தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, November 19, 2017

எழுத்து நவீனத்துவம் நாகரீகம் - வைக்கம் முகமது பஷீர் : தமிழ் அமிழ்தம்

padippkam.com

WWW tarmilarangan.net

எழுத்து நவீனத்துவம் நாகரீகம் - வைக்கம் முகமது   பஷீர்

தொகுப்பும் தமிழாக்கமும் : எ.எம். சாலன்

1

நவீன கால இலக்கியங்கள் என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை பெண்களின் மாதவிலக்கு, காதல் தோல்வி, போன்ற விஷயங்களாக இருக்கலாம் சில இலக்கியவாதிகள் இம்மாதிரியான விஷயங்களை மட்டுமே எடுத்து வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது தைரியத்தை நான் வாழ்த்துகிறேன்.

அவற்றை நெருங்கவோ அம்மாதிரியான விஷயங்களை எடுத்துக் கையாளவோ எனக்குத் தைரியம் கிடையாது. அந்த  கையறாக்களைக் காண்பது கூட எனக்கு விருப்பம் இல்லை.

லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன்னால் பூமியில் தோன்றிய முதல் பெண்மணியான ஏவாளினுடைய மாதவிலக்கை உலகத்தின் முதல் ஆணான ஆதாம் எடுத்து உபயோகித்ததாகச் சான்றுகள் இல்லை. அதன் பிறகு யுகயகங்களாகக் கோடானு கோடி பெண்கள் இப்பூமியில் தோன்றினார்கள். இப்போதும் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கும் மாதவிலக்கு ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கின்றன. இவர்களுக்கு ஏற்படும் மாதவிலக்கைப் பற்றி நம்மில் சில இலக்கியவாதிகள் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக நாம் அவர்களை பாராட்டிக்கொள்வோம்.

'சில இலக்கியவாதிகள் எனக் குறிப்பிடும் போது பின் நவீனத்துவ இலக்கியவாதிகள் என எடுத்துக்கொள்ளுங்கள். மாதவிடாய் விவகாரம் அவர்களுடைய இலக்கியத்தின் அணுகுண்டு அல்லவா! அதை வெற்றி கொள்ளகூடிய ஓர் ஹைட்ரஜன் வெடிகுண்டை நான் கண்டு பிடித்து நான் எழுதும் கதைகளுக்குள் பொருத்தவேண்டும் என நினைத்தேன். இரவும் பகலும் இதைப்பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அம்மாதிரியான வெல்லும் சக்தி

இலக்கியத்தில் வேறு எதற்கு இருக்கிறது? அது,

ஏவாள் தொடங்கி எல்லாப் பெண்களிடமும் காணப்படக்கூடியதாகவும் இருக்கவேண்டும். ராப்பகலாக நான் சிந்தித்து சிந்தித்து நான் ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டைக் கண்டுபிடித்து என்னுடைய ஒரு கதைக்குள் பொருத்திவிட்டேன்! அந்தக் கதையினுடைய பெயர்தான் "புர்ர்ர்ர்"

ஏமாற்றத்தை அல்லது காதல் தோல்வியை

[ಶಿಸಿà|20||

அடிப்படையாக வைத்து ஒரு சிறு காவியம் படைத்தேன். அது வெளிவந்ததும் தற்கால இலக்கியவாதிகளில் சிலர் என்னை இலக்கிய ஆசான் எனக்கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள், மாத்திரமில்லை! அதோடு அவர்களுக்கு நடுவே உட்காருவதற்காக வேண்டி எனக்கு ஒரு 'சீட் கூடப் போட்டுத் தர ஆரம்பித்துவிட்டார்கள்.

எனக்கு கள், சாராயம், கஞ்சா - முதலிய மதுவகைகளுடைய வாடை அறவே பிடிப்பதில்லை.

