தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, August 27, 2014

நினைவுச் சுவடு - மௌனி & 'Genderole'. Rukmini Bhaya Nair & ஊரல் - இந்துமதி சுகுமாரன் (நடை (1968 -1970)

We are all in the gutter, but some of us are looking at the stars.

 















'Genderole'. Rukmini Bhaya Nair

Considerthefemalebodyyourmost
Basictextanddontforgetitsslokas 
|

......

We have wrung poems from household tasks
Carrying water, child, sorrow, can you do so much?

My worst fear is Sankara had I indeed been you
I might not after all have conceived anything new.

('Genderole'. Rukmini Bhaya Nair)

Distinctly dilterent from the work of most of the other women poets
publishing in India is the poetry of New Delhi—based academician Rukrnini
bhaya Nair, whose poems reflect the influences of cognitive linguistics and
critical theory that are her areas of scholarly expertise. Nair’s poery is hod
hybridized and innovative in its use of words. Nair uses two—line stanzas to
great effect, as seen in “Renoir’s Umbrellas”: “Holds out her hands to you /
Through bars of rain” (Bloodaxe Book 252). In “Convent,” the speaker captures
a moment when young girls in a convent school arc giggling at prayer time:
“And she wonders about prayer I The pity of it, the point” (Bloodaxe Book
254). Innovative and provocative in language and theme, Nair’s poem “Gend
erole challenges the reader to decode the single lines, each of which has
words running together as a single word in an imitation of the lengthy word
combinations of classical Sanskrit. The poem “Genderole” offers a critique of
traditional Hindu treatises on the roles of women as good wives, concluding
with the ironic twist that ilwonicn had been men, their conrihutions would
not have been the same: “Myworstfearisankaratharhadl —, indeedhecnyo
ulmightnorafterallhaveconceivedanythingnewtl” The woman speaker in
Nair’s poem addresses the Hindu philosopher Sankaracharya as an authority
from whom traditional roles of Hindu Women have been derived. Nair even
uses the S.inskrit punctuation ofa straight-line 1” for a period in this cleverly
composed hybrid poem.



நினைவுச் சுவடு - மௌனி

அநேகமாக தினம் மாலையில் அரைமணி நேரமாவது கடற்கரையில் உலாவிக் கழிப்பது என் வழக்கம். நேற்று என்னுடைய ஆபிஸ் அலுவல்கள் ஜாஸ்தியாக இருந்ததன் நிமித்தம், சிறிது நேரம் சென்றே வீட்டை அடைந்தேன். நாழிகை ஆகி விட்டாலும் மனது கொஞ்சம் நிம்மதி பெறவேண்டுமென்று வழக்கம் போல் கடற்கரைக்குச் சென்றேன். கடற்கரையில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு கண்டு கொண்டிருந்தது. எட்டி மணலில் உட்கார்ந்து பொழுது போக்குபவர்களுடைய வெளிக் கோட்டுருவங்கள் அந்த வேளையில் வசீகரத்தோற்றமாய் எனக்குத் தெரிந்தது. தூரத்தில் பக்க வசத்தில் உட்கார்ந்து எதையோ நோக்குவது போன்று இருந்த ஒருவன் எனக்குத் தெரிந்தவன் எனத்தோன்ற அவனை நெருங்கினேன்.

தனியாக உட்கார்ந்து இருந்த அவன் தன் முழங்காலைக் கட்டிக்கொண்டிருந்தான். சுமார் இருபது வருஷங்களுக்குப்பின் திடீரென்று என்னுடைய கல்லூரி சிநேகிதன் சேகரை அப்போது அங்கே பார்த்தது ஒரு அதிர்ச்சியாய்த் தான் எனக்கு இருந்தது. அவனும் நானும் இருபது வருஷங்களுக்குமுன் பட்டணத்தில் கல்லூரியில் சேர்ந்து படித்தோம். அன்றைக்குப் பார்த்தபடியேதான் நேற்று நான் பார்த்தபோதும் தோன்றினான். அதே முகக்களை, அதே கம்பீரமான பார்வை.

கடல் ஒலித்துக்கொண்டிருந்தது, கட்டுமரங்கள்  எல்லாம் கரை அடைந்துவிட்டன. காலந் தவறி வந்ததென இரண்டொரு கட்டுமரங்கள் வேகமாகக் கரையை நெருங்கி வந்துகொண்டிருந்தன. பாய் விரித்ததொன்று வெகு தூரத்தில் கடல் பரப்பில் தெரிந்தது. அமைதியற்ற தன்மையில் , எட்டி நெளியும் சாந்தமான சிற்றலைகள் கரை கண்டதும் அலைமோத ஆராவாரித்துக்கொண்டிருந்தன. சமுத்திரக் கரையில்  கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டிருந்தது. அவனோடு உட்கார்ந்து நான் என்ன பேசினேன் என்பது கிடையாது.  எதெல்லாமோ சம்பந்தமற்றுத்தான் நான் பேசினேன்.

