தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, July 04, 2014

முலைகள் - குட்டிரேவதி Kutti Revathi – (India) Breasts, மற்றும் கவிதைகள்

http://www.theguardian.com/books/2014/jul/02/fifty-greatest-love-poems-30-different-countries?CMP=twt_gu)
Kutti Revathi – (India) 

BREASTS


Breasts are bubbles, rising
In wet marshlands

I watched in awe — and guarded —
Their gradual swell and blooming
At the edges of my youth’s season

Saying nothing to anyone else,
They sing along
With me alone, always:
Of Love,
Rapture,
Heartbreak

To the nurseries of my turning seasons,
They never once forgot or failed
To bring arousal

During penance, they swell, as if straining
To break free; and in the fierce tug of lust,
They soar, recalling the ecstasy of music

From the crush of embrace, they distill
The essence of love; and in the shock
Of childbirth, milk from coursing blood

Like two teardrops from an unfulfilled love
That cannot ever be wiped away,
They well up, as if in grief, and spill over.


© Translation: 2002, N. Kalyan Raman
From: Kavya Bharati: A Review of Indian Poetry. Issue No. 14

Fifty greatest modern love poems list embraces 30 different countries(http://www.theguardian.com/books/2014/jul/02/fifty-greatest-love-poems-30-different-countries?CMP=twt_gu)
Kutti Revathi – (India)
*****************************
LOVE IN A BATHTUB
Sujata Bhatt is an Indian poet and was born in Ahmedabad, India, in 1956. She grew up in Pune, India, and in the United States. She received her MFA from the Writers' Workshop at the University of Iowa, and now lives in Germany with her husband and daughter. She is the recipient of various awards, including the Commonwealth Poetry Prize (Asia) and the Cholmondeley Award.
 





Years later we'll remember the bathtub
the position of the taps
the water, slippery
as if a bucketful of eels had joined us ...
we'll be old, our children grown up
but we'll remember the water sloshing out
the useless soap,
the mountain of wet towels.
'Remember the bathtub in Belfast?'
we'll prod each other

Sujata Bhatt  www.poetryarchive.org

************************************
VARIATIONS ON THE WORD LOVE
Margaret Atwood

(Meena Kandasamy facebook)


This is a word we use to plug
holes with. It's the right size for those warm
blanks in speech, for those red heart-
shaped vacancies on the page that look nothing
like real hearts. Add lace
and you can sell
it. We insert it also in the one empty
space on the printed form
that comes with no instructions. There are whole
magazines with not much in them
but the word love, you can
rub it all over your body and you
can cook with it too. How do we know
it isn't what goes on at the cool
debaucheries of slugs under damp
pieces of cardboard? As for the weed-
seedlings nosing their tough snouts up
among the lettuces, they shout it.
Love! Love! sing the soldiers, raising
their glittering knives in salute.
Then there's the two
of us. This word
is far too short for us, it has only
four letters, too sparse
to fill those deep bare
vacuums between the stars
that press on us with their deafness.
It's not love we don't wish
to fall into, but that fear.
this word is not enough but it will
have to do. It's a single
vowel in this metallic
silence, a mouth that says
O again and again in wonder
and pain, a breath, a finger
grip on a cliffside. You can
hold on or let go.
********************

















































































































































































































Fifty greatest modern love poems list embraces 30 different countries



முலைகள்

முலைகள்
சதுப்பு நிலக் குமிழிகள்

பருவத்தின் வரப்புகளில்
மெள்ள அலை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்

எவரோடும் ஏதும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை

மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை

தவத்தின்
திமிறிய பாவனையும்
காமச் சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன

ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசுகண்ட அதிர்வின்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன”

ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
      இரு கண்ணீர்த்துளிகளாய்
      தேங்கித் தளுப்புகின்றன

         முலைகள் – பக் 15

http://kuttyrevathy.blogspot.com
/2013/09/blog-post_20.html

© 2001, Kutti Revathi
From: Vayam
Publisher: Chennai, 2001
http://eluthu.com/kavithai/196600.html

என் காமத்தின் துளி” எனும் குட்டி ரேவதியின்
 கவிதையைக் காணலாம். 

என் காமத்தை இதுவரை
நீ வருடிப்பார்த்தது கூட இல்லை
அது அணையாது காக்கவேண்டிய
ஒரு சுடரைப்போலத்
தெருவெங்கும் அலைகிறது
பின்புதான் குப்பைகளை எரிக்கும்
நெருப்போடு சேர்கிறது.

..........

வருடிப்பார்த்திருக்கிறாயா என் காமத்தை
ஒரு புதிய காகிதத்தில் எழுத
         விரும்புவதைப்போலவோ

அல்லது
ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும்
ஆர்வத்துடனோ?'



Rain-River’, Kutti Revathi. 
I am the rain’s fall;
you are the pull of the river.
The force of our love’s union
is like red earth and pouring rain –
the leaping of fish into the body –
the entwining of water-weeds.
The fierceness of your embrace
whirls me about
tosses me against the rock-beds
makes me lose my breath.
Your lap is my wheeling miracle-seat;
the prize conferred by the ancients.
The soft skin of your hands
strokes my eyes, reaching
around my neck.
When you come towards me, beckoning,
the grass tears my feet.
You are the hastening of time;
I am the blossoming season.
— ‘Rain-River’, Kutti Revathi. 
Translated by Lakshmi Holmström,
Riyas Qurana

6 hrs · Saturday, ‎June ‎3, ‎2017

முட்டுவேன் கொல் - 03
விஸ்வரூபம்
மாலதி மைத்ரி


எதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னைவிட்டு விலகிச் 

            செல்லத்தொடங்கின
அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த 

          ஆட்டுக்குட்டியை
தேடிச் சென்று அழைத்துவருவதென

             நிகழ்வதும்
பிற்கு யாத்திரைபோலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக்கால வெளியிலும் 

               அலையத்துவங்கின
நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் 

                  மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து 

              அடுக்குகின்றன
யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்
0 மாலதி மைத்ரி
Riyas Qurana
7 hrs ·

முட்டுவேன் கொல் - 01
உடலெழுத்து - சுகிர்தராணி
  
வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட 
    குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் 
  கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்


என்னுடல் என்னிடமிருந்தது.
0 சுகிர்தராணி

Love Song (for Anna) 
by Chinua Achebe


added on 17-02-2016
http://leedsreads.net/2015/03/06
/ff-poem-of-the-week-26/
Bear with me my love
in the hour of my silence;
the air is crisscrossed
by loud omens and songbirds
fearing reprisals of middle day
have hidden away their notes
wrapped up in leaves
of cocoyam . . . . What song shall I
sing to you my love when
a choir of squatting toads
turns the stomach of the day with
goitrous adoration of an infested
swamp and purple-headed
vultures at home stand
sentry on the rooftop?

I will sing only in waiting
silence your power to bear
my dream for me in your quiet
eyes and wrap the dust of our blistered
feet in golden anklets ready
for the return someday of our
banished dance.

Love Song By Ted Hughes 
He loved her and she loved him. 
His kisses sucked out her whole past and
    - future or tried to 
He had no other appetite 
She bit him she gnawed him she sucked 
She wanted him complete inside her 
Safe and sure forever and ever
Their little cries fluttered into the curtains 

Her eyes wanted nothing to get away 

Her looks nailed down his hands his wrists 
-his elbows 
He gripped her hard so that life 
Should not drag her from that moment 
He wanted all future to cease 
He wanted to topple with his arms round her 
Off that moment's brink and into nothing 
Or everlasting or whatever there was 

Her embrace was an immense press 

To print him into her bones 
His smiles were the garrets of a fairy palace 
Where the real world would never come 
Her smiles were spider bites 
So he would lie still till she felt hungry 
His words were occupying armies 
Her laughs were an assassin's attempts
His looks were bullets daggers of revenge 
His glances were ghosts in the corner with 
-horrible secrets 
His whispers were whips and jackboots 
Her kisses were lawyers steadily writing 
His caresses were the last hooks of a 
-castaway 
Her love-tricks were the grinding of locks 
And their deep cries crawled over the floors 
Like an animal dragging a great trap 
His promises were the surgeon's gag 
Her promises took the top off his skull 
She would get a brooch made of it 
His vows pulled out all her sinews 
He showed her how to make a love-knot 
Her vows put his eyes in formalin 
At the back of her secret drawer 
Their screams stuck in the wall 

Their heads fell apart into sleep like the two halves

Of a lopped melon, but love is hard to stop 

In their entwined sleep they exchanged arms and legs 

In their dreams their brains took each other hostage 

In the morning they wore each other's face. 




By Ted Hughes 



 The Present By Michael Donaghy
USA
    For the present there is just one moon,
    though every level pond gives back another.
    But the bright disc shining in the black lagoon,
    perceived by astrophysicist and lover,
    is milliseconds old. And even that light’s
    seven minutes older than its source.
    And the stars we think we see on moonless nights
    are long extinguished. And, of course,
    this very moment, as you read this line,
    is literally gone before you know it.
    Forget the here-and-now. We have no time
    but this device of wantonness and wit.
    Make me this present then: your hand in mine,
    and we’ll live out our lives in it.





Tadeusz Rozewicz (Poland)

 A Sketch for a Modern 
Love Poem

And yet whiteness
can be best described by greyness
a bird by a stone
sunflowers
in december
love poems of old
used to be descriptions of flesh
they described this and that
for instance eyelashes

and yet redness

should be described
by greyness the sun by rain
the poppies in november
the lips at night

the most palpable

description of bread
is that of hunger
there is in it
a humid porous core
a warm inside
sunflowers at night
the breasts the belly the thighs of Cybele

a transparent

source-like description
of water is that of thirst
of ash
of desert
it provokes a mirage
clouds and trees enter
a mirror of water
lack hunger
absence
of flesh
is a description of love
in a modern love poem
Translated from the Polish by Czeslaw Milosz


All You Who Sleep Tonight - Poem by Vikram Seth


All you who sleep tonight
Far from the ones you love,
No hand to left or right
And emptiness above -

Know that you aren't alone
The whole world shares your tears,
Some for two nights or one,
And some for all their years.



Come, and Be My Baby

by Maya Angelou

The highway is full of big cars

going nowhere fast
And folks is smoking anything that'll burn
Some people wrap their lies around a cocktail glass
And you sit wondering
where you're going to turn
I got it.
Come. And be my baby.
Some prophets say the world is gonna end tomorrow
But others say we've got a week or two
The paper is full of every kind of blooming horror
And you sit wondering
What you're gonna do.
I got it.
Come. And be my baby.

Celia, Celia

 

Adrian Mitchell


When I am sad and weary
When I think all hope has gone
When I walk along High Holborn
I think of you with nothing on

Her


From Life Mask (Bloodaxe, 2005), copyright © Jackie Kay 2005, used by permission of the author and Bloodaxe Books Ltd.
- See more at: http://www.poetryarchive.org/poem/her#sthash.G0u5S1o4.dpuf

Her


From Life Mask (Bloodaxe, 2005), copyright © Jackie Kay 2005, used by permission of the author and Bloodaxe Books Ltd.
- See more at: http://www.poetryarchive.org/poem/her#sthash.G0u5S1o4.dpuf

 Her
Jackie Kay

I had been told about her.
How she would always, always.
How she would never, never.
I'd watched and listened
but I still fell for her,
how she always, always.
How she never, never.

In the small brave night,
her lips, butterfly moments.
I tried to catch her and she laughed
a loud laugh that cracked me in two,
but then I had been told about her,
how she would always, always.
How she would never, never.

We two listened to the wind.
We two galloped a pace.
We two, up and away, away, away.
And now she's gone,
like she said she would go.
But then I had been told about her -
how she would always, always.

------------------------------------------------------------------------

From Life Mask (Bloodaxe, 2005), copyright © Jackie Kay 2005, used by
permission of the author and Bloodaxe Books Ltd.





STRAWBERRIES
 Edwin Morgan

There were never strawberries
like the ones we had
that sultry afternoon
sitting on the step
of the open french window
facing each other
your knees held in mine
the blue plates in our laps
the strawberries glistening
in the hot sunlight
we dipped them in sugar
looking at each other
not hurrying the feast
for one to come
the empty plates
laid on the stone together
with the two forks crossed
and I bent towards you
sweet in that air
in my arms
abandoned like a child
from your eager mouth
the taste of strawberries
in my memory
lean back again
let me love you
let the sun beat
on our forgetfulness
one hour of all
the heat intense
and summer lightning
on the Kilpatrick hills
let the storm wash the plates

 Looking at Each Other
- Muriel Rukeyser
http://aliciasapenglishblog.blogspot.in/2008/10/looking-at-each-other-muriel-rukeyser.html

Yes, we were looking at each other
Yes, we knew each other very well
Yes, we had made love with each other many times
Yes, we had heard music together
Yes, we had gone to the sea together
Yes, we had cooked and eaten together
Yes, we had laughed often day and night
Yes, we fought violence and knew violence
Yes, we hated the inner and outer oppression
Yes, that day we were looking at each other
Yes, we saw the sunlight pouring down
Yes, the corner of the table was between us
Yes, our eyes saw each other's eyes
Yes, our mouths saw each other's mouths
Yes, our breasts saw each other's breasts
Yes, our bodies entire saw each other
Yes, it was beginning in each
Yes, it threw waves across our lives
Yes, the pulses were becoming very strong
Yes, the beating became very delicate
Yes, the calling the arousal
Yes, the arriving the coming
Yes, there it was for both entire
Yes, we were looking at each other

Before You Came

http://www.poets.org/poetsorg/poet/faiz-ahmed-faiz

Faiz Ahmed Faiz, 1911 - 1984


Before you came,
things were as they should be:
the sky was the dead-end of sight,
the road was just a road, wine merely wine.

Now everything is like my heart,
a color at the edge of blood:
the grey of your absence, the color of poison, of thorns,
the gold when we meet, the season ablaze,
the yellow of autumn, the red of flowers, of flames,
and the black when you cover the earth
with the coal of dead fires.

And the sky, the road, the glass of wine?
The sky is a shirt wet with tears,
the road a vein about to break,
and the glass of wine a mirror in which
the sky, the road, the world keep changing.

Don’t leave now that you’re here—
Stay. So the world may become like itself again:
so the sky may be the sky,
the road a road,
and the glass of wine not a mirror, just a glass of wine.

Her


From Life Mask (Bloodaxe, 2005), copyright © Jackie Kay 2005, used by permission of the author and Bloodaxe Books Ltd.
- See more at: http://www.poetryarchive.org/poem/her#sthash.G0u5S1o4.dpuf
Should You Die First

by Annabelle Despard (Norway)

Let me at least collect your smells
as specimens: your armpits, woollen

sweater,
fingers yellow from smoke. I’d need
to take an imprint of your foot
and make recordings of your laugh.

These archives I shall carry into exile;
my body a St. Helena where ships no

longer dock,

a rock in the ocean, an outpost where the

wind howls
And polar bears beat down the door.

Having a Coke with You

Frank O’Hara

is even more fun than going to San Sebastian, Irún, Hendaye, Biarritz,
     Bayonne
or being sick to my stomach on the Travesera de Gracia in Barcelona
partly because in your orange shirt you look like a better happier
     St. Sebastian
partly because of my love for you, partly because of your love for
     yoghurt
partly because of the fluorescent orange tulips around the birches
partly because of the secrecy our smiles take on before people and
     statuary
it is hard to believe when I’m with you that there can be anything
     as still
as solemn as unpleasantly definitive as statuary when right in front
     of it
in the warm New York 4 o’clock light we are drifting back and forth
between each other like a tree breathing through its spectacles
and the portrait show seems to have no faces in it at all, just paint
you suddenly wonder why in the world anyone ever did them
I look
at you and I would rather look at you than all the portraits in
     the world
except possibly for the Polish Rider occasionally and anyway it’s
     in the Frick
which thank heavens you haven’t gone to yet so we can go together
     the first time
and the fact that you move so beautifully more or less takes care
     of Futurism
just as at home I never think of the Nude Descending a Staircase or
at a rehearsal a single drawing of Leonardo or Michelangelo that
     used to wow me
and what good does all the research of the Impressionists do them
when they never got the right person to stand near the tree when
     the sun sank
or for that matter Marino Marini when he didn’t pick the rider
     as carefully
as the horse
it seems they were all cheated of some marvelous experience
which is not going to go wasted on me which is why I am telling you
     about it

Prayer - Poem by Arundhathi Subramaniam


May things stay the way they are
in the simplest place you know.

May the shuttered windows

keep the air as cool as bottled jasmine.
May you never forget to listen
to the crumpled whisper of sheets
that mould themselves to your sleeping form.
May the pillows always be silvered
with cat-down and the muted percussion
of a lover’s breath.
May the murmur of the wall clock
continue to decree that your providence
run ten minutes slow.

May nothing be disturbed

in the simplest place you know
for it is here in the foetal hush
that blueprints dissolve
and poems begin,
and faith spreads like the hum of crickets,
faith in a time
when maps shall fade,
nostalgia cease
and the vigil end. 