நீங்கள் இம்மண்ணில் வந்து பிறப்பதற்கு முன்பே இவற்றுடன் தொடர்புடையவன் நான். சரஸ், கஞ்சா, பாங்க், அபின், மது வகைகள் என இவற்றுக்கெல்லாம் நான் சேவை செய்திருக்கிறேன்.

இவற்றை உபயோகப்படுத்தியதன் மூலம் எனக்குப் புதிய அறிவோ, வெளிச்சமோ கிடைத்ததாகச் சரித்திரம் இல்லை. மயக்க மருந்துகளையும் மதுபானங்களையும் மக்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும். இல்லையெனில் நம் உடல் நலம் கெட்டு மரணத்தின் வாய்க்குள் போய் விழ வேண்டியதாகவிடும். இவற்றையும் மீறி எவராவது இவற்றை உபயோகிக்கிறார்கள் என்றால், உபயோகித்துக்கொள்ளட்டும். ஜனத்தொகையைக் குறைக்க ஒரு வேளை உதவலாம்.

செத்தால் இவைகளையெல்லாம் அதோடு முடிந்து விடும். எனவே உயிருடன் இருக்கும்போதே இவற்றையெல்லாம் அனுபவித்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, மதுபானங்களையும் மயக்க மருந்துகளையும் இந்த விஷயங்களெல்லாம் கதைகளுக்குள்ளும் கவிதைகளுக்குள்ளும் நுழைக்கப்படத்தான் செய்கின்றன. வேண்டுமானால் அது நுழைக்கப்படட்டும்? பரவாயில்லை. மேலே கண்டவற்றுக்கு எதிரான லட்சியங்களும் இருக்கின்றன. பூமியில் தோன்றிய ஜீவராசிகளில் எல்லாம் முதலிடம் மனிதனுக்குத்தான் காரணம் அவனுக்கு ஆத்மா உண்டு. மரணத்திற்குப் பிறகும் வாழும் தன்மை பெற்றவன், அவன். கடவுளும் இருக்கிறார். ஆனால் சிலர் அவரை இல்லையென்று சொல்லுகிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு இலக்கியப் படைப்புகள் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.

இவையெல்லாம் காலங்காலமாக நம் பூமியில் உள்ளவைகள்தாம். இதில் எதுவும் புதிதாக ஒருவராலும் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல! இது இந்தியாவுக்குள்ளும் இருந்தது; ஐரோப்பாவிலிருந்தும் கதைகள் வழியாக இக்கருத்துக்கள் ஏராளமாக வந்திறங்கின.

உதாரணத்திற்கு நாம் வைத்திருக்கும் கிருதாவை எடுத்துக்கொள்ளுங்களேன். இது எங்கும் பின்பற்றப்பட்டு வருவதைப் பார்க்க முடியும். இதை வைத்துக்கொண்டு திரிவதனால் என்ன லாபம்? அழகு அதிகரிக்குமா? பெரிய கிருதா வைத்திருக்கக்கூடிய ஒரு பிரபலமான திரைப்பட இயக்குநரைக்கண்டு நான்

தமிழ்த் தேசிய ਮੁਗਰੋਂ ।

________________

WWW familarangam.net

கேட்டேன் : "எதுக்கு இதுமாதிரி கிருதா வைத்திருக்கிறீர்கள்?" என

அதற்கு அவர் சொன்ன மறுபடி : "இதுதான் நாகரீக மனிதனுக்குரிய அடையாளம்" என்று.

"சியாமுதீன் அகமது ஒரு அரபு பண்டிதர். அரேபியாவில் - மதினா பல்கலைக்கழகத்திலிருந்து அரேபிய மொழியில் படித்துப் பெரிய பட்டம் வாங்கியவர். அவர் எனது நாவலான இளம் பருவத்துத் தோழி" யை அரபு மொழியில் மொழிபெயர்த்து மெக்காவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பப்போகிறார்.

