தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .1 -36 :: வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)

automated google-ocr in ubuntu with the help of Libre draw

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .1 -36

வங்காள மூலம் :
அதீன் பந்த்யோபாத்யாய 
தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி 
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா புதுடில்லி


ஸோனாலி பாலி ஆற்றின் மணலில் வெயில் சாய்ந்து விழுந்துகொண்டிருந்தது. ஈசம் ஷேக் படகின் மேல் நிழலில் உட்கார்ந்து கொண்டு புகை பிடித்துக்கொண்டிருந்தான். பின் பனிக் காலத்து மாலை. சந்தையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த கிராமவாசிகள் கரையோரமாக நடந்துகொண்டிருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் கிராமங்களும் திறந்த வெளிகளும் தெரியும். தர்முஜ் கொடிகள் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தன. புகை பிடித்துக்கொண்டே ஈசம் ஷேக் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். பூச்சிகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. எங்கும் பொன்னிறத் தானியத்தின் மணம். அக்ராண் மாதத்தின் கடைசி நாட்கள். பள்ளங்களிலிருந்தும் தாழ்ந்த நிலங்களிலிருந்தும் தண்ணீர் வடிந்து ஆற்றில் விழுந்து கொண்டிருந்தது. தண்ணீர் விழும் ஒலி காதில் விழுந்தது.

மைதானத்தின் மறு ஓரத்தில் சூரியன் இறங்கிவிட்டான். ஆலமர நிழல் மண் திட்டை மூடிவிட்டது. பயிர்களின் மேல் பறக்கும் பூச்சிகளின் ரீங்காரம். தென் பக்கத்து மைதானத்திலிருந்து பறந்து வந்து கொண்டிருந்த பறவைகளின் நிழல் நீரின் மேல் விழுந்தது. இந்தச் சமயத்தில் சில ஆட்கள் கிராமத்துப் பாதையிலிருந்து அங்கு இறங்கி வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டார்கள், டாகுர் வீட்டுத் தனபாபுவுக்குப் பிள்ளை பிறந் திருப்பதாக.

இந்தச் செய்தியைக் கேட்டதுமே ஈசம் தன் ஹுக்காலைக் கூரையின் எரவாணத்தில் செருகிவைத்தான். ஹுக்காச் சட்டியைக் குப்புறக் கவிழ்த்து வைத்தான். தாழ்வான கூரையைக் குனிந்தவாறே கடந்து வெளியே வந்தான். மேலே வானம், கீழே தர்முஜ் வயல், எதிரில் ஸோனாலி பாலி ஆறு. ஸ்படிகம் போல் தெளிந்த நீர். இந்த நிழல் செறிந்த பூமியில் ஈசம் மேற்குப் பக்கம் திரும்பி நின்றுகொண்டு, "சோபான் அல்லா'' என்று சொல்லிக்கொண்டான், பிறகு ஆற்றைக் கடந்து கிராமத்துக்குச் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினான்.

தனபாபுவுக்குப் பிள்ளை பிறந்திருக்கிறான்! மிகவும் சந்தோஷமான சமாசாரம். எல்லாம் கடவுள் கிருபை,

பாதையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய வரை நெல் வயல்கள். அவனுடைய பார்வை மாலை நேரத்தின் விசித்திர வண்ணங்களில் நிலைத்தது. அவன் நினைத்துக்கொண்டான்: அக்கம்பக்கத்தில் எவ்வளவு கிராமங்கள்! அங்குள்ள மனிதர்கள் அவனுக்கு எவ்வளவு தெரிந்தவர்கள்!

கீழே தண்ணீர்ப் பள்ளம்; அதில் நீந்திக் குதிக்கும் மீன்கள். அவன் பாதையின் ஒருபுறம் துண்டை விரித்தான். கீழே புல். புல்லின் ஈரத்தில் துண்டு நனைந்தது. அவன் அதைப் பொருட் படுத்தாமல் அதன் மேல் முழந்தாளிட்டு உட்கார்ந்தான். தண்ணீரால் முகத்தைக் கழுவிக்கொண்டான் ; தன் தாடியைக் கையால் நீவிவிட்டுக் கொண்டான். பலதடவை பூமியைத் தலையால் தொட்டு வானத்தை நோக்கியவாறு தன்னை மறந்த நிலையில் நமாஜ் ஓதினான்.

அந்தி நேரம். சூரியன் மறைந்துகொண்டிருந்ததால் ஈசமுடைய நிழல் நீண்டுகொண்டே சென்றது. வாய்க்கால் நீரின் சலனத்தில் அவனுடைய நிழலும் அசைந்தது. மஞ்சள் நிறப் பூச்சிகள் அவனுடைய தலைக்கு மேலே பறந்தன. மறையும் சூரியனின் மஞ்சள் ஒளியில் அவனுடைய முகம் விசித்திரச் சிவப்பாகக் காட்சியளித்தது, ஏதோ ஒரு தேவதையின் அபூர்வ ஒளி அவனுடைய முகத்தில் பிரதிபலித்தாற் போல்.

தொழுகையை முடித்துவிட்டு அவன் எழுந்து நடந்தான். வழியில் சந்தித்தவர்களிடம் எல்லாம் தனபாபுவுக்குப் பிள்ளை பிறந்திருக்கும் செய்தியைச் சொன்னான். அவன் இந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்காகவே தர்மூஜ் வயலிலிருந்து, ஆற்றிலிருந்து எழுந்து வந்திருக்கிறானென்று தோன்றியது. அவன் பாதையைக் கடந்து பாக்குத் தோப்புக்குள் நுழைந்தான். |

டாகுர் வீட்டு முன்னறையில் ஏகக் கூட்டம். வெளியிலும் பலர் கூடி நின்றுகொண்டிருந்தார்கள். ஈசம் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உள்ளே போய்த் தன் வழக்கமான இடத்தில் உட்கார்ந்து புகையிலையை எடுத்து வைத்துக் கொண்டான்.

ஸோனாலி பாலி ஆற்றில் சூரியன் முழுகிக்கொண் டிருக்கிறான். பயிர்களுக்கிடையில் இருட்டில் ஆமைகள் முடங்கிக் கிடக்கின்றன. தரை சற்று உலர்ந்ததும் இந்த ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடத் தொடங்கிவிடும். தோடார்பாக் மைதானத்தில் பல ஓநாய்கள் ஊளையிடும் ஓலம். தண்ணீர் ஓரத்தில் ஒன்றிரண்டு மின்மினிகள் பளபளத்தன. அவை இருட்டில் இறக்கைகளை விரித்தபடி பறந்து கொண்டேயிருந்தன. பறவைகளின் கடைசிக் கூட்டம் ஒன்று கிராமத்தின் மேல் பறந்து சென்றது. கிராமத்து மைதானத்தில் மனிதர் யாரும் இல்லை ; எவ்வித அரவமும் இல்லை. பட்சிகள் மேலே பறப்பதை இருட்டிலும் உணர முடியும். அவை எங்கே போகின்றன என்று அவனுக்குத் தெரியும். அவை ஹாஸான பீரின் தர்க்காவுக்குப் போகின்றன. அவை அங்கேதான் இரவைக் கழிக்கும், மலை போல் குளிர் வந்து இறங்கும்போது அவை தென்பக்கத்து ஏரிக்குப் போய்விடும்.

ஈசம் எழுந்து நின்றுகொண்டு சொன்னான்: ''பெரியம்மா, நான் இருக்கேன்.''

சின்ன பாபு கதவுக்கு வெளியே வந்து நின்றார். "ஈசம் வந்துட்டியா?"

''ஆமாங்க. தனபாபுவுக்குச் சமாசாரம் சொல்லியனுப்பிச் சுட்டீங்களா ? இல்லேன்னா என்னை அனுப்புங்கள். செய்தி சொல்லிட்டு வரேன். ஒரு துணி சம்பாதிச்சிக்கிட்டு வரேன்.''

சின்ன பாபு அவனைப் பார்த்துச் சொன்னார் : "போயேன். நாளைக்கே புறப்படச் சொல்லு. தனபாபுவை. கவலைப்படவேண் டாம், அவன் சம்சாரம் சௌக்கியமா இருக்கான்னு சொல்லு.''

''அது சொல்லமாட்டேனா ? என்ன போங்க! பெரியம்மா எங்கே?"

''அம்மா பிரசவ அறையிலே. நீ பெரிய மன்னியைக் கூப்பிட்டு உனக்குச் சாதம் போடச் சொல்லு.''

ஈசம் தானே போய் ஒரு வாழை இலையை நறுக்கிக்கொண்டு வந்தான். ஒரு செம்பு தண்ணீரும் எடுத்து வைத்துக்கொண்டு கூப்பிட்டான். 'சோறு போடுங்கம்மா."

பெரிய நாட்டுப் பெண் சொன்னாள்: "இலையை அலம்பிக்கோ." ஈசம் இலையின்மேல் தண்ணீர் தெளித்துக்கொண்டு சொன்னான்: "உம், போடுங்க."

அவள் சாப்பாடு போட்டாள். சாப்பிடும்போது சாப்பாட்டில் முழுக்க முழுக்க ஈடுபடுவது ஈசமின் வழக்கம். ஒரு பருக்கைச் சோற்றைக்கூட எறியமாட்டான் அவன். இப்படிப்பட்டவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கப் பெரிய நாட்டுப் பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். அவனைப் பார்க்கும்போது அவளுக்கு அவனுடைய பீபியின் நினைவு வந்தது. ஈசமுடைய இந்த வீடு, நொண்டி

*பீர் - முஸ்லிம் மகாத்மா

,மனைவி. குச்சிகளாலான வீட்டு வேலி - இவற்றை நினைவுகூர்ந்த பெரிய நாட்டுப் பெண்ணுக்கு அவனிடம் பரிவு ஏற்பட்டது. வழக்கம்போல் அவள் சொன்னாள்: ''நன்னா வயிறு நிறையச் சாப்பிடு, ஈசம். இன்னுங் கொஞ்சம் பருப்புப் போடவா? மீன்? நீ ரொம்பத் தூரம் நடக்கணுமே! நீ போய்ச் சேர்றதுக்குள்ளே ராப் பொழுது கழிஞ்சுடும்."

ஈசம் தன் முழுக் கவனத்தையும் செலுத்திச் சாப்பிடுகிறான். சுமார் பத்து முழ தூரத்திலுள்ள பிரசவ அறையைப் பார்க்கிறான். அங்கே தன்மாமியும் பெரியம்மாவும் இருக்கிறார்கள். அறையில் மூலைக்கு மூலை பிரம்பு இலைகள் தொங்குவதை ஈசம் கவனித்தான். அறை வாயிலில் மட்கிலா மரத்தின் கிளையைப் பார்த்தான். அறைக்குள் விளக்கு எரிகிறது. குழந்தை இரண்டு தடவை , "ஞா ... ஞா" என்று கத்தியது. நனைந்த மரக்கட்டையின் மணம், புகை நாற்றம், சாம்பிராணி மணம் எல்லாம் சேர்ந்து இவ்வீட்டில் ஒரு குழந்தையின் பிறப்பை அறிவிக்கின்றன. தகரத்தாலும் மரத்தாலும் ஆன விடு, சகட மரத்தின் நிழல், தனமாமி, பெரிய மாமி...! இந்த வீட்டின் பெரிய பாபு பைத்தியம். இது நினைவுக்கு வந்ததும் ஈசம் சொன்னான் : பெரிய பாபுவைக் காணோமே, அம்மா ?

பெரிய நாட்டுப் பெண் தன் பெரிய பெரிய கண்களால் ஈசமைப் பார்த்தாள். ஆனால் வார்த்தை எதுவும் பேசவில்லை. பேசத் தொடங்கினால் அக்கண்களிலிருந்து நீர் பெருகத் தொடங்கிவிடும். அக்கண்களைப் பார்த்தே ஈசம் புரிந்துகொண்டான். பெரிய பாபு வீட்டிலில்லை என்று. எங்கே இருக்கிறார், எங்கே போகிறார் என்று யாருக்கும் தெரியாது. தெரிந்துகொள்ள நேரமுமில்லை - தேவையுமில்லை. ஈசம் எல்லாச் சாதத்தையும் பருப்போடு சேர்த்துக் கலந்துகொண்டு ஒரே வாயில் சிலந்தியைப் போல் விழுங்கினான். இப்போது பெரிய நாட்டுப் பெண் அருகில் இல்லை. முன்னறையில் இப்போது அதிக ஆட்கள் இல்லை. பெரிய மாமியின் பையனும் தனமாமியின் பெரிய பையனும் சமையலறையில் அவசர அவசரமாகச் சாப்பிடுகிறார்கள்,

ஈசம் முன்னறையிலிருந்து ஒரு தடியும் லாந்தரும் எடுத்துக் கொண்டான். துண்டால் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டான். இந்த அக்ராண் மாதத்துக் குளிரில் சேறு நிறைந்த தண்ணீரில் நடக்கவேண்டும். தண்ணீர் நிறைந்த தாழ்நிலங்களைக் கடக்க வேண்டும். முண்டாசுத் தலையுடன் ஐந்து கோச தூரம் நடக்க வேண்டும் அவன். ஏரிகரையோரமாகவும் ஆற்றின் மேட்டுப் பகுதியிலும் அவன் நடந்து செல்லும்போது சில சமயம் மெளனமாக இருப்பான் ; சில சமயம் * காஜியின் பாட்டுக்களைப் பாடிக் கொண்டு போவான். சமையலறையைக் கடந்து செல்லும்போது ஈசம் கவனித்தான். பெரிய மாமி கிணற்றங்கரையில் இருட்டில் நின்றுகொண்டு யாருக்காகவோ காத்துக்கொண்டிருக்கிறாள். அவனைப் பார்த்ததும் அவள் சொன்னாள் : ''ஈசம், பெரிய மாமா ஆலமரத்து மேட்டிலே இருக்காரான்னு பாரு. நீ அந்த வழியாகத் தானே போவே!''

ஈசம் மூங்கில் புதரைத் தாண்டிக்கொண்டு மைதானத்தின் இருட்டில் நுழையும்போது சொன்னான்: " நீங்க வீட்டுக்குப் போங்க. நான் பார்த்தேன்னா அனுப்பறேன் அவரை." கொஞ்சங் கொஞ்சமாக அவன் இருளில் மறைந்தான். இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை அவன். மைதானத்தில் லாந்தரின் அசைவு மட்டும் தெரிந்தது.

