தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, May 27, 2019

ப்ரஸன்னம் - - பிரமிள்

(Previous views-59)
 ப்ரஸன்னம் - - பிரமிள்

I. நாக பாலசுப்பிரமணியனின் பைலில் இருந்து (தட்டச்சு : தீட்சண்யா ரா)
             

கார் இடம் தெரிந்தாற்போல் ஸ்லோடவுனாகி நின்றது. வீடும் தோட்டமும் துரவுமாக இருந்த இடம் இப்போது மண்திடல்களும் வெற்று நிலமுமாக வெறிச்சோடிக் கிடப்பது தூரத்திலேயே தென்பட்டுவிட்டது.



தனிமை. போதாததுக்கு உச்சிக்கோடை. அதுவும் போதாது என்று சரியாக மத்யானப் பொழுது பன்னிரண்டுக்கு நான் இங்கே நிற்க வேண்டும் என்பது முகுந்தனின் திடமான கூற்று.


நான் கார் எஞ்சினை நிறுத்தினேன்.

தெருவோரத்திலிருந்து சுற்றிலும் எங்கள் பழைய நிலம் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கங்கே மானாங்காணியாக முளைத்த பூண்டுகள் செடிகள் யாவும் ஆரம்பித்த துளிர்ப்பை இழந்து உள்வாங்கிக்கொண்டிருந்தன. தூரத்தே குடிசை வரிசைகளும் வீடுகளுமாக சில மானுடத் தடயங்கள் இருந்தும் என்பால்யகாலத்து வீடு இருந்த திடலை மையமாக்கி ஒரு பாழ்நிலம் பரந்து செல்வதாக உணர்ந்தேன். நிலவெளியில் உயிர் அற்றமசான வெறிச்சோட்டம்.
புல்பொட்டுகள் நிலத்தோடு நிலமாய் வதங்கிவிட்டன. நிலம் கெட்டித் தன்மை இழந்த மணல் வெளியாகி விட்டது. மண் புழுதியாய்ப் பதறிக் கொண்டிருந்தது.
என்னை இங்கே இந்த வேளைக்கு வந்து நிற்கும்படி முகுந்தன் கூறியது ஏன் என்று துருவிக் கேட்கவில்லை. நானும் அவனும் விசித்திரமான இடங்களில் விசித்திரமான பொழுதுகளில் கெடுவைத்துச் சந்தித்த காலங்கள் போய் விட்டன. இப்போது அவனால்   படுக்கையிலிருந்து இம்மியும் அசைய முடியாது . இருந்தும் நான் ஏன் என்று கேட்கவில்லை.

நாகேஸ்வரத்தை விட்டு திருநெல்வேலி செல்லும் ரஸ்தாவை காரில் சுமார் ஒருமணி  நேரம் கவர் பண்ணினால் பெரும்புதூர்க் கிராமத்தை நோக்கித் திரும்பும் கப்பி ரஸ்தா, அவ்வப்போது போடப்பட்ட தார்ப் பூச்சுகளைச் செல்லுபடியாகாமல் அடித்துவிட்டு கப்பி ரஸ்தாவாகவே திரும்பி ஓடும். இதில் மேலும் ஒரு அரைமணி நேரம் பள்ளங்களில் விழுந்து எழுப்பி, கல்திரணைகளைச் சுற்றி அரை வட்டமாக ஸ்டியரிங்கை ஒடித்து ஊர்வல கதியில் வந்தால் எங்கள்  தோட்டம் . அதாவது அப்பாவினால் ஒருநாள் திடீரென வந்த விலைக்கு விற்கப்பட்ட தோட்டம்

“ அங்கே யாருமில்லை ” என்றான் முகுந்தன், “  அதாவது உயிருடன் ” என்றும் சேர்த்துக்கொண்டான். நான் உயரத்திலிருந்து வந்த புன்னகையுடன் அவனைப் பார்த்துவிட்டு “ சரி ” என்று எழுந்தேன். இது நடந்தது நேற்று மாலை.

காரிக்குள் டிரைவிங்  ஸீட்டை நோக்கி கிறுகிக் கொண்டிருந்த கையகல மின்விசிறி தனி பாட்டரியில் தன் பாட்டுக்கு உஷ்ணக்காற்றை கத்திக் கம்பிகளாக்கி சிலம்பாடிற்று. இதன் ஒரே பெறுபேறாக என் முகத்தில் மொய்த்து அளைந்தபடி இருந்தது உஷ்ணம். விசிறியை நிறுத்தினால் வெறும்  நெருப்பு, ஓடவிட்டால் அறுக்கும் நெருப்பு. நிறுத்துவது விவேகம் , ஆனால் ஓடவிடுவதனால் ஆகும் பாட்டரிச் செலவில், சிறிய அந்த யந்திரத் திறன் என்னைச் சேவிக்கிறது என்ற பிரக்ஞையில், உஷ்ணமோ இல்லையோ, ஒரு ஆறுதல், ஒரு பாதுகாப்புணர்வு.

மத்யானத்துக்கு ஒரு வினாடி இருக்கலாம். “ என் ரப்பர் எங்கேடா ?” காலமாகிவிட்ட அக்காவின் குரல் என்னை மயிர்க்கூச்சலிடவைத்து காருக்குள் ஒலித்து விட்டு வெட்டவெளியில் மொழியிழந்த நினைவாக ஓடிற்று, மறு வினாடி நான் எங்கள் வீட்டு ஜன்னல் வழிநாக முற்றத்தைப் பார்த்தபடி நிற்கிறேன்.
                    ஃ                                                                                 ஃ


பைரவனுக்கு அது இம்மியும்  படாது. ஏனென்றால் அவன் முற்றத்து வெய்யிலில் நின்றபடி எங்களைச் சேவிக்கிறான். அப்பாவை, அம்மாவை, அக்காவை, என்னை. எங்கள் அவன் காணாவிட்டாலும் எங்கள் வீட்டை அவன் சேவித்தபடி நிற்க வேண்டும். இல்லாவிட்டால் அவனுக்கு பிராணன் போய்விடும்.


அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதுக்கு அம்மா கொடுத்த விளக்கம் அது. எனது பால்ய காலத்துப் பசுமைநின் மையமாக முற்றத்தில் நிற்கிறான் பைரவன், ஏறத்தாழ நிர்வாணமாய். இதைவிட்டால் என் மனசில்  பசுமையாக நிற்பது அக்காவின் ரப்பர்கள் தான்.

