தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, April 28, 2016

சதைப் பற்றற்ற காதல் - கு.ப.ரா, பிரிவு - சம்பத்

https://archive.org/download/orr-11637_Sadhaip-Patratra-Kaathal/orr-11637_Sadhaip-Patratra-Kaathal.pdf________________


சதைப் பற்றற்ற காதல் - கு.ப.ரா


சரிதான் ஸார், அதெல்லாம் வெறும் கதை. காதல் மனதில் இருப்பது என்பதெல்லாம் சுத்தப்புளுகு. சரீர ஸ்பரிசம் இல்லாமல் காதல் என்று யாராவது சொன்னால் அவன் அயோக்கியன், அல்லது- என்றார் ஹெல்த் இன்ஸ்பெக்டர்.

'அவ்வளவு ஓங்கி அடித்துவிடாதீர்கள். உமது கட்சி பலத்த கட்சி என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். டால்ஸ்டாய் என்ற மகான் கூட உங்கள் பக்கமாகத்தான் பேசுகிறார். ரொம்பப் பச்சையாகக் கூடச் சொல்லிவிட்டார். ஆனால் நமது மனநிலையையும் உணர்ச்சியையும் வைத்தே உலகம் பூராவையும் தராதரமின்றி அளந்து விடுவது சரியன்று. சரீர சம்பந்தமில்லாத காதலும் இருக்க முடியும் இருந்திருக்கிறது என்று ஒவர்சியர் சொன்னார்.

இருக்க முடியும் என்பதை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது. இருந்திருக்கிறது என்று நீங்கள் சொன்னாள், முடியாமைதான் அதற்குக் 'காரணமாக இருக்க வேண்டும்.

'எனக்கும் கொஞ்சம் அறிவிருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டும்.

'ஸார், ஸார் உங்களுக்கு அறிவில்லையென்று யார் சொன்னது? ரொம்ப கோபித்துக் கொள்ளுகிறீர்களே?.

'கோபமே இல்லை. இருந்திருக்கிறது என்று நான் சொன்னால் வேறு காரணங்கள் இல்லாமல், நாம் தர்க்கிக்கிற முறையிலேயே தான் இருந்திருக்கிறது என்று நான் என் மனதில் திருப்தியடைந்து தானே சொல்லுவேன்? அதை நீங்கள் கவனிக்க வேண்டாமா?

இரவு எட்டுமணி. ஹெல்த் இன்ஸ்பெக்டர், லோகல் பண்டு ஓவர்சியர், தாலூகா ஆபீஸ் ஹெட்கிளர்க், எல்லோருமாக ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுதுதான் அந்தப்பேச்சு வந்தது.

அன்றைய பத்திரிகையில் ஒரு விசேஷமான செய்தி வந்திருந்தது. சென்னையில் இரு காதலர்கள் தங்கள் இஷ்டப்படி கலியாணம் ஆகாது

199________________

என்று தெரிந்ததும் விஷம் உண்டு மாண்டார்கள். அதைப் பற்றிப் பேசிய பேச்சிலிருந்து தர்கம் கிளம்பி வளர்ந்து கொண்டே போயிற்று. கடைசி யாகக் காதல் தத்துவத்தைப் பற்றியே பேச்சு திரும்பிவிட்டது.

மூன்று சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் இலக்கியகர்த்தர்களுக்கும் மனோதத்துவ சாஸ்திரிகளுக்கும் மட்டும் உரிமையான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதென்றால் அது விசேஷம்தானே?

நானும் அவர்களுக்கிடையே ஒரு சிறு தாலுகா குமாஸ்தாவாக உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசினதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சர்க்கார் தஸ்தாவேஜிகளை வருஷக்கணக்காகப் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப் போயிருந்ததும்கூட அவர்கள் காதலைப் பற்றி அலசி அலசிப் பேசினது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கலாசாலையி லிருந்து வெளியேறி வேலைக்கு வந்த சமயம் என் மனம் இன்னும் உணர்ச்சியற்றுப் போகவில்லை. சம்பாஷணை அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது.

