வற்றுடன் தொடர்பு கொண்டிருந்தால், ஒரு வேளை நீங்கள் அந்தப் பிரக்ஞையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்," என்று சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகப் பிரச்னைக்குரிய நுட்பமான விஷயம்; வெறுமனே இன்டலக்சுவல் லெவலில் மட்டும் தீர்மானித்து முடிவு கட்ட முடியாதது. Teachings என்று அவர் சொன்னபோது, தாம் சொன்ன வார்த்தைகளையும் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களையும் மட்டும் சொன்னதாக நான் கருதவில்லை . Teaching என்றது, ஒரு Level of understanding என்று நினைக்கிறேன். நீங்கள் இந்தப் புரிதலுக்கு வரும்போது, அந்தப் பிரம்மாண்டமான பிரக்ஞையுடன் தொடர்பு கொள்ளலாம் என்றே சொல்கிறார். அந்தப் பிரக்ஞை , ஜே. கே. என்ற மனிதரினுள் இருந்த பர்ஸனலான பிரக்ஞையா என்பது அடுத்த கேள்வி. நிச்சயமாக, அப்படியென்றால் அதற்கு அர்த்தமே கிடையாது. எனவே, அது எல்லோருக்குள்ளும் இருக்கிற ஒரு அகண்டமான பிரக்ஞையாக இருக்கவேண்டும். அப்படியானால், ஜே.கே.யின் Teachings மூலம் மட்டும்தான் அதனுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது அடுத்த கேள்வியாகிறது. அதன் மூலம் மட்டுமே முடியும் என்பது அர்த்தமற்ற ஒன்றாகும். ஆகவே Teaching என்பதை விட understanding என்பதைத்தான் அவர் அர்த்த ப்படுத்தியிருக்க வேண்டும். புரிதல் என்பது நமக்குள் ஏற்படவேண்டிய ஒரு பிரக்ஞைநிலை. இது கூட இருக்கிற இன்னும் ஆழ்ந்த ஒரு பிரக்ஞைநிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும். இம்மாதிரி விசாரணைகளில் ஈடுபட்டால் தான், இந்த மாதிரிப் பிரச்னைகள் துலக்கம் பெறும். உங்கள் கேள்விக்கு இது சரியான பதிலா தெரியவில்லை. உங்கள் வார்த்தைகளை எடுத்துப் பதில் சொல்வதென்றால் 'படிப்பு' என்பது புத்தகப் படிப்பு மட்டுமா என்பதை ஆராய வேண்டும். அநுபவமும் படிப்புதான். வாழ்க்கை என்பது எதிர்பாராத தன்மைகளைக் கொண்டது. எனவே எதிர்பார்ப்புகள் அற்ற உள்ளமே வாழ்வுடன் தொடர்பு கொள்ள லாயக்கானது எனலாமா? கா.சு: பூசகர்களின் நிலப்பறிப்பு உங்கள் ஆரம்பகால விமர்சனங்களைத் தீர்மானிக்கவில்லை. பிராமணர்களாக தங்களைக் கணிப்பவர்களைப்பற்றி அப்போது 'எழுத்து' (1959-1971) வில் நிறைய பாராட்டுதலாக விமர்சித்திருக்கிறீர்கள். இதன் பின்னணியை விரிவாகச் சொல்லுங்கள். பிரேமிள்: என் தாயாருக்கு இரண்டு தங்கைகள். பெற்றோரை இழந்த மூன்று பெண்களும் மூன்று திசைகளில் சுவீகரிக்கப் பட்டார்கள். முதல் தங்கை கொழும்புவில் ஒரு பெரிய பணக்கார . உறவினரால், அங்கே தாம் வேலைக்காரி போல் நடத்தப்பட்டதைச் சகிக்க முடியாமல் வளர்ந்த இவர், பெரியவரானதும் அங்கே பியூனாக இருந்த சார்ளிஸ் உடவத்த என்ற சிங்களவரை காதல் திருமணம் புரிந்து, வீட்டை விட்டு ரகசியமாக வெளியேறி, ஒரு 'சிங்களத்தி'யாகவே மாறினார். சார்ளிஸ் உடவத்த என்ற பெயரை, என் 'லங்காபுரி ராஜா'வில் நான் உபயோகித்திருக்கிறேன். ஆனால் உண்மையான உடவத்தைக்கும் என் கதையில் வரும் உடவத்தைக்கும் இடையில் பாத்திர வேறுபாடு உண்டு. ஞானாம்பிகையாகப் பிறந்து ஞானவதியாக மாறிய என் சின்னம்மா, அவரது ஐந்து குழந்தைகள், தகப்பனார் உடவத்த யாவரிடமும் 'தமிழன் கெட்டவன்' என்ற சிங்கள இனவாதப் பார்வை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். நான் 'எழுத்து'வில் எழுதுமளவு முதிர்ந்த பருவத்தில் இவர்களைத்தேடிக் கண்டுபிடித்துப் பழகியபோது, என்னை விதிவிலக்கான 'நல்ல' தமிழன் என்றும் ஆகவே சிங்களவனாகுவதற்குத் தகுதியானவன் என்றும் அவர்கள் முடிவுகட்டியது கூட உண்டு. இதை நான் உணர்ந்த பிறகு தொடர்பு விட்டுப்போய்விட்டது. ஏனெனில், உணர்வின் அடிப்படையில் நான் வெறும் மனிதன் மட்டுமே. இதற்கு முன்பே, அதாவது 'எழுத்து'வில் எழுதுமுன்பே 1957 வாக்கில் நான் தேடிக் கண்டு பிடித்தது ஆச்சிமுத்து என்ற என் தாயாரின் கடைசித் தங்கையின் குடும்பத்தை, (என் தாயாரின் பெயர் அன்னலட்சுமி, மூவருள் முதலாமவர்.) என் தாயார் தமது 29வது வயதில் ஒரே மகனான என்னைப் பெற்றார் என்றால், இந்த கடைசித்தங்கை தமது 15 அல்லது 16 வயதில் ஒரே மகனான என் ஒன்றுவிட்ட அண்ணன் தம்பிராஜாவைப் பெற்று விதவையாகி மகனுடன் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். தம்பிராஜா தமிழை முறையாகக் கற்ற சைவசித்தாந்தப் புலவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளர்களுள் ஒருவருமாக இருக்கும்போது இந்தத் தொடர்பு ஏற்பட்டது. இதற்கும் மேல் இவர், மறைமலை அடிகளின் பக்தரும் தனித்தமிழ்வாதியும் தீவிர பிராமண எதிர்ப்பாளரும் கூட. ஏற்கெனவே எனக்கிருந்த பழந்தமிழறிவுக்கு இவருடைய தொடர்பு ஊட்டம் தந்தாலும் இவருடைய பிராமண எதிர்ப்பை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. பின்னாடி நான் 'எழுத்து'வில் எழுதிய கட்டுரைகளில் அவர் தமது வகுப்பாகக் கருதிய தமிழ்ப் பண்டிதர்களின் பார்வைகளை நிராகரித்த என் பார்வை அவருக்கு என் மீது விரோத பாவத்தை ஏற்படுத்திவிட்டது. பின்பு, நான் சிதம்பரத்தில் மௌனியுடன் பழகுவதைக்கண்டு, "நீ ரொம்பவும்தான் பிராமணர்களுடன் பழகுகிறாய், மிகவும் ஜாக்ரதையாக அவர்களுடன் பழகு. மற்றவர்களைத் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்திவிட்டு, பிறகு குப்பைக்கூடையில் போடுவதுதான் அவர்களுடைய முறை. நீ சின்னவன். போகப் போகத் தெரிந்து கொள்வாய் " என்று நீண்ட உபதேசம் செய்தார். எனக்கு இது வேப்பங்காயாகத்தான் கசந்தது. இயற்கையாகவே என் மனம் மனிதப் பிரிவினையின் எல்லைகளை மீறி இருந்தமைதான் இதன் காரணம். எங்கள் குடும்பத்தை ஓரளவுக்கு பொருளாதார ரீதியில் பூசகர்கள் நிர்மூலமாக்கியும்கூட அவர்களைத் தனிமனிதர்களாகத்தான் நான் கணித்திருக்கிறேன். என்பார்வை எப்போதுமே, ஒரு தனி மனிதனை அவனது வகுப்புடன் ஈடுபடுத்தாமல், அவனது பேச்சுக்கும் செயலுக்கும் அவனையே பொறுப்பாகக் கொள்ளும் பார்வை ஆகும். அவன் திறனாளி என்றிருந்தாலும் இது பொருந்தும், எனவே 'எழுத்து'வில் நான் எந்த 'பிராமண' வகுப்பினரையும் பாராட்டி விமர்சிக்கவில்லை மேலே குறிப்பிட்ட என் மனப்பின்னணியில் இந்த வேலைக்கு இடமில்லை. தனித்தனி எழுத்தாளர்களைத்தான் விமர்சித்தேன், இது பற்றி அப்போதும் சரி இப்போதும் சரி, ஒரே பார்வைதான். 

கா.சு: இருந்தும் 1970க்களில் ஆரம்பித்து உங்கள் எழுத்தினால், தங்களைப் பிராமண வகுப்பினர் என்று கருதும் எழுத்தாளர்கள், பாதகமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லவா? இதன் அடிப்படையில் உங்களை அவர்கள் பிராமண எதிர்ப்பாளர் என்கிறார்களே? 

