தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, April 10, 2018

பிரதிரூப சம்வாதம் - பிரமிள் :: நன்றி - கொல்லிப்பாவை சிற்றிதழ்

thanks to https://www.facebook.com/velmuruganperiavan for கொல்லிப்பாவை flipbook


பிரதிரூப சம்வாதம்

பிரும்மிள்ஜ் தாநமோ :சீவராம்
-முன்னுரை:-

ஒரு கலாச்சாரச் சூழலில் எழும் பிரச்னைகள், அந்த சூழல் ஆரோக்ய மாக இருக்கும் பட்சத்தில், பதில்களையும் தெளிவுகளையும் மறுப்புகளையும் ஆதரவுகளையும் ஒரு செவ்விய நெறியில் பெற்று மேல்விரிவும் ஆழமும் கொண்டு தொடரத் தக்க ஊக்கத்தை அடையும். சமீப வருஷங்களில் இத்தகைய ஆரோக்யம் தமிழுலகில் நிலவுவதாக இல்லை: முந்திய ஒருசில சந்தர்ப்பங்களில்கூட அபூர்வமானதாகவே இந்த ஆரோக்யம் இருந்திருக்கிறது. இன்று, எனது கட்டுரைகளிலிருந்து தொடரக்கூடிய சிந்தனைகளை நானே ஊக்குவித்துக் கொள்ள வேண்டி இருப்பதுடன் இலக்கிய சிற்றேட்டுலகின் குழப்பமான நிலைகளிலிருந்து ஒதுங்கி சம்பாஷணைகளிலேயே நான் என்னை வெளியிட்டுள்ளேன் இதுவரை எழுத்துவடிவின் மூலம் மட்டுமே என் கருத்துக்களை அறிந்துள்ளவர்களின் விஷயத்தில் என்னுடன் அவர்களது சம்பாஷணைத் தொடர்பு இல்லாமையால் இவ்வகைத் தெளிவு அவர்களுக்கும் அவசியமமாகலாமே என்ற உளைச்சல் சில விபரங்களை 'கொல்லிப்பாவை' மூலம் எழுத்துவடிவில் முன்வைக்கும்படி தூண்டுகிறது. இத்தகைய நிலையில் ஒரு தீவிர கலாச்சார இயக்கம் பிரச்னையாளனை பேட்டிகள் மூலம தெளிவுபடுத்தும், ஆனால் தமிழில் 'பேட்டி' என்ற கலாச்சாரக் கருவி உரியமுறையில் செயல் பட்டதே இல் லை. பெரும்பாலும் “பேட்டி' காண்பவர் தமது சுயமுடிபுகளை பிரச்னையாளரின் முலம் வருவிப்பதாகவும், எரியும் கலாச்சார சமூகப் பிரச்னைகளிலிருந்து தம்மை மேலும் ஒதுக்கிக் காட்டும் சுயாபிமானமாக பிரச்னையாளரின் உரத்த சிந்தனைகள் அமைவதாகவும் தான் தமிழில் இந்த மிக உரமான வெளியீட்டுருவம் கீழ்மைபெற்றுத் தொங்குகிறது. பேட்டி காண்பவன் பிரச்னையாளனுடன் ஏதோ உடன்படிக்கை ஒன்ற தயார் செய்கிற போக்கு தான் தமிழுலகில் இந்த கருவியின் அடிப்படை உபயோகம். உண்மையில் பேட்டியின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும் தொடர்பின்மையும் கொண்ட ஒரு வகை அந்தரங்கத்தை பிரச்னையாளனிடமிருந்து வரவழைத்து அவன் சம்பந்தப்பட்ட பொதுவாழ்வின்மீது தெளிவுகாண உபயோகிக்கவேண்டும். ஒருவனது கருத்துக்களிலும் படைப்பு களிலுமிருந்து தழைத்து நிற்கும் தீர்க்கப்படாத அல்லது அந்தரங்கங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் பேட்டிகாணத் தூண்டும் ஒரு வியக்தியுள்ளே பொதிந்திருக்கும். இவ்வளவும் கொண்ட ஒரு சுரங்கம.1 கி நிற் கும் பிரச்னையாளனை சுயாபிமானம் தூண்டாது. பேட்டியின் மூ ல ம் தனது பொதுவாழ்வை மீறியும், தொட்டும், தெளிவுபடுத்தியும் நிற்கிற சில அந்தரங்கங்களை வெளியிட கூசியும் வெளியிட விரும்பியும் நிற் கிற ஒரு 'தயங்கிய உத்வேகமே பேட் டியின் மூலம் இவனிடமிருந்து வெளிப் படுகிறது. தனது பொதுவாழ்வுடன் சம்பந்தமே இல்லாததென தோற்ற மளிக்கிற ஒரு வேறு துறைபற்றி இவன் தனது மொத்த முடிபை சொல்வதற்கு இந்த கருவியின் வழியிலேயே இவன் சுதந்திரம் பெற்றுகிறான். ஒரு குறிப்பிட்ட பொதுப்பிரச்னைபற்றி ஏதும் சொல்லத்தக்க வகையில் இவனது படைப்புகளோ, கருத் துருவ வெளியீடுகவோ அமைந்திராத நிலையில் அந்த பொதுப்பிரச்னை பற்றி இவன் பேசுவதற்கும், தனது நிபுணத்வமோ தனது சம்பந்தமோ

________________

அற்ற பிரச்னைகள் பற்றி அபிப்ராயம் தெரிவிப்பதற்கும்கூட பேட்டி பயன் பட முடியும். பிரச்னையாளன் பேச 'விரும்பாத' விஷயங்களைக்கூட பேச வைக்கிற ஒரு பேட்டியாளன் மூலம் இவ்வளவும் நிறைவேறி ஒரு கலாச்சார நிலை உருப்பெறவும் வளரவும் முடியும். தமிழுலகத்து சுயாபிமான ‘பிரச்னை' யாளர்களது “நழுவி ஓடுகிற' - குணாதிசயங்களும் அவர்களுடன் உல்லாசமாக 'பேசி' பொழுது போக்கி யவற்றை போட்டிகளென ந ம் பி குறித்து வெளியிடும் பேட்டியாளர்களும் நான் மேலே தந்துள்ள லட்ச சணங்களில் எந்த ஒன்றையும் கூட பூர்த்திபண்ணியதில்லை. உண்மையில் தமிழ் நிலை இதைவீடகீழ்த்தரமானது: பேட்டி காணப்பட்டவரின் கருத்துக்கு முரணான ஒன்றை பேட்டிகண்டவர் தவறாகவோ திரிபுக்கைங்கர்யத்தின் மூலமோ எழுதி வெளியிட்டுள்ளதைக் கண்டும் வாளாவிருக்கிற பேட்டி காணப்பட்டவரது மனோநிலை ! ஒன் றுக்கு மேற்பட்ட தடவைகள் இத்தகைய நிலையை பேட்டி காணப்பட்டோரிடத்தில் அவதானித்துள்ளேன், இப்படி திரிபுக்கு உட்பட்ட பிரச்னையாளர்களுடன் . இதுபற்றி பேசிய போது ஒருவர் (மிகப்பெரிய புள்ளி இவர்) சொன்னார். 'என்ன பண்ணச் சொல்றேள்? சொன்னதை மாத்தி எளுதிப்புட்டான். நான் அப்படிச் சொன்னதே இல்லை- இதுக்காக அதை திருத்தி" எடிட்டருக்கு லெட்டர் எழுதலாமா என்ன? தப்பாச்சே, மெனக்கெட்டு நம்மை இண்டர்வியு செய்து ஒருவர் எழுதினதை திருத்தி நாமே எளுதறது!” நான் இதைக்கேட்டு, இந்த புள்ளியின் எந்த ஒரு அதி முக்யத்துவம் வாய்ந்த அடிப்படையில் எத்தகைய ஒரு குறை இருக்கிறது என அறிந்து, அதிர்ந்துபோனேன். இவரது மனோ பாவம் தமிழகத்தின் நடைமுறை ஆகும். பேட்டிகாண வந்தவர் பிரச்னையாளருக்கு ஏதோ ஒத்தாசை செய்ய வந்தவர் என்ற

________________

மனோபாவத்திலிருந்து விளையும் 'பெருந்தன்மைவாய்ந்த' மடமை இந்த குறைபாடு. (அந்த புள்ளி எனது ஆழ்ந்த நன் மதிப்புக்குரியவர். இருந்தும் இந்த தவறின் பொதுமுக ஆபத்தை வலியுறுத்தவேண்டி இந்த அளவு கடுமையை சுாட்டவேண்டிய வனாகிறேன்.) இந்த “ பெருந் தன்மை'யை கொஞ்சம் கிளறினால் உள்ளே தமது கருத்தைவிட தமது 'பேர்' அவசியம் என்ற ஒரு மனோபாவம், ஒரு சுயாபிமானம், பல்லைக் காட்டவும் கூடும். ஆனால், தமது கருத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள், ஆரோக்யமான பிறசூழல்களில், திரிபு பெற்று பகிரங்கம் அடைந்து விட்ட தமது கருத்துக்களை காரசாரமான தந்திகள் மூலம்கூட திருத்துமளவுக்கு தீவிரமாக செயல்படுவதை காணலாம். அங்கே அத்தகையோருக்கு தமது பேர் என்ற நிலை தமது கருத்தின் உருவமே, இத்தகையோர் எவருமே தமிழ் நாட்டில் 'பேர்' பெற முடியாது. நமது அடிப்படை அவலம் அது. தீவிரம் என்பது அகௌரவமானது என்பதே இந்த அடிப்படை, எனவேதான் தீவிரமானவர்களும் கௌரவத்தினுள் முடங்கி தமது தீவிரத்தையும் இழந்து, அதன் விளைவாக கருத்து நிலையை இழந்து, அதன் விளைவாகப்பெறும் 'பேர்' இவர்கள் எது சுயாபிமானத்துக்கு கௌரவம் தருகிற முகமூடிகளாகி என்னை ப் போன்ற ஒருவனுக்கு அருவருப்பை உண்டாக்குகின்றன. இத்தகைய முக மூடிகளுள் ஒன்றாக நானும் தொங்க விரும்பாததால் என்னை : 'பேட்டி' காண ஓரிருவர் முயன்ற சந்தர்ப்பங்களை உதாசீனப்படுத்தி இருக்கிறேன். அப்படி ஒரு சமயத்தில் ஒருவர் கண்டு பிரசுரமாகாமல் இன்றுவிட்ட சிறு பேட்டி ஒன்றையும் நான் படித்து, பதில்களை நானே எழுதுமளவு முனைந்து செயல்பட்டிருக்கிறேன். மற்றபடி இங்கே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட, ஆனால் எழுத்தில் பதிவு

