தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, May 13, 2025

நமது சந்ததிகள் - ந. முத்துசாமி

 சிறுகதை
நமது சந்ததிகள்
ந. முத்துசாமி
++++++++++++++++
நூலகத்திற்குச் சென்று படிக்கத் தொடங் கியதற்குப் பிறகு என் படிப்பறையில் தொங்கிக் கொண்டிருந்த 'அன்பே சிவம் என்று என் தந்தை மாட்டி வைத்திருந்த மந்திரத்தைக் கழட்டிவிட்டு 'அறிவே சிவம் என்று எழுதி சுவ ரில் புதீதாய் ஆணி அடித்து மாட்டி விட்டேன். அதைக் கழ்ட்டியதற்குத் தடை சொல்லத் தந்தையில்லை பிறகு ஒரு நாள் நானே தொகுத்து எழுதி வைத்துக் கொண்டிருந்த சமீபகாலத் தமிழர் வரலாற்றைப் புரட்டிக் கொண்டிருந்த போது 'தந்தையே' என்று சிரித்தபடி அழைத் துக் கொண்டு சிவனே வந்து விட்டார். இத் தனை நாள் கருவில் இருந்த புழுக்கம் தணிய வெளியில் காற்றாட உலவி விட்டு வரலாம்" என் றார். இருவரும் புறப்பட்டோம். கொஞ்ச நேரத்தில் ஒரு நாற்சந்தியைச் சென்றடைந் தோம் திசைக் கொரு சாலையாய் வந்து கூடிய இடத்தில் ஒரு கைகாட்டி மரம் நின்று கொண் டிருந்தது.
·
* எங்கே போகிறோம் ?"
என்னைத் தன் யோசனையுடன் பார்த்து விட்டு எங்கோ நினைப்புள்ளவர் போல் "அதோ அங்கே' என்று கை கைாட்டி நீண்ட திசையில் கைப்ை நீட்டினார். அத்திசையை "நமது சந்ததிகள்' எனச் சுட்டியது கை காட்டி.
அது பெரிய சாலை.
பல வழிப்போக்கர்கள் போய்ப் போய் மண் புரண்டு தடம் அழித்து புதுத் தடம் கிளம்பி அதிலும் புழுதி படிந்து ஒன் றின் மேல் ஒன்று குறுக்கும் நெடுக்குமாய் வைத்த பாதச் சுவடுகள் தோன்றக் காணப்பட் டது சாலை. அந்தச் சாலையில் எங்கள் புதுப் பாதங்கள் பட்டன. மேலே நடக்கவும் கொஞ்ச தூரத்தில் வழியில் சில பாதுகாவலர்கள் சாலை யைக் குறுக்கே அடைத்துக்கொண்டு நின்றார்கள். அவர்கள் முன்னே சிறு கூட்டம் நின்று கொண் டிருந்தது. திசைகளிலிருந்து வரும் செய்தி களாய் அவர்கள் பிற சாலைகளின் வழியே வந்த வர்கள். அந்தப் பாதுகாவலர்கள் ஒவ்வொரு வராய் முகம் பார்த்து உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள். இருவரும் மார் பை புடைத்துக் கொண்டு அவர்கள் முன் போய் நின்றோம் அவர்கள் எங்கள் முகத்தைச் சந்தே கத்தோடு பார்த்துவிட்டு கொஞ்சம் விலகி நிற்
கும் படிச் சொல்லி விட்டனர். சிவனுக்கு என்ன யோசனை தோன்றிற்றோ, சட்டென்று ''சேரன் செங்குட்டுவன் பேர் சொல்ல வந்தவர்கள்' என்று ஓரடி முன் போய் மார் தட்டிக் காண்பித்தார். அவர் செயலுக்குப் பலன் எப்படி இருக்குமோ என்பதை அறியாத நான் மிகவும் பணிவாக என் னிடம் இரக்கம் காட்ட வேண்டி நிற்பவன் போல் நின்றேன். மிகவும் அலட்சியமாக அவர்கள் எங் களை 'உள்ளே அனுமதித்து விட்டார்கள். சிலர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வந்த வழியே திரும்பிப் போய் விட்டார்கள்.
நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். திடீ ரென்று அவர் ஓரிடத்தில் நின்று "அதோ ..அவர் கள் வருகிறார்கள்" என்றார்.
·
யார்? வருகிறார்களா? நமது சந்ததிகளா? ரண்டு புள்ளிகள் அல்லவா தெரிகின்றன
அவர் பார்த்த திசையில் தூரத்தில் இரண்டு புள்ளிகள் தெரிந்தன. புள்ளிகள் எங்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தன. விழியின் ஒளிப்புள்ளிகள் போலிருந்தன. பூச்சி பறந்தது போலிருந்தன.
பார்வையில்
''இல்லை.அவர்கள் தான் வருகிறார்கள் நன் றாகக் கண்களை விளக்கிக் கொண்டு பார்
கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்த் தேன். இரண்டு மனிதர்கள் வந்து கொண்டிருப் பது தெரிந்தது. "ஆமாம். வருகிறார்கள். அவர் கள் புஞ்சைச் சேரிவாசிகள் அல்லவா ?”
"ஆமாம்..அமாவாசையும் ராகுகாலமும்." "எதற்காக இங்கே இப்படி புதுச் சட்டை போட்டுக் கொண்டு.'
''ஊர்வழி போகிறார்கள் போலும், வரட் டும் பார்க்கலாம்.''
அவர்கள் எங்களைப் பார்த்து விட்டுச் சிரித் துக் கொண்டே வந்தனர்." என்னங்க ஆண்டே. இப்படி எங்கேங்க” என்று இருவரும் ஒரே நேரத் தில் கேட்டார்கள்.
"உங்களைப் பார்க்கத்தான்.”
"எங்களைப் பார்க்கறதுக்கு என்னாத்துக்குங்க. ஏழைப் பறப் பசங்க ..ஒரு குரல் கொடுத்தா ஓடி யாந்துட மாட்டோங்களா?

