தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, June 21, 2025






பாழி - கோணங்கி


மயங்கும் பாலை உருஆகிவியர்க்கத் தோன்றிய உப்பு மூன்றாவது அகப்பரப்பாகி கருக்கில் பூச்சி உருஆன பாழி மூடிய இருசுழிக் கோடு. குழந்தையின் கால்கள் கர்ப்பத்தில் புறளும் பிறவா முன்மைக்குள் தவழ்கிறாள் பாழி. நாவலில் மறைத்துவைக்கப்பட்ட ஏழ்கடல் ஏழிசை ஏழுகன்யா ஏழ்பாலை ஏழும் ஏழுமாய் ஈரேழு மேல் கீழ் அடுக்கிய புனைவு உலகங்களின் மரபுநில வெளிதான் சமணம். என புராணத் திலிருந்து கதையின் புரா வஸ்துகளின் மறைபொருள் ரூபத்திலிருந்து எடுக்கப்பட்டபின் அவற்றின் கணிதம் தான் வார்த்தையாகியிருக்கக் கூடும். புவர்லோகம் அரவு புனை நிழல்கள் ஆடும் நாகலா ஓர் கற்பனை நகரமாக நாவலில் அபூர்வ இணைப்புகள் கொண்ட வார்த்தை நாகரம். நத்தைக்கூடு மாதிரியோ ஓர்கிரசுத்தின் மிதத்தல் மாதிரியோ ஓர் இலைநரம்பின் கிளைத்தல் மாதிரியோ நாகரம் எனும் தனித்தீவைச் சூழ்ந்த இசைத்தாவரங்கள் ரத்தத்திலிருந்து மண்டிப் பரவிமொழிவசத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

அ - ரூபம் கொண்ட சொல்வனத்திலே வேட்டையாடி நீரை வாஞ்சித்து இந்த ஏழு ஏடுகளுக்குள் பிளந்து ஓடும் ஓடைகளுக்கு வந்திருக்கும் வேட வாசகா!

உருவற்ற மிருகங்கள் மொழி உருவெடுத்து கர்ஜிப்பதால் நாவலின் பிதிர் வனத்தில் புராதனமான வாசகன் ஒருவனே ஏடுகளுக்கு முந்திய காலத்திலிருந்தே தொடருகிறான் என்னை. கதையை வாஞ்சித்துக் கதறும்மான்களை விட்டுவிடு. தனி உலகமாக நாவலின் புராவஸ்துகள் புனைவுகளில் இயங்கி பிதிர்கோடு வரையும் கலைமடிப்பில் வெளி மேல் வெளி அடுக்கிய புஸ் தகம். இந்தப்பக்கங்கள் எந்த வெளியில் நிழல்விழ நகரும் மறுகோடு குறுக்குவெட்டில் உணரும்வேறு உருவம். முரண் மடிப்பில் கலை கொள்ளும் வெற்றிடம் அறிவின் நோக்கமான பிடியிலிருந்து வெளியேறி இருளில் புதைகிறது. கண் தெரியாதோர் வரைந்த தொடும் வெளி குகைத்தொடராய் இருக்கக்கூடும். உள்ளே சாயைகள் படிந்த ஓவியங்களில் உதிரும் நிறங்கள் கலையின் தொடு முனையில் மொழி அதிர்வுகொள்ளும். மயக்கம் மேலோங்கிய கருப் பொருளில் நிலங்கள் யாவும் சாய்ந்து கிடக்கும் மோனம். என் கைகளில் வடித்த மொழியின் படிகக் கிண்ணங்களை ஏந்தி காலவெளியில் காத்திருக்கிறேன் வாச கனுக்காக. அவனோடு உதிரத்தில் பாயும் என் விதிஷாவை அவள் கூந்தல் வாசனைமிக்க இந்நாவலை ஓர் இலை நுனியில் கிளைத்த நரம்பென இந்தயுகத்தின் அபூர்வச் சிறுமியை வாசக வெளியில் விட்டுப்பிரிகிறேன் கண் இமைத்துக் காண்போர் பழித்தாலும்.

சாஞ்சி: விதிஷா

4. 1. 2000

கோணங்கி

தானியப்பாழி

பாழி

வந்து கொண்டிருந்தான் ஒற்றைப்பல் கழுதைமேல் ஜிப்ஸிகளின் டேரட் கார்டுகளைக் குலுக்கியவாறு வாயில் எச்சில் ஒழுகும் முட்டாள் காமோஸ்டாவோ.

