தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, March 29, 2016

மூன்றாம் உலகத்தின் பார்வையில் ஆல்பெர் காம்யு வ. கீதா

காலச்சுவடு ஆண்டுமலர் 1991

படிப்பகம்
www.padippakam.com
மூன்றாம் உலகத்தின் பார்வையில் ஆல்பெர் காம்யு
வ. கீதா

காம்யுவைப் பற்றி, அவரது இலக்கி  யப் படைப்புகள், சாதனைகள் ஆகியன பற்றிப் பேசுவது தயக்கத்தையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம் தான். காம்யுவின் மொழி அழகு, அவரது இலக் கிய நடையிலுள்ள லயம், சொற்களைக் கவனமா கவும் துல்லியமாகவும் அவர் கையாளும் விதம் ஆகியன வாசகரின் மனதைக் கவரக் கூடியவை. ஆனால் காம்யுவின் படைப்புகளின் சமூக, அரசி யல் பரிமாணங்களைக் கவனத்தில் கொள்ளும் போதும், காம்யு வாழ்ந்த வரலாற்றுச் சூழலை நினைவுகூறும் போதும் காம்யுவின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய சில முக்கியக் கேள்வி களை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ்வகை யில் நமது ரசனையையுமே நாம் விமர்சிக்க வேண்டியுள்ளது.

இன்றைய உலகில் ஏகாதிபத்தியமும் கால னித்துவமும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகச் சந் தையின் வடிவில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. நியூ காலடோனியா, மார்த்தினிக் போன்ற நாடுகளை பிரான்ஸ் இன்னும் தன் கால னிகளாகவே வைத்துள்ளது. பசிபிக் பெருங்கட லில், பிரான்சிலிருந்து வெகு தொலைவில், பிரெஞ்சு உயிர்களுக்குச் சேதம் ஏற்படாவண் ணம், பிரான்ஸ் தனது அணு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் வாழும் மக்களின் வாழ்வும் அத்தீவுக ளின் இயற்கை வளமும் மிகுந்த சேதத்திற்கு உள் ளாகியுள்ளன. கடந்த ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சி நடந்து முடிந்த 200 ஆம் ஆண்டைக் கோலாகலமாகக் கொண்டாடிய பிரெஞ்சு அரசு, 'விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் பெயரில் நியூ காலடோனியாவில் தமது காலனி யாதிக்கத்தை உறுதி செய்து கொண்டது.

இந்தவொரு வரலாற்றுச் சூழலில், இருபதாம் நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான காம்யு பற்றி, அல் ஜீரியாவில் பிறந்து, அங்கேயே பல ஆண்டுகள் வாழ்ந்தும், அங்கு நிலவிய மிக மோசமான கால னியாதிக்கத்தை, அந்த ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்த அராபிய விடுதலை இயக்கங்களைப் பற்றி எந்த உணர்வையும், புரிதலையும் வெளிப்ப டுத்தாது எழுதிய காம்யு பற்றி நாம் பேசுவதென் றால் அதற்கு என்ன பொருள்?
ஏதோவொரு வகையில், நம்மில் பலர் ஐரோப்பா தன்னைப் பற்றித்தானே ஏற்படுத்திக் கொண்டுள்ள சுய-மதிப்பை விமர்சிக்காது ஏற்றுக் கொண்டு விட்டோம். ஐரோப்பாவின் தத்துவ, ஆன்மீக, உளவியல் பிரச்சினைகளை அவற்றிற்கு ரிய குறிப்பிட்ட வரலாற்று, சமூகச் சூழலில் வைத் துப் புரிந்துகொள்ள நமக்கு இன்னும் தெரிய வில்லை. இந்தக் காரணத்தினாலேயே காம்யு
காலச்சுவடு
283
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

ححص حجم جع:
போன்ற எழுத்தாளர்களின் இலக்கிய சாதனை கள் பற்றி நாம் பேசுகிறோம். இத்தகைய இலக்கி யப் படைப்புகளில் நிலவும் மெளனங்கள் பற்றி, அந்த மெளனங்களில் குடிகொண்டிருக்கும் அரசி யலைப் பற்றி, அப்படைப்புகளின் வடிவங்களில் தொக்கி நிற்கும் சித்தாந்தங்களைப் பற்றி நாம் பேசுவதே இல்லை. 

ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பலர் - படைப்பா ளிகள், விமர்சகர்கள் - கடந்த காலத்தில் காலனி யாட்சியையும் அதன் விளைவுகளையும் ஆழ மாக ஆராய்ந்து, நுணுக்கமான, சிக்கலான பல படைப்புகளை உருவாக்கியுள்ளனர். நவ - கால னியமாக அவர்களது சமூகங்களை ஆட்டிப்ப டைக்கும் புதிய, பொருளாதார, சிந்தாந்த அடக்கு முறைகளையும், நிர்ப்பந்தங்களையும் விமர்சித்து எதிர்த்து வருகின்றனர். காலனித்துவத்தால் ஆப் பிரிக்க பழங்குடி சமூகங்களில் ஏற்பட்ட விபரீத மான மாற்றங்கள், ஆப்பிரிக்க பண்பாடுகள் அழிந்தமை, ஆப்பிரிக்க வாழ்வுமுறைகள் சிதைந்த நிலை ஆகியவற்றைக் கருப்பொருட்க ளாகக் கொண்டு ஏராளமான சிறுகதைகள், புதி னங்கள், நாடகங்கள், கவிதைகள் படைக்கப்பட் டுள்ளன. ஆப்பிரிக்காவைப் பற்றி ஐரோப்பியர் கள் எழுதியவற்றிற்கு சவாலாக இன்று பல ஆப்பி ரிக்கர்கள் தமது படைப்புகளை முன்நிறுத்தியுள்ள னர். காம்யு, கான்ராட்போன்றவர்களின் படைப்பு களை நாம் புதிய வகைகளில் புரிந்துணர்வதற்கு இந்தப் புதிய ஆப்பிரிக்க இலக்கியப் படைப்புகள் உதவுகின்றன. 

எனவே காம்யுவின் எழுத்துக்களை, இன் றைய சூழலில் நாம் படிக்கையில், வேறொரு குர லும் கூடவே ஒலிப்பதை நம்மால் உணர முடிகி றது. காம்யு சொல்ல மறந்ததை, சொல்லத் தயங்கி யதை சொல்லாமல் விட்டதை இன்று ஆப்பிரிக் கர்கள் சொல்கின்றனர். இவர்களில் பலர் ஐரோப் பிய மொழிகளில் எழுதுகின்றனர். சிலர் ஆப்பி ரிக்க மொழிகளில் எழுத துவங்கியுள்ளனர். ஐரோப்பிய இலக்கியக்கோட்பாடுகள், கொள்கை கள் ஆகியவற்றை உள்வாங்கி, இவற்றைத் தமது கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தியுள்
www.padippakam.com
ளனர் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். இவர்கள் ஆப் பிரிக்க வரலாற்றிற்கும் வாழ்வுமுறைக்கும் சாட்சி யமாக இருக்கக்கூடிய ஒரு அழகியலையும் உரு வாக்கியுள்ளனர் என்றே நாம் கூறலாம். பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய அந்நிய, ஆதிக்க மொழிக ளைத் தமதாக்கிக் கொண்டு ஆப்பிரிக்க உலகைப் பற்றி எழுதும் இந்தப்புதிய படைப்பாளிகள் பற்றி இன்று நாம் பேசுவதுதான் நியாயமானது. ஆனால் இன்று நாம் விவாதிக்கப்போவது காம்யு வைப் பற்றிதான். எனினும், காம்யு சொல்ல வந்த தைக் கொண்டு அவர் சொல்லாமல் விட்டதை, அவரது படைப்புகள் சாதிக்கும் மெளனங்களைப் பற்றி இங்கு நாம் பேசுவதே பொருத்தமானது. 