"நீங்கள் எப்படி இங்கே ?''

"ஆமாம். வரலாற்றுக் காலத்துக்கு முந்தின வெள்ளம்."

நாங்கள் நின்றுகொண்டிருந்த இடம் ஒரு காலத்தில் படகுத் துறையாய் இருந்தது இப் பொழுது உடைந்த படகின் மரத்துண்டுகள் மடித்துக் கிடந்தன. ஆற்றங்கரைச் சரிவில் பட குத் துறையில் பாதி நீரில் மூழ்கியும் பாதி வெயி லில் காய்ந்தும் மக்கிய கயிறால் மடித்த முளையில் கட்டப்பட்டுச் சில படகுகள் இருந்தன.
“நம் மூதாதைகள் படகு ஒட்டிய இடம்.
" இப்பொழுது?"
"நம் அரசியல்வாதிகள் அங்கே பாலங் கட் 'டிக் கொண்டிருக்கிறார்கள்.'
'போய்ப் பார்க்கலாமா?'

‘அங்கு தான் போய்க் கொண்டிருக்கிறோம்'' 'என்று அவர் ஆற்றங்கரையோடு நடக்க ஆரம் பித்து விட்டார்.
அவர்கள் கூட்டமாகப் பாலங்கட்டிக் கொண் டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
"புதுப் பாலத்திற்கு இப்பொழுது என்ன இப்பொழுது என்ன தேவை ஏற்பட்டது. பழைய பாலம் உடைந்து விட்டதா?"
“நமது சந்ததிகளை அக்கரையில் வேகமாக அடைய இப்பாலம். தேவை என்று தோன்றிய தால் கட்டுகிறார்கள்." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் சலசலப்புக் கேட்டது. என்னவென்று அருகில் சென்று பார்த்தபோது 'மரவட்டை' என்ற சொல்லைப் பற்றி அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