அக்கா என்னை கிள்ளுவாள். அவள் கிள்ளுவது பயங்கரமாக வலிக்கும். ஆனால் அவளை நான் கிள்ளினால் அவளுக்கு வெறும் கிச்சுக்கிச்சு. எனவே என் ஆத்திரம் அவளுடைய தசைகளைவிட அவளுக்கு பவித்திரமாகத் தோன்றிய அவளுடைய ரப்பர் துண்டுகள் மேலெ திரும்பின. அவள் என்னைக் கிள்ளிய போதெல்லாம் சமயம் பார்த்திருந்து அவளுடைய ரப்பரைத் திருடிக்கொண்டு போய் அப்பாவின்  ஷேவிங் பிளேடினால் சீவுவேன். பெரும்பாலும் ஜன்னல் வழியாகத் தெரியும் பைரவனைப் பார்த்தபடி சீவுவேன். அவனை நான் பார்க்க, அவன் என் பழியைப் பகிர்ந்து கொள்ள, அப்பாவின் ஷேவிங் பிளேடினால் அக்காவின் தசைகளைப் பாளம் பாளமாகச் சீவும் குரூர திருப்தியுடன் ஜன்னல் விளிம்பை பலி பீடமாக்கி  ரப்பரைச் சீவுவேன். பைரவனின் பிரசன்னத்தில் இந்த மகா குரூரமான தர்மானுஷ்னத்தை நான் செய்தால்தான் அக்கா கிள்ளியது எனக்கு ஆறும். இல்லாவிட்டால் ஏனென்று இல்லாமலே எடுத்ததுக்கெல்லாம் அழுவேன். அடம்பிடிப்பேன். அம்மாவிடம் வசவு, சிலவேளை முதுகில் பளார் அறை ஆகியன இவற்றின் விளைவாக மேலும்  கிடைக்க வாய்ப்பு உண்டு.

பைரவனைப் பார்த்துப் பார்த்து ரப்பரை யான் சீவிம் வேளைகளில் அக்கா ஏதோ விபரீதத்தை உணர்ந்தவளாக, “ என் ரப்பர் எங்கேடா ? ” என்று கத்துவாள். அப்போது ஒரு அற்புதத்தைப்போல, இன்னொரு உலகத்திலிருந்து பிறந்த அசரீரியைப் போல பைரவன் நின்ற திசையிலிருந்து ஆழ்ந்த கனமான ஒரு ஆண்குரல் “ களுக் ” என்று சிரிக்கும் சப்தம் கேட்கும். நான் நிமிர்ந்து பார்ப்பேன். ஆனால் கருத்த அவனது உடலில், முகத்தில், எங்குமே சலனம் இராது. சிரித்தது அவனல்ல என்றே தோன்றவைக்கும் அவனது நிச்சலான சிலைத் தோற்றம்.

எப்போதும் முற்றத்தின் இடப்புறமாகவே நிற்பான் பைரவன். காலையில் நாங்கள் போஜனம் பண்ணுவதற்கு முன்பே வந்துவிடும் அவன் நாங்கள் சாப்பிட்டான பிறகு கூட நின்ற நிலையிலேயே நிற்பான். பட்டையான  வாழை நார் ஒன்று அவனது இடுப்பைச் சுற்றி இருக்கும். அதில் செருகி இறுக்கப்பட்ட வாழை மடல் ஒன்றுதான் அவனுடைய கோவணம். துணி அல்ல.  ஏனென்றால் அவன் துணி எதையும் தொடக்கூடாது. இது அம்மாவின் விளக்கம்,

“ தொட்டால் ?” என்பேன் நான்
,
“ தோஷம் ! ” என்பாள் அம்மா. தோஷம் ! இந்த  வார்த்தையினால் தீண்டப்பட்டதும் விளக்கங்களைத் தேடி விசாரணைகளாக நீளும் மனம் நெருப்பினால் தீண்டப் பட்டாற்போலத் திகைத்துச் சுருங்கும்.
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே பைரவனை இதே நிலையில் பார்க்கிறேன்.

காலையில் அப்பா பெட்ரோல்பங்கிற்குக் கிளம்புவார்- மெயின்ரோடில் ஒரு வெள்ளைக்காரனின் பெட்ரோல் பங்கில் அவர் கணக்கப்பிள்ளை. காலை என்றால் சுமார் ஏழு மணி. எட்டு மணி என்றால் லேட். கிளம்பி, பஞ்ச கச்சம் , அதற்கு ஒரு கையகல பெல்ட், கோட், டை, தலைப்பா, ஷு எல்லாமாக வந்து முற்றத்தில் இறங்காமல் கதவைத் திறந்த நிலையில் கூடத்துக்குள்ளேயே நிற்பார். ஒரு கால் மட்டும் வாசற்படியை மிதித்து நிற்கும். நின்றபடி தெருவுக்கும் வீட்டுவாசலுக்கும் இடைப்பட்ட புழுதி முற்றத்தை ஹிட்லர் போல பார்ப்பார். ஏனோ அந்தச் சமயத்தில் ஒரு திகில் பரவும். எனக்குள் என்றில்லை. அடுக்களையின் ஈரவிறகிலிருந்து கிளம்பும் புகையாக. கவளியிலும் தான், அம்மாவுக்கு அந்த சமயத்தில் ஆஸ்துமா இழுத்துக்கொண்டிருந்தால் அந்த இழுப்பைக்கூட நிறுத்தி விடும் இந்தத் திகில்.

அப்பா பெட்ரோல் பங்கிற்குக் கிளம்பிவிட்டார். ஆனால் முற்றத்தில் இறங்கவில்லை.  காரணம், இடதுபுறமாக, ஒரு ஓரத்தில்  எனினும் முற்றத்தில் நின்று  கொண்டிருக்கிறான் பைரவன்.  அப்பாவின் ஹிட்லர் பார்வை, நிமிர்ந்து, நெடுந்தூரத்தில் அணிவகுத்து நிற்கும் பகைவர் பட்டாளத்தைக் கணிக்கும் தோரணையில் எதிரே தென்னங்கீற்று வேலியில் இருந்த தகரக்கதவைப் பார்க்கிறது.

இந்த முகூர்த்தத்தில் கிளம்பும் விபரீத உணர்வைப் பற்றி நான்  பூணூல் போட்ட பிறகுதான் அம்மா எனக்கு விளக்கினாள். அதுவும் இனி நான் பைரவனைப் பார்க்கக் கூடாது அவனால்  பார்க்கபடவும் கூடாது என்ற அச்சுறுத்தலுக்கு ஒரு ஆதார விளக்கமாக.