உங்களுடைய சம்மதம் கிடைத்தால் போதும்' என்றார், 6.TašTaaf) b,

அவர் சொல்கிறார்: "பள்ளிக் கூடத்தில் படிக்கும் குழந்தைகள் பெஞ்சுகளையும் நாற்காலிகளையும் அடித்துப்போட்டுவிட்டு ஊர்வலம் போகிறார்கள். அருகிலுள்ள கடைகளைக் கல்லால் அடிக்கிறார்கள். இங்கேயுள்ள குழந்தைகள் எவரைக் கண்டும் பயப்படுவதில்லை. இவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளும் இங்கே இருக்கிறார்கள். எண்ணிப்பார்க்கும் போது நம்முடைய எதிர்காலம் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது. அரேபியாவில் பள்ளிக்கூடங்களும் காலேஜீகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அங்கே போராட்டங்கள் இல்லை. பொது வேலை நிறுத்தங்கள் நடைபெறுவதில்லை. அங்கேயுள்ள சனங்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கும் கடைகளில் சிலவேளை சிப்பந்திகள் கூட இருப்பது கிடையாது. ஆனால் தருணம் பார்த்து அதனுட் புகுந்து ஒருவரும் திருட முயல்வதில்லை, காரணம், திருடுபவனுடைய கைகள் அங்கே வெட்டப்படும். ஒரு மனிதனைக் கொலை செய்தால், கொன்றவனுடைய கழுத்தை அறுத்து அகற்றிவிடுவார்கள். அங்கே இங்குலாப்பும் இல்லை.

கம்யூனிஸ்டு ரஷ்யாவிலும் சீனாவிலும் மாணவர் போராட்டமும், வேலை நிறுத்தமும் உண்டா, 6TGö7687Galfri

இல்லையென்று நினைக்கிறேன்!

-சியயமுதீன் அகமதுவிற்கு ஒரு "சாயா வழங்கி விட்டு நானும் ஒன்று குடித்துக் கொண்டேன். பிறகு சம்மதப் பத்திரம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன். அவர் அதைப் பெற்றுக்கொண்டு எழுந்து சென்றார்.

வேண்டுமானால் நவீனத்துவம், பின்னை நவீனத்துவம் - இந்த இரண்டையும் இன்று எடுத்துக்கொள்ளலாம். அனேகம் கோடி நவீனத்துவம் - பின்னை நவீனத்துவமுமான இன்றுகள் எவ்வளவோ கடந்து போய்விட்டன. அவற்றுள் ஒவ்வொரு இன்னம் பின் நவீனத்துவமாகின்றன. ஆயிரம் வருடங்கள் கழிந்த பிறகு 'பின்னை நவீனத்துவ இன்றுகள் மேலும் வரும். ஆயிரம் வருடங்கள் கடந்த பிறகு மனிதனுடைய நிலை எவ்வாறு இருக்கும்? அன்று நாம் ஒருவரும் இப்பூமியில் இருக்கமாட்டோம், நம்முடைய பெயரும் - பின்னை நவீனத்துவம் - இலக்கியமும் மாய்ந்துபோய்விடும்.

அதெல்லாம் போகட்டும். மனித சமூகம் இந்த பூமியில் தோன்றி லட்சோப லட்ச ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு என்னவெல்லாமோ நிகழ்ந்து முடிந்துவிட்டன. பல மதங்கள் தோன்றின. அநேகம் மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் பல இன்று சுலபமாகக் கிடைப்பது ரோமங்கள் மட்டும்தான். அது இருந்தால் இன்று என்னவேண்டுமானாலும் நிகழ்த்திக் காட்டி விடலாம்.

-இப்படிச் செய்வதை "மாடர்ன் என்றோ,'லேட்டஸ்ட் மாடர்ன் என்றோ நாம் சொல்லிக்கொண்டு திரியலாம்.