பிரேமிள்: தங்களை மனித வர்க்கத்திலிருந்து பிரித்து உயரவைத்துக்கொள்வதற்காக ஒரு வகுப்பில், ஒரு கட்சியில், ஒரு வர்க்கத்தில் தங்களைத் தாங்களே பிரக்ஞாபூர்வமாக ஈடுபடுத்திக்கொள்கிறவர்கள், தங்கள் மனித தனித்துவத்தைக் குழுமனோபாவத்துக்காக பலியிட்டு விட்டவர்கள். இதனை விபர பூர்வமாகவும் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்துக் களில் அடையாளம் காட்டியும், எழுத்துக்கு அப்பால் அவர்கள் கொண்டிருந்த மனோபாவங்களை நோப் பழக்கத்தில் அறிந்ததை, முன்வைத்தும் எழுதியிருக்கிறேன். இதனை நான் செய்திருப்பது போல் தமிழில் வேறு எவரும் செய்ததில்லை. இவ்விதம் நான் எழுத முற்பட்டபோது, எழுத்துக் களத்தில் இயங்கிய ஒரு கௌரவத்தன்மையை வேண்டுமென்றே துறந்திருக்கிறேன். 

கா. சு: முந்திய கேள்வியையே வேறுவிதமாக மீண்டும் கேட்கிறேன். படைப்பையும் படைப்பாளியையும் வித்யாசப் படுத்துகிறீர்கள்; ஆனால் படைப்பாளியாகிய தனிமனிதனிடம் உள்ள குறைபாடுகளை - குறிப்பாக மௌனி போன்றவர்களிடம் உள்ள ஜாதீயக்குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறீர்கள். இதன் தேவை எனன? கொஞ்சம் விரிவாகவே விளக்குங்கள். 

பிரேமிள்: ஜாதீயம், மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியைப் பெற்றுள்ளவர்களிடம் செயல்படுகிறபோது, அது அவர்களது அத்திவாரத்தை குழுரீதியான tribal mentality ஆக்குகிறது என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். எனக்கு அவர்களை நேர்முகமாகத் தெரியும் என்பதுதான் இதற்கு ஆதாரமே தவிர, அவர்களது எழுத்தை விமர்சிப்பதற்காக நான் இதைச் சொல்ல வில்லை. அதாவது இதை வைத்து அவர்கள் எழுத்தைப் பார்க்கமுடியாது. மௌனி சம்பந்தமாக நான் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கியிருக்கிறேன். அது இன்றுவரை பலருடைய விஷயத்திலும் சரியாகவே செயல்பட்டிருக்கிறது. எனவே அந்தச் சித்தாந்தம் சரியென்றே எனக்குத்தோன்றுகிறது. அதாவது, இனக்குழுவாதப்பார்வை [tribal mentality] உள்ள ஒருவர், எவ்வளவு பெரிய திறனாளியாக இருந்தாலும், போகப்போக அந்தத் திறனை இந்த இனக்குழுப் பார்வை அரித்து ஓட்டை போட்டுவிடும். இனக்குழுப் பார்வையை வெளிப்படுத்துவதுதான் கலை என்கிற பேத்தல்கூட உண்டு. அந்த அளவுக்கு இவ்வினக்குழுப்பார்வை இங்கே கலைத்துறையில் செயல் படுகிறது. அப்படி அது செயல்படக்கூடாது, கலையே அதனால் பாழ்பட்டுவிடும்; அத்தகைய சூழ்நிலையில் கலைஞன் என்ற பகுதி வளர்ச்சி பெறாது; இந்த இனக்குழுப்பார்வை (இதை ஜாதீயப்பார்வை என்று கூடச் சொல்லலாம், ஆனால் இனக்குழுப்பார்வை என்று சொல்வதுதான் விஞ்ஞான பூர்வமான முறையாகும்] கலை சம்பந்தப்பட்ட யுனிவர்சலான பார்வையை மழுப்பிவிடும்; கலாரீதியான உணர்வு என்பது, எல்லாவிதமான மனத்தடைகளையும் சமூகரீதியான தடுப்புக்களையும் வேலிகளையும், தேசங்கள் மொழிகள் சம்பந்தமான எல்லைகளையும், நம்பிக்கைகளையும் தாண்டி, மனிதனை மனிதன் தொற்றக்கூடிய தன்மையுள்ள ஒரு வீர்யம்; இதை இனக்குழுப்பார்வை மழுங்கடிக்கிறது. இதுதான் என்னுடைய பார்வையின் அத்திவாரம். இந்தப் பார்வைக்கு, செயல்பாட்டு ரீதியான ஆதாரங்கள், என்னுடைய அனுபவத்தில் எவ்விதம் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்குத்தான் இத்தகையவர்களைப் பற்றி நான் எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவர்களைப்பற்றி நேரில் தெரிந்த விஷயங்களை முன் வைக்க வேண்டிவருகிறது. இது துரதிர்ஷ்டகரமான விஷயம். ஏனெனில், எனக்கு இன்றைக்கும் அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் பலவிதத்திலும் மிக இனிமையானவை. என்றாலும் இந்த விஷயத்தைச் செய்தே ஆக வேண்டிய கடமையின் அடிப்படையில் தான் செய்கிறேன். இதில் எவ்விதமான பர்ஸனல் நோக்கமும் கிடையாது. மேலும், கலை மற்றும் பிற எழுத்தாளர்கள் சம்பந்தமான அடிப்படைச் சித்தாந்தங்களில் அபிப்ராயங்களில் எனக்கும் மௌனிக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. ஒரு அடிப்படையை எடுத்துக்கொள்வோம். ஒரு கலைப்படைப்புக்கு objective ஆன ஒரு beautv இருக்கிறது. அந்த அழகை உணர்ந்து அனுபவிப்பது வாசகனுடைய கடமை என்பது மௌனியின் கொள்கை. இதுவேதான் என்னுடைய கொள்கையும். இதை என்னுடைய விமர்சனங்களில் கண்டு சிலாகித்தவர் மௌனி. என் விமர்சனங்களுக்கு அடியில் இப்படி ஒரு சித்தாந்தம் உள்ளதை உணர்ந்து இந்த அளவுக்கு என்னை வாசித்தவர்கள் என்று நான் வேறு யாரைச் சொல்வது? யேசுதாசனைச் சொல்லலாம். ஒரு கலைப்படைப்புக்கு தன்னளவில் அழகு ரீதியாகவோ முழுமை ரீதியாகவோ ஒரு தன்னிலை உண்டு . It exists by Itself. இந்த objectivity யை வாசகன் உணர வேண்டும், இது வாசகனிடமிருந்து கலைப் படைப்பு எதிர்பார்க்கிற கடமை. இதை வலியுறுத்துவதுதான் என்னுடைய விமர்சனம். இதை அறிந்துகொண்ட மௌனி, உண்மையில் செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் போன்றவர் களிடமிருந்து வேறுபட்ட நிலையில்தான் இதை அநுசரிக்கிறார். என்னுடைய பார்வையும் அவருடைய பார்வையும் ஒன்றாகிறது. இது ரொம்பப் பேருக்கு புரியாத, தெரியக்கூட வராத விஷயம். க.நா.சு., வெ.சா., நகுலன் போன்றோர் இந்த அளவுக்குப்போய் என் கட்டுரைகளைப் படித்திருக்கிறார்களா, விமர்சனத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்களா அல்லது ஒரு கலைப்படைப்பை அணுகியிருக்கிறார்களா என்பதே கேள்விக்குரியது. அவர்களுக்கு இது எட்டியதே கிடையாது. ஆக, மிக அடிப்படையான விஷயங்களில் மௌனிக்கும் எனக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. ஆனால் அவருடைய இனக்குழுப் பார்வையின் மூர்க்கம்தான் - அந்த ஒரே ஒரு விஷயம்தான் - அவருக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு. இந்த வேறுபாடு என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. ஏனெனில், அவரையே தொடர்ந்து ஒரு கலைஞனாக இயங்கவிடாமல் வெறும் இனக் குழுவாதியாகவே தேய வைத்தது அவருடைய அந்தப் பார்வை என்பது தான் என் குற்றச்சாட்டின் மிக முக்கியமான அங்கம். இதே விஷயம் தொடர்ந்து மற்ற socalled கலைஞர்களிடம் கூடச் செயல் பட்டிருக்கிறது. முத்துசாமி தொடர்ந்து ஒரு எழுத்தியலாளராக மலராததற்கு காரணம், அவரிடம் இதே இனக்குழுப் பார்வை ஏதோ ஒருவகையில் செயல்பட்டதுதான். இதை நான் அங்கங்கே மிகச் சுற்றி வளைத்துச் சொல்லியிருந்தாலும், அவர் கலைஞராக, எழுத்தியலாளராக வளரக்கூடிய சக்திகள் இருந்தும் அவை மலர்ச்சி பெறாமல் போனதற்கு, என்னால் வேறு காரணங்களைக் காணமுடியவில்லை. இதே விஷயத்தை சுந்தர ராமசாமிக்கும் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. அவர் வளர்ந்து வரக் கூடிய நிலையில் திடீரென்று 'ஜே. ஜே. சில குறிப்புக'ளை எழுதியதன் மூலம் தன்னை ஒரு இனக்குழுவாதியாகத் தான் மிகவும் தந்திரமான விதத்தில் வெளிப்படுத்திக்கொண்டார். அதை எவ்வளவு தந்திரமாக அவர் செய்தாலும் அது எனக்கு வெளிப்படையாகத் தென்பட்டது என்ற அளவில் அதை நான் பகிரங்கப்படுத்தியிருக்கிறேன். இதை அதுவரை வேறு யாருமே செய்யவில்லை என்பதையும் காணலாம். இதற்கு அப்புறம் அவர் எழுதிய எதிலும், அவர் எழுத்தின் இயற்கையான - குறிப்பிட்ட வகைப் பரிகாசத்தொனி, கவித்துவமான சித்து வேலைப்பாடு - இவை எதுவுமே இல்லை என்பதைக் காணலாம். காலச்சுவட்டில் அவர் எழுதியது, அவர் செய்த மொழி பெயர்ப்புகள், கவிதைகள், எதிலுமே இவை இல்லாமல் போய் அவை வெறும் வரண்ட படைப்புகளாகிவிட்டன. இதற்கு அந்த இனக்குழுப்பார்வை அவரைச் சாப்பிட்டுவிட்டமைதான் காரணம் என்பது என்னுடைய அபிப்ராயம். ஆகவே என்னுடைய பார்வை, கலையின் ஆழ்ந்த எல்லைகளை, தன்மைகளைப் பாதுகாப்பது தானே தவிர, இந்தக் குறிப்பிட்டவர்களைப் பற்றி பெர்சனலாகப் பேசுவதோ, அவர்களிடம் எனக்கு ஏதோ பகைமை இருக்கிறது என்பதோ அல்ல. என் விமர்சனத்தால் அம்பலப்பட்டுவிடாமலிருக்கவே இவர்கள் 'பகைமை' என்கிறார்கள், எனது எழுத்துக்களை நுட்பமாகப் படித்து அதனைப் பிறநாட்டு இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து - இதை உலகத்தளங்களிலும் செயல்படுத்தி - சமூக சரித்திரங்கள் அரசியல் சரித்திரங்கள் இவற்றோடு சேர்த்துப் பார்த்தால்தான் நான் செய்த வேலையின் நியாயம் புரியும். இது மிகவும் சீரியஸான ஒரு விஷயம். 

