பிரமிள்

Pages

  • பிரமிள் கவிதைகள்
  • ஆத்மாநாம் கவிதைகள்
  • மௌனி சிறுகதைகள் - I
  • மௌனி சிறுகதைகள் - II
  • நகுலன் கவிதைகள்
  • சி.மணி கவிதைகள்
  • சுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....
  • கலாப்ரியா கவிதைகள்
  • யூமா வாசுகி கவிதைகள்
  • என். டி. ராஜ்குமார்: கவிதைகள்
  • பிரம்மராஜன் கவிதைகள்

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, December 31, 2017

அவதாரிகை - *நகுலன்" :: மழை-மரம்-காற்று முன்னுரை

அவதாரிகை - *நகுலன்"
முன்னுரை
நன்றி கொல்லிப்பாவை சிற்றிதழ்

இந்தக் கவிதை - வரிசையை நான் 15-8-75 ல் ஆரம்பித்து 22-8-75 ல் முடித்தேன். இதை நான் ஏன் எழுத ஆரம்பித்தேன் -எப்படி முடித்தேன் ஏன்பதைப்பற்றி எனக்குத் திட்டமாகத் தெரியவில்லை. திரும்பிப் பார்க்கும் பொழுது சில விஷயங்களைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். 
-
சமீபத்தில் திரு ஆர். பார்த்தசாரதியை (ஆங்கிலத்தில் கவிதை எழுதும் இந்திய க் கவிஞர்களில் குறிப்பிடும்படியான ஒரு கவிஞர்) இங்கு வேறு சில எழுத்தாள - நண்பர்களுடன், சந்திக்க என ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. எங்க்ள் பேச்சுக்கிடையில் அவர் சொன்ன ஒரு விஷயம் மாத்திரம் என் மனதில் பச்சை பிடித்தது. அவர் சொன்னார் தமிழில் மேல்நாட்டுக் கவிதைகளை மொழி பெய்ர்ப்பதால் தமிழ் இலக்கியத்திற்கு அது வளம் சேர்க்கும். பிறகு தான் சமீபத்தில் படித்த "பிரக்ஞை' யில் பிரஷ்ட் எழுதி ஒருகவிதையின் ஒரு பிரசித்தமான வரி என் உள்ளத்திஸ் வளைய வந்து கொண்டிருந்தது. பிரஸ்தாப வரி ” .இதில் .... மரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது கொடுஞ்செயல்" பிரஷ்ட் இதை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறியிருக்கிருன் என்பது'தெளிவு. ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உள்ள ஆபர்வமான ஒரு கேள்வி - கேட்கும் புத்தியில் பேசினால் என்ன என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. நான் என் கவிதையில் எழுதியிருக்கிற மாதிரி நான் ஒரு புதுக்கவிஞன் இல்லை; நான் ஐரோப்பிய இலக்கியங்களைப் படிக்கலாம்; ஆங்கில ஆசிரியனாக இருக்கலாம்; ஆனால் ஒரு சம்பிரதாயத்தில் வந்தவன்; ஒரு சூழ்நிலையில் வாழ்பவன். இவைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய குறை பாடுகளென்றால், உண்மையாகவே சொல்கிறேன், என்னால் அவைகளிலிருந்து மீற   முடியாது . அதைப் போலவே தான் என்னால் ஒரு அனுபவத்தை (அதைஎப்படி வேண்டுமானுலும் வரையறை செய்து கொள்ளுங்கள்) வைத்துக் கொண்டு தான் எழுத மு டி கிற து . பிறகு சமீபத்தில் நான் 'கணையாழி' யில் வந்த க. நா. சு. வின் காவியரூபத்தில் வந்த சுயசரிதையைப் படிக்க நேர்ந்தது. இது அந்தப் பத்திரிகையில் முற்றுப் பெறவில்லை. பலருக்கு அது காவியமாகவே படவில்லை; எனக்குப் பட்டது என்பதுதான் காரியம். பண்டிதர்களும் விதிகளும் என்றுமே சாசுவதம். ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு அவன் உணர்வும் அனுபவமும் தான் கட்டளைக்கல். அதனால் க. நா. சு. வின் 'சோதனை யைப் பின் பற்றி அனுபவத்தைச் சொற்சிக்கனத்துடன் மிகவும் நுட்பமாகவும் ஆழமுடனும் வெளியிடும் எந்த எழுத்தும் கவிதைதான் என்று ஏற்றுக் கொண்டு நாம் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் "யாப்பு' என்ற கட்டுப்பாட்டை மீறி இந்தக் கவிதையை எழுதியிருக்கிறேன். கடைசியாக ஆனால் அ - முக் கியமாக இல்லை. சமீபத்தில் நான் 'தெறிகள்" ல் படித்த 'கலாப்ரியா"" (என் அபிமானக் கவிஞர்களில் ஒருவர்) வின் "சுயம்வரம்" இக்கவிதைக்கு ஒரு அபூத காரணம் என்றும் சொல்ல வெண்டும்.

இந்தக் கவிதை - வரிசையில் சில மொழி பெயர்ப்புகளைச் சேர்த்திருக்கிறேன். மொழி பெயர்ப்பு பற்றி ஒரு வார்த்தை. இந்த மொழி பெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த கவிதைகள் அவைகள் பிரசித்த பெற்ற கவிஞர்களால் எழுதப்பட்டவை என்பதாலோ, அவர் - அவருடைய பிரசித்த பெற்ற கவிதைகளைத்தாள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையாலோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனக்குப் பிடித்த கவிதைகளை, என் கவிதைக்குப் பொருத்தமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அடுத்தபடியாக மொழி பெயர்ப்பு அவசியமா? ஒரு எழுத்தாளன் தன் சிருஷ்டி வேகம் குறைந்தபோது மொழி பெயர்ப்பில் ஈடுபடுகிறான் என்கிறார்கள். எனக்கு இது பொருத்தமாகப் படவில்லை. இன்னும் ஒன்று ஒரு எழுத்தாளன், தேசம், காலம் என்ற எல்லைகளைத் தாண்டினவனாலும், அந்த எல்லைகளிலிருந்து கொண்டு தான் அவன் அந்த எல்லைகளை மீறுகிறான் . இதில் முக்கியம் என்னவென்ருல் எந்த மொழியில் எழுதினாலும் எழுத்தாளன் பாஷை அனுபவத்தின் குரல். அதை அவன் எப்படி அவன் மொழி - மூலம் வெளிப்பாடு செய்கிறான் என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். இன்னுமொரு கேள்வி: மொழி பெயர்ப்பை எப்படிச் செய்ய வேண்டும்? நேரடியாகவா? எழுதப்பட்ட பாஷையின் இயல்புகளை ஒற்றியா? அல்லது மொழி பெயர்க்கப்படும் பாஷையின் இயல்புகளை ஒற்றியா? இதற்கு முடிவான ஒரு பதிலைக் கூறமுடியாது. ஆனால் பாஷையில் அனுபவமும் - மொழியும் புருஷனும் - பிரகிருதியும் போல் இணைந்திருப்பதால் இரண்டையும் இணைத்து மொழி பெயர்ப்பது தான் உத்தமம். இங்கு கூட ஒரு நூதன அனுபவம். தமிழில் பல வார்த்தைகள் இருக்கின்றன இதில் பல கலைஞனால் ஆளப்படாதவை. ஆனால் இத்தகைய வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்ப்பில் முதலாவதாகக் கொண்டு வரப்படுகையில் ஒரு நூதன உணர்ச்சி ஏற்பட்டாலும், மொழிபெயர்ப்பு கலாபூர்வமாக அமைந்தால், தமிழில் கூடுதல் வார்த்தைகள் எழுத்தாளனுக்குப் பொருத்தமான கருவிகளாக அமைந்து விடுகின்றன. சில இடங்களில் நேரடி யான மொழிபெயர்ப்பு சாத்தியமாவதில்லை. இது ஒருவகையில் மொழி பெயர்ப்பாளனின் திறமை யைப் பொறுத்தது. எனவே ஒரு நூலின் ஒன்றிற்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புகளின் அவசியம், மேலும் ஒரு படைப்பை ஒரு மொழியிலிருந்து என் மொழியில் நான் மொழி பெயர்க்கையில் அந்தப் படைப்பை இன்னும் சற்றுக் கூடுதலாக அணுகுகிறேன்.

இவ்வளவும் எழுதிவிட்டேன். ஆனால் என் கவிதை . வரிசையில் - மொழிபெயர்ப்புகள் ஒரு அம்சம் மாத்திரம். இந்தக் கவிதையில் எந்த அனுபவத்தை எவ்வளவு தூரம் வெற்றியுடன் செய்திருக்கிறேன் என்ற நிர்ணயிப்பை வாசகர்களுக்கு விட்டுவிடுகிறேன்.

*நகுலன்"
at 12/31/2017 08:40:00 pm
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, December 26, 2017

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை : முன்னுரை & அத்தியாயம் 1

http://orathanadukarthik.blogspot.in : for pdf

செம்மீன் மீனவர் சமூகத்துக்கதை. செம்பன் குஞ்சுவின் வாழ்வையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை. கடற்கரைக் கன்னி கறுத்தம்மாவின் தூய காதல் கதை.தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை.ஊக்கமும் உற்சாகமுமே உருவான சக்கியின் உழைப்புக் கதை. ஆண்மையும் ரோஷமும் மிக்க இளைஞன் பழனியின் கதை. மேலைக்கடல் அன்னையின் செல்லக் குழந்தைகளது நித்தியக் கதை. எளிய கதாபாத்திரங்களையும் சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் செம்மீன் . தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய இந்தப் புகழ்பெற்ற மலையாள நாவல் 1959-ல் சாகித்திய அக்காதெமிப் பரிசைப் பெற்றது. யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றுள் மொழி பெயர்க்ப்பட்டு வருகிறது.பல இந்திய மொழிகளில் சாகித்திய அக்காதெமியின் ஆதரவில் வெளிவந்துள்ளது. இதைத் தமிழாக்கியவர் சுந்தர ராமசாமி.


செம்மீன் -  தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் எழுதியது. தமிழில்: சுந்தர ராமசாமி.


முன்னுரை
டாக்டர் நாராயண மேனன்


கேரள ராஜ்யத்தில், ஆலப்புழைக்குத் தெற்கே பத்துமைல் தூரத்திலுள்ள தகழி என்னும் சிறு கிராமத்தில், 1914 ஏப்ரலில் பிறந்தவர் தகழி சிவசங்கரப்பிள்ளை. அவரது தந்தையார் ஒரு வேளாளர்; மெத்தப் படித்தவர். கேரளத்தின் சிறந்த நாட்டிய நாடகமான கதக்களிக் கலையில் தேர்ந்த நிபுணர். அவரது சகோதரரே நமது காலத்தில் தலைசிறந்த கதக்களி நாட்டிய நிபுனர் குஞ்சு குரூப், அந்த இல்லமே சம்ஸ்கிருதப் பண்பும் கேரள நாட்டுக் கலைகளும் செழித்த் சூழ்நிலை நிரம்பி விளங்கியது.

இளமையில் வீட்டிலேயே கல்வியைத் தொடங்கிய தகழி, பின்னர் கிராமப் பள்ளியிலும், அம்பலப்புழை நடுத்தரப் பள்ளியிலும் படித்தார். அந்தப் பள்ளிக்கூடம் கடற்கரையில் மீனவர் பகுதியினிடையில் இருந்தது. தகழி இங்குதான் முதன் முதல் செம்படவர் வாழ்க்கையை நேருக்கு நேர் கண்டார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் அங்கே ஒரு வக்கீலாகப் பணியாற்றியபோது அவரது கட்சிக்காரரில் பல செம்படவர் கள் இருந்தார்கள். அவரது நாவல்களில் காணும் பரீக்குட்டி களும் கறுத்தம்மாக்களும் கற்பனைப் பாத்திரங்கள் அன்று; அவர் நேரில் அறிந்த பாத்திரங்களே.

அம்பலப்புழையில் தடுத்தரப் பள்ளியில் கல்வியை முடித்துக்கொண்டு, ஹரிபாடுக்கு அருகிலுள்ள கருவட்டாவின் உயர்நிலைப்பள்ளியில் படிக்கத் தொடங்கினார் தகழி. அத்தக் காலத்தில்தான் அவர் கைணிக்கர குமாரப் பிள்ளையைச் சந்தித்தார். பெரும் புலவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான குமாரப்பிள்ளை,தகழியை மிகவும் கவர்ந்தார்.இதுவே அவரது இலக்கிய வாழ்வு உருவான காலம். தகழி சிறு பிராயத்தி

ézielégoks.gets karxbiridir

லிருந்தே கவிதை எழுதி வந்தார். தகழியின் திறமை வசனத்தில் அதிகமாகச் சுடர்விடுகிறது என்பதை உணர்ந்து, குமாரப் பிள்ளை அவரை வசனத்துறைக்குத் திரும்பிவிட்டார்.

பள்ளிக் கல்வி முடிந்ததும் தகழி, திருவனந்தபுரம் சென்றார். பிளிடர்ஷிப் பயிற்சி பெறுவதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அது சுதந்திரப் போராட்டம் உச்சத்திலிருந்த காலம் ஏ. பாலகிருஷ்ணபிள்ளை என்பவர் வீட்டில் அடிக்கடி கூடும் ஒரு அறிஞர் குழுவில் அவரும் சேர்ந்து கொண்டார். 'கேலரி என்னும் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரான பாலகிருஷ்ணபிள்ளை, ஒரு அறிஞர் குழு அமைத்து, இலக்கியர், அரசியல் சர்ச்சைகள் நிகழ்த்தி வந்தார். எதிர்காலத்தில் கேரளத்தின் இலக்கிய, அரசியல் தலைவர்களாக விளங்கக் கூடிய பல இளம் எழுத்தாளரும் அரசியல் மேதைகளும் அவரது தேர்ந்த தலைமையின்கீழ் உருப்பெற்றனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் தகழியின் இலக்கியக் கல்வியும் ஆர்வமும் விரிவடைந்தன. புரூட், மார்க்ஸ் உட்பட, ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களை விரிவாகப் படிக்கலானார். "வெள்ளத்தினிடையே", "அழகுப் பாப்பா" என்பன போன்ற அவரது கதைகள், அவர் ஒரு பெரிய கதாசிரியர் என்பதை உணர்த்தின.

1934-தகழியின் முதல் புத்தகம்"புதுமலர்"வெளிவந்தது.அது ஒரு சிறுகதை மாலை, அது உடனேயே பிரபலமாகி விட்டது. அதைத் தொடர்ந்து அவரது முதல் நாவல், "பிரதிபலம்" கைம்மாறு) வெளிவந்தது. வெளியான சில வாரங்களிலேயே பிரதிகள் முற்றும் விற்றுப்போய்விட்டன. அதே ஆண்டு,"பதித பங்கஜம்" என்னும் மற்றொரு நாவல் உருப்பெற்றது. அவரது எழுதுகோல் பல கதைகளைத் தீட்டியது. "அடியொழுகல்", "நித்திய கன்னிகை", "பைங்கதிகள்" என்பவை குறிப்பிடத் தக்கவை.

இந்தக் கதைகள் சமுதாய அமைப்பு வேகம் கொண்டவை. அதோடு, இடதுசாரி அரசியல் சார்புகொண்டவை.

இந்த நாள்வரை மலையாள இலக்கியத்தில், வசதியுள்ள தடுத்தரக்குடும்பவாழ்க்கையே இடம்பெற்றது. தகழியும்அவர் காலத்தவரும் வாழ்க்கையின் சகல துறைகளிலுள்ள மக்களின் ககதுக்கங்களையும் இலக்கிய ஏட்டுக்கு ஏற்றிவிட்டனர்.

ézielégoks.gettaritain

பெரும் காட்டுத் தீ என நாடு முற்றும் பரவிய விடுதலை இயக்கத்தில் தகழியும் பங்குகொண்டார்.ஓரிருமுறை அரசியல் நடவடிக்கைகளுக்காக அவர் தலைமறைவாக இருக்க வேண்டியிருந்தது. திருச்சூர் அருகே தடக்கன்சேரியில் இவ்வாறு தலைமறைவாக இருந்த ஒரு சமயம் தான். அவரது "தோட்டியுடமகன்" வெளிவந்தது.1947-ல் அது வெளிவந்ததும் மலையாளத்தில் பலமான விவாதத்தை எழுப்பியது. ஒரு தோட்டியின் வாழ்க்கையைத் தத்ரூபமாகச் சித்திரிக்கும் கதை அது படிப்பவர் மனம் தொந்துவிடும் அளவு அவ் வாழ்க்கையின் உண்மையைப் படம் தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.அந்த இளம் தோட்டிதன் மகன் தன்னைவிடச் சிறந்த வாழ்வை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறான். சாக்கடை வாழ்விலிருந்து தன் மகனை உயர்த்தும் முயற்சியில், தனது சமூகத்து மக்களையே ஏமாற்றும் அளவுக்குச் சுயநலவாதியாகிவிடுகிறான்.ஆயினும் என்ன பயன்? சமுதாயக் கட்டுப்பாடு அசைக்க முடியாத ஒன்றாயிற்றே தோட்டியின் மகன் பள்ளியிலும், தோழர்களிடையேயும் ஒதுங்கியேதான் வாழமுடிகிறது. சமூகத்தை எதிர்க்கும் இந்தப் போராட்டத்தில் அவன் தோற்றுவிடுகிறான். கொள்ளை நோயில் மடிந்து விடுகிறான்.தோட்டியின் மகனும் ஒரு தோட்டியாகவே வேலை பார்க்க தொடங்குகிறான் போரில் தோல்விதான்; ஆயினும் போராட்டம் ஓயவில்லை. சமுதாயத்தின் கண்ணும் காதும் மனச்சாட்சியும் திறக்கப்பட்டு, அப்பட்டமான உண்மையைக் காணும் வாய்ப்புப் பெறுகின்றன.

தகழி ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை உணர்த்தியது "இரண்டிடங்கழி" (இரண்டு படி" என்ற நாவல் 1948-ல் வெளியாயிற்று."ஒரு குடியானவன் மகன் என்ற நிலையில் நான் நன்கு அறிந்த, அனுபவித்த கஷ்டங்களை அதில் வெளி. யிடுகிறேன்" என்று தகழியே கூறுகிறார். இந்த நாவல் பல இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் வெளிவந்திருப்பதோடு, சினிமாப் படமாகவும் உருப்பெற்றது.

இரண்டிடங்கழிநாவல் பண்ணை வேலைசெய்யும் புலையர் என்னும் தீண்டாதார் சமூகத்தைப் பற்றியும், கடினமான கெளரவக் குறைவான விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் நிலச் சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் எடுத்துக்

* இந்த நாவல் தமிழிலும் வெளிவந்துள்ளது.

ézielégoks.get8 Filbidadi

கூறுகிறது. உண்மையை உள்ளபடியேதான் கூறுகிறது கதை ஆனால் தகழியின் அனுதாபம் எந்தப் பக்கம் செல்கிறது என்பதை உணர்வதில் சிரமமில்லை.

இரண்டிடங்கழியைத் தொடர்ந்து பல சிறுகதைகளும் குறுநாவல்களும் வெளிவந்தன. 1956 மார்ச்சில் வெளிவந்தது “செம்மீன். இந்தியாவின் சிறந்த இலக்கியப் பாராட்ட rான சாகித்திய அக்காதெமிப் பரிசு இந்த நாவலுக்கு அளிக்கப்பட்டது. இந்த நாவலும் சர்ச்சைக் குரியதாயிருந்தது வாழ்த்தும் வசவும் இதற்கு நிறையக் கிடைத்துள்ளன வீடுகளிலும் இலக்கியக் குழுக்களிலும் இது குறித்து விவாதங்கள் நிகழ்ந்தன. தாலுபேர் கூடிய இடங்களில் பேச்சு எழுந்தால், அது "செம்மீனைப் பற்றியே இருக்கும்.

இதுவரை பிரத்யக்ஷய வாழ்வையே பிரதிபலிப்பவர் கான்று கருதப்பட்ட தகழி, "செம்மீன்"நாவலில் கற்பனை அம்சத்தைப் புகுத்தினார். மீனவர் சமூக வாழ்க்கை முறை, அவர்களது நம்பிக்கைகள், மரபுகள், அவர்கள் படும் கஷ்டங்கள் ஆகிய அனைத்தையும் முறைப்பட வர்ணித்து, ஒழுக்கம் மிக்க வாழ்வு வகைகளில் அதுவும் ஒன்று என்பதை உணர்த்தினார்

கேரளத்துக் கடற்கரை எத்தனையோ சிறு சிறு மீனவர் கிராமங்கள் கொண்டது. கடலுடன் தமது வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட எளிய மீனவர்கள் வாழும் சின்னஞ்சிறு செம்படவச் சேரிகள் அவை; அத்தகைய கிராமத்துக் கதை "செம்மீன்"

இந்த மீனவர்களின் கொடிய வறுமை, அயரா உழைப்பு. எளிமை, ஆகியவற்றை நேரில் கண்டாலன்றி நம்பமுடியாது. அவர்களது வாழ்க்கையே ஒரு நீண்ட போராட்டம். ஆனால் அந்த சாகச வாழ்க்கையை அவர்களே பெருமையுடன் விரும்பி ஏற்றுக் கொண்டு விட்டதனால், வேறுவிதமாக வாழ விரும்பவில்லை. நல்லோரைக் காத்து, தீயோரைத் தயவின்றித் தண்டித்துவிடும் கடலன்னையிடம் உள்ள நம்பிக்கைதான் அவர்கள் வாழ்க்கையை இயக்குகிறது.

இத்தகைய எளிய சமூகங்களிலும் கூடக் கட்டுப்பாடுகளும் மரபுகளும் எத்தனை எத்தனையோ, சொந்தப் படகு வைத்திருப்போர், வெறும் கூலி வேலை செய்யும் செம்படவர், கிழக்கேயிருந்து, அதாவது உள்நாட்டிலிருந்து வரும் கீழ்மக்கள் என இவ்வாறு பல சாதிகள் - உட்பிரிவுகள் - அவர்களிடையே

arrietos. retPåstfir 8 உண்டு வியாபாரிகள், பெரும்பாலும் முஸ்லீம்கள், மீன் வாங்கி,

பதப்படுத்தி, நகரங்களிலும் துறைமுகங்களிலும் மொத்த sínum Lifrrfissíft.ti sólb Itirfssir.

கிராமத்தின் தலைவன் கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை சர்வாதிகள்ரி அவன் அனுமதியும் ஆசியும் இராமல் எவரும் சொந்தப் படகு வைத்துக்கொள்ள முடியாது. அவன் ஆசியில்லாமல் எந்தத் திருமணமும் நடந்துவிட முடியாது. சச்சரவுகளில் மத்யஸ்தம் செய்வது அவனே. எந்த வழக்கிலும் நீதிபதி அவனே,

பெண்களுக்குக் கற்பும் தூய்மையும்; ஆண்களுக்கு உடலு றுதியும் நெஞ்சுரனும் முக்கியம், கரையிலுள்ள பெண்களுடைய கற்பின் வலிமைதான் கடலில் படகேறிச் சென்றுள்ள மீனவருக்குப் பாதுகாப்பு. கடலம்மை கண்டிப்பானவள் எத்தனையோ சுழல்களும் கொடிய நீரோட்டங்களும் நிறைந்த பாதையைக் கடந்து, கடலின் பாதாளத்தில் வாழ்கிறாள் அவள், சற்றும் இரக்கமின்றி, கொடியோரை அவள் இழுத்துக் கொண்டு விடுவாள்.

கடின உழைப்பு மிக்க இத்தகைய தினசரிச் சூழலில் வேடிக்கைக்குப் பொழுது எங்கே? ஆனால் வாழ்க்கை வரண்டுவிடவில்லை. வலை நிறைந்து வழியும் நாட்களில், மீனவர்கள் அருகே உள்ள நகரத்திற்குச் சென்று கொண்டாடுவார்கள். ஆண்டுக்கொருமுறை ஆயில்ய விழா வருகிறது. புத்தாடை உடுத்து, பண்டிகை கொண்டாடி மகிழும் நேரம் அது இந்த வாழ்க்கை முறையில், ஒரு ஒதுக்குப்புறத்தில், அன்பும் காதலும் கூட இருப்பதைக் காணலாம், மெளனமான, பகட்டற்ற காதல், நிறைவேறிய காதல், சோகத்தில் முடியும் காதல் - எல்லாம் உண்டு. இவ்வாறு நெற்குன்னம், திரிகுன்னம் புழைகிராமத்து மீனவர் குடிகள் எவ்வளவுதான் எளிமையா யிருந்தாலும், மனித சமூகத்தின் அம்சமாகவே விளங்கினர்.

