தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, April 26, 2016

பரதேசி வந்தான் - தி. ஜானகிராமன்



Automated google-ocr

www.archive.org

தி. ஜானகிராமனின் -பரதேசி வந்தான்


வக்கீல் அண்ணா பந்தியை ஒரு நோட்டம் விட்டார்.


அடியேன்.அவருக்குநேர்த்தம்பி அல்ல.ஒன்றுவிட்டதம்பிகூட அல்ல. அவருடைய மேதா விலாசத்தைக் கண்டு உலகமே அவரை, அண்ணா.அண்ணா! என்று வாய்நிறைய அழைத்தது.அந்த மாதிரித் தம்பிதான் நான். ஒரே தெரு எதிர்த்த வீடு-இந்த உறவைத் தவிர வேறொன்றும்இல்லை.அதேகாரணத்தால் உலகத்தாாைவிடநான்மிக மிக நெருங்கிய தம்பி கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று ஓடும் தம்பி, ஈஸன் ஹோவர் போட்டிபோடுவதிலிருந்து இளம்வித்வான் கச்சேரி வரையில் அவருடைய அபிப்பிராயத்தை எல்லோருக்கும் முன்னால் முதல் முதலாக, அந்தரங்கத்தில் கேட்கும் அபிமானத்தம்பி


அண்ணா பந்தியைச் சாரி சாரியாக நோட்டம் விட்டார். ஜூனியர் பாப்பா பந்துலு, பூதகணங்களாகச் சேவைக்குக் காத்துக் கிடக்கும்.அண்டைவீட்டு இளைஞர்கள்.எதிர்த்தவீட்டுதான்,இரண்டு குமாஸ்தாக்கள்-எல்லோரும் செய்த சாப்பாடு ஏற்பாடு சரியாக இருக்கிறதா என்று அந்த ராஜாளி நோட்டம் ஆராய்ந்து கொண்டி ருந்தது. அவர் திருப்தி அடைய வேண்டுமே என்று எல்லோருக்கும் கவலைதான். ஜூனியர் பாப்பா, வேற்றுத் தெருவுக்குள் கால் வைத்துவிட்டநாயைப்போல ஒண்டிஒடுங்கிநடந்துகொண்டிருந்தார். அண்ணாவின் பார்வைகம்பீரமாக ஒவ்வொரு நபரையும் அவருடைய அந்தஸ்தையும் எடைபோட்டு, சரி,ம், சரி என்று ஆமோதம் செய்து கொண்டுவந்தது.


அண்ணா கோர்ட்டில் வக்கீல். வாழ்க்கையில் நீதிபதி. கொலையும் பறியும் புரிந்துவிட்டு, குற்றுயிரும் குலை உயிருமாகச் சட்டத்தின் வாயில் மாட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டிருந்தவர் களை வெளியே பிடுங்கி எறிந்து அபயம் தந்திருக்கிறார். தீவட்டிக் கொள்ளையோ, கொலை பாதகமோ-எதுவாயிருந்தால் என்ன? அண்ணா திவலை பறக்க, நீர்வீழ்ச்சியைப்போல வாதாடும்போது நீதிபதியின் தனித்தன்மை, நடுநிலைமை எல்லாம்.அமுங்கி ஆற்றோடு போய்விடும். இப்பேர்ப்பட்ட அண்ணா. வாழ்க்கையில் நீதிபதி வாழ்க்கையில் எந்தத்தப்பையும்-குற்றம் கிடக்கட்டும்-தவற்றைக்கூட சின்னத்தப்பைக்கூட லேசில் விடமாட்டார். சாணக்கிய சாகசம்செய்து வேரை எற்றி, நீறாக்கி, வெற்றி அடைந்த பின்புதான் அமைதி காணுவார்.