முற்றத்தில் எவ்வளவு ஓரமாக நின்றாலும் அவனது தோற்றம் அப்பாவின் ஓரக்கண்ணில் விழுந்து விடுமாம். லட்சோபலட்சம்  வருஷங்களாக ஜீவமரணப் போரட்டத்தின் விளைவாக உயிர்  வர்க்கத்தின் கண்கள் விசேஷ சமயங்களுக்கு ஏற்ற பார்வையைச் செலுத்துகின்றன. பறவைகள் இரண்டு புறங்களையும்  பார்க்கும் விதமான பார்வை அமைப்பு கொண்டவை. பொடிநடையும் ஓட்டமுமாகப் போகிற போது நாய் தனது இரண்டு கண்களுள்  ஒன்றை முன்னுக்கும் ஒன்றைப் பின்னுக்குமாக அட்ஜஸ்ட் பண்ணி இருப்பதை பக்கவாட்டாக அது லேசாய்த் திரும்பிபடியே ஓடுவதில் கவனிக்கலாம். போர்க் குதிரையிடமும்  இந்தக் குணம் உண்டு. இவை ஓடும்போது  இவற்றின் உடல் நேர்க்கோட்டில் இராது. ஜீவிதப் போருக்கு ஏற்றபடி பார்வை அமைப்பு கொண்ட பிராணிகளுள் கீரி மிகவும் விசேஷமானது. ஏறத்தாழ எல்லாத் திசைகளையும் ஒரே சமயத்தில் பார்க்கக்கூடிய விதமாக அதன் கண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிய விஷப்பாம்புகளுடன் போராட வேண்டிய  அவசியத்தின் விளைவு கீரியின் நான்கு திசைப்பார்வை.

அப்பாவிற்கும் கீரியின் முகம்தான். ஆனால் பெயர் நாகையர் . விவரம் தெரியாதவர்கள், அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடிப்பவர்கள், “ நாக்கையர் ” என்று விலாசமிட்டு கடிதம் எழுதிவிட்டால் ஓடிப்போய் தபால் பட்டுவாடா செய்த போஸ்ட் மேனைப் பிடித்து வைத்து அவனை வைவார் . “ நான் நாகையரடா ? இது எவனோ நாக்கையனுக்கில்லை வந்திருக்கு ? திருப்பி அனுப்பிச்சுடு !” என்று கத்துவார். பெரும்பாலும் இந்த விஷமத்தைச் செய்வது அம்மாவின் தம்பியாகப்பட்ட வெங்கு மாமாவாகவே  இருக்கும். அவர் கவரில்  தமது விலாசத்தைத் தந்திருக்க மாட்டார். போஸ்ட்மேன் , “ இதை   நான் யாருக்கு சாமி  அனுப்பறது ?” என்பான். “ வெங்குதான் அனுப்பி இருக்கான் ” என்று கண்டுபிடித்து விட்டு ஆகாமார்க்கமாக வசவை அனுப்புவதுக்காக அண்ணாந்து கத்துவர் அப்பா, “ டேய் வெங்கூ! யார்றா நாக்கையன் ? ஏண்டா அட்ரஸ் எழுதத் தெரியாமே வேஷ்டி கட்டிண்டிருக்கே ? நீ தப்பிப் பொறந்தவண்டா !  உன் தோலைத் தொட்டாலே கருப்பு ஒட்டிக்கும்டா ! ” என்ற பாணி. ஆனால் பதில் எழுதும்போது  “ இவ்விடம்   க்ஷேமம். அவ்விடம் க்ஷேமத்துக்கு ” என்ற உபயகுசலோபரி வகையறாவாகத்தான் இருக்கும் . நாக்கையன் கூச்சல் போஸ்ட்மேனோடு அல்லது ஆகாசத்தோடு போச்சு. இது எப்படி எனக்குத் தெரியும் என்றால் எழுதிய கடிதத்தை அப்பாவுக்கு அவர் உரக்கப் படித்துக் காட்டும்போது என் காதில் விழும்.

அப்பேர்ப்பட்டவர் எங்கள் அப்பா. ‘  அவர் ஒரு ஜ்வாலை ’ என்று நான் ஒரு கதையில் எழுதி இருக்கிறேன். “ ஜ்வாலை என்ற வார்த்தை உமது அப்பாவை ஜ்வாலையாக சித்தரித்து விடாது ” என்று ஒரு விமர்சகப் பயல் எழுதிவிட்டான். எனவே இங்கே கொஞ்சம் விபரம் தந்திருக்கிறேன்.

அவருடைய ஓரக்கண்ணில் கூட பைரவன்  பட்டுவிடக்கூடாது. அதாவது எல்லாத் திசைகளையும் ஒரே சமயத்தில் பார்க்கூடிய கீரியின் முகவாகு கொண்ட அப்பாவின் கண்கள் இப்போது பட்டை கட்டின ஜட்காவண்டிக் குதிரையின் கண்களைப் போல நேர் எதிரே மட்டும் பார்த்தாக வேண்டும். சாத்யமா ? ஏன் சாத்யமில்லை ? ஓரக் கண்ணில் பைரவன் பட்டு, அதன் விளைவாக அப்பா உடுத்திருந்ததை எல்லாம் களைந்துவிட்டு, மீண்டும் ஸ்நானம் பண்ணி, லேட்டாகி , வெள்ளைக்காரனின் அடாவடிக்கு இலக்காக வேண்டிய ஜீவ மரணப் போரட்டத்தில், ஏன் கீரிப் பார்வை பட்டை கட்டின ஜட்காவண்டிக் குதிரைப் பார்வை ஆக முடியாது ? முடியும் ! முடிந்திருக்கிறது. இதோ அப்பா பக் பக் என்று புழுதியில் ஷூ ஒரு சப்தமில்லாத சப்தத்தை எழுப்ப நடந்து தகரக் கதவை நோக்கி போகிறாரே ! கதவு திறக்கிறது. அப்பா மறைகிறார். கதவு மீண்டும் மூடி விழுகிறது.
பைரவன் நின்ற நிலையில்  சலனமில்லை. நான் அவனைப் பார்ப்பதை அக்கா பார்த்துவிட்டால், “ அம்மா ! இப்பவும் இவன் அதைப் பார்த்துண்டு ! என்று கோள் சொல்லி கூச்சலிடுவாள்.

“ கொழந்தைங்கள்ளாம் உள்ளே வந்துடணும். ஸ்கூல்  இல்லேன்னா இதுகள் அடிக்குற லூட்டி ! ” அம்மாவின் திசையில்லாத ஏக சக்ராபத்தியம்.
வீட்டில் பைரவனைப் பற்றிக் குறிப்பிட வேண்டி வந்துவிட்டால் அவன் அவனல்ல. உபாதை தருகிற ஒரு இடையறாத நோயைப் போல,  அருவருப்பான, ஆனால் அறுத்து எறிய வேண்டிய ஒரு மர்மமான உறுப்பைப் போல அவன் ஒரு ‘ அது ’.