மேற்குக் கிழக்கு என காமோஸ் என்றும் டாவோ என்றும் இரு நபர்களாய் பிரிந்து கதை சொல்பவன் குருடனாகவும் கேட்பவன் ரோகியாகவும் சொல்வனத்துக்குள் உரையாடலை தொடர்ந்த வாறு ஏழு ஏடுகளைத் திறக்கும் நூதன ஆரூடத்தைப் போட்டு டேரர் கார்டுகளில் உள்ள நகரங்களின் பிதிர்க் கதைகளைச் சொல்லி உலகப் பிரசித்தி பெற்ற "ப்ரீகான் புனிதவாளுடன் வந்து கொண்டி ருந்தான் சாம்பல் பயணி காமோஸ்டாவோ.

அவன் கதை சொல்லும் இரவில் இரு நபர்களாகப் பிரிந்து குருடர் களின் அசுப்பரப்பில் அலைவுறும் விளோத ரோகியவன்.

எரிது நகரின் ரஸவாதியால் ஒரே மனிதனாக தைக்கப்பட்ட இரு உடல் கொண்ட காமோஸ்டாவோ டேரட் கார்டுகளில் திறக்கும்

தாளியாளின் கரிசல்ஏடு, குருடர்களின் கண்ஏடு,

தேவதாசிகளின் கேசஅகவல் ஏடு,

வேடபுராணஏடு,

ரஸவாதியின் களிஏடு,

சிற்பவயல்- சித்திரவயல் - கண்ணாடிவயல் ஏடு, போர்ச்சுக்கீசியபுனிதரின்'வில்லேஜ் ஆஃப் தீவ்ஸ்' ஏடு

ஆகிய ஏழு புஸ்தகங்களைத் தேடி வந்து கொண்டிருந்தான் டாட்டில்" கழுதை மேல்.

ப்ரீகான் எனும் புனிதவாளை இந்திய நாவித மருத்துவ மரபில் தோன்றிய கம்போடிய பிக்குகள் இன்றும் பக்தியோடு மந்திர சக்தி மிக்க இந்த வாளைப் பாதுகாத்து வர மிகச்சிறிய அளவு துரு ஏறினால் கூட அது கம்போடியக் கலாச்சாரத்திற்கும் கட்டிடக்கலைக்கும் தேடு விளையக்கூடும். தேசத்திற்கு விநாசத்தை ஏற்படுத்தும் என எச்சரிக் கையுடன் இவ்வாளின் மீதே எழுதி வைத்தார்கள் கம்போடிய நாவிதர்கள். ஜிப்ஸிகளின் டேரட் கார்டில் உள்ள ஆரூடத்தின்படி காமோஸ்டாவோ கையில் சிக்கியது புனிதவாள். அது அவனுக்கே ஆபத்தாக முடியும் என்று சொன்னது வாள். ** அரிஸ்டாட்டில்.


இருட்டில் தத்தளிக்க துவண்டு வீழ்ந்த அரசாணியின் ஓவியம் கூடவே வருகிறது. மனம் குலையும் தாவரங்களின் வாட்டம். சம்பத்துகளை யெல்லாம் தானமிட்ட வஸந்தரனின் சரித்திர ஓவியம். கையில் கல் ஆடிகொண்டு ஒருகாளை வளைந்து ஒயிலாக நின்று தன்னை அலங் கரித்து நிற்கும் யுவதியின் தூரத்தில் வெற்றிடமாக விரியும் நிறங்கள். ஞானம் பெற்று புத்தராகத் திரும்பிவிடும் தன் தந்தை யிடம் ராகுலன் தன்பங்கு கேட்கும் ஓவியம். எல்லா நிறங்களுக்கும் அப்பால் கசிந்து பொங்கிய இருட்டு ஓவியக் குகைத்தொடரில். மெல்லிய வெண் சுதை பூசிய ஈரத்தில் நிறங்கள் வீசி எழுந்த உடபாறைகளுக்கிடையில் விரியும் ஓவிய ஏடு தானே திறந்து புரள்கிறது.