படிக்கும்போதே அவன் ஒருவிதமான பையன். எல்லா மாணவர்களுடைய நன்மதிப்பிற்கும் உரியவன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரன் என்பதும் உண்மை. எல்லாரிடமும் அவன் நெருங்கிப் பழகி கிடையாதென்றாலும், என்னப்பற்றிய வரையில் அவன் என்னுடைய அந்தரங்க நண்பன்.


“சேகர் எப்போது வந்தாய் - என்ன விசேஷம் - ஊரில் எல்லோரும் சௌக்கியமா - என்ன செய்கிறாய் ...” என்று என்னவெல்லாமோ கேட்டு, ஒரு பதிலில் அவனைப்பற்றிய இருபது வருஷ சமாசாரத்தையும் அறிய முயன்று கொண்டிருந்தேன்.

அவனும் எனக்கு ஏதோ பதிலளித்துக்கொண்டிருந்தான். அவன் பேசுவதற்கு நானும் இடம் கொடுக்கவில்லை. சிறிது சென்று பேச்சு நின்றவுடன் அவன் முகத்தைத்தான் நான் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் பேச்சில் தனி அடக்கம் தெரிந்தது. வேறு அவன் ஒருவிதத்திலும் கடந்த இருபது வருஷமாக மாறவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. அதே வளைந்த மூக்கு உயர்ந்த புருவம், மிருதுவான கன்னங்கள். அதே இருபது வயதுக் கல்லூரி மாணவன் சேகர்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான் அவன் பக்கம் திரும்பினேன் ! பத்துப் பதினைந்து கஜம் முன்னால் நாலைந்து பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவர்களுக்குச் சுமார் இருபது வயதிருக்கலாம். குதூகலமாகப் பேசி வார்த்தையாடிக்கொண்டிருந்த அவர்கள்  ஏதோ கல்லூரி மாணவிகள் போலும். நன்றாக இருட்டிவிட்டது. அனேகமாக எல்லோரும், போய்விட்டனர். ஏனையோரும் எழுந்து புறப்பட ஆயத்தமானர்கள். எங்கள் எதிரே உட்கார்ந்திருந்த அப்பெண்களும் எழுந்தனர். பிறகு நாங்கள் சிறிது நாழிகை பேசிக்கொண்டிருந்தோம். “சரி வா சுந்தரம், நாழிகையாகி விட்டது. கிளம்பலாம்” என்று சொல்லி என்னுடன் அவனும் புறப்பட்டுவிட்டான்.

வீதியில் அதிக கூட்டமில்லை. எங்களுக்கு முன்பு அந்தப் பெண்கள் போய்க் கொண்டிருந்தனர். அவர்களைத் தவிர பார்வையைக் கொள்ள வீதியில் ஒருவரும் இல்லை. ஒரு தெரு அவ்வீதியைக் குறுக்கிட்டது. ஒருத்தியைத் தவிர மற்றப் பெண்கள் அந்தத் தெருவில் திரும்பினர். தனிப்பட்ட அந்தப்பெண் மட்டும் முன் செல்ல நாங்கள் சிறிது பின்னால் சென்று கொண்டிருந்தோம். மற்றும் ஒரு தெருவில் அந்தப்பெண்ணும் திரும்பினாள். அவளோடு அந்தத் தெருவில் அவள் பின்னால் சேகர் திரும்பினான். அவளோடு அந்தத்தெருவில் அவள் பின்னால் சேகர் போனபோதுதான், அவன் அப்பெண்ணைப் பின் தொடர்கிறான் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. நாங்கள் பேசவில்லை. அவள் பின் மெல்லமாகச் சென்றோம்..... சிறிது சென்று அந்தத் தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டிற்குள் அப்பெண் மறைந்துவிட்டாள். அருகில் இருந்த ஒரு கடையில் சேகர் நின்றான். ஒருதரம் வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டான். தன் மனத்தை ஒரு விதத்தில் சமாதானம் செய்து கொள்ளவே அவன் அந்தக் கடை வாயிலில் நின்றான் போலிருந்தது. அவ்வீட்டை அவன் முன்னால் சென்று கடக்கும்போது, அந்த வெளிச்சத்தடியில் அவன் நடை அவன் மனம் போல் கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்ததாய் எனக்கு ஒரு தோற்றம். அந்த வீட்டை அனேகமாக நாங்கள் கடந்துவிட்டோம் .....