நான் பூணூல் போட்ட சின்னையராக நமஸ்காரங்கள் பெறத்துவங்கிய பிறகு பைரவனை நான் பார்க்கக் கூடாது, அவனுடைய நிழல்கூட என் ஓரக்கண்ணிலேனும் படக்கூடாது, பட்டுவிட்டால் உடனேயே ஸ்நானம் செய்து விடவேண்டும் என்ற கெடுபிடி !

இருந்தும் நான் பைரவனைப் பார்ப்பேன். அக்காவின் ரப்பர் சதைகளை அப்பாவின் பிளேடினால் நான் அறுத்துத் தள்ளிய தர்மானுஷ்டானத்தின் சாக்ஷி அவன், எப்படி அவனை நான் பார்க்காமல் இருக்க முடியும் ? நான் பார்ப்பதன் மூலமே அவன் இருந்து கொண்டிருக்கிறான் என்றும், அவன் இல்லாவிட்டால் என் தார்மிகத்துக்கு அவசியமான தூண் போன்ற ஏதோ ஒன்று மறைந்து விடும் என்றும் எனக்குத் தோன்றி இருக்கிறது. அது மட்டுமல்ல. அவன் எங்களைச்  சேவிப்பவன்.  அவனது சேவிதம் இல்லாவிட்டால் சேவிக்கப்படும் தன்மை எங்களுக்கு இராது, அப்பாவுக்கு, அம்மாவுக்கு, அக்காவுக்கு, எனக்கு இராது. இது எங்களையே இல்லாமல் ஆக்கிவிடும். அம்மாவின் விளக்கங்களும், அக்காவின் ரப்பர் துண்டுகளும், அப்பாவின் ஷேவிங் பிளேடுமாகச் சேர்ந்து  சமைத்த என்னுடைய நிலைபேற்றுத் தத்துவம் இது,

இதில் நகைப்புக்கு இடமாக ஏதும் இல்லை. எகிப்தின் ஆதிகால அரசனைப் போன்றவனே நானும், அந்த அரசன் நாலு குண்டங்களில் புகை எழும்பும் புகைக்கோடுகள், தூண்களாக ஆகாசத்தைத் தாங்கின. அரசன் இந்தப் புகைத்தூண்களைப் பராமரிக்காமல் தாங்கின. அரசன் அநுதப் புகைத்தூண்களைப் பராமரிக்காமல் விட்டு விட்டால் ஆகாயம்  ‘ டமால் ’ என்று கீழே விழுந்துவிடும். என்னைப் பொறுத்தவரை பைரவன்தான் இந்தத் தூண். அவன் முற்றத்தில் நிற்காத சமயங்களில் என் மனசில்  ஒரு விபரீத உணர்வு ஏற்பட்டுவிடும். எனவே அவன் நிற்பதைப் பார்த்து நிச்சயிப்பது என்னுடைய சிறு பிரபஞ்சத்தின் தவிர்க்கமுடியாத நியதி ஆயிற்று.

இருந்தும் எனக்கு வேறொரு விசாரமும் பிறந்து விட்டது - எங்கள் வேலியின் தகரக்கதவை அவன் தொட்டு, திறந்து, உள்ளே வந்து முற்றத்தில் நின்றது எப்படி ? அவனைப் போன்று வாழைமட்டையினால் மட்டுமே மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கும் எவனுக்கும் இல்லாத இந்த சமூக சக்தி இவனுக்கு மட்டும் வந்தது எப்படி ? அதுவும் அவனது தர்மத்தையே திடுக்கிடவைக்கிறவனாக எப்படி இவன் இங்கே நின்றுகொண்டிருக்கலாம் ? இதற்காக இவன் கொல்லப்பட்டால்கூட மனுதர்மம் ஆமோதிக்குமே !

அம்மாவிடமிருந்து பதில் இல்லை. அப்பாவிடம் இதைக் கேட்க முடியாது என்பது மட்டுமில்லை. அவரது பழைய ஷேவிங் பிளேடைக்கூட “ பென்சில் சீவணும் ” என்று கேட்க முடியாது. திருடினால்தான் உண்டு.

பதில் பெற முடியாத இந்தக் கேள்விகளை திகைப்பில் ஆழ்த்தி மறையவைத்து விட்டன நான் பெரியவனாகிக் கொண்டிருந்த சமயத்து நிகழ்ச்சிகள்.

திடீரென்று ஒருநாள் பைரவனை எங்கள் முற்றத்தில் காணோம். அப்புறம் அவனை எங்கள் முற்றத்தில் என்றுமே காணோம். இதைத் தொடர்ந்துதான் நான் அவனது பெயர் பைரவன் என்பதையும் அவன் மகாத்மா காந்தியின் கட்சியில் சேர்ந்துவிட்டான் என்பதையும் அறிந்தேன். எனக்கு இந்த விபரங்களைத் தந்தவர் வெங்குமாமா. அவரைத் தான் என்னுடைய  வளர்ந்த பிராயத்தின் முதல் நண்பர் என்று குறிப்பிட வேண்டும்.

மகாத்மா காந்தியின் ஆலயப் பிரவேச இயக்கத்துக்காக ஹரிஜனர்களிடையே தைரியத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் தலைவன் இப்போது, அஹிம்சை வீரன் பைரவன், இப்போது.

 ‘ அது ’ என்ற அஃறினைத் தன்மையை பைரவன் உடைத்து எழுந்து விட்டான். அதுவரை எங்கள் முற்றத்தில் ஒரு அபூர்வமான கருடப் பட்சி இட்ட முட்டை அவன். கோது தனது கதவுகளைத் திறந்துவிட்டது. இப்போது ‘ அது ’ என்ற நிலை மாறி ‘ அவன் ’ ஆகி ‘ பைரவன் ’ என்ற பெயருடன் மனிதார்த்த வியக்திச் சிறகுகளைப் பெற்று எழுய்நுவிட்டான். அவனது சஞ்சாரத்தை நான் ஊர்த் தூஷனைகளில்  ஊடுருவிய அவனது சிறகுகளின் ஆகாய மிதப்புகளாக தொடர்ந்து உணர்ந்து கொணுடிருந்தேன்.

இருந்தும் எங்கள் வீட்டில் அவன் குறிப்பிடப்பட்டால் அவன் அவனல்ல, ‘ அது ’ தான்.

“ அது நின்ற இடத்துலே ஒரு குழி தோண்டு ”.

“அது மாதிரி ஏன் நின்னுண்டிருக்கே ? ”

“ அதுவும் ஒழிஞ்சுது பீடையும் ஒழிஞ்சுது !”

