தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, March 29, 2018

மான்டயலின் விதவை - கப்ரியஸ் கார்ஸியா மார்க்வெஸ் மொழிபெயர்ப்பு: அச்சுதன் அடுக்கா,

மான்டயலின் விதவை

கப்ரியஸ் கார்ஸியா மார்க்வெஸ்

 நன்றி :கொல்லிப்பாவை சிற்றிதழ்

ஜோஸ் மாண்டயல் இறந்தபோது, அவரது விதவை மனைவியைத் தவிர எல்லோரும் பழிக்குப் பழி வாங்கியதாக எண்ணினார்கள்; ஆனால் அவர் உண்மையிலேயே இறந்து போனார் என்று நம்ப எல்லோரும் நிரம்ப நேரமாயிற்று. அநேகம் பேருக்கு புழுங்கும் அறையில் முலாம் பழம் போன்று உருண்டு திரண்ட பக்கங்கொண்ட ஓர் மஞ்சள் நிறச் சவப்பெட்டியில் தலையணை மற்றும் பருத்தி விரிப்புகளோடு கிடத்தப்பட்டிருந்த பிணத்தைப் பார்த்த பின்னும் சந்தேகம் தீரவில்லை. அவர் சுத்தமாக முகச்சவரம் செய்யப்பட்டிருந்தார். பளபளப்பான தோல் பூட்சுகளும் வெள்ளை உடையும் அணிவிக்கப் பட்டிருந்தார் . இந்த க்ஷணம் போல் உயிர் துடிப்புடன் என்றும் இருந்ததில்லை என்பது போல் அவர் காட்சியளித்தார். சவாரிச் சாட்டையை வைத்திருக்கும் கையில் ஓர் சிலுவையை வைத்திருந்தார் என்பதைத் தவிர, இது எல்லா ஞாயிற்றுக்கிழமையும் எட்டு மணித் தொழுகைக்கு பிரசன்னமாகும் அதே திரு. சேப்மான்டயல்தான். சவப்பெட்டியின் மூடி இறுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அவர்களின் குடும்ப கல்லறைக் குழியில் இறக்கப்பட்டதும்தான் முழு நகரமும் அவர் இறந்தவர்போல் நடிக்கவில்லை என்பதை நம்பியது.

சவ அடக்கத்திற்குப் பிறகு, அவரது விதவையைத் தவிர வேறொருவராலும் நம்ப முடியாதிருந்தது. அவர் இயற்கையாகத்தான் இறந்தார் என்பது. எல்லோரும் அவர் பின் புறமாக பதுங்கு குழியில் சுடப்படுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது மனைவி மட்டும் அவர் நவீன காலத் துறவி போல எந்தக் கஷ்டமின்றி பாவ மன்னிப்பு கோரிய பின் கிழவனாக அவரது படுக்கையில் இறக்கப் போவதைத் தான் பார்க்கப் போகிறோம் என்பதில் உறுதியாக இருந்தாள் . அவள் மிகச் சில விவரங்களில் மட்டுமே தவறி யிருந்தாள். ஜோஸ்மான்டயல் 1951 ஆகஸ்டு இரண்டாம் தேதி பகல் இரண்டு மணிக்கு மருத்துவர் கூடாதென்றிருந்த கோபாவேசத்தின் காரணமாக தனது படுக்கையில் மாண்டார். அவர் மனைவி, முழு நகரமும் நீத்தார் கடனுக்காக வருகை தருமென்றும் தனது வீடு கொள்ளாது பூக்கள் நிரம்பும் என்றும் நம்பிக் கொண்டிருந்தாள். மாறாக அவரது கட்சி உறுப்பினர்களும் ஆன்மீக சகோதரர்களும் மட்டுமே வந்திருந்தார்கள். அவள் பெற்றுக்கொண்ட சரங்கள் நகராட்சியிலிருந்து அனுப்பப் பட்டவை மட்டுமே. ஜெர் மனியிலிருந்து அயல் நாட்டுப் பிரதிநிதியாக இருந்த அவரது மகனும் பரீயிலிருந்து அவரது இரண்டு மகள்களும் மூன்று பக்கத் தந்தி அனுப்பினார்கள். தந்தி அலுவலகத்து மை அதிகம் கொண்டு, நின்றபடி அதை எழுதி யிருக்க வேண்டும் என்பதையும் இருபது டாலருக்குள் வரும் வார்த்தைகளைக் கண்டு பிடிப்பதற்கு முன் நிறைய தந்திப் படிவங்களைக் கிழித்திருந்தார்கள் என்பதையும் ஒரு வரால் கண்டு கொள்ள முடியும். யாருமே வரப்போவதாக வாக்களிக்கவில்லை, அந்த இரவில், தனது அறுபத்தியிரண்டாவது வயதில், அவளை சந்தோஷப்படுத்திய மனிதன் ஓய்வெடுத்த தலையணையில் விழுந்து அழுது கொண்டிருந்தபோது. முதல் முறையாக மான்டயலின் விதவை விரக்தியின் சுவையை அறிந்தாள். நான் என்னை முழுமையாக அடைத்துக்கொள்ள வேண்டும். இவள் எண்ணிக் கொண்டிருந்தாள், 51 3:னைப் பொறுத்த வரையில் ஜோஸ் மான்டயல் இடப்பட்ட அதே பெட்டியில் இடப்பட்டது போலத் தான், இந்த உலகத்தைப் பற்றிய எதையும் அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை.


