தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, January 21, 2018

உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை - கோணங்கி : நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 11_1995.

WWW.padippakam.Com
நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு
சிறுகதை


உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை - கோணங்கி




அன்புள்ள மார்க்ஸ் அவர்களுக்கு தாமதமாகிவிட்டது பிரதியை திரும்பத் திரும்ப முடிக்க.


நிறப்பிரிகை இலக்கிய மலருக்கு.

கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் மரத்தில் முகத்தை மோதி ரத்தமும் புனைவும் ஒழுக ஊளையிட்ட அலிகளின் ஒலம் பத்தாயிரம் நரிகள் சிரித்த தான வாதவூரார் 'அன்று இரவில் பரி கள் நரியாக மாறி சிரிசிரியென சிரித்த 5ானகச் சிரிப்பு தோற்றம் கொள்ள உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை.


பதிவு :

27-6-96.

முன் அறியப்படாத உயரமான மஞ்சள் நிற அலியின் தலைமுடியின் வாசனை அந்த அறையை ஊடுருவி இருளில் புறண்டு மூச்சு விட கருங்குழல் நாசிகள் கைகளில் ஈரம் படரத் திறந்து கொண்ட ஒற்றை முடிச் சுருளில் இவன் இருள் கோடாய் நீண்டு நகர்ந்து கீழிறங்கிய அலியின் கேச அலைப் படிகளில் சுவாசித்த கல்மூங்கில் குரல் பல வாய் மாறி மாறித் தேம்ப புதர் நரம்புகள் விம்மி எழுந்த வெந்நாகப் பூவால் அதிரும் வண்டுகளின் மோனம் முகம் முகவாய் வந்து குழல் மூங்கிலைத் துளைந்து ரீங்காரமிட தீவிரமாய் எரியும் காற்றை செங்காந்தள் விரல் வளைத்துச் சுருட்டும் இசை துடித்து ஒடும் நடுக்கத்தில் அதுவரை கேட்டிராத மிருக உறுமல் கல் மூங்கிலில் ஊடாடி அலறித் தொலைந்து மஞ்சள் அலியின் வியர்வை நெடி அரும்பி மெல்லிய ஒநாயின் ஊளையாய் பரவி பூவின் அருகே செல்ல ஒநாய்களின் மெளனமான கேள்விகள் ஏன். எங்கே. என பிலத்தில் மின்னிய பளிங்குப் பற்கள் தீமுறிப்பூண்டு வாசனை நெடிக்க பற்களின் ஊசிஒளி கண்களாக மாறி ஈர்த்த கற்சுவர் சூழ்ந்த குகையில் வெறிமிக்க குரைப்புகள் ஆழத்தில் தேய்ந்து நாலுகாந்தப் பூவைத்தொட மஞ்சள் நீள விரல் படியில் கல்மூங்கில் மூச்சுக்குள்ளிருந்த சிறுத்தைத் தோல்கொண்ட யுவதி வால் சுழற்றிச் சிரித்தாள் அருகில்.

கரையும் கல்மூங்கில் பாசீ. பாசீ என தண்டில் சுட்ட தீத் துளைகள் ஆயிரம் வாசித்த மிருக மூர்க்க மூச்சின் நிறம் கலந்து சிறுத்தை முகம் திரும்பிப் பார்த்தது மஞ்சள் அலியை, எலும்புகளுக்குள் புகுந்து சுழலும் காற்றில் சிறுத்தையின் பாடலை வாசித்தான் மயங்கியவாறு மறைந்த மிருகத் தாலி உறிந்து அதிரும் ஊனின் வெறிமிக்க வாத்தியம் காட்டுப் பகடைகள் முழக்க சுடுவனப் புலால் கடிபடும் எலும்பின் ஓசை சிக்கிமுக்கியில் உராய பரவும் தீயில் தவில் விரல்கள் எரிந்து பரபரக்க அலியின் காதருகில் இல்மூங்கில் அசைந்து விலா எலும்புச் சுருளில் சரம் ஒட ரத்தம் சூடேறப் பாடு சிறுத்தையின் பாடலை. சலஞ்சலச் சங்கும் வலம்புரியும் கபாலங்களால் ஊத கருங்கிளி பாடுகிறது அதோ' என்றது கல்மூங்கில். ‘கருங்கிளிதான் பாசீ சகஜாதி என அறியப்பட்ட சதுர் கூடத் தூணில் மறைபவள்’ என கலமூங்கில் ரகசியம் சொல்ல சிறுத்தையானாள் பா சீ. ரகஸியக் குகையில் கருங்கிளி மறைந்து சொன்ன குகையின் வடிவத்தை துளை துளையாய் திறந்து மூடி மறைத்து மூச்ச விழ்த்து சொன்னது கல்மூங்கில்.

உப்புக்கத்தியுடன் சிறுத்தைக்கு அருகில் சென்று பாசீ. என கொஞ்சமாக முனகினான் அலி. பாசி. இல்லை" என்றது கருங்கிளி மறைந்தவாறு உப்புக்கல் பலகையில் கத்தியை ஒடவிட்டு மடித்துத் திருப்புகிறான் உரசி. சிறுத்தையின் கண்ணுக்கும் நாசிக்கும் மிக நெருக்கமாக நகர்த்தி அதன் மென்தோலில் படாமல் நக அளவு இடை வெளிமேல் தீட்ட வடிவொத்த சிறுத்தை யொன்றின் ரூபத்தை அபிநயித்து கத்தியால் றிே கோடுகள் பதித்தான் வேகத்தில், நழுவி ஒடிய சாம்பல் கத்தியின் வெளிச்சத்தில் உதிர வாசனையை நுகர்ந்து கேவுகிறான் சப்தமில்லாவல். சிறுத்தையின் மூச்சு வெப்ப மாய் கத்தி விளிம்பைத் தொட எரியும் குருதியின் இசை கூர்முனையில் நடுங்கி நேர் பளபளப்பில் ஊர்ந்து நகரும் எரியும் குருதி கல்மூங்கிலில் துகள் துகளாய் உறைந்த உப்பாகி மூங்கில் இசையை உறையவைத்த உதிர உப்பு சாம்பல் வனங்களின் காற்றாகி பயங்கரச் சடங்குகளில் ஊதும் பாஞ்ச சன்னியமெனும் வலம்புரி அடைத்த மூச்சு விம்மி பாறைகளும் குன்றுகளும் உப்புப் பளிங்குகளாய் வெண்மை கொள்ளும். இவனை ஆட்கொண்ட மூச்சின் திணறலோடு உப்புக் கத்தியால் காற்றை துண்டிக்க ஒடிஓடி உறைந்து போகிறான் காலத்தில்.

