தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, July 13, 2018

பாழி - முன்னுரை :: கோணங்கி

சங்காரம்

பாழே முதலா வெழும்பயி ரவ்விடம்
பாழே யடங்கினும் பண்டைப்பா ழாகாவாம்
வாழாச் சங்காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராயடங்குமப்    பாழிலே.
                                                                  திருமந்திரம்

‘காமப்பாழி கருவிளைகழனி
                                                                  பட்டினத்தார்


படிகவிசிறியாக நாவலின் உள்ளே மயங்கிவிரியும் பாழி எனும் இடமற்ற தனிவார்த்தை நிலமடிப்பில்பாலையாகித் திணைக்கொரு  கன்னி உருவம் வரைந்து முடிவுற்ற குறியாக நகர்ந்து மொழி அபிதானத்தின் மடக்கு ஒலைகளில் கோர்க்கப்பட்ட  முத்துவயல் குளித்த பலபொருளுடைய ஒரு சொல்தான் இந்நாவல்.

நிகண்டு வடிவத்தைப் பின்பற்றி, பொருளில் ஒளித்து வைக்கப் பட்ட இயற்கைப் பரப்புகளில் எதிர்நிலைகளில் கூடுதல் பிரிவு என்பதின் மயக்க வெளியை நீட்சியாக்கும் அகக்கிளர்ச்சியின் தூண்டுதலில் படிக மொழி பின்னி நகரும் நிலத்தோற்றம் இது. பாழியெனும்  ஒற்றை வார்த்தையின் முடிவற்ற அகராதி நவீனப் படிகமாக மாறுவதற்கு மரபுப் பிரதிகளில் படர்ந்த திராட்சைத் தோட்டத்தில் கொடி வெட்டி தலைமுறையாகப் பதியம் போட்டு கால்நாட்டடி  மனிதஞாபகத்தின் அழுத்தமான ரூபிநிறக் கோப்பைகளில் தேவதாசிகளின் கோட்டுருவங்களைத் தீட்டும் திராட்சைநிற வயலின் வில் சிறகடிக்கப் பறந்த தாய்வழி இசைமரபை என் ரத்தஅலை ஸ்பரிசித்துத் தலை வணங்குகிறது.

கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய் பனுவலில் அசைந்து கூத்து நாடகம் போன்றவற்றில்  நிகழ்த்தப்படும் போதுதான் நாம் உணர்ந்தே இருக்கமுடியாத விதங்களில் பிரம்மாண்டமாக வெளிப்படுகிறது. சிலப்பதிகாரம் கூத்து இசை இயலின் முப்பரிமாணத்தில் இசை அகராதிகள் இலக்கணம்  கூத்துவகைகள் அனைத்தையும் உட்கொண்டு களஞ்சியமாய் படிவச் சுருளாய் மடிக்கப்பட்டிருக்கிறது. சீதள ஒலைகளில் பதமும் பாழியும் சொல்லும் பொருளும், தொல்காப்பியனிடம் தொடங்கியது. தெளிவின்மை அப்ஸ்க்கியூரிட்டி, வரலாற்றை உதறிக் கலைத்து மாற்றி அடுக்குதல், விவரிக்க இயலாத புதிர், கனவிலுள்ள தீப்பிழம்புகள், புலனுக்கு அப்பால் எரியும் கோடு, மெய்மைக்குப் பின்னால் அந்த உடல்கொண்ட மிருகம் எரியும் முழிகண்குருடர்களாய் ஊர்ந்து வருகிறது முட்டி பயமுறுத்தும் முளைகளுடன். சில அருவங்களைத் தொடடுணர்ந்த குருடர்கள் சொன்னவாக்கில் ஒவியனும்  சிற்பியும் பின் தொடர்கிறார்கள், கலைகள் யாவும் நுண்ணியவை மாத்திரமல்ல. இயற்கையால் கைவிடப்பட்டவர்களுக்கு அறிவாழத்தில்  குருடாயுள்ள கலையின் கண்ணாமூச்சி விளையாட்டு ...முழிகண் குருடுதான் போலும். நிலையிலாதோர் நிறத்துக்குள் ஒன்று கலந்துவிடுகிற பிரபஞ்சம் விரல்களிலுள்ள கலையின், இருண்ட ஊற்றுகளில் கரு மெழுகில் உருகும் சிலைகள் விரல்களாகிப் படர்கின்றன

இருண்ட நீரின் முக்கோணக் கணிதத்துக்குள் பாழி முடிவற்ற வார்த்தையாய் விரிவு கொள்ள முன்னும் நவீனம் படிகஎழுத்தில் விசை கொள்ளும் குருதியில் மறைந்துள்ள தொன்மத்தில் இறங்கும் பித்த நிலை திரவமொழிப்பரப்பாகிவிடும் தருணம். எனவே, கலையின் இடமற்று ஓடிக்கொண்டிருந்த உருவ தீவிர கதியின் ஒரு வார்த்தை மற்ற பாலை ஆழ்நிலையில் பிரபஞ்ச நுண்ணுணர்வு கொள்ளும் பாமி. இசையை மூச்சாக வாங்கி அகத் தூண்டுதலில் முதலாவது சுரம் விரல்களிலிருந்து, ஆன்மாவிலிருந்து ரத்தவேரின் கிளைகளில் பரவிச்சென்று மொழி விதையின் வெடிப்பில் பாழி முளைத்தாள். நிலங்களில் திரிந்து சூழும் திணைமயக்கம் இசையிலும் வரும். பருவ சக்கரத்தில் கோர்க்கப் பட்ட விதை வித்து நட்சத்திரம், ராசிமண்டலம் ஒருபுல் நுனியால் சுழற்றி கால-இட ரீதியான அலகுகளை ஏழடுக்குக் கூடுகளுக்குள் திணை இசையாக்கி நுண்பொருளாய் சுழலும் சிலப்பதிகாரத்தை ஆதார ஊற்றாய் கொண்டு நாவலைத் தொடர விரும்பினேன்.

ஆய்ச்சியர் குரவையில் ஏழு கன்னிகளை வட்டமாக நிறுத்தி முதலில் ஹரி காம்போதி பாடினாள் ஒருத்தி. அடுத்துக்குரலாக சட்ஜமாக நின்றவள் தன்னையடுத்து நின்ற கன்னியை ரிஷபமாக நின்றவளை நோக்கி முல்லைத்தீம்பாணி பாடுக என்று கூறி இதனால் ரிஷபத்தை சட்சமாகக் கொண்டு பாடத்தொடங்கினர். இதன் பயனாக நடை பைரவி தோன்றியது. இப்படியே ஏழு கன்னிகளும் மாறிமாறி சட்ஜஸ்தானத்தை மாற்றிப் பாடுவதால் ஏழு ராகங்கள் பிறந்தன சிலம்பில்...

நிலத்தின் மேல் முளைத்த நகரங்கள் பெரும்பாலும் முல்லையைச் சூழ்ந்ததால் புன்னாகவராலி ராகத்தின் உச்சத்தில் புல்லாங்குழலில் தீப்பற்றி இசை மூச்சு எரிந்து, செந்நாள் தோன்றிய மதுரை அழல்பட மொழிக்குள்தான் நகரம் இருக்கிறது. காண்பெரும் புலத்தில் நகரம் இல்லை. இசைக்குள் மதுரை மறைந்திருக்கிறது. புலப்படாத நகரமாக ஞாபக மயக்கத்திலுமில்லை. நகரங்கள் அழிந்து கடல்கோளில் பாயும் சிதிலங்களில் சூன்ய ரேகைகளை விருப்பு வெறுப்பற்ற நிர்வாணத்தில் உடல்மீது எழுதிக்கொண்ட நிர்கந்தரின் அறிவாழத்தில் அதிரும் ஒரு சொல்லின் உருப்பளிங்காகி கதிர்வீசும் கண்ணாடி வயல் இது.

கேட்கமுடிகிற குரல்கள் பாழிக்குள் தீட்டிய சித்திரச் சுவர்களில் வெளிப்பட்டவும் கிளம்ண்ட்டின் ஓவியப் பின்புலம் பீத்தோவனின் ஒன்பதாவது இசைக் கோலத்தில் இயங்க கண்கள் குருடான ஆழத்தில் விற்களுடன் புள்ளிகள் ஓடும் பாறை ஓவியக்காளைகளின் மூர்க்கத்தில் முடிந்தது சிம்பெனி, பீதோவனின் ஒன்பதாவது இசைக்கோலம் சிற்பங்களின் இருட்டில் உலகின் blindnessக்குள் பயணமானவேளை இயல்புநிலையின் பின்புலத்தை பிறழ்வுறச்செய்து உக்கிரப்படுத்தவும் எதார்த்தங்களைக் கீறி குருடான அவன் கண்கள் கனவுகளைத் திறந்து வெளியேறி புனைவு விளிம்புக்கு அப்பால் மூளையின் ரத்த நாளங்களிடையே பயணமாகிய சூன்யத்தில் நடுங்கும் இருப்பு நிர்மாணங்களின் சிதைவிலிருந்து உருவாகி சிம்பெனி உயிர்க்கிறது. இசை அல்லாத பாலைவனத்தில் மணல் காற்றை வெற்றுவெளிக்குள் சுழற்றி மிகத் தனிமையான மணல் ஒன்றின் விரக்தி நிலையை தீராத நாட்டியமாக இசையின் மாயத்திற்குள் நகரும் குருடர்களின் தனிமைத் தீவானான் பீத்தோவன். குருடரின் ஜீவரஸம் பூசிய ஸ்பரிச வெளி இசைப் பாலையில் தவிக்கிறது.

