தளத்தைப் பற்றி
ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com
Saturday, June 21, 2025
பாழி - கோணங்கி
—
மயங்கும் பாலை உருஆகிவியர்க்கத் தோன்றிய உப்பு மூன்றாவது அகப்பரப்பாகி கருக்கில் பூச்சி உருஆன பாழி மூடிய இருசுழிக் கோடு. குழந்தையின் கால்கள் கர்ப்பத்தில் புறளும் பிறவா முன்மைக்குள் தவழ்கிறாள் பாழி. நாவலில் மறைத்துவைக்கப்பட்ட ஏழ்கடல் ஏழிசை ஏழுகன்யா ஏழ்பாலை ஏழும் ஏழுமாய் ஈரேழு மேல் கீழ் அடுக்கிய புனைவு உலகங்களின் மரபுநில வெளிதான் சமணம். என புராணத் திலிருந்து கதையின் புரா வஸ்துகளின் மறைபொருள் ரூபத்திலிருந்து எடுக்கப்பட்டபின் அவற்றின் கணிதம் தான் வார்த்தையாகியிருக்கக் கூடும். புவர்லோகம் அரவு புனை நிழல்கள் ஆடும் நாகலா ஓர் கற்பனை நகரமாக நாவலில் அபூர்வ இணைப்புகள் கொண்ட வார்த்தை நாகரம். நத்தைக்கூடு மாதிரியோ ஓர்கிரசுத்தின் மிதத்தல் மாதிரியோ ஓர் இலைநரம்பின் கிளைத்தல் மாதிரியோ நாகரம் எனும் தனித்தீவைச் சூழ்ந்த இசைத்தாவரங்கள் ரத்தத்திலிருந்து மண்டிப் பரவிமொழிவசத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.
அ - ரூபம் கொண்ட சொல்வனத்திலே வேட்டையாடி நீரை வாஞ்சித்து இந்த ஏழு ஏடுகளுக்குள் பிளந்து ஓடும் ஓடைகளுக்கு வந்திருக்கும் வேட வாசகா!
உருவற்ற மிருகங்கள் மொழி உருவெடுத்து கர்ஜிப்பதால் நாவலின் பிதிர் வனத்தில் புராதனமான வாசகன் ஒருவனே ஏடுகளுக்கு முந்திய காலத்திலிருந்தே தொடருகிறான் என்னை. கதையை வாஞ்சித்துக் கதறும்மான்களை விட்டுவிடு. தனி உலகமாக நாவலின் புராவஸ்துகள் புனைவுகளில் இயங்கி பிதிர்கோடு வரையும் கலைமடிப்பில் வெளி மேல் வெளி அடுக்கிய புஸ் தகம். இந்தப்பக்கங்கள் எந்த வெளியில் நிழல்விழ நகரும் மறுகோடு குறுக்குவெட்டில் உணரும்வேறு உருவம். முரண் மடிப்பில் கலை கொள்ளும் வெற்றிடம் அறிவின் நோக்கமான பிடியிலிருந்து வெளியேறி இருளில் புதைகிறது. கண் தெரியாதோர் வரைந்த தொடும் வெளி குகைத்தொடராய் இருக்கக்கூடும். உள்ளே சாயைகள் படிந்த ஓவியங்களில் உதிரும் நிறங்கள் கலையின் தொடு முனையில் மொழி அதிர்வுகொள்ளும். மயக்கம் மேலோங்கிய கருப் பொருளில் நிலங்கள் யாவும் சாய்ந்து கிடக்கும் மோனம். என் கைகளில் வடித்த மொழியின் படிகக் கிண்ணங்களை ஏந்தி காலவெளியில் காத்திருக்கிறேன் வாச கனுக்காக. அவனோடு உதிரத்தில் பாயும் என் விதிஷாவை அவள் கூந்தல் வாசனைமிக்க இந்நாவலை ஓர் இலை நுனியில் கிளைத்த நரம்பென இந்தயுகத்தின் அபூர்வச் சிறுமியை வாசக வெளியில் விட்டுப்பிரிகிறேன் கண் இமைத்துக் காண்போர் பழித்தாலும்.
சாஞ்சி: விதிஷா
4. 1. 2000
கோணங்கி
தானியப்பாழி
பாழி
வந்து கொண்டிருந்தான் ஒற்றைப்பல் கழுதைமேல் ஜிப்ஸிகளின் டேரட் கார்டுகளைக் குலுக்கியவாறு வாயில் எச்சில் ஒழுகும் முட்டாள் காமோஸ்டாவோ.
மேற்குக் கிழக்கு என காமோஸ் என்றும் டாவோ என்றும் இரு நபர்களாய் பிரிந்து கதை சொல்பவன் குருடனாகவும் கேட்பவன் ரோகியாகவும் சொல்வனத்துக்குள் உரையாடலை தொடர்ந்த வாறு ஏழு ஏடுகளைத் திறக்கும் நூதன ஆரூடத்தைப் போட்டு டேரர் கார்டுகளில் உள்ள நகரங்களின் பிதிர்க் கதைகளைச் சொல்லி உலகப் பிரசித்தி பெற்ற "ப்ரீகான் புனிதவாளுடன் வந்து கொண்டி ருந்தான் சாம்பல் பயணி காமோஸ்டாவோ.
அவன் கதை சொல்லும் இரவில் இரு நபர்களாகப் பிரிந்து குருடர் களின் அசுப்பரப்பில் அலைவுறும் விளோத ரோகியவன்.
எரிது நகரின் ரஸவாதியால் ஒரே மனிதனாக தைக்கப்பட்ட இரு உடல் கொண்ட காமோஸ்டாவோ டேரட் கார்டுகளில் திறக்கும்
தாளியாளின் கரிசல்ஏடு, குருடர்களின் கண்ஏடு,
தேவதாசிகளின் கேசஅகவல் ஏடு,
வேடபுராணஏடு,
ரஸவாதியின் களிஏடு,
சிற்பவயல்- சித்திரவயல் - கண்ணாடிவயல் ஏடு, போர்ச்சுக்கீசியபுனிதரின்'வில்லேஜ் ஆஃப் தீவ்ஸ்' ஏடு
ஆகிய ஏழு புஸ்தகங்களைத் தேடி வந்து கொண்டிருந்தான் டாட்டில்" கழுதை மேல்.
ப்ரீகான் எனும் புனிதவாளை இந்திய நாவித மருத்துவ மரபில் தோன்றிய கம்போடிய பிக்குகள் இன்றும் பக்தியோடு மந்திர சக்தி மிக்க இந்த வாளைப் பாதுகாத்து வர மிகச்சிறிய அளவு துரு ஏறினால் கூட அது கம்போடியக் கலாச்சாரத்திற்கும் கட்டிடக்கலைக்கும் தேடு விளையக்கூடும். தேசத்திற்கு விநாசத்தை ஏற்படுத்தும் என எச்சரிக் கையுடன் இவ்வாளின் மீதே எழுதி வைத்தார்கள் கம்போடிய நாவிதர்கள். ஜிப்ஸிகளின் டேரட் கார்டில் உள்ள ஆரூடத்தின்படி காமோஸ்டாவோ கையில் சிக்கியது புனிதவாள். அது அவனுக்கே ஆபத்தாக முடியும் என்று சொன்னது வாள். ** அரிஸ்டாட்டில்.
இருட்டில் தத்தளிக்க துவண்டு வீழ்ந்த அரசாணியின் ஓவியம் கூடவே வருகிறது. மனம் குலையும் தாவரங்களின் வாட்டம். சம்பத்துகளை யெல்லாம் தானமிட்ட வஸந்தரனின் சரித்திர ஓவியம். கையில் கல் ஆடிகொண்டு ஒருகாளை வளைந்து ஒயிலாக நின்று தன்னை அலங் கரித்து நிற்கும் யுவதியின் தூரத்தில் வெற்றிடமாக விரியும் நிறங்கள். ஞானம் பெற்று புத்தராகத் திரும்பிவிடும் தன் தந்தை யிடம் ராகுலன் தன்பங்கு கேட்கும் ஓவியம். எல்லா நிறங்களுக்கும் அப்பால் கசிந்து பொங்கிய இருட்டு ஓவியக் குகைத்தொடரில். மெல்லிய வெண் சுதை பூசிய ஈரத்தில் நிறங்கள் வீசி எழுந்த உடபாறைகளுக்கிடையில் விரியும் ஓவிய ஏடு தானே திறந்து புரள்கிறது.
அஜந்தாவின் கர்ப்பப்பாழிகளுக்குள் தேவதாசி ஒருத்தி குழந்தை சித்தார்த்திநாவில் சேனைவைத்த விரல்ரேகையும் சித்திரம் கொள்ள குழந்தையின் மூடியவிரல்களும் இசைமாதின் விரல்களும் சேர்ந்து இசையில் கலக்கம்கொண்ட பெண் ரேகை சிசு ரேகையில் பின்னிப் படர்ந்த கரு இருட்டில் வரைந்த நிமிஷம் சரும நிறங்கள் பூசிய ஈரத்தில் பிசுபிசுக்கும் சைத்ரீகரின் விரல்ஓவியத்திலிருந்து விடுபடவில்லை இன்னும். அதுபிக்குவின் கரம்போல தளிராய் தோன்றும். புத்தரின் கைபோல கிழக்கே நீளும். உலராத நிறங்களில் விரல்முனைப் பதிவுகள். விளிம்பில் நகக்கண்களில் ஓடும் உதிரவரி.
மொழியின் சாத்தியத்தை அதன் விளிம்புவரை சென்று பொருளின் அர்த்தத்தை விலகி பகுப்பாய்விலிருந்து பூமியே விடுபட்டு விட்டது. இப்புவி பல பிதிர்களையுடைய புராவஸ்து அதை கருத்துருவத்துள் அடக்கி அறிவுத்திமிழ்மீது சுழற்றி மனிதன் சுக்கத்தில் இடுக்கிக் கொள் ளாமல் மனிதனிடமிருந்தே பூமியை விடுவிக்க வேண்டியுள்ளது. மூளை ரசாயனக் கழிவில் மேற்குலகுக்குள் அடமானம் வைக்கப்பட்ட நதிகளை உருவி சுருள் வாளாகத் தீட்டும் தூயநீர் பளபளத்து நெஞ்சுக்குள் இறங்கும் ஏக்கம் அதிகமாகிவிட்டது இவ்வேளை. ஸ்பரி சவெளியின் உருமாற்றம் மொழியின் இருட்டில் ஓவியங்களாகத் தீட்டும் புனை பரப்பாக கர்ப்ப இருள் மூடியிருந்தது என்னை. சூல்விட்டு வெளிவர முடியாது இனி. சரித்திர நகல்காட்டில் வெட்டிய கலாச்சார அக அழிப்பு இலக்கிய சூழலாகிவிட்டிருக்கும் மீடியாவின் பன்முக கிரேன் களால் புல்டோஸ் செய்யப்பட்டு மீடியாநகரமாக உலகம் மாறி வருகிறது. எல்லா நகரங்களையும் பாழி சூழ்கிறது. இனிமீடியா தான்.