உப்புப் பாறை மீது சிறுத்தை அமர்ந்து பாஞ்சசன்னிய முழக்கமிட சாம்பல் வனக் குன்றுகளில் மறுகுரல் கேட்கும். கல்மூங்கில் உப்புத் துளைகளில் சிறுத்தைப் பெண்ணின் நாசி ஈரம் தொட மெல்லிய வெண்குருதியோடு காற்று கரகரக்கிறது. உப்புக்கல் பறக்கும் வனமூங்கில் காற்று அநாதியில் உறைந்த குரல்களோடு மீண்டு வர உறைந்த விலா எலும்பிலிருந்த மூச்சு சுழன்று பறவைக் கூட்டமாய் உள் சுழல்கிறது. பறவைக் கூண்டெனும் சிறுத்தையின் எலும்புக் கூடில் சுண்ணாம்புநிற் கடல் ஆலாப்பறவை அலைவுறுகிறது துயரத்தில், பாஞ்ச சன்னிய முழக்கத்தில் பறந்த சுண்ணாம்பு நிற ஆலா கிறீச்சிடும் உப்புவனப் பாறைப் பிள்வுகளின் மூச்சு சிறகில் படர சிறுத்தையின் பாடல். பில வாயில் திறந்து அழைக்கும் வெண்சாம்பல் ஆலா அலறிப் பறக்கும் உப்பின் பளபளப்பான வளி மண்டலச் சூறையில் சிறகு பதித்த தடம் உறையும் மெல்ல.

நெஞ்சுத்தடம் மீதுவைத்த சிறுத்தையின் காலடி கவ்விய நகப்பிடியில் இவன் ஈரல் காமத்தில் எரிகிறது காந்தலாய், சிறுத்தையின் அருகில் திரும்பிய உப்புக்கத்தி கேச அலையை நீவி அதன் அலாதிக் கஸ்தூரி நெடியில் மூழ்கிய கத்தியின் வெளிச்சத்தை தவறவிட மெல்ல சரிந்து நழுவி அலைகளுக்குக் கீழே சென்று மூழ்கியபடி பளிச்சிடும். தைல அலைமிதப்பின் ஆழ்தொலைவில் தத்தளிக்கும் உப்புக்கத்தியில் சுடரும் அசைவில் பருகாத குருதி நெடிக்கசிவின் துர்கந்தம் கருநத்தையின் நீலநிற ரத்தம் கத்தியில் கோடாய் நீண்டுவர குரல் அறு பட்ட புள்ளொலிக் கூட்டமும் மீன் எறி சிரல் பறவையின் இனிய ரத்தமாகி சாம்பல் கத்தி ஊர்கிற அலையலையான கேச அலைச் சுருள் படிகளில் அலறும் குருதி தோய்ந்த சிச்சிலி சிறுபறவைகள் வழிமாற பாறைகளில் அலகு தேய்த்த பூழான் பறவைகள் இருளில் புதுங்கி வா. வா. என அழைக்கும். கேசச் சுருளில் இறங்கி மஞ்சள் அலியின் நிசப்தமான ஞாபகப்பரப்பில் கால்படாமல் உப்புவனத்தின் வெண் நிறப்பரப்பில் நடந்து போகிறாள் தனிமையில், உள்கொண்ட வெறுமை வெளியில் படர்ந்து மயக்கமடைந்து உப்புப்பாறையின் அடியில் சிறுத்தையின் தடம் பற்றி உள்போய் உள் போய் மயங்கித் திரிந்து கொண்டிருக்கிறாள் தீராமல், வளைத்துக் கொண்ட மிருகங்களின் கண்களில் வெண்பூ இதழ்விரிந்த நிலப்பரப்பில் முன் அறியப்படாத மஞ்சள் அலியின் வாசனைகளில் என்றுமே காணாத பெண்சாயைகள் நிர்வான விளிம்பில் மிருக வால் சுழற்றி கண்களை மூட அருகே போய் வெப்பம் தாங்காமல் கதறுகிறாள் மிருகங்களைக் கண்டு. அவற்றின் மாம்ச அணைப்பில் நழுவிவிழுகிறாள் பாறைகளில்,

குறுத்துப் பாறையில் அமர்ந்து நட்சத்திர ராசிகளோடு உரையாடும் சிங்கத்தை அருகில் காண விரல் நீண்டபோது அதன் கேசக்கற்றையில் கதிர் விரியும் சூரியன் ஒலத்துடன் பறந்து சரிகிறது கீழே. சிங்க முடி அடர்ந்த கட்டுக் கட்டான மஞ்சள் அலி மீது சிவந்த அலகைத் துடைக்கும் கருங்கிளி தேய்ந்த அவன் அடையாளம் உப்புவனத்தின் படிவாய் சிக்கி இருப்பது கண்டு சிறுத்தையிடம் சொல்லி வர பில வாயில் திறந்து உள்சென்று புலம்பியது மெதுவாய். வெண் தந்தமான தொலியில் மயங்கிய பறவை அலகால் இவனைக் காட்ட பாறைகளிடையில் நிர்வாணமாய் ஒடுகிறான் கத்தியுடன்,

பாறைப்பிளவில் யுவதியின் தேகம் கீறி வெளிப்பட்ட ரத்த உப்புகள் கசியும் ஒரு துளி நீலநிற நத்தைச் சுருளில் சுழன்று நெருங்க கேச அலையால் தாக்கப்படுகிறான். நழுக்கென்று அரவங்களாய் நெளி யும் சாவதானமான கொடிகளில் நீலப் பணி நுரை கக்கும் வெள்ளிப்புழுக்கள் நெளிந்தோட பனி உமிழ் படலத்தில் அரை மயக்கமாய் மிதந்து கொண்டே நழுவிய கத்தியை விரலால் தொட ஒவ்வொரு விரலிலும் தீண்டிய கீறலில் ரத்த உப்புக்கல் விரல் இடுக்கில் மறைந்து ஒளிர்கிறது ஜுவாலை'யாய்.