‘எப்படி ஸார் இருக்க முடியும் ? என்று ஹெல்த் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"ஏன் இருக்க முடியாது என்று நான் கேட்கிறேன். பிடிவாதத்திற்கு எங்காவது தர்கத்தில் முடிவுண்டா? என்று ஓவர்ஸியர் கொஞ்சம் குத்தலாகப் பேசினார்.

பிடிவாதம் இல்லை மனித ஸ்வபாவத்திற்குப் பொருந்தாததான ஒரு விஷயத்தை நீங்கள் உண்டு என்று சொன்னால், அது பிடிவாதமா, நான் சொல்லுவது பிடிவாதமா?'

'மனித ஸ்வபாவத்திற்குப் பொருந்தாதது என்று யார் நிர்த்தாரணம் செய்திருக்கிறார்கள்?"

'மனோத்தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியாளர்கள்!"

அவர்கள் பொதுவாக நிர்ணயிக்கிறார்கள், நீங்கள் சொல்லுவது போல வைத்துக்கொண்டாலும். அதற்கு மாறுபாடான விசேஷ பிரகிருதிகள் இல்லையா என்ன?

அவர்களைப் பற்றிப் பேச்சில்லை. அவர்களுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?"

'இந்த சம்பந்தம்தான்-அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியான கலையில் இருக்கும் லட்சிய பிரகிருதிகள்.

'கலையென்ன நபும்ஸ்கவாதமா?”

ஆண்மை வாதமுமல்ல. வாழ்க்கையின் உன்னத அம்சங்களைச் சித்திரிப்பது.

'உங்களுடைய சதையுணர்ச்சி யற்ற காதல் அந்த ரகத்தைச் சேர்ந்ததோ? ஆமாம், பின் ஏன் அந்தக் காதலுக்கு ஆணும் பெண்ணும் வேண்டியிருக்கிறது ?
200________________

சதை என்ற சேற்றில் முழுக அல்ல; அதற்கு மேலே போய் தாமரை யைப் போலத் தலையெடுத்து நிற்க. இரவும் பகலும் போலவும், துக்கமும் சுகமும் போலவும் வேற்றுமை கொண்டிருக்கும் ஸ்த்ரீ புருஷ ஸ்வபாவங்களை ஒன்றாக்க அவை ஒன்றாக உடல்கள் சேரவேண்டிய அவசியமில்லை .

'என்ன என்ன?”

'இரண்டு வகைப் புஷ்பங்களிலிருந்து கிளம்பும் இருவிதமான வாசனைகள் எப்படிக் காற்றில் கலந்து ஒன்றாகின்றனவோ அப்படி இரண்டு உள்ளங்களும் உணர்ச்சியில் கலக்கின்றன. அந்த சங்கமத்தால் இரு உள்ளங்களும் கலப்புணர்ச்சிகள் பெறுகின்றன-பிரயாகையில் கங்கை ஜலத்தை யமுனையும் யமுனை ஜலத்தை கங்கையும் பெறுவது போல

'அதெல்லாம் வெறும் கவிதைபோல இருக்கிறது. நடைமுதல் உண்மைக்குப் பொருத்தமல்ல.

அப்படிச் சொல்லப்போனால் நடை முதல் உண்மை கூட உண்மை யல்ல; உண்மை அதற்கும் கீழானது.

‘எப்படி?’

'எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆடவருக்குச் சதையுணர்ச்சி ஏற்படுகிறது என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை. நீங்கள் நடை முதல் உண்மை என்று கூறுவது தாயிடமும், சகோதரியிடமும், பிறர் மனைவியிடமும் அவ்வுணர்ச்சி ஏற்படக்கூடாது என்று மனிதன் ஏற்படுத்தியிருக்கும் கட்டுப்பாடு-ஏற்பாடு; அதற்கு மேற்படியாக லட்சிய உலகமும் ஒரு ஏற்பாடு-நடை முதல் உண்மைக்கு மேற்போன நடைபெற வேண்டிய உண்மை. எதற்காகச் சொல்லுகிறேன்! காதலி யிடம் மட்டும்தான் சதையுணர்ச்சி ஏற்படவேண்டும் என்று நீங்கள் சொல்லுவது ஸ்வபாவமல்ல. அது இயற்கையல்ல. விலங்கு பட்சி களிடமும் சில அநாகரிகமான புராதன ஜாதியினரிடமும் நாம் காண்பது போல எல்லாப் பெண்களையும் மனிதன் கொள்ளக்கூடாது. மனைவி யென்றும் காதலியென்றும் ஒருவளை வரித்தல் வேண்டுமென்றும் எற்பட்டிருப்பது கலை. அவ்வகைப் பெண்ணின் சேர்கைதான் இன்பம் என்பதும் அதன் கோட்பாடுதான்.

அப்புறம் ?"

அதற்கு மேற்போன கோட்பாடும் உண்டு; காதலுக்கு உடற்சேர்கை கூடத் தேவையில்லை. மனச்சேர்கை போதும் என்பது தான் அது. புனித உள்ளங்களுக்கு அதே பெருத்த கலவியின்பந்தரும். ஆண்டாள் அப்பேற்பட்ட இன்பம் பெற்றுதானே இளகி இளகிப் பாடினாள் தன் பேரின்பக் கலவியைப் பற்றி ?"

அது வெறி, பித்து, ஸ்வபாவமல்ல'
2O1________________

“எது வெறி, எது ஸ்வபாவம் ஸ்வபாவம் என்பதால் ஒன்று உயர்வா? வெறியென்று ஒன்றைத் தாழ்த்திக் கூற நமக்கு என்ன அதிகாரம்?

 'விபரீதமான வெறி!'

வெறி நிலையிலிருப்பவர்களுக்கு ஸ்வபாவம் என்று நாம் கருதுவது விபரிதமாகத் தோன்றாதா?’

அவர்கள் ஒரு சிலர் தானே? பெருவாரியான மனித சமூகத்தில் தென்படுவது தானே ஸ்வபாவம்'.

அதை நான் முன்பே சொன்னேனே நீங்கள ஸ்வபாவம் என்பதே ஒருவிதியின் கீழ் ஏற்பட்டது தானே?

நீங்கள் மனித சுபாவத்தையே ஒரு செயற்கை என்கிறீர்களா?

'சந்தேகமில்லாமல் மனித சுபாவம் யுகம் யுகமாக சமூகக் கட்டால் கட்டப்பட்டது. மிருக சுபாவம் தான் மனிதனுக்கு இயற்கையானது.

'நீர் என்னென்னமோ சொல்லுகிறீர். அதையெல்லாம் நான் ஒப்புக் கொள்ளத் தயார் இல்லை. அதிருக்கட்டும், நீர் என்ன சொல்லுகிறீர் இப்பொழுது?"

காதலுக்கு சதைப்பற்று முக்கியமல்ல. சொல்லப்போனால் அருகாமை கூட அதற்குத் தேவையில்லை. அதனால்தான் பிரிவாற்றாமையில் காதல் வளர்கிறது. விரகே பிரேம ரா பேவதி என்று காளிதாஸன் கூடச் சொல்லுகிறார்.

பின் ஏன் இந்தக் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்?"

தங்கள் மன ஒற்றுமைக்கிடையே பிறர் வரக் கூடாதென்றுதான்!

நீர் சொல்லுவது எனக்கு அர்த்தமாகவில்லை, நீர் புதிர் போடுகிறீர்.

