சிவசங்கரா எழுதியது
-------------------------------------
தாமரைக் கடவுளே உன்
காய்ந்து போன கணுக்காலை 
யாரறிவர்? காரிருளில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பார்த்திருந்த பசுமையெல்லாம்
நீ மறுக்கும் கரும் பயிராப் போச்சு
நான் பிறந்த வேளையிலே
என் மக்கள், உன்
சூதறிந்த சூரியனின்
பாதி தெரிந்து பண்களால் செய்தனர்
          அப்புறத்தை அகண்டெரிக்கும் பாதியையும்
                       நாம் கண்டு பண்ணிசைக்கும்
           பேயினத்தை தேவர்களாய்ச் செய்வோமோ?
                        அரக்க சிசுவொன்று அவதரித்து
            வந்த தென்று இரக்கக்குணமுடையோர்
                         இனிபு்பாகச் சொல்வாரோ.
                                   -கடும்பனியில் சிந்தனைகள் - ஒரு பொய்யான சிந்தனைக்கூறு
----------------------------------------------------------------------------
அவளின் ஆர்வமூட்டும் உதடுகளையும் சிவந்த கொலுசணிந்த கால்களையும் நான் உடனடியாக காண விரும்பினேன். எங்கு தொடர்பற்ற - ஆசையற்ற ஈடுபாடு என்னில் பிரவாகிக்கையில் அங்கு நான் கலப்பற்ற சூர்யோதயம் போன்ற பேரன்பை உணர்கிறேன். என்னை நான் தன்னிச்சையாக இயக்குகையில், எதையும் - எதற்காகவுமில்லாமலும் - செலுத்தப் படாமல் - உணரப்படும் - செயலாக்க என்றால் முடிந்திருக்கிறது.
                                             - ஞாபகக் குறிப்புகள்
                                                ஜெ. கிளாரிந்தா