தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, June 23, 2018

பொம்மையா; மனைவியா? - (ஹென்றிக் இப்ஸன் எழுதியது ) க. நா. சுப்பிரமணியம், பி.ஏ., மொழிபெயர்த்தது

http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdj

Zh2jhyy&tag==பொம்மையா;%20மனைவியா


மணிக்கொடிப் பிரசுரம் : 3.

பொம்மையார் மனைவியா?

(ஹென்றிக் இப்ஸன் எழுதியது )

க. நா. சுப்பிரமணியம், பி.ஏ.,

மொழிபெயர்த்தது

நவயுகப் பிரசுராலயம் லிமிடெட்

ஜி. டி., 'மதராஸ் காபிரைட்)

[8-அணாPRINTED AT THE JUPITER PRESS

MADRAS

முன்னுரை

 ''கண்ணுள்ளவன் கவி.''

- ஹென்றிக் இப்ஸன் - பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கிய வுலகிலே புரட்சிகள் அனந்தம். அவைகளில் மிக முக்கியமானது நாடக இலக்கியத்தில் ஏற்பட்டது. அதன் மூலகர்த்தா ஹென்றிக் இப்ஸன் எனும் நார்வே நாட்டுக் கவி.

நார்வே சிறிய நாடு. அதன் பாஷையைப் பேசுகிறவர்கள் உலகத்தின் ஜனத் தொகையில் ஒரு சிறு பகுதியினர் தான். இப்ஸன் தம் காலத்திய நார்வேயின் வாழ்வைப் பற்றித் தம் சொந்த பாஷையில் தான் எழுதினார் எனினும், அவருக்கு உலகத்து இலக்கியத்திலே மகா உன்னத ஸ்தானம் கிடைத்தது. அவரை மேதை யென்று உலகம் புகழ்கிறது. அவர் நாடகங்கள் ஜப்பானிலிருந்து பெரு வரையில் பேசப்படும் முக்கியமான எல்லாப் பாஷைகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவருக்குப் பின் வந்த இலக்கிய ஆசிரியர்கள் எல் லோரும் ஒருவர்கூட விலக்கின்றி - எப்பாஷையில் எழுதுகிறவராயினும், எத்தேசத்தவராயினும், அவர் நாடகங்களாலும் அவைகளின் பாணிகளாலும் பாதிக்கப்பட்டிருக் கின்றனர்.

இது ஏன் ? மகா கவியின் உள்ளத்துடன், நார்வே நாட்டுச் சம்பவங்களுக்கும் மனிதர்களுக்கும் அவர் தம் எழுத்தில் உயிர் கொடுத்திருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். சமய சந்தர்ப்பங்களால் மனித சுபாவம் மேலெழுந்த வாரியாக மாறும் ; ஆனால் மற்றைப்படி அது எல்லாத் தேசங்களிலும், சமூகங் களிலும், ஒரே படித்தாயுள்ளது. நார்வே நாட்டவர்களைஉள்ளபடியே தீட்ட முயன்ற இப்ஸன், தம் கவிதா விலாஸத்தால், மனித குலத்தையே தீட்டிவிடுகிறார். நார்வேயின் சமூகப் பிரச்னைகளை உண்மையாக உள்ளபடியே அலச முயன்றவர் உலகத்துப் பிரச்னைகளையே அலசி முடிவு காட்டு கிறார்.

அவர் கலைஞர். தம் காலத்து, தம் சமூகத்து மனிதர்களின் ஆத்ம சோதனைக்கு அவர் தம் கிரியா சக்தியை உபயோகிக்கிறார். இந்த ஆத்ம சோதனையைவிட கலைக்கு உயர்ந்த விஷயம் வேறு கிடைக்காது, இதை விஷயமாக வைத்து முதன் முதலாக நாடகங்கள் எழுதியவர் இப்ஸனே, இதுதான் அவர் நாடக உலகில் செய்த புரட்சி.

இலக்கியத்தை இரு விதமாகப் பிரிக்கலாம் : ஒன்று கனவு இலக்கியம், மற்றது நனவு இலக்கியம். கனவு இலக்கியம், வாழ்க்கையின் உண்மைகளை அங்கீகரித்து எதிர்த்துப் போராடத் தைரியமில்லாது ஓடி ஒளிவதின் சின்னம். நனவு இலக்கியம், பலர் குதிருக்குப் பின் மறைத்து வைக்க முயலும் அடிப்படையான உண்மைகளை அம்பலத்துக்கிழுத்து, ஆடவைக்கும். இந்தியாவில் காளிதாஸனுக்கு முன்னும், கிரீஸில் ப்ளேடோவுக்கு முன்னும், சரித்திர வரம்புக்குட்படாத நாட்களில், நனவுப் பாணியைப் பின்பற்றிய நாடகங்கள் இருந்திருக்கலாம். ஷேக்ஸ்பியரைக் கவியாகப் போற்றலாமே தவிர நாடகாசிரியராகப் போற்றுவதற்கில்லை. இப்ஸனுக்கு முன் நனவு இலக்கியப் பாணியைப் பின்பற்றிய நாடகங்கள் வழக்கில் இல்லை. சமீப காலத்தில் ஒரு சிலர் அப்படிப்பட்ட நாடகங்கள் சிருஷ்டிக்க முயன்றனர். ஆனால்  அவர்களுக்குக் கவி உள்ளம் இல்லாததாலோ, தீவிரமும்  தைர்யமுமில்லாததாலோ, அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.

நனவு இலக்கியப் பாணியை உபயோகித்து உயர்தர நாடகங்கள் சிருஷ்டிக்க முடியும் என்று சிருஷ்டித்துக் காட்டியவர் ஹென்றிக் இப்ஸன். அவர் நாடகங்களால் எழுப்பப்பட்ட பிரச்னைகள் மேல்நாட்டுச் சமூகத்தையே ஒரு கலக்குக் கலக்கின. அவர் தம் சிருஷ்டிகளைப் பின்பற்றி 'உண்மை ' வழியில் நடக்கையில், சமூகத்தின் ஊழல்கள் பலவற்றில் மோதி, அவைகளைக் கண்டிக்க வேண்டியிருந்தது. அவர் தனியாகச் சமூகத்தையே எதிர்க்கத் தயாராக இருந்தார். அது வியர்த்தமான எதிர்ப்பன்று ; வீண் வாக்குவாதமன்று; மேலெழுந்தவாரியான எதிர்ப்பன்று; தீவிர விசாரத்தால் எழுந்து, உண்மையைத் தைரியமாக எடுத்துக்காட்டி அலசும் எதிர்ப்பு .

இப்ஸனுடைய மேதையில் இது ஒரு அம்சந்தான் - ஆனால் ஒரு முக்கியமான அம்சம். தவிர, அவர் கவி. சம்பவங்களை எடுத்துக் கையாளுவதில் மகா மேதை. அவருடைய நாடக சிருஷ்டிகள் அபூர்வப் படைப்புக்கள் ; அவருடைய பாத்திரங்கள் நம்மைப் போல் சதையும் ரத்தமும் உள்ளவர்கள் ; நம்மிடையே நம்மைப் போல் நடமாடுபவர்கள் ; நம்மைப் போலவே பேசுபவர்கள், நிற்பவர்கள், நடப்பவர்கள். சில சமயம் அவர்கள் வெறும் நாடகப் பாத்திரங்கள் என்பதை நாம் மறந்தே விடுகிறோம். இப்படிப் பாத்திரங்களைச் சிருஷ். டித்த அவர், நாடகத்துக்கு ரொம்ப முக்கியமான காட்சி அமைப்பிலும், அரங்கில் கண்ணையும் மனத்தையும் ஒருங்கே கவரத்தக்க ஜோடனைகள் செய்வதிலும் சமர்த்தர். உலகிலே நாடக இலக்கியம் இறந்தபோது, இருந்த அஸ்தி வாரத்தை வைத்துக்கொண்டு, அதன் மேல் அழகிய மாளிகையை எழுப்பி, புதுப் புது ஜோடனைகள் செய்திருக்கிறார். ' ஆம், உலகத்து நாடக இலக்கியாசிரியர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக அவரை மதிப்பதில் தவறில்லை.

ஹென்றிக் இப்ஸன் தெற்கு நார்வேயில் ஸ்கீயன் என்ற சிறு நகரில் 1828-ம் ஆண்டு மார்ச்சு 2-ம் தேதி பிறந்தவர். அவரைச் சுத்த நார்வே நாட்டாராகக் கருதுவதற்கில்லை. அவர் மூதாதையர்களிடம் முக்கியமாக ஸ்காட்டிஷ் ஜெர்மன் கலப்பு இருந்தது. அவருடைய எட்டாவது வயதில் அவர் தந்தை ஆஸ்தியையெல்லாம் இழந்து விட்டார். ஏழையான இப்ஸன் குடும்பத்தாரைக் கவனிப்பவரில்லை. அவர்கள் பணக்காரர்களாக இருந்த போது அவர்களிடம் உறவு கொண்டாடிக் கொண்டு வந்தவர்களெல்லோரும் ஒதுங்கி விட்டனர். இச் சம்பவத்தின் கசப்பு ஹென்றிக் கிழவரான பிறகும்கூட மறையவில்லை. 

இள வயதிலிருந்தே அவர் மனமும் இதயமும் எதையும் கிரகிக்கும் சக்தி படைத்ததா யிருந்தது. அந்த நாட்களில் அவர் மனத்தில் பதிந்த எவ்விஷயத்தையும் அவர் பின்னர் மறக்கவில்லை. அவர் பள்ளி நாட்களைப் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. தனிமையாக , யார் வழிக்கும் போகாமல், யார் நட்பையும் வேண்டாமல், விளையாடக்கூடத் தோழர்கள் இல்லாமல், காலந்தள்ளினார். பதினைந்தாவது வயதில் அவர் சித்திரப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவர் தந்தையால் அவரைச் சாதாரணப் பள்ளிக்கு அனுப்பக் கூடச் சக்தியில்லை. எனவே க்ரிம்ஸ்டாட் என்ற நகரில் ஒரு டாக்டரிடம் வேலை கற்றுக்கொள்ள அமர்ந்தார் ஹென்றிக். க்ரிம்ஸ்டாடின் ஜனத்தொகை எண்ணூறு. அச் சிறிய நகரில் ஐந்து வருஷம் தங்கினார் இப்ஸன். பகல் நேரமெல்லாம் டாக்டருடன் சென்றுவிடும். இரவு ஊர் சுற்றுவதிலும், படிப்பிலும், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய விசாரணைகளிலும் செல்லும். க்ரிம்ஸ்டாடின் ஜனங்களின் பழக்க நடவடிக்கைகளைக் கவனித்து, அவைகளைப் பரிகாசஞ் செய்து, கட்டுரைகளும், படங்களும் எழுதுவார். அவருக்கு யாரும் நண்பர்களே கிடையாது; ஏழை ; அவரை ஏனென்று பிரியமாகக் கேட்பார் யாருமில்லை..