காம்யுவின் முக்கியப் படைப்புகள் அல்ஜீரி யாவையும் அங்கு வாழ்ந்த பிரெஞ்சு மக்களின் வாழ்வையும் மையமாகக் கொண்டுள்ளன. காம்பு, அல்ஜீரியாவை பிரான்சின் ஒரு பகுதியா கவே கருதினார் என்பதற்கு ஏராளமான சான்று கள் உண்டு. காம்பு அல்ஜீரியாவின் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தவர் மாத்திரம் அல்லர். காலனியத்துவத்திற்கு முன் நிலவிய அல்ஜீரிய வரலாற்றையும் சமூகத்தையும் ஒதுக்கி நிராகரித்த வரும் கூட அவர் எழுதுகிறார்: 
 
    'அல்ஜீரியாவைப் பொறுத்தவரை, தேசிய விடுதலை என்பது வெறும் உணர்ச்சிகளால் உந்தப்படும் ஒரு சூத்திரமேயன்றி வேறல்ல. இதுவரைக்கும் அல்ஜீரிய தேசம் என்று ஒன்று இருந்ததே இல்லை. யூதர்கள்.  துருக்கியர்கள், கிரேக்கர்கள், இத்தாலியர்கள், பெர்பெர்கள் ஆகியோரும்கூட உருவாகவிருக்கிற அல்ஜீ ரிய     தேசத்தின் தலைமைக்கு உரிமை கொண்டாடமுடியும். இப்போது உள்ள நிலையில் அராபியர்கள் மட்டுமே     அல்ஜீரியாவாக அமைவதில்லை. அல்ஜீரியாவிலுள்ள பிரெஞ்சுக்காரர்களும் ஒரு ஆழமான அர்த்தத்தில் சுதேசிகள்தான். மேலும், அராபியர் களை மட்டுமே கொண்ட ஒரு அல்ஜீரிய பொருளாதார சுதந்திரத்தை பெற்றுவிட முடியாது; பொருளாதார சுதந்திரமின்றி அரசியல் சுதந்திரம் என்பது வெறும் மாயையே.
காலச்சுவடு
284
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
    பிரெஞ்சு நாட்டின் முயற்சிகள் எவ்வளவு தான் குறைபாடு உடையனவாக இருந்த போதிலும், வேறு எந்த நாடும்     அல்ஜீரியாவுக் கான பொறுப்பை ஏற்க இசையாத அள விற்கு, அம்முயற்சிகள் அமைந்துள்ளன' 

இவ்வாறு காம்யுவின் சிந்தனை ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு அல்ஜீரிய, அராபிய எதிர்ப்புச் சிந்தனையாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

காம்யுவின் படைப்புகளில் அல்ஜீரியாவின் அராபியர்களோ, அவர்களுடைய தனிப்பட்ட, சமூகப் பிரச்சினைகளோ இடம் பெறுவதில்லை. 'அந்நியன்', 'கொள்ளைநோய் ஆகிய இரண்டு புதினங்களிலும் வரும் சம்பவங்கள் அல்ஜீரியா வில் நடைபெறுவனதான். ஆயினும் இவ்விரு புதினங்களிலும் அராபியர்கள் குறிப்பிடத்தக்கப் பாத்திரங்களை வகிப்பதில்லை. அந்நியனில் வரும் அராபியர்களுக்கு பெயர்களைக் கூட கதா சிரியர் வழங்குவதில்லை. இங்கு அராபியனின் தனிப்பங்கு - ஒரு சவமாக அவன் விழுந்து கிடப் பதுதான். நாடுகடத்தலும் சாம்ராஜ்யமும்' என்ற தொகுப்பில் இடம் பெறும் 'விருந்தாளி', 'சோரம் போனவள் ஆகிய இரண்டு கதைகளிலும் அராபி யர்களைப் பற்றி, வழக்கத்தைவிட அதிகமாக காம்பு குறிப்பிட்டாலும், அவர்களுக்குமே ஒரு தனித்தன்மையை அவர் அளிப்பதில்லை. அராபி யர்களின் பார்வையில் உலகம் எவ்வளவு வித்தி யாசமாக இருந்திருக்கும் என்பதையும், அராபி யர்களுக்கென்று ஒரு வரலாறு, வாழ்வுமுறை இருக்கக் கூடும் என்பதையும் காம்யு உணர வில்லை. பல சமயங்களில் உணர மறுத்தார். காம் யுவின் விசுவாசிகள் கூறலாம்: காம்யு பிரெஞ்சு மக்களைப் பற்றியோ அராபிய மக்களைப்பற் றியோ பேச முற்படவில்லை. மாறாக 'மானுட நிலைமைப் பற்றிதான் அவர் அக்கறை கொண்டி ருந்தார் என்று. ஆனால் இங்கு 'மானுடம்' என் பது பிரெஞ்சு மக்கள் என்பதாகக் குறுக்கப்பட்டி ருப்பதை நாம் காணவேண்டும். குறிப்பாக ஐரோப்பிய சமூகத்திலிருந்தும், பண்பாட்டிலிருந் தும் துண்டிக்கப்பட்டு அல்ஜீரியப் பாலைவன
காலச்சுவடு
285
வெப்பத்திலும் தமது 'ஆளுமை'யை இழக்க விரும்பாது வைராக்கியத்துடன் வாழ்ந்த பிரெஞ்சுக் காலனியர்களுக்கு மானுடம் குறுக்கப் பட்டுள்ளதை நாம் காண வேண்டும்.

அல்ஜீரியாவில் வாழவந்த பிரெஞ்சுக் காலனி யாளர்களுக்கு ஏற்பட்ட மனச் சஞ்சலங்கள், தார் மீக நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அவலச்சுவையோடு சித்திரிக்கும் காம்யு, இந்த குழப்பமான 'மானுட நிலைமைக்கு அடிப்படை யாக விளங்கிய பிரெஞ்சுக் காலனித்துவத்தைப் பற்றி, அதன் அடக்கு ஒடுக்குமுறைகள், ஆதிக்க நெறிகள், அதிகார மையங்கள் பற்றி மெளனம் சாதிக்கிறார். ஆனால் மெர்சோவின் தர்மசங்க டம், ரியூவின் விரக்தி கலந்த கருணை, டாருவின் தனிமையுணர்வு - இவையாவற்றையும் காலனித் துவத்தின் இந்த மற்ற அம்சங்களிலிருந்து நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

மெர்சோ ஒரு அராபியனைக் கொல்கிறான். மெர்சோவைக் கொலை செய்யத் தூண்டியது எது? தற்காப்பு உணர்வா? பயமா? அல்லது அந்த அல்ஜீரிய வெப்பமும், உப்புக்கலந்த அந் தக் கடல் காற்றுமா? அராபியன் கத்தியை உருவு கிறான். மதிய வெய்யிலில் அது தீப்பிழம்பாக ஒளிர்கிறது. மெர்சோ தெளிவற்ற நிலை யில் தகிக்கும் கடற்கரை மண்ணில் தன்னிலை குழம்பி அராபியனைச் சுடுகிறான். முதல் தோட்டாவே அராபியனின் உயிரைப் பறித்துவிடுகிறது. மெர்சோ தொடர்ந்து ஐந்து முறை சுடுகிறான். ஒரு அபத்தமான உலகில் நடைபெறும் ஒரு அபத்த மான செயலாகவே விமர்சகர்கள் மெர்சோ செய்த கொலையை விளக்குவது வழக்கம். மெர் சோவைப் பொறுத்தவரையில் அவனது செயல்க ளுக்கு அவனால் காரணங்காட்ட முடியாது. உல கின் வழக்கமான மதிப்பீடுகளை அவன் அங்கீக ரிப்பதுமில்லை. நிராகரிப்பதுமில்லை. சகமனிதர் களுடன், அவனைப் பிணைப்பன அன்பும் ஆசை யுந்தான். ஆனால், இவற்றின் அடிப்படையில் தனது சகமனிதர்களுக்காக, அவர்களின் பொருட்டு, தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதை யும் அவன் விரும்புவதில்லை. பிரபஞ்சத்தின்
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
தணிவான அக்கறையின்மையை, தனது கண நேர அனுபவங்களில் லயித்தவனாய் மன அமை தியுடன் அவன் எதிர்கொள்கிறான். ஒருவன் தனது கணநேர அனுபவங்கள், ஆசைகள், வேட் கைகள், உணர்வுகள் ஆகியவற்றில் மடடும்தான் மனநிறைவு பெறமுடியும் அபத்தமான உலகில் ஒரு தனிமனிதனின் வாழ்வை உறுதிசெய்வதும் இவைதான்-இந்த நினைப்பில் மெர்சோ துக்கு மேடைக்குச் செல்ல ஆயத்தமாகிறான்.