கா. சு: கவிதையில் உள்ள கவர்ச்சி எது

பிரேமிள்: நீங்கள் கேட்கிற கேள்விக்கு அடியில் வேறொரு விஷயம் ஒளிந்திருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. அதாவது, இன்றைக்குச் சிலர் என்னுடைய கவிதையில் கவர்ச்சித் தன்மை இருக்கிறது என்று சொல்கிறார்கள். இங்கே கவர்ச்சி என்ற வார்த்தையை, 'கிளாமர்' என்ற ரீதியில் அவர்கள் உபயோகிப்பதாகத்தான் தெரிகிறது. மேலும் இவர்கள் இதை அறுதியிட்டு இந்தவிதமாகத்தான் நாங்கள் இதைச் சொல்கிறோம் என்பதற்காக, ஒரு கவர்ச்சிச் சினிமா நடிகையோடு என்னுடைய கவிதையைச் சம்பந்தப்படுத்தி அந்தவிதமான கவர்ச்சி என்னுடைய கவிதையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த விஷயமாக முதலில் என்னுடைய பதிலைச் சொல்லிவிட்டுப் பின் நீங்கள் கருதக்கூடியதற்கு வரலாம். அவர்கள் சொல்கிறமாதிரி பார்த்தால், கவர்ச்சி என்பது ஒரு குறைபாடான, மலிவான, மிக எளிதாக உருவாக்கப்படக்கூடிய விஷயம் என்றெல்லாம் ஆகிவிடும், இந்தவிதமான தன்மை எதற்கும் அப்பாற்பட்டது தான் கவிதை. எவ்விதக் கவர்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆழ்ந்த காந்த சக்தி கவிதையின் அமைப்பில் அதன் வீரியத்தில் இருப்பதை ஒரு உணர்வுள்ள வாசகன் நிச்சயம் உணர்வான். நீங்கள் கவிதையில் கவர்ச்சி எது என்று கேட்டால் இந்த சக்தியை வீரியத்தைத்தான், நான் சொல்வேன். வார்த்தைகள் சம்பந்தப்பட்ட மாயாஜாலம், வாசகனுடைய உள்ளத்தை மிக ஆழ்ந்த, மிக உயர்ந்த, உன்னதமான நிலைமைகளுக்குத் திடீரென்று ஏற்றிச் செல்கிறது என்ற அடிப்படையில், இதுதான் கவிதையின் கவர்ச்சி என்று சொல்லலாம். ஆனால் கிளாமருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கிளாமர் என்பது, மிகவும் அசிங்கமான விஷயத்தை மிகவும் பகட்டாக மாற்றுவது. அதாவது செக்ஸுக்கு கிளாமர் அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில் செக்ஸ் என்பது partialy scatological ஆன ஒரு சமாச்சாரம். செக்ஸ் உறுப்புகளெல்லாம் பாதிக்குப் பாதி கழிவு உறுப்புக்கள். ஆகவே இந்தக் கழிவு உறுப்பு என்ற பிரக்ஞையி லிருந்து, கழிவுத்தன்மை இல்லாத ஒரு பகட்டுத் தன்மைக்கு மாற்றுவதற்குத்தான் கிளாமர் தேவைப்படுகிறது. எனவே கவர்ச்சி என்ற வார்த்தையை கிளாமர் என்று செக்ஸ் சம்பந்தமாகப் பயன்படுத்துவது போல், கவிதைக்குப் பொருத்த முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். இது மிகவும் அபத்தமான விஷயம். கவிதை இன்டலக்சுவலான அதிர்ச்சியை ஏற்படுத்துகிற ஒரு வெளியீடு. இன்டலக்சுவலாக மட்டுமல்ல, ஆழ்ந்த தேடல் சமாச்சாரங்களில் கூட ஒரு அதிர்ச்சியைக் கவிதையால் ஏற்படுத்த முடியும்.

கா. சு: 'இளைஞர்களைக் கெடுக்கும்' விஷயங்களை - அதாவது செக்ஸ் சார்ந்த விஷயங்களை - பெருவாரிப் பத்திரிகைகளிலும் சரி சிறு பத்திரிகைகளிலும் சரி, பயன்படுத்தப் படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரேமிள் : இளைஞர்கள் யார்? இவர்களைக் கெடுப்பது என்றால் என்ன காரியம்? உதாரணமாக செக்ஸ் சம்பந்தமான போர்னோகிராபி நூல்களுக்கும், சினிமாக்களுக்கும், மேடைக் காட்சிகளுக்கும் சென்சார் இல்லாத சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில், இந்தச் சரக்குகளுக்கு இளைஞர்கள் அல்ல, மிகவும் முதியோர்கள் தான் வாடிக்கையாளர்கள். அந்தச் சமூகங்களில் இளைஞர்களின் செக்ஸ் உணர்வுகளுக்கு செக்ஸ் உறவுகளே வடிகால்களாகின்றன. முதுமையில் இந்த உறவுக்குரிய உடலின் கருவிகளும் கவர்ச்சியும் குறைகின்றன. அப்போதுகூட பழக்க தோஷமும் மனப்பீடிப்பும் தளர்வதில்லை. இதன் விளைவாகவே முதுமைக்கும் போர்னோகிராபிக்கும் அங்கே தொடர்பு ஏற்படுகிறது. இங்கே பிரச்னையின் மையம் வயது அல்ல, பழக்கமும் மனப்பீடிப்பும்தான். இவ்விரண்டையும் நாம் கேவலம் ஒரு சாதனத்தின் மூலம் உருவாக்கிவிட முடியுமா? நீங்கள் பத்திரிகை சாதனம் போன்ற ஒன்றை இவ்விடத்தில் கருதலாம். ஆனால் இதிகாசம், புராணம் ஆகியவை கூட இது விஷயத்தில் ஒரு சாதனம்தான். சாதனம் செய்வது ஐம்பது சதவிகித வேலையை என்றால், மீதியை சாதனத்துக்கு இலக்கானவனின் மனம் செய்கிறது. கோவலன், கண்ணகியைப் பிரிந்திருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டால், அதற்கு இலக்கான ஒரு உள்ளம் கண்ணகியின் கற்பு நிலையில் பிரமிப்படையும். இன்னொரு உள்ளம், அவள் ஏதும் தவறான பாதையில் போயிருக்கலாம் என்ற 'வக்ரமான பார்வை'யில் இறங்கும். கம்பனின் சீதை - ராவணன் விஷயத்திலும், இதே இருவகை எதிரொலிகளை இருவேறு உள்ளங்கள் ஏற்படுத்திக் கொள்ளும். எனவே, 'கெடுத்தல்' என்பது அர்த்தமற்றதாகிறது. 'கெடுபடக்கூடிய' மனோபாவம் எந்த ஒரு சாதனத்தின் மூலமும் கெட்டே தீரும். பெருவாரிப்பத்திரிகைகளை அன்றி, மகாபாரதத்தைப் படிப்பதனால் இந்த மனோபாவம் கெடாமல் நின்றுவிடாது. அங்கே கணவர்களின்றி பரபுருஷர்கள் மூலம் திருதராஷ்ட்ர பாண்டு விதுரர்கள் பிறந்ததிலிருந்து ஐந்து தேவர்களுக்கு ஒரே தாயிடம் பிறந்த பாண்டவர்கள் ஒரே மனைவியை வைத்திருந்தது வரை ஏகப்பட்ட கெடுபாடுகள் உள்ளன. பார்க்கப்போனால் அன்று இத்தகைய கெடுபாடுகளுக்கு எத்தனைபேர் வாடிக்கையாளர்களாக இருந்தார்களோ, அதே வகையில் அதே அளவில் தான் இன்றும் ஒரு வாடிக்கை பெருவாரிப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் ஒன்று - குறிப்பாக தமிழகத்தின் பெருவாரிப் பத்திரிகைகளில் ஒரு மெல்லிய காமார்த்த ம் (soft pornography) பயன்படுத்தப்படுகிறது. விஷயம் இலைமறைகாயாக்கப் படுகிறது. இந்தத் தந்திரத்தில் கைதேர்ந்தவர்களே இன்றைய பெருவாரிக் சுதையாளர்களாக பெருவாரிப் பத்திரிகைகளில் அங்கீகரிக்கப் படுகின்றனர் ஏனெனில் பத்திரிகைகளின் விற்பனைக்கு இலக்கு இளைஞர்கள் அல்லர் - முதியோர்களும் பெற்றோரும் நிறைந்த குடும்பங்கள் தாம். அவர்களே இந்தப்பத்திரிகைகளுக்கு வாடிக்கையாளர்கள். புராண இதிகாசங்களின் கதையம்சங்களை, அவற்றின் இலக்கிய பூர்விகத்திலிருந்து கீழிறக்கப்பட்ட கடைத்தர வடிவுகளில் அனுபவிப்பவர்களும் அவர்களே. எனவே இளைஞர்கள் எங்கே, கெடுப்பது எங்கே? 

