Friday, May 16, 2014

சாமுண்டியைக் குறித்து சிநேகிதிக்கு கவிஞன் சொன்ன கவிதை - சாரு நிவேதிதா


சாமுண்டியைக் குறித்து சிநேகிதிக்கு கவிஞன் சொன்ன கவிதை - சாரு நிவேதிதா

மரணித்துக் கிடந்தவனின்
சூன்ய வெளியை
நிரப்பிய மொழி
அவன் தசைத் திணுக்களை
கவிதையாய் மாற்றி விட்டு
மௌனப் பாறையாய்
உறைந்து போயிற்று
நூற்றாண்டு வாதை
நெருப்புக் குழம்பாய்
மௌனப் பாறையுள்
மையங்கொண்டிருந்தது
சூன்ய மொழி
சீழ் பிடிக்க
ஒற்றைக் கண்ணிலிருந்து
ஒழுகியது
கவிதை
விருச்சிகம்
வயிற்றில் கவ்வ
மரண வாதையின்
விளிம்பில் நின்று
ஒற்றைக் கண்ணைப்
பிடுங்கி எறிந்தான்

தூள் தூளாய்
வெடித்துச் சிதறியது
பாறை

பாறைக் குடைவின்
இருள்களினூடே
ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த
சோதிடன் சொன்னான்
அவள்
இந்த உலகத்திற்கு
கடவுளால் வழங்கப்பட்ட
கொடை
என.

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும் rrn.rrk.rrn@gmail.com இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து translate.google.com, docs.google.com, msword translateஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்