ஜப்பானிய ஸ்கிரீன் ஓவியத்தில் மாறும் நூல்கற்றைகளில் மறையும் நிறங்களின் கிராப்டில் உள்ள கண்ணாமூச்சி விளையாட்டில் கண்களைப்பறித்து மொழிப்பின்னலாக எம்ராய்ட் செய்து கொண்டிருந்தார் பிநோத் பிஹாரி முகர்ஜி பிரைலிஎழுத்தின் மேடு பள்ளங்கள் கிராப்டில் எம்ராய்ட் செய்து ஸ்பரிச வெளி ஓவியமாக்கினார். Inner eye படச்சுருளில் தன் விரல்களால் பார்வையாளர்களுக்குள் மறைந்துள்ள இருடடைக் கருப்புத் துணியாக மடித்து பிநோத் பிஹாரியின் ஞாபகக் குகைக்குள் மறைந்துள்ள அஜந்தாவை வெளிப்படுத்தினார் சத்யஜித்ரே. கண்வசத்தில் நரம்புப்புலம் சிதைந்து ஓடும் மின்னலின் ரேகைக்குள் அஜந்தாவின் அவலோகிதீஸ்வரர் உரு காதணிகளையும் முத்துக்களில் மறைந்துள்ள கண்களையும் ஒரு நீல அல்லியை கண் திரளாக ஏந்தியுள்ளார். மங்கிய அழுத்தமான வர்ணப்பூச்சில் இருளும் ஒளியும் மறைந்து நாகர் ஜாதகக் கதைகள் காதில் கேட்கின்றன பல குரல்களாய் உதிர்ந்தவாறு. கண் இருக்கும்போதுகூட ஒரு blindness இருக்கிறது. முழி கண் குருடனுக்குள் நிலையிலாதோர் நிறத்துக்குள் விரல்கள் அசைந்து தன்னம்பிக்கை நிச்சயம் தனித்துவம் கண்தெரியாதவர் விரல்களில் மொழி இடைவெளி நீங்கிய கலை.

- ஏழு நிலத்தோற்றங்களை ஒரே புஸ்தகமாக மடித்து பாடித் திரிந்த இலியட் ஒடிசி, ஹோமரின் கண் தெரியாத பரப்பில் நேரடி வரலாறு இல்லாத அக பரப்பில் இருள் பூசிய குருடனின் மொழிதான் கிரேக்க காவியம். பிறவிக் குருடனான சஞ்சையன் பார்த்துச் சொன்ன குருக்ஷேத்திர யுத்த கள வர்ணனை ஒடிந்த ஈட்டிகள் ரத்தமடுவில் எரியும் குதிரைக் கால்கள் வெண் சங்குகள் வியூகங்கள் எல்லாம் இரு குருடர்களுக்கு இடையில் போடப்பட்ட சொல்கதைகள் பிரியும் கிளை கிளையான கதைப் பரப்புகள் கொண்ட புராணம் தான் மகா பாரதம். வியாசவிப்ரவரின் அருவருப்பான தோற்றத்தை காண முடியாமல் இமைமூடி இருட்டிய வேளை அம்பிகாவின் புணர்பாகத்தில் திருதராஷ்டிரரின் கர்ப்ப இருளில் குருடாகவே ஜனித்தது பாரதம். இருட்டில் வரையப்பட்ட குருடரின் கண்ஏடு பாரதமாக இருக்கும். சங்கிலி எனும் தேவதாசியைப் பிரிந்தவேளை குருடான சுந்தரர் செல்லும் வழி இருட்டில் பாடிய தேவாரம், மதுரகவி இசை நாடக விதூஷிநி இரு கமலவேணிகளை கண்களாய் ஏந்திய சுதந்திர தாகம் அவர்களைப் பிரிந்ததும் கருப்பு இசைத்தட்டில் குருடான பாஸ்கரதாஸ் பாடல்கள் தீராமல் எரிகிறது வேட்கையில்.

பிரபஞ்சத்தின் இருள் தொடும் ஓவியங்களில் மறைந்துபோன பிநோத், பிஹாரியின் blindnessக்குள்தான் அஜந்தா இருக்கிறது. நிலத்தின் அகம்புதைந்த கருந்திராட்சைகளின் உருளல் கண்தெரியாதோரின் கோடுகளில் வந்தடைந்தது என்னை, ஏழு கோப்பைகள் தாங்கிய மார்பெலும்புகளின் ஒசையில் ஒரு சொட்டு ஒயின் விருந்துத் துளியாகப் பொங்கும் திராட்சைத் தோட்டத்துக்குள் குருடர்களுக்கான கோப்பைகளுடன் காத்திருக்கிறேன் இவ்வேளை.. பனித்திருக்கும் 31 டிசம்பர் 1999 பகல் முடிந்த கடைசி இரவிற்சொன்ன சேதி 'இந்தியாவின் blindnessக்குள்தான் அஜந்தா கர்ப்பப்பாழிகள் தீட்டப் பட்டிருந்தன. ஆபுமலைக்குன் கருவான தில்வாரா சிற்பக்குகையில் தழுவிய ஸ்பரிசவெளி இருளில் இருபத்தி நாலு தீர்த்தங்கரர்கள், ஸ்யாம் வர்ணத்தில் உயிரின் ரகஸியத்தை முணுமுணுத்தார்கள் என்னிடம். சமண உயிர் தத்துவம் சிலைகளில் அசையும் இருட்டு, அங்கிருந்து தப்பமுடியவில்லை என்னால். வஜ்ராசனத்தின் இருபக்கமும் இசை மகளிர் தொழுது நிற்க ஆசனத்தின் மேலே சக்கரம் சிற்பத்தின் கீழுள்ள எழுத்துக்கள் இது புத்தரைக் குறிக்கிறது' எனக் கூறுகின்றன. பூக்களின் பளுவால் வளைந்து நிற்கிறது சாலமரத்தின் கிளை, அதைப்பிடித்துக் கொண்டு நிற்கிறாள் மாயா. அருகில் பணிப்பெண்கள் நீண்ட துகில் சுற்றி கர்ப்பத்தை வட்டமான அறையாக மாற்றிவிடும் வேளை குருடர்களுக்கு படம் வரைந்து கொண்டிருந்தாள் விதிஷா. நயன இருள் ஓவியங்களில் பூசிய தைலவர்ணம் கையிலுள்ள வர்ணக்கத்திகளின் முனையிலுள்ள பார்வை பளபளக்கும் இருட்டடை ஸ்பரிசித்து ஊறி ஊறித்திறந்த இருளின் கால்களில் முளைத்த கண்கள் விண்ணுக் சடியிலுள்ள சிலைகளாசுப்புராணங்களில் உருண்டு வருகின்றன.

புத்த பூர்ணிமாவில் நிலவுச்சிலை உடைந்து போக்ரான் பாலைவனத்தில் தூக்கி எறியப்பட்டு கண்கள் குருடான விதிஷாவின் விரல்கள் அவள் விரல்முனை அளவுகள் பதிவுகள் வெளிகளுக்கு இடையினுள் நழுவும் இயக்கங்கள் எதேச்சையான விதிகளில் விரல்வழி இயங்கும் ஞாபகச்சிதறல்கள் ரேகைகளாகப் பதிந்துவிரியும் இருட்டுக் கூறிய ஒவியங்கள் அஜந்தா குகைகளாக இருக்கும். அவள் அழிவின் துர் கந்தத்தை சமணஉயிர் தத்துவம் விநாசமானதை முளைக்கசிவில் இரைச்சலிடும் வெள்ளை ரத்தப்பூச்சியின் நகர்வில் அலறினாள். பேஸ் நகரின் இடிபாடுகளுக்கிடையே மேற்குலகுக்கென தாரைவார்க்கப் பட்ட நர்மதை சாபர்மதி நதிகளின் ரசாயனக் கரைகள் அழுகிய நாற்றச் சக்தியால் கண்களில் பைத்தியரேகையோடிக் குருடான விதிஷா உடைந்து கொண்டிருந்தாள் சிலையாக, அவள் இமை மூடிய கண்வெளி இருட்டில் இயற்கையாகப்பீறிட்ட ஒவியம் இருண்மையில் துளைந்து கொண்டிருக்கும் கர்ப்பம். பொருட்களில் ஒட்டி வைக்கப்பட்ட புறநிகழ்வுகள் மறைந்து (சூன்யத்தில் தொட்டுணர்ந்த வார்த்தையின் ஆழத்தில் சித்திரக்கூடத்தில் நிறம் உதிர்ந்தவாறு உடைந்து கொண்டிருக்கிறாள் விதிஷா, கண் இழந்த சிசு அவள். கருவறையின் நுண்புலத்துக்குள் கதிர் ஊடுருவி அழிக்கும் அனுமனித நாகரீகங்களின் உயிர்நுனி அறுத்து நசுக்கும் வதைபடலம்.