மென்மையான அந்த பெண் உண்மையானவள், மூட நம்பிக்கைகளுக்கு ஆளானவள். தனது பெற்றோரின் விருப்பத்திற் கிணங்க அவர்களால்முப்பதடி தூரத்திலிருந்து பார்க்க அேனுமதிக்கப்பட்டிருந்த ஒரே மண மகனை இருபதாவது வயதில் மணம் செய்து கொண்டாள். அவளுக்கு நிஜ வாழ்க்கையோடு நேரடித்தொடர்பே இருந்திருக்கவில்லை, அவளது கணவனின் உடலை எடுத்துச் சென்ற மூன்று நாள் கழித்து, தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதைக் கண்ணீரினூடே உணர்ந்தாள். ஆனால், தனது புதிய வாழ்வின் திசையை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை. அவள் ஆரம்பத்திலேயே துவங்கியிருக்க வேண்டும்.

ஜோஸ் மாண்டயல் தன்னோடு கல்லறைக்குக் கொண்டு சென்ற கணக்கிலடங்காத ரகசியங்களில் இரும்புப் பெட்டியின் சாவிச் சேர்க்கையும் ஒன்று. மேயர் அந்தப் பிரச்சனையை கவனித்துக் கொண்டார். இரும்புப் பெட்டியை உள் முற்றத்தில் சுவர்

________________
எதிரே வைக்கக் கட்டளை இட்டார். இரண்டு போலிஸ்காரர்கள் பூட்டை நோக்கிக் சுட்டார்கள், காலை நேரம் முழுதும் மேயர் சப்தமிட்டு தொடர்ச்சியாக கட்டளை இடுவதை தனது படுக்கையறையிலிருந்துக் கேட்டாள்


இதுதான் தாங்கக்கூடிய கடைசிப் பழு, அவள் எண்ணினாள். சுடுதலை நிறுத்தும்படி கடவுளிடம் முறையிடுவதில் ஐந்து வருடங் களைக் கழித்தேன், இப்போது எனது வீட்டில் அவர்கள் சுடுவதற்காக நான் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்று மரணத்தை பதிவு செய்ய பிரயத்தனம் செய்தாள். ஆனால், யாரும் பதிலளிக்க வில்லை. அவள் உறங்கத் துவங்கியபோது ஒரு பிரம்மாண்டமான வெடிச்சத்தம் வீட்டு அஸ்திவாரத்தை ஒரு குலுக்கு குலுக்கியது . இரும்புப் பெட்டியை வெடி வைக்க வேண்டியதாயிற்று 