ஈசமின் வலது கையில் தடி, இடது கையில் லாந்தர். அக்ராண் மாதம். பனி விழுகிறது. வயல்களிடையே பாதை இன்னும் சரியாக உருவாகவில்லை. குறுகலான ஒற்றையடிப் பாதை. மழைத் தண்ணீர் பாதையிலிருந்து வடிந்துவிட்டது. ஈர மண் சேற்றில் கால் வைத்தால் புதைகிறது. ஆனால் கால்கள் அவ்வாறு புதையாதபடி நிதானமாகக் கால்வைத்து நடக்கிறான் ஈசம். இருள் அடர்ந்திருந்ததால் ஈசமினால் லாந்தர் வெளிச்சத்தையும் தன்னையும் தவிர வேறெதையும் உணர முடியவில்லை. இந்தப் பகுதியில் பின்பனிக் காலத்திலேயே குளிர் வந்துவிடுகிறது. புதர்களிலிருந்த பூச்சி புழுக்கள் குளிர்காரணமாக மெளனமாக இருக்கின்றன. ஈசம் மேட்டுக்கு ஏறி வந்தான். பக்கத்தில் பாகல் வயல்கள். எதிரில் குளம். குளத்தங்கரையில் அந்த ஆலமரம். இரவு வெகுநேரம் வரை பெரிய பாபு இங்கே தங்குவதுண்டு. ஈசம் லாந்தரைத் தூக்கிப் புதர்களில் பெரிய பாபுவைத் தேடினான். புதருக்குப் புதர் மின் மினிகள். ஆலமரத்து விழுதுகள் தரைவரை இறங்கியிருக்கின்றன. பண்டைக் கால ஆலமரமாதலால் விழுதுகளால் தனித்தனி அறைகளே உருவாகியிருந்தன. அவன் கூவினான்: “பெரிய மாமா, இருக்கீங்களா?" பதில் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் லாந்தரைத் தூக்கிப் பிடித்து மரத்தைச் சுற்றிலும் தேடினான். அவர் அங்கு இல்லை, வேறு எங்கோ போய்விட்டார் என்று புரிந்ததும் மரத்துமேட்டிலிருந்து கீழே இறங்கி வந்தான். தூரத்திலிருந்த கிராமங்கள், அவற்றின் விளக்குகள், ஹாசிமின் அலங்காரப் பொருள் விற்பனைக்கடையில் எரிந்துகொண் டிருந்த பெட்ரோ

• காஜி - மதசம்பந்தமான பாட்டுக்கள் இயற்றும் முஸ்லிம் கவிகளுக்கு இடப்பட்ட பொதுப் பெயர்.

மாக்ஸ் விளக்கின் ஒளி ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே அவன் வாய்க்கால் கரைக்கு வந்தபோது ஏதோ ஒரு மனிதக் குரல் கேட்டது. அவன் கேட்டான் : "யாரது ? இருளிலிருந்து பதில் கேள்வி வந்தது ; ' நீ யாரு?" ''நான் ஈசம் ஷேக், ஊரு தொடர்பாக்.''
*******************************
அவன் சொல்ல விரும்பினான் : "நான் * கொய்னாப் படகிலே படகோட்டியா இருந்தேன். இப்போ டாகுர் வீட்டிலே வேலை செய்ய றேன். எனக்கு இருட்டு ஓர் இலட்சியமில்லை. பாபுகளோட பழகறேன். ஆற்றங்கரை தர்மூழ் வயலுக்கு நான்தான் காவல். நான் டாகுர் வீட்டு வேலைக்காரன். எனக்கு வயசாயிடுத்து. இப்போ கொய்னாப் படகு ஓட்ட முடியல்லே.'' 'நான் ஹாசிம்பூயி நா. ஊரு கொலாகாச்சா." ''ஓ ஹாசிமா ! என்ன பண்றே ?" "மீன் பிடிச்சிக்கிட்டிருக்கேன். தண்ணி இறங்குது பார்த்தியா? கொய் மீனுக்காக வலை விரிச்சிருக்கேன். இந்தக் கும்மிருட்டுலே எங்கே புறப்பட்டுட்டே?" "மூடா பாடா போய்க்கிட்டிருக்கேன். தனபாபுவுக்குப் புள்ளே பொறந்திருக்கு. அந்தச் சேதியைச் சொல்லப் போறேன்.'' ''தனபாபுவுக்கு எவ்வளவு புள்ளே ?" ''இதைச் சேர்த்து ரெண்டு, உங்கிட்டே நெருப்புக்குச்சி இருக்கா? பீடி பத்த வச்சுக்கறேன்.''

ஈசம் பீடி பற்ற வைத்துக்கொண்டான். பெரிய பாபுவை நினைத்து அவன் மனம் வருந்தியது. இரவில் அவர் திரும்பி வராவிட்டால் பெரியம்மா அவருக்காகக் கண்முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பாங்க, அவன் கேட்டான் : ''பெரிய பாபுவைப் பார்த்தியா ?'' ''மத்தியானம் பார்த்தேன். ஆத்து மணல்லே நடந்து போய்க் கிட்டிருந்தாரு.''

ஈசம் வருத்தத்துடன் சொன்னான் : "அண்ணே , ஒனக்கும் எனக்கும் சின்னச் சின்னக் கஷ்டங்கள் தான்."

பிறகு அவன் பாவுசா ஏரியைக் கடப்பதற்காக விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான். "சந்தை கலையறதுக்குள்ளே குதாரா காட்டுக்குப் போயிட்டா அங்கே படகு கிடைக்கும். இல்லேன்னா இந்தக் குளிர்லே தண்ணியிலே இறங்கி நீந்தணும்.' இதை நினைக்கும் போதே அவனுடைய உடம்பு நடுக்கத்தில் சுருங்கியது. * கொய்னா- நிறையப் பிரயாணிகளை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு ஏற்றிச் செல்லும் பெரிய படகு.ஈசம் விரும்பினால் ஒரு குறுக்குப் பாதையில் போய் இன்னும் முன்பே ஏரிகரையை அடைந்துவிடலாம், இருந்தாலும் அவனை தடுத்தது, ஓர் இனம் புரியாத பயம். பயத்துக்குக் காரணம் முக்கியமாகப் பாமந்திசெளக்கில் இருந்த கிழட்டு இலவமரமும் அதன் இரண்டு உலர்ந்த கிளைகளுமே. மரத்தடியில் சமாதிகள், காலங்காலமாக இருந்துவரும் சமாதிகள். ஆயிரம் இருக்கும், அதற்கு மேலேயும் இருக்கலாம், இந்தப் பயத்தால்தான் ஈசம் அந்தப் பாதையில் போகவில்லை.

ஈசம் தன் கைத்தடியை இறுகப் பிடித்துக்கொண்டான், பயம் ஏற்பட்டால் தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்ப்பான். அல்லா கிருபையுள்ளவர். அந்தக் கிருபை மிகுந்த அல்லாலை வானத்தில் தேடினான் அவன். இப்போது எண்ணிறந்த நட்சத்திரங்கள் வானத்தில் புள்ளிகளாக ஒளிர்கின்றன. கீழே கும்மிருட்டு. தூரத்தில் கிராமங்களின் விளக்குகள், பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சம். மரங்கள் புதர்களினூடே இந்த வெளிச்சம் கண்ணில் படுகிறது. பராபர்தி போகும் பாதையில் சிலர் நீரில் நடந்து போய்க்கொண் டிருக்கிறார்கள். அவர்களிடம் விளக்கு இல்லை. தண்ணீரில் அவர் கள் நடக்கும் சப்தம் மட்டும் காதில் விழுகிறது. அவர்களுடைய பேச்சொலியும் ஈசமின் காதில் விழுகிறது.

அவன் கொஞ்சங் கொஞ்சமாக ஏரிப்பக்கம் இறங்கிப் போனான். பயிரிலிருந்த பனி அவனுடைய முழங்கால் வரை நனைத்துவிட்டது. அவன் பராபர்திப் பாதையிலிருந்து வலது பக்கமாக விலகிப் போய்க்கொண்டிருக்கிறான். இந்தப் பகுதியில் வேறு மனித அரவமே இல்லை. மைதானம் சூல்கொண்ட பசுவைப் போல் சலனமின்றி இருட்டில் படுத்துக் கிடக்கிறது. சந்தைக்குப் போனவர் யாரும் அவ்வழியில் வரவில்லை. தானியக் கதிர்களின் கனத்தால் பயிர்கள் பாதையின் மேல் சாய்ந்திருக்கின்றன. அவன் தன் கைத்தடியால் பயிர்களை இருபுறமும் விலக்கித் தனக்குப் பாதையை உண்டாக்கிக் கொண்டு நடக்கிறான்,

அவன் ஏரிக்கரைக்குப் போய்ச் சேர்ந்தபோது குதாரா காட் மூடிக் கிடந்ததைக் கண்டான். படகோட்டி படகை அக்கரையில் வைத்து விட்டுப் போய்விட்டான். படகு மங்கலாக இங்கிருந்து தெரிகிறது. அவன் இடதுபக்கம் சில அடிகள் நடந்து போனான். சற்றுத் தூரத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது ஈசமுக்குத் தெரியும், இந்தச் சமயத்தில் மீனவப் படகுகள் இருக்கும் என்று. மழை நீர் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து இறங்கிக்கொண் டிருக்கும். வெள்ளம் வந்தபோது எங்கும் பொங்கிப் பரவிய தண்ணீர் அக்ராண் மாதத்தில் வடிந்துவிடும். வடியும் நீருடன் மீன்களும் ஆமைகளும்

*வரும். மீனவர்கள் முரட்டு வலைகளுடன் வந்திருக்கிறார்கள். ஏரியில் வலைகளை விரித்துவிட்டு இருட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஈசம் கரை வழியே நடந்து விளக்கு வெளிச்சம் தெரிந்த இடத்துக்குப் போனான். அங்கிருந்து கூவினான் : " நான் தான் ஈசம். என்னை அக்கரையிலே கொண்டுபோய் விடு. நான் ஒரு சேதி கொண்டு போறேன். தனபாபுவுக்குப் புள்ளே பொறந்திருக்கு."

பிறகு அவன் நாற்புறமும் பார்த்துவிட்டுக் கூவினான்: ''பெரிய மாமா இருக்கீங்களா ? அம்மா உங்களுக்காகக் காத்துக்கிட் டிருக்காங்க. வீட்டுக்குப் போங்க."

பதில் எதுவுமில்லை. ஒரே ஒரு செம்படவப் படகு அக்கரையி லிருந்து வந்தது. அதிலிருந்தவன் கேட்டான் : "தனபாபுவுக்குப் புள்ளே பொறந்திருக்கா ?" ஈசம் சொன்னான் : ''ஆமா.” "அப்போ நாளைக்கு ஒரு கர்மா மீன் எடுத்துக்கிட்டுப் போறேன். மீனைக் கொடுத்துட்டு ஒரு சட்டை கேட்டு வாங்கிக்கப் போறேன்."

அவன் படகின் மேற்பலகையைத் தூக்கி இருட்டிலிருந்து ஒரு பெரிய மீனைத் தூக்கி எடுத்தான். நீல நிறமுள்ள அம்மன் மேற்பலகையில் துள்ளிக் குதிப்பதை விளக்கு வெளிச்சத்தில் கவனித்தான் ஈசம். அதன் கண்களைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது, ஒரு பைத்தியக்கார மனிதர் வயல்களில் எப்போதும் அலைந்து திரிவதைப் போல; பூக்கள், பழங்கள், பறவைகளைப் பார்த்துக் கொண்டு அலைவதைப் போல, மீனின் கண்கள் அம்மனிதரின் கண் களை நினைவுறுத்தின. பெரிய மாமி தன் பெரிய பெரிய கண்களால் விழித்துக்கொண்டு மனிதர் எப்போது திரும்பி வருவார் என்று காத்துக்கொண் டிருக்கிறாள். ஈசம் கேட்டான் : "பெரிய பாபுவைப் பார்த்தியா ?" பதில் வெந்தது : "இன்னிக்குப் பார்க்கல்லியே." ஈசம் வேறொன்றும் பேசவில்லை. பைத்தியக்கார மனிதர், இந்த வயல்களிலெல்லாம் இரவும் பகலும் சுற்றித் திரிகிறார். எந்த இருட்டில், யாரைத் தேடிக்கொண்டு அவர் இப்படி அலைகிறார் என்று ஈசமுக்குப் புரியவில்லை. அவன் ஏரியின் மறுகரையை அடைந்ததும் மறுபடியும் வயல்களைக் கடக்கத் தொடங்கினான்.

இப்போது அவன் சணல் வயல்களைக் கடந்துகொண் டிருக்கிறான். இப்போது இங்கே ஒரு பயிருமில்லை. உளுந்து, கேசரிப் பருப்பு ஆகிய பயிர்களெல்லாம் இருக்கவேண்டும், ஆனால் இல்லை. பயிர்கள் இல்லாத தரிசு நிலங்கள், வெட்டப்பட்ட சணல் பயிர்களின் வேர்கள் மட்டும், சொரசொரப்பாக வளர்ந்திருக்கும் தாடி போல் நிலத்திலிருந்து நீட்டிக்கொண் டிருக்கின்றன. ஜோகிபாடாவில்இந்த இரவு நேரத்திலும் நெசவு நடக்கிறது. தறி இயங்கும் ஒலி அவனுக்கு வயலிலேயே கேட்கிறது. அவன் கிராமத்துக்குப் போகும் எண்ணத்துடன் குறுக்காக நடக்கிறான். மீனவர்களின் படகுகள் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை. வலைக்கு மேலே மூங்கில் நுனியில் தொங்கும் விளக்கின் வெளிச்சம் மட்டும் துருவ நட்சத்திரம் போல் அவனுக்கு வழிகாட்டுகிறது. அவன் எவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறான், எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதையெல்லாம் அந்த வெளிச்சம் அவனுக்குத் தெரிவிக்கிறது. வயல்களின் கோடியில் அந்தக் கிழட்டு இலவ மரம் கொஞ்சங் கொஞ்சமாக உருக் கொள்கிறது. பகல் நேரத்தில் அதை இங்கிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். மரத்திற்குப் பக்கத்திலிருந்த கிராமத்தில் ஒரு தடவை வைசூரிப் பரவியது.

ஈசம் பயந்துகொண்டே நடக்கிறான். மரம் தூரத்திலிருந்தாலும் அவனுக்குப் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. அவன் மரத்திலிருந்து விலகிச் செல்லச் செல்ல மரம் அவனை நோக்கி நகர்ந்து வருவதாகத் தோன்றுகிறது. வலது பக்கம் சுமார் அரைக் கோசதூரம் நடந்தால் அந்த மரம். அதனடியில் சமாதிகள், மேட்டு நிலத்திலிருந்து அவன் ஒரு தடவை மரத்தைப் பார்த்துவிட்டதாலும், ஒரு நாள் சந்தையிலிருந்து திரும்பும்போது இருட்டில் அதன் உச்சியில் ஓர் ஒளி ஜொலிப்பதைப் பார்த்த தாலும் பயந்து போயிருந்த ஈசம் வேகமாக நடந்து ஜோகி பாடாவுக்கு வந்து சேர்ந்தான். ஆனால் அவனை யாராவது பார்த்து விட்டால் சமாதிகளைத் தாண்டி வந்ததாகச் சொல்லிவிடுவான். காரணம். அந்தப் பிராந்தியத்திலேயே மிகவும் தைரியசாலி என்று பெயர் பெற்றிருந்தான் அவன். ஆனால் அவன் ஒரு போதும் தன் பயத்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. தைரியசாலி என்று பெயர் பெற்றிருந்ததால் அவன் இருட்டிலும் அகாலத்திலும் தன் பயத்தை மறைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு நடப்பான். ஜோகிபாடாவை அடைந்ததும் மனிதர்களின் அரவம், சர்க்காவின் ஒலி, தறிகளின் இயக்கம் ஆகியவற்றால் அவனுடைய பயம் மறைந்தது. அப்போது பழக்கப்பட்ட குரலைக் கேட்டு அவன் சொன்னான் "ஆமிர் சித்தப்பா குரலா இருக்கே!'' ""நீ ........?" 'நான் தான் ஈசம்." "இந்த அகாலத்திலேயா ?! ''முடாபாடா போய்க்கிட்டிருக்கேன். தனபாபுவுக்குப் பிள்ளே பொறந்திருக்கு, அந்தச் சேதி சொல்லப் போறேன். உங்க உடம்பு எப்படி இருக்கு?"""சுகமில்லேப்பா. பெரிய பாபுவோட பைத்தியம் தெளிஞ் சுடுத்தா ?" ''இல்லே , சித்தப்பா ." ''பெரிய எசமானுக்குக் கண்ணு தெரியல்லேன்னு கேள்விப்பட் டேனே ?" "ஆமா, அவர் நாள் பூரா அரைக்குள்ளேயே உட்கார்ந்திருக் கார். பெரிய எசமானியம்மாளும் பெரிய மாமியுந்தான் அவரைக் கவனிச்சுக்கறாங்க." ''பாவம், புள்ளைக்குப் பைத்தியம். அப்பாவுக்குக் கண் தெரி யல்லே .'' ''ஆமா சித்தப்பா." ''சரி. கொஞ்சம் உட்காரு. ஹக்கா பிடிச்சுட்டுப் போகலாம்.” "இன்னொரு நாள் பார்த்துக்கலாம், சித்தப்பா. இன்னிக்கு இப்பவே போகணும்."