________________

பெறாத நேர்ச்சந்திப்புகளே நான் தந்த 'பேட்டி'கள் எனவேண்டும். இந்த சந்தர்ப்பங்கள் தீவிரமானவை. இந்த வேளைகளில் என்னைத் தூண்டியவர்கள் தம்மையறியாமலே ஒரு பேட்டியாளனின் முக்ய வேலையைச் செய்தனர். அதாவது 'தயங்கிய உத்வேகம்' என்று நான் முன்னே குறிப்பிட்டுள்ள நிலையை என்னிடத்தில் தூண்டி, பேசவைத்து, முன்னே குறிப்பிட்டுள்ள 'பொதுமுக அந்தரங்கங்கள்' பலவற்றையும் வெளிவரவைத்துள்ளனர், இதுவே பேட்டியாளன் செய்ய வேண்டியது. இதன் விளைவாக வெளிப்படுகிறவற்றை பதிவு செய்து கொள்கிற செயல்முறைக்கு பிரச்னையாளனின் உதவியும் பேட்டியாளனின் பொறுப்பும் அவசியம், மேல் குறிப்பிட்ட நிலைமைகளில் என்னைச் சந்தித்தவர்கள் நான் சொன்ன வற்றை பதிவு செய்கிற உத்தேசத் பிரும்மிள்ஜ் ராம்:

பிரதி:

"ஏன் எழுத ஆரம்பித்தாய்?' என்ற கேள்வியோடு ஆரம்பிக்கலாம். ஆனால் ஏதோ குறைபாடுகொண்ட சம்பிரதாயம் தான் இந்த கேள்வியும் என்று நினைக்கிறேன்,

ரூபம்: '

எழுதுவதற்கு இத்தகைய தூண்டுதல்கள்?' என்ற வகையான கேள்வி நல்லது. ஆனால் இதுகூட 'பூ ஏன் மலர்கிறது?' என்றவகை கேள்வி தான். சம்பிரதாயமாகிவிட்ட அளவில் 'ஏன், எதற்காக எழுதுகிறாய்?' என்ற கேள்வி, 'உன்னைப்போன்றவனெல்லாம் ஏன் எழுதி எங்களைப் போன்றவர்களுக்கு சங்கடம் கொடுக்கவேண்டும்?'' என்ற தொனியிலோ, 'என்னென்னமோ எல்லாம் எழுதுகிறாய். உண்மையில் எங்கள் இஸம், எங்கள் கும்பல், அல்லது கட்சிக்கு ஏற்றபடி இன்ன - காரணத்துக்காக எழுதுவது தான் எழுத்து என்று தெரிவதோடு மேற்சொன்ன விளைவுகளை ஏற்படுத்தவில்லை எனவேதான் பதிவு செய்கிற பொறுப்பை நானே நிறை வேற்றுகிறேன். என்னைத் தூண்டிய வர்களுக்கு ஒரே குரலை தரும் நோக் கத்துடன் அவர்களை 'பிரதி' என, எனது 'ரூப்'த்தின் பிரதி என பாவனை கொண்டதோடு, 'எனது பிரதி' ஆகி விட்டதால் பிறர் கேட்காத சில கேள்விகளையும், பிறர் கேட்டுள்ள கேள்விகளை ஆழமாக்குகிற புதிய கேள்விகளையும் நானே உருவாக்கிக் கொண்டு ரூபத்தை தூண்டிய நிறைவேறிய சம்வாதம் இது. இந்த இப்போதைய பக்கங்கள் பின்னாடி தொடர்ந்து வேறு பிரச்னைகளை ஆராயக்கூடும். இங்கு ஓரிரு குறிப்பிட்ட பிரச்னைகளே ஆராயப்படுகின்றன. பொதுமுகப்படத் தக்க அந்தரங்கங்கள் தவிர்ந்தவை இவை. அவை பின்பு தொடரக் கூடும். யாமல் ஏன் எழுதுகிறாய்?' என்ற தொனியிலோ தான் பிறக்கிறது.

பிரதி: 
- அத்தகைய தொனிகளுக்கு எப் படி பதில் தருவாய்?

ரூபம்:

அத்தகைய தொனிகளுக்கு தரப்படும் பதில் 'பதில்' ஆகாது. ஒன்று அந்த , தொனியின் தேவைகளைப் பூர்த்தி பண்ணும் உடன்பாடு அல்லது எதிர்க்கும் மறுப்பு என்ற நிலை தான் விளையும். 'பதில்' என்பதோ சிந்தனைத் தொடர்ச்சி எனவேண்டும். மேற்படி 'தொனிகளில் தொடர்ச்சியை ஊக்கும் சிந்தனை இல்லை,

பிரதி:

நுட்பமான விஷயங்களில் நம்மிடையே அந்த மறுப்புகள் உடன் பாடுகள் வந்தால் வரட்டும். இப்போது நீ எழுதுவதன் காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

- ஒரே வார்த்தைப்பதில் கூட இவ் விடத்தில் - சாத்ய ம்: 'நெருக்கடி'.

________________

இந்தச் சொல் ' ஒரே பதிலின் பல முகங்களுள் ஒன்று. 'உளைச்சல்' என்றும் சொல்லலாம் எவை எனக்கு உத்வேகத்தை, உளைச்சலை, நெருக்கடியை உண்டாக்குகின்றன என்பது

அடுத்த கட்ட கேள்வி. இந்த அடுத்த கட்டம் வேறு ஒரு பிரச்னையை இங்கே வரவழைக்கிறது. எனது உத்வேகத்துக்கான காரணமே இன்னொரு எழுத்தாளருக்கும் இருந்தாக வேண் டும் என்பதில்லை என்பதும் ஒவ்வொருவருக்குமுள்ள இந்த வேறு வேறு தன்மைகளை நான் ஆராய்ந்த பல்வேறு வகைகளுள் அதிசயிக்கத்தக்க விதமாக தீர்க்கமான பதில்களை தந்துள்ள ஒரு துறை ஜோதிடம் என்பதும் தான் இந்த பிரச்னை.

, பிரதி: 
இலக்கிய விமர்சனத்துறையில் ஜோதிடத்துக்கு என்ன வேலை?

--ரூபம்:

மனித உள்ளத்தைப் பற்றியது என்ற தொடர்பு உண்டு. ஜோதிடம் என்பதற்குப் பதிலாக Cosmic Chemistry-விண்ணக ரஸாயனம்-என்ற ஒரு நவீனமான பிரயோகத்தையும் இந்த விண்ணக ரஸாயனம் ஜோதிடத்தின் முக்யமான ஒரு அடிப்படையை விஞ்ஞானபூர்வமாக ஏற்று எந்த முடிபை அடையுமோ என்று இப்போது நிச்சயிக்க முடியாத வளர்ச்சிகளைப் பெற்றுவருகிறது என்பதையும் வைத்துப் பார்த்தால் நான் குறிப்பிட்ட அம்சத்தை சர்ச்சைக்கு எடுக்கலாம். ஜோதிடத்துறையின் பிரகாரம் கிரகங்கள் பூமியின் ஜீவ வாழ்வை ஆள்கின்றன, இந்த மொத்தமான அடிப்படை முடிபு அசைக்க முடியாத நிரூபணம் பெற்றுவிட்டது. அதே சமயத்தில் ஒவ்வொரு மனிதனது விசேஷமான குணாதிசயங்களுக்கும், அவனது ஒவ்வொரு கணவேளை வாழ்வின் தீர்மானங்கள் நிகழ்ச்சிகள் யாவற்றுக்கும், அவனது உத்யோக பதவி எது என்பதிலிருந்து அவன்

________________

இன்ன நாள் இன்ன மணி மினிட்டுக்கு இ ன் ன வ ல க வாழைப்பழத்தின் தோலில் சறுக்கியடித்து விழுந்து சாவான் என்பது வரை வகுத்துள்ள விதியை மேனாட்டு ஜோதிடமுறை முன்கூட்டியே சொல்லி விடும் என்ற முடிபை தகர்த்து விட்டனர், ஆனால் மேனாட்டு முறையைவிட ஆழமான வகைகளில் வித்யாசமான , இந்திய முறையை  மேற்படி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்லிவிடவேண்டும் இதனால் இந்திய முறை விஞ்ஞான பூர்வமாக தகர்க்க முடியாதது என்று நான் நிச்சயிப்பதாக கொள்ளக்கூடாது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவே பட்டாமல் “ தப்பித்து' இருக்கிறது எனலாம். இதே சமயத்தில் மேலே குறிப்பிட்ட மேனாட்டு ஜோதிட அடிப்படை எனத் தக்க 'அசட்டு விதி' ஒன்றன் கருவிகளாக கிரகங்கள் மனிதனை ஆட்டுவதில்லை என்று பங்களூர் வெங்கட் ராமன், காலஞ்சென்ற சென்னைவாசியான கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகிய இந்திய ஜோதிட நிபுணர்களின் கருத்துக்கள் கூறுகின்றன. ஒரு குறிப்பிட்ட அலை அல்லது முகில் தனது சகலவிதமான வடிவ விசேஷத்தன் மையையும் எண்ணிறந்த வகையான காற்று. அழுத்தம் முதலிய பிற சக சக்திகளின து தாக்கங்களின் விளை வாக எப்படிப் பெறுகிறதோ அவ்வகையில்தான் ஒவ்வொரு குறிப்பிட்ட சமயத்திலும் நக்ஷத்ரங்களின் விண்ணக தாக்கங்கள் ஜீவன்மீது கிரகசாரத்தின் வாயிலாக குவிகின்றன என்ற முடிபு ஏற்றுக்கொள்ளத்தக்கது எனலாம். இதையே இவர்கள், விசேஷமாக இத்துறையில் சிந்தனை சார்ந்து எழுதும் பி. வி. ராமன், தங்களது சொந்த வார்த்தைகளில் வேறு உதாரணங்களோடு கூறுகின்றனர். இந்திய கருத்துலகவாதிகளும் சிந்தனையாளர்களும் மூக்கை நிமிர்த்தி க் கொண்டு இவர்களை 'பத்தாம்பசலிகள்' என ஒரேயடியாக உதாசீனப்

________________

படுத்துவது தவறு என நினைக்கிறேன். மேனாட்டு ஜோதிடமுறை போலன்றி இந்திய முறையில் ஏதும் இருக்கலாம் என்பது எனது நீண்டகால் அவதானங்களின் முடிபு. விஞ்ஞானபூர்வமாக இந்திய முறையும் தகர்க்கப்படும் வரை கொஞ்சம் தைரிய மாக இந்த முடிபை-என்னளவிலான அவதானங்களில் காலூன்றி--நான் அங்கீகரிக்கலாமல்லவா?