ஏனோ கலைஞனை இயற்கை எப்போதும் கைவிட்டதில்லை. பின்தொடரும் வரலாற்று அச்சு எந்திரப் புலன்வெளி காண்திரையாக மாற்றப்பட்டுவிட்ட நூதன சூழலில் விண்வலையால் மூடப்பட்ட போதும் அவற்றின் கண்ணிகளை விண்ணிலேயே அறுத்து காண்கண் களைக்கீறி இருட்டின் ஜனனவெளியில் ஓவியங்களின் ஸ்பரிசவாச னைகளை அஜந்தா இருளில் மொழிரூபமாக்குவேன். கலையின் நுண்
அலகுகள் வார்த்தையிலிருந்து உதிர அது உடைந்து நொறுங்கி குறுந் திரைகளின் செதில் செதிலாய் அந்தரத்தில் நீந்தி உயிரற்ற பாழியா கிறது. கண்வசமாகிவிடும் தொலைக்காட்சியாகி விட்டது எல்லாம். பிம்பக் கசிவின் கருமசகு நகரங்களைப் பூசியுள்ளது. என் அருமை விதிஷா மட்டும் கண்கள் படபடக்க இருட்டில் சிதறிய கலைகளைத் தேடுகிறாள். கண்ணிரின் வெப்பம். அருகே அவளைத் தொட நெருங்கு கிறது. ஞாபக மடிப்புக்குள் ஓடி ஓடிக் கலைத்து வீழ்கிறாள் அந்தப் பாலை வனத்தில்.
இருள்வரி ஓடும் ஒற்றை வார்த்தைக்கு சுயேச்சையான பல பொருள் வடிவங்கள் மாறி உருகும் கற்சிலைகளில் பாழி அலைகிறது சிதிலத்தில். நிலைபெயர்ந்த கற்கோளமாய் உருண்டு வட்டமாய் அந் தரத்தில் மிதந்து சுழல்கிறாள் பாழி. மொழியின் பிரபஞ்ச நுண் ணுணர்வில் மெலிந்து எடையற்று கிரகநிலையடைகிறாள். குரங்குப் பாலத்தில் அகதி நிழல் அசைகிறது. மஹாவம்சரின் கொடும்பகை எரித்த மடிப்பு ஏடுகளின் சீதளஓலைகள் லிபியுடன் தீக்கொழுவினார் நாவில் விஷம் ஏற்றி. 'ஆழித்தேரவன் அரக்கரை அழல் எழநோக்கி ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் ஊழிக்காலம் வந்து உற்றதோ? பாழித்தீச்சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் கவி சேரனும். இன்று மஹாவம்சர் பௌத்தப்பாழிகளில் தொல்நூல் எரித்த சாம்பல் பூசிய ஊழிக்காற்று அரித்தஉடல்கள் மறைந்து சூலிச் சிசு அறுத்தார் மனித நாகரீகத்தின் பேரால். ஈயரவைகள் துளைத்த எலும்புகளின் குமுறல். ஊழிக்கடை முடிவில் மஹாவம்சர் கொம் பூதினர். பாழிப்பறத்தலை எழுந்தது. பாழித்தோள் நெடும் படைக்கலம் பதாதியின் பகுதி. பாழிவன்கிரிகள் எலாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று பூழியில் உதிர விண்ணில் புடைத்து உறக்கிளர்ந்து பொங்கி ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதரமுழுதும் வீசும் ஊழி வெங்காற்று இது.பாழிவன்தடத்திசை சுமந்து ஓங்கிய பனைக்கை. பாழி நல்நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல் பல்பேர் ஊழிக்காலம் நின்று உலகுஎலாம் கல்லினும் உலவாது ஆழிவெஞ்சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் ஏழும் இந்நகர் சூழ்ந்தன. அயன்படையால்ராவணன் உயிர் குடித்தல் இன்று. பாழிமாகடலும் வெளிப்பாய்ந்ததால் ஊழிஞாயிறு மின்மினி ஒப்புற வாழி வெஞ்சுடர் பேர் இருள்வாரலே பாழி.
மொழிப்பின்னலைப் படிகஉடலாகப் பார்வைக்கு அப்பால் இருட்டில் நகரும் பெண்களின் உள்நோக்கிய கண்தூளில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்காலங்கள் நாவலில் இடம்மாறி பலஓட பெண்சூலில் வார்த்தைக் கூடு பிறரூபங்களை எடுத்து கதையாகும் ஜனனம். சூலினுள் உருளும் நீர்சிப்பிதான் வார்த்தை. கலை என்ற சூல்வாய் பிளந்து மணல் துகள் விரக்தியால் உலகை சூன்யமாக்கும் சுக்கில வெளி சுழற்சியில் சூலோடு சுற்றி இசைகொடுக்கும் முத்தாக மாறுகிறது வார்த்தை.
ருந்தேன். சமவெளியில் நீண்டு சலித்த பயண அலுப்பில் தூங்கி வழியும் தூரங்கள். ஆடுகள் மேய்த்தவாறு கருங்களியில் சாய்ந்து நாடோடி மறைந்த புல்லசைந்த வெளிமேல் மிதந்த காற்றில் சித்திரம் தீராத தில்வாரா நாணலில் வரைந்த மிருகக் கூட்டத்தை ஓடைகளில் உலவும் விதிஷாவின் துகில் படர்ந்தவெளிகூட வே ஸ்பரிசிக்கிறது பயணத்தை.
பிரிண்டபோட்ட மேற்கு ஓவியர்களின் புஸ்தகங்களுக்கிடையே அடைபட்டு அஜந்தாவை கண்களால் ஜெராக்ஸ் எடுக்கும் அந்நிய தேச யாத்ரீகர்களின் கேமரா ஒளி சிதைத்த கபாலச் சந்துகளில் விழுந்து கிடந்த ஓவியப்பள்ளியில் கீழ்திசை ஓவியம் சிறையிடப்பட்டு பூட்டிய அறைகளுக்குள் மறுபிரதி எடுக்கும் நகல்பெருக்கத்தை ஜஹாங்கீர் ஆர்ட் கேலரிகளில் கடைவிரித்த ஓவியர்களின் தாடியிலிருந்து வெகு தூரம் தள்ளி விடுபட்டிருந்த்து அஜந்தாவின் இருட்டு. 1999 டிசம்பர் 31 இரவில் எல்லோரா சமத்பாத்ரா சமணவிடுதியின் சமையலறையில் சுடப்பட்ட உலர்ந்த ரொட்டிகளுடன் பரிமாறப்பட்ட கடுந்தேனீரில் அடர்ந்த பார்சுவநாதரின் அகஇலைகளை ஸ்பரிசித்தேன் நடுவானில். சமண பௌத்த வெப்பம் தொட்ட. இரவு எல்லோரா குகைகள் முப்பத்திரெண்டில் நடந்து கொண்டிருந்த சிற்பங்களுக்கிடையில் இருட்டுக்குள் சிக்கியிருந்த என்னை கொரியப் பெண்கள் ஆறுபேர் உள்ளங்கை அசைத்து வெளிப்பட்ட விரல்களில் ஒளி நீண்டு தொட்ட புத்தரின் அகம் திறந்து காட்டினார்கள் ஓவியங்களில் உதிரும் ஜாதக மாலாவை. சிற்பங்களின் நாசியில் சுவாசித்தேன் இன்று. கொரிய யுவதிகள் ஈரமான பனியில் ஆரஞ்சு வாசனைகள் மிக்க இலைகளுடன் என்னை அழைத்த வேளை பிரிந்து விட்டோம் இருட்டில். தனிமையில் ஆழ்ந்து கனிந்த ஆயிரம் வருஷங்களின் முடிவில் கொரியப்பெண் விரல் முனை விளிம்பில் வரையப்பட்ட சாஞ்சி இமை மூடியிருந்தது. ஜனவரி முதல் நாளில் இரண்டாயிரம் மூடிய கார்க்கை திறந்து குடித்த அற்புத ஒயின் விதிஷாவின் வாசனையில் திராட்சை விளைச்சலின் மோசமான குளிரில் அத்தனை யுத்தங்களின் அழிவுக்கும் ஈடாக பூமி வழங்கியிருந்த திராட்சைத் தோட்டங்கள் உயிர்ச்சூழல் மாசுபடிந்த நதிகளைத் துடைத்துக் கொண்டிருந்தாள் விதிஷா. ரொம்ப நாள் வைத்திருந்து திறவாத பாட்டிலுக்குள் கருந்தோட்டத்தில் சாட்டன்ஸ் வரலாற்றுப் பூர்வமாகத் திறந்த சிமிழ்களில் இந்நாள் வழிகிறது.
துயரஉணர்வுகள் மேலோங்கி இசையில் கூடும் இச்சை ஜீவ ராசிகளின் மோகப்புயலாய் மாறுகிறது. அது புலனைவிட்டுத் தனித்து சுழன்று இசைப்புலத்துள் இச்சையின் அளவும் தன்மையும் ஜீவனின் உன்னதநோக்கங்களாகி பூதங்களோடு பூதமாக மாறிவிடும் ராவண இசையாகிறது. தேவதாசிகளிடமுள்ள உள்ளுணர்ச்சி இசையின் பாற் பட்ட சமுத்திரம். அது தன்வசத்தில் இயங்கி இசைச் சாகரத்தில் கட்டுக்கதைகளைப் போலவே சிருஷ்டிபூர்வமான விடுதலை. சமைய லறைகளில் அடைபட்டுப்போன புயல் இருட்டில் ஸ்பரிசவெளி
ஓவியங்களாக உருமாறி பிரைடாவின் வலிமிக்ககோடுகள் உலகைச் சூழ்கிறது இன்று. பூகம்பங்கள் புதிய நீர்சுனைகளை வெளிப்படுத்தும் போது பெண்மொழி ஒருசகாப்தத்தை வெளிக்கொணரும் வருகைக் கான நேரமிது. நெஞ்சுக் கூட்டில் வரைந்த நிஜத்தேயிலைகளின் வாசனை பரவ கோப்பைகள் ஏந்திக் கிழக்கிலிருந்து வருகிறாள் ஹிரோஷிமா. கோப்பைகளில் கீறிய மான் மற்றும் சாலமரங்களின் கிளை நீரை வாஞ்சிக்கும் பட்சிகள் இலைகளில் கிளைத்த நரம்பு களோடு ஓவியத் தாவரங்கள் பொம்மைகளின் செம்மண் மோனத்தில் நிறம்கசியும் தேனீர் சடங்கில் அமர்ந்திருந்த ஹிரோஷிமா கைகளை விரித்து விண் நோக்கி அலறுகிறாள். அழிவுகள் இப்படியாகத்தான் இருக்குமா? விநாசமான தெருக்களில் வடுமுகங்கள் கயாவரை நீளும் ரயில் வண்டித்தொடரில் அவள்முகம் சூரியரேகைகளுடன் மறைவதை பீஹார் ரயில்நிலையம் ஒன்றில் காத்திருந்த வேளை பனிரெண்டு வருஷங்கள் ஓடி இவ்வேளை மன்மாட் ஸ்டேஷன் பிளாட்பாரத் தூணில் சாய்ந்திருக்கும் வேளை கடந்து கொண்டிருக்கும் தபோவன் ரயிலில் அவள் முகம் திரும்ப எட்டிப்பார்த்தது ஜன்னலிலிருந்து என்னை. கோரத் தழும்புகளுடன் இதயத்தை முள்கிளைகளாய் கீறி நிர்கதியில் பிரிந்து செல்கிறது.