பாசி அருகில் நெருங்கி மார்பில் பதித்த உப்புக்கல்லை அருந்தக் கொடுக்கிறான் தாபத்தில், அவள் உடல் தோல் கடந்து உள் புகுந்த கல் உப்பின் கரகரப்பான காரல் வேகத்தில் சாவின் அருகில் சென்று திரும்பி அழைக்கிறாள் தாது. அவன் அதரத்தில் சாம்பல் நீலக்குருதித் துளி இடம் மாறி ஒட்டிக் கொள்கிறது இலஸ் நாசியில் அதை மஞ்சள் அலியின் கேச அலையில் கழுவிக்கழுவி வாசனையூட்டுகிறாள். உதிரத்தூளின் நெடி மூச்சை அடைக்கிறது.ஏனோ மஞ்சள் அலியின் சாம்பல் நீலக்குருதி கரைய மறுக்கும் பாதரஸம். அதில் அசையும் ஒற்றை முடிச்சுருளின் ரகஸியத்தில் தீவிரமடையும் சிறுத்தையின் ஒலம் உப்புக்கத்தியின் ஒளியில் பாய்ந்து ஒடுகிறது கானகத்தில். பாசீ. என்றான் கேவலின் ஊடே கத்தி மீது பதித்த பார்வையை திருப்பாமல், நிலை குத்தி வெறித்த சாம்பல் நீலக் குருதி அருகில் முன் அறியப்படாத சிறுத்தையின் உதய கால வெளிர் பிரதேசத்தில் நெருஞ்சிகளும் அருகும் நில ஆவரைகளும் வெண்பூடுகளின் காரநெடியும் பரவி ஆட்கொண்ட நினைவு களில் உயரமான அலியின் சாயைகள் ஊடுருவிய பழுப்பு மஞ்சள் பிரதேசத்தில் சூரியோதயத்தின் குளிர்ந்த வட்டத்தில் பறவைகளும் இலைப்பூச்சியும் குச்சித்தட்டாணும் வண்டு சளும் சுழன்று சுற்றி மென்துகள்கள் தொலைவில் வட்டமிட்டு வெளிர் மஞ்சள் வெப்பமாய் சுற்றிவர வெண்நகங்களை சூரியன் மீது தீட்டும் மிருகங்களின் விடி காலையின் வெம்பரப்பில் மிதந்தது காடு.

இவன் உடலைச்சுற்றிக்கொண்ட சிறுத்தை வால் நுனியில் அலகுதேய்த்த கருங்கிளி பேசியது அவளிடம் “பாசீ. சாம்பல் உப்புக்கத்தியால் குருதி உறிஞ்சப்படும் வரை பேசமுடியவில்லை என்னால், இக் காமுகன் பழைய-எரிது-நகரின் பாழ் அறைகளில் ஜீன்களாகி அலைவுறும் யுவதிகளின் துயிலில் ரகஸியமாய் சென்று உப்புக்கத்தியால் சுரோனிதப் பைகளைக்கீறி மர்மமான கமலக்கல்லை எடுத்து தன் சுருளும் கருநத்தைக் கண்கள்மீது பதித்து கண்மேல் கல் சுழற்றி புதிர்பார்வையில் வேறொரு தாவர கிரகப் பூச்சியின் பச்சை மோப்பத்தை நுகர்ந்து ஞாபகங்களின் பார்வையால் சுரோனித நெடியில் காமுறுகிறான் பலரிடம், உருவமில்லாத் ஜீன்கள் காத்திருக்கிறார்கள் பரம்பரையான தாம்பத்தியகட்டில் குமிழ்கள் உள்ளே'

கருங்கிளி விரித்த பாதரஸப் பரப்பில் மயங்கியவாறு இவன் சிறுத்தையின் வாலில் சிக்கியிருந்தான். சுருளும் ரத்தக் கண்ண்ல் சுரோனிதக் கமலத்துளையில் சிசுக்களின் நீச்சல் பிரபஞ்சமெங்கும் பறந்து சிறுபுள் இறகுகளைக் கோதி இவன் கண்பர்ப்பில் வரைகிறார்கள் வோறொரு கண்களை. கமலக்கல் பட்டைகளில் வெட்டப்பட்ட பிறவாத குழந்தைகளின் லிபி அசைந்து பார்வைப் பரப்பில் இழுத்த கோடுகளில் மிருகங்கள் மீது துயில்கிறார்கள் சிறகு குவித்து. அதை அறியும் கருங்கிளி பேசியது பதற்றத்துடன் "ரத்த விடுதிகளில் வாடும் பும்மை தூணக்காரர்களின் உடல் விளிம்புகள் உப்புக்கத்தியால் தொட்டு கத்தி வெளிச்சத்தில் மறைகிறான் இருளில், தாது எனும் வசீகர அலியான இவனைத்தேடி யார் வருகிறார்கள் ரகஸியமாய்' என்றது.

பழங்கண்ணாடி வேவுபார்க்கும் பாழ் அறைக்கு ரகஸிய அலிகளும் யுவதிகளும் வந்து உப்புக்கத்தியை தேடுகிறார்கள். சாம்பல் கத்தியில் மறைந்த ரகஸியக் கடிதங்களை எரிப்பதற்காக அந்நகரின் வேசைகளும் அலைந்தவாறிருந்தனர். எல்லோரது   கால் தடயங்களையும் கண்ணாடியில் மஞ்சள்தாது நிர்வாணமாய் நின்று கேச அலைச்சுருளை விரித்து அலை பாய சுழற்றுகிறான். ஒவ்வொரு முடிச் சுருளும் தவித்து தானே வாய் திறந்து மூச்சு விட மஞ்சள் அலியின் உடலை ஈரநாவினால் ஸ்பரிசிக்க காமுறும் கருங்குழல் நீண்டு வளர்ந்துகொண்டே எங்கம் விரிகிறது முடிவற்று. நக அளவுக்குமேல் நழுவி ஓடும் கத்தியிடம் விடுகிறான் தன்னை, கூர்ந்து பார்த்தான் கண்ணாடியில், வேறு யாரோ இருக்கிறார்கள் உள்ளே. கூட்டமாய் வரும் மிருகங்கள் மஞ்சள் அருவிமீது ஊர்ந்து நெருக்க உடலனைத்தையும் கொண்ட மிருக மூர்க்க வெறி தாபமாய் சிதறி வெடிக்கக் காத்திருக்கிறான் கண்ணாடி ஆட்கொண்ட வெறுமையில் வெற்றுக் கூடான நிலையில் சுட்டுப்பொசுக்கும் கண்ணாடியின் பார்வையிலிருந்து விலகி ஒட பின் தொடர்கிறது சந்து சந்துகளாக, கருநத்தைக் கண்கீறிப் பதித்த சுரோனிதக் கல் தன் விநோதப் பார்வையால் அழைத்துச் செல்கிறது எங்கோ, உளவுக் கண்ணாடியிடம் பிடிபடுகிறான்.மீண்டும், அதே படிம அறையில் உப்புக்கத்தியை விரல்களில் தீட்டியவாறு மேலும் கீழும் நடந்தான். கண்ணாடிக் கதவை மெல்ல வருடி சிரித்த வாறு தாளமிடுகிறாள் பாசீ. அவன் காதில் விழாத பாதங்களின் நகர்வு தரையில் சுழல இர ஷ வந்துவிட்டதென்று கத்தியை வாங்கி முகம் பார்த்தாள் பாசீ. .