இருபதாவது வயது நெருங்கிய போது அவர் க்ரிஸ்டி யானியா மருத்துவக் கலாசாலையில் சேரவேணு மென்று முதல் பரீட்சைக்குப் படித்தார். பரீட்சை தேறவில்லை. ஆனால் அவர் பரீட்சைக்காகப் படித்த ஸால்லஸ்டும், சிஸரோவும் அவருடைய முதல் நாடக விஷயமாக உபயோகப்பட்டன. அவர் ''காடிலைன்'' என்ற மூன்றங்கச் சோக நாடகத்தை எழுதி முடித்தபோது அவருக்கு வயது இருபத்தொன்று. இதில் விசேஷ மென்ன வென்றால், அவர் அதுவரையில் ஒரு நாடகமாவது பார்த்ததுமில்லை ; வாசித்ததுமில்லை.

பரீட்சையோ தேறவில்லை. டாக்டரிடம் வேலையும் மில்லை. எழுதிப் பிழைக்கலாம் என்ற உத்தேசத்துடன் அவர் க்ரிஸ்டியானியா சென்றார். நிறைய எழுதினார், ஆனால் அந்த எழுத்தால் பிழைக்க வழியில்லை. அக்காலத்திய இலக்கியப் பாணிகள் அவருக்குப் பிடிக்கவில்லை. ''மலர்களையும் குயில்களையும் பற்றி எழுதுவதைக் குறைப்போம். மலைகளையும் வனங்களையும் பற்றி எழுதுவானேன் ? பண்டைப் புராணக் கதைகளை மறந்து விடுவோம். மெளனமாக, யாரும் அறியாமல், மனித ஹிருதயத்திலே நடப்பதை எழுதுவோம்'' என்றார் இருபத்திரண்டு வயது நிரம்பாத இப்ஸன். அவர், க்ரிஸ்டியானியாவில், உண்ண உணவின்றி, இலக்கியத்தைத் தவிர சம்பாதிக்க வேறு தொழிலின்றி, இரண்டு வருஷம் அல்லாடினார். -

1851-ல் அவர் பெர்கன் என்ற நகரில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய நாடக சாலையின் நிர்வாகஸ்தராக ஆக்கப்பட்டார். ஐந்து வருஷங்கள் அங்கிருந்தார். அவர் எழுதிய பல நாடகங்கள் அந்த நாடக சாலையில் நடிக்கப்பட் டன. அவைகளில் 1856-ல் அவர் எழுதிய ''ஸோலேஹங்கில் விருந்து' என்ற நாடகம் முதன் முதலாக ஜனங்களின் மனத்தைக் கவர்ந்தது. அன்றுமுதல் அவர் புகழ் குன்றாது வளரத் தொடங்கிற்று. அதே வருஷம் அவர் கலியாணஞ் செய்துகொண்டார். ''என் கலியாணத்திற்குப் பிறகுதான் என் வாழ்க்கையிலே தீவிரமும் நம்பிக்கையும் உண்டாயிற்று" என்று அவர் பின்னர் ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

1857 - முதல் ஐந்து வருஷங்கள் இப்ஸன் க்ரிஸ்டியானியாவில் இரண்டு நாடக்சாலைகளுக்கு நிர்வாகஸ்தராக இருந்தார். அந்த நாட்களில் அவர் எழுதிய நாடகங்களைப் பற்றி அதிகஞ் சொல்லுவதற்கில்லை. இப்ஸனின் தனிப் பாணியின் முக்கிய அம்சங்கள் அவைகளில் காணப்படவில்லை. அவை அக்காலத்திய நாடகங்களைப் போலக் கனவு இலக்கியப் பாணி யில் அமைந்திருந்தன. நாடகங்களாக ஜனங்கள் அவைகளை ரஸித்தனர். நாடக்சாலைகளில் அந்தப் பத்து வருஷங்களில்  இப்ஸன் பெற்ற பயிற்சி பின்னர் பயன்பட்டது.

1862-ல் அவர் வேலை போய்விட்டது. மறுபடியும் இரண்டு வருஷம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டார். நண்பர்கள் சிலர் சிபாரிசின் பேரில் அவருக்கு சர்க்கார் உதவிச் சம்பளம் அளித்தனர். அவர் 1864 -ல் இதாலிக்குப் போனார். நார்வேயை விட்டு அப்போது வெளியேறியவர் 1891- வரையில் தம் சொந்த நாடு திரும்பவேயில்லை. அந்த இருபத்தேழு வருஷங்களையும் அவர், ஐரோப்பாவில் பல தேசங்களில், முக்கியமாக இதாலியிலும் ஜெர்மனியிலும், கழித்தார்.

1866-ல் அவருடைய பிராண்ட்' வெளிவந்தது. அவருடைய பிரசுரகர்த்தா 500 பிரதிகள் பதிப்பதாக உத்தேசித்திருந்தவன், ஏதோ அசட்டுத் தைரியமாக 1250 பிரதிகள் பிரசுரித்தான் ; அத்தனை பிரதிகளும் ஒரே மாதத்தில் செல்வானதைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான்; இரண்டாவது பதிப்பும் வெளிவந்தது ; அவ்வருஷ முடிவிற்குள் நான்கு பதிப்புக்களுக்கு அவசியம் ஏற்பட்டது. ''பிராண் ''டுடன் நார்வேயின் இலக்கியத்தில் இப்ஸனின் ஸ்தானம் நிலைத்துவிட்டது என்று சொல்லலாம். இப்ஸனையும் அவர் நண்பர் ப்ஜார்ண்ஸ்ட் ஜெர்ண்பஜார்ண்ஸனையும் நார்வேயர்கள் தங்கள் முக்கிய நாடகாசிரியர்களாகக் கருதினர்.

அதற்கப்புறம் வரிசையாக 'பியர் கிண்ட் ' (1867), ''வாலிப சங்கம்' (1869), 'சக்கரவர்த்தியும் கலிலியனும் '' {1872) ஆகியவை வெளிவந்தன. இவைகளால் நார்வேயில் இப்ஸனின் மதிப்பு ஏறிற்று; அவர் புகழ் எல்லா ஸ்காண்டிநேவியத் தேசங்களிலும் பரவிற்று; அவர் பெயர் ஜெர்மனி வரையில் எட்டியது. அவரைக் கவியாக அறிந்து அங்கீகரித்தனர் நார்வேயர்கள்.

1877- முதல் 1882-க்குள் வெளிவந்த நான்கு நாடகங்களால்தான் இப்ஸனின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவிற்று. அவைகளே இப்ஸனின் எழுத்தில் சிரேஷ்டமானவை. * மிகச் சிரேஷ்டமானது - அவர் எழுத்தின் சிகரம் இது'' என்று அந்த நான்கு நாடகங்களில் தனியாக ஒன்றைப் பற்றிச் சொல்வதற்கில்லை. அவை நான்கும் இப்ஸனுடைய நாடகங்களில் சிறந்தவை. இப்ஸனைச் சரியாகத் தெரிந்து கொள்ள விரும்பும் யாரும் அந்த நான்கையும் படித்தே ஆக வேண்டும்.

'' சமூகத்தின் தூண்கள் '' 1877-ல் வெளிவந்தது. அதை எழுத இப்ஸன் மிகவும் சிரமப்பட்டார். வழக்கமாகவே அவருக்கு எழுத்து சுலபமாக வராது. திருப்பித் திருப்பியெழுதி, பல தடவை திருத்தினால் தான் அவர் மனம் திருப்தி யடையும். தவிரவும், பழைய மாதிரியாக எழுதாமல், புது வழியைப் பின்பற்ற எண்ணிய அவர், ரொம்பவும் கஷ்டப்பட்டுத் தான் அதை எழுதி முடித்தார். கிரேக்க நாடக அஸ்திவாரம்; கட்டியது புது மாளிகை. அவர் பட்ட சிரமம் வீண் போக வில்லை. தக்க பயன் அளித்தது. புத்தகம் 6000 பிரதிகளும் ஆறு வாரத்திற்குள் விற்பனையாகிவிட்டன. இரண்டாவது பெரிய பதிப்புக்கு அவசியமேற்பட்டது. நாடக அரங்கிலும் அதன் மேன்மைகள் தயக்கமின்றி அங்கீகரிக்கப் பட்டன.

"சமூகத் தூண்கள்'' பிரசுரமாய் ஏழெட்டு மாதங்கள் அதிலிருந்து வரவேண்டிய பணத்தைக் கணக்கெடுத்துக் காப்பாற்றுவதில் போய்விட்டன. 1878 கோடையில் தான், இப்ஸன் ஆல்ப்ஸ் பிரதேசத்தில் தங்கி யிருக்கையில், அடுத்த நாடகத்தின் விதை அவர் மனத்தில் ஊன்றப்பட்டது. அக்டோபரில் அவர் புது நாடகத்துக்குக் குறிப்புக்கள் எழுத ஆரம்பித்தார். சமூக விதிகளுக்கும் இயற்கைச் சுபாவத்துக்குமுள்ள வித்தியாச வேறுபாடுகளைப் புதுநாடகத்தில் அவர் தீட்டுவதாக உத்தேசித்திருந்தார். "நமது தற்போதைய சமூகம் பிரம்மசாரி ஆத்மாக்களால் ஆக்கப்பட்டது” என்று 'சமூகத்தூண்களில் எழுதினார் இப்ஸன். இந்த வாக்கியத்தை அடிப்படையாக வைத்துப் ''புதிய சோக நாடகத்தை எழுதுவதாகத் தீர்மானித்தார்.

"ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட விதிகள் இன்று நம்மைக் கட்டுப்படுத்துகின்றன. நமது நீதிபதிகளுக்கு ஸ்திரீகளின் கட்சி தெரியாது'' என்று புது நாடகத்துக்குக் குறிப்பு எழுதினார் அவர். ''சண்டையின்றி எப்படி இருக்க முடியும்? ஆண் ஆத்மாவின் வாழ்வு வேறு ; பெண் ஆத்மாவின் வாழ்வு வேறு. ஆணும் பெண்ணும் ஒருவர் ஆத்மாவை ஒருவர் அறிவது அவசியமல்லவா ?.............. பெண்ணின் காரியங்களுக்கு உரைகல் 'அன்பு' தான். 'என் காதலால் அப்படிச் செய்தேன்' என்று அவள் சொன்னால், அது எப்படிப்பட்ட காரியமானாலும் குற்றமாகாது........ ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட சமூக விதிகளை மீறி அவளை மன்னிக்கத் தயங்குபவனிடமிருந்து அவள் ஓடிவிட வேண்டியவள் தானே!........."

