தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, April 23, 2014

என் ஜன்னலருகே வா -மெலிஸா எத்திறிட்ஸ், நினைவு -மைதிலி, Nagual ( Poems on Loving Her like Him) - Meherin Roshanara


http://www.peddai.blogspot.in/
என் ஜன்னலருகே வா -மெலிஸா எத்திறிட்ஸ்

என் ஜன்னலருகே வா,
தவழ்ந்து, உள் நுழைந்து
நிலா வெளிச்சத்தில் காத்திரு
சீக்கிரம் வீடு வருவேன்!

நான் தொலைபேசியில் எண்களை சுழட்டுவேன்
உன் சுவாசத்தை கேட்டிருக்க மட்டுமாய்
என் நரகத்துள்ளே நின்றபடி
மரணத்தின் கரங்களை பற்றிநின்று
இந்த பிரத்தியேக வலியை லேசாக்க
உனக்குத் தெரியாது – நான்
எவ்வளவு தூரம் போவேன் என்பது.
உனக்கத் தெரியாது
உனக்கு
நான் எவ்வளவைத் தருவேன்
அல்லது எடுப்பேன் என்பது- எல்லாம்
உன்னை அடைய.
உன்னை அடைய
உன்னை அடைய

...
கண்கள் திறந்து வைத்தபடி
என்னால் தூக்கத்தை வாங்க முடியவில்லை
வாக்குறுதிகளைத் தருகையில்
தெரியும் அவற்றை காப்பாற்ற முடியாதென்பதும்.
என் நெஞ்சுள் வடிந்த இருளை
எதாலும் போக்க முடியவில்லை;
என் இரத்தத்துள் நீ வேண்டும்
எல்லாவற்றையும் நான் கைவிடுவேன்
உன்னை அடைய
உன்னை அடைய
ஓ! உன்னை அடைய

இவர்கள் என்னை நினைக்கிறார்கள் என்பது எனக்கு கவலையில்லை
இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனது கவலையில்லை
சரிதான்! இவர்களுக்கு இந்தக் காதலைப் பற்றி என்ன தெரியும்’


‘என் ஜன்னலருகே வா’ என்ற இந்தப்பாடல் லெஸ்பியன்கள் மத்தியில் மிகப் பிரபலமானது என்று ஒரு பேட்டியில் இவர் சொல்லியிருந்தார். முக்கியமாக, ‘இவர்களுக்கு ‘இந்தக் காதலைப் பற்றி’ என்ன தெரியும்’ என்ற பாடலின் இறுதி வரி அவர்களுக்குப் பிடிப்பதாக அவர் மேலும் சொன்னார். உண்மைதான் தமது காதலையே திருமணத்திற்குப் பிறகு முடித்துவிடுகிற, சொத்துக்களையும் வாரிசுகளையும் ‘சேர்க்கப்’ போய்விடுகிற ‘இவர்களுக்கு’ இந்தக் காதலைப் பற்றி மட்டும் என்ன தெரியும்?
===================

இந்த இவர்கள் குறித்த ‘உரையாடலை’ நான் முடிக்க நினைக்கிறபோது, எனது தோழியொருத்தி நான் ஏற்கனவே படித்த கவிதையை ‘இது ஒரு லெஸ்பியன் பெண்ணுக்காக எழுதப்பட்டது” என்று தந்தபோது, அதன் முழு அனுபவமும் மாறிப்போனதை பகிர்ந்து முடிக்கலாம் என நினைக்கிறேன். இதை விட முடிப்பதற்கு வேறு பிரதிகள் தேவையில்லை. இந்தக் கவிதையை மைதிலி எழுதியிருக்கிறார். எந்தக் குறிப்புமின்றி பார்க்கிறபோது இதற்கு வலு இல்லை. ஆனால் தனது ஆசிரியர் ஒருவரிடமிருந்து ‘பிரித்து’ பெற்றோரால் (சமூகக் காவலரால்?) வன்கூவர் (கனடாவில் இன்னொரு மாநிலத்திலுள்ள நகரம்) கொண்டு செல்லப்பட்ட அவ் ஆசிரியரின் காதலி பிரிவிலும் அடக்குதலின் அழுத்தத்திலும் அங்கே இறந்துபோய் (தற்கொலை?) விடுகிறாள். அவளது புதைகுழி இருக்கிற இடம்கூட கனடாவின் எதிர்முனையில், இந்த மாநிலத்தில் இருக்கிற இவரிற்கு தெரியாது (இன்னமும்).