முத்துக் கற்கள் பதித்த கருக்கலான ஆடி பின் பார்வை மங்கித் தெரிய அரவங்கள் கக்கிய நீலக்கல்லின் விடி ஒட்டம் கண்ணாடிச் சட்டங்களிலிருந்து பாதரசப் பரப்பில் தொற்றிக்கொள்ள அவன் பிம் பக்தை பச்சை மஞ்சள் என இருவேறு பாகமாகக் கீறினாள் பாசீ. தூண்களில் ஓடி மறைகிறார்கள் வெட்கத்தில், தூணில் பதுங்கிய வேறு வேறு அலிகள் நிறங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் அருகே, எரிது நகரின் காமுகர்களால் தீட்டப்பட்ட லிபி கள் அலிமுகமெங்கும் பச்சை வடிவமடைந் திருந்தது. அதை உப்புக்கத்தி வெளிச்சத்தில் வாசித்து தாபமடங்காமல் சுரோனிதப் பைக்குள் கை நுழைத்து காணாமல்போன் வைரங்களைத்தேடி அலறுகிறாள் பதற்றத்தில். அலிமுகம் மோனத்தில் அபூர்வ சாயல் கொண்டு ஆடியில் பதித்த நாகக்கற்களை நுனி நாக்கினால் ஸ்பரிசித்தவாறு கண்டத்தில் ஏறும் விஷத்தை மெல்ல சுவைத்து கண்களில் பதித்த கமலக்கற்களால் அலியுலகின் அனாதியுடன் தன் மார்புமீது விரல் அழுந்த ஊளையிடுகிறான் தேம்பியவாறு. தொட்டால் சுருங்கிவிடும் கூச்சத்தில் கண்ணாடிக் குள் சென்று மறைகிறான் அலி.

தூண்மறைவிலிருந்து சகஜாதியும் தாதியும் வெளிப்பட்டு ஒருவரையொருவர் காமுற்று ஆடியின்மீது மறதியை மூடி நெருங்குகிறார்கள் இயல்பில். உப்புக் கத்தியை தரை விரிப்பிலிருந்து நகர்த்தி ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் உப்புக் கத்தியை தொட்டு ஸ்பரிசித்தவாறு உடல் படத்தில் மறைகிறார்கள் யுவதிகள். உருவே கண்ணாடியாகி உள்மறையும் வெண்பரப்பி லிருந்து அறையின் புறவெளி சூன்யமாகி உப்புக்கத்தி மட்டும் சரிந்து கிடக்கிறது தனிமையில்,

ஆடியுள் அசையும் பெண்வடிவம் திரும்பவும் கத்தியைத்தொட உயிர்க்கிறது அறையில். கண்களில் சுழலும் கத்தியை உடனே முறைத்து விஷத்தில் மிதந்து உடல் ஸ்பரிசத்தில் அறை வெதும்பி உப்பின் வேகத்தில நரம்புகள் துடித்து சுற்றிக்கொண்டு ஒருவரையொருவர் காமுற்று துளைந்த பசசை விஷத் துளி கத்தியில் பூசிக் காத்திருக்கிறார்கள் இடைவெளியில், விஷ நெருக்கத்தில் ரத்த நாளங்கள் வெடித்து உறைகிற உப்புக்கல் தரையில் உருண்டு ஒலித்தது துணுக்குற.

ஒவ்வொரு விஷக்கல்லையும் வளைந்த அலகால் கொறித்து ருசித்த கருங்கிளியின் மஞ்சள் விட்டக்கண் விரிந்து பரவிய கதிரில் குறுங்கோடுகள் வெளிர் தீபச்சுடராய் எரிய அதில் வந்த விஷமருந்திய கிளிமுகங்கள் நிர்வாண மஞ்சள் அலியாக மாறி நீலம்பாரித்த கண்டத்தில் கத்தியால் கீறி விஷக்கல்லை எடுக்க அருகில் வருகிறாள் பாசீ. கிளிவர்ண தோகையுள் மஞ்சள் அலி சிறகசைக்க கேச அலைகளில் பிஞ்சுப் பூச்சிகள் இறைந்து சுற்றி ஒடும் அலி நிழல்களை பின்தொடரும். காணாமல் போன அலியின் இடுப்புவாரில் பாஷாணம் பூசிய ஏழு வகை உப்புக்கத்தி  உறையிட்டு சொருகியவாறு வெள்ளை முகமூடி அணிந்து வந்து சாம்பல் நீலக் கத்தியின் பாஷானத்தை கண்ணாடி மீது நீவிக் கொண்டிருந்தான். மெதுவாக நிறம் மாறிய ஆடியுள்ளிருந்து சகஜாதியான வள் வெளிப்பட்டு இரும்பு ஜன்னலுக்கு ஓடிச் சென்று அதன் வழியாக எரிது நகரில் அசையும் விளக்குகளில் சுற்றும் பிஞ்சுப் பூச்சிகளைப் பார்க்கிறாள்.