கா.சு: நீங்கள் சொல்வதைப்பார்த்தால் எழுத்தில் ஆபாஸத்தை அறுதியிடுவது இயலாததாகிறதே! படிப்பவர்களின் மனோபாவம் இன்னது என்றும் பார்க்க வேண்டியிருக்கிறதே! 

பிரேமிள்: பிரசுர சாதனத்தின் தளத்துக்கு வந்துவிட்டதுமே அதன் களத்தில் நீடிப்பதற்காக ஒவ்வொரு எழுது கருவிக்காரர்களும் (பெருவாரி, சிறுவாரிப் பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும்] தமது பிரசுர சாதனத்துக்குரிய கட்சியில் சேர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொள்கிறார்களே தவிர, ஒரு பிரச்னையின் பல்வேறு கோணங்களையும் பார்ப்பதில்லை. இது இன்று உறுதியடைந்துவிட்ட நிலமை. இடதுசாரிகளும் பார்ப்பனசாரிகளும் இதில் கல்லுளி மங்கனீயத்தைஎட்டி விட்டனர். தங்களைச் சிறுபத்திரிகைத் துறையில் தக்க வைத்துக்கொள்வதுக்காகவே இத்தகைய பிரச்னைகளில் ஒரு கட்சிக் கொள்கைத்தனமான பார்வையை வெளியிடுகிறார்கள் சிறுபத்திரிகை சார்ந்த பலர். எழுத்தில் ஆபாசம் இருக்கிறது என்பதைவிட இன்ன எழுத்துப் படைப்பு இலக்கியமா அல்லவா என்பதுதான் எனது அக்கறை. எழுத்தில் ஆபாசம் என்பது ஒரு இலக்கியப் படைப்பின் தராதரத்தினை அறுதியிடும் அளவுகோல் அல்ல. டால்ஸ்டாயின் அன்னாகரேனின்' நாவலில், கணவன் கரேனின்னும் காதலன் வுரோன்ஸ்கியும் ஒரே சமயத்தில் தன்னுடன் உறவு கொள்வதாக அன்னா கனவு காண்கிறாள். இலக்கிய அளவுகோலின்படி, இது பாத்திரத்தினது மனோநிலைக்கொந்தளிப்பினைக் காட்டுவதாகும். படிப்பவனின் மனோநிலை மோசமாக இருந்தால், அவன் பாத்திரத்தின் கொந்தளிப்பாக அல்லாமல் வெறும் காமவக்ரமாக இதையே காண இடமுண்டு. இத்தகையவன் இலக்கியம் பண்ண'க் கிளம்பி, அவனுக்கு அடப்பக்காரர்களும் சேர்ந்து விட்டால் பிரச்னையைச் சந்திக்க உறுதியான, தெளிவான, விபர பூர்வமான விமர்சனத்தினால் தான் முடியும். அப்போது இது ஆபாசமா இல்லையா என்பதைவிட இது இலக்கியமா இல்லையா என்ற பார்வையே தீர்ப்பை வழங்கும். 

கா.சு ஜேம்ஸ் ஜாய்ஸ் கூடப் போகாத அளவுக்கு, டால்ஸ்டாய் போய் எழுதியிருக்கிறாரே? 

பிரேமிள் : டால்ஸ்டாய் ஓரிருவரிகளில் சித்தரித்ததை ஒரு உதாரணமாகத்தான் குறிப்பிட்டேன். ஏனெனில் அவர் இங்கே உள்ள வைதீக மனோபாவம் கொண்டவர்களால் கூடக் கொண்டாடப்படுகிறவர். ஜேம்ஸ் ஜாய்ஸின் 'யுலிஸிஸ்' சமாசாரம் அப்படி அல்ல. வாயில் விரலை வைத்துச் சப்பிக் கொண்டிருக்கும் இலக்கிய உலகப் பாப்பாகூட, லா. ச. ராமாம்ருதத்தின் பல்வேறு முற்காலத்திய படைப்புகளில் 'யுலிஸிஸ்'-ன் நனவோடை உத்தி இருப்பதைச் சொல்வதுக்காக வாயிலிருந்து விரலை எடுக்கும். [லா.ச.ரா.வின் தற்காலத்திய படைப்புகள் வெறும் லொடலொடாக்கள் என்பதையும் இதே பாப்பா சொல்லிவிட்டே மீண்டும் வாயில் விரலை வைக்கும்.) இதே லா.ச.ரா., 'இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸிற்குக் கொடுத்த பேட்டியில், அவரது நனவோடை உத்தியின் மூலகர்த்தா ஜாய்ஸ்தானே என்பதுக்கு பதில் தரும்போது, ஜாஸ்ஸின் 'யுலிஸிஸ்' ஒரு ஊத்தைப்புத்தகம் என்று உளறி இருக்கிறார். 1971-72 வாக்கில் சென்னையில் தெருவில் வைத்து எனக்கும் மௌனிக்கும் முன்னிலையில் நாங்களிருவரும் பிரமிக்கும்படி லா.ச.ரா.வை ஆலிங்கனம் செய்த வெங்கட்சாமிநாதனிடம் நீங்கள் போய் “யுலிஸிஸ் ஒரு ஊத்தைப் புத்தகம்" என்று சொல்லிப்பாருங்கள். ஆலிங்கனம் கிடைக்கிறதா பாத தீக்ஷை கிடைக்கிறதா என்று! லா.ச.ரா.வும் வெ.சா.வும் 'யூ ஆர் ஏ பிராமின், ஐ ஆம் எ பிராமின்!' என்றுதான் ஆலிங்கனம் செய்கிறார்கள். இலக்கிய அடிப்படையில் அல்ல - அதுவும் இன்றைய லா.சா.ரா.வின் எழுத்து அடிப்படையில் ஆலிங்கனத்துக்கு இடமில்லை. இருந்தும் 'பிராமின்' என்று வரும்போது இலக்கிய அடிப்படை எல்லாம் இவர்களுக்கு சுண்டைக்காய்! 

காசு; எவரேனும் சரி, ஜாய்ஸின் 'யுலிஸிஸ்'ஸை ஊத்தைப் புத்தகம் என்று சொல்ல இடமுண்டா? 