புதிர் ஒன்றுமில்லை. பச்சையாகவா சொல்லவேண்டும் இவர் களுக்குள் கலியாணம் ஆகிவிட்டால் அவளுக்கு வேறு புருஷன் கட்டாயம் வந்து சேருவான் அல்லவா? அப்பொழுது மன ஒற்றுமை குலைந்து போகும்.

'நீர் பேசுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே.

'ஒன்றும் முரண்இல்லை. நீங்களாக நினைத்துக்கொள்ளுகிறீர்கள். சதைப்பற்றால் மட்டும் காதல் ஏற்படுவதில்லை என்றேன், அவ்வளவு தான்.

'சரி, சரி வேலை கிடக்கிறது தலைக்குமேல். நாளைக்கு ஆபீஸ் இன்ஸ்பெக்ஷன். இதென்ன இழவு தர்க்கம் வேண்டியிருக்கிறது.

இழவு தர்க்கத்தின் ஸ்வாரஸ்யத்தில் சாப்பிட்ட கை கூட உலர்ந்து போய்விட்டதே!.

'கூட்டமில்லாத ஹோட்டலாக இருப்பதால் பிழைத்தோம்.

காதல் பேச்சு முடிந்து, கச்சேரிப் பேச்சு ஆரம்பமாயிற்று நான் எழுந்திருந்து வெளியே வந்துவிட்டேன்.
பாரததேவி, 30.07.1939
2O2

 
http://azhiyasudargal.blogspot.in/2010/06/blog-post_30.html

பிரிவு- சம்பத்



சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் 'ராஜதானி' எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. 'இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் 'ஹவ்ரா' பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,' என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. "தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?' என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார்.

அவரும் நினைத்து நினைத்துப் பார்த்தார். 'எது என்னை கல்பனாவிடம் இவ்வளவு தீவிரமடையச் செய்தது?' அவள் முதன் முதலில் எல்லோருக்கும் நடுவே உட்கார்ந்து, நாலுமணி மாலை இருக்கும், பாட ஆரம்பித்தாள். அவள் உட்கார்ந்த விதம், அவளுடைய சிரிப்பு, அவளுடைய நாசியும், கண்களில் மிளிர்ந்த அகலமும்! இதுதான் அவரை முதன்முதலில் அவளிடம் ஈர்ப்பித்தது. இருந்தும் இதெல்லாம் தப்பு என்று அவர் அவள் பக்கம் கூட போகாமல் தலைதெறிக்க எதிர்புறமாக ஓடத்தான் செய்தார் - மானசீகமாகத்தான் - அவள் யாரோ நான் யாரோ என்று பல தடவைகள் சொல்லிக்கொண்டார் - இருந்தும் பாழும் மனமும் உடம்பும் பரிதவிக்கத்தான் செய்தது.

ஒருநாள் கிட்டத்தட்ட லன்ச் டயத்தில் அவர் லைப்ரரியில், கோதாவரி டெல்டாவில் புகையிலை வளர்ப்பைப் பற்றி விபரம் சேமிக்கச் சென்றபோது அவளைத் தவிர லைப்ரரியில் வேறு யாரும் இல்லை. பொதுவாகவே அவள் ஆண்களைக் கண்டால் பயப்படுவதுபோல் காணப்படுவாள். ஒரு அஸிஸ்டென்ட் லைப்ரேரியனாகவிருந்தும், அவளுக்கு அந்த பொருளாதார புத்தகப் பட்டியல் விபரம் இன்னமும் அத்துப்படி ஆகியிருக்கவில்லை.

"மிஸ் கல்பனா!"

"எஸ். மிஸ்டர் தினகரன்!"

"வேர் கன் ஐ ஃபைன்ட் தீஸ் ஜெர்னல்ஸ்?"

"விச் ஜர்னல்ஸ் ப்ளீஸ்?"

அவர் பட்டியலை எடுத்துக்கொண்டு அவள் பக்கமாக நெருங்கியபோது, அவளுடைய உடம்பின் வாசனையை அவர் நுகர்ந்தார். ஏதோ யுகம் யுகமாகப் பழக்கப்பட்டதுபோல் அவள் அவரைப் பார்த்தாள்.