எதிர்பார்த்திருந்த அலிகளின் சாயைகள் விளக்குகளில் நீளும் நிழல்களுடன் மெல்ல நகர்ந்து செல்கின்றன வீதியில், பதினாயிரம் தினார்களுக்கு விற்கப்பட்ட உயரமான மஞ்சள் அலி நீல மஞ்சள் வர்ண விளக்குகளுக்குள் சுழன்று கொண்டிருக்கிறான் அகாலத்தில். மெலிந்த இரவின் வெளிர் தோற்றத்தின் நிசப்தத்தில் பனி நீலம் உதிர்ந்து துகள் துகளாக வலிந்து உருக ஆரம்பித்திருந்தது. மொகலாயர் விட்டுச் சென்ற கூஜாச் சிம்ளி மூடிய ஆழ்ந்த நகர் விளக்குகளை நகருக்கே ஆன பைத்தியக்கார அலிகள் காலந்தவறவிட்ட இளமையைத் தேடி நீலஒளியை எட்டிப் பார்த்தவாறு ஈரல் நடுங்க ஆண் காதலி களின் சாவு மெளனத்தை துடைத்தவாறு தன்லகுனிந்திருக்கிறார்கள். அவ்வுப்பு வீதி களில் வெண் குருத்தாக எரியும் ஜீவனில் உப்புக்கட்டிகளைப் போட்டு அணையாம லிருக்க சாம்பல் கிண்ணங்களை ஏந்தியவாறு கருங்கிளிகள் பறந்தவாறு அசைக்கும் சிறகு களில் இருள்.
****
எரிது நகரின் பாழ் விளக்குச் சிம்ளியைத்துடைக்கும் பரம்பரையான அடிமை அலிகள் விவாக்குத்தைல சீசாவும் திரிக்கற்றையும் கொண்டு ஒவ்வொரு விளக்கிடமும் சென்று கேட்கிறார்கள் தாங்கள் யாரென்று. அலிகளின் கேள்விகளால் துணுக்குற்று உடையும் சிம்ளிக்காக அழக்கூடும் அடிமை அலி, ஏனோ தெருச் சிம்ளிகளிடம் குழந்தை யாக நடந்து கொள்கிறான் மஞ்சள் அலி, உருவை அசைத்து அசைத்து பாதங்கள் உரசி நகரும் வயதான அலிகளின் கண்களில் வடிந்த புகையும் இருளைத் துடைப்பதற்கு ஆளே இல்லை இங்கு.

எரிது நகரின் சோபை தினம் தினம் மெலிந்த ஒளியால் உயிர்பிரியும், ஆண் விரும்பிகள் மீது வீசப்பட்ட கல் உருக அகால விளக்கு எரிகிறது தனிமையில், கிரி மினல் குற்றங்கள் பரவும் சுவர் ஒரம் விரல் பதித்து நடமாடும் மென்மையான இருளில் திரிபோட்டு தைலமிட்டு தழுவுகிறார்கள் இரவை. அவ்விளக்குத் தூண்களை வைத்த முன்னோர் நகர் நீங்கி வெளிப்புறத்தில் நகரை நோக்கிய ஏக்கத்தில் சமாதிப் படிகத் தில் உறைந்து விட்டிருந்தனர். நகரே சரிந்து விழும் ஏரிப் படிகத்தில் ஒவ்வொரு ஒளிப்புள்ளிகளும் நகர்ந்து வருகின்றன பழையவர்களை நோக்கி, நீரில் நெளியும் ஒளிப் பூச்சிகளைப் பிடித்து கெண்டை மீனுக்கு கொடுத்து நகரின் நினைவுகளை கரும்பிவிடும் மீனுருவாகி விடுவார்கள்.

அறியப்படாத கோல் நகரின் அழுக்குக் கோடுகள் நடமாடித் திரிந்த இடங்களாக இருக்கும். புலத்தில் விழுந்து பதிந்த பாதங் கள் திரும்ப்த் திரும்பவரும். அடுத்த காலத்த வரும் பாதங்களை அங்கே நகர்த்திச் செல் வது ஏனோ மிருதுவான புலங்களில் பாதம் படியப்படிய பறவைகளும் விநோத உணர்வு களும் வந்து கண்ணுக்குத் தெரியாத ரகஸிய இழைகளால் பின்னப்படும் பிரேமையின் கத கதப்பை நகரே அடைந்து விடும். அங்கே தோல் இரவுகளை உலர்த்தி பதனமாக்கிய தொலியில் எதை எதையோ கிறுக்கிவிடும் மென்மையான பாவங்களை வீட்டிலுள்ள ஸ்திரீகளே எழுப்புகிறார்கள். ஏணம் தவறி விழுந்ததும் கரண்டிகளும் முணு முணுக்கின் றன. தண்ணிர் சிந்தும் ஒசையிலிருந்தோ சூடான கொதிநீரை ஆற்றும் விரல்களிலோ அதிசயம் சேர்ந்து விடும், சாதாரண குரல் களுக்கிருந்த அர்த்தமே நகரை உயிர்ப்பிக்கக் கூடும்.

உயரமான மஞ்சள் அலி ஒருவனின் தோலில் வரையப் பட்டிருக்கும் பச்சைநிற லிபிகளில் பரம்பரையான அலிகளின் கதா சறுக்கம் கரைந்து எழுந்த தெருக்களில் ஸ்திரீகளின் முகவெட்டுடன் அலிகளின் அழைப்பு. கதாச்சுருளை கடத்திச் செல்லும் உப்பு மனிதன் அந்நியனாய் மெல்ல வந்து பச்சை லிபிகளை வாஸிக்கிறான். கைகளில் உடலில் திறந்த ரணமான காயங்களை தையல் போட்டு மூடியிருந்தான். வண்ணத் துப் பூச்சிகளை அலி உடலுடன் சேர்த்து தைத்துவிடும் அந்நியனைத் தேடி பலர் வந்து போகிறார்கள். வர்ண இறகின் நிறப்பொடி யால் ஆணைப் பெண்ணாக மாற்றும் தையல் வேலை நடந்துவந்தது ரகஸியமாய் அடைத்து வைக்கப்பட்டவர் உடலில் காலான் வளர, கல் உப்புக்காலான் ஆண் பெண்ணுமான உருவுடன். வெட்கத்தால் மறைந்து திரிகிறார்கள். கல்உப்புக் காலா னாய் விட்ட பெண் உருவங்களை கத்தியால் கீறி வைலட்பூவைத் தேடுகிறான் தாது. பூனைத்தோல் கொண்ட அலி சுரோனிதச் சற்றுகளில் அருவருப்பான ஜீவ ஜந்துக் களைப் பிடித்து சீசாவில் அடைத்து தாது வின் அறைக்குள் திறந்துவிட தனிமையில் துயிலும் உப்பு மனிதனான தாது மீது ஊர்ந்து நகரும் ஐந்துக்களின் அடிவயிற்று வெப்பத்தில் காமாக்கினி பொங்கி வெடிக் கும் உப்புக்கட்டிகளின் நெடி அறையை மூழ்கடித்தது. -