“சேகரா - வரக்கூடாதா...” என்று ஒருஅசரீரியான சப்தம் எங்கள் காதில் விழுந்தது. அந்த வீட்டு வாயிற்புறம் இருட்டாக இருந்தது... எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்! கனவில் நடப்பவனேபோன்று சேகரன் அவ்வீட்டினுள் நுழைந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பின்னால் நானும் உள்நுழைந்தேன். அந்தக் குரல் அவனுக்குத் தெரிந்தவர்களுடையதா என்றும் அவன் அறிந்தவனா என்பதிலும் சந்தேகம். ஆனால் அது சிறிது முன் உள் நுழைந்த அந்த பெண்ணுடைது அல்ல.  அவ்வளவு குழைந்து  அப்பெண் அவனைக் கூப்பிடுவாள் என்ற எண்ணத்தை என் மனது அப்போது ஏற்க மறுத்தது போலும். ஒருக்கால் அவனே பட்டணம் வந்ததும் அவ்விடத்தில் தங்கியிருந்தால்? அதுவும் இல்லை; உள் நுழைய அவனுக்கு ஏன் அவ்வளவு தயக்கம்? வாயிற்படியை மிதித்ததும் இருட்டிலிருந்த வந்தவள்...“உள்ளே வர என்ன இவ்வளவு தயக்கம்? வீட்டிற்கு வா... உன்னை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உன் விஷயத்தில் எதிர்பார்ப்பது ஒன்றும் நடக்காதுதான்” என்றாள். சேகரன் மெதுவாய்ச் சிரித்தான். அவள் பேசின குரல் ஒரு மாதிரியாகக் கம்மலாய் இருந்தது. அவள் என்னைக்கவனிக்காதது போலவே அவனை அணைத்துக்கொண்டு உள்ளே சென்றதும் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. உள்ளே நுழையும் முன்பே, எதிரே ஒரு விசாலமான கூடம் பிரகாசமாகத் தெரிந்தது. நடை மிகவும் இருட்டாக இருந்தது. நடையைக் கடந்து வரவேற்புக் கூடத்திற்குச் சென்றபோதுதான் அவளைக் கவனித்தேன். என்னை அப்போதுதான் கவனித்தவள் போன்று அவள் சேகரனைத் தன்  அணைப்பினின்றும் விடுவித்தாள். எதிரே இருந்த ஒரு சோபாவில் அவள் உட்கார்ந்தபோது அவன் பக்கத்திலேயே அவள் அமர்ந்தாள்.

அவள் அரை இருட்டில் சமுத்திரக்கரையில் கண்ட அந்தப் பெண்ணைப் போலவேதான் இருந்தாள். இருந்தாலும், அவள்தான் என்று நிச்சயிக்க முடியாத வகையில் கொஞ்சம் வயதில் பெரியவளாகத்தான் தோன்றினாள். முக்கியமாக அவள் அல்ல என்பதற்க்குக் காரணம் அந்தப் பெண் சேகரிடம் இப்படி நடந்து கொண்டிருக்க முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. எதிரே உட்கார்ந்திருந்த என்னை அவர்கள் கவனிக்கவில்லை.

“பிரியமான சேகரா, என்னை நீ மறந்தது சரி...நானும் உன்னை மறப்பது பிசகல்ல. ஆனால் முடியவில்லையே...”

என்னைப் போலத்தான் அவளும் அவனை வெகு நாட்கள் கழித்து அன்று சந்திக்கிறாள் போலும், அந்த எதிர்பாராத சந்திப்பின் அதிர்ச்சி அவளை வெகுவாக வசீகரப்படுத்தியது. கடற் கரையில் நாங்கள் பார்த்த பெண்ணைக் கூடத்தில் காணவில்லை; சேகரனோ ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளக் கிளர்ச்சி அவனை மௌனமாக்கியது போலும்.

ஆனால் அவன் முகம், ஆம், அவன் முகம் எவ்வளவு வசீகரம் கொண்டு விட்டது! இளமையின் தனி சோபை அதில் தெரிந்தது.

“சுசீலா-என் ஞாபகம் இன்னுமா உனக்கு இருக்கிறது? உன்னை மறுபடியும் பார்ப்பேன் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. இன்று கடற்கரையில்தான் ஏதோ ஒன்று என்னுள் புரண்டது. இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு நாள் ஆனபின் உன்னை இப்படிக் காண முடியுமென்று நினைக்கவில்லை...”

அவள் பெயர் சுசீலா. அவள் வெகு அழகாக இருந்தாள். ஒரு வசீகரமும், வயது நிர்ணயிக்கவேண்டுமென்ற எண்ணமே தோன்றாத ஒரு வற்றாக்களையும் அவள் முகத்தில் புகுந்திருந்தன. சேகரன் பழைய காலத்தில் இம்மாதிரியாகப் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறான் என்றாலும் இப்போது அவன் இந்த விஷயத்தில் எப்படி என்பது எனக்குத் தெரியாது. படித்து முடித்த பின்பு கல்யாணம் செய்து கொண்டு அவன் தன் ஊரில் இருக்கிறான் இருக்கிறான் என்பது மட்டுமே எனக்குத் தெரியும்.

இருவரும் பக்கதில் அமர்ந்து இருந்தனர். எட்டிய நாற்காலி ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன். சுசீலா ஒரு பையனைக் கூப்பிட்டாள்.“பையா - காந்தா எங்கே? மாடியிலா? நான் கூப்பிடுவதாகச் சொல்லு. நீ வாசலிருந்துகொண்டு, யாராவது வந்தால் இன்று என்னைப் பார்க்க முடியாது என்று சொல்லிவிடு” என்றாள்.