Arundhathi Subramaniam



The Snow Path - Poem by Ko Un


Now I am gazing
at the snow path that covers up what has passed.
After wandering through the whole winter,
I am gazing at this foreign territory.
The scene of snow
falls in my heart for the first time.
The world is at the edge of meditation,
a world covered with exuberant peace
no country that I have traveled has ever seen.
I am gazing at the invisible movements of all things.
What is the sky where the snow is falling?
Listening closely, through the falling snow,
I hear the grand earth's confession.
I can hear for the first time.
My heart is the snow path outside,
and darkness within.
After wandering though this world of winter,
I have come now to guard the great quiet,
and, in front of the piling snow,
my heart is darkness. 

 http://www.theguardian.com/books/2014/jul/02/fifty-greatest-love-poems-30-different-countries?CMP=twt_gu


Fifty greatest modern love poems list embraces 30 different countries

Global reach of experts' new selection ranges over last 50 years, from Scotland to Saudi Arabia, Korea to Kurdistan






















Love around the world … a girl holds a globe. Photograph: Alamy

There's no "How do I love thee? Let me count the ways", or "Shall I compare thee to a summer's day?" here: instead, a new list of the 50 greatest love poems ranges from Maya Angelou to Vikram Seth and from Pakistan to Nigeria.
Chosen by poetry specialists at the Southbank Centre, instead of focusing on more traditional options by the likes of Barrett Browning and Shakespeare, the selectors looked at work written over the last 50 years to come up with their list. The American Angelou was chosen for her lyrical plea, Come, and Be My Baby, in which the poet writes: "you sit wondering / What you're gonna do. / I got it. / Come. And be my baby", while Indian author Seth makes the list for the mournful All You Who Sleep Tonight – "Know that you aren't alone / The whole world shares your tears".
The poets come from 30 countries, from Saint Lucia to Iraqi Kurdistan, but some well-known British names also make the cut. The late Adrian Mitchell is included for the short but perfectly formed Celia, Celia – "When I am sad and weary / When I think all hope has gone / When I walk along High Holborn / I think of you with nothing on" – as is Scottish poet Jackie Kay for Her. "I had been told about her," writes Kay. "How she would always, always. / How she would never, never. / I'd watched and listened / but I still fell for her."
Michael Donaghy was chosen for The Present – "Make me this present then: your hand in mine, / and we'll live out our lives in it", and Edwin Morgan for Strawberries . "There were never strawberries," writes the late Scottish poet, reminiscing, "like the ones we had / that sultry afternoon."
The poetry team at the Southbank Centre has worked on the list for the last year, drawing on the expertise of its Saison Poetry Library to come up with what head of literature and spoken word James Runcie called "a truly international and stylistically diverse selection of what we see as the best 50 love poems of the past 50 years – from young poets such as the first Young Poet Laureate for London, Warsan Shire, to world greats such as Chinua Achebe and Ted Hughes".
"It was tough restricting ourselves to just 50 poems, but I think we've come up with a wonderfully rich and varied offering of some of the world's greatest love poems," said Runcie.
So Achebe's Love Song (For Anna), in which the Nigerian author writes "Bear with me my love / in the hour of my silence", nestles alongside Frank O'Hara's Having a Coke With You, and Ted Hughes's Lovesong sits beside to Margaret Atwood's Variations on the Word Love. South Korea's acclaimed poet Ko Un was selected for Snowfall, Pakistani writer Faiz Ahmed Faiz for Before You Came – "Now everything is like my heart, / a colour at the edge of blood" – and Norwegian poet Annabelle Despard for Should You Die First, which opens "Let me at least collect your smells / as specimens".
 The poems will be read on 20 July at what the Southbank Centre is calling an "unprecedented event", which will see 50 readers, from actors to poets, taking on one poem each from the list. Celia Hewitt, the subject of Mitchell's Celia, Celia, will read the poem she inspired, and Donaghy's widow Maddy Paxman will read The Present. There will be readings in Arabic, Turkish, Macedonian and Tamil, with English translations, while Don Paterson and Linton Kwesi Johnson will read their own poems, My Love and Hurricane Blues.
The event will be bookended by a prologue – Langston Hughes's The Dream Keeper – and an epilogue, Derek Walcott's Love After Love, a poem which the Southbank Centre described as "the most iconic love poem". The celebration is part of the Festival of Love and biennial Poetry International festival, which was set up by Ted Hughes in 1967.

The list of the 50 greatest love poems of the last 50 years in full:
Michael Donaghy (USA) – The Present
Naomi Shibab Nye (Palestine) – Shoulders
Philippe Jaccottet (France) – Distances
Tadeusz Rozewicz (Poland) A Sketch for a Modern Love Poem
Billy Collins (USA) Night Club
Nazim Hikmett (Turkey) Things I didn't know I loved
Margaret Atwood (Canada) Variations on the Word Love
Mutsuo Takahashi (Japan) Dove
Anna Swir (Poland) Thank-you, My Fate
Lawrence Bradby (England) - If Your Faith in Me Should Fail
Mary Oliver (USA) – Wild Geese
Anat Zecharaya (Israel) –A Woman of Valour (Trans Hebrew)
Karlis Verdins (Latvia) – Come to Me (Trans Latvian)
Doina Ioanid (Romania)The Yellow Dog (Trans Romanian)
Ana Ristovic (Serbia)– Circling Zero – (Trans Serbian)
Katharine Kilalea (South Africa)You were a bird
Ted Hughes (England) Lovesong
Kim Addonizio (USA) – You Don't Know What Love Is
Kim Hyesoon (Korea) – A Hole (Trans from Korean)
Choman Hardi (Iraqi Kurdistan) Summer Roof
Carolyn Kizer (USA) Bitch
Nina Cassian (Romania) Lady of Miracles
Ashjan Al Hendi (Saudi Arabia) In search of the Other
Don Paterson (Scotland) My Love
Edwin Morgan (Scotland) – Strawberries
Chinua Achebe (Nigeria) Love Song (for Anna)
Muriel Rukeyser (USA) Looking at Each Other
Linton Kwesi Johnson (England/Jamaica) Hurricane Blues
Tracy K Smith (USA) Duende
Warsan Shire (England/Somalia) for women who are difficult to love
Frank O'Hara (USA) – Having a Coke With You
Adrian Mitchell (England) Celia Celia
Jackie Kay (Scotland) – Her
Maya Angelou (USA) – Come. And Be My Baby
Kutti Revathi – (India) Breasts
Sujata Bhatt (India) – Love in a Bathtub
Annabelle Despard (Norway) Should You Die First
Alice Oswald (England) – Wedding
Valzhyna Mort (Belarus) Love
Nikola Madzirov (Macedonia) - When Someone Goes Away Everything That's Been Done Comes Back
Iman Mersal (Egypt) – Love
Sinead Morrissey (Ireland) Forgive Us Our Trespasses
Kei Miller (Jamaica) Epilogue
Faiz Ahmed Faiz (Pakistan) Before You Came
WS Merwin (USA) In Time
Arundathi Subramaniam (India) Prayer
Yves Bonnefoy (France) A stone
Ko Un (South Korea) Snowfall
Amjad Nasser (Jordan) A Song and Three Questions
Vikram Seth (India) All You who Sleep Tonight


தமிழ் வாழ்வில் காதல்: நவீனத் தமிழ்க் கவிதைகள்
அறுபதாயிரம் காதல் கவிதைகளும்
உதிரியான சில குறிப்புகளும்
சுகுமாரன்
ஞானக்கூத்தன்சுகுமாரன்
சேரன்
அசோகமித்திரன்
அனிருத்தன் வாசுதேவன்
பெருந்தேவி
பின்வரும் கணக்கெடுப்பு தோராயமானது; ஆனால் ஓரளவுக்கு நம்பகமானது - நதியின் நீரோட்டத்தை வைத்து எங்கோ கன மழை பெய்திருக்கிறது என்று முடிவுசெய்வதைப் போல.
தமிழில் வெளியாகும் புத்தகங்களில் கணிசமானவை கவிதைத் தொகுப்புகளே. சிறு, நடு, பெரும் பத்திரிகைகளின் மதிப்புரை, புதிய புத்தகங்கள் அறிமுகம், வரப்பெற்றோம் என்னும் ஒற்றை வரித் தகவல்கள், விளம்பரம் ஆகிய பகுதிகளை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டால் மாதத்துக்குச் சராசரி இருபது கவிதை நூல்கள் வெளியாகின்றன. ஒரு தொகுப்பில் குறைந்தபட்சம் ஐந்து கவிதைகளாவது காதலைப் பற்றிப் பேசுவனவாக இருக்கின்றன. இவை தவிரக் காதலில் கசிந்துருகுவதையே கவிப் பொருளாகக் கொண்டிருக்கும் தனித் தொகுப்புகள் வேறு. தற்காலிகமாக அவற்றை விலக்கிவைத்துப் பார்த்தால் ஒரு மாதத்துக்குச் சுமார் நூறு காதல் கவிதைகள். ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு கவிதைகளாகின்றன. இன்று கவிதை பெற்றிருக்கும் ஜனநாயக வடிவமே இந்த அமோக மலர்ச்சிக்கான சுதந்திரத்தைத் தந்திருக்கிறது என்பதும் கவனத்துக்குரியது.
1934இல் வெளிவந்த ந. பிச்சமூர்த்தியின் கவிதையிலிருந்தே புதுக்கவிதை வரலாறு தொடங்குவதாக விமர்சன மரபு வரையறுக்கிறது. அதை ஏற்றுக்கொள்வோமெனில் நவீனக் கவிதை எழுபதாண்டுகளைக் கடந்திருக்கிறது என்பது உறுதி. இந்த எழுபது ஆண்டுகளில் புதுக்கவிதைமீதுள்ள ஒவ்வாமை காரணமாக இருபது ஆண்டுகள் கணிசமான எண்ணிக்கையில் கவிதைகள் வெளிவரவில்லை என்று ஊகிக்கலாம். ஆக, ஐம்பது ஆண்டுகள். ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு மேனியில் கிட்டத்தட்ட அறுபதாயிரம் காதல் கவிதைகள் வெளி வந்திருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதுக்கவிதை வடிவில் பிச்சமூர்த்தி அச்சியற்றிய முதல் கவிதையின் தலைப்பு 'காதல்' என்பது தற்செயலானதல்ல என்றும் வரலாறு நிர்ணயித்த போக்கு என்றும் நம்புவது வியப்புக்குரியதாகாது. இந்த அடிப்படையில் இன்று கவிதையெழுதும், குறிப்பாகக் காதல் கவிதை எழுதும், இளங்கவிஞன் மாபெரும் வரலாற்றுக்கு உடமையாளனாகவும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுபவனாகவும் ஆகிறான்.

இன்னொரு கோணத்திலும் இதை வியாக்கியானம் செய்யலாம். வாழ்க்கையின் நடைமுறைகளை அகம், புறம் என்று பகுத்துவைத்திருக்கும் மரபில் இந்த அபாரப் பெருக்கம் நீர்போல அநாதியானது; சரளமானது. ஆனால், சமகாலத் தமிழ் வாழ்க்கையில் காதல் இந்த அளவுக்கு எளிமையானதா என்னும் கேள்விக்குப் பதில் காண்பது சிக்கலானது. ஓர் அர்த்தத்தில் உலகியல் தளத்தில் நிறை வேற்றிக்கொள்ள முடியாத உணர்வை உளவியல் தளத்தில் பூர்த்திசெய்துகொள்ள மனித மனத்தை அனுமதிப்பதும் இலக்கியத்தின் கடமைகளில் ஒன்றுதானே?

இந்தச் சுய நிறைவேற்றம்தான் எல்லா மொழிகளிலும் காதல் கவிதைகளின் அதீதப் பெருக்கத்தைச் சாதாரணமாக்குகிறது என்று கருதுகிறேன். இந்த மனநிறைவு இல்லாத வாழ்க்கை கற்பனைக்கு அப்பாற்பட்டது. சக உயிருடன் உறவில்லாத நடவடிக்கை இயற்கைக்கு முரணானது. வாழ்க்கையில் காதல் வகிக்கும் பங்கு இதுவாகலாம். நேரடி அனுபவம் இல்லாமலே கைகூடக் கூடிய சிறப்புத் தன்மை பொருந்திய உணர்வு காதல் மட்டுமே. பசியுணர்வை உணவைத் தவிர வேறு எதனாலும் ஆற்ற முடியாது. ஆனால், காதல் பற்றிய கற்பனையை மென்றுகொண்டே அந்த உணர்வின் ஏகதேச நிலையை அடைந்துவிட முடியும். வாழ்நிலை அனுமதிக்கும் சலுகை இது என்று கொள்ளலாம். அதே சலுகையை இலக்கியமும் அனுமதிக்கிறது. குறிப்பாகத் தமிழ்க் கவிதை மரபு. அகத் துறை முன்னுதாரணங்களை அடியொற்றியே கூடப் புதிய கவிதையை எழுதிவிட முடியும். துறவிகளும் பெண்ணை உதாசீனப்படுத்திய சித்தர்களும் காதல் ததும்பி வழியும் கவிதைகளை எழுத இந்த விரிவான மரபுதான் இடமளித்திருக்கிறது. இது தொடர்பான மேலதிக விவாதத்தைக் கவிதையை ஆழமாகவும் அகலமாகவும் அலசும் திறனாய்வாளர்களிடம் விட்டு விடுவதே நல்லது.

எத்தனை முறை எழுதினாலும் எத்தனை விதமாக வெளிப்படுத்தினாலும் அலுப்புத் தட்டாத உணர்வாகக் கருதப்படுகிறது காதல். காதலையும் கவிதையையும் பற்றி யோசிக்கும்போது உடனடியாக நினைவில் படரும் குறுந்தொகைப் பாடல் ஒன்று உண்டு. பரணர் இயற்றியது. 'ஊர் மக்கள் நீரெடுக்கும் குளத்திலுள்ள பாசி போன்றது பசலை. காதலன் தொடும்போதெல்லாம் விலகி, விடும்போதெல்லாம் பரவிக்கொண்டிருக்கிறது' என்ற பொருளில் வரும் பாடலின் சில சொற்களை மாற்றினால் காதல், கவிதை இரண்டின் காலாதீதத் தன்மையை (நன்றி - பிரமிள்) விளக்கிவிடமுடியும்.

n
காலப் புழக்கத்தில் ஒற்றைப் பொருள் கொண்டனவாக மாறிய சொற்களில் காதலும் ஒன்று. வெவ்வேறு அர்த்தங்களைத் தருவதாக இருந்த இந்தச் சொல்லுக்கு இன்றைய பயன்பாட்டில் ஆண்-பெண் விழைவு என்பதாக மட்டுமே பொருள் காண முடிகிறது. தமிழில் புதுக்கவிதை பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய சென்ற நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப் பகுதியில் இந்தக் கருத்தமைவின் பிடிவாதம் நிலவியதாக இப்போது என்னால் அவதானிக்க முடிகிறது.

பேராசிரியர் நா. வானமாமலை எழுதிய 'புதுக்கவிதை: முற்போக்கும் பிற்போக்கும்' என்ற விமர்சன நூலில், சார்புநிலை மேற்கொண்டிராத எழுத்து, நடை போன்ற இதழ்களில் வெளியான கவிதைகளை ஃபிராய்டிய பாதிப்பில் உருவான நசிவு எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியிருந்தார். காதல் கவிதைகள் என இன்று நாம் அடையாளம் காணும் கவிதைகளைக் குறிப்பிட 'இணைவிழைச்சு' என்ற சொற்சேர்க்கையையும் முன் வைத்திருந்தார். முன் சொன்ன சிற்றிதழ்களில் வெளியான கவிதைகளை அவர் இரண்டே பெட்டிகளில் போட்டிருந்தார். ஒன்று - அழுகுணித்தனமானவை, இரண்டாவது - இணைவிழைச்சு வேட்கையைத் தூண்டி விடுபவை. இரண்டு பெட்டிகளில் இருந்தவற்றைக் குவித்துப்போட்டுப் பரிசீலனை செய்தே இவையெல்லாம் பிற்போக்குத்தனமான கவிதைகள் என்ற விமர்சன முடிவுக்கு வந்திருந்தார். பிச்சமூர்த்தி மட்டும் அந்தக் கண்டனத்திலிருந்து விலக்கப்பட்டதன் காரணம் அவரது நீண்ட தாடியென்று நம்புகிறேன். அவரது இலக்கியத் தோழரான கு.ப.ரா.வின் கவிதை ஒன்றும் இத்தகைய கண்டனத்துக்கு இலக்காயிற்று என்று நினைவு.

இத்தனைக்கும் காதல் பற்றிய எதார்த்தமான மன நிலையைத்தான் அந்தக் கவிதை பதிவுசெய்திருந்தது. காதலைச் சந்தேகமாக உணரும் பெண்ணிடம் அந்த உணர்வு அவளிடமே ஊடுருவியிருப்பதைக் காதலன் சுட்டிக்காட்டுவதாக அமைந்த கவிதை அது.
"காதலென்றால் கேலிசெய்கிறாயே, எதற்காக?
கவிதையைக் கள்ளச்சொல் என்கிறாயே வேண்டுமென்றுதானே?
நான் துதிக்கிறேன் என்றுதானே?
இருக்கட்டும்,
நமது இன்பத்து ஏகாந்த இரவின் இறுதியில்
பிறைவெளுத்த பின்மாலையில்,
இருள்வெள்ளம் வடிந்த வைகறையில்,
ஓவியமூட்டும் உன் ஒளிக்கரங்களைவிட்டு
நான் பிரிவினைகொள்ளும் போர்வேளையில்,
உன் கண்களைக் கலக்குவதென்ன, காதலல்லாமல்?
அந்தக் கனவழியும் பொழுதில்
உன் வாயின் வார்த்தைவனப்புத் தானென்ன, கவிதையல்லாமல்?"