அலிகள் அலைவுறும் சந்துகளில் ஒவ்வொருவரின் உடலுடன் விநோதப் பிராணியை ஒட்டுத்தைத்து தோல் தையலில் இழைகட்டு பிரித்ததும் இணைந்துகொண்ட இரு உயிரினமாகிவிடும் விநோதம் நகரை நெருக்கடியில் சிக்க வைத்தது. குள்ளநரிகள் கூட்டமாய் உடலில் புகுந்து சிரித்து ஊளை யிட ஊசிப்பற்களில் நடுங்கும் நகரம். பல்லி ஓணான்களின் நாசிகளில் ஈரம் படரத் தெருக்க்ளின் சுவர் ஒரம் சாய்ந்து மயங்குகிறார்கள் காமாந்தக வேகத்தில், வெந்நீர் கோப்பையிலிருந்து சுடு ஊசியில் ஏற்றிய மஞ்சள் திரவத்தை தானே கையில் குத்தி ஏற்றி துடைத்த பஞ்சில் நெடிக்கும் திரவத்தை நுகர்ந்தவாறு மஞ்சள் அலையில் தடுமாறி விழும் அலிகள் எதிர்ப்படும் விநோத சாயைகளைக் கூடவே அழைத்த வாறு சுவர்களில் மறைந்திருக்கிறார்கள்.

எழுத்தாணிக்காரத் தெரு நகரும் பனை யோலைச் சந்துகளில் கல்பாவிய வெண் குருததில் சிறுமிகள் பாததுாளிகள் தொட்டுப் பதிந்துவிட்ட ரேகையில் அசையும் உருவு களை வெறித்த கண்களால் நகரேபார்க்க  மெல்ல சுழலும் கோடுகள் சுவர் ஜன்னலி பாவுகளாய் சுரிந்து சுரிந்து உள்புக பட்டுத் தறியில் அலிகளுக்கான ஆடையை நெய்து கொண்டிருக்கிறார்கள் சிறுமியர். அலைவு றும் ரேகை நூலால் உருவாகும் மஞ்சள் அலியின் மாயக்கம்பளத்தில் யார் யாரோ வந்து அலிகளை ஏலமிடுகிறார்கள். பாதச் சிறு இழைகள் கல்லில் படியப்படிய நூலாகி விடும் வேகத்தில் இடமற்று ஊர்ந்து வரும் ஜன்னல்களில் பாவு ஒட உள்கூடத் தறியில் வயதான அலியொருவர் அறுந்த இழைகளை முடிந்து துக்கம் பெருக சிறுமியரை நோக்கி கைநீட்டி அழைக்க புள்ளொலிக் கூட்ட்மாய் வந்து வயோதிகரை ஒட்டி தங்கள் ரேகை களை அவர் உடல் மீது பதித்து விடுவார் கள். எண்ணமுடியாத சங்கேத வரிவரியாய் பிரியும் சிறுமியர் பாதரேகையே எரிது நகரின் அந்தரங்க வரைபடமாய் விரிய தறிக்கூடச் சலம்பல் நகருக்கு வெளியில் சேட்கும். சாதாரணமாக விடுபட்ட பிஞ்சுப் பாதப்பதிவுகளை அசாதாரண ஆழத்தில் நூற்கிறார்கள் அலிகள்.சிறுமியின் கண்ணில் நகரும் புலப்படாத ஒளி இழை சுழன்று ஒடுகிறது எங்கும்.

ஏனோ, ருதுவான ஸ்திரீகளின் ஆடை களைத் திருடும் அலிகளை விலங்கிட்டு சுவர்களில் அறைகிறார்கள் கொடியவர்கள். கருங்கல் சுவர் நடுங்க மனித வாடைக்காக காத்திருக்கும் மஞ்சள் அலி சிறுமியர் தடம் நகரெங்கும் படரவேண்டிக் கனவுகாணும் அறையில் அசைவற்றுக்கிடக்கிறான், ஸ்திரீ களின் ஆடையுடுத்தி ஒப்பனையில் கானகம் புகுந்து மறையக்கூடும். நிறமழிந்த ஆடை களில் உவர்வாசம் கனவுகளில் நெடிக்கிறது. தண்டுவட எலும்புச் சுழலில் வளைந்து படரும் உவர்மண்வாசனை கொண்ட எலும்பினாலான யாழ் அலியின் குமுறலாகி அனிடப்பட்ட சலவைத்துணிகளின் அலைவு உவர்த்து உள்தேம்ப எலும்பில் ஸ்பரிசிக்கும் சலவைக்கல் உருக்கள் அனாதரவான ஏரிக் கரைகளில் தேய்ந்து உருக துயருற்ற அலி வண்னானின் விரல்கள் வியர்வையும் உப்பும் டொதிந்த துணிகளைக் கழுவக்கழுவ வெழுத்த ஆடைகளில் மற்ைகிறார்கள் நிர்வாண மனிதர்கள். துவைக்கிற கல்லுக் குள் படிந்த பூ நிறங்களை நில வெண்ணிறத் தில் காண இவன் காத்திருக்கிறான் அங்கு மூழ்கியவாறு கனவில் கண்ட சிறுத்தையின் அருகாகப் பல கூண்டுகளில் பஞ்சநிறக் கிளி கள் அடைபட்டு துயிலில் கண்டகனவு நிழல் கம்பிகளோடு வெளிரூபமடைந்து சிறுத் தைப் பெண்ணுடன் பழுப்பு மொழிபேச இவன் ஏதும் புரியாமல் காதுமடல் சிவந்து தனித்தனி சப்தங்களை சேர்த்து மயங்கி கனவில் கண்டான் தாதுமூல மொழியை.