அந்தக் கூடம் அவசியமற்ற சாமான்களால் நிரப்பப்படவில்லை. இரண்டு மூன்ற் சோபாக்களும் இரண்டொரு நாற்காலிகளும், நடுவில் ஒரு சிறிய மேஜையும்தான், அவைகளும் கண்களை உறுத்துபவையாக இல்லை. சுவரில் நாலைந்து படங்கள்தான் மாட்டப்பட்டிருந்தன. எனக்கு எதிரே ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் இருந்தது. அப்போது மணி எட்டு ஆகிவிட்டது.

இரண்டொரு நிமிஷத்தில் காந்தா உள்ளே நுழைந்தாள். அவளைத்தான் நானும் சேகரும் கடற் கரையில் பார்த்தோம். வந்தவள் எங்களைக் கண்டதும் கொஞ்சம் தயங்கினாள். சிறிது நேரம் சுசீலா அவள் வந்ததைக் கவனிக்கவில்லை போலும். திரும்பி மாடிக்குப் போகிறவள் போன்று திரும்பிய அவளை “என்ன காந்தா, நீ வந்ததே தெரியவில்லை. கொஞ்சம் அப்படி உட்கார்ந்து கொள்” என்று சுசீலா தன் அருகிலிருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக்காட்ட, தயக்கத்துடன் என் எதிரில் அவள் உட்கார்ந்தாள்.

சுசீலாவும் சேகரும் நான் இருப்பதையே, அல்ல நாங்கள் இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். இதில் ஆத்திரம் கொள்வதற்கு ஒன்றுமில்லை. வெகு நாட்கள் சென்ற பின் இந்த எதிர் பாராத சந்திப்பு அவர்களுக்கு எவ்விதமாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் புலனாகாமல் அவர்கள் எதிரில் வீற்றிருப்பது எனக்குக் கொஞ்சம் மதிப்பற்றுத் தோன்றியது. காந்தா என் எதிரில் இருந்ததால் மனக்கசப்புடன் இருந்தாள் என்று தோன்றியது-எனக்கு. அவள் முகம் வசீகரம் காட்டியும், மனது மட்டும் ஏதோ வேதனைக்குள்ளாகியது போல் அவள் உதடுகள் உறுதியாய் இருந்தன. அடிக்கடி அவள் கவனிப்புக் கொள்ளாத பார்வையுடன் மிரண்டு விழித்துக் கொண்டிருந்தான்

எட்டிய வெளியில் இன்பம் காண்பதைப்போல் சுசீலா அடிக்கடி காந்தாவைப்
பார்க்கிறாள். அவளைப் பார்க்கும்போது அவள் முகம் கொஞ்சம் மாறுகிறது. கொஞ்சம் வயதான தோற்றம் கொடுக்கிறாள். ஆனால் அருகில் அமர்ந்திருக்கும் சேகரனைப் பார்க்கும்போது, என்ன உள்ளக்கிளர்ச்சியோ, அவள் வெகு பாலியமாகத் தென்படுகிறாள். அவனோடு பேசும்போதோவெனில் அவள் குரலில் ஒரு தனி உதறல் தொனிக்கிறது.

 “நீ என்னைப்பற்றி என்ன எண்ணுகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கும் உன்னைப் பற்றிய எண்ணம் தெளிவாக இல்லை... ஆனால், இப்போது உன்னைப் பற்றிய பழைய எண்ணங்கள்  இனிமையாய் என்னைத் துன்புறுத்துகின்றனவே. அநந்தத்திலும் அவியாது என்னுள் இருந்து உன்னைப் பார்த்ததும் உணர்வு கொள்ளுவது எது? .... சேகரா”

அவள் ஒரு விலைமாது. ஒரு காலத்தில் சேகருடன் உறவு கொண்டாடியவள். எத்தனையோ பேர்களின் அடிச்சுவட்டைத் தாங்கிய மணல்பரப்புத்தான் அவள் உள்ளம். முன் நடந்தவன் சுவட்டை அழித்து நடப்பவரும், நடக்கும் போதே சின்னத்தைக் களைந்து நடப்பவரும் உண்டு. யார் எப்படி நடந்தால் என்ன, மணல் பரப்பிற்கு நடப்பவர் யாரென்று உணர்வு உண்டா? மயங்கிய எண்ணங்களில் தான் இன்பக் கனவு காண்பது? ....

காந்தா ஒரு புதிராக விளங்கினாள். அவள் யாரென்று தெரியவில்லை. ஒருக்கால் - சுசீலாவின் சகோதரியா இவள்? என்ன செய்கிறாள்? படித்துக்கொண்டிருக்கலாம். எனக்குள் அவளைப்பற்றி ஏதோ எண்ணங்கள் தோன்றலாயின. நேரமோ நிற்பதில்லை. எனக்கோ நாழிகை ஆகிக்கொண்டிருக்கிறது. நான் வீட்டிற்குப் போகும் நேரம் ஆகிவிட்டது. எனக்காக என் மனைவி மக்கள் காத்திருப்பார்கள். அவர்களுக்கு நேரமானதன் காரணம் நான் என்ன சொல்லப் போகிறேன்?