("மரவட்டை என்பது கொச்சைச் சொல் அல்லவா?" “பேச்சு வழக்கை எழுத்து வழக்காக்கா மல் மொழியை வளர்க்க முடியாது என்பதை முத லில் தெரிந்து கொள்ள வேண்டும்." இதற்கு முன் அது எழுத்து வழக்கில் இல்லை என்பது என்ன நிச்சயம்.'' ''முதலில் அது தமிழ்ச் சொல்தானா என்பதை நிச்சயமாக்கிக் கொள்வோம்")
அவர்களுடைய வாதம் மேலும் தொடரும் போலத் தோன்றிற்று. ஆனால் சிவன் இடையில் குறுக்கிட்டு "ஏன் இப்படி வாதமிட்டுக் கொண் டிருக்கிறீர்கள் ? ’ என்று ஒரு கேள்வியைப் போட்டு வைத்தார். இப்படி ஒரு கேள்வி அன்னி யக் குரலில் எழுந்ததைக் கேட்டதும் கூட்டத்தின் குழப்பம் அடங்கி எல்லோரும் எங்கள் பக்கம் திரும்பினார்கள்.
கேள்வியின் தொனியைக் கவனியாது சொற் களின் பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு வர் பதில் சொன்னார். இந்தப் பாலத்தின் மீது மின்சார ரயிலை விடப் போகிறோம். "அது மர வட்டையை போலப் பாலத்தின் மீது போகும்' என்று உவமை சொல்ல வந்த போது இந்த வாதம் வந்து விட்டது" என்றார் அவர்.
அப்பொழுது தான் நான் பாலத்தை முழு தாகப் பார்த்தேன். பாலம் வளைந்து வளைந்து போயிற்று. "ஏன் இப்படி வளைவாகப் பாம்பு  கட்டியிருக்கலாமே !"
அவரே சொன்னார். "கட்டியிருக்கலாம் தான். ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த திருப் பம் தெரியாமல் போய்விடுமே."
அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மின்சார் ரயில் ஊதிக் கொண்டு வந்து எங்கள் முன் நின்றது. எல்லோரும் வண்டியில் ஏறிக் கொண்டோம். வண்டி மிகவேகமாகப் புறப்பட் டது. ஆனால்,வண்டி போன வேகத்தில் அதனால் வளைவுகளுக்குள் நுழைந்து நுழைந்து மரவட்டை போல் போக முடியவில்லை. அது நேராகவே பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் தடம் புரண்டு அக்கரையில் போய் விழுந்தது அறுந்த மின்சாரக் கம்பிகளில் எல்லோரும் சூடு போட்டுக் கொண் டார்கள். டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் குறுக்கும் நெடுக்குமாய் சூடு விழுந்திருந்தது. உடம்பு முழு தும் தீப்புண் கொப்புளங்கள். வெந்த சதையின் நாற்றம். ஆப்பிரிக்காவின் ஆதிவாசிகள் தங்கள் முகத்தில் அலங்காரம் செய்து கொண்டது போன்ற முகத் தோற்றம் ஆனால், 'ஓகோ கோ' என்று எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
"ஏன் இப்படிச் சிரிக்கிறார்கள். இவர்களுக்கு அழுகை வருவதில்லையா?" என்று சிவனின் காதில் மெதுவாகக் கேட்டேன் அவரும் 'எல் லோரும் மொத்தமாகச் சூடு போட்டுக் கொண்ட தால் வலி தெரியவில்லை போலிருக்கிறது" என் றார் என் காதோடு. எங்கள் பேச்சு அவர் களுக்குக் கேட்டிருக்க வேண்டும் சிரித்துக் கொண் டிருந்தவர்கள் திடீரென்று சிரிப்பை நிறுத்தி விட்டு எங்கள் இருவரையும் பார்த்தார்கள். நாங்கள் இருவரும் சூடு போட்டுக்கொள்ள வில்லை.
"இனிமேல் இங்கிருப்பது நல்லதல்ல. நாம் போகலாம்.'
போக
நீண்ட தூரம் பயணம் செய்த அலுப்பை நான் உணர ஆரம்பித்தேன் 'இன்னும் நீண்ட தூரம்
வேண்டியிருக்குமோ. உங்கள் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை.'
'அமாவாசையும் ராகுகாலத்தையும் பார்த்து விட்டு வரலாம்.”