இவ்வாறு சொல்லிக்கொண்டே ஈசம் சையத் மிஸ்திரியின் நாணல் குடிசையைத் தாண்டி ராமபத ஜோகியின் மாந்தோப்புக்குள் நுழைந்தான். கிராமத்தின் மசூதியைக் கடந்து வயலுக்கு வந்ததும் இலவமரத்து நினைவு மறுபடியும் வந்துவிட்டது. அவன் தனக்குத் தைரியமூட்டிக் கொள்வதற்காக 'அல்லாவே துணை' என்று சொல்லிக் கொண்டான். மரம் வரவரச் சைத்தானாக ஆகிக் கொண்டிருக்கிறது. சைத்தான் மாதிரி அவனைப் பின்தொடருகிறது. இடையிடையே கையிலிருந்த லாந்தரும் தடியும் மிகவும் கனத்து விட்டதாகத் தோன்றுகின்றன. இப்படி ஏன் ஆகவேண்டும் என்று நினைத்தான் அவன். அவன் எவ்வளவோ இரவுகளில் எவ்வளவோ தூரங்கள் நடந்து நல்ல செய்திகளும் கெட்ட செய்திகளும் கொண்டு போயிருக்கிறான். ஆனால் பாவுசா மைதா னத்தை மட்டும் இன்னும் அவனால் கடக்க முடியவில்லை. இலவ மாம் மிகவும் அருகில் வந்துவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு. ஒரு சமயம் பின்னாலிருந்து விரட்டுகிறது. ஒரு சமயம் முன்னால் வந்து மிரட்டுகிறது. அவன் இரண்டு தடவை தன் கைத்தடியைத் தலைக்கு மேலே வேகமாகச் சுழற்றினான். தான் சிலம்பம் விளையாடுவது அவனுக்கு நினைவு வந்தது. சிலம்பத்தில் கெட்டிக் காரனான அவன் அந்த மரத்தைத் தன் எதிராளியாக நினைத்துக் கொண்டு இடையிடையே தன் தடியைச் சுழற்றினான். லாந்தரை இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையால் தடியைச் சுழற்றிக்கொண்டே அவன் கீழே இறங்குகிறான். செடிகொடிகளில் அவனுடைய கால்கள் சிக்கிக்கொண்டதால் அவன் அவற்றைத்

10தடியால் விலக்கி விட்டுக்கொண்டு நடக்கிறான். அவன் இவ்வாறு செடிகொடிகளை விலக்கிவிட்டுக் கொள்வது, தன்னுடைய பாதையைக் கண்டுகொள்வதற்காக மட்டும் அல்ல, தன் பயத்தை மறப்பதற்காகவுந்தான். வயலில் இறங்கியதுமே அவனுடைய உடம்பு ஜில்லிட்டுப் போகிறது. கட்டுமஸ்தான உடம்பு ஈசமுக்கு. இந்தக் கிழவயதிலும் அவனுடைய கழுத்து விரைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. இருந்துங்கூட இந்த இரவு, இருட்டு, விசாலமான தாழ்நில மைதானம், இலவமரம் எல்லாமாகச் சேர்ந்துகொண்டு அவனை விரட்டுகின்றன . ஏதோ ஒரு குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. விளக்கு வெளிச்சத்தில் பாதை தெரியவில்லை ஈசமுக்கு. இந்த மைதானத்தைக் கடந்துவிட்டால் மறுபடி கிராமம். பிறகு கிராமத்தி லிருந்து போகும் வழி, பூதம் மாதிரி தோற்றமளிக்கும் கோலா காந்தால் பாலம், அப்புறம் பூரிபூஜா மைதானம். அப்புறம் ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் கிராமங்கள் - புல்தா ஏரி, நமசூத்ரபாடா, பேடாப், போனாப், மாஸாப் கிராமங்கள்.

இருள் காரணமாக வானத்தில் இவ்வளவு நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன. தாழ் நிலத்தின் இறக்கம் பாதாளத்துக்கே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும் போலிருக்கிறது. ஒற்றையடிப் பாதை இன்னும் சரியாக உருவாகவில்லை, அக்ராண் கழிந்து பெளஷ் மாதம் வந்தால், கதிர் அறுப்பு முடிந்துவிட்டால் பாதைகள் தெளிவாக உருப் பெற்றுவிடும். இப்போது இங்கிருந்து வழி கண்டு பிடித்து மறுகரையை அடைவது மிகவும் சிரமந்தான்,

ஈசம் வெகுநேரம் வரை ஒரு பழக்கமான பாதையைத் தேடிக் கொண்டிருந்தான். திருவிழாவுக்குச் செல்பவர்கள் இந்தப் பாதை வழியாகத்தான் மைதானத்தைக் கடப்பது வழக்கம். பயிர் வயல் களுக்கு நடுவே எங்கேயோ பாதை மறைந்து கிடக்கிறது. அவன் ஜாக்கிரதையாகப் பயிர்களை விலக்கி விலக்கிப் பார்த்துக்கொண்டு முன்னேறுகிறான். இதோ பாதை! ஆனால் சற்றுத் தூரம் சென்ற பிறகு தோன்றுகிறது, இது சரியான பாதையில்லை யென்று. பாதை அவனோடு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது போலும், அவன் நினைத்தான், 'மைதானத்தின் ஓரமாக நடந்து கொண்டேயிருந்தால் நிச்சயம் பக்கத்துக் கிராமத்தை அடைந்து விடமுடியும். மறுபடியும் அவன் மனத்துக்குள் சொல்லிக்கொண் டான், 'அல்லாவே துணை!' அவன் இந்த இரவில் இந்த மைதானத்தைக் கடக்கத்தான் வேண்டும். இருட்டில் பாதையைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், அவனை மிரட்டும் சைத்தானின் கண் எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும்

1tஅவன் இந்த மைதானத்தைக் கடந்து அடுத்த மைதானத்தை அடையத்தான் போகிறான் ; தனபாபுவுக்குச் செய்தி தெரிவிக்கத் தான் போகிறான்!

அவன் ஒரு சமயம் உறுதியாக இருந்தான் , ஒரு சமயம் பயத்துக்கு ஆட்பட்டுப் பலமிழந்துபோகிறான். மைதானத்துக்குள் தான் முழுகிக்கொண் டிருப்பதாகத் தோன்றுகிறது அவனுக்கு, தான் ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருவதாகத் தோன்றுகிறது. அவனால் கொஞ்சங்கூட முன்னேற முடியவில்லை. "கடவுளே துணை" என்று அவன் சொல்லிக்கொண்டான். தான் ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறோமா என்று சோதித்துப் பார்த்துக் கொள்வதற்காக அவன் பயிர்களை விலக்கிவிட்டுச் சேற்று மண்ணில் தன் கைத்தடியை ஊன்றி வைத்தான், அந்த இடத்தை அடையாளம் கண்டுகொள்வதற்காகப் பக்கத்திலிருந்த செடி களைப் பிடுங்கி எறிந்தான். பிடுங்கப்பட்ட செடிகளை ஒரு சிலுவை போலத் தரையில் பரப்பி வைத்தான். அவற்றைச் சுற்றி வட்ட மாக ஒரு கோடு போட்டான்.

இந்த மைதானமும் இந்த வழியும் வெகுநேரமாக அவனுடன் விளையாடுகின்றன. அவன் சற்று நேரம் உட்கார்ந்தான். பிரபஞ்சம் முழுவதும் சலனமற்று இருக்கிறது. பைத்தியக்காரப் பெரிய பாபுவைப் போல் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. அவன் தனக்குத்தானே சிரித்துக்கொள்ள முயற்சி செய்தான். ஆனால் அவனுடைய தொண்டை உலர்ந்து கிடந்தது. ஒரு சிறு இருமல் தொண்டையிலிருந்து வெளிப்பட்டது. உடனே அதன் ஒலி மைதானமெங்கும் பரவியது. எங்கிருந்தோ ஒரு புதுமாதிரி அரவம். அவன் உற்றுக் கேட்டான். இப்போது மைதானம் பைத்தியக்காரப் பாபுவைப் போல் மர்மம் நிறைந்ததாக இல்லை. அக்ராண் மாதப் பனியில் நனைந்து கிடந்த சூனிய மைதானம் அவனுடைய நொண்டிப் பெண்டாட்டியைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. ஜிஞ்ஜி முதலிய இரவு பூச்சிகள் குளிர்காலத்துக் காக ஏங்கிக்கொண் டிருக்கின்றன. குளிர்காலம் எப்போது வரும், எப்போது வயல்கள் காலியாகும். அவற்றில் எப்போது தானியங்கள் சிதறிக் கிடக்கும், நாம் பறந்து போய் அவற்றை எப்போது தின்னலாம், சுற்றலாம் , ஆடலாம். விளையாடலாம்!

அவன் இவ்வித ஏக்கக் குரல்களைக் கேட்கக் கேட்க, அதன் விளைவாகத் தானும் சோகத்தில் மூழ்க மூழ்க, அந்தப் பயங்கர இலவமரம் உச்சியில் எரியும் நெருப்புடன் அவனை நோக்கி முன்னேறி வருவதாகத் தோன்றுகிறது.

12அந்த நெருப்பு எரிகிறது. பிறகு அணைகிறது அல்லது அணைந்து - போய்க் கொள்ளிவாய்ப் பிசாசாக உருக்கொள்கிறது. தூரத்தில் மைதானத்தின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை ஆடி ஆடி அவனுக்கு விளையாட்டுக் காட்டுகிறது. அவன் சொல்லிக்கொண் டான் : "ரொம்ப நல்லாயிருக்கு. இப்படி உட்கார்ந்திருந்தால் பயம் அவனை இன்னும் முடமாக்கிவிடும். அவன் உடனே எதிர்த் திசையில் ஓடிப் போனால்தான் ஏதாவது ஒரு கிராமத்தை அடைய முடியும் !'

அவன் லாந்தரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட ஆரம்பித் தான். விளக்கு இரண்டு தடவை தப் தப் என்று பெரிதாக எரிந்தது. விளக்கு அணைந்துவிடுமோ என்று பயந்து அவன் ஓடுவதை நிறுத்திக்கொண்டான். அவனுடைய முழங்கால்களில் பலமே இல்லை. அவன் அடிக்கடி பின்பக்கம் திரும்பிப் பார்க்கிறான். இலவமரம் நிஜமாகவே தன்னை நோக்கி முன்னேறி வருவதை அவன் தெளிவாக உணர்கிறான். மரத்தின் உச்சியில் நெருப்புச் சுடர். அதன் கிளைகளிலெல்லாம் வைசூரி கண்டு இறந்தவர்களின் பிணங்கள் தொங்குகின்றன. அவன் சிலுவைக் குறி போட்டிருந்த இடத்துக்கு மறுபடி வந்திருக்கிறான். இலவமரத்துக்குத் திடீரென்று உயிர் வந்துவிட்டது' ! அப்படியானால் அவன் உண்மையிலேயே ஒரு வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்துகொண் டிருந்திருக்கிறான்! ஈசம் பயத்தால் வெளிறிப் போய்த் தரையை உதைத்தான். அவன் பிடுங்கி எறிந்திருந்த செடிகள் பெருங்காற்றில் இருளில் சிதறின.

அவன் சைத்தானை நோக்கிச் சொன்னான்: ''சைத்தானோட மகனே, என்ன நினைச்சுட்டிருக்கே நீ? ஏரியோட தண்ணிக் குள்ளே என்னை முழுகடிக்கப் பாக்கறியா ?” அவன் தடியை மேலே சுழற்றினான். முஹர்ரம் திருவிழாவின்போது வாத்திய இசை முழங்க அவன் சிலம்பம் விளையாடுவான். தடியை முன்னும் பின்னும், மேலும் கீழும், வலப்பக்கமும் இடப்பக்கமும் சுழற்றுவான். தடியை முன்னால் நீட்டுவான் . பிறகு பின்னால் இழுப்பான். இப்போது மைதா னத்தின் கரையில் ஏறும்போது இம்மாதிரி சிலம்பம் செய்து கொண்டே போனான் ஈசம். இந்த மைதானமும் இலவமரமும் விளை வித்த பயம் அவனை ஆட்கொண்டுவிட்டன. சிலம்பம் விளையாடி என்ன பயன் ? யாரோ அவனைப் பின்பக்கமாக இழுக்கிறார்கள், அவனுக்கு நாற்புறமும் யாரோ நடந்து வருகிறார்கள். மைதானம் முழுதும் மனிதர்களின் காலடியோசை மிதக்கிறது. உருவமற்ற ஒரு சைத்தான் அவனுடன் கூடவே - ஆனால் அவனுடன் பேசாமல் - நடக்கிறான். ஈசம் மேலே ஏறுவதற்குப் பதிலாக இருளில் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறான். ''கடவுளே, இது என்ன ?'' என்று

13:அவன் உரக்கக் கத்திவிட்டான். "தனபாபு, என்னைக் குருட்டுப் பிசாசு பிடுச்சுக்கிட்டிருக்கு !"

அவன் விளக்கையும் தடியையும் எறிந்துவிட்டு வயல் வரப்புக் களின் மேல் அலைந்து திரிய ஆரம்பித்தான். பயிர்கள் அவனுடைய கால்களைக் கீறுகின்றன. அவன் சுற்றிச் சுற்றி மறுபடி ஒரே இடத் துக்கு வந்து சேருகிறான். இப்போது அவன் கண்ணுக்கு நேர் எதிரே பிசாசின் வெளிச்சம் எரிந்து எரிந்து அணைகிறது. அந்த வெளிச்சம் ஆயிரம் கண்களாக மாறிவிட்டது. இருளில் அந்தக் கண்கள் பூதங்களாக ஜொலிக்கின்றன. ஈசமினால் இனியும் போராட முடியவில்லை. அவன் கொஞ்சங் கொஞ்சமாக நினைவிழந்து வரப்பின் மேல் விழுந்தான்.

முன்னால் கையில் லாந்தருடன் சுந்தர் அலி, பின்னால் தனபாபு. நான்கு நாட்களுக்கு முன் அவருக்குத் தன் மனைவியின் கடிதம் கிடைத்தது. அவள் எழுதியிருந்தாள் ; 'எனக்கும் உடம்பு ரொம்ப முடியவில்லை. இப்போது நீங்கள் அருகில் இருந்தால் தேவலை' என்று, தனபாபு - சந்திர நாத் - கடிதம் கிடைத்த பிறகு தாமதம் செய்ய வில்லை. பெரிய ஆபீஸ் கட்டிடத்தில் இருந்த தம் இரண்டாவது அண்ணன் பூபேந்திர நாத்திடம் போய்ச் சொன்னார்: ''நான் ஒரு தடவை ஊருக்குப் போயிட்டு வரலாமான்னு பார்க்கறேன், அண்ணா, இவ கடுதாசி எழுதியிருக்கா, உடம்பு சரியில்லையாம்!”