இன்று முடியை நீளமாக வளர்த்து, எண்ணெய் தேய்த்து வாரப்படாத சகிரி போன்ற முடியை - பேன் உடையை நாற்றம் பிடித்த இளைஞர்கள் - நாகரீகம் எனச் சொல்லிக்கொண்டு அலைகிறார்களே. இவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றி எண்ணும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு நானும் "மாடர்னாக நடந்தவன்தான்!

அக்காலத்தில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் தலையை மொட்டையடித்து - சில்லறைத் தாடியைச் சுமந்துகொண்டு நடப்பது வழக்கம் அதுதான் அன்றைய முஸ்லீம்களின் தோற்றம், முடி வளர்ப்பது செய்யக் கூடாத காரியம். இம்மாதிரியான விதிவிலக்கு எங்கிருந்து வந்தது? 'இஸ்லாம் குடிகொண்டிருப்பது முடியிலா? ஆண்கள். முடிவளர்க்கக்கூடாது எனில், தெய்வம் எதற்கு ஆண்களுக்கு முடியைத் தந்தருள வேண்டும்? பெண்களில் முகத்தில் முடிவளர அனுமதிக்காத அல்லா, ஆண்களின் முகத்தில் ஏன் முடியை வளரச் செய்யவேண்டும்?

இஸ்லாம் மதத்தின்படி முடியை வளர்த்திக் கொள்ளலாம். ஆனால் அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். நான் முடியை வளர்த்தியெடுத்து "கிராப்' கட்டிங் செய்துகொண்டேன். வானம் இடிந்து வீழ்ந்தது எனச் சொன்னதும் எனது குடும்பக்காரர்களும் ஊர்ப்பிரமுகர்களும் குதித்துக்கொண்டு ஓடிவந்தார்கள். ஆனால் எனது

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

assay 21 |

________________

www.tamiarangannel

'வாப்பா மட்டும் என்னை ஒன்றும் சொல்லவில்லை.

மதப்பிரமுகர்களெல்லாம் என்னைப் பார்த்து

உறுமினார்கள்.

'உன்னை இஸ்லாம் மதத்திலிருந்து விலக்கிவிடுவோம் என்று என்னைப் பயமுறுத்தினார்கள்.

வேண்டுமானால் விலக்கிக்கொள்.

இஸ்லாம் மதம் அழிந்து போக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் பலவந்தமாகப் பிடித்து நிறுத்தி முடியை வடித்தெடுப்போம்.

நியாயந்தான்! அன்று என் கையில் ஒரு ஒம்பது இஞ்ச் நீளத்தில் பளபளக்கும் கூர்மையான ஒரு கத்தி இருந்தது. அந்தக் கத்தியை யெடுத்து ஓங்கியவாறு நான் சொன்னேன்: 'சாகணும்னு எவனுக்காவது ஆசையிருந்தா - எம்முன்னால் வந்து முடியை வெட்டி மாற்ற வரலாம் உஷார்"

அன்று யாராவது ஒருவர் கற்றை முடிக்காக வேண்டி என்னிடம் வந்திருப்பார்களேயானால் நான் அவர்களைக்கொன்றிருப்பேன், இல்லையா? செய்திருக்கமாட்டேன் எனத் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. முடியைக் கத்தரித்துக்கொண்டு நவீன மனிதனாக நான் அன்று சுற்றியலைந்து கொண்டிருந்தேன். தலையில் எண்ணெய் தேய்க்கமாட்டேன். "சகிரி மாதிரி இன்றைய இளந்தலைமுறையினைரைப் போல அலைந்துகொண்டிருந்தேன். ஆனால் நான் அக்காலத்தில் தினமும் தவறாமல் குளித்து விடுவேன். அதனால் என் சரீரம் நாற்றமடிப்பதில்லை. ஆனால் தாராளமாக என் தலையில் பேன் கிடந்தது. தலையில் பயங்கரமாகச் சொறியெடுக்கும். சொறிந்து சொறிந்து நான் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். பறட்டைத் தலை பராமரிப்பு ஒன்றும் கிடையாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தலையிலுள்ள முடியுதிரஆரம்பித்தது. ஆக, இறுதியில் முழு

வழுக்கைத் தலையானானேன்.