அஜந்தாவின் கர்ப்பப்பாழிகளுக்குள் தேவதாசி ஒருத்தி குழந்தை சித்தார்த்திநாவில் சேனைவைத்த விரல்ரேகையும் சித்திரம் கொள்ள குழந்தையின் மூடியவிரல்களும் இசைமாதின் விரல்களும் சேர்ந்து இசையில் கலக்கம்கொண்ட பெண் ரேகை சிசு ரேகையில் பின்னிப் படர்ந்த கரு இருட்டில் வரைந்த நிமிஷம் சரும நிறங்கள் பூசிய ஈரத்தில் பிசுபிசுக்கும் சைத்ரீகரின் விரல்ஓவியத்திலிருந்து விடுபடவில்லை இன்னும். அதுபிக்குவின் கரம்போல தளிராய் தோன்றும். புத்தரின் கைபோல கிழக்கே நீளும். உலராத நிறங்களில் விரல்முனைப் பதிவுகள். விளிம்பில் நகக்கண்களில் ஓடும் உதிரவரி.

மொழியின் சாத்தியத்தை அதன் விளிம்புவரை சென்று பொருளின் அர்த்தத்தை விலகி பகுப்பாய்விலிருந்து பூமியே விடுபட்டு விட்டது. இப்புவி பல பிதிர்களையுடைய புராவஸ்து அதை கருத்துருவத்துள் அடக்கி அறிவுத்திமிழ்மீது சுழற்றி மனிதன் சுக்கத்தில் இடுக்கிக் கொள் ளாமல் மனிதனிடமிருந்தே பூமியை விடுவிக்க வேண்டியுள்ளது. மூளை ரசாயனக் கழிவில் மேற்குலகுக்குள் அடமானம் வைக்கப்பட்ட நதிகளை உருவி சுருள் வாளாகத் தீட்டும் தூயநீர் பளபளத்து நெஞ்சுக்குள் இறங்கும் ஏக்கம் அதிகமாகிவிட்டது இவ்வேளை. ஸ்பரி சவெளியின் உருமாற்றம் மொழியின் இருட்டில் ஓவியங்களாகத் தீட்டும் புனை பரப்பாக கர்ப்ப இருள் மூடியிருந்தது என்னை. சூல்விட்டு வெளிவர முடியாது இனி. சரித்திர நகல்காட்டில் வெட்டிய கலாச்சார அக அழிப்பு இலக்கிய சூழலாகிவிட்டிருக்கும் மீடியாவின் பன்முக கிரேன் களால் புல்டோஸ் செய்யப்பட்டு மீடியாநகரமாக உலகம் மாறி வருகிறது. எல்லா நகரங்களையும் பாழி சூழ்கிறது. இனிமீடியா தான்.

ஏனோ கலைஞனை இயற்கை எப்போதும் கைவிட்டதில்லை. பின்தொடரும் வரலாற்று அச்சு எந்திரப் புலன்வெளி காண்திரையாக மாற்றப்பட்டுவிட்ட நூதன சூழலில் விண்வலையால் மூடப்பட்ட போதும் அவற்றின் கண்ணிகளை விண்ணிலேயே அறுத்து காண்கண் களைக்கீறி இருட்டின் ஜனனவெளியில் ஓவியங்களின் ஸ்பரிசவாச னைகளை அஜந்தா இருளில் மொழிரூபமாக்குவேன். கலையின் நுண்


அலகுகள் வார்த்தையிலிருந்து உதிர அது உடைந்து நொறுங்கி குறுந் திரைகளின் செதில் செதிலாய் அந்தரத்தில் நீந்தி உயிரற்ற பாழியா கிறது. கண்வசமாகிவிடும் தொலைக்காட்சியாகி விட்டது எல்லாம். பிம்பக் கசிவின் கருமசகு நகரங்களைப் பூசியுள்ளது. என் அருமை விதிஷா மட்டும் கண்கள் படபடக்க இருட்டில் சிதறிய கலைகளைத் தேடுகிறாள். கண்ணிரின் வெப்பம். அருகே அவளைத் தொட நெருங்கு கிறது. ஞாபக மடிப்புக்குள் ஓடி ஓடிக் கலைத்து வீழ்கிறாள் அந்தப் பாலை வனத்தில்.