அண்ணா தம்பிக்குத் துணையாகச் சுந்தர் அலியை அனுப்பி யிருக்கிறார். போய்ச் சேருவதற்குள் நள்ளிரவாகிவிடும். அவருக்கு இப்போது வேலைப்பளு அதிகம். இல்லாவிட்டால் அவரும் ஊருக்கு வந்திருப்பார். ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியறிந்திருந்தால் சந்திரநாத்துக்கு இவ்வளவு கவலை இருந்திருக்காது. அவர் வேகமாக நடக்கிறார். சீதலசூரா ஆற்றின் கரையோரமாகச் சற்றுத் தூரம் நடந்து, கடைவீதியை இடப்பக்கமாகக் கடந்து, மாஸாப் - போனாப் கிராமங்களின் வழியே புல்த்தா ஏரிக்கு வந்து அவர்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். வேலைக்காரன் சந்தர் அலி இடையிடையே இருமுகிறான். சந்திர நாத் அந்த ஒலி கூட எழுப்பவில்லை. அவர்கள் பயமின்றி அரவமின்றி இந்த மைதானத்தில் இறங்கிவிட்டார்கள். மைதானத்தைக் கடந்துவிட்டால் பாவுசா ஏரி. அதன் பிறகு இரண்டு கோச தூரந்தான் வீடு. வீடு போய்ச் சேர அதிக நேரமாகாது,

14திடீரென்று சுந்தர் அலி கூவினான் : "எசமான், ரத்தம் !" லாந்தர் அவனுடைய கையிலிருந்து கீழே விழுந்துவிடும் போலிருந்தது, அவன் பின்பக்கம் ஓட முற்பட்டான். தனபாபு திடுக்கிட்டார். ''இங்கே கூடவா கொலை கொள்ளை ?" சுந்தர் அலி சொன்னான் : 'கரையோரமாகப் போகலாம் எசமான்! நான் கீழே நடந்து வரமாட்டேன்."

தனபாபு அதட்டினார் : "ரத்தமா ? எங்கே ? யார் கொலை செய்யப் பட்டாங்க, பார்ப்போம்!'' அவர் கவனமாக விளக்கைத் தூக்கிக் கீழே கிடந்த மனிதனின் முகத்துக்கு நேரே கொண்டு போனார். மிகவும் பழக்கமான முகம். அவனைச் சற்று அசைத்துப் பார்த்தார். மூச்சு இன்னும் இருக்கிறது. அவர் கூப்பிட்டார், "ஈசம், உனக்கு என்ன வந்துடுத்து ? ஈசம், ஈசம் !"

அவர் ஈசமின் உடம்பை நன்றாகக் கவனித்துப் பார்த்தார், அடி பட்ட அடையாளம் எதுவும் இல்லை அதில்,

தனபாபு ஈசமுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு அவனுடைய கண்ணிமைகளைத் தூக்கிப் பார்த்தார். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஈசம் மைதானத்தில் இருட்டில் வழி தவறிவிட்டா னென்று புரிந்தது. அவர் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார். தண்ணீரில் துண்டை நனைத்து அவனுடைய முகத்தின் மேல் பிழிந்தார். அவனுக்கு நினைவு திரும்பியதும் சொன்னார் ! "என்ன, பயந்து போயிட்டியா ? நான்தான் உன்னோட தன மாமா,''

ஈசம் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். முதலில் அவனால் நம்பவே முடியவில்லை, நம்பிக்கை இல்லாமலேயே அவன் கேட்டான் ; "' தனமாமாவா ? யார் தனமாமாவா?'' தனபாபுவைப் பார்த்து அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. "மாமா, என்னைக் குருட்டுப் பிசாசு பிடிச்சுடுத்து. இந்த மைதானம் பூரா விரட்டி விரட்டியடிக்கிறது. என் உடம்பு உடம் பாகவே இல்லை, மாமா.'' "மெதுவாக நடந்துவா. இங்கே எதுக்கு வந்தே ?" இப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அவன் ஏன் இந்த மைதானத்துக்கு வந்தான். எங்கே போக விரும்பினான், அவன் என்ன செய்தி கொண்டுவந்தான் என்பனவெல்லாம்,

"மாமா, உங்களுக்குப் புள்ளே பொறந்திருக்கு. இதைச் சொல் லத்தான் பொறப்பட்டேன் நான். வழியிலே இந்தக் குருட்டுப் பிசாசு.........."

விசாலமான மைதானத்தில் ஒளி - இருட்டு. என்ன பதில் சொல்வ தென்று புரியாமல் நின்றார் சந்திரநாத். ஆகாயத்தில் ஆயிரக்கணக்

15கான நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன. குளிர்ந்த காற்று தானியத் தின் மணத்தைச் சுமந்து கொண்டு வருகிறது, ஈசம் சொன்னான்: "வாங்க மாமா, மெதுவா நடக்கலாம்.'' போகும்போது மிகவும் தயங்கிக்கொண்டே அவன் சொன்னான்: "எனக்கு ஒரு துணி கொடுக்கணும்."

அவர்கள் நடந்தபடி மேட்டு நிலத்துக் குளத்தங்கரைக்கு வந்தார்கள். அவர்கள் அரசமரத்தைக் கடக்கும்போது ஈசம், "பெரிய மாமா இருக்கீங்களா? பெரிய மாமா?" என்று கூப்பிட்டான். பதில் எதுவும் வரவில்லை. கரையில் அடர்த்தியான புதர்கள், இந்த இரவில், இந்தக் காட்டுக்குள் உட்கார்ந்திருப்பவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. உள்ளே யாராவது இருக்கிறாரா இல்லையா என்று பகல் நேரத்தில் கூடக் கண்டுபிடிப்பது கஷ்டம். ஈசமோ சந்திரநாத்தோ மறுபடி கூப்பிடவில்லை, பாகல் வயல்களைத் தாண்டித் தானிய வயல்களுக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது வயலுக்குள் ளிருந்து 'கச் - கச்' என்று ஒலியெழுவதை உணர்ந்தார்கள். வயலில் தண்ணீர் கொஞ்சந்தான். பாதங் கூட முழுவதும் நனையாது. ஈசம் லாந்தரைத் தூக்கிப் பார்த்தான் - பெரிய பாபு!

வயலுக்குள்ளே பெரியபாபு குந்திக்கொண்டு உட்கார்ந்திருக் கிறார். ஈசம் உள்ளே நுழைந்து சொன்னான். ''எழுந்திருங்க, வீட்டுக்குப் போகலாம். அம்மா உங்களுக்காகக் காத்துக்கிட் டிருக்காங்க.''

ஆனால் பெரியவரின் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. முன் மாதிரியே உட்காந்திருந்தார் அவர். எழுந்திருக்கவே இல்லை. எதையோ அழுத்திக்கொண்டு அதன் மேல் உட்கார்ந்திருந்தார். அவருடைய கால்களுக்குக் கீழே இருட்டு, பயிர்கள், 'கச் - கச்' என்ற ஒலி. பயிர்கள் அசைகின்றன. ஈசம் விளக்கைக் கீழே கொண்டுவந்து பார்த்தான். ஒரு பெரிய ஆமை! அவர் ஓர் ஆமையை மல்லாத்திப் போட்டு அதன் மேல் உட்கார்ந்திருக்கிறார். ஆமை தன் கால்களை நீட்டி, முகத்தைத் தூக்கி அவரைக் கடிக்க முயற்சி செய்கிறது. அதனால் அவருடைய கால்களைக் கூடத் தொட முடியவில்லை. பயிர்கள் மட்டும் அசைகின்றன. ஈசம் ஏதோ சொல்ல முற்பட்டான். அப்போது ஆமையின் மார்பின் மேல் உட்கார்ந்திருந்த பெரிய பாபு கத்தினார். "காத்சோரத் சாலா!''

ஈசம் சொன்னான்: ''நீங்க என்ன பண்றீங்க, பெரிய மாமா? இவ்வளவு பெரிய ஆமையைப் பிடிச்சு அதுமேலே உட்கார்ந்திருக் கீங்களே ?" பிறகு அவன் சொன்னான் . " நீங்க வீட்டுக்கு வாங்க. தனமாமா இதோ இருக்கார். அவருக்குப் புள்ளே பொறந்திருக்கு."

16தன பாபு சொன்னார்: "எழுந்து வாங்க பெரியண்ணே ! ஆமையை ஈசம் எடுத்துக்கிட்டு வருவான்.'' பெரியவர் நல்ல பிள்ளை போல் தனபாபுவைத் தொடர்ந்தார். அவர் எப்போது ஓடுவாரோ, எப்போது கை தட்டுவாரோ என்பதை உத்தேசித்துத் தனபாபு அவரை முன்னால் போகவிட்டுத் தாம் அவரை ஜாக்கிரதையாகத் தொடர்ந்தார். பெரியவர் இருட்டில் ஓட முற்பட்டபோது தனபாபு சொன்னார்: "எங்கிட்டே தடி இருக்கு, பெரியண்ணா. ஓடினால் கால் மேலே போட்டுடுவேன். காலை உடைச்சுடுவேன்."

தம்பியின் வாயிலிருந்து இம்மாதிரி வார்த்தைகள் வருவதைக் கேட்டுப் பெரியவர் திரும்பி நின்றார். 'என்னை நீ மிரட்டரயா சந்திர நாத் ?' என்று கேட்பது போல் பரிதாபமாகத் தம்பியைப் பார்த்துக்கொண்டே நின்றார். அவர் எப்போதுமே பேசுவதில்லை. அதுபோல் இப்போதும் மெளனமாகக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றார். அவருடைய கண்களைப் பார்த்தால் தோன்றும், நாற்பது வயதைக் கடந்த இந்த மனிதர் இப்போது ஆகாயத்தின் கோடிவரை கைகளை நீட்டிக் கை தட்டுவார் என்று.

வானமெங்கும் மங்கிய நிலவொளி. இப்போது உண்மையிலேயே பெரியவர் கைகள் இரண்டையும் உயரத் தூக்கிக் கைகொட்ட ஆரம்பித்துவிட்டார். அவர் வளர்த்து வந்த ஆயிரக்கணக்கான நீலகண்ட பட்சிகள் ஆகாயத்தின் ஏதோ ஒரு மூலையில் காணாமற் போய்விட்டது போல் ; கைகொட்டுவது அவற்றைத் திருப்பி யழைப்பதற்காக. தனபாபு நின்றவாறே புதிதாக எல்லாவற்றையும் கவனித்தார். பெரிய அண்ணாவுக்குப் பெரிய பெரிய கண்கள், நீள மான மூக்கு. அகன்ற நெற்றிக்கருகில் ஒரு பெரிய மச்சம். எல்லா வற்றையும் விட முக்கியமாகச் சூரியனைப் போன்ற தேஜஸ் வாய்ந்த உடல் நிறம். ஆறரை அடி உயரம், நீண்டு நிமிர்ந்த ஆஜானுபாகு வான தேகம். அவரைப் பார்த்தால் மத்திய யுகத்து வீரன் ஒருவன். இரவின் இருளில் பாவங்களைத் தேடித் தண்டிக்க அலைவது போல் தோன்றும். அவருடைய அகன்ற ஆழ்ந்த விழிகள் நாள் முழுவதும் பட்டினி கிடந்ததால் குழிந்து கிடப்பதைக் கவனித்தார் சந்திரநாத். அவரால் தம் கண்ணீரை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அவரைப் பார்த்துச் சொன்னார் : ''அண்ணா, நீங்க எவ்வளவு கஷ்டப்படறீங்க ? பொறத்தியாருக்கும் எவ்வளவு கஷ்டம் கொடுக்கறீங்க ?'' மணீந்திரநாத் - பெரிய அண்ணா , "காத் சோரத்சாலா'' என்று மட்டும் சொன்னார். பிறகு தொடர்ந்து வானத்தைப் பார்த்துக் கை கொட்டினார். இந்தச் சப்தம் அப்பெரிய மைதானத்தில் ஆச்சரிய மான ஒலியை எழுப்பியது. அவ்லொலி கிராமங்களையும் திறந்த

17வெளிகளையும் தாண்டி ஸோனாலிபாலி ஆற்றின் மணற்பரப்பையும் கடந்து, தர்மூஜ் வயல்களின் மேல் தொங்கிக்கொண்டு இருப்ப தாகத் தோன்றியது. வாழ்க்கையில் தாம் இழந்த எல்லா நீலகண்ட பட்சிகளும் திரும்பிவந்து இந்த நிர்ஜனமான இரவில் சேர்ந்து விடவேண்டும். இதுதான் அவருடைய பெரிய ஆசை. ஆனால் அவை திரும்பி வரவில்லை. இது அவருக்கு மிகவும் வேதனையைத் தந்தது.

இப்போது சந்திர நாத்தைத் தொடர்ந்து வீட்டை நோக்கிப் போகும்போது அவர் சொல்ல விரும்பியிருக்கலாம், 'சந்திரா, உனக்குப் புள்ளே பொறந்திருக்கு. எனக்கு ரொம்பச் சந்தோஷம்' என்று. ஆனால் அவர் வாயிலிருந்து வெளிவந்தது காத்சோரத்சாலா தான். அவர் தம் உணர்ச்சிகளை வெளிக்காட்ட இயலாமைக் குறித்து வேதனைப்பட்டார். வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள்! ஆனால் ஒன்றுமே அவருடைய பைத்தியக்கார எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எல்லாமே அவருடைய கால்களை முறித்துவிட விரும்புகின்றன. மணீந்திரநாத் வேறு வார்த்தை பேசாமல் தம் தம்பியைப் பின் தொடர்ந்து நடந்தார்.

மத்தளம் மிருதங்கங்களின் ஒலி கேட்கிறது. பைங்குழல் ஒலிக் கிறது. யாரோ டமாரம் அடிக்கிறார்கள். மக்கள் கூட்டமொன்று மத்தளங்களை ஒலித்துக்கொண்டு ஆற்றங்கரை வழியே வருகிறது. சசீந்திரநாத் குளத்தங்கரையில் நின்றுகொண்டு இந்த ஒலியைக் கேட்டான், பேலு நாராயண்கஞ்சிலிருந்து திரும்பி வந்துகொண் டிருக்கிறான். அவனுடைய கழுத்தில் கருப்பு ரிப்பன் தொங்குகிறது. அவன் சடுகுடு விளையாடிவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறான். அவனுக்குக் கிடைத்த கோப்பைகளும் மெடல்களும் ஒரு கறுப்புத் துணியில் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்தத் தடவையும் பேலு கோபால்தியைச் சேர்ந்த பாபுக் களுக்கு எதிராக விளையாடிவிட்டு வந்திருக்கிறான். அவன் முகத்தில் குறுந்தாடி வளர்ந்திருப்பதாலும், அவன் எப்போதும் தோளில் ஒரு துண்டு அணிந்திருப்பதாலும் பனியனுக்குள் அவனுடைய மார்பு ஆமைபோல் தோற்றம் அளிக்கிறது. அது எவ்வளவு அகலம் என்று சொல்ல முடியாது. 18ஆனால் கூட்டம் அருகில் வந்ததும் தெரிந்தது. அது போலுவின் குழு அல்ல, வேறொரு குழு. அப்படியானால் இந்தத் தடவை பேலு தோற்றுப் போய்விட்டானா? அவனுடைய குழு ஏன் இன்னும் திரும்பவில்லை ? பேலுவின் இளமை கழிந்துவிட்டது போலும். அவன் இளைஞனாக இருந்தபோது சடுகுடு விளையாட்டில் பெரிய விளையாட்டுக்காரர்களாக இருந்தவர்கள் இரண்டு பேர்தாம் : போலுவும் சாபுவும். அப்போது இந்தப் பிராந்தியத்தில் பிஸ்வாஸ் பாடா, நயாபாடா, ஏன், பத்து இருபது கோச தூரத்தில், அல்லது கோபால்தி மைதானத்தில், அல்லது ஆற்றைக் கடந்து மேக்னா நதியின் மணல் வெளியில் அவர்களுடைய விளையாட்டைப் பார்க்கச் சாரி சாரியாக மக்கள் கூடுவார்கள்.