ரொமான்டிக்கான உணர்வை ரொமான்டிசிசப் பகட்டில்லாமல் வெளிப்படுத்திய கவிதை இது என்று இப்போது வாசிக்கும்போதும் தோன்றுகிறது. ஓர் அர்த்தத்தில் தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஆயிரக் கணக்கான காதல் கவிதைகளுக்கும் ஆதாரமான மனத் தளம் இதுதான் என்றும் நம்புகிறேன். இந்த மனத் தளத்தின் பரிமாணங்கள் வெவ்வேறு கவிஞர்களிடம் வெவ்வேறு வடிவம் பெற்றிருந்தாலும் அடிப்படை இலக்கணம் இதுவாகத்தான் இருக்கிறது. காதல் என்ற உணர்வு தீண்டியதும் ஆவேசமடைந்து 'காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்' என்ற அதீத உணர்வுடன் காதலனோ கவிஞனோ துள்ளிக் குதிக்க முடியாது என்பதை நவீன வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது. அதையே நவீனக் கவிதை நடைமுறைப்படுத்துகிறது. அப்படி விண்ணைச் சாடுகிற காதல் கவிதைகளை, புரட்சிகரமான கவிதைகள் எழுதி அறைகூவல் விடுத்த கவிஞர்கள்தாம் எழுதிக் குவித்தார்கள் என்பது வரலாற்றின் விநோதம். அப்படி எழுதப்பட்ட கவிதைகள் பிற்போக்கானவை என்னும் விமர்சனத்துக்கு இலக்காகக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வில் காதலியின் புன்னகையைப் புரட்சியில் அடைந்த வெற்றியுடனும் காதலியின் புருவத்தைச் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கொய்யும் அரிவாளுடனும் ஒப்பிட்டுக் காதலை முற்போக்கான சங்கதியாக மாற்றிய இலக்கிய வித்தைகள் நடத்தப்பட்டதும் உண்டு. எல்லாப் புரட்சிகளும் தோற்கடிக்கப்படும் இன்றைய காலப் பகுதியில் இது போன்ற கவிதைகள் கால வழுவாயின; அல்லது வெகுசன ஊடகத்தின் பகுதியாயின. அன்று முற்போக்குக் கவிதைகளுக்கான வகை மாதிரிகளாக இருந்த பிற நாட்டுக் கவிஞர்கள் பலரும் (உதாரணம்: விளாதிமிர் மயாகாவ்ஸ்கி, பாப்லோ நெரூதா, பெர்டோ ல்ட் பிரெக்ட்) காதலுக்காகக் கசிந்து உருகிக் கரைந்தவர்கள் என்பதும் அது போன்ற கவிதைகள் எழுதுவது புரட்சிக்கு விரோதமானது என்னும் மூட நம்பிக்கை அற்றவர்களாக இருந்தவர்கள் என்பதும் நமது கவிதைச் சூழலில் கவனிக்கப்படவில்லை. எத்தனை சுவாரசியமான முரண்!

அன்றாட நடவடிக்கைகளில் உள்ளோடும் மனச் சஞ்சாரம்தான் நவீனக் காதல் கவிதைகளில் வெளிப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஓர் அர்த்தத்தில் இதைத் தமிழ்க் கவிதையில் தொடர்ந்து வரும் மரபின் குணங்களில் ஒன்றாக வகுக்கலாம். சங்கக் கவிதை இயலில் அன்றாட நடவடிக்கையின் பின்புலத்திலேயே கவிதையின் சாத்தியங்கள் கண்டறியப்படுவதைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

'காணாமற்போன அணிகலனைக் கண்டுபிடித்தவளைப் போல, ஓடிச் சென்று அவனுடைய துடிக்கும் மார்பில் சேர்வாயாக', 'பானை வனையும் சக்கரத்தில் ஒட்டிக்கொண்ட சிறு பல்லிபோல இவனுடன் பல பாதைகள் கடந்தேன்' என்பன போன்ற வரிகளை இந்தக் குணத்துக்கான எடுத்துக்காட்டுகளாக முன்வைக்கலாம்.

நவீனக் கவிதைகளில் இந்தக் குணம் மேலோங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இதன் விளைவு கவிதைகளில் காட்சிப் படிமங்களின் பிரயோகம் அதிகம் என்பதே. 'சிணுக்கம்' என்ற பிச்சமூர்த்தியின் கவிதை முதலே இந்த இயல்பு தொடர்கிறது. தமிழில் வெளியான மென்மையான காதல் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று இந்தக் கவிதை.
காதலி, பெரும்பாலும் மனைவியின் செல்லச் சிணுங்கல்தான் கவிதை மையம். ஒரு விநோதமான ஊடல். பிரியும் வேளையில் எல்லாரும் விடைபெற்றுக்கொள்கிறார்கள்; தன் காதலன் அல்லது கணவன் மட்டும் சொல்லிக்கொண்டு போவதில்லை என்ற மனத்தாங்கல் அந்தப் பெண்ணுக்கு. அதை அவனிடமே சொல்லவும் செய்கிறாள். ரயிலேறும் உறவினர்கள் மதகின் திறப்பருகே நீர்ச் சுழல் தயங்குவதுபோல நின்று விடைபெறுகிறார்கள்; படிகளைத் தொட்டுப் பிரிகையில் விடைபெறும் அடையாளமாகக் குளத்தின் அலை, சின்ன மூச்சை விட்டுப்போகிறது. ஆனால், நம்ம ஆள் மட்டும் தன்னைப் பொருட்படுத்தாமல் போகிறான் என்ற அவளது செல்லப் புகாருக்கு அவன் சொல்லும் பதில்:

'அடி கிறுக்கே,
சென்றாலன்றோ விடைபெறவேண்டும்
போனாலன்றோ வரவேண்டும்?
என்னுயிர் என்னிடம்
இல்லாதிருக்கையில்
இருள் ஏது?
உடலுக்கு வாக்கேது?
போக்கேது, வரவேது?
வீட்டிலிருந்தும்
என்னுடன் வருகின்றாய்
வெளியே சென்றாலும்
உன்னுடன் இருக்கிறேன்'

இந்தப் பதிலில் சிணுக்கம் விலகிச் சிரிப்பாகிறது. கவிதையின் மென்னுணர்வும் அதற்கான படிமங்களும் அனுபவமாகப் பதிகின்றன. மதகில் சுழித்துத் தயங்கும் நீரின் நிச்சலன அசைவையோ படிகளில் முட்டிப் பின்னொதுங்கும் அலை வளையத்தையோ பார்க்கும்போது காதலியை அல்லது மனைவியை நினைவில் கொண்டுவராமலிருக்காது இந்தக் கவிதை. இதேபோலக் காதலின் மென்னுணர்வை எழுப்பும் மற்றொரு எழுத்து காலப் படிமம், எஸ். வைதீஸ்வரன் கவிதையில் தென்படுகிறது. 'மலரற்ற தார் ரோடில் விழிக்கு மலராகவும், வெயில் எரிக்கும் வெறும் தரையில் வழியெதிரில் பாவாடை நிழலுக்குள் வெண்முயல்களாகவும்' பெண்ணின் பாதங்கள் மாறித் தெரிவதன் காரணம் வேறென்னவாக இருக்க முடியும்?

முன்னோடிக் கவிஞர்களின் கவிதைக்கான பல பாடுபொருள்களில் காதலும் ஒன்றாக இருந்தது என்பதைக் கடந்து விரிவாக யோசிக்க அதிகம் இல்லை. காதல் பற்றிய அவர்களது மனப் போக்கு வரையறைக்குட்பட்டது. அவர்களது காதல் வானவில்லில் ஓரிரு நிறங்களே இருந்திருக்கின்றன. இந்தக் கவிதைகளில் இடம்பெறும் பெண் உருவமாகப் பெரும்பாலும் மனைவியரே முன்னிருத்தப்பட்டனர் என்று வாதிப்பது சரியாக இருக்கும். இந்தக் கவிதைகளை எழுதிய கட்டங்களில் அவர்கள் மணமானவர்களாகவே இருந்திருக்கக்கூடும். நடுத்தர வர்க்க மதிப்பீடுகளைச் சார்ந்தே அவர்களது அந்தரங்க மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவிதைகள் பட்டவர்த்தனமாகச் சொல்கின்றன. காதலை ஓர் இனிய மனநிலையாகச் சொல்லும்போதே அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். பெண்மீதான வசீகரம், அவளது அழகு, அவளுக்காகக் காத்திருப்பதன் சுகம், பெண்ணை இழந்துவிடுவதில் நேரும் துக்கம், பிரிவாற்றாமை ஆகிய உணர்வுகளை ஆண் நிலையிலிருந்து சொல்லியிருக்கிறார்கள். ஒருவிதமான லட்சியக் காதல் நிலைதான் (ஜீறீணீtஷீஸீவீநீ றீஷீஸ்மீ) இக்கவிதைகளில் துலங்குகிறது.

பின்னாட்களில் தேவதேவன் எழுதிய கவிதை ஒன்றில் காதலுக்கு நேர்ந்த மாற்றம் பற்றிய சித்தரிப்பு காணப்படுகிறது. நவீனக் காதலின் சூழலையும் அது எதிர்கொள்ளும் சிக்கலையும் நையாண்டி செய்கிறது கவிதை.
'கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்?
ஒரு காப்பி சாப்பிடலாம் வாயேன்'
தேவதேவனால் காதலியைக் காபி சாப்பிட அழைக்கவாவது முடிகிறது. முன்னோடிகளால் அது பற்றி யோசிக்கவாவது முடிந்திருக்குமா என்பது சந்தேகம். காதல் பற்றிய மனநிலையிலும் அக்கவிஞர்கள் கனவான்களாகவே இருக்க விரும்பியிருப்பார்கள்போல.
சி. மணிதான் ஆண்-பெண் விழைவின் புனிதப் பாசாங்குகளைக் கலைத்த முன்னோடிக் கவிஞர். காதலின் முதிர்வில் காமத்தின் வாசனையும் எழுமென்று சுட்டிக்காட்டியவர். காதலுறவின் மென்மையான படிமங்களை உருவாக்கிய அதே சமயத்தில் காமத்தின் வலுவான தருணங்களையும் சி. மணி சித்தரித்தார். மனத்தின் பரிதவிப்பு மட்டுமல்ல; உடலின் வேட்கையும்தான் காதல் என்று அவர் கவிதைகள் ருசுப்படுத்தின. அப்படி நிறுவும் தீவிரத்தில் அவரது காதல் கவிதைகளில் காதலில் அல்லது காமத்தில் ஈடுபடும் மனம் புனையும் நுட்பமான உணர்வுக் கோலங்கள் இல்லாமற்போயின.
காதலையும் காமத்தையும் பகுக்க முடியாத மனோ வேளைகளைக் கவிதையில் நிறுவியவர் பிரமிள். காதலின் தீராத் தாபமும் காமத்தின் மாளாத ஆவேசமும் கொண்ட வரிகளை அவர்தான் எழுதினார். ஆண் நிலையிலிருந்து கற்பிக்கப்பட்ட காதலுணர்வில் பெண்ணின் மனவோட்டத்தை முன்னிருத்தியவர் பிரமிள் என்பது என் கணிப்பு. எடுத்துக்காட்டாக 'ராமன் இழந்த சூர்ப்பநகை' என்னும் கவிதையைக் குறிப்பிடலாம். சனாதனமான பொருளில், அதாவது ஆண்மையப் பார்வையில் சூர்ப்பநகை செய்தது ஆள்மயக்கும் லீலை. பிரமிளின் வரிகளில் இந்தத் தருணம் பெண்ணின் காதலாகவும் காமமாகவும் அவை உதாசீனப்படுத்தப்படும்போது எழும் சீற்றமாகவும் மாறுகிறது. கவிதைத் தலைப்பு என்னுடைய சார்பை வலுப்படுத்துவதாகவும் கருதுகிறேன். கவிதையில் வெளிப்படும் குரல் பெண் தொனியுள்ளது. அவளுக்கு நேரும் மனவோட்டங்களை முன்வைப்பது. ராமனை இழந்த சூர்ப்பநகையின் கூற்று அது. அவள் விரும்பிய தருணம் கைகூடாத ஆற்றாமைதான் கவிதையின் மையம். ஆனால் தலைப்பு 'ராமன் இழந்த சூர்ப்பநகை'. ஆக, இழப்பு பெண்ணுக்கல்ல; ஆணுக்கு. அவன் கடவுளாக இருந்ததுதான் காரணம். அந்தக் கவிதையை இங்கே நினைவு கூரலாம்.
'இருளின்நிற முகக்கதுப்பில்
தணல்கள் சிரித்தன
அவள் ராக்ஷஸப்பாறைகள்
பாகாய் உருகின.
உருகியென்?
அவனோ கடவுள்
ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்
நடையோ
ரடியொவ்வோ
ரடியில்
தசையின்
ஜ்வாலை நடுக்கம்
நடுங்கியென்?
அவனோ, பாவம்
கடவுள்
தழுவ விரியும்
தொடைகள் திரண்டு
பிரிந்துபிரிந்து
இடையே ஓர்
தலைகீழ்க் கருஞ்சுடர்
எரிந்தெரிந்து அழைக்கும்
அழைத்தென்?
அவனோ, த்சொ,
கடவுள்'.

முதல் வாசிப்பில் இக்கவிதையைப் பற்றி எனக்குள் திரண்ட இந்தப் பார்வை காலப் போக்கில் மேலும் செழுமை பெற்றே வந்திருக்கிறது. இன்றுள்ள கருத்துச் சூழலில் கூடுதலாகவும் பொருள்படும் வாய்ப்பும் விரிந்திருக்கிறது என்பது என் அனுமானம்.
n
ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தர்க்கம் மறைந்திருக்கிறது என்ற நம்பிக்கையில் குதர்க்கமான ஒரு வகைப்படுத்தலை இங்கே மேற்கொள்ள விரும்புகிறேன்.
நவீனக் கவிதையின் பின்புலம் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்தே உருவானது. ஆண்-பெண் உறவு பற்றிய கவிதைக்கான கருத்தமைவுகளும் இந்த மனோபாவத்திலிருந்தே வெளியாகியுள்ளன என்பது இயல்பானது. காதல் அடுத்தவன் பிரச்சினையாக இருக்கும்போது ரசிக்கத் தகுந்த ஒன்றெனவும் தன்னுடையதாக வரும்போது ரகசியமாகக் காப்பாற்ற வேண்டிய பிரமாணம் எனவும் இந்த மனோபாவம் வற்புறுத்துகிறது. எனவே, காதலியின் அடையாளங்களையோ, குறைந்தபட்சம் பெயரையோகூட வெளிப்படுத்துவது அத்துமீறலாகிறது. அதனால் கவிதைப் பெண்கள் பெரும்பான்மையும் மனைவியின் சாயலிலோ நிழலிலோ ஒண்டிக்கொள்கிறார்கள். தமிழில் இன்றளவும் ஆகச் சிறந்த காதல் கவிதைகளை எழுதிய பாரதியின் கண்ணம்மாகூட அவரது மனைவி செல்லம்மாளின் முகமூடியுடன்தான் நமக்கு அறிமுகமாகிறாள்.

பாரதி கவிதைகளை அடிப்படையாக வைத்து அவரது வாழ்க்கையை அவரது வாய்மொழியாகப் பதிவு செய்ய முயன்ற முத்துக்கிருஷ்ணனின் வரலாற்று நூலில் (என்.சி.பி.எச். வெளியீடு) கண்ணம்மா என்பது செல்லம்மாள் அல்லவென்றும் பாரதியின் பிள்ளைப் பிராயத் தோழியென்றும் குறிப்பிட்டிருப்பது ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே படுகிறது. அச்சில் வெளிவந்த அவரது முதல் கவிதையான 'தனிமை இரக்கம்' காதலும் காமமும் பிணைந்தது. பதினாலரை வயதில் திருமணம் முடித்த இளைஞனுக்குப் பதினெட்டு வயதில் இரு தள அனுபவமும் சாத்தியம். எனினும் மேற்சொன்ன வாழ்க்கை வரலாற்றை வாசித்தது முதல் இதில் காதலின் சொல்லப்படாத ரகசியம் புதைந்திருப்பதாக நம்ப மனம் விரும்புகிறது. பதினான்கு வயது நிறைவுபெறும் முன்பே திருமணம். மறு ஆண்டில் தந்தை மரணம். அதைத் தொடர்ந்து காசிக்குப் போகும் பாரதி மனைவியைப் பிறந்த வீட்டில் விட்டுச் செல்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு ஊர் திரும்பிய பின்னர்தான் குல வழக்கப்படி சாந்தி முகூர்த்தம் நடைபெறுகிறது. 'தனிமை இரக்கம்' கவிதை அதற்கு அடுத்த ஆண்டில் (1904) வெளியாகிறது. பிரிவாற்றாமைதான் கவிதையின் கரு. அது மனைவியைப் பிரிந்த நாட்களின் மனவோட்டமாகவே இருக்கலாம். அல்லது மனத்துக்குள் பதிந்துபோன பெண்ணின் நினைவுகூரலாக இருக்கலாம். இரண்டாவதே பொருத்தம் என்று தோன்றுகிறது. அப்படி நம்புவதற்கான ஆதாரங்கள் கவிதைகளிலேயே தென்படுகின்றன.