மடித்த விரல்களுக்குள் தொடும் ரேகைகளின் உணர்பரப்பு பிரபஞ்ச நுண்வெளிதான் குழந்தையின் கரங்களும், விதிஷாவின் எழுச்சி கலைஞனின் கலைப்பயிற்சியையோ அறிவாழத்தையோ சார்ந்ததில்லை. அவள் தானாக சிலையாகிறாள். தானே நிகழ்ந்தது, மை இருட்டில் தடவி நடக்கிறாள் அழுக்கு நதிகளின் கரையோரம். விழிகள் உதிர்ந்த ஆழத்தில் நீரில் மறைந்திருக்கும் கண் ஏடு, தானே
இரவில் திறந்து நெளிகிறது. விதிஷா என் அருமைப் பெண்ணே மறைந்துள்ள பனி மூட்டத்தில் சமகாலத்துடன் வந்து உரையாடும் தோழியே அந்த கொடிய இரவு நடசத்திரங்கள் சூழ்ந்த பௌர்ணமி நொறுங்கி தூள் தூளாய் சிதறிய விஷ நெஞ்சங்களின் சதியில் சிக்கிய சமண உயிர்சிலையே நடந்த விநாடிகளுக்குள் ரத்தம் கசியும் உன் உடல் சீறல்களை துடைத்துக் கொண்டிருக்கிறேன். உதிரம் நிற்காமல் நகர்கிறது.
*****
சிற்பஏடுகள் குடைந்து 'சீரிய சிங்கம் அறிவுற்று; தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்த்துதறி மூரிநிமிர்ந்து முழங்கிப்புறப் பட்ட'நரசிம்ம ஸ்தம்பத்துக்குள் உலகின் எல்லா புராண அதி மிருகங்களும் உள்ஒடுங்சிமலைமுழைஞ்சில் கர்ஜிக்க ஆண்டாள் பாசுரத்தில் இழைத்த அளவுயாரும் நரசிம்மத்தின் புனை உருவை சிருஷ்டிக்க வில்லை என்பேன். புராணத்தில் ஆடும் ஆண்டாளின் ஆலிங்கன ஊஞ்சல் காமத்தின் அதீத கர்ஜளையில் அக்கினி ஆற்றின் குறுக்கே ஓடி. யுகாந்தகால நெருப்பை உமிழ சிருஷ்டியின் கதவுகளைத் திறந்தது சிங்கம், நகரங்களின் இறலில் சரித்திரத்தை உலுக்கி நிலம் பிளக்க எழுந்த நரசிம்மக் கல் ஸ்தம்பம் நிலைபெயர செந்நிறப் பிடறிகள் உனழிக், தால நெருப்பாய் சிவந்திருக்கும் நரசிம்மக்கூத்து மத்தளம் விம்மி லடசம்' தீப்பந்தங்கள் சுழற்றி ஓங்கி எழும் புராணமிருகங்களின் கற்சிலை உலகவிளிம்புகளில் படரும் இக்கோடு. உக்கிர நரசிம்மத்துக்குள் கம்பன் ஏடு திறந்து மொழி உதிரம் பத்துத்தலை கொண்ட ராவண உருவம். அரக்க இசை அழித்ததால் புலிகள் வலம் பாய்ந்து வர பின்தொடரும் பிரமஹத்தியிலிருந்து தப்பிக்க ராமாயண்யுத்த முடிவில் | சீதாவின் மணல்விரல்கள் அழிந்து அழிந்து இருகடல் கூடும் தனுஷ் | கோடி முனையில் கடல்களின் புணர்பாகம் அருவாய் உருவாய் கரு நின்று திரட்டிய மணல் லிங்கம் ராவணகர்ப்பம்தான். உள்ளே உரிப் | பொருளின் சூழ்நிலையில் கற்பகாலங்களை விழுங்கிய யாளிகளின் மூர்க்கம். கலையில் கூடி அடங்காத அறிவின் தெளிவை விலகி நழுவிப் போன கலைஞனுக்கு அடுத்த எட்டில் கால்வைத்துக் கொண்ட யாளி யாக உருமாறினார் மௌனி அவர் ஆண்டாளின் ஆலிங்கன ஊஞ்சலை தேவதாசிகளின் நரசிம்மகூரு என உணர்ந்த போது சற்றுவிலகி சாயை களில் பின்தொடர்ந்தார் கதைகளை. நெருங்க எரிந்துவிடும் நாட்டிய | நிருத்தத்தில் பிரபஞ்சத்தின் சமநிலை. தொன்மத்தின் ஆழத்தில் ருத்ர பூமியில் விதைத்த நவதானி யத்தின்மீது ஏர்காலில் சுழலும் பருவம் சக்கரம் தான் தேவதாசி நரம்புகளில் இளகிய இசையும் கால் - இட ரீதியான மயக்கமும் இலக்கணமென்றே கருதினார்கள். ஏடுகளின் ஆதார ஊற்றில் கணிகையின் தெரு. விரல்படக் கொதிக்கும் லாவா விருட்சம்.புராணத்தின் பிரவாஹத்தில் கணிகைவீட்டு மாடத்திலிருந்த பட்டுத் துகிலில் கத்தரிக்கப் பட்ட சித்திர இழைபின்னிய முத்துவயல் ஊடே நடந்து செல்ல பிரபஞ்சகானமென தனம்மாளின் விரல்கள் வீணைமீது அமர்ந்ததும் வெல்வெட்பூச்சிகளாக அசைவதை யாளிகளின் ஆங்காரம் என இருட்டில் சிறி எழுந்து புருவங்களை நெறித்து, ஏன்... எங்கே.., எனக் கடல். கோடு படர்ந்த கண்களின் ஆழத்தில் கேட்டாள் தேவதாசி. அது மெளனிக்கும் எட்டாத பிரபஞ்சகானம், தேவதாசியின் அக அமைதியின் நுண் இசை புல்வெளி படர்ந்து விரல்களாய் எழுந்து ஐந்து நிலங்களில் பிரிந்து ஒவ்வொரு நிலமும் ஓர் கன்னி உருவெடுத்து சிறகுடன் பறந்து ஏழுநிற இறகினால் வெளிப்பட்ட நாவலில் இசைக் குறிப்புகள் மயங்குகின்றன.

நாவல்வடிவம் ஏழுபுத்தகங்களின் மடிப்பில் பொருளுடைய குணத்தை கடினமான கலைக்கு அதிகபட்சமாக நெருங்கி புறத் தோற்றங்களை உதறி எறிகிறது மொழி. மூன்றும் ஏழுமாசி இரு வரியில் அடங்கிய உருவத்திலுள்ள வெற்றிடம்தான் நூதன கலை. மொழியின் ஆழத்துக்குக் குடைந்து பொருட்களை வெளியேற்றிப் படிக உடலாகி ஒளித்துவைக்கப்பட்ட வார்த்தையின் உப்பினுள் ரஸ் ஓட்டத்தை மொழியாக்கும் சித்தநிலை, ஏதுமில்லை வார்த்தைக்குள். சாயைகளின் கணிதார்த்த பரிமாணம். பொருளுமில்லை. உற் குடைந்த வெறுங்கோப்பைகளில் நிரம்பியுள்ள எடுக்கப்பட்டுவிட்ட வஸ்துவின் குணரூபம் மாறுபடும் இலைவாட்டத்தில் உயிர்களையும் மெய்யையொத்த உலகையும் உயிர்மெய்யொத்த உயிரோடு கூடிய உடலையும் நுதல்வியர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பாக்கி ஆருயிர் களின் அறிவு அனாதி மறைப்பை நீக்கி வினையறுத்த ஆயிரத்து முன்னூற்றிமுப்பது புறாக்களின் கால்களில் கட்டிய சீதள ஓலைகளில்
________________
தனித்தனியாய் கூறிய குந்தகுந்தரின் தர்க்கம் தூது ஓலைகளால் பறக்க | விட்ட அறிவின் சிறகு ஒளி திறந்த சிந்தனைச் சாளரங்களில் ஒளி இறகு பற்றி விடிவுக்கான வேளை, சங்கப்பலகைகளில் பின்னே அமர்ந்த | வெற்றிலைமென்ற கவிகள் பதறியோட அழைத்தது ஒளி விசிறி, 'உற்ற | நோய் நோற்றல் உயிர்க்குறுகண் செய்யாமை' கேட்டு நீலகேசி உரை வகுத்த சமயதிவாகரமுனி 'பொய்யும் வாய்மை இடத்த புரை தீர்த்ததை உயிர்காப்பு' என்றான்.