நினைவு
-மைதிலி

கைகளில்
குளிர்மையாய் ஏதோ படத்
திடுக்கிட்டுப் போனேன்

உன் கண்ணீரோ?

இப்போது எங்கே இருக்கிறாய் நீ?
குளிர்காலம் முடிந்து விட்டது
நீர் நிறைந்த சிறு குட்டைகளிலெல்லாம்
லூண் பறவைகள்

வெப்பமும் வியர்வையும்
எல்லோரையும்
தூசும் மரங்களும் நிறைந்த
பூங்காக்களுக்கு விரட்டுகின்றன
போன கோடையில்
உன் கருப்பையில்
என் முலைகள் அழுந்த...
காமம் வற்றிப் போயிற்று
இன்று

கடைசியில்
ஒரு மலாச் செண்டையோ
ஒரு கவிதையையோ கூட
உன்னிடம் தர முடியவில்லை
எனைவிட்டு
உன்னுடல் சுமந்து சென்றது விமானம்
ஜோ-ஆன்
வான்கூவரில்
எந்தப் புதைகுழியில் தேடுவேன்
உன் உறைந்துபோன புன்சிரிப்பை
0



நன்றி: இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (2003)
கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்

POSTED BY ஒரு பொடிச்சி AT 2/21/2005 04:38:00 PM

7 COMMENTS:

 Blogger சன்னாசி said...
//“...gays மீது உள்ள வெறுப்பு lesbians மீது இருப்பதில்லை. அது sexy என்பார்கள் - இது, ஆண்கள் சேர்ந்து உருவாக்கிய பிம்பம் என்றாலும், தவறிருக்கமுடிவதாகச் சொல்லமுடியாது”//
பொடிச்சி; அப்போதே எழுதிச் சற்றுப் பின் திரும்பப் பார்த்தபோது, வார்த்தைகளைச் சரியாகப் போடாததால் வேறொரு தொனியில் இருக்கிறதோ என்று யோசித்ததுண்டு: நான் சொல்லவந்தது, "லெஸ்பியன்கள் கே-க்களைவிட செக்ஸி என்று தோன்றுவதில் தவறிருக்கமுடிவதாகச் சொல்லமுடியாது" என்ற அர்த்தத்தில் அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்களென நம்புகிறேன். வார்த்தைகள் எனக்கே சற்று இடறலாகப் படுவதால் இந்த விளக்கம்; மற்றபடி வேறொன்றுமில்லை. மிக நல்ல பதிவு - கட்டுரை ரீதியாக factual cataloguing செய்யாமல் ஓரளவு ஒரு தனிப்பட்ட பார்வையின் நேர்மையான, பிரத்யேகப் பதிவு என்ற ரீதியில் இருப்பதாகத் தோன்றியதால் - 'அவர்களை ஏற்றுக்கொள்ளுமளவுக்குப் பெருந்தன்மை தோன்றிவிட்டதாக' நினைத்துக்கொண்டதையும் குறிப்பிட்டுள்ளது போன்றதைப் போன்று. Long incubation produces a better hatch என்பார்கள் - எப்போதாவது எழுதினாலும் உருப்படியாக எழுதுகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

2/22/2005 08:32:00 AM
 Blogger raji said...
Sorry poddichi, I post about karubi here because this blogg indiractly involved in the that particular matter. Furthremore, in her blogg, I couldn't reach the comments box. Thank you.

2/23/2005 09:30:00 AM
 Blogger raji said...
கறுப்பி ஏன் மனநிலை பாதிக்ப்பட்டவர் போல் என்னைப் பற்றி புலம்புகிறா என எனக்குப் புரியவில்லை. எனக்கும் அவவுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது (அவவுடன் பழக்கம் இல்லை. எனது கணவர் கறுப்பி குறிப்பிட்டது போல் கொடுமையான கணவனும் இல்லை. நான் நக்கல் அடிக்கப் படுமளவிற்கு அவளவு அழகற்றவளும் இல்லை. அதைவிட கேட்ட கேழ்விக்கு பதில் அளிக்கிறதை விட்டிட்டு ஏன் புலம்புறா. முதலில் ராஜி எண்டு போடேக்கை ககோதரிகள் என்டா. இப்ப ராஜி செல்வக்குமார் எண்டு போடவும் கணவன் மனைவி என்றா. என்ன இது? இந்த குழப்ப நிலையில் ஏன் பெரிய விடயங்களைப்பற்றிக் கதைக்க வெளிக்கிடுறா?