பாரதியின் காதல் கவிதைகளில் இணைவிழைவின் தவிப்புகளும் குதூகலங்களும் அதிகம். இந்தக் காதலின் அடிவேர்கள் பக்தியிலும் ஆன்மீக விசாரங்களிலும் படர்ந்திருப்பதால் காமத்தின் ஆவேசம் குறைவு. முன்னதை லட்சியக் காதலின் உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த நிலையில் 'பங்கமில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்'. அதுவே நிறைவு. இரண்டே இரண்டு கவிதைகளில் மட்டும் காமத்தின் பெருங்கடல் கொந்தளிக்கிறது. அவை 'தனிமை இரக்க'மும் 'எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி' என்ற வள்ளிப்பாட்டும். இவற்றில் காதல் முற்றிக் காமம் பீறிடுகிற மனச் சஞ்சாரத்தைப் பார்க்கலாம். 'வட்டங்களிட்டும் குளமகலாத தெப்பத்தைப்போல' நிறைவு தேடி அலைந்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வரம்புகளுக்குள் தமிழின் காதல் கவிதைகளை அடக்கிவிடலாம். காதலியையோ மனைவியையோ கவிதையில் சித்தரிக்கும்போது தமிழ்க் கவிஞர்கள் கனவான்கள்; உடல் துய்ப்பின்போது ஆதிமனவாசிகள்.

இதே அடிப்படையில் கவிதையில் பெண்கள் சித்தரிக்கப்படுவதையும் வகைப்படுத்தலாம். முன்னோடிக் கவிஞர்களின் கவிதைப் பெண்கள் அனைவரும் தேவதைகள். அவர்களது நெருக்கம் இந்தக் கவிஞர்களின் இருப்பையும் படைப்புச் செயலையும் அர்த்தப்படுத்துகிறது. பின்னாளில் இதே பெண்கள் மோகினிகளாக உருமாறுகின்றனர். ஆணை அலைக்கழிக்கும் காரணிகளாகிறார்கள். கலாப்ரியா, விக்ரமாதித்தன் கவிதைகளில் பெண் பெரும்பாலும் தேவதை; சில சமயம் மோகினி. அபூர்வமான தருணங்களில் இரண்டும் சேர்ந்த ஈருடலி.

நவீனத் தமிழ்க் கவிதையாளர்கள் பலரும் இந்த இருவகையான பெண்ணிருப்புச் சார்ந்து காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். அபூர்வமாக ஓரிருவர் மட்டும் இந்த நீரோட்டத்தில் கால் நனையாமல் கடந்து போயிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி ஓர் உதாரணம். அவரைத் தேவதைகளோ மோகினிகளோ தீண்டவேயில்லை. நூற்றுச் சொச்சம் கவிதைகள் எழுதியிருந்தும் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த ஒரே ஒரு காதல் கவிதை 'பூக்கள் குலுங்கும் கனவு'. மனத்துக்குள்ளிருக்கும் பெண்ணின் மணநாள் தோற்றம் பின்பும் ஆக நினைவுகளை அடுக்குகிறது கவிதை. வாழ்வின் தேனை வண்டைப் போல உறிஞ்சும்படி பெண்ணுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார் கவிதை சொல்லி. வாழ்வின் 'பாதை முடிவுறும் முன்னே என்றேனும் ஒருநாள் / அந்த இளம் மீசையிடம் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லு / உன் கடந்த காலங்களின் பழைய நினைவாய்' என்பது அந்த வேண்டுகோள். இது முன்னாள் காதலின் ஞாபக மிச்சமா, அல்லது ஏதோ பெண்ணுக்குச் சொன்ன பொதுவான நினைவூட்டலா என்னும் சந்தேகம் ஏற்படுகிறது. எனினும் இந்த வரிகளிலுள்ள நெகிழ்ச்சியும் மீசைக்காரக் கணவனிடம் வாழ்ந்து தீரும் முன்பு தன்னைப் பற்றிச் சொல்லக்கோரும் முனைப்பு ஒரு காதலனுடையது என்ற ஊகத்திலும் இதைக் காதல் கவிதை என்று உறுதியாக நம்புகிறேன்.

கிட்டத்தட்ட இதே தருணத்தைச் சித்தரிக்கும் இன்னொரு கவிதை சமயவேல் எழுதிய 'சந்தி'. சுந்தர ராமசாமி கவிதையிலிருந்த சந்தேகச் சாயல் இந்தக் கவிதையில் இல்லை. முன்னாள் காதலியைத் தற்செயலாகச் சந்திக்கும் காதலன். அவன் தன் மனைவியோடு. அவள் தன் கணவனோடு. காதலன் கணவனிடமும் காதலி மனைவியுடனும் பேசிக்கொண்டிருப்பதும் அதன் இடைவேளையில் 'அந்த ஒரேயொரு விஷயம்' மட்டும் தொடப்பட முடியாமல் புதைந்து எழுந்து புதைந்து நழுவிக்கொண்டிருப்பதும் கவிதைக்கான கணங்களாகின்றன. இந்த மென்கண நினைவுகள்தாம் கவிதையின் காலியாகாத களஞ்சியம். அவைதாம் காட்சிப் படிமங்களை உருவாக்குகின்றன. படிமங்களின் பின்னங்களை மெல்ல மெல்ல உருவாக்கிக் கூட்டுப் படிமத்தை மனப் பிம்பமாக நிறுத்திய கவிதை

ஞானக்கூத்தனின் 'பவழமல்லி'.
கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா, மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா, சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும், சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடும் தூங்கும்.
பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி
கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்தநேரம்
தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?

நவீன எழுத்துக்களில் மிக நேர்த்தியான காதல் கவிதை இது என்பது என் அபிப்பிராயம். கவிதையில் இடம்பெறும் காட்சி அடுக்குகள், பின்னணி, பாத்திரங்களின் செயல் மூலம் தெரிகிற மனப்போக்குகள், அவற்றுக்கெல்லாம் மையமான ஒரு பெண்ணின் இருப்பு ஆகிய அனைத்தையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது. கூடவே எல்லாப் பூக்களும் மலர்ந்து ஓய்ந்த பிறகு யார் கவனத்தையும் கவரும் நோக்கமில்லாமல் மலரும் பவழமல்லியின் வாசனை. கவிதையில் வரும் காதலியும் அன்றாடச் செயல்கள் முடிந்த பின்னர்தான் காதலைப் பற்றி யோசிக்க அனுமதிக்கப்படுகிறாள் என்ற மெல்லிய சோகத்தின் வாசனையைப் பவழமல்லி மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. இன்னொரு கோணத்திலும் இந்தக் கவிதை நவீனமானது. கவிதை ஓர் ஆண் குரலில்தான் வெளிப்படுகிறது. அதிலேயே பெண்ணின் இருப்பும் விளங்கிவிடுகிறது.
n
தொடர்ந்த எதார்த்தமாகவும் வசப்படாத கனவாகவும் கரைந்து கரைந்து காதலை எழுதியவர் கலாப்ரியா. நவீனக் கவிதையில் காதலுக்குப் புதிய வகைமாதிரிகளைச் சிருஷ்டித்தவரும் அவர்தான். காதல் கவிதைகள் எழுதுவதிலிருந்த நடுத்தர வர்க்க சங்கோஜத்தை உதறினார். காதலியின் முகத் திரையை விலக்கி அடையாளத்துடன் வெளிப்படுத்தினார். நவீனக் கவிதையில் 'சசி' என்ற காதல் பாத்திரத்தை நடமாடவிட்டார். ஒரே சமயம் வரமருளும் தேவதையாகவும் அலைக்கழிக்கும் மோகினியாகவும் அவதாரம் கொண்டிருக்கிறாள் சசி.

காதல் பாத்திரத்தைப் பெயர் சொல்லி அறிமுகப்படுத்தியவர் நகுலன் என்பது என் யூகம். நகுலனின் சுசீலாதான் கலாப்ரியாவின் சசிக்கு முன்னுதாரணம் என்பதும் என் எண்ணம். இந்த முன்னுதாரணங்கள் தந்த துணிவில் பிற்காலக் கவிஞர்கள் தாங்கள் காதலிக்கும் பெண்களின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லத் தயாரானார்கள். சங்கர ராமசுப்ர மணியனின் கவிதைகளில் அங்கங்கே தட்டுப்படும் வாணி என்ற பெயர் மனப் பெண்ணின் அடையாளம் என்று தோன்றுவதுண்டு. அவ்வளவு தைரியமில்லாதவர்கள் கவிதையின் அடியில் '....க்கு' என்று போடுமளவுக்காவது துணிந்திருந்தார்கள். சில உடல்மொழியின் சாயல்களாலும் தோற்றச் சித்தரிப்பிலும் வெளிப்படுத்தினார்கள். யூமா வாசுகியின் கவிதையொன்றில் பர்தா அணிந்த காதலி தென்படுவதை நினைவுகூரலாம்.

கலாப்ரியாவின் காதல் ஒரு விதத்தில் நாசூக்கானது. அவரது கவிதையுலகில் புகைரூபமாக நடமாடும் சசியைப் பற்றிய சுட்டிக்காட்டல்களில் காதலனின் தாப மனம்தான் பெரும்பாலும் வெளிப்படுகிறது. சசி இந்தக் காதல் சமர்ப்பணங்களைப் பற்றி என்ன கருதியிருப்பார் என்பது கவிஞர் மட்டும் அறிந்த ரகசியம். கலாப்ரியா மட்டுமல்ல, தொண்ணூறுகள்வரை கவிதையில் இயங்கிய எல்லாருக்குமான பொது விதி இது. எல்லாருடைய காதல் பெண்களும் தேவதைகளாகவும் மோகினிகளாகவும் மட்டுமே காட்சியளித்தனர். கவிதையில் சகஜமான பெண்கள் உலாவத் தொடங்கியது புதிய தலைமுறைக் கவிஞர்கள் வருகைக்குப் பின்னரே. இவர்களிடம் பெண்களின் தேவதைத்தனம் செல்லுபடியாகவில்லை. அலைக் கழிக்கிற மோகினிகளும் சாதாரணப் பெண்களும்தாம் இவர்களை வசீகரித்தவர்கள். சங்கோஜமற்றுக் காதலையும் பூடகமாகக் காமத்தையும் முன் தலைமுறை சொன்னது. புதியவர்களிடம் இந்த இடக்கரடக்கல் அவசியமற்றுப் போயிற்று. 'அன்றைக்கு உன் / முலைக்கணவாய் இடைப்பிளவு தொடையாடம்பரம் எங்கும் / என் மத்தகச் சிதறல்கள்' என்றோ 'தொண்டையடைத்த பறவையின் விக்கல்களாகப் பிதுங்கி வருகிறது / உன் விரியோனியின் சமிக்ஞை' என்றோ காதலைத் தீட்டிக் காட்டுவதில் யூமா வாசுகிக்கோ 'காயப்படுத்தியதற்காக உன் முலைகளிடம் / மாறி மாறி மன்னிப்புக்கோரினேன் /பல்தடங்கள் சிரித்தன' என்று எழுத பிரான்சிஸ் கிருபாவுக்கோ மனத் தடையில்லை.

இந்தத் தடையின்மையை வெகுவாகக் கொண்டாடிய கவிஞர் விக்ரமாதித்யன். குறிப்பாகக் காதல் கவிதைகளில் அல்லது ஆண்-பெண் விழைவு சார்ந்த கவிதைகளில் விக்ரமாதித்யன் ஆனந்தக் கூத்தனாகிவிடுகிறார். காதலும் காமமும் சமயங்களில் ஆன்மீகச் சின்னங்களுமாகப் பெண்ணைக் கொண்டாட விரும்புகிறார். ஆனால் அவரது இயல்பான மனநிலை 'சின்ன உருவமானால் கையில் அள்ளிக்கொள், பெரிய வடிவானால் காலில் விழு' என்ற நோக்கில் திரண்டிருப்பதால் அங்கே பெண்கள் வெறும் சுகவர்த்தினிகளாகக் குறைவுபடுத்தப்பட்டு விடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
n
பெண்ணுறவை இயற்கைமீதான மோகமாகக் காட்டிய கவிஞர்களாகச் சிலரை வகைப்படுத்தலாம். தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், 'தனிமொழி' என்ற தலைப்பில் வெளியான கவிதைகளுக்காக பிரம்மராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியவர்களை இந்த வரிசையில் அமர்த்த வேண்டும் (வரிசையில் துண்டைப் போட்டுவைக்க ஆசைதான். அவையடக்கம் மறுக்கிறது). தேவதேவனின் 'ஒரு மரத்தைக்கூடக் காணமுடியவில்லை' கவிதையையும் மனுஷ்யபுத்திரனின் 'இழந்த காதல்' என்ற கவிதையையும் மேற்கோளாகத் தருவதன் மூலமே நான் சொல்ல விரும்பும் மனப்பாங்கை முன்வைக்க முடியும். இரு கவிதைகளின் தலைப்பும்கூட இதன் அடையாளமே.

ஒரு மரத்தைக்கூடக் காணமுடியவில்லை
ஒரு மரத்தடி நிழல்போதும்
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என்மனம் தாங்க மாட்டேனென்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்.
கர்ப்பிணிப் பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மரநிழலில்
விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலைமுலையாய்க் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையைக்கோதும்
மரம் உனக்குப் பறவைகளை அறிமுகப்படுத்தும்
அந்தப் பறவைகள்
வானத்தையும் தீவுகளையும்.
வானமோ
அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே.
ஒரு மரத்தடி நிழல்தேவை
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப்
போவேன்.

இழந்த காதல்
நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒர் விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்
ஆயிரம்
இலைநுனிகளால்
வேர்நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம்ததும்பிப்
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்.
n
கொஞ்சம் வேடிக்கையான பார்வையுடனேயே இந்தக் காதல் பயணத்தில் ஈடுபட்டேன். காரியார்த்தமான எல்லைகளுக்குள் சென்றிருப்பதாக இப்போது தோன்றுகிறது. சில பொதுமைகளையும் சில பிரத்தியேகத் தன்மைகளையும் தொகுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் இவை எல்லாமும் ஆண் நிலையிலிருந்து எழுதப்பட்ட கவிதைகளைச் சார்ந்தவை. ஆணுலகில் கவிதைப் பெண்கள் வாழ்வும் உணர்ச்சியும் தருபவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்; காதல் பித்தேற்றி ஆணைப் புலம்பவிடுகிறார்கள்; இவற்றை ஒட்டியும் மறுத்தும்தான் பெரும்பான்மையான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. மரபான பொருளில் சொல்வதென்றால் நமது ஆண் கவிஞர்கள் எழுதிக் குவித்திருப்பது கைக்கிளைக் கவிதைகள்தாம். ஒருதலைப் பார்வையிலிருந்து உருவானவைதாம் பெரும்பான்மையும். இதே கருத்தைப் பெண் கவிஞர்களுக்கும் விரிக்கலாம். ஆண் உருவாக்கும் கவிதையுலகில் பெண்ணின் இருப்பு பரவலாக இருப்பது போலப் பெண் உருவாக்கும் உலகில் ஆணின் இருப்பு உண்டா? இல்லை என்பதே பதில்.

பெண் ஓர் ஆணை உணரும் உடன்பாடான அம்சங்கள் குறைவு. கவிதை ஆண்கள் பொதுவாகக் கொடூரர்கள்; காமம் தீர்ந்ததும் விலகிப்போகிற இருகால் விலங்குகள்; பெண்ணின் சுதந்திரத்தை முடக்கும் ஆதிக்கவாதிகள். இது போன்ற படிமங்கள்தாம் அதிகம். சட்டென்று நினைவுக்கு வரும் கவிதையில் ஒன்று மாலதி மைத்ரியின் 'காதல் கடிதம்'. ஐம்பத்தைந்து வயதான தாய் மாமன் பானுவுக்கு எழுதும் கடிதம். 'ஏதாவது துரோகம் பண்ண நெனச்சே / தேவடியா நாயே / ஆள்வச்சுத் தீத்துக்கட்டிடுவேன் / பதில் எழுதவும் / அன்புடன் மாமா' என்பவை கவிதையின் முடிவு வரிகள். இந்தக் கொடூரர்கள்தாம் பெண் கவியுணர்வில் ஆண் அடையாளங்கள். ஒருவேளை ஆண்கள் அப்படித்தான் இருக்கிறார்களா?

காலங்காலமாகப் பெண்கள்மீது சுமத்தப்பட்ட பழியின் வஞ்சினம் மட்டுமே அவர்களிடம் கவிதையாகிறதா? அப்படியானால் நவீன உலகில் சக வாழ்வுக்கான சாத்தியங்கள் இல்லாமல் போகாதா? காதல், காமம் ஆகியவற்றின் மரபான அர்த்தங்கள் சிதறி விழும் நவீன வாழ்க்கையில் பெண்ணின் கவிதை வெளி இன்னும் விரிவானதாகவும் நெகிழ்வானதாகவும் மாற வேண்டியிருக்கிறது. காதல், ஆணுக்கு வாழ்வின் ஒரு பகுதி; பெண்ணுக்கு வாழ்வின் பெரும்பகுதி என்ற சமமற்ற நிலை சீராக்கப்படும்போது கவிதையில் காதலுக்கான சவால்கள் அதிகமாகும். அதுவரை பெண் கவிஞர்களும் கைக்கிளைக் கவிதைகள்தாம் எழுத நேரும். அது கவிதைக்கு நல்லதல்ல; வாழ்க்கைக்கும்.

பெண்ணுணர்வில் ஆணின் இருப்பை வடிவமைப்பதில் கருத்துருவங்கள் கணிசமான பங்கைக் கொண்டிருக்கின்றன. ஆண் தன்னை நிறுவிக்கொள்ளும் களமான காமச் சூழலில் அவனுடைய காதலைவிட அதிகாரம் முனைப்புக் காட்டுகிறது. இந்தத் தருணத்தைப் பெண் கவிஞர்கள் கவிதையாக்கும்போது அவர்களது மொழியும் வெளிப்பாடும் ஆவேசம் கொள்கின்றன. சுகிர்தராணியின் 'இரவு மிருகம்' கவிதையின் நியாயம் இது என்று எண்ணுகிறேன்.