இருள்வரி ஓடும் ஒற்றை வார்த்தைக்கு சுயேச்சையான பல பொருள் வடிவங்கள் மாறி உருகும் கற்சிலைகளில் பாழி அலைகிறது சிதிலத்தில். நிலைபெயர்ந்த கற்கோளமாய் உருண்டு வட்டமாய் அந் தரத்தில் மிதந்து சுழல்கிறாள் பாழி. மொழியின் பிரபஞ்ச நுண் ணுணர்வில் மெலிந்து எடையற்று கிரகநிலையடைகிறாள். குரங்குப் பாலத்தில் அகதி நிழல் அசைகிறது. மஹாவம்சரின் கொடும்பகை எரித்த மடிப்பு ஏடுகளின் சீதளஓலைகள் லிபியுடன் தீக்கொழுவினார் நாவில் விஷம் ஏற்றி. 'ஆழித்தேரவன் அரக்கரை அழல் எழநோக்கி ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் ஊழிக்காலம் வந்து உற்றதோ? பாழித்தீச்சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் கவி சேரனும். இன்று மஹாவம்சர் பௌத்தப்பாழிகளில் தொல்நூல் எரித்த சாம்பல் பூசிய ஊழிக்காற்று அரித்தஉடல்கள் மறைந்து சூலிச் சிசு அறுத்தார் மனித நாகரீகத்தின் பேரால். ஈயரவைகள் துளைத்த எலும்புகளின் குமுறல். ஊழிக்கடை முடிவில் மஹாவம்சர் கொம் பூதினர். பாழிப்பறத்தலை எழுந்தது. பாழித்தோள் நெடும் படைக்கலம் பதாதியின் பகுதி. பாழிவன்கிரிகள் எலாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று பூழியில் உதிர விண்ணில் புடைத்து உறக்கிளர்ந்து பொங்கி ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதரமுழுதும் வீசும் ஊழி வெங்காற்று இது.பாழிவன்தடத்திசை சுமந்து ஓங்கிய பனைக்கை. பாழி நல்நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல் பல்பேர் ஊழிக்காலம் நின்று உலகுஎலாம் கல்லினும் உலவாது ஆழிவெஞ்சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் ஏழும் இந்நகர் சூழ்ந்தன. அயன்படையால்ராவணன் உயிர் குடித்தல் இன்று. பாழிமாகடலும் வெளிப்பாய்ந்ததால் ஊழிஞாயிறு மின்மினி ஒப்புற வாழி வெஞ்சுடர் பேர் இருள்வாரலே பாழி.

மொழிப்பின்னலைப் படிகஉடலாகப் பார்வைக்கு அப்பால் இருட்டில் நகரும் பெண்களின் உள்நோக்கிய கண்தூளில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்காலங்கள் நாவலில் இடம்மாறி பலஓட பெண்சூலில் வார்த்தைக் கூடு பிறரூபங்களை எடுத்து கதையாகும் ஜனனம். சூலினுள் உருளும் நீர்சிப்பிதான் வார்த்தை. கலை என்ற சூல்வாய் பிளந்து மணல் துகள் விரக்தியால் உலகை சூன்யமாக்கும் சுக்கில வெளி சுழற்சியில் சூலோடு சுற்றி இசைகொடுக்கும் முத்தாக மாறுகிறது வார்த்தை.


ருந்தேன். சமவெளியில் நீண்டு சலித்த பயண அலுப்பில் தூங்கி வழியும் தூரங்கள். ஆடுகள் மேய்த்தவாறு கருங்களியில் சாய்ந்து நாடோடி மறைந்த புல்லசைந்த வெளிமேல் மிதந்த காற்றில் சித்திரம் தீராத தில்வாரா நாணலில் வரைந்த மிருகக் கூட்டத்தை ஓடைகளில் உலவும் விதிஷாவின் துகில் படர்ந்தவெளிகூட வே ஸ்பரிசிக்கிறது பயணத்தை.