இலக்கியத்தில் ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்கும் இடையே ஒரு பாகு இடைவெளி ஏற்படும். மொழி வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதன்மூலம் நாம் புதுப்புது அறிவைப்பெற்று வருகிறோம். அதன் மூலம் மனிதன் புதிய சாதனைகளைப் படைக்கிறான். சட்டங்கள் உருவாகின்றன. வசதிகள் பெருகுகின்றன. அவ்வேளையில் அதில் சில பழையதாகிறது. சில அழிந்து போகிறது. இந்த வேளையில்தான் தலைமுறைக்குத் தலைமுறை சின்னவெளி ஏற்படும்.

எதற்காக எழுதுகிறோம்? அதைப்பற்றி நான் கிஞ்சிற்றும் சிந்தித்ததே கிடையாது. ஆனால் விடாமல் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன்.

என் மனதில் தோன்றியவற்றைப்பற்றியெல்லாம், எழுதினேன். இப்படித்தான் எழுதவேண்டும்' என்று எனக்கு ஒருவரும் உபதேசம் செய்தது கிடையாது.

[ಶಿಸಿà| 22 ||

5մլիք ճքքա Յյ51615 հ6ննե5ն

நானாகவே பிறகு என் அனுபவங்களைக் கதைகளாக்க முயன்றேன். அளவுக்கு அதிகமாகக் கஷ்டங்கள் அனுபவித்தவன் நான் எராளமான நாட்கள் பட்டினியும் கிடந்திருக்கிறேன். சொல்லமுடியாத அளவு துன்பங்களையும் அனுபவித்திருக்கிறேன்.

ஓர் இலக்கியவாதியானதில் திருப்திதானா? (பவரே தன்னை நோக்கிக் கேட்டுக்கொள்கிறார்.)

வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பெரிய பெரிய கனவுகள் ஒன்றும் இல்லாததினால் திருப்தி என்று சொல்லிக்கொள்ளலாம். மலையானி மொழியானது ரொம்ப சின்னமொழி. அது ஒரு சிறுவட்டம் மாத்திரமே அக்காலத்தில் எழுதுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவு என்றாலும் அதன் மூலம் பட்டினி கிடக்காமல் காலத்தை ஒட்டினேன். அவ்வளவுதான். எழுதுவதைத் தவிர எனக்கு வேறு ஒரு வேலையும் தெரியாது. கதைகள் எழுதுவதிலிருந்து வரும் வருமானத்தை யொழித்தால் எனக்கு வேறு வருமானமும் கிடையாது.

மனித குலத்திற்குச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதுநாள் வரையில் நான் குறிப்பிடத்தக்க முறையில் ஒன்றையும் சொல்லிவிடவில்லை. குறைவான அறிவு: குறைவான அனுபவங்கள். சிறு 'பாவனை' - இவற்றை மட்டுமே கைப்பொருளாகக் கொண்டு பலகதைகள்

3

வழியே சிறு விஷயங்களைப் பற்றி நான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

ஒரு முக்கிய இலக்கியவாதிக்கு மனித குலத்திற்குச் செய்யவேண்டிய கடமைகள் உண்டா? நம்முடைய இலக்கியவாதிகளில் சிலர் இல்லையென மறுக்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஓர் இலக்கியவாதியினால் மனிதர்களை மோசமானவர்களாக்க முடியும். வாழ்வின்மேல் வெறுப்பையூட்ட முடியும். இம்மாதிரியான படைப்புகளும் நம்மிடையே உலவுகின்றன.

ஒரு இலக்கியவாதியினுடைய படைப்புகள் அனைத்தும் அவன் இப்பூமியை விட்டு மறைந்து ஐம்பது வருடங்கள் ஆகும்போது அது பொதுசொத்தாகிவிடும். இது சட்டம் யார் வேண்டுமானாலும் அச்சடித்து விற்பனை செய்து கொள்ளலாம். நாம் எல்லோரும் நன்மையின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.