பிண்டிக்கொழுநிழல் இருந்த ஆதியின் தோற்றத்து அறிவனை ரிஷபரைக்கூறும் முதற்குறளில் 'பக' என்றால் யஸஸ், புகழ், தருமம், சுபாவாதிசயம், ஐஸ்வர்யம், முக்தி, வீர்யம் என ரிஷபரில் பதிந்த வார்த்தை பலபொருளாய் பரிமாணம் காட்டும். விஸ்வகோஸா நூலில் முதன்முதலில் எழுதும் கலை, எழுத்துக்கள், பிராமி வடிவத் தையும் கண்டுபிடித்தவர் ரிஷபரே எனச் சிந்துவெளிச் சிதைவுகளில் காளை உரு ஓடியது. தத்துவார்த்த சூத்திரத்திற்கு உரை எழுதிய அளகங்கர் கூற்றில் ஆதிசப்தம் அனேக பொருள்களையுடைய தெனவும் சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்றுவரும் என 'அகாராதயோ வர்ணா ரிஷபா தயஸ் தீர்த்தகராதி' சுலோகத்தின் எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன தீர்த்தங்கரர்கள் ரிஷபரை முதலாக உடையர் என்று காட்டும்.

அகர உயிர் போல் அறிவாகி எங்கும் சொல் விரிகிறது பொறி யாகச் சுழன்று. பூமிக்கு அடியில் ஓடும் கல் அடுக்குகளில் கிளைத்த நுரையீரல் திராட்சைக் கொத்தாகியிருந்தது. ரிவுபக்கூட்டத்தை மேய்த்தவாறு ஆபுமலையின் விருட்சத்தில் சாய்ந்து காலத்தை அளந்து இசைக்கருவிகளின் ஒலி அலகை சுரமண்டலமாக்கிய சமணர் நிலத் தடியில் கசியும் ஒவ்வொரு திராட்சைரஸத்தையும் எடுத்துக் கொடுத்த இரண்டாயிரம் வருஷ வாசனைகள் திறந்தபோது என் இதயம் தூள் தாளாகிச் சிதறி கோப்பைகளில் ரொம்ப வருஷங்களுக்கு முந்திய கொடி முந்திரியில் ஊறி ஊறி வயதான ரஸத்தின் வெளுப்பான நிறங்கள் அடங்கிய கோப்பைகள்தான் கலையாக இருக்கும். உற் குடைந்த வெறுங்கோப்பைகளை நெஞ்சுக் கூட்டில் பதித்தேன், ரத்தத்திலுள்ள தாவரங்கள் நிரம்பிவழிகிறது நாவலுக்குள். |.

கடுங்குளிரில் தனிமையில் பழுத்திருந்த கணம் ஒன்று காலத்தை விலகி நகர்கிறது. இவ்வேளை தில்வாரா ஸ்வேதாம்பரர் தனிக் கோடு களில் உயிர்க்கரு சூட்சுமக்கலை பொருந்திய ஒப்பற்ற இருட்டில் சிற்பங்களை நோக்க வியாபித்த புல்வெளியில் ரிஷபம் ஒன்று குனிந்து கண்களில் நீர் கசிய நிற்கிறது. மறதியில் ஓடும் சாபர்மதிரயில் தொடருக்குள் மான்கள்மேயும் ஆபுமலைகள் கருதுளைத்து ஊறும் நதி. ரயில் பெட்டிகளுக்குள் கண்ணாடிகள் மூடித் தனித்திருக்கிறேன். குளிரும் கண்ணாடி சுளில் பனித்திரை துடைத்து வெளிபார்த்த வேளை ஜன்னலுக்கு வெளியிலும் நான் இருந்து கொண்டிருக்கிறேன் அந்நியனாய். ஆபுரோடு ஸ்டேஷனுக்கு அருகில் மலைப்பான பாதை செங்குத்தாகச் செல்லும் வழி நீலம். பலவித உருவம் காட்டும் பாறைகளைக், கடல் தால் சூரிய அஸ்தமனக்கோடு.

அதிரும் கோடுகளில் தோன்றும் பிரக்ஞை புராணத்துள் ஈர்த்து ததீசி முனியின் சடையுடன் அசையும் முடி வற்ற ஆலமரம். சிதிலமான விழுதுகளில் கிருஷ்ணப்பருந்துகளின் விசில். சாபர்மதியோடு சந்திர பாகாந்திகலக்கும் இடத்தில் ஏழுநதிகளின் நீர் கொஞ்சங் கொஞ்ச மாய் காலமற்றுத் தனிமை கொண்டோடும் சப்தபேதங்கள் புராணங் களின் பக்கம் திரும்பும் மணல்பரப்பு. ஆதிவாசிகளின் நதிக்கதைகள் கோடு கொள்ள கிரிஜனங்களின் பாடல் மலைகளுக்குள். ஆபுமலைத் குள் சரியும் நதியின் கரையில் பசுக்கூட்டம் புல்மேய்ந்து திரியும். நீர் விளிம்பில் இதழ் வைத்துப்பருகும் தாகம். பிரவாஹத்தில் கற்கள் கூடிய தேய்வில் பல நிறங்கள் வழுக்கிப் பிரியும் சலவைக்கற்களின் உருனல் உச்சரித்த சப்தங்களில் நதியின் நாடித்துடிப்பென கல் நின்ற பாடில்லை. மணல்உரு சப்தத்தின் சுழியில் ஜனிக்கும். மலைகளில் உருண்ட கல்சிற்பங்களாய் வெட்டித்தாவும் நீச்சலில் வேறுபட்ட உருவங்கள் வரும். நீர்ப்பரப்பிற்குள் கூழாங்கற்களில் தழுவி நிற்கும் அலை. யோக வித்தையில் பிரகாசிக்கும் நீரும் கற்களும் கலந்து நிறம் மாறும் தோற்றம். மனதின் ரகளியங்களை ஆழ்ந்து கண்டறிய சுற் களை நீரடியில் தழுவி அவற்றை எடுக்காமல் சன்ன நீர்போர்வை யால் போர்த்தி ஓடுகிறாள் சாபர்மதி, யோகினிகளின் சிலைகள் சிதைந்து உருண்ட சாபர்மதியில் நின்றிருந்தேன் நனைந்த உடலில், நீர்வாள் வெட்டிய சிற்பங்கள் உருகி மெய் அழிகின்றன மெல்ல. அறுபத்திநான்கு யோகினிகளின் நீர் அரித்த முகங்களில் கண்கள் சிதிலமாசிக் குழிகளில் மணல் வடுபட்டகோடு, யாரோ படகில் நகரும் நிழல் நீரில் அசைகிறது. நீரில் சாய்வாகப் பறக்கும் பறவைக் கூட்டம் யோகினிகளுக்குத் தலைவணங்கிச் சிறகால் தொட சிற்பங்கள் உயிர்த் துடிப்பில் முலையறுந்து முகம் சிதைந்து திறக்கும் சிற்பஏடுகளில் பட்சிஇறகு காலத்தைக் கீறி நகர்கிறது அலையில்.

கற்பாளங்களின் வெண்கல் கூம்பு கூம்பாய் படி கசிகரங்களின் உச்சிவரை சமணஉயிர்ஒளி. அதைத்தொட கை நீள்கிறது. எட்டாத ஒளிவிளிம்பில் ஸ்பரிசத்தை தனிமையில் அடைந்த வேளை சாபர் மதியின் ரகஸிய ஆன்மாவைத் தொடநெருங்கித் திரும்பிவிட்ட காந்தியின் விடுதலைத்தாகம் மணலில் கரைந்த தடம். நீர்மடிப்பில் சலன மான பழைய மனிதர்கள் பொங்கிய புனலில் விடுதலையின் ரேகைகள் அழிந்தவாறு நீர்புலம்பிச் செல்கிறது அழுக்கு நகரங்களில் சுசியும் விஷமசகின் இருள்பூசி ஆயிரம் வகை நெல் பாரம்பரிய விதைக் காப்புகளை விலங்கிட்டு அந்நியருக்கு திருடி விற்ற போலி அஹிம்ஸைக்கு அடியில் நசுங்கிய சமணம் குகையை நாடிப்போய் மறைமுகத்தில ஒளிபடத் துவங்கும் ஓர் அதிகாலையில் ஜீவராசிகளோடு மோனத்தில் ஆழ்ந்து ஊறும் இயற்கையிலிருந்து எடுத்த தானிய லாரத்தை இலை களில் சேகரித்துக் கொடுத்த சமணர் மலைச்சாரலைக் கடந்து அடர்ந்த ஆபுமலைகளுக்குள் பிரவேசித்த போது. தவத்தில் எரியும் தாவரமாய் கல்லில் புகுந்து குடைந்து ஒடுங்கி ஸார ஸ்படசிகளாய் 'ஸாபர்' என்ற மான்கள் எந்த நதிக்கரையில் அனந்தமாக உலவித் திரிகின்றனவோ அங்கே மேகங்களோடு திரிந்து பசித்தவத்தில் மெலி வுக்கும் மெலிவான உயிர் ஓர்புல் இதழாய் பூமியைச் சூழ்ந்திருக்கிறது.