அண்ணாவின் பிள்ளைக்கு முதல் நாளைக்கு முதல் நாள் கல்யாணம் ஆகிவிட்டது. மறுநாள் இரவு எல்லோரும் திரும்பி விட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் கிருகப் பிரவேசம். மணப் பெண்ண்ை அழைத்தாகி விட்டது. கோலாகலமாகத்தான் எல்லாம் நடந்தது.ஒரே பிள்ளை! சாப்பாட்டுக்கு இலைபோட்டாய்விட்டது.நூற்றைம்பது இலை போடக் கூடிய கூடத்தில் நெருக்கி இன்னும் ஐம்பது இலை விழுந்திருக்கிறது. கொல்லைக் கட்டு, அடுக்களை, கொல்லை நடை வாசல் நடைஎங்கே பார்த்தாலும் இலைபோட்டிருக்கிறது. கூடத்துப் பந்தி பொறுக்கான் பந்தி. இருநூறு இலையும் அண்ணாவின் அபிப்பிராயத்தில் முதல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஜூனியர் பந்துலுவும் நானும்பார்த்துத்தான் உட்கார்த்திவைத்திருக்கிறோம்.


அண்ணாகம்பீரமாகப்பார்க்கிறார்.வாழ்க்கையில் நீதிபதிஅவர். சின்னத் தவறு நடந்தாலும் தவறுதான். துளி அபஸ்வரம்பேசினாலும் அபஸ்வரந்தானே-அண்ணாவும்.வெறும்வக்கீல் அல்லபெரியசங்கீத ரசிகர். ரசிகர் என்பதைவிடச் சங்கீத க்ரிடிக் (விமரிசகர்) என்று சொல்வது பொருத்தம். கர்நாடக சங்கீதத்தில் ஊறித் திளைத்து நீந்தியவர். வேங்கமடமகி சார்ங்க தேவர் எல்லாம் அவருக்குத் தலைகீழ்ப் பாடம். தமிழ்ப் பண்களையெல்லாம் துருவித் துருவிக்
கோபத்தில் விம்மிற்று.ஒரே பிடியாகக் கழுத்தைப் பிடித்து அமுக்கித் திருகிப் போட்டுவிடலாமா என்று, கை நெஞ்சு எல்லாம் துடித்தன. ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உள் மனம் நடுங்கிச் செத்தது. இவ்வளவு ஆத்திரமும் முடவனின் கோபமாகப் புகைந்து அணை வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. அண்ணா அவனைக் கண்டதும் தேம்பித்தேம்பி அழுதார். “ஸார்.வருத்தப்படாதீர்கள்.நான் புண்ணில்கோல் இடுவதற்காக வரவில்லை. வாக்குத் தவறக்கூடாது என்று வந்தேன்” என்ற பரதேசி சொன்னான். அண்ணா சிறிது நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். பெரிய முயற்சி செய்து பல்லைக் கடித்து, உதட்டைக் கடித்து, கண்ணைத் துடைத்து, துக்கத்தை அடக்கிக் கொண்டார். பரதேசி தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், ஐந்து நிமிஷம் ஆயிற்று. "ஒய் உம்முடைய வாக்குப்பலித்துவிட்டது” என்றார் அண்ணா. "என் வாக்காவது பலிப்பதாவது நடப்பது நடந்துதான் தீரும்” "நீர்தானே ஐயா சாபமிட்டீர்?" “என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்." "எப்படி?” "எங்கும் இருக்கிறதுநாதம்கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, ஏதாவது செய்தோதானே.அதைக்கேட்கமுடிகிறது. அது மாதிரிதான் "உமக்கு வருங்காலம் தெரியுமா?" “தெரியாது என்னமோவாயில் வந்ததைச்சொன்னேன்.” "ம்.நீர்பெரிய அறிவாளியாக இருப்பீர்போல் இருக்கிறதே. ஏன் இப்படிச்சோற்றுக்கு அலைகிறீர்?" "அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்ய வேண்டுமா, என்ன? அறிவு இருந்தால்பிச்சைஎடுக்காமல்,சோற்றுக்குஅலையாமல்
இருந்துவிடமுடியுமா?"