 மெர்சோவின் தனிமை, அவனை அந்நிய னாகப் பிரித்துக்காட்டும் அவனது செய்கைகள், நடத்தை ஆகியன மானுட உலகத்தில் உள்ளார்ந்த அபத்தத்தை உணர்ந்து வாழ்பவனின் செயல்கள் மாத்திரம் அல்ல. இச் செயல்களும் இவை மேற் கொள்ளப்படும் அபத்தமான இந்த மானுட உல கமுமே வரலாற்று விளைவுகள். இவ்வரலாறு இரண்டு உலகப் போர்களுக்கும் இடையே நில விய ஐரோப்பிய சமூகத்தின் அவலமான அபத்த மான வரலாறு மாத்திரம் அல்ல. இது முதலாளித் துவத்தின், காலனித்துவத்தின் வரலாறும் கூடத் தான். எந்த அல்ஜீரியச் சூழலில் மானுட உலகின் அபத்தத்தை, மானுடனின் அந்நியமாதலை காம்யு நிலைநாட்ட விரும்புகிறாரோ, அந்த அல் ஜீரியச் சூழல் காலனித்துவத்தால் வடிவமைக்கப் பட்ட ஒன்று. அல்ஜீரியாவின் அராபியர்களும் ஒருவித அபத்தமான உலகில்தான் வாழ்ந்து வந் தனர் - தமது வரலாற்றை இழந்தவராய், தமது அடையாளம் குழம்பியவராய், மனவளம் குன்றி யவராய். ஆனால் ஃப்ரான்ஸ் ஃபேனோன் விளக் கியுள்ளது போல, அல்ஜீரியாவின் அராபியர்கள் இந்த அபத்த உலகின் ஆதிக்க நெறிகள், அதிகார மையங்கள் ஆகியன பற்றி அனுபவரீதியாக நன் றாகவே உணர்ந்திருந்தனர். தமக்கு ஏற்பட்டிருந்த கொடுரமான அந்நியமாதலுக்கு யார் காரணம் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால் காம்யுவின் கதாநாயகர்களோ தாம் அனுபவித்த அந்நியமாதலை பிரபஞ்சத்தின் விதியாகப் புரிந் துகொண்டனர். ஐரோப்பிய மனசாட்சியின் அங்க லாய்ப்புகளைத் தமது கதாநாயகர்களின் வாழ் வில் உருவகப்படுத்திய காம்யு தனது உலகக் கண்
காலச்சுவடு
|286
ணோட்டத்தை அல்ஜீரிய அரபு சூழலுடன் பொருத்திப் பார்க்கவில்லை.

ரேமோ தனது அராபியக் காதலியை அடித் குத் துன்புறுத்துவதை, பிறகு ரேமோவைப் பின் தொடர்ந்த அவளது சகோதரனை தான் கொல்ல நேர்ந்தது ஆகியன மெர்சோவுக்கு வேண்டுமா னால் அபத்த நிகழ்வுகளாக, தொடர்பற்ற விஷ யங்களாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு கால னித்துவச் சூழலில், அடிமைகளாக வாழ்ந்து வரு பவர் இந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை அறி வர் இவற்றை நியாயப்படுத்தும் சித்தாந்தங்க ளையும் அவர்கள் அறிவர். மெர்சோவுக்கும், அவனது வெள்ளைத்தோல் சகாக்களுக்கும் அரா பியர்கள் வெறும் உடல்கள், பெயரற்ற பிறத்தியார் கள். அராபிய பெண்மணிகள் அவர்களது ஆசை வெறியைத் தணிப்பதற்கென்றே இருப்பவர்கள். அராபிய ஆண்களோ, வெள்ளையரின் கண் னோட்டத்தில், முதுகெலும்பு இல்லாத, ஆண் மையற்ற பேடிகள். ஃப்ரான்ஸ் ஃபேனோன் தனது 'கருப்புத் தோல்கள், வெள்ளை முகமூடிகள் என்ற நூலில் இதை மிகத் தெளிவாக விளக்கியுள் ளார். அதாவது அராபியப் பெண்ணைத் தனது அதிகாரத்தின் துணைக்கொண்டு தனதாக்கிக் கொள்ளும் ஐரோப்பிய வெள்ளையன், இதன் மூலம் தான் அராபியனின் தன்மான உணர்வைக் குலையச் செய்வதாகவே எண்ணுவான். இப்பொ ழுது, அராபியன் தன்மானம் இழந்தவனாகி விடுகிறான்.

 தனது உடமைகளை, தனது மண்ணைக் காத்து இவற்றிற்காகப் போராடும் உரிமையையும் கூட அவன் இழந்தவனாகி விடுகிறான்.மெர்சோ தான் கொலை செய்த அராபியனை எண்ணி வருந்துவதில்லை. தான் துக்கு மேடைக் குச் செல்வதற்கு முன் மரணத் தண்டனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து, அது குற்றவாளிக்கு எந்த வொரு சந்தர்ப்பத்தையும் தர மறுக்கும் பூரண தண்டனை என்று அங்கலாய்க்கும் மெர்சோ, அந்த அப்பாவி அராபியனை ஒரு கண நேரமே னும் நினைவு கூருவது இல்லை. வெள்ளை உல கம் என்றும் கருப்பு உலகம் என்றும் காலனிய
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
உலகம் இருகூறாகப் பிளவு பட்டிருப்பதைப் பற்றி யும், இவ்விரு உலகங்களுக்கிடையே உள்ள உறவை ஒழுங்கமைப்பது துப்பாக்கியும் வேலி யும்தான் என்பதையும் குறிப்பிடுகிறார் ஃப் ரான்ஸ் ஃபேனோன். பிளவுபட்டுக் கிடக்கும் இந்த உலகில் மெர்சோவினால் அராபியர்களை 'அந்நியராக', 'பிறத்தியாராகவே காண முடிகி றது. செலஸ்ட்டுடனும் மாரியுடனும் . ஏன் தன் நாயை அன்றாடம் உதைக்கும் சாலமானோவு டன் கூட - ஏதோவொரு உறவை அவனால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் தான் கொல்ல நேர்ந்த அராபியனோ, மெர்சோவின் கண்களுக்கு ஒரு சடலமாக மட்டுமே தெரிகிறான். அராபியர்களைப் பற்றி ஐரோப்பாவில் ஒரு வழக் குண்டு; "செத்துப்போய்விட்ட அராபியனே நல்ல அராபியன்' என்பதுதான் அது (The only good Arab is a "dead Arab). 905 Birşāsāść" இனவெறிக்குச் சான்றாக விளங்குவது இந்த வழக்கு. இனவெறி, காலனித்துவம் ஆகியன விதித்திருந்த விதிகளை, வரையறுத்த எல்லைக் கோடுகளை - மானுடருக்கிடையில் நிலவக் கூடிய பரஸ்பர உறவை நிர்ணயிக்கும் எல்லைக் கோடுகளை - கடந்து மெர்சோ, என்றென்றும் சாசுவதமான மானுட நிலைமையின் அவலத்
தைப் பிரதிநிதித்துவம் செய்கிறான் என்று கொள் வது எவ்வளவு அபத்தம்; மெர்சோவின் செயல் காலனியாட்சியின் துப்பாக்கி - வேலி அரசிய லின் வரம்பிற்குள் மேற்கொள்ளப்பட்ட ஒன்றே தவிர அர்த்தமற்ற உலகில் நிகழ்ந்த அபத்தமான செயல் அல்ல. காலனிய உலகில் வாழ்ந்தும், அவ் வுலகின் அடிப்படையாக விளங்கி அதனை இயக்கிய ஆண்டான் அடிமை, வெள்ளையன்)அராபி யன் உறவுபற்றி காம்யு சாதிக்கும் மெளனம் அவ ரது சிந்தனையின் வரம்புகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இந்த மெளனம் எவ்வளவு கண்ட னத்துக்குரியது என்பதைப் பின்வரும் செய்திகள் நிரூபிக்கும். கொலைச் செயலுக்கு அபத்த உல கில் அர்த்தம் இல்லை என்று கூறிய காம்யு, இரண் டாம் உலகப் போர் நடந்து முடிந்தபின், ஸ்டாலி னிச சோவியத் யூனியன் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின், கொலை என்பதை' ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். அபத்த உலகில் ஒருவன் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்ற நினைப்போடு நம்மைத் தற்கொ லைக்கு உந்தியிருக்க வேண்டும் என்றும், அவ் வாறு நாம் தற்கொலை செய்து கொள்ளாது அபத்த உலகின் அபத்தத்தை நினைத்து வாழ்க் கையை ஒட்டுவது தர்க்கரீதியாக சரியானதல்ல என்றும் அவர் கூறினார். ஒருவன் தான் வாழ்வ தென்று முடிவு செய்தபின், பிறர் கொலை செய் யப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்று வாதாடிய காம்யு, இந்த முரணான சூழலில் கலக மனப்பான்மையுடன் வாழ்வதில்தான் அர்த்த முண்டு என்றார். 1956 இல் வெளியிடப்பட்ட 'கலகக்காரன்' என்னும் நூலில் இந்த நிலைப் பாட்டை அவர் முன்வைக்கிறார். ஆனால் இதே காலகட்டத்தில் அல்ஜீரிய அராபியர்கள், திட்ட மிட்டமுறையில், பிரெஞ்சு ராணுவத்தால் படு கொலைச் செய்யப்பட்டதை அவர் கண்டிக்க வில்லை; மாறாக பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்துக் கிளம்பிய அல்ஜீரிய விடுதலைப் போராட்டத் தைக் கண்டித்தார். அராபியர்களைப் பற்றிய அவ ரது புரிதல்கள் பிரெஞ்சு இனவாதமும் காலனித்து வமும் வகுத்திருந்த சித்தாந்த சட்டகத்திலிருந்து
காலச்சுவடு
287 ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
பிரிந்து, அராபியர்களின் சமகால வீர வரலாற்றை அங்கீகரிக்கும் வகையில் வளர்ச்சியடையவே இல்லை.