பிரிண்டபோட்ட மேற்கு ஓவியர்களின் புஸ்தகங்களுக்கிடையே அடைபட்டு அஜந்தாவை கண்களால் ஜெராக்ஸ் எடுக்கும் அந்நிய தேச யாத்ரீகர்களின் கேமரா ஒளி சிதைத்த கபாலச் சந்துகளில் விழுந்து கிடந்த ஓவியப்பள்ளியில் கீழ்திசை ஓவியம் சிறையிடப்பட்டு பூட்டிய அறைகளுக்குள் மறுபிரதி எடுக்கும் நகல்பெருக்கத்தை ஜஹாங்கீர் ஆர்ட் கேலரிகளில் கடைவிரித்த ஓவியர்களின் தாடியிலிருந்து வெகு தூரம் தள்ளி விடுபட்டிருந்த்து அஜந்தாவின் இருட்டு. 1999 டிசம்பர் 31 இரவில் எல்லோரா சமத்பாத்ரா சமணவிடுதியின் சமையலறையில் சுடப்பட்ட உலர்ந்த ரொட்டிகளுடன் பரிமாறப்பட்ட கடுந்தேனீரில் அடர்ந்த பார்சுவநாதரின் அகஇலைகளை ஸ்பரிசித்தேன் நடுவானில். சமண பௌத்த வெப்பம் தொட்ட. இரவு எல்லோரா குகைகள் முப்பத்திரெண்டில் நடந்து கொண்டிருந்த சிற்பங்களுக்கிடையில் இருட்டுக்குள் சிக்கியிருந்த என்னை கொரியப் பெண்கள் ஆறுபேர் உள்ளங்கை அசைத்து வெளிப்பட்ட விரல்களில் ஒளி நீண்டு தொட்ட புத்தரின் அகம் திறந்து காட்டினார்கள் ஓவியங்களில் உதிரும் ஜாதக மாலாவை. சிற்பங்களின் நாசியில் சுவாசித்தேன் இன்று. கொரிய யுவதிகள் ஈரமான பனியில் ஆரஞ்சு வாசனைகள் மிக்க இலைகளுடன் என்னை அழைத்த வேளை பிரிந்து விட்டோம் இருட்டில். தனிமையில் ஆழ்ந்து கனிந்த ஆயிரம் வருஷங்களின் முடிவில் கொரியப்பெண் விரல் முனை விளிம்பில் வரையப்பட்ட சாஞ்சி இமை மூடியிருந்தது. ஜனவரி முதல் நாளில் இரண்டாயிரம் மூடிய கார்க்கை திறந்து குடித்த அற்புத ஒயின் விதிஷாவின் வாசனையில் திராட்சை விளைச்சலின் மோசமான குளிரில் அத்தனை யுத்தங்களின் அழிவுக்கும் ஈடாக பூமி வழங்கியிருந்த திராட்சைத் தோட்டங்கள் உயிர்ச்சூழல் மாசுபடிந்த நதிகளைத் துடைத்துக் கொண்டிருந்தாள் விதிஷா. ரொம்ப நாள் வைத்திருந்து திறவாத பாட்டிலுக்குள் கருந்தோட்டத்தில் சாட்டன்ஸ் வரலாற்றுப் பூர்வமாகத் திறந்த சிமிழ்களில் இந்நாள் வழிகிறது.

துயரஉணர்வுகள் மேலோங்கி இசையில் கூடும் இச்சை ஜீவ ராசிகளின் மோகப்புயலாய் மாறுகிறது. அது புலனைவிட்டுத் தனித்து சுழன்று இசைப்புலத்துள் இச்சையின் அளவும் தன்மையும் ஜீவனின் உன்னதநோக்கங்களாகி பூதங்களோடு பூதமாக மாறிவிடும் ராவண இசையாகிறது. தேவதாசிகளிடமுள்ள உள்ளுணர்ச்சி இசையின் பாற் பட்ட சமுத்திரம். அது தன்வசத்தில் இயங்கி இசைச் சாகரத்தில் கட்டுக்கதைகளைப் போலவே சிருஷ்டிபூர்வமான விடுதலை. சமைய லறைகளில் அடைபட்டுப்போன புயல் இருட்டில் ஸ்பரிசவெளி