ரிஷபரின் பிரபைகாண சாபர்மதி வேகரயில் தொடரில் தனித் திருந்த குளிர்காலம். கர்ப்பவாசலைச் சூழ்ந்த பாறைகளின் கீழும் மேலும் கம்பங்களில் செதுக்கியப் பிரதிமைகள். கல்சிங்கத்தின் பிடரி முடி. நெளிந்தோடியது குகையில், ,

மூலநாயக ரிஷபர்காட்டில் காளை உருவில் தலைகுனிந்து புல் ஸ்பரிசித்த கணம் பூமியிலே ஆபுமலைகளின் உச்சிகளில் சமணரால் விதைக்கப்பட்ட ஒருபிடித் தானியம் அதிர்ந்து ஓடும் சமவசரமனத்திற் குள் ஓவியமானது. புல்லுக்குள் பூமி சுழன்று சாயும் விருட்சங்களின் நிழலில் சூரியனின் கற்பாளத்தில் செதுக்கியடித்த மணல் கற்சிலைகள் நிலத்தில் கசியும் சாறெடுத்து தீட்டிய சித்திரமேனிகளில் சிதிலம். சந்திர பாஷக்கல்லிலான பத்து யானைகளின் அசைவு. ஆபுமலையி லிருந்து தில்வாரா நோக்கிச் செல்லும் படிகளின் வலது பக்கத்தில் மிகப்பழமையான தானியக்குதிர்கள், சுவர்க்கீறலில் இசைவழிந்து கொண்டிருக்க என் கரங்களை உயரத்தூக்கி வெகு நேரம் தொட்டு நின்றுவிட்டேன் தானியச்சுவர்களில் கண்மூடி. ரிஷபத்தின் ஆழ்ந்த மூச்சு, அதன் கொம்புகளில் வளைந்த சூரியன் சரிந்து கொண்டிருந் தான். யானையின் மேல் ஏறிய நாபிராஜன் மருதேவியின் மூர்த்திகள் சிறியதாயினும் காலம் தாண்டி அழைத்தது என்னை. இதற்குப்பின் பக்கத்தில் சகஸ்திரகூட சைத்யாலயம். கோயிலுக்குப்பின் இறங்கு படிகளில் மாறிச்செல்லும் ஒருவேதியில் சாந்திநாத பிரபை,

மேலே நாற்பத்தெட்டு சிகரங்களின் மத்தியில் ரிவுபர் ஏழடி உயர தியானநிலை ஸ்யாமவர்ண பத்மாசனத்தில், தாதுபட்டத்தில் அநேகசிலைகளின் இடையில் ஓவியங்கள் சூழ்ந்துகொண்ட தில்வாரா கிராமம். உலக அதிசயங்களில் மறைந்திருக்கும் தில்வாரா. வரையப் பட்ட கல்பொடி களில் உதிரும் தாவரங்கள் தெருக்களில், எல்லா வீதி களிலும் சித்திரங்கள் மனித நுரையீரலில் பதிந்து சுவாசித்துக் கொண் டிருக்கின்றன. சமணரின் நாசித்துவாரங்களில் கரையும் தாவர மணம். உணரைச் சுற்றிப்படர்ந்த 'காரா' பூக்கள். ஆறு வருஷங்களுக்கு ஒரு முறை பூக்கும், காற்றில் பரவிய காராவின் நீலநிறம் நசிதலம் ஏரியில் நீர்நீலமாய் பிரதிகொள்ளும். நிச்சலனமான தில்வாரா வீடுகளுக்குத்

18
திரும்புகிறேன், இரண்டாயிரம் வருஷங்களின் கடுங்குளிரில் காது மடல் நடுங்கியது. மேலும் கீழும் ஒரே நீலப்பூவின் கண்திரள் அசைவு. நயனத்தில் உதிரும் ஒரு துளிக் கண்ணீரை விடாமல் விழுங்கி உள்ளே உவர்த்தேன், கண்ரெப்பை படபடத்த நீரின் உப்பில் வெளிறிய காலம். தொலைவைத் தாண்டி சரிந்து கிடக்கும் நட்சத்திரம் பிளவுபட்டும் உதிர்க்கும் நீலத்துகள்களில் பனிகலக்கும் மெலிவு.  இத்தன்மைக்குள் ஆழ்ந்த குளிரில் தில்வாரா ஓவியங்களில் வெளிப்பட்ட சமண உயிர் பனிக்குள் நுளைந்து கொண்டிருக்கிறது வெளியை, தெருவுக்குள் மங்கிய வெளிச்சத்தில் விதிஷா கண்திறவாமல்  கைநீட்டி ஸ்பரிசவெளி ஓவியங்களில் இன்னொரு உலகுக்கு நகர்ந்து கொண்டிருந்தாள். வெளியும் சித்திரச்சுவர்களும் பிரிக்கமுடியாமல் இணைந்திருந்த கணத்தில் காரா மலர்கள் வீசிய வாசனையில்  சமவசரணத்தில் எல்லா உயிர்களின் மோனம். சன்னமான வெண்மை கரைந்த நீலத்துள் ஒளிவடிவில் மலைச்சரிவு. ஆபுவனப்பிரதேசங்களின் ஊடே வளர்ந்த பனிக்குள் துயரமாய் படியும் விண்நீலம் பனியில் வரும் வெளிச்சம், நீலநிறக்கோடு சிலவேளை ஆரஞ்சு நிறத்திலும் இருக்கக்கூடும், சாபர்மதி ஆற்றுப் படுகையின் ஓரம் நதியைக் கடக்கும் பாவத்தின் மீது நின்றவாறு விதிஷா காத்திருக்கிறாள். மரத்தின் இலைவடிவங்களில் நெளிந்து வரையும் சூன்ய ஒளி அவளையும் ஊடுருவி வரைந்திருந்தது. தில்வாரா கிராமத்தை மூடுவதற்குக் கதவுகள் இல்லை . திசை சூழ் துகிலால் மூடியிருந்தார்  நிகம்பரர். குளிர்கால ஜன்னல்களைத் திறந்து உள்ளே இருளும் அறைகளில் அடுக்கிய கண்ணாடிகளில் பழுத்திருந்த ஆரஞ்சு, பறிக்கப்படாத இலைகளுடன் படர்கிறது ஆடிகளாய், ஒரு நீண்ட கரம்  விரல்களை அசைத்து மறையும். விதிஷா உடலிலிருந்து பழ வாசனை. அருகாமையில் செல்ல பயமாக இருக்கிறது. ஏனோ என் கைகளால் அவள் மூடிய இடை மீது தொட விரும்பினேன். மலைகள் சரிந்த  ஆற்றுப்படுகையில் விதவிதக் கண்ணாடிக் கற்களில் பதிந்த நயனம் அசையும். எங்கும் நீலம் ததும்பிய ஒரு நிமிஷம்! ஓவியங்கள் சுவாசிக்கும் நிமிஷம் கடந்து விடுவதில்லை. அந்தக் காற்று உறைந்து  விடாமல் சலனமடைகிறது. சமண உயிர் ஓவியத்திலிருந்து ஒளி வடிவில் தாக்கும் ஸ்பரிசம் நீலநிறவெளி, கண்களை மூடி இருட்டில் புகுந்து செல்லும் குருடரின் குகைப்பாறைகளில் விரல்முனைப்பதிவில் கீறிய சித்திரங்கள் மூழ்கியிருக்கக்கூடும். களைப்பு அதிகமாக இருந்தது. நாவரட்சியுடன் காய்ந்த உதடுகளை மடித்து தெருவில் நடந்தேன், சுடக்கும் போது ஓவியங்கள் கூடவே  தொடரும் தெரு, ஊடுருவிப் பார்க்கும் தாவரங்களைத் தழுவுகிறார்கள் குருடர்கள், நேத்திரங்களை இழந்தவர்களுக்கு அருகில் எல்லா ஒளி உருவங்களும் ஸ்பரிச வெளியில் சேர்கின்றன. விரல்முனையால் கலையின் ஜீவாதராஊற்றைத் தொடுகிறார்கள். அந்த தில்வாரா முழுவதும் இமை மூடிய சமண பிரதிமைகள் இருளில் எதைத்தேடுகின்றன. அவர்கள் விழித்துக். கொள்வதுமில்லை. உறக்கத்திலுமில்லை. ஓளிகழன்று மிக மெதுவாக தில்வாராவில் பனித் துகள்களாக மூடும் வெண்படலத்தில் மூழ்கி உருவற்றவனானேன். உள்ளே நீலவண்ண பிந்து பிரபஞ்ச நுண் தளத்தில் ஆழ்ந்த காரா பூவின் அரும்புகளில் உதிர்வு கொள்ளும். நசிதலம்  ஒளிப்பரிங்கில் வருஷங்கள் ஆறு அடுக்கிய வெற்றிடத்தில் வெற்றிட மே பூத்த சூன்ய இதழ்தான் நீலம். வெகு தூரம் மலையில் சரிந்து படர்ந்த காளாப்பூ விமலவுரும் தேஜபாலரும் சுட்டிய முதற் கோயில்,  உள்ளே அழகான சிற்பங்கள் கூரைக்கும் மட்ட வடிவத்தில் நடுவிலிருந்து தலைகீழாய் செதுக்குச் சிற்பங்கள் தொங்கட்டமாய் ஒரே கல்லில் தொங்குகின்றன. கோபுரத்தின் புறத்தில் இருபத்திநான்கு  தீர்த்தங்கரர்களுடைய உருவங்களில் காரா மலரின் வாசனை அலைகிறது. உள்ளடுக்கிய வட்டங்கள் நீரின் மைய அதிர்விலிருந்து இடை விடாமல் விரிகின்றன விந்தையான கலையில்,