அல்ஜீரியாவில் நிறுவப்பட்ட மிகமோசமான காலனித்துவத்தை காம்யுவினால் எவ்வாறு சகித் துக் கொள்ள முடிந்தது? காலனித்துவத்தின் தீய விளைவுகளைப் பற்றி அதிகம் எழுதவில்லை அவர் என்றாலும் தாம் வாழ்ந்த சூழல் அதர்மச் சூழல் என்பதை உணர்ந்திருந்தார். கொள்ளை நோய் என்ற புதினத்தில், அதர்மச் சூழலில் தார் மீக உணர்வுடன் ஒருவர் வாழ்வது எப்படி என்ற பிரச்சினையை அவர் எழுப்பவே செய்கிறார். ஆனால் அல்ஜீரியாவின் அரசியல் பிரச்சினையு டன் தொடர்புடைய விஷயமாக அவர் அதைக் காண்பதில்லை. இதுபற்றி எட்வர்ட் சய்த் கூறுகி றாா.
 
'காம்யு இங்கு போற்றுவது மனிதர்கள் தம் மைத் தாமே அறிந்து கொள்வதைத்தான்; அதா வது ஒரு மோசமான சூழ்நிலையில், மாயை நீங் கிய முதிர்ச்சியும் தார்மீக உறுதியும் இணைந்த நிலையில் ஒருவர் இருப்பது என்பதைத்தான்'
(Edward Said – "Narrative Geography and Interpretation", NLR 180, March/April 1990, Page 87)

இந்த மோசமான சூழ்நிலையும் ஒரு வர லாற்று விளைவு மானுடர்களின் செயல்பாட்டி னால் ஏற்பட்டுள்ள ஒன்று என்பதை காம்யு ஏற்ப தில்லை. அவரைப் பொறுத்தவரை மானுட வாழ்வு என்பதே ஒரு அவல நிலை; எல்லையற்ற பிரபஞ்சத்தின் அசைக்கமுடியாத அமைதியை, மெளனத்தை எதிர்கொள்ளும் மானுட முயற்சி கள் தோல்வியில்தான் போய் முடிவடையும். இந்த சூழலில் வாழ மானுடர் எத்தகைய நெறிக ளைப் பின்பற்ற வேண்டும், எப்படி வாழ வேண் டும் என்பதைப் பற்றிய ஒரு ஆய்வே கொள்ளை நோய்',

கொள்ளைநோய் இன் கதாநாயகன் மருத்து வன் ரியூ கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டுள்ள
ஒரான் நகரத்தில் பிணிதீர ஓயாது உழைக்கிறான். நோயின் முதல் கட்டங்களிலேயே அதை இனங் கண்டு கொண்டு, மக்களின் நலம் கருதி, ஒரான் நகராட்சியை அவசரகால சட்டங்களை இயற்றும் படி செய்கிறான். ஓரான் நகரத்தின் அன்றாட வாழ்வு படிப்படியாக பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. வெளி உலகுடன் அந்நகரத்துக் குள்ள தகவல், பயணத் தொடர்புகள் துண்டிக்கப் படுகின்றன. ஒரான் நகரம் ஒரு சிறைச்சாலை போல் ஆகிவிடுகிறது. கொள்ளைநோய் ஏற்படுத் தும் மரணத்தைத் தடுப்பதென்பதோ மிகவும் கடி னம். ஒரான் நகரத்தை மரணம் முற்றுகையிடுகி றது. தொடர்ந்து ஏற்படும் சாவுகள், ரியூவையும் அவனுக்கு உதவியாக இருக்கும் டர்ருவையும் பத்திரிகையாளன் ராம்பெர்வையும் வெவ்வேறு விதங்களில் பாதிக்கின்றன.

பாரீஸில் தனக்காகக் காத்திருக்கும் காதலிக் காக ஏங்கும் ராம்பெர், ஒரான் நகரத்திலிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்ற எண் ணத்தில் நகரக்காவல்காரர்கள் இருவரை நாடுகி றான். ஆனால் தப்பிப்போகத் தக்க தருணம் வரும்போது தனது மனதை மாற்றிக் கொண்டு ரியூவிற்கு உதவி செய்வது என்று முடிவு செய்கி

காலச்சுவடு
288
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
றான். நோயினால் அவதியுறுவோருக்குத் தன்னா லான உதவியைச் செய்யாது தப்பியோடினால் அந்த நினைவு தன்னை வாட்டியெடுக்கும் என் றும், தான் சந்தோஷத்தைத் தேடிப் போக, அது வுமே குற்றவுணர்வால் களங்கப்படுத்துவதை தன் னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் ராம் பெர்கருதுகிறான். இது காதலா, கடடிையா என்ற பிரச்சினைதான் என்றாலும் எக்காரணத்தைக் கொண்டும் காதலைத் துறப்பது நியாயமல்ல என்று ரியூ கூறுகிறான். எனினும் ரியூவுமே தனது மனைவியைப் பிரிந்து வாழ்பவன்தான். மனைவி வேறொரு நகரத்தில் காசநோய்க்காக சிகிச்சைப் பெற்று வந்தாள். ரியூ, ராம்பெர் இருவருமே நோய்வாய்ப்பட்டுள்ள மக்களுக்குப் பணி செய் வதைத் தவிர தம்மால் வேறு எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்திருந்தனர். 

இவ்வகையில் ரியூவின் நிலைப்பாடு இது தான்.தனது மருத்துவப்பணிகள் மூலம் நோயால் வாடிக்கிடப்போருக்கு ஆறுதல் வழங்குவதையே தனது கடமையாகக் கண்டான். தன் தொழிலை அவன் பணிவுடனேயே அணுகுகின்றான். ஒரு வீரனாகவோ மகானாகவோ தன்னை அவன் கரு திக் கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டுள்ள உலகின் ஒரு நிச்சயம், மரணமும் அது ஏற்படுத் தும் துயரமும்தான். இவற்றை அடக்கத்துடனும் தன்மானத்துடனும் எதிர்கொள்வதையே ரியூ விரும்பினான். மானுடகுலத்தின் துயரத்தில் ஒரு வன் தன்னைத் கரைத்துக் கொள்வதன்மூலம் மர ணத்தைப் பற்றிய பயத்தை நீக்கலாம். மேலும் துயரம் என்பது சாசுவதமானது அல்ல. பழையன வற்றை மறந்து, அவற்றிலிருந்து மீண்டு, எப்பொ ழுதும் போல வாழத் தயங்கமாட்டார்கள் மனிதர் கள் என்பதை ரியூ அறிந்தவன்தான். அவனுக்கு இதுவும் தெரிந்த ஒன்றுதான். மறுபடியும் கொள் ளைநோய் தாக்கும்; கொள்ளைநோய்க் கிருமி முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்று. தனது காலம் வரும் வரை காத்திருந்து மறுபடியும் அது தன் கைவரிசையைக் காட்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். இவ்வகையில் பிணி, நோய், மரணம் முதலியன மக்களுக்கெதிராகக் கிளம்பியுள்ள அநியாயங்கள், அநீதிகள் என்பது அவனது புரிதலாக இருந்தது. மரணத்துடன் போராடும் மக்களின் வாழ்விற்கு ஒரு சாட்சியாக ரியூ தன்னைக் கருதிக் கொள்கிறான். அவர்க ளுக்கு ஏற்பட்ட கொடுரத்தை மானுட நினைவில் நிறுத்துவதைத் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகக் கொள்கிறான்.

கொள்ளைநோய் என்பது மனிதரால் அகற்ற வேமுடியாத ஒன்று என்று கருதுபவன் டர்ரு. தனது இளமைக் காலத்திலிருந்தே மரணத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியவன் அவன். மனி தனே மனிதனின் உயிரைப் பறிப்பதென்பது என் னென்றும் நடந்துள்ளது என்றும், இதுதான், உண் மையில் மனித ஆன்மாவை ஆட்டிப்படைக்கும் கொள்ளைநோய் க்கிருமி என்றும் டர்ரு கருதி னான். இந்த உலகில் கொள்ளை நோயால் பாதிக் கப்படாதவர் மிகச் சிலரே என்பதும் டர்ரூவின் கருத்து. அவன் கூறுகிறான்.