வாயிற்புறத் தோட்டத்தில் மரங்களின் இலை அசைவுச் சப்தம், சிறு தூறல் சப்தமாகக் கேட்டது. “மழையா?” என்று காந்தாவைப் பார்த்துக் கேட்டேன். “இல்லை. காற்றுதான்” என்று சொன்னாள். அநாவசியமானவனென்ற தோற்றத்தின் போது, அர்த்தமற்ற கேள்விகள் கேட்பதால்தான் ஒருவன் இருப்பதை நிரூபித்துக்கொள்ள முடிகிறது? காந்தாவுக்கு அந்த இடத்தில் இருப்பே கொள்ளவில்லை. அங்கிருந்து எப்படிப் போவது என்றும் புரியாமல் உட்கார்ந்து இருந்தாள். என் எதிரில் இருந்த அவளையும் நான் அடிக்கடி பார்க்கமுடியவில்லை.

காந்தாவை அடிக்கடி பார்த்துக்கொண்டே சுசீலா சேகருடன் பேசினாள். சுசீலா சேகருடன் பேசினாள் : “நீங்கள் அன்றுமாதிரியே இன்றும் தோன்றுகிறீர்கள். அதே முகத்தைத்தான் நான் பார்க்கிறேன். உங்களை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை...? இதோ காந்தா இருக்கிறாள் ... நீங்கள் பார்க்கவில்லை ...? உங்களிடம் சொல்லவில்லை .. நீங்கள் போகும் போது எனக்கு ஒரு மாதம் - இரண்டு மாதமாக இருக்கலாம்.... இவளுக்கும் தெரியாது. இவளைப் பார்க்கும் போது உங்கள் நினைவு வருகிறது ...” சுசீலா நிறுத்தி நிறுத்திப் பேசின பேச்சை நிறுத்தினாள். இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்கள் சிறிது கலக்கம் கொண்டன. “...ஆம், உங்கள் எண்ணம் கொள்ள காந்தா இருக்கலாம் ... எண்ணந்தானா ... உங்கள் நினைவா தெரிகிறது? ... மறைந்த காரணத்தை நான் காரியத்தில் எப்போதும் பார்க்க முடியவில்லை. இரண்டும் ஒன்றாக என் கண்முன் தோன்றும் போதுதானா இந்த உள்ளக்கிளர்ச்சி?....”

அவள் கண்கள் கலங்கிவிட்டன. எழுந்து காந்தாவிடம் வந்தாள். தாயாரைக் கண்டதும் எழுந்த காந்தாவை அணைத்துக்கொண்டாள். அவள் நெஞ்சம் ஒருதரம் விசித்தது... “காந்தா உனக்குத் தெரியவேண்டாமா யார் உன் தகப்பனென்று? இதோ சேகர்... இவர்தான். அன்று போனவரை இன்றுதான் நான் பார்க்கிறேன். ஆனால் என்றாவது ஒரு நாள் பார்க்க முடியும் என்ற  நம்பிக்கை எனக்கிருந்தது...” அவள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்து காந்தாவின் உச்சந்தலையில் சொட்டியது .... “இப்போது என்னுடைய எண்ணங்கள் எவ்வளவு இனிமையாக மனத்தைத் துன்புறுத்துகின்றன? என் வாழ்க்கை இனிக் கரைந்தாலும் பாதகமில்லை...” எங்கேயோ ஒரு நாயின் குரைப்புக் கேட்டது. “ஏய் பையா, ஏண்டா நாய் குரைக்கிறது? மாடியிலிருந்து அதை அவிழ்த்துவிடு...இல்லை, அங்கேயே இரு; நான் அவிழ்த்து விடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவள் மாடிக்குச் சென்றுவிட்டாள்.

காந்தா யௌவனத்துடன் விளங்கினாள். அவளுக்கு இருபது வயதிருக்கும். அவளை அப்போது என்னால் மதிக்க முடியவில்லை. அவள் பெண் என்றாலும், என் சிநேகிதன்  சேகரின் பெண் என்றாலும், என்னால் மதிக்கமுடியவில்லை. அவள் தன் தகப்பனாரைப் பார்த்து விட்டாள். அவளுக்குத் தன் தாயாரைத்தான் நன்றாகத்தெரியுமே, ஆனால், அவனைத் தெரிந்து கொள்ள வேண்டியது, அவசியமா என்ற கேள்வியாகத்தான் சேகரனைப் பார்த்து நின்றாள். அவன் பேசவில்லை. காந்தாவைப் பார்த்தான். அவனை அறியாமலேயே அவன் கால்கள் அவனை அவளிடம் இழுத்துச் சென்றன. அவள் அருகில் வந்தான். அவளை அணைத்துக்கொண்டான். துவண்டு அவனுடைய அகன்ற மார்பில் தலையைப் புதைத்து நின்றாள் காந்தா. அவள் உச்சந்தலையில் ஒரு முத்தமிட்டான். அவனாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவன் முகத்திலும் ஒரு முதுமை கண்டது. “காந்தா-காந்தா” மேற்கொண்டு அவன் ஒன்றும் பேசவில்லை.