அவளிடம் அதிகமாக லக்கேஜ் இல்லை. பின் ஏன் இவ்வளவு நேரம்? ஒருக்கால் டாலியை பார்க்கப் போயிருக்கிறாளோ என்னவோ? டாலியும் தான் பாடுகிறாள்; லதா மங்கேஷ்கரும்தான்; கீதா டட்டும்தான்; பர்வீன் சுல்தானாவும் கூடத்தான்! இவ்வளவு பேர்களையும் பாடக் கேட்ட பின்னும் என் பாட்டுத்தான் உனக்குப் பிடித்திருக்கிறது என்றால், "யூ ஆர் எய்தர் ப்ளஃபிங் ஆர் யூ ஆர் இர்ரவோக்கபிலி மாட்," அவளுடைய சிரிப்பு !!!

"கல்பனா, ப்ளீஸ்..."

"அக்ஹான் ....அக்ஹான்..அக்ஹான்.."

"வொய்? யூ லாஃப் லைக் எ கோஸ்ட்..." என்பார் அவர்.

அவருடைய கழுத்தை வளைத்துக்கொண்டு அவரும், அவளும் ஈடுபடுமுன், ஊஞ்சலாடிய விகிதத்தில் அவளுடைய அறையே நிழலாகி மடிக்கப்படுவதுபோல் அவர் உணர்வார்! ஏதோ இனம் புரியாத சோகமும், இதுவும் ஓய்ந்து விடுமோ என்கிற பயமும், பீதியும் அவரைத் தொற்றும். புத்தரைப்போன்று அவரும் வால்யூஸ் டெவலப் செய்யப் பார்த்தவர்தான். புத்தருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இவருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இரண்டுமில்லை. எந்தக் கோணத்திலிருந்து அணுகினாலும் வாழ்க்கை சோகமயமானது என்பதை இருவருமே துல்லியமாக உணர்ந்தனர். ஆனாலும் அவள், அவளுடைய இனத்துக்குரிய விகிதத்தில், சோகத்தை அடித்துப் போட்டு சந்தோஷமாகவேயிருந்தாள். அவரால்தான் முடியவில்லை.

அவர்கள் இருவரும் சினிமா போகவில்லை. பார்க்குகளுக்குப் போகவில்லை. அவர் அவளை மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து, கனவேகமாக ஓட்டிச் சென்று தன்னை பெரிய ஆம்பிள்ளை என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அவளும் அதை விரும்பவில்லை. இருவருமே அந்த நிலைகளை எல்லாம் எப்போதோ கடந்து விட்டிருந்தனர். இருந்தும் ஒரு பத்து வருடம் அதையெல்லாம் பின்தள்ளி போட்டிருந்தாலும் அவர்கள் அப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

கல்பனாவின் உடம்பை பிரித்துப் பிரித்து அறிய முடியாது என்பதை அவர் கூடிய சீக்கிரமே இனம் கண்டார். இருந்தும் அவளுடைய மார்பகத்திலிருந்து யோனி வரையிலான பாகத்தில் விரவியிருந்த நல்ல ஹெல்த்தை அவர் கூடிய சீக்கிரமே இனங் கண்டார். அங்கு அவருடைய விரல்கள் விளையாடிய விதத்தில் அவள் டிரான்ஸ÷க்கு உட்படுவாள். 'மை மை திஸ் டிரான்ஸ் நோபடி குட் கிவ் மி..கம் கம்," என்பாள். இருந்தும் இரண்டே மாதங்களில் வைகறை போன்ற அதிலும், அந்த துல்லியம் ஏற்படுமோ என்கிற நிலையிலும், எதிர்பார்ப்பிலும் விரிசல் விழுந்தது. அதை அவர் விரிசல் என்று கணிக்காமலே, கணிக்கக்கூடாது என்று இருந்த விகிதத்தில் இன்னமும் நான்குமாதம் ஓடியது. அதுவும் இப்போது ஸ்டேஷனில் வந்து நிற்கிறது.