கடைசி பஸ்ஸைத் தவறவிடாமல் தொற்றிச்செல்லும் மலைப் பாதையில் சிலைகளின் கோடு. கையில் விரல்களுக்கிடையில் நடுங்கும் நீலப்பூ இமை படபடக்கிறது, மார்பில் சாய்த்து உடைபடாமல்  மலையிலிருந்து கீழே கொண்டு வருகிறேன். இந்தக் கணம் உட்பட நீலப்பூவின் கண்திரளில் கடந்து கொண்டிருக்கக் கூடும். நிகழ்வன இருக்கிறவைகளை நோக்கி அனைத்தையும் இப்பூவின் ஆறு இதழ்களில் மூடியுள்ளேன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் இப்போது கணங்களையும் வாடிய நிலையில் - உணர்கிறேன். நானும் நிலத்தில் கரைந்துவிட்ட கடும்பனிக்குள் ஒற்றை சாரா இமைக்குள் தனித்திருந்த ஆபுரோடு ரயில் நிலையத்தில் இரவு போர்த்திய துகில் நழுவிய நிர்வாணம்.பின்னோக்கிச் சென்று ஆறுவருஷங்களுக்கு முந்தயமலைத் தாவரத்தில் இப்பூ ஒட்டிக்கொள்ளும் குழப்பத்தில்  பூவாசனையை நுகர்ந்த நாய் ஆழ்ந்து காளையிட்டது இருட்டில், இந்த நாளையின் சன்னமானகோடு தில்வாரா கிராமத்தின் கோடியிலிருந்து கேட்கிறதா? எனக்குத் தெரியவில்லை. தொன்னூற்று ஆறு வகை மோப்பத்தில் ஆபுமலைகளின் இருளில் திரியும் உருவத்த நாய் இருள் கோடுகளில் ஊர்ந்து செல்கிறது. மூடிய ரயில் பெட்டிக்குள் இராமாந்தர விவசாயி காரியா தப்பா சுட்டியகூட்டத்துக்குமார் தயாரித்திருந்ததும் நசர்வபு நாயின்களை நீள்கிறது. நாடோடியாக எங்கெங்கோ அலைந்து திரியும் தாயை இழந்தவேளை இல்வாரா சிகரத்தின் உச்சியை அடை கையில் நட்சத்திரம் ஒன்று வடிந்து பதிகிறது உள்ளே, உச்சியிலிருந்து ஆழத்தை நோக்கிச் சரியும் மெல்லிய நீர் இழைகளில் சாபர்மதியின் வீழ்ச்சி, ஆழமான மௌனத்தில் இருண்டிருக்கிறது உயரமான ஆபு பாறைகளுடன் பிளந்து. தூக்கக் கலக்கத்தில் எரியும் டியூம் விளக்கில் மயங்கிய பயணிகளோடு ஆனந்த் வரை போகிறேன நோக்கமற்று. தீய ஞாபகங்கள் நீங்கிய உவர்ந்த வெளிக்குள் கொர உருவங்கள் ஆடுகின்றன, தப்ப முடியாது எதிலிருந்தும். ஏராளமான மலைகளின் உச்சிகளிலிருந்து சூரியனோடு ஒரே சமயத்தில் இறங்கிக் கொண்டி,-19ருந்தேன். சமவெளியில் நீண்டு சலித்த பயண அலுப்பில் தூங்கி வழியும் தூரங்கள். ஆடுகள் மேய்த்தவாறு கருங்களியில் சாய்ந்து நாடோடி மறைந்த புல்லசைந்த வெளிமேல் மிதந்த காற்றில் சித்திரம் தீராக தில்வாரா நாணலில் வரைந்த மிருகக் கூட்டத்தை ஓடைகளில் உலவும் விதிஷாவின் துகில் படர்ந்தவெளி கூடவேஸ்பரிசிக்கிறது பயணத்தை. ' பிரிண்ட் போட்ட மேற்கு ஓவியர்களின் புஸ்தகங்களுக்கிடையே அடைபட்டு அஜந்தாவை கண்களால் ஜெராக்ஸ் எடுக்கும் அந்நிய தேச யாத்ரிகர்களின் கேமரா ஒளி சிதைத்த கபாலச் சந்துகளில் விழுந்து கிடந்த ஓவியப்பள்ளியில் கீழ்திசை ஓவியம் சிறையிடப்பட்டு பூட்டிய அறைகளுக்குள் மறுபிரதி எடுக்கும் நகல்பெருக்கத்தை ஜஹாங்கீர் | ஆர்ட் கேலரிகளில் கடைவிரித்த ஓவியர்களின் தாடியிலிருந்து வெகு தூரம் தள்ளி விடுபட்டிருந்த்து அஜந்தாவின் இருட்டு. 1999 டிசம்பர் 31 இரவில் எல்லோரா சமத்பாத்ரா சமணவிடுதியின் சமையலறையில் சுடப்பட்ட உலர்ந்த ரொட்டிகளுடன் பரிமாறப்பட்ட கடுந்தேனீரில் அடர்ந்த பார்சுவநாதரின் அகஇலைகளை ஸ்பரிசித்தேன் நடுவானில். சமண பௌத்த வெப்பம் தொட்ட இரவு எல்லோரா குகைகள் முப்பத்திரெண்டில் நடந்து கொண்டிருந்த சிற்பங்களுக்கிடையில் இருட்டுக்குள் சிக்கியிருந்த என்னை கொரியப் பெண்கள் ஆறுபேர் உள்ளங்கை அசைத்து வெளிப்பட்ட விரல்களில் ஒளி நீண்டு தொட்ட புத்தரின் அகம் திறந்து காட்டினார்கள் ஓவியங்களில் உதிரும் ஜாதக மாலாவை. சிற்பங்களின் நாசியில் சுவாசித்தேன் இன்று. கொரிய யுவதிகள் ஈரமான பனியில் ஆரஞ்சு வாசனைகள் மிக்க இலைகளுடன் என்னை அழைத்த வேளை பிரிந்து விட்டோம் இருட்டில். தனிமையில் ஆழ்ந்து கனிந்த ஆயிரம் வருஷங்களின் முடிவில் கொரியப்பெண் விரல் முனை விளிம்பில் வரையப்பட்ட சாஞ்சி இமை மூடியிருந்தது. ஜனவரி முதல் நாளில் இரண்டாயிரம் மூடிய கார்க்கை திறந்து குடித்த அற்புத ஒயின் விதிஷாவின் வாசனையில் திராட்சை விளைச்சலின் மோசமான குளிரில் அத்தனை யுத்தங்களின் அழிவுக்கும் ஈடாக பூமி - வழங்கியிருந்த திராட்சைத் தோட்டங்கள் உயிர்ச்சூழல் மாசுபடிந்த நதிகளைத் துடைத்துக் கொண்டிருந்தாள் விதிஷா, ரொம்ப நாள் வைத்திருந்து திறவாத பாட்டிலுக்குள் கருந்தோட்டத்தில் சாட்டன்ஸ் வரலாற்றுப் பூர்வமாகத் திறந்த சிமிழ்களில் இந்நாள் வழிகிறது. -

