தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, September 03, 2014

மனுசங்கடா நாங்க மனுசங்கடா, ஜீவ காருண்யம் - இன்குலாப்,


பேரா.கே. ஏ. குணசேகரன் என்றாலே நினைவிற்கு வருவது, கவிஞர் இன்குலாப்பின் 'மனுசங்கடா நாங்க மனுசங்கடா' பாடலைப் பாடும், வானத்தை இடிக்கும் அந்தக் கனத்த குரல். புதுச்சேரி நிகழ்த்துக்கலைத் துறையின் பேராசிரியர் முனைவர்.கரு.அழ. குணசேகரன் அவர்கள் இன்று இந்த வாழ்விலிருந்து மறைந்தார். தமிழிசை உலகிற்கும் எதிர்ப்புக்குரல் இயக்கங்களுக்கும் பேரிழப்பு.



"மனுசங்கடா நாங்க மனுசங்கடா


உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா


எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க

இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா - அட

உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா

நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா


உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்


குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது

தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த

ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது


சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது

எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க

எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்


மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா"



ஜீவ காருண்யம் - 1

நகராத சண்டிமாட்டை
நகர்த்த
குச்சியை ஓங்கினான் குப்பன்
அங்கு
சர்ரென்று நின்ற காரிலிருந்து
தோள் வரை தெரியும்
கையொன்று நீண்டது.

தொடைபோல் ஆடும்
தொங்குசதைக் கைகள்

“அடிக்காத மாட்டை
எஸ்.பி.சி.ஏக்கு
போன் பண்ணுவேன்
போலீஸ் வரும்”

அவளைப்போலவே கனத்த சத்தம்
போலீஸ் தடிக்குப் பயந்த குப்பன்
மூன்றாவது மாடாய்
வண்டியை நகர்த்த
ஜீவகாருண்ய ஜெயக்கொடி
நாட்டி
காரும் தூசிப்
படலத்தில் மறைந்தது.



ஜீவ காருண்யம் - 2

கிளி ஜோஸ்ய கிருஷ்ணமூர்த்தி
ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தினான்.

“கிளியின் கூண்டு ரொம்பச் சிறுசு
இறக்கையைச் சரியாய் விரிக்க வராது
காற்றோட்டம் சரியாய் இல்லாததால்
மூச்சுத் திணறிச் சாகக் கூடும்”

கூண்டும் போயி ...
கிளியும் போயி
பிளாட்பாரத்தில்
கிருஷ்ணமூர்த்தி
ஒட்டிய வயிற்றோடு
குப்புறக் கிடக்கிறான்.

Lakshmi Manivannan and க. மோகனரங்கன் liked this post from January.
கவிஞர் இன்குலாப் இன் சமூகச் செயல்பாடுகளில் எனக்கு பெரும் மதிப்பு இருந்தாலும் அவரை ஒரு பிரச்சாரக் கவிஞர் என்று மட்டுமே பிறழ கருதி வந்தேன். அந்த அபிப்ராயத்தை மாற்றிய கவிதைகளில் இது ஒன்று. இந்தக் கவிதைக்குத்தான் இப்போது மெட்டமைத்து வருகிறேன். இந்தக் கவிதையை அனுப்பி உதவிய திரு. பாரதி புத்திரனுக்கு என் நன்றி.
"வெயில் சாய்கிற அந்தி மாலையில்
வெளியே இந்த வீதி முனையிலே
தாஹீரா கொட்டுக்கள் தூக்கி
அதில் சந்த லயங்கள் ஆயிரம் தேக்கி
பக்கீர்மார்கள் வந்துவிட்டார்
இசைப் பாமாலையோடு வந்துவிட்டார்
மூடிய கதவைத் திறப்பேனா
இந்த முக்காட்டில் முகம் மறைப்பேனா
செவி மேடையில் ஆடும் தாளங்களால்
என்னைத் தேடுகிறார் எனச் சிரிப்பேனா
தாஹீரா... ஓ.. தாஹீரா
என்ன தவம் செய்தாய் அவர் கைப்படவே
தாஹீரா... ஓ.. தாஹீரா
என் தாகத்தை சொல் அவர் செவிப்படவே
சிவப்புத் தலைப்பாகை தும்பை உடை
சிவந்த உதடுகள் சிந்தும் இசை
வெண்கல மெட்டி விரல்களின் நடை
வேகம் தாஹீரா தாளம் ஒரு படை
மூடிய கதவைத் திறப்பேனா
இந்த முக்காட்டில் முகம் மறைப்பேனா
யாசகம் பெறவா நிற்கின்றாய்
ஓ யாசகனே என் வாசலிலே
யாசகம் பெற நான் நிற்கின்றேன்
உன் இதயப் பிரபஞ்ச வாசலிலே
பச்சைக் கிளியின் சிறகுகள்
உன் பாடல்களால் இங்கு துடிக்கின்றன
பாடகரே உம் பாடல்கள் என்னைப்
பரந்த வானுக்கு அழைக்கின்றன
மூடிய கதவைத் திறந்துவிட்டேன்
இந்த முக்காட்டை நான் மறந்துவிட்டேன்
தாஹீரா ஓ.. தாஹீரா...
என் தாகம் தணித்திடு இசை பொழிந்து
தாஹீரா... ஓ... தாஹீரா
உன் தாளங்களால் என்னை ஈடேற்று"