    "நம்மில் ஒவ்வொருவனுக்குள்ளும் கொள் ளைநோய் இருக்கிறது. இந்த உலகில் ஒரு வன் கூட அதிலிருந்து விடுபட்டிருக்க வில்லை. நான் அறிவேன் - நாம் நம் மீது முடிவில்லாத   கண்காணிப்யைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்; இல்லாவிடில் ஒரு நொடி நேர  அஜாக்கிரதையில் நாம் யாரோ ஒருவரது முகத்தில் நமது மூச்சை விட்டு அவ ருக்கு நோயைத்     தொற்ற வைத்துவிடுவோம். இயல்பானது நுண்கிருமி மட்டுமே. மற்றவை அனைத்தும் -  ஆரோக்கியம், நேர்மை, தூய்மை (வேண்டுமானால் இதையும் சேர்த் துக் கொள்வோம்) -   மானுட சித்தத்தின் விளைபொருள்கள்தான்,ஒரு போதும் தடுமா றக் கூடாத உஷார் நிலையின்   விளைபொருள் கள்தான். யாருக்குமே நோயைத் தொற்ற வைக்காத ஒரு நல்ல மனிதன், மிக    அற்புத மான அளவிலேயே கவனக்குறைவு உடைய வன். இந்த கவனக் குறைவைத் தவிர்க்க    மகத் தான மனோதிடமும் எப்போதும் விழித்திருக் கும் மனமும் தேவை. ஆமாம் ரியூ கொள்ளை
காலச்சுவடு
289
ஆண்டுமலர் 19911
படிப்பகம்
________________

www.padippakam.com
    நோயால் பீடிக்கப்பட்டிருப்பது என்பது சோகமான விஷயம்தான். ஆனால் மேலும் சோர்வு         தரக்கூடியது கொள்ளைநோயால் பீடிக்கப்பட்டிருப்பதை மறுப்பதுதான். இத னால்தான் உலகத்தில்         எல்லோரும் அவ்வ ளவு சோர்வடைந்திருக்கிறார்கள். எல்லோ ருமே கொள்ளை நோயால்         அனேகமாக சலிப்படைந்துவிட்டனர். எனவேதான் கொள்ளைநோயை நம்மிடமிருந்து வெளி         யேற்ற விரும்பும் நம்மைப்போன்ற ஒரு சிலர் மனக்கசப்பூட்டும் சோர்வை உணர்கிறோம்.     இச்சோர்விலிருந்து விடுதலை என்பது மர ணத்தின் மூலமே தவிர வேறு வழியில் இல்லை."
    (Albert Camus, Collected Fiction of Albert Camus. P. 218)

ராம்பெர், ரியூ டர்ரூ ஆகிய மூவரும் காம்யு வின் சிந்தனையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றனர். மரணம், மரணத்தை சலனமின்றி, எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி எதிர்நோக்கும் மானுடன் அநீதி, அநீதியால் பாதிக்கப்பட்டோருடன் தன்னை ஐக்கியப்படுத் திக் கொள்ளும் மானுடன் துயரம், துயரத்தைப் போக்குவதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளும் மானுடன்.டர்ரு. ரியூ, ராபெர் ஆகிய மூவரும் காம்யுவின் "கலக மனிதனின் வெவ்வேறு அம் சங்களைப் பிரதிநித்துவம் செய்கின்றனர்.

காம்யு கொள்ளைநோய் என்பதை ஒரு ஆன் மீக, தத்துவ, மெய்ப்பொருள் (Metaphysical) பிரச்சினையாகவே சித்தரிக்கிறார். கொள்ளை நோயின் தன்மை, இதனால் பாதிக்கப்பட்ட உடல் படும் அவதி, நோயைப்போக்கமேற்கொள்ளப்ப டும் மருத்துவம், நோய் பரவுவதைத் தடுக்க எடுக் கப்படும் முயற்சிகள், இயற்றப்படும் சட்டங்கள், நிறுவப்படும் தற்காலிக நோய்த்தடுப்பு முகாம் கள், ஒரான் நகரத்தின் போக்குவரத்தும் பரஸ்பரத் தொடர்பும் கறாராக வரையறுக்கப்பட்டிருந்த விதம் ஆகியன பற்றிய செய்திகளும் பெளதீக விவரங்களும் இங்குத் தரப்பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால் கொள்ளைநோய் ஏற்ப டுத்தும் வேதனை, முடிவில் ஆன்மீக வேதனை யாகவே விளக்கப்படுகிறது. நகர நீதிபதி ஒத் தோனை எடுத்துக் கொள்வோம். சட்டம், ஒழுங் கைக் காப்பவர் அவர் ஒரானில் குற்றவாளிகள் யார், குற்றமற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்ய அவருக்கு உரிமையுண்டு. மரணத்தீர்ப்பு அளித்து நீதி' யை நிலைநிறுத்த அவருக்கு அதி காரம் உண்டு. கொள்ளைநோயால் அவரது மகன் இறந்துவிடுகிறான். மரணத்தை இனி தன்னால் வெல்ல முடியாது, இனி தான் மரணத்தின் அதிப தியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தவ ராய் அவர் நோய்த்தடுப்பு முகாம்களில் சேவை செய்வதென்று முடிவு செய்கிறார். ஓதோனின் மனமாற்றம் அவரது தனிப்பட்ட வேதனையி னால் ஏற்பட்ட ஒன்றுதான் என்றாலும், நீதிபதி யான அவர் சமூகத் தொண்டராக மாறுவதையே குறிக்கிறது. தீர்ப்பு வழங்குபவன் வாழ்க்கை வழங்கக் கூடிய இறுதித்தீர்ப்பை எதிர்நோக்கி வாழ்கிறான். கொள்ளைநோயில் வரும் மற்ற கதாபாத்திரங்களுங்கூட கிறித்தவப் பாதிரியார், அரசு குமாஸ்தாக்கள், கோத்தார் ஆகியோர் - கொள்ளைநோயை ஒரு மருத்துவப் பிரச்சினை யாகப் பார்ப்பதில்லை. சமூகத்துடன் தமக்குள்ள உறவைப் பற்றிய உணர்வை கொள்ளை நோய் மிகத் தெளிவாக தமக்கே படம்பிடித்துக் காட்டி யுள்ளதாகவே இவர்கள் கருதினர்.

ஆனால், நாம் இங்கு கேட்க விரும்பும் கேள்வி இதுதான் கொள்ளைநோய் என்பது 'மானுட நிலைமை யை விளக்குவதற்கான ஒரு உருவகமாகச் செயல்பட்டாலும், இந்த கதை நிகழ் வதோ ஒரு குறிப்பிட்ட அல்ஜீரிய நகரத்தில்தான். ஆனால் இந்நகரத்தின் தனித்தன்மை பற்றி நமக்கு எதையும் ஆசிரியர் தெரியப்படுத்துவதில்லை. 'மரங்களற்ற, கவர்ச்சியற்ற, ஆன்மாவற்ற ஒரு நகரமாக ஓரான் சித்தரிக்கப்படுகிறது. இதற் கென்று விசேஷ அம்சங்கள் எதுவும் இல்லை.சதாசர்வகாலமும் ஒய்ந்துகிடக்கும் இந்நகரம் பெயரளவிலும் தட்பவெப்ப ரீதியாகவும் மட்
காலச்சுவடு
290
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
டுமே ஒரு அல்ஜீரிய நகரம். ஆனால் இங்கு அரா பியர்களும் ஆப்பிரிக்கர்களும் வாழ்கின்றனர் என்பது எங்குமே சொல்லப்படுவதில்லை - ஒரு இடத்தில் தவிர ரியூவைச் சந்திக்க வரும் ராம் பெர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, நகரத்தில் அராபியர்கள் வாழும் பகுதியி லுள்ள வீட்டு வசதிகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியன பற்றி அறிந்து கொள்வதற்காக தான் ஒருமுறை ரியூவை அணுகி உதவி கோரியதாகக் கூறுகிறான். ஆக, ஒரானில் 'அராபியர் பகுதி' ஒன்று இருந்தது என்பது இப்படித்தான் நமக்கு தெரியவருகிறது. ஆனால் ஒரானை ஒரு பிரெஞ்சு நகரமாகவே கதாசிரியர் சித்தரிப்பதால், "ஒரான் ஒரு அராபியப்பெயர், அது ஒரு அராபிய நகரம்' என்ற எண்ணம் வாசகருக்கு 'சட் டென்று உதிப்ப தில்லை.