ஆனால் ‘ அது ’ ஒழியவில்லை ! வீட்டிலிருந்து ஒழ்க்கப்பட்ட சில்லறைக் கழிவுகளைக் கொட்டும் குழியாக ‘ அது ’ நீடிக்க ஆரம்பித்தது.

வெள்ளைக்காரனுடன் இருந்த தாறுமாறான உறவுகளில் சலிப்படைந்த அப்பா, சேர்த்துவைத்த பணத்தில் கிராமத்திலேயே ஒரு துணிக்கடை போட்டுவிட்டு தலைப்பாகை, கோர்ட், பெல்ட், ஷீ எல்லாவற்றையும் துறந்தார். துண்டுவேஷ்டி, ஷர்ட் சகிதம் வழக்கம் போல் கடைக்குக் கிளம்பி வந்து வாசலில் நின்று வழக்கம்போல் தமது கீரிப்பார்வையை ஜட்காவண்டிக் குதிரைப்பார்வையாக மாற்றி அமைக்கிறார். ‘அது ’ நின்ற இடத்தில் இப்போது ஒரு குழி. அவ்வப்போது அதற்குள்  நிரம்பும் குப்பையில் எரியும் தீக்குச்சியை போட்டுவிட்டு முற்றத்து மரம் ஒன்றில் ஏறி, இலை, கிளைகளில் ஒளிந்திருந்து வேடிக்கை பார்ப்பேன். குழியிலிருந்து எழும்பும் புகை எகிப்திய அரசனின் குண்டத்துப் புகைத்தூணாக நிற்கும். வீட்டுக்குள் இருந்து வந்த அப்பாவாசலை எட்டியதும் திடுக்கிடுவார். சடேரென்று புகைத்தூணைத் திரும்பிப் பார்ப்பார். அந்தக் கணத்தில் அவர் முகத்திலே தோன்றி மறையும் கலவரம் , ஆம், அங்கே  அந்தக் கணத்தில் அப்பாவின் ஓரக்கண் கண்டது வெறும் புகையை அல்ல பைரவனை. அதாவது, அவன் திடசொரூபியாக தந்த பிரசன்னத்தை புகைவடிவாக்கிய அப்பாவின் கண்ணுக்கு ஒரு புகை வடிவத்தை நான் பைரவனின் பிரசன்னமாக்கிவிட்டேன்.

ஏறத்தாழ இந்தச் சமயத்தில் தான் நான் எழுத்தாளன் ஆனேன், நான் எழுதியவை பிரசுரமானது பின்னாடியே என்றாலும் கூட !
எனது முதல் பிரசுரத்துக்கு வழி வகுத்தது எனது கம்யூனிஸம். ஆயினும் இந்த முதல் பிரசுரத்தின் ஆதாரப் புகைத்தூண் பைரவன். அவனது சமூக இயக்க சக்தியை கம்யூனிஸப் புரட்சிக் கதை ஒன்றுக்காக  இரவல் வாங்கிக் கொண்டேன். அவனது இயக்கம் காந்தீய அஹிம்ஸையைச் சார்ந்தது. எனது புரட்சிக்கதாநாயகனோ வன்முறைகப் போராளி. இருந்தும், முற்றத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்த அவனது நிச்சலனமான புரட்சியும், அப்பாவின் ஷேவிங் பிளேடைத் திருடி அக்காவின் ரப்பர் சதைகளை அறுத்துத் தள்ளிய என் கிளர்ச்சியும்  என்னுள் ஏற்கெனவே இணைந்திருந்தன. இதனால் பைரவனின் அஹிம்சையை கம்யூனிஸ வன்முறையாக்குவதில் எனக்கு எதுவித சிரமும் இருக்கவில்லை.

என் முதல்  பிரசுரமான இந்தக் கதை தண்ணீருக்காகப் போராடுவதைச் சித்தரிக்கும் ‘நீர் நிலை ’. நாயகனுக்கு கதை முடிவில் தடிக்கம்புக் குத்து. அதாவது பைரவனுக்குக் கிடைத்ததையே நான் எனது  கதாநாயகனுக்கு இரவல் பெற்று கொடுத்திருந்தேன்.

ஆம், பைரவன் இறந்த பிறகுதான் என் சிறகுகள் விரிந்தன. வயிற்றில் தடிக்கம்புக்குத்தோடு ஒரு வாரம் மரணப் படுக்கையில் கிடந்த  அவனைப் போய் திருநெல்வேலி ஆஸ்பித்திரியில் பார்க்க வேண்டும் என்று வெங்கு மாமாவிடம் கூறினேன். என்னைத் தடுத்துவிட்ட அவர் தனியாகப் போய்ப் பார்த்திருக்கிறார். அவருக்கு என் தைரியத்தின் மீது அவநம்பிக்கை. அவருக்கு என் தைரியத்தைக் காட்டுவதற்காகத்தான் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன் எனலாம். ஆனால் இதுகூட எனது பயங்குள்ளித்தனத்தினால் நான் செய்த காரியம்  என்ற விதமாகத்தான் வெங்குமாமாவுக்கு தோன்றியிருக்கிறது.

முதல் தடவை நான் எழுப்பிய புகைத்தூணைப் பார்த்து கணநேரக் கலவரம் அடைந்தாலும், போகப் போக இந்தத்தூண் அப்பாவுக்கு ஒரு அத்யாவசியமான தாக்குதலுக்கு உரிய சமூக இலக்கு ஆகிவிட்டது. பிள்ளைகளும் முதலியார்களுமான தம்முடைய மிக அபூர்வமான நண்பர்களுடன்  கூடத்தை அடுத்திருந்த தமது ரூமில் அரசியல் பேசுவார் அப்பா. பேசியபடி அன்றைய செய்தியைப் பற்றிய உச்சகட்ட முடிவுரையை அறுதியிடுவதற்காக எல்லாரும்  முற்றத்துக்கு வருவார்கள். அப்பாவின்  தலை அவரது நாக்கின் துடிப்புத் தாளமால் கிடுகிடுவென்று ஆடியபடி இருக்கும். முடிவில் ஆவேசத்தோடு புகைத்தூணைப் பார்த்துக் கத்துவார் அப்பா.

“ இது காந்தியால் வந்தது ! காந்தியால் வந்தது ! இன்றைக்கு ஆலயப்ரவேசம், நாளைக்கு நடுவீட்டுக்குள் வந்து நின்று உன் பொண்ணைக் குடு, உன் சொத்தில் பாதியைக் குடு ! போச்சு! போச்சு ! ”

முகுந்தனை நான் முதன் முதலில்  பார்த்தது அப்பாவுடன் தான் - அப்பா எனது புகைத்தூணைப் பார்த்து  மேற்கண்டவாறு கத்திய சந்தர்ப்பம் ஒன்றில்தான்.