கண்டபடியெல்லாம் எழுத வருங்காலத் தலைமுறையினரை மோசமானவர்களாக்க வேண்டுமா? இன்றைய மனிதர்களையும் மோசமாக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாம் பிழைப்பதற்கு நம்முடைய நாட்டில் எவ்வளவோ தொழில்களெல்லாம் இருக்கின்றன: நான், நன்மையின் மேல் நம்பிக்கையுள்ளவன், பெளதீக விஷயத்தில் நம்பிக்கை கொண்டவன். மனித குலத்திற்கு இதை விட ஓர் ஒளிமயமான காலம் அமையப்போகிறது என எண்ணுபவன். மனிதனுக்கு

________________

www.tamiarangan.net

ஒருபோதும் மரணமில்லை என்ற கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவன். அண்ட சராசரங்களையும் சிருஷ்டித்த தெய்வத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவன். அந்த தெய்வத்திற்கு உருவம் கிடையாது என்பதில் நம்பிக்கையுடையவன். தெய்வம் கருணையுள்ளவன் என்றும் நம்புபவன்.

இங்கே நன்மையும் தீமையும் இருக்கின்றன. நல்ல பழங்களும் அழுகிய பழங்களும் உண்டு. நாம் நல்ல பழங்களையே சாப்பிடவேண்டும்; நல்லதையே செய்யவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, வழிகாட்டவேண்டும். மேலே நாம் கண்ட சிந்தனைகளை நீங்கள் எனது கதைகளிலும் காணமுடியும். அந்தச் சிந்தனைகளில் பல என்னையும் ஆகர்ஷித்திருக்கிறது. நான் எழுதிய கதைகளில் சிலவற்றை நான் கிழித்தெறிந்திருக்கிறேன். என் மனதில் தோன்றிய விஷயங்களில் பலவற்றை நான் எழுதாமலும் விட்டிருக்கிறேன். எழுத எழுதப் புதிய உள்ளடக்கங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. நம்முடைய சொந்த அனுபவங்களாக இருந்தால், நம்மால் அவற்றை நம்பிக்கையோடு சொல்லிச் செல்லமுடியும் (படைப்பாக்க முடியும்) என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் எனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவைகளே! விஞ்ஞானமும் என்னைக் கவர்ந்திருக்கிறது.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பயங்கரமான இருள், கடல், மலைகள், பாலைவனங்கள், நதிகள், பிரபஞ்சம் - இவை அனைத்தும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேதானிருந்தன.

நான் காதலாக இருந்திருக்கிறேன். அரசில்வாதியாக வாழ்ந்திருக்கிறேன். எனக்கு எப்போதும் சுதந்திரனாக இருக்க இஷ்டம் அடிமைத்தனத்திற்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். போலீஸ்காரர்களிடமிருந்து அடி - இடி - உதை போன்றவற்ற்ை வாங்கிக் கட்டியிருக்கிறேன். அவர்கள் வாயிலிருந்து வரும் கெட்ட வார்த்தைகளையெல்லாம் கேட்டிருக்கிறேன். போலீஸ் லாக்கப்புகளில் அடைக்கப்பட்டிருக்கிறேன். பல நாட்கள் ஜெயில் தண்டனைகளை அனுபவித்திருக்கிறேன். இவையெல்லாவற்றையும் வைத்துக் கதைகளும் எழுதியிருக்கிறேன்.

எதற்காக எழுதினேன்? வாசகர்கள் படித்து ரசிப்பதற்காக வேண்டி நல்ல சிந்தனைகளை உணர்த்துவதற்காக வேண்டி 4.