பல மாதங்கள் விஷயம் அவர் மனத்திலே கிடந்து புரண்டது. அவர் அப்போது ரோமில் இருந்தார். அங்கு பல சங்கங்களில் அவர் ஸ்திரீகளுக்கு உரிமைகளும், சுயேச்சையும் கொடுப்பது பற்றிப் பிரஸ்தாபித்து விவாதத்தைக் கிளப்பி விடுவார். இப்படிப் பலவிதமாகவும் மனத்தில் விஷயம் முழுவதும் பதிந்த பிறகுதான் அவர் எழுத ஆரம்பித்தார். அவ் ருக்கு நல்ல வெயில் காலத்தில் தான் வேலை ஓடும் ; நாடகம் 1879-கோடை முடிவதற்குள் தயாராகி விட்டது. ஆனால் அது கடைசியாகப் 'பொம்மையா? மனைவியா?'' ஆவதற்குள் மூன்று தடவை அதைத் • திருப்பி எழுதிவிட்டார் இப்ஸன்.

முதல் பாடத்திலிருந்த பல குறைகள் திருந்தின. நாடகப் பாத்திரங்களே ஸ்திரீகளின் உரிமையைப் பற்றி விவாதிக்கின்றனர் முதல் பாடத்தில். வாழ்க்கையையே பிரதிபலித்த நாடகம் ஏன் விவாதங்களில் வீண் காலம் கழிக்கவேணும்? முதல் பாடத்தில் கதாநாயகன் ஹெல்மர் சரியாக உருவகமாகவில்லை. எல்லாக் கணவர்களும் ''நான் தானோ ஹெல்மர் ?'' என்று சந்தேகங் கொள்ளும்படி கடைசிப் பாடத்தில் ஹெல்மர் உருவகமாகிவிட்டான். .

செப்டம்பர் முடிவதற்குள் நாடகம் தயாராகி விட்டது. கிறிஸ்துமஸுக்கு மூன்று வாரங்களிருக்கையில் புத்தகம் பிர சுரமாயிற்று. எண்ணாயிரம் பிரதிகள்! ஒரு மாதமாவதற்குள் இரண்டாவது பதிப்பும் விற்பனையாகிவிட்டது. கிறிஸ்துமஸ் தாண்டு முன்னர் அது 'நோரா '' என்ற பெயருடன் ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் வரிசை யாக, அது, பின்லாந்து (1880), இங்கிலாந்து (1882), போலந்து (1882), ருஷியா (1883), இதாலி (1884) முதலிய தேசத்துப் பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. வாசகர்களாலும் ரஸிகர்களாலும் குதூகலத்துடன் வரவேற்கப்பட்டது.

நாடக அரங்கிலும் அதன் பெருமைக்குக் குறைவில்லை. 1879-ல் அது கோபன்ஹாகனில் நடிக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் கோபன்ஹாகனிலும், ஹெல்ஸிங்போரிலும், ப்ளென்ஸ் போர்க்கிலும், மூனிச்சிலும் அது 1880-ல் நடிக்கப் பட்டது. மூனிச்சில் அது ஜெர்மன் பாஷையில் நடிக்கப்பட்டபோது, இப்ஸனே, தம் நாடகத்தைப் பார்க்க அங்கு பிரசன்னமாகி யிருந்தார். 1890-க்குள் அது எங்கெங்கு எந்தெந்தப் பாஷைகளில் நடித்துக் காட்டப்பட்டது என்று கணக்கெடுப்பது சாத்தியமில்லை. அதற்கப்புறமும் இன்று வரையிலும் அரங்கில் அதன் பெருமை குறையவில்லை. ஏன், இந்த 1938-ல் கூட அது, தார்ண்டன் நீவன் வில்டர் என்ற அமெரிக்க இள மேதையால் ஆங்கிலத்தில் தழுவி எழுதப்பட்டு, நியூயார்க்கில் நடிக்கப்பட்டது.

நோராவின் பிரச்னையைப் பல தேசத்தில் பல பாஷைகளில் பலர் விவாதித்தனர். தற்கால சமூகத்தின் ஸ்திரீ புருஷ சம்பந்த விதிகளை அலசி அவை தவறு என்று முடிவு காட்டிய ''பொம்மையா, மனைவியா?''வின் ஆசிரியரின் தைரியத்தைப் பற்றிப் பலர் பலவிதமாகப் பேசினர். எவ்வ ளவுதான் 'மரப்பாச்சி'யாக இருந்தாலும் பொய்க் கையெழுத்திடுவது குற்றமென்று நோரா அறியாமலிருந்தது சாத்தியமான விஷயமா? அந்த மரப்பாச்சி' திடீரென்று கடைசிக் காட் சியில் எப்படிப் 'பெண்'ணாக மாறினாள்? நோரா எவ்வளவு தான் உரிமைகள் வேண்டினாலும் அவள் தன் குழந்தைகளை அப்படித் துறக்கலாமா? இவ்வாறெல்லாம் ஜனங்கள் விவாதித்தனர். நோரா ஒரு நாடகப் பாத்திர மென்பதை மறந்து, அவளை உயிருள்ள பெண்ணாக மதித்து, அவர்கள் இப்படி விவாதித்ததே இப்ஸனின் புதுப் பாணியின் வெற்றிக்கும் மேன்மைக்கும் போதுமான அத்தாட்சி..

முக்கியமாக ஜெர்மனியில் நாடகத்தின் முடிவு பலருக்குப் பிடிக்கவில்லை. நோராவாக நடிக்கவிருந்த ப்ரெள ரோபே என்பவள், ''முடிவை மாற்றாவிட்டால் நடிக்க மாட் டேன்'' என்றாள். ''நான் நோரா மாதிரி ஒருநாளும் என் குழந்தைகளை அப்படி விட்டுப் போகமாட்டேன்!'' என்றாள் அவள். மொழிபெயர்ப்பாளன் கையில் அதை விட்டுவிட இஷ்டமின்றி, வேறு வழி காணாமல், இப்ஸன், தாமே, வெறுப்புடன், முடிவை மாற்றி எழுதிக் கொடுத்தார். நோரா வீட்டைவிட்டுக் கிளம்பும்போது அவள் கண்ணில் குழந்தைகள் படுகின்றன; அவள் குழந்தைகளை விட்டுப் போகத் தைரியமின்றி ஹெல்மருடன் தங்கிவிடுகிறாள். இதுதான் .மாற்றப்பட்ட புது முடிவு. ஆனால் இரண்டொரு முறை இப்புது முடிவுடன் நாடகத்தை நடித்துப் பார்த்த பிறகு ரஸிகர்களுக்குப் பழைய முடிவுதான் சரியானது என்ற உணர்ச்சி வந்தது. ப்ரௌரோபேயும், பழைய முடிவையே அங்கீகரித்து, அதில் நடித்துப் பெரும் புகழ் பெற்றாள்.

"பொம்மையா, மனைவியா?''வுக்குப் பிறகு வெளிவந்த இரண்டு நாடகங்களும் அதே ரீதியைச் சேர்ந்தவை. அவைகளையும் சமூக நாடகங்கள் என்று சொல்லலாம். ''பழமை.கள் (Ghosts)'' (1851), "ஜனங்களின் விரோதி' (1882) - இவ்விரண்டிலும் சமூக சம்பிரதாயங்களின் ஊழல்கள் கலாசாதனமாகத் திகழ்கின்றன. இவைகளால் எழுப்பப்பட்ட பிரச்னைகளும் ஐரோப்பாவின் உள்ளத்தைக் கவர்ந்தன. இப்ஸனையும் அவர் நாடகங்களையும் பற்றிப் பேசாதவ ரில்லை, எழுதாத இலக்கியாசிரியர்கள் இல்லை.

அதற்கப்புறம் அவர் எழுதிய நாடகங்கள் பலதரப் பட்டவை. அவருடைய மேதையை நன்கு விளக்குகின்றன எனினும், அவைகளில் சமூக நாடகங்களில் உள்ள - தீவிரம் இல்லை, தீர்மானமும் இல்லை. எனினும், அவைகளில் ஒவ்வொன்றையும் தனித் தனியே இப்ஸனின் முக்கிய நாடகம் என்று கருதுபவர்கள் இருக்கின்றனர். காரணமின்றியே அவர்கள் அப்படி எண்ணுகிறார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ''காட்டு வாத்து'' (1884), ''ராஸ்மர்ஷோம்” (1886), 'சமுத்திரத்துச் சீமாட்டி'' (1888), ''ஹெட்டா கேப்ளர்'' (1890) - இவைகளிலும் அவருடைய திறமை நன்கு பிரகாசிக்கிறது.

அவர் நார்வேயை விட்டுக் கிளம்பி இருபத்தேழு வருஷங்களாகிவிட்டன. எனினும் நார்வேயைப் பற்றிய ஞாபகங் கள், எண்ணங்கள் அவர் மனத்தை விட் டகலவில்லை. அவருடைய முக்கிய நாடகங்களெல்லாம் நார்வேயைப் பற்றித்தான். அவர் 1891-ல் சொந்த நாடு திரும்பினார். அப்போது அவரைக் குதூகலத்துடன் வரவேற்றனர் நார்வேயர்கள். தம் முடைய பாக்கி நாட்களை அவர் க்ரிஸ்டியானியாவிலேயே கழித்தார்.

1892-ல் 'கொத்து மேஸ்திரி'', 1894-ல் ''சின்ன இயால்ப்'', 1895-ல் ''ஜான் காப்ரியேல் போர்க்மன்'', 1900-ல் ''இறந்த நாங்கள் விழிக்கும்போது" என்ற நாடகங்கள் வெளிவந்தன. இவை நான்குந்தான் அவருடைய கடைசி நாடகங்கள். சமூக நாடகங்களில் சமூக விதிகளை அலசியது போல இந் நான்கிலும் இப்ஸன் மனித குலத்தைத் தனி மனிதர்களாகப் பிரித்து அலசுகிறார். அவைகளையும் ஆர்வத்துடன் வரவேற்றனர் வாசகர்கள். முதற் பதிப்பு ஒன்றி லாவது பதினாயிரம் பிரதிகளுக்குக் குறைந்து பிரசுரமாக வில்லை. "ஜான் காப்ரியேல் போர்க்ம'னில் பதினாறாயிரம் பிரதிகள் ஒரு மாதத்தில் விற்பனையாயின. இலக்கிய உலகில் அன்றுவரை அவ்வளவு பெரிய முதற் பதிப்பு வெளி வந்ததில்லை.

1898-ல் அவருடைய எழுபதாவது ஆண்டு நிறைவை ஐரோப்பா முழுவதும் கொண்டாடிற்று. இருபதாவது வயதில் கையில் பணமின்றி, உண்ண உணவின்றி, தங்க ! இடமின்றி, சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பாரின்றித் திரிந்த இப்ஸன், அதே க்ரிஸ்டியானியாவில், உலகம் புகழும் மேதை யென அங்கீகரிக்கப்பட்டு, நார்வேயின் கோடீசுவரர்களில் ஒருவராக, 1906-ல், மே 13-ந்தேதி, அவருடைய எழுபத்தியெட்டாவது வயதில் இறந்தார்.