பேலு, 'சடுகுடு சடுகுடு!' என்று சொல்லிக்கொண்டே நடுக் கோட்டைத் தாண்டிப் புலி போல் பாயும்போது, கடைசி ஆட்டத்தில் தம்பட்டங்களும், பாக்பைப்புகளும் ஒலிக்கும்போது போலுவின் முகத்தைப் பார்த்தால் அவன் மிகப் பெரிய விளையாட்டு விரனென்று தோன்றும், அப்போது அவன் கழுத்தில் எவ்வளவு மெடல்கள் தொங்கும்!

அவன் தன் கட்சிக்காக எவ்வளவு கோப்பைகள் வாங்கித் தந்திருக்கிறான் ! இரவு பகல் பார்க்காமல் பேலு இருபது இருபத் தைந்து கோசதூரங்கூட, நடந்து போய் விளையாடியிருக்கிறான். ஒரு தடவை பட்டணத்தில் விளையாடி ஜயித்து திரும்பி வரும் போது பல்லக்கில் வந்திருக்கிறான். எங்கும், "பேலுவுக்கு ஜே, பேலுவுக்கு ஜே! கோஷந்தான். பல்லக்கின் இருபுறமும் இரண்டு பேர்களின் தலைமேல் இரண்டு பெரிய கோப்பைகள். பெட்ரோ மாக்ஸ் விளக்கும் தம்பட்டை ஒலியுமாக அவர்கள் பட்டணத்தி லிருந்து கிராமத்துக்கு ஊர்வலமாக வந்தார்கள். ஊர்வலம் லாங்கல்பந்து மைதானத்தையும் நதியையும் கடந்ததும் கிராமத்து ஆண்களும் பெண்களும் ஊர்வலத்தைப் பார்க்க வந்து நின்றார்கள். அதற்கு முடிவே இல்லை. அவர்கள் பேலுவைப் பார்த்தார்கள், இரண்டு பெரிய கோப்பைகளையும் பார்த்தார்கள். கறுப்பு ரிப்பன் அணிந்த சடுகுடு ஆட்டக்காரர்களைப் பார்த்தார்கள். டாக்காவில் ஜூலன் ஊர்வலத்தைப் பார்ப்பது போல,

அப்படிப்பட்ட பேலு இப்போது தோற்றுப் போய்விட்டான் போலும். மாற்றுக் கட்சி ஆட்கள் 'கோபால் தி பாபுகளுக்கு ஜே!' என்று கத்திக்கொண்டு போகிறார்கள். இந்தச் சமயத்தில் பேலுவின் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று தோன்றியது சசீந்திரநாத்துக்கு. தோற்றுப்போன பேலு முன்னதாகவே வீடு போய்ச் சேர்ந்திருக்

19கலாம். அவன் வேறொன்றும் செய்ய முடியாமல் தன் பெண்டாட்டி ஆன்னுவை அடித்துக்கொண் டிருப்பான். சந்திர நாத் இப்போது தம் பிள்ளையைப் பார்த்துக்கொண் டிருக் கிறார். பிரசவ அறையில் சசிபாலா சந்திர நாத்தைச் சற்றுக் குனிந்து பார்க்கச் சொன்னாள். வெற்றிலை போட்டுக்கொண் டிருந்ததால் அவருடைய மனைவியின் உதடுகள் சிவந்திருந்தன. நெற்றி , சூனியமாக இருந்தது. இந்தச் சில நாட்கள் குங்குமம் அணிந்து கொள்ளக் கூடாது. அறைக்குள் ஈரவிரகு எரிகிறது. சில கிழிந்த, கந்தைகள். ஒரு மூலையில் நெருப்பு கணகணவென்று எரிகிறது. அவள் குழந்தையை அவருக்கு முன்னால் தூக்கிக் காட்டினாள். சந்திர நாத் குழந்தையைப் பார்க்காமல் அவளுடைய முகத்தைப் பார்த்தார். அந்த முகம் எவ்வளவு வெளிறியிருக்கிறது! ஆம்பல் இலையின் நிறம் போல இருந்தது முகத்தின் நிறம். மறுபடி தாயாகி விட்ட பெருமை அவளுடைய கண்களில் ஒளிவிட்டது. அவளும் டைய கைகளில் அணிந்திருந்த இரும்பு வளையல், சிவப்புக் கரைப் புடைவை, இரண்டு கைகளாலும் குழந்தையைத் தூக்கிக் காட்டும் பாணி. இவை எல்லாம் சேர்த்து கிசுகிசு வென்று கேட்கின்றன , ''குழந்தை எப்படி இருக்கு ? யார் மாதிரி இருக்கு ? உங்க மாதிரியா, என் மாதிரியா?' மணீந்திரநாத் ஓர் அரச மரத்தடியில் நின்றார். இந்த வழியாகத் தான் சடுகுடு விளையாட்டுக் கோஷ்டி சென்றிருந்தது. கோப்பைகளை யும் மெடல்களையும் மக்களின் உற்சாகத்தையும் பார்ப்பதற்காக அவர் வெளியே வந்திருந்தார். இப்போது விளையாட்டுக் கோஷ்டி நயாபாடா மைதானத்துக்குள் இறங்கிப் போய்விட்டது. அவர் அவர்களுடன் அவ்வளவு தூரம் போகவில்லை. இந்த அரசமரத் தடிக்கு வந்ததுமே அவர் தூரத்தில் ஒரு கோட்டையைக் காண்கிறார்,

கோட்டையில் சில குதிரை வீரர்கள் - இளைஞர்கள்-அணிவகுப்புப் பழகுகிறார்கள். கோட்டை வாசல் திறந்ததும் ஆயிரக்கணக்கான வீரர்கள் வெளியே மைதானத்துக்கு வந்து, தங்கள் திறமையைக் காட்டுவதுபோல் மரத்தின் மேல் தலைக்கு நேரே ஆயிரக்கணக்கான கங்கா மைனாப் பறவைகள் பறந்து பறந்து வேடிக்கை காட்டு கின்றன. இன்னும் ஆற்றிலிருந்து திரும்பி வராத பறவைகள், ஆற்று மணலிலும் ஏரி நீரிலும் புழு பூச்சிகளைத் தேடித் தேடித் தின்னும் பறவைகள் எல்லாம் இப்போது திரும்பி வந்துவிடும். அவை திரும்பி வந்ததும் அவர் இந்த மரத்தடியில் தம் மனத்துக்குப் பிடித்தமான ஓர் உலகத்தைச் சிருஷ்டி செய்துகொண்டு உட்கார்ந்திருப்பார்.''

அரச மரத்தடியில் சில மட்கிலாச் செடிகள், சில பிரம்புப் புதர்கள் காட்டு நாணற் செடிகள் எல்லாம் இருந்தன. சில குருவிகள் இடை

20-விடாமல் புதர்களின் மேல் ஆடிப் பறந்து திரிகின்றன. மணீந்திரநாத் மரத்தைப் பிரதட்சிணம் செய்வது போல் சுற்றிச் சுற்றி வந்தார். எவ்வளவு பெரிய மரம்! கடவுளைப் போல அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தது அது. கடவுளையே பிரதட்சிணம் செய்வது போன்ற பாவம் அவருடைய கண்களில் அவர் தலையைத் தூக்கி மரத்தைப் பார்க்கிறார். ஏதோ வாயால் முணுமுணுக்கிறார். அப்போது அந்தப் பக்கம் போய்க்கொண் டிருந்த முஸ்லிம் கிராமத்து மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். அவர்கள் சொல்லிக்கொண்டார்கள், "எப்பேர்ப்பட்ட மனிஷர் எப்படி ஆயிட்டார் !" என்று. அவரிடம் சொன்னார்கள். "வீட்டுக்கு வாங்க, கொண்டுபோய் விட்டுட்டுப் போறோம்.'' மணீந்திரநாத் அவர்களுடைய பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார். அவர்கள் போன பிறகு ஜாக்கிரதையாகப் புதருக்குள் நுழைந்து உட்கார்ந்து கொண்டார். சப்தம் செய்யாமல் அங்கே உட்கார்ந்துகொண்டு ஒரு மட்கிலாக் குச்சியை ஒடித்துப் பல் துலக்கத் தொடங்கினார். பல நாட்களாகப் பல் துலக்கவே மறந்து விட்டவர் போல் அவர் தம் வாய்நாற்றத்தைப் போக்கிக் கொள்வதற்காகப் பற்களை அழுத்தி அழுத்தித் தேய்த்துக் கொள்ள ஆரம்பித்தார். கிராமத்துக்கு வந்துகொண் டிருந்த ஆபேத் அலி அவர் புதருக்குள் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவன் சொன்னான்: ''வீட்டுக்குப் போங்க, எசமான்! மானத்தோட நிலைமை நல்லாயில்லே." மணீந்திரநாத் அவனுடைய பேச்சைக் கேட்டும் சும்மா சிரித்தார். முஸ்லிம் பெண்கள் அல்லிக் கிழங்கு சேகரித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண் டிருந்தார்கள், புதருக்குள் "கச் கச்' என்ற ஒலியைக் கேட்டு அவர்கள் உள்ளே எட்டிப் பார்த்தார்கள். பைத்தியக்கார பாபு குழந்தையைப் போல் தவழ்ந்து கொண்டு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். அவர்கள் சொன்னார்கள்: "எசமான், வீட்டுக்குப் போங்க. அம்மா கவலைப் பட்டுக்கிட்டிருப்பாங்க. மானத்திலே ரொம்ப இறுக்கமாயிருக்கு."

அவரைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு போகலாமா என்று தோன்றியது ஆபேத் அலிக்கு. ஆனால் அவருடைய தாய் சசிபாலா அம்மாவின் நினைவு வந்து அவனைத் தடுத்தது. அவன் அப்படி அவரை அழைத்து வருவது அம்மாவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். "நீ ஏன் தொட்டு இழுத்துக்கொண்டு வந்தே?!' என்று அவள் கேட்கலாம். மறுபடியும் அவருக்கு ஸ்நானம் செய்துவைக்க வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்த அவன்

21அங்கே அப்புறம் நிற்கவில்லை. அவன் சந்தாக் குடும்பத்தினரின் படகில் வேலை செய்கிறான். ஆற்றில் படகை நிறுத்தி வைத்துவிட்டு, பல நாட்களுக்குப் பிறகு களைப்புடன் வீடு திரும்புகிறான். ஆயினும் வானத்தின் நிலையைப் பார்த்து அவனுக்குப் பயம் தோன்றியது. புயலும் மழையும் ஆரம்பித்துவிட்டால் மனிதர் நனைந்து செத்துப் போய்விடுவார். அவன் ஆற்று மணலில் இறங்கி அங்கிருந்த ஈசமின் குடிசையை நோக்கி நடந்தான். ஈசமுக்குச் செய்தி சொல்லிவிட்டு வீடு திரும்ப நினைத்தான் அவன்.

சொர் சொர் என்று மழை பெய்யத் தொடங்கியது. குளிர்ந்த காற்றும் வீசியது. வானம் இருக்கும் நிலையைப் பார்த்துவிட்டு மக்கள் வயல்களிலிருந்து கிராமத்தை நோக்கி வர ஆரம்பித் தார்கள். சம்சாரிகள் மாடு கன்றுகளை இழுத்துக்கொண்டு வீடு திரும்பினார்கள். புயல் மழை ஏற்படலாம்; ஆலங்கட்டி மழை பெய்யலாம். ஆகாயம் கொஞ்சங் கொஞ்சமாகக் கறுத்துவிட்டது. ஓரிரண்டு வெள்ளைக் கொக்குகள் இங்குமங்கும் பறந்து எங்கோ சூனியத்தில் மறையத் தொடங்கின. எங்கும் ஒருவித இறுக்கம். இப்போது மரஞ்செடிகள் எதுவும் அசையவில்லை. முஸ்லிம் கிராமத் தில் கோழிகள் கூவுகின்றன. ஆகாயம் கறுக்கக் கறுக்க, பூமியின் தோற்றம் பயங்கரமாக ஆக ஆக மணீந்திரநாத்துக்கு உற்சாகம் அதிகரித்தது. என்ன உற்சாகம்! என்ன உற்சாகம்! அவர் சுற்றிச் சுற்றி ஆடத் தொடங்கிவிட்டார். வெறிபிடித்த ஆகாயத்தைப் பார்த்துவிட்டு ஆனந்தம் மேலிட்டவராக அவர் கை கொட்டினார். நடனமாடிக்கொண்டே கை கொட்டினார், உலகமே தம்முடன் சேர்ந்து கைகொட்டுகிறாற் போன்ற உணர்வுடன் சொட்டுச் சொட்டென்று மழைத்துளிகள் விழுகின்றன. செடிகளின் இலைகள் நனைகின்றன. வெயிலாயிருந்தால் அவருடைய முளை விறைத்துப் போய்விடும். இப்போது இந்த மழையும், குளிர்ந்த ஆகாயமும். அவரை ஓரளவு தன்னிலைக்குக் கொண்டுவந்தன. ஆனால் எந்த நேரத்திலும் சசீந்திரநாத் அல்லது சந்திரநாத் வந்துவிடலாம், அவர்கள் அவரைப் பார்த்து வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள். கடவுளைப் போன்ற இந்த மரத்திலிருந்து அவர்கள் தம்மைப் பிரித்து இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்ற நினைப்பு வந்ததும் அவர் தம்மைத் துணியால் மரத்துடன் கட்டிக்கொண்டு அதில் விதவிதமாக முடிச்சுக்கள் போட்டுக் கொண்டார். இப்போது இந்தப் புயலில் யாரும் அவரை இழுத்துக் கொண்டு போக முடியாது. அவர் தம்மை மரத்துடன் துணியால் இறுகக் கட்டிக்கொண்டுவிட்டார்.

22ஆபேத் அலி தோடார்பாகைக் கடந்து பாதை வழியே நடந் தான், வீட்டு வேலைகளையும் தொழுகையையும் மறந்து. அவன் ஈசமைப் பார்க்கப் போய்க்கொண் டிருக்கிறான். ஈசமின் குடிசையில் விளக்கு எரியக் காணோம். அவன் மேட்டில் நின்றுகொண்டு கூப்பிட்டான் : "ஈசம் சித்தப்பா, இருக்கீங்களா?'' மழையில் அவனுடைய உடம்பு நனைந்துவிட்டது. காற்று வீசுவதால் குளிரா யிருந்தது. ஆகையால் அவனால் வெகுநேரம் காத்திருக்க இயல வில்லை. அவன் தன் ஊருக்குத் திரும்பி, வீட்டுக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு, "ஜப்பரோட அம்மா! நான் வந்துட்டேன். கதவைத் திற!" என்றான்.