பிரேமிள் : சுமார் 15 வருஷங்களாக உழைத்து எழுதப்பட்ட நாவல் 'யுலிஸிஸ்', இதில் வரும் இரட்டை நாயகர்கள் - ஐரிஷ்காரன் ஸ்டீபன் டிடாலஸ், யூதன் லியோப்பால்ட் புளூம். யூதர்கள் மீது அங்கங்கே காட்டப்படும் வெறுப்பை டிடாலஸ் எதிர்ப்பது நாவலின் ஒரு முக்கிய பரிமாணம். இந்த நாவலின் இந்தப் பரிமாணத்தை அறிந்திருந்தும், இது எழுதி முடிக்கப்பட வேண்டும் என்பதுக்காகத் தமது படைப்பியக்கத்தையே இரண்டாம் பட்சமாக்கி, ஜாய்ஸ் குடும்பத்துக்காகப் பணம் திரட்டிய அமெரிக்கக்கவி எஸ்ரா பவுண்ட், ஒரு யூத விரோதி. இது விஷயமாக ஹிட்லரையும் முசோலினியையும் ரோமன் ரேடியோவிலேயே ஆதரித்து, அமெரிக்காவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததுக்காக அமெரிக்க அரசால் கைது செய்யப் பட்டவர் பவுண்ட். அதாவது தமது அரசியல் பார்வைக்கே மாறான ஒரு பொருளம்சத்தினை இலக்கியப் பார்வை மூலம் சுண்டு பணிந்து அதன் வெளியீட்டுக்கும் உதவிய உந்நதப் பண்பு இது. நமது வறட்டு குரைப்பு மண்டலங்களில் இல்லாத பண்பு இது. இலக்கிய தர்சனத்தைப் பொறுத்தவரை ஜாய்ஸின் நாவலில் வெளிப்படும் மனிதாயத்துக்கு பவுண்ட் பணிந்திருக் கிறார். நாவலின் முதல் பிரசுரம் 1922-ல் பாரீஸில் - பிரசுரகர்த்தாக்கள் ஷேக்ஸ்பியர் அன்ட் கம்பனி. பிரசுரமான பிரதிகள் ஆயிரம் மட்டுமே. இவற்றுள் பிரிட்டன் சென்ற பிரதிகள், கிறித்துவ சபையினதும் அவர்களைப் போன்ற பிரிட்டிஷ் லா.சா.ரா. க்களினதும் எதிர்ப்பின் விளைவாகக் கைப்பற்றப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. காரணம் 'ஊத்தைப் புத்தகம்'. ஆரம்பத்திலிருந்தே நனவோடை உத்தியில் எழுதப் பட்ட இந்த நாவலில், புலன்களின் வழி மனம் கிரகிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மொழி வடிவு பெறுகிறது. இதை விநாடிக் கணக்குக்கே நாவலின் இறுதியில் கொண்டு வருகிறார் ஜாய்ஸ். இவ்விதம் எழுதுகிற ஒரு சவாலை ஏற்றுக்கொண்டால், புலனுக்குப்படுகிறவையும் மனதில் பிறப்பவையும் தேர்வு முறைகளைத்தாண்டி வெளியீடு பெற்றாக வேண்டும். இந்தச் சவாலை ஏற்று அதனை பிரமிக்கும் படியாக ஜாய்ஸ் நிறை வேற்றியுள்ளார். கடற்கரையில் காணப்பட்ட பிணம், ஓடி விளையாடும் நாய், மரணம், கழிவறைக் காட்சி, திடீர் காம நினைவு, சோகம், பரிவு, ஆழ்ந்த பின்னலான சிந்தனை என்று எல்லாமே மொழியினுள் புத்துயிர் பெறுகின்றன. மேலோட்ட மான விஷயாம்சத்தின்படி பார்த்தால், மதச் சடங்குகளைப் பற்றிய கிண்டலும், மனித உறவுகளை சம்பிரதாயங்களுக்கு அப்பால் நிகழும் நிதர்சனங்களாகக் காட்டும் பிரிவுகளும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியவை, லியோபால்ட், பாடகியான தனது மனைவிக்கு உள்ள ஷோ பேர்வழிக் காதலனுக்குப் பதிலாக கவியுள்ளம் கொண்ட ஸ்டீபனைக் காதலனாக்க முயற்சிப்பதும், மனைவி மால்லி சுயமைதுனம் செய்வதும் நாவல் 'ஊத்தை' என்று பிரிட்டிஷ் அரசாங்கமே சீல் வைக்க வைத்தவை. லா ச.ரா. ஏன் சொல்லமாட்டார்? 

கா.சு. இவ்வளவு தூரத்துக்குப் போகும் நூலை சி.சு. செல்லப்பா போன்ற ஒருவர் குறிப்பிட்டு வந்தது ஆச்சரியமாக இருக்கிறது 

பிரேமிள் : சி. சு. செ. மூல நூல்களைப் படிக்காமல் அவைபற்றிய விமர்சனங்களை மட்டும் படித்துவிட்டு எழுதுவதாக க. நா. சு. குற்றம் சாட்டி இருக்கிறார். பார்க்கப்போனால் செல்லப்பா என்ன, வெ. சா. கூட 'யுலிஸிஸ்'ஸைப் படித்தவர்தாமா என்பது என் சந்தேகம். உயர்வாக விமர்சகர்களால் குறிப்பிடப் படுகிறவற்றிலிருந்தே இவர்கள் தங்கள் பார்வைகளை உருவாக்கி இருக்க முடியும். எனினும் இது என் சந்தேகம் மட்டுமே. பார்க்கப் போனால், ஆழமில்லாத வாசகர்களுக்கு 'யுலிஸிஸ்'ஸின் பக்கங்கள் அடைபட்ட கதவுகள் தாம். தமிழ் 'இலக்கிய' எழுத்தாளர்களிடையிலே ஆழமான வாசகர் ஒருவரை இனித்தான் நான் சந்திக்கவேண்டும். 

கா. சு: ராபர்ட் ம்யுஸில் எழுதிய The Man Without Quality நாவலை மௌனி மிகவும் சிலாகித்திருக்கிறார். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? இதற்கும் ஜாய்ஸின் யுலிஸிஸுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றியும் கூறமுடியுமா?

