தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, November 05, 2020

சிவசங்கரா எழுதியது & - ஞாபகக் குறிப்புகள் - ஜெ. கிளாரிந்தா

 சிவசங்கரா எழுதியது

-------------------------------------
தாமரைக் கடவுளே உன்
காய்ந்து போன கணுக்காலை
யாரறிவர்? காரிருளில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பார்த்திருந்த பசுமையெல்லாம்
நீ மறுக்கும் கரும் பயிராப் போச்சு
நான் பிறந்த வேளையிலே
என் மக்கள், உன்
சூதறிந்த சூரியனின்
பாதி தெரிந்து பண்களால் செய்தனர்

அப்புறத்தை அகண்டெரிக்கும் பாதியையும்
நாம் கண்டு பண்ணிசைக்கும்
பேயினத்தை தேவர்களாய்ச் செய்வோமோ?
அரக்க சிசுவொன்று அவதரித்து
வந்த தென்று இரக்கக்குணமுடையோர்
இனிபு்பாகச் சொல்வாரோ.
-கடும்பனியில் சிந்தனைகள் - ஒரு பொய்யான சிந்தனைக்கூறு
----------------------------------------------------------------------------
அவளின் ஆர்வமூட்டும் உதடுகளையும் சிவந்த கொலுசணிந்த கால்களையும் நான் உடனடியாக காண விரும்பினேன். எங்கு தொடர்பற்ற - ஆசையற்ற ஈடுபாடு என்னில் பிரவாகிக்கையில் அங்கு நான் கலப்பற்ற சூர்யோதயம் போன்ற பேரன்பை உணர்கிறேன். என்னை நான் தன்னிச்சையாக இயக்குகையில், எதையும் - எதற்காகவுமில்லாமலும் - செலுத்தப் படாமல் - உணரப்படும் - செயலாக்க என்றால் முடிந்திருக்கிறது.

- ஞாபகக் குறிப்புகள்
ஜெ. கிளாரிந்தா

No comments:

Post a Comment