ஒரு பதிலும் வராமலிருக்கவே அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் உரக்கக் கத்தினான் : " நீங்க செத்துப் போயிட்டீங்களா, என்ன ?" -

மழை காரணமாகவோ அல்லது வேறெந்தக் காரணத்தாலோ ஜப்பர் கதவைத் திறக்கத் தாமதம் செய்தான். ஆபேத் அலி மறுபடியும் மறுபடியும் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தான். ஐப்பர் கதவைத் திறந்ததும் அவன் வெறி பிடித்தவன் போல் கத்தினான் : "உன்னோட அம்மா எங்கே ?" ''அம்மா சாமுவோட வீட்டுக்குப் போயிருக்கா.'' ''ஏன் ?'' என்று கேட்டுக்கொண்டே ஆபேத் அலி தன் லுங்கியால் உடம்பையும் முகத்தையும் துடைத்துக்கொண்டான். "சாமு வீட்டிலே ஏதோ விசேஷமாம்.” ஆபேத் அலி மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பி யிருக்கிறான். ஆகையால் கிராமத்தில் எங்கே என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியக் காரணமில்லை. அவன் சந்தாக் குடும்பத் தினரின் படகை ஓட்டிக்கொண்டு நாராயண்கஞ்ச் போயிருந்தான், சாமான்கள் வாங்கி வர். சந்தாக் குடும்பத்தினர் தந்தியில் ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார்கள்.

ஆபேத் அலியின் மனத்தில் அமைதி இல்லை. பெரிய பாபு இன்னும் புதருக்குள் உட்கார்ந்திருக்கிறாரோ என்று கவலையாக இருந்தது அவனுக்கு. வீட்டில் அவருக்காக எல்லோரும் கலவரப் பட்டுக்கொண்டிருப்பார்கள். யாராவது அவரைத் தேடப் புறப்பட்டிருக்கலாம்.

அவன் தன் பிள்ளையிடம் சொன்னான் : ''ஒரு காரியம் செய் யறியா ?'

ஜப்பர் எரிச்சலுடன் கேட்டான்: "என்ன செய்யணும்?' ஏனென்றால் தகப்பன் அவனை வயலிலிருந்து வைக்கோல் எடுத்துக்

23கொண்டுவரச் சொல்லலாம், வைக்கோல் ஈரமாகிவிட்டால் மாடு தின்னாது என்று..

முதலில் தன் மனைவியைக் கூப்பிடச் சொல்லலாமென்று நினைத் தான் ஆபேத் அலி. அவன் வேலை செய்துவிட்டு வந்திருக்கிறான். அவனோட பெண்டாட்டி அவனை உட்கார்த்தி வச்சு அவனுக்குச் சாப்பாடு போடல்லே.. ஆதரவா நாலு வார்த்தை பேசல்லே. யார் வீட்டிலேயோ ஆனந்தமாக் கூத்தடிச்சிக்கிட்டிருக்கா. அவன் எரிச்சலுடன் சொன்னான்: ''உன்னோட அம்மாவைக் கூப்பிடு !" "அம்மா இப்போ வருவாளா ?' "ஏன் வரமாட்டா? மூணு நாளாத் துடுப்பு வலிச்சுட்டு வந்திருக் கேன். என்னைப் பத்தி ஒங்களுக்கு கொஞ்சங்கூடக் கவலை இல்லியா?" ''நீங்க இன்னும் ரொம்ப நாள் கஷ்டப்பட வேண்டாம். பாபா ஜான்!''

பையனின் பேச்சில் எதையோ புரிந்து கொண்டவன் போல் ஆபேத் அலி சொன்னான், ''சரி. சரி. வாயை மூடு.''

ஜப்பர் பேசாமல் புல்லால் ஆன கிழிந்த ஆசனத்தின் ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். பிறகு திடீரென்று கேட்டான் : "ஹக்கா பிடிக்கறீங்களா, பாபாஜான்?"

பையனுக்கும் கொஞ்சம் ஹூக்கா பிடிக்க ஆசையாக இருக்கிற தென்று ஆபேத் அலிக்குப் புரிந்தது. தன் மனத்தை நிதானத்துக்குக் கொண்டுவருவதற்காக அவன் சொன்னான்: "கொண்டு வா!"

ஜப்பர் ஹக்காவைத் தயார் செய்து தகப்பனுக்குக் கொடுத் தான். பிறகு தானும் அதில் இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுச் சொன்னான்: " நீங்க தொழுகை செய்யுங்க. நான் சாப்பாடு போடறேன்." ''தொழுகை பண்ணப் போறதில்லே." ஆபேத் அலி எழுந்தான். ஒரு பாத்திரத்தில் மழைநீரை ஏந்தி அதைக் கொண்டு கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டான். வெளியே மழை பலமாகப் பெய்கிறது. நடுநடுவே மின்னல் ஆகாயத்தைக் கிழிக்கிறது, யாரோ வானத்தின் மேல் ஒரு பொற் கொடியைப் படரவிட்டிருப்பது போல. பாளம் பாளமாகப் பிளவு பட்டிருந்த வானத்தில் இடி முழங்கியது. ஆபேத் அலியின் வீடு கீழே விழுந்துவிடும் போல இருந்தது. வைக்கோல் கூரை நைந்து போய்விட்டது. அதன் வழியே தண்ணீர் ஓடுகிறது. சணல் தட்டையாலான வேலியும் பாழாகிவிட்டது. மூங்கில் பரணில் கிழிந்த ஜமக்காளமும் தலையணையும். கீழே கிழிந்த பாய், ஆபேத் அலி பாயின் மேல் சாப்பிட உட்கார்ந்தான். வெளியே மழையுடன்

24புயல் அடிக்கிறது. கல்யாண முருங்கை மரத்தின் கிளையொன்று 'புயலில் முறிந்து விழுந்தது.

ஆபேத் அலி நயமாக, செளஜன்யமான குரலில் பிள்ளையைக் கூப்பிட்டான்: "ஜப்பர் ! ஜப்பர் !" "என்ன சொல்றீங்க ?" ''ஒரு காரியம் செய்வியா ?" "என்ன வேலை?" *'ஒரு தடவை டாகுர் வீட்டுக்குப் போய், பெரிய பாபு இடுகாட்டு மைதானத்துலே ஆலமரத்தடியிலே உட்கார்ந்திருக்கார்னு சொல் லிட்டு வர்றீயா? பாவம், பெரிய பாபுவுக்கு ரொம்பக் கஷ்டம். போ. போய்ச் சொல்லிவிட்டு வா.'' ''என்னாலே முடியாது. பாபா ஜான் ! வேறே ஏதாவது வேலை இருந்தாச் சொல்லுங்க."

ஆபேத் அலி சாப்பாட்டை விட்டு எழுந்துவிட்டான். அவன் ஜப்பரைக் கொன்றுவிட நினைப்பவன் போல் அவன் முன்னே வந்து காலைத் தூக்கினான். பிறகு ஏதோ நினைத்துக் காலைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு சொன்னான். "அயோக்கிய ராஸ்கல், நீயா என்னோட தகப்பன் ? நீ சொல்றபடியா நான் கேட்கணும் ?''

ஐப்பர் தலை குனிந்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தான். ''எனக்கு வேறே வேலை இருந்தாச் சொல்லுங்க."

அவன் தனக்குள்ளே ஏதோ நிச்சயம் செய்துகொண் டிருந்தான். நாட்கள் மிகவும் கஷ்டத்துடன்தான் கழிகின்றன. அவனுடைய தகப்பன் எவ்வளவு நாள் கழித்துத் திரும்பி வந்திருக்கிறான். வந்தவன் அன்பா நாலு வார்த்தை பேசாமல், புனுகு பூனை மாதிரி உறுமுகிறான்.

அவன் இதுவரை வெளியிட விரும்பாமல் இருந்த ஒரு விஷயத்தை - இப்போது தந்தையின் முரட்டுத்தனத்தையும் கோபத்தையும் பார்த்து - தெரிவித்துவிடலாமா என்று நினைத்தான். அப்பன் மறுபடி ஏதாவது பேசினால் சொல்லியேவிடுவான் அவன். " என்ன போகமாட்டியா ?'' '' மாட்டேன். வேறே வேலை இருந்தாச் சொல்லுங்க." ''அப்போ நான் சொல்றதைக் கேட்கமாட்டே?" "மாட்டேன்'' "ஏன் ? என்ன ஆயிடுத்து?" ஆபேத் அலியின் குரல் சற்றுத் தாழ்ந்தது. " நான் லீகிலே பேர் கொடுத்திருக்கேன்." "என்ன செஞ்சே? என்ன செஞ்சே ? லீகிலே பேர் கொடுத்து உங்க அப்பனுக்குச் சொர்க்கவாசல் திறந்து வச்சுட்டியோ?"

25"இதுலே என்ன வந்தது? இந்து ஜனங்க நம்மைப் பாத்தான் காறி உமிழறாங்க, நாமும் அவங்க மேலே காறித் துப்புவோம்." ''சாமு வீட்டிலே இதுக்காகத்தான் கூட்டமா?'' ஜப்பர் மெளனமாயிருந்தான். தகப்பன் பிள்ளை இருவருமே பேசாமல் இருந்தார்கள். ஆபேத்அலி மறுபடி சாப்பிட உட்கார்ந்தான். தலையைக் குனிந்து கொண்டு - கண்களில் நீர் ததும்பியது. சாப்பாடு உறைத்ததாலா, பிள்ளையின் பேச்சாலா என்று தெரியவில்லை. இந்தத் துன்பத்தைச் சமாளிப் பதற்காக அவன் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தான். பிறகு மிகவும் மெதுவாக - வெகுதூரத்திலிருந்து பேசுவது போலச் சொன்னான் : ''பெரிய பாபு தண்ணியிலே நனைஞ்சுக்கிட்டிருக்கார், நீ போகலேன்னா நா போறேன்."

ஆபேத் அலி தண்ணீர்ப் பாத்திரத்தின் மூக்கைத் தன் வாயில் வைத்துக்கொண்டு வார்த்தை போல் தண்ணீரைக் 'களுக் களுக்' என்று விழுங்கினான். பிறகு மிச்ச நீரை வாயில் வைத்து வெகு நேரம் கொப்புளித்துத் துப்பினான். பல்லிடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருந்த உணவுத் துணுக்குகளை நாக்கால் துழாவி எடுத்து அவற்றை ருசித்தவாறே ஜப்பரைக் குரூரமாகப் பார்த்தான். பார்த்துக்கொண்டே சொன்னான்: "நீ என் சாப்பாட்டைச் சாப் பிடக் கூடாது. நாளையிலேருந்து உனக்குச் சாப்பாடு இல்லே."

ஆத்திரம் ஆத்திரமாக இருந்தது ஆபேத் அலிக்கு. தன் பிள்ளை இவ்வாறு கெளரவம் பாராட்டுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. மூன்று நாளைய உழைப்பின் சிரமமும் வீட்டில் மனைவி இல்லா திருப்பதும் அவனுக்கு வெறியை உண்டாக்கின. வீட்டு மூலையி லிருந்த ஈட்டியை எடுத்துப் பிள்ளையின் வயிற்றைக் கிழிக்கத் தோன்றியது அவனுக்கு.

ஏதோ நினைத்து அவன் சொன்னான் : ''அல்லா, தேசத்திலே இதென்ன ஆரம்பிச்சிருக்கு ?"

அவனுடைய பாதி நரைத்த தாடி வழியே நீர்த்துளிகள் வழிந்து கீழே விழுந்தன. சிம்னி விளக்கின் ஒளியில் அவனுடைய முகத்தில் உணர்ச்சி கொந்தளித்தது. டாக்காவில் கலகம் ஏற்பட்டு விட்டது. இந்த விஷயம் ஏனோ அடிக்கடி நினைவுக்கு வந்தது அவனுக்கு. இந்துக்கள் - முஸ்லிம்கள் இரு ஜாதியினருமே செத்துக் கொண்டிருக்கிறார்கள். சேப்பங்கிழங்கு சீவப்படுவது போல், முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் அவன் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறான். ஆனால், பெரிய பாபு, தன பாபு, இன்னும் பக்கத்துக் கிராமத்திலுள்ள பல இந்துக்கள் ஆகியவர்களுடைய தாராள மனப்

26பான்மை, அவர்களுடன் தலைமுறை தலைமுறையாக இருந்துவரும் இதய பூர்வமான உறவு ஆகியவை அவனுடைய வருத்தத்தையும், ஆத்திரத்தையும் போக்கிவிடுகின்றன. ஆபேத் அலி வீட்டுக்குள்ளிருந்தே கையை வெளியே நீட்டிப் பார்த்தான். பிறகு ஒரு மூங்கில் தொப்பியைத் தலையில் போட்டுக் கொண்டு இருட்டுப் பாதையில் இறங்கினான்.

சசீந்திர நாத் போய்க் கொண்டிருந்தார். முன்னால் ஈசம் நடந்து கொண்டிருந்தான். பேசிக்கொண்டே போனான் : ''சம்சாரத்தில் எத்தனை வகை துக்கங்கள் ? பெரிய பாபு சாயங்காலத்திலிருந்து காணாமல் போய்விட்டார். எங்கே போயிட்டாரோ ? இந்த மழையில் லேயும் புயல்லேயும் எங்கே ஆம்பிட்டுக்கிட்டாரோ? நம்ம விரோதிக்குக் கூட இந்த மாதிரி கஷ்டம் வர வேண்டாம், செத்துப் போயிட்டாக்கூட ஏதோ போயிட்டார்'னு நினைச்சுக்கலாம், எவ்வளவு நாள் தான் இந்தப் பரிதாபத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கணுமோ ?"

ச்சீ மழையிலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்தார். ஈசமுந் தான். அவர்கள் வேகமாக நடந்தார்கள். பல வயல்களைக் கடந்து முஸ்லிம் பாடாவுக்குள் நுழைந்தபோது இஸ்மதாலியின் பெரிய பையன் மன்சூர் வராந்தாவில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்கள். அவனுக்கு முன்னால் குர்ஆன். மேலே கயிற்றில் லாந்தர் தொங்கு கிறது. புயலும் மழையும் குறைந்திருக்கின்றன. சாயங்காலமானதும் அவன் வழக்கம் போல் படிக்க உட்கார்ந்தபோது மழை வெள்ளத்தில் கிராமமே மிதந்து கொண் டிருப்பதைக் கண்டான். அவன் மாடுகளைக் கொட்டத்தில் அடைத்து. வாத்துக்களைக் கூண்டுக்குள் விரட்டிவிட்டு, ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு உட்கார்ந்திருந்தான். புயலும் மழையும் குறைந்ததும் ஜன்னல்களைத் திறந்துவைத்தான். ஆகாயம் முன்போல் காஜனை செய்யவில்லை. தொழுகை செய்யும் பாவனையில் குனிந்து உட்கார்ந்தபோது அவன் சுரைக்காய்ப் பந்தலில் வெளிச்சம் வந்து விழுவதைக் கவனித்தான். பிறகு வெளிச்சம் அவனுடைய வீட்டுப் பக்கம் வந்தது. டாகுர் வீட்டுச் சின்ன பாபு = சசீ டாகுர் வந்துகொண்டிருக்கிறார்; கூட ஈசமும் வருகிறான். அவன் அவசர அவசரமாக இறங்கி வந்தான். "இந்த மழையிலே எங்கே கிளம்பினீங்க ?'' ''எங்க பெரிய அண்ணாவைப் பார்த்தியா?" ''இல்லையே எசமான். அவுரு இன்னிக்கு இந்தப் பக்கம் வரல்லியே."

மன்சூர் ஹரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு சொன்னான்: "நீங்க உட்கார்ந்திருங்க. நாங்க பாடாவிலே தேடிட்டு வரோம்.''

27சச் சொன்னார்: ''நீ என்னத்துக்கு மழையிலே போகணும் ? எல்லாரும் எதுக்குக் கஷ்டப்படணும்?"