பிரதி: 
“அப்படியானால் இங்கே உன் அவதானங்கள் முடிபுகள் யாவற்றையும் சொல்லியே அடுத்த கட்டத்துக்குப் போகவேண்டிவரும். * ஏற்கப் பட்ட விஞ்ஞான பூர்வமான ஒரு நிலையை சுருக்கமாக திருப்பிச் சொல்லி மேலே போவது தான் இப்போதைக்கு நல்லது.

ரூபம்:

வாசகர்கள் Cosmic Clocks என்ற Michael Gauquelin எழுதியு ள் ள (Paladin Paper Back), நூலைப் படித் திருந்தால் அந்த சிரமம் கூட இங்கே இராது. ஆனால் நாங்கள் 'ஸ்பெஷலைஸ்டு ரீடர்ஸ்' ஆயிற்றே. இலக்கியம் என்றால் அதிலும் சிவப்பு, கடுஞ் சிவப்பு, இளஞ்சிவப்பு இலக்கியம், அல்லது 'சுத்த (?) இலக்கியம்' பிற துறை நூல்களை ஏறெடுத்துப் பார்ப்பதும் தீட்டு. பார்த்தாலும் நமக் கேற்ற இஸமாகயிருக்கவேண்டும் ........ போகட்டும் ....... இந்த நூல் Cosmic Chemistry யை-'விண்ணக ரஸாய னம்' எனது தாழ்மையான தமிழாக் கம்-அறிமுகப்படுத்துகிறது. இதன் ஆரம்பம் ஸ்டாலினிஸ ேச ா வி ய த் ரஷ்யா! கம்யூனிஸத்தின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு முரண A. L. TOHIJEVSKY என்ற ரஷ்ய விஞ் ஞானி இருபத்தைந்து ஆண்டுகளுக் கும் மேலாக சூர்யனது ஜ்வாலை எகிறல்கள் (Solar Flares) நிகழும் சமயங் களையும் அதே சமயத்தில் நடந்த மனித சரித்திர கணங்கள் திடீர்

________________

வெப்பம் திருப்பம், தீவிரம், பெறுவதையும் உறவுபடுத்தி ஆராய்ந்து சில முடிபுகளுக்கு வந்திருந்தார். இவை மார்க்'ஸீய பஞ்சாங்க முடிவுகளுக்கு வந்திருந்தார். இவை ' மார்க்ஸிய பஞ் சாங்க முடிபுகளுக்கு விரோதமான *ஜோதிட' விவகாரம் என்று ஸ்டாலினின் அரசு முடிவுகட்டி விஞ்ஞானியைப் பிடித்து சைபீரியாவுக்கு அனுப் பியிருக்கிறது, ஆனால் உலகின் இதர பாகங்களில் உள்ள விஞ்ஞான அவதானிகளும் இதே வகை முடிவுகளுக்கு வந்து கொண்டிருந்தனர். கம்யூனிஸக் கருணை தங்கள் அரசுகள்மீது பரவாதி காரணத்தால் மேற்படி ரஷ்யவிஞ் ஞானியின் கருத்தை பிறநாட்டினர், கேவலம், சுதந்திரமாக ஆராய்ந்தனர் ஸ்டாலினிஸத்தை ஒழிக்க முயன்ற குருஷேவ் காலத்தில் மேற்படி விஞ்ஞானி சைபீரியாவிலிருந்து விடுவிக் கப்பட்டு ஆராய்ச்சி செய்ய சுதந்திர மடைந்தார். இருந்தும் நீண்டகால தண்டனைகளின் விளைவாக உடல் ஆரோக்யம் சீரழிந்திருந்த - இந்த மேதை அகால மரணமடைந்திருக்கிறார். விண்ணக ரஸாயனத்துறையின் முக்கியமான ஆரம்ப ஆய்வுகள் இவருடையவை. (விஞ்ஞான பூர்வமான சித் தாந்தம் தங்களுடையது என்று ஜம்பம் அடிக்கும் தோழர்கள் இந்த தகவலை ஆராய்ந்தால் 'விஞ்ஞான பூர்வமான து' என்ற பகட்டு. முரட்டு கொடுங்கோன்மை ஒன்று தனக்கே தரும் வெகுஜனரஞ்சக மான ஒரு முகமூடி என்பதையும், இதே வகையில் அன்று வெகுஜன ரஞ்சகமாக இருந்த ஆபீஸ் கிறிஸ்துவம் இதேவிஞ் ஞான சுதந்திரத்தை கிறிஸ்துவ நம்பிக்கைகளின் அடியில் அடக்கி ஒடுக்க முயன் றிருக்கிறது என்பதையும் உணரக்கூடும்.) மனிதனை அவனது 'பூமிச்சூழலிலிருந்து தனிமைப்படுத்தி விண்வெளியின் இதர இடங்களில் நீண்ட - காலங்களோ தொடர்ந்தோ பயணம் செய்ய அல்லது வசிக்க செய்யும் விஞ்ஞான தீர்க்க தரி சன சிந்தனைத் துறை அதைச் சார்ந்த விண்ண கபெளதிகம் (Astrophysics:

________________

Laws governing influences of space on man: விண்ணக நியதிகள் மனிதனை ஆளுமைகொள்வது பற்றியது) போன்ற துறையினர் சகலவிதமான விண்ணகத் தாக்கங்களையும் , பரிசீலித்தே முடிவுகளுக்கு வரவேண்டிய நெருக்கடியை சமீப காலங்களில் அடைந்ததின் அதிசயமான புதுத்துறைத் தோற்றம் விண்ணக ரஸாயனம், சூர்யனது. ஜ்வாலை எகிறல்கள் மட்டுமல்ல, சந்திரனின் திதிகள் கூட. முக்யமாக சந்திர பௌர்ணமிகூட பூமியின் ஜீவ வாழ்வை பாதிக்கிறது என ஆயிரக்கணக்கான - அவதானங்கள் நிரூபிக்கின்றன,  ரஸாயன ஆய்வுகளில் திரவங்களின் கலப்புகளும் ஆய்வு நிறை வேற்றங்களும் கூட சந்திரனின் மாசுகளால் ஆளப்படுவது நிரூபணமாகி இருக்கிறது. அமெரிக்காவில், நியுயார்க்கில் இளம் பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பொலீஸ் ரிக்கார்டுகளை அவதானித்து, சந்ரதிதிக்கும் சில விசேஷமான குற்றவாளிகளின் நடைமுறைகளுக்குமிடையே உறவுகாட்டி இதை ஆராயும்படி வேண்டி வானிலை விஞ்ஞானிகளுக்கு எழுதிய விபரத்தினடிலே பெளர்ணிமை யில்- இன்னவகை குற்றங்கள் சாத்யம் என்ற ஜோஸ்யரீதியான ஹேஷ்யம் இங்கே கவனிப்புக்கு உரியது. நூல் இவ்வகையில் குவிக்கும் எல்லா தகவல்களையும் இங்கே தரமுடியாது என்பதோடு அந்த 'நூலே ஒரு பிரம்மாண்டமான ரிப்போர்ட் டைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிற ஒன்றுதான். பூமியின் தாவரங்களிலி ருந்து மனிதன் வரை சகல ஜீவன்களினதுமான, உயிரியல் அலையேற்ற இறக்கங்களை - (biological rhythme) -கிரகங் கள் ஏதோ வகைகளில் ஆள்கி ன் ற ன என்பதும், கிரகங்களின் அசைவுகளை தன்னுணர்வுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு அடிப்படைப் பிரக்ஞை நிலையில் சகல உயிரினங்களும் அறிந்து கிரக ஓட்டங்களை தங்களது உயிரியக்கத்தின் அலையேற்ற இறக்கங்களுக்கு கடிகாரங்களாக உபயோகிக்கின்றனவோ என்ற -கேள்வியும் இந்த நூலின் மொத்த முடிபு ஆறாயிரம் ஆண்டுகளாக நீடித்து