என் வாலிப வயதைச் சேர்ந்தவன்  என்றாலும், என்னைவிட ரொம்பவும்  முதிர்ந்த பாணியிலேயே முகுந்தன் என்னிடம், அதுவும் “ அப்பா  இருக்கிறாரா ? ”  என்ற விஷயமாக மட்டும், பேசுவான். அப்பா இருக்கும்போது என்னை அவன்கண்டு கொள்வதுகூட இல்லை.

ஹிட்லர் நாகையர் வீட்டு முற்றத்தில் பைரவன் வந்து நின்றதின் அடிப்படை ரகஸியத்தை தான் அறிவதற்குச் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியடைந்த விஷயம் பழையகதை. இப்போது  அது விஷயத்தில் எதிர்பாராதபடி உதவியிருப்பவன் இதே முகுந்தன்தான் என்றால் அதற்குக் காரணத்தை பைரவனிடத்தில் , அவனது பிரசன்னத்திலிருந்து நான் இரவல்பெற்று எழுதிய ‘ நீர் நிலை ’ யில் காண வேண்டும்,  ஏனெனில்,

கதை வெளிவந்திருந்த சமயத்தில் “நீர் தானோ ‘நீர் நிலை’யை எழுதியவர்?” என்ற கேள்வியுடன் அப்பா இல்லாத சமயத்தில் வந்து உட்கார்ந்திருந்து பேச ஆரம்பித்து விட்டான் முகுந்தன். அவன் எனது நண்பனாகியது இந்த சந்தர்பத்தில்தான்.
*
பொதுவாக நவீன இலக்கியாசிரியர்களைப் பற்றியும், இலக்கிய நுட்பங்கள் பற்றியும், விசேஷமாக என் கதையில் இருந்த ஓட்டைகள் பற்றியும் அவன் எடுத்த எடுப்பில் சொன்னவை எனக்கு ஒருவித அதிர்ச்சியையே தந்து விட்டன. விவசாயிகளுக்கு ரசாயன உரங்களையும் பூச்சி கொல்லிகளையும் விற்கிறவன், பெரும்பாலும் கடனாகக் கொடுத்துவிட்டு வசூலிக்க முடியாமல் அலைகிறவன் என்று மட்டும் நான் அவனைப்பற்றி எனக்குத்தெரியும். இவன் ஒரு அபூர்வமான இலக்கிய வாசிப்புக்காரன். இப்போது என் நண்பன்,
அப்பாவின் அத்யந்த நண்பன் ஒருவனை என் எழுத்தின் மூலம் நான் இழுத்து என் பக்கத்தில் போட்டுக்கொண்டதும் இதன் பின்னனியில் எங்கோ பைரவன் நின்றதும் எனக்குப் பரம திருப்தியாக இருந்தன. அப்பாவும் முகுந்தனும் எப்பேர்ப்பட்ட நண்பர்கள்! முன்பெல்லாம், ஏன் முகுந்தன் எனது நண்பனாகிவிட்ட பின்புகூட, அவனுடன் கிடு கிடு வென்று தலை ஆட்டிச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் அப்பா என்னைப் பார்த்ததும் முகத்தில் ரெளத்திர பாவத்தை வரவழைத்து விடுவார். முகுந்தனும் அவருமாக நான் காலியாகும் வரை பேசாமலே உட்கார்ந்திருப்பார்கள். முகுந்தன் எனது நண்பனாகியதில் அப்பாவுக்கு எதிராக ஒரு 'கோல்' போட்டுவிட்ட திருப்தி எனக்கு.