 “நீர் சொல்வது எனக்குப்புரியவில்லை”

 “எப்படிப் புரியும்? பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை.தெம்பு இல்லை.உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. இந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு:உம்மிடம் இல்லை. சிமின்டில்,வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும்.உம்முடைய கல்நெஞ்சம்வெறும் வலுவில்லாதகல்நெஞ்சம்துளிஅன்பை இவ்வளவுபெரியஅகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும். அத்தர் கலந்தாற்போலப் பரிமளிக்கும். உண்மையான வலு, உம் நெஞ்சுக்கு இல்லை. இருந்திருந்தால் பட்டப்பகலில் இரட்டைக் கொலை செய்த பாண்டிக்குநீர்வக்காலத்துவாங்கியிருப்பீரா? அவன்கொலைசெய்தது உலகறிந்த விஷயம்.நீர் சரமாரியாக வாதாடி,அவனுக்குநீதியளிக்காமல் காப்பாற்றினர். உம்முடைய அகங்காரத்திற்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார்.ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப் பரதேசி, தரித்திரம்எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் காது நிறைய கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம், இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை." 

அண்ணா சூன்யத்தைப்பார்த்துக்கொண்டு தேம்பினார். சற்றுக் கழித்து,"ஒய் காலதேவரே,உட்கார்ந்துபேசுமேன்.கால் வலிக்கவில்லையா?” என்று வேண்டினார். காலதேவன் வயிறு குழைய, கண் குழைய விலா எலும்புகளின் தோல் விம்ம, "ஈசுவரா” என்று பசியின் வடிவாக உட்கார்ந்து கொண்டான். கேட்டிருக்கிறார். மாகாணத்தின் எட்டு மூலையிலும் எங்கே சங்கீத சர்ச்சை நடந்தாலும் அண்ணா அங்கே இருப்பார் தலையின் முன். வழுக்கை பளபளக்க, ஒரு ராகத்தை பேச்சில்தான் விளக்கிக் கொண்டிருந்த மகாநாட்டில் பிரமாதமாக ஒரு அண்ணாவின் தலையை ஒருவர் கார்ட்டுனாக வரைந்திருந்தார். அது பெரிதாகி அண்ணாவின் ஆபீஸில் தொங்குகிறது.


அண்ணாவுக்கு யார் பாடினாலும் பிடிக்காது. அவருடைய லக்ஷ்ய சங்கீதத்தின் வாசற்படியைக்கூடத் தற்கால சங்கீத வித்வான் யாரும் மிதிக்கவில்லை என்பது அவர் கருத்து அவருடைய சொந்த ஊரான பூக்கால் குளத்தில் ஒரு பெண் நன்றாகப் பாடும் அதன் பாட்டைத்தான்.அவர் திருப்தியோடுகேட்பார் ஒன்றரை நூற்றாண்டு களுக்குமுன்வாழ்ந்த ஒருவாக்கேயக்காரரின்பேரனுடைய சிஷ்யனின் பெண் வயிற்றுப்பேத்தி அந்தப்பெண். அவள் இப்போது கல்யான மாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி ஹைதராபாத்தில் குடியும் குடித்தனமுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். கிருகப் பிரவேச வைபவத்திற்கு மாலையில் அவள்தான் கச்சேரி செய்யப் போகிறாள். ஹைதராபாத்திலிருந்து அதற்காகத்தான் அவள் வந்திருக்கிறாள்-அபஸ்வரம் என்ற வார்த்தையிலிருந்து எங்கெங்கோ போய்விட்டது.அபஸ்வரம் என்ன.அவச்சொல்கூட_அண்ணாகாதில் விழக்கூடாது.கல்யாணத்திற்குமுன்.கிருகப்பிரவேசத்திற்காகப்பந்தல் போட்டுக் கொண்டிருந்தான். காலை எட்டுமணி குமாஸ்தாக்கள் இன்னும் வரவில்லை..பிச்சைக்காரன் ஒருவன் வந்துசேர்ந்தான்.அந்த நிழலே அண்ணா வீட்டு வாசலில் விழக்கூடாது. ஆள் புதிது. துந்தனத்தை மீட்டிக்கொண்டு கருதியோடு இழைந்துகள்வியகுரலில் பாடிக்கொண்டுவந்தான்


"காஞ்சிமாபுரியில் வாழும் காமகோடிவாவா.வாங்கூைடியுடன் வந்தெனக்கு வரமருள வாவா, தற்பரம் அளிக்கும் திவ்ய கற்பகமே வா வா”


"ஏய் மறுபடியும்பாடு"

"காஞ்சிமாபுரியில்.வாங்rையுடன் வந்தெனக்கு." “என்னது?"