ராஜி செல்வக்குமார்

2/23/2005 09:48:00 AM
 Blogger ravi srinivas said...
i have not read the novels or stories you cite.may be later after reading some more posts on this by you i will try to post
a long response.keep it up.
cheers

2/23/2005 11:36:00 AM
 Blogger மதி கந்தசாமி (Mathy) said...
here's something shyam

http://www.time.com/time/asia/2003/journey/sri_lanka.html

2/23/2005 12:13:00 PM
 Blogger ஒரு பொடிச்சி said...
This comment has been removed by a blog administrator.

2/25/2005 08:39:00 PM
 Blogger ஒரு பொடிச்சி said...
மாண்ட்ரீஸர்! நான் லெஸ்பியன்கள் பற்றிய உங்களது கருத்தை அந்த அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. பொதுவாக அப்படி ஒரு கருத்து எண்ணமாக இருப்பதைத்தான் எழுதினேன். மற்றது, நீங்கள் கூறியதற்கு மாறாய், பகுதி II informative ஆய்த்தான் எழுதியிருக்கிறேன்போல தெரிகிறது!

Raji, no problem! Blogspot is just a free space, BUT ‘மனநிலை பாதிக்கப்பட்டவர்’ என்றெல்லாம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. நியாயமற்ற உலகத்தில், எல்லோருடைய மனநிலையும் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறது (என்னது மிகவும்!). மனநிலை சரியில்லாதவர்கள் குழந்தைகள்போல... அவர்களை எல்லாம் எங்களது வெறும் சண்டைகளில் எடுப்பது அநியாயம். நீங்கள் அப்படி இன்னொருவரை சொல்கையில் அவரைவிட சிறப்பான தரத்தில் விவாதிப்பதாக எனக்குப் படவில்லை. மற்றது, நீங்கள் ‘அவ்வளவு அழகற்றவராய்’ இருந்தாலுங்கூட அதை உங்களிடம் கூறுபவர் (நக்கல் அடிப்பவர்), அதை உங்களிடம் கூறுவதால், மிக மிக அழகானவராய் ஆகிவிடுவார் என நம்புகிறீர்களா?
இந்நேரம் உங்களுக்கே விளங்கியிருக்கும், ‘உங்களது’ நேரத்தைத்தான் நீங்கள் விரயமாக்கிறீர்கள் என்பதும்... so yea.. if you don’t mind, if you want any help regards making your own blog or something like that, just write to me. will do whatever I can. Take care.
Peace.


Mathy!
I never saw shyam with Andrew together, thanks for the link, they are lookin’ great!

Thanks Srinivas..
Thanks to u all! It sure gives an energy!
Cheers!

to read Related topics:
http://dystocia.blogspot.com/2005/02/blog-post_27.html

Nagual ( Poems on Loving Her like Him) - Meherin Roshanara
https://www.facebook.com/lmanimekalai/posts/10152586330902645

If I were him,
I'd be painting your lips with wine.
I'd talk about how imaginary elves
Climb your curls and somehow disappear
- when they are actually tumbling down
into your womb.
If I were him, I'd be sunning you all the time.
And on full moon nights, bathe your lithe being with
the unbroken beams, singing a blue , blue song.
Of course, you'll ask me which shade is it.
I wouldn't know. I wouldn't want to know
because the answer would rob me of your
laughter. I can't then dive into its Cobalt blue.
If I were him, I'd be learning to weave dreams
with your fingers, noting how each begins, those
patient wrinkles, and end up dancing on the sweet
brightness of your nails.
If I were him, I'd be walking and talking and
singing and crying and cuddling and smooching
and learning and teaching and flying and getting
ourselves into a high.
But what if I were him, I would be just him?
_____________________________________________________
~ Nagual ( Poems on Loving Her like Him)

Meherin Roshanara

Love Borne
http://www.poemhunter.com/poem/love-borne/
Leaning against the wet grills of the window
Counting the lingering rain drops, weighing them,
What I imagined was the voice,
beckoning from behind the red-pink evening sky.

But how did u fathom, what rose in my eyes
The fiery swirls of monsoon clouds,
the impending storm?
How did you guess, that
in mystery lies my wanton freedom?
Where did you learn
to delude my gathering thoughts
Like leaves scattering in these rainy winds
To bridge my loneness
With that tight hold onto my toe?
To hold back my neighing heart
With that much loved forlorn look?

I hate what you do to me, to simplify me
The way you sit beside my yearning self
But isn't this love, the Holy Grail of loneliness.
The journey ended long ago
I'm now supposed to drink.


- Roshanara Meherin

*****************