ஓவியங்களாக உருமாறி பிரைடாவின் வலிமிக்ககோடுகள் உலகைச் சூழ்கிறது இன்று. பூகம்பங்கள் புதிய நீர்சுனைகளை வெளிப்படுத்தும் போது பெண்மொழி ஒருசகாப்தத்தை வெளிக்கொணரும் வருகைக் கான நேரமிது. நெஞ்சுக் கூட்டில் வரைந்த நிஜத்தேயிலைகளின் வாசனை பரவ கோப்பைகள் ஏந்திக் கிழக்கிலிருந்து வருகிறாள் ஹிரோஷிமா. கோப்பைகளில் கீறிய மான் மற்றும் சாலமரங்களின் கிளை நீரை வாஞ்சிக்கும் பட்சிகள் இலைகளில் கிளைத்த நரம்பு களோடு ஓவியத் தாவரங்கள் பொம்மைகளின் செம்மண் மோனத்தில் நிறம்கசியும் தேனீர் சடங்கில் அமர்ந்திருந்த ஹிரோஷிமா கைகளை விரித்து விண் நோக்கி அலறுகிறாள். அழிவுகள் இப்படியாகத்தான் இருக்குமா? விநாசமான தெருக்களில் வடுமுகங்கள் கயாவரை நீளும் ரயில் வண்டித்தொடரில் அவள்முகம் சூரியரேகைகளுடன் மறைவதை பீஹார் ரயில்நிலையம் ஒன்றில் காத்திருந்த வேளை பனிரெண்டு வருஷங்கள் ஓடி இவ்வேளை மன்மாட் ஸ்டேஷன் பிளாட்பாரத் தூணில் சாய்ந்திருக்கும் வேளை கடந்து கொண்டிருக்கும் தபோவன் ரயிலில் அவள் முகம் திரும்ப எட்டிப்பார்த்தது ஜன்னலிலிருந்து என்னை. கோரத் தழும்புகளுடன் இதயத்தை முள்கிளைகளாய் கீறி நிர்கதியில் பிரிந்து செல்கிறது.

பௌத்த வெப்பப் பாழி தொட்ட இரவு எல்லோரா குகைக்குள் கொரிய யுவதிகளின் அகவெளிச்சத்தில் அவலோகிதீஸ்வரரின் இமைகள்.. மூடிய நெல்கீறலில் மெலிகிறார்கள் இருட்டில். அஜந்தாக் குகைத் தொடரில் உன்னதமடைந்த 1, 2, 16, 17, 19 குகைகளில் புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஜாதகக்கதைகளையும் இசை மகளிர் கூந்தல் அமைப்பில் வெகுநேரம் சுவாசித்துக் கொண்டிருந்துவிட்டேன். கணங்கள்சூழ உயிரும் விந்தையும் கொண்டு கையிலே தாமரை மலர் பிடித்து அமைதியில் உருகும் அவலோகிதர். மகளிர்புடைசூழ விண் பறக்கும் கந்தர்வர்களின் நிறம் தைலமாய் பிரபை கொள்ளும். பதினா றாவது குகையில் புத்தரின் சரித்திரத் தோற்றம் ஜாதகக் கணிப்பு, பள்ளிவாசம், தவம், ராஜகிருஹத்துக்குச் செல்லும் வழி. நளகிரியென்ற மதயானையைப் புத்தர் அடக்கும் தோற்றம். வர்ணங்களை வீசும் தந்தங்கள் கொண்டு யானைகளின் தலைவனான அந்த யானை பிடிக்கும் வேடர் முயற்சிபலிக்கவில்லை. அடுத்த யானை சுவரில் ஆறு தந்தங்களுடைய சதந்தன் போதி சாத்தவரே. வேடர்களின் நிலை கண்டு வருந்தி அது அவர்களுக்காக முன்வந்து தந்தங்களைத் தானே கொடுத்தது. அதனால் யானையும் மாண்டு வீழ்ந்தது. செய்தியை | அரசிக்கு அறிவித்தனர் வேடர்கள். வெறிகொண்ட மனம் மறைந்தது.. தன் முற்பிறப்பின் கணவனான யானை மாண்ட செய்தி இவளை மாளாத்துயரத்தில் ஆழ்த்தியது. கைகள் சோர்ந்து வீழ்ந்தாள். அருகிருப்| போர் நிறங்களாக வந்து தாங்க உடல் சோர்ந்து துவண்டு வீழ்ந்தாள் சித்திரத்தில். சதந்த ஜாதகம் எனும் இக்கதை அபூர்வ நிறம் பகிர்ந்து தொடரும் பிரமஹத்தியிலிருந்து தப்பிக்க ராமாயண்யுத்த முடிவில் சீதாவின் மணல்விரல்கள் அழிந்து அழிந்து இருகடல் கூடும் தனுஷ் கோடி முனையில் கடல்களின் புணர்பாகம் அருவாய் உருவாய் கரு நின்று திரட்டிய மணல்லிங்கம் ராவணகர்ப்பம்தான். உள்ளே உரிப் பொருளின் சூழ்நிலையில் கற்பகாலங்களை விழுங்கிய யாளிகளின் மூர்க்கம். கலையில் கூடி அடங்காத அறிவின் தெளிவை விலகி நழுவிப் போன கலைஞனுக்கு அடுத்த எட்டில் கால்வைத்துக் கொண்ட யாளி யாக உருமாறினார் மௌனி அவர் ஆண்டாளின் ஆலிங்கன ஊஞ்சலை தேவதாசிகளின் நரசிம்மஉரு என உணர்ந்த போது சற்றுவிலகி சாயை களில் பின்தொடர்ந்தார் கதைகளை. நெருங்க எரிந்துவிடும் நாட்டிய நிருத்தத்தில் பிரபஞ்சத்தின் சமநிலை. தொன்மத்தின் ஆழத்தில்ருத்ர பூமியில் விதைத்த நவதானி யத்தின்மீது ஏர்காலில் சுழலும் பருவச் சக்கரம் தான் தேவதாசி நரம்புகளில் இளகிய இசையும் கால- இட ரீதியான மயக்கமும் இலக்கணமென்றே கருதினார்கள். ஏடுகளின் ஆதாரஊற்றில் கணிகையின் தெரு. விரல்படக் கொதிக்கும் லாவா விருட்சம்.புராணத்தின் பிரவாஹத்தில் கணிகைவீட்டு மாடத்திலிருந்த பட்டுத் துகிலில் கத்தரிக்கப் பட்ட சித்திர இழைபின்னிய முத்துவயல் ஊடே நடந்துசெல்ல பிரபஞ்சகானமென தனம்மாளின் விரல்கள் வீணைமீது அமர்ந்ததும் வெல்வெட்பூச்சிகளாக அசைவதை யாளிகளின் ஆங்காரம் என இருட்டில் சீறி எழுந்து புருவங்களை நெறித்து, ஏன்... எங்கே..., எனக் கடல். கோடு படர்ந்த கண்களின் ஆழத்தில் கேட்டாள் தேவதாசி அது மௌனிக்கும் எட்டாத பிரபஞ்சகானம். தேவதாசியின் அக அமைதியின் நுண் இசை புல்வெளி படர்ந்து விரல்களாய் எழுந்து ஐந்து நிலங்களில் பிரிந்து ஒவ்வொரு நிலமும் ஓர் கன்னி உருவெடுத்து சிறகுடன் பறந்து ஏழுநிற இறகினால் வெளிப்பட்ட நாவலில் இசைக் குறிப்புகள் மயங்குகின்றன.