உள்ளே சுசீலா நுழைந்தாள். அவள் பின் ஒரு நாய் துள்ளி விளையாடிக்கொண்டு ஓடி வந்தது. காந்தாவைப் பார்த்தும் அவளிடம் வந்து நின்றது. நாயைக் காந்தா கவனிக்கவில்லை. இருவரையும் பார்த்தாள் சுசீலா. அவள் ஒரு தாயானாள். அவளுக்கு வயது நாற்பதுக்கு மேலே கூட இருக்கலாம். அவள் கன்னம் பூமியைத் தொடும் வண்ணம் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.

காந்தா சொன்னாள் - அப்போது சேகர் வாயிற்படிப்பக்கம் சென்று கொண்டிருந்தான் -“அப்பா!” அவள் வாயில் அந்த வாயில் அந்த வார்த்தையின் உச்சரிப்பு விசித்திரமாக இருந்தது...“அப்பா, எங்கே போகிறீர்கள்? இங்கே இருக்கமாட்டீர்களா?” அந்தப் பேச்சில் சோகம் அந்த வீட்டையே சூழ்ந்ததை என் மனது உணர்ந்தது.

ஒரு முறை சேகரன் திரும்பினான். அவன் முகம் மிக மாறுதல் அடைந்து இருந்தது. அதில் வெறுப்புக் கூடத் தெரிந்தது. தன்னைத் தானே வெறுத்துக் கொண்டவன் தான் தன்னுள் தெம்பு குறைந்ததாக உணர்கிறான் போலும். அவனுடைய யௌவனக் களை ஒரு விநாடியில் அழிந்தது. அவனுக்கும், வயது நாற்பதுக்கு மேல்தான் ஆகிறது.

அவர்களால் அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் அந்த வீட்டைவிட்டு வெளிக் கிளம்பிவிட்டான். தெருவில் வந்தவுடன் சேகர் தெருவழியே போய்க் கொண்டு இருந்தான். அவன் என்னைக் கவனிக்காதபோது நானும் கவனியாமலே என் வீட்டிற்குச் சென்றேன். நான் வீட்டை அடையும்போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது.


தட்டச்சு : ரா ரா கு


- தேனி 1948


ஊரல் - இந்துமதி சுகுமாரன் (நடை (1968 -1970))


அவள் அவனுக்கு எதிரேதான் நின்றிருந்தாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபதடி தூரம். நடுவே வீதி இருந்தது. வீட்டு வாயிலின் நிலைப்படிக் கட்டையில் சாய்ந்து கொண்டு, உதடு பற்களின் நெளிவாய் அழுந்திய படி, கண்கள் கனவுக்கோலம் கண்டு கொண்டு - அழகாயத்தானிருந்தாள் அந்தப் போஸில். வெறும் பனியனோடு, கைகள் நெஞ்சைக்கட்டி அந்த முண்டாபனியனின் தோள்பட்டை வார்களை இழுத்து விட்டுக்கொண்டு, கண்கள் விரித்து அவளைத் தின்று கொண்டிருந்தான், தூர அவன் வீட்டினுள்ளிருந்து.

இப்படி எவ்வளவு நேரம்தான் நிற்பது? உடலசைவில்லாமல், கால் ஆடாமல், கண் மாறாமல்-நித்ய தவமா?

இப்படித்தான் இந்த இருவரும் ஒரு ஆறுமாதமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆடாமல், அசையாமல் ஒரு முன்னேற்றமுமில்லாமல், கேட்டால் தெய்வீகக் காதலாம். அவன் சொல்கிறான். என்ன தெய்வீகக் காதலாம். அவன் சொல்கிறான். என்ன தெய்வமயமோ? பேசாமல், கல்லாய் நிற்பதில் தெய்வதமோ?

அவளை அருகில் மூன்றடி தூரத்துக்கிள் - இரண்டே தரம்தான் பார்த்திருக்கிறான். வீதியில், திருவிழாத்தேர் வரும்போது கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்த போது ஒரு முறை. பக்கத்தில் இருந்தும் பேசாமலே தங்கள் காதலின் இறைத்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இந்த ஆறுமாதமும் போய் இன்னொரு ஆறும் போய் ஒரு வருஷமாகியது. ஊரில் இன்னோருதரம் தேர் வந்தது. அப்போதும்கூட நெருக்கத்தில் அருகருகே பார்த்துக்கொண்டார்கள், பேசாமல்.

அவளுடைய பெயர் அவனுக்கு காதல் ஆரம்பித்து ஒண்ணரை வருஷம் கழித்துத்தான் தெரிந்தது.

அது கூட யாரோ உரக்க அவள் வீட்டில் கூப்பிட அவள் திரும்பியதில் கண்டு கொண்டான். பேர் அவனுக்கு இனித்தது சொல்லிச் சொல்லி பார்த்துக் கொண்டான். எழுதி எழுதி அழித்தான். காதலின் தெய்வீகத்தனம் போகாமல் என்னென்ன செய்யணுமோ அவ்வளவும் செய்தான்.