இருந்தும் இந்தத் திருப்தியில் கூட சுகமில்லாமல் போய் விட்டது. அப்பாவுக்கும் முகுந்தனுக்கும் இடையே இருந்த அந்நியோன்னியத்தை விட எனக்கும் முகுந்தனுக்கும் இடையே இருந்த இன்டலக்சுவலான நட்பு ஆழ ஓடி பாதாளங்களில் வேர்களைப் பின்னி பெருவிருட்சமாக நிற்கிறது என்ற அலட்சியமான தன்னம்பிக்கையில் ஒருநாள் அவனிடம் இப்படிக் கேட்டுவிட்டேன்.  ''அப்படி அப்பா உன்கிட்டே என்னதான் அந்தரங்கம் பேசுகிறார் ?''
- இதற்கு வந்த எதிர்வினை என்னை உறைய வைத்து விட்டது. என் கதைகளை ரசிக்கிறானா நையாண்டி பண்ணுகிறானா என்பதை முடிவு கட்ட முடியாத விதத்தில் மணிக்கணக்காக என்னுடன் சில்மிஷம் பேசுகிற முகுந்தன் இந்தக் கேள்விக்கு ஒரு பதிலும் தரவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்கள் சட்டென ஏறி என் தோளுக்குப் பின்னால் யாரோ என்னை விடப் படு முக்யமான ஒருவரைப் பார்ப்பது போல் நின்றன. முகுந்தனை நான் கேட்டதைக் கேட்டபடி அப்பா என் பின்னாடி ? மயிர்க்கூச்சலுடன் நாற்காலியில் இருந்து எழும்பிய நான் திரும்பி பின்னால் பார்த்தேன்.
" யாருமில்லை . " 1-மீண்டும் முகுந்தனின் நாற்காலிக்குத் திரும்பியபோது நாற்காலியிலும் யாருமில்லை. முகுந்தன் முற்றத்தில் இறங்கி விடு விடு என்று தகரக்கதவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். இவ்வளவும் ஏதோ ஒருவித மாஜிக் போல நடந்துவிட்டவை. பார்க்கப் போனால் உப்புச்சப்பில்லாத இந்த சாதாரண நிகழ்ச்சியை மாஜிக் ஆக்கியதே அப்பா என் பின்னாடி நிற்கிறார் என்று நான் உள்ளூரக் கொண்ட கிலிதான். அப்படியானால் இவ்வளவுக்கு என்னை உள்ளூர அறிந்து வைத்திருந்திருக்கிறான் முகுந்தன். அவன் மீண்டும்
என் இருப்பு நிலையை ஏற்று என்னுடன் முன்பு போல் பழக ஒரு வாரத்துக்கு மேல் ஆயிற்று. ஆனால் அப்பாவுடன் அவனது உறவில் எதுவித தொய்வும் இருக்கவில்லை .
போகப் போகத்தான் மு கு ந் த ன் உண்மையில் என்னுடன் இன்டலச்சுவலிஸம் கொண்டாடுவதற்காக என்னை நாடவில்லை என்பதை உணர்ந்தேன். அவன் என்னை வேவு பார்ப்பதுக்காக அப்பாவினால் ஏவப் பட்டவன்! கம்யூனிஸ்ட் கட்சியில் நான் சேர்ந்திருந்ததினால் ஏற்படக்கூடிய குடும்பப் பொருளாதார விளைவுகளையும் நிலபுல விஷயங்கள் பற்றி நான் கொண்டிருக்கக் கூடிய முடிபுகளையும் அறிந்து கொள்வதுக்காக அப்பாவினால் ஏவப்பட்டவன். இது என் ஊகம். ஏனென்றால் “ நீர் நிலை' வெளிவந்திருந்த சமயத்தில் என் காதில் விழுகிறமாதிரி அம்மாவிடம் "எல்லா இழவையும் அங்கச்சிக்கு எழுதி வைத்துவிடப் போகிறேன்'' என்று அப்பா சொல்லி இருக்கிறார்.
அங்கச்சி என்பது அங்காளபரமேஸ்வரி என்ற என் ரப்பர் துண்டுச் சதைக்கார அக்கா- ஏற்கெனவே என்னால் பாளம் பாளமாக சீவித்தள்ளப்பட்டவள்.
அப்பாவின் கூற்றைக் கேட்டுக் கிலிகொள்வதா வேண்டாமா என்ற தோரணையில் நான் அம்மாவைப் பார்த்தேன். அவள், என் கண்ணில் மட்டும் படும்படியாக ''பொசுக்குனு போற பேங்சு'' என்பதை கைவிரல்களால் சாதுர்யமாய் சமிக்ஞையிட்டுக் காட்டினாள்.
- முகுந்தன் என்னுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, அவனது ரிப்போர்ட்டின் விளைவாகத்தானோ என்னமோ அம்மாவிடம் அப்பா அவ்வப்போது கூறும் நிலபுலத் திட்டங்கள் ஒழுங்காகிவிட்டன. ஒரு விதத்தில் முகுந்தன் (இது விஷயத்தில் அப்பாவுக்கு திருப்தி ஏற்படும் விதமாகப் பேசி இருக்கக் கூடும் என்பதில் எனக்குத் திருப்தி
லங்காபுரி ராஜா தான் என்றாலும் எனது கம்யூனிஸைத்தை அவன் ஊடுருவி உள்ளே இருக்கும் உண்மையான ஆளைக் கண்டு விட்டான் என்பதில் மகா எரிச்சல் எனக்கு.
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நான் விலகுவதற்கு ஏற்றவிதமாக என் மனம் மாறியதுக்கும் முகுந்தனே காரணம். அதாவது கம்யூனிஸம் என்பது செயல்முறை அளவில் மார்க்ஸிடமும் ஏங்கல்ஸிடமும் பிறந்த பொது வுடைத் தத்துவமாக சோவியத் ரஷ்யாவின் அதிகாரக் கரங்களில் நிறைவேறவில்லை என்றும், காலங் காலமான ஜாரிஸ ரஷ்ய ஏகாதிபத்திய நோக்கத்துக்குக் கிடைத்துள்ள அதி நவீனமான வலை என்றும் அவன் வாதித்தான் இதற்கு ஆதாரமாக ரஷ்யப் பேரினவாதிகள், உக்ரேனியர் ஜார்ஜியர், அஜர்பைஜானியர், காக்கேஸியர் என்று சுமார் பதினைந்து கலாச்சார தனித்துவம் கொண்ட தேசிய இனங் களை ஒரே யூனியன் ஆக்கி உருக்குலைத்து அவர்கள் மீது ரஷ்ய மொழியையும் உயிர்த்தன்மையற்ற சோவியத் யந்திரக் கலாச்சாரத்தையும் திணிக்கின்றனர் என்று அவன் வாதிடுவான். நான் சோவியத் யூனியனில் மக்கள். கலைகளது மரபு காப்பாற்றப்படுவது பற்றிய விபரங்களை சோவியத் நாடு பத்திரிகையிலிருந்து படங்களுடன் எடுத்துக் காட்டுவேன்.'
- "இது ஏதேச்சாதிகாரத்துக்கு எதிராக மக்கள் தங்கள் கலையுணர்வை விமர்சன மாக்கிப் பிரயோகித்து விடாமல் அதை மழுங்கடிக்கும் வேலை. மாபெரும் ஏய்ப்பு !" என்று அவன் இன்டலச்சுவலாக கூச்சல் போடுவான். அம்மா இருவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்து கொடுப்பாள்.
கூடத்தில் நடக்கும் இந்தச் சர்ச்சையைக் கேட்டபடி தமது ரூமில் ஈஸிச் சேரில் அப்பா கிடக்கிறார் என்பது என் பிரக்ஞையை உறுத்தும். ஏனென்றால் அம்மா எனக்கும் முகுந்தனுக்கும் காபி கொண்டு வந்து கொடுக்கும்போது அப்பாவின் செல்லமான அங்கச்சி ஒரு காபியை அவரது

ரூமுக்குக் கொண்டுபோவாள். ஒரு கையால் கதவை மெள்ளத் தட்டுவாள். கதவு சிறிது திறக்கும். காபி டம்ளர் லோட்டா மறையும். கதவு சார்த்திக்கொள்ளும்.
''நீ என்னைக் குழப்புகிறாய் என்று பத்திரிகைத் தமிழில் நான் பதில் கூச்சல் போட்டு விட்டு அம்மாவிட மிருந்து காபியை வாங்கிக் கொள்வேன். கட்சியை விட்டு நான் விலகியதுக்குக் காரணம் ஸ்டாலினுடன் எனக்கு இருந்த அபிப்ராய பேதம் தான் என்று ஸ்டாலின் மறைந்த உடனேயே வெளியாகிய எனது முதல் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை தந்திருக்கிறேன். ஆனால் கம்யூனிஸத்தின் மீது எ ன க் கி ரு ந் த பிடிமானங்கள் ஏற்கெனவே கையில் ஆவிபறக்கும் அம்மாவின் காபியுடன் முகுந்தன் கொடுத்த அதிரடிகளில் சிதறிவிட்டன.
இந்த சிதறலுடன் அக்கா அங்காள பரமேஸ்வரியின் கல்யாணம், அதற்குள் ஓடிவிட்ட பத்து மாதங்களில் அவள் பிரசவத்துக்கு பிறந்தகம் வந்தது, பிரசவத்தில் சிசு கருப்பையுள் சிக்கி தன்னுடன் அவளையும் கொன்றது. யாவும் ஒன்றன் பின் ஒன்றாக.
ஏனோ கிணறு திடீரென்று இதே சமயத்தில் வரண்டு, தோண்டத் தோண்ட மணலாக மட்டும் ஊற ஆரம்பித் திருந்தது. வீட்டின் நடுவே சிமிண்ட் தரையில் வெடிப்பு. எல்லாமாகச் சேர்ந்து பெரும்புதூர்க் கிராமத்து வீடு, நிலபுலம், கடை, யாவற்றையும் ஒட்டு மொத்தமாக வந்த விலைக்கு விற்பதிலும், சிடைத்ததைக் கொண்டு நாகேஸ்வரத்தில் வீடு வாங்குவதிலும் அப்பாவை ஈடு படுத்தின.
இந்த அலைமோதல்கள் எதுவும் பின் பிரக்ஞையில் எவ்வித வெளிச்சத்தையுமோ சலனத்தையுமோ ஏற்படுத்த வில்லை. ஆனால் அப்பா ஒரேயடியாக எல்லாவற்றையும் இழந்தவராக எண்கண்களுக்குத் தோன்ற ஆரம்பித்து