புஞ்சைச் சேரிக்குப் போவதற்கு "கொர வன் தோப்பு வழியாகத்தான் போக வேண்டும். குறவன் தோப்பு இப்பொழுது புதுத் தோற்றம் பெற்றிருந்தது. நான்கு பக்கமும் சிமெண்டுக் தார்கள். பருவ மழைகளில் பாசி படிந்து வெயி கம்பங்கள் நட்டு இரும்பு முள் வேலி பின்னியிருந் லில் காய்ந்து பொருக்குத் தட்டாமல் அவை புது நிறத்தோடு இருந்தன " சாம்பல் நிறம் இன்ன கம்பிச்சுருள் ஒரு பக்கம் கிடந்தது. வெட்டிய மும் மாறவில்லை. பின்னியது போக மிஞ்சிய முள் சிறுமுள் கம்பித் துண்டுகள் வேலியின் ஓரமாக நெடுகிலும் கிடந்தன.
உள்ளே மாங்கன்றுகள் துளிர்விட ஆரம்பித் திருந்தன. மாங்கன்றுகளுக்கு இடை நிலத்தில் பலவகைக் குறுகிய காலப் பயிர் வகைகள் பயிற செய்திருந்தார்கள் நான்கு புறமும் ஓரங்களில் வாழை பயிராகியிருந்தது. வாழைகளுக்கு இடை
யில்
தென்னம் பிள்ளைகள். தோட்டத்தில் எங்கோ த்ண்ணீர் இறைக்கும் எஞ்சின்சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு பக்கத்தில் டிராக் டர் உழுது கொண்டிருந்தது.
தோட்டத்தைப் பார்த்துக்க ர்ண்டே தோட்டத்தின் வாயிலுக்கு வந்து சேர்ந்தோம். தோப்ட வாயில் வளைவில் 'கிராம நலக் கூட்டுப் பண்ணை' என்று கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தார்கள்.
"இது தான் அம்மூவரின் பண்ணை போலும்."
"உள்ளே போய்ப் பார்க்கலாமே

உள்ளே நுழைந்ததும் பக்கத்தில் குடில் இருந் தது. அதில் அம்மூவரும் 'சாஸ்திரிகள்' பூணூ லுக்கு நூல் நூற்பதைப் போல தக்களியில் நூற் றுக் கொண்டிருந்தார்கள். வாய் ஏதோ மந்தி ரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது என்ன மந்திரம் என்பது தெளிவாகத் தெரிய வில்லை இடையில் தேங்கிய மூச்சு வேகமாக வெளி வரும் போது அடித்துக் கொண்டு வந்த சொற்கள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட் டன. ஹரிஜன், ஆதித் திராவிடன் என்ற சொற் கள் மட்டும் தான் தெளிவாகப் புரிந்தன. எங் களைக் கண்டவுடன் நூற்பதை நிறுத்திவிட்டு வர வேற்றனர்
"படையாச்சியும் நாயுடுவும் கூட போட ஆரம்பித்து விட்டார்கள் ?" சிவன் சிரித்துக் கொண்டே.
பூணூல் என்றார்
"இல்லை மூக்கணாங் கயிறுக்கு நூற்றுக் கொண்டிருக்கிறோம்" என்றார் கோபாலய்யர்.
"இப்போ கோபாலய்யர் கூட பூணூல் போடு வதில்லையே" என்றார் கோவிந்தசாமி படையாட்சி.

வேதமந்திரமா?' என்றேன் நான்.
“இல்லை...இல்லை” என்று சிரித்து விட்டு "எங் கள் பல்கலைக் கழகத்து பேராசிரியர்கள் கட்டினார் கள். அவர்கள் நல்ல அரசியல் வாதிகள்" என் றார் கிருஷ்ணமூர்த்தி நாயுடு.
அவர்கள் திரித்த நூலிலிருந்து முறுக்கிய மூக் கணாங் கயிறுகள் சாயம் தோய்க்கப்பட்டு பக்கத் தில் கிடந்தன. அவைகளை எடுத்துப் பார்த்து விட்டு "சாயம் போகாமல் இருக்குமா ?" என்றார் சிவன்.
"பழகிப் போன பிறகு சாயத்தை யார் பார்க்கப் போகிறார்கள். ஆனால், இவை மிகவும் வலுவானவை. என்றார் கோபாலய்யர்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது ராணு வப் பயிற்சி பெற்றவர்களைப் போல மிடுக்காகக் காணப்பட்ட மூன்று இளைஞர்கள் குடிலுக்குள் நுழைந்தார்கள். கையில் கொண்டு வந்திருந்த ஆகாரத்தை வைத்துவிட்டு நாங்கள் உழவு தளைக்குப் போகிறோம்" என்று கிளம்பிப் போய் விட்டார்கள். அவர்கள் சூடு போட்டுக் கொண் டிருப்பதைப் பார்த்துவிட்டு "இவர்கள் ?" என் இறன்.
'எங்கள் பையன்கள்."
'விவசாயத்தைக் கவனித்துக் கொள்கிறார் களா ? படிக்க வில்லையா ?
"படிக்கவில்லையா ?" என்று  புருவத்தை மேல் தூக்கிப் பார்த்துச் சிரித்துவிட்டு கோபாலய் யர் சொன்னார். விவசாயத்தில் மேற் படிப்புப் படித்தவர்கள். இரட்டை ஆற்றைக் கடந்து புதுப் பாலத்திற்கு அருகில் இருக்கும் நமது சந்த திகள் பல்கலைக் கழகத்தில் படித்து முதன்மையா கத் தேறியவர்கள். அங்கே மொழியியலை மூன் றாண்டுகள் கட்டாய பாடமாகச் சொல்லித் தரு கிறார்கள் அன்னம் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்து விடுவதைப் போல இவர்களால் தமிழில் இருந்து பிற சொற்களை சுலபமாகப் பிரித்துவிட முடியும்.