 பிரேமிள்: Robert Musil இன் அந்த நாவலை நான் இப்போது தான் படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் படித்து முடிக்க வில்லை. அதை மௌனி சிலாகித்ததற்குக் காரணம், அதை எழுதிய ராபர்ட் மூஸில் ஒரு மிக உயர்ந்த கலைஞர் என்பது தான். புதுமைப்பித்தனைப் பற்றி மௌனி விமர்சிக்கிறபோது, அவரிடம் ஐரனி இருக்கிறது, ஐரனி ஒன்றும் உயர்ந்த கலையின் குணாதிசயம் அல்ல என்று கூறியுள்ளார். இதை நான் 'மௌனியும் மவ்னியும்' என்ற 'மீறல்' கட்டுரையில் விமர்சித்திருக்கிறேன். Man Without Qualities படித்தீர்களானால், ஐரனி அதன் உச்சத்துக்குப்போயிருப்பதைக் காணலாம். தலைப்பே ஐரானிக் கலானது. புத்தகம் முழுவதிலுமே ஐரனியின் நீட்சியையும், அபூர்வமான ஒரு உச்சஸ்தாயியில் அது போய்க்கொண்டிருப் பதையும் காணலாம். இந்த ஐரனியை உணராமல் மௌனி, ஐரனி பற்றி இப்படிச்சொன்னாரா என்று நினைத்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது. மௌனி உயிரோடு இப்போது இருந்தால் இவ்விஷயத்தைச் சர்ச்சித்திருக்கலாமே என்ற அளவுக்கு, இது விஷயத்தில் எனக்கு ஆர்வமேற்படுகிறது. மூஸிலின் நாவலில் ஐரனி மட்டுமல்ல, தொழில் நுட்பரீதியில் அவர் செய்கிற பின்னலும் அவதானங்களும் சில அடிப்படை விஷயங்களிலிருந்து மனிதன் விலகுகிற சமயங்களில் செய்யும் கிண்டலும் எக்காளமும், ரொம்ப அபூர்வமானவை. மௌனி இந்நாவலை ரசித்தார் என்றால், ஒரு கலைஞனால் இன்னொரு கலைஞனை அடையாளம் காணமுடிந்தது என்பதுதான். இதில் வேறு விசேஷ காரணமிருப்பதாக எனக்குத்தோன்றவில்லை. * இந்த நாவலையும் ஜேம்ஸ் ஜாஸ்ஸின் யுலிஸிசையும் ஒப்பிடுவது மிகவும் சிரமமான காரியம். ஏனென்றால், மூஸில் ஜெர்மன் மொழியில் எழுதியிருக்கிறார் என்பது ஒரு காரணம். அம்மொழியில் எவ்விதமான மாஜிக்குகளோடு அவர் படைத்திருக் - கிறார் என்பதை நான் நிச்சயிக்கமுடியாது. ஆங்கில மொழியெர்ப்பு மிக அற்புதமாக இருப்பதால், அவர் மிகப் பெரிய குளோபல் மெஜிஷியன் என்பதையும், மிக அபூர்வமான அவதானங்களை வார்த்தைகளுக்குள் கொண்டுவரக் கூடியவர் என்பதையும் என்னால் காணமுடிகிறது. இந்த அபூர்வமான அவதானம், மொழியின் பின்னலான - அதேசமயம் ஐரானிக் கலான - வெளியீடாக மூஸிலிடம் நிறைவேறுகிறது. ஜாய்ஸின் சாதனை முற்றிலும் வேறுவிதமானது. அவரது எழுத்திலும் ஐரனி இருந்தாலும், ஒருவனை மனிதனாக மட்டுமே பார்த்து அம்மனிதனுடைய முழு மன ஓட்டத்தையும் ஒரு 48 மணி நேரத்துக்குள் அவன் செய்கிற எல்லாக்காரியங்களையும் - செக்ஸ், வெளிக்குப்போதல், சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர் வினைகாட்டுதல், உணவு, பறவைகளுக்கு உணவு போடுதல், மிருகங்களையும் பிறரையும் அவதானித்தல், பிற நிகழ்ச்சிகள் - இந்தமாதிரி எல்லா விதமாகவும் அந்த மனிதனை அப்படியே சித்தரித்திருக்கிறார். இப்படி, அப்படியே சித்தரிப்பது, - சைக்கலாஜிகலான விஷயங்களைப் போட்டோ பிடிக்கக் கூடியவிதமான - ஒரு detachment என்ற அடிப்படையில், ஜாய்ஸின் சிகரம் மூஸிலினால் எட்டமுடியாததாகவே எனக்குத் தோன்றுகிறது. மூஸிலிடம் detachment இல்லை . அவர் ஏதோ ஒன்றைச் சொல்ல வந்து, அப்படிச் சொல்ல வருகிறபோதே,'. அதைக்கூட விமர்சிப்பவராகிவிடுகிறார். உதாரணமாக இன்றைய - மனிதன் குவாலிடீஸ் இல்லாத மனிதன் என்று சொல்பவராக . ஜாய்ஸ் இல்லை. இன்றைய மனிதனும் மனிதன் தான் என்று சொல்கிறவராக ஜாய்ஸ் படைப்பை நிறைவேற்றுகிறார். இன்றைய மனிதன், Man Without Qualities என்று மூஸில் தன் படைப்பு பூராவுமே சொல்கிறார். குவாலிட்டி என்றால் என்ன என்று சொல்லிவிட்டு, அதற்கு உதாரணங்களைக் காட்டுகிறார். ஆஸ்ட்ரியா என்ற அவருடைய தேசத்தின் பிரதிபிம்பமாக, காகேனியா என்கிற கற்பனாரீதியான ஒரு சின்ன நாட்டை உருவாக்குகிறார். அதை குவாலிடி உள்ள நாடாக அவர் காட்டுகிறபோதுகூட, அதிருப்தியிலிருந்து விளைகிற ஒரு ஐரனியைத்தான் கற்பனாரீதியான அவ்வுலகத்தில் பிரயோகித்துப் பார்க்கிறார். தவிர அதிலே உள்ளவர்கள் மனிதர்கள், அவர்களது உணர்ச்சிகள் மதிக்கப்பட வேண்டியவை, அவர்களது பார்வை களில் ஒவ்வொருகணமும் ஒரு உயிர் ஓடிக் கொண்டிருக்கும், அதிலிருந்து தான் மற்றவர்களை கணிக்கிறார்கள், அப்போது பல்வேறு பிரதிபலிப்புகள் ஏற்படும் என்ற நுட்பமான [ஜாய்ஸினுடைய] பார்வை மூஸிலிடம் கிடையாது. வார்த்தை களினால் உருவாகக்கூடிய ஒரு மேஜிக் ஒரு Labyrinth என்றே அவரது நூல் நிற்கிறது. இதில் தான் மூஸில் சாதனை காட்டியிருக் கிறார் என்று சொல்லலாம். இப்படி இதை விமர்சித்தால், ஜாய்ஸினுடைய detachmentஐ Godly அதாவது the detachment of the Creator என்றுதான் சொல்லவேண்டும். பாத்திரங்களிலிருந்து விலகி நிற்கிறவன் தான் creator என்று ஜாய்ஸ்ஸே சொல்லியிருக் கிறார். இப்படி, எழுதுகிற ஒருவனை The Creator, God himself என்ற லெவலில் நிறுத்தி அவர் குறிப்பிடுகிறபோதே, தன்னளவில் அந்த லட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். இந்த அளவு detachment மூஸிலிடம் இல்லை . அவரிடம் ஓங்கியிருப்பது, இன்று மதிப்பீடுகள் யாவும் குலைந்து விட்டன என்பது சம்பந்தமான ஒரு ஆழ்ந்த பரிகாசமயமான கசப்பு. இந்தக்கசப்பு, அவர் எது மதிப்பீடு என்று நினைக்கிறாரோ அதற்குள் கூட ஊடுருவி விடுகிறது. மௌனிக்கும் இந்தக்கசப்பு இருந்தது என்று சொல்லலாம். மௌனி ஒரு பூசக எழுத்தாளர். [பிராமண எழுத்தாளர், பூசக வாக்கம் என்றெல்லாம் சொல் கிறார்கள். பூசக எழுத்தாளர் என்று சொல்லலாமா என்பதில் எனக்கு அவ்வளவு தெளிவில்லை. என்றாலும் சிலர் மேற்படி சொல்கிறபோது எனக்கு : இவ்விதம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.) --பூசக வர்க்கத்தை வைத்து அவர் எழுதிய கதைகள் .. எதுவுமே அந்த இனக்குழுவை உயர்த்திச் சொல்வதாகவோ, இம்மாதிரித்தான் வாழவேண்டும் என்று சொல்கிறதாகவோ தோன்றவில்லை. இதற்கு 'சாவில் பிறந்த சிருஷ்டி' மிகச் சிறந்த உதாரணம். அதில் வருகிற சுப்பையர் - முதலிய பாத்திரங்கள் எல்லோரும், அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களை ஒன்றும் அவர் மிக ஐடியலானவர் களாகவோ, நிறைவு பெற்றவர்களாகவோ சித்தரிக்கவில்லை. அவர்களது கீழான நிலையைத்தான் கொடுக்கிறார். ஆகவே அங்கே இந்தக் கசப்பு செயல்படுகிறது. இந்தக் கசப்பை மூஸிலிடமும் காணலாம். இதற்காகத்தான் மௌனி அவரை ரசித்தாரா என்றும் சந்தேகிக்கலாம். ஆனால் அதற்கு நமக்கு ஆதாரம் கிடைக்கக்கூடிய நிலை இல்லை. ஏனெனில் மௌனி நம்மிடையே இல்லை! 

கா. சு: நீங்கள் ஜாய்ஸின் யுலிஸிஸ்ஐயும் மியூஸிலின் மான் விதவுட் குவாலிட்டீஸ் ஐயும் ஒப்பிட்டிருக்கிறீர்கள். இரண்டில் எது அதிக தரம் வாய்ந்தது என்ற ஒப்பீடாக இதைக் கொள்ளக் கூடுமா? 