பௌத்த வெப்பப் பாழி தொட்ட இரவு எல்லோரா குகைக்குள் கொரிய யுவதிகளின் அகவெளிச்சத்தில் அவலோகிதீஸ்வரரின் இமைகள்.. மூடிய நெல்கீறலில் மெலிகிறார்கள் இருட்டில். அஜந்தாக் குகைத் தொடரில் உன்னதமடைந்த 1, 2, 16, 17, 19 குகைகளில் புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஜாதகக்கதைகளையும் இசை மகளிர் கூந்தல் அமைப்பில் வெகுநேரம் சுவாசித்துக் கொண்டிருந்துவிட்டேன். கணங்கள்சூழ உயிரும் விந்தையும் கொண்டு கையிலே தாமரை மலர் பிடித்து அமைதியில் உருகும் அவலோகிதர். மகளிர்புடைசூழ விண் பறக்கும் கந்தர்வர்களின் நிறம் தைலமாய் பிரபை கொள்ளும். பதினா றாவது குகையில் புத்தரின் சரித்திரத் தோற்றம் ஜாதகக் கணிப்பு, பள்ளிவாசம், தவம், ராஜகிருஹத்துக்குச் செல்லும் வழி. நளகிரியென்ற மதயானையைப் புத்தர் அடக்கும் தோற்றம். வர்ணங்களை வீசும் தந்தங்கள் கொண்டு யானைகளின் தலைவனான அந்த யானை பிடிக்கும் வேடர் முயற்சிபலிக்கவில்லை. அடுத்த யானை சுவரில் ஆறு தந்தங்களுடைய சதந்தன் போதி சாத்தவரே. வேடர்களின் நிலை கண்டு வருந்தி அது அவர்களுக்காக முன்வந்து தந்தங்களைத் தானே கொடுத்தது. அதனால் யானையும் மாண்டு வீழ்ந்தது. செய்தியை | அரசிக்கு அறிவித்தனர் வேடர்கள். வெறிகொண்ட மனம் மறைந்தது.. தன் முற்பிறப்பின் கணவனான யானை மாண்ட செய்தி இவளை மாளாத்துயரத்தில் ஆழ்த்தியது. கைகள் சோர்ந்து வீழ்ந்தாள். அருகிருப்| போர் நிறங்களாக வந்து தாங்க உடல் சோர்ந்து துவண்டு வீழ்ந்தாள் சித்திரத்தில். சதந்த ஜாதகம் எனும் இக்கதை அபூர்வ நிறம் பகிர்ந்து தொடரும் பிரமஹத்தியிலிருந்து தப்பிக்க ராமாயண்யுத்த முடிவில் சீதாவின் மணல்விரல்கள் அழிந்து அழிந்து இருகடல் கூடும் தனுஷ் கோடி முனையில் கடல்களின் புணர்பாகம் அருவாய் உருவாய் கரு நின்று திரட்டிய மணல்லிங்கம் ராவணகர்ப்பம்தான். உள்ளே உரிப் பொருளின் சூழ்நிலையில் கற்பகாலங்களை விழுங்கிய யாளிகளின் மூர்க்கம். கலையில் கூடி அடங்காத அறிவின் தெளிவை விலகி நழுவிப் போன கலைஞனுக்கு அடுத்த எட்டில் கால்வைத்துக் கொண்ட யாளி யாக உருமாறினார் மௌனி அவர் ஆண்டாளின் ஆலிங்கன ஊஞ்சலை தேவதாசிகளின் நரசிம்மஉரு என உணர்ந்த போது சற்றுவிலகி சாயை களில் பின்தொடர்ந்தார் கதைகளை. நெருங்க எரிந்துவிடும் நாட்டிய நிருத்தத்தில் பிரபஞ்சத்தின் சமநிலை. தொன்மத்தின் ஆழத்தில்ருத்ர பூமியில் விதைத்த நவதானி யத்தின்மீது ஏர்காலில் சுழலும் பருவச் சக்கரம் தான் தேவதாசி நரம்புகளில் இளகிய இசையும் கால- இட ரீதியான மயக்கமும் இலக்கணமென்றே கருதினார்கள். ஏடுகளின் ஆதாரஊற்றில் கணிகையின் தெரு. விரல்படக் கொதிக்கும் லாவா விருட்சம்.புராணத்தின் பிரவாஹத்தில் கணிகைவீட்டு மாடத்திலிருந்த பட்டுத் துகிலில் கத்தரிக்கப் பட்ட சித்திர இழைபின்னிய முத்துவயல் ஊடே நடந்துசெல்ல பிரபஞ்சகானமென தனம்மாளின் விரல்கள் வீணைமீது அமர்ந்ததும் வெல்வெட்பூச்சிகளாக அசைவதை யாளிகளின் ஆங்காரம் என இருட்டில் சீறி எழுந்து புருவங்களை நெறித்து, ஏன்... எங்கே..., எனக் கடல். கோடு படர்ந்த கண்களின் ஆழத்தில் கேட்டாள் தேவதாசி அது மௌனிக்கும் எட்டாத பிரபஞ்சகானம். தேவதாசியின் அக அமைதியின் நுண் இசை புல்வெளி படர்ந்து விரல்களாய் எழுந்து ஐந்து நிலங்களில் பிரிந்து ஒவ்வொரு நிலமும் ஓர் கன்னி உருவெடுத்து சிறகுடன் பறந்து ஏழுநிற இறகினால் வெளிப்பட்ட நாவலில் இசைக் குறிப்புகள் மயங்குகின்றன.
நாவல்வடிவம் ஏழுபுத்தகங்களின் மடிப்பில் பொருளுடைய குணத்தை கடினமான கலைக்கு அதிகபட்சமாக நெருங்கி புறத் தோற்றங்களை உதறி எறிகிறது மொழி. மூன்றும் ஏழுமாகி இரு வரியில் அடங்கிய உருவத்திலுள்ள வெற்றிடம்தான் நூதன கலை. மொழியின் ஆழத்துக்குக் குடைந்து பொருட்களை வெளியேற்றிப் படிக உடலாகி ஒளித்துவைக்கப்பட்ட வார்த்தையின் உப்பினுள் ரஸ ஓட்டத்தை மொழியாக்கும் சித்தநிலை. ஏதுமில்லை வார்த்தைக்குள். சாயைகளின் கணிதார்த்த பரிமாணம். பொருளுமில்லை. உற் குடைந்த வெறுங்கோப்பைகளில் நிரம்பியுள்ள எடுக்கப்பட்டுவிட்ட வஸ்துவின் குணரூபம் மாறுபடும் இலைவாட்டத்தில் உயிர்களையும் மெய்யையொத்த உலகையும் உயிர்மெய்யொத்த உயிரோடு கூடிய உடலையும் நுதல்வியர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பாக்கி ஆருயிர் களின் அறிவு அனாதி மறைப்பை நீக்கி வினையறுத்த ஆயிரத்து முன்னூற்றிமுப்பது புறாக்களின் கால்களில் கட்டிய சீதளஓலைகளில் தனித்தனியாய் கீறிய குந்தகுந்தரின் தர்க்கம் தூதுஓலைகளால் பறக்க விட்ட அறிவின் சிறகு ஒளிதிறந்த சிந்தனைச் சாளரங்களில் ஒளி இறகு பற்றி விடிவுக்கான வேளை. சங்கப்பலகைகளில் பின்னே அமர்ந்த வெற்றிலைமென்ற கவிகள் பதறியோட அழைத்தது ஒளி விசிறி. 'உற்ற நோய் நோற்றல் உயிர்க்குறுகண் செய்யாமை' கேட்டு நீலகேசி உரை வகுத்த சமயதிவாகரமுனி 'பொய்யும் வாய்மை இடத்த புரை தீர்த்ததை உயிர்காப்பு' என்றான்.
பிண்டிக்கொழுநிழல் இருந்த ஆதியின் தோற்றத்து அறிவனை ரிஷபரைக்கூறும் முதற்குறளில் 'பக' என்றால் யஸஸ், புகழ், தருமம், சுபாவாதிசயம், ஐஸ்வர்யம், முக்தி, வீர்யம் என ரிஷபரில் பதிந்த வார்த்தை பலபொருளாய் பரிமாணம் காட்டும். விஸ்வகோஸா நூலில் முதன்முதலில் எழுதும் கலை, எழுத்துக்கள், பிராமி வடிவத் தையும் கண்டுபிடித்தவர் ரிஷபரே எனச் சிந்துவெளிச் சிதைவுகளில் காளை உரு ஒடியது. தத்துவார்த்த சூத்திரத்திற்கு உரை எழுதிய அளகங்கர் கூற்றில் ஆதிசப்தம் அனேக பொருள்களையுடைய தெனவும் சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்றுவரும் என 'அகாராதயோ வர்ணா ரிஷபா தயஸ் தீர்த்தகராஇதி' சுலோகத்தின் எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன தீர்த்தங்கரர்கள் ரிஷபரை முதலாக உடையர் என்று காட்டும்.
அகர உயிர் போல் அறிவாகி எங்கும் சொல் விரிகிறது பொறி யாகச் சுழன்று. பூமிக்கு அடியில் ஓடும் கல்அடுக்குகளில் கிளைத்த நுரையீரல் திராட்சைக் கொத்தாகியிருந்தது. ரிஷபக்கூட்டத்தை மேய்த்தவாறு ஆபுமலையின் விருட்சத்தில் சாய்ந்து காலத்தை அளந்து இசைக்கருவிகளின் ஒலிஅலகை சுரமண்டலமாக்கிய சமணர் நிலத் தடியில் கசியும் ஒவ்வொரு திராட்சை ரஸத்தையும் எடுத்துக் கொடுத்த இரண்டாயிரம் வருஷ வாசனைகள் திறந்தபோது என் இதயம் தூள் தூளாகிச் சிதறி கோப்பைகளில் ரொம்ப வருஷங்களுக்கு முந்திய கொடி முந்திரியில் ஊறிஊறி வயதான ரஸத்தின் வெளுப்பான நிறங்கள் அடங்கிய கோப்பைகள்தான் சுலையாக இருக்கும். உற் குடைந்த வெறுங்கோப்பைகளை நெஞ்சுக் கூட்டில்பதித்தேன். ரத்தத்திலுள்ள தாவரங்கள் நிரம்பிவழிகிறது நாவலுக்குள்.
கடுங்குளிரில் தனிமையில் பழுத்திருந்த கணம் ஒன்று காலத்தை விலகி நகர்கிறது. இவ்வேளை தில்வாரா ஸ்வேதாம்பரர் தளிக் கோடு களில் உயிர்க்கரு சூட்சுமக்கலை பொருந்திய ஒப்பற்ற இருட்டில் சிற்பங்களை நோக்க வியாபித்த புல்வெளியில் ரிஷபம் ஒன்று குனிந்து கண்களில் நீர் கசிய நிற்கிறது. மறதியில் ஓடும் சாபர்மதிரயில் தொட ருக்குள் மான்கள்மேயும் ஆபுமலைகள் கருதுளைத்து ஊறும் நதி. ரயில் பெட்டிகளுக்குள் கண்ணாடிகள் மூடித் தனித்திருக்கிறேன். குளிரும் கண்ணாடி களில் பனித்திரை துடைத்து வெளிபார்த்த வேளை ஜன்ன ….