ஆண் சக உயிராகக் கருதப்பட்டுப் பெண் நெகிழும் தருணங்களும் பெண்களால் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அளவிலும் வீச்சிலும் சொற்பம். மாலதி மைத்ரியின் 'மௌனப்பாதை' ஓர் உதாரணம். இதில் வரும் 'நீ அருகில் இல்லாத சமயங்களிலும் / உன்னுடன்தான் பேசிக்கொண்டிருந்தேன்' என்னும் வரிகள் ஒரு சமத்துவ மனநிலையைக் கொண்டிருக்கின்றன. இந்த வரிகளைக் கட்டுரையின் முதற்பகுதியில் எடுத்துக் காட்டப்பட்ட பிச்சமூர்த்தியின் வரிகளுடன் இணைத்து யோசிக்கலாம். கவிதை ஒரு தொடர் நிகழ்வு என்று பேசுவதற்கான சான்றாக அந்த ஒப்பீடு அமையும்.
கருத்தாக்கத்தின் கனத்தைத் துறந்த இயல்பான தருணங்களில் காதலும் காமமும் ஒரே நிறமாகும் நிஜத்தைச் சொல்வதாக நான் நம்பும் கவிதை குட்டி ரேவதியின் 'என் காமத்தின் துளி'. மெல்லிய ஆதங்கமும் நியாயமான புகாரும் கௌரவமான மன்றாடுதலுமான இதன் கவிதைத் தொனி தமிழில் அபூர்வமானது.

'என் காமத்தை இதுவரை
நீ வருடிப்பார்த்தது கூட இல்லை
அது அணையாது காக்கவேண்டிய
ஒரு சுடரைப்போலத்
தெருவெங்கும் அலைகிறது
பின்புதான் குப்பைகளை எரிக்கும்
நெருப்போடு சேர்கிறது.
..........
வருடிப்பார்த்திருக்கிறாயா என் காமத்தை
ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப்போலவோ
அல்லது
ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும்
ஆர்வத்துடனோ?'
n
காதல் கவிதைகள் மீதான வாசக அங்கீகாரம் ஒரு பொது நிலையைச் சார்ந்தது. காதலர்கள் வேறாக இருந்தாலும் வாசிப்பின்போது வாசகன் உணர்வது தனது காதல் மனத்தையே. காதலைக் கொண்டாடியவனாகவோ காதலால் தண்டிக்கப்பட்டவனாகவோ இருந்தாலும் கூட. ஆக, ஒரு கவிஞன் காதலிப்பது அவனுக்காக மட்டுமல்ல; அவனுக்கு முன்னும் பின்னுமான பலருக்குமாக என்று தோன்றுகிறது. இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுபவனைப் பற்றிய முகுந்த் நாகராஜனின் கவிதை வரிகளைக் கட்டுரையின் முத்தாய்ப்பாகக் குறிப்பிடலாம்.

லட்சக்கணக்கான ஆண்டுகள்
கோடிக்கணக்கான மனிதர்கள்
சுமந்த காதலை
நான் ஒருவனே சுமக்கும்படி ஆகிவிட்டது (நான் சுமந்த காதல்கள் - அகி)
கவிஞர்கள் பாவம்தான், இல்லையா?

 "தமிழ் வாழ்வில் காதல்: புலம்பெயர்ந்த வாழ்வு
கண்ணாடி நிலம்
சேரன்
ஞானக்கூத்தன்சுகுமாரன்
சேரன்
அசோகமித்திரன்
அனிருத்தன் வாசுதேவன்
பெருந்தேவி
அந்த அறைக்குள் மிகுந்த தயக்கத்துடனேயே நுழைந்தேன். இலையுதிர் காலத்தின் மூர்க்கத்தனமான மழையில் ஒட்ட நனைந்துபோய் இருந்தமை எனது தயக்கத்திற்குக் காரணமல்ல. காலணிகளை எங்கே வைப்பது என்று முடிவுசெய்ய இயலாமல் இருந்த குழப்பமும் காரணமல்ல. அழைத்து வந்தவளுடைய அறை. நிழலையும் காணவில்லை. நான் மூன்றாவது காலடி எடுத்து வைக்குமுன்பாகத் தாவித் தாவி உள்ளே சென்றவளைக் காணவில்லை. அறைக்குள் கிழக்குப் புறமாக இன்னுமொரு கதவு. அதற்கு எதிர்ப் புறம் மேலுமொன்று. சற்றுச் சிறிதாக. எந்தக் கதவினுடாக அவள் சென்றாள் என்பது புதிர். அறையோ அதைவிடப் புதிர். இதுவும் காரணமல்ல.
அப்போ எது?
கண்ணாடி.
திருத்தமாகச் சொன்னால் கண்ணாடிகள். அறையில் எல்லாப் பக்கமும் கண்ணாடிகள் இருந்தன. அவளுடைய பழைய தட்டச்சுக் கருவிக்குப் பின்னால், சுவரில், விசித்திரமான வடிவத்தில் ஒரு கண்ணாடி இருந்தது. அறையின் முன்கதவின் பின்புறமும் விளிம்புகள் அலை அலையாக நெளிந்த ஒரு கண்ணாடி. எல்லாக் கண்ணாடிகளிலும் திடீரென என் பிம்பம் விழுந்தது. என் ஒவ்வொரு அசைவும் நூற்றுக்கணக்கான அசைவுகளாக எதிர் மின்னலிடப் பெரும் சங்கடத்தை எதிர்கொண்டேன். மழையில் நனைந்தாலும் உடம்பைச் சிலிர்த்துக்கொள்ள முடியாத கரிக்குருவியைப் போல அவளுடைய தலை வாயிலில் நின்று தயங்கினேன். வெளியே காற்றில் எற்றுண்ட இலையொன்று சன்னலில் வந்து மோதியது. எனது ஆடைகளில் இருந்து சொட்டிய நீர் தரை விரிப்பை மெல்ல ஈரமாக்கிற்று.
'இந்தா, தலையை முதலில் துவட்டிக்கொள்' என்றவாறு கிழக்குப் புறம் இருந்த கதவூடாகச் சஸ்கியா உள்ளே வரவும் என்மீது மெத்தென இறங்கியது ஒரு பெரும் துகில்.
n
சற்சதுரமான களப்புகளையும் கழனிகளையும் பார்த்துச் சலித்த விமானம் அம்ஸ்டர்டாம் நகரில் இறங்கியபோது இரவு 10 மணி. ஒவ்வொரு தடையாகத்தாண்டி வரவேற்பறை வாயிலில் வர, அதன் பெருங் கண்ணாடிக் கதவு தானாகவே திறந்துகொள்கிறது. அதற்கு நிற வேற்றுமை தெரியாது. உள்ளே வர, முறுவல் முகத்தில் துளிர்க்கிறபோது கண்கள் சிறுத்துப்போனாலும் விரிந்த கைகளை நீட்டுகிறான் புதிய நண்பன்.
எப்படி என்னை அடையாளம் கண்டாய் என்று நான் கேட்கவில்லை.
சிறகுகள் மடியப் பூவில் அமரும் வண்ணத்துப் பூச்சியைப் போல மடிக்கப்பட்ட சைக்கிள் ஒன்று அவன் தோளில் குந்தியிருந்தது.
நகருக்குள் வருகிறோம். அதன் பெரு ரயில் நிலையத்தில் இறங்கியபோதும் விமானத்தின் இரைச்சல் காதுக்குள் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. ரயில் நிலையத்தில் பூக்கடைகளுக்கு அருகே மதுப் போத்தலை உடைத்து வீசி எறிந்தவனின் பின்னால் வாலைக் குழைத்தபடி சென்ற நாய் எனக்கு உபாலியை நினைவூட்டியது. உபாலி எங்கள் வீட்டுக்கும் கலா வீட்டுக்கும் பொதுவானர். இந்திய ராணுவத்தினரின் காலம். மேலதிகமாக இரண்டு கால்களும் ஒரு வாலும் அளவற்ற அன்பும் நிறைந்தவர். இயக்கத்தைக் கண்டால் குரைக்கமாட்டார். இந்திய ராணுவத்தைக் கண்டால் மட்டுமே குரைக்கும் பேரறிவாளர். அந்தக் காரணத்துக்காகத்தான் பின்னொரு நாள் உபாலியை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது என்று ரேச்சல் வீட்டில் ஒரு மாலை விருந்தின்போது 'இந்து' ராமுக்குச் சொன்னேன் (அவருக்கு அரை வெறி; எனக்கு முக்கால்).
'ஐயோ, அப்படியா? இலங்கையில் சண்டை துவங்கியபோது ஒரு கையைப் பின்புறமாகக் கட்டியபடி அல்லவா எமது படைவீரர் சண்டை போட்டனர். அதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்' - இந்து ராம்.
'ஐயோ, அப்படியா?' என்று நான் கேட்க நேர்ந்தது.
'இப்படி இந்தக் கடைப் பக்கமாக நின்றுகொள். தொலைந்துபோகாதே. ஒரே சனக் கூட்டமாக இருக்கிறது. ஹேக் நகரத்துக்குச் செல்லப் பயணச் சீட்டுகளை வாங்கி வருகிறேன்' என்றபடி எட்டி முன்னே போகிறான் ஜான். அப்போதுதான் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பெரிய ஆண்களைக் கண்டேன். ஒருவன் சிரித்தான். அழகிய சிரிப்பு. மற்றவன் முகம் இறுகிப்போயிருந்தது. செப்பு நிறம். நீண்ட கூந்தல். கண்களும் கண்களும் இன்னொரு முறை வெட்டிக்கொள்ளும் முன்பாக வேறுபுறம் திரும்பினேன். எனினும் அவர்கள் என்னை நோக்கி நகர்வதை உணர்ந்தேன். அவர்களுடைய நீளக் கால்களும் எட்டிய நடையும் அச்சத்தைக் கிளப்பின.
சற்று விலகிச் செல்வோமே என்ற எண்ணம் எழவும் நகர்ந்தேன். அப்போது எனது இடது கையை இறுகப் பற்றியது ஒரு கை. அவனுடைய விரல்கள் பீரங்கிக் குழல்கள்போல இருந்தன. விசித்திரமான வாசம் ஒன்று அவனைச் சூழ எழுந்தது. பாறாங்கல்போல இருந்த அவனுடைய மார்பில் பெரு நகங்கள் கொண்ட விலங்கின் படமொன்று அரைகுறையாக வெளியே தெரிந்தது. மற்றவன் இடுப்பைத் தழுவினான்.
'வா, போகலாம். பயப்படாதே. கொஞ்சம் பியர். கொஞ்சம் புகை. நிறைந்த களிப்பை அனுபவிப்பாய்' என்று சொல்லும்போதே அவனது கைகள் இடுப்பைவிட்டு முன்புறமாகக் கீழிறங்கின. அதிர்ச்சியும் ஆச்சரியமும் அச்சமும் ஒன்றாக வெடிக்கத் திடீரெனக் கைகளை இழுத்துக்கொள்கிறேன். முழங்கையால் மூர்க்கமாக அவனுடைய விலாவை இடிக்கிறேன். சிரிப்பு மறையாத முகத்தோடு திருப்பியும் முன்னேறி வருகிறான் அவன். எவ்வித ஆச்சரியமும் அற்றுச் சனக் கூட்டம் என்னைத் தள்ளி விரைகிறது.
என்னுடைய முழுப் பலத்தையும் திரட்டி அவனுடைய முகத்தில் ஓங்கி அறைவதே பொருத்தமான வழி என்று திட்டமிட்டேன். இரண்டடி பின்னால் எடுத்து வைக்கிறபோதுதான் ஜான் வருவதைக் கண்டேன். எனக்குப் புரியாத மொழியில் உரத்த குரலில் ஜானும் அவர்களும் பேசிக்கொண்டார்கள். கோபத்துடன் ஜான் முறைத்த பிற்பாடும் புன்முறுவலுடன் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார்கள் அவர்கள். ஆண்களைக் காமுறும் இருவர் மத்தியில் பெண்ணாய் உணர்ந்தேன்.
n
திரை மூடிய இரவைத் தாங்கி
முன் வந்தேன்
பின்னும் முன்னும்
யாரோ எழுப்பிய காலடி ஒலியில்
கவனம் பிசகிற்று
யாரடி என்றேன்
நினைவைத் திருப்பாமலேயே
திரும்பிச் சிரித்தாள்
திரை விலக்கி ஒளியை அழைக்கிறேன்
ஏழு நிறங்களில் மூன்று மொழிகளில்
ஒரே பாடல்

n
என்னுடைய புதிய நகரத்துக்கு வந்து மூன்று நாட்களாயிற்று. திசையும் இயற்கையும் நாட்களும் துலங்கித் தெரிய ஆரம்பித்தன. பழைய அனுபவங்களோடு புதிய நகரத்துக்கு வந்தவர்களையும் புதிய கற்பனையோடு பழைய வீடுகளுக்குத் திரும்பியவர்களையும் வளாகத்தில் சந்தித்தேன். 'வீடுவரை நடந்து போவோமா என்று சஸ்கியா கேட்டால், இல்லை, நீ நடந்து போ. நான் பின்னால் சைக்கிளில் வருகிறேன் என்று சொல்லிவிடாதே' என்றான் ஜான். 'வீட்டருகே வந்ததும் மேலே வருகிறாயா என்று அவள் கேட்டால் அடுத்த முறை பார்ப்போம் என்று சொல்' என்றான் யூடோ . முதல் தரம் அவளுடைய அறைக்குப் போகும்போது வெறுங்கையுடன் போகாதே என்றாள் மரிஷா. 'நிறைவேறிய எதிர்பார்ப்பை எவ்வாறு கவர்ச்சி குன்றாமல் தக்கவைத்துக்கொள்வது என்னும் உன் கேள்விக்கு அம்ஸ்டர்டாமில் விடை கிடைக்காது' என்ற மேலான ஆலோசனை ரேச்சலிடமிருந்து கிடைத்தது. சஸ்கியாவுக்கு வாங்கிச் சென்ற பூங்கொத்தின் மீதும் எனது ஆடைகள்மீதும் வெள்ளத்தை வாரி இறைத்துச் சென்றான் ஒருவன்.
n
மருத்துவமனை.
அடுத்தடுத்து விரியும் பெருங்கூடங்கள்.
கூடத்து ஒளியில் தனித்திருக்கிறது
ஒரு குப்பைத் தொட்டி
இருபுறமும்
காலற்ற இருக்கைகள்
ஆளற்றுக் கிடந்தன
கண்ணாடி வெளி.
வெளியே
காத்திருப்பவர்களின் சிகரெட் புகை இல்லை.
உடல் கிழித்து உயிர் திருத்தி
மூடித் தைத்தபின் வெளியே அனுப்புகிற
அறை ஒரு புறம்
உடல் பிளந்து உயிர் விளையும்
அறை மறுபுறம்
நடுவே தனித்து நிற்கிறேன்
இந்த நொடிப்பொழுது
பிறந்த எல்லாக் குழந்தைகளுமே
இறந்துவிட்டன என்ற அறிவிப்பு
கனவில் ஒரு கனவுபோல
மிதந்து வருகிறது
மூன்று குழந்தைகள் கருவில்
எதனைத் தெரிவாய்
எனக் கேட்கிறான்
அறம் அறப் படித்த மருத்துவ ஆலோசகன்
பைபிளைக் கேள் என்கிறான்
வெள்ளை நகரின் மெக்சிகோ மருத்துவன்
சிந்தனையை இடை முறித்தது
அலறி விரைகின்ற தீயணைக்கும் வண்டித்
தொடர்

n
-யார்?-
-நான்-
-...-
-ஏன் வந்தாய்?-
-தெரியாது-
-...-
-உள்ளே யார் உன்னோடு?-
-காற்றும்...?-
-உள்ளே வரலாமா?-
-.../இல்லை-
-ஏன்?-
-காதல், வரலாற்றை அழித்துவிடுகிறது-
n
பறக்காத பறவையைக் கண்டேன்
மலையேறத் தெரியாத குதிரையைக் கண்டேன்
கனவு காணாத கவிஞனைக் கண்டேன்
தவிலும் மத்தளமும் துணை சேராத
பாடலைக் கேட்டேன்
உள்ளொளி மரித்த
அவள் குரலையும் கேட்டேன்
ஆண்டுகளாகத் தத்தளித்த காதல்
முற்றுப் பெற்றது.

n
இரண்டு காதல்களுக்கிடையே
கிடைத்த சிறு இடைவெளி
அதில் நடந்தேன்
கனவற்ற ஒரு பகல்
மழையற்ற பெருநிலம்
முறையற்ற சிறு காமம்
துடக்கி எறிய ஒரு பறவையின்
துடவி இறகா அது
நனைத்துச் சுமக்கிறேன்
பெருவாழ்வை

இறந்தும் எழுகிறேன்
தரை தெரியாத பறவையாய்.