பிரேமிள்: இலக்கிய சாதனையின் சிகரங்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது. என்னுடைய ஒப்பீடு கையாளப்பட்ட மனித அம்சங்களைப்பற்றியது மட்டுமே. இதை நான் தெளிவாகச் செய்யவில்லை என்று உங்கள் இந்தக் கேள்வி அபாயச்சமிக்ஞை தருகிறது. எனவே, நான் நுட்ப விபரங்கள் ஓரிரண்டை எடுத்துக் காட்டுகிறேன். 'மான் விதவுட் குவாலிட்டீஸ்' (தரமற்ற மனிதன் ] என்ற ராபர்ட் மியூஸிலின் நாவலும் ஜேம்ஸ் ஜாய்ஸ்ஸின் யுலிஸிஸ் நாவலும் முறையே, ஏறத்தாழ சமகாலத்திய ஐரோப்பிய ஜெர்மன், பிரிட்டிஷ் ஐரிஷ் மனிதர்களைப் பற்றியது. இந்த வேறுபாடு இருந்தும் இருவருடைய உலகமும், கலாச்சாரத் தளத்தில் கிறிஸ்துவ மேலைத்தேய அடிப்படையில் ஒன்று. பிரச்னை இந்தப்பின்னணி அல்ல. இந்தப்பின்னணியின் மேலைத்தேய நவீன மதிப்பீடுகளினது குணவக்ரம்தான் பிரச்னை. குணவக்ரம் மியூஸின் நாவலில் முன்னணிக்குக் கொண்டுவரப்படுகிறது. நவீனத்துவத்தின் குணவக்ரம் தனி மனிதன் மூலம் தரமற்ற மனோபாவமாகச் சித்திரம் பெறுகிறது மியூஸிலிடம், கிறிஸ்துவப் பின்னணியை மியூஸில் ஆதர்சிக்கவில்லை, விமர்சிக்கிறார். - அவரது பின்னணி ஜெர்மன் புரோட்டஸ்தாந்த கலாச்சாரப் பின்னணியாகும். இதனுடன் ஜெர்மன் ராணுவ ராஜரீக மேல்கட்டுமானத்தின் பின்னணியைத் தமது பாத்திர வக்ரத்துக்குத் தருகிறார். இந்தப் பின்னணி களையும் தமது பாத்திரத்தையும் ஒரேவீச்சில் ஐரனிக்கு உட்படுத்துகிறார். இந்த விபரத்துக்கு ஏற்கெனவே 'மான் விதவுட் கேரக்டர்' என்ற சிறிய டயரிக் கட்டுரையில் ஒரு ஆதாரத்தைத் தந்திருக்கிறார் மியூஸில், இதில் மிகக் கட்டுப்பாட்டுடன், அதாவது ராணுவத்தனம் என்று சொல்லக்கூடிய கடுமையுடன், வளர்க்கப்பட்ட தமது பால்யகாலத் தோழனை சித்தரித்துள்ளார். இவன் கேரக்டர் எதுவும், குணாம்சம் எதுவும் அற்றவனாக வளர்ந்ததை மியூஸில் சித்தரிக்கிறார். இவனைப் போலன்றி, பெற்றோரின் கெடுபிடிகள் இல்லாத ஒரு சுதந்திரத்துடன் வளர்ந்தவர் மியூஸில். கடுமையாக வளர்க்கப்பட்ட நண்பன், குணாம்சங்களற்றவனாக வளர்ந்ததை அனுதாபம் கொண்ட பரிகாசத்துடன் சித்தரிக்கிறார் மியூஸில், அவன் ஒன்றைச் சொல்வான் இன்னொன்றைச் செய்வான். இதுதான் அவனது குணமின்மையின் முக்யமான அம்சம். உண்மையில் நவீன சமூகத்தின் வெற்றிகரமான நடுத்தரவர்க்கத்தினனாகவே அவன் பின்னாடி ஆகிறான். மியூஸிலை நாம் இவனுடன் ஒப்பிட்டால், உந்நதமான இலக்கியவாதியாக பரிணமித்த இவர், வறுமையிலேயே இறுதிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்த ஒப்பீடு, நவீன அமைப்பில் குணாம்சங்களற்றவர்களே வாழ முடியும் என்பதை நிரூபிக்கிறது. மான் விதவுட் கேரக்டரில் இதையே கட்டுரைப்பாணியில் சொல்ல முன்வரும் மியூஸில், மான் விதவுட் குவாலிட்டீஸ்'இல் இந்த மனிதனுடைய பல்வேறு பெர்சனாலிட்டி விபரங்களையும் பல்வேறு சமூகக்களங்களில் நிறுத்தி சித்தரித்துள்ளார். இந்த மனிதனுடைய நோக்கம் என்ன: சுய திருப்தி, தியாக உணர்வு இன்மை, லாபத்துக்காக மதிப்பீடுகளை வக்ரப் படுத்துதல், நேர்மையற்ற சாமர்த்தியம்... இத்தியாதி. ஆனால் இவை நாவலின் பெறுபேறுகள், பச்சையாக ஆசிரிய கூற்றில் வராதவை. இனி ஜாய்ஸிற்கு வருவோம். ஜாய்ஸின் முக்யமான இரண்டு பாத்திரங்களுள் ஒருவன் கவியுள்ளம் கொண்டவன். ஐரிஷ் கத்தோலிக்கப் பின்னணி கொண்ட அவனுடைய ஆதர்சம், அவனைச் சார்ந்த வேறு மூத்த பாத்திரங்களினுடையதைப் போன்று, ஐரிஷ் விடுதலை இயக்கவாதிகளுக்கு சார்பானது. பிரிட்டிஷ் முடியரசுக்கு பாதகமானது. இவற்றைவிட கத்தோலிக்க பூசக மரபுகளுக்கு வைரம் பாய்ந்த எதிர்ப்பைத் தருவது. அதே சமயத்தில் செயல் ரீதியான ஆன்மவியலை ஆதர்சிக்கவும் நாடுகிறது இந்தக் கவியுள்ளம். இந்த அடிப்படையில் யேசு என்ற உந்நத நிகழ்ச்சியை அவ்வுள்ளம் ஆதர்சிக்கவே செய்கிறது. இவை முழுவதையும் எடுத்தால் இந்தக் கவியுள்ளம் தசையும் உதிரமும் கொண்ட, பலவீனங்களின் தொகுதியான இயற்கை நிலையைத் தாண்டிய லட்சிய சொரூபம் என உணரலாம். இருந்தும் இந்த சொரூபத்தை மிகமிக சாமர்த்தியமாக ஜாய்ஸ் மனிதத் தளத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் என்பது என் அபிப்ராயம். இத்தகைய சாதனை ஒன்றை நவீன இலக்கிய சிகரம் எதுவும் இவ்வளவு பிரமாதமாக சித்தரிக்கவில்லை. பார்க்கப்போனால் இந்த ' கவியுள்ளம் கொண்ட பாத்திரம்தான் யுலிஸிஸ்ஸில் ஜாய்ஸ் தமக்குத்தாமே உருவாக்கிய சவால். இந்த சவாலை வெற்றிகரமாக ஜாய்ஸ் சந்தித்திருக்கிறார். இந்த கவியுள்ளத்தின் இந்த லட்சியார்த்தங் களும் லட்சியங்களை நிதர்சன உலகில் நிறுத்துவதால் விளையும் சிந்தனாரூபமான மன அவசங்களும் ஒருபுறம், மறுபுறம் லட்சியத்தன்மைகளினால் அன்றி, தனது ஆண்குழந்தையின் மரணத்தால் ஏற்பட்ட ஆறாத இதயவேதனையுடன் சித்தரிக்கப் படுகிற யூதப் பின்னணி கொண்ட பாத்திரம். இது மானுட சித்திரம். உண்மையில் எந்த மத்திய தரத்திய எழுத்தாளனாலும் வெற்றிகரமாகச் சித்தரிக்கப்படக்கூடிய பாத்திரம். ஆனால் ஜாய்ஸ் இவனைக் கூட லகுவாகச் சித்தரிக்கக் கூடிய விதத்தில் எடுத்தாளவில்லை. டால்ஸ்டாய் போன்ற ஒரு மேதை கூட சறுக்கக் கூடிய ஒரு சகதிப்பாறையில் அனாயாசமாக இவனை ஒரு மனித சிகரத்துக்குக் கொண்டு செல்கிறார் ஜாய்ஸ். இப்படிக் கொண்டு செல்வதுக்கு நவீன மதிப்பீட்டுக்களத்தின் மனிதாயப் பண்புகளை ஜாய்ஸ் ஆவாகனிக்கிறார். பச்சையாகச் சொன்னால் - தன்னைப் போலவே குழந்தையின் மரணத்தினால் வேதனையில் மூழ்கியிருக்கும் தனது மனைவி, [இவள் ஒரு நட்சத்திரப் பாடகி] ஒரு தரங்கெட்ட மனிதனுடன் உறவு கொண்டிருப்பது யூதபாத்திரத்துக்கு அருவருப்பாக இருக்கிறது. அந்த தரங்கெட்டவனுக்குப் பதிலாக, கவியுள்ளம் கொண்ட லட்சிய சொரூபமான பாத்திரத்துடன் தனது மனைவியை உறவுபடுத்த முயற்சிக்கிறான் கணவன். இது இலக்கியக் கோணத்தில் அபாயகரமான முயற்சி. ஆனால் தமது ஆளுமையின் அனாயாசமான வீச்சின் மூலம் இதை - உந்நதமாகச் சித்தரித்துள்ளார் ஜாய்ஸ். இங்கே, மரபான பின்னணிகளை உதறி, நவீனத்வம் கொண்ட உள்ளத்துடன் மனிதார்த்தத்தின் வழியில் தரமின்மைக்கு எதிராக கவியுள்ளத்தை ஆதர்சிக்கும் சாதனை நிறைவேறுகிறது. நவீனப் : பின்னணியையே மனிதார்த்தத்துக்கும் லட்சியார்த்தத்துக்கும் உபகரணமாக்கு கிறார் ஜாய்ஸ். இது அபாரமானது. இங்கே இதை மேலும் அழுத்தவேண்டும். தனது மனைவிக்கு உறவாக உள்ளவன் தரங்கெட்டவன். ஆனால் வசதி படைத்தவன். தனது மனைவிக்கு உறவாக இருக்க வேண்டும் என கணவன் - விரும்புகிறவன் கவியுள்ளம் கொண்டவன் ஆனால் வறுமையில் உழல்பவன். இவ்விடத்தில் நவீனத்துவத்தின் லாபநோக்கங்களை .. ஜாய்ஸ் ' நிராகரிக்கிறார் என்பதையும், அத்தகைய எதிர்மறைத்தன்மையை அன்றி, உறவுரீதியான நவீனத்தன்மையை மட்டும் அதுவும் தராதர அடிப்படையில் ஆதர்சிக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். இத்தகைய அபாயகரமான சவால் எதையும் மியூஸில் மேற்கொள்ளவில்லை. இவ்விதம் ஒப்பிடும்போது, மியூஸிலைவிட ஜாய்ஸின் சாதனைக்கு உள்பலம் . அதிகம் என்றே காண முடிகிறது. இலக்கிய சாதனையையும் மீறிய ஒன்று, இது என்றே நாம் கருத வேண்டும். 

'கா. சு: தின மணி சுடர் பேட்டியில், சுந்தர ராமசாமி, ஏதோ உலக நாவல் ஒன்றைத் தாம் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே? 