சசி நடக்கத் தொடங்கினார். மன்சூர் ஒன்றும் பேசாமல் அவர் களுடன் தானும் சென்றான். கிராமத்தில் சில நாய்கள் குரைத்தன, பேலுவின் வீடு மூங்கில் காட்டுக்குக் கீழே இருளில் முழுகிக் கிடந்தது. சுக்குக் கேட்கத் தோன்றியது : "பேலு தோத்துப் போயிட்டானா? அவன் வீட்டிலே ஏன் இவ்வளவு இருட்டு? அவனோட பீபி விளக்கு ஏத்திக்கிட்டு நூல் சுத்திக்கிட்டு இருப்பாளே? இன்னிக்கு ஏன் ஒரு சத்தத்தையும் காணோம் ?"

ஆனால் சசி ஒன்றும் பேசவில்லை. இலவமரத்தில் பூக்களின் வாசனை. புயலாலும் மழையாலும் பூக்கள் தரையில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை மிதித்துக்கொண்டு நடந்துவந்த சசீ , சாமுவின் வீட்டில் ஒரு பெரிய விளக்கு எரிந்துகொண் டிருப்பதைக் கண்டார். தகரத்தாலும் மரத்தாலும் ஆன பெரிய வீடு. அகலமான வராந்தா. மூங்கில் வேலி. வாசலுக்கு நேர் எதிரே மூங்கிலில் விளக்கு தொங்குகிறது. வீட்டுக்கு முன்னால் போட்டிருந்த கூடாரம் பிரிக்கப் பட்டுவிட்டது. மழையும் புயலும் ஓய்ந்த பிறகு மறுபடியும் கூடாரம் போடப்படும். இப்போது மக்கள் வீட்டுக்குள்ளேயும் வராந்தாவிலும் குழுமியிருக்கிறார்கள். கிராமத்தின் இருளில் இந்த வெளிச்சம் சசீயை வியப்புக்குள்ளாக்கியது. மன்சூருக்குப் புரிந்துவிட்டது, பாபுவுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விட்டதென்று. பாபு ஏதேதோ நினைத்துக்கொண் டிருக்கிறார் என்று எண்ணினான். அவன் வெளிப்படையாகவே சொன்னான் : "கூட்டம் நடக்கிறது எசமான். சாம்சுத்தீன் இங்கே லீகின் கிளை ஒண்ணு திறக்கப் போறானாம். டாக்காவிலேருந்து வந்தப்பறம் சாமு லிகிலே பெரிய ஆளாயிட்டான்."

சசி பதிலொன்றும் சொல்லவில்லை. சாமுவின் நடத்தை அவருக்குப் பிடிக்கவில்லை.

மன்சூர் கேட்டான்: "சாமுவைக் கூப்பிடவா ?' நீங்க வந்திருக் கிறதாச் சொல்லட்டுமா ?''

சச் சொன்னார்: "வேண்டாம். வேண்டாம், அவசியமில்லே. அவன் காரியமாயிருக்கான். எதுக்குக் கூப்பிடணும்?''

அப்படியும் மன்சூர் சாமுவுக்குச் செய்தி தெரிவித்துவிட்டான் : ''சின்ன பாபு உன் வீட்டு வழியாப் போயிக்கிட்டிருக்கார். நீ உட்கார்ந்து கூட்டம் போட்டுக்கிட்டு இருக்கே. அவரைப் போய்ப் பார்த்துட்டு வா. அவருக்கு வெத்திலை புகையிலை கொடு ." செய்தியைக் கேட்டுச் சாமு வேகமாக வெளியே வந்தான். 1'சலாம், எசமான்!""எப்படி இருக்கேப்பா, சாமு ?" ''சுகமில்லே, எசமான்! தனபாபுவுக்குப் புள்ளே பொறந்திருக். காமே ?"

"ஆமா ."

''அப்போ எனக்கு இனிப்புக் கொடுக்கணும். ஒரு நாள் வரேன்." சசீ இதுவரை அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டாமென் றிருந்தார். வேறு எதையாவது பேசலாம் என்றிருந்தார். ஆனால் உள்ளுக்குள்ளே ஏதோ குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஏளனமாகச் சொன்னார் : "சீடப்புள்ளைகளைச் சேர்க்கறியாக்கும்! திடீர்னு லீடரா ஆயிட்டே? முன்னேயெல்லாம் ''சுதந்தரம், சுதந்தரம்'னு சொல்லிக் கிட்டிருந்தியே.''

அவருடைய பேச்சு சாமூவுக்குப் பிடிக்கவில்லை. அவன் பேச்சை மாற்ற விரும்பிச் சொன்னான்: ''எசமான். கொஞ்சம் இருந்துட்டுப் போங்களேன்.'' மன்சூர் சொன்னான் : "பெரிய பாபுவைத் தேடிக்கிட்டு வந்திருக்

காங்க."

இப்போது சாம்சுத்தீனும் சசீயுடன் நடக்கத் தொடங்கினான். இந்த விஷயத்தில் எல்லாருக்குமே ஒரு தார்மிகப் பொறுப்பு இருப்பது போல. எப்பேர்ப்பட்ட மனிதர் அவர்! உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர் பிறப்பதில்லை. அப்படிப்பட்டவர் பைத்தியமாகிவிட்டார். எல்லாவற்றையும், அன்புக்குரிய எல்லாவற்றையும், இன்பந் தருவது எல்லாவற்றையும் துறந்துவிட்டு இந்த மனிதர் எங்கேயோ கண்காணாத இடத்துக்கு ஓடிப் போய்விடப் பார்க்கிறார்.

எல்லாரும் மெளனமாக நடக்கிறார்கள். வீடுகள் ஒன்றை யொன்று ஒட்டினாற்போல் கட்டப்பட்டிருந்ததால் சசீ குனிந்து கொணடே வழியில் நடக்கவேண்டியிருந்தது. நிமிர்ந்து நின்றால் வீட்டுக் கூரை தலையில் இடிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குறிப் பிட்ட எல்லை கிடையாது. எது யார் விடு, எந்த வீட்டுக்கு யார் சொந்தக்காரன் என்று சசீயால் சொல்ல இயலவில்லை. கடைசியில் ஆபேத் அலியின் வீடு. அதன் வாசலில் இன்னொரு சிறு குடிசை எழும்பியிருந்தது. அதைப் பார்த்ததும் சசிக்குப் புரிந்துவிட்டது. அவர் சொன்னார்: "ஆபேத் அலியோட அக்கா ஜோட்டன் திரும்பி' வந்துட்டா போலிருக்கு.'' அவருக்குப் புரிந்தது. கொஞ்ச நாட் களுக்கு முன் பீபியாக இருந்த ஜோட்டன் இப்போது விதவையாகி விட்டாளென்று. ஜோட்டனுக்கு மூன்று தடவை நிக்காஹ் ஆகி விட்டது. இல்லை இல்லை, சசீகணக்குப் போட்டுப் பார்த்தார். இதோடு நாலு தடவை. தலாக் ஆனாலோ விதவையாகிவிட்டாலோ அவள்தம்பியிடம் திரும்பி வந்துவிடுவாள். அப்போதெல்லாம் ஆபேத்அலி தன் வீட்டுக்கு முன்னால் வடக்குப் பக்கம் வாசல் வைத்து, குச்சி களாலும் கொடிகளாலும் ஒரு குடிசை கட்டிக் கொடுத்துவிடுவான். இதுவரை தான் அவள் விஷயத்தில் அவனுக்குப் பொறுப்பு. இதன் பிறகு சில நாட்கள் ஜோட்டனின் வாழ்க்கைப் போராட்டம் தொடரும். நெல் வறுத்துக் கொடுப்பது, அவல் இடித்துக் கொடுப்பது என்று. மழைக் காலம் முடிந்து இந்துக்களின் பண்டிகைகளும் முடிந்துவிட்டால் ஜோட்டன் சோற்றுப் பாத்திரத்தை நன்றாகத் துலக்கி எடுத்துக்கொண்டு மற்ற ஏழை பாழைகளுடன் தண்ணீரில் இறங்கிவிடுவாள். சணல் வயல்களில் அலைவாள், அல்லிக்கிழங்கு தோண்ட. அல்லிக்கிழங்கு தீர்ந்து போய்விட்டால் ஆபேத் அலி யிடம் புகார் செய்யத் தொடங்கிவிடுவாள். "ஊரிலே ஆம்பளைகளே இல்லையா, ஆபேத் அலி ?''

ஜோட்டன் வாசலில் வெளிச்சத்தைக் கண்டு தலையை நீட்டிப் பார்த்தாள். சசீ வாசல் வழியே போவதைக் கண்டாள். ஒரு தடவை கூப்பிடலாமா என்று நினைத்தவள், அவ்வளவு பெரியவரைக் கூப்பிட லாமா என்ற தயக்கத்தில் பேசாமல் இருந்துவிட்டாள்.

அவர்கள் போய்க்கொண் டிருந்தபோது ஆபேத் அலியின் வீட்டு வாசல் திறந்துகொண்டது. ஐப்பர் கதவைத் திறந்ததும் சசி அங்கேயே நின்றார். பெரியவர்களை ஒருங்கே பார்த்ததும் ஜப்பருக்குக் கூச்சம் ஏற்பட்டது. அவனுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை முதலில் . பிறகு சாமுவைப் பார்த்ததும் அவனுக்குக் கொஞ்சம் தைரியம் வந்து சொன்னான்: ''பாபாஜான் உங்க வீட்டுக்குத்தான் போயிருக்கார்.” "ஏன் ?'' "பெரிய பாபுவைப் பத்தி சேதி சொல்றத்துக்கு. பெரிய பாபு இடுகாட்டுலே உக்காந்திருக்காராம்.''

அவர்கள் மேலும் தாமதம் செய்யவில்லை. வேகமாக நடந்தார்கள். அவர்களைப் பார்த்த பிறகு ஜப்பரால் வீட்டுக்குள் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவனும் அவர்களுக்குப் பின்னால் நடந்தான். மழை நின்று புயலும் ஓய்ந்துவிட்டது. மரத்தின் உச்சியிலும் புதர் களிலும் மறுபடி மின்மினிகள் பளிச்சிடத் தொடங்கின.

இரவின் இருளில் ஐவரும் வயலுக்குள் இறங்கி இடுகாட்டு ஆலமரத்துப் பக்கம் அண்ணாந்து பார்த்தார்கள். எல்லாருக்கும் முன்னால் அங்கே போய்ச் சேர்ந்துவிட விரும்பி னான் ஈசம். அவன் சொன்னான் : "வேகமா நடங்க , எசமான்.''

அக்ரான் மாதத்தின் முதல் குளிரானதால் மின்மினியின் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அதே காரணத்தால் இரவு இந்த நேரத்திலும்கிரெளஞ்ச பட்சி கூவவில்லை. தரையும் புல்லும் மழைத் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டுவிட்டன. தரை கெட்டியாக இருந்தது, பாதை யில் எங்கும் வழுக்கல் இல்லை. எங்கும் அமைதி. வெகுநாட்களுக்குப் பிறகு பெய்திருக்கும் மழை பயிர்களுக்கு மிகவும் நல்லது. நல்ல விளைச்சல் இருக்கும், பஞ்சம் இருக்காது. ஈசம் வேகமாக நடக்கிறான். யாரும் எதுவும் பேசவில்லை. சசீ அவர்களுடைய கெட்ட எண்ணத்தைக் கண்டுபிடித்து விட்டாற்போல, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துள்ள பரஸ்பர உறவில் இப்போது துக்கமும் வேதனையும் பரவிக் கொண் டிருப்பது போல ஒரு மெளனம். சாம்சுத்தீன் உள்ளுற ஒரு குற்ற உணர்வால் பீடிக்கப்பட்டிருந்தான். ஆகவே மெளனமாக நடந்தான் அவன்.

லாந்தரைத் தூக்கி ஆலமரத்தடியில் தேடியபோது பெரிய பாபு தூக்கில் தொங்குபவனைப் போல் தொங்கிக்கொண் டிருப்பதைப் பார்த்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம், சுருக்கு கழுத்துக்குப் பதிலாக இடுப்பில் இருந்தது. அவர் வில்லைப் போல் வளைந்திருந்தார், சர்க்கஸ் ஆட்டக்காரனைப் போல் அவர் மயில் விளையாட்டுக் காண்பிக்க விரும்பினார் என்று தோன்றியது. புயலும் மழையும் அவருடைய உடலில் வெள்ளைக் கரைகளை விட்டுவிட்டுப் போயிருந்தன. அவருடைய உடலுக்குள் எங்கேயோ ஒரு வேதனை, காதல் வேதனை, அவருடைய கனவு மாளிகையில் வாழ்ந்துவந்த பறவை இப்போது அவருடைய பிடியிலிருந்து நழுவிப் பறந்து போய்விட்டது போலும்! இப்போது அவர் அதைத் தேடிக்கொண்டிருக்கிறார். பறவை பறந்து போய்விட்டது, தீவு தீவாந்தரங்களைக் கடந்து வியாபாரிகளின் நாட்டைக் கடந்து ஜலதேவதைகளின் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்து அங்கே சோகித்திருக்கும் ராஜகுமாரனின் தலையில் உட்கார்ந்துகொண்டு அழுகிறது. அப்போது பெரிய பாபுவின் மனசில் ஏதோ ஒரு பெரும் வேதனை ஏற்படுகிறது. அவர் தம் கையைத் தாமே கடித்துக்கொள்கிறார்.

அவர் தம் கையைக் கடித்துப் பாளம் பாளமாகக் கிழித்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். இவ்வாறு அவர் கிளையிலிருந்து தொங்கிக்கொண் டிருக்கிறார்.

ஈசம் மட்கிலாக் காட்டுக்குள் தவழ்ந்தவாறே நுழைந்தான். புதருக்குள்ளிருந்து பெரிய பாபுவை மெதுவாக விடுவித்தான். குளிரால் அவருடைய கண்கள் இடுங்கிப் போயிருந்தன. அவர் இரவு பகலாகத் தண்ணீருக்குள் முழுகிக் கிடந்தாற் போலவும், யாரோ அவரைத் தண்ணீரிலிருந்து தூக்கிக் கொண்டுவந்து இந்தப் புதருக்குள் எறிந்துவிட்டாற் போலவும் தோன்றியது, அவருடைய நிலையைப் பார்த்தால், கைகால்கள் வெளிறிக் கிடந்தன. ஈசம் புதரிலிருந்து வெளியே இழுத்துவந்து அவருக்கு நன்றாக உடையணி வித்தான். அவருடைய கையிலும் வாயிலும் ரத்தம். அவருடைய உடலும் முகமும் இப்போது பார்க்கப் பயங்கரமாக இருந்தன. அடை யடையாக எங்கும் ரத்தம். மரக்கிளைகளில் பறவைகளின் ஒலம். நிர்ஜனமான வயல்வெளி எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சசீ விளக்கைத் தூக்கிப் பெரியவரின் முகத்தையும் மணிக் கட்டையும் பார்த்தபோது அவர் சிரித்துவிட்டார். குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு. சசீயால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரை உடனே வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும். சசீ அருகம்புல்லைப் பிடுங்கி அதன் ரசத்தை அவருடைய காயங்களில் பிழிந்தார். காயத்தின் எரிச்சலாலும் வேதனையாலும் அவருடைய முகம் சுருங்கியது. அவர் ஒன்றும் பேசவும் இல்லை, கத்தவும் இல்லை. சாமியாடிபோல் ஆடிக்கொண்டே அவர்களுடன் நடந்து போனார். நடந்து போகும்போது சாம்சுத்தீன் சொன்னான் : ''பாபுவைக் கூட்டிக்கிட்டுக் காசி, கயா, மதுரா எல்லா இடங்களுக்கும் போயிட்டு வந்தீங்களே! ஒண்ணும் பிரயோசனப் படல்லியே? இவரைக் குணப்படுத்த முடியல்லியே!" மன்சூர் கேட்டான் : ""கல்கத்தாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போய்ப் பெரிய டாக்டர் கிட்டேயெல்லாம் காண்பிச்சீங்களே ; அவங்க ளாலே ஒன்ணும் செய்யமுடியல்லியா ?"

அந்த இருட்டில் சசியின் குரலில் நம்பிக்கையின்மை தொனித் தது. சொன்னார் : "ஊஹூம். யாராலும் எதுவும் செய்ய முடியல்லே. பத்துப் பன்னெண்டு வருஷமா உள்ளுர் வெளியூர் எல்லாம் எவ்வளவு முயற்சி பண்ணினோம் ?"

மன்சூர் சொன்னான் ; "நான் கூட ஹாஸான் பீரோட தர்காவிலே படையல் வச்சேன். ஒண் ணும் நடக்கல்லே."

சசீ வேறெதுவும் பேசவில்லை. எல்லாருமே இந்த வேதனையால் நொந்திருக்கிறார்கள். இந்தத் துக்கம் பக்கத்துக் கிராமங்களைக் கூடத் தாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் அந்தப் பக்கத்து மக்களெல்லாரும் அவரிடம் எவ்வளவு எதிர்பார்த்தார்கள் ? பெரிய பாபுவின் வியக்கத் தக்க புத்தி தீட்சண்யம் குறித்து எவ்வளவு பெருமைப் பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் ! 'எங்கள் பிராந்தியத்திலும் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். எல்லாருக்கும் முன்னால் ராஜமரியாதை யுடன் அறிமுகப்படுத்தப்படத் தகுந்தவர் அவர்." அதிருஷ்டப் பிறவியான இம்மனிதரை எல்லாருடைய அன்பும் பரிவும் ஆதரவுடன் தாலாட்டி வளர்த்து வந்தன.

அப்படிப்பட்ட மனிதர் நாளுக்கு நாள் எப்படி ஆகிக்கொண்டு வருகிறார்!

52மன்சூர் சசியைக் கேட்டான் : ''எசமான், எங்கப்பா சொல்றார், பெரிய எசமான்- அதாவது உங்கப்பா - அவரோட வாழ்க்கையிலே ஒரு தடவை கூடப் பொய் சொன்னதில்லையாமே?'' ''ஆமா, அப்படித்தான் சொல்றாங்க!'' என்றார் சசீ. " அப்படீன்னா அவருக்கு இந்த மாதிரி கஷ்டம் ஏன் வந்தது ?" சசீயால் பதில் சொல்ல முடியவில்லை. வானத்திலிருந்த மேகங்கள் காற்றில் கலைந்துவிட்டன. அவர்கள் ஆற்றுப் படுகை வழியே குளத்தங்கரைக்கு வரவில்லை. நரேன்தாஸின் கட்டாரி மரத்தடி வழியே செல்லும் குறுக்குப் பாதையில் நடந்தார்கள். நரேன்தாஸ் வீட்டு வாசலில் விளக்கு வெளிச்சம் இல்லை. உள்ளேயும் தறியின் அரவம் இல்லை. எல்லாரும் இவ்வளவு சீக்கிரம் தூங்கி விட்டார்களா ? சாம்சுத்தீன் நினைத்தான் : 'நரேன்தாஸின் தங்கை விதவையாகிப் பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள். அந்தத் துக்கம் வீட்டின் சுற்றுப்புறத்தில் எல்லாம் பரவிக் கிடக்கிறது.'

அவன் ஒரு நாள் மாலதியைத் தூரத்திலிருந்து பார்த்தான். விதவையானதிலிருந்து அவள் ரவிக்கை அணிவதில்லை. அவளுக்குக் குழந்தைகள் இல்லை. ஏரியில் முதலை அகப்பட்டுக்கொண்ட வருஷந்தான் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. நரேன்தாஸ் கல்யாணத்துக்கு நன்றாகச் செலவு செய்தான். நான்கு மாதங்களுக்கு முன்பு மாலதி இந்தக் கிராமத்தை விட்டுப் பட்டணத்துக்குப் போனாள். மாப்பிள்ளை ராஜகுமாரன் மாதிரி இருந்தான். சிறிய உடல் வாகு. சாமு நினைத்தால் இப்போது கூட அவனுடைய கண்களை நினைவுக்குக் கொண்டுவர முடியும். நரேன்தாஸ் நஸிந்தியிலிருந்து நான்கு பெட்ரோமாக்ஸ் விளக்குக் கொண்டுவந்து வீட்டிலும் வெளியிலும் வெளிச்சம் போட்டான். கண்களில் நீர் வழிய அவன் மாப்பிள்ளையின் கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னான் : ''மாலதிக்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. நீதான் எல்லாம்" என்று. வெகுநேரம் பலகையின் மேல் படுத்துக்கொண்டு அழுதான். எல்லாரும் சென்ற பிறகு வீடு வெறிச்சென்று போய்விட்டது. நரேன் தாஸ் இரண்டு நாட்கள் பெஞ்சியிலிருந்து எழுந்திருக்கவே இல்லை அவனுடைய தங்கை அந்த வீட்டில் வண்ணத்துப் பூச்சி போல் வளைய வந்துகொண் டிருந்தாள். நாள் பூராவும் திரிந்து கொண்டே இருப்பாள். மர நிழலில், குளத்தங்கரையில், மஞ்சத்தி மரத்தின் கிளைகளில் நீலகண்ட பறவையைத் தேடுவதைப் போல் அலைந்து திரிவாள் அவள். அப்போதெல்லாம் சாமுவும் ரஞ்சித்தும்அவளுக்கு மிகவும் வேண்டியவர்கள். ஒரு சமயம் அவர்கள் பலிசப்பழம் பறிக்கப் போய் வழி தவறிவிட்டார்கள்.

மாலதி விதவையாகித் திரும்பி வந்த பிறகு சாமுவால் அவளுடன் பேச முடியவில்லை. காரணம், டாக்காக் கலகத்தில் அவளுடைய கணவனைக் குத்திக் கொன்றுவிட்டார்கள்.

வீட்டுக்குள் நுழைந்ததும் சசி கூப்பிட்டார்: ''அம்மா, தண்ணி கொண்டா " சிற்றப்பாவின் குரல் கேட்டு லால்ட்கு கூடத்திலிருந்து வெளியே வந்தான். சந்திரநாத்தும் வந்தார். இவ்வளவு நேரம் தன் கணவனின் காலருகில் உட்கார்ந்திருந்த சசிபாலாவும் சசீயின் குரல் கேட்டு வெளியே வந்தாள். மகேந்திரநாத் தம் பிள்ளைக்காக மிகவும் கவலைப்பட்டுக்கொண் டிருந்தார். மணியின் வியாதியில் புதிய வக்கிரங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்போதெல் லாம் ஒன்றுமே சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியே போய் விடுவது அவருடைய வழக்கமாயிற்று. இதுவரையில் அவர் சும்மா கூடத்தில் உட்கார்ந்துகொண் டிருந்தார். அல்லது குளத்தங்கரை யில் உலவிக்கொண்டே மரஞ்செடிகளுடனும் பறவைகளுடனும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். பையன் திரும்பி வந்துவிட்ட செய்தி கேட்டதும் மகேந்திரநாத் கம்பளியைத் தலைக்குமேல் போர்த்துக்கொண்டு படுத்துக்கொண்டுவிட்டார். இதுவரை அவரை ஆட்கொண்டிருந்த தீவிரக் கவலை மறைந்துவிட்டது. வெளியே வந்த சசிபாலா நிறையப் போர் நிற்பதைக் கண்டு, 'நீங்களா ?" என்று கேட்டாள். ''நான் தான் சாமு. அம்மா!" *'நான் மன்சூர், அம்மா !'' பெரிய மாமி ஜன்னல் வழியே எல்லாவற்றையும் பார்க்கிறாள். கணவனின் ஆஜானுபாகுவான தோற்றம், பலம் பொருந்திய முகம், அதற்குள்ளிருந்த தன்னம்பிக்கையின் ஒளி அந்த ஒளி இடை யிடையே காற்றில் அசைந்தது. அவள் கைகளைத் தூக்கிக் கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டாள் ; "பகவானே, நீதான் இந்த மனுஷரைக் காப்பாத்தணும்!''

வாசலில் நிறைய ஜனங்கள் இருந்ததால் அவள் வெளியில் வரவில்லை . சசிபாலா எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டுப் பூஜை யறைக்குள் நுழைந்தாள். கொஞ்சம் பகவானின் அபிஷேக தீர்த்தமும் துளசிதளமும் எடுத்து மணியின் மேல் தெளித்தாள். ஒரு வாளி தண்ணீர் கொண்டுவரச் செய்தாள். சந்திரநாத்

34மடி வேஷ்டி எடுத்து வந்தார். காயம் பட்ட இடத்தில் துலுக்க ஜவந்தி இலையின் சாற்றைப் பிழிந்து கட்டிவிட்டார். "போயிட்டு வரேன். அம்மா !'' என்றான் சாமு. ''போயிட்டு வாப்பா! ராத்திரி ரொம்ப நேரமாயிடுத்து. ஜாக்கிரதையாப் போயிட்டு வா !"

பிறகு ஏதோ நினைத்துக்கொண்ட சசிபாலா முன்னால் வந்து, ""என்ன சாமு, நாலைந்து நாளா உன்னோட அம்மாவைப் பார்க்கவே இலலையே?' என்றாள். " அம்மாவுக்கு இடுப்பு வலி. எழுந்திருக்கவே முடியல்லே, வாயுக்கோளாறு போலேயிருக்கு." சசிபாலா அவனை இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போய் ஒரு பழைய சீசாவை எடுத்துக்கொண்டு வந்தாள். "இதை எடுத்துக் கிட்டுப் போ, சாமு. இந்த எண்ணெயை நல்லா இடுப்பிலே தேச்சு மாலிஷ் பண்ணச் சொல்லு.''

அவர்கள் போய்விட்டார்கள். ஈசம் கையில் விளக்குடன் தர்மூஜ் வயலுக்குப் போய்விட்டான். அவன் இரவு முழுதும் அங்கே காவல் காத்துக்கொண் டிருப்பான். முயல்களும் எலிகளும் இளந் தர்ஜ் கொடிகளைக் கடித்துவிடும். அவன் இரவில் தகரத்தைக் குச்சியால் அடித்துக்கொண்டே யிருப்பான். வெகுதூரத்தில் நள்ளிரவில் விழித்துக்கொள்பவர்கள் அந்த ஒலியைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள், டாகுர் வீட்டு வேலைக்காரன் ஈசம் தர்மூழ் வயலில் தகரத்தைத் தட்டிக்கொண் டிருக்கிறானென்று தகரத்தில் தட்டி எலியையும் வெளவாலையும் விரட்டிக்கொண் டிருக்கிறானென்று.

சசீந்திர நாத் தம் அறையில் உட்கார்ந்து கொண்டு வீட்டுக் கணக்கு எழுதுகிறார். பெரிய பாபுவின் கைகளையும் முகத்தையும் கழுவிச் சமயலறைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர் தமக்குப் பரிமாறப்பட்ட பருப்பைத் தனியே சாப்பிட்டார், சாதத்தைத் தனியே சாப்பிட்டார், மீனையும் இறைச்சியையும் சாப்பிடும்போது எலும்புகளையும் விழுங்கிவிட்டார். கண்களை அகல விரித்துச் சமையலறையைப் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர். சசிபாலா சொன்னாள் : "எனக்கு இன்னும் கஷ்டத்தைக் கொடுக் காதேயப்பா, மணி, சாதத்தோடே காய்கறிகளைத் தொட்டுக் கொண்டு சாப்பிடு!" தாயின் பேச்சைக் கேட்ட மணீந்திரநாத் கீட்சின் காதல் கவிதை யொன்றைக் கம்பீரமான குரலில் பிசகில்லாமல் ஒப்பிக்க ஆரம் பித்தார். அம்மாவுக்கும் சந்திர நாத்துக்கும் அதன் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை, கவிதையை ஒப்பிக்கும்போது அவர் இமை முடாமல் தம் மனைவியைப் பார்த்துக்கொண் டிருந்தார். ஏதோ

35ஒரு கொடிய வேதனையை அவர் இக்கவிதை மூலம் வெளிப்படுத்த முயன்றார் போலும். இடையறாமல் பொறுமையின்றித் தவிக்கும் உலகத்தின் சோகத்தை எதிரொலித்தார் போலும்.

அவர் தம் நெற்றியையும் தலையையும் கையால் தடவிக்கொண் டார். 'அம்மாமார்களே, என்னைக் கொஞ்சுங்கள்!' என்ற பாவம் அவருடைய முகத்தில், அவருடைய இமையாத பார்வை சொல் கிறது ; 'எனக்கு மிகவும் கஷ்டம், மிகவும் வேதனை !'

ட்டன் ஆபேத் அலியின் அண்ணி. அவள் நாணல் தட்டையாலான சிறு கதவைத் திறந்து தன் குடிசைக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். இன்னும் பொழுது புலர் வில்லை. இரவு முழுதும் அவளுக்குத் தூக்கமில்லை. சாமு மசூதியி லிருந்து தொழுகைக்கு அழைக்கிறான். ஜோட்டன் இருட்டில் கிழிந்த சாக்கையும் கிழிந்த போர்வையையும் மடித்து வைத்தாள். இன்னும் இருட்டாயிருப்பதால் அறைக்குள்ளிருந்த சாமான்கள் தெளிவாகத் தெரியவில்லை. உறியில் இரண்டு பாத்திரங்கள்: இரண்டு பானைகள். இரண்டு நாட்களாக அவளுக்குச் சோறு இல்லை . இரண்டு நாட்களாக அவள் அல்லிக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டுக்கொண் டிருக்கிறாள். அவள் மூடியைத் தூக்கிப் பாத்திரத் துக்குள் கையை விட்டுப் பார்த்தாள். இன்னும் கொஞ்சம் வெந்த கிழங்கு இருக்கிறது. அவள் இருட்டிலேயே அதைச் சாப்பிடத் தொடங்கினாள். உலர்ந்துவிட்டதால் அது தொண்டையில் அடைத்தது. அவள் கொஞ்சம் தண்ணீர் குடித்தாள். மறுபடியும் கதவைச் சற்று திறந்து ஆகாயத்தைப் பார்த்தாள், ஆகாயம் நிர்மல் மாக இருக்கிறது. கோழிகள் கூவத் தொடங்கிவிட்டன. அவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து நின்றாள்.

மசூதியின் மறுபக்கத்தில் சூரியன் உதித்துக்கொண் டிருக்கிறான். ஆபேத் அலி கையில் ஒரு பாத்திரத்துடன் வயலிலிருந்து வந்தான். அவனுடைய பீவி ஜாலாலி வாசலில் ஒரு மூலையில் இலைகளைப் பற்றவைத்துச் சமையல் செய்துகொண் டிருக்கிறாள். ஆபேத் அலி திண்ணையில் உட்காருவதைப் பார்த்த ஜோட்டன், "அந்த ஆள் நேத்திக்கு வரல்லியே!' என்றாள். "வரலேன்னா நான் என்ன செய்வேன் ?'' ஜோட்டனின் ஆசையைப் பார்த்து எரிச்சலாக இருந்தது ஆபேத் அலிக்கு. மூணு கல்யாணம் ஆயிடுத்து. இவளுக்கு இன்னும் கல்யாண ஆசை!

36