"நான் எழுத்தாளனாக எழுதியதெல்லாம் ஜீவாதாரமான ஒரு உணர்ச்சியையோ சம்பவத்தையோ அடிப்படையாகக் கொண்டவை. எழுதக்கூடிய ஒரு விஷயம் அகப்பட்டது என்பதற்காக, எனக்கு நம்பிக்கையோ, அர்த்தமோ, அந்தமோ இல்லாத விஷயத்தைப் பற்றி நான் எழுதியதே யில்லை'' என்றார் இப்ஸன் ஒரு சமயத்தில். அது உண்மை . அவர் வார்த்தைகளிலேயே அவர் மேன்மையின் காரணத்தையும் சொல்லி முடித்துவிடலாம். ''நான் நாடகங்கள் எழுத முயலவில்லை ; வாழ்க்கையையே என் எழுத்து மூலம் மறு படியும் சிருஷ்டிக்க முயன்றேன். நான் நாடகப் பாத்திரங்களைச் சிருஷ்டிக்கவில்லை; மனிதனையும் மனித ஹிருதயத் தையும் பற்றி எழுதினேன் ; அவ்வளவுதான்.''

* . . * இந்த நாடகம் படிப்பதற்கேயன்றி, நடிப்பதற்கன்று.

தமிழ் நாடக இலக்கியத்துக்கு ஆதர்சமாக, வழிகாட்டியாக, ஒரு நாடகம் வேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்து, அதற்குத் தக்க ஒரு நாடகத்தைச் சொந்தமாகச் சிருஷ்டிக்கச் சக்தியின்றி, இதை மொழி பெயர்த்திருக்கிறேன். -

ஆனால், இப்ஸனின் நாடகப் பாணியை, ஆசிரியர்கள் மட்டுமின்றி, பொது ஜனங்களும் ரஸிக்கலாம், தமிழர்கள் ரஸிப்பார்கள் என்றே நம்புகிறேன்,

க. நா. சுப்பிரமணியம்.

பாத்திரங்கள்

தார்வால்ட் ஹெல்மர்(Torvala Helmer) நோரா -
அவன் மனைவி (Nora )
டாக்டர் ராங்க் - (Doctor Rank)
மிஸிஸ் லிண்டே (Mrs. Linde)
நில்ஸ் க்ராக்ஸ்டாட் (Nils Krogstad)
ஹெல்மருடைய மூன்று சிறு குழந்தைகள் :
ஆன் - அவர்களுடைய தாதி
(Anne ) வேலைக்காரி கூலியாள்

இடம் : ஹெல்மருடைய வீடு -பொம்மையா; மனைவியா?

இத்தனை

அங்கம் 1.



(இடம் - பணத்தை வாரிக் கொட்டியிறைக்காமல் செளக்கியமாகவும், ரஸனையுடனும் அலங்கரிக்கப் பெற்ற ஓர் அறை. பின்னால் வலது புறம் இருக்கும் கதவு வெளிக் கூடத்துக்கும், இடது புறம் இருக்கும் கதவு.

ஹெல்மரின் அறைக்கும் போகும் வழிகள். இரண்டு கதவுகளுக்குமிடையே ஒரு பியானோ இருக்கிறது. இடது புறச் சுவரில் நடு மத்தியில் ஒரு கதவும் அதற்கடுத்தாற்போல் ஒரு ஜன்னலும் இருக்கின்றன. அந்த ஜன்னலுக் கருகில் ஒரு வட்ட மேஜையும், நாற்காலிகளும், ஒரு சிறிய ஸோபாவும் இருக்கின்றன. வலது புறச் சுவரின் கோடியில் இன்னொரு கதவு இருக்கிறது. அதே பக்கத்தில் காலடி விளக்குகளும் கருகில் ஒரு கணப்பு, ஈஸிசேர்கள், ஒரு ராக்கிங் (ஆடுகிற) சேர் இவை இருக்கின்றன. கணப்புக்கும் கதவுக்கும் இடையே ஒரு சிறு மேஜை இருக்கிறது. சுவரில் பலி செதுக்கப்பட்ட சித்திரங்கள். ஒரு கண்ணாடி அலமாரியில் பல சிறு சாமான்களும் பீங்கான்களும் இருக்கின்றன. ஒரு சிறிய புத்தக அலமாரியில் நல்ல கட்டிடங் கொண்ட பல புத்தகங்கள் இருக்கின்றன. தரையில் கம்பளங்கள் விரிக்கப் பட்டுள்ளன; கணப்பு எரிந்து கொண்டிருக்கிறது. மாரிக் காலம்,வெளிக் கூடத்தில் ஒரு மணி " யடிக்கிறது ; சற்று நேரத்துக்

கெல்லாம் கதவு திறப்பது காதில் விழுகிறது. நோரா , தனக்குள்ளே பாடிக்கொண்டு, உற்சாகத்துடன் வருகிறாள். அவள், வெளியே போகும் பொழுது அணியும் ஆடைகளுடன் இருக்கிறாள். அவள் கையில் பல பொட்டலங்கள் இருக். கின்றன; அவைகளை வலது புற மிருக்கும் மேஜைமேல் வைக்கிறாள். தான் உள்ளே வந்ததும் அவள் வெளிக் கதவைத் திறந்தபடியே வைத்துவிட்டு வருகிறாள். திறந்த கதவு வழியாகக் கூலியாள் ஒருவன் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தையும் ஒரு கூடையையும் வேலைக்காரியிடம் கொடுப் பது தெரிகிறது.

நோரா - கிறிஸ்துமஸ் மரத்தை ஜாக்கிரதையாக மறைத்து வை, ஹெலன். அதைத் தயார் செய்யும் வரையில், இன்று சாயங்காலம் வரையிலாவது, அது குழந்தைகள் கண்ணில் படாம லிருக்கவேணும். (தன் மணி பர்ஸைக் கையில் எடுத்துக்கொண்டு, கூலியாளை நோக்கி) எவ்வளவு?

கூலியாள்- ஆறு பென்ஸ்.

நோரா- இந்தா, இதோ ஒரு ஷில்லிங். வேண்டாம், சில்ல-றையை நீயே வைத்துக்கொள்.

(கூலியாள் தன் வந்தனத்தைத் தெரிவித்துவிட்டு வெளியேறு கிறான். நோரா கதவை மூடுகிறாள். தன் தொப்பியையும் "கோட்டையும் கழற்றும்போது தனக்குள்ளேயே மெதுவாகச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். தன் கைப் பையிலிருந்து ஒரு பொட்டலம் மிட்டாயை எடுத்து ஒன்றிரண்டு சாப்பிடுகிறாள். அப்புறம் தன் கணவன் அறைப் பக்கம் போய் ஜாக்கிரதையாகக் கதவண்டை நின்று உற்றுக் கேட்கிறாள்.):

நோரா- ஆம், உள்ளேதான் இருக்கிறார்.

(பாடிக்கொண்டே வலதுபுறம் மேஜையண்டை போகிறாள்.)

ஹெல்மர் - (தன் அறையிலிருந்தபடியே என்னுடைய குயில் தானா அங்கே ஆலாபனம் பண்ணிக்கொண்டிருப்பது ?

நோரா- (சுறுசுறுப்பாகச் சில பொட்டலங்களைப் பிரித்துக் * கொண்டே ) ஆமாம்!

ஹெல்மர்-என்னுடைய சின்ன அணில்தானா அங்கே அப்படிக் குறுக்கும் நெடுக்கும் ஒடுவது? நோரா- ஆம். ஹெல்மர்- எப்போ என் அணில் குஞ்சு வீட்டுக்கு வந்துது

நோரா- இப்போதான். (மிட்டாய்ப் பொட்டலத்தைப் பையில் போட்டுப் பத்திரப்படுத்திவிட்டு, தன் வாயை யும் துடைத்துக்கொள்ளுகிறாள்.) இங்கே வாயேன், தார்வால்ட், நான் என்ன வாங்கி வந்திருக்கிறேன், பார்.

ஹெல்மர் - என்னை இப்போ தொந்தரவு பண்ணாதே. (சற்று நேரங் கழித்து, கையில் பேனாவுடன் கதவைத் திறந்து கொண்டு, உள்ளே எட்டிப் பார்க்கிறான்.) வாங்கின தாவா சொன்னாய்? இத்தனையுமா? என் ஊதாரிக் குட்டி மறுபடியுங் கையிலிருந்த பணம் எல்லாவற்றையும் ஆழும் பாழு மாக்கிவிட்டதா ?

நோரா- ஆமாம். ஆனால், தர்வால்ட், நாம் இந்தத் தடவை நம் மிஷ்டப்படி செலவழிக்கலாமல்லவா? நாம் செட்டாக இருக்கவேண்டிய அவசியமில்லாத முதல் கிறிஸ்துமஸ்

இதுதானே?

ஹெல்மர் - இருந்தாலும் பணத்தை வாரியிறைத்து வீணாக்க வேண்டிய அவசியம் என்ன?

நோரா- இனிமேல் நாம் கொஞ்சந் தாராளமாக இருக்கலாம் மில்லையா? ரொம்பத் தாராளமாக வேண்டாம் ; கொஞ்சங் தாராளமாக இருக்கலாம் இல்லையா? உனக்குத்தான்பெரிய சம்பளம் வரப்போகிறது : ரொம்ப ரொம்பப் பணம் சம்பாதிக்கப் போகிறாயே! ஹெல்மர்- ஆம் : அது புது வருஷத்தில் தானே. அதுவும் 
மூன்று மாதங் கழித்துத்தானே சம்பளம் வரும்.

நோரா - பூ! அதனா லென்ன? அதுவரையில் செலவுக்கு ஏதாவது கடன் வாங்கிக்கொண்டால் போச்சு.

ஹெல்மர்- நோரா! (அவளருகில் போய் விளையாட்டாக அவள் காதைப் பிடிக்கிறான்.) இன்னமும் பழைய படியே மூளையில்லாதவளாகவே தான் இருக்கிறாயா நீ ? யோசித்துப் பார். இன்று நான் ஐம்பது பவுன் கடன் வாங்கி விடுகிறேன் ; கிறிஸ்துமஸ் வாரத்தில் நீ அதையெல்லாம் செலவழித்துவிடுகிறாய்; புது வருஷத்துக்கு முதல் நாள் என் தலையில் ஒரு ஓடு விழுந்து என் உயிர்
போய்விட்டால் -

நோரா - (அவன் வாயைத் தன் கையால் பொத்திக்கொண்டு)
ஓ! அந்த மாதிரிப் பயங்கரமாக ஒன்றுஞ் சொல்லாதே !