152
214
சுபமங்களாஅக்டோபர் 1995 வெங்கட்சாமிநாதன்: நேர்காணல்
மகாபாரதத்திலுள்ள கர்ணனின் பாத்திரம் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் மிகவும் ஆளான ஒன்று. இலக்கிய உலகில் வெங்கட் சாமிநாதன் நிறைய போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் ஆளானவர். போற்றுதலை விடதூற்றுதலையே அவர் அதிகமாக வாங்கிக் கொண்டவர். எந்த விமரிசகனுக்கும் சிலை வைக்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். நிச்சயம் வெங்கட் சாமிநாதனுக்கு யாரும் சிலை வைக்கப் போவதில்லை. கானகத்தின் தனிக் குரலாக இவர் - இலக்கிய உலகில் தனக்குத் தோன்றிய விஷயங்களைப் பக்கபலம் சேர்த்துக் கொள்ளாமல், கொடி பிடிக்கும் ஆட்களைத் திரட்டாமல், 'ஆமாம் சாமி' போடுகிறவர்களை அணுக விடாமல் - ஒலித்து வருகிறார். எவ்வித சமரசமும் இன்றி, தன் மனதிற்குப்பட்டதை பளிச்சென்று எழுதும் வழக்கமுள்ளவர். 'எழுத்து' பத்திரிகையின் மூலம் அறிமுகமான இவர், தனது 'பாலையும் வாழையும்' என்ற விமரிசன நூலால் தமிழ் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். எந்த மேல்நாட்டு விமரிசன பாணியையும் கைக்கொள்ளாமல், தன் சுவைக்கு உட்பட்டதை படைப்பின் கலாசாரப் பின்னணியோடு பார்க்கும் தனிரகம் இவரது விமரிசனம், இலக்கியச் சூழலில் ஏற்பட்ட சில்லறை சண்டை-சச்சரவுகளில் மனம் தளர்ந்து கொஞ்சநாள் எழுதாமல் இருந்தார். இப்பொழுது மீண்டும் பேனாவைக் கையில் எடுத்திருக்கிறார். இவர் விமரிசனத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், 'இதோ ஒரு விமரிசகர்' என்று சுட்டிக் காட்டுவதற்கு கோபுர உச்சியில் உட்கார்ந்திருக்கும் ஒரு விமரிசகர் வெங்கட் சாமிநாதன். இலக்கியம் மட்டும் அல்லாமல் - இசை, ஓவியம், நாடகம், சினிமா போன்ற பல துறைகளிலும் கால் பதித்து, அவைகளைப் பற்றியெல்லாம் விமரிசனம் எழுதுபவர். டெல்லியில் இருந்து வெளிவரும் 'எகனாமிக் டைம்ஸ்'பத்திரிகையில், இவர் கட்டுரைகளை அடிக்கடி பார்க்கலாம். டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது அவர் அளித்த பதில்கள் இதோ:
எப்ப விமரிசனம் எழுத ஆரம்பிச்சீங்க? என்ன தூண்டுதல்?
விரிஆகணும்னு ஒண்ணும் திட்டம் இருக்கலை எழுதணும்னே கூட எண்ணம் இருந்ததில்லை. சின்ன வயசிலேர்ந்தே நான் நிறையப் படிப்பேன். பாடப் புஸ்தக எழுத்து மேல அப்பலேர்ந்தே ஒரு வெறுப்பும் அதிருப்தியும் இருந்தது. அப்ப பாட புஸ்தகங்கள்ல ரா.பி. சேதுப்பிள்ளை. மறைமலை அடிகள் இப்படித்தான சிலர் எழுதுவாங்க அன்பு கணபதின்னு ஒருத்தர் நிறைய எழுதுவார். அதையெல்லாம் படிக்கிறப்ப எனக்குத் தோணும். இவங்க அப்டி என்ன எழுதிட்டாங்க. இதிலயெல்லாம் என்ன இருக்குன்னு தூக்கிப் பேசறாங்க அப்படின்னு நாங்க சில மாணவர்கள் இதைப் பத்திப் பேசிப்போம். ஒண்ணும் விஷயமே இல்லைன்னு தோணும். அப்பல்லாம் மாணவர்கள் வகுப்பிலேயே உக்காந்து நிறையப் படிப்போம். விவாதிப்போம்.
முதல் தடவையா 1953-ல் ரகுநாதன் நடத்தின. 'சாந்தி' பத்திரிகையைப் பார்த்தேன். உடனே சந்தா கட்டி அதை வரவழைச்சுப் படிச்சேன். அப்ப எனக்குப் பிடிச்ச எழுத்தாளர்கள் அழகிரிசாமியும் ரகுநாதனும். சாந்திக்கும் முன்னாலேயே அவருடைய இலக்கிய விமரிசனம் புத்தகம் வந்தது என்று ஞாபகம். 1951-ல் என்று ஞாபகம் அதற்கும் முன்னால் 1948-லோ 1949-லோ அவர் ஓர் இரவு' அல்லது முதல் இரவுன்னு ஒரு புஸ்தகம் எழுதி அது தடை
செய்யப்பட்டு, ரகுநாதன் மீது வழக்கும் நடந்தது என்று ஞாபகம் அப்போ இருந்து அவர் பெயர் பழக்கமானது. அப்போது பாஸ்கரத் தொண்டைமான் இவன் என் தம்பியே இல்லேன்னு பிரகடனம் செய்ததும் இப்போ ஞாபகம் வரது.
புதுமைப்பித்தன்?
இல்லை. அவரை அப்ப தெரியாது. நாப்பத்தெட்டில நான் படிச்சிட்டிருக்கிறப்ப அவருடைய மரணச் செய்தி பேப்பர்ல வந்தது. அப்பதான் நான் அவரைக் கேள்விப்படறேன். அப்ப கல்கியில அவரோட *கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் 'ங்கிற கதை பிரசுரமாயிருந்தது. அனுதாபக் குறிப்பும் இருந்தது. அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்ப தமாஷா இருந்ததுன்னு ஞாபகம். அதுக்கப்பறம் அவரோட எழுத்த ரொம்ப நாள் கழிச்சுத்தான் படிச்சேன்.
ரகுநாதன் படைப்புகளைத் தொடர்ந்து படிச்சீங்களா?
0 ஆமா.ஆனைத் தீ, வென்றிலன் என்ற போதும். ஐந்தாம்படை எல்லாமே படிச்சது ஞாபகம் இருக்கு. வென்றிலன் என்றபோதும் அற்புதமான கதை ஆரம்பமே பிரமாதமா இருக்கும். சாந்தியில அவருடைய கட்டுரைகள் வரும். கல்கியை கடுமையாக விமரிசனம் பண்ணி எழுதியிருப்பார். இலக்கியத்தின் முக்கியத்துவம் பத்தி திட்டவட்டமா சொல்லியிருப்பார். இது எனக்கு ரொம்ப உற்சாகம் தந்தது. அட, நாம் நெனைக்கிற மாதிரியே ஒருத்தர் நெனைக்கிறாரேங்கிற சந்தோஷம் நம்ம நினைப்பு ஒண்ணும் என் தனிப்பட்ட வக்ரம் இல்லை, அதுக்கும் இடம் இருக்கு. அதை தைரியமா சொல்லலாம். என்னைப் போல இன்னும் வேற ஆட்களும் இருக்காங்க என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுதான் எனக்கு முதலில் தைரியம் தந்தது. இந்தச் சமயத்திலே அவருடைய இலக்கிய விமரிசனம் தொகுப்பும் வந்தது. ஆனால் அவர் பேரில் இருந்த இந்த ஆரம்ப பிம்பம் சில வருடங்களுக்குப் பின்னால் உடைந்து போயிற்று. 'தலைமறைவில், தன் வீட்டில் தங்கியிருந்த கட்சிக்காரனை. போலீஸ் பிடிக்காமல் தப்புவிக்க தன் குழந்தையை வாசல் நிலைப்படியில் அறைந்தாள் ஒரு தாய்" என்று ஒரு கதை எழுதினார். ரகுநாதன். 'சீ' என்று ஆயிற்று. கட்சிப் பிரச்சாரம் இவ்வளவு மோசமாலா போகும் என்று வெறுத்துப் போச்சு.
க.நா.சு.உங்களுக்குத் தூண்டுதலா இருந்ததா சொல்லியிருக்கீங்க?
ஆமா க.நா.சு. அதுக்கப்புறம் நிறைய எழுத ஆரம்பிச்சார். 1951-லே அதுவரை வந்த நாவல்களைப் பத்தி எழுதினார். 1956-லே தாட்'னு ஒரு பத்திரிகை டெல்லியிலேர்ந்து வந்தது. ராம்சிங்னு ஒருத்தர் நடத்தினார். அதிலே க.நா.சு. எழுதினார், பின்னாடி நானும் அதிலே நிறைய எழுதியிருக்கேன், சுதேசமித்திரன்லேயும் க.நா.சு ஆணித்தரமான கட்டுரைகள் எழுதினார். இதெல்லாம் நானும் எழுதலாம்ங்கிற நம்பிக்கையைத் தந்தது நம்ப கருத்து பெரும்பான்மை சமூகத்திலிருந்து பெரிய 'கல்விமான்'களிடமிருந்து எவ்வளவு மாறுபட்டதா இருந்தாலும் சொல்லலாம்கிற தைரியம் வந்தது.
உங்கள் முதல் கட்டுரையிலேயே உங்களுடைய பார்வை உருவாகி வலுவாக இருப்பது தெரியுது இல்லையா?
ஆமா. என்னோட ஆதாரமான பார்வையே அதுதான். அப்படித்தான் நாள் எல்லா துறைகளையும் பார்க்கிறேன். அது என்னன்னா, வெவ்வேறு துறைகள்லே தெரியற வீழ்ச்சி ஒரு சமூகத்தில ஒட்டுமொத்தமான அடிப்படையான குறை ஒண்ணு இருக்குங்கறதைத்தான் காட்டுதுங்கிறதுதான் அந்தக் குறை என்னங்கிற தேடல்தான் நான் எழுதுகிற எல்லாவற்றிலும் திரும்பத் திரும்ப வரும்
வெளி வேஷங்களையும் கபட நாடகங்களையும்
எழுத்தில் கோஜமாக வக்துவீடும் புனித உச்சாடனங்களையும் சுட்டிக் காட்ட
எனக்கு உரிமை உண்டு.
VEN
9
செல்லப்பா கூட உங்க உறவு எப்படி?
எழுத்து வரதுக்கு முன்னாடியே கலைமகள் போட்ட அவரோட ஒரு தொகுப்பை நான் படிச்சிருக்கேன். பிடிச்சிருந்தது. அவருடைய பெர்சனாலிட்டி எனக்கு எப்பவுமே பிடிக்கும். அந்தப் பிடிவாதம், ஒண்ணை செய்ய நினைச்சா செஞ்சு முடிக்கிற வெறியும் ஆவேசமும் அதெல்லாம் போக அவருடைய பரந்த பார்வை. அவருக்கும் எனக்கும் எவ்வளவோ அபிப்பிராய வித்தியாசங்கள் உண்டு. அந்த ஆரம்ப காலங்களிலும் கூட ரொம்ப ஆத்திரப்பட்டு கோபமாகக் கூட எழுதியிருக்கிறேன். பேசியிருக்கிறேன். ஆனால் அவர் ஒண்ணையும் பெரிசா நினைக்கலை. எல்லாரையும் எழுத வச்சார் என்னை. சிவராமுவை, ந. முத்துசாமியை. அது அவருக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். அந்த குணம்தான் ஒரு பெரிய பத்திரிகை ஆசிரியனோட குணம்.