-போதையூட்டப்பட்ட நகரின் சுவர்கள் தள்ளாட நடந்து திரிகிறார்கள் பும்மை தூணக்காரர்கள். நிழல் சாலை மதுக்கூடம் குப்பிகளை உரசி உடைந்த பாட்டில்களில் கீறிச் சபதம் செய்த குருதி விரல்களில் மஞ்சள் மதுவும் கரைந்து காயங்களை மறைக்கும் தையல் கோடுகளில் குருதியை முத்தமிடும் இரவு, திரண்ட தோளில் கை வைத்தவாறு கிரிமினல் குற்றவாளிகள் குற்றங்களை உளறி ரகசியங்களை வெளிப் படுத்தச் சீறும் உயிர்ஊற்றுகள் ரத்தத்துடன் கலந்து இருள்கிறது குப்பிகளிடையே, ஒரு வரையொருவர் பார்த்துக்கொள்வார்கள் துவண்டு அழுகிறார்கள் எச்சில் ஒழுகி. வாய் கோணி ஊளையிட குப்பிக்குள் உறுமும் விலங்குகள் ஒயின் நிறத் திராட் சைத் தோட்டத்துக்குள் மறைகின்றன. நெருப்பில் வாட்டிய மீன் உடல் உலர்ந்து கருக தன்குடலை அறுக்குமாறு துரண்டு கிறார்கள் முரடர்கள். புலால் தோலில் நகரும் ஈரல் துடிப்பில் தோன்றும் இவன் முகம் உப்புக்கத்தியின் வெட்டு அடையாளத் தழும்பில் ஒளிர்கிறது.

சிதைந்துப்ோன ஒயின் தோட்டத்தில் பாம்புகளின் மூச்சு சுழன்று சுழன்று காலிக்குப்பிகளின் மூச்சாகி சுழல்கிறது. நொறுங்கிப்போன கனவுக்குமிழ்களில் சீசாக் களில் கண்ணாடிச் சில்லுகளை குற்றமற்ற மதுக்கூடச் சிறுவர்கள் பிஞ்சு விரல்களால் உமிழப்பட்ட வார்த்தைகள் அடியில் பகை யும் உதாசீனமும் நெடிப்பதை குருதியும் ஒயினும் கலந்து மயங்கிய உறவை காயங் களை தைலம்பூசி காலிக் குப்பிக்குள் பதுங்கி துயில்கிறார்கள். பின்னிரவில் கழுவப்பட்ட மதுக்கூடத்தைத் தேடி கீறலில் எட்டிப் பார்த்து சிறுவர்கரங்களில் கீறிய பீங்கான் கீறல்களை தொட்டுக் கரைகிறான் உப்புக் கத்தியுடன்,


கனவில்கண்ட பிலம் விலகி தெளிவற்றி உருவில் சிறுத்தையின் தொப்புள் அடியில் எரியும் வைலட் பூ கதிர்நிழல் காட்ட நிழல் ஒநாய்கள் விரட்ட தன் ஆடைகளைப் பிய்த் தெறிந்து நிர்வாணமாய். எரியும் பாடல் களுக்கிடையே கிளிகளின் குளறுமொழி இளஞ்சிவப்பு கண்கள் கீறி மெல்ல காற்றில் கரைந்து இவன் மெய்யுருகி உள்ளிரல் பற்றி எரிவது அவியாது வளைந்து நின்று ஒலி எழுப்பிய ஒநாய்க்குகைச் சுவர்களில் அடர்ந்த கிளி இறகு அசைந்து பிலவாயில் தாண்டி கடலுக்குள் விழுந்து அடித்தளம் புகுந்தது கருங்கிளி. நீரில் தீப்பிழம்பு உமிழும் பாடல் உராயும் நகங்கள் மீன்களை எழுப்பி "துயில வேண்டாம்' என முணுமுணுத்தது அயிறைகளிடம்,

குகை சூழ்ந்த நீரில் சிறுத்தையின் உடல் புள்ளிகள் அலை வண்ணத்துப் பூச்சிகளாய் சிறகலைத்து இவன் உடலில் ஒட்டி சிறகு குவித்து தும்பிகளின் உதிர உறிஞ்சல் ரத்தப் பெருக்கில் சிறகு படபடவென ஆயிரம் அலைச்சிறகு விரித்து செந்நீர் கசிந்த ஞாபகப்பரப்பில் யார் யாரோ கருநீர் உருவங்களாய் நழுவிச் செல்ல முன் அறியப் படாத மஞ்சள் அலியின் சருமத்துவாரங் களில் வாய்திறந்த சுரோனித உயிர்த்திரள் வெப்பத்தால் உயிர் நெருக்க தொல் எலும் பில பதுங்கிய ஒநாய்கள் மயங்கும் மெல்லிய விலா எலும்பின் மின்பரப்பில் அலைகள் வால்துடிக்கும் மீனுருவங்களாய் முயங்கிப் பெருகிய முட்டைகளின் உயிர்மின்னல் உப்பு நீரில் சுரிந்து வளைந்து சிறுத்தையின் நாசி யில் அலியின் குருதியின் ரகசிய வாசனையில் இவள் கூந்தல் இழைபூசி ஒவ்வொரு நீண்ட முடிச்சுருளும் உதிரத்தில் தோய கிளி தாதுமூலக் கனவில் பழுப்பு வண்ணத்துப்பூச்சி மோதிரமாய் வளைந்து இவள் காட்டாணி விரலில் சுற்றிக் கொண் டது. மோதிர வளைவில் சென்ற சுருண்ட நிலப்பரப்பின் உச்சிமீது கமலக்கல்.

வைலட்கல் பூவில் பட்டை வெட்ட வெட்ட உருமாறும் வைலட் கல் சதுக்கத்தின் புதிர்பாதைகளூடே மறைந்து பாயும் வைலட் சிறுத்தை. அதை அடைய விலா எலும்பில் உறையும் பறவைகளை சிறு புள் கூட்டங்களை எழுப்பி கூகையின் சுருள மூச்சை ஏவுகிறான் சிறுத்தை மீது. இவன் உதிரத்துளி வைலட்கற்களாய் சிறுத்தையின் நாசியில்பட யுகாந்தகால நெருப்பில் காத் திருக்கிறாள் இவனுக்காக, ஏனோ, இரு வேறு கால சுழற்சியில் மறையும் பூச்சிகளாய் மயங்குகிறது வைலட், முடிவற்ற வெறுமை சூழ்ந்த இருப்பில் இவன் விழித்தபோது வைலட்பூ சிறுத்தையின் கண்களில் மறை வதை அடையாளம் காண சாவின் உச்சிமீது காத்திருக்கிறான். சிறுத்தையின் உடல் புள்ளி இருப்பின் குறியீட ராகத் தோன்றியது இவனுக்கு.