'ஓகோ.. அப்படியா?"
'நமக்கு நேரமாகிறது."
"கொஞ்சம் பழச்சாறு சாப்பிட்டு விட்டுப் போங்கள்.' என்று கோபாலய்யர் சாப்பாடு வந்த பையை எடுக்கப் போனார். "மிக்க நன்றி" இப்பொழுது பசியில்லை. வருகிறோம்." என் நாங்கள் புறப்பட்டு விட்டோம்

நடக்க முடியவில்லை
எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. மேலே அதை உணர்ந்த சிவன் "இன்னும் கொஞ்சம் நேரம். அமாவாசையை யும் ராகு காலத்தையும் பார்த்து விட்டுத் திரும்ப லாம்” என்று புஞ்சைச் சேரிக்குப் போகும் ஒற்றையடி வரப்போடு நடந்து கொண்டிருந்
தார். எதிரில் தலையில் கஞ்சிக் கலயத்தோடு கழைக் கூத்தாடும் பெண்ணைப் போல வரப்போடு வந்து கொண்டிருந்த பறைச்சி எங்களைக் கண்ட தும் பக்கத்து வயலில் இறங்கிக் கொண்டாள். அவளைப் பார்த்து "அமாவாசையும் ராகுகால மும்" என்று நான் கேள்வியைத் தொடங்கிய வுடன், ‘“இல்லீங்க ஆண்டே, எல்லாம் உழப் போயிருக்குதுவோ. நான் அங்கேதாம் போய்க் கிட்டிருக்கேன்'' என்று சொல்லி விட்டாள் அவள். பிறகு நாங்கள் அவளைப் பின் தொடர்ந்து உழவு தளைக்குப் போனோம். அங்கு அமாவாசையும் ராகுகாலமும் புழுதி உழுது கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்புதான் மழை திருக்க வேண்டும் போலத் தோன்றிற்று சாலில் புரண்ட மண் ஈரமாய் இருந்தது. மாடு களுக்கும் பதிலாக அவர்களே ஏர் இழுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூக்கணங் கயிறு போட்டுக் கொண்டிருந்தார்கள். கிராம நலக் கூட்டுப் பண்ணையில் சந்தித்த இளைஞர்கள் ஏர் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
·
பொழிந்
படை
'என்ன இது புதுக் கோலம். மூக்கணாங் கயிறு."
“புதுக்கோலம். அல்ல. உழைப்பின் சின்னம். மரபை விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டும் குறியீடு" என்றான் ஏரோட்டி.