அவருடைய லவ் வருவதைப் பார்த்து ஓடிச் சென்று அவளிடமிருந்து ஸூட்கேஸையும், ஃப்ளாஸ்கையும் வாங்கிக் கொண்டார்அவர் உள்ளம் துள்ளியது.

ரிபப்ளிக் டேக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன.

"டிக்கட் கிடைத்ததா?" என்றாள் கல்பனா.

இவர் பதில் சொல்லாமல், அவளுடைய பச்சைப்புடவையிலும், அவர் வாங்கிக்கொடுத்திருந்த பச்சை ஸ்வெட்டரிலும் ஆழ்ந்தே போனார். அவளுடைய தலையில் ஒரு சிவப்பு ரோஜா ரொம்பவும் அழகாக இருந்தது.

"இது ஸ்டேஷன்," என்றாள் கல்பனா.

அவர் விழித்துக்கொண்டார். அவளை நேரே அவளுடைய ஸீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்து, அவளுடைய ஸூட்கேஸை கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்தார். உள்ளே கதகதப்பாக நன்றாக இருந்தது. "இந்த ரயில் நாம் இருவருமே செத்து விழும் அளவுக்கு போய்க்கொண்டேயிருந்தால் என்ன," என்று நினைத்தார். ஆனால் சொல்லவில்லை.

"கிவ் மி எ லிட்டில் வாட்டர்," என்றாள் கல்பனா.

தொங்கிக்கொண்டிருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்தார். குடித்துவிட்டுப் பிளாஸ்டிக் டம்பளரை கொடுத்துவிட்டு அவள் தன்னிடத்திலிருந்து எழுந்தபோது அவளுடைய வயிறு இடத்தில் பெரிய குழியை தரிசித்து அந்தத் திண்மையில் ஆழ்ந்து ஆழ்ந்துவென இருக்க, மீண்டும் விரவியிருக்க விழைந்தார்.

அவர்கள் இருவருமே கூட்டத்தைக் கொஞ்சம் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்கள். தினகரன் இறங்கி அவளுக்குகைலாகு கொடுத்தார். எண்ணற்ற டைம்கள் படுக்கையிலிருந்து அவளுக்கு எழ கை கொடுத்தது ஞாபகம் வந்தது. அவர் அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு இப்போதும் குதித்த விகிதத்தில் அவர் அவளை ஒரு கணத்திற்கு நிர்வாணமாகக் கண்டார்! சொரேல்னு அவரில் ஒரு வெட்கம் எழும்பியது. அவளைக் காப்பாற்றுவது போன்று அணைத்துக்கொண்டே நடந்தார்.

அவளுடைய இரண்டு லெட்டர்கள் போஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. வாங்கிக்கொண்டு போய் ஸ்டாம்ப் ஒட்டிப்போட்டு விட்டு ஒரு ஆறு ஆப்பிள், அவளுக்குப் பிடித்த கொட்டை எடுத்த பேரிச்சம்பழம் மூன்று பாக்கெட், எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது அவர் கண்களில் கண்ணீர் துளித்தது. அவளிடம் போனபோது 'டிட் யூ வீப்,' என்றாள் அவள். "நோ நாட் எக்ஸ்ôட்லி," என்றார் அவர்.

தயங்கியவாறே, "எப்போது திரும்பி வருவே," என்றார்.

"ஒரு மாதம் லீவு கேட்டிருக்கிறேன்," என்றாள் அவள்.

"எனக்குத் தெரியும்," என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

"எக்ஸ்டென்ஷன் பண்றதாய் இல்லை,"என்றாள் அவள்.