.
மாண்டயலின் விதவை பெருமூச்சு விட்டாள், அக்டோபர் சேர்க்கும் மழையோடு ஓயாதிருந்தது. ஜோஸ் மாண்டயலின் தாறு மாரன நம்பமுடியாத அளவு பரந்த ஸ்பாஎரி ய விளையில் திசை தெரியாமல் பயணம் செய்யும் அவள் தான் தொலைந்து போனதாக உணர்ந்தாள். திரு. கார்மிக்கேல், ஓர் உண்மையான பழைய குடும்ப நண்பர், எஸ்டேட் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவள் கணவர் இறந்து போனார் என்ற மறுக்க முடியாத உண்மையை முடிவாக அவளால் எதிர் கொள்ள இயன்ற பின், வீட்டை கவனித்துக் கொள்ள தனது படுக்கையறையை விட்டு மாண்டயலின் விதவை வெளியே வந்தாள். கிட்டதட்ட எல்லா அலங்காரங்களையும் கலைத்தாள். மேஜை, நாற்காலி முதலியவற்றிற்கு துக்க நிறத் துணியிட்டாள் சுவரில் தொங கிக் கொண்டிருந்த இறந்து போனவரின் உருவப்படங் களுக்கு நீத்தார் கடன் ரிப்பன்களிட்டாள் , அளவுக்கு அதிகமாக அழுததால் அவளது கண்கள் வந்தும் வீங்கியும் இருந்தன திரு. கார் மிக்கேல் ஓர் விரித்த குடையோடு நுழைவதைக் கண்டாள் .

"குடையை மடக்குங்கள், திரு. கார்மிக்கேல் '' அவள் அவரிடம் சொன்னாள். ''இத்தனை துக்கம் நிகழ்ந்த பின்னும், நீங்கள் விரித்த குடையோடு வீட்டின் உள்ளே நுழைவது ஒன்றுதான் குறைச்சல்,...

திரு. கார்மிக்கேல் குடையை ஓரத்தில் வைத்தார். அவர் பளபளக்கும் தோல் கொண்ட வயதான நீக்ரோ. வெள்ளை உடை யணிவிந்திருந்தார், உள்ளங்கால் வீக்கத்தின் அழுத்தத்திலிருந்து விடுபட கத்தியால் அவரது காலணிகள் சிறு துளைகளிடப்பட்டிருந்தன.

''உலரத்தான் வைத்தேன் அதை  அப்படி


அவளது கணவன் இறந்தபின் முதன் முதலாக அப்போதுதான் ஜன்னலை அந்த விதவைத் திறந்தாள்.


 நிறைய துக்ககரமான விஷயங்கள். போதாக்குறைக்கு குளிர்காலம் வேறு'', நகத்தை கடித்தபடி அவள் முணுமுணுத்தாள் "அது ஓயப்போவதில்லை என்பது போலத் தோன்றுகிறது''.

அவர்கள் , இதில் ஐசுறுத்தும்

'இன்றோ நாளையோ அது ஓயப்போவதில்லை, அந்த பொறுப்பாளர் சொன்னார், * 'நேற்று இரவு என் கால் கொப்பளங்கள் என்னைத் தூங்க விடவில்லை'',

ஜோள், பாமால் அறிக கொப்பளம்

திரு. கார்மிக்கேலின் கால் கொப்பளங்களுக்கான கால நிலை அறிகுறிகளை அவள் நம்பினாள், பாழான சிறிய சதுக்கத்தையும் ஜோஸ் மாண்டயலின் மரணத்தின் சாட்சியாகத் திறக்கப்படாதிருக்கும் அமைதியான வீடுகளையும் சிந்தித்தாள். தனது நகங்கள் எல்லையற்ற நிலங்கள், அவள் கணவன் வழி வந்ததும் அவளால் புரிந்து கொள்ள இயலாததுமான கணக்கிலடங்காத கடமைகள் இவை குறித்து தான் நம்பிக்கையற்றிருப் பதாக உணர்ந்தாள்.


''இந்த உலகம் முழுதுமே பொய்யானது'' தேம்பியபடி கூறினாள்.


இந்தக் காலங்களில் அவளைப் பார்க்க வந்திருந்தவர்கள் அவள் பித்துப் பிடித்திருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. ஆனால், அப்போது போல தெளிவாக அவள் என்றுமே இருந்ததில்லை, அரசியல் பலிகள் தொடங்கியதற்கு முன்னர், துக்ககரமான அக்டோபர் காலைப் பொழுதுகளை தனது அறை ஜன்னல் முன்னமர்ந்து இறந்து போனவருக்காக துக் கப்பட்டும், கடவுள் மட்டும் ஞாயிற்றுக் கிழமை ஓய்வெடுக்காமல் இருந்திருப்பாரானால் உலகத்தை ஒழுங்காக முடித்து வைக்க நேரம் கிடைத்திருக்கும் என்று எண்ணியபடியும் கழித்தாள். * அந்த நாளை சில தளர்ந்த முனைகளை இறுக்கச் செலவிட்டிருக்கலாம்''. அவள் எப்போதும்சொல்லுவாள் “ “குறைந்தபட்சம், அநித்ய ஜீவிகள் 'ஓய்வெடுத்துக்கொள்ள உள்ளார்கள்''. அவளது கணவனது மறைவுக்குப் பின், இம்மாதிரியான இருண்ட எண்ணங்களைக் கொள்வதற்கான நிலையான காரணங்களை அவள் கொண்டிருந்தாள் என்பதுதான் அவளிடமிருந்த ஒரே வித்தியாசம்.

________________

20

இவ்வாறாக, மான்டயலின் விதவை நம்பிக்கையற்று தன்னை வருத்திக் கொண்டிருக் கையில், திரு. கார்மிக்கேல் இந்த உடைசலை சரிபடுத்த முயன்று கொண்டிருந்தார், விஷயங்கள் சரிவர நடக்கவில்லை, உள்ளூர் தொழிலை அச்சுறுத்தி தன்னுரிமையாக்கிக் கொண்டிருந்த ஜோஸ் மான்டயல் மீதான பயத்திலிருந்து விடுபட்டு, நகரம் பழிக்கு பழி வாங்கிக்கொண்டிருந்தது. ஒருபோதும் வராத வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்து உள் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கூஜாக்களில் பால் திரிந்தது, தேனடையில் தேன் வீணானது, பாலாடை கட்டி ஆலைகளின் இருண்ட அறைகளில் பாலாடைக் கட்டிகளில் புழுக்கள் புழங்கின, எலக்ட்ரிக் பல்புகளாலும், செயற்கையான பளிங்குக்கல் தேவதூதர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தனது குடும்பக் கல்லறையில் ஆறு வருடத்திய கொலைகள் மற்றும் அடக்குமுறைக்கு ஜோஸ் மான்டயல் அனுபவித்துக்கொண்டிருந்தார், இந்த நாட்டு சரித்திரத்தில் இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு சம்பாதித்தவர் யாருமேயில்லை : சர்வாதிகாரத்துவத்தின் முதல் மேயர் நகரத்திற்கு வருகை தந்த போது தனது அரிசி ஆலையின் முன் தனது உள்ளாடை மட்டும் அணிந்து அமர்ந்து தனது வாழ்நாளின் பாதியை கழித்தபடி இருந்த ஜோஸ் மான்டயல் ஓர் திறமையான ஒரு பக்கச் சார்பாளன். ஒருமுறை. அதிஷ்டசாலியென்றும், உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்ற பெருமையடைந்தார். ஏனெனில், தான் லாட்டரியில் வெற்றியடைவாரானால் புனித சூசையப்பரின் முழு அளவு உருவத்தை தேவாலயத்திற்கு வழங்குவதாக வாக்களித் திருந்தார். இரண்டு வாரங்களுக்குப்பின் ஓர் கணிசமான பரிசை வென்று தனது வாக்கைக் காப்பாற்றினார். காட்டுமிராண்டி ரகசிய போலிஸ் உத்தியோகஸ்தனான புதிய மேயர் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய கட்டளை இட வருகை தந்திருந்தபோதுதான் அவர் முதன்முதலில் or அணிந்து பார்த்தது. ஜோஸ் மான்டயல் அவனது நம்பிக்கையான தகவலாளனாகத்தான் தொடங்கினார். அந்த அடக்கமான வியாபாரி தனது எதிரிகளை பணக்காரன் ஏழையென்று பிரித்தார். பொது சதுக்கத்தில் ஏழைகளை போலிஸ் சுட்டு வீழ்த்தியது. பணக்காரர்களுக்கு நகரத்தை விட்டு வெளியேற இருபத்து நான்கு மணி நேர தவணைக் கொடுக்கப்பட்டது. இந்த படு கொலைக்குத் திட்டமிட்டு, ஜோஸ் மான்டயல் மேயரோடு அவரது அவியும் அறையில் அது முடியும் வரைக்கும் அடைத்துக்கொண்டார். அதே சமயம் அவரது மனைவி இறந்தவருக்காக இரங்கிக்கொண்டிருந்தாள் .மேயர் தனது அலுவலகத்தை விட்டுச் சென்றபின் அவள் தன் கணவனின் நடைமுறைகளைத் தடுத்தாள் . *"அவன் ஒரு கொலைகாரன்' என்று கூடச் சொன்னாள்''. அரசிடம் உங்களுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இந்த மிருகத்தை அகற்றச் சொல்லுங்கள்; இவன் இந்த நகரத்தில் ஒரு மனிதனைக் கூட விட்டு வைக்கமாட்டான். ஆனால் அந்நாட்களில் மிகுந்த பரபரப்போடிருந்த ஜோஸ் மான்டயல் அவளைப் பார்க்காமலே இப்படி முட்டாள் தனமாகப் பேசாதே' என்று சொல்லி விலக்கினார். உண்மையில், ஏழைகளைக் கொல்வதல்ல அவருடைய வேலை பணக்காரர்களை வெளியேற்றுவதுதான். மேயர் அவர்களின் வீட்டு கதவுகளை துப்பாக்கிச் சூட்டால் சல்லடையிட்டு. நகரத்தை விட்டுச் செல்ல இருபத்தி நாலு மணி நேரத் தவணை அளித்த போது, ஜோஸ் மான்டயல் அவர்களின் நிலத்தையும் கால்நடைகளையும் தான் விதித்த விலைக்கு வாங்கிக் கொண்டார். **இப்படி புத்திகெட்டு போகாதீர்கள்'' அவர் மனைவி அவரிடம் சொன்னாள். அவர்கள் எங்காவது பசியால் இறந்துபோகாவண்ணம் அவர்களுக்கு உதவுவதாக நினைத்து உங்களை அழித்துக் கொள்ளாதீர்கள். மேலும் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் நன்றி சொல்லப்போவதில்லை,'' சிரிக்கக்கூட அப் போது நேரமில்லாதிருந்த ஜோஸ் மான்டயல் அவளை “அடுப்படிக்குப்போ, என்னை தொந் திரவு செய்யாதே'' என்று கூறி தள்ளினார். இவ்விதமாக, ஒரு வருடத்திற்குள் எதிர்ப்பு நீக்கப்பட்டது. ஜோஸ் மான்டயல் செல்வ மிக்கவரும், சக்தி வாய்ந்தவருமானார், அவர் தனது மகள்களை பரீக்கு அனுப்பினார். தன் மகனுக்கு ஜெர்மனியில் அயல் நாட்டு பிரதி நிதி வேலை பார்த்துக் கொடுத்தார். தனது ஆட்சியை பலப்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஆனால், துர்வழியில் சேர்த்த தனது சொத்தை ஆறு வருடங்கள் கூட அனுபவித்து பார்க்கவில்லை,

ஸ்மிராது வன்:

அவரின் மரணத்தின் முதல் ஆண்டு நிறைவுக்குப் பின், அந்த விதவை மோசமான செய்திகளோடுதான் மனிதர்கள் வருவதைக் கண்டாள். யாராவது சாயங்காலம் எப்போதும் வருவார்கள். திரும்பவும் புரட்சியாளர்கள்.'' அவர்கள் தொடர்ந்து சொல் வார்கள். ''நேற்று அவர்கள் ஐம்பது சினைப் பசுக்கள் கூட்டைத்தைத் திருடிச் சென்று விட்டார்கள்.'' சலனமின்றி தனது நாற்காலியில் அமர்ந்து நகத்தைக் கடித்த படியி ருக்கும் மான்டயலின் விதவை அவமானம் தவிர வேறெதையும் உணரவில்லை,

" நான் உங்களிடம் சொல்கிறேன், ஜோஸ் மான்டயல்''. அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ''இது நன்றிகெட்ட நகரம் நீங்கள் இன்னும் வெதுவெதுப்பாக உங்கள் கல்லறையில் இருக்கிறீர்கள்" இவர்கள் என்னவென்றால் தங்கள் பின்புறத்தை நமக்குக் காட்டிவிட்டுப் போகிறார்கள்.''

________________

21
யாரும் அவ்வீட்டிற்கு வரவில்லை. மழை ஓயாத அந்த மாதங்களில் குடையை மடக்காமல் வீட்டில் நுழையும் திரு. கார்மிக்கேல் தான் அவள் பார்த்த ஒரே மனித ஜீவன். எல்லாம் மோசமாகிக் கொண்டிருந்தது. திரு. கார்மிக்கேல் ஜோஸ் மாண்டயலின் மக னுக்கு பல கடிதங்கள் எழுதினார். அவன் வந்து பொறுப்பேற்றால் சௌகரியமாக இருக்குமென்று குறிப்பிட்டிருந்தார். அவ்விதவை யின் உடல் நிலைக்குறித்த சில சொந்த அபிப்பிராயங்களைக் கூட எழுதியிருக்கிறார். தட்டிக் கழிக்கிற பதில்கள்தான் அவருக்குக் கிடைத்தன. கடைசியில், ஜோஸ் மாண்டயலின் மகன் வெளிப்படையாகவே தான் சுடப்பட்டு விடலாம் என்ற பயத்தினாலேயே வரத் துணியவில்லை என்று பதிலெழுதினான். அதன்பின் திரு. கார்மிக்கேல் விதவையின் படுக்கையறைக்குச் சென்று, அவளுக்கு கேடு வந்து விட்டதென்பதை எடுத்துச் சொன்னார்.
'இப்படியே போகட்டும்” 'அவள் சொன் னாள். '' நான் பாலாடைக் கட்டிகளோடும் ஈக்களோடும் இருந்து கொள்வேன். உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள் ளுங்கள், என்னை அமைதியாகச் சாகவி டுங் கள்''

உலகத்தோடு அவளுக்கிருந்த தொடர்புகள் ஒவ்வொரு மாதக் கடைசியிலும் அவள் தன் மகள்களுக்கு எழுதும் கடிதங்களே. "இது நாசமான நகரம்'' அவள் அவர் ளுக்கு எழுதினாள், ''அங்கேயே இருந்து கொள்ளுங்கள், என்னைப்பற்றி கவலை வேண்டாம். நீங்கள் சந்தோஷமாக இருப்பதறிந்து எனக்கு சந்தோஷமே''. அவள் மகள்கள் முறை வைத்து பதிலெழுதினார்கள் . அவர்களின் கடிதங்கள் எப்போதும் மகிழ்ச்சிகரமாகவே இருந்தன. வெதுவெதுப்பான பாதுகாப்பான அறையில் வைத்து அவை எழுதப்பட்டி ருக்கின்றன என்பதையும் அவர்கள் யோசிக்க நிறுத்தும்போது கண்ணாடியில் அவர்கள் பிரதிபலிப்பதைப் பார்ப்பார்கள் என்பதையும் ஒருவர் கண்டுகொள்ள முடியும். அவர்கள் இருவருமே அங்கு வர விரும்பவில்லை. ''இங்கிருப்பதுதான் நாகரிகம்” அவர்கள் எழுதினார் கள். அது போக அங்குள்ள சூழல் எங்களுக்கு நல்லதல்ல. அரசியல் காரணங்களுக் காக மக்கள் கொல்லப்படும் மிருகத்தனமான , ஓர் தேசத்தில் வாழ்வது இயலாது''. இந்தக் கடிதங்களைப் படித்து விட்டு, மான்டயலின் விதவை நல்லதுக்குத்தான் என்று எண்ணி னாள். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் தலை யாட்டி ஏற்றுக்கொண்டாள்.


சில சமயங்களில், அவள் மகள்கள் பரீயிலுள்ள கசாப்புக் கடைகளைப் பற்றி எழுதினார்கள், இளஞ்சிவப்பு நிற பன்றிகள் அங்கு கொல்லப்படுவதையும், அதன் பின் அவை முழுமையாக மலர்ச்சரங்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு வாசலில் தொங்க விடப்படுவதையும் எழுதினார்கள். கடிதத்தின் முடிவில், மகள்களின் கையெழுத்திலிருந்து வித்தியாசமான கையெழுத்து எழுதியிருந்தது. ''கற்பனை செய்து கொள்ளுங்கள்! உள்ளதில் அழகானதும் பெரிதானதுமான பூமாலையை பன்றியின் பிருஷ்டத்தில் மாட்டியிருப் பார்கள் ..

'
அந்த வாக்கியத்தைப் படித்து விட்டு, இரண்டு வருட இடைவெளியில் முதன்முறை மாண்டயலின் விதவை சிரித்தாள். வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அணைக்காமல் படுக்கையறைக்குப் போனாள். படுப்பதற்கு முன் மின்சார விசிறியை சுவரைப் பார்த்து திருப்பினாள். அதன் பின், இரவு மேஜையின் இழுப்பறையிலிருந்து கத்தரி, பாண்ட் - எய்ட்ஸ் பெட்டி, ஜெபமாலை இவற்றை எடுத்து, அவள் கடித்ததினால் எரிச்சலுண்டாக்கிய வலதுகை பெருவிரல் நகத்தில் பாண்டேஜ் இட்டாள். பின், பிரார்த்திக்கத் துவங்கினாள். ஆனால், இரண்டாம் மர்மமாக ஜெபமாலையை இடது கைக்கு மாற்றினாள். ஏனெனில் மணிகளை பாண்டேஜின் ஊடாக அவளால் உணர இயலவில்லை. ஒரு க்ஷணம் தூரத்து இடி முழக்கத்தின் அதிர்வைக் கேட் டாள் . பின் தலையை மார்பில் புதைத்து உறங்கிப் போனாள். ஜெபமாலையை உடைய கை பக்கவாட்டில் நழுவியது, ஓர் வெள்ளை விரிப்புடனும் தொடையில் சீப்புடனும், பெரிய மம்மா வெளிமுற்றத்தில் பெருவிரலால் பேன் நசுக்கியபடி இருப்பதைப் பார்த்தாள் இவள். இவள் அவளிடம் கேட்டாள்,

"நான் எப்போது சாகப் போகிறேன்?" பெரிய மம்மா தலையை உயர்த்தினாள். ''உன் கரங்கள் சடையத் துவங்குபோது'

மொழிபெயர்ப்பு: அச்சுதன் அடுக்கா,