தமிழ் வாழ்வில் காதல்: காதலின் படிநிலைகள்
காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்
பெருந்தேவி
ஞானக்கூத்தன்சுகுமாரன்
சேரன்
அசோகமித்திரன்
அனிருத்தன் வாசுதேவன்
பெருந்தேவி
முதலில் இரு கதைகள்: ஒன்று, நம் நிலப்பரப்பின் ஒரு தெய்வத்தினுடையது.
இமய மாது (பார்வதி) ஒரு கன்னியாகப் புட்பகாசை (புஷ்பஹாஸா) என்னும் பெயரோடு உருவெடுத்துச் சிவனை வழிபட்டுவந்தாள். சிவன் அவள் முன் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டான். "பிரிவேயில்லாமல் உன்னுடன் நான் இருக்க வேண்டும்" என்றாள் அவள். அதற்கு அவன் "பிரம்மாவின் ஒரு நாள் நான்கு யுகங்களின் ஆயிரம் சுற்றுகளால் ஆனது; பத்துப் பிரம்மாக்களின் காலம் விஷ்ணுவின் வாழ்வின் ஒரு மணி நேரம்; பன்னிரெண்டு விஷ்ணுக்களின் வாழ்நாள் என் வாழ்வின் ஒரு நிமிடம்; அப்படியொரு நிமிடம் கழிந்த பின்னர் நான் ருத்ரன் என்னும் பெயர் சூட்டிக்கொண்டு உன்னை மணப்பேன். அதுவரை நீ கடற்கரையில் தவம் செய்ய வேண்டும். அதுவரை நானும் பூர்ணசபையில் (சுசீந்திரத்தில்) பிரம்மச்சாரியாக இருப்பேன்" என்றான். உடனே அவள் அதை ஏற்றுக்கொண்டு சிவன் குறிப்பிட்ட இடம் நோக்கிச் சென்றாள். எனவே அந்த இடம் கன்னிகையின் இடம் என்றே அழைக்கப்படுகிறது (டேவிட் ஷுல்மன் 146).
கன்னியாகுமரியின் கதைக்கு நேரெதிர்ப் புள்ளியில் முடிவதாக நம்மில் தொடங்குகிறது இரண்டாவது கதை. ஒரு சீனக் கனவான் ஆடலணங்கு ஒருத்தியின்பால் காதல் வயப்பட்டான். அவளோ "என் சன்னலுக்குக் கீழே, தோட்டத்தில், ஒரு முக்காலியில் அமர்ந்தபடி நூறு இரவுகளை நீ எனக்காகக் காத்திருந்து கழித்தாயானால் நான் உன்னுடையவள்" என்று சொல்லிவிட்டாள். ஆனால் தொண்ணூற்றொன்பதாம் இரவில் அந்தக் கனவான் எழுந்தான், முக்காலியைத் தன் கையில் இடுக்கிக்கொண்டான்; சென்றேவிட்டான் (ரோலான் பார்த் 40).
n
ரோலான் பார்த்தின் 'காதலர் சொல்லாடல்: சிதறல்கள்' புத்தகத்தில் காத்திருத்தல் (Attente) என்கிற தலைப்பிலான குறிப்பு காதலர் சம்பந்தமாகப் பல சமயங்களில் (சந்திப்பு, கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது திரும்பிவருதல் போன்றவை) காத்துக் கிடக்கும் நேரம் கொந்தளித்து எழும்பும் பரிதவிப்பை, ஆற்றாமையை விரித்துச் சொல்லும் முகமாக விரிகிறது (37-40). எதற்காகக் காத்திருத்தல்? வருகைக்காக, மீண்டும் வருவதற்காக, ஒரு வாக்களிக்கப்பட்ட சான்றுக் குறிக்காக. இக்காத்திருத்தலின் முக்கியக் குணாம்சமாக ஒன்றைச் சொல்கிறார் பார்த். வீணாகவோ, ஏன், அளக்கவியலா அவலமாகவோ ஆகிவிடக்கூடிய இக்காத்திருத்தல் விகிதப் பொருத்தம் என்பதை அறியவே செய்யாது. உதாரணமாக, நள்ளிரவில் நடுக்காட்டில் காதலனுக்காக ஒரு பெண்ணின் காத்திருப்பும் தன் காதலியின் ஒரு தொலைபேசி அழைப்புக்காக வேறொருத்தனின் காத்திருப்பும் ஒன்றே போன்ற பதற்றத்தைக் காத்திருப்பவரிடத்தில் ஏற்படுத்துவன என்பதே இங்கு முக்கியம்.
காதலிக்காக அல்லது காதலனுக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் காட்சியாக நிகழ்த்துகிறது பார்த்தின் எழுத்து. காத்திருக்கும் நேரத்தில் நேசிக்கப்படுகிற பொருளுடைய இராமை அதன் அந்நேர இழப்பை நம்மில் நிரப்புகிறது. பார்த் 'சிறு இழவுத் துக்கம்' (minor mourning) என்று இதைக் குறிப்பிடுகிறார். இந்தத் துக்க நாடகத்தின் மூன்று கட்டங்கள் நமக்குப் பரிச்சயமானவையே. கட்டம் ஒன்று: கபே ஒன்றின் உள்ளே ஒருவன் காத்துக்கொண்டிருக்கிறான். முதல் காட்சியின் ஒரே நடிகன். தான் காதலிப்பவர் இதுவரை வந்து சேராதது உறுத்த ஆரம்பிக்கிறது அவனுக்கு. நேரத்தைக் கணக்கிடுகிறது மனம். காத்திருப்பின் சுமை கூடக்கூட அதை இறக்க முயற்சிக்கிறான். அவனது முதல் யூகம், நடந்த தொடர்புப் பரிமாற்றத்தில் ஏதாவது பிரச்சினை இருக்குமோ என்பதுதான். சந்திப்பை உறுதிகொண்ட கணத்தை நினைத்துப் பார்க்கிறான். முடிவுசெய்தபடி சரியான இடத்துக்குச் சரியான நேரத்தில்தானே வந்திருக்கிறோம்? அல்லது வேறு ஏதாவது இடமா? இந்த யோசிப்பின் கூர்மை, கட்டம் இரண்டில் கோபத்தை மையப்படுத்துவதாகிறது. மனதுக்குள் காதலிப்பவரைக் கண்டிக்கிறான். "எது எப்படியாக இருந்தாலும், அவன்(ள்) முயற்சி செய்திருக்கலாம்." "இப்போது இங்கே மட்டும் இருந்தால் எப்படிக் கோபத்தைக் கொட்டலாம்?" கட்டம் மூன்று ஆற்றாமையின் தூய தருணத்தை அடைவதாக அல்லது பெறுவதாக அமைகிறது. வராவிட்டால்? இது கைவிடப்படுதல் கவிழ்கின்ற ஆற்றாமை. கன்றிப்போகிறான். ஒரு கணத்தில் இராமை சாவாக மாறுகிறது - மற்றவள்(ன்) இறந்ததே போல் இருப்பதாக உணர்கிறான். இந்த நாடகம்/விளையாட்டு - play என்றே இதைக் குறிப்பிடுகிறார் பார்த் - மற்றவளி(னி)ன் வருகையால் முடிந்துவிடுகிறது.
கட்டம் ஒன்றில் அவன் காத்திருக்கும் மற்றவள்(ன்) வர அமைதியாகவே வரவேற்பு நடக்கிறது. கட்டம் இரண்டில் அவள்(ன்) வந்துசேர வரவேற்பு ஒரு (கோப?) நாடகீயமாக அரங்கேறுகிறது. எதிர்பார்த்த காதலி/காதலன் வருகைதந்துவிட்டால் கட்டம் மூன்றின் தன்மை கருணையுடையதாக, மற்றவளை(னை) அங்கீகரிக்கும் தருணமாக, வாய்ப்பாக மாறிவிடுகிறது. நிம்மதியின் ஆழ்மூச்சு, பாதாள அறைகளிலிருந்து மேலெழும்பி ரோஜா மணத்தின் வாழ்வை மீண்டும் கண்டுபிடித்தல் என்று இப்புத்துயிர்த் தருணத்தை விவரிக்கிறார் பார்த்.
n
தமிழின் அகத் திணை மரபு, முல்லை என்று வகைமைப்படுத்தப்பட்ட உரிப் பொருளை (காதல் அனுபவத்தை) காத்திருத்தல் சார்ந்து முன்வைக்கிறது. (சுருக்கமான பிரிவில்) காதலன் திரும்ப வரக் காத்திருத்தல் முல்லை உரிப் பொருளாக அகத் திணை மரபில் அழைக்கப்படுகிறது; என்றாலும், காத்திருத்தலின் வெவ்வேறு படிநிலைகளாக முல்லைக்கு அடுத்த சில அகத் திணைகள் சுட்டுகின்ற அனுபவங்களையும் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.
"குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின் வண்டுசூழ் மாலையும் வாரார்", "அவரோ வாரார் முல்லையும் பூத்தன", "முகை முற்றினவே முல்லை முல்லையொடு ... மாலை வந்தன்று என் மாணலங் குறித்தே" (குறுந்தொகை 220, 221, 188) என்று பிரிவாற்றாமையைப் பேசும் முல்லைத் திணைப் பாடல்கள் காத்திருப்பு என்பதைக் காலம்/காலமாற்றம் பற்றிய புலவுணர்வோடு அரங்கேற்றுகின்றன. காத்திருத்தலில் நேரம் சென்று கொண்டிருப்பதைப் பற்றிய கவனம், அவதானிப்பு இப்போது கூர்மைப்படுகிறது. எதிர்பார்த்த காதலன் இதுவரை வந்து சேராததன் உறுத்தல் பார்த் விவரிக்கின்ற காத்திருத்தல் நாடகத்தின் முதற்கட்டத்தின் தன்மையை ஒத்தது.
அடுத்து மருதச் சொல்லாடல்களில் காத்திருப்பு பெரும்பாலும் ஊடலும் சந்தேகமும், ஏன், சமயங்களில் சீற்றத்தோடும் சேர நெய்யப்பட்டதாக இருக்கிறது. பாணன் காதலனின் வருகையை அறிவிக்கும் சமயத்தில் கூடக் காதலி, "நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ ... யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே" என்று கேட்கிறாள் (குறுந்தொகை 75). அழகிய சுனையிடத்து வெள்ளிய கொம்புகள் கொண்ட யானை உறைவதைப் போல மற்ற பெண்களோடும் சேரும் காதலன் குறித்த சந்தேகம் (குறுந்தொகை 75); வாயில்வழி நுழைய முயற்சிக்கும் காதலனிடம் "எப்பேர்ப்பட்ட அன்பு உன்னுடையது" என்றோ "உன்னைப் பிரிந்த எனக்கு உன் பாணன் பொய்யன், ஊரிலுள்ள பாணரெல்லாம் கள்வர்" என்றோ தோழி கூற்றாக எள்ளிச் சினந்து வாயில் மறுத்தல் (குறுந்தொகை 196, 127) மருதத்துக்கு உரித்தான நிகழ்வுகள் எனச் சொல்லலாம். பெரும்பாலான மருதத் திணைப் பாடல்கள் உள்ளுக்கும் வெளிக்கும் இடையே, புறத்திலிருந்து அகத்துக்குச் செல்லும் இயக்கப் போக்கில், புறத்தையும் அகத்தையும் தொடர்புறுத்தும் வாயிலில் நடிக்கப்படுகின்றன என்று எழுதுகிறார் ஏ.கே. ராமானுஜன். எதிர்நோக்கியிருந்தவர் வந்துசேர, காத்திருந்ததன் தவிப்பு சந்தேகமாக, ஊடலாக, சீற்றமாக உருக்கொள்ளும் மருதப் படிநிலை பார்த்தின் குறிப்பில் விரிக்கப்படும் கட்டம் இரண்டின் கோப நாடகீயம் போன்றது.
நெய்தல் படிநிலைக்கு உதாரணமாக இந்தப் பாடல்:

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்த நங்காதலர்
அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே.
(குறுந்தொகை 4)
மூன்று முறை நெஞ்சம் நோதலை அழுத்திச் சொல்லும் நெய்தற்பாடல். திரும்பத் திரும்பக் கூறல், ஆற்றாமை மிகுதியின் அறிவிப்பாகிறது. விழி தாங்குவதாகச் சொல்லப்பட்டிருக்கும் இமையைக்கூடத் தீய்க்கும் கண்ணீரின் கனம் இம்மிகுதியைக் குறிக்கும் ஒரு சுட்டி (வீஸீபீமீஜ்). சேர்ந்து இன்பம் அனுபவிக்க அமையப் பெறாத, இன்னும் வாராத காதலன் பற்றிய அவளது துக்கமும் பரிதவிப்பும் அவள் விழிகளில் அமையப்பெற்ற நீர்களோடு, இரங்கலின் மனம் திரிந்து பாலையின் கடுமையும் வறட்சியும் ஆட்கொள்ளும் முன்பான நிலை என்பதுபோலக் காத்திருப்பதன் அவலம் தோன்றுகிறது இங்கே.
காதலிக்காக அல்லது காதலனுக்காகக் காத்திருப்பதன் காலப்பிரக்ஞையை அப்படியொரு பிரக்ஞை எழும்பும் முன்னரே புதைத்துவிடும் ஆற்றல்பெற்ற இன்பத் துய்ப்பு குறித்த ஞாபகங்கள், கற்பனைகள்; இவற்றை அடிக்கோடிடும் குறிஞ்சி உற்சாகம் ஒரு புறம். நீண்ட நிச்சயமான பிரிவின் துயரம் குறித்த தயாரிப்பை, அத் துயரத்துடனான ஒருவித இசைவை உள்ளீடாகக்கொண்டிருக்கும் பாலையின் கவிதையியல் சட்டகம் மறுபுறம். இரண்டுக்குமிடையே முல்லை, மருதம், நெய்தல் சுட்டும் அனுபவங்களில் காத்திருத்தல் தன்னை வரையும் காலம் பற்றிய பிரக்ஞையிலிருந்து தொடங்கி, உணர்ச்சி முனைப்புகளை முன்நிறுத்தும் தனி நிகழ்த்துதல்களின் (private performances) சாத்தியங்கள் வழியே, ஆற்றாமைப் பெருக்கின் தாங்கவியலாத விளிம்புக்குத் தன்னைத் தள்ளிச் செல்கிறது.
நெய்தலின் இரங்கலை "வெப்பத்தால் வெண்ணெய் உருகும் உருக்கம் போல உருகும் நிலை" என்று வர்ணிக்கிறார் இரா. இளங்குமரன் (33). மீளதிகப் பரிதவிப்பில், ஆற்றாமையில் தான் என்கின்ற சுயம் கரைந்துகொண்டே போதல் என்று சொல்லலாம் இதனை. தனித்திருக்கும் அவலநிலையைக் காட்டிலும் உயிர் போவதே சிறந்தது (குறுந்தொகை 57), கைவிடப்படுவோம் எனில் உயிரன்றி வேறென்ன இழப்பது (குறுந்தொகை 334) என்பது போன்ற இரங்கல் மொழிதல்கள் இறப்புக்கு வெகு அருகாமையில் காத்திருப்பின் ஆற்றாமையை வைத்துப் பார்க்கின்றன. பார்த்தின் குறிப்பில் காத்திருத்தலின் மூன்றாம் கட்டத்தை இப்போது நினைவில் கொள்ளலாம். தாங்கவியலாத நிச்சயமின்மையாகக் காத்திருத்தலை உணரும்போது கைவிடப்படுதலின் அச்சமாகவே சுயம் ஆகிவிடுகிறது. சாவொத்த தானற்றுப்போதல் மாத்திரமே இத்தகையதொரு துயர்தரும் நிச்சயமின்மைக்கு ஈடானதாக, அதற்குச் சரியான பதிலாக, ஒத்த பதிலீடாகத் தோன்றும் போலும். தானற்றுப்போதலில் தான் காதலிக்கும் மற்றவன்(ள்) அற்றுப்போதலும் உறுதியளிக்கப்படுகிறது அல்லவா? அது எப்பேர்ப்பட்ட ஆறுதல் தரும் முடிவு? தவிரவும், காத்திருத்தல் நீள நீளக் காயமாகவே நம்முள் ஆழப்படும் காலத்தை வேறெப்படித்தான் நம்மிலிருந்து அந்நியப்படுத்த முடியும் நாம்?
II
இணையத்தில் மேகன் லாஸ்லாகி தந்திருக்கும் கட்டுரையில் வழங்கப்பட்டிருக்கும் நேர்காணல்களில் டேவ்கேட் என்பவர் ஷிடோ ரேயிடம் அவரைக் கவர்ந்தது எவையென்று கூறுகிறார்: "அவள் அழகானவள், நம்பிக்கைக்கு உரியவள், கூர்ந்து செவிசாய்ப்பதில் மிகச் சிறந்தவள்." ஷிடோ ரேயோடு அவர் உறவு கொள்கையில் ஆணுறையை அணிவதாக அவர் கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஷி-ஸான் என்று அவரால் செல்லமாக அழைக்கப்படும் ஷிடோ ரே பாதி பிரிட்டிஷ், பாதி ஜப்பானியர்.
பொருத்தமான ஆடைகளோடு கெல்லி ஸூ ஒரு பக்கத்திலும் ஜிஞ்சர் புரூக்ஸ் ஒரு பக்கத்திலுமாகப் பெரிய நாற்காலி ஒன்றில் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் கார்டன் க்ரிக்ஸ் என்பவர், எந்த ஆண்தான் தன் தோழிகளின் ஆடைகளற்ற புகைப்படத்தை மற்ற ஆண்கள் பார்க்க விரும்புவான் என்று வினவுகிறார்.
எவர்ஹார்ட் ஒரு மோசமான நிகழ்ச்சியை நினைவுகூர்கிறார்: "கேரலினின் பின்புறம் உடைந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இன்று காலையில் நான் அவளைப் படுக்கையிலிருந்து தூக்கும்போது ... முதல் அறிகுறி தெரிந்தது ... சற்றுப் பின்னோக்கி யோசிக்கையில், இன்று காலை படுக்கையில் நான் அவளோடு உடலுறவு கொண்டபோது இது நேர்ந்திருக்கும் என்று நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்."
ஷிடோரே, கெல்லி, ஜிஞ்சர், கேரலின் இன்னும் இதைப் போன்ற பல(ர்) சிலிக்கானாலான நிஜப் பொம்மைகள் (Real Dolls). தற்போது மேற்கிலும் ஜப்பானிலும் பிரபலமாகிவரும் இப்பொம்மைகள் வடிவமைப்பில் பார்பி பொம்மைகளிலிருந்து வேறுபட்டவை. இந்த "பிளாஸ்டிக் சகோதரிகள்" நிஜமான பெண்களின் பரிமாணங்களில், 'முக்கியமாக' பின்புறங்களோடும் மார்பகங்களோடும் ஓட்டைகளோடும். இவற்றின், இவர்களின் சிலிக்கான் சதை, இணக்கமான வெப்பத்தில், இளக்கத்தில். இவற்றை, இவர்களை, நம்மோடு சாப்பாட்டு மேசையில், வரவேற்பறையில், காரில் அருகமர்த்தலாம். பிடித்த ஆடை அணிகலன்கள் அணிவித்து அழகு பார்க்கலாம், அலங்கரிக்கலாம். முக்கியமாக, இவற்றின், இவர்களின் உடலை, உறவுக்கு எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் (நிஜமான பெண்களோடுகூட உடலுறவில் இந்த அளவுக்கு உச்சம் அடைந்ததில்லை என்று ஒருவரின் பாலியல் சான்றளிப்புக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது). ஆறாயிரத்து ஐநூறு டாலர்களுக்கு இந்த நிஜப் பொம்மைகளை விற்கும் வலையகத்தில் ஒன்பது விதமான உடலமைப்புகள், பதினான்கு வகை முக அமைப்புகள், ஆறு கண் வண்ணங்கள், மூன்று விதமான யோனி முடிப் பாணிகள், மற்றும் விதவிதமான விக்குகள், அலங்காரங்களில் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இந்நிஜப் பொம்மைகளை வாங்கியிருப்பவர்களின் காரணங்கள் கவனிக்கத்தக்கவை. உதாரணமாக நிஜப் பெண்கள் தனக்கிழைத்த அநீதிகளை க்ரிக்ஸ் பட்டியலிடுகிறார்: இசை விருந்தொன்றில் தன்னை விட்டுச் சென்றது, தன் குழந்தையை அவரைப் பார்த்துக்கொள்ள வைத்துவிட்டு வேறொரு நபரோடு சென்றது, தன் தட்டுமுட்டுப் பொருட்களை நகர்த்த அவரைப் பயன்படுத்திக்கொண்டது போன்றவை. மனிதத் தொடர்பைக் குறைத்துக்கொள்ள விரும்பும் க்ரிக்ஸ் இந்த நிஜப் பொம்மைகளோடான உறவில் தான் மிகவும் பத்திரமாக, பாதுகாப்பாக (safe and secure) உணர்வதாகக் கூறுகிறார். குழந்தைகளையே பெறக்கூடாத சிலருக்கு, ஜீன்பூல்களில் (மரபணுத் தொகுதிகள்) தன் ஜீன்களைத் தர வேண்டாதவர்களுக்கு இந்நிஜப் பொம்மைகள் பெரிய வரம் என்று வேறொருவர் கருதுகிறார்.
காத்திருத்தல் பற்றிய ரோலான் பார்த்தின் ஆய்வுச் சட்டகம், தமிழ்க் கவிதையியலின் உதவியால் நமக்குக் கிடைத்திருக்கும் புரிதல்கள், இவற்றின் அடிப்படையில், நிஜப் பொம்மைகள் வந்துவிட்டிருக்கிற நம் உலகத்தில் இன்று காத்திருத்தலின் பரிமாணங்கள் எப்படி வடிவம் கொண்டிருக்கும் என்றும் "பத்திரமாக, பாதுகாப்பாக" காதல் உறவுகளில் உணர்வது குறித்தும் யோசிக்கலாம். காதலில் காத்திருத்தலின் மூன்று படிநிலைகளில் நேரம் செல்லுதல் பற்றிய பிரக்ஞை, காதலிப்பவர் நமக்குத் தருகிற முன்னுரிமை அல்லது அவருக்குச் சாத்தியமாகியிருக்கக்கூடிய வேறு காதல் வாய்ப்புகள் பற்றிச் சந்தேகம், கோபம், நேரம் செல்லச் செல்ல நாம் கைவிடப்படுகிறோமோ என்கிற அச்சம் - இவை அடுக்கடுக்காகக் காத்திருப்பவரிடத்தில் படிவது பற்றிப் பார்த்தோம். நிஜப் பொம்மைகளுடனான உறவில் இம்மூன்று படிநிலைகளில் எதற்குமே இடமில்லை. இப்பொம்மைகள் நம் நேரத்தில், நமக்காக, நம்மோடு இருப்பவை.
காதலனை அல்லது காதலியைப் பிரிந்து காத்திருப்பது இருக்கட்டும்; சேர்ந்திருக்கும்போது நாம் உணர்கிற சிறு காத்திருத்தல்கள் நம் முன்னே நிறுத்துகிற நிச்சயமின்மைகளைக்கூட இவற்றின் உதவியோடு அழித்துவிட முடியும். உதாரணமாக, உரையாடல்களில் இவை "கூர்ந்து செவிசாய்ப்பவராக" மட்டுமே இருக்கும்; இவற்றின் பதில்களையோ விமரிசனங்களையோ விவாதங்களையோ கேள்விகளையோ கேட்க/பெற நாம் காத்திருக்கவேண்டாம். உடல்களாக எப்போதும் தயாராக இருக்கும் இவற்றுடனான உடலுறவில் இவற்றின் சம்மதத்துக்காகவும் சமிக்ஞைக்காகவும்கூட.
காத்திருத்தலின் பரிதவிப்பை, ஆற்றாமையை அழிக்க முயலும்போது, அதாவது உறவுகளில் "பத்திரமாக, பாதுகாப்பாக" இருப்பதே நமது இலக்காகும்போது, "சிறு இழவுத் துக்கத்தின்" அபாய நேர்வை நாம் எதிர்கொள்ள மறுக்கும்போது, இன்பத் துய்ப்பு என்பது உடனடியானதான (instantaneous) உருவம் கொள்கிறது. நாம் நினைத்தாலேயன்றி இன்பம் தள்ளிப்போகாது அல்லது நமக்கு மறுக்கப்படாதுதானே? "நாம் சந்தோஷமாக இருக்க சபிக்கப்பட்டிருக்கிறோம்" என்று உம் பர்ட்டோ ஈக்கோ வேறொரு கட்டுரைச் சூழலில் எழுதியிருப்பதை மட்டுமே இங்கே சொல்லி என் கட்டுரையை முடிக்கத் தோன்றுகிறது.
உதவிய நூல்கள், கட்டுரைகள்:
1. "பொருளதிகார வாழ்வியல் விளக்கம்." தொல்காப்பியம்: பொருளதிகாரம், இளம்பூரணம். தொகுதி 1. இரா. இளங்குமரன். சென்னை: தமிழ்மண் பதிப்பகம், 2003.
2. குறுந்தொகை: மூலமும் உரையும். உரை: தி. சௌ. அரங்கசாமி. சென்னை: பாரி நிலையம், 2000.
3. குறுந்தொகை நயவுரை. டாக்டர் மு. கோவிந்தசாமி, சிதம்பரம், வாசுகி பதிப்பகம், 2000.
4. A Lover's Discourse: Fragments. Roland Barthes. Trans. Richard Howard. New York: Farrar, Straus and Giroux, 1978.
5. Just like a Woman. Laslocky, Meghan.http://dir.salon.com/story/mwt/feature/2005/10/11/real_dolls
6. Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Indian Saiva Tradition. Shulman, David Dean. New Jersey: Princeton University Press, 1980

தமிழ் வாழ்வில் காதல்: மாற்றுப் பாலியல்
என் தமிழ் (மற்றும் வேறு தன்மைகளும் கொண்ட) காதல் 
(உண்மை, புனைவு பற்றிக் கவலைப்பட வேண்டாம்)

அனிருத்தன் வாசுதேவன்

n

சபையோருக்கு வணக்கம்.

தமிழ்க் காதல் என்ற தலைப்பில் பேசச் சொன்னார்கள். காதலைப் பிராந்தியப்படுத்த இயலுமா என்ற எண்ணம் தோன்றியது. பின், பிராந்திய அடையாளங்களைப் பலர் உரிமையுடன் கேட்டுப் பெற வேண்டியுள்ளதையும் சிந்தித்துப் பார்த்தேன். அதாவது இது தமிழைச் சார்ந்ததல்ல, நீ உண்மையான தமிழனல்ல, இது இந்திய கலாச்சாரம் அல்ல என்று உள்ளிருந்து எல்லைக்கோடுகள் வரைபவர்கள் உள்ளவரை சில அடையாளங்களை வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்க் காதல் என்பது போன்ற அடையாளங்களை.

அதிகாரபூர்வமான தமிழிலக்கியச் சான்றுகள் தேடி வழங்கலாமா என்று நினைத்தேன். பழக்கப்பட்ட கதைகளை, கற்பனைகளை உள்ளிருந்து தகர்க்கலாமா என்று யோசித்தேன். கடைசியில் நான் வாழ்ந்த உண்மையை வழங்கலாமென்று எண்ணினேன். நான் பேசப்போவது என் காதலைப் பற்றி.

 நான் தமிழன். அதாவது என்னுடைய பல அடையாளங்களுள் அதுவும் ஒன்று. நான் காதலிப்பதும் உண்டு. அதுவும் எனது பல அடையாளங்களுள் ஒன்று. நான் இங்கு பேச இது போதுமான காரணம் என்று நினைக்கிறேன்.

எதற்கும் மேற்கொண்டு கேட்கவும் சர்ச்சை செய்யவும் விமர்சிக்கவும் நிராகரிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் நான் சொல்வதை முழுதும் கேட்டாக வேண்டும். இருக்கையோடு இணைக்கப்பட்ட மேசை. இருத்தலும் ஆதலும் ஒன்று என்பது போன்றொரு அமைப்பு. இருவர் அமரலாம். பின் வரிசையாயிருப்பின் நெருங்கி அமரலாம். சமயங்களில் கைகோர்த்தும் அமரலாம். அப்படித்தான் இன்றும் அமர்ந்திருந்தோம். ஆசிரியர் எழுதச் சொன்னவரை. அரை ட்ரவுசரிலிருந்து முழுக் கால் சட்டைக்கு வந்த மாற்றம் விநோதமான எண்ணச் சூழல்களை வெளியிட்டிருந்தது. மறைக்கச் சொன்னதனால் மறைக்கப்பட்ட பொருள் அழுத்தமாகக் கவனத்திற்கு வந்தது: எங்களது முழங்கால்களும் அதற்குச் சற்று மேலும். இவை எங்கும் தெரியத் தொடங்கின திடீரென்று.

இதுவரை அருகில் அமரும்போது உரசியிருப்பது இப்போது ஞாபகம் வந்தது. சொன்னபோது சிரித்தான் - "நான் மட்டும்தான் இப்படி யோசிக்கறேன்னு நெனச்சேன்" என்றான். சிரித்தோம். ஒரு ரகசியப் பிணைப்பு ஏற்பட்டதைப் போல. மறைக்கப்பட்ட முழங்கால்களினால்.

"டேய் பொட்டை! பென்சில் கொடு" - பின்னாலிருந்து உடைந்துகொண்டிருக்கும் குரல் ஒன்று. கோபமாய்ப் பதில் சொல்லத் திரும்பினேன். சில்லென்ற உள்ளங்கையால் முகத்தைத் திருப்பினான் முன்பக்கம். "கண்டுக்காதே." இப்போது தோளில் தட்டியது பின்னாலிருந்தவனின் கை. "ஒன்னத்தாண்டா. நேத்து போட்டில நல்லா பேசுன. ஆனா ஏன்டா பொம்பள மாதிரி கைய ஆட்டுற?"

"நானாவது பேசுனேன்ல. நீ என்ன கிழிச்சியாம்?" - வெடுக்கென்று சொன்னேன். முழங்காலில் அவன் கை இறுகியது. மேற்கொண்டு பேசாமல் திரும்பி அமர்ந்தேன். "வா சாப்பிடப் போலாம்."

"ஏன்டா உர்ர்ன்னு இருக்க? அவன் சொன்னதையே நெனச்சுட்டிருக்கியா?" "ம்ம். அவன் மட்டுமில்ல. நேத்து ரிக்ஷால வரும்போது அசோக் அண்ணனும் சொன்னாரு. நடையா இது நடையான்னு பாடினாரு. எல்லாரும் சிரிச்சாங்க." "கவலப்படாதடா! அடுத்த தடவ சொல்லு. ரெண்டு அறை அறைஞ்சா சரியாயிடும். சாப்பிடு." தூரப் பார்த்துக்கொண்டு கலங்கிய கண்களிலிருந்து ஒரு சொட்டு, கண்ணோரமாய் வழிந்தது. உதட்டின் ஓரம் வந்ததும் விரல்களால் துடைத்தான். புன்னகைத்தான். பின் அதே விரல்கள் என் காதை வருடின. பிறகு தலைக்குப் பின் சென்று முன்னாலிழுத்தன. தலையோடு தலைமுட்டிப் புன்னகைத்தான். "லூசு! நா இருக்கேன்ல!"

 அவன் இருந்தான். ஆண்மை என்கிற புரியாக் கருத்தாக்கம் என்னை வாட்டி வதைத்த காலம் வரை உடனிருந்தான் (இப்போது நான் அதை வாட்டி வதைக்கிறேன்). காதலித்தோம். காதல் செய்தோம். இந்த இரண்டாவது முக்கியமாயிற்று. யாரும் அறியாமல் புதிதாய் ஏதோ ஒன்றை உண்டாக்குவது போன்ற ஒரு கிளர்ச்சி. கூடவே பயமும். வழக்கில் உள்ள மெய்ப்பாடுகளுக்கு அப்பால் இருக்கிறோம் என்ற உணர்வு. அறைந்து சாத்தப்பட்ட கதவுகளுக்கு வெளியே நிற்கிற உணர்வு அது. அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு வரும் விற்பனையாளர்கள் நன்கறிந்த உணர்வு. ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன். அப்போது பெண்ணியம் தெரியாது. இருந்தாலும் ஆண், பெண் என்ற அடையாளங்களும், ஆண்மை, பெண்மை என்ற வேற்றுமைகளும் நிலையற்றவையோ என்று தோன்றியதுண்டு. ஆனால் பிடிபடவில்லை இன்றுவரை. எனக்கு இந்த அடையாளங்கள் பிடிபடவில்லை. இந்த அடையாளங்களுக்கு நான் பிடிபடவில்லை. இது பிடிபடும்வரை என்னுடன் இருந்தான். மொத்தத்தில் ஏதோ ஒன்று பிடிபட்டது. இது அங்கீகாரம் வேண்டி நிற்காத காதல் என்ற உண்மை.

கண்டிப்பாக எதையுமே நிரந்தரமாக மறைக்க இயலாது. முழங்கால்கள் உட்பட. காதலும் அப்படித்தான். திடீரென்று கண்களில் ஒரு நிரந்தரப் புன்னகை வரும்போது, திடீரென்று பல விஷயங்களுக்கும் நபர்களுக்கும் நம்மிடம் நேரம் இல்லாமல் போகும்போது புலப்படுகிறோம். காதல் நம்மை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது பலருக்கு. சற்றே விளக்கை அவர்கள்மேல் திருப்பிவிட்டுத் தொடர்வது பழக்கமாயிற்று.

தொடரும்.

என் பேச்சல்ல. . . என் காதல். . . காதல்கள். . .

தமிழ் வாழ்வில் காதல்: தமிழ் சினிமா
மௌனமான கணங்களும் மூன்றாவது இடமும்

அசோகமித்திரன்


காதல் கதைகளுடன் தமிழ் சினிமா தொடங்கவில்லை. புராணக் கதைகளில் இரு பாலருக்குள் ஈர்ப்பு இருந்தாலும் அதைக் காதல் என்று கூற முடியாது.

ஆனால் காதலுக்கு எப்படி இலக்கணம் கூறுவது? 'அம்பிகாபதி' திரைப்படத்தில் காதல்தான் ஆதார சுருதி. அரசனிடம் நிறைய அதிகாரம் குவிந்திருந்தாலும் அவன் எளியோரும் அணுகக்கூடியவனாக இருந்திருக்கிறான். காதலன்-காதலியின் வர்க்க பேதம் அவனைச் சங்கடப்படுத்தியிருக்கக்கூடும் என்றாலும் கீழ் வர்க்க அம்பிகாபதி அவனுடைய நூறாவது பாட்டையும் பேரின்பச் சுவை கொண்டதாக இயற்றியிருந்தால் அரசன் தன் மகளை அரசவைக் கவிஞரின் மகனுக்கு மணமுடித்திருப்பான்.

 சாதாரணமாக இருவருக்குள் இருக்கக்கூடிய பிணைப்பைவிட அம்பிகாபதி-அமராவதி பிணைப்பு, கடும் விளைவுகளையும் எதிர்கொள்ள இருவருக்கும் மன உறுதி கொடுத்திருந்தது. இந்த மன உறுதியைக் காதலாகச் சொல்லலாமா? அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அமராவதி என்னவானாள்?