துயர உணர்வுகள் மேலோங்கி இசையில் கூடும் இச்சை ஜீவ ராசிகளின் மோகப்புயலாய் மாறுகிறது. அது புலனைவிட்டுத் தனித்து சுழன்று இசைப்புலத்துள் இச்சையின் அளவும் தன்மையும் ஜீவனின் உன்னதநோக்கங்களாசி பூதங்களோடு பூதமாக மாறிவிடும் ராவண இசையாகிறது. தேவதாசிகளிடமுள்ள உள்ளுணர்ச்சி இசையின் பாற் பட்ட சமுத்திரம். அது தன்வசத்தில் இயங்கி இசைச் சாகரத்தில் -கட்டுக்கதைகளைப் போலவே சிருஷ்டிபூர்வமான விடுதலை. சமைய லறைகளில் அடைபட்டுப்போன புயல் இருட்டில் ஸ்பரிசவெளி  ஓவியங்களாக உருமாறி பிரைடாவின் வலிமிக்ககோடுகள் உலகைச் சூழ்கிறது இன்று. பூகம்பங்கள் புதிய நீர்சுனைகளை வெளிப்படுத்தும் போது பெண்மொழி ஒரு சகாப்தத்தை வெளிக்கொணரும் வருகைக் கான நேரமிது. நெஞ்சுக் கூட்டில் வரைந்த நிஜத்தேயிலைகளின் வாசனை பரவ கோப்பைகள் ஏந்திக் கிழக்கிலிருந்து வருகிறாள் ஹிரோஷிமா. கோப்பைகளில் சிறிய மான் மற்றும் சாலமரங்களின் கிளை நீரை வாஞ்சிக்கும் பட்சிகள் இலைகளில் இளைத்த நரம்பு களோடு ஒவியத் தாவரங்கள் பொம்மைகளின் செம்மண் மோனத்தில் நிறம்கசியும் தேனீர் சடங்கில் அமர்ந்திருந்த ஹிரோஷிமா கைகளை விரித்து விண் நோக்கி அலறுகிறாள். அழிவுகள் இப்படியாகத்தான் இருக்குமா? விநாசமான தெருக்களில் வடுமுகங்கள் கயாவரை நீளும் ரயில் வண்டித்தொடரில் அவள் முகம் சூரியரேகைகளுடன் மறைவதை பீஹார் ரயில்நிலையம் ஒன்றில் காத்திருந்த வேளை பனிரெண்டு வருஷங்கள் ஓடி இவ்வேளை மன்மாட் ஸ்டேஷன் பிளாட்பாரத் தூணில் சாய்ந்திருக்கும் வேளை கடந்து கொண்டிருக்கும் தபோவன் ரயிலில் அவள் முகம் திரும்ப எட்டிப்பார்த்தது ஜன்னலிலிருந்து என்னை. கோரத் தழும்புகளுடன் இதயத்தை முள்கிளைகளாய் கீறி நிர்கதியில் பிரிந்து செல்கிறது.

பௌத்த வெப்பப்பாழி தொட்ட இரவு எல்லோரா குகைக்குள் கொரிய யுவதிகளின் அகவெளிச்சத்தில் அவலோகிதீஸ்வரரின் இமைகள் மூடிய நெல்கீறலில் மெலிகிறார்கள் இருட்டில். அஜந்தாக் குகைத் தொடரில் உன்னதமடைந்த 1, 2, 16, 17, 19 குகைகளில் புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஜாதகக்கதைகளையும் இசை மகளிர் கூந்தல் அமைப்பில் வெகுநேரம் சுவாசித்துக் கொண்டிருந்துவிட்டேன். கணங்கள்சூழ உயிரும் விந்தையும் கொண்டு கையிலே தாமரை மலர் பிடித்து அமைதியில் உருகும் அவலோகிதர். மகளிர்புடைசூழ விண் பறக்கும் கந்தர்வர்களின் நிறம் தைலமாய் பிரபை கொள்ளும்.பதினா றாவது குகையில் புத்தரின் சரித்திரத் தோற்றம் ஜாதகக் கணிப்பு, பள்ளிவாசம், தவம், ராஜகிருஹத்துக்குச் செல்லும் வழி, நளகிரியென்ற மதயானையைப் புத்தர் அடக்கும் தோற்றம். வர்ணங்களை வீசும் தந்தங்கள் கொண்டு யானைகளின் தலைவனான அந்த யானை பிடிக்கும் வேடர் முயற்சி பலிக்கவில்லை. அடுத்த யானை சுவரில் ஆறு தந்தங்களுடைய சதந்தன் போது சாத்தவரே. வேடர்களின் நிலை கண்டு வருந்தி அது அவர்களுக்காக முன்வந்து தந்தங்களைத் தானே கொடுத்தது. அதனால் யானையும் மாண்டு வீழ்ந்தது. செய்தியை அரசிக்கு அறிவித்தனர் வேடர்கள். வெறிகொண்ட மனம் மறைந்தது, தன் முற்பிறப்பின் கணவனான யானை மாண்ட செய்தி இவளை மாளாத்துயரத்தில் ஆழ்த்தியது. கைகள் சோர்ந்து வீழ்ந்தாள். அருகிருப் போர் நிறங்களாக வந்து தாங்க உடல் சோர்ந்து துவண்டு வீழ்ந்தாள் சித்திரத்தில். சதந்த ஜாதகம் எனும் இக்கதை அபூர்வ நிறம் பகிர்ந்து 22இருட்டில் தத்தளிக்க துவண்டு வீழ்ந்த அரசாணியின் ஓவியம் கூடவே வருகிறது. மளம் குலையும் தாவரங்களின் வாட்டம். சம்பத்துகளை யெல்லாம் தாளமிட்ட வஸந்தரவின் சரித்திர ஓவியம், கையில் கல் ஆடி கொண்டு ஒருகாளை வளைந்து ஒயிலாக நின்று தன்னை அலங் கரித்து நிற்கும் யுவதியின் தரத்தில் வெற்றிடமாக விரியும் நிறங்கள், ஞானம் பெற்று புத்தராகத் திரும்பிவிடும் தன் தந்தையிடம் ராகுலன் தன் பங்கு கேட்கும் ஓவியம், எல்லா நிறங்களுக்கும் அப்பால் கசிந்து பொங்கிய இருட்டு ஓவியக் குகைத்தொடரில். மெல்லிய வெண் சுதை பூசிய ஈரத்தில் நிறங்கள் வீசி எழுந்த உடபாறைகளுக்கிடையில் விரியும் ஓவியஏடு தானே திறந்து புரள்கிறது. ம் அஜந்தாவின் கர்ப்பப்பாழிகளுக்குள் தேவதாசி ஒருத்தி குழந்தை சித்தார்த்தி நாவில் சேனைவைத்த விரல்ரேகையும் சித்திரம் கொள்ள குழந்தையின் முடியவிரல்களும் இசைமாரின் விரல்களும் சேர்ந்து இசையில் கலக்கம்கொண்ட பெண் ரேகை சிசு ரேகையில் பின்னிப் படர்ந்த கரு இருட்டில் வரைந்த நிமிஷம் சரும நிறங்கள் பூசிய ஈரத்தில் பிசுபிசுக்கும் சைத்ரிகரின் விரல்ஓவியத்திலிருந்து விடுபடவில்லை இன்னும், அதுபிக்குவின் கரம்போல தளிராய் தோன்றும். புத்தரின் கைபோல கிழக்கே நீளும். உலராத நிறங்களில் விரல்முனைப்பதிவுகள். விளிம்பில் நசுக்கண்களில் ஓடும் உதிரலரி.

மொழியின் சாத்தியத்தை அதன் விளிம்புவரை சென்று பொருளின் அர்த்தத்தை விலகி பகுப்பாய்விலிருந்து பூமியே விடுபட்டு விட்டது. இப்புவி பல பிதிர்களையுடைய புராவஸ்து அதை கருத்துருவத்துள் அடக்கி அறிவுத்திமிழ்மீது சுழற்றி மனிதன் கக்கத்தில் இடுக்கிக் கொள் ளாமல் மனிதனிடமிருந்தே பூமியை விடுவிக்க வேண்டியுள்ளது. மூளை ரசாயனக் கழிவில் மேற்குலகுக்குள் அடமானம் வைக்கப்பட்ட நதிகளை உருவி சுருள் வாளாகத் தீட்டும் தூயநீர் பளபளத்து நெஞ்சுக்குள் இறங்கும் ஏக்கம் அதிகமாகிவிட்டது இவ்வேளை. ஸ்பரி சவெளியின் உருமாற்றம் மொழியின் இருட்டில் ஓவியங்களாகத் தீட்டும் புனை பரப்பாக கர்ப்ப இருள் மூடியிருந்தது என்னை, சூல்விட்டு வெளிவர முடியாது இனி, சரித்திர நகல்காட்டில் வெட்டிய கலாச்சார அசு அழிப்பு இலக்கிய சூழலாகிவிட்டிருக்கும் மீடியாவின் பன்முக கிரேன் களால் புல்டோஸ் செய்யப்பட்டு மீடியாநகரமாக உலகம் மாறி வருகிறது. எல்லா நகரங்களையும் பாழிசூழ்கிறது. இனிமீடியா தான்.