ஹெல்மர்- அப்படி நடந்தது என்று வைத்துக்கொள். அப்போ ?

நோரா - அப்படி நடந்துவிட்டால், நான் கடனாளியா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படமாட்டேன் என்றே தான் - நினைக்கிறேன்.

ஹெல்மர் - அது சரி! ஆனால் கடன் கொடுத்தவர்கள் ?

நோரா- யார்? அவர்களைப் பற்றி நான் என்னத்துக்குக் கவலைப்படணும்? அவர்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாதே!

ஹெல்மர்- பொம்மனாட்டிப் பேச்சுத்தான் அது! ஆனால், நோரா, நிஜமாகவே நான் அதைப் பற்றி என்ன நினைக்கிறேன் தெரியுமோல்லியோ உனக்கு? கடன் வாங்கக் கூடாது. என்றும் கடன் படவே கூடாது. கடனாளியின் வீட்டு வாழ்விலே சுயேச்சை யில்லை, சுகம் இல்லை, அழகில்லை. இதுவரையில் இருவரும் நேர் வழியில் தைரிய 'மாக நடந்தாய்விட்டது : இன்னும் கொஞ்ச நாட்கள் தானே கஷ்டப்பட வேண்டியிருக்கும் : இந்த நாட்களில்லும் நாம் நேர் வழியிலேயே நடப்போம்.

நோரா - (கணப்புப் பக்கம் நகர்ந்துகொண்டு) உன்னிஷ்டம், தார்வால்ட்.

ஹெல்மர்- (அவளைப் பின்தொடர்ந்து கொண்டே) வா, வா. என் சின்னக் குயில் அதன் இறக்கைகளை ஒடித்துக் - கொள்ளக் கூடாது. இது என்ன இது? என் அணில் குஞ்சுக்குக் கோபம் வந்துவிட்டதா ? (தன் பர்ஸை எடுத்துக் கொண்டு) கோரா, இதில் என்ன வைத்திருக்கிறேன், தெரியுமா?

நோரா-(அவசரமாகத் திரும்பி) பணம்!

ஹெல்மர்- இந்தா, (அவளிடம் கொஞ்சம் பணம் கொடுக்கிறான்) கிறிஸ்துமஸ் காலத்தில் வீட்டுச் செலவுக்கு நிறையப் பணம் வேணுமென்று எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா நீ?

நோரா- (பணத்தை எண்ணிக்கொண்டு) பத்து ஷில்லிங்-ஒரு 1 பவுன் - இரண்டு - இரண்டு பவுன்! வந்தனம், ரொம்ப " வந்தனம், தார்வால்ட்! இது எனக்கு ரொம்ப நாளைக்கு 

ஹெல்மர் --வரத்தான் வேணும். .

நோரா-வரும், வரும். இங்கு வாயேன், தார்வால்ட். நான் என்னென்ன வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன் என்று',காட்டுகிறேன். எல்லாம் கொள்ளை மலிவு. இதோ பார், ஐவருக்கு ஒரு புது ஸட்டும் ஒரு கத்தியும்; பாபுக்கு ஒரு குதிரையும் ஊதலும்; எம்மிக்கு ஒரு பொம்மையும், பொம்மைக்கு ஒரு படுக்கையும் - இந்த இரண்டும் நன் றாகத்தான் இல்லை. ஆனால் அவள் எல்லாத்தையும் அதி சீக்கிரம் பிச்சு எறிந்து விடுவாள்! இதோ வேலைக்காரிக் குச் சீட்டித் துணியும், கைக்குட்டைகளும் : ஆன் கிழவிக்கு நல்லதாக ஏதாவது கொடுக்கணும்.

ஹெல்மர்- இந்தப் பொட்டலத்தில் என்ன இருக்கிறது?

நோரா - (இரைந்து) வேண்டாம், வேண்டாம். அதைப் பிரிக்காதே தார்வால்ட். இன்று சாயங்காலம் வரையில் நீ  அதைப் பார்க்கக் கூடாது.

ஹெல்மர்- அப்போ சரி, ஆனால் என்னிடம் சொல்லு, ஊதாரிக் குட்டி, உனக்கு என்ன வேணும் ?

நோரா -எனக்கா ? ஓ! எனக்கு ஒண்ணும் வேண்டாம்.

ஹெல்மர் - சரி, ஆனால் நீயும் ஏதாவது வாங்கிக்கொள்ள வேணு மோல்லியோ? உனக்குப் பிரியமானதைச் சொல்லு-அதிக விலையில்லாததாக-நான்...

நோரா வேண்டாம். எனக்கு என்ன வேணும்? ஒண்ணும் வேண்டாம். ஆனால், தார்வால்ட்...

ஹெல்மர்- என்ன ?

நோரா - - (அவன் சட்டைப் பொத்தான்களை நிமிட்டிக் கொண்டு, அவனை நேரே நிமிர்ந்து பார்க்காமல்) எனக்கும் ஏதாவது கொடுக்கணு மென்று உனக்கு உண்மையிலேயே மனமிருந்தால், நீ.. நீ.. நீ....

ஹெல்மர்- என்னதான் வேணும், சொல்லேன்.

நோரா-(வேகமாக) நீ எனக்குப் பணமாகக் கொடுத்துவிடு, தார்வால்ட், எவ்வளவு உன்னால் இப்போ கொடுக்க. முடியுமோ அவ்வளவும் கொடுத்துவிடு. அப்புறம் நான் என்னிக்காவது எனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளுகிறேன்.

ஹெல்மர்- ஆனால், நோரா .........

நோரா - ஆட்சேபம் சொல்லாதே, தார்வால்ட். கொடு. தயவுசெய்து பணமாகவே கொடுத்துவிடு. அதை நான் அழகான கில்ட் காகிதத்தில் சுற்றி கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடுகிறேன். வேடிக்கையாக இருக்கும்.

ஹெல்மர்- எப்போ பார்த்தாலும் பணத்தை விரயம் பண்ணிக் கொண்டிருப்பவர்களுடைய பெயர் தெரியுமோ உனக்கு?

நோரா-ஊதாரிகள் தெரியும். ஆனால் நீ சொல்லுகிற படியே செய்யலாம், தார்வால்ட். எனக்கு எது ரொம்பப் பிடித்த வஸ்து என்று தீர்மானித்து வாங்க எனக்குச் சாவகாசமும் இருக்கும். அது சரியான யுக்திதான்,  இல்லையா? 

ஹெல்மர்- (சிரித்துக்கொண்டு) நிஜமாகவே நல்ல யுக்திதான் - அதாவது நான் கொடுக்கும் பணத்தை நீ ஜாக்கிரதையாக வைத்திருந்து உனக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டால் சரிதான். ஆனால் நீ அதெல் லாத்தையும் வீட்டுச் செலவுக்கும், வேண்டாத சாமான் கள் வாங்கவும் செலவிட்டுவிட்டு, என்னை மறுபடியும் பணம் கேட்பாய், அவ்வளவுதான்.

நோரா-ஆனால், தார்வால்ட்...

ஹெல்மர்--இதை உன்னால் மறுக்க முடியாது, என் அருமை

நோரா. (அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு) இது ஒரு அருமையான சிறிய ஊதாரிக் குட்டி. என்ன பணந்தான் செலவழிக்கிறாள் இவள்! இவ்வளவு சின்னவள் இப்படி அள்ளிச் செலவழிக்கிறாள் என்று நம்புவது கூடக் கஷ்டம்.

நோரா - அப்படி யெல்லாம் சொல்லாதே. நான் என்னால் முடிந்தவரையில் செலவை மட்டுப்படுத்திக்கொண்டு செட்டாக மீதப்படுத்தி வைக்கத்தான் பார்க்கிறேன்.

ஹெல்மர் - (சிரித்துக்கொண்டு) அதுவும் நிஜந்தான். உன்னால் கூடியவரையில் சேர்த்து வைக்கத்தான் பார்க்கிறாய். ஆனால் உன்னால் ஒன்றும் மிச்சப்படுத்தவேமுடியவில்லையே!

நோரா - (அமைதியாயும் சந்தோஷமாயும் புன்சிரிப்புச் சிரித்து) குயில்களும் அணில்களுமாகிய எங்களுக்கு எத்தனை செலவுகள் இருக்கின்றன என்று உனக்குத் தெரியாது, தார்வால்ட். *

ஹெல்மர்- நீ விசித்திரமான சின்னஞ் சிறுசா யிருக்கிறாய், .. நோரா. நீயும் உங்கப்பாவைப் போலத்தான். என்னிடம் மிருந்து பணம் பிடுங்க நீ புதிது புதிதாக எவ்வளவு வழிகள் கண்டுபிடிக்கிறாய்? உன் கையில் பணம் வந்ததோல்லியோ, அது உடனே மாயமாகக் கரைந்து விடுகிறது. அது எங்கே போச்சு என்று எனக்கே தெரியவில்லை. "ஊதாரித்தனம் உன் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது : நிஜமாகவே அதெல்லாம் தந்தையிடம் மிருந்து மகளுக்கு என்று தலைமுறை தலைமுறையாக வருவதுதான்.

நோரா - அப்பாவின் பாக்கிக் குணங்களையும் நான் பெற்றிருக்கக் கூடாதா என்று நான் எண்ணி ஆசைப்படு கிறேன்.

ஹெல்மர்- என் இன்பக் குயிலே ! நீ இப்போது இருக்கிறபடியே இருக்கவேணுமென்பதுதான் என் விருப்பம். ஆனால் உனக்குத் தெரியுமோ, உன்னைப் பார்த்தால் நீ ஏதோ - அதை எப்படிச் சொல்வது? - நீ என்னமோ சந்தோஷமில்லாமல் இருக்கிறது போல் காண்கிறாயே!

நோரா - நிஜமாகவா?

ஹெல்மர்- நிஜமாகத்தான். இதோ பார், என்னை நேரே நிமிர்ந்து பார்.

நோரா- (நிமிர்ந்து அவனைப் பார்த்துக்கொண்டு) என்ன ?

ஹெல்மர் - (அவளைப் பார்த்து விரலை யாட்டிக்கொண்டே)  - இன்று கடைத் தெருவில் மிட்டாய்க்காரி (நீ) என் விதி * களை மீறி நடக்கவில்லையா?

நோரா - இல்லையே! உனக்கேன் அப்படித் தோணுகிறது.

ஹெல்மர் - இன்று நீ மிட்டாய்க் கடைக்குப் போகவில்லையா? நோரா- இல்லவே இல்லை, தார்வால்ட்...

ஹெல்மர் - நீ மிட்டாய் வாங்கித் தின்னவில்லை?

நோரா - இல்லை, நிச்சயமாக இல்லை.

