தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, December 07, 2012

ஊர்க்கொளுத்திகள் - ஆதவன் தீட்சண்யா, ஆசையாகத்தான் இருக்கிறது - ரவிக்குமார், இன்னொரு வீடு எரிக்கப்படாது நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள்


ஊர்க்கொளுத்திகள் - ஆதவன் தீட்சண்யா

அவர்கள்தான் எவ்வளவு பெரிய கருணைவான்கள்
உலகம்
அவர்களது காருண்யத்திற்கு நன்றி சொல்கிறது
இம்முறை அவர்கள்
நம்மில் ஒருவரையும் கொல்லாமல் விட்டதற்காக
ஆனால்
இந்த வெற்றுடம்பிற்குள்ளா இருக்கிறது நமதுயிர்?


Ravi Kumar

10 hrs ·
(01-01-2016 -8.15am)
Rajan Kurai Krishnan commented on this.


ரவிக்குமார் கவிதை

ஆசையாகத்தான் இருக்கிறது

இன்னொரு வீடு எரிக்கப்படாது
இன்னொரு கழுத்து அறுக்கப்படாது
இன்னொரு மானம் பறிக்கப்படாது
இன்னொரு பாதை மறுக்கப்படாது
இன்னொரு கதவு மூடப்படாது
இன்னொரு வாய்ப்பு பறிக்கப்படாது
எனச் சொல்ல


ஆசையாகத்தான் இருக்கிறது

எல்லோரது குரலும் கேட்கப்படும்
எல்லோரது குறையும் தீர்க்கப்படும்
எல்லோரது காயமும் ஆற்றப்படும்
எல்லோரது கண்ணீரும் துடைக்கப்படும்
எல்லோரது பேச்சும் மதிக்கப்படும்
எனச் சொல்ல

ஆசையாகத்தான் இருக்கிறது

நிரபராதிகள் இனம் காணப்படுவார்கள்
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்
அயோக்கியர்கள் அகற்றப்படுவார்கள்
நல்லவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்
எனச் சொல்ல

எனக்கும்
ஆசையாகத்தான் இருக்கிறது
இந்த வருடத்தைப்போல இருக்காது
அடுத்த ஆண்டு
எனச் சொல்ல

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள் 

பொய்யின் கூன்முதுகில்
விட்டெறிந்த மண்ணுருண்டை
மோதிச் சிதறிற்று பட்டாபிஷேகம்.
மண் வளர்ந்து
கானகப் பாதையாயிற்று...
நகர் நீங்கி நெடுந்தொலைவில்
எதிரே,
முலைமொக்கு குத்தி நிற்க
கூனிக் கிடந்தது ஒரு கிழவிப் பாறை.
அகலிகையும் கூனியும்
ஆத்மா கலந்துறைந்து
கல்லாயினரோ?

என்றோ ஒரு நாள்
தனது விளையாட்டுச் சிறுபாதம்
அறியாது மிதிக்க –
அற்புதம்! –
ஒருகல்
துயில் கலைந்தெழுந்த்து!

பழைய கருணையை
பரிசோதித்துப்
பார்ப்போமென்று
இன்றிக்கல்லை
வேண்டுமென்றே இட்றி
நின்று
கவனித்தான்.

கல்லில் கலந்து நின்ற
கூனியின் பாபமோ
கந்தல் வரலாறு
கருணையின் பாதியை
நழுவவிட்ட காரணமோ
அற்புதம் நிகழவில்லை.
மிஞ்சியது
இடறிய கால் விரலில்
ஒரு துளி ரத்தம்.
கால் விரல் வலித்த்து
கருணை கலைந்தது.
த்ச்’ என்றான்
மனிதன் ராமன்.

வழி நடந்தது
அவதாரம்.

*
(1976)


பிராபல்ய ஏணியில் ஏற முற்படுவோர்தான் அக்கம்பக்கம் பார்த்து ஏற வேண்டும் கல்லோடும் மண்ணோடும் மண்கிளப்பும் புழுதியில் பிரமிள் சொல்லிய மனப்புரவி ஓட்டுபவனுக்கு எவன் புட்டத்தையும் தலையில்  ஏந்தவேண்டிய அவசியம் ஏது.

http://www.maamallan.com