ஒரான் ஒரு அராபிய நகரம் என்பதை காம்யு திட்டவட்டமாகச் சொல்லாததற்குக் காரணம், அல்ஜீரியச் சூழலை இங்கு அவர் ஒரு குறியீடா கப் பயன்படுத்துவதால்தான். இதன் காரணமா கவே அவர் நகரத்தின் பொருண்மை அம்சங் களை, குறிப்பாக அங்குவாழ்ந்த அராபியர்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி மெளனம் சாதிக்கிறார். அவற்றைப் பற்றி அவர் எழுதியிருந் தால் ஒரான் ஒரு ரத்தமும் சதையுமான, வரலாற்று வெளியில் அமைந்துள்ள ஒரு நகரமாய் மாறியி ருக்கும். இருத்தலியல் பிரச்சினைகளை எழுப்பு வதற்கு தகுந்த களமாக இருந்திராது என்றாலும் இங்கு அராபியர்களும் இருந்தனர் என்பதற்கு கொள்ளைநோய் புதினத்திலேயே ஒரு சான்று இருப்பதால், நாம் சில கேள்விகளை முன் வைப் போம்:
 
    -கொள்ளை நோய், அராபியர்களையும் பாதித்ததா? பாதிக்கப்பட்ட அராபியர்கள், உடல்     வேதனையுடன் மன உளைச்சலையும், தர்ம சங்கடங்களையும் அனுபவித்தனரா?

    - கொள்ளைநோய் பரவுவதைத் தடுக்க மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள், இயற்றப்பட்ட     சட்டங்கள், நிறுவப்பட்ட கட்டாய நோய்த்தடுப்பு முகாம்கள் அராபியர்களின் அன்றாட வாழ்வை         எவ்வகையில் பாதித்தன?

    - ரியூவின் மருத்துவம் அவர்களுக்கும் ஆறு     தல் அளிக்கக் கூடியதாக இருந்ததா?

காம்யுவைப் பொறுத்தவரை கொள்ளை நோய் ஒரு மனவியாதியும் கூட அல்லவா? அது அராபியர்களையும்கூடப் பாதிக்கத்தான் செய் தது. ஆனால் அராபியர்கள் அனுபவித்த வேதனை ஒரு மனவேதனை மாத்திரம் அல்ல. காலனித்துவம் மிக கொடுரமான கொள்ளை நோய். அது ஏற்படுத்திய மரணமும் துயரமும் அராபியர்களின் வாழ்வுடனும் உடலுடனும் இரண்டறக் கலந்துவிட்டவை. டர்ரூவைப் போல் மரணத்தை ஒரு தத்துவப் பிரச்சனையாக அராபி யன் பார்க்கவில்லை. அது அவனுக்கொரு அன் றாடப் பிரச்சினை. காலனி ஆட்சியையும் அதன் அதிகார மையங்களையும் வெறுக்கப் பழகியி ருந்த அராபியர்கள், அவர்களின் நன்மை' க்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளையும் நியதிகளையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்த்தனர். வெள் ளையனால் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் தமது தனி வாழ்வை, குடும்ப அமைப்பை, தமது பண்பாட்டை, தமது வாழ்வு முறையை மாற்றிய மைக்கக் கூடியவை, தனது அடிப்படை உரிமைக ளைப் பறிக்கக் கூடியது என்பதை அராபியர்கள் அறிந்திருந்தனர். காலனியாளர்களின் சேவைப் பணிகளையுமே அராபியர்கள் தமக்கெதிராக செயல்படுவனவாகக் கண்டனர். அவர்கள் ரியூ வின் மருத்துவ சிகிச்சையை வேதனை தீர்க்கும் சுயநலமற்ற பணியாகக் கருதி அதைப் பாராட்டி யிருக்க மாட்டார்கள். ஃபிரான்ஸ் ஃபேனோன் எழுதுகிறார்:
 -
    'அல்ஜீரியாவில், ஒரே சமயத்தில், இனவா தம், அவமானம் ஆகியவற்றுடன் மேற்கத் திய         மருத்துவமும் புகுத்தப்பட்டது. அது ஒரு ஒடுக்குமுறை அமைப்பின் பகுதியாக இருந்த         காரணத்தால், சுதேசியின் மனதில் எப்போ தும் குழப்பமான அபிப்பிராயத்தையே அது         உருவாக்கியது. இந்தக் குழப்பத்தை உண்மை
| காலச்சுவடு
29 |
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
    யில் ஆக்கிரமிப்பாளரின் ஆதிக்க வடிவங்க ளுடன் தொடர்புபடுத்தியே புரிந்து கொள்ள முடியும்.        
    காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டவன் காலனித்துவ ஆட்சியாளர்களின் எல்லா சாத         னைகளையுமே ஒரு இழிவான பொருளிலும் ஒரு அதீதமான கண்ணோட்டத்திலும் மட் டுமே         பார்க்கும்படியான வகையில் காலனி யச் சூழல் செயல்படுகிறது. காலனித்துவ         ஆட்சிக்குட்பட்டவன் மருத்துவரையும், பொறியியலாளரையும், பள்ளி ஆசிரியரை யும் தன்னோடு ஒன்றிவிட்ட குழப்பம் என்ற மங்கலான திரையினூடாகவே காண்கிறான். கிராமத்திற்கு மருத்துவர் மேற்கொள்ளும் கட் டாயமான வருகைக்கு முன்னர் போலீஸ் அதி காரிகள் மூலம் கிராம மக்கள் பொதுவான இடத்திற்குக் கொண்டுவரப்படுகின்றனர். இத் தகையதொரு பொதுவான நிர்ப்பந்தம் நில வும் சூழ்நிலையில் இங்கு வந்து சேரும் மருத் துவர், நிச்சயமாக நாட்டு மருத்துவராக இருக் கமாட்டார். மாறாக, அவர் ஆதிக்க சமுதாயத் தைச் சேர்ந்த மருத்துவராக அநேகமாக ராணுவ மருத்துவராக இருப்பார்.

 சுகாதார மேம்பாடுகள் பற்றிய புள்ளிவிவரங் கள் நோய்க்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த வெற்றியாக சுதேசிகளால் கருதப்ப டவில்லை. மாறாக, தமது நாட்டின் மீது ஆக்கி ரமிப்பாளர்களின் பிடிப்பு விரிவடைந்ததற் கான சான்றுகளாகவே அவற்றை அவர்கள் பார்க்கிறார்கள்(Franz Fanon, "Medicine and Colonialism, “in A Dying colonialism". p. 12 1)

ஓரினின் அராபியர்கள் பற்றி மெளனம் சாதிக்கும் காம்பு, ஒரானை அங்கு வாழ்ந்து வந்த பிரெஞ்சு மக்களின் இயல்பான 'தாயகமாக சித்த ரிக்கிறார் கொள்ளைநோய் ஏற்படுத்திய பீதி நீங் கிய பின் தாங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது எண்ணிய எண்ணங்கள், அனுபவித்தஏக்கங்கள், வேட்கைகள் முதலியவற்றை நினைவு கூர்ந்தும், நாடு கடத்தப்பட்டவர்கள் தமது தாயகத்திற்குத் திரும்பிவருபவர் போல குதூகலித்துமே, ஒரான் நகரவாசிகள் தமது தற்காலிக சிறைச்சாலை'யின் வரம்புகளைக் கடக்கின்றனர். அவர்கள் ஒரான் நகரத் தெருக்களில் வளைய வந்து தமது மனங்க ளில் இதுநாள் வரைக்கும் முடங்கிக் கிடந்து அன் பையும் ஆசையையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்தக் காட்சியுடன் தன்னை இணைத்துக் கொள் ளும் ரியூ அவர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பி வந்து விட்டார்கள் என்று கருதுகிறான். கொள் ளைநோயால், பாதிக்கப்பட்டவரின் நினைவும் வேட்கையும் தமது ஆசைக்குரியதை அடையும் தருணத்தில் ஒரான் நகரம் உயிர்பெறுகிறது. ஒரான் நகரம் மாற்றானின், அராபியனின் இல்லம் என்ற உணர்வுக்கு இங்கு இடமில்லைதான். பிரெஞ்சு காலனியாளர்கள் வாழும் ஒரு வெளி' யாகவே சித்தரிக்கப்படும் ஒரான் காலனியாளர்க ளின் கற்பனையில், வேட்கைகளில் ஒரு தாயக மாக காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில், ஒரான் யாருடைய இல்லம்? தாயகம்? அராபியர் கள், அயலானின் ஆதிக்கத்திற்குட்பட்ட தமது மண்ணை நினைவிலும் நெஞ்சிலும் நிறுத்தியே அம்மண்ணின் விடுதலைக்காகப் போராடத் துணிந்தனர். ஆனால் தமது தாயகத்தை மீட்டு எடுக்க அன்பும், ஆசையும், நினைவும் மாத்திரம் அவர்களுக்குப்போதுமானதாக இருக்கவில்லை. ஏனெனில் அராபியர்கள் விரும்பிய தாயகம் அவர்கள் கற்பனையில் மலர்ந்து நினைவில் பூத்த மலர் அல்ல. காம்யுவின் பார்வையில் அல்ஜீ ரியா, ஆப்பிக்கக் கண்டத்தின் வரைபடத்திலுள்ள ஒரு பெயர் அல்ஜீரியா, அதன் கடல், கடற்கரை கள். அதன் மத்தியதரைக் கடல் பண்பாடு (இது வுமே கிரேக்க மோகம் கொண்டிருந்த காம்யுவின் கற்பனையில் வளர்ந்த ஒன்று) இங்கு ஒருவன் மேற்கொள்ளக்கூடிய சிற்றின்ப வாழ்க்கை - இவை அல்ஜீரியாவை பிரெஞ்சு பூர்ஷவா உலகத் திற்கு ஒரு மாற்று உலகாக காம்யுவிற்குக் காட் டின. ஆனால் காம்யு காணத் தவறியது இதைத் தான் ஐரோப்பியர்கள் வரைபடங்கள் தயாரித்து அவற்றில் அல்ஜீரியா என்ற பெயரை பொறித்த தற்கு முன்னும் (அதற்குப் பின்னும்) ஒரு அல்ஜீ ரிய நாடும், நாகரிகமும், பண்பாடும் இருந்தன, இருந்து வருகின்றன. ஆகையால் அராபியர்கள்
காலச்சுவடு
292
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com