ஏனோ கலைஞனை இயற்கை எப்போதும் கைவிட்டதில்லை. பின்தொடரும் வரலாற்று அச்சு எந்திரப் புலன்வெளி காண்திரையாக மாற்றப்பட்டுவிட்ட நூதன சூழலில் விண்வலையால் மூடப்பட்ட போதும் அவற்றின் சுண்ணிகளை விண்ணிலேயே அறுத்து காண்கண் களைக்கீறி இருட்டின் ஜனனவெளியில் ஓவியங்களின் ஸ்பரிசவாச னைகளை அஜந்தா இருளில் மொழிருபமாக்குவேன். கலையின் நுண் அலகுகள் வார்த்தையிலிருந்து உதிர அது உடைந்து நொறுங்கி குறுந் திரைகளின் செதில் செதிலாய் அந்தரத்தில் நீந்தி உயிரற்ற பாழியாகிறது. கண்வசமாகிவிடும் தொலைக்காட்சியாகி விட்டது எல்லாம். பிம்பக் கசிவின் கருமசகு நகரங்களைப் பூசியுள்ளது. என் அருமை விதிஷா மட்டும் கண்கள் படபடக்க இருட்டில் சிதறிய கலைகளைத் தேடுகிறாள். கண்ணீரின் வெப்பம். அருகே அவளைத் தொடநெருங்குகிறது. ஞாபக மடிப்புக்குள் ஓடி ஓடிக் கலைத்து வீழ்கிறாள் அந்தப் பாலை வனத்தில்.

' இருள்வரி ஓடும் ஒற்றை வார்த்தைக்கு சுயேச்சையான பல பொருள் வடிவங்கள் (மாறி உருகும் கற்சிலைகளில் பாழி அலைகிறது சிநிலத்தில். நிலைபெயர்ந்த கற்கோளமாய் உருண்டு வட்டமாய் அந் தரத்தில் மிதந்து சுழல்கிறாள் பாழி. மொழியின் பிரபஞ்ச நுண் நுணர்வில் மெலிந்து எடையற்று கிரக நிலையடைகிறாள். குரங்குப் பாலத்தில் அகதி நிழல் அசைகிறது. மஹாவம்சரின் கொடும்பகை எரித்த மடிப்பு ஏடுகளின் நேௗாலைகள் லிபியுடன் தீக்கொழுவிசார் நாலில் விஷம் ஏற்றி, 'ஆழித்தேரவன் அரக்கரை அழல் எழநோக்கி ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் ஊழிக்காலம் வந்து உற்றதோ? பாழித்தீச்சுட வெந்தது என் நகர் என பகர்ந்தாள் கவி சேரனும். இன்று மஹாவம்சர் பௌத்தப்பாழிகளில் தொல் நால் எரித்த சாம்பல் பூசிய ஊழிக்காற்று அரித்தஉடல்கள் மறைந்து சூலிச் சிசு அறுத்தார் மனித நாகரீகத்தின் பேரால், ஈயரவைகள் துளைத்த எலும்புகளின் குமுறல். ஊழிக்கடை முடிவில் மஹாவம்சர் கொம் தினர்.பாழிப்பறத்தலை எழுந்தது. பார்த்தோள் நெடும் படைக்கலம் பதாதியின் பகுதி. பாழிவன்கிரிகள் எலாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று பூமியில் உதிர விண்ணில் புடைத்து உறக்கிளர்ந்து பொங்கி ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதரமுழுதும் வீசம் ஊழி வெங்காற்று இது. பாழிவன் தடத்திசை சுமந்து ஓங்கிய பனைக்சுை. பாழி நல்நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல் பல்பேர் ஊழிக்காலம் நின்று உலகுஎலாம் சல்லினும் உலவாது ஆழிவெஞ்சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் ஏழும் இந்நகர் சூழ்ந்தன. அயன்படையால் ராவணன் உயிர் குடித்தல் இன்று. பாழிமாசுடலும் வெளிப்பாய்ந்ததால் ஊழிஞாயிறு மின்மினி ஒப்புறவாழி வெஞ்சுடர் பேர் இருள்வாரலே பாழி.

மொழிப்பின்னலைப் படிகஉடலாகப் பார்வைக்கு அப்பால் இருட்டில் நகரும் பெண்களின் உள்நோக்கிய கண்தூளில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்காலங்கள் நாவலில் இடம்மாறி பலாட பெண்குலில் வார்த்தைக் கூடு பிறரூபங்களை எடுத்து கதையாகும் ஜனனம். சூலினுள் உருளும் நீர்சிப்பிதான் வார்த்தை . கலை என்ற சூல்வாய் பிளந்து மணல் துகள் விரக்தியால் உலகை சூன்யமாக்கும் சுக்கில வெளி சுழற்சியில் சூலோடு சுற்றி இசைகொடுக்கும் முத்தாக மாறுகிறது வார்த்தை, மயங்கும்பாலை உருஆகிவியர்க்கத் தோன்றிய உப்பு மூன்றாவது அகப்பரப்பாகி கருக்கில் பூச்சி உரு ஆன பாழி மூடிய இருசுழிக் கோடு. குழந்தையின் கால்கள் கர்ப்பத்தில் புறளும் பிறவா  முன்மைக்குள் தவழ்கிறாள் பாழி. நாவலில் மறைத்துவைக்கப்பட்ட ஏழ்கடல் ஏழிசை ஏழுகன்யா ஏழ்பாலை ஏழும் ஏழுமாய் ஈரேழு மேல் கீழ் அடுக்கிய புனைவு உலகங்களின் மரபுநில வெளிதான் சமணம், என புராணத் திலிருந்து கதையின் புரா வஸ்துகளின் மறைபொருள் ரூபத்திலிருந்து எடுக்கப்பட்டபின் அவற்றின் கணிதம் தான் வார்த்தையாகியிருக்கக் கூடும், புவர்லோகம் அரவு புனை நிழல்கள் ஆடும் நாகஉலா ஓர் கற்பனை நகரமாக நாவலில் அபூர்வ இணைப்புகள் கொண்ட வார்த்தை நாகரம். நத்தைக்கூடு மாதிரியோ ஒர்கிரகத்தின் மிதத்தல் மாதிரியோ ஒர் இலை நரம்பின் கிளைத்தல் மாதிரியோ நாகரம் எனும் தனித்தீவைச் சூழ்ந்த இசைத்தாவரங்கள் ரத்தத்திலிருந்து மண்டிப் பரவிமொழிவசத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

அ-ரூபம் கொண்ட சொல்வனத்திலே வேட்டையாடி நீரை வாஞ்சித்து இந்த ஏழு ஏடுகளுக்குள் பிளந்து ஓடும் ஓடைகளுக்கு வந்திருக்கும் வேட வாசகா!

உருவற்ற மிருகங்கள் மொழி உருவெடுத்து கர்ஜிப்பதால் நாவலின் பிறர் வனத்தில் புராதனமான வாசகன் ஒருவனே ஏடுகளுக்கு முந்திய காலத்திலிருந்தே தொடருகிறான் என்னை, கதையை  வாஞ்சித்துக் கதறும் மான்களை விட்டுவிடு. தனி உலகமாக நாவலின் புராவஸ்துகள் புனைவுகளில் இயங்கி பிதிர்கோடு வரையும் கலைமடிப்பில் வெளி மேல் வெளி அடுக்கிய புஸ்தகம். இந்தப்பக்கங்கள் எந்த வெளியில் நிழல்விழ நகரும் மறுகோடு குறுக்குவெட்டில் உணரும்வேறு உருவம். முரண் மடிப்பில் கலை கொள்ளும் வெற்றிடம் அறிவின் நோக்கமான பிடியிலிருந்து வெளியேறி  இருளில் புதைகிறது. கண் தெரியாதோர் வரைந்த தொடும் வெளி நகைத்தொடராய் இருக்கக்கூடு, பள்ள சாயைகள் படிந்த ஓவியங்களில் உதிரும் நிறங்கள் கலையின் தொடு முனையில் மொழி அதிர்வுகொள்ளும். மயக்கம் மேலோங்கிய கருப் பொருளில் நிலங்கள் யாவும் சாய்ந்து கிடக்கும் மோனம். என் கைகளில் வடித்த மொழியில் படிக்கக் கிண்ணங்களை ஏந்தி காலவெளியில் காத்திருக்கிறேன் வாசகருக்காக. அவனோடு உதிரத்தில் பாயும் என் விதிஷாவை அவள் கூந்தல் வாசனைமிக்க இந்நாவலை ஒர் இலை நுனியில் திளைத்த நரம்பென இந்தயுகத்தின் அபூர்வ சிறுமியை  வாசக வெளியில் விட்டுப்பிரிகிறேன் கண் இமைத்துக் காண்போர் பழித்தாலும்.

சாஞ்சி: 
விதிஷா 4. 1. 2000                                                                                      கோணங்கி

No comments:

Post a Comment