ஆண்டே இது வெறும் மூக்கணாங் கயிறு இல்லீங்க..:முடிகயிறு... மனிதன் மாடாய் உழைப் பதைக் கண்டு பிறர் கண் படாமல் இருக்க மந்தி ரித்துக் கொடுத்த முடிகயிறு. உடம்பில் வலி ஏறாமலும் தடுக்கும் முடி கயிறுங்க ஆண்டே" என் றான் ஏர் இழுத்துக் கொண்டிருந்த ராகுகாலம்.
அதைக் கேட்கவில்லை மூக்கணாங்கயிறு இருக்கிறது மாடுகளைக் காணவில்லையே என்று தான் கேட்டேன்.'
"நமது மாடுகள் வலுவில்லாதவை. அவை களின் மூலம் நமக்குக் கிடைக்கும் பலனைக் காட்டி லும் நம்மிடமிருந்து அவை சாப்பிட்டுவிட்டுப் போவது அதிகம் ஆகவே, நமது பசுக்களை மல டாக்கினோம்: வயதான காளைகள் இறந்து விட் டன இப்போது நம்மிடம் இருப்பவை நல்ல கறவை மாடுகள். அவை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை
அவைகளுக்குப்
பிறக்கும் காளைகளுக்குக் கொண்டையில்லை நுகத் தடி கழுத்தில் பாவாது. ஆகவே அவை உழவுக்கு லாயக்கற்றவை. ஆனால், நல்ல பொலிகாளைகள். பொலிகாளைகளைத் தவிர மற்றவற்றை நவீன கசாப்புத் தொழிற்சாலைகளுக்கு விற்றுவிடுகிறோம். விவசாயத்தில் நஷ்டம் வராமல் ஓரளவு அது உதவுகிறது. நமது நாட்டில் மக்கள் தொகை அதிகமல்லவா? மக்கள் சக்தியை வீணாக்க லாமா? ஆகவே நாங்கள் உழைக்கிறோம். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் பணி செய்கிறோம். பின்னால் வரும் நமது சந்ததிகள் நம் மேல் பழி சொல்லக் கூடாதல்லவா ?" என்றான் ஏரோட்டி
அமாவாசையைப்
பார்த்துச் 'சிவன் கேட்டார் *
“புதுச்சேரிக்குப் போவது வாயிற்று ?' என்று, அவர்கள் அப்பொழுது ஏரை முண்டி இழுத்துக் கொண்டிருந்ததால் 'அவர் கேட் "புதுச்சேரிக்கும் போவது என்ன வாயிற்று?' டது அவர்கள் காதில் விழவில்லை. மீண்டும் என்றார்.
எங்களுக்கு அறிமுகமில்லாத, சூடுபோட்டுக் கொண்டிருந்த இன்னொரு ஏரோட்டி எங்களிடம் சண்டைக்கு வந்து விட்டான்' 'ஏய் சும்மா போக மாட்டே. என்ன கலகம் நாட்டுத் துரோகிகளே, குடியை மறந்திருப்பவர் பண்ண வந்தியா ? களைப் பார்த்து பழைய ஞாபகத்தைக் கிளற வந் தீர்களா? துரோகிகளே' என்று சீறினான் அவன்.
சிவன் சாந்தமாக 'நான் அதைச் சொல்ல வில்லை. புதுச்சேரிக்குக் குடிபோவதைப் பற்றிக் கேட்டேன்” என்றார். அவர் பயந்து விட்டார் போலத் தோன்றிற்று. ஓரடி பின் வாங்கிக்
கொண்டார்.
இம்முறை அமாவாசை முந்திக் கொண்டு பதில் சொல்லிவிட்டான். *கலெக்டர் அய்யா உத்திரவு கெடக்கிலீங்க ஆண்டே ”
எழுத்து-?
விடிவு
கி . அ. சச்சிதாநந்தம்
விழித்தெழும் வெய்யோன்கண் வழியும் பீளை வைகறை குண்டு மல்லிச் செடியின் என்புக் கூட்டின் மேல் சிலந்தி பின்னிய எச்சில் வலைக்கு அகப்பட்டது அரவம் உதறிய வெறும் தோல்.
கானல்நீர் வளர்த்த
கனவுகள் காச நோயால் காறித் துப்பின குருதித் துளிகளில்
நெருங்கும் நெடுங்காலத்தின் நிழற் கருமை.
இரவின் சுமை உதறி, சிறகு விரிக்கும் குயில், பனிக்காற்றில் பாடுவதின் பொருள் பகலா?


பார்வை
எஸ். வைதீஸ்வரன்
வெள்ளிப் பந்தென்று சொல்லில் விளையாடி. தங்கக் கிண்ணமென சோறூட்ட கதை சொன்ன விஞ்ஞான மோகினியின் மூன்னாள் விண் - கவிகள் கூடி நெஞ்சை
மேலுக்கு இழுத்தாலும் இன்று வெடிகாலை சமயலறை ஜன்னலூடே வானைத்துளாவிய புதுக்கண்கள்
எவர் சில்வர் நிலவை கண்டு விட்டுக் காபி குடித்தது! !