தமிழ் சினிமாவில் ஆண்-பெண் இணைப்பை மரபு வழி உறவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. 'சாவித்திரி' என்ற படத்தில் சாவித்திரி தன் கணவன் உயிரைத் திரும்பப் பெற எமனைத் தொடருகிறாள். அவளுடைய கணவனின் உயிரைத் திரும்பப் பெறும் நோக்கத்தில் அவள் இயங்கியது காதலாலா? சாவித்திரியும் சத்தியவானும் சேர்ந்து ஓராண்டு வாழ்ந்தாலும் அது சத்தியவானின் முதிய பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதில்தான் கழிகிறது. அதிலும் நடுக் காட்டில் வசதிகளற்ற இடத்தில் அவன் எப்படி அடுப்பை மூட்டினான்? தானியங்கள் எங்கிருந்து கொண்டுவந்தான்? சத்தியவானின் ஒரே பணி விறகு கொண்டுவருவது. இதற்கு நடுவில் காதல் என்பது எப்படியிருந்திருக்கும்?

தமிழ் சினிமாவின் முதல் சமூகக் கதைகளாக 'மேனகா'வையும் 'சதி லீலாவதி'யையும் குறிப்பிடுகிறார்கள். எல்லாமே செவி வழிச் செய்திகள்தான். 'அம்பிகாபதி'யில் இருந்த அளவு காதல் இருந்திருக்குமா? சந்தேகந்தான்.

காதலர்கள் எப்படி இருப்பார்கள்? ஜெமினி கணேசனும் சாவித்திரியும் போல இருப்பார்களா? நானறிந்து தமிழ் சினிமாவில் காதல் சில கணங்களாகத்தான் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அவை மௌனமான கணங்கள்.

'சிவகவி' என்றொரு படத்தில் ஒரு குருவிடம் பாடம் கற்கும் ஒரு மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே ஈர்ப்பு இருக்கிறது. மாணவி ஓர் அரசனின் மகள். அவள் அகம்பாவத்தில் ஒரு துறவிமீது தண்ணீர் வாரியடிக்க அவள் முகம், உடலெல்லாம் அம்மைக் கொப்பளங்கள் வாரிக் கொட்டிவிடுகின்றன. மாணவனுக்கு அருள் இருக்கிறது. அவன் அவளைக் குணப்படுத்திவிடுகிறான். பின் திருமணம். அவன் பொருள் ஈட்டாமல் இருப்பதை மனைவி குத்திக் குத்திப் பேசுகிறாள். இதெல்லாம் காதலுக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதல்ல. காதல் என்றவுடனேயே தெய்வீகம் என்றொரு சொல்லையும் கூறிவிடுவார்கள். இந்தத் தெய்வீகத்தையும் எளிதில் இலக்கணப்படுத்திவிட முடியாது.

ஆனால் காதல் என்றால் ஒருவனை ஒருத்தியோ ஒருத்தியை ஒருவனோ எல்லா நேரமும் நினைத்து உருகுவதானால் 'மகா மாயா' என்றொரு தமிழ்ப் படத்தை உதாரணம் காட்டலாம். இது முழுக்க முழுக்கக் கற்பனைக் கதை என்கிறார்கள். இதில் ராஜா, ராணி, இன்னொரு ராஜா, ராணி என்று வந்தாலும் சரித்திரச் சான்று கிடையாது. ஓர் அரசன் இன்னொரு நாட்டு அரசியை அடைந்தே தீருவது என்றிருக்கிறான். இதற்காகப் போர், படுகொலை, சிறைச்சாலை, சித்திரவதை என எதற்கும் தயாராக இருக்கிறான். அந்த இன்னொரு ராணி இறந்துவிடுவதில் கதை முடிகிறது. இது 1944இல் வந்தது. இப்படியொரு கதையையும் பாத்திர வார்ப்பையும் உருவாக்கியவர் இளங்கோவன். படம் அன்றைய வெற்றி நடிகர்களாகிய பி.யூ. சின்னப்பா, கண்ணம்மா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் பங்குகொண்டது. பாடல்கள் கம்பதாசன். டைரக்ஷன் டி.ஆர். ரகுநாத். அறுபது ஆண்டுகளாக இப்படியொரு துணிச்சலான படம் உருவாக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். நிஜ வாழ்க்கையில் இப்படி நேர்ந்துவிட்டால் சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

காதலுக்கு இலக்கியத்தில் எடுத்துக்காட்டாகக் கூறுவதில் ரோமியோ-ஜூலியட் கதை முக்கியமானது. ஷேக்ஸ்பியரின் இலக்கிய வாழ்க்கையில் இந்தக் கதையின் நாடக வடிவை அவருடைய ஆரம்ப காலப் படைப்புகளில் ஒன்றாகக் கூறுகிறார்கள். ரோமியோ, ஜூலியட் இருவருக்கும் பதினாறு வயதுக்கு மேல் ஆகவில்லை. அதாவது இது ஒரு பாலப் பருவ ஈர்ப்புக் கதை. பெரும் சோகத்தில் இது முடிந்தாலும் இது ஒரு பக்குவமான மனிதர்களின் நடவடிக்கை என்று கூற முடியாது. ரோமியோ ஜூலியட் என்ற பெயரியேயே தமிழில் திரைப்படம் தயாரிக்கப்படவில்லை என்றாலும் தியாகராஜ பாகவதரையும் எம்.ஆர். சந்தான லட்சுமியையும் 'அம்பிகாபதி'யின் டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கன் 'ரோமியோ ஜூலியட்' என்ற ஹாலிவுட் படம் சென்னையில் ஒரு வாரம் ஓடியபோது தினமும் பார்க்கச் சொன்னதாகக் கூறுவார்கள். 'ரோமியோ ஜூலியட்' நாடகம் (திரைப்படம்) கொண்ட புகழ் பெற்ற 'பால்கனி' காட்சி 'அம்பிகாபதி'யில் உண்டு. மீண்டும் இளங்கோவன். ஷேக்ஸ்பியர் இளங்கோவனின் சொற்களில் முழு நிலாவாக ஒளி வீசினார். ரோமியோவின் சொற்களில் ஜூலியட் கதிரவன்!

ராமாயணம், மகாபாரதம் ஆகிய இலக்கியங்களில் காதல், திருமணம் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் ஓரளவு பக்குவம் பெற்ற பிறகே நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களிலும் இதுதான் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் இந்திய வாழ்க்கையில் பால்ய மணம், பெற்றோர் பெரியவர்கள் ஏற்பாடு என்றுதான் இருந்திருக்கிறது. தொடர்ந்து அன்னியர் படையெடுப்புகள், பெண்கள் கடத்தல் போன்றவை பால்ய மணத்துடன் 'சதி' என்னும் பழக்கத்தையும் கொண்டுவந்துவிட்டன. அலாவுதீன் கில்ஜி சித்தூர்க் கோட்டையைத் தாக்கியபோது பத்தாயிரம் ரஜபுதனப் பெண்மணிகள் பெரிய நெருப்பு மூட்டி அதில் விழுந்து மடிந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

தென்னிந்திய மத்திய கால வரலாற்றில் கர்ண பரம்பரையாகவும் பெரும் காதல் கதைகள் உருவாகவில்லை என்று தெரிகிறது. தமிழ்த் திரை மற்றும் மேடையில் பெரிய 'காரியங்கள்' நேரவில்லை என்பது ஒரு காரணமாயிருக்கக்கூடும். யதார்த்தத்தில் ஆண் மற்றும் பெண் ஒருவருக்காக அனைத்தையும் துறப்பது, பழியேற்பது, மரணமடைவது என மட்டும் இருந்திருக்கிறது.

டைரக்டர் ஸ்ரீதர் படைப்பாகிய 'கல்யாணப் பரிசு' அன்றும் இன்றும் ஒரு தமிழ்த் திரைப்படக் காதல் ஓவியமாகக் கொண்டாடப்படுகிறது. படம் திரையில் ஓடும்போது எல்லோரும் பாத்திரங்களுடன் ஒன்றிப் போய்விடுகிறார்கள். அதில் இரு சகோதரிகள் ஒருவனைக் காதலிக்கிறார்கள், அதாவது விரும்புகிறார்கள். யதார்த்தத்தில் அந்த இளைஞன் இருவரையும் மணந்துகொள்வது சர்வ சகஜமான நிகழ்ச்சியாகக் கருதப்படும். ஒருதாரச் சட்டம் வந்த பிறகு கூடப் பலர் இரு மனைவிகள், மூன்று மனைவிகளோடு பொது வாழ்க்கையில் பங்குகொள்வது வியப்பையளிப்பதில்லை. அந்த மனிதர் முதல் மனைவியைவிட இரண்டாவது மனைவியைக் காதலிப்பதாகக் கொள்ளலாம். இரண்டாவதைவிட மூன்றாவது மனைவியை இன்னும் அதிகமாகக் காதலிப்பதாகக் கொள்ளலாமா? காதலென்பது வளர்ந்தும் குறைந்துபோகும் குணமுடைத்ததா?

 'கல்யாணப் பரிசு' என்ற திரை 'ஓவிய'த்தை மீண்டும் விவாதிப்போம். அந்த இளைஞன் தங்கையோடு ஓடியாடிப் பாட்டுப் பாடி உற்சாகமாயிருக்கிறான். அவனை மூத்தவளும் விரும்புகிறாள் என்று அறிந்தவுடன் கடற்கரையில் ஓடியாடிய இளையவள் ஒதுங்கிக்கொள்வதோடு அந்த இளைஞன் அக்காவை மணம்செய்து கொள்ள வற்புறுத்தி அந்த மணத்தையும் நடத்திவிடுகிறாள்! இது என்ன காதல்? என்ன தியாகம்? அவள் விரும்பும் இளைஞன் அவளுக்குக் கிட்டமாட்டான் என்று அவளே தீர்மானித்து, அவனுக்குத் தண்டனையளிப்பதுபோல அவன் விரும்பாத ஒருத்தியை அவனுக்கு மனைவியாக்கிவிடுகிறாள். இது பரிசு அல்ல, தண்டனை என்றே தோன்றுகிறது. அவள் காதலைத் தியாகம் செய்கிறாள், ரொம்ப சரி. ஏன் பிடிக்காத ஒருத்தியை அவன் தலையில் கட்ட வேண்டும்? எவ்வளவு நாட்களுக்கு இந்த ரகசியத்தைக் கட்டிக்காக்க முடியும்? உண்மை தெரிந்தவுடன் மூத்தவள் மனம் என்ன பாடுபடும்?

தமிழ் சினிமாவில் இந்த முக்கோணக் 'காதல்' எவ்வளவு படங்களில் வந்துவிட்டது! தியாகம் செய்கிறேன் பேர்வழி என்று இன்னொருவரை வாழ்நாள் முழுதும் திண்டாடவைப்பது எவ்வகைக் காதல்?

வங்காள நாவலாசிரியர் சரத் சந்திர சட்டர்ஜி 1916இல் 'தேவதாஸ்' நாவலை வெளியிட்டார். அவர் அதற்குப் பின் உயிருடன் இருந்த இருபது ஆண்டுகளில் இந்தியா வெங்கும் ஆயிரக்கணக்கில் நிஜ தேவதாஸ்கள் ஏற்பட்டுவிட்டனர். சரத்சந்திரரே மிகவும் மனம் வருந்தினார். "இப்படி விளைவுகள் இருக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அந்த நாவலை எழுதியே இருக்க மாட்டேன்" என்று கூறினார். தமிழ் சினிமாவில் 'தேவதாஸ்' பல முறை தோன்றிவிட்டான். காதலுக்கு மிகவும் தவறான உதாரணம் தேவதாஸ். குடும்ப கௌரவம், தந்தையின் விருப்பம் - இதற்காகக் காதலைத் தியாகம் செய்தால் என்ன நியாயம்? ஒரு பெண் அவனுக்காகத் தன்னுடைய பணம், வாழ்க்கை முறை, அனைத்தையும் துறக்கத் தயாராக இருக்கிறாள். அவளுடைய காதலுக்குக் கதாநாயகன் என்ன பதில் தருகிறான்? 'தேவதாஸ்' தமிழ்த் திரைப்படமாக இரு முறை வந்தது; இந்தக் குடும்ப கௌரவம், ஏழை-பணக்காரன் என்ற அம்சங்கள்கொண்டு டஜன் கணக்கில் திரைப்படங்கள் வந்துவிட்டன. பல படங்கள் பெரும் ஆதரவைப் பெற்றன. காதல் தோல்வியை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு குடிகாரனாவது மனித கண்ணியத்துக்கு நியாயம் செய்வதாகாது.

பாரதிராஜா படத்தில் காதல் படும் பாடு விவாதிக்கத்தக்கது. அவருடைய கதாநாயகிகள் காதலனை இழக்கும் நிர்ப்பந்தம் திரும்பத் திரும்ப நேருவது எல்லாருக்கும் காதல் திருமணத்தில் நேருவதில்லை. ஆனால் தோல்வி என்றால் ஏன் இன்னொரு அப்பாவியை மணந்துகொண்டு அந்த நபரைத் தண்டிக்க வேண்டும்?

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் எடுத்த எடுப்பிலேயே அத்திரை அனுபவம் யதார்த்தத்திலிருந்து விலகியது என்று தெரிவிக்கப்பட்டு விடும். கோஷ்டி நடனங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்படும். காதல் என்ற சொல்லை வைத்து தேசம், கோட்டை என்ற தலைப்பைக் கொண்ட இரு படங்கள் நிறைய ஆதரவுபெற்றன. அப்படங்களின் கதையடிப்படையை ஒத்துக்கொண்டால் இரண்டுமே உருக்கமான படங்கள். 'மின்சாரக் கனவு' என்ற படமும் 'ஒரு தலைக் காதல்' என்ற படமும் இருபது ஆண்டு இடைவெளியில் வெளிவந்தாலும் 'காதில் பூ' என்று கருதக்கூடும் ஆதாரத்தைத் தலையில் சூட்டிய பூவாகக் கருத வேண்டும். அப்போது அவை நல்ல காதல் கதைகள்தான். கு.ப.ரா.வின் 'திரை' என்ற சிறுகதை மூன்று நான்கு பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால் மூன்று மணி நேரத் திரைப்படம் எதுவும் அச்சிறுகதையை அணுகக் கூடிய அளவில் இல்லை.

நூற்றாண்டுகளாக ஒரு மகத்தான காதல் கதை பல ஐரோப்பிய மொழிகளில் உலவிவருகிறது. அது 'சிரானோ டி பெர்ஜராக்' என்ற பிரெஞ்சு நாடகம். நூற்றுக்கணக்கில் இதற்குத் தழுவல்கள். இந்தியில் 'சாஜன்' என்று வெளிவந்த வெற்றிப் படத்தைத் தமிழில் பாலச் சந்தர் 'டூயட்' என்றொரு வெற்றிப் படமாக மாற்றினார். 'சிரானோ' எழுதிய எட்மண்ட் ரோஸ்டாண்டு அவருடைய கல்லறையில் புன்னகை புரிந்துகொண்டிருப்பார். அந்த நாடகம் செய்யுள்களும் நிகழ்ச்சிகளும் கொண்டது. ஒரு நடிகனுக்கு 'ஹாம்லெட்' வேடம் எவ்வளவு மகத்தான சவாலோ அதே அளவுக்கு 'சிரானோ' வேடம் கருதப்படுகிறது.

'ஐ லவ் யூ' என்று சொல்வது எளிதாக இருக்கிறது. "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று தமிழில் சொல்வது சரித்திரக் கதைகளில் சாத்தியமாகலாம். ஆனால் சம காலத்துக் காட்சிகளைப் பயன்படுத்தி ஒரு நடிகனோ நடிகையோ 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்வது சங்கடமானது. இந்தக் கதா நாயகர்கள் ஆடும் நடனமும் போடும் சண்டையும் காதலை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிடுகின்றன.

அம்ஷன்குமாரின் 'ஒருத்தி' படத்தில் வெளிப்படையாக ஏதும் சொல்லப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண்ணும் ஓர் இளைஞனும் தினமும் காத்திருந்து சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்கள் சேர்ந்து இருக்கும்போது மிகுந்த முக மலர்ச்சியோடு இருக்கிறார்கள். அந்த இளைஞன் வைப்பாட்டியாகத்தான் அவளை முதலிலிருந்தே கருதுகிறான் என்று தோன்றுகிறது. அவனுக்குத் திருமணம் என்று வரும்போது ஒருத்திக்கு இருவராகச் சகோதரிகளை மணந்துகொண்டு ஊர்வலம் வருகிறான். அவன் வெட்ட வெளியில் ஆடி ஓடி மகிழ்ந்த பெண் அவள் பிறந்து வளர்ந்ததிலிருந்து செய்துவந்த ஆடு வளர்ப்பைத் தொடருகிறாள். அவள் அழுவதில்லை.


நாம் திரைப்படக்காரர்களைக் குறை கூற வேண்டியதில்லை. காதல் நழுவிக்கொண்டு போகும் இயல்புடையதுதான். நடைமுறை வாழ்க்கையில் சமரசமும் பொறுத்துக்கொண்டு போவதும் காதலாகிவிடுகின்றன. அதை உலகத்துக்கு நிரூபிப்பதற்காக ஏதேதோ செய்கிறார்கள், சொல்கிறார்கள். ஆனால் மகத்தான காதல் வெளிப்பாடு என்று தனித்துக் கூறும்படியாக இருக்காது என்றே தோன்றுகிறது