நாவல்வடிவம் ஏழுபுத்தகங்களின் மடிப்பில் பொருளுடைய குணத்தை கடினமான கலைக்கு அதிகபட்சமாக நெருங்கி புறத் தோற்றங்களை உதறி எறிகிறது மொழி. மூன்றும் ஏழுமாகி இரு வரியில் அடங்கிய உருவத்திலுள்ள வெற்றிடம்தான் நூதன கலை. மொழியின் ஆழத்துக்குக் குடைந்து பொருட்களை வெளியேற்றிப் படிக உடலாகி ஒளித்துவைக்கப்பட்ட வார்த்தையின் உப்பினுள் ரஸ ஓட்டத்தை மொழியாக்கும் சித்தநிலை. ஏதுமில்லை வார்த்தைக்குள். சாயைகளின் கணிதார்த்த பரிமாணம். பொருளுமில்லை. உற் குடைந்த வெறுங்கோப்பைகளில் நிரம்பியுள்ள எடுக்கப்பட்டுவிட்ட வஸ்துவின் குணரூபம் மாறுபடும் இலைவாட்டத்தில் உயிர்களையும் மெய்யையொத்த உலகையும் உயிர்மெய்யொத்த உயிரோடு கூடிய உடலையும் நுதல்வியர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பாக்கி ஆருயிர் களின் அறிவு அனாதி மறைப்பை நீக்கி வினையறுத்த ஆயிரத்து முன்னூற்றிமுப்பது புறாக்களின் கால்களில் கட்டிய சீதளஓலைகளில் தனித்தனியாய் கீறிய குந்தகுந்தரின் தர்க்கம் தூதுஓலைகளால் பறக்க விட்ட அறிவின் சிறகு ஒளிதிறந்த சிந்தனைச் சாளரங்களில் ஒளி இறகு பற்றி விடிவுக்கான வேளை. சங்கப்பலகைகளில் பின்னே அமர்ந்த வெற்றிலைமென்ற கவிகள் பதறியோட அழைத்தது ஒளி விசிறி. 'உற்ற நோய் நோற்றல் உயிர்க்குறுகண் செய்யாமை' கேட்டு நீலகேசி உரை வகுத்த சமயதிவாகரமுனி 'பொய்யும் வாய்மை இடத்த புரை தீர்த்ததை உயிர்காப்பு' என்றான்.

பிண்டிக்கொழுநிழல் இருந்த ஆதியின் தோற்றத்து அறிவனை ரிஷபரைக்கூறும் முதற்குறளில் 'பக' என்றால் யஸஸ், புகழ், தருமம், சுபாவாதிசயம், ஐஸ்வர்யம், முக்தி, வீர்யம் என ரிஷபரில் பதிந்த வார்த்தை பலபொருளாய் பரிமாணம் காட்டும். விஸ்வகோஸா நூலில் முதன்முதலில் எழுதும் கலை, எழுத்துக்கள், பிராமி வடிவத் தையும் கண்டுபிடித்தவர் ரிஷபரே எனச் சிந்துவெளிச் சிதைவுகளில் காளை உரு ஒடியது. தத்துவார்த்த சூத்திரத்திற்கு உரை எழுதிய அளகங்கர் கூற்றில் ஆதிசப்தம் அனேக பொருள்களையுடைய தெனவும் சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்றுவரும் என 'அகாராதயோ வர்ணா ரிஷபா தயஸ் தீர்த்தகராஇதி' சுலோகத்தின் எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன தீர்த்தங்கரர்கள் ரிஷபரை முதலாக உடையர் என்று காட்டும்.

அகர உயிர் போல் அறிவாகி எங்கும் சொல் விரிகிறது பொறி யாகச் சுழன்று. பூமிக்கு அடியில் ஓடும் கல்அடுக்குகளில் கிளைத்த நுரையீரல் திராட்சைக் கொத்தாகியிருந்தது. ரிஷபக்கூட்டத்தை மேய்த்தவாறு ஆபுமலையின் விருட்சத்தில் சாய்ந்து காலத்தை அளந்து இசைக்கருவிகளின் ஒலிஅலகை சுரமண்டலமாக்கிய சமணர் நிலத் தடியில் கசியும் ஒவ்வொரு திராட்சை ரஸத்தையும் எடுத்துக் கொடுத்த இரண்டாயிரம் வருஷ வாசனைகள் திறந்தபோது என் இதயம் தூள் தூளாகிச் சிதறி கோப்பைகளில் ரொம்ப வருஷங்களுக்கு முந்திய கொடி முந்திரியில் ஊறிஊறி வயதான ரஸத்தின் வெளுப்பான நிறங்கள் அடங்கிய கோப்பைகள்தான் சுலையாக இருக்கும். உற் குடைந்த வெறுங்கோப்பைகளை நெஞ்சுக் கூட்டில்பதித்தேன். ரத்தத்திலுள்ள தாவரங்கள் நிரம்பிவழிகிறது நாவலுக்குள்.

கடுங்குளிரில் தனிமையில் பழுத்திருந்த கணம் ஒன்று காலத்தை விலகி நகர்கிறது. இவ்வேளை தில்வாரா ஸ்வேதாம்பரர் தளிக் கோடு களில் உயிர்க்கரு சூட்சுமக்கலை பொருந்திய ஒப்பற்ற இருட்டில் சிற்பங்களை நோக்க வியாபித்த புல்வெளியில் ரிஷபம் ஒன்று குனிந்து கண்களில் நீர் கசிய நிற்கிறது. மறதியில் ஓடும் சாபர்மதிரயில் தொட ருக்குள் மான்கள்மேயும் ஆபுமலைகள் கருதுளைத்து ஊறும் நதி. ரயில் பெட்டிகளுக்குள் கண்ணாடிகள் மூடித் தனித்திருக்கிறேன். குளிரும் கண்ணாடி களில் பனித்திரை துடைத்து வெளிபார்த்த வேளை ஜன்ன ….

152

214