ஹெல்மர் - ஒன்றிரண்டு மிட்டாய்கூடக் கடித்துப் பார்க்க * வில்லையா?

நோரா - இல்லை, தார்வால்ட்! நிஜமா சொல்லுகிறேன்; " இல்லவே இல்லை.

ஹெல்மர்- அப்போ சரி. நானும் விளையாட்டுக்குத்தான் -டி சொன்னேன்.

நோரா - (வலது புறம் மேஜையண்டை போய்க்கொண்டு) - நீ சொல்லுவதற்கு மாறாக நான் நினைப்பேனா? (பமா ,

ஹெல்மர்-அப்படி நடக்க மாட்டா யென்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்; தவிரவும் இனிமேல் வில்லை சாப்பிடுவதில்லை என்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறாயே ! (அவள் அருகில் போய்) உன் கிறிஸ்துமஸ் மரத்துக்கு விளக்கேற்றும் போது எல்லாம் தானே தெரிந்து விடும்.

நோரா- டாக்டர் ராங்கை அழைக்க உனக்கு ஞாபகம் இருந்ததோ ?

ஹெல்மர் - இல்லை, ஆனால் அழைக்க வேணுமென்று அவசியமில்லை ; வழக்கப்படி அவர் நம்மோடு சாப்பிட வருவார். எதற்கும் இன்று காலை வரும்போது சொல்லி விடுகி றேன். நல்ல மதுவாகக் கொண்டுவரச் சொல்லியிருக்கி றேன். நான் இன்று இரவை எவ்வளவு ஆவலுடன்எதிர்பார்க்கிறேன் என்று உனக்குத் தெரியாது, நோரா!

நோரா - எனக்கு மட்டும் ஆவலில்லையோ? குழந்தைகள் எவ்வளவு சந்தோஷப்படும், தார்வால்ட்?

ஹெல்மர்- நிரந்தரமான வேலையும் தக்க சம்பளமும் இருக்கிறது என்ற நிச்சயத்தைப் போல் வேறு பெருமை உலகில் இல்லை. அதை எண்ணிப் பார்ப்பதற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! இல்லையா?

நோரா- நிஜந்தான்.

ஹெல்மர்-- போன வருஷ கிறிஸ்துமஸ் ஞாபகமிருக்கிறதா உனக்கு? ஒவ்வொரு நாளும் இரவு பனிரண்டு மணி வரையில் கதவைச் சாத்திக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் மூணு வாரம் கிறிஸ்துமஸ் மரத்துக்கு அலங் காரங்கள் தயார் செய்து கொண்டிருந்தா யல்லவா? அந்த மூன்று வாரங்களிலும் எனக்குப் பொழுதே போக வில்லை .

நோரா - எனக்கு அப்படியில்லையே! ஹெல்மர்-(சிரித்துக்கொண்டே) அவ்வளவு சிரமப்பட்டுக்கண்ட பயன் என்ன, நோரா?

நோரா- நீ அதைப் பற்றி இன்னமும் என்னைப் பரிகாசஞ்செய்து கொண்டிருக்கக் கூடாது. பூனை உள்ளே போய் நான் கிறிஸ்துமஸ் மரத்துக்குச் செய்திருந்த அலங்காரங்களை யெல்லாம் அலங்கோலம் பண்ணிவிடும் என்று கண்டேனா? அதை நான் எப்படித் தடுத்திருக்கமுடியும்?

ஹெல்மர் - வாஸ்தவந்தான்; உன்னால் அதைத் தடுத்திருக்க முடியாது. எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வேணுமென்ற உன் எண்ணம் நல்லெண்ணம்தான் ; இல்லை யென்று சொல்ல முடியுமா? ஆனால் நம் கஷ்டகால மெல்லாம் நீங்கி விட்டது என்பது சந்தோஷப்படவேண்டிய விஷயமில்லையா?

நோரா- நிஜந்தான் : அதை நினைத்தால் ஆச்சரியமாகத் - தான் இருக்கிறது.

ஹெல்மர்- இந்தத் தடவை இரவெல்லாம் நான் தனியாக உட்கார்ந்து கொண்டு கஷ்டப்பட வேண்டாம். நீயும் உன் கண்ணைக் கெடுத்துக்கொண்டு, உன் அழகிய சிறு கைகள் வலிக்க.........

நோரா-(கையைக் கொட்டிக்கொண்டு) வேண்டியதில்லை, தார்வால்ட் : நான் இனிமேல் அது மாதிரி யெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. நீ அதைச் சொல்வதைக் கேட்கச் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருக் கிறது. (அவன் கையைப் பிடித்துக்கொண்டு) நாம் எல்லாவற்றையும் எப்படி ஏற்பாடு செய்ய வேணும் என்று யோசித்திருக்கிறேன் என்பதை இப்போசொல்லுகிறேன், கேள். கிறிஸ்துமஸ் ஆனதும்- (கூடத் தில் மணி யடிக்கிறது.) கூடத்து மணி யடிக்கிறது. (அறையை ஒழுங்குபடுத்திக் கொண்டே) வாசலில் யாரோ வந்திருக்கிறார்கள். என்ன தொந்தரவு!

ஹெல்மர் --- யாராவது என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்தால் நான் வீட்டிலில்லை' என்பது ஞாபகமிருக்கட்டும். வேலைக்காரி - (நிலைப்படியில் நின்று கொண்டு) அம்மா, உங்களைப் பார்க்க ஒரு ஸ்திரீ வந்திருக்கிறாள் : யாரோ புதுசாக இருக்கிறது.

நோரா-உள்ளே வரச் சொல்லு. வேலைக்காரி- (ஹெல்மரிடம்) அதே சமயம் டாக்டரும் வந்தார், ஸார்.

ஹெல்மர்-நேரே என் அறைக்குள் போனாரா? வேலைக்காரி- ஆம். (ஹெல்மர் தன் அறைக்குள் போகிறான். வேலைக்காரி, பிரயாண ஆடைகள் அணிந்திருக்கும் மிஸிஸ் லிண்டேயை உள்ளே அழைத்துக்கொண்டு வந்து விட்டுவிட்டு, கதவைச் சாத்துகிறாள்.)

மிஸிஸ் லிண்டே -(துக்ககரமான மெல்லிய குரலில்) செளக்யமா, நோரா ? நோரா- (சந்தேகமாய்) சௌக்யமா ? லிண்டே-- என்னைத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

நோரா- இல்லை : எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக..........இருந்தாலும் தெரிஞ்சாப்போலேதான் இருக்கு! (திடீ ரென்று) ஆமாம், கிறிஸ்டினா ! நிஜமாகவே கிறிஸ்டின் தானே நீ? லிண்டே - ஆம் : நான் தான்.

நோரா- கிறிஸ்டின்! உன்னை நான் முதலில் தெரிந்துகொள்ளாதிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் எப்படித் தெரிந்துகொள்ள முடியும் ? (மிருதுவான இரக்கமுள்ள குரலில்) அடையாளமே தெரியாமல் நீ எவ்வளவு மாறியிருக்கிறாய், கிறிஸ்டின் ?

லிண்டே- நான் மாறித்தான் இருக்கிறேன். ஒன்பது, " பத்து வருஷங்களில்..........

நோரா- நாம் சந்தித்து அத்தனை வருஷங்கள் ஆய்விட்டதா ? ஆகிவிட்டது போலத்தான் இருக்கிறது. சென்ற எட்டு வருஷங்கள் எனக்கு ரொம்ப இன்பமாகக் கழிந்துவிட்டன,  கிறிஸ்டின். நீயும் இப்போது நகரத்துக்கு வந்து விட்டாயா? - இவ்வளவு தூரம் இந்தக் கடுங் குளிரில் துணிந்து வந்திருக்கிறாயே !

விண்டே- இன்று காலைதான் கப்பலில் வந்தேன். நோரா - கிறிஸ்துமஸ் சமயம் பட்டணத்திலிருந்து ஆனந்திக்கத்தானே ? அதுதான் சரி. எனக்கு எவ்வளவு சந். தோஷமாக இருக்கிறது தெரியுமோ? நாம் இரண்டு பேருமாக உல்லாசமாக இருக்கலாம். உன் சட்டை யெல்லாம் கழட்டிவிடேன். ரொம்பக் குளிராக இருக்க கிறதோ? இல்லையே? (அவள் சட்டையைக் கழட்டிவிடுகிறாள். இப்போ கணப்புக் கிட்ட உட்காருவோம். சௌக்யமாக இருக்கும்; நீ இந்த ஈஸிசேரில் உட்கார்ந்து கொள். நான் இதில் உட்காருகிறேன், (அவள் கையைப் பிடித்துக்கொண்டு) இப்போ பார்த்தால்தான் பழைய கிறிஸ்டின் மாதிரி இருக்கிறது. இருந்தாலும் எனக்கு முதலில் - நீ முன்னைவிட இப்போது வெளுத்திருக்கிறாய் : கொஞ்சம் இளைத்தும் போயிருக்கிறாய்.

லிண்டே- நான் ரொம்ப ரொம்பக் கிழமாகிவிட்டேன், நோரா.

நோரா - ஏதோ கொஞ்சம் வயதான தாகத் தெரிகிறது; ரொம்பக் கொஞ்சந்தான். அப்படி ரொம்பக் கிழமாகவில்லை; (திடீரென்று விளையாட்டுப் பேச்சை நிறுத்திவிட்டு) எனக்கு மூளையே கிடையாது, கிறிஸ்டின் : இதுமாதிரி சளசளவென்று பேசிக்கொண்டே யிருக்கிறேன். என் அருமைக் கிறிஸ்டின், என்னை மன்னிப்பாயா நீ? விண்டே- என்ன நேர்ரா இது? நோரா-(இரக்கமாக) பாவம் : கிறிஸ்டின் : நீ இப்போ ஒரு

விதவையாய்ப் போனாயே! லிண்டே -ஆம் : என் புருஷன் போய் மூன்று வருஷம் ஆய்விட்டதே.

நோரா- ஆமாம், தெரியும். பத்திரிகையில் பார்த்தேன். அந்தச் சமயம் உனக்கு எழுதணும் எழுதணும் என்று எண் ணிக்கொண்டே யிருந்தேன். என்னவோ எழுதாமலே இருந்துவிட்டேன். ஏதேனும் ஒன்று எழுதவொட்டாமல் குறுக்கிட்டுக்கொண்டே யிருந்தது. லிண்டே -அதனாலென்ன? பாதகமில்லை. நோரா - நான் அப்படி இருந்திருக்கலாமா, கிறிஸ்டின்! பாவம், நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய். உன் கணவன் உனக்கு ஒன்றுமே வைத்துவிட்டுப் போகவில்லையாமே!

லிண்டே - இல்லை.

நோரா-குழந்தை குட்டிகளு மில்லையா ?