பிரேமிள்: இது ஒரு வெருட்டல். அதாவது - யாரோ ஒரு பறையன் ஞானியாகி விட்டான். எங்கோ ஒரு தெருவோரத்தில் நிஷ்டையில் உட்கார்ந்திருக்கிறான். நான் தரிசித்த இந்தியாவில் இது எப்பவுமே சம்பவிக்கக் கூடிய ஒரு வியப்பு! மும்முடி வரம் பாலயோகிக்கு நிறையக் கூட்டம் சேர்ந்தது. அவர் உணவு, நித்திரை எதுவுமே இல்லாமல் நிஷ்டையில் மூழ்கியிருந்த ஒரு மகான். ஆனால் அவர் பிராமணரல்லர், மிகவும் கீழ்க்குலத்தைச் சார்ந்தவர். அதாவது கொத்தடிமையாக இருந்த ஒருவர் என்று சொல்கிறார்கள், சரி, இப்படி ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். நான் ஒரு பூசக வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று வைத்துக் கொள்வோம். பூசக வர்க்கம் என்று இப்போது சுயவிளம்பரமாக சிலர் உபயோகிக்கும் வார்த்தையைத்தான் நான் இங்கே திரும்பச் சொல்கிறேன். இதில் உள்ளவர்கள் தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது, எதற்கு?-- ஞானத்தை அடைவதற்கு என்பார்கள். 'ஞானத்தை அடைவதற்கு எவர்க்கும் அதிகாரம் இல்லை. ஆனால் ஞானத்தை அடைவதற்கு அத்திவாரமான சில சாஸ்திரங்கள், சில நூல்கள், சில ஸ்மிருதிகள் ஆகியவற்றைக் கற்பதற்கும் - குருவினிடம் போயிருந்து கேட்பதற்கும் - தங்களுக்குத்தான் - அதிகாரம் இருக்கிறது - ஆகவே அதிலிருந்து பிறக்கக்கூடிய ஞானத்துக்கும் தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்பதைச் சொல்லாமலே சொல்கிறார்கள். ஆனால் ஆத்ம - ஞானத்தையும் காணோம், ஒரு மண்ணையும் காணோம். எனக்கு * ஏழு வயசில் பூணூல் போட்டாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். பூணூல் போட்டாலே இரு பிறப்பாளனாகி விட்டேன் - இரண்டாவது பிறவி எடுத்து விட்டேன், ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டது என்பது தான் அர்த்தம். உண்மை யிலேயே ஞானம் கிடைத்த சந்தர்ப்பத்தில் யாரும் பூணூல் போடுவதில்லை. பூணூல் போடுவது ஒரு ஜாதீயச் சடங்கு. இது மிக அபத்தமான விஷயம். உலகில் எங்குமேயில்லாத மிக முட்டாள் தனமான விஷயம். பூணூல் போட்டால் துவிஜனன் ஆகிவிடுகிறான் என்பது மிகப் பெரிய புரளி, உலகத்திலே எங்கேயுமே இந்த மாதிரி ஒருபுரளி கிடையாது. சரி, எனக்கு ஆத்மஞானம் வரவில்லை. ஆனால் அதற்குத் தகுதியுள்ள ஒரு பூசகக் குடும்பத்தில் உள்ளவன். இப்போ நான் என்ன பண்ணனும்? “நான் தபஸ் பண்ணிண்டிருக்கேன்பா, பிரம்மஞானம் வந்துடும்பா ஏனென்றால் எங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கு. பிரபஞ்சம் என் சுண்டுவிரலாயிடும். அதாவது இந்த முழுநட்சத்திரங்கள், அகண்டம் எல்லாமே என் சுண்டுவிரல் மோதிரமாயிடும்'' என்று நான் சொல்லணும். இப்படிப்பட்ட ஒரு பார்வையினுடைய - பிரகடனத்தினுடைய - நீட்சிதான், சுந்தரராமசாமி இன்றைக்கு உலக நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதும், 

கா. சு : சுந்தரராமசாமி தமது 'ஜே. ஜே. சில குறிப்புகள்' பலருடைய ஆலோசனைகளின் பேரில் எழுதப்பட்டது என்று அதே பேட்டியில் சொல்கிறார். தமது 'காலச்சுவடு' பத்திரிகையைத் தாம் உண்மையாக எடிட் செய்திருந்தால் அவற்றுள் சில விஷயங்களே வெளியாகியிருக்கும் என்றும், இப்போதுள்ள பலருடைய பார்வையும் வெளிவரட்டும் என்றுதான் பலதையும் சேர்த்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார். இவை பற்றி உங்கள் கருத்தென்ன? 

பிரேமிள்: சுந்தரராமசாமி தமக்குத்தாமே அப்ரூவராகிவிட்டார் என்பதைத்தான் இவை காட்டுகின்றன. முதல் விஷயம், தமது நாவலுக்கு எதிரான விமர்சனங்களுக்கு அவர் சமாதானம் தரும்போது, தாம் நாவலை எழுதும்போது சில நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எழுதியதாகச் சொல்கிறார். இது எந்த உயரிய படைப்பாளியும் செய்யாத விஷயம். பிறருடைய ஆலோசனைகளைக் கேட்டு எழுதுவதென்றால் என்ன? இதை என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்பதே புரியாத சமாச்சாரமாக இருக்கிறது. இங்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. 'லொலிதா' நாவலை விளடீமர் நபக்கவ் எழுதி, ஒரு பிரசுர கர்த்தரிடம் கொடுத்தபோது, அவர் 'இதில் ஒரு வயசுக்குவராத சிறுபெண் சம்பந்தமான காமவிகாரத்தை அடிப்படையாக்கி எழுதியிருக்கிறீர்கள். இந்தச் சிறுமிக்குப் பதிலாக ஒரு சிறுவனை உபயோகித்தால் புத்தகம் இன்னும் நன்றாக விற்கும்' என்று சொன்னபோது, நபக்கவ் மிகக் கோபித்துக் கத்தியிருக்கிறார் என்பது அவரது 'Strong Openions' என்ற புத்தகத்தில் பதிவு பெற்றுள்ளது. நபக்கவ் இந்த மாதிரி விஷயங்களுக்காக 'The Arrogant Russian' என்று மேல் நாட்டு இலக்கிய வட்டாரங்களில் குறிக்கப்படுவார். குற்றச்சாட்டாக அல்ல, அட்மிரேஷனோடு என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படி ஒரு அட்மிரேஷனை உருவாக்கக்கூடிய தனித்தன்மையும், தன்னுடைய பார்வையை வெளியிடுவதில் ஆழ்ந்த வீரியம் சார்ந்த முரட்டுத்தனமும் கொண்டவனைத்தான் நாம் கலைஞன் என்று சொல்கிறோம், கலைஞன், சிருஷ்டிகர்த்தா என்பவை 'Creator' உடன் கடவுளுடன் சம்பந்தப்படுத்தும் வார்த்தைகள். இப்படி ஒரு கடவுள் பிறரது ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு நாவல் எழுதுகிறார் என்பதைக் கேட்கும்போது ரொம்பவும் பரிதாபமாக இருக்கிறது. இதில் ஒன்றுமட்டும் எனக்கு அழகாகத் தெளிவுபடு கிறது. சுந்தரராமசாமி ஒன்றும் முட்டாளல்ல. அவருக்கு என் விமர்சனங்கள் அழகாகத் தெளிவாகப் புரிந்திருக்கும் அவரை வழிபட்டுக் கொண்டிருப்பவர்களை விட அவர் ரொம்பவும் தெளிவாகவே என்னுடைய விமர்சனத்தின் தாக்குதலை அறிந்திருப்பார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அவருடைய புத்திசாலித்தனத்தின் எல்லா லெவல்களும் ரொம்பவும் பரிச்சயமானவை. மேற்கூறியபடி பிறர் ஆலோசனைகளுக்கேற்ப எழுதினேன் என்று சொன்னது என்னுடைய விமர்சனத்துக்குப் பதிலாகத்தான். "என்னைத் தனியாக எடுத்து வைத்து குத்தம் சொல்லாதே-நான் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்- ஒரு பக்கம் கிரியா ராமகிருஷ்ணன் ஒண்ணு சொல்றான். இந்தப் பக்கம் என் பொண்டாட்டி வேறே ஒண்ணு சொல்றா! என் உறவுக்கார துக்ளக்' பரந்தாமன் வேறே ஒன்னை வந்து சொல்லிப்புட்டுப் போறார்" என்று பிறர் மீது பழியைப் போடுகிறார், ரொம்ப 'புத்திசாலித்தனமாக'. அவர் சொன்னதை விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிக்குரிய கருத்தாக எடுத்துக் கொள்வோம். விமர்சனரீதியில் சில கேள்விகளை எழுப்புவோம். நீங்கங்ள் எவருடைய ஆலோசனைகளைக் கேட்டு எழுதினீர்கள்? நாவலின் எந்தெந்தப் பகுதி எந்தெந்த நபர்களின் ஆலோசனை கேட்டு எந்தப்பட்டது? இவர்கள் பகிரங்கத்தில் தெரிய வந்தவர்களா? [மாமன், அத்திம்பேர், பொண்டாட்டி என்றால் அவர்களுடைய இன்டலக்சுவல் தகுதி நமக்குத் தெரியாதே! கிரியா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் என்றால் நமக்குத்தெரியவரும்.) எனவே நமது விமர்சனம் அந்தப் பகுதிகளைப் பொருத்தவரை அவர்கள் மீதுதான் விமர்சனமாக வரவேண்டும், இப்படி ஒரு விசித்திரமான நிலமை விமர்சனத்துக்கே ஏற்பட்டுவிடும். எனவே இதை எல்லாம் புரிந்து கொண்டுதான் அப்படி சொல்கிறாரா என்பதே எனக்குப் புரியவில்லை. இப்படி ஒன்றை ஒரு இலக்கியக்கருத்தாக ஒரு இலக்கியவாதி சொல்கிறார் இதை ஏற்றுக்கொள்கிறது நமது சூழல். ரொம்ப ஆச்சர்யமானதாகவும் ஆபாசமானதாகவும் தோன்றுகிறது இது எனக்கு! 
.....
“““““““““““““““““““““““““