தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, June 25, 2011


வலை

 பிரமிள்

மாலைக் கதிர் வாள் வெட்டு
பரிதிப் புறாத் துடிப்பு
நெஞ்சின் பால் வெளiயில்
பாலைத் தகட்டுப்
படபடப்பு.
நடை தளர்ந்தது.
இது எல்லை?
ஊத்ந்த தொடர்ந்த நிழலின்
விரல் விளiம்பு.
எதிரே
நில விரிப்பு - வாழ்வு
வலை விரிப்பா? - வாழ்வா?
திரும்பிப் பார்த்தேன்.
தசைத்திரள் உருகி வழிந்து
தார் பாறையாக நீண்டு
வான் கடல் படுகைத்
தொடுவான் வரை கிடந்த
நிழலின் இழிப்பு.
கால் விரல் கண்ணியில்
நான்.


கேள்விகள்



தாய்ப்பரிதி ஆகர்ஷண
முலையுரிஞ்சும் பூமிக்கு
வானெல்லாம் தொட்டிலோ?

சந்திரனில் வழிகின்ற
விந்தின்னும் கருவுற்றுத்
திரளாத காரணமென்?

தீ முளைத்துக் காற்று எனும்
பூமியிலே வேரைவிட்டால்
பூக்கிறது எத்திசையில்?

தெரியாது?

அறிவின் குரலடைத்த
கவிதைக் கவளத்தைக்
கக்கி எறிந்துவிடு.
ஞானத்துப் பயணத்தில்
இடறும் கற்பனையின்கல்
எட்டி உதைத்துப் போ.

மூளை மலர்த்தடத்தில்
ஏதோ நாற்றமிது
மூக்கைப் பொத்தி நட.

அப்பால்....

பதிலின் இழையற்ற
கேள்வித் திரையகலும்...
பாதை எதிர் செல்லும்..


பிரமிள் கவிதைகள்
தொகுப்பு: கால சுப்ரமணியம்
லயம் வெளியீடு
அக்டோபர், 1998
327 பக்கங்கள்

 Thanks R.Mahalingam,Bangalore 
mahauma@hotmail.com

பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/?prd=&page=products&id=6091 வாங்கலாம்.


No comments:

Post a Comment