"வாங்rையுடன்."

"வாஞ்சையில்லை?”

"இல்லீங்க”

“gsår?” “எங்க குருநாதன் அப்படித்தான் சொல்லிக்கொடுத்தாரு” “யாரு உங்க குருநாதன்?"

“முருகப்பண்டாரம்" "எங்கே இருக்கார் அவர் இப்போ?” "சமாதி ஆயிட்டாருங்க” “போனாப் போறார்.நீஇனிமேவாஞ்சைன்னு சொல்லு' "அவருவாங்க்ஷைன்னுதானே சொல்லுவாரு” "அப்ப உனக்கு அரிசி கிடைக்காது.”

“வேனாமே.”

"நீ வேணும்னுதான் கேட்டுப் பாரேன்-கிடைக்கிறதா பார்ப்

போம்.”

"நீவேணும்னுதான் என்னைச்சொல்லச்சொல்லிப்பாரேன்.நான் சொல்கிறேனா,பார்ப்போம்”

“சீ.சீ.நாயே! போ! பதில் பேசாதே" "நானா இப்போவள்ளுவள்ளுனு உளுவறேன்?” போடான்னா”

"அட போய்யா, பிச்சைக்கு வந்த இடத்திலே சண்டைக்குல்ல நிக்கறே கச்சைகட்டிக்கிட்டு" என்று பந்தல்காரன் இடைமறித்தான்.


"போய்யா.போ.ஏங்க அந்த ஆளோடவம்பு? தக்கு பிக்குன்னு ஏதாவது உளறுவான்.நமக்கு என்னாத்துக்குங்க”

“குருநாதன் சொல்லிவிட்டானாம், அவன் சொல்ல மாட்டா னாம்!”

"ஆமாய்யா சொல்லத்தான் மாட்டேன். சொல்லு, மனுசன் உண்டாக்கினதுதான்.காக்காய்க்குக்கிளின்னுபேர் வச்சுநானூறுபேர் அளைச்சா கிளிதான். ஆமாம்”

"நீ இப்பப்போகமாட்டே? போய்யா.அப்புறம் தெரியுமா?" அப்போதுதான் நானும் வந்து சேர்ந்தேன். “ஏதோ தெரியாத பயல்’

“யாரு, அவனா?நீன்னா தெரியாத பயல் பாயின்ட் பாயின்டாப் பேசறான் தெரியாத பயலாம்.பிடிவாதக்காரப் பயன்னா அவன்'

"தொலையறான் அண்ணா:விடுங்கோ' அண்ணா வாழ்க்கை,வார்த்தை எல்லாவற்றிலும் நீதிபதி:ஆமாம்.

அண்ணா பந்தியைப் பார்த்துக்கொண்டேவந்தார்.திடீரென்று முகம் இருண்டது.புருவத்தைச்சுளித்தார்.மூக்கின் இதழ் விரிந்தன.

"ஏய், பஞ்சாமி”

"அண்ணா.”

"வா, இப்படி”

ஒடினேன்.

"யாரது”

“யாரது”

"எங்கே?"

“அதோ பார்!"

கூடத்தில் நடைநிலைக்கு எட்டியதாழ்வாரத்தில் போட்டிருந்த
பந்தியில் ஒரு பரதேசி உட்கார்ந்திருந்தான்.நடுப்பருவத்தைக் கடந்து கிழத்தனத்தில் கால் வைத்த பருவம் எலும்பும் தோலுமான உடல் அளவுக்கு மிஞ்சிய நரை கன்னம் முழுவதையும் மறைத்த தாடி ஒழுங்கில்லாத குரங்குத் தாடி பல பல பட்டினிகளால் வயதை மீறிய மூப்புத்தோற்றம் கண்ட தண்ணிரில் நனைத்துநனைத்துப் பழுப்பேறிய, மடித்துப்போன, ஒட்டுகள் போட்டவேட்டி பக்கத்தில் அதே பழுப்பு நிறத்தில் ஒரு மூட்டை இவ்வளவு காபந்துக்களுக்கிடையே, ராகுவந்து அமுதத்திற்கு அமர்ந்ததுபோல அமர்ந்துவிட்டான்.அமுதசுரபியை ஏந்தி வரும் மால் பூண்ட மோகினி வேடந்தான் மயங்கிவிட்டது: அண்ணாகூட ஏமாந்துவிடுவாரா.என்ன?