லிண்டே - இல்லை.

நோரா-அப்படியானால் ஒன்றுமே யில்லையா ?

லிண்டே-நெஞ்சிலே போற்றி வளர்க்க ஒரு துன்பம், ஒரு குறைகூட வைத்துவிட்டுப் போகவில்லை. பயங்கரமான

நோரா- (நம்பிக்கையின்றி அவளைப் பார்த்துக்கொண்டு) அப்படியும் இருக்க முடியுமோ ?

லிண்டே - (துக்கங் கலந்த புன்சிரிப்புடன் அவள் தலை மயிரைத் தடவிக்கொண்டு) நோரா, சில சமயம் அப்படி யும் நடக்கிறது.

நோரா- ஆகவே நீ ஒண்டியாக இருக்கிறாய் : தனிமையா யிருப்பது எவ்வளவு பயங்கரமான துயரம் ? எனக்கு மூன்று அழகான குழந்தைகள் இருக்கிறார்கள். தாதியுடன் வெளியே போயிருப்பதால் இப்போ நீ அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால் இப்போ உன்னைப் பற்றிய விஷயங்கள் எல்லாவற்றையுஞ்சொல்லு.

லிண்டே- இல்லை, இல்லை : உன்னைப் பற்றித்தான் நான் அறிய விரும்புகிறேன்.

நோரா- இல்லை, நீ தான் ஆரம்பிக்க வேண்டும். நான் இன்று என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. உன் விஷயங்களை மட்டுந்தான் பேசவேணும். ஆனால் ஒன்று மாத்திரம் உனக்கு நான் சொல்ல வேண்டும். இப்போது எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் வந்திருக்கிறது, உனக்குத் தெரியுமோ ?

லிண்டே - தெரியாதே, அது என்னது ?

நோரா- தெரியாதா? என் கணவர் பாங்கி மானேஜராக்கப்பட்டிருக்கிறார்!

லிண்டே --உன் கணவரா? தேவலையே : நல்ல அதிர்ஷ்டம் ' தான்!

நோரா- ஆம்; ரொம்ப அதிர்ஷ்டந்தான் : பாரிஸ்டர் உத்தியோகம் எப்பவுமே அவலப் பிழைப்புத்தான். அதுவும் "இவரைப் போல் தன் மனத்திற்குப் பிடிக்காத கேஸ்களை வாங்காமலிருப்பவர்களுக்கு .......... தார்வால்டின் நல்ல குணத்தைப் பற்றி நான் குறை கூறவில்லை. ஆனால் .......... இந்த வேலை அவருக்குக் கிடைத்தது பற்றி எங்கள் சந்தோஷம் சொல்லி முடியாது. புது வருஷத்திலிருந்து பாங்கி வேலையை ஒப்புக்கொள்ள வேண்டும். பிறகு நிறையச் சம்பளமும் ஏகப்பட்ட கமிஷனும் கிடைக்கும். இனிமேல் நாங்கள் வேறு தினுசாக வாழலாம் - எங்கள் இஷ்டப்படி செய்யலாம். எனக்கு ஏதோ பாரம் நீங்கினது போலவும், சந்தோஷமாகவும் இருக்கிறது, கிறிஸ்டின். கவலை யில்லாமல், கை நிறையப் பணமும் இருப்பது எவ்வளவு நேர்த்தியாக விருக்கும்?

லிண்டே- ஆமாம். நமக்கு வேண்டியது இருந்துவிட்டால் சந்தோஷமாகத்தானிருக்கும்.

நோரா- வேண்டியது மட்டுமில்லை : அதற்கு மேலும் " குவியல் குவியலாகப் பண மிருக்கும்.

லிண்டே - (புன்சிரிப்புடன்) நோரா ! நோரா! உனக்கு இன்னமும் புத்தி வரவில்லையா? நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போதும் நீ ரொம்ப ஊதாரியாகத்தான் இருந்தாய்.

நோரா - (சிரித்துக்கொண்டு) ஆம் : இப்போ தார்வால்டும் அப்படித்தான் சொல்லுகிறார். (தன்னைச் சுட்டிக் காட்டிக்கொண்டு) ஆனால் 'இந்த நோரா' ஒன்றும் நீ நினைக்கிறபடி அவ்வளவு அசடில்லை. நாங்கள் பணத்தை வீணாக்கக் கூடிய நிலைமையிலில்லை. நாங்கள் இருவருமே உழைக்கவேண்டித்தான் இருந்தது.

லிண்டே - நீ கூடவா ?

நோரா - ஆம், நான் கூடத்தான். ஏதாவது சில்லறையாகத் தையல், பூப்போடுகிறது, பின்னல் இது மாதிரி வேலைகள். (குரலைத் தாழ்த்திக்கொண்டு) இன்னும் வேறு வேலைகளும் கூடப் பார்த்தேன். நாங்கள் கலியாணம் செய்து கொண்ட பொழுது தார்வால்ட் ஆபீஸ் வேலையை விட்டுவிட்டது தெரியுமோல்லியோ உனக்கு? அங்கே சம்பள உயர்வு ஒன்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. அவர் ஆபீஸை விட்டு வெளிவந்ததும் அதிகமாகச் சம்பாதிக்க ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதனால் முதல் வருஷம் ரொம்ப அதிகமாக வேலை செய்து உடம்பை அலட்டிக்கொண்டு விட்டார். எப்படி யாவது நிறையச் சம்பாதிக்க வேண்டுமே யென்று இரவு பகல் பார்க்காமல் உயிரைக் கொடுத்து வேலை செய்தார். அது தாங்கவில்லை. உடம்புக்குப் பெரிய நோயாய் வந்துவிட்டது. டாக்டர்கள் அவர் கொஞ்ச நாள் தெற்கே. போய் இருந்துவிட்டு வந்தால்தான் உடம்பு தேறும் என்று சொல்லிவிட்டார்கள்.

லிண்டே - நீங்கள் ஒரு வருஷம் முழுவதும் இதாலியிலே போயிருந்தீர்கள் அல்லவா?

நோரா - - ஆம், கிளம்புவது சுலபமாகவா இருந்தது? ரொம்பக் கஷ்ட மென்றுதான் சொல்லுவேன். அது ஐவர் பிறந்த சமயம். ஆனால் எப்படியும் போகத்தான் வேணும் என்று இருந்தது. பிரயாணத்தைப் பற்றிய மட்டில் அழகாகத்தானிருந்தது; அதுதான் தார் வால்டின் உயிரையும் காப்பாற்றியது. ஆனால், கிறிஸ்டின், ஏகப்பட்ட பணம் செலவாகி விட்டது.

லிண்டே - ஆயிருக்கும்.1

நோரா - - கிட்டத்தட்ட இருநூற்றைம்பது பவுன் ஆகிவிட்டுடது. அது பெரிய தொகையில்லையா?

லிண்டே - ஆமாம், ஆனால் சமயத்துக்கு அந்தப் பணம் இருந்ததே பெரிதில்லையா ?

நோரா - அந்தப் பணமெல்லாம் என்னுடைய அப்பாவிடமிருந்து வந்தது என்பதை உனக்குச் சொல்லித் தீர வேண்டும்.

லிண்டே - ஓ, அப்படியா ? அவர் சாகக் கிடந்த சமயம் இல்லையா அது!

நோரா- ஆம்; நான் போய் அவருக்கருகில் இருக்கக்கூட முடியவில்லை யென்பதை நினைத்துப் பார். ஐவர் இன்றோ நாளையோ பிறந்து விடுவான் என்று ஒவ்வொரு நாளும் நான் எதிர்பார்த்திருந்தேன். தவிரவும், சீக்காயிருந்த தார் வால்டையும் பார்க்கவேண்டி யிருந்தது. என் அருமை அப்பாவை நான் அதற்கப்புறம் பார்க்கவேயில்லை, கிறிஸ்டின். எனக்குக் கலியாணமான பிறகு எனக்கு மகா துக்ககரமான காலம் அது தான்.

லிண்டே - உங்கப்பாவிடம் உனக்கு எவ்வளவு பிரியம் என்று எனக்கு நன்றாகத் தெரியுமே! அதற்கப்புறம் நீ இதாலிக்குக் கிளம்பிவிட்டாயாக்கும். '

நோரா - ஆம். அப்போது கையில் பணமும் இருந்தது. டாக்டர்களும் போய்த்தான் ஆகவேணு மென்று கட் டாயமாகச் சொல்லிவிட்டார்கள். அதற்கப்புறம் ஒரு மாதங் கழித்துக் கிளம்பிவிட்டோம்.

லிண்டே - அங்கே போய்விட்டு வந்ததில் உன் கணவருக்கு உடம்பு நன்றாகத் தேறிவிட்டதா?

எனகல்..   ****

.நோரா- ஓ, நன்றாகக் குணமாகிவிட்டது! திரும்பி வந்த - பிறகு அவருக்கு ஒருவித உபாதையும் இல்லை... லிண்டே --ஆனால்... அந்த டாக்டர்? நோரா-எந்த டாக்டர்?

லிண்டே- நான் வந்த போது யாரோ வந்திருக்கிறார் என்று சொன்னாளே வேலைக்காரி, அவர்தானே டாக்டர்?

நோரா- ஓ, அவரா? அவர் டாக்டர் ராங்க். அவர் இங்கு டாக்டர் என்ற ஹோதாவில் வருகிறவ ரில்லை. எங்களுடைய ஆப்த சிநேகிதர் அவர் ; தினம் ஒரு தரமாவது எங்களை வந்து பார்க்காமல் இருக்க மாட்டார். இல்லை, அதற்கப்புறம் ஒரு நாளாவது தார்வால்ட் உடம்பு சரியாக இல்லை என்று படுத்துக் கொண்டதே கிடையாது. என் குழந்தைகளும் திடமாக இருக்கிறார்கள். நானும் சௌக்கியமாகத்தான் இருக்கிறேன். (எழுந்திருந்து இரண்டு முறை குதித்துவிட்டு, கையைக் கொட்டிக் கொண்டு) கிறிஸ்டின்! கிறிஸ்டின்! நோய் நொடியில்லாமல் சந்தோஷமாக வாழ்வதைப் போல ஆனந்தம் வேறு என்ன இருக்கிறது? ஆனால் என்ன அசட்டுத்தனம் ! நான் சும்மா என்னைப் பற்றியே பேசிக்கொண் டிருக்கிறேனே! (மிஸிஸ் லிண்டேக்குப் பக்கத்தில் ஒரு ஸ்டூல் மேல் உட்கார்ந்து அவள் முழங் கால்கள் மேல் கையை வைத்தபடி) நீ என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாது. சொல்லு : நிஜந்தானா? நீ உன் கணவரைக் காதலிக்க வில்லையாமே? காதலின்றி நீ ஏன் அவரைக் கலியாணஞ் செய்து கொண்டாய்?