இப்படி இருவரும் நின்று தவம் கிடப்பதற்கு நேரம் கூடக் குறித்து வைத்திருந்தனர். சரியான பகல் கிளம்பியதும் உண்டு. பின் களைப்பாறும் சமயம். அந்தி கலையும்போதுதான் ஆட்டம் முடியும். முதலில் வந்ததும் அவள் சிரிப்பாள். அவள் தயங்கிப் பின்னால் வாயை நெளிப்பான். பற்கள் லேசாகத் தெரியும்.

இன்னொரு வருஷம் போனது. தேர்த்திருவிழா எப்போதும்போல் வந்துபோனது. இப்பொழுது கணக்குப்படி சாலு தடவ அவர்கள் பக்கத்தில் பார்த்துக்கொண்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து ஒரு நாள் அவள் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள். அவன் முகம் நெளிந்தது. கவலைகூடத் தெரிந்தது. கண்கள் ‘ஏன்’ என்று தன்னறியாது கேட்டன. அவள் கழுத்தைச் சுற்றிக் கயிறு முடிப்பது போல் காட்டி, வீட்டுக்குள் திருப்பிக் கை காட்டி விட்டு இவனை நோக்கினாள். இவன்...? பேசாமல் காதலைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். அவளுக்குக் கோபம் வந்தது. தோள் பட்டையில் முகத்தை வளைத்து இடித்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.

மூன்று மாதம் கழித்து வளுக்கு யாரோ ஒருவனுடன் கல்யாணம் நடந்தது. ஊர்வலத்துக்குக் காரில் ஏறும்போது அவனப் பார்த்தாள். அவன் வீட்டையும் சேர்த்து தெரு முழுக்கப் பந்தல் போட்டிருந்தார்கள். அவனும் அன்று பனியனுக்கு மேல் நல்ல சட்டை போட்டு ஜோராக இருந்தான். மாப்பிள்ளை மாதிரி. பந்தலுக்குள் நின்று கொண்டு அவள் போகும் காரை ஒட்டிச்சென்றபடி அவளைப் பார்த்தான். (ஐந்தாவது தடவை) அவள் அவனை அலட்சியமாகப் பார்த்து முடிந்ததும் அவன் தன் வீட்டுக்குள் போய்விட்டான். தாலி கட்டப்படும்போதுகூட அவன் பார்க்கப்போகவில்லை. அவள் அவனை மறந்துவிட்டாள், சந்தடியில்.

கல்யாணமாகி அவள் எங்கேயோ போய்விட்டாள். இப்போது மத்தியானமெல்லாம் பொழுது போவது மிகக் கடினமாக இருந்தது, அவனுக்கு, பனியனின் தோள்பட்டை ‘வாரை’ இழுத்து இழுத்து விட்டுக் கொண்டபடி சுகமாக நின்றுகொண்டு பார்த்த காலமெல்லாம் போச்சு, வருத்தமாக இருந்தது. முன்பைவிட இப்பொழுது அவள் பற்றி நிறையக் கனவு கண்டான். எப்பொழுதும் அவள் தனக்குள்ளேயே இருக்கிறார்போல் நினைவு.

எட்டு மாதம் கழித்து வயிறு தள்ளிக்கொண்டு அவள் வந்து சேர்ந்தாள். மாப்பிள்ளை தூரதேசமாகையால் இத்தனை நாள் அனுப்ப சௌகரியப்படவில்லை. அவன் ஆசையாய்ப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள், ஆச்சரியத்துடன். ‘இன்னுமா இவன் பனியன் வாரை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டு நிற்கிறான்?’ அப்புறம் அவளுக்கு அவனைப்பார்க்க சௌகரியப்படவில்லை. இவனுக்கு மத்தியான நேரங்களில் பொழுது போகவில்லை. அவள் அந்த வீட்டுக்குள் தான் இருக்கிறாள் என்ற நினைவே போதாதா, அவனுக்கு, நின்று தவம் கிடக்க!

மூன்று மாதம் கழித்து அவளுக்குக் குழந்தை பிறந்தது. அவள் வீட்டுக்குள் யார், யாரோ போனார்கள். வந்தார்கள். அவன் நிற்பதை விடவில்லை.

ஒரு மாதம் கழித்து அவள் முன்போல் நடமாட ஆரம்பித்தாள். தோளில் குழந்தை இருந்தது. ஒரு நாள் காலையில் அவள் வெளியே நிற்கும் போது இவன் வேகமாக வந்து நின்றான். அவன் வீட்டு நிலைப்படியில்.. அவளைப்பார்த்து சிரித்தான். அவள் கொஞ்சம் மலைத்தபடி சிரித்தாள். திடீரென்று அவள் என்ன நினைத்தாளோ, விடுவிடென தன் வீட்டைவிட்டுக் கீழே இறங்கி வீதியைக்கடந்து அவன் வீட்டுப்படி ஏறி உள்ளே வந்தாள். அவன் நடுங்கிப்போனான். வியர்வைக்குளம், முகம், நெஞ்செல்லாம். வாய் கோணியபடி கண்கள் ஸ்தம்பிப்பு.