 “எப்படிடா வந்தான் அவன்” என்று இரைச்சல் போட்டார்.

மெளனத்தைத் தவிர வேறு விடை எதைச் சொல்ல? "

அழகா இருக்கடா நிர்வாகம் கிளப்புடா அந்தக் கழுதையை'

"உட்கார்ந்துவிட்டானே, அண்ணா” என்று மெதுவாகச் சொன்னேன்.

"அப்படியா, மன்னிக்கணும்' என்று ஒரே ஒட்டமாக ஓடினார். அந்த இலைக்கு முன் நின்றார். இருநூறு முகங்களும் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன.

"ஏய், எழுந்திர்றா"

அவன் வாய் பேசாமல் அவரை நிமிர்ந்து பார்த்தான். வாயில் போட்ட கறி உள்ளே செல்லாமல் அந்தரத்தில் நிற்க, எச்சிலான கை இலையில் இருக்க, அவரை மெளனமாகப்பார்த்தான். "எழுந்திருடா" மீண்டும் அதே தீனமான பார்வை.

“எழுந்திருடான்னா'

“பசிக்கிறது, எச்சில் பண்ணிவிட்டேன்."

அவ்வளவுதான்.

அப்படியே தலைமயிரை ஒரு லாவு லாவினார் அண்ணா. உடும்புப் பிடி!

"எழுந்திர்றாங்களேன்.பதில்சொல்லிண்டா உட்கார்ந்திருக்கே"

பிடித்த பிடியில், பரதேசியின் கை தானாகவே பக்கத்திலிருந்த மூட்டையை அனைத்துக்கொள்ள, காலும் தானாகவே எழுந்து விட்டது. இடது கையால் அப்படியே தர தரவென்று அவனைத் தள்ளிக்கொண்டு,நடையைக் கடந்து, வாசல் திண்ணையைக் கடந்து, ஆளோடியைக் கடந்து, படியில் இறங்கி, பந்தலுக்கு வெளியே ஒரு தள்ளுத் தள்ளினார் அண்ணா தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புறவிழுந்தான் அவன்.

"அப்பா, அம்மா, பாவி” என்று முனகிக்கொண்டே எழுந்தான். திரும்பி அவரைப் பார்த்தான். முகம் கொதித்தது. பசியின் எரிச்சல் கண்ணில் எரிந்தது.கைக்கு எட்டிவாய்க்குக்கூடத்துளி எட்டிபசியைக் கிளப்பிவிட்டு முழுவதும் கிட்டாமல் போனதன் எரிச்சல் முகத்தில் எரிந்தது. ஆற்றாமையும் கோபமும் தொண்டையை அடைக்கபசியால் மூச்சு வேகமாக சின்னச் சின்னதாகச் தொண்டையில் ஏறி இறங்கி, வயிறு குழைய, ஒரே கத்தாகக் கத்தினான் அவன்.

"ஒய் வக்கிலே, நீர் நன்னா இருப்பீரா? இலையில் உட்காந்து எச்சில் பண்ணினவனைக் கிளப்பி, யமது தன் மாதிரி தள்ளிண்டு வந்திரே”

"ஏய், போறயா,நொறுக்கி விடட்டுமா?"

கண் கனல் கக்க, சாணக்கியனைப்போல, விரிந்த குரலில் ஒர் இரைச்சல்போட்டான் அவன்.

"போறேன், இதோ போறேன், ஆனால் திரும்பி வருவேன். அடுத்தமாசம் இதே தேதிக்கு உம்மவீட்டிலேயே சாப்பிடவரேன்.நீர் அழுதுகொண்டுபோடறசாப்பாட்டுக்குவரேன்.பார்த்துக்கும்.”

விறுவிறுவென்று நடந்தான். எனக்குச் சொரேர் என்றது.என்னமோ சொல்லிவிட்டானே! அண்ணா ரெளத்ரம் பொங்கச் சீறினார்,

"ஏய் போய் அந்தப் பயலை இழுத்துண்டுவாடா,சும்மாவிட்டு விடுகிறதா அந்தப்பயலை”

"அண்ணா, உள்ளே போங்களேன். சகதியிலே கல்லைத்துக்கி எறியலாமா? என்று.அவரை இறுகஅனைத்துஉள்ளே தள்ளிக்கொண்டு போனேன்.என் பிடியை மீறமுடியாமல் அண்ணா மெதுவாக உள்ளே சென்றார்.

என்ன அவச்சொல் ஆபாசமான வார்த்தைகள் மங்களமான வைபவத்தில் கேட்கவொண்ணாத கொடுர அவச் சொல் ருசிக்க முடியாத அவச்சொல் உதட்டில் வைத்துப் பருகும் பாலில் மேலே யிருந்து ஒரு துளிநஞ்சு விழுந்து,வாய்க்குள் போய்விட்டதுபோல் என் கண் இருண்டது; உள்ளம் இருண்டது. எப்படிப் பேசினான் இந்த வார்த்தைகளை!பாவி இனியநாதம்பொழியும் தந்தியை அறுத்து அவ ஓசையை எழுப்பிவிட்டான்.என் மனம் படபடஎன்று பறந்தது.

"எலே, உம் மூஞ்சிஏண்டா அசடுவழியறது. முட்டாள்:”

மாலையில்கச்சேரிநடந்தது.பூக்கால்குளத்துப்பர்வதம்பாடினாள். இனிய ஞானம். நல்ல ஞானம். ஆனால் மூன்று குழந்தைகளுக்குத் தாயார் என்பதைக் குரல் காட்டிக்கொண்டே வந்து, பாட்டைக்கூட மூன்றாம் தரமான பாட்டாக அடித்துவிட்டது. அண்ணா முன்னால் உட்கார்ந்து கைமேல் கையில் தாளம் போட்டு, விரலை எண்ணி, சிரக்கம்பம்செய்துகொண்டிருந்தார்.இரண்டுமணிநேரம் ஆவதற்குள் இரண்டாயிரம் ஆஹாகாரம் வந்துவிட்டது. ஆட்டுகிற ஆட்டலில் தலை ஒடிந்து விழுந்துவிடும்போல் இருந்தது.அண்ணாவின் கற்பனை பயங்கரமானதுதான்.

 மணமகனும் மணமகளும் ஒரு சோபாவில் உட்கார்ந்து கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நடுவில் மணமகன் எழுந்து கொல்லை
நடைப்பக்கம் சென்றான்.

பத்து நிமிஷத்திற்கெல்லாம் அண்ணாவின் சம்சாரம் பரபர வென்று என்னைக் கூப்பிட்டாள்.

"ஏய் பஞ்சு, அண்ணாவைக்கூப்பிடு”

அண்ணாவும் நானும் உள்ளே போனோம். அடுக்களையில் கல்யாணப்பையன்பிரக்ஞைதவறிப்படுத்துக்கிடந்தான்.கொல்லையில் போனவன் ஒரு முறை வாந்தி எடுத்தானாம். பிறகு “தலை கிறுகிறு என்கிறது”என்று முனகினானாம்.அடுக்களையில்வந்து மடேர் என்று விழுந்தானாம். மூர்ச்சை போட்டுவிட்டது. ஸ்திரீகள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அண்ணாவின் தமக்கை விசிறிக் கொண்டிருந் தாள.

"குழந்தே குழந்தே' என்று அண்ணா அழைத்தார். "விஸ்வநாதா.விஸ்வநாதா” என்று நான் அழைத்தேன். நல்ல மூர்ச்சை, பதில் வரவில்லை. "பஞ்சு, நான் என்னடா செய்வேன்” என்று உட்கார்ந்தவாறே என்னை நிமிர்ந்து பார்த்தார் அண்ணா.திகில்படர்ந்த அந்தப் பார்வையை அந்த முகத்திலேயே நான் பார்த்ததில்லை. "ஒண்ணுமில்லேண்ணா! இதோ போய் டாக்டரை அழைச் கண்டுவரேன்.கவலைப்படாதிங்கோ” என்றசொல்லிவிட்டுஓடினேன். டாக்டர் வந்தார்.அரை மணி தட்டிக்கொட்டிப்பார்த்தார். ஊசி போட்டார். மருந்து எழுதிக் கொடுத்தார். மூர்ச்சை தெளியவில்லை. பெரிய டாக்டரை அவரேபோய் அழைத்து வந்தார்.கோமா சோமா என்று ஏதோ வைத்தியபாஷையில்பேசிக்கொண்டார்கள். என்னத்தைச் சொல்கிறது. மூர்ச்சைதெளியும் வழியாக இல்லை. ஒரே பேத்தல், பிதற்றல், ஏழெட்டு நாள் கண்திறக்கவில்லை. உள்ளூர் டாக்டர்கள், மந்திரவாதிகள் எல்லோரும் பார்த்தார்கள். திருச்சியி லிருந்து இரண்டு டாக்டர்கள், பிறகு ராஸிலிருந்து ஐந்தாறு டாக்டர்கள்! கடைசியாகக் கல்கத்தாவிலிருந்து விமானத்தில் ஒரு நிபுணர் வந்தார். கையைப் பார்த்தார்."இன்னும் நாற்பத்தெட்டுமணி நேரத்திற்குப்பிறகுதான் சொல்ல வேண்டும்; பிறகுமூர்ச்சைதெளிந்தால் கொடுங்கள்” என்று ஒரு மருந்தை எழுதிக்கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய் பீஸையும்வாங்கிக்கொண்டுபோய்விட்டார்.

அவ்வளவு பெரிய டாக்டர் சொல்வது வீணாகவாபோய்விடும்? மூன்றாம்நாள் காலையில் எல்லாம் அடங்கிவிட்டது.

 எல்லாம் மாயாஜாலம்போல் இருந்தது எனக்கு எவ்வளவு வேகம் அண்ணாவின் ஒரே பிள்ளை ஒரே இன்பக்கனவு அவருடைய ஜகமே அவன்தான்.அது அழிந்துவிட்டது!

அண்ணாதேம்பினார். திடீரென்று நினைத்துக் கொண்டு வாய்விட்டு அழுவார். அழாத நேரத்தில் சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். திடீரென்று புன் சிரிப்புச் சிரிப்பார்; பேய் சிரிக்கிறாற்போல் இருந்தது எனக்கு குலைநடுங்கிற்று!

“என்னடாபஞ்சாமி, என்ன சிரிக்கிறேனென்று பார்க்கிறாயா? நாளைக்குத் தேதி ஐந்து, அதனால்தான் சிரிக்கிறேன்.”

 நான்பதில் சொல்லவில்லை.சோகத்தில் சிரிக்கிறார்.அழுகிறார், புலம்புகிறார். இஷ்டப்படி பேசட்டும் என்று விட்டுவிட்டேன். பிரமையடைந்து, நிதானமிழந்து ஆடிக் கொண்டிருந்த சித்தத்தில் என்ன என்ன தோன்றுகிறதோ? மோகம் சோகத்தின் இரட்டை

"நாளைக்குத் தேதி ஐந்துடா.நாளைக்குத்தான் பன்னிரண்டாம் நாள் என் உயிர் போய் போன ஐந்தாம் தேதி கிருகப் பிரவேசம்.அந்தப் பரதேசிப்பயனவ்வளவுகணக்காக ஆணியடித்தாற் போலச் சொன்னான்,பார்”.

எனக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லை. பரதேசியின் நினை வாகத்தான் இருந்தேன்.

மறுநாள் பன்னிரண்டாம் நாள் காலையில் ஈமக்கடன்கள் தொடங்குகிற சமயம் காலை எட்டு மணி இருக்கும், வாசலில் வந்து நின்றான் அவன் சவம் உயிர் பெற்று வந்ததுபோல் வந்து நின்றான். வெளுத்துப்போன தாடி, மீசை, எலும்பும் தோலுமான உடல் பழுப்பேறிய நைந்துபோனதுணி,கையில் மூட்டை கல்யாணத்தன்று வந்த அதேவேஷந்தான்.

எனக்கு ஒரேயடியாகப் பற்றிக்கொண்டு வந்தது. நெஞ்சு கோபத்தில் விம்மிற்று.ஒரே பிடியாகக் கழுத்தைப் பிடித்து அமுக்கித் திருகிப் போட்டுவிடலாமா என்று, கை நெஞ்சு எல்லாம் துடித்தன. ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உள் மனம் நடுங்கிச் செத்தது. இவ்வளவு ஆத்திரமும் முடவனின் கோபமாகப் புகைந்து அணை வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.

அண்ணா அவனைக் கண்டதும் தேம்பித்தேம்பி அழுதார்.

“ஸார்.வருத்தப்படாதீர்கள்.நான் புண்ணில்கோல் இடுவதற்காக வரவில்லை. வாக்குத் தவறக்கூடாது என்று வந்தேன்” என்ற பரதேசி சொன்னான்.

அண்ணா சிறிது நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். பெரிய முயற்சி செய்து பல்லைக் கடித்து, உதட்டைக் கடித்து, கண்ணைத் துடைத்து, துக்கத்தை அடக்கிக் கொண்டார். பரதேசி தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், ஐந்து நிமிஷம் ஆயிற்று.

"ஒய் உம்முடைய வாக்குப்பலித்துவிட்டது” என்றார் அண்ணா.

"என் வாக்காவது பலிப்பதாவது நடப்பது நடந்துதான் தீரும்”

"நீர்தானே ஐயா சாபமிட்டீர்?"

 “என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்."

 "எப்படி?”

"எங்கும் இருக்கிறதுநாதம்கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, ஏதாவது செய்தோதானே. அதைக்கேட்கமுடிகிறது. அது மாதிரிதான்

"உமக்கு வருங்காலம் தெரியுமா?"

 “தெரியாது என்னமோவாயில் வந்ததைச்சொன்னேன்.”

 "ம்.நீர்பெரிய அறிவாளியாக இருப்பீர்போல் இருக்கிறதே. ஏன் இப்படிச்சோற்றுக்கு அலைகிறீர்?"

"அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்ய வேண்டுமா, என்ன? அறிவு இருந்தால்பிச்சைஎடுக்காமல்,சோற்றுக்குஅலையாமல் இருந்துவிடமுடியுமா?"

“நீர் சொல்வது எனக்குப்புரியவில்லை”

“எப்படிப் புரியும்? பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை.தெம்பு இல்லை.உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. இந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு:உம்மிடம் இல்லை. சிமின்டில்,வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும்.உம்முடைய கல்நெஞ்சம்வெறும் வலுவில்லாதகல்நெஞ்சம்துளிஅன்பை இவ்வளவுபெரியஅகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும். அத்தர் கலந்தாற்போலப் பரிமளிக்கும். உண்மையான வலு, உம் நெஞ்சுக்கு இல்லை. இருந்திருந்தால் பட்டப்பகலில் இரட்டைக் கொலை செய்த பாண்டிக்குநீர்வக்காலத்துவாங்கியிருப்பீரா? அவன்கொலைசெய்தது உலகறிந்த விஷயம்.நீர் சரமாரியாகவாதாடி,அவனுக்குநீதியளிக்காமல் காப்பாற்றினர். உம்முடைய அகங்காரத்திற்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார்.ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப்பரதேசி,தரித்திரம்எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் காது நிறைய கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம், இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை."

அண்ணா சூன்யத்தைப்பார்த்துக்கொண்டு தேம்பினார். சற்றுக் கழித்து,"ஒய் காலதேவரே,உட்கார்ந்துபேசுமேன்.கால் வலிக்கவில்லையா?” என்று வேண்டினார்.

 காலதேவன் வயிறு குழைய, கண் குழைய விலா எலும்புகளின் தோல் விம்ம, "ஈசுவரா” என்று பசியின் வடிவாக உட்கார்ந்து கொண்டான்.