விட்டார். ஏனோ , ''இது சரி! இது சரி!'' என்று உணர்வு அவரைப் பார்க்கும் போதெல்லாம் பிறகு
ஒரு தோன்றத் துவங்கி விட்டது.
- புதிய வீட்டில் வந்து அடங்கியதும், ஏற்கெனவே சென்னையில் பிரிண்ட் ஆகி முடிந்து கொண்டிருந்த என் சிறுகதைத் தொகுதிக்காக நான் எழுதிய மேற்படி முன்னுரைதான் எனது இரண்டாவது காலகட்டத்து எழுத்தின் ஆரம்பப் படைப்பு.
பழைய பெரும் புதூர் வீட்டை வாங்கியவர்கள் முதலில் வீட்டை இடித்தார்கள் என்றும் பிறகு நின்ற மரங் களை எல்லாம் வெட்டினார்கள், பிறகு இடித்து, வெட்டி எடுத்தவற்றை எல்லாம் விற்றார்கள் என்றும் அம்மாவிடம் அப்பா சொல்கிற தகவல்கள் காதில் விழும். அதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. எனவே பழைய சொத்தை அப்பா விற்றுவிட்டு கலகலப்பான நகரமாய் பரிணமித்துக் கொண்டிருந்த நாகேஸ்வரத்துக்கு வந்ததில் எனக்கு ஏற்பட்டிருந்த திருப்திக்குமேல் எதையும் அறியவோ உணரவோ நான் முற்படவில்லை. அதோடு என் முழுக வனமும் என் சிறுகதைத் தொகுதிக்கான புரூப்களை சென்னையிலிருந்து தபாலில் வரவழைத்துத் திருத்தி அனுப்புவதில் தான் குவிந்திருந்தது.
இந்த முழு அல்லோல கல்லோலத்தையும் ஊடுருவி இவற்றின் பின்னணியில் எழுந்து நின்றது முகுந்தனின் புற்று. நாங்கள் வீடு மாறும் நிலையில் இருக்கும்போது அவனை வேலூருக்குக் கொண்டுபோய் விட்ட செய்தி வந்தது. அம்மா எங்கே ?'' என்று கேட்டாள். அப்பா ('காலில்'' என்றார். நாகேஸ்வரத்தில் பெரிய அளவில் ஒரு துணிக்கடையைத் திறக்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண் டிருந்த அப்பா இடையில் முகுந்தனைப் பார்க்க வேலூர் போய்த் திரும்பி வந்து “வலது கால் தொடை எலும்பில்

என்று தெளிவுபடுத்தியபடி துலாம்பரமாக நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டார்- நான் அறிய, முதல் தடவை யாக. அப்பா மேலும் சரிந்து விட்டார்.
ஆஸ்பத்திரியில் இருந்து முகுந்தன் வெளியேறு முன்பே, என் முதல் தொகுப்பு வெளிவந்து விட்டது. நான் பழைய கம்யூனிஸ்டுகள் கழிதலும், புதிய சநாதனிகள் புகுதலுமாக உள்ளடக்கம் மாறிக் கொண்டிருந்த தமிழ் இலக்கிய உலகின் நடுமையக் கவனத்தை என் அநாயாசமான முன்னுரையின் மூலம் இழுத்துப் போட்டுக் கொண்டு விட்டேன்.
முகுந்தன் திரும்பி வந்த போது அவன் ஏற்கெனவே என் புத்தகத்தைப் படித்து விட்டான் என்பது தெரிந்தது. வலது கைக் கட்கத்துக்குள் இடுக்கிப் பிடிக்கப்பட்ட ஒரே ஒரு கைத்தடியை ஊன்றி வலது புறமாகச் சரிந்தபக எம்பி, எம்பி தடியிலும் இடதுகாலிலுமாக நடந்து வந்த அவன் என்னைப் பார்த்ததுமே அவனது முகத்தில் அதே பழைய இளக்காரமான சிரிப்பு. 'மாஜிக் கம்யூனிஸ முன்னுரையுடன் வந்திருக்கிறதே உன் கம்யூனிஸ கால மாஜிக்குகள்!'' என்ற விடம்பனம். வேஷ்டிக்குள் வலது கால் இல்லாத வெறுமையினூடே முற்றத்து வெளிச்சம். நின்றபடியே பேசிவிட்டு அப்பா வின் ரூமுக்குள் போய்விட்டான். அதற்குப் பிறகு அவனை நான் பார்த்த போது தன் வீட்டுக் கட்டிலில் கிடக்கிறான். காலுடன் போய்விட்டது என்றிருந்த புற்று நுரையூலுக்குப் பாய்ந்து விட்டிருந்தது.
முகுந்தனின் புற்றுக்கு, ஏன் புற்று வியாதிக்கே, காரணம் தெரியாது. உரச்சாக்குகளும் பூச்சி கொல்லி களும் கிடந்த அவனுடைய கிட்டங்கியினுள்ளேயே மேஜை போட்டு உட்கார்ந்திருந்து சிகரெட்டுகளை ஊதித்தள்ளிய

படி புத்தகம் படித்தது ஒரு காரணமாக இருக்கலாம். பூச்சி கொல்லிகளான டி. டி. ட்டி. போன்ற மருந்துகளின் உக்ரமான ரசாயன வீச்சங்களாக இருக்கலாம். எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிய மறுநாளே அவனுடைய வாயிலிருந்து விடிகாலை குபுக் என ரத்தம் கொட்டி இருக் கிறது. அன்றுதான் என்னைப் பேட்டி காண வந்திருந்த இளைய தலைமுறைச் சிறு பத்திரிகைக்காரரிடம் நான் உற்சாகமாய், 'மார்க்ஸிடம் அல்ல, உபநிஷத்துகளில் தான் எனது கேள்விகளுக்குப் பதிலைக் காண்கிறேன்" என்று கூறியிருந்தேன், பரபