Tuesday, August 26, 2014

திரிகுண சங்கீதம் - பிரம்மராஜன்

திரிகுண சங்கீதம் - பிரம்மராஜன்

நீங்கள் நீங்கிய நாளில் தொடங்கிய
தும்புருவனின் குரல் நிற்பதாயில்லை
நித்திய அசுரச் சுருதியின் ரீங்கரிப்பு
நனைக்க வேண்டிய பாலையின் பரப்புகளை
நினைத்தும்
அவன் திரிகுண சங்கீதம்
நுரைத்து
பொங்கிக் குமுறுகிறது
மஹா சக்தி கோபமும் விரோதமும் தணிய
கதக் நாட்டியக்காரியைப் போன்றோ
ஒத்துக் கலைஞனைப் போன்றோ
கிராமத்து ராட்டினக் குடை எனவோ
அவன் பிரவாகிக்கிறான் தன் கானத்தை
மகிஷன்
செருக்கழிந்தாலும்
குடல் மாலைகள் சூடியும் கூட
குரோதம் கொப்புளிக்கிறது
அகிலமும் அண்டங்களும்
விசை கூடித் தரிகெட
அந்நியப் பிரபஞ்சமொன்றில் உரசிவிடலாம் அபாயம்
களிம்பும் பழுப்பும் லட்சணமான விக்ரகங்கள்
நாசிகளில் குருதித் தாரை
சிறிய பறவைக்கென்ன தோன்றும்
பயத்தில் பீதியில்
இப்பொழுது அவன் குரலைப்
பெண்ணுடையதென்றோ
ஆணுடையதென்றோ
சொல்லவியலாது.

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்