1

1111

________________

வந்துள்ள ஜோதிடத்தின் பிரச்னை இந்த திருப்பத்தில் விஞ்ஞான சிந்தனைக்கு தனது அடிப்படையை ஈந்துள்ளது. மனிதனை பூமிச்சூழலிலிருந்து பிரித்து விண்ணகப்பயணம் முதவியவற்றுக்கு அனுப்புவதை ஜோதிடர்களது அடிப்படைக் கொள்கையின் மூலம் காண முற்பட்டதின் விளைவே இந்த திடீர் துறையாக முன்னிற்கிற. இதுவரை கவனிக்கப்படாத பிரச்னையி ன் திடீர் வளர்ச்சி. ஜியோர்ஜியோ பிக்கார்டி (Giorgio Piccardy) யுனிவர்ஸிட்டி ஆஃப் ஃபுளோரன்ஸில் பெளதிக ரஸாயன (Physical Chemistry) துறையின் தலைவர். விண்ணக ரஸாயனத்தின் முன்னிலைப் பிரதிநிதித்துவம் இவருடையது. "விண்ணக விளைவுகளுக்கு மனிதனை ஆட் படுத்தி அவதானிப்பதற்காக அவனை வெளிமண்டலத்திற்கு அனுப்பவேண்டிய தில்லை. அவன் வீட்டைவிட்டு வெளியே கூட வரவேண்டியதில்லை. மனிதன் சதா காலமும் பிரபஞ்சத்தினால் சூழப்பட்டி ருக்கிறான். ஏனெனில் பிரபஞ்சம் எங்குமாக நிரம்பி இருக்கிறது.” (“To be subjected to cosmic effects, man does not bave to be shot into. space, he does not even have to leave his home. Man is always surrounded by the Universe, since the Universe is everywhere ”') இவை பிக்கார்டியின் வாசகங்கள் இந்த பிரபஞ்ச ஆளுமையைக் கிரகிக்கிற ஜீவனின் சக்திகள் பற்றி நூலாசிரியர் கொகலின் கூறுகிறார்: ''இதுவரை அறியப்படாத நுண்ணிய கிரகிப்புணர்வுகள் மனிதன் உட்பட சகல உயிர்களிலும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள து." (“Previously unknown sensory receptors have been discovered among all forms of life, including man.”') இனி, ஜோதிடத்தின் முடிவுகளை நிராகரித்தாலும் கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் குரு கீழ்வானிலோ மேற்குவானிலோ, அதாவது உதயமாகும்போதோ அஸ்தமிக்கும் போதோதான் பிறந்திருக்கிறார்கள் என்பதையும் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் இருப்போர் செவ்வாயினால் இதே விதமாக ஆளப்படுகிறார்கள் என்பதையும் போன்ற சில உண்மைகளை மறுக்க முடியாமல், பல பிறப்புக்குறிப்புகளைக் கொண்டு, கண்டமை ஜோதிடத்தின் முழு முடிவுகளையும் உ த ற முடியாத நிலையை ஆராய்ச்சியாளர்களுக்குத் தந்துள்ளது. இதன் விளைவாகவே குறிப்பிட்ட குடும்பங்களில் ஒரே கிரக ஒற்றுமை கவனிக்கப்பட்டு அந்தந்த குடும்பங்களில் பிறப்போரது ஜன்ம வேளைகளுக்கு கரு விலுள்ள ஜீவன் தானாகவே குறிப்பிட்ட ஒரே கிரகத்தை கடிகாரமாக உபயோகிக் கிறது என்ற ஒரு அநுமான முடியை கொள்கிறார்கள். விண்ணக ரஸாயனம் மேலும் வளரும்பட்சத்தில் இந்த முடிபு கூட ஜோதிடசார்பை நோக்கி மாற்ற மடையக் கூடும் என இந்திய ஜோதிடத்தை அடிப்படையாக்கி கருத இட முண்டு........ இவ்வளவும் நான் இப்போது சொல்ல வந்ததுக்கு அ வ சி ய ம ா ன பீடிகை.

பிரதி:
உனது. பிரத்யேக உளைச்சல்களின் தன்மையே பிற எழுத்தாளர்களையும் தூண்டவேண்டும் என்பதில்லை...

ரூபம்:
ஆம் அதுவே இப்போதைய பிரச்னை, ஒருவகை நெருக்கடி எனக்கு தூண்டுதலாகி ஓரு வகை இலக்கிய சாதனையை அல்லது கருத்து வகை சாதனையை நிறைவேற் றினால் வேறொருவருக்கு இன்னொன்றாகலாம். இங்கே தான் மேலே ஒரு குறிப் பிட்ட அலை அல்லது முகிலின் வடிவ விசேஷத் தன்மையின் காரண அழுத்தங்கள் பற்றிய உதாரணத்துக்கு இடம் உண்டாகிறது. ஒரு மனோ விசேஷம் கிரக நிலைகளின் விசேஷ அமைப்பின் (ஒவ்வொரு வினாடியும் மொத்தமான கிரக நிலைகளின் அமைப்பு இதுவரை அமையாத வகையாகவே சம்பவிக்கிறது.) விளைவானால் இன்னொரு மனதிற்கு இன்னொரு அமைப்பு, இந்த அளவுக்கு நான் ஒரு 'பத்தாம் பசலி' கருத்தை முன்வைத்து

________________

தீர்வை அடைய முயற்சிக்கிற அளவு எட்டாமல் மீறுகிற பிரச்னை எழுதத்தூண்டும் உளைச்சல், நெருக்கடி, உத்வேகம் பற் றிய பிரச்னை. ஆனால் மார்க்ஸிய ஜோதிடத்தின் பிரகாரமோ 'எழுத்தாளன் எழுதாமல் இருப்பது குற்றம், எழுதினாலும் எங்கள் கட்சி எழுத்தாளர்களுக்கு சங்கடமாக எழுதுவது. அதைவிடக் குற்றம்" என்ற எழுதாக் கிழவி ராஜ்யமும் இதன் அடிப்படையில் விமர்சனமும் வெகு சாங்கோபாங்கமாக நடக்கிறது. இவர்களது சுத்தசூனிய ஜோதிடத்தைவிட மேலுள்ள 'பத்தாம்பசலி' ஜோதிடம் நூற்றுவீதம் கண்யமானது. ஏனெனில் ‘பத்தாம்பசலி' ஜோதிடம் வரம்புகளுக்கு அடங்காத அளவு Combinations and Permutations - சேர்க்கை மாற்றுச்சேர்க்கை - வழியில் எண்ணிறந்த சாத்யங்களுக்கு இடம் தருகிறது. பிரபஞ்சத்திலுள்ள எல்லா வகை அமைப்புகளினுள்ளும் அதி ஆச்சர்யமான அளவு பின்னலானது மனித மூளையின் அமைப்புதான் என்பதை எடுத் துக்கொண்டால் . Fanatical ஆ ன - முரண்டு பிடிக்கிற - மார்க்கீஸிய ஜோதிடத்தைவிட 'பத்தாம்பசலி ஜோதிடத்தின் *சேர்க்கை மாற்றுச்சேர்க்கை' விசேஷத் தன்மையே மூளை அமைப்பின் சேர்க்கை மாற்றுச் சேர்க்கைப் பின்னலுக்கு பொருந்தும் மனித உத்வேகங்களின் அலை யேற்ற இறக்கங்களை இந்திய ஜோதிடம் தெளிவாக ஒரு மிக நுட்பமான அலைப் பதிவுப்" படம்போல் காட்டிவிடுகிறது. தசை, புக்தி, அந்தரதசை, சூஷ்மம் என்ற நுண்ணிய காலரீதியான பிரிவும் சமவேளைகளின் கிரகசார அவதானமும் ஜாதகமும் இந்த உத்வேகங்களை விளக்குவது போல் இலக்கிய சித்தாந்தங்கள் - கூட விளக்குவதில்லை எனலாம் உதாரணமாக ''எழுத்தாளன் பணத்தைப்பற்றி மூச்சுக் காட்டப்படாது. காட்டினால் செம்மையாக உதைப்பேன்" என்ற வகைச் சித் தாந்த போலீஸ் அல்லது “ சும்மா பணம் வாங்காமே கதையைக் குடுத்தா அதிலே ஜோர் இல்லே ஸார்'' என்ற வகைச் சித்தாந்த பிளாக்மார்க்கெட் வா - இரண்டுமே இலக்கிய சாதனைக்கு ஒரு நிமிஷம் ஊக்ககமாகவும் மற்றொரு நிமிஷம் குந்தகமாகவும் இருக்கும், தியாக உணர்வும் கலையுணர்வும் இணைந்த விளைவை குறிப்பிடும் ஒரு கிரக சேர்த்திக் கணத்தில் கிளரும் இலக்கிய உத்வேகம் முதல் வகை சித்தாந்திக்கு பலம் தருகிற ஒரு எழுத்தாள உதாரணத்தை கண்டால், லாப உணர் வும் கலையுணர்வும் இணைந்த நிலையில் பின் வகைக்கு உதாரணத்தைக் காணலாம். ஜோதிடம் ஒருபுறம் கிடக்க அநுபவத்தி லும் இலக்கிய அவதானத்திலும் இதை காணமுடிகிறது என்பது தான் முக்யம், லட்சியபூர்வமாக, தியாக உணர்வோடு, இன்னும் குறிப்பிடத்தக்க உயர் நோக்கங்கள் பலவற்றின் கணிசமான டோஸ்களோடு உட்கார்ந்து எழுதியும் கூட ஒரு திவலைகளைச் சத்துகூட இல்லாத அறுதல் நார்களை வெளியிடுகிறவர்கள் இருக்கிறார்கள். மிக மட்டமான ஒரு தேவையைப் பூர்த்திசெய்ய உடனடியாக பணம் வேண் டும் என்ற நோக்கத்தோடு எழுதியே உலக இலக்கிய சிகரங்களைத் தந்தவர்கள் கூட உள்ளனர். இதற்காக உயர்ந்த லட்சியம் உயர்ந்த எழுத்துக்கு முட்டுக் கட்டை என்றால் அது கீழ்த்தரங்கள் கெளரவம் சம்பாதிக்க எழுப்பும் சதிக்குரலாகவே முடியும்.

பிரதி: 
- இவ்வளவு சொல்லிவிட்டாய். ஆனால் நீ எழுதுவதுக்கு எது உத்வேகம் தருகிறது என்ற கேள்விக்கோ, இலக்கிய விமர்சனத்துக்கும் ஜோதிடத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கோ பதில் நீ சொல்லவில்லையே.