எழுத்தில நிறைய எழுதினீங்க இல்லையா? எதை வேணும்னாலும் எழுதிக்கோன்னார் செல்லப்பா சினிமா, டிராமா ஓவியம் எல்லாத்தப் பத்தியும் நான் எழுதினேன். பாருங்க நான் எழுதின பல
10
விஷயங்களில் செல்லப்பாக்கு ஈடுபாடு கிடையாது. மேலும் 'எழுத்து 'இலக்கிய விமரிசனத்துக்காக தொடங்கப்பட்ட இதழ். அதில இதையெல்லாம். விரும்பி, தடை சொல்லாமல் போடறது பெரிய விஷயம் இல்லையா?
நீங்க இலக்கியத்தை ஒரு தனியான அறிவுத்துறையா பார்க்கலை. கலாச்சாரத்தோட ஒரு பகுதியா பார்க்கிறீங்க. அதாவது இலக்கியத்தோட இயக்கம் உங்களுக்கு முக்கியமில்லை கலாச்சாரத்தை அறிய அது ஒரு வாசல் அவ்வளவுதான் இல்லையா?
( ஆமா.
ஒட்டுமொத்தமா சமூகத்தோட கலாச்சாரத்தை பார்க்கிறதுதான் என்னோட இயல்பு. அப்படித்தான் நான் வளர்ந்திருக்கேன். அப்படித்தான் நான் சிந்திக்க முடிகிறது.
ஓவியத்தையும் நாடகத்தையும் கூட
அப்படித்தான் பார்க்கறீங்க. ஆனால் இலக்கியத்துக்கு அதிக இடம் தர்றீங்க?
அப்படி தோணுதுன்னா அதுக்குக் காரணம் நான் இலக்கியத்தைப் பத்தி ஜாஸ்தியா பேசினேன்கிறதுதான் அதைப் பத்தித்தான் அதிகம் பேச முடிகிறது என்கிறதுதான் காரணம். ஏன்னா அப்ப பிற விஷயங்களைப் பத்தி பேச முகாந்திரங்கள் இல்லை. எதை வைத்துப் பேசுவது. Common reference points என்ன? இங்க அடிப்படைகள் இல்லை. சிறுகதையில வென்றிலன் என்றபோதும் மாதிரியான கதைகள் இருந்திச்சு. ஓவியத்தில். சினிமால அப்படி ஒண்ணுமே இல்லை. நான் ஒரு வார்த்தைய கருத்தைச் சொன்னா அதை வாசகனுக்கு புரிய வைக்க அவனுக்கும் பார்க்க கிடைக்க ஒரு படைப்பு இருந்தாகணுமே. பின்னாடி நாடகத்திலயும் ஓவியத்திலயும் பெரிய முயற்சிகள் வர ஆரம்பிச்சப்ப அதையெல்லாம் பத்திப் பேசியிருக்கேன்.
'பாலையும் வாழையும் கட்டுரையிலும் சரி, அந்தத் தொகுப்பிலயும் சரி தமிழ்நாட்டு கலாச்சாரம் அரிசோனா பாலைவனம் மாதிரின்னு கடுமையாத் தாக்கறீங்க. இங்க கத்தாழைதான் வளர முடியும்ங்கறீங்க? இந்த அபிப்பிராயம் எப்படி வந்தது?
0 நான் தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ நேர்ந்தது முக்கியமான காரணம். மத்த கலாச்சாரங்களை பக்கத்தில பாக்க நேர்ந்தது. இதெல்லாம் என்னை உடைச்சது. என்னை வளர்த்தது. ஒரு உதாரணம் சொல்றேன். நாடகத்துக்கு ஜீவித நியாயமே இல்லைன்னு நினைச்சவன் நான். நாடகத்திலே எல்லாமே ஒரு மையத்திலே ஒரு இடத்திலே குவிஞ்சாகணும். ஆனா காமிரா எங்க வேணும்னாலும் போகும். ஒரு காரணத்திலே. நினைச்ச நினைப்பிலே. காலத்தைக் கடக்கும். இடத்தைக் கடக்கும். மன சஞ்சாரங்களை பேசாமல் சொல்லும். ஆக, இனிமே நாடகம் எதுக்குன்னு நினைச்சேன். 1962-ல் நான் அல்காஷியின் நாடகத்த பார்க்கிறேன். எல்லா முன் அபிப்பிராயமும் விழுந்து உடைஞ்சது. நாடகம்னா என்னான்னு தெரிஞ்சது. வங்காள
சினிமா அப்பவே ஒரு தரத்தில் இருக்கும். உதாரணமா
BWEB
ஹிராகுட்டில் இருந்தபோது.
1950-லே ஒரு வங்க படம், 'கர்வபங்கம் னு ஒரு படம் பாத்த ஞாபகம் இருக்கு சரத்சந்திரர் கதை கண்ணன் தேவி நடிச்சது. நேரான கதை இயல்பான நடிப்பு. அலட்டாத சத்தம் போடாத நடிப்பு. யதார்த்தமான காட்சி அமைப்பு. பாட்டு கிடையாது. டான்ஸ் கிடையாது. சண்டை கிடையாது. ஒரு கதையை நேராக திரையில் சொல்லியிருக்கும். வங்காள மொழில அப்ப எல்லா படமும் பிரபலமான நாவல்களை ஒட்டித்தான் இருக்கும். வங்காளிகள் படம் பார்க்கணும்னு சொல்ல மாட்டாங்க. 'புத்தகம் பார்க்கப் போறோம்' (பொயி தேக்த ஜாபோ) என்பார்கள். காரணம் ஆரம்ப கால திரைப்படங்கள் பிரபலமான இலக்கிய ஆசிரியர்களின் கதைகளே படமாக்கப்பட்டன. பங்கிம் சந்திரர், சரத் சந்திரர், பிமல் மித்ரா கதைகள். இது இன்னைக்கு வரை தமிழ்நாட்டில் சாத்தியமில்லை. அப்புறம் பாதேர் பாஞ்சாலி வந்தது
அத மாதிரி ஓவியங்கள். அப்ப சி ஆர் மண்டி எடிட் பண்ணின இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஓவியங்களைப் பிரசுரிக்கும். கோபால் கோஷ், கல்யாண் சென். ஹூஸேன், குஜ்ரால், ஜமிணி ராய் ஓவியங்கள்லாம் வரும். நான் 1952-லே கல்கத்தா போயிருந்தபோது அப்போது அங்கு நடந்த தேசிய ஓவியக் கண்காட்சிக்குப் போனேன். அங்கே உசேன். கோபால் கோஷ், சதீஷ் குஜ்ரால், ஜஹாங்கீர் சப்வாலா எல்லோரும் வரைஞ்ச ஓவியங்களைப் பாத்தேன். அந்த ஒரிஜினல்களை முதன் முறையாகப் பார்த்தது எல்லாமே எனக்குப் பெரிய அனுபவம். ரொம்ப சந்தோஷம் தந்த அனுபவம். அச்சிலே பார்க்கிறதுக்கும் ஒரிஜினலை, அதன் கலரில் டெக்சரில், பிரஷ் ஸ்ட்ரோக்களில் பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம். இதை எப்படி எழுத்தில் சொல்லி ஓவியத்தைப் பார்க்காதவங்களுக்குப் புரிய வைப்பது?
சந்தானராஜ் எல்லாம் அப்ப வரலியா?
i அப்ப இங்க தேவிபிரஸாத் ராய் சௌத்ரி இருந்தார் என்று நினைக்கிறேன். சந்தானராஜ் மாதிரி புது ஆட்கள் அப்ப வரலை. இங்க ஓவியமே இல்லை. 1953-ல ஹீராகுட்டில் 'ஆன் தி வாட்டர், பிரன்ட் வந்தது. மார்லன் பிரான்டோ நடித்தது, எலியா கஸான்தான் டைரக்டர். சினிமாங்கறது ஒரு கலைங்கிறது எனக்கு அப்ப அனுபவபூர்வமா உறைச்சது. இது போல wages of fear -னு ஒரு பிரெஞ்சுப் படம். இதையெல்லாம் editing-க்கு text book - ஆகப் பயன்படுத்துவார்கள் என்று பின்னால் தெரிந்தது.
எனக்குத் தோணினது இதுதான். வங்காளிகளுக்கு என்ன பாரம்பரியம் இருக்கு? ஒண்ணும் இல்லை. ஆனா நாம்? எவ்வளவு பெரிய பின்புலம் இது. அத வச்சுக்கிட்டு நாம் என்ன செஞ்சோம்? ஒவ்வொரு துறையிலயும் வறட்டு தேக்கம். மூடப் பெருமை. அதனாலதான் பாலைன்னு கடுமையா எழுதினேன்.
தமிழுக்கு சுயமான சிந்தனை மரபு இல்லை, ஆராய்ந்து பார்க்கும் மரபு இல்லை, நம்பிக்கை அடிப்படையிலான பார்வைதான் இருக்குன்னு எழுதியிருக்கீங்க?
நம்ம பழைய படைப்புகளைத்தான் பார்ப்போம்.
11
மூட பக்தி வேணாம். தொல்காப்பியம் தொட்டே மிக வெளிப்படையா அகில இந்திய கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கு. சம்ஸ்கிருத சார்பு இருக்கு. அதை தப்புன்னோ குறைன்னோ சொல்லலை. அதுதான் அறிவுத்துறைகளோட இயல்பு, கொண்டும் கொடுத்தும். வளர்றது. நாம கொண்டதில பெரும் பகுதி சிந்தனை மரபுகள், கலைச் சொற்கள் இதெல்லாம்தான்.
அரங்கேற்றம்கிற அமைப்பு இருந்திருக்கே? உண்மைதான். அங்க விமரிசனம் இருந்திருக்கலாம். ஆனால் அது கூட மொழி சார்ந்து, பொருள் சார்ந்துதான் இருந்திருக்கு. சிருஷ்டி என்கிற புதிர் பற்றி இல்லே. பழைய படைப்புகள் இங்க ஒரு வகையான சமூக சட்டங்கள் மாதிரி ஆகியிருக்கு. தமிழ் சமூகத்தை இயக்கிக்கிட்டிருக்க நம்பிக்கைகள் அப்படி அப்படி இருக்க பழைய படைப்புகளை வாழ்க்கையோட ஒப்பிட்டு பரிசீலிக்கிற மரபு ஏன் உருவாகலை. தொல்காப்பியர் எவ்வளவு புதிய விஷயங்களை தமிழுக்குக் கொண்டு வரார்! எவ்வளவு மரபுகளை மீறுகிறார்! எவ்வளவு புது மரபுகளை உருவாக்குகிறார். எவ்வளவு மீறல்களுக்கு, post-facto sanction தந்திருக்கார். அவர் ஒரு ஜைனர். இன்னிக்கு நாம் சுத்தத் தமிழர். நாம செய்யற காரியங்கள்லே, உருவாக்கற மொழியிலே தொல்காப்பியத்தையே மறுக்கிறோம். தொல்காப்பியருக்கு மாலை போடறோம். ஆக தொல்காப்பியத்துக்கு அப்புறம் கவிதையியல் ஏன் வளரலை? அங்கியே நின்னுட்டது ஏன்? புது அளவுகோல் இல்லை. அதனால பழைய படைப்புகளை சமகாலத்துக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்ய முடியலை. அதைத்தான் நான் சொல்றேன்.
வளர்ச்சிங்கிறது கருத்துக்கள் இணைவதன் மூலம், சிந்தஸிஸ் மூலம் வரக்கூடியது. இங்குள்ளதும் வர்ரதும் சேர்ந்து மூணாவதா ஒண்ணை உருவாக்கிறது ஒண்ணு வர்ரதே ஒரு பலவீனம், அல்லது இடைவெளி இங்க இருக்கிறதனாலதான்கிறீங்க.
[] இதோ பாருங்க. முதல்ல இங்க இருக்கிறத மறுபரிசீலனை செய்யனும். வருகிற எல்லாத்தையும் பரிசீலனை செய்யணும் அப்பிடித்தான் சிந்தஸிஸ் உருவாகும். நாம நாமதான் ஆனா தினம் குளிச்சாகணும். நம்ம மேலபடியற அழுக்கையும் நாமன்னு குளிக்காம இருக்கப்படாது. இது வெளியிலேயிருந்து வந்ததுன்னு சவாசிக்காம். சாப்பிடாம இருக்கப்படாது. ஒண்ணு ஒட்டாத்த வெளியே தள்ளணும். இன்னொண்ணு ஜீரணமாக்க நம்முடையதா ஆக்கிக்க வேண்டியது. ஒட்ட வைக்க வேண்டியது. அதான் ஆரோக்கியமானது. இங்க அந்த பரிசீலனையே இல்லியே, குருட்டுத்தனமான பின்பற்றல் இல்லையா இருக்கு. அப்ப, ஒண்ணு, புதிசா வருவதை முழுக்க தூக்கிப் போட்டுடுவோம். இல்ல அப்பிடியே வாங்கி வச்சுக்கிடுவோம். அதான் சொல்றேன்.
அப்ப போதுமான அளவு தத்துவார்த்த விவாதங்கள் இங்க நடக்கலைங்கறீங்களா?
நடந்திருந்தா நாம இங்க இப்பிடி இருந்திருக்க மாட்டோம். இங்க வெறுமே பின்பற்றல்தான் வேர் பிடிச்சது. வந்தது எல்லாம் அப்படியே நூற்றாண்டுகளா உக்காந்திருக்கு.
மாறுதல் இருக்கே. தமிழ் சமணமும் தமிழ் பௌத்தமும் மூலத்திலேர்ந்து ரொம்ப மாறுபட்டிருக்கே.
[] அடிப்படையான மாறுதல் இல்லை. ரொம்ப மேலோட்டமாத்தான். அது எந்த மதமும் தத்துவமும் எங்க போலாலும் அப்படி மாறும். அது வாழ்க்கை முறை உருவாக்கிற மாற்றம். அறிவார்ந்த விவாதம் நடக்கக் கூடிய ஒரு குழல் இன்னைக்காவது தமிழில் இருக்கா. மத்த மொழிகள்ல இருக்கிற மாதிரி? வெறுமே நம்பிக்கைகள்தானே இருக்கு? கையில் இருக்கிறதை தொடர்ந்து மறுபரிசீலனை செய்றது, புதிய விஷயங்களை வரவேற்று விவாதிக்கிறது. கோபதாபம் இல்லாத ஆரோக்கியமான விவாதம் இதெல்லாம் இருக்கா? நமக்கு இருக்கிறது தாழ்வுணர்ச்சி வெளியேயிருந்து ஒண்ணு வந்தா கும்பிடாது இல்லை புறக்கணிக்கிறது. எதிர் கருத்தை கோபத்தக் காட்டி அழிக்க நினைக்கிறது இதெல்லாம் என்ன? நம்ம பல்கலைக்கழக ஆட்கள் எப்படி புது விஷயங்களை வாங்கிக்கிட்டாங்க? மார்க்ஸியம் இங்க வந்து எப்படி மாற்றத்தத் தந்தது? இல்லை அதுக்கப்புறம் வந்து சேர்ந்த புதுச்சிந்தனைகள்வு என்ன மாற்றம் ஏற்பட்டது? ஒழுங்கா விவாதம் நடந்ததா முதல்லே? எதுவாயிருந்தாலும் அதை நமக்கேத்த மாதிரி கொச்சைப்படுத்தி மலினப்படுத்தி. தம்ம சொந்த அழுக்குகளையெல்லாம் அதுக்கேத்தி வைத்துக் கொள்வதில் நமக்கு இணை யாருமே இல்லை. லேபிள் மாத்திரம் புதுசு புதுசா போட்டுக்குவோம்.
இங்க ஒரு ஆரோக்கியமான கலைச் சூழலோ, இலக்கியச் சூழலோ கருத்துச் சூழவோ இல்லை.
நீங்க இலக்கியத்துக்கு உள்வட்டம்னு ஒண்ணு உண்டுன்னு சொன்னதை பலர் பலவிதமா சொல்றாங்க இப்ப. உயர் சாதியத்தான் உள்வட்டங்கறீங்கன்னு ஒரு தரப்பு; இல்லை உயர் வாக்கத்தை சொல்றீங்கன்னு ஒரு தரப்பு.
அது திரிச்சுப் பேசறது. வேணும்னே சொல்றது. எல்லாருக்கும் அது தெரியும் எல்லாத்துக்கும் அத்துக்குரிய உள்வட்டம் உண்டு ராஜேஷகுமார் நாவலுக்கும் சரி மௌனி கதைக்கும் சரி ஆதிமூலம் ஓவியத்துக்கும் - ஜெயராஜ் ஓவியத்துக்கும் தனித்தனி உள்வட்டம் உண்டு பாருங்க குறுந்தொகை பத்தி ஒரு
அபிப்பிராயத்தை யார் சொல்ல முடியும்? அவனுக்கு தமிழ் கவிமரபு தெரிஞ்சிருக்கணும் மத்த சங்கப் படைப்புகளை அவன் படிச்சிருக்கணும் இல்லியா? எட்டு கோடி தமிழர்கள்ல எட்டாயிரம் பேர் தேறுவார்களா? அவங்கதான் குறுந்தொகையோட உள்வட்டம் அவங்கதான் குறுந்தொகை பத்தி தமிழ் சமூகத்தோட மதிப்பீட்டை உருவாக்கித் தராங்க. ஜனநாயக முறைல ஓட்டுப் போட்டா குறுந்தொகைய பெரிய இலக்கியம்னு தேர்வு செஞ்சாங்க? எட்டுக் கோடி பேரும் படிக்கலைங்கிறதுக்காக குறுந்தொகைய தூக்கிப் போட்டுடலாமா? குறுந்தொகையை எல்லாரும். படிக்கலாம். ஒண்ணும் தடையில்லை. அது எட்டு கோடி பேருக்கும் சொந்தம்தான். ரே படம்னாலும் சரி ஆதிமூலம் ஓவியம்னாலும் சரி. அது ஒரு மரபின் தொடர்ச்சியா நின்னுட்டுப் பேசுது. அந்தத் தொடர்ச்சி தெரிஞ்சாகணும் அது பிற படைப்புகள் உள்ள சூழல்ல நின்னுட்டு பேசுது. அந்தச் சூழல் தெரிஞ்சாகணும் இல்லியா. அப்ப அதை அணுக நீங்கதான் உங்களை தயார் படுத்திக்கணும். இதில என்ன சிக்கல் இருக்கு? தர்க்கம் பண்ண என்ன இருக்கு? உலகத்துல ஒரு இடத்திலயும் இது மேல தர்க்கம் கிடையாது. நான். முன்னாலேயே சொன்னேனே. எதைச் சொன்னாலும் எந்தச் சிந்தனையானாலும், அதை நமக்கு ஏத்த மாதிரி கொச்சைப்படுத்தினால்தான் நமக்கு சௌகரியமா இருக்கு கொச்சைப்படுத்துறது மாத்திரமல்ல. அதிலே. தன்னோட அழுக்குகளையும் சேர்த்துக்கணும், நான் உள்வட்டம் என்கிறதை, ஒருத்தன் தன்னை தகுதிப்படுத்திக் கொள்கிறதைப் பற்றிப் பேசினேன். இதில் உயர் வர்க்கம் காண்கிறது யார்? நம்மூர் கொச்சை முற்போக்கு, உயர் சாதி காண்கிறது யார்? சாதி வெறியன்தான். கார் ஓட்டத் தெரிஞ்சவன்தான் காரை ஓட்டலாம் என்றால், அதில் உயர் சாதி எங்கே வந்தது. உயர் வர்க்கம் எங்கே வந்தது?
அப்ப கைலாசபதி, வானமாமலை எல்லாம் ஏன் இதை எதுத்தாங்க?
வெறும் பாலிடிக்ஸ் வேற என்ன? அப்ப அவங்க சார்ந்திருந்த கட்சிக்கு விசுவாசமா அப்படிச் சொன்னாங்க. இரண்டு பேருக்கும் இலக்கிய உணர்வு, கலை உணர்வு கிடையாது. வானமாமலை, கட்சியை விஸ்வாசித்தவர் நல்ல மனிதர். கட்சியால் கெட்டவர். ஆனால் கைலாசபதி நேர்மையற்ற careerist. கட்சியை தன் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர். வேறு இடங்களில், சைவ சித்தாந்தத்துக்கு தாவணும்னு தேவை ஏற்பட்டா. இவருக்கு தெரிஞ்ச. சோவியத்
துண்டுப் பிரசுர மார்க்ஸை அம்போ என்று கைவிட்டு விடுவார். ரகசியமாக. இன்னொரு இடத்தில் ஜாதியை வைச்சு அடிக்கணும்னா அதையும் செய்வார். அப்போதான் சைவவேளாள பிள்ளைமாராக, ஹரிஜன எழுத்தாளனை எப்படி நடத்த வரும் என்கிறதை நினைப்பில் கொள்ள மாட்டார். இந்தக் சுசடுகள் எல்லாம் வானமாமலையிடம் கிடையாது விசுவாசமான கட்சி ஊழியர். நாட்டுப்புற இயலில் உண்மையாகவே ஈடுபாடுள்ளவர். போகட்டும், ஆமாம் கம்யூனிஸ்ட் கட்சியை avant garde என்று லெனின் சொன்னாரே. அதுக்கு என்ன அர்த்தம்? அதிகார வர்க்க மேலாண்மைன்னு அதுக்கு பாஷ்யம் சொல்லலாமா?
உங்க விமரிசன அளவுகோல் என்ன?
i என் சுய அனுபவம்தான் என் பார்வைதான் என் அளவுகோல்,
இன்னைக்கு வந்திருக்கிற புதுமுறை விமரிசன மரபுகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
பழைய யாந்திரிக மார்க்ஸிய விமரிசனங்களுக்கும். இதுக்கும் பெரிய மாறுதல் ஏதும் இல்லைன்னுதான் பேடுது. அவங்க அரசியலையும் சமூகவியலையும் முன்னிறுத்தினாங்க. இவங்க மொழியியலை... அப்பப்போ என்னமோ ஒண்ணு ஒவ்வொரு சமயத்திலேயும். கொண்டு வர்ற எல்லா லேபிளும் 'விஞ்ஞானபூர்வமானது'தான். 'இது வரைக்கும் உள்ள, இதற்கு முன்னால் இருந்த மற்றெல்லாத்தையும். இந்த கரண்ட் லேபின் அடிச்சுப் போட்டுடுது ஏரியல், ஸர்ஃப், ரின் (Aerial,Surf, Rin) விளம்பரம் எல்லாம் இப்படித்தான் வருது. இந்த வார Super soaker aerial, & விளம்பரம் போன வாரம் டமாரம் அடிச்ச Green aerial - ஐப் பத்தி மூச்சு விடறது கிடையாது. ஆக இந்த லேபிள் அடுத்த 'விஞ்ஞானபூர்வமான'வேறு லேபிள் வர்ற வரைக்கும் இருக்கும். என்னோட பிரச்சினை ஒரு இலக்கியப் படைப்பு, ஏன் அப்படி இருக்கு இன்னொண்ணு ஏன் இல்லை - இதுதான். இந்தக் கேள்விக்கு நவீன விமரிசனம் புதிசா ஒண்ணையும் சொல்லலை. தமிழ்ல வெறுமே பரபரப்புக்காகத்தான் இதையெல்லாம் கொண்டு வராங்க. இந்த தமிழவனையே பாருங்க. அவர் எவ்வளவு இடம் மாறியாச்சு. முதல்லே மார்க்ஸியம். அப்புறம் சர்ரியலிசம், அப்புறம் ஸ்டரக்சுரலிசம் அப்புறம் இப்ப போஸ்ட் மாடர்னிசம் இருக்கிறதில் புதிசா இருக்கிறதப் பத்தி பேசணும், மத்தவங்களை பழசா
போயிட்டீங்கன்னு சொல்லணும், அதில் ஒரு திருப்தி: அவ்வளவுதான். இப்ப அவருக்கு சில சீடப் பிள்ளைங்க வேற எல்லாம் கட்சி செயல்பாடு மாதிரி, தமிழ்நாடு பூராவும் மறியல், கடை அடைப்பு நடக்கற மாதிரி ஒரே சமயத்திலே, ஒரே கூச்சல், ஒரே கோஷம். ஒரே மாதிரி பாஷையிலே பல இடங்கள்லேயிருந்து கிளம்பும்.
தமிழ்ல சில விமரிசகர்கள், தரப்படுத்தல்ங்கிறது. அதிகாரத்துக்காக செய்யப்படறது,அது தப்புங்கிறாங்க. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கும் மக்களோட தரப்பிரிவினையை ஏற்க கூடாதுங்கிறாங்க?
தரப்படுத்தல் செய்யக் கூடாதுன்னா அது முடியாத காரியம். எல்லாரும் அதைச் செஞ்சுக்கிட்டேதான்
13
இருக்கிறாங்க. எனக்கு ஒரு பமைப்பு இன்னயின்ன அனுபவங்களைத் தந்தது இன்னொண்ணு நரமை இதை நான் எழுதறேன். ஏன் தரலைன்னு யோசிக்கிைேன இது அதிகாரம்னா இருந்துட்டுப் போகட்டும் எனக்கு வேற வழி கிடையாது. அது சரி. இது அதிகாரம். கூடாது என்று சொல்கிறதே. அதிகார மனப்பான்மைதானே. ஒரு அதிகாரத்தை மறுத்து இன்னொரு அதிகாரத்தை சிம்மாசனமேற்றுவதுதானே? மாலை போடத சிலை' மாறினா. படம் மாறினா, விக்கிரஹ விநாசன் ஆயிட முடியமா? தரப்பிரிவினை இல்லாம ஒரு நிலை இல்லை. ஒரு தரப்பிரிவினை ஏற்க முடியாதவங்க இன்னொண்ணை உருவாக்கறாங்க. உருவாக்கட்டும். அது அவங்க பிரச்சினை நான் சொன்ன மாதிரி இதெல்லாம் ரொம்ப பொசனல்தான். அவரவர் பார்வையைப் பொறுத்தது. எல்லாவற்றுக்கும் இடம் உண்டு, பரஸ்பர சம்வாதம். விவாதம் நடக்க வேண்டும். அதில்லாது இது அதிகாரம் என்று சொல்வது. இன்னொரு பார்வையை அனுமதிக்க மறுக்கும் பாஸிஸம்.
இலக்கியத்தைப் பற்றி நீங்கள் மதிப்பிடும்போது அதன் Poetic reality-க்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் (ஜானகிராமன் - மலர் மஞ்சம் - கோபுரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் காக்கை பற்றி நீங்கள் சொன்னது) Analytical reality-யைப் பூரணமாக மறுக்கிறீர்கள் என்றும் படுகிறதே?
இலக்கியத்தில் analysis எங்கு வருகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆகவே அதை மறுப்பது பற்றியும் எனக்குத் தெரியாது. உதாரணமாக கோபுரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் காக்கை இதை Poetic reality என்கிறீர்கள். Analytical reality-யை மறுப்பது என்கிறீர்கள். இந்தக் காட்சி,அனுபளத்தில் கவிதையின் ஜீவன் கொண்டது. நாவலில் இக்காட்சி வரும் சந்தர்ப்பம். highly charged emotional drama. மௌனமாக நிகழ்ந்தேறுகிறது அப்படி நிகழ்வதுதான் இயல்பு. வாழ்க்கை உண்மை. அதோடு அது நிகழ்ந்த பின் கிடைக்கும் தீர்வு, நடப்புண்மையும். அதன் ஒரு பக்க சோகமும். ஒரு பக்க absurdityயும், பின் என்னதான் நடந்தாலும் வாழ்க்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சோகமும் அபத்தமும் மறக்கப்பட்டு விடுகின்றன. வாழ்க்கையும் அதன் லட்சியங்களும், கோபுரம் போன்றவை. என்றைக்கும் உயர்ந்தவை வானைத் தொட எழும்பி நிற்பவை. சமயங்களில் காகங்களும் உட்காரும். அதே போல சில நிகழ்ச்சிகளும் நிகழும். ஆனால், எப்படி காக்கைகள் உட்காருவதற்காக கோபுரங்கள் எழுப்பப்படவில்லையோ. அதே போல சில சமயங்களில் நிகழ்ந்து விடும் நிகழ்ச்சிகள் வாழ்க்கையை ஸ்தம்பித்து விடச் செய்வதில்லை. அதன் சக்கரங்கள் கழன்று கொண்டே முன் சென்று கொண்டே இருக்கும் என்பதெல்லாம் அந்த கணநேர high drama-வை அந்தக் காட்சியின் visual poetry யைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது தோன்றும்.
எனக்குத் தோன்றியதைச் சொன்ளேன். ஒரு அர்த்தத்தில் இது ஜானகிராமன். இது தஞ்சை மண் என்பதற்கும் மேலாக, இதுதான் நானும் என்று கூட இருக்கலாம். நான் என்னையே படித்துக் கொள்கிறேன் என்று கூட இருக்கலாம். இதற்கெல்லாம் நான் எந்த சித்தாந்தத்தையும். கட்சியையும் கொள்கையையும் துணைக்கழைக்க முடியாது. இது என் பார்வை. என் அனுபவம். இதில் எதை முக்கியப்படுத்துகிறேன். எதை மறுக்கிறேன் என்று சொல்வது? இதில் கவிதை, நாடகம், வாழ்க்கை நடப்பு, மனித மன சஞ்சலங்கள். தத்துவார்த்தப் பார்வை. நம்மைக் கட்டுப்படுத்தும் வாழையடி வாழையான மரபுகள் எல்லாம் ஒன்றிணைந்த ஒன்றேயான, இன்னதுதான் என்று மற்றதை விலக்கி தனிப்படுத்தி define செய்ய முடியாத ஒரு முழுமையாக எனக்குப் படுகிறது. இப்படித்தான் நான் படிக்கிறேன் அனுபவிக்கிறேன். அதைச் சொல்கிறேன். இது என்ன 'இஸம்?
விவாதங்களில் நீங்கள் பல சமயம் நேரடித் தாக்குதல்களில் (கிண்டல் செய்வதும் உண்டு) இறங்குகிறீர்கள். இது விவாதங்களுக்கு இருக்க வேண்டிய சுமுக நிலையை இல்லாமல் செய்து விடுகிறது. பதற்றத்தைப் புகுத்தி விடுகிறது. உங்கள் கருத்துக்கள் சரியான முறையில்
விவாதிக்கப்படாமைக்கு இது காரணம் அல்லவா?
நான் நேரடித் தாக்குதல்கள் செய்தது கிடையாது. என்னை விரோதியாகப் பார்க்கிறவர்கள். என் கருத்துக்களால் உதைபடுகிறவர்கள், என் கேள்விகளுக்குப் பதில் தர இயலாதவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். இவர்கள்தான் என் கருத்துக்களை என்றும் அப்படியே மேற்கோள் தந்து எதிர்கொள்ளாதவர்கள். என் கருத்துக்களை தங்கள் வார்த்தைகளில் திரித்து, கொச்சைப்படுத்திச்சொல்லி, பின் நான் தாக்கியதாகச் சொல்பவர்கள்.
மனித நேயத்தைப் பற்றிக் கதை எழுதுகிறவன் மனித நேயம் கொண்டவனாக வாழ்க்கையில் இருக்க வேண்டும். பாட்டாளிக்காக உருகுகிறவன். வாழ்க்கையில் நேர்ப்படும் பாட்டாளியின் அப்போதைய துயரைத் தீர்க்கத் தான் ஏதாவது செய்ய வேண்டும் சாதி ஒழிப்பு பற்றிப் பேசுகிறவன் சாதி
உணர்வு அற்ற மனிதநேயம் கொண்டவனாக இருக்க வேண்டும். இவற்றில் எல்லாம் அவன் உணர்வுகள் மிகத் தீவிரமாகக் கொந்தளித்திருக்க வேண்டும். இவை எதுவும் அவனிடம் இல்லாது, அவன் பேச்சும். எழுத்தும் அவனது ஆத்மார்த்தத்திற்கும் வாழ்க்கைக்கும். நேர் எதிரானதாக இருப்பின் அவன் எழுத்து கலையாக முடியாது. இதனால்தான் கட்சி சார்ந்த சித்தாந்தம். உருவாக்கிய, வெளியில் இருந்து பெற்ற எதுவும் இலக்கியமாகவில்லை. பாரதி - அவன் எங்கிருந்தும் கற்கவில்லை. எந்தக் கட்சியும் அவனைப்
பணிக்கவில்லை. எதையும் அவன் கொள்கையாகப் பெறவில்லை. அரசியலிலும் சரி, சமூக மாற்றத்திலும் சரி. இலக்கியம், சங்கீதம், மொழி எதிலும் அவனது பேச்சும். எழுத்தும் அவனது உள்ளார்ந்த மனித நேயத்திலிருந்து பெற்றதுதான். 'காக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு கோஷம் இல்லை. காக்கைக்கும் குருவிக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை ஜாதி என்கிறான். அவன் காலத்தில் இருந்த ஆங்கிலேய அரசு எதிர்ப்பின் உக்கிரத்திலும், குற்றம் அறியாத வெள்ளைக்கார குழந்தைகளும், தாயும் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தான். ரஷ்யப் புரட்சியை வரவேற்ற முதல் இந்தியக் கவி அவன். லெனினின் வன்முறையைக் கண்டிப்பதிலும் முன் நின்றவன் அவன் ரஷ்ய சாம்ராஜ்யம் உடையும் வரை, அதற்கிருந்த ஆதரவு வற்றும் வரை அவன் காத்திருக்கவில்லை. இப்படி அவன் வாழ்க்கையையும். எண்ணங்களையும் எழுத்துக்களையும் ஒன்றாகப் பார்க்க முடியுமானால், இன்று என் கண் முன் நடக்கும் வெளி வேஷங்களையும் கபட நாடகங்களையும் எழுத்தில் கோஷமாக வந்துவிடும் புனித உச்சாடனங்களையும் சுட்டிக்காட்ட எனக்கு உரிமை உண்டு. இது என் உரிமை என்று அல்ல. இதுதான் நியாயம். கலை நியாயம் இலக்கிய நியாயம். எனது இந்தச் செயல்பாடு அனுமதிக்கப்பட்டு விட்டால், இது மரபாகி விட்டால், இவர்கள் வேஷங்கள் கலைந்து சிறுமைப்பட்டுப் போவார்கள். இதில் நிறையப் பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்குள் எத்தனை விரோதங்கள் இருந்தாலும், இந்த விஷயத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள் என்னை எதிர்க்க
ஒரு உதாரணம். அல்லது சில கேள்விகள். படைப்பை மட்டும் பார். படைப்பாளிக்கும் படைப்புக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தப்படுத்துவது personal தாக்குதல் ஆகும் என்பவர்கள் (இந்த அபத்த மூட்டை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் செல்லுபடியாகாது) புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய அந்தக் கடிதங்கள் பிரசுரமானதை ஏன் கண்டிக்கவில்லை? ஜீவா, அகிலன், புதுமைப்பித்தன். பாரதி, பாரதிதாசன் இப்படி எண்ணற்ற சுயசரிதைகள், வாழ்க்கைச் சரிதைகள் வெளியானபோது என்ன செய்தார்கள்? ஏன் உலகத்திலேயே, எழுத்தாளர்கள் கவிஞர்கள், ஓவியர்களின் வாழ்க்கை சரிதங்களில் அவர்கள் நம்பிக்கைகள். கோட்பாடுகள் துருவித் துருவி ஆராயப்படுகின்றன? தமிழ்நாட்டில் எந்த மடத்தனமான நிலைப்பாடும். கட்சி சார்பில் குழு சார்பில் வைக்கப்படுமானால் அது செல்லுபடியாகிறது. பலம் பெறுகிறது. அந்த மடத்தனங்கள். மடத்தனங்கள் என்று வாதிக்கப்பட்டால் அது personal தாக்குதல் ஆகி விடுகிறது.
கட்டுரைகளைப் பார்க்கலாம். மேலும் கிட்டத்தட்ட இருபது பெயர்கள், வண்ணதாசன், ஜெயமோகன். சி வை. தாமோ தரம் பிள்ளை, கால்டுவெல், சா. சுந்தசாமி, எஸ்.வி. ராஜதுரை, பூர்ணலிங்கம் பிள்ளை இப்படி (ஞாபகமிருப்பவற்றைச் சொல்கிறேன்) பல பெயர்கள் நான் சொல்வி கட்டுரை எழுதப் பணிக்கப்பட்டவர்கள் இவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். உடன் எழுதக் கூடியவர்கள் எழுதவில்லை. ஏன் எழுதவில்லை? இலக்கியக் கடமை, தெரிந்தவர்கள். நண்பர்கள் இவர்களைப் பற்றி எழுதும் நட்புக் கடமை - அதைப் பற்றிய உணர்வே இல்லை. இதில் மு.கு. ஜகந்நாதராஜாவைப் பற்றி எழுதிச் சேர்க்க முடியாது போனது எனக்கு மிக வருத்தம்.
சரி. நான் என் கருத்துக்களைச் சொல்கிறேன். அது எப்படி personal attack ஆகும். இவர்கள் என்னிடம் நடந்து கொண்டது எப்படி? நான் இவர்களிடம் நடந்து கொள்வது எப்படி? ஜெயகாந்தன் கந்தசாமி, அசோகமித்திரன் இவர்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அப்போதே. அந்த வெட்பக் கொடுமையிலேயே கூட, இவர்கள் பற்றி என் objective ஆன, சாதகமும் பாதகமும் ஆன கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.
என் கருத்துக்கள் சரியான முறையில் விவாதிக்கப்படவில்லை. என்றுமே விவாதிக்கப்படாது. ஏனெனில், தான் சொல்பவை, அநேகரது. பெரும்பான்மையினது பொய்களை வெளிப்படுத்துகிறது என் செயல் இலக்கிய கொள்கையாகி விடுவதைத் தடுக்க வேண்டும். ஏதோ குற்றம் சாட்டித் தூக்கிலிடு? 61-லிருந்து இன்று வரை, என் கருத்துக்கள் அதன் அடிப்படையில் பார்வையில் மாறாதவை. அவை விகசித்துள்ளன தமிழ் இலக்கிய உலகில், நான் ஒருத்தன்தான் எனக்கு மாறான கருத்துக்களைக் கொண்டவரை என் புத்தகங்களுக்கு முன்னுரை எழுத அழைத்திருக்கிறேன். நான் என் எழுத்துக்களை தொகுக்கும்போது பழைய அச்சுப் பிழைகளைக் கூட திருத்தாமல் அப்படியே தொகுத்திருக்கிறேன். மற்றவர்கள் அநேகர் ஒன்று தம் பழைய எழுத்துக்களைப் பற்றி பிரஸ்தாபிப்பதே இல்லை. சிலர் அவற்றை திருத்தி இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றி வெட்டி, திருத்தி சுருக்கி பிரகணிக்கிறார்கள், பிக்காஸோ எண்ணற்ற மாறுதல்களை அடைந்தவன் அது அவனது பரிணாம வளர்க ன் எதையும் மறைக்கவில்லை. தடுக்கவில்லை. எதற்கும் வெட்கப்படுவதில்லை. எல்லாம் அவனது ஒரே ஆளுமையின் விகசிப்புகள் இங்கு கட்சித் தாவலுக்கும். சுபட நாடகத்திற்கும் நாக்கை புரட்டிப் புரட்டி பேசுதலுக்கும், இயல்பான வளர்ச்சிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். ஆனால் அவரும் கண்டு கொள்வதில்லை. மற்றவர்களும் கண்டு கொள்வதில்லை. காரணம் கண்டு கொள்வது. அவர்களுக்கும் ஆபத்தைக் கொண்டு சேர்க்கும் *
உங்களுக்கு மத, ஜாதி நம்பிக்கை உண்டா?
இந்த மாதிரி கேள்விகளுக்குத் தமிழ்நாட்டில் அர்த்தமே இல்லை எனக்கு கிடையாது. ஆனால்
இப்படிச் சொல்வது உண்மைதானா என்பதை என வாழ்க்கையில், பேச்சில், எழுத்தில், உணர்வுகளில் செயல்பாடுகளில் ஆதாரமும் சாட்சியமும் கண்டு ஏற்றுக் கொள்ளவோ மறுக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை. நான் பிறந்த ஜாதியின் காரணத்தாலேயே என்னை பார்ப்பன வெறியன் என்று பட்டை குத்தி ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிவதுதான் நடப்பது இப்படிச் செய்பவர்கள் செயல்களையும் அச்செயல்களைத் தூண்டிய உணர்வுகளையும் பார்த்தால். அவர்கள். தாம் தப்பித்தவறிப் பிறந்த பார்ப்பனரல்லாத ஜாதியே அவர்களது ஆதார மூலதனமாவதையும், அவர்கள் செயல்கள், உணர்வுகள் எத்தகையதாக இருந்தாலும், அவர்கள் தாம் தாக்கத் தேர்ந்தெடுக்கும் எவருக்கும் ஜாதி வெறிப்பட்டை குத்தும் தகுதியுடன் பிறந்தவர்களாகக் கருதிக் கொள்வதையும், மற்றவர்களால் கருதப்படுவதையும், இதில் எல்லோரும் ஒரு trade union-னாக செயல்படுவதையும் பார்க்கலாம். இதுதான் நடப்பது. யாரையும் 'உமக்கு ஜாதி மதத்தில், நம்பிக்கை உண்டா?' என்று கேட்க வேண்டியதில்லை. தன் ஜாதிப் பற்றையும், தன் மேல்ஜாதி துவேஷத்தையும் வைத்தே பிழைப்பு நடத்துபவர்கள் எனக்கு நம்பிக்கை இல்லை' என்றுதான் சொல்வார்கள் அவர்களது வாழ்க்கையை ஆராயப் புகுந்தால், இருக்கவே இருக்கிறது 'பெர்ஸனல் தாக்குதல் குண்டாந்தடி.
தமிழ்ல உங்களுக்கு பிடிச்ச எழுத்தாளர் யார்?
மௌனீ, புதுமைப்பித்தன். லா.ச.ரா. ஜானகிராமன். புதுமைப்பித்தன் கதையை இப்பக் கூட படிச்சிட்டிருந்தேன் ஒரு இடம் வருது. ஒரு கொழந்தை வெள்ளிக் கொலுசு போட்டுட்டு ஓடைக்கரையோரம் உக்காந்து தண்ணியில காலைவிட்டு ஆட்டறது. சூரிய வெளிச்சம் கொலுசு மேலே பட்டுப் பட்டுத் தெறிக்கிறது. ''கால் தண்ணிக்குள்ளேர்ந்து வெளியே வர்றதுக்காக சூரியன் காத்திருக்கிறான். சூரியனா இருந்தா என்ன குழந்தையோட பாத தரிசனத்துக்கு தவம் கெடந்துதானே ஆகணும்' கிறார் புதுமைப்பித்தன். இதைப் படிக்கிறப்போ. ஆளை உலுக்கி எடுக்கிற ஒரு பரவசம் இதெல்லாம் உட்கார்ந்து யோசிச்சு எழுதற விஷயம் இல்லே. இதைத்தான் உள்ளொளி, தரிசனம்கிற வார்த்தைகள்ளே சொல்கிறோம். நினைச்சுப் பார்க்கிறப்போ, இதை எழுதறப்போ புதுமைப்பித்தன் அந்த க்ஷணத்திலே, ஒரு ரிக்வேத ரிஷியா. இல்லே ஒரு சித்திரா, பிரபஞ்ச தரிசனத்தை வேதப் பாடல்களாக தந்த மகாபுருஷனா தெரியறார். பிரபஞ்சம் முழுவதையும், தேவனா உருவகித்த சூரியனையும் குழந்தையின் தன இயல்பில் விளையாடும் காலடிக்குக் கொணர்ந்து இணைத்து விடுகிறார். இங்கே எந்த விமரிசனமும் தோத்துப் போகும். அருபந்தான் பெரிசு. அது ஃபிக்கலைன்னா. உனக்கு தமிழும் தெரியாது. கண்ணும் கிடையாது மன்ஸும் கிடையாது. ஏதோ ஒரு லேபிள் பண்டித்தனமதான் உனக்கு லபிச்சது சொல்லிக் காட்டியோ தர்க்கம் பண்ணியோ அதைத் தந்துட முடியாது. அதான் என்னைப் பொறுத்தவரை இலச
லக்கிய அனுபலமங்கிறது. அதைத்தான் தேடறேன். அதைப் புரிஞ்சுக்கத்தான எப்பவும் முயற்சி பண்றேன்.
சந்திப்பு: கெ.வி.
படங்கள்: ஓம் சுப்பிரமணியம்
Subscribe to:
Posts (Atom)