அவள் அப்படிப் புயலாய் வந்ததும், தாங்காமல், வீட்டுக்குள்ளே போகப்போனான். அவள் ‘ஏய்’ என்று கத்தினாள். அவன் அசந்து போய்த் திரும்பி அவளைப்பார்த்தான். அவள் பார்வையின் கூர்மை தாங்காமல் குனிந்தான். கண்கள் தரையிலேயே பதிந்து கிடந்தன.

‘இங்கே பார்’ என்றாள்.

அவளைப் பார்த்தான். பார்க்க முடியவில்லை. பார்வையை பழையபடி கீழே போட்டான்.

‘ம், இங்கே பார்’ . குரலில் ஆக்ரோஷம்.

இப்போது வேறு வழியில்லை. அவளது ரவிக்கையின் மேற்புஉறம் கழுத்துக்கு கீழின் சதை வெண்மையைப் பார்த்தபடி நின்றான். தோளின் மேல் சாத்தியிருந்த குழந்தையின் பிஞ்சுக்கைகள் தெரிந்தன. குழந்தையின் மேல் துணி போட்டிருந்தது.

‘ம். நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லு. ஏன் என்னைப் பார்க்கிறே’

‘ம். ம்.’ அவன் சப்தம் உள்ளே போனது.

‘நீ அழகாயிருக்கே பார்க்க ஆசை....’

‘பின்னே ஏன் என்கிட்டே பேசப் பயப்படறே’

‘அம்மா திட்டுவா’

‘பார்க்க ஆசையாயிருக்கல்லே?’

‘ம்.’ கண்கள் விரிந்தன.

‘என்னைக் கல்யாணம் பண்ணியிருக்கலாமில்லையா!’

‘ம்’ கண்கள் சிரித்தன, தோளில் கிடந்த குழந்தையைப் பார்த்து.

‘பின்னே ஏன்...?’

‘அப்பா திட்டுவார்’

அவனை ஏற இறங்கப்பார்த்தாள். ஆற்றாமையுடன் அவள் கண்களில் தோன்றிய உணர்ச்சி வீறலில் அவன் புழுவாய் மாறினான். அவனைப் பார்ப்பதே எரிந்தது.

‘ஹூம்’என்று ஆங்காரப் பெருமூச்சு விட்டபடி கீழே இறங்கினாள். வீதியில் இறங்கியதும், அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தொண்டையை விகாரமாய்ச் செருமிக்கொண்டு ‘தூ’ வென்று காறித்துப்பினாள்.

நேர தன் வீட்டுக்குள் போய்விட்டாள்.

அவள் தன் வீட்டுக்குள் போய் மறைந்ததும், அவள் துப்பி விட்ட எச்சில் மடங்கி உருண்டு கட்டியாய் போனதைப் பார்த்தான்.

பனியனின் தோள் பட்டை ‘வாரி’லிருந்து கைகளை எடுத்தான்.

-நன்றி : நடை (1968 -1970)


இதழ்த் தொகுப்பு : சந்தியாப் பதிப்பகம்
 Rukmini Bhaya Nair
Genderole1
Considerthefemalebodyyourmost
Basictextanddontforgetitsslokas


Whatpalmleafmscandoforusitdoes
Therealgapsremainforwomentoclose
I


Spacesbetweenwordspreservesenses
lntactbutweneedtomeetineverysense 


Comingtogetherisnoverbalmatter
Howeveroursagespraisepativrata


Katavakantakasteput rasamsaroyam - 1
Ativavichitrawaswiittenformenbyaman 


Theworlddoesnotseemsostrangeseen
Throughgentleeyesnorwomensoalien 


Nalinidalagalajalam aticaralamladvat
JivanamaLshayachapalamchangcability 


IFJnthcnatureofthingsandcspccially                 - 2
Fcmalesbutsankarayouoldmisogynisttellmc 


Wbatssocontcmptibleaboutfleeting
Splcndor?andwhileyouarcaboutinhink 


Whatssocontemptibleaboutfleeting 
Splendour?andwhileyouareaboutitthink/

We have wrung poems from household tasks
Carrying water, child, sorrow, can you do so much?

Itmaybebeneathyoutopriseaparthisgimmick
Butrememberthethingwomanchangesbestishersex/

Opposingyouischildplaybecauseyoufail
Torealizethisandwecanbeatyouatyourowngame/

Muchhardertoconvertourselveshaving
Labouredlongatbeingmenpossessnothing

My worst fear is Sankara had I indeed been you
I might not after all have conceived anything new.

Copyright (c) 2003 ProQuest tilormation and Learning Compamy Copyright (c) URibersity of Chicago Press


1. Who is your wife? who are your
     children? this world is exceedingly
     strange.

2.like water poised delicately
on a lotus petal so astonishing
elusive is life.