"நவீன இலக்கியம் என ஒன்று இருக்கிறதா? என்று கேட்டால், நவீனமான 'இன்று இருப்பதுபோல், இலக்கியத்திலும் காணக்கிடக்கிறது. நான் முன்னர்க் குறிப்பிட்டது போன்று இன்று நேற்றாக மாறும் நூறு நூறாயிரங்கள் வருகின்றன. அவை அனைத்துமே நேற்றுடன் போய்ச் சேர்ந்துவிடும். இப்படி தினசரி அனைத்துமே போய்க்கலந்து கொண்டேதானிருக்கும். மனிதனுடையதாக - மேகங்கள், உடலுறவு, உறக்கம்,

இவையனைத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை, லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவேதான் அவைகளையெல்லாம் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றன. யுத்தங்களும் நோய்களும் வறுமையும் அன்றும் இன்றும் போலத்தான் இருந்து கொண்டிருக்கின்றன. நவீன 'மனிதன் இன்றுகளில் நின்று கொண்டு பல சாதனைகளையும் புரிந்திருக்கிறான். இதற்காக வேண்டித்தான் கடவுள் மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்திருக்கிறான். இலக்கியவாதியும் ஓர் மனித ஜீவியே! சக்தி ஒருபோதும் ஒரே நிலையில் இருந்துகொண்டிருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. நம் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் மாறுதல் ஏற்படும்.

தயவு செய்து ஒருமுறை எழுதிய கதைகளை மாதிரி மீண்டும் மீண்டும் எழுதாதீர்கள். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள். நான் கதைகள் எழுதும் போது இம்மாதிரி நிகழாமல் இருக்க, கவனமாக இருப்பேன், அப்படி இல்லையென்றால் நான் எழுதிய ‘என்னுடைய உப்பாவுக்கு ஒரு யானை இருந்தது என்ற நாவல், எனது இளம் பருவத்துத் தோழி என்ற நாவலைப் போன்று அல்லவா அமைந்திருக்கவேண்டும்.

என்னுடைய உப்பாவுக்கு ஒரு யானை இருந்தது' என்ற படைப்பிலே பயங்கரமான சோகத்தை ஹாஸ்யமான முறையில் வெளிப்படுத்திவிட்டேன்.

எழுதியது மாதிரி, திரும்பத் திரும்ப எழுதுவதற்கு அதிக சிரமம் ஒன்றுமில்லை. ஆனால் அப்படி எழுதக்கூடாது என்பதால்தான், நான் அந்தமாதிரி எழுதவில்லை. நாம் எழுதுவது (படைப்பது) ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானதாக இருக்கவேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போன்று மனதில் தோன்றிய பலவற்றையும் எழுதாமலும் விட்டிருக்கிறேன். வாசகர்களுக்கு இதனால் என்ன லாபம்?

நான் படைப்புத் தொழிலில் ஈடுபடும் பொழுதெல்லாம் இந்தக் கேள்வியை என் கண்முன்னால் நிறுத்தி வைத்துக்கொள்வேன். வாசகர்களை அழவைத்து நாம் அவிர்களது மனதைச் சுத்தப்படுத்தவேண்டும், அல்லது சிந்திக்க வைக்கவேண்டும். இவைகளையெல்லாம் எந்த அளவுக்கு இலக்கியத்தில் உட்படுத்தப்பட்டிருக்கிறது என வாசகர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, எழுதுவதற்கு இப்போதும் எனது கையில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு நேரந்தான் இல்லை. (பவர் இங்கே தனது முதுமையைச் சுட்டுகிறார்) இறைவனடி சேர்ந்த பிறகுதான் இனி எனக்கு எழுத நேரம் கிடைக்கும்!

மரணம் எப்போது எனத் தெரியவில்லை என்றாலும் நான் எழுதிக்கொண்டேயிருக்கிறேன் எழுதிக்கொண்டிருப்பதை எழுதித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

'ಶಿಸಿà|23||

ਸ਼ੁਰੀ, ತಙ್ಗಹಾ।