தேடிய தாயகம் ஐரோப்பியக் கற்பனைக்கு அப் பால் நிலவிய தனித்தன்மையுடைய வேறொரு
உலகம்.

அல்ஜீரியாவின் தனித்தன்மையை, அதற்கே வுரிய வாழ்வுமுறைகளை அங்கீகரிக்காத காம்யு அல்ஜீரியாவின்பால் வெள்ளையர்களுக்கு இருந்த அலாதியானக் காதலைப் பற்றி மாத்திரம் குறிப்பிடுகிறார். 'விருந்தாளி' அவரது சிறுகதைக ளில் ஒன்று. இதில் இடம்பெறும் முக்கிய கதாபாத் திரம், பள்ளி ஆசிரியன் டாரு. மெர்சோவைப் போன்றவன்தான் அவனும். தனிமையில் வாழ்ந்து வந்தவன். ஒரு நாள் இரவு அல்ஜீரிய விடுதலைப்போர்துவங்கியப் பின்னர், ஒரு அரா பியன் டாரூவின்பொறுப்பில் ஒப்படைக்கப்படுகி றான். டாரு அவனைப் பொழுது விடிந்ததும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண் டும். பொழுது விடிகிறது. அராபியனின் வாழ்க் கையிலும் அவனது பிரச்சினைகளிலும் தலையிட விரும்பாது டாரு அராபியனைத் தனியே காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கிறான். அராபி யன் செல்லும்முன் பள்ளி அறையொன்றின் கரும் பலகையில் எழுதிவிட்டு செல்கிறான், நீ உனது சகோதரனை கைவிட்டு விட்டாய். இதன் பயனை நீ அனுபவிப்பாய்' என்று. ஆனால் சிறிதும் சலன மடையாத டாரு அல்ஜீரியப் பாலைவனத்தின் பரந்த வெளியை வெறித்துப் பார்க்கிறான். அரா பியன் சிறை நோக்கிச் செல்கிறான். யார் இங்கு வேண்டாத விருந்தாளி - டாரூவா, அராபியனா? அபத்த உலகம் பற்றிப் பேசும் காம்யுவின் அரசி யல் நிலைப்பாட்டில் எந்தவொரு குழப்பமும் இல்லை. இந்தக் கதையிலுமே அராபியனின் மண் உரிமையை அவர் அங்கீகரிப்பதில்லை. மாறாக டாரூவுக்கு அம்மண்ணின் மீது இருந்த காதலைப் பற்றி மட்டுமே பேசுகிறார். -

காம்யு சாதிக்கும் மெளனங்கள் தனிப் பட்ட மனிதனின் சிந்தனையின் வரம்புக ளைக் குறிப்பன மட்டும் அல்ல. அவர் சொல் லாமல் விட்டவை காலனித்துவ சிந்தாந்தங்க ளாலும் மூடி மறைக்கப்பட்டவைதான். கால னித்துவம் தான் ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகளை கன்னி நிலங்களாக, அதாவது, நாகரிகம் இன்னமும் குடியேறாத இடங்க ளாகக் கண்டது. வெள்ளைக்காரர்கள் இந்நா டுகளை வேறு நாகரிகங்களின், பண்பாடுக ளின் உறைவிடமாகக் காணவில்லை. மாறாக, தமது ஏகாதிபத்தியத் தாபங்களும், வேட்கை களும் கற்பனையும் நிறைவு பெறுவதற்கான களமாகவே அவற்றைக் கண்டனர். காம்யு வின் சிறுகதைத் சோரம் போனவளி'ல் வரும் யானின் என்ற பிரெஞ்சுப்பெண்மணி அல்ஜீரி யப் பாலைவனத்தின் பரப்பில் தனது ஆளு மையை, பெண்மையை உறுதி செய்து கொள் கிறாள். யானின் ஒரு சராசரிப் பெண். அவ ளுக்கு திருமணமாகி இருபது வருடங்க ளுக்கு மேல் ஆகியிருந்தன. அவளது கண வன், அவள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒருவன், ஒரு விற்பனையாளன். ஒருமுறை யானினின் கணவன் ஊர் ஊராகச் சென்று தனது சரக்குகளை விற்கப் புறப்படு கையில், யானினும் அவனுடன் செல்கிறாள் - அவளது வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்கள் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு சிற்றுரில் ஒரு இரவு தங்க வேண்டிவருகி றது. பயணக் களைப்பு யானினை தளரச் செய் தாலும் அவ்வூரிலிருந்த ஒரு பழங்கோட் டையை அவள் பார்க்க விரும்புகிறாள். பய ணம் முழுவதிலும் இனந்தெரியாத சோகமும், பயமும் யானினை ஆட்கொண்டிருந்தன. மாலைநேர வெய்யிலில் அவளும் அவளது கணவனும் கோட்டைக்குச் செல்கின்றனர். கோட்டையின் உச்சியை அவர்கள் அடை கின்றனர். கீழே அவர்கள் பார்வைக்கென்றே
| காலச்சுவடு - 293
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
விரிந்து கிடந்தாற்போல் ஒரு பரந்தபாலைவ னக் காட்சி, யானின் உடலும் உள்ளமும்பதை பதைக்க அக்காட்சியை ரசிக்கிறாள்.
 
 'பொழுது சாயச்சாய வெளிச்சம் தளர்ந்து மென்மையானது; அது படிகநிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறியது. அதே சமயத்தில் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்த பெண் னின் மனத்தில், காலம், பழக்கம், சலிப்பு ஆகியவை உருவாக்கியிருந்த முடிச்சு மெல்ல அவிழத் தொடங்கியது. நாடோடிக ளின் முகாமை அவள் பார்த்தவண்ணம் இருந் தாள். அங்கு வாழ்ந்து வருபவர்களை அவள் பார்த்தது கூட இல்லை. கறுப்புக் கூடாரங்க ளில் சலனம் ஏதும் இல்லை. எனினும் அவர்க ளைப் பற்றிதான் அவளால் நினைக்க முடிந் தது - இந்த நாள் வரை அவள் தெரிந்து கொள் ளாதிருந்த அவர்களைப் பற்றித்தான். வீடற்ற வர்களாய், உலகத்திலிருந்து துண்டிக்கப்பட் டவர்களாய், அவளது கண்களுக்குத் தெரிந்த பரந்த நிலப்பரப்பில் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு சிலரே அவர்கள். இந்தப் பரந்த நிலப்பரப்போ இன்னும் பெரியதொரு வெளியின் மிக அற்பமான பகுதியே. இந்தப் பெரிய வெளி நெளிந்து சுளிந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தென் பகுதியில், நதி யொன்றினை அனைத்துள்ள காடொன்றில் போய் முடிகிறது.