இதுதான் செம்மீன் கதையின் களம், அதிக ஆசை பிடித்து, அதன் காரணமாகச் சீலம் குறைந்த ஒரு மீனவனின் பெண் கறுத்தம்மா, பரீக்குட்டி என்னும் முஸ்லீம் வியாபாரியை நேசிக்கிறாள். ஆனால் அவர்களது தூய காதல் இனிது நிறைவேறவில்லை. தான் பரீக்குட்டியை மணக்க முடியாது என்று கறுத்தம்மாவுக்குத் தெரியும். பரீக்குட்டிக்கும் அது தெரியும். சமூகக் கட்டுப்பாடுகள் அவ்வளவு வலுவானவை.

arrietoseg lráldi

பரீக்குட்டியிடமிருந்து தன் நினைவை அகற்றக் கூறுக்கம1 வால் இயலவில்லை. வசந்த நாளில் தயே வரும் ரோஜாவைப்போல தவிர்க்க முடியாத வண்ா அவர்கள் காதல் மலர்கிறது. ஆயினும் சுறுத்தம், மெகtalக, சோகத்துடன், ஓர் இளம் மீனவனைக் கூடிாவதாகக் கைப்பிடிக்கிறாள். அவளது மனப் பேட் மிகசா அறிந்தவள் அவள் தாய் ஒருத்திதான் சுறுத்தl! கட்டிய கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ டிஸ்கrவே பக்குவமாக நடந்து கொள்கிறாள்? இந்த அப்போ!'

டத்தை விவரிக்கும் பகுதிகள் இந்த நூலிலே உள்நாத்த உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. கறுத்த்bthாவிகர் வாழ்வில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்துகொண்டே வருகிறது கடைசியில் தவிர்க்க முடியாத சோக முடிவு வற்படுகிறது

செம்மீனுக்குப் பிறகு தகழி மற்றுமொரு நவாடி 1989 ல் எழுதினார், கேரள சமூகத்தில், தோட்டி , குடியவள். மீனவன் என்று தாழ்ந்து ஒதுங்கிய சிறு சிறு இகாங்கலாப் பற்றியே எழுதியவர், "ஒளியப்பின் மக்கள்" என்று இப்புது நாவலில் கேரளதாட்டுக் கிறிஸ்துவக் குடிமக்களின் வtழ்வை விளக்குகிறார். தற்போது அவர் எழுதி முடித்துள்க! புதிய பெரிய நாவல், அவர் காலத்துச் சமூகச் சரித்திராக விாங்குக் ஒரு தனி இனத்தைப் பற்றி வருணிக்க#1ல், இது சமுதாயம் அனைத்தையுமே களமாகக் கொண்டது

தகழி அதிகமாகவும் வேகமாகவும் எழுதுபவர் செம்மீன் நாவலை அவர் இருபது நாட்களுக்குள் முடித்து விட் ஈர். ஆனால் அவர் எழுத்தில் விகாரமான ஒரு சொல்காலக்க நான் கண்டதில்லை. நாற்பத்தெட்டு வயது நிறைந்தவர் தகழி. மாறி வருவதோடு நாள்தோறும் வளர்கிறார் இவ்வகையr வளர்ச்சி அவருடைய ஆற்றலுக்கு மட்டுமல்லாமல், அவருடைய தன்மைக்குமே அளவுகோலாகும் தெளித்த ஓட்டமும், வேகமும், சிருஷ்டித் திறந்தும் ரிக்க கழுதுகோபி லிருந்து நாம் எதிர்பார்க்கக் கூடியவற்றிற்கு ஒரு கல்லையும் உண்டோ?

jas"எங்க அப்பா தோணியும் வலையும் வாங்கப் போறாரே" "உன் அதிர்ஷ்டம்"

கறுத்தம்மாவுக்கு வாய் அடைத்துப் போய்விட்டது. தனது நிலைமையைச் சமாளித்துக் கொண்டு பேசினாள்:

"ஆனா பணம் கொஞ்சம் குறையிது. எங்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பியா?"

"என் கையில் ஏது பணம்?" என்று தன் சுைகளை விரித்துக் காட்டினான் பரீக்குட்டி கறுத்தம்மா சிரித்தாள்.

"பின்னே எதுக்காகப் பெரிய முதலாளின்னு சொல்லிக்கிட்டு இருக்கிறாயாம்?"

"நீ ஏன் என்னை சின்ன முதலாளீன்னு கூப்பிடுறே?" "பின்னே எப்படிக் கூப்பிடணும்?" "பரீக்குட்டின்னு கூப்பிடணும்" சுறுத்தம்மா "பரீ" என்பது வரையிலும் சொல்லி விட்டுச் சிரித்தாள்.தனது முழுப்பெயரையே சொல்லும்படி பரீக்குட்டி அவளிடம் கேட்டுக் கொண்டான். கறுத்தம்மா சிரிப்பை

அடக்கிமூகத்தில் கெளரவபாவத்தை வரவழைத்துக்கொண்டு, "மாட்டேன்" என்று தலையசைத்து விட்டுச் சொன்னாள்:

"நான் கூப்பிடமாட்டேன்"

"அப்படியானா நானும் கறுத்தம்மான்னு கூப்பிட Lott GLoir.”

"பின்னே எப்படிக் கூப்பிடப் போறே?"

"நான் உன்னே பெரிய மரக்காத்தீன்னு கூப்பிடுவேன்."

குபிரென்று சிரித்தாள் கறுத்தம்மா. பரீக்குட்டியும் வாய்விட்டுச் சிரித்தான். நெடுநேரம் சிரித்தார்கள் அப்படி எதற்குத்தான் அப்படிச் சிரித்தார்களோ? ஏனோ அடக்க முடியாமல் சிரித்தார்கள்:

arrietose2 0lrúidir

"அது சரி, தோணியும் வலையும் வாங்கினா, தோணி மீனை எனக்கு விலைக்குப் போடணும்னு உன் அப்பா கிட்டே சொல்லுவியா?"

"நல்ல விலை கிடைத்தால் மீன் கொடுப்போம்." மீண்டும் குபிரென்ற சிரிப்பு! இத்தனை தூரம் சிரித்து மகிழ இந்தப் பேச்சில் என்ன இருக்கிறது? இது என்ன ஒரு பிரமாதமான ஹாஸ்யமா? பேச்சுக்குப் பேச்சு ஒருவரால் வாய்விட்டுச் சிரிக்க முடியுமா?

சிரி சிரியென்று சிரித்ததில் கறுத்தம்மாவின் கண்களில் நீர் முட்டி விட்டது. மூச்சுத் திணற அவள் சொன்னாள்:

"சிரிப்பு மூட்டாதே சின்ன முதலாளி" அதைப்போல், தன்னையும் சிரிப்பூட்ட வேண்டாமென்று பரீக்குட்டி அவளிடம் கேட்டுக்கொண்டான். "அடேயப்பா! என்னாசின்ன முதலாளி நீ"

ஒருவரை ஒருவர் கிசுகிசுமூட்டிவிட்டுக் கொண்டது போல் இருவரும் சிரித்தார்கள். கிசுகிசு மூட்டினால் சிறிது நேரத்தில் சிரிப்பு மறைந்து போகும்; முகம் சிவக்கும்; கடைசியில் அழுகையில் போய் முடியும், அப்படித்தான் கறுத்தம்மாவின் முகமும் சிவந்தது. அவள் ஏனோ கலவரமடைந்தாள்; இல்லை, ஒருவகை அருவருப்புணர்வு ஏற்பட்டது அவளுக்கு,

"என்னை அப்படி மொறைக்காதே"

அவளிடம் சிரிப்பு மறைந்தது. தன்னுணர்வின்றி ஏதோ தவறிழைத்துவிட்டான் பரீக்குட்டி அவன் சொன்னான்:

"நீ எனக்குச் சிரிப்பு மூட்டிவிட்டு"

"La lubapebubo"

பெருக்கல் சின்னம்போல் கைகளை மார்பின்மீது மடக்கி வைத்துகொண்டு திரும்பி நின்றாள் சுறுத்தம்மா. அவள் மீண்டும் ஒருமுறை குன்றிக் குறுகிப் போனாள். ஓர் ஒற்றை வேட் டி மட்டும்தான் அவள் உடுத்தியிருந்தாள்.

t

"ஹம்ே. என்ன இது சின்ன முதலாளி

வீட்டிலிருந்து கறுத்தம்மாவை அழைக்கும் குரல் கேட்டது. வியாபாரத்திற்காகக் கிழக்கே சென்றிருந்த சக்கி திரும்பி

ézielégoks.getlaritis 3. வந்துவிட்டாள். கறுத்தம்மா வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தாள். அருவருப்பு உணர்ச்சியோடுதான் அவள் செல்லுகிறாள் என்று பரீக்குட்டி எண்ணிக் கொண்டான். அவன் வாட்டமுற்றான். பரீக்குட்டியிடம் கோபத்துடன், கடுமையாக ஏதோ தான் சொல்லிவிட்டதாகவே கறுத்தம்மாவுக்கும் தோன்றிற்று. அவன் மனம் வேதனைப்படுமே. பfக்குட்டியின் முன்னால் மட்டுமல்ல, வேறு எந்த இடத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அவள் அப்படிச்சிரித்ததில்லையே ஒரு விசேஷமான அனுபவம்தான். மூச்சுத் திணற, சுவாசப் பையே வெடித்து விடுவது போல் அல்லவா அவள் சிரித்தாள். தான் அம்மணமாக நின்று கொண்டிருப்பது போல் தோன்றியது அவளுக்கு. எவருடைய பார்வையிலும் படாமல் மறைந்துவிட்டால் போதும் என்ற எண்ணமும் அப்போது கூடவே பிறந்தது. அன்றுவரை அவளுக்கு ஏற்பட்டிராத அனுபவம் அது. அவன் நெஞ்சில் தைக்கும்படி ஏதோ சொல்லிவிட்டேன் போலிருக்கிறது!

எத்தனை எடுப்பாக இருக்கிறது அவளுடைய மார்பகம்! கனத்துக்குக் கனம் எத்தனை வளர்ச்சி பார்வையை அங்கே குவிக்கையில் பரீக்குட்டிக்குத் தன் நரம்புகள் முறுக்கேறுவது போலிருக்கிறது. அந்த உணர்விலிருந்துதான் சிரிப்பு மூண்டதோ! அவள் ஓர் ஒற்றை வேட்டிதான் கட்டியிருந்தாள். அதுவும் மெல்லியதாகவே இருந்தது.

அவள் பிணங்கிச் சென்று விட்டதாகப் பரீக்குட்டி எண்ணினான், நான் நடந்துகொண்ட விதத்தில் அதிருப்திபுற்று, கோபித்துக் கொண்டு போய் விட்டாள் கறுத்தம்மா இனிமேல் என்னை நாடி வரமாட்டாளா?.தவறை மன்னித்து விடு என்று கறுத்தம்மாவிடம் சொல்லவேண்டும். இனிமேலும் இப்படிமரியாதைக்குறைவாகவே நடந்துகொள்ளமாட்டேன்.

பரஸ்பரம் இருவரும் மன்னிப்புக் கோர எண்ணினர்.

நாலைந்து வயதான ஒரு சிறுமி அந்தக் கடற்கரையில் கிளிஞ்சல் பொறுக்கியும்,தோனிக்குள் வலையை உதறுகையில் வெளியே சிதறி விழும் குஞ்சு மீன்களைப் பொறுக்கியும் திரிந்த காலத்தில், அந்தச் சிறுமிக்கு ஒரு தோழன் கிடைத்தான். அவன்தான் பரீக்குட்டி, நிஜாரும் மஞ்சள் சொக்காயும் அணிந்து, கழுத்தில் பட்டு உருமாலும் சுற்றி, குஞ்சம் தொங்கும் தொப்பியும் அணிந்து கொண்டு, தன் "வாப்பா'வின் கையில்

ézielégoks.get4. laritain

தொங்கியவாறு பரீக்குட்டி முதன்முதலில் கடற்கரைக்கு வந்தது, கறுத்தம்மாவுக்கு நல்ல ஞாபகம்தான். தங்கள் வீட்டின் தெற்குப் பக்கத்தில்தான் அவர்கள் மணலில் கிட்டங்கி கட்டி விளையாடினார்கள். இன்றும் அந்தக் கிட்டங்கி அங்கேதான் இருக்கிறது. வாலிபனாகிவிட்ட பரீக்குட்டி இப்போது அங்கே வியாபாரியாகக் காட்சியளிக்கிறான்.

இப்படி அவர்கள் இருவரும் அண்டை வீட்டுக்காரர்களாக அந்தக் கடற்கரையில் வளர்ந்து வந்தனர்.

அடுப்பில் தீ மூட்டியபடி அடுக்களையில் உட்கார்ந்திருந்த கறுத்தம்மா ஏதேதோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தர்ள். நெருப்பு அடுப்புக்கு வெளியே படர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அப்போது அடுக்களையினுள் நுழைந்த அவளுடைய தாய் தன் பெண் உட்கார்ந்திருந்த லட்சணத்தையும் அடுப்பு எரியுங் கோலத்தையும் சிறிது நேரம் பார்த்தபடி நின்றாள்.

சக்கி கறுத்தம்மாவைக் காலால் ஒரு தட்டுத் தட்டினாள்.

அவள் கனவிலிருந்து விடுபட்டு, திடுக்கிட்டு விழித்தாள். சக்கி Garrutorsa, Gastrait:

"யாரை நெனச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கே?"

கறுத்தம்மா அப்போது இருந்த நிலையைப் பார்த்தால் யாருமே அப்படிக் கேட்கத்தான் செய்வார்கள், சக்கியின்மேல்

பிசகு இல்லை; கறுத்தம்மா இந்த உலகிலேயே இருக்கவில்லை.

"அம்மா! அங்கே கரையிலெ ஏத்தி வெச்சிருக்கே தோணி, அதுக்குப் பின்னாலே நின்னுக்கிட்டு, சின்ன முதலாளி கிட்டே அக்கா சிரிச்சிப் பேசிக்கிட்டிருந்தா அம்மா"

இப்படிச் சொன்னவள் கறுத்தம்மாவின் தங்கை பஞ்சமி. கறுத்தம்மா பதறிப் போனாள், அவள்மீது பழிசேர்க்கும் ரகசியம் அல்லவா அது? யாரும் அறியாத ரகசியத்தை அவள் வெட்ட வெளிச்சமாக்கி விட்டாளே. அதோடு விட்டுவிடவில்லை பஞ்சமி

"என்னா சிரிப்புச் சிரிச்சிக்கிட்டிருந்தா தெரியுமா அம்மா"

இதைச் சொல்லிவிட்டு, ‘என்னை ஏய்த்தால் இப்படித்தான் வரும்’ என்ற பாவத்தில் விரலைச் சுட்டிக் காட்டி விட்டு ஓடிவிட்டாள் பஞ்சமி

ézieÉgoks.getசெம்ய்ன் s பஞ்சமியை வீட்டிலே விட்டு விட்டுத்தான் வெளியே சென்றாள் கறுத்தம்மா. அக்கம் பக்கத்துக் குழந்தைகளுடன் விளையாடப் போகமுடியாமலாகி விட்டது, பஞ்சமிக்கு, வீட்டில் ஒருசமயம்கூட ஆள் இல்லாமலிருக்கக் கூடாது என்பது செம்பன் குஞ்சுவின் உத்தரவு தோணியும் வலையும் வாங்கும் பொருட்டு அவன் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தான். எனவேதான் பஞ்சமி வீட்டில் இருக்கவேண்டியதாயிற்று. அதற்கு இப்படி அவள் வஞ்சம் தீர்த்துக்கொண்டு விட்டாள்.

ஒரு தாய் அசட்டை செய்யக்கூடிய காரியமா இது?

சக்கி கறுத்தம்மாவிடம் கேட்டாள்:

"என்னடி சொல்றா இவ?"

சுறுத்தம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

"என்ன நெனச்சிக்கிட்டிருக்கே நீ?"

இந்தக் கேள்விக்குக் கறுத்தம்மா பதில் சொல்லித்தானே வண்டும். ஆமாம் சொல்லக் கடமைப்பட்டவள் அவள்.

岛

தட்டுத்தடுமாறி ஒரு பதிலைக் கண்டுபிடித்தாள்.

"நான் கடற்கரைப் பக்கம் சும்மா போய்க்கிட்டிகுந்தேன்"

"கடற்கரைப்பக்கம் போய்க்கிட்டிருக்கிறபோது-?"

"சின்ன முதலாளி தோணியிலே உட்கார்ந்துகிட்டிருந்தான்."

"அதுக்கு நீ ஏன் இளிக்கணுமாம்?"

கறுத்தம்மாவுக்கு ஒரு சாக்கு சொல்லக் கிடைத்தது.

"தோணியும் வலையும் வாங்குறதுக்குப் பணம் குறையிதேன்னு, கேட்டுக்கிட்டிருந்தேன்."

"நீ எதுக்குடி பணம் கேக்கணும்?"

கறுத்தம்மா முதலில் சொன்ன பதிலையே விடாமல் பிடித்துக் கொண்டு பேசினாள்:

"சின்ன முதலாளிக்கிட்டே பணம் கேட்கணும்னு அண்ணைக்கி நீயும் அப்பாவும் பேசிக்கிட்டிருக்கலியா?"

a7iiieaas, rei8 ris

- நம்பும்படியான பேச்சாக இல்லை அது. அவள் ஒரு பதிலை ஜோடித்துச் சொல்லிப் பார்த்தாள். சக்கி கறுத்தம்மாவை ஏற இறங்கக் கூர்ந்து கவனித்தாள்.

சக்கி அந்தப் பருவத்தைக் கடந்து வந்தவள்தான். சக்கி, கறுத்தம்மாவின் பிராயத்தில் இருந்த காலத்திலும் அந்தக் கடற்கரையில் கிட்டங்கிகளும், கிட்டங்கிகளில் சின்ன முதலாளிகளும் இருந்திருக்கலாம். கரையேற்றிப் போட்டி ருக்கும் தோணியின் மறைவில் நின்றவாறு சின்ன முதலாளிகள் சக்கியையும் கலகலவென்று வாய்விட்டு சிரிக்கும்படி செய்திருக்கலாம். சக்கியும் கடற்கரையில் பிறந்து வளர்ந்த ஒரு செம்படவப் பெண்தான். அவளுடைய பரம்பரை பரம்பரை. யாக ஒப்புக்கொள்ளப்பட்டு வரும் ஒரு தத்துவப் பேருண்மைக்குக் கட்டுப்பட்டவள்தான்!

அலைகளுக்கும் நீரோட்டத்துக்கும் எதிராகப் போர் தொடுத்து,ஒரு மரத்துண்டில் அடிவானத்தைத்தாண்டிசென்ற முதல் செம்படவனின் மனைவி, விரத நோன்பெடுத்துக் கடற்கரையில் மேற்கு நோக்கி நின்றவாறு தவம் செய்து கொண்டிருந்தாள். கடலில் குறை கிளம்பி விட்டது. வாயைப் பிளந்தபடி திமிங்கிலங்கள் நெருங்கின. சுறாமீன்கள் வாலால் தோணியைத் தாக்கின. நீரோட்டம் தோணியை ஓர் அகண்டமான சுழியினுள் இழுத்துச் சிக்கவைத்தது. சகல விபத்துகளினின்றும் வியக்கும்படி தப்பித்துவிட்டான் அந்தச் செம்படவன். அதுமட்டுமல்ல ஒரு பெரிய மீனோடு அவன் கரைவந்து சேரவும் சேர்ந்தான். அந்தப் புயலிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தான் அவன்? அவனைத் திமிங்கிலங்கள் ஏன் விழுங்கவில்லை? சுறாமீனால் தாக்குண்டும் தோனிக்குக் கேடு எதுவும் சம்பவிக்கவில்லையே? நீரோட்டம் வழிவிடத் தோணி மிதந்துவந்தது. இவ்வாறெல்லாம் நிகழக்காரணம் என்ன? அந்தக்கற்புடையாள் கடற்கரையில் தவம் செய்து கொண்டி ருத்தாள்.

கடற்கரைப் பெண்டிர் அந்தத் தவபலத்தை உணர்ந்து கொண்டனர். அந்தத் தவபலத்தை, வாழ்க்கைத் தத்துவத்தைச் சக்கியும் தனதாக்கிக் கொண்டாள். சக்கியின் மார்பு பூரண வளர்ச்சி அடைந்த அந்தக் காலத்தில் ஒருவேளை அவளையும் ஒருசின்னமுதலாளிவெறித்திருக்கலாம்.அன்று சக்கியின் தாய் சக்கியிடமும் கடற்கரைப் பெண்களின் தவபலத்தையும், வாழ்க்கைத் தத்துவத்தையும் அறிவுறுத்தியிருக்கலாம்.

ézielégoks.getFår 睿

கறுத்தம்மாவின் தவறைப் புரிந்துகொண்டோ, புரிந்து (elsirairgirrupGarr éráká Gearnrgárairirgír:

"இன்னைக்கிநீசின்னப் பொண்ணில்லெ, பெரிய மரக்காத்தி ஆயிப்புட்டேஆமா"

'பெரிய மரக்காத்தி’ என்று பரீக்குட்டி அழைத்தது சுறுத்தம்மாவின் செவிகளில் முழங்கிற்று. சக்கி தொடர்ந்து (asfrekvezreit:

"பரத்துகிடக்கிற இந்தக் கடல்லே எல்லாம் இருக்குது பொண்னே; எல்லாம் இருக்குது. கடலுக்குப் போகிற ஆம்புளை திரும்பிவாறது எப்படீன்னுநெனச்சுக்கிட்டிருக்கே? கரையிலே இருக்கிற பொம்புள்ளைகள் மானம் மரியாதை யோட இருக்கிறதனாலேதான். தோணியைச் சுழி அப்படியே துக்கி முழுங்கிப்புடும். கடலுக்குப் போகிற ஆம்புள்ளையின் உசிரு கரையிலே இருக்கிற பொம்புள்ளை கையிலதான்

இருக்கு"

கறுத்தம்மா அங்குமட்டுமல்ல, அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல, இவ்வார்த்தைகளைக் கேட்கிறாள். தாலு மரக்காத்திகள் கூடுகின்ற இடத்திலெல்லாம், இதே பேச்சு அடி படுவதைக் கேட்டிருக்கிறாள்.

இருந்தாலும் பரீக்குட்டியோடு சற்றுசிரித்து விளையாடிப் பேசியதில் என்னதான் தவறு நேர்ந்து விட்டதாம்? கடலுக்குப்போகிற புருஷன் ஒருவனின் உயிர் இன்னும் அவள் கையில் ஒப்படைக்கப்படவில்லையே. ஒப்படைக்கப்பட்டால் அவளும் அந்த உயிரை மிக ஜாக்கிரதையாக, பத்திரமாகக் காப்பாற்றுவாள் எப்படிக் காக்க வேண்டும் என்பதையும் அவள் அறிவாள். ஓர் அரயப் பெண்ணுக்கு யாரும் இதைக் சுற்றுக் கொடுக்கவேண்டியதில்லை.

சக்கி தொடர்ந்து சொன்னாள்:

"சில சமயம் இந்தக் கடல் வறண்டு ஒண்ணுமில்லாமப் போகுதே, அது ஏன் தெரியுமா? கடல்தாய்க்குக் கோபம் வந்துடுத்தின்னா எல்லாத்தையும் அளுச்சிப் போடுவா. அப்படி இல்லைன்னா தன் குழந்தைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பா. தங்கக் கட்டி கெடக்குது பொண்னே, கடல்லே தங்கக்கட்டி கெடக்குது."

ézielégoks.gete kvúdd

அத்துடன் ஒரு பேருண்மையையும் தன் மகளுக்கு உபதேசித்தாள் சக்கி

"ஒழுக்கம் இருக்குதே, அதுதான் பொண்னே பெரிசு, மரக்காத்தியின் ஒழுக்கம்தான் மரக்கானுக்குச் சொத்து"

ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்துவிட்ட சில சின்ன முதலாளிகள், சில சமயங்களில் கடற்கரையை அசுத்தப் படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். செம்மீன் அடிக்கவும், கருவாட்டுச் சிப்பம் கட்டவும் கிழக்கே இருந்து சில பெண்கள் வருவதுண்டு. அவர்களும் கடற்கரையை அசுத்தமாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கே தெரியும், கடற்கரையின் பரிசுத்தத் தன்மை? அவர்கள் கடல்தாயின் குழந்தைகளும் அல்ல. ஆனால், அதன் பலாபலன்கள் கடற்கரைச் செம்படவர்களின் தலையில் வந்து விடியும்.

"கரையேத்திப் போட்டிருக்கும் தோணியின் பின் பக்கம், புதர்க்காடு. இதெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடங்கள். ஆமாம்"

இதைச் சொல்லிவிட்டு, மிகுந்த கெளரவ பாவத்துடன் முக்கியமான எச்சரிக்கை ஒன்றைச் சக்கி அறிவித்தாள்:

"இதோபாரு, நீ வயசுவந்த பொண்ணு. சின்ன முதலாளி களும், கண் தலை தெரியாமல் திரிகிற இந்தக் காலத்து இளவட்டப் பிள்ள்ைகளும் முன்னும் பின்னும் கண் போடுவாங்க"

கறுத்தம்மாவுக்கு நடுக்கம் எடுத்தது. ஆமாம், உண்மையில் தோணிமறைவில் அப்படித்தானே நிகழ்ந்தது? அப்போது கறுத்தம்மாவின் மனசுக்குள் ஒர் எதிர்ப்பு உணர்ச்சி மூண்டதே அது பரம்பரை பரம்பரையாக வந்து, அவள் உடம்பிலும் உறைந்துவிட்ட குணாம்சமாக இருக்கலாம். மார்பகத்தையும் பிருஷ்ட பாகத்தையும் ஒருவன் வெறித்துப் பார்ப்பது கடல்தாயின் குழந்தைக்குப் பெருமை தரக்கூடிய காரியம் அல்ல போலும்,

"கறுத்தம்மா, நீ கடலைப் பாழாய் அடிச்சி, கரையிலே வாழுகிற ஜனங்கள் வாயிலே மண்அள்ளிப்போட்டுவி தே"

கறுத்தம்மாவுக்குப் பயம் பிடித்து விட்டது சக்கி 'தெ: ப்த்து சொன்னான்:

arrietoaks, frelaribdaig 19

"அவன் நாலாம் மதத்து ஆசாமி. அவனுக்கு இந்த நினைப்பெல்லாம் இருக்காது"

சகல விஷயங்களையும் தெரிந்துகொண்டு விட்டது போலத்தான் சக்கி பேசினாள். அன்று இரவு கறுத்தம்மா உறங்கவில்லை. அந்த ரகசியத்தை வெளியாக்கிய பஞ்சமியிடம் அவளுக்குக் கோபம் இல்லை, இப்படிச் சொல்லி விட்டானே என்றும் அவள் எண்ணவில்லை. தவறு செய்து விட்டோம் என்ற உணர்வு அவளுக்கே இருந்ததால்தான் அவள் அவ்வாறு எண்ணவில்லையோ என்னவோ? ஒரு ஜனசமூகத்தில், நூற்றாண்டுகளாக, நிரந்தரமாக நிலைநின்று வரும் வாழ்க்கைத் தத்துவம் அவளிடத்திலும் குடிகொண்டிருக்கிறது. இப்போதுதான் அது தெளிவான உருவம் பெறுகிறதோ என்னவோ? வழிபிசகிச் சின்னாபின்னமாய்ப் போய்விடுவோமோ என்ற பீதியும் அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். அந்தப் பீதி இருக்கும் வரையிலும், அவள் பஞ்சமியிடம் கோபம் கொள்ளக் காரணமில்லை, கறுத்தம்மா அப்போது எந்த மனநிலையில் இருந்தாளோ அதிலிருந்து அவளைக் கிள்ளியெறியக் கிளம்பியது போல் ஒரு பாட்டு, கடற்கரையிலிருந்து மிதந்துவந்து அவள் காதை அடைந்தது.

கறுத்தம்மா கவனித்தாள்.

பாடுவது பரீக்குட்டிதான். அவன் ஒன்றும் பாடகன் அல்ல. ஆனாலும் தோணியின் விளிம்பில் அமர்ந்தவாறு அவன் பாடிக் கொண்டிருக்கிறான். தான் அங்கிருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியவளுக்கு, பின் அதை எப்படித் தான் தெரிவிப்பது.

தெரிந்துகொள்ள வேண்டியவள் தெரிந்துகொண்டு விட்டாள். எட்ட வேண்டிய இடத்தை எட்டிவிட்டது. கறுத்தம்மாவுக்கு இருக்கை கொள்ளவில்லை. யாரும் அறியாமல் இறங்கிச் சென்றுவிட்டால்-? மார்பகங்களையும் பிருஷ்ட பாகத்தையும் அவன் வெறித்துப் பார்ப்பான். போகவேண்டிய இடமோ தோணி மறைவு. ஆபத்தான இடம். அவனோ நாலாம் மதத்துக்காரன்.

அவன் பாடிய பாடல் கடல்மேல் செல்லுகிற, செம்படவர் கள் பாடும் பாட்டுத்தான். சிறிதுநேரம் செவிசாய்த்து இருந்துவிட்டோம் என்றால், தானாகவே எழுந்து இறங்கிச் சென்று விடுவோமோ என்றுகூடக் கறுத்தம்மா பயந்தாள்.

anietzaka, e2 rifau

மார்பகத்தை அவன் வெறிக்கையில், பார்வை இதயம்வரை துளைத்துக் கொண்டு சென்றுவிடுகிறது. அதற்கு இடம் கொடுத்து ஆட்பட்டு நிற்பதில் அலாதியான ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. மார்பு என்பதெல்லாம் என்ன? வெறும் சதைப் பிண்டம்தானே? கறுத்தம்மா மார்பு குழையக் கவிழ்ந்து படுத்தாள். விரல்களையும் காதினுள் திணித்துக் கொண்டாள். அதன் பின்பும் அப்பாடல் அவளுள்ளே ஊடுருவிச் செல்லத்தான் செய்தது,

கறுத்தம்மா அழுதே விட்டாள்.

அவளிருந்த அந்த அறையின் செல்லரித்துப்போன கதவு தானே திறந்து கொண்டு விடலாம். அல்லது அது கக்கு நூறாய்ச் சிதறுண்டு போய்விடலாம். ஆனால் எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாத கற்கோட்டையின் உள்ளே அல்லவா அவள் வாழ்ந்து வருகிறாள். கடல் தாயின் குழந்தைகளிடையே நூற்றாண்டுகளாக நின்று நிலைத்து வரும் வாழ்க்கைத் தத்துவத்தால் எழுப்பப்பட்ட, கனமான, உன்னதமான கற்கோட்டை அது அதற்கு வாசல் என்பது இல்லை; ஜன்னல் என்பதும் இல்லை, ஆனால், குருதி கொப்பளிக்கும் தசை அக் கற்கோட்டையைப் பிளந்து எறிந்து விடாதா? அதற்கு முன்னும் அதுபோன்ற கற்கோட்டைகள் தகர்ந்ததில்லையா?

மனித நடமாட்டம் இல்லாத அந்தக் கடற்கரையில் பரீக் குட்டியின் பாட்டு எங்கும் ஒலித்தது. இரவில் குடிசை வாயிலைத் தானே திறந்துகொண்டு ஒர் அரயப் பெண் வெளியேற வேண்டும் என்பதற்காகப் பாடப்பெற்ற பாடல் அல்ல அது அதற்குத் தாளம் இல்லை; இசை இனிமையும் இல்லை.பாடுகிறவன் குரலும் நன்றாக இல்லைதான். எனினும், அந்தப் பாட்டில் அலாதியானதொரு ஜீவகளை இருக்கிறது. தான் அங்கிருப்பதை அவன் அவளுக்கு அறிவிக்க வேண்டாமா? தன்னை மன்னிக்க வேண்டுமென்று அவன் அவளிடம் கேட்டுக்கொள்ளப்போகிறான். பாடிப் பாடிப் பரீக்குட்டிக்குத் தொண்டை கட்டியது.

காதிலிருந்த விரல்களை அகற்றினாள் கறுத்தம்மா. அடுத்த அறையில் அவளுடைய தாயும் தகப்பனும் பேசிக் கொண்டிருந்தனர். இல்லை, அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருத்தார்கள். கறுத்தம்மா இதைக் கவனித்தான். அவள்

ézielégoks.getQlariâsdr 2.

விஷயமாகவே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

செம்பன் குஞ்சு சொன்னான்:

"அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒண்னும் சொல்ல வேண்டாம். நானும் ஒரு மனிசப் பிறவிதான்"

சக்கி கோபத்துடன் சொன்னாள்:

"பூ மணிசன்,அப்படி நெனச்சிக்கிட்டிருந்தாப் போதும் மக அதியாயாமாக கெட்டுப் போவா. ஆமா, "போடி போ!

அதுக்குள்ளே நான் அவளைக் கட்டிக் கொடுத்திடுவேன்"

"அது என்னமா முடியும்? காசு கொடுக்காமெ எந்தப் பய வருவான்று கேக்கறேன்?"

"இதைக் கேளு புள்ளே" என்று ஆரம்பித்து, தன் வாழ்க்கைத் திட்டத்தை சவிஸ்தாரமாகச் சொன்னான் செம்பன்குஞ்சு, கறுத்தம்மாவும் அதை நூறாவது முறையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

வருத்தத்துடனும், கோபத்துடனும் சக்கி கேட்டாள்:

"அப்போ தோனியும் வலையும் சம்பாதிச்சிகிட்டு உக்காந்திரு."

செம்பன்குஞ்சு தீர்மானமான குரலில் சொன்னான்:

"என்னதான் வரட்டும். அந்தப் பணத்திலே இருந்து சல்லிக்காசு எடுக்கமாட்டேன். அந்த நெனப்பே வேண்டாம் உனக்கு"

சக்கிக்குக் கோபம் பொங்கிற்று.

"யாராவது நாலாம் மதக்காரன் மகளைக் கெடுக்கப் போறான், பாரு; அதுதான் நடக்கப்போகுது"

செம்பன்குஞ்சு பேசவில்லை. அந்த விஷயத்தின் முக்கியத் துவம் அவன் அறிவுக்கு எட்டவில்லையா? சிறிது நேரத்துக்குப் பின் அவன் சொன்னான்:

"நான் ஒருத்தெனத் தேடிப்புடிச்சுப் புடுவேன்." "பனம் கொடுக்காமலா?"

arazielas, ne经2 Eyritir

செம்பன்குஞ்சு ஒரு முனகலில் அதை ஆமோதித்தான் சக்கி கேட்டாள்;

"யாராவது நொண்டி, கூன் குருடு வரும்." "பார்த்துக்கிட்டே இரு" அவன் வார்த்தைகளை நம்பாமல் சக்கி சொன்னாள்: "அப்படியானா ஒண்னு செய். என் பொண்ணைக் கடல்லே தூக்கிப் போட்டுப்புடு"

செம்பன்குஞ்சு சீறி விழுந்தான்.

சக்கி கேட்டாள்:

"இந்தத் தோனியும் வலையும் யாருக்குன்னு கேக்கிறேன்?" செம்பன்குஞ்க வாயைத் திறக்கவில்லை. தோணியும் வலையும் வாங்கவேண்டும் என்ற திட்டம் அவனுடைய வாழ்க்கை லட்சியமே தவிர, அத்திட்டம் யாருக்காக வகுக்கப்படுகிறது என்பதை அதுவரையிலும் அவன் யோசிக்கவில்லை.

சக்கி ஒரு யோசனை சொன்னாள்: "அந்த வெள்ள மனவி வேலாயுதனுக்குப் பாத்தா என்ன?" "osersaarirež"

"ஏனாம்? அவனுக்கு என்ன குத்தம்?" "அவன் ஒரு மரக்கான்; வெறும் சாதாரன மரக்கான்" "மரக்கானா இல்லாம வேறயாரைப் போய்ப்புடிச்சிக்கிட்டு வந்துடப் போறியாம்?"

அந்தக் கேள்விக்குப்பதில் பிறக்கவில்லை.

நாலாம் மதத்துக்காரன் எவனாவது கெடுத்து விட்டுப்போய்விடுவான் என்று சக்கி சொன்னது கறுத்தம்மாவின் செவியில் முழங்கிற்று. அதன் முழுப்பொருளையும் அப்பா வாங்கியிருக்கமாட்டார். மார்பே விண்டுவிடும் போல் அவள் இதயம் துடித்தது வேற்று மதத்துக்காரன் ஏற்கனவே அவளைக் கெடுத்து விட்டிருந்தான் அல்லவா?

அப்போதும் பரீக்குட்டி தொடர்ந்து பாடிக்கொண்டுதான் இருந்தான்.

ézielégoks.get

at 12/26/2017 06:16:00 pm
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, December 19, 2017

விலை - க.நா.சு, மனுசங்கடா நாங்க மனுசங்கடா - கவிஞர் இன்குலாப்


விலை - க.நா.சு

ஓ! ஓ! ஓ! ஓ!
இவனுக்குத் தேச பக்தி
நிறைய வுண்டு. தேசத்தை
விற்கும்போது
நல்ல விலை போகும்படிப்
பார்த்துக் கொள்வான்
இவனுக்குத் தேச பக்தி
நி-றை-ய வுண்டு.
ஓ! ஓ! ஓ! ஓ!


Thanks Payon
மனுசங்கடா நாங்க மனுசங்கடா - கவிஞர் இன்குலாப்


உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா


எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா - அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா


உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்


மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா"



ஜீவ காருண்யம் - 1

நகராத சண்டிமாட்டை
நகர்த்த
குச்சியை ஓங்கினான் குப்பன்
அங்கு
சர்ரென்று நின்ற காரிலிருந்து
தோள் வரை தெரியும்
கையொன்று நீண்டது.

தொடைபோல் ஆடும்
தொங்குசதைக் கைகள்

“அடிக்காத மாட்டை
எஸ்.பி.சி.ஏக்கு
போன் பண்ணுவேன்
போலீஸ் வரும்”

அவளைப்போலவே கனத்த சத்தம்
போலீஸ் தடிக்குப் பயந்த குப்பன்
மூன்றாவது மாடாய்
வண்டியை நகர்த்த
ஜீவகாருண்ய ஜெயக்கொடி
நாட்டி
காரும் தூசிப்
படலத்தில் மறைந்தது.

•

ஜீவ காருண்யம் - 2

கிளி ஜோஸ்ய கிருஷ்ணமூர்த்தி
ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தினான்.

“கிளியின் கூண்டு ரொம்பச் சிறுசு
இறக்கையைச் சரியாய் விரிக்க வராது
காற்றோட்டம் சரியாய் இல்லாததால்
மூச்சுத் திணறிச் சாகக் கூடும்”

கூண்டும் போயி ...
கிளியும் போயி
பிளாட்பாரத்தில்
கிருஷ்ணமூர்த்தி
ஒட்டிய வயிற்றோடு
குப்புறக் கிடக்கிறான்.


கவிஞர் இன்குலாப்
at 12/19/2017 07:31:00 am
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, December 17, 2017

வலி - பாமா

வலி

பாமா | சிறுகதைகள்

http://www.sirukathaigal.com/குடும்பம்/வலி/#more-5954
கண்ணாங்குடில அன்னைக்கு ஒரு துடியாகிப் போச்சு. ஒத்தச் சனம் வேல வெட்டிக்குப் போகல. ஒரு கெழடு கெட்ட போயிருந்தாலே ஊச்சனம் பூராம் ஒன்னாக் கெடந்து ஒப்பாரி வைக்கும். இப்பச் செத்துருக்கது, கொஞ்ச வயசுப் பிள்ள. அதப் பத்திப் பேசாத ஆளு இல்ல. செத்துப் போன பூரணிக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா முப்பது வயசுக்குள்ளாதான் இருக்கும். கலியாணம் முடுச்சு ஒரு ஏழெட்டு வருசம் ஆகிப்போச்சு. பிள்ளையே இல்ல. அவளும் என்னென்னமோ வைத்தியமெல்லாம் செஞ்சு பாத்தா. ஒன்னும் ஜெனிக்கல. நல்லாத்தான் இருந்தா. இப்பிடித் திடீர்னு செத்துட்டாங்குங்றாக. அவா எப்பிடிச் செத்தான்னு ஆளாளுக்கு அவுகளுக்குத் தெருஞ்சத கூடக் கொறச்சு சலிக்காமெச் சொல்லிக்கிட்டு இருந்தாக.”பிள்ள உண்டாகனும்னு எங்குட்டெங்குட்டோ போயி மருந்து வாங்கிச் சாப்புட்டுக்கிட்டு இருந்தாள்ள… போன வாரத்துல யாரோ சொன்னாகன்னு மேற்க என்னமோ குருவிக்காரம்பட்டின்னு ஒரு ஊர்ல போயி எவங்கிட்டயோ என்னமோ ஒரு லேகியம் வாங்கியாந்து சாப்புட்டாளாம். அதுல ஆரம்பிச்சுதுதான். அன்னைலருந்து வாயால வகுத்தால போயிக்கெடந்துருக்கா. மூனே நாளுதான். போயிட்டா.”

“ரத்தரத்தமா வாந்தி எடுத்துல செத்துருக்கா.”"இல்ல. வெளிக்குப் போற எடத்துலருந்து ரத்தமா ஊத்துச்சாம். வகுத்து வலில துடுச்சுப் போனாளாம் துடுச்சு.”"அப்பிடி இல்லையாம். பிள்ள இல்லாத கவலைல என்னத்தையோ குடுச்சுட்டாளாம். வெளிய தெரியக்கூடாதுன்னு இப்பிடிச் சொல்லிக்கிட்டு இருக்காக”. ரொம்பா ரகசியமா கிட்டத்துல நெருங்கி வந்து அருளாயி சொன்னா.”சே. நீயி ஓம்பாட்டுக்கு என்னத்தையுஞ் சொல்லிக்கிட்டுத் திரியாத அருளாயி. அப்பிடிச் சாகுறவள்னா இத்தன வருசத்துல செத்துருக்க மாட்டாளா என்ன? அவா புருசன் அவள ப+வோ, பொன்னோன்னு அப்பிடித் தாங்குவான். அப்பிடி இருக்கைல தற்கொல செய்யனும்னு எவளாவது நெனப்பாளா? எல்லாம் அந்த மருந்து செஞ்ச வேலதான். அதுல சந்தேகமே இல்ல||. கருப்பாயி திட்டவட்டமாச் சொன்னா.

“இப்ப பிள்ளையில்லாட்டா என்ன கெட்டுப் போச்சு? பிள்ள பெத்தவளுகல்லாம் என்னத்த வாரிக்கெட்டிக்கிட்டாளுக? அநியாயமா உசுரப் போக்கடுச்சுட்டாளே… பாதகத்தி மகா …சாக வேண்டிய வயசா?”.ஆளாளுக்குப் பேசிக்கிட்டு இருக்கும்போதே பக்கத்து ஊர்ல இருந்து சொந்தக்காரங்கள்ளாம் கூட்டமா வந்து ஒருத்தர ஒருத்தரு கட்டிப் புடுச்சுக்கிட்டு ஒப்பாரிய ஆரம்புச்சுட்டாங்க. அம்புட்டுத்தான். அடுத்து ஒரு அரமணி நேரத்துக்கு அவுகளோட ஒப்பாரிச் சத்தம் ஓயல. அவுகவுகளுக்குத் தெருஞ்ச ஒப்பாரிப் பாட்டுகள உருக்கமாப் பாடுனாக. அந்தச் சத்தத்தக் கேக்கவும் அம்புட்டுப் பேரும் கப்புச் சிப்புன்னு ஆகிட்டாக. பயங்கரமான சோகம். அந்தப் பாட்டு அம்புட்டுப் பேரோட மனசயும் புழுஞ்சு எடுத்துருச்சு. அழாத கண்ணுலருந்து கூட கண்ணீரு பொங்கி வழுஞ்சது. கண்ணுகளத் தொடச்சுக்குட்டு மூக்கச் சீந்திச் சீந்திப் போட்டாக.”சரி, சரி ஆம்பளைகள்ளாம் கொஞ்சம் எந்துருச்சு அப்பால போங்க. பொணத்தக் குளுப்பாட்ட வேண்டாமா? குளுப்பாட்டி வச்சுட்டா பொறகு மனம் போல அழுதுட்டு போயிப் பெதைக்கலாம்”. அஞ்சலப் பாட்டி அதட்டலாச் சொன்னா.

அம்பட்டு நேரமும் அழுதுக்கிட்டு இருந்தவுக அம்புட்டுப் பேரும் சொல்லி வச்சது கணக்கா ஒடனே அழுகய நிப்பாட்டுனாக. ஆம்பளைக எந்துருச்சுப் போயி பந்தலுக்கடில போட்டுருந்த பெஞ்சுக, நாற்காலிகள்ள எடம் புடுச்சு உக்காந்துட்டாக. பந்தக்காலுகளப் புடுச்சு வெளாண்டுக்குட்டு இருந்த சின்னஞ்சிறுசுகள்ளாம் என்னமோ நடக்கப் போகுதுன்னு வீட்டுக்குள்ள ஓடியாந்தாக. அவுகளப் பூராம் பொம்பளைக வெளிய போச் சொல்லி தொரத்தி உட்டாக. ஒன்னும் புரியாமெ மறுபடியும் வெளிய ஓடிப் போயி வெளாட்டுகளத் தொயந்து வெளாண்டாங்க. பிள்ளைக எடைல ஏதாவது சத்தம் போட்டா, அவுகள ஆம்பளைக அரட்டி உட்டாக. பொணத்தக் குளுப்பாட்டி, புதுச்சீலையக் கட்டி வாசலுல வச்சுருந்த பெஞ்சு கெடத்தி வச்சாக. பொம்பளைக சுத்தி உக்காந்து ப+ரணியோட அரும பெருமைகளப் பத்திப் பேசிக்கிட்டுருந்தாக. ஊடால யாராச்சும் து~;டி கேட்டு வந்து அழுகைல மட்டும் பேச்ச நிப்பாட்டிட்டு ஒன்னாச் சேந்து ஒப்பாரி வச்சுக்கிட்டாக.

பெணத்த எடுக்க சாயங்காலம் ஆகும்னு சொல்லிக்கிட்டாக. பூரணியோட கூடப் பெறந்த அண்ணங்காரன் எங்கயோ தூரந்தொலவட்டுல இருக்கானாம். அவம் பொறப்புட்டு வந்துசேர எப்பிடியும் சாயங்காலம் ஆகுமாம். அவெ வந்தப் பெறகுதான் எடுப்பாக. மீதிப் பேரெலாம் ஒவ்வொருத்தரா வந்துக்கிட்டே இருந்தாக. நேரமாக ஆக கூட்டம் அதிகமாகிட்டே இருந்துச்சு. திடீர் திடீர்னு ஒப்பாரிகளும், ஊடால பேச்சுகளுமா நேரம் போயிட்டுருந்துச்சு.பூரணியோட புருசக்காரன் பித்து புடுச்சது கணக்கா குனுஞ்ச தல நிமுராம உக்காந்திருந்தான். தோளுல கெடந்த துண்ட வச்சு அப்பப்ப கண்ண தொடச்சுக்குட்டான். அவனப் பாக்கைல பரிதாவமா இருந்துச்சு. பாவம்! இனி ஒத்தைல கெடப்பான். பூரணியொட அய்யன் ஒரு அப்ராணி! துக்கந் தாங்கமாட்டாமெ வெளித்திண்ணைல உக்காந்தவந்தான். மலங்க மலங்க முழுச்சுக்கிட்டு இருந்தான். அவுகம்ம பார்வதி நெஞ்சாங்கொலைலயும் வகுத்தலயும் அடுச்சுக்குட்டு கதறிக்கிட்டு கெடந்தா. பெத்த வகுறுல்ல! பூரணியோட தாய்மாமன் கணேசந்தான் அம்பட்டுக் காரியத்தையும் எடுத்துப் போட்டு செஞ்சுக்கிட்டு இருந்தான். அவுக வழக்கப்படி பாட கட்டி அதுல பிரேதத்த வச்சுத் தூக்கிட்டுப் போயி இடுகாட்டுல பெதைப்பாக. வீட்டுக்கு மேற்க நாலஞ்சு பேரு பாட கட்டிக்கிட்டு இருந்தாக. அவுகளச் சுத்தி பத்து சின்னப்பெயல்க வேடிக்க பாத்துக்கிட்டு நின்னாக. பெணத்த எடுத்துகிட்டு போகைல மேளம் அடிக்கிறதுக்காக மேளக்காரனுக மேளத்த நெருப்புல காட்டி சூடேத்திக்கிட்டு இருந்தாக. ஊரு நாட்டாமெ செய்ய வேண்டிய சடங்கு முறைகளப் பத்தி அப்பைக்கப்ப ஞாவகப் படுத்திக்கிட்டு இருந்தாரு. சாமிக்கண்ணு தாத்தா பூரணியோட அய்யங்கிட்ட சத்தமாச் சொன்னாரு.

“என்ன மாடசாமி, இப்பிடி இடுஞ்சு போயி உக்காந்து என்ன செய்ய? ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவுக திருப்பி வரவா போறாக? மண்ட நரச்சுப் போன நம்மள்ளாம் கெடக்கைல சின்னஞ்சிறுசு: வாழ வேண்டிய வயசுவ போயிருச்சே… என்ன செய்ய? நம்ம என்ன செய்ய முடியும், என்ன கணேசா, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சுட்டியாடா? வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாந்தி;ட்டியாடா,”.”செஞ்சுக்கிட்டே இருக்கேன் தாத்தா. ஏறக்கொறைய எல்லாம் முடுஞ்சது. நாலு மணிக்கெல்லாம் எடுத்துரலாம் தாத்தா”.”கோழிக்குஞ்செல்லாம் ரெடியாடா?”.”கோழிக்குஞ்சா? அதெதுக்கு தாத்தா? கோழி வாங்கனும்னு ஒருத்தரும் எங்கிட்ட சொல்லலையே தாத்தா.”

“சொல்லலையா? ஏலேய், பிள்ளையில்லாத சின்னப்பொண்ணு செத்துருக்கு. கோழிக்குஞ்சு இல்லாம எப்பிடிடா பெதைக்கிறது? இந்தக்காலத்து பெயல்களுக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது? தெரியாட்டி நாலு பெரியாளுககிட்ட கலந்து பேசிச் செய்யனும். அதுவுமில்ல. நானு இப்ப ஒங்கிட்ட கேட்டது நல்லதாப் போச்சு. இங்க வாடா. நாஞ்சொல்லப்போறத நல்லாக் கேட்டுக்கோ. அதுபடி எல்லா ஏற்பாட்டையும் செய்யுடா.”"சரி, சொல்லு தாத்தா” கணேசன் தாத்தாகிட்டத்துல வந்து உக்காந்தான்.”நம்ம வழக்கப்படி சனிக்கிழம பொணம் உழுந்தா பொணத்த இடுகாட்டுக்குதத் தூக்கிட்டுப் போகைல வீட்டுலருந்து இடுகாடு வரைல ஒருத்தரு கடுகு அள்ளித் தெளுச்சுக்கிட்டே போகனும்டா.”"அதெதுக்கு தாத்தா?”.

“எதுக்கா? ஊடால நாயித்துக்கெழம வருதுலடா. சனிக்கெழம பெதச்ச பொணத்தோட ஆவி தொணப்பொணம் கேட்டு எந்துருச்சு ஊருக்குள்ள வரும்டா. அப்பிடி வரைல அது வழில தெளுச்சுக்குற கடுகப் பூராம் பெறக்கிட்டுத்தான் ஊருக்குள்ள வரனும். அப்பிடி அது அம்புட்டுக் கடுகையும் பெறக்கிட்டு ஊருக்குள்ள வாரதுக்குள்ள நேரமாகிப்போகும். நேரமாகிப் போகவும் திருப்பி இடுகாட்டுக்கே போயிரும்டா. விடுஞ்சப் பெறகு ஊருக்குள்ள வராது. அப்ப ஊருக்குள்ள இன்னொரு பொணம் உழுகாதுல்ல. அதுக்குத்தான். இது நானு சின்னப் பிள்ளையா இருந்த காலத்துல இருந்தே இருக்குடா.”

வேறொரு சமயமா இருந்துருந்தா கணேசன் தாத்தாகிட்ட ஒரு பெரிய வாக்குவாதமே செஞ்சுருப்பான். இப்ப மனசு இருந்த நெலமைல அவனால எதையும் பேச முடியல. அமைதியா அவருட்ட கேட்டான்,

“சரி தாத்தா. ஒரு ரெண்டு கிலோ கடுகு வாங்கியாரச் சொல்லிடுறேன். பெறகென்னமோ கோழிக்குஞ்சி வேணுமின்னு சொன்னியே. அதெதுக்கு?”.

“ஆமாடா கலியாணம் முடுச்சு சின்னவயசுலயே பிள்ள இல்லாமெச் செத்துப்போனா அந்த ஆவிக்கு பிள்ள ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்துல ராத்திரி எந்துருச்சு பிள்ள தேடி ஊருக்குள்ள வந்துரும். அப்பிடி வந்தா ஊருக்குள்ள இன்னொரு பொணம் உழுந்துரும்ல. அதுனால என்ன செய்வாகன்னா பொணத்த பாடைல வச்சுத் தூக்குறதுக்கு முன்ன ஒரு கோழிக்குஞ்சிய அந்தப் பாடைல ஒரு ஓரத்துல கட்டி உட்டுறனும். பெறகு பொணத்தப் பெதைக்கைல கூட அந்தப் பாடைல ஒரு ஓரத்துல கட்டி உட்டுறனும். பெறகு பொணத்தப் பெதைக்கைல கூட அந்தக் குஞ்சியையும் போட்டுப் பெதச்சிறனும்டா. இதெல்லாம் தலமொறத் தலமொறையா ஊருக்குள்ள செஞ்சுக்கிட்டு வார வழமைக. நீயும் போயி ஒரு கோழிக்குஞ்சி வாங்கியாந்திருடா. நாட்டுக் கோழியாப் பாத்து வாங்கு”.

சாமிக்கண்ணு தாத்தா சொன்னது மாதிரியே கணேசன் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சான். கோழிக்குஞ்சிய வாங்கிட்டு வந்து அவனோட வீட்டுத் திருணைல கட்டிப் போட்டான். அவனோட நாலு வயசு மகன் பால்பாண்டிக்கு அந்தக் கோழிக்குஞ்சியப் பாத்து ரொம்பாச் சந்தோசமா இருந்துச்சு. அதுக்குப் பக்கத்துலயே உக்காந்துக்குட்டு இருந்தான். அதுக்கு கொஞ்சம் அரிசிய அள்ளிப் போட்டுட்டு அது கொத்தித் திங்கிறதப் பாத்து சந்தோசப்பட்டுக்கிட்டான். ஒரு சின்னக் கிண்ணத்துல தண்ணியுங் கொண்டாந்து அது வச்சான். அந்தக கோழியும் இன்னங் கொஞ்ச நேரத்துல சாகப் போறம்னு தெரியாம திரு திருன்னு முழுச்சுக்கிட்டு அரிசியப் பெறக்கிட்டு இருந்துச்சு. எடைல என்னமோ எடுக்க வீட்டுக்கு வந்த கணேசன் மகனப் பாத்துட்டு,

“ஏலேய் பாண்டி, குஞ்சியக் கிஞ்சிய அவுத்து உட்டுறாதடா. பெறகு புடிக்க முடியாது. நீயி எதுக்குடா இங்னக்குள்ளயே காவக் கெடக்குற? எந்துருச்சு அம்மைட்டப் போடா”. சொல்லிட்டு அவனத் தூக்கிக் கொண்டுபோயி அவுகம்மைட்ட உட்டுட்டு வேற வேலைகளக் கவனிக்கப் போயிட்டான்.

பால்பாண்டிக்கு அவுகம்மைட்ட இருக்க முடியல. அந்தக் கோழிக் குஞ்சியவே நெனச்சுக்கிட்டு இருந்தான். வீட்டுக்குப் போயி அத அவுத்துக் கொண்டு வந்து கைல வச்சிக்கிரலாம்னு எந்துருச்சான். ஆனா அவுகம்மை அவன உடல.

“ஏமா, நானு அந்தக் கோழிக் குஞ்சிய கவுத்தப் புடுச்சு இங்க கூட்டியாரட்டுமாம?”

“சும்மா கெடடா. இருக்குற வேதனைல இவந் தொல்ல வேற தாங்கமுடியல. போயி அந்தப் பிள்ளைகளோட வெளாடு. வீட்டுக்குப் போகாத. தெருஞ்சதா?”

சரின்னு தலையாட்டிட்டு பந்தலுக்கடில வெளாண்டுக்கிட்டு இருந்த மத்த பிள்ளைகளோட போயிச் சேந்துக்கிட்டான்.

அந்தா இந்தான்னு சாயந்தரம் ஆகிப்போச்சு. சனங்களும் அழுது, அழுது ஓஞ்சு போனாக. பார்வதிக்கு தொண்டையே கட்டிப் போச்சு. ப+ரணியோட அண்ணன் குமாரு கடைசியா வந்து சேந்தான். அவெ வரவும் தங்கச்சி மேல உழுந்து அழுத அழுகையப் பாத்துட்டு அம்புட்டுச் சனமும் மறுபடியும் கதறிக் கதறி அழுதாக. பொணத்தத் தூக்கிப் பாடைல வைக்கும்போது ஊரெ கதறுச்சு. ப+ரணியோட புருசனும் துக்கந்தாங்கமாட்டாமெ கதறிக் கதறி அழுதான். அவுகம்மெ பாடைக்குப் பின்னால தலவிரி கோலமா கத்திக்கிட்டே ஓடுனா.

“நாம்பெத்த மகளே…. போக வேண்டிய வயசுல நாங்கெடக்கேனெ… ஏ உசுரு போயிருக்கக் கூடாதா… வாழ வேண்டிய வயசுல உன்னைய வாரிக் குடுக்கனே… வாய்க்கு வாய் ஏமா ஏமான்னு வளைய வளைய வருவியேடி… நாம்பெத்த ராசாத்தி… என்னையும் சட்டுன்னு எடுத்துட்டு போயிருடி… ஏந்தங்கமே… ஏங் கடவுளே…”. சொல்லிக்கிட்டே தலைல தலைல அடுச்சுக்கிட்டு அழுதா.

நாலஞ்சு பொம்பளைக பின்னால போயி அவளப் புடுச்சு இழுத்துக்கிட்டு வந்தாக. அவுக வழக்கப்படி பொம்பளைக இடுகாட்டுக்குப் போகக்கூடாது. பால்பாண்டிய அவுகய்யா தூக்கிக்கிட்டுப் போனாரு. முனியாண்டி பாடைக்குப் பின்னால கடுக அள்ளித் தெளுச்சுக்கிட்டே போனாரு. பாடைல ஒரு ஓரத்துல காலு ரெண்டையும் கட்டித் தொங்கிக்கிட்டு இருந்த கோழிக்குஞ்சி இங்குட்டு அங்கிட்டும் ஆடிக்கிட்டு கியா கியான்னு கத்திக்கிட்டே போச்சு. அதப் பாத்த பால்பாண்டிக்கு ரொம்பா வருத்தமா இருந்துச்சு. அத அவுத்துக் குடுத்தா கைல எடுத்துக்குட்டுப் போகலாம்னு நெனச்சான். ஆனா அவுகய்யா அழுதுக்கிட்டு வாரதப் பாத்துட்டு அவங்கிட்ட எதுவும் கேக்கல. ஊர்ச் சனமே அழுதுக்கிட்டு இருந்தாலும் அவனுக்கு அந்தக் குஞ்சி அழுகுறதுதான் கவலையா இருந்துச்சு. தலகீழா தொங்கிக்கிட்டு இருந்த அதையே பாத்துக்கிட்டுப் போனான்.

இடுகாடு வந்ததும் ஏற்கனவே வெட்டியான் வெட்டி வச்சிருந்த குழிக்குள்ள பொணத்த எறக்குனாக. குழிக்குள்ள நின்ன வெட்டியான் பொணத்த சரியா உள்ள வச்சான். மேல நின்னவுக அவங்கிட்ட இப்பிடி வை, அப்பிடி வைன்னு ஆளாளுக்குக் கோளாறு சொல்லிக்கிட்டு இருந்தாக. கடைசியா மொகத்தப் பாத்துக்கங்கன்னு சொல்லவும் ஆளாளுக்கு எட்டிப் பாத்தாங்க. கணேசனும் எட்டிப்பாத்துட்டு அழுதான். பால்பாண்டி கோழிக்குஞ்சையே பாத்துக்கிட்டு இருந்தான். சாமிக்கண்ணு தர்தா வெட்டியானப் பாத்து, கடைசி ஒருதடவ காதுல, கழுத்துல, ம{க்குல எதுனாச்சும் கெடக்குதான்னு பாத்துட்டு மூடுறான்னு சொன்னாரு. வெட்டியானும் பாத்துட்டு,

“ஒன்னுமில்ல சாமி, கழுத்துல ஒரு கருப்பு மணிதாங் கெடக்குது. அத எடுக்கவா?”ன்னு கேட்டாரு.

“அடிதன்னத்துக்குடா? கெடந்துட்டு போகுது உட்டுறு. சரி, மண்ணள்ளிப் போடு||. சொல்லிட்டு மொதல்ல மூனுதடவ அவரு கைட்ட மண்ணள்ளிப் போட்டுட்டு வந்தாரு. அடுத்தடுத்து மத்தவுக போட்டுட்டு வந்தாக. கடைசில வெட்டியான் மண்ணப் போட்டு குழிய மூடுனான். மூடுனப் பெறகு பாடைல டெந்த மாலைகள எடுத்து சமாதிமேல போட்டாக. அப்பத்தான் பாடைல கெட்டிக்கெடந்த கோழக்குஞ்சப் பாத்தாக. சாமிக்கண்ணு தாத்தா வெட்டியானச் சத்தம் போட்டாரு.

“ஏண்டா, குழிய மூடமுன்ன குஞ்சிய வச்சு மூடனும்னு தெரியாதாடா? இனி மூடுன குழியத் தெறக்கலாமாடா? என்னடா வேல பாக்குற? இத்தன வருசம் வெட்டியானா இருக்க. இருந்து என்ன பெரயோசனம்? சரி, சரி. மேலாக்க குழியத் தோண்டுனான்.

குஞ்சிய பாடைல இருந்து அவுக்கவும் சத்தம்போட்டு குஞ்சி கத்துச்சு. பால்பாண்டிக்கு அதப் பாத்து ரொம்பாப் பாவமா இருந்துச்சு. வெட்டியான் குஞ்சிய உசுரோட குழிக்குள்ள போட்டு பெதைக்கவும் குஞ்சி கியாக்கியான்னு பரிதாபமா அலறுச்சு. பால்பாண்டி கண்ணு கலங்குச்சு. எல்லாரும் அழுகைய நிறுத்திட்டு வீடுகளுக்குக் கௌம்புனாக. பால்பாண்டிமட்டும் அழுதுக்கிட்டெ வீட்டுக்கு வந்தான்.

may 2008

at 12/17/2017 07:11:00 pm
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, December 15, 2017

யோசனை - ஞானக்கூத்தன்

யோசனை

JULY 16, 2006 ~ ஞானக்கூத்தன் படைப்புகள்
http://www.gnanakoothan.com/2006/07/16/யோசனை/
உனக்கென்ன தோன்றுது
கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள்
கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா
எனக்கென்ன தோன்றுது
வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு

பிரச்னை

JULY 29, 2006 ~ ஞானக்கூத்தன் படைப்புகள்
http://www.gnanakoothan.com/2006/07/29/பிரச்னை
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
at 12/15/2017 09:11:00 pm
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, December 13, 2017

எம். வி. வெங்கட்ராமின் "இனி புதிதாய்' (ஒரு பிரதியியல் ஆய்வு) - அ. மார்க்ஸ

எம். வி. வெங்கட்ராமின்
"இனி புதிதாய்'
(ஒரு பிரதியியல் ஆய்வு)
எழுத்தாளனைக் காட்டிலும் வாசகனுக்கும் வாசிப் பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாசிக்கப்படும் சூழல், எழுத்தாள னுக்கும் வாசகனுக்குமிடையிலான ஊடகத்தின் தன்மை, வாசிக்கப்படும் பிரதி பற்றிய இதர பிரதிகளின் கருத் தாடல்கள் போன்ற இதுவரை முக்கியத்துவம் கொடுக்கப் படாத அம்சங்களெல்லாம் பிரதியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்கிற புரிதலின் அடிப்படை யில் பிரதியின் அரசியல் வாசிப்பின் அரசியல் பற்றியெல் லாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. எழுத் தாளனின் முக்கியத்துவம் மறையும்போது கூடவே உண் மையை, உள்ளதை, எதார்த்தத்தை அப்படியே பிரதி பலிக்கக் கூடியவை என்கிற தகுதியையும் புனிதத்தையும் எதார்த்தவாதமும் இழந்துவிடுகிறது. எந்த ஒரு எதார்த்த வாத எழுத்தாளனும் தன்முன் விரிந்து கிடக்கும் எதார்த் தங்களில் ஒரு சில அம்சங்களைத் தேர்வு செய்கிறான் வரிசைப்படுத்துகிறான். சிலவற்றிற்கு அதிகமுக்கியத்துவம் அளிக்கிறான்; சிலவற்றை வேறு சிலவற்றில் பொதிந்து கொடுக்கிறான் என்கிற வகையில் ஒரு புதிய எதார்த்தமே
படிப்பகம்WWW.padippakam.com
அ. மார்க்ஸ் 19
அங்கு உருவாகிறது. இந்த உருவாக்கத்தில் எழுதுபவனின் கருத்தியல் முக்கியபங்கு வகிக்கின்றது. இதனால்தான் ஒரே சம்பவத்தை இருவர் தனித்தனியே எழுதும்போது இரண்டும் வேறுவேறாக, சமயங்களில் எதிர்எதிராகக்கூட அமைந்து விடுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட எழுத்தும் 5 L வாசகனைச் சென்றடையும்போது ஒரே எழுத்து இருவேறு சூழல்களில் அல்லது இரு வேறு வாசகர் களுக்கு இருவேறு பொருள்களை அளித்துவிடக்கூடும். ஒரு நிர்வாணப் படம், செக்ஸ் புத்தகம் ஒன்றில் இடம்பெறும் போதும், மருத்துவ நூலொன்றில் இடம்பெறும்போதும் ஏற்படும் விளைவுகள் வேறு வேறு. இவை தவிர ஒரே பிரதிகூட வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு அர்த்தங் களை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுவதுமுண்டு. பட்டை தீட்டப்பட்ட வைரமொன்று வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வண்ணங்களை வாரி இறைப்பதில்லையா அப்படி, இதுகூட நல்ல உதாரணமில்லை. ஒருவரது எச்சில் ஒரே சமயத்தில் எச்சிலாகவும், காசநோய் இருக் கிறதா இல்லையா எனக் கண்டறிய உதவும் சோதனைத் திரவமாகவும், காம வேட்கையைத் தணிக்கும் அசுர பானமாகவும் அமைந்துவிடுகிறதல்லவா! ஒரு பத்திரி கையில் வரும் புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். விளம்பரம் அல்லது செய்தியோடு அது இணைந்துள்ளது என்றால் அந்தத் தகவலை வாசகனுக்குத் தொடர்பு படுத்தும் தளத்தில் அதன் பொருள் ஒன்று; இன்னொரு தளத்தில் ஏதோ ஒரு உண்மையின் சான்றாக அது வெளிப் படுகின்றது; மூன்றாவது தளத்தில் அது வாசிப்பவனை ஈர்த்து, கிளர்ச்சியூட்டி, ஒரு சில விருப்பங்கள் உடையவ னாக மாற்றுகிறது.
எந்தப் பிரதிக்கும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். ஒரு பக்கம் ரொம்பவும் முற்போக்காய் காட்டிக்கொள் -ஞம் ஒரு பிரதி இன்னொரு பக்கம் ஆணாதிக்கக் குரலை ஒலிக்கக் கூடும். ஒரு பக்கம் வெறும் "செக்சாகத் தோற்ற :மளிக்கும் ஒரு பிரதி, இன்னொரு பக்கம் செயல்படும்
படிப்பகம்WWW.padippakam.Com
20 உடைபடும் மெளனங்கள்
அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குக் கேலி செய்வதாய் அமைந்து விட முடியும். இவற்றை நுண்மையாய் நோக்கி பிரதியின் வாசிப்பின் அரசியலை வெளிப்படுத்திவிடுவது பண்பாட்டு அரசியலில் ர்வமுடையவர்களின் கடமை யாகிறது என்கிற சிறிய முன்னுரையோடு மூன்று வேறு விதங்களில் திரு எம். வி. வெங்கட்ராம் அவர்களின் இனி புதிதாய்' எனும் சிறுகதைத் தொகுப்பு செயல்படுவதை அடையாளம் காணமுயல்வோம்.
அ. விக்கிரக விநாசம்
பிரதியை மேலோட்டமாக வா சிக் கும் போ து தமிழ்ப் பண்பாட்டில் காலங்காலமாக இன்றளவும் கட்டிக் காப்பாற்றப்பட்டுள்ள 8 ഒി : ) ; உருவாககங்கள் நாசம் செய்யப்படுவதை நாம் உர்ை கிறோம். குறிப்பாக குடும்பம் தொடர்பான பல விக்கிரக உருவாக்கங்கள் தூளாக்கப்படுகின்றன. ஒண்டியாய் உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுமையும் நற்குணங்களும் மிக்க மகனைக் கொத்திக் கொடுமை செய்யும் சுய தல வெறிபிடித்த ராட்சசி அம்மா, தனது சுய முன்னேற்றத்திற்காக சொத்த மகனைத் தனது குடும் பத்தினருக்கு வேண்டாத பணக்கார உறவினருக்குத் தத்தாக விற்கத் தயாராகி சொந்தக் குடும்பத்தையே ஏமாற்றி நாடகம் நடிக்கும் அப்பா, சாகக் கிடக்கும் தந்தைக்கு மருந்தைக் கூடக்கொடுக்காமல் காதில் கிடக்கும் கடுக்கன் உட்பட அவரது சொத்துக்களைப்பறிப்பதற்குப் போட்டி போடும் மனைவி பிள்ளைகள், கற்பனைத் துடிப்பு மிக்க எழுத்தாளக் கணவனின் அமைதியான குடும்ப வாழ்க்கையை அழித்தொழிக்கும் லண்டி மனைவி, சமூகத்தை எதிர்த்துக் கொண்டு துணிச்சலுடன் தன்னைக் கூட்டிப்போக வக்கில்லாத காதலனை நினைத்துப் பொருமிக் கொண்டு இளம் கணவனை ஏமாற்றி நடித்து
படிப்பகம்WWW.padippakam.Com
அ. மார்க்ஸ் 2.
வாழும் புது மனைவி, அமைதியான குடும்ப வாழ்க்கையில் சலிப்புற்று இளமைக்கால உல்லாசங்களை நினைத்து ஏங்கும் கணவர்கள், சுய நலத்திற்காக அடிப்படை மனித நியாயங்களை எதிர்த்து நீதி மன்றத்திற்குச் செல்லும் குடும்ப உறுப்பினர்கள், நோயாளி செத்தானா, பிழைத் தானா என்பது பற்றிக் கவலையின்றி தான் படித்த புதிய மருந்தொன்றைச் சோதனை செய்து பார்க்கத் துடிக்கும் ஆங்கில மருத்துவர்-இலிர்கள்தான் இந்தத் தொகுப்பு முழு வதும் நடைபோடும் நாயகர்கள்.
"குடும்பம் என்கிற ஊழல் மிக்க நிறுவனம்" பற்றி இன்று அதிகம் ஆய்வு செய்யப்படுகின்றது. எம்.வி. வியே சொல்வது போல "ராஜ்யம் நிலைக்க' கண்டுபிடிக்கப் பட்ட நிறுவனம்தான் (பக். 48) அது. நிலவுகிற அரசமைப் பிற்கேற்ற "குடிமக்களை" உருவாக்கும் முதற் பயிற்சிக் களம் அது சுயநலத்தையும் அடிமைப் பண்பையும் மனிதன் அங்கே கற்றுக் கொள்கிறான். ஒழுங்குகளுக்கு வயப்படுதல் என்கிற வகையில் இப்பயிற்சி அவனுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நியாயப்பாட் டிற்கு முன் வைக்கப்படும் பினாமி காரணம் உறுப்பினர் களுக்கு இந்நிறுவனம் பாதுகாப்பு வழங்குகிறது என்பது. இது எவ்வளவு போலியானது, உறுப்பினர்கள் ஒருவரை யொருவர் அதிகாரம் செலுத்துவதிலும் சுரண்டுவதிலும் எத்தனை குறியாக இருக்கிறார்கள் என்பதையெல்லாம் வெட்ட வெளிச்சமாய் தோலுரித்துக் காட்டுகிறது இத் தொகுப்பு. உதிரத்தைப் பாலாக்கிப் பாசத்தைப் பிழிந்து வளர்க்கும் 'அம்மா' பற்றின தமிழ்ப் பண்பாடு கட்டி வைத்த விக்கிரகத்தை இவ்வளவு அலட்சியமாய் வேறு யாரும் நொறுக்கித் தூளாக்கியதாய் நமக்குநினைவில்லை. குடும்பம் என்கிற நிறுவனத்தின் ஊழல்களைத் தொட்டுக் காட்டிவிடும் அளவில் ஒர் அதிகார எதிர்ப்புக் குரலை நம்மால் மேலோட்டமான கவனிப்பிலேயே அடையாளம் காண முடிகிறது.
படிப்பகம்WWW.padippakam.Com
22. உடைபடும் மெளனங்கள்
ஆ. விக்கிரக உருவாக்கம்
இன்றைய வெகுஜனப் பண்பாட்டு நடவடிக்கை களைக் கூர்மையாகக் கவனித்தோமானால் அதிகார அமைப்பைக் கட்டிக் காப்பதற்கான விக்கிரக உருவாக்கம் என்பது வழிபடுவதற்கான தேவ விக்கிரகங்களை மட்டு மல்ல, வெறுத்து ஒதுக்குவதற்காக அசுர விக்கிரகங்க ளையும் உருவாக்குவதைக் காணமுடியும். தீயகுணங்களின் உறைவிடமாக, இரக்கமற்றவர்களாக, தூய்மையற்றவர் களாக நாசூக்கும் நளினமும் இல்லாதவர்களாக, கொடூர மானவர்களாக ஒரு பிரிவினர் பற்றிய பிம்பம் திட்ட மிட்டு உருவாக்கப்படுகிறது. உலக அளவில் ஆசியஆப்ரிக்க மக்களைப் பற்றி இனவாத நோக்கில் ஏகாதி பத்தியங்களும், இந்திய அளவில் சீக்கிய-இசுலாமியர் பற்றி இந்திய மேலாண்மைச் சக்திகளும் இத்தகைய அசுர விக்ரகங்களை உருவாக்குவதைக் காணலாம். இன்றைய அமைப்பின் வழிபாட்டுக்குரிய பல விக்கிரகங்களை நாசம் செய்யும் இத்தொகுதி இப்படி எதிர்நிலையான விக்கிரக உருவாக்கம் ஒன்றிற்குக் களமாவதைச் சற்று கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளமுடியும். இதனைப் புரிந்து கொள்ள இந்நூல் முழுவதும் அடிப்படையாக இழை யோடும் சமூக முரண்பாடுகள் குறித்த ஒரு பார்வையை நாம் கவனிக்க வேண்டும். எம். வி. வி. தானோ என நாம் ஐயம் கொள்ளும் எழுத்தாளனாக வரும் ஒரு கதாபாத் திரம் கூறுகிறது:
'இது யுக சந்திக் காலம்; சந்தி என்றால் பொழுது விடிவதற்கு முன்னதா அல்லது அஸ்தமிப்பதற்கு முன்னதா என்றே புரியவில்லை; மேலை நாட்டு நாகரிகமும் கீழை நாட்டு நாகரிகமும் மல்லுக்கு நிற்கின்றன; உடல்தான் எல்லாம் என்று உலகை வற்புறுத்துகிறது ஒன்று. ஆத்மா என்பது வெறும் பொய் என்கிறது அது, ஆத்மா தான் நித்தியம், அது தான் எல்லாம் என்று அழுத்தமாய்ச் சொல்கிறது:
படிப்பகம்WWW.padippakam.com
அ. மார்க்ஸ் 23.
மற்றொன்று. இரண்டும் வகை தெரியாமல் மோதிக் கொள்கின்றன; ஒன்றுக்கொன்று முரணானவை என்று அவை நினைக்கின்றன. ஆனால் இரண்டை யும் சமமாகவும் சமாதானமாகவும் இணைக்கலாம். அப்படி இணைப்பதில்தான் மனித ஜாதிக்கு கதி மோட்சம் என்பதைத்தான் நான் உலகக்கு என் எழுத் துக்கள் மூலம் காட்ட விரும்புகின்றேன்." (பக். 49) இந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா இல்லையா என்பதை அப்புறம் பார்ப்போம். இப்போதைக்கு "மேலை நாகரிகம் x கீழை நாகரிகம்" என்கிற முரண் முன்வைக்கப்படுவதை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள் வோம். மேலை நாகரிகம் குறித்த வேறு இரண்டு வெளிப் படையான வாசகங்களையும் பிரதியில் பார்க்கலாம். ஒன்று : "மேற்கு நாகரிகத்தில் லட்சணக் குறைவுகள் அதிகம், பிராந்தி, சிகரெட், மேலைநாகரிகம் எல்லாம் போதைப் பொருட்கள்; ஒரே ரகம், பிடித்தால் விட முடியாது." (பக். 119) மற்றது : "கள்வனிடமிருந்து பொருளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மின்சாரம் பாய்ச்சிய நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிற கன வான் தான் இன்றைய மனிதன். உயிருடன் இருப்பதற்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற அரிய தத்துவத்தைப் பிராச்சாரத்தின் மூலம் மேற்கு நாகரிகம் வற்புறுத்தியதன் விளைவுதான் இந்தத் தொழிற்சாலை. யுத்தத் துக்காக எவ்வளவு அழிவுச்செலவு?’ (பக். 113).
ஏகாதிபத்தியங்கள் முன்னிலைப் படுத்தும் வணிக நோக்கிலான நுகர்வுப் பண்பாடு குறித்த எதிர் கருத்துக் கள் நம்மனைவரிடமும் உண்டு, ஆனால் பொத்தாம் பொதுவாக மேலை நாகரிகம் என மேற்கத்திய பண்பாடு முழுவதையும் ஒற்றைப் பரிமாணமாய்ப் பார்த்து க்ண்டனம் செய்வதும் அதற்கு எதிர் நிலையாக, கீழைப்
படிப்பகம்WWW.padippakam.Com
24 உடைபடும் மெளனங்கன்
பண்பாடு என்ற ஒன்றே, ஒற்றைப் பரிமாணமாய் அதன் சகல கொடூரமான அம்சங்களுடனும் உயர்த்திப் பிடிப் பதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இந்தப் பிரதியில் அத்தகைய முயற்சியே மேற்கொள்ளப் படுகிறது. மேலை நாகரிகத்தின் வெளிப்பாடாக உடலை இழந்து உல்லாசம் தேடும் இரு பெண்கள் (போதையும் போதமும்', 'தோழி) உருவாக்கப்பட்டுள்ளனர். ஒருத்தி மேரி; இன்னொருத்தி ஸ்டெல்லா. இந்த இரு பெயர் களுமே கிறிஸ்தவப் பெயராக இருப்பது எதேச்சையான தல்ல. இருவருமே 'கவுன் அணிந்த பிராணிகள்." கிராப், லிப்ஸ்டிக், ஸ்நோ, ஷ", பவுடர், சகிதமாய் இவர்கள் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் உல்லாசிகள், ஸ்டெல்லா "ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் தகப்பனார் அனுப்பும் பணத்தைப் பதினைந்து இருபது தேதிக்குள் தாம் துரம் என்று செலவழித்து விட்டு அப்புறம் சந்தியில் நிற்பாள்.' ஸ்நோவும் பவுடரும் வாங்குவதற்காகவும், சினிமா பார்ப் பதற்காகவும் பக்கத்து வீட்டுக்காரனிடம் உடலை விற்பாள். மேரியோ முன்பின் தெரியாத ஒருவனைச் சிந்தித்த அன்றே ஒட்டலுக்கு அழைத்துச் சென்று மது அருந்தி விட்டுத் தெருவில் மயங்கிக் கிடப்பாள்.
இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்படும்போதே அருவருப்பாகத்தான் செய்யப்படுகின்றனர் ரயிலுக் காகக் காத்திருப்பவனின் அருகில் அமர்ந்து உதட்டில் இருக்கும் சிகரெட்டை பற்ற வைக்கச் சொல்லும் மேரியைப் பற்றிய சில வருணனைகள்:
(1) 'திடீரென்று லாடம் கட்டிக்கொள்ளும் மாடு உதைத்துக் கொள்வதைப் போல் அவள் பூட்ஸ் கால்களைக் கீழே உதைக்கவே, என்னவோ என்று திரும்பினேன்' (பக். 19-120).
{i) 'அந்த நகர தேவ ைகயின் வாய் தான் முடிவில் என்னை ஆகர்ஷித்தது. ஏனென்றால் அது சாப்பிட்டுக் கொண்டிருந்தது. போரிட்டுப்
படிப்பகம்WWW.padippakam.Com
அ மார்க்ஸ் 25
பெருச்சாளியை வென்று ரத்தத்தில் தோய்ந்த நாயின் வாய்போல் இருந்தது அதன் வாய்கொஞ்சம் அதிகமாகவே உதட்டுச் சாயம் பூசிவிட்டதால் தலை மயிரைத் தாறுமாறாக முள் வேலியைப் போன்று கோணலும் மானலு மாய் வெட்டிக் கொண்டிருந்தது. பெண்கள் கிராப் வைத்துக் கொள்வதால் அழகு குன்றிவிடு வதாக நான் நினைக்க வில்லை. ஆனால் என் தேவைக்கு அது நன்றாக இல்லை." (பக். 112)
(i) "அலங்கோலமாக அவள் விழுந்து கிடந்த அந் நிலையில் அருகில் இருக்க எனக்கு அருவருப்பாக இருந்தது" (பக். 116).
ஸ்டெல்லா அவலட்சணமில்லை; அழகி, கவர்ச்சி அயானவள். எனினும் அவள் இப்படித்தான் அறிமுகப் dபடுத்தப்படுகிறாள்.
"மிஸ் ஸ்டெல்லாவின் அறையில் நான் நுழைந்த போது கால்களை மேஜைமீது தூக்கி வைத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் அலங்கோலமாக உட்கார்ந்திருந்தாள் அவள்’ (பக். 139).
அவளின் அறை வாசலில் கிடக்கும் பல ஜோடி செருப் புகள் கட்டிக்காட்டப்படுகின்றன. பெண்கள், அடிமை கள் ஆகியோரின் அங்க வீச்சுக்கள், புழங்கும் வெளிகள் ஆகியவைகூட ஆதிக்கச் சமூகத்தில் வரையறுக்கபட்டுவிடு கின்றன. வரையறையை, எல்லையை மீறுவோர் வேசி களாய்த்தான் இருக்க முடியும், சங்க காலத்திலேயே கையை வீசி வீசி வீதியில் நடப்பவள் என விலை மகளிர் வருணிக்கப்படவில்லையா? ('ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசிப் போது அவிழ் புதுமலர் தெரிவுடன் கமழ." மதுரைக்காஞ்சி,563).
படிப்பகம்WWW.padippakam.Com
26 உடைபடும் மெளனங்கள்
இந்தக் குறிப்புகளெல்லாம் கூட தற்செயலான வையல்ல. உடல் பற்றிய இத்தகைய குறிப்புகள் நூல் முழுவதும் ஒரு சில இடங்களில்தான் வருகின்றன. பைத் தியக்காரப் பிள்ளையில் கொடுமைக்குள்ளாக்கப்படும் மகன் ராஜம் ரயிலில் விழுந்து நசுங்கிச் செத்தபின்னும் கூட அவன் உடல் அழகாகவே இருக்கிறது எனவும் "போஸ்ட்மார்டமும் கூட அந்த அழகைச் சிதைக்கவில்லை எனவும் ஒரு அதீதமான குறிப்பும் கதையில் உள்ளது (பக். 37),
உடலை விற்று உல்லாசம் தேடுவதால் விளைந்த வெறுப்பு என்றும் இதனை ஒதுக்கிவிட முடியாது. இந்தத் தொகுதி முழுவதும் உடலை விற்பவர்களாகவும் உல்லாசி களாகவும் நால்வர் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். மனோரமா (ஏன்), சரோஜா (இனி புதிதாய்) ஆகியோர் மற்ற இருவர். இவர்களில் சரோஜா ஒரு சில விநாடிகளே வநது போதம் (விலைமாது, நடிகை) மிகச் சிறிய பாத்திாம். மனோரமா கீழை நாகரிகத்தின்படி பொட்டுக் கட்டிக்கொண்ட தாசி. ஸ் டெல்லா மேரி ஆகியோருக்கு நேரெதிராக இவள் படைக்கப்பட்டுள்ளாள். தூய்மை, வசீகரம், இனிமை, இன் சொல், நறுமணம், மகிழ்ச்சி, உற்சாகம், அழகு, இளமை ஆகியவற்றின் பின்னணியில் மனோரமா வளைய வருகிறாள். பூமணமும், புனுகு மணமும் அவள் மீது எப்போதும் வீசும். மனோரமா,
"இருட்டும் சமயம் (அவள்) எழுந்து விளக்கை ஏற்றினாள், வாசலில் திண்ணை மாடத்தில் ஒரு அகல் விளக்கு. சமையல் அறைக்குள் இருந்த பூஜை அறை ராதாகிருஷ்ண படத்துக்கு முன் ஒரு பெரிய குத்து விளக்கு. பிறகு நாங்கள் இருந்த இடத்தில் ஒரு பவர் லைட் இவ்வளவையும் ஏற்றினாள்."
என அறிமுகப்படுத்தப்படுகிறாள்.
படிப்பகம்WWW.padippakam.Com
அ. மார்க்ஸ் 27
சாமிபடத்திற்கு விளக்கேற்றுபவளாக மனோரமா காட்டப்படுவது கவனிக்கத்தக்கது. அருகிலுள்ள முரண் மூலம் இந்தப் பண்புகள் மேலும் துலக்கம் பெறும் பொருட்டு இதே கதையில் 'வெள்ளிக் கிழமை கூட வாயிலில் தீபம் ஏற்றச் சோம்பும் நாகமணி" (பக் 1^2) என்கிற குடும்பப் பெண்மணியும், ஆபாசப் ாட்டுப் பாடும் அவளின் முரட்டுப் பைத்தியக்கார மகனும் அதே கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளனர். மனோரமா பற்றி
ன்னொரு வருணனை
'அவளுடைய சிரிப்பு மட்டுமல்ல, உடையும் அதிசயம். ஒவ்வொரு நாளும் அவள் புதுப் புதுக் கோலத்தில் தோன்றுவாள். ஒருநாள் சாதாரணமாக மற்ற பெண் களைப் போல் புடவை கட்டியிருப்பாள். மறுநாள் முஸ்லிம் மாதரைப் போல் முக்காடு; மூன்றாம் நாள் பாவாடையும் மேலாக்கும்; வங்காளி, பஞ்சாபி பெண்களைப் போல பல விதமாய் உடுத்துக் கொள் வாள். எந்த ஆடையும் அவளுக்குப் பொருத்தமாய் இருந்தது’ (புக். 163)
கவனமாகக் கவுன் மற்றும் மேலை நாகரிக உடைகள் தவிர்க்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் விரும்பத் தக்கவளாக அவளின் பக்கம் நின்று அவளின் நியாயங்கள் பேசப்படுகின்றன.
பெண்ணிய நோக்கு தவிர இன்னொரு அம்சத்திலும் மேலை நாகரிகம் சற்று கீழே இறக்கப்பட்டு கீழை நாகரிகம் மேலுயர்த்தப்படுவதைக் காணமுடியும். 'மருந்து கதையில் ஒரு மேலை மருத்துவர், நோயாளி குணமாவதைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு அறிமுக மான புதிய மருந்தொன்றைச் சோதித்துப் பார்ப்பதில் குறியாய் இருக்கிறார். இவரிடம் வருமுன் ஒரு வாரம் அம்மன் கோயில் பூசாரியிடம் விபூதி போட்டும், பதினைந்து நாட்கள் வேலாயுத வைத்தியரிடம் நாட்டு
படிப்பகம்WWW.padippakam.Com
28 உடைபடும் மெளனங்கள்
வைத்தியமும் முயற்சித்து இருக்கின்றனர். இது குறித்து L一T古L一町,
'இந்த இருபதாம் நூற்றாண்டில் இந்த மடமை தொலைய வில்லையே. மந்திரத்திலும் மூக்குப்பொடி மருந்திலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்களே!' என்று கேலி செய்வதாய் ஒரு குறிப்பு. உண்மையில் இது மேலை மருத்துவத்தின் மீதான கேலிதான் என்பது கதைப் போக்கில் வெளிப்பட்டுவிடுகிறது.
ஆக, வெளிப்படையாய் இல்லாமலேயே பிரதியியல் அணிவகுப்பின் (Textual strategy) மூலமாகவே ஒட்டு மொத்தமாய் மேலை நாகரிகம் பற்றிய எதிர் நிலையான பிம்பமும் கீழை நாகரிகம் பற்றிய ஒரு வழிபாட்டு விக்கிரக உருவாக்கமும் மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் மற்றும் கீழ்சாதியினர் மீதான கடும் ஒடுக்கு முறைகள், பார்ப்பனிய அதிகாரத்துவம் போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல் தாசிமுறை உட்படக் கீழை நாகரிகம் விரும்பத்தக்க ஒன்றாக முன் வைக்கப்படுவதை அவ்வளவு எளிதில் சலுகை அளித்துப் புறக்கணித்துவிட முடியாது.
இ) விருப்பக் குவிப்பு
கதையாடல் கருவிகள் (Narative Devices) மற்றும் பிரதியியல் அணிவகுப்பின்மூலமாக எத்தகைய அம்சங்கள் மிது ஈர்க்கப்பட்டு, கிளர்ச்சியூட்டப்பட்டு வாசகர்களின் விருப்பங்கள் குவிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்க
எந்த ஒரு எழுத்துக்குள்ளும் ஒரு கதை சொல்லி இருக் கிறான். அது "நான்’ ஆக இருக்கலாம் அல்லது ஒரு மூன் றாம் நபரின் நோக்கில் கதை சொல்லப்படலாம். நானாக இருக்கும் போதுகூட வாசகர்கள் நானுக்குச் சார்பாக வயப்படுத்தப் படாமல் நானுக்கு எதிராகவே கூட இயைபு
படிப்பகம்WWW.padippakam.Com
அ. மார்ச்ஸ் 29->
படுத்தப்படலாம் என்பதெல்லாம் நாம் அறிந்தவை தான். கதை சொல்லி யாருக்கு அருகாமையில் நிற்கிறான், யாரைக் கூர்மையாய் கவனிக்கிறான், யாருடைய நியா யங்களைப் பேசுகிறான், யாரைத் தூரப்படுத்துகிறான், யாரை விட்டு விலகி நிற்கிறான், யாருக்கு எதிராகப் பேசு கிறான்,யாரை மெளனமாக்குகிறான் என்பவை கவனிக்கப் படவேண்டிய அம்சங்கள்.இந்தத் தொகுப்பிலுள்ள பன்னி" ரண்டு கதைகளும் குடும்ப நிறுவனத்தின் ஊழல்களைத் தோலுரிப்பது குறித்தும் மேலை நாகரிகத்திற்கு எதிராக நிற்பது குறித்தும் விளக்கமாய்ப் பார்த்தோம்.
ஸ்டெல்லா, மேரி, நவீன மருத்துவர் தவிர எதிர்
நிலையில் ராஜத்தின் அம்மா, எழுத்தாளனின் மனைவி, சம்பத்தின் மகன் மருமகன் போன்றோர் உருவாக்கப் பட்டுள்ளனர். எதிர் நிலையில் வைக்கப்பட்டவர்களின் நியாயங்கள் ஒரிரு கதைகள் தவிர மற்றவற்றில் முற்றிலும் மெளனமாக்கப்பட்டுள்ளன. எழுத்தாளனின் மனைவியை எடுத்துக் கொள்வோம். அவள் ஏன் இப்படிப் பூடகமாக இருக்கிறாள், கணவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறாள் என்பதற்கு மெளனம் தான் பதில். ராஜத்தின் கொடுமைக் கார அம்மாகூட அப்படித்தான். வாழ்நாள் முழுமையும் பொறுப்பற்ற கணவனால் ஒடுக்கப்பட்டவள் அவள்; விதவையான இறுதிக் காலத்தில் இரண்டு பெண்களைத் திருமணத்திற்கு வைத்துக் கொண்டிருக்கும் சூழலில் சம்பாதிக்கும் மகன் தனக்குத் தெரியாமல் வருங்கால மனைவிக்குச் சொத்து சேகரிக்கும் போது ஒரு பாதுகாப் பற்ற உணர்வு வருவது சகஜந்தான். இன்றைய சமூகச் சூழலில் இது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் இவை யெல்லாம் பிரதியில் பேசப்படவில்லை. மாறாக அனுதா பத்திற்குரிய பாத்திரங்கள் மட்டும் பொறுமைசாலிகளாக வும் கடைசி வரை குழைந்து குழைந்து பேசுபவர்களாக வும் உருவாக்கப்பட்டுள்ளனர். பைத்தியக்காரப் பிள்ளை ராஜத்தின் மீது அனுதாபத்தைக் கூட்டுவதற்காக அவனைத் திருமணம் செய்து கொள்ள இருந்த பங்கஜம்.
படிப்பகம்WWW.padippakam.Com
30 உடைபடும் மெளனங்கள்
‘பைத்தியக்காரப் பிள்ளை கல்யாணம் ஆணப்புறம் இந்த வேலை செய்யாமல் இருந்தானே' (பக் 38) எனப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்துக் கிடப்பதாக ஒரு குறிப்பு வேறு.
ஸ்டெல்லா, மேரி ஆகியோர் உலவும் இரு கதைகளி லும் இன்னொரு குறிப்பும் கவனிக்கத்தக்கது. இரண்டுமே மிகப் பல ஆண்டுகளுக்குப் பிந்திய பின்னோக்கிய நினைவு களாகவே எழுதப் பட்டுள்ளன. இரண்டிலுமே ஸ்டெல்லா, மேரி ஆகியோருக்கு இணையாக நாயகர்களின் மனைவி கள் நிறுத்தப்படுகின்றனர். இரண்டிலுமே அமைதியான வாழ்க்கைக்கு அப்பால் பழைய உல்லாசப் குறித்த ஏக்கங் கள் இருந்த போதிலும் மனைவியுடனான வாழ்க்கையே சிறந்தது என்கிற கருத்து முன் வைக்கப்படுகின்றது. ஒன்றில் வெளிப்படையாகவே பழையதை அசை போட்ட வுடன் வெறுத்துவிடுகிறது. பழைய உல்லாச வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் அம்பலமான பின்னும் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமையும் அன்பும் பக்குவமும் உடையவ ளாக மனைவி காட்டப்படுகிறாள். 'மனைவியின் கோபம் பற்றிய கவலை இல்லை அவளைச் சமாதானம் செய்து விடலாம்' (பக். 119). இன்னொரு கதையில் ஸ்டெல்லா வின் அழகின்பத்தை நுகர்ந்த நினைவுகள் 'மனைவி பக்கத்தில் இல்லாது' போகும் போது மட்டுமே வருகின்றன (பக். 150). அந்தக் கதையின் நாயகன் ஸ்டெல்லாவைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கும் போது தனது வருங்கால மனைவி பற்றிக் குறிப்பிடுபவை கவனிக்கத் தக்கன.
(i) பிளாட்டிங் பேப்பர் போன்ற லேசான நெஞ் கள்ள உன்னைப் போன்றவர்களிடம் கலையின் பரிசுத்தத்தை எப்படி எதிர்பார்ப்பது? எதிர் பார்த்து ஏமாறுவது முட்டாள்தனம் என் மனைவி என் சுகத்தில் மாத்திரமல்ல, துக்கத்தி லும் என்னுடன் பங்கெடுத்துக் கொள்வதைத் தான் நான் விரும்புவேன்' (பக். 147). ாணை
படிப்பகம்WWW.padippakam.Com
அ மார்க்ஸ் 3.
{i) அவன் : "எனக்குக் கல்யாணம் நடக்கப்
போகிறது"
ஸ்டெல்லா : "யாராவது ஒரு பட்டிக்காடா
யிருக்கும்'
அவன் : ஆமாம்;ஆனால் அவள் என் கஷ்ட
காலத்திலும் கூட இருந்து உதவி புரிவாள்' (பக். 149)
கீழை நாகரிகம் கண்ட மனைவி இவள். கஷ்ட காலத் திலும் கூட இருப்பாள். கணவன் அப்படி இப்படி இருந் ததை, இருப்பதை அறிந்தாலும் கண்டு கொள்ள மாட் உாள். குடும்பப் பொறுப்பை சுமையை ஏற்றுக் கொண்டு கணவனுக்கு அமைதியான வாழ்க்கையை அளிப்பாள். குடும்பத்தின் ஊழல்களைத் தோலுரிப்பது போலத் தோற்றமளிக்கும் இப்பிரதியில் அமைதியான குடும்ப வாழ்க்கை பற்றிய ஏக்கம் தொடர்ந்து ஊடாடி நிற்பது குறிப்பிடத்தக்கது. பைத்தியக்காரப் பிள்ளை ராஜம் கூட அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கி ஏங்கித்தான் செத்துப் போகிறான். வேறு சில எடுத்துக்காட்டுகள்:
(i) அமைதி இழந்த குடும்ப வாழ்க்கை எழுதுவதற்கு முட்டுக்கட்டை தானே? திருப்தியும் சந்தோஷ மும் நிறைந்த குடும்பந்தான் ராஜ்யம் நிலைக்க உதவும் என்று ஒரு பெரிய சரீர சாஸ்திரி கூறு கிறார்" (பக். 48) (i) "இருபது வயதுப் பெண்கள் முழுப் பொறுப் பையும் ஏற்று குடும்பம் நடத்தவில்லையா?” (பக். 50).
(i) "மீண்டும் புனாவுக்குச் சென்று, அந்தப் பெண்"
களில் யாராவது ஒருத்தியின் கரம் பற்றிக் கொண்டு, கண்டோன்மென்டிலோ டெக்கான் ஜிம்கானாவிலோ உள்ள ஏதாவது ஒரு ஒட்டலில்
படிப்பகம்WWW.padippakam.Com
32
உடைபடும் மெளனங்கள்
புகுந்து உண்டு குடித்து-இந்தத் தாபம் எழுகிறது அடிக்கடி, ஏனோ குடும்ப வாழ்க்கை அமைதி யாக-தேக்கம் கொண்ட நீர் சலனமற்று அமைதி யாக இருக்குமே, அது போலவா?-இருப்பதாலா? அமைதியுமா அலுக்கும்?' (பக். 106-107)
கடைசி மேற்கோள் குடும்ப வாழ்க்கையின் அமைதி பற்றி மட்டுமல்ல, அந்த அமைதியில் தோன்றும் அலுப்பு பற்றிப் பேசுகிறது. ஆனால் அதற்குத் தீர்வு ஸ்டெல்லா அல்லது மேரி அல்லது சரோஜா கூட அல்ல மனோரமா போன்றவர்களின் உல்லாசத்தின் பால் கவனம் ஈர்க்கப் படுகிறது. இந்தத் தொகுதி முழுமையுமுள்ள கதைகளி லேயே கொஞ்சம் வாசகர்கள் பாலியல் ரீதியாய்க் கிளர்ச்சி யூட்டப்பட்டு ஈர்க்கப்படுவதுமனோரமாவின் பக்கந்தான். மற்ற விலை மாதர் போலன்றி அவள் அசூயையுடன் அறிமுகப்படுத்தப்படாததை முன்பே சுட்டிக்காட்டி னோம்.
மீண்டும் மனோரமாவை ஸ்டெல்லா, மேரியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். பின்னாலுள்ள இருவரையும் முக்கிய ஆண் பாத்திரங்கள் பயன் அனுபவித்த பின்னர் குரூரமாய்ப் பழிவாங்கி விடுகின்றனர். உடல் மீதான பிம்பத்தை உடைப்பதன் மூலமே இரு கதைகளிலும் பழி வாங்கல்கள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. மேரியின் நீட்டிக்கொண்டிருக்கும் பற்களை, கட்டையான மூக்கை, மென்மையும் பளபளப்புமற்ற கூந்தலை குரூர மாய் சுட்டிக்காட்டுகிறான், "அவன்" (பக். 110-111). ஸ்டெல்லாவிடம் தன் முன் பற்கள் இரண்டும் பொய் யானவை என்றும், தனது கண் அரைக் குருடு என்றும் சொல்வி தனது உடற்கவர்ச்சியை நொறுக்கி அரு வருப்பை ஊட்டுகிறான் 'அவன்' (147-48).
"உடல் தான் எல்லாமென்று கருதும்"
மேலை நாகரிகத்தை அடிக்க இந்த உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
படிப்பகம்WWW.padippakam.com
அ. மார்க்ஸ 33
மனோரமாவின் கதையிலும் உடல் பறறிய பிரக்ஞை சரடாக ஒடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு பெண் உடல் மீதான கவர்ச்சியின்பால் கவனம் குவிக்கப் படுகிறது.
பதினான்கே வயதான அழகான சிறுவனின் கன்னங் களும் உதடுகளும் புண்ணாகும்படி நெருடிக் கொண்டே மன்னர்களின் உல்லாசங்கள் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறாள் புனுகு மணம் கமழும் கவர்ச்சி நாயகி மன்ோரமா (பக். 150, 172) .
“சகோதர உணர்ச்சி என்கிறார்களே, அநத மாதிரிப் பாசம் ஒன்றும் எனக்கு அவளிடம் ஏற்பட வில்லை. அவளுடைய உடல், அழகு, உடையழகு, சொல்லழகு இவைகளால் கவரப்பட்டுத்தான் நான் அவளை நாடி அடிக்கடி சென்றிருந்தேன்" (பக். 116)
என்று பையனின் வாக்குமூலம் வேறு. அந்தச் சிறுவன் அவளுடனேயே இருக்கத் தயாராக இருந்தால் அவள் வேறு யாரையும் நாடுவதில்லை எனச் சொல்கிறாள். கடைசியில் பிரியும் போது தங்கச் சங்கிலி பரிசளித்துத் தளதளக்கிறாள்.
ஆக, மேலோட்டமாகக் குடும்பத்தின் ஊழல்கள் கண்டிக்கப்பட்டாலுங் கூட இந்த ஊழல்கள் இல்லாத, ராஜ்ய அமைப்பைக் கட்டிக் காக்க உதவும் அமைதியான குடும்ப வாழ்க்கை, செத்துப் போன பின்னும் கூட கனவில் வந்து கஷ்ட காலங்களில் துணை நிற்கும் மனைவி (வெயில்), இந்த அமைதியான வாழ்க்கை அலுத்துப் போகும்போது அதனை ஈடுகட்டும் மனோரமாக் களைத் தன்னுள் கொண்டுள்ள கீழை நாகரிகம் ஆகிய
a -3
படிப்பகம்WWW.padippakam.Com
34 உடைபடும் மெளனங்கள்
வற்றின் பால் நாம் ஈர்க்கப்படுவது மூன்றாம் தளத்தில் பிரதியின் செயல்பாடாக இருக்கிறது. "இந்துத்துவம் என்கிற அடிப்படையில் பார்ப்பனப் பண்பாட்டு மீட்சி களின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம் நாம், நமது சூழலின் இந்தப் பின்னணியில் எல்லாக் குறியீடுகளும், சமிக்ஞையாக்கங்களும் மேல் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளன. சாதாரண காலங்களில் உள்ளதைக் காட்டிலும் இன்று கீழை நாகரிகத்தின் மீதான ஈர்ப்பு என்பது அதனுடன் இணைந்த சனநாயக விரோதமான, கொடுர மான பல்வேறு அம்சங்கள் மீதும் நம்மை ஈர்க்கும் ஆபத் துடையது என்கிற எச்சரிக்கை நமக்குத் தேவை.
எம். வி. வெங்கட்ராம், இனி புதிதாய் (சிறுகதைத் தொகுதி), சிலிக்குயில், குடந்தை, 1992, 19-04-92 அன்று குடந்தையில் 'இலக்கிய சந்திப்பு' நடத்திய எம். வி. வி. கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
மேலும், ஜன" 93
at 12/13/2017 10:12:00 pm
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, December 09, 2017

மெளனியில் மெளனமாகும் எதார்த்தங்கள் - அ. மார்க்ஸ், உடைபடும் மெளனங்கள் :: முன்னுரை - ரவிக்குமார்

படிப்பகம்WWW.padippakam.Com
Vimaladhitha Maamallan
22 hrs · மெளனியின் மரணம்
மௌனியின் கதையில்
இரவெல்லாம் தன் மனைவியின் பிணத்தோடு
தனியாகப் படுத்துக் கிடந்தவனைப் பற்றிய
எண்ணங்களில்நேற்று இரவெல்லாம் உறக்கமின்றிபுரண்டுகொண்டிருந்தேன்தவிர்க்க முடியாத கதை
என் மண்டைக்குள்ளிருந்து
இடது செவி வழியே வெளிவந்து
தோள்பட்டையில் ஊர்கிறது
கருந்தேள் குஞ்சு
- ரமேஷ் பிரேதன்
மெளனியில் மெளனமாகும் எதார்த்தங்கள்
அ. மார்க்ஸ்

மெளனிக்கு மறுபடியும் மவுசு வந்திருக்கிறது. கதைகள் தொகுக்கப்படுகின்றன. பழைய பேட்டிகள் கணையாழி களில் மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. இரண்டு நாள் விவாதங்கள், விவாதக் கட்டுரைகளின் தொகுப்பு.

மெளனியிடம் ஒப்போதுமே என்னால் ஒன்ற முடிந்ததில்லை. அப்படியானதில் எனக்குக் கொஞ்சம் கூச்சந்தான். மெளனியைக் கண்டுகொள்ள இயலாதவர்கள் "தேர்ச்சியும், பயிற்சியும், கண்ணும், செவியும் இல்லாதவர்கள்"என்று க. நா. சுவும் (மெளனியின் கதைகள்-பக். 318), மெளனியின் உலகம் "சொல்லிக் கொள்ளும்படியான ஆழம் ஏதுமற்ற தமிழ் வாசகனின் கிரஹறிப்பிற்கு அப்பாற்பட்ட உலகம்" என வெங்கட் சாமிநாதனும் (என் பார்வையில்-பக், 27), மெளனியை அணுகுவதற்கு "சுய முயற்சி'அதிகம் வேண்டும் என பிருமிளும் (தமிழில் நவீனத்துவம்-பக். 55) மிரட்டி வைத்திருந்ததன் விளைவு தான் என் கூச்சம். இப்போது மீண்டும் மெளனியின் கதைகளைப் படித்தேன். மெளனி காட்டும் அக உலகின் ஆழங்கள் பற்றியும் மேலோட்டமான பார்வைக்கு அப்பாற்பட்டு அவை இயங்கும் இதர தளங்கள் குறித்து இவர்கள் எழுதியுள்ளவற்றையும் சேர்த்துப் படித்தேன். மார்க்சிய விமர்சகர்களின் வரட்டுப் பார்வையைக் காய்கிறேன் என்கிற பெயரில் மார்க்சியச் சித்தாந்தத்தையும் வர்க்கப் பார்வையையும் வாழ்நாளெல்லாம் தாக்கிக் கொண்டு பார்ப்பன-வேளாள மரபுகளை "இந்தியக் கலாச்சாரம்" எனவும் தமிழ் பண்பாடு" எனவும் தூக்கிப் பிடித்து வந்தவருகிற இவர்கள், 'மெளனியின் சிறுகதைகள் ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் ஒரு புது அனுபவமாக அமைகிறது"(மெள. க.-பக். 313) எனச் சொல்லும் போது பிரதி, பிரதியியல், பிரதிக்கும் கருத்தியலுக்கும் உள்ள உறவு, பிரதியின் சுயேச்சைத் தன்மை, பிரதியியல் வியூகம் ஆகியவை பற்றிக் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டு கிறது.

பிரதியின் சுயேச்சையான இயக்கத்திற்கு கூடுதல் மதிப்பளிக்கக் கூடிய அமைப்பியலாளர்களிடையே கூட பிரதியின் உற்பத்தி, பிரதியின் நுகர்வு ஆகியவற்றுக்கும் வரலாற்றுக்குமுள்ள உறவுகள் குறித்து கருத்து மாறுபாடுகள் உண்டு. சுத்த இலக்கியம் (purely literary) என்பதை சேத், ஈகிள்டன் போன்றோர் மறுக்கின்றனர். பிரதியின் செயல்பாடு அதன் தனித்துவத்திலோ தூய்மையிலோ இல்லை; மாறாக அது எவ்வாறு இதர அம்சங்களுடன் கலந்து கிடக்கிறது; இதர அம்சங்களால் கட்டுப்படுத்தப் படுகின்றது என்பது முக்கியமாகின்றது.

நம் நடவடிக்கைகள் அனைத்துமே பெளதிகச் சூழல்களால் வரையறுக்கப்படுகின்றன. பிரதியின் நுகர்வோர்களாகிய நாம் அனைவருமே வெறும் மூளையை மட்டுமே கொண்ட இலக்கிய எந்திரங்களல்ல. நமது உடல்கள் பெளதிக இருப்புச் சூழல்களில் வேர் கொண்டுள்ளன. எனவே தூய்மை, தனித்துவம் என்பதைக் காட்டிலும் எவ்வாறு பிரதி தூய்மையற்று இதர அம்சங்களுடன் கலந்து கிடக்கிறது என்பதை நோக்கி நம் கவனத்தைத் திருப்பு வேண்டியவர்களாக இருக்கின்றோம். -

பிரதி தன்னைத்தானே முடிவில்லாமல் சுயேச்சையாக உற்பத்தி செய்து கொள்கிறது என்பது தனிநபர் சுதந்திரம் குறித்த முதலாளிய மாயையின் இன்னொரு வெளிப்பாடேயாகும். பிரதியின் சுதந்திரம் என்பது தவிர்க்க இயலாமல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. ஒரு வரலாற்றுப் பிரதியையும் இலக்கியப் பிரதியையும் ஒப்பிடுவோம். இலக்கியப் பிரதி நேரடியாக வரலாற்றைத் தனது பொருளாக எடுத்துக் கொள்வதில்லை. வரலாற்று எதார்த்தங்களிலிருந்து அது எந்த அளவு விலகி நிற்கிறதோ அந்த அளவு அது சுதந்திரம் பெறுவதாகத் தோன்றுகிறது. தூலமான குழல்களை நேரடியாக ஒரு பிரதி சுட்டாத போது அது தன்னைத் தானே சுட்டிக்கொள்கிறது எனவும், மனிதப் பொதுவான ஆழங்களைச் சுட்டுகிறது எனவும் நமக்குத் தோன்றுகிறது. மெளனியின் கதைகள் இவ்வாறு வரலாற்றில் இருந்து விலகி நிற்பதாகத் தோற்றமளிப்பதுதான் அவரது சிறப்புக்கான காரணம் எனவும் அவரது “படைப்புகள்" வாசகனின் தரத்திற்குத் தக்கவாறு பலப்பல தளங்களை விரித்துக் காட்டும் உன்னத நிகழ்வு எனவும் கருதப் படுவதற்குக் காரணமாகின்றது.

ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இலக்கியப் பிரதி வரலாற்றுப் பிரதி என்கிற வகைப்பாட்டில் அதிகப்

1. "அவரது அக்கறை அடித்தள உண்மைகளைப் பற்றியது; தோற்ற உலகின் பின்னிருக்கும் உண்மை பற்றியது'-(வெங்கட்சாமிநாதன், மு. கு. நூ. பக்.23) *அவர் சாமான்யமான தூல நிகழ்ச்சிகளை ஒரேயடியாக அசட்டை செய்பவர். தூல உலகின் தாக்கத்திற்கு மெளனி கட்டுப்படமாட்டார்." (பிருமிள், மு. கு. நூ. பக். 60)



பொருளில்லை என்பது புலப்படும். இருக்கிற வரலாற்றை ஏற்றுக் கொள்ளும் பிரதி வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் பிரதி; ஒற்றைக் குரலை ஒலிக்கும் பிரதி பல குரல்களைத் தன்னகத்தே கொண்ட பிரதி என்பவற்றில் உள்ள பொருள் இலக்கியப் பிரதி இலக்கியமற்ற பிரதி என்கிற வகைப்பாட்டில் இல்லை. வரலாற்றிலிருந்து தூரப்படுத்திக் கொண்டதாகத் தோற்றம் கொள்வதாலேயே ஒரு பிரதி வரலாற்றிலிருந்து விலகி நிற்பதாகி விடாது; வரலாற்றைக் கேள்வி கேட்பதாகிவிடாது; இருப்பில் விமர்சனபூர்வமான இடையீட்டைச் செய்ததாகிவிடாது. வரலாற்றிலிருந்து தூரப் படுத்திக் கொண்டதாய் மேற் தோற்றமளிக்கும் பிரதிகளே மேலும் நுண்மையாய், தீர்க்கமாய் வரலாற்றைச் சுட்டக் கூடியதாய் அமைந்துவிடக் கூடும். தூலமான சூழலைச் சுட்டிக் காட்டாமலேயே அதற்குரிய கருத்தியல் உருவாக் கத்தைச் சுட்டிக் காட்டிவிடக் கூடும்.

பிரதிகள் வெறுமனே சமூகத்தை எதிரொளிக்கின்றன அல்லது சமூகத்திலிருந்து தோன்றுகின்றன எனச் சொல்லிவிட முடியாது. எதார்த்தத்தைப் பிரதிகள் எதிரொளிக்கின்றன அல்லது எதார்த்தத்திலிருந்து தோன்றுகின்றன எனச் சொல்வதைக் காட்டிலும் புனைவுகள் மற்றும் கதையாடல்களின் மூலம் பிரதிகளில் எதாாத்தம் புதிதாகக் கட்டமைக்கப்படுகிறது எனச் சொல்வதே சரியாக இருக்கும். சமூக, கலாச்சார, கருத்தியல் மூலப் பொருட்களிலிருந்து இக்கட்டமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. எதிரே விரிந்து கிடக்கும் இந்த மூலப் பொருட்களிலிருந்து எவை, எவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எப்படி இவை வரிசைப்படுத்தித் தொகுக்கப்படுகின்றன, எந்தெந்த வடிவங்களில், என்னென்ன கோணங்களில் இவை முன் வைக்கப்படுகின்றன என்பனவற்றைப் பொறுத்து கட்ட மைக்கப்படும் எதார்த்தங்கள் அமைகின்றன. இவற்றையே பிரதியியல் வியூகம் அல்லது அணிவகுப்பு (Textual Strategy
என்கிறோம். இந்த அணிவகுப்பை அமைப்பதில் படைப் பாளியின் கருத்தியல் முக்கிய பங்கு வகிக்கிறது.

வரலாற்றுப் பிரதிகளில் இது எளிதாய் வெளிப்பட்டு விடும் போல்செவிக் கட்சி கட்டப்பட்டு, ஜார் ஆட்சியைத் தூக்கி எறிந்து புரட்சிகர அரசு உருவாக்கப்பட்டது குறித்து ரசியாவிலேயே மூன்று வெவ்வேறு வரலாற்றுப் பிரதிகள் உருவாக்கப்பட்டன. ஒன்று ஸ்டாலின் உருவாக்கியது (போல்செவிக் கட்சியின் வரலாறு), இன்னொன்று குருசேவ் காலத்தியது (சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கமான வரலாறு), மற்றது ட்ராட்ஸ்கி எழுதியது. வரலாற்றுச் சம்பவங்களைத் தொகுத்து எழுதப்பட்ட இம்மூன்றும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட எதார்த்தங்களைக் கட்டமைத்து விட்டதை நாமறிவோம். தொகுப்பவரின் கருத்தியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுத் தொகுக்கப்படும் "வரலாறானது' இதர வெளிப்பாட்டு அம்சங்கள், பிரதியியல் அணிவகுப்பு களுடன் இணைந்து அதற்குரிய ஒரு புதிய கருத்தியலை உற்பத்தி செய்துவிடுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கருத்தியல் என்பது பிரதிக்கு முந்திய (Pretextual ideology) G5i G|égi Lluai LIGg55 "ul L கருத்தியலுக்குப் பொருத்தமானதாக அமையலாம்; சமயங்களில் விலகியும் அமையலாம். சுருங்கச் சொல்வதெனில் பிரதி என்பது எதார்த்தத்தையும் கருத்தியலையும் எதிரொளிக்கிறது அல்லது வெளிப்படுத்துகிறது என்பதைக் காட்டிலும் கருத்தியலை உற்பத்தி செய்கிறது.

இவ்வாறு உருவாக்கப்படும் எதார்த்தங்கள் மற்றும் கருத்தியல்கள் தூலமான செயல்பாடுகளிலேயே வேர் கொண்டுள்ளன. நுகர்வின் போது தூலமான சூழல்களை அவை நேரடியாகச்சுட்டிக் காட்டாதபோதும் குறிப்பிட்ட கருத்தியல் உருவாக்கத்தை சுட்டிக் காட்டக் கூடும். குறிப் பிட்ட எதார்த்தத்தைக் கட்டமைத்து விடக்கூடும்.

நுணுக்கமான செயற்பாடுகள் மூலம் பிரதி நுகர்வோனை இவ்வாறு கட்டமைக்கப்பட்ட எதார்த்தத்திலும் கருத்தியலிலும் வேர்கொள்ள வைத்துவிடுகின்றது. எனவே, மெளனி கதைகள் போன்றவற்றை வரலாற்று வேரிலிருந்து பிரித்து தன்னிச்சையானவை போலப் பார்ப்பதில் பொருளில்லை. வரலாற்றைத் "தூரப்படுத்தி" கருத்துருவ மாக்கப்பட்ட (abstract) குறியீடுகளின் செயல்பாடுகள் மேலும் அதிகார பூர்வமானதாய், மேலும் தூலமானதாய் (concrete) மாறுகின்றன. சுருக்கிச் சொல்வதானால் "கருத்தியலே இங்கு தூலமாக்கப்படுகிறது" (abstract is concretised here)

எத்தகைய கருத்தியலுக்கு வாசகன் இயைபுபடுத்தப் படுகிறான்; எத்தகைய வரலாறு இங்கே தூரப்படுத்தப் படுவதுபோல தூலப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்குப் பிரதி கவனமாகக் கட்டவிழ்க்கப்படுதலும் பிரதியியல் அணிவகுப்பைப் புரிந்து கொள்வதும் அவசியம். எதார்த்தங்களின் மறைவால் சிறப்புப் பெறுகிற இப்பிரதிகளைக் கட்டவிழ்ப்பதற்கு எத்தகைய எதார்த்தங்கள் இங்கே மறைக்கப்பட்டுள்ளன, என்னென்ன தூலமான சூழல்கள் மெளனமாக்கப்பட்டன. என்னென்ன வெளிப்படுத்தப்படுகின்றன எனக் கவனிப்பது முக்கியம்.விமர்சகனின் வேலை இம் மெளனங்களைப் பேசவைப்பது என்பதைக் காட்டிலும் ஏன் அவை மெளனங்களாக்கப்பட்டன, மெளனங்களாக இவற்றின் பணி என்ன, பிரதியின் நனவிலியின் (unconsious) பங்கு என்ன என்பனவற்றைக் கண்டறிவதுதான். பிரதி சுட்டாமல் கட்டும் இந்தத் தூலங்கள், இருப்பிற்கு (status quo) ar6ìữ tổạoaờujiả)-(Oppositional || Subựersive mode); விமர்சனபூர்வமாய் இருக்கிறதா, இருப்பை மறு உறுதி செய்கிறதா என்பது பின் தன்னால் வெளிப்படும். பிரதியைத் தூலமான வரலாற்றுச் சூழலில் வைத்துப் பார்ப்பது அவசியம். அரசியல் இலக்கிய அறிவுத்துறை சார்ந்த பொருளாதார. சொல்லாடல்களுக்கிடையேயான கூட்டிணைவான மேலாண்மையை வாசித்துக் காட்டு வதற்கு இவ்வாறு பிரதியை அது சிக்கிக் கிடக்கும் சூழல்; காலம், இடம், சமூகம் ஆகியவற்றிலேயே கொண்டுபோய் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சிலர் சொல்வது போல அதிலிருந்து பிரித்துப் பார்ப்பது அல்ல. நாம் இப்படிச் செய்வது சுருக்கிப் பார்ப்பது அல்ல; மாறாக இதுவே விரித்துப் பார்ப்பதாகும், இத்தகைய விரிந்த பார்வையே இன்று அவசியம். உலகில் கிடக்கும் இப்பிரதிகளில் வெளிப்படும் உலகியலம்சங்களைத் தேடுவதே சரியான கட்டுடைத்தல்; சரியான புனைவு நீக்கல்.

ஒரு பிரதியின் உற்பத்தியில், வாசிப்பில், பரப்பலில் என்னவிதமான அரசியல், சமூக, மனித மதிப்பீடுகள் அடங்கியுள்ளன என உடைத்துக் காட்டுவதே பொருள் முதல் விமர்சனம். எனவே அது தல உலகியற் சூழல் களைச் சார்ந்துள்ளது. அவ்வாறன்றி தூய பிரதி, விமர்சனத் தலையீடின்மை, உயர்ந்த தரம் என்றெல்லாம் பேசுவது இன்றைய வலச்சாய்வை நோக்கிய எழுச்சிக ஆளுடன் இணைத்துப் பார்க்கத் தக்கது.

2

மெளனி கதைகளில் வெளிப்படும் பிரதியியல் அணி வகுப்பின் ஒரு சில அம்சங்களைக் காண முயற்சிப்போம்.

முதலில் மெளனியில் மெளனமாகும் எதார்த்தங்களின் ஒரு சில கூறுகளை எடுத்துக்கொள்வோம். மெளனியின் கதைகளில் பெரும்பான்மை பணிக் களத்தில் நடைபெறுவதில்லை. மொத்தக் கதைகளில் சுமார் ஐந்து சதக் கதைகளில் மட்டுமே உடலுழைப்பாளர்கள் முக்கிய பாத்திரங் களாக வருகிறார்கள். அவர்களில் மூவர் தாசிகள். ஒருவன் படையாச்சி சாதியைச் சேர்ந்த பண்ணையடிமை,


இன்னொருவன் ஏட்டு ராயன். இவர்கள் மட்டுமே அவர்களின் பணியிடத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். மற்றவர்கள் யாரும் அதாவது தொண்ணுரற்றைந்து சத நாயக நாயகியர் உழைப்பதில்லை. இவர்கள் உயர்ந்த-பார்ப்பன-சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படுகிறது. இவர்களில் யாருக்கும் வயிறு சார்ந்த கவலைகள் இல்லை. சிலர் குறித்து நிறைந்த சொத்துக்களின் வாரிசு என்கிற குறிப்புகளும் காணப்படுகின்றன. இவர்கள் பங்கு பெறும் கதைக்களங்கள் பெரும்பாலும் அறைகள் அல்லது வீடுகள்தான். சமயங்களில் கடற்கரை, கோயில் போன்ற பொது இடங்களில் கதைகள் நிகழ்ந்தாலும் அவை பொது இடங்களுக்குரிய தன்மைகளுடன் அறிமுகப்படுத்தப்படுவதில்லை. அங்கு நடைபெறும் பொது நடவடிக்கைகள் கதைகளில் பங்கு பெறுவதில்லை. மையப் பாத்திரங்களின் அந்தரங்க வெளியாகவே (Personal Space) அவை அமைகின்றன. எனவே பொது நடவடிக்கைகள், அவற்றின் ஊடான சமூக உறவுகள், உற்பத்திச் செயற்பாடுகள், அவற்றினூடான மனித உறவுகள் இவையெல்லாம் நீக்கப்பட்ட துரய்மையான ஒரு அந்தரங்க உலகையே மெளனியில் நாம் காண்கிறோம்.

மனிதனின் மனநிலை என்பது பல்வேறுவிதமான சமூக உறவுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே அது சிக்கலாகிறது. இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும் என எளிதில் ஊகிக்க இயலாததாகிறது. பொது உலகையேகூட அந்தரங்க உலகாகக் குறுக்கிக் கொண்டு வாழும் மெளனி நாயகர்களின் மனநிலைகளோ ஒற்றைக் காரணிகளால் பட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன. மற்ற காரணிகளைக் கட்டுப்படுத்திவிட்டு இரு காரணிகளுக்கிடையேயான உறவை மட்டும் ஆய்வு செய்கிற சோதனைச் சாலை சோதனைகளைப் போன்றவையே மெளனியின் கதைகள், பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு பார்வையின் வசீகரத்தில் ஈடுபட்டுக் காத்திருந்து செத்துப்போகிற "கொள்கை ஈடுபாடுடைய' (Committed) நாயகர்களை மெளனியில் மட்டுமே காண முடிவது இதனால் தான். இதர ஈடுபாடுகள் இவர்களுக்குக் கிடையாது; எனவே இந்த ஈடுபாடுகளுக்கிடையேயான பரஸ்பர தாக்கங்களும் கிடையாது. ஏனெனில் இத்தகைய ஈடுபாடு களுக்கெல்லாம் காரணமாகிற பொது வாழ்க்கையே இவர்களுக்குக் கிடையாது. எனவே மெளனியின் நாயகர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது முன் கூட்டியே நமக்குத் தெரிந்து விடுகிறது.

பணிக் களத்தில் அறிமுகப்படுத்தப்படும் பாத்திரங்களில்கூட மேல் இருந்து கீழான படிநிலை உறவுகளிடையேயான எதிர்நிலை முரண்களும் ஒத்திசைவின்மைகளும் வெளிப்படுவதில்லை. ஏட்டு ஆனந்தராவுக்கும் அவனது மேலதிகாரிகளுக்குமிடையேயான ஒத்திசைந்த உறவும் (மிஸ்டேக்), சிவராமய்யருக்கும் செல்லக் கண்ணுப் படையாச்சிக்குமுள்ள உறவும் (இந்நேரம், இந்நேரம்) இதற்கு எடுத்துக்காட்டுகள். மேலதிகாரிகளும் பண்ணையய் பரும் தங்களுடைய மேலாண்மையில், நலன்களில் குறியாய் இருந்த போதிலும் அடிமைகள் சேவையில் திருப்தியடைகின்றனர். இயல்பாய் வெளிப்படுகிற முரண்கள் முற்றிலும் மழுங்கடிக்கப் படுகின்றன. இப்படித் திருப்தி கொள்ளும் அடித்தட் டினரும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்கிற கேள்வி எழலாம். இந்த உறவின் இரு எதிர் எதிர் துருவங்களில் நமது வெறுப்பும் அனுதாபமும் எங்கெங்கே குவிக்கப்படுகின்றன என்பது முக்கியம், செக்காவின் “குமாஸ்தாவின் மரணம் கதையை ஏட்டு ஆனந்தராவ் கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். அங்கே அதிகாரத்துவத்தின் கொடூரம் நம்மில் ஆழமாய்ப் பதிகிறது. இங்கே கீழேயுள்ள போலீஸ்காரன் ஏழை வண்டிக்காரனைச் சுரண்டும் இரக்கமற்ற வனாகவும் உயரதிகாரி இதனைச் சுட்டிக்காட்டி வண்டிக் டகாரனுக்கு நியாயம் வழங்கும் ஈர மனம் படைத்தவராகவும் சித்தரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இன்னொன்றும் குறிப்பிடத்தக்கது. அதிகாரி உயர்சாதிக்குரிய குறியீடுகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளார்.

தந்தை வழிச் சமூகத்திற்கும் தாசிகளுக்குமிடையேயான உறவுகளும் மிகவும் ஒத்திசைவுடன் காட்டப்படுகின்றன. மூன்று நான்கு தாசிகளை மெளனியில் காண்கிறோம். சுசிலா (நினைவுச் சுவடு), ஜோன்ஸ் (குடை நிழல்), கெளரி (உறவு, பந்தம், பாசம்). விடுதியில் இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்; ஆண்டுகள் இருபது ஆனாலும் ஒரு பழைய, இனிய தொடர்பை நினைவில் சுமந்து ஏங்கியிருக்கிறார்கள் மனைவி கன்னி! தாசி நிலைகளுக்கிடையே வேறுபாடுகளை அமைதியாய் தர்க்கம் செய்கிறார்கள். போலீஸ் தொல்லையோ, முதுமையோ அவர்களுக்குப் பிரச்சனையில்லை. அவர்கள் நொடித்துப் போகவில்லை; நோய்வாய்ப்படவில்லை: இறுதிக் காலத்தில் கஷ்டப்படவில்லை. தங்களை விட்டுப் போன பிரபுக்களுக்காகக் காத்திருக்கின்றனர். தேவதாசி கள் நிறைந்திருந்த பிரபுத்துவ வாழ்க்கை பற்றிய ஏக்கம் மெளனிக்கே இருக்கிறது.

'...... ஊர் அரவம் அடங்கி, அரை இருளில் தெருவே ஒரு தூக்கத்தில் ஆழ்ந்ததெனத் தோற்றம் கொடுத்தது. ஒரு காலத்தில் அத்தெரு முழுவதிலும் தேவதாசிகள் இருந்தனர். வழிவழியாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு குடும்பப் பிரபல தாளிகள், அவர் களின் இசை நாட்டிய கலைத் தேர்ச்சி, பழைய பெரிய மனிதர்களுடைய ஈடுபாடு. என அநேக ஞாபகங் களைக் கொண்ட தெரு அது. ஒரு வசீகரம் பாழ் பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை அது இப்போது அளித்துக் கொண்டிருக்கிறது. யார் யார் இப்போது அங்கு வசிக்கிறார்கள் எனபதற்கில்லை. " (மெள, み。ーLó。140-141).


மேற்கண்ட வரிகளைத் திறவுகோலாக்கி மெளனியில் வெளிப்படும் உயர்சாதி|ஆணாதிக்கக் குரலை விரிவாக நாம் ஆராய முடியும். 1920களின் பிற்பகுதியில் சென்னை சட்ட மன்றத்தில் தேவதாசி எதிர்ப்பு ஒழிப்பு மசோ தாவை நிறைவேற்ற முத்துலெட்சுமி ரெட்டி போன்றோர் முயன்றபோது அதனை எதிர்த்து ராஜகோபாலாச்சாரியும் சத்தியமூர்த்தியும் செயல்பட்டது நமக்குத் தெரியும். தேவதாசி சாதியில் குடும்பத்துக்கு ஒரு பெண்ணாவது பொட்டுக் கட்டப்பட வேண்டும் என வாதிட்ட சத்திய மூர்த்தி, சுதேசிய- இந்து-தேசியக் கலாச்சாரமாகிய தேவதாசி முறை காப்பாற்றப்பட வேண்டுமென்றார். சத்தியமூர்த்தியின் குரல் மெளனியில் அப்படியே வெளிப்படுவதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. தாசி களின் அவலம் இங்கு முக்கியமல்ல; பிரபுக்களின் சுகமே முக்கியம். வழக்கம்போல இந்தியக் கலாச்சாரம்" என்கிற பெயரில் இந்த அநீதி மூடி மறைக்கப்படுகின்றது; கட்டிக் காக்க முயற்சிக்கப்படுகிறது.

திருமணத்தில்தான் பெண் முழுமையடைகிறாள்: திருமணமின்றி பெண் வாழமுடியாது என்கிற கருத்தை மெளணியின் பெண் பாத்திரங்கள் அடிக்கடி ஒலிப்பதைக் காணலாம். மெளனியின் கருத்தும் அதுதான். "மன வாழ்க்கையில் பெண்கள் ஆடவரால் அடிமைப்படுத்தப் படுகின்றனர்" என்கிற கருத்துடைய நாணத்தை வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்பும் நாகரிகச் செருக்குடைய ஒரு பெண் டாக்டரை அறிமுகப்படுத்துகிறார் (சிகிச்சை). தனது நோயாளி ஒருத்தியின் குடும்ப வாழ்வைப் பார்த்தவுடன் 'கணவனுக்கு அடிமைப்படுதல் என்பதான மண வாழ்க்கையைப் பற்றிய தனது வியாக்யானம் பிசகு' என்பது போன்ற எண்ணம் அவள் மனத்தில் எழுகிறது. அதை அவள் கிள்ளி எறிய முயன்றாலும் தோற்கிறாள். அந்த நோயாளி இறந்தவுடன் அவள் கணவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். கணவன், குழந்தை என அவளது வாழ்க்கை 'நிறைவடைகிறது'. சராசரி சனரஞ் சகச் சினிமா ("பட்டிக்காடா பட்டணமா அல்லது 'சந்திரோதயம்') ஒன்றின் கருத்தியலுக்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை,

பொதுவாகவே நாகரிகம் X பாரம்பரியம் என்கிற முரணில் நாகரிகத்தை அருவருப்பாய் பார்க்கும் பார்வையைத் தொடர்ந்து மெளனியில் காணமுடிகிறது.* பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்த்து வழி விலக்குபவர்கள் என்கிற தொனியையும் காணலாம். அத்தகைய குற்ற உணர்ச்சி பெண்கள் மீதும் ஏற்படுகின்றது. (பக். 80/81, 184), பாரம்பரியத்தை ஏந்திக் கையளிக்கும்

2. "நவீன நாகரிகத்தை அணிந்து நாணத்தை வீட்டில் வைத்து விட்டு வெளிக் கிளம்பும் அனேக பெண்களைப் போல அவளும் வாலிபருடைய பார்வைக் காதலுக்கு ஆளானாள்.' (பக். 123)

'இவனுக்குக் காதல் வந்தது!. சமுத்திரக் கரையில் ஒழுங்கு உடை தரித்த வாலிபர்களுக்கு, நாகரிக ஒய்யார நடை மாதர்களைக் கண்டால் வருவதைப் போலவா' (மெள, க. பக். 245)

'பன்னிக் குட்டிக்குப் பதினாறு' என்ற ஒரு பழைய மொழி உண்டு. பழைய மொழி அவ்வா றாயின் புதுக் காலத்தில் நாகரிகத்தில் தட்டுத் தடையின்றி மேலே போய்க்கொண்டிருக்கும் நமது பெண்மணிகளின் விஷயத்தில் அதே மொழி புது மொழியாக எவ்வளவு தூரம் பொருத்தம் கொள்கிறது மற்றும் பன்றிக் குட்டிக்கே இப்படி என்றால்? சுந்தரி மாதிரியான குட்டிக்குப் பதினாறு வயது வந்தால்" (மெள. க. பக். 249)

கடமையும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. 

3 

சாதாரணப் பெண்களுக்கென வரையறுத்த இந்த பாத்திர வார்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே, குடும்பம் என்கிற நிறுவனத்தை உன்னதப் படுத்திப் பார்க்க வேண்டிய அவசியமும் அவருக்கு நேர்கிறது.

"குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும். எவ்வளவு நாகரிக முற்போக்கு எண்ணங்களிலும் கட்டுக்கடங்கி உணர முடியாது எட்டிச் செல்வது போன்ற குடும்பம்- குடும்ப வாழ்க்கை' என்பது எவ்வளவுதூரம் தன் தாயாருடன் லயித்து இருந்தது என்பதை எண்ணித் துக்கமடைந்தார். உலகம் சீர் கெட்டுச் சிதைவுபடுவதின் காரணம் குடும்ப வாழ்க் கையில் சமாதானமற்று இருப்பதுதான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார்.’ (மெள, க. பக். 216, 217)

என்கிற கூற்றில் குடும்பத்தையும் நாகரிக முற்போக்கையும் அவர் எதிர் எதிராக நிறுத்திப் பார்ப்பது குறிப் பிடத்தக்கது.

3. 'சூன்ய மூலையில் அழகற்று மிருக வேகத்தில் தாக்குவது போன்ற நவ நாகரீகம், அவளிடம் தன் சக்தியைக் காட்ட முடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றிவரப் பட்ட மிருதுவாக உறைந்த குடும்ப லகரியங்கள் உரூகொண்டவள் போன்றவள்தான் அவள்." (மெள. க. பக்.215) -
“எவ்வளவு தூரம் தன் மதிப்பு, குடும்ப மதிப்பு, ஆரோக்கியமான போதனைகளை, குழந்தைகள் மனத்தில் பாலூட்டுவது போன்று ஊட்டி வந்தாள்' (மெள. க. பக்.216)

'குடும்பம் ஒரு விசித்திர யந்திரம்- பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை அதற்குப் பிரதி மறுபாகம் தானாகவே-உண்டாகி விடும்." (மெள. க.-பக். 217) என்று அவர் நம்பிக்கை ஆறுதல் கொள்வதும் மாற் றங்களுக்கும் கலகங்களுக்கும் எதிரான மனநிலையின் வெளிப்பாடுதான்.

மெளனியின் நாயகர்கள் பற்றி ஏற்கெனவே சொன்னோம். பணிக்களத்தில் அறிமுகப்படுத்தப்படும் மிகச் சிலர் தவிர பிற உன்னத நாயகர்கள் அனைவருமே வசீகரமானவர்கள்.அதிலும் பிரமிப்பில் ஆழ்த்தும் வசீகரம்; பின்பற்றத் தூண்டும் பேரழகு. முன்னே செல்பவர்களைத் திருப்பி இழுப்பது போன்ற நீண்ட மூக்கு; அது சற்று முன்புறம் வளைந்திருக்கும். இந்த வருணனையில் வெளிப்படும் ஒருவகையான பார்ப்பன உடற்கூற்று அம்சங்கள் கவனிக்கத்தக்கன. அதே சமயத்தில் பணிக்களத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஏட்டு ராயனும், செல்லக்கண்ணு படையாச்சியும் இன்னும் சில கீழ்சாதி உப பாத்திரங்களும் இவ்வாறு கூர்மையான நாசியும் சுண்டி இழுக்கும் வசீகரமும் பெற்றவர்களல்ல. இவர்களது கவலைகளும், கரிசனங்களும் லட்சியங்களும் கூட ரொம்பச் சாதாரணமானவைதான். உன்னத விசாரங்கள் இவர்களுக்குக் கிடையாது. சாதியில் தாழ்ந்த இவர்களது உடல்களின் வசீகரங்கள் உதாசீனப்படுத்தப்பட்டாலும் பெண்களைப் பொறுத்தமட்டில் கூடைக்காரி (பக் 240) மற்றும் விலைமாது ஜோன்ஸ் (பக். 175) ஆகியோரின் உடற்கூறுகள் மட்டுமே பாலியல் நோக்கில் விவரிக்கப் படுகின்றன. இதர உயர்சாதி பெண்கள் யாரும் அவ்வாறு

4. "வசீகரம்" என்ற சொல் மெளனியில் கிட்டத்தட்ட பக்கத்திற்கு ஒரு முறை வருகிறது. "பசி என்ற சொல் எங்கும் காணோம்.

வருணிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறவஞ்சிகளில் உயர்சாதிப் பெண்களைக் காட்டிலும் தாழ்ந்த சாதிப் பெண்களின் உடல்கள் கொச்சையாக வருணிக்கப்படுவதுடன் இது ஒப்பு நோக்கத்தக்கது.

அந்நிய மனிதர்களை அதுவும் சற்றுக் கீழ் நிலையிலுள்ள மனிதர்களைப் பார்த்தாலே அவர்கள் இருப்பை அச்சுறுத்தக் கூடியவர்களோ என அஞ்சும் போக்கை உடையவர்களாகவும் இவர்களை 'மாமா' வேலை செய்ய வர்களோ இல்லை முடிச்சு மாறியோ என அய்யுறுபவர்களாகவுமே மெளனியின் உயர்நாயகர்கள் படைக்கப் பட்டுள்ளனர் (பக்.28). மெளனியின் மனநிலையும் அது தான் என்பது தனது சொந்த ஊர் பற்றிய அவரது கட்டுரையில் வெளிப்பட்டு விடுகிறது. ஊர்ப் பொதுச் சாவடி "அநேக எதிரிகள் தங்கிப் போன இடமாக அவருக்குக் காட்சியளிப்பது (பக்.300) நமக்கு அதிர்ச்சியளிக் கிறது.

மெளனியின் இலக்கிய வடிவம் எதார்த்தச் சட்டகத்தை அதிகம் மீறியதில்லை. எனினும் அவரது நாயகர் விகள் Romantic தன்மையுடையவர்கள். எதார்த்த வடிவம் முதலாளிச் சூழலுக்கு இயைபானது; மெளனியில் வெளிப்படும் Romantic தன்மை அவர் உயர்த்திப் பிடிக்கும் பிரபுத்துவ- பார்ப்பனிய கருத்தியலுக்கு இயைபானது.

மெளனி ஒரு வகைமாதிரியான தஞ்சை மாவட்டப் பார்ப்பனப் பண்ணையார். அடிமைச் சுகம், வேத விசாரம், சங்கீத ரசனை என வாழ்ந்தவர். அவரது உலகியல் செயற்பாடுகள் சுகபோகங்களை அனுபவிப்ப தாக மட்டுமே இருந்தன. நெருங்கிய உறவினர்களின் இழப்புகள் தவிர பெரிய சோகங்களை அவர் அனுபவித்த

*5. ஒரு உரையாடலின்போது தோழர் ராஜன்குறை இதனைச் சுட்டிக் காட்டினார்.

தில்லை. அவரது விசாரங்களும் இவற்றைத் தாண்ட வில்லை. நியதிகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார் நியதிகளை மீறுகிற நெருக்கடி அவருக்கு எங்கும் தோன்ற வில்லை.

மெளனியின் குறியீடுகள் (ஜீவாத்மா - பரமாத்மா இணைவு- பிரபஞ்ச கானம்; அழியாச் சுடர், கோவில் கோபுரம், சுடலை ஒலி), அவரது கடவுள் ஏற்பு நிலை, மொழியின் அபூர்வத் தன்மை, இருண்மை, அந்தரங்கம் (Privacy), பிரகடனங்களை மாற்றீடு செய்யும் தியான நிலை வெளிப்பாடுகள், மேட்டிமைத்தனமான போதனைத் தன்மைமிக்க மொழி, ஆகிய அனைத்துமே மதம் சார்ந் தவை. எதார்த்த வடிவத்துடன் இத்தகைய அபூர்வத் தன்மைகளும், கனவுகளும் (Fantacles) இணையும் போது எதார்த்த வாழ்க்கைக்கு மிக நெருக்கமான தோற்றம் கொண்டு வாசக மனத்தில் ஆழமான தாக்கத்தை இவை ஏற்படுத்துகின்றன. மெளனியின் வாசக இலக்கான (Target audience) மேல் தட்டு ஆண்களின் கனவுகள் இங்கே முழுமை பெறுகின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இலக்கியத் தரம் பற்றிய குரல் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. பிரதியின் தூய்மை சுயேச்சைத் தன்மை போன்றவற்றோடு இவை

*6. இக் கட்டுரை வாசிக்கப்பட்டபோது திரு. பூர்ணச்சந்திரன், பிரதி ஆய்வில் எழுதுபவனின் சொந்த வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பயன்படாது என்றார். பிரதியை, அது வழங்கப்படும் சூழலில் (Context) வைத்தே பார்க்கவேண்டும். "சிறுகதையின் திருமூலர்' என்கிற புனைவின் பின்னணியில் இன்று மெளனி நிறுத்தப்படுகிறாா மெளனியின் பிரதியை எதிர்கொள்ளும் ஒரு வாசகன் இந்தப் புனைவுகளோடுதான் அவரை எதிர்கொள் கிறான். இத்தகைய புனைவுகளைத் தகர்த்து பிரதியை வெளிக்கொணர்வது அவசியமாகிறது.

இணைக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் பிரதியின் அரசியல் மழுங்கடிக்கப் படுகிறது. தரம் பற்றிய இக் கூப்பாடு மண்டல் குழு எதிர்ப்பு அரசியற் சொல்லாட அலுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

எள்ளளவும் தர்க்கப்பூர்வமற்ற கொடூரமான அரசியற் சூழல், கடுமையான கருத்தியல் நெருக்கடி, பொருளாதாரத் தேக்கம் ஆகியவற்றோடு உலகமெங்கும் மதவாத பாசிச சக்திகள் மறு எழுச்சி கொள்கின்றன. இத்தகைய சூழலில் மத்திய தர வர்க்கத்தின் புகலிடங் களில் ஒன்றாக மெளனி கதைகள் அமைந்து விடுகின்றன. இவை விமர்சனத்தினிடத்தில் ஆறுதலை முன் வைக்கின்றன. பகுப்பாய்விற்குப் பதில் உணர்வுத் தாக்கத்தை முன் வைக்கின்றன; பல குரல்களுக்குப் பதில் ஒற்றைக் குரலை ஒலிக்கின்றன. அது சனாதனக் குரல்; பார்ப்பனிய குரல்; ஆணாதிக்கக் குரல். மையம் சார்ந்ததும் ஒற்றைப் பரிமாணமுடையதுமான மெளனியின் கதைகள் இன்றைய கட்டுமானங்களையும் ஒழுங்குகளையும் சிதையாமல் காப்பாற்ற மட்டுமே பயன்படும். வெளிப்படையான பிரகடனங்களாக அமையாமல் இந்த வீர்யமான குரலை ஒலிக்கும் வகையில் இவை ஆபத்தானவையுங் கூட.

(நெய்வேலியில் “வேர்கள் அமைப்பு நடத்தியமெளனி பற்றிய இரு நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)

கனவு, மே, 1992.


  உடைபடும் மெளனங்கள் :: முன்னுரை - ரவிக்குமார்
"நான் வியக்கிறேன், இன்னும்கூட மனிதர்கள் உண்மையைத் தேடிக்கொண்டிருக்கிறார்களே என' -E. M. AGung Tairl
*பின் அமைப்பியல், குறியியல், பிரதியியல், பெண்ணியம் ஆகியவற்றின் கொடைகளையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சார்பாக வாசிப்பில் அரசியல் குறுக்கீடு செய்யும் ஒரு காலகட்டத்தில் மார்க்சிய இலக்கிய விமர்சனம் சர்வதேச அளவில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது" என குறிப் பிடுகிறார் அ. மார்க்ஸ். தமிழில் அவ்வாறு மார்க்சியத் தின் விமர்சன எல்லைகளை அகலிக்க அவர் செய்துவரும் முயற்சிகளின் பதிவுகளே இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள். அ. மார்க்ஸின் விமர்சன முற்சிகள் பிரதி களின் உள் பொதிந்துள்ள உண்மையை வெளிப்படுத்தி விட செய்யப்படும் யத்தனங்களல்ல. ஏனென்றால் அப்படியானதொரு உண்மை எதுவும் கிடையாது என் பதைத்தான் மேலே சொன்ன பின் அமைப்பியல் முதலான சிந்தனா முறைகள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளன. ஆக, உண்மையைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தி விருதுவாங் கும் துப்பறிபவரின் செயல்பாட்டையொத்ததாக விமர் சகரை ஆக்கிவந்த மாடர்னிச அணுகுமுறையைக் கடந்த தாகவே அ. மார்க்ஸின் அணுகுமுறை அமைந்துள்ளது.
பின் நவீனத்துவம் எழுப்பும் எல்லா கேள்விகளையும்
உள்வாங்கி செரித்துக் கொள்வது மார்க்சியத்துக்கு சாத்தியம்தானா என்பது முக்கியமான கேள்வி. இதனைக்
படிப்பகம்WWW.padippakam.Com
ν
கணக்கில் கொள்கிறவராகவே அ. மார்க்ஸ் இருக்கிறார். அதனால்தான் சோசலிசக் கட்டுமானம் என்கிற பிரச் சனையை முன்வைத்து மார்க்சியத்தின் தத்துவ சட்டகம் குறித்து விவாதிக்கும் விதமாக அவர் எழுதிவரும் பல்வேறு கட்டுரைகளும் தீவிரமான கேள்விகள் பலவற்றை முன் வைப்பனவாக இருக்கின்றன.
இங்கே, அறியப்பட்ட மார்க்சியம் என்பது இன்னtrம் பூஜைக்குரிய ஒன்றாகக் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப் பதால் அ. மார்க்ஸ் முன்வைக்கும் இந்த அணுகுமுறையை நாம் "மார்க்சியம் கடந்த இடதுசாரி” (Post Marxist Left) அணுகுமுறை என அடையாளப்படுத்துவது பல குழப்பங் களிலிருந்து விலகிச் செல்ல உதவலாம்.
III
எண்பதுகளின் இறுதிப் பகுதியில் ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலானவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையொட்டி ஜனநாயகம் பற்றிய விவாதம் முதன்மைபெற்றதை நாம் அறிவோம். நமது சூழலில் சாதிப் பிரச்சனை குறித்த ஆழமான விவாதங்கள் இதனைத் தொடர்ந்தே தீவிரம் பெற்றன. இலக்கியம் பற்றிய அணுகுமுறையிலும்கூட இத்தகைய மாற்றங்கள் புதிய வழிமுறைகளைத் திறந்துவிட்டன. மார்க்சியம் குறித்த விமர்சனங்கள் எந்தெந்த திசைகளிலிருந்து வந் துள்ளன எனத் தொகுத்துக் கொண்டு ஜனநாயகத்தின் புதிய விளக்கங்களையும், நடைமுறைகளையும் கண்டறிய முயன்ற மிகச்சில மார்க்சியர்களில் அ. மார்க்ஸ் குறிப்பிட் டுச் சொல்லப்பட வேண்டியவர். இவருடைய இந்தத் தேடல், சுயமுன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு புதய மோஸ்தர்களைப் புலம்பெயர்ந்த நிலை யில் இறக்குமதி செய்யும் "அறிவாளிகளுடையதைப் ஒபான்றதல்ல; சந்தேகம் கொள்வதே குற்றமென்பதாக
படிப்பகம்WWW.padippakam.Com
V1
கேள்விகளுக்கு சமாதி எழுப்ப முற்படும் கட்சி வழி உாட்டு இடதுசாரிகள் சிலரைப்போல் தாங்கள் ஏற் கெனவே எழுதி வைத்துவிட்ட தீர்ப்புகளுக்கு ஆதா ரங்கள் தேடி அலைவதுமல்ல. இதனால்தான் பின் நவீனத்துவ தத்துவ அறிஞர்களெனத் தங்களுக்குத் தாங் களே முடிசூட்டிக்கொண்ட சில அறிவாளிகளைப் போல் "இலக்கியம் என்றாலே அது புரட்சிதான்" என்று குதூ கலிக்காமல் எல்லாவற்றையுமே பிரதிகள்தான் என்கிற நிலையில் வைத்துப் பார்க்க அ. மார்க்ஸால் முடிகிறது. "போதுவானதாக, சுதந்திரமானதாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் நிறுவனங்களின் செயல்பாடுகளை விமர்சித்து அதன்மூலம் X அதனுள் எளிதில் புலப்படா வண்ணம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் வன் முறையை வெளிப்படுத்துவதுதான் இன்றைக்கு உண்மை யான அரசியல் இலக்காக இருக்க முடியும்' என மிஷல் ஃபூக்கோ குறிப்பிட்டதை உள்வாங்கிக் கொண்டதனால் தான் கலாச்சார நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றி இப்படியான விமர்சனங்களை மேற்கொள்ளவும் அ. மார்க்சுக்கு முடிந்திருக்கிறது. இந்தத் தொகுப்பில், இதுவரையிலுமான மார்க்சிய இலக்கிய விமர்சனம் குறித்து விவாதிக்கும் விதமாக அமைந்துள்ள இரு கட்டுரைகள் மரபுவழி மார்க்சிய இலக்கிய நோக்கினை விமர்சித்துப் புதிதாக உள் வாங்கிக் கொள்ள வேண்டிய கூறுகளை அடையாளப்படுத்துவனவாக இருப்பதையும், புதிய அணுகுமுறைகளைப் பிரயோகித்துப் பார்ப்பன வாக மெளனி, எம்.வி.வி, கி.ரா. ஆகியோரின் படைப் புகள் பற்றிய வாசிப்புகள் அமைந்திருப்பதையும் இநதப் பின்புலத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
III
1926 இல் வி.என். வொலொஷினோல் என்பவரின் G_JuJifiả) LJ49ảT &TCup6)u Discourse in life and Discourse
படிப்பகம்WWW.padippakam.Com
W
nே Art என்ற கட்டுரையில் "சமூகவியல் பகுப்பாய்வு முறை கலையின் மீது சரியானபடி பிரயோகிக்கப்பட வேண்டுமெனில் முக்கியமான இரண்டு குறைபாடான போக்குகள் களையப்படவேண்டும்" என்று வலியுறுத்து கிறார். அவர் குறிப்பிடும் முதல்போக்கு, கலைப்படைப்பு களை வழிபடும் போக்கு. இது எல்லாவிதமான விமர்சனங் களையும் கலைப்படைப்போடு மட்டுமே குறுக்கிவிடுகிறது. அதை உருவாக்கியவரும் அதை வாசிப்புக்கு உட்படுத்து பவரும் கலைப்படைப்பின் எல்லைக்கு வெளியே நிறுத்தப் பட்டு விடுகின்றனர்.
இரண்டாவது போக்கு படைப்பை உருவாக்கியவரின் அல்லது வாசிப்புக்கு உட்படுத்துபவரின் உளவியலை ஆராய்வதோடு மட்டுமே தன்னைக் குறுக்கிக்கொள்கிறது. இதனைப் பொறுத்தவரை படைப்பை உருவாக்குகிற வாசிக்கிறவரின் அனுபவங்களின் வாயிலாகவே படைப் பைப் புரிந்துகொண்டுவிட முடியும்.
முதல்வகையான போக்கு படைப்பின் வடிவத்தை மட்டுமே முக்கியமானதெனக் கூறி ஆராய்கிறது. இது சொல்வழக்கினை (Verbal) ஒரு சமூகவயப்பட்ட விஷய மாகக் கொள்ளாமல் வெறுமனே மொழியியல் நோக்கில் மட்டுமே வைத்துப் பார்க்கிறது.
இரண்டாவது போக்கோ படைப்பாளி அல்லது வாசகளின் உளவியலில் படைப்பின் அழகியலைக் கண்டு பிடித்துவிட முயற்சிக்கிறது.
இவை இரண்டுமே தவறானவை. ஏனென்றால் இந்த இரண்டு போக்குகளுமே பகுதியின் அமைப்பை எடுத்து வைத்துக்கொண்டு-அதை முழுமையிலிருந்து துண்டித்து வைத்த நிலையில்-அதுவே முழுமையின் அமைப்பு என வாதிடுகின்றன. கலைத்தன்மை என்பது படைப்பாளிக்கும் வாசகருக்கும் ஒரு படைப்புக்குள் ஏற்படுகிற ஒரு விசேஷ
படிப்பகம்
WI
பாது இடையுறவு (Interrelationship) ஆகும் என்கிறார் பத்தின்,
இதனை ஏற்றுக்கொள்பவர்கள் இலக்கியமானாலும் சரி மற்ற எந்த விஷயமாக இருந்தாலும் சரி அது எந்த அளவு மற்றவற்றோடு கலந்துள்ளது என்பதைப் பற்றித் தான் அக்கறை கொள்வார்கன். அவர்களது பணி இலக்கி யத்தின் சுத்தத்தன்மை பற்றி வலியுறுத்திக் கொண்டிருப்பு தாக இருக்க முடியாது. மாறாக சுத்தத்திலிருந்து வெளி யேறுவதாக அசுத்தமென்றும் கலப்பு என்றும் கூறப்படு வதை நோக்கிச் செல்வதாகவே இருக்கும். இங்கே அர்த்தி உருவாக்கம் என்பது ஆசிரியன், பிரதி வாசகன் என்ற மூன்றின் கலவையிலிருந்து வெளிப்பாடு கொள்வதாக ஆகிவிடுகிறது.
வெங்கட்சாமிநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு மரபு வழிப்பட்ட மார்க்சியம் பதில்சொல்ல முடிaயாமல் போன போது காப்பாற்ற வந்ததுதான் அமைப்பியல் என்கிற பொருள்பட தமிழ்வன் பல இடங்கனில் எழுதிவருகிறார். வெங்கட்சாமிநாதன் அப்படியென்னகேள்விகளை எழுப்பி விட்டார் என நாம் கேட்பதை விடுத்து தமிழவனின் அமைப்பியல் எப்படி மார்க்சியம் எதிர்கொள்ள முடியாதி பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது என ஆராய்ந்தோ மானால் நமக்குக் கிடைப்பவை சில் பிதற்றல்கள் தவிர வேறில்லை. ஏற்கெனவே நிலவிவந்த பிம்பல்வழிபாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாகவே இங்கு இதுகாறும் அமைப் பியல் முதலான அணுகுமுறைகள் இவர்களால் கையானப்பட்டு வருகின்றன. இவர்களது அணுகு மூனறயை பத்தின் கடபடிக்காட்டும் முதல் போக்கோடு நாம் அடையாளப்படுத்தலாம். படைப்புக்கு அப்பாற் பட்ட கூறுகனை மட்டுமே ஆராய்ந்து பனிடப்பின் கலைக் தன்மையைக் கண்டுவிடலாமென நினைக்கிற இரண்டா வது போக்காக இன்றும் தொடரும் மரபுவழிப்பட்ட கட்சிவழிபாட்டு இடதுசாரிகளின் அணுகுமுறையை நாம்
________________
IX
வகைப்படுத்தலாம். அ. மார்க்னின் அணுகுமுறை மேற் சொன்ன இரண்டு குறைபாடுகளிலிருந்தும் விடுபட்டு நிற்பதை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் நிருபணம் செய்கின்றன.
W
இத்தொகுப்பிலுன்ன மெனனியின் படைப்புகள் பற்றிய கட்டுரை ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்டபோது அந்த அரங்கிலிருந்த ஒரு அமைப்பியல் விமர்சகர் மெளணி யின் வாழ்க்கைக்கும் அவரது படைப்புகளை வியாக் யானப்படுத்துவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என ஆவேசமாகக் கேட்டார். அவர் பயின்ற அமைப்பியலின் படி "ஆசிரியன் இறந்துவிட்டான்" என்று அவர் நம்பி யிருக்கவேண்டும். 1968இல் ஆசிரியனின் இறப்பையும் வாசகனின் பிறப்பையும் ரொலாண்ட் பார்த்ன் அறிவித்தி திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த விவாதம். வாசகனை அடிப்படையாகக்கொண்டு பிரதியை வியாக் யானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முன்வைக்கப் பட்ட பார்த்ளின் கருத்தாக்கம் பிரதியில் ஆசிரியனின் பங்கை முற்றாகத் துடைத்துவிடுவதில்லை. "பிரதி என்பது வியாக்யானங்களை வெனிக்கொணர்வதற்கான ஒரு யந்திரம்" என குறிப்பிடும் உம்பர்ட்டோசக்கோவும் கூட பிரதியில் ஆசிரியனின் இடத்தை மறுப்பதில்லை. தொதரோவ் குறிப்பிட்டதுபோல "பிரதி என்பது ஒரு "பிக்னிக்". அங்கே ஆசிரியன் வார்த்தைகளைக் கொண்டு வருகிறான், வாசகன் அர்த்தத்தைக் கொண்டு வருகி றான்" ஆக பிரதியில் ஆசிரியனைத் துடைத்துவிட்டு பிரதியைத் தனித்த ஒரு வஸ்துவாக பார்ப்பது ஏற்கெனவே பக்தின் குறிப்பிட்ட குறைபாடுடைய பார்வையே தவிர வேறில்லை. "ஆசிரியன் வெற்றிடத்தில் பேசிக் கொண் டிருப்பதில்ல்ை, அவன் ஏற்கெனவே உள்ள பிரதிகளாலும் கூட கட்டுப்படுத்தப்படுகிறான், நிர்ணயிக்கப்படுகிறான்" என்கிறார் ஈக்கோ. ஆசிரியனைக் கட்டுப்படுத்திய, நிர்ண
________________
翼
பித்த அந்த ஏற்கெனவே உள்ள பிரதிகளைத் தெரிந்து கொள்வதும் கூட வாசிப்புக்கு அவசியம் என்பதைத்தான் நாம் இதன் மூலம் அறிந்துகொள்கிறோம். "ஒரு பிரதியை எழுதிமுடித்ததுமே ஆசிரியனானவன் இறந்து போய்விட வேண்டும். ஏனென்றால் பிரதியின் பாதையில் அவன் இடையூறாக இருக்கக் கூடாது" என்கிறார் ஈக்கோ, இதன்பொருள், பிரதிக்கும் ஆசிரியனுக்கும் எந்த உறவுமே கிடையாது என்பதாகாது. ஆக ஒரு பிரதியை வாசிக்கும் செயல்பாட்டுக்கு-ஆசிரியனும் அவனது பிறசெயல்பாடு களும் வேறுபல பிரதிகனாய் அமைந்து அந்தப் பிரதிகள் யாவும் இடையுறவு ஒத்தாசை புரிவதாக இருக்கக்கூடும் என்பதை யாரும் மறுக்கி முடியாதி
இன்னும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: பிரதியிலிருந்து ஆசிரியனை முற்றாகத் துடைத்தெடுத்து இடுவது பிரதியின் வழிபாட்டுக்கு இட்டுச் சென்றுவிடுவது மட்டுகின்றி இப்படி ஆசிரியனின் மரணத்தை வலியுறுத் தும் போக்கு பலகாலமாக அதிகாரம் மறுக்கப்பட்டு தற்போதுதான் அதை அடைய முற்படும் விளிம்புநிலை க்கன் இரனினரை அதிகாரமற்றவர்களாக ஆக்கும் யற்சியாகவும் அமைந்து விடுகிறது. "வரலாற்று ரீதியா கவும், மரபுரீதியாகவும் தன்னிலைத்துவம் மறுக்கப்பட்ட தன்னிலைகளுக்கு ஆசிரியனின் மரணம் பற்றிய கோட் பாட்டைப் பொருத்திப் பார்ப்பது கூடாது" என்கிற கிமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிரதியின் அதிகாரத் தைக் கைப்பற்றும் விக்கப்பட்ட தன்னிலைகள் பிரதியில் தமது அதிகாரத்தை நிறுவுவது பட்டுமின்றி தம்மை இதுகாறும் அதிகாரம் செய்தவர்கன் உற்பத்திசெய்தபிரதி களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கவும் கேட்பார்கள். இதைத்தான் நாம் அ. மார்க்ளின் வாசிப்பினூடாகப் பார்க்கிறோம்.
________________
XI
"W"
எல்லாவற்றையுமே பொதுக்காட்சியாக (spectace) மாற்றுவதில் தேர்ச்சி பெற்றது தமிழ்ச் சமூகம். இதனைப் GLIrgá. Kr. Fl SeypSALIST (Society of the Spectacle) நாம் குறிப்பிடலாம். இங்கே"யதார்த்தம், நம்பகத்தன்மை முதலானவை காலாவதியாகி விட்டன. அவற்றின் இடத்தை காட்சி - அரசியல் கைப்பற்றிக் கொண்டு விட்டது. பொதுக்காட்சி அரசியலின் குணாம்சம் பற்றி விளக்குகின்ற தெபோர் (Debord) என்ற சிந்தனையாளர் காட்சி அதிகாரம் இருவகைப்பட்டதெனக் குறிப்பிடு கிறார். ஒன்று ஒரே இடத்தில் குவித்திருப்பது மற்றது எல்லா இடங்களிலும் பரவி நிற்பது. "இரண்டுமே யதார்த்தமான சமூகத்திற்குமேலே மிதந்து கொண்டிருக் கின்றன. முதலாவது வடிவம் ஒரு சர்வாதிகாரியின் பிம்பத்தைச் சுற்றி செயல்படுகிறது. இரண்டாவதோ கூலி உழைப்பாளிகன் தமது சுதந்திரத்தை தம்மைச் சுற்றிலுமுன்ன பண்டங்களைப் வாங்குவதற்குப்பயன்படுக் தும்படி செய்கிறது." என்கிறார் அவர். இதனையொட் டிக் கட்டமைக்கப்படும் காட்சிக் கலாச்சாரத்தின் முதீன் மையான நோக்கம் வரலாற்று அறிவை நீக்கிவிடுவது தான். பொதுக்காட்சியில் பேசப்படுவது மட்டுமே உலகத் தில் இருக்கிறது எனவும் அதனுள் பேசப்படாதது இல்லவே இல்லை எனவும் நம்பவைக்கப்படுகிறது. இதில் பார்வையானனானவன் அவனது சார்பில் வேறு யாரோ தேர்ந்தெடுத்த பிம்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி செய்யப்படுகிறான், அதுவே அவனது பார்வையாக மேல்ல மெல்ல மாறிவிடுகிறது. தெபோர் குறிப்பிடுகிற காட்சி அதிகாரத்தின் இருவகைப்போக்குகளும் ஒன்று கலந்து நிற்பதாக தமிழ்ச் சமூகத்தை நாம் வகைப்படுத் தலாம். எனவே, மற்ற எந்தப்பகுதியை விடவும் இங்கே காட்சி ஊடகங்கள் பற்றிய விவாதங்கன் முக்கியம் பெறு
________________
萬||
கின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொடர்பு சாதனங்கள் பற்றிய சுட்டுரை நாம் மேற்கொன்ன வேண்டிய எதிர்ப்பு யுக்தியின் வடிவங்களை எடுத்துக் கூறுகிறது. தொடர்பு சாதனங்கள் பற்றிய அணுகுமுறை யாக மட்டுமின்றி வேறுபல பிரதேசங்களுக்கும் கூட அதனை நாம் விரிவுபடுத்திப் பார்க்க முடியுமென்பது அந்தக் கட்டுரையின் சிறப்பம்சங்களில் ஒன்று எனக் கூறலாம்.
WI
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அ. மார்க்கின் செயல்பாடுகளில் பங்கெடுத்துவருபவன் என்கிற முறையில் அவரது சித்தனைப் போக்கிலேற்பட்ட மாறுதல்கனை இெருக்கமாகக் கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத் திருக்கிறது. இயக்கமின்றி தன்னை சதாகாலமும் சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்கிற மனவலிமை அவருக்கிருப்பதை நான் அறிவேன். எவ்வித ஒளிவு மறைவுமின்றித் தன்னை எப்போதும் ஊடுருவத்தக்க Transparent) நிலையில் வைத்துக் கொண்டிருப்பவர் அவர் வாசிப்பவனை அருகே அமர்த்திக்கொண்டு தேசத்தோடு பேசுவதுபோல் வெளிப்படுவது அவரது எழுத்து நிறை மட்டுமல்ல அவரது இயல்பும் அத்தகையது தான். இத்தகைய மனநிலையால்தான் எங்கவிதக் காழ்ப்பு மின்றி நீவீனத்துவ சிந்தனைகளை உள்:ாங்கிக் கொன்ன அவருக்கு முடிந்திருக்கிறது. தலித் பிரச்சனையில் கொஞ்சமும் ஐயப்பட முடியாத அர்ப்பணிப்போடு செயல்படவும் முடிகிறது. தான் பார்த்துவரும் பேராசி ரியர் என்னும் பணியின் காரணமாக அவர் மரபுரீதியான அறிவுஜீவியென கணிக்கப்படலாம். ஆனால் கல்வி பற்றிய அவரது அணுகுமுறை அவ்வாறு மதிப்பிடுவதிைத் தடுத்து விடும். எட்வர்ட் செய்த் தெரிகா போன்றோரும்கூட ல்விக்கூடங்களில் பணிபுரிபவர்கள்தான். ஆனால் அவர்
________________
XIII
*ஆக்கிருக்கும் சுதந்திரமோ நாம் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. அத்த கைய வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையிலும் கூட கல்வி "கட்டுமிடம் என்பதை சேர்ந்து கற்கும் வெளியா மாற்ற முயன்றுவருபவர் அ. மார்க்ஸ். மாணவர்களென ஆாரை அம் கருதாமல் தோழர்களென நினைத்தே பழகுபவர் அவர் இந்தக் கட்டுரைகளின் தொனியும்கூட வாசகனை STSL stuff S Larsetsuger fra நினைத்துக் கற்பிக்க முயற்சிக் காமல் சகதோழனோடு பேசும் விதமாகவே அமைந்துன் விகித நரம் உணரமுடியும்,
பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது கவிதைத் தொகுதி ஒன்றுக்கு முன்னுரை வாங்குவதற்காகத்தான் bTit மார்க்கினி முதன் முதலாக சந்தித்தது. அவரது நூலுக்கு இன்று நான் முன்னுரை எழுத நேர்ந்தது என்னுடைய வளர்ச்சியின் காரணமாக அல்ல, மார்க்கி பெருந்தன் மையின் தோழமையின் காரணமாகத்தான் எனக் கூறுவது இன்னடக்கம் ഋജTളൂ.
urskrigsof -ரவிக்குமார் =ே12-ழ4
குறிப்புகள் :
1. ON THE HEIGHTS OF DESFAIR-E. M. Сіогап The University of Chicago Pross-1992 2. THE FOUCAULT READER- Ed. Paul Rabinow Penguin Books Ltd-1986 3. FREUDANISM A MARXIST CRITIOUE
W. N. Wolosinow, Academic Press inc-1976
(வொலொஷினொவ் என்ற பெயரில் இந்தக் கட்டுரை வெளியான போதிலும் பின்னர் 鹭
________________
轟。
XIW
உரையாடலின் போது-1951இல்- பக்தின் இந்தக் கட்டுரை தன்னாங் எழுதப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.செர்ஜிபோஷரோவ் ETT பவரால் தொகுக்கப்பட்டுள்ள 0ேMWERSAT108 WITH BAKHTN என்ற கட்டுரையில் இந்த விவ ரங்கள் காணப்படுகின்றன. EDWARD SAD-IN CRITICISM IN SOCIETY.
Ed. Imre Salusinzky, Methuen 1987
READING MY READERS-Umberto ECO, MIn 10
(1992). B19-827, Johns Hopkins Univ. Press. REFLECTIONS ON THE NAME OF THE ROSE -Lumberto Eco, Minerva 1994
CHANGING THE SUBJECT: AUTHORSHIP
WRITING AND THE READER-Nancy Millor, In
-What is an author
Ed, Maurice Biriotti E. NiCOla Miller Manchester University Press, 1993
OLOTED IN
DEATH OF POLITICS AND SEX IN THE EIGHTIES SHOW-M. Carmen Africa Widal, New Literary History Wol-24, Winter-1993
________________
பதிப்புரை
சமூகநீதிக்கிான கருத்தியல் பரவவும், சோசலிசக்கட்டு மானம் பற்றிய பிரச்சினைகனை எதிர்கொள்ளவுமாக விடியல் பதிப்பக வெளியீடுகள் வந்துகொண்டிருக் கின்றன. நாம் எதிர்கொன்கிற எல்லாவற்றையும் விமர் சனக் கண்ணோட்டத்தோடு அணுகவேண்டியதன் அவசியம் தீவிரமாகியுள்ள நமது சூழலில் சமூக அரசியல் கனங்களோடு மட்டுமின்றி இலக்கியம் கலாச்சாரம் எல்லாவற்றையும் தீவிரமான பரிசீலனைக்க நாம் உட்படுத்த வேண்டியுள்ளது.
இலக்கியம் பற்றிய புனிதம் தோய்ந்த மாயைகளை விலக்கி அதுவும் ஒரு போராட்டக்களன் தான் என்பதை இங்கே உள்ள கட்டுரைகள் நிரூபணம் செய்கின்றன. ஏற்கெனவே அ மார்க்ளின் மார்க்சியத் தத்துவம் பற்றிய நூலோன்றை விடியல் கொண்டு வந்தது. இப்போது இந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் நூலாக முன் வைக்கப்படுகின்றன.
இந்த நூல் அ. மார்க்ளின் பன்முகப்பட்ட பார்வையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் எமது பதிப் பகத்தின் பரந்துபட்ட தேடலையும் வெளிப்படுத்துகிறது என்றும் கூறலாம். இதுமட்டுமின்றி முக்கியமாகனல்லாமே "ஒன்றோடொன்று தொடர்புடையவைதான் என" எங்கேல்ஸ் கூறியதை இந்த நூல் நினைவுபடுத்துமாயின் அதுவே இதன் வெற்றியுமாகும்.

- விடியல் பதிப்பகம்
at 12/09/2017 10:14:00 pm
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

பிரமிள்

பிரமிள்
பிரமிள் (20.04.1939 - 06.01.1997)

Search This Blog

Blog Archive

  • ►  2025 (18)
    • ►  May (3)
    • ►  April (3)
    • ►  February (2)
    • ►  January (10)
  • ►  2024 (26)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (3)
    • ►  August (1)
    • ►  July (3)
    • ►  April (3)
    • ►  March (10)
    • ►  February (2)
    • ►  January (1)
  • ►  2023 (84)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (21)
    • ►  August (7)
    • ►  July (17)
    • ►  June (12)
    • ►  May (8)
    • ►  April (1)
    • ►  January (1)
  • ►  2022 (3)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  August (1)
  • ►  2021 (19)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (1)
    • ►  September (4)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  January (2)
  • ►  2020 (18)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  February (2)
    • ►  January (5)
  • ►  2019 (59)
    • ►  December (9)
    • ►  November (10)
    • ►  October (17)
    • ►  September (5)
    • ►  August (8)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (1)
  • ►  2018 (73)
    • ►  December (6)
    • ►  November (3)
    • ►  October (6)
    • ►  September (3)
    • ►  August (7)
    • ►  July (4)
    • ►  June (7)
    • ►  May (17)
    • ►  April (6)
    • ►  March (9)
    • ►  February (1)
    • ►  January (4)
  • ▼  2017 (54)
    • ▼  December (11)
      • அவதாரிகை - *நகுலன்" :: மழை-மரம்-காற்று முன்னுரை
      • செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை : முன்னுரை & அத...
      • விலை - க.நா.சு, மனுசங்கடா நாங்க மனுசங்கடா - கவிஞர்...
      • வலி - பாமா
      • யோசனை - ஞானக்கூத்தன்
      • எம். வி. வெங்கட்ராமின் "இனி புதிதாய்' (ஒரு பிரதியி...
      • மெளனியில் மெளனமாகும் எதார்த்தங்கள் - அ. மார்க்ஸ்,...
      • கலைவாணன் இ.எம்.எஸ் அவர்களின் ஒரு சவரக்காரனின் கவித...
      • THREE REFLECTED WISIONS - allan-robbe-grillet
      • பேச்சு - பிரமிள்
      • கம்பாநதி 5 - வண்ணநிலவன்
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (5)
    • ►  August (2)
    • ►  July (4)
    • ►  June (3)
    • ►  May (4)
    • ►  April (4)
    • ►  March (4)
    • ►  February (3)
    • ►  January (8)
  • ►  2016 (207)
    • ►  December (7)
    • ►  November (9)
    • ►  October (22)
    • ►  September (24)
    • ►  August (8)
    • ►  July (9)
    • ►  June (16)
    • ►  May (46)
    • ►  April (48)
    • ►  March (16)
    • ►  January (2)
  • ►  2015 (8)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  May (1)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2014 (119)
    • ►  December (1)
    • ►  September (6)
    • ►  August (10)
    • ►  July (18)
    • ►  June (18)
    • ►  May (34)
    • ►  April (24)
    • ►  March (3)
    • ►  February (5)
  • ►  2013 (23)
    • ►  December (2)
    • ►  October (2)
    • ►  September (8)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (1)
    • ►  May (1)
    • ►  March (1)
    • ►  January (2)
  • ►  2012 (30)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (1)
    • ►  September (9)
    • ►  August (5)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  January (3)
  • ►  2011 (33)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  August (11)
    • ►  July (3)
    • ►  June (11)
    • ►  May (2)
நன்றி

பிரமிள் கவிதைகள்
தொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

Disclaimer:

The copyright on this work has not expired. This blog does not own the copyright. This work is made available strictly for personal use.

Followers

பிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.