கொஞ்சநேரம் கழித்து, 'டூ யூ ஃபீல் ஸôட்?" என்றாள் அவள்.

அவர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அடி வயிற்றில் ஒரு gap ஏற்படுவதுபோன்று உணர்ந்தார். பீதியை தாங்க முடியாது போலிருந்தது.

பையிலிருந்து அவர் ஒரு ஸிகாட்டை எடுத்ததும், அவள் எம்பி, அவர் கழுத்தை வளைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். திடீரென்று ஒரு சலனமும் அற்று அதை அவர் ஏற்றுக்கொண்டார். கணங்கள் ஒழுகிப்போவதை கேவலம் தினகரனாலா நிறுத்த முடியப்போகிறது?

ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது பிரபஞ்ச ரீதியில் தன்னை ஏதோ ஒரு தனிமை சூழ்வதை அவர் உணர்ந்தார். பிளாசா வரையிலும் போகும், அவ்வளவு மரங்களையும் ரயில்வே க்வார்டர்ûஸயும் பட்படிகளையும் எல்லாவற்றையுமே, கடைசிப் பட்சமாக ஓர் தனிமை, நிராதரவாக்கிவிடுவதைப் பார்த்தார். எங்கேயாவது தனியாகப் போய் ஒரு காப்பி சாப்பிட்டால் தேவலை போலிருந்தது. வயது முப்பத்தி இரண்டு. விஷயம் இவ்வளவுதான்.பத்மாவிடம் அவருக்கு ஒரு முழுமை ஏற்படவில்லை. இங்கு இதிலும் கிட்டாது என்கிற பயங்கரத்தை ஜெரிக்க மீண்டும் காஃபியை தனிமையில் நாட வேண்டியிருக்கிறது. அட ஹவ்ரா என்ன ஹவ்ரா!அவள் மூனுக்குத்தான் போகட்டுமே! அவர்களிடையே ஊர்ஜிதமாகின ஒரு உறவு உண்டு என்ற பின்பு எதுதான் முக்கியம்! எது முக்கியமாக இருந்தாலும் இந்த இடைக்கால பிரிவு நிச்சயமாக முக்கியமாக இருந்தது. அதைப் பெரிது படுத்தவும் வேண்டியதில்லை. ஆனால் அந்த உறவுதான் எங்கே சம்பவிக்கிறது? எது எப்படிப் போனாலும் கடைசிப் பட்சமாக இதில் கிட்டும் ஒரு இன்பம், சந்தோஷத்திற்கு, உலக அளவில் ஈடேது?

ரொம்பவும் ஜாக்கிரதையாக ஒரு வாரம் கழித்து அவளுக்கு லெட்டர் எழுதினார். (லெட்டர் என்றாலே அவளுக்குப் பிடிக்காது. லெட்டர் போஸ்ட் பண்ண பிடிக்காது. நிர்பந்தம் ஏற்பட்டால் கூட ஸ்டாம்பு வாங்க மாட்டாள். அதுவும் வாங்கினால், அவளுடைய போஸ்ட்மேன் தான் அவர் இருக்கவே இருக்கிறாரே!)
'மை லவ்'

வெண்ணை திரண்டு வர தாழி உடைந்தது கணக்காக திடீர்னு ஏன் இப்படி ஒதுங்குகிறாய்? உன்னால் என் மீது அன்பு செலுத்த முடியவில்லை. மணமானவன். இரண்டு குழந்தைகள் வேறு; இவனோடு நமக்கென்ன என்றெல்லாம் சாதாரணத்தில் நீ நினைக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இட்ஸ் ஸம்திங் எல்ஸ்! ஆனால் என்னால் கணிக்க முடியவில்லை. என்னவாக இருக்க முடியும்? ரயில் கிளம்பிய பிறகு நீ நிஜமாகவே என்னை மறந்து விட்டாயா? ஜென்மம் பூராவும் உன்னுடைய அந்த நல்ல ஹெல்த்தில் விழுந்து புரண்டால்கூட நான் இன்னமும் உன்னிடம் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அப்படியிருக்க உன்னால் எப்படி என்னை விட்டு ஹவுரா போய்விட முடிகிறது? தஃபாக்ட் ஆஃப் த மாட்டார் இஸ் யூ டோன்ட் லவ் மி. எங்கோ, வைகறை, போன்று, போனால் போகட்டும், எதுதான் சாசுவதம், போன்ற தத்வங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாதா? இதெல்லாம், 'அன் அடல்டரேடட் பக்வாஸ்,' என்று. ஷேவ் செய்துகொள்ளும்போது அறுபட்ட துளிகளுக்காக லோஷனை எடுக்க உள்ளே செல்லும்போது, எப்போதும்போல் தேடும்போது ஓரிருதரமே உபயோகித்த உன்னுடைய ஸôக்ஸ் அகப்படுகிறது. அதை வைத்துக்கொண்டு, உன்னுடைய உடம்பின் அவ்வளவு வாசனைகளை யும் என் நாசி எதிரே, என்னுடையவயிற்றில், என்னுடைய உதடுகளில் என்னுடைய காதுகளில் கூட - உன் இழை சங்கீதமாக சம்பவிக்க வைக்க முடிகிறது. டோன்ட்யூ நோ இட் டியர்? இன் யுவர் ஹார்ட், இன் யுவர் ஆர்ம்பிட், இன் யுவர் ஸ்டமக், தட் யூ ஆர் டியூபிங் யுவர் ùஸல்ஃப் பை திஸ் ட்ரிப்..?'

மூன்று வாரம் கழித்து அவருக்கு கல்பனாவிடமிருந்து பதில் லெட்டர் வந்தது.

'மை லவ்,

உன்னை கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்தால் தேவலை என்று பட்டது. அது உனக்கும் எனக்கும் நன்மை பயக்கும் என்று நம்பியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். பட் இப்போதுதான் எனக்குத் திட்டவட்டமாகப் புரிகிறது. நானும் உன்னை நேசிக்கவில்லை. நீயும் என்னை நேசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நீ என் உடம்புள் திடும் திடும்மென்று பிரவேசிப்பது என் மேல் அன்பு செலுத்த என்று என்னால் நம்ப முடியவில்லை. உன்னுடைய தனிமையை விரட்ட பிரபஞ்ச அளவில் உன்னுடைய தேடலின் (அது எதைப் பற்றியோ நான் அறியேன்). தனிமையை மறக்க நீ என்னை ஒரு சாதனை கருவி ஆக்கியிருக்கிறாய். பத்மாவிடமும் நீ இப்படித்தான் நடந்து கொண்டிருக்க வேண்டும். நான் உன்னை இப்படி சொல்லும்போது நீ மிருகம் அது இது என்று திட்ட வரவில்லை. எந்தப் பெண்தான் உள்ளத்துக் கோடியில் ஆண் மிருகத்தை வெறுக்கிறாள்! உன்னுடைய தேடல் மிக்க, என் வயிற்றுள் விரவிய, இடிபாடுகளை நான் நேசிக்கிறேன். எப்போதாவது தூங்கி விழிக்கும்போது, 'அனுபவப்பட்ட அந்த இடங்கள் தனித்து நின்று, என்னை, உனக்காக, கொஞ்சுவதை நான் உணர்கிறேன். இது என் வரையில் மறக்க முடியாத அனுபவங்களே. அதற்காக உனக்கு ரொம்ப தாங்ஸ்..ஆனால் உன்னால் ஓரிரு கதிகளில் நிலைத்து நிற்க முடியுமா? இந்த யோசனையே பிணைப்பில் பிரிவையும் விரிசலையும் தோன்ற வைத்துவிட்டதே?
லவ் கல்பனாô..'

('ஏப்ரல் 1974' - சதங்கை இதழில் வெளிவந்தது)

**********