இவையென சிறிதும் பெரிதுமான புள்ளிகள் ஒழுங்கற்றுப் பரவிய மென்தொலி மேல் கானகத்தின் வடுக்கள். தத்தளித்தவர்று நீரில் ஆரஞ்சு நிறமாய் மாறிவிட்ட அலியின் உடல், சிறுத்தை உடல் புள்ளிகள் பிரபஞ்சத் 'தின் கண்களாய் பல திறக்க அச்சத்தில் மூழ்கியபடி இருந்தான் எல்லையற்று. ஆட் கொண்ட வெறுமை நீர் பூச்சிகளாக வெம்பி உடலைக் குடைந்து நச்சரித்துக் கொண் டிருக்கின்றன. வெற்றுக் கூடான உடலில் உப்புத்துகள் படலமாய் உதிர இக்கணம் உருவற்ற சூனியத்தில் திரண்ட உதிரக்கற் கள் உப்புத் தூண்களாய் சமைந்த தெருவில் மெல்ல கரையும் உவர்காற்றில் நாசியில் அறுக்கும் அமிலநெடி சூழ்ந்து கொள்ள மூழ்கும் நகரின் கீழ்தட்டு அறையில் சுவர்கள் பொதும்பி தாரை தாரையாகக் கசிவதை பார்த்துக்கொண்டிருக்கிறான் உப்புச் சுவர் களுக்குள். எழமுடியாத கனமான உப்புநீரில் நழுவி வந்த நிலவைச் சுற்றி பொடி மீன்கள் கரும்பி தூள் தூளாக நிலவுப்புழுதி பறக்க கரும்பும் பற்களுடன் உள்ளே போய் திரும்ப முடியாமல் நிலவுவாசியாகி நீருக்குள் வர முடியாமல் ஆனால் நீரால் சூழப்பட்டு உலர்ந்து கொண்டிருக்கும் அயிறைமீன் சிற்றுடல்கள் உப்புமூடி உறைந்து கொண் டிருந்த நிலவின் உவர் ஒளி இவன் வெறுமை யுள் படர்ந்து உருகியது கரிப்பாய்.

இவன் சாம்பல் கத்தி கொண்டு உப்புப் பாறைகளைக் குடைந்து உள்போய் சுரங்கம் தோண்டி மறைந்து கொள்கிறான். ஆரஞ்சு உடலை உப்புக்குள் புதைத்து கால நீட்சியில் வளைகளைக் குடைந்து இரவு பகல் தெரி யாத பாதரச வெளியில் ஊர்ந்து கொண்
டிருக்கிறான். உப்புச் சுரங்க வாசிகளான ஆரஞ்சுநிற அலிகள் சிலரும் பொந்துகளில் முகம் நீட்டிப் பார்க்கிறார்கள். அவர்களும் இவனைத் தெரிந்து கொண்ட பயத்தில் இட மற்றுத் துளையும் ஊசிகளால் பொந்து களின் நூறுகிளைகளில் மறைகிறார்கள். குடைந்த உப்புக் குழல்களில் கானகக் குரல் தள் சுருண்டு வரும், அலையில் மறைந் திருக்கும் இறந்தவர்களும் எரிதுநகரின் கீழ் சந்துகளில் சமாதியில் உலவும் ஸ்திரீகளும் நகரின் மேல் நட்க்கும் சோக நாடகத்தை உணரக்கூடும். பழமையான ஆடியில் உப்புக் கத்தியை உரசியவாறு எதை எதையோ தேடு கிறான். மாய உப்பு உருவங்கள் தோன்றி மயக்க வெளிறிய முகத்துடன் உடலற்ற ஜீன்கள் துயிலின் ஊடே புகுந்து இளமை யான உருவை விரித்து சரசமாட அசையாத கண்களுடன் பயங்கர நினைவுகளை முணு முணுத்தன. நகரின் அடிக்கற்களுக்கு அடியில் உப்புக் குன்றுகளில் ரகசிய உப்பு மனிதரின் குகைகளில் மெலிந்த கல்படும் கையில் நிர்வாண உடல்களை உலர்த்திவருக் பலருடன் இவனும், உப்புக்கல் படுக்கையில் உதிர்ந்த உணர்வுகளை சேர்த்து கதிர் கற்றைகளாக ஏந்திய அம்மண உருவிலான கிழ மனிதன் சம்மணமிட்டு கற்பகாலமாய் அமர்ந்திருக்க அவ்வுருவின் மோனச் சிறு புன்னகை காண பித்தத்தில் சுழலும் உப்புக் கோலத்தை மணியாக தலைக்குமேல் ஏந்தி அவ்வுருவின் கீழ் உதடு முணுமுணுக்கும் மர்மமான ஒலியை ஆரஞ்சு நிறமான இவன் காதுகள் உள்ளீர்த்து அழ கேவும் மூச்சை அடைத்த உப்பு விரல்கள் இவன் சிரசைத் தொட்டு ஒவ்வொரு சுரி குழலையும் தடவ அதிரும் ஒற்றைமுடிகளின் சலனத்தில் இவன் எண்புகளுக்குள் சுருளும் அண்ட கோச திரள் சுழிக்க உப்பு நகங்களால் மஞ்சள் அலி யின் தலைமுடி பறிக்க நீளும் விரல்களி லிருந்து விலகிவிலகி ஓடுகிறான் கத்தியுடன், மெலிந்த கல் திட்டுகளைச் சீவிச் சீவி ஸ்படி கத்தில் அசையும் ஆவிகளிடம் முற்பட்ட அம்மண மனிதர்களின் ஞாபகங்களைக் கேட்டவாறு முக்காலங்களின் இணைப்பை துண்டிக்க ஒற்றை முடி பறிப்பதால் ஆகும் வினையிலிருந்து நழுவி எல்லாக் காலத்திலும் உருகும் கற்களில் உரசினான் கத்தியால்.