ரூபம்:

சொல்லியாயிற்று. விளக்குகிறேன். நான் எழுதுவதுக்கு இது தான் உத்வேகம் தருகிறது எனபதில் தருவதே தவறு, “எவனும் எழுதுவதற்கு உத்வேகம் பெற சரியான காரணம் அதுவே' என்ற வகையில் அது நிலைபேறு அடைந்து இன்னொரு வகையில் உத்வேகம் பெறுகிறவனுக்கு தடையாகலாம். அல்லது என்னை தரம் இல்லாத எழுத்தாளன் என்று கருதுவோரின் பார்வையில் எனக்கு உத்வேகம் தரும் தூண்டுதல்களும் தரக் குறைவாகப்படலாம், வேறு வேறு வகை தூண்டுதல்களை அழுத்தமாகக் குறிப்பிடவே நான் ஜோதிடம் பற்றி பேசினேன். அதற்கும் விமர்சனத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில் அல்ல, ஆனால் இரண்டிலும் பொதுவான ஒரு செய்தி இருக் கிறது: இரண்டுமே மனித உள்ளத்தின் சேர்க்கை மாற்றுச் சேர்க்கைகளிலுள்ள அருந்தத்தைக் காட்டக்கூடியவை,ஒரு விவேகிக்கு ஜோதிடத்தைப்பற்றிய பேச்சு இல்லாமலே இந்த சேர்க்கை மாற்றுச் சேர்க்கை வி ஷ ய ம் பிடிபடலாம்  எனினும் நான் இங்கே குறிப்பிட்ட கோணத்தில் அது ஜோதிடத்தின் மூலம் அழுத்தம் பெறுகிறது. இது மட்டுமல்ல, இந்த  சேர்க்கை மாற்றுச் சேர்க்கையை உணராமலே சித்தாந்தக் கெடுபிடியைக் கொண்டுவர முயற்சிக்கிற தமிழ் விமர்சகர்களுக்கும் எனது இலக்கிய ஜனனத்துக்கு தங்கள் சூழ்நிலையே காரணம் என்று கூறுவோருக்கும் ஒரு சுவாரஸ்யமான வேண்டுகோளைத் தர இது ஒரு முகாந்தரமாகிறது: கொஞ்ச காலம் விமர்சனத்தை விட்டு வைத்து ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்,

பிரதி: 
மொத்தத்தில் எவை உன து உத்வேகங்களுக்கு காரணங்கள் என்று சொல்லாமலே தப்பித்துவிடப் பார்க்கிறாய்; அவ்வளவு தானே?

ரூபம்: 

மேலே குறிப்பிட்ட எச்சரிக்கையை தந்துவிட்டபிறகு நான் எனது உத்வேகத்தின் காரணங்களை சொல்வதில் ஆட்சேபனை இல்லை, இருந்தும் காரணங்கள் என்பதை விட நொண்டிச் சாக்குகள் தாம் அவை என்று சொல்வதே பொருந்தும். உதாரணமாக உலக இலக்கியத் தரத்தில் எழுதுகிற ஒருவன் சாயந்தரம் குடிப்பதற்கு பணம் வேண்டிய காரணத்தினாலேயே அந்த உத்வேகத்தைப் பெறுகிறான் என்பது அபத்தம். உத்வேகம் ஏதோ

________________

ஒரு நொண்டிச் சாக்கை வைத்து அவன் மூலம் வெளிப்படுகிறது என்பதுதான் சரியான பார்வை. எனவே உத்வேகத்தின் உண்மையான காரணம். உத்வேகமே. மற்றையயாவும், அவை எவ்வளவு உன்னதமானவையானாலும் சரி, இரண்டாம் பட்சமானவை, காரணங்களல்ல, இந் நிலையில் எனக்கு உத்வேகம் தந்த காரணங்கள் இதுவும் இதுவும் தான் என்று சிலவற்றைச் சொல்ல முற்படுவது எப்படி? உத்வேகத்துக்கு உன்னத , காரணங்களை எதிர் பார்த்து காரணம் கேட்கிற அபத்தமான

விசாரணையை மடக்குவதற்காக சில மேதைகள் “பணத்தையே ஜபித்துக் தொண்டு எழுதினேன்” என்று கூடச் சொல்லி இருக்கிறார்கள், சில மண்டு கள் இதை வைத்தே தங்களது இலக்கிய சித்தாந்தங்களை உருவாக்கிக்கொள்ளுகிறார்கள். உத்வேகம் உன்னதமான து என்று பிறர் உணரவேண்டும் என்ற நோக்கத் தோடு அதை உந்தமான காரணங்க ளோடு இணைக்கிற ேவ று மேதைகள் வேறுவகைச் சித்தாந்தக் கெடுபிடிகளை ஊக்குவித்து இருக்கிறார்கள். உண்மை யாக உத்வேகத்திற்குப் புறம்பாக அதன் காரணத்தை நான் அறியேன் என்று அடக்கத்தோடு பதில் சொல்பவனோ கல்லடி படுகிறான். கல்லடி தேவலை.

பிரதி: 
அப்படியானால் தனது எழுத்தின் உத்வேகத்துக்கு இன்ன காரணம் என்று ஒரு வன் சொல்வது அவன து எழுத்தை தரம் காட்டாது என்கிறாய்.

ரூபம்: 
மொத்தத்தில் நான் சொல்ல விரும்பு வது அது தான். இன்ன காரணத்துக்காக எழுதினேன் என்பது இரண்டாம் பட்சம்மான து. இதை உணராமல் - எழுதுவதற்கு தங்களை தூண்டியவற்றின் தற் செயல் தன்மையை உணராமல் - தாங்கள் எந்த காரணங்களுக்காக எழுதுகிறார்களோ அவையே ஸ்டாண்டர்டு' காரணங்கள் என்பவர்களின் எழுத்தை ஆராய்ந்தால் அதில் உத்வேகமே - இல்லாத

________________

சக்கைத்தனம், அல்லது கோணங்கித்தனமான ஆவேசம், அல்லது போலியான பிற தொனிகள் பல்லிளிக்கக் காணலாம், எத்தகைய காரணமும் உத்வேகத்தை : வர வழைத்துவிடாது. மாறாக உத்வேகம் எத்தகைய. காணத்தையும் உயிர்ப்பித்து அதனூடே வெளியீடு கொள்ளும்.

பிரதி: 
இந்த உத்வேகம் எத்தகைய வேளைகளில் என்ன தோரணையில் செயல்படுகிறது என்றுகூட சொல்லமுடியாதா?

ரூபம்: 
சொல்கிறார்கள் ஆனால் இங்கேகூட நான் முன்னாடி குறிப்பிட்ட ஜோதிட சக்திகளின் ஆளுமைகளை கவனித்திருக்கிறேன். எனவே இந்த உத்வேக வேளைகளும், செயல்படும் தோரணைகளும் கூட அநந்தம். ஒருவர் 'ஒரே கதையை ஐந்து வருஷமாக திருப்பித் திருப்பி எழுதினேன். இன்னும்கூட திருத்தலாம். ஆனால் என்னால் முடியவில்லை' என்கிறார் என்றால் இன்னொருவர் ஏதோ 'இயல்பாக' தாம் ஒரே மூச்சில் எழுதியதாகவும், திருப்பி எழுதி திருத்தப் போவதில்லை என்றும்கூட சொல்லக் கேட்கலாம். தாங்கள் எழுதும் தோரணைகளைப் பற்றி இவர்கள் சொல்கிறவை எத்தனையோ போலிகளுக்கு மாடல்களாகி, விஷயம் ஒரே கோணங்கிக் கூத்தாகக்கூட மாறியிருக்கிறது. பேட்டி என்ற பெயரில் ஒருவர் பக்கம் பக்கமாகப் பேத்துகிறார் என்றால் இன்னொரு பிரபலமான போலி தாம் ஏதோ ஒரு பார்க்கில் ஏதோ ஒரு குழாயின் ஏதோ 'பொத்தல்கள் வழியே ஏதோ வெளியேறுவதைப் பார்த்துப் பார்த்தே கதை எழுதுவதாகவோ ஏதோ தமது சிறுகதைகளுக்கு முன்னுரை தருகிறார். இதற்கு ஜோதிட ரீதியாக என்ன கிரகங்ளில் 'பொத்தல்கள்' விழுந்து இவரை ஆட்டுகின்றன என்று அறிய ஆசையாக இருக்கிறது: ஆளின் ஜாதகம் தான். தேவை நிற்க, கலையுலக உயிர் கொண்டு எழுந்து நடமாட வைக்க , -எழுதினேன் , இ ந் த சமுதாயத்தைப் புரட்டியடிக்க எழுதினேன், ஆத்மீக நெருப்பிலே குடும்ப உணர்வைப்

________________

?

58,

* போட்டு நானும் அதிலே குதித்து நின்று  எழுதினேன், எத்தனையோ நாட்கள் 'ஓம் தத் சத்' என்று தியானம்பண்ணி எழுதினேன், சோதனைக்காக எழுதினேன், என்னாலா எழுத முடியாது - எழுதிக் காட்டுகிறேன் பார் என்று எழுதினேன், எழுதலாமா முடியாதா என்று கண்டுபிடிக்க எழுதினேன் எத்தனை, எத்தனை!  இவ்வளவும் கவனிக்கப்படுகின்றன என்றால் இவற்றைக் கூறியவர்கள து படைப்புகளின் விசேஷத் தன்மைகளுக்காகத்தானே அன்றி இந்த எழுதிய தோரணைகளின் விசேஷத்தன்மைக்காக  அல்ல இது வலியுறுத்தப்படவேண்டிய குறிப்பு. இது போக இன்னென்று: இவையாவற்றிலுமே முக்யமான ஒரு விஷயம் நிறைவேறவில்லை, அது, உத்வேகம் வெளியே வருவதிலுள்ள சிரமம் சம்பந்தமானது. எழுதி முடிந்து படைப்பும் சிறந்ததென முடிவான பின்பு தாங்கள் அதை எழுதிய தோரணை பற்றி இப்படி இவர்கள் பேசுவது உத்வேகவேளை. ஏதோ சுளுவான ஒன்றாகவே தென்பட வைத்துவிடுகிறது. | உலகின் இலக்கிய சிகரங்கள்* எழுதப் பட்ட விபரங்களைப் படிக்கிறபோது உத்வேகமும் எழுதுகிற மனித மனமும் யோகம் பெறுகிற வேளையின் அதிசயமான கடினமும் எதிர்பாராத தன்மையும் நம்மை வருந்தி பிரமிப்பூட்டுவனவாகும்.

பிரதி:
அப்படியானால் ஒருவரது எழுத்துக்கு அடியில் சுத்தமான உணர்வு ஊக்கங்கள் இருந்திருக்கின்றனவா என்று காண்பது எப்படி? *

ரூபம்;
அவரது எழுத்தை வைத்துத்தான்! இவ்விடத்தில் உன் கேள்வி பற்றி ஒரு குறிப்பு: இலக்கியமாக மாறும் வேளையில்.

* டால்ஸ்டாயின் - அன் னா கரேனின்' எழுதப்பட்ட விபரத்தினது மொழி பெயர்ப்பு 'கொல்லிப்பாவையில் வெளியாகும் போது இது சம்பந்த மான விபரத்தெளிவு இடம்பெறும். :பிரேம். சிவராம்.

குறிப்பு:-

________________

14

சுத்தாசுத்தங்களை மீறிய உத்வேகத் திலே உணர்வூக்கங்கள் புடம் போடப் பட்டுவிடுகின்றன. எனவே சுத்தமான என்பதை நீக்கிவிட்டு உன் கேள்வியை பார்த்தால் கேள்வியின் அவசியமின்மை - தெரியவரும். 'அவரது எழுத்தை வைத்துத்தான்' என்ற பதிலைப்புலன் கொண்ட கேள்வியாகவே அது தன்னை நிறை வேற்றி நிற்கும்.

'பிரதி:

எனது கேள்வியில் சுத்தமான' என்பதற்கு 'உண்மையான' என்ற சாயலும் உண்டு. இந்தச் சாயலை வெளிப்படுத்த கேள்வியை மாற்றிப் போடுகிறேன்: உண்மையிலே தனக்கு நடந்ததையே ஒருவர் எழுதுகிறார் என்ற காரணம் அவரது எழுத்தை - இலக்கியமாக்காதா?

ருபம்:
இலக்கிய விழிப்பு உள்ள கண்ணிலே மண்ணைத்தூவும் பிரயோகங்களுள் ஒன்று இந்த 'உண்மை '. உள்ளபடி நடந்ததை எழுதுவது விவரணையோ , தகவலோ, சரித்திரமோ, சுயசரிதமோ ஆகலாம். அந்த தன்மைகளை அடைவதற்கே அந்த வெளியீட்டுத் துறைகளான பத்திரிகை - இயல், சரித்திர இயல் சம்பந்தமான தேவைகளை எழுதப்பட்ட விபரங்கள் - பூர்த்திசெய்தாகவேண்டும் உண்மையில் நடந்தது' என்பது கலைத்துறையைப் பொறுத்தவரை கலைத்தன்மை பெறுவ தற்கு லைசென்ஸை வழங்கிவிடாது. ஒரு நாடகாசிரியை தமது நாடகத்தை எனது நேர்முக உரையாடல் விமர்சனம் தகர்ப்பதை கண்டு, நான் அவரது பாத்திரங்களின் உரையாடல் அவ்வளவும் போலியானவை என்று கூறுவது கேட்டு. அவ்வளவு சம்பாஷணையும் தமது வாழ்கையில் அப்படியே நடந்தது என்று கூறி னார். இது ஒரு விமர்சக நண்பரை மடக்கிய இவரது வாதம் என்பதையும் அறிந்தமை நாடகாசிரியை, விமர்சகர் இருவருக்குமே போலித்தனம் என்பது பற்றி நான் விளக்கவேண்டிய நிலையை வ ரு வி த் து விட்டது, - 'உண்மையில் நிஜவாழ்வில் இருவர் அபத்தமாக பேத்திக்கொண்டு

________________

உட்கார்ந்திருக்க முடியும்' என்பதை நான் சுட்டிக்காட்டிய போதுதான் நாடகாசிரியைக்கு எனது வாதம் புரிந்தது (?)*.

பிரதி: 
அப்படியானால் கலைத்துறையில் உண்மைக்கும் உண்மை நிகழ்ச்சிகளுக்கும் இடமில்லை என்றாகிவிடுகிறதே.

ரூபம்: 
என் கூற்றை நீ திரிக்கிறாய். 'உண்மையில் நடந்தது' என்ற லீலைக்குத்தி விட்டால் எதுவும் கலையாகிவிடும் என்ற வாதத்தை நான் தாக்கும்போது கலையுருப் பெற்றுவிட்டால் உண்மை நிகழ்ச்சிகள் தனியே ஒதுங்கி ஸ்திரம் பெறவே செய்யும்,

கலையுலகில் கலையுருவமே 'உண்மை ' என்ற குணத்தின் உரைகல். கலைத்தன்மையே அற்ற ஒரு எழுத்தை உண்மை என்ற லைசன்ஸ் கலைத்தரத்துக்கு உயர்த்த முடியாது. மாறாக, கலையுருப்பெறாத, அதாவது வாசகனை கலைரீதியாக ஆட்கொள்ளாத வெளியீட்டின் கீழ் எத்தகைய உண்மை இருந்தாலும் அதன் உண்மைத் தனங்கூட சந்தேகத்துக்குரியதாகிவிடும்,

பிரதி: 
 கலையுருவம் என்பது ஒரு அலங்கார வடிவம்தானே . அதற்கு ஒரு அர்த்தத்தை ஏற்றும் உயிர்ப்பொருள் அல்லவா உண்மை நீயோ கலையுருவமே உயிர் என்றும் அதன் மூலம் தான் உண்மை நிகழ்ச்சிகள் கூட வெளியீட்டுருவில் ஒரு உண்மைத்தன்மையைப் பெற இயலும் என்று கூறுகிறாயே?

ரூபம்: '
கலை' என்ற சொல் இந்திய, தமிழ், சிந்தனை மரபில் அலங்காரம் என்றே "இன்று நிலவுகிறது இது தவறு. தமிழன து இன்றைய 'கலை'களின் வெகுஜனரஞ்சகத்தனத்தின்படி கலை அலங்காரமும் பொழுது போக்கும் தான். ஆனால் உண்மையான ஆழ்ந்த பொருளில் கலை நிதர்சன. உணர்வைத் தூண்டுகிறசக்தியாகும். *, - 
அம்பை : 'பயங்கள்' நாடகம். •

________________

இது உண்மை . இதை மறுக்க முடியவில்லை. இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை' என்ற முன் நிலைத் தோற்றமாக, அதாவது நிதர்சனவடிவாக எழும் சக்தி தான் கலை, ஆகவே கலையுருவமே நிதர்சன சக்தியாக உண்மை நிகழ்ச்சிக்கோஉண்மை அல்லாத நிகழ்ச்சிக்கோ மறுக்க முடியாத உண்மைத்தன்மையைத்தருகிறது .

பிரதி: 
சரித்திரம், செய்தி ஆகியவற்றிலும் கூட கலைத்தன்மையின் துணை இன்றியே இந்த உண்மைத் தன்மையை உண்மை நிகழ்ச்சிகள் பெறுகின்றனவே.

ரூபம்: 
முன்னொரு கேள்வியில் திரிபு செய்தாய். இப்போது உளறுகிறாய். சரித்திரத்திலும் செய்தியிலும் உண்மைகள் என்று தரப்படுகிறவை அந்த சரித்திர செய்தி மரபுகளின் நேர்மையையும், பிற சரித்திர செய்தி ஸ்தாபனங்களினோடு இவை ஒத்திருப்பதையும். ஆதாரங்களையும் கொண்டே உண்மை என்று ஏற்கப் படுகின்றன. உண்மை என்று ஏற்கப் படுவது வேறு. உண்மைத் தன்மையை அடைவது' அதாவது ஒரு வாழ்நிலையாக நிதர்சனம். கொள்வது வேறு. உதாரணமாக உன்னைப்பற்றி ஒரு பொய்யான செய்தியை பத்திரிகை வெளியிடுகிறது என வைத்துக்கொள். செய்திப்பத்திரிகை என்ற ஸ்தானத்தைப் பெற்றுவிட்டமையால் இந்த பொய் உண்மை என்று பத்திரிகை மூலம் வாசகர்களால் ஏற்கப் படும். மறு இதழில் செய்தியை நீ மறுத்தமை வெளியாகிறது. உடனே உண்மை என ஏற்கப்பட்ட செய்தி - பொய் என கை விடப்பட்டுகிறது. சரித்திரத்திலும் இப்படியே, ஆனால் உன்னைப்பற்றிய அசல் பொய்களை நீயே கலாசிருஷ்டியாக மாற்றும்போது என்ன செய்கி றா ய் ? அல்லது உனது பெயர் முதலியவற்றை ஒரு பாத்திரத்துக்கு தந்து நடக்காத ஒன்றை சிருஷ்டிக்கும்போது என்ன நிறைவேறுகிறது? பொய்யா நிறைவறுேகிறது?

________________

பிரதி: 
பொய்தானே!

ரூபம்: 
அப்படியானால் 'இவ்வளவும் பொய்' என்ற குறிப்புடன் விஷயத்தை வெளியிடு கிறோம் வாசகர்கள் அதை எவ்விதமாக கிரகிக்கிறார்கள்? ஏற்பு மறுப்பு அற்ற இன்னொரு வகையில் அல்லவா?

பிரதி: '
இது பொய்' என்ற தகவல் கலையுருவைப் பொறுத்தவரை அர்த்தமற்ற தாயிற்றே!

ரூபம்: 
எனவே 'இது உண்மை ' என்ற தக வலும் கலையுருவத்தைப் பொறுத்தவரை

அர்த்தமற்றது தானே!

பிரதி: 
அப்படியானால் கலைப்பொருளில் நிறைவேற்றமடைவது என்ன? பொய்யுமல்ல, உண்மையுமல்ல என்றால் அது என்ன ? -

ரூபம்: 
உத்வேகம் தான் நிறைவேற்றம் பெறுவது. கலை வடிவாக உருப்பெறும்

கய உண்மையையும் பொய்யையும் கலைஞனது உத்வேக சக்தி உயிர்கொள்ளச் செய்து நிதர்சனப் பொருளாக்கித் தருகிறபோது உண்மையும் நிறைவேறுவதில்லை பொய்யும் நிறைவேறுவதில்லை, அவற்றின் சாக்கில் உத்வேகமே நிறை வேறுகிறது.

பிரதி: 
அப்படியானால் குறிப்பிட்ட ஒரு செய்தியை உலகுக்குச் சொல்லவேண்டும் என்று எண்ணும் கலைஞர்கள் இருந்திருக்கிறார்களே. அந்த செய்திகளை தங்களது கலைப் பொருளில், இ ன ம் காட்டிக்கூட இருக்கிறார்களே. :


ரூபம்:

அவர்கள் அந்த கலைப் பொருள்களைச் சிருஷ்டித்த இலக்கியத்தைப்பற்றிய விபரங்கள் அவர்களது செய்திகளின் முக்யத்வத்தை இரண்டாம் பட்சமாக்கிவிடுகின் றன், தாங்கள் சொல்ல வந்த செய்தியைப்பற்றி ஓரளவு தெளிவு இருந்தும். கூட. அதைக் கலைவடிவாக்குகிற இயக்கத்தில் இந்த செய்தியைச் சார்ந்த புத்திபூர்வமான மனித மனம், உணர்வு பூர்வமான உத்வேகத்துடன் யோகம் பெறும் நிலை ஏதோ ஒரு அற்புதமான எதிர் பாராத கோடை மழைபோல்தான் சம்பவிக்கிறது. முழு சிருஷ்டிப் பரப்பையும் மொத்தமாகப் பார்க்கிறபோது உத்வேகத்தின் அதிசயத்தன்மைதான், முக்யத்வம் பெறுகிறது. அதன் ஒளியில்தான் சொல்லவந்த செய்திகள் கூட தெளிவு கொண்டு 'அவற்றை வெளியிட இனி நாம் முன் வரலாம்' என்ற நம்பிக்கையையே கலைஞனுக்குத் தருகிறது. ஆனால் உத்வேகத்தின் ஜீவிதம் உணர்வுமயமான கலையுள்ளத்திலேயே சாத்யம். இந்த உணர்வுமயமான . உள்ளம் பிரச்சனைகளுக்கு லேசில் வசமாகக் கூடியது.

பிரதி: 
பார்த்தாயா? இங்கே அகப்பட்டுக் கொள்கிறாய் சிலர் தொடர்ந்து எழுதாமல் நின்றுவிட்டு ஏதேதோ சாக்குகள் சொல்கிறார்களே -:நான் எழுதுகிறாப்போல் பாஷை வளரவில்லை, அதனாலேயே எழுதாமலிருக்கிறேன்'' என்று உலகில் எந்த வேளையிலும் எவரும் எழுப்பாத குரல்கூட - தமிழ் நாட்டில் கேட்கிறதே அவர்கள் விஷயத்தில் மட்டும் எங்கே குடியோடிப் போய்விட்டது உத்வேகம் என்று கேட்க வாயெடுத்தேன். நீயாக வந்து வலையில் விழுகிறாய், விழு!

" ரூபம்: 
உண்மையில் உத்வேகம் உ ள் ள கலைஞர்கள் எத்தகைய வரம்புகளினுள் தாம் நி ற்கிறோம் என்று பேசாமல் வரம்பை முறிக்கவும் கூடும், வரம்புகள் தம்மை மறிப்பதாக கூறுகிறவர்களோ பெரும்பாலும் தங்களது ஆரம்ப கால வீர்யத்தின் இயல்பான ஒரு உந்துதலையே உத்வேகத்திற்குக் கருவியாக்குகிறார்கள் . இந்த நிலையைத் தொடர்ந்து கலைஞன் தன்னைத்தானே போஷிக்கிறதானால் பிரச்னாபூர்வமான விழிப்பு நிகழவேண்டும்,

________________

தமிழில் இத்தகைய விழிப்பு பெரும்பாலான சிறந்த கலைஞர்களுக்கே தொடர்ந்து இருப்பதில்லை. சுயாபிமான த்திலும் அதைச்சார்ந்த இன அரசியலி லு ம் லெளகீகத்திலும் மூழ்கி மறைகிறார்கள். அதே சமயத்தில் தாங்கள் ஏதோ ஒரு சம்மத்தில் சாதித்தவற்றின் விளைவாக க் கிடைத்த கௌரவத்தை தொடர்ந்து காப்பதற்காக தொடர்ந்து எழுதுவதற் குப் புறம்பான செயல் முறைகளில் இறங்குகிறார்கள். இதன் இன்னொரு காரணம் வெறும் திறன் மட்டுமே முடிவான து என்ற மனோபாவமே என்றுகூடச் சொல்லலாம். வெறும் திறன் கூட உத்வேகத்தை செயல்படுத்தாது. உத்வேகம் நெருக்கடிகளினால் கதவு இடிக்கப்பட்டாலே வெளியேறும். இந்த நெருக்கடி பிரச்னாபூர்வமான விழிப்புகளை மேற்கொள்ளுகிற மனசுக்கே இருக்கும்.

பிரதி: 
இப்போது நீ பின்னிய வலையில் நீயே மாட்டிக்கொண்டாய். இப்போதே னும் சொல்லவந்த விஷயம், அதாவது பிரச்னை, முக்யமானது என்று ஒப்புக் கொள்கிறாய் அல்லவா?

ரூபம்: 
பிரச்னாபூர்வமான விழிப்பைத்தான் முக்யமானது என்கிறேனேயன்றி பிரச்னைகளையல்ல, உன் திசை புரிந்துகொள்ளத்தக்கது. பிரச்னை தான் முக்யம் என்றால் அவற்றைத் தொடர்ந்து பிரச்னைக்கு முடிவுகள் என்ற கட்டமும் தொடர்ந்து அந்த முடிவுகளுள் சரியான முடிவு என்ற ஸ்தம்பிதமும் நிகழும். பிறகு பிரச்னாபூர்வமான விழிப்புக்கே அவசியமற்று பிரச்சாரக் குறட்டை விடுவதில் இறங்கவேண்டியது தான்,

பிரதி: இருந்தும் இந்த 'பிரச்னாபூர்வமான விழிப்பு' என்ற அளவுக்கு நீ இறங்குவது எனக்கு திருப்தி, உத்வேகத்துக்கு நெருக்கடி என்ற காரணத்தை இந்த விழிப்பு ஏற்படுத்துகிறது. உத்வேகம் காரணங்களால் தீண்டப்படாதது என்ற உன்

________________

17

நிலையை இந்த இடத்தில் விட்டுக்கொடுக் கிறாய்.

- ரூபம்: --- 
உத்வேகம் என்ற ஜீவன் உயிரோடு இருக்கிற உள்ளத்தில்தான் பிரச்னாபூர்வ மான விழிப்பும் இருக்கும் என்று நான் கூறிவிட இயலும் - எனது இதுவரைய கூற்று எதனுடனும் முரண்படாமலே!

பிரதி: 
ஓ! -

இருந்தும் மி கலைஞனின் கண்காணிப்பு இல்லாவிட்டால் எத்தகைய நுண்மையும் தொடர்ந்து ஜீவிக்காது” என் பதை ஒரு அவசியமான - கலாச்சார வாழ்வுக்கு அவசியமான - சூத்ரமாகக் கொள்ளலாம், இந்த அவசியம் கருதியே பிரச்னாபூர்வமான விழிப்பை நான் குறிப்பிட்டேன். எந்த உள்ளம் இந்த பிரச்னாபூர்வமான விழிப்பை கலைத்துறையின் சாதனங்கள் மூலம் வெளியிடும்படி தூண்டுகிற உத்வேகங்களை மறுத்து, ஒதுக்கி அல்லது துறந்து தன் தன் போக்கில் லெளகீகம். இனம், அரசியல், மதவியல், என இறங்கி வேறு துறைகளுக்கு வசமாகிறதோ அது இலக்கிய ரீதியாக கவனிப் புக்கு உரியதல்ல.

பிரதி: 
லெளகீகமும், அரசியல் மத சமூகப் பிரச்னைகளும், இல்லாமல் 'பிரச்னாபூர்மான விழிப்பு' என்று எதைப் பார்த்து விழிப்பது?

ரூபம்:

இலக்கிய கலையுருவமாக வெளியீடு பெறுவது எந்த ஒரு பிரச்னையுமோ எந்த ஒரு பிரச்னைக்கும் முடிபு இது எனக் கண்டமையோ அல்ல, இதை எத் தனை வகைகளில் சொன்னாலும் உன் மர மண்டையில் ஏறாது போலிருக்கிறதே! பிரச்னையின் உக்ரத்தையே வெளியிடு கிற ஒரு அதிசயத் தன்மையைக் கொண்ட நிலையே கலை. பிரச்னையின் துறைக்கு முக்யத்துவும் ஏற்பட்டால் அல்லது இது தான்

________________

பிரச்னைக்கு முடிவு என்று கருதினால் அந்த பிரச்னையைச் சார்ந்த துறையினுள்ளேயே மனிதன் திசைகொள்வான், கலைஞனோ பிரச்னை களுடன் தொடர்பு கொண்டவனாயினும் அவற்றின் உக்ரத்துக்கு முக்யத்துவம் தந்து அந்த உக்ரத்தை தனது உத்வேகத்தின் சாதனமாக்கும்வரைதான் கலைஞனாவான். அதை மீறி பிரச்னையை அதன் துறையாக மேற்கொண்ட உடனேயே அந்த பிரச்னைக்கு உரிய துறையினனாகி, லௌகீக வாதியாகவோ, இன அரசியல் வா தியாகவோ, மதவாதியாகவோ மாறு கிறான். இதற்கு உதாரண சிகரங்களை நான் இங்கே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை ,

பிர்தி:

 'கைப் பிடியளவு கடல்* முன்னுரையில் ஆன்மீகபூர்வமான தர்சன நிலையை அடைந்த உன்னதமான மனிதர்கள் கவிதைகளை எழுதாதவர்களெனினும் அவர்களே உண்மையான கவிஞர்கள் என்று கூறுகிறாய். இங்கே முரண்படுகிறாயே,

அதே

ரூபம்:

கவித்வ நிலை உண்மையில் உத்வேகத்தை ஒரு பிழம்பென வெளியே எகிறுகிற அக ஆழத்துப் பரிதி என்பதே அந்த கூற்றின் கருத்து. இங்கே அரசியல், மத, இன, சமூக இயல்களுக்குப் புறம்பான ஆன்மீக விழிப்பு கவனிப்புக்கு வருகிறது, ஆன்மீக வாதி கவிஞனாகிவிட்டவனல்லன். அப்படி அநுமதித்தால் ஏன் அரசியல்வாதி கலைஞனல்னோ என்றெல்லாம் சில மண்டூ கங்கள் கிளம்பிவிடக்கூடும், அவற்றை விடப் பெரிய மண்டூகங்கள் 'கவிதைகளை எழுதாதவனெனினும் அக ஆழத்தில் கிடக்கும் கவித்வ உணர்வை எனக்குத் தெரியும், ஆகவே நானும் ஒரு கவிஞன் , என்னைப்பற்றி ஒரு விமர்சனம் எழுது' என்றும் ஆரம்பிக்கலாம். நான் உத்வேகத்துக்கு தரும் முக்யத்வம் அழுத்தம் பெறும் போது உத்வேகம் எதன் ஜ்வாலையோ அந்த அகப் பிழம்பு இன்னும் அதிக முக்யத்துவம் பெறவேண்டும் என்பதற்காகவே அந்த அக நிலையின் கணம்தான்

________________

உண்மையான கவித்வம் என்று கூறுகிறேன். அந்த அக நிலையின் - கணத்தில் லயம்கொள் ளும் 'ஆன்மீகவாதி' என்ற தன் நிலை அழிகிறது. அடையாளமற்ற அக நிலையே எஞ்சுகிறது. எனவே ஆன்மீகவா தியே கவிஞன் என்ற கூற்றுக்கு இடமில்லை, அந்நிலையை விட்டு வார்த்தைதளை அவன் உபயோகிக்க வரும்போது அந்த வார்த்தைகளின் மூலம் அவனது பயிற்சியும் திறனும் சார்ந்த அளவுக்கு சாதனையாகும் கவிதையைக் கொண்டே அவனது இலக்கியத் தரம் கணிக்கப்பட வேண்டும், அந்த முன்னுரைக்கு அவசியமான பின் குறிப்பு இது. இலக்கியத்துக்குப் புறம்பான ஆன்மீகச் செய்திகளை நிறைவேற்றும் சாதனைகள் பற்றி இங்கே பேச்சில்லை.

பிரதி: 
கலைஞன். பிரச்னைக்குரிய முடிவுகளை விட பிரச்னையின் உக்ரத்துக்கே முக்யத் துவம் தருகிறான் என்றாய். பிரச்னைக்கு முடிவு காணவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பிரச்சனையே இல்லை.

-

ரூபம்:*

 பிரச்னைக்கு முடிவுகாணவே கூடாது என்று எண்ணுபவனல்ல.கலைஞன், பாவம்! பிரச்னைகளுக்கு லெளகீக, இன, அரசியல், மத வாதிகள் தரும் முடிவுகளை இவனது நுண்ணுணர்வும் விழிப்பும் குறைபாடுகள் மலிந்த முடிவுகளாகக் கண்டுவிடுகின்றன, கலைஞனின் எதிர்ப்பியல்பாக இந்த விழிப் பும் நுண்ணுணர்வும் வெளித் தெரிகின் றன, அவ்வப்போது வெளியிடத்தக்க - செய்திகள். இவை. என்று சில தெளிவுகளை உணர்கிறானேயன்றி முன் கூறிய ஸ்பெஷலைஸ்டு துறையினரின் ரெடிமேட் வகை முடிவுகள் பிரச்னைகளைத் தீர்ப்பதில்லை என்றே இ வன் வெளிப்படையாகவோ உள்ளுணர்விலோ உணர்கிறான். ஸ்பெஷலைஸ்டு துறையினரின் முடிவுகள் தானே பிரச்னைகளாக வாழ்வை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன! அதை உணர்ந்தால் உன் கேள்விக்கே இடமில்லையே. வாழ்வின் அடிப்படைகளை மூ டி மறைப்பவையே

________________

ஸ்பெஷலைஸ்டு முடிபுகள். நிற்க விழிப்பை யும்  நுண்ணுணர்வையும் கலைஞன் இழக்கும்போது அவனது கலா சக்தி வலுவிழக்கிறது. தொடர்ந்து எழுதினால் தனது முந் திய சாதனைகளின் நிழல் பிரதிகளையே அரைத்துத் தள்ளுகிறான். தொடர்ந்து எழுதினாலும் எழுதாவிட்டாலும் பிரச்னா பூர்வமான விழிப்பை இழந்து ஸ்பெஷலைஸ்டு முடிபு க ளை மேற்கொண்டவன் உள்ளூர் கலைஞனாக நீடிப்பதில்லை; லெளகீக வாதி, இன வாதி, அரசியல்வாதி மத வாதி சம்பிரதாயவாதி என்ற வகைகளுள் ஒன்றாகி முகத்தை இழந்தவனாகிறன். கலைஞர்கள் என்று தொடர்ந்து கருதப்பட்ட பலர் இத்தகையவர்கள் தாம், பிரச்னாபூர்வமான விழிப்பு வாழ்வி ன் அடிப்படையை நோக்கி கலைஞனை ஈர்க்குமளவுக்கு அவனிடத்தே விவேகமும் பரிசுத்தமும் இருக்குமானால் கலைஞன் என்ற தகுதியையும் மீறிய உந்நதத்துவத்தை அடைகிறான்; ஆன்மீகவாதியாகிறான், இது வேறு விஷயம்,

பிரதி: 
ஆன்மீக வாதியாக இத்தகைய கலைஞனிடமிருந்து உத்வேகம் குடியோடிப் போய்விட்டதாக கொள்ள முடியாதா?

ரூபம்: 
மாறாக உத்வேகத்தை, வெளியீடு கொள்ள நாடுகிற மனோ பாவங்களுக்கு கருவியாக்காமல், அந்த மனோ பாவங்களின் மறைமுகமான தன்மைகளை முடிச்சவிழவைக்கும் பிழம்பாக மாற்றுகிற அபூர்வமான மனிதனே ஆன்மீகவாதியாக மாறி விடுகிற கலைஞன், கலைஞன் அல்லாத 'பாமர' மனிதனாக இருந்து ஆன்மீகவாதியாகிறவனிடத்தும் இதுவே நிறைவேறுகி றது. தன்னை, தனது உளைச்சல்களை கலாகிருஷ்டியாக்குகிற விசேஷ -திறன் களை தன்னுள் ஊக்குவிக்காமல் ஆன்மீக நிலை

________________

பெறும் இவன் உண்மையில் கலைஞனை விட ஒருவகையில் விவேகி என வேண்டும். ஏனெனில் உத்வேகம் கலையுருவாக வெளிப்பு டும்போது அது விரயமாகிறது. இதை 'பாமர' ஞானிகள் உண்மை உணர்ந்தவர்கள் என்றே தெரிகிறது. இது மட்டுமல்ல. வெளியீட்டுருவின் வழியில் கலைஞனது மனிதார்த்தமான அ க ம் பாவத்திற்கு போஷிப்பே கிடைக்கும். மிக, மிக அபூர்வமான கலைஞர்கள் - அதாவது, ஒருவகை யில் ஆன்மீக வாதிகளாக மாறத்தக்க கலைஞர்கள் தாம் - தங்களது படைப்புகள். மூலம் தங்களது அகம்பாவத்தைப் போஷிக்காதவர்கள் எ ன் று சொல்ல வேண்டும்.

பிரதி: 
உத்வேகம் கலையுருவாகும்போது விரயமாகிறது என்றா சொன்னாய்?

ரூபம்: 
ஆம், உத்வேகம் அகம் பாவத்தின் நெருக்கடிகளை வெளியீடாக மாற்றுவதற் காக பிறப்பதில்லை; அதற்காக மனிதார்த்தமான கலைஞனா ல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெருக்கடிகளை உணரும் சிறு உள்ளத்தை தனது அகண்டத்தினுள் ஈர்த்துவிட வாழ்வே மயமான ஒரு பெருநிலை நீட்டும் தீவிரல்தான் உத்வேகம். இது ஒரு அதிசயமான ரகஸ்யம். இந்த ரகஸ்யத்தை பகிரங்கமான நடைமுறையாக்கிவிட்டால் கலாச்சாரச்செழிப்பே இராது, பகிரங்க நடை முறையாக இது மாற்றப்பட்டதும் தனது அடிப் படையான ஆன்மீக உக்ரத்தையும் இது இழக்கும். இந்நிலை யி ல் கலாச்சாரச் செழிப்பு இல்லாததோடு ஆன்மீக ச் செழிப்பும் .அற்ற ஒரு பாலையாக வாழ்வு மாறிவிடும், இந்தியா அதிலும் முக்யமாக உயிரிழந்த நடைமுறையாகிவிட்ட ஆன் மிக மதிப்பீடுகளின் ஆதிக்கங்கள் மலிந்த தமிழ்நாடு இவ்வகைப் பாலையாகிக் கிடப்பதற்கு இது ஒரு பார்வைக் கோணமாக ஆய்வாளருக்கு உதவலாம்,

InfoBegin

InfoKey: Creator

InfoValue: Sejda 3.2.49 (www.sejda.org)