 காலம் தோன்றிய முதல், முற்றிலும் சுரண்டி யெடுக்கப்பட்ட இந்த எல்லையில்லாத நிலத் தின் காய்ந்த மண்ணில், ஒரு சில மனிதர்கள் விடாது பயணம் செய்து வந்துள்ளனர் -உடைமைகள் ஏதுமின்றி, யாருக்கும் அடிப ணியாதவராய், வறுமையால் பீடிக்கப்பட்டு, ஆனால் ஒரு வினோதமான ராஜ்யத்தின் சுதந் திர மன்னர்களாய் இந்த எண்ணம் ஒரு இனிய, பெரிய சோகத்தை தன்னுள் ஏற்படுத் தித் தனது கண்களை மூட வைத்தது ஏன் என் பது யானினுக்குத் தெரியவில்லை.'(AlbertCamus, The collected Fiction of Albert Camus, P. 321)

யானினின் மனதை நெகிழச்செய்யும் இக்காட்சியில் அராபிய நாடோடிகளும் இடம்பெறுகின்ற னர். ஆனால் அவர்கள் மாறாத தன்மையுடைய வர்களாய், வரலாற்றிற்கு வெளியே வாழ்பவர் கள். யானின் மனதில் மென் உணர்வுகளைத் துண் டும் இந்தப் பாலைவன நாடோடிகள் அவளது கற்பனையில் சஞ்சரிக்கும் அவளது வேட்கையின் பிரதிபிம்பங்களே தவிர ரத்தமும் சதையுமான மனிதர்கள் அல்ல. யானின் நள்ளிரவில் மீண்டும் கோட்டைக்குத் தனியாக வருகிறாள். கோட்டை உச்சிக்குச் சென்று மலையில் அவள் கண்டு ரசித் தக் காட்சியை நினைவில் நிறுத்தி பாலைவனத் தின் பரப்பில், அதன் அமைதியில் இரண்டறக் கலந்து விடுகிறாள். மாலையில் அவளை வாட் டிய 'இனிய பெரிய சோகம் பீறிட்டு வெளிவருகி றது: 
 
“பயத்திலிருந்து, பித்துப் பிடித்தவளாய், போவது எங்கு என்று தெரியாதவளாய் பல் லாண்டுகாலமாக ஓடிய பிறகு அவள் ஒரு நிலைக்கு வந்தாள். அதே சமயம் தனது மூலா தாரங்களை தான் திரும்பப் பெறுவது போல அவளுக்குத் தோன்றியது. அவளது உடலில் புத்துயிர் பாய்ந்தது. அவளது உடல் நடுக்கம் நின்றது. மதில் சுவர் மீது தனது வயிற்றை அழுத்திய அவள் நகரும் வானத்தை நோக் கித்தனது உடலை நீட்டிநிமிர்த்தினாள். தனது படபடக்கும் இதயம் அமைதியடைந்து தன் னுள் மெளனம் குடிகொள்ளவே அவள் காத் திருந்தாள். நட்சத்திர மண்டலங்களின் கடைசி நட்சத்திரங்கள் பாலைவனத்தின் தொடுவானத்தில் சற்றுத் தாழ்வாக, அசைவற் றுக் கிடந்தன - தமது ஒளியைச் சிந்தியவாறு. பிறகு, தாங்கொணாத மென்மையுடன் இர வெனும் தண்ணீர் யானினினுள் பாய்ந்தது. குளிரை மூழ்கடித்தது. அவளது ஜீவனின் மையத்திலிருந்து மெல்ல மெல்ல எழுந்தது அது அலை அலையாகப் பொங்கி வழிந்து, முனகும் அவளது வாய்வரைக்கும் எழுந்தது. அடுத்தகணம், வானம் முழுவதுமே அவள் மீது கவிழ்ந்து கிடந்தது. அவளோ குளிர்ந்த மண்ணில் மல்லாக்காக விழுந்து கிடந்தாள்.' (Albert Camus, The Collected fiction of Albert camus, p. 324-325)
காலச்சுவடு
294
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
ஒரு குட்டி பூர்ஷ்வாதாம்பத்திய வாழ்வு அவ ளுக்கு வழங்க இயலாத இன்பங்களை இந்தக் கன்னி நிலத்திடமிருந்து அவள் பெறுகிறாள். இது எவ்வாறு சாத்தியமாகிறது? வெள்ளையர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் காலனித்துவ சூழலில், வெள்ளை இனப் பெண்ணும் இந்த ஆதிக்கத்தின் பயன்களைப் பெறுகிறாள். குடும்ப வாழ்வில் ஒரு மனைவியாக, கணவனைச் சார்ந்தே வாழ வேண்டிய அவள், காலனியச் சூழ லில், காலனி ஆட்சிக்கு அடிபணிந்து கிடக்கும் சுதேசிகளின் மீது தன்னால் அதிகாரம் செலுத்த முடியும் என்பதை உணர வருகிறாள். இந்த உணர்வு அவளது ஆளுமையை அவள் உறுதி செய்து கொள்ள உதவுகிறது. இவ்வாறு செய்வ தால் பூர்ஷ்வாக் குடும்ப உறவுகளைக் கடந்து தனது தனித்தன்மையை வெளிப்படுத்தும் போதும், கணநேரமே நீடிக்கும் இவளது விடு தலை உணர்வு பிறத்தியானின் அடிமைத்தனத்தி னாலேயே சாத்தியமாகிறது.

காம்யு சொல்லாமலே விட்டவற்றை நாம் தொகுத்துக் கூறுவதென்றால்:

மெர்சோ வழும் அபத்தமான உலகம், ரீயூ வின் சாதாரண நகரம், யானின், டாரு ஆகி யோரின் உலகம், ரீயூவின் சாதாரண நகரம், யானின், டாரு ஆகியோரின் மனதுக்கு போதையூட்டும் பரந்த பாலைவனம்; அல்ஜீரி யக் கடற்கரைகள் - இவை வேறொரு நாகரி கத்தின் உறைவிடங்கள். வேறு வரலாறுகளின் க்ள்ங்கள்.காம்யுவின் கதாபாத்திரங்களின் கற் பனை சிறகடித்துப் பறக்கக் காத்திருக்கும் கன்னி நிலங்களோ, வெற்று வெளிகளோ அல்ல. மெர்சோ செய்த கொலை அர்த்தமற்ற செயல் அல்ல. காலனித்துவச் சூழலில் வெள் ளையனின் ஒவ்வொரு செயலும் அவனை ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளனாகவே காட்டு கிறது. மெர்சோ செய்த கொலை வெள்ளைய னின் அதிகாரத்தின் ஒரு வெளிப்பாடே. கொள்ளைநோய், அதற்கான சிகிச்சை - இவற்றைக் கொண்டு ஒரு தார்மீகப் பிரச்சி னையை காம்யு எழுப்புவதாக அவரது விசு வாசிகள் கூறலாம். ஆனால் காம்யு எழுப்பும்
பிரச்சினை மானுடகுலம் முழுவதற்கும் பொதுவான ஒரு தார்மீகப் பிரச்சனையல்ல. தனது செயல்களுக்கு பொறுப்பு ஏற்க விரும் பாது, தமது காலனித்துவ அரசியல் உருவாக் கிய நிர்பந்தங்களை தார்மீக நிர்பந்தங்களாக மட்டுமே காண முயற்சி செய்தவரின் பிரச் சினை மாத்திரமே இது. 

ஒருவர் சொல்லாததைக் கொண்டு அவர் சொல்ல வந்ததை மதிப்பீடு செய்வது எந்த அள வுக்கு நியாயமானது என்ற கேள்வி எழலாம். ஆனால், பேச்சும் மெளனமும், ஒன்றை ஒன்று நிர்ணயிப்பதை நாம் காண வேண்டும். ஒரான் ஒரு அராபிய நகரம் என்று காம்யு சொல்லாததால் தான் அதனை ஒரு பிரெஞ்சு நகரம்ாக அவரால் காணமுடிகிறது. தனது அராபியக் கதாபாத்திரங்க ளுக்கு ஒரு பெயரைக்கூட காம்யு வழங்காததால் தான் அவர்களை பிறத்தியார்களாக, வெறும் உடல்களாக சித்தரிக்க முடிகிறது. அல்ஜீரியாவை பிரெஞ்சு காலனித்துவம் வலுக்கட்டாயமாக தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது என்ற வரலாற்று உண்மையை காம்யு வெளிப்படையா கச் சொல்லாததால்தான் அவரது கதைகளில் பொதிந்திருக்கும் இனவாத அரசியல், மனிதநேய மாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

காம்யுவின் படைப்புகளுக்கு புதிய அர்த்தங்க ளைக் கற்பித்து, அவரது எழுத்துக்களில் காணப்ப டும் இடைவெளிகளை நிரப்பிவிடலாம் என்ப தல்ல நாம் சொல்ல வருவது. காம்யுவின் மனித நேயம், அது சாத்தியப்படுத்திய கலை - இவற்றை ஏன் நாம் கடும் விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காட் டவே நாம் இங்கு முயற்சி செய்துள்ளோம். ஐரோப்பா தனது மிகச் சமீபகால வரலாற்றை மறந்து, ஜனநாயகம், மனிதநேயம், சமத்துவம் முதலியவற்றின் இயல்பான உறைவிடமாகத் தன்னை பிரதிநிதித்துவம் செய்து வரும் ஒரு சூழ லில், ஐரோப்பாவின் குற்றங்களை நாம் நினைவுப டுத்திக் கொள்வது அவசியமாகிறது.
காலச்சுவடு
295 ஆண்டுமலர் 1991
படிப்பகம்