லிண்டே - அப்பொழுது என் அம்மா உயிருட னிருந்தாள். எழுந்திருக்க மாட்டாமல் வியாதியாய்ப் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். நானே என்னுடைய இரண்டு தம்பி களையும் வைத்துக் காப்பாற்ற வேண்டியிருந்தது. ஆகையால்தான் அவர் என்னைக் கலியாணஞ் செய்து கொள்ளுவதாய்ச் சொன்னவுடன் அதைத் தட்டிவிடுவது சரியில்லை யென்று எனக்குத் தோன்றிற்று. நோரா- இல்லை, நீ செய்ததும் சரியாக இருக்கலாம். அப்படியானால் அப்போது அவரிடம் நிறையப் பண மிருந்ததா?

லிண்டே- நல்ல ஸ்திதியில் இருந்தார் என்றே நம்புகிறேன். ஆனால் அவருடைய தொழில் நிலையற்ற வியாபாரம். அவர் இறந்ததும் எல்லாம் போய்விட்டது ; ஒன்றும் மிச்சமே யில்லை.

நோரா- அப்புறம்?

லிண்டே - என்ன வேலை கிடைத்ததோ அதைச் செய்து சம்பாதித்தேன் - முதலில் ஒரு சின்னக் கடை. அப்புறம் ஒரு சின்னப் பள்ளிக்கூடம்; இப்படியெல்லாம் பலவிடங்களில் வேலை செய்து சம்பாதித்தேன். சென்ற மூணு வருஷமும் ஒய்வொழிவில்லாத ஒரே வேலை நாளாகத் தோன்றுகிறது. இப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டது, நோரா. என் தாயார் இறந்துவிட்டாள். அவளுக்காக இனி நான் கஷ்டப்பட வேண்டியதில்லை. என் தம்பிகளுக்கும் இனி என் உதவி தேவையில்லை. அவர்களும் வேலைகளி லிருக்கிறார்கள்; எப்படியாவது தங்கள் விஷயங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளுவார்கள்.

 நோரா - ஒரு பெரிய பாரம் நீங்கிற்று உனக்கு.... “

லிண்டே- அதுதானே இல்லை ! என் வாழ்க்கையிலே ஒன்று மில்லாமல் சுத்த சூனியமாகப் போய்விட்டதை உணர்கி றேன் நான். நான் இனி யாருக்காகவும் வாழ வேண்டியதில்லை. (சஞ்சலத்துடன் எழுந்திருக்கிறாள்.) அதனால் தான், என் ஆயுள் முழுவதும் பழகிப் போயிருந்தாலும், எங்கேயோ ஒரு மூலையிலிருக்கும் சின்ன இடத்தில் அவிந்து கிடக்க எனக்குப் பிடிக்கவில்லை. என் மனசில் வேறு எண்ணங்கள் தோன்றவே இடமில்லாதபடி செய்துகொண்டிருக்க இங்கு ஏதாவது வேலை கிடைப்பது எளிது என்று நம்புகிறேன். என் வாழ்வின் சூனியம் அதனால் மறையும். ஏதாவது நிரந்தரமான வேலை கிடைக்குமானால் - அதிர்ஷ்ட மிருந்து எந்த விதமான ஆபீஸ் வேலையாக இருந்தால்....

நோரா-ஆனால், கிறிஸ்டின், அந்த மாதிரி வேலை ரொம்பக் கடினமாக இருக்குமே. நீ இப்பவே ரொம்பக் களைத்து அலுப்புற்றவளாகக் காண்கிறாய். எங்கேயாவது நல்ல இடமாகப் பார்த்துத் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு உடம்பைத் தேற்றிக்கொண்டு வா..

விண்டே- (ஜன்னலண்டை நடந்து கொண்டே) அதற்கெல்லாம் பணம் கொடுக்க எனக்கு அப்பா இல்லையே, நோரா!

நோரா - (எழுந்து கொண்டே ) ஓ, என்னிடம் கோபித்துக்கொள்ளாதே.

லிண்டே- (அவளிடம் போய்) நீயல்லவா என்னிடம் கோபித்துக்கொள்ளாம லிருக்கவேணும், பிரிய நோரா. என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வு கசந்து போய்விடுகிறது. அதுதான் கஷ்டம். உலகிலே யாருமின்றி, யாருக்காக வும் உழைக்க வேண்டிய அவசிய மின்றி, ஆனால் எப்போதும் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டி யிருக்கிறது. வாழ்ந்தாக வேணுமே; அதற்காகப் பிறரைப் பற்றிய ஞாபகத்தை - ஒழித்துவிட வேண்டியிருக்கிறது. நீ சற்றுமுன் உன் அதிர்ஷ்டத்தைப் பற்றிச் சொன்னாயே - அப்போது நான் உனக்காகச் சந்தோஷப்படவில்லை - நம்பினால் நம்பு - எனக்காகத்தான் சந்தோஷப்பட்டேன்.

நோரா - அதுக்கு என்ன அர்த்தம்? ஓ , இப்பொழுது புரிகிறது. தார்வால்ட் உனக்கு ஏதாவது வேலை பண்ணித்தரமாட்டாரா என்று நினைக்கிறாய்.

லிண்டே- ஆம். நான் அதை எண்ணித்தான் சந்தோஷப்பட்டேன்.

நோரா - அவர் செய்யத்தான் வேணும், கிறிஸ்டின். அது என் பொறுப்பு. நான் செய்யச் சொல்லுகிறேன். விஷயத்தைச் சாமர்த்தியமாகவும் அவருக்குப் பிரியமான வழியில்லும் சொல்லுவேன். உனக்கு நான் கொஞ்சமாவது உதவி செய்தேனானால் நான் எவ்வளவு சந்தோஷ மடைவேன், தெரியுமோ?

லிண்டே - உனக்கு எவ்வளவு இரக்கமான மனது, நோரா? எனக்கு உதவி செய்ய ஆத்திரத்துட னிருக்கிறாய். வாழ்க்கையின் பாரமும், கஷ்ட நிஷ்டூரங்களும் என்ன என்பதே தெரியாத நீ இவ்வளவு பிரியமா யிருப்பது ரொம்பப் பெரிதுதான்.

நோரா - எனக்கா? எனக்கா தெரியாது?

லிண்டே- (சிரித்துக்கொண்டே) என்னருமை நோரா , அற்பமான வீட்டுக் கவலைகள் முதலியவை யெல்லாம் ஒரு கவலையில் சேர்ந்ததா?........ நீ இன்னும் ஒரு குழந்தை தானே, நோரா?

நோரா - (தலையை வெகு வேகமாக ஆட்டிக்கொண்டு, குறுக்கே நடந்து கொண்டு) நீ ரொம்பப் பெரிய மனுஷி மாதிரிப் பேசாதே !

லிண்டே - பேசக்கூடாதா? நான் பட்டிருப்பது....... 

நோரா- நீயும் மற்றவர்களைப் போலவேதான் என்னைப் பற்றி 
நினைக்கிறாய். எல்லோரும் என்னால் ஒரு பெரிய காரியமும் " சரியாகச் செய்ய முடியாதென்று தான் நினைக்கிறார்கள். 

லிண்டே-அதெல்லாமில்லை. 

நோரா - நான் வாழ்விலே ஒரு கவலையும் பட்டதில்லை யென்று எண்ணுகிறாயோ நீ? 

லிண்டே - ஆனால், நோரா இப்போதானே நீ உன்னுடைய கவலைகள் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னாய்!

நோரா- பூ ! அதெல்லாம் அற்பம். (தன் குரலைத் தாழ்த்தி) மிகவும் முக்கியமான விஷயத்தை நான் இன்னும் உன் னிடம் சொல்லவில்லை.

லிண்டே - முக்கியமானதா ? என்ன? புரியவில்லையே எனக்கு!

நோரா - என்னைப் பார்த்தால் உனக்கு இளப்பமாக இருக்கிறது, இல்லையா, கிறிஸ்டின் ? ஆனால் உண்மையில் நீ அப்படி நினைக்கக்கூடாது. நீ உன் தாயாருக்காக அவ்வளவு காலம் பாடுபட்டதைப் பற்றிப் பெருமை கொள்ளுகிறாய் அல்லவா?

லிண்டே- உண்மையில் நான் யாரையும் இளப்பமாக நினைக்கவில்லை. ஆனால் ஒரு விதத்தில் நான் என்னுடைய தாயாரின் அந்திக் காலத்தில் அவள் கவலையின்றி இருக்க உதவியாக இருந்தது பற்றிப் பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன். '

நோரா- உன் தம்பிகளுக்காக நீ செய்திருப்பதை எண்ணிப்பார்க்கும்போது நீ பெருமிதம் அடைகிறாய் இல்லையா?

லிண்டே - நான் பெருமை யடையக் காரணம் இருக்கிறது.

நோரா- நான் இல்லை யென்று சொல்லவில்லையே! ஆனால் இப்பொழுது இதையுங் கேள். நானும் பெருமைப் படவும் சந்தோஷப்படவும் ஏதோ கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.

லிண்டே - இருக்கும் : அதில் எனக்குச் சந்தேகம் இல்லை.ஆனால் நீ எதைப் பற்றிச் சொல்லுகிறாய்?

நோரா - மெதுவாகப் பேசு ; தார்வால்ட் காதில் விழுந்து விடப் போகிறது! இது அவருக்கு எந்த விதத்திலும் ! எட்டக் கூடாது. உன்னைத் தவிர உலகில் வேறு யாருக்குமே இது தெரியக் கூடாது, கிறிஸ்டின்! லிண்டே - ஆனால் அப்படி யென்ன விசேஷம் அது?

நோரா - - (தனக்குப் பக்கத்தில் ஸோபாவில் மிஸிஸ் லிண்டேயை இழுத்து உட்கார வைத்துக்கொண்டு) நானும் எண்ணிப் பார்த்துப் பெருமித மடைய, சந்தோஷப்பட, ஏதோ கொஞ்ச மிருக்கிறது என்று காட்டுகிறேன், பார். நான் தான் தார்வால்டின் உயிரைக் காப்பாற்றினேன். லிண்டே-'காப்பாற்றினாயா? எப்படி? நோரா- நாங்கள் இதாலிக்குப் போய் வந்ததைப் பற்றிச் சொன்னே னல்லவா ? நாங்கள் அங்கு போயிராவிட்டால் தார்வால்டின் உயிர் .........

லிண்டே -ஆம் : ஆனால் உன் தகப்பனாரல்லவா அதற்கு •வேண்டிய பணத்தைக் கொடுத்தார்.

நோரா-(புன்சிரிப்புடன்) ஆம் : அப்படித்தான் தார்வால்டும் பாக்கி யெல்லோரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால்...

லிண்டே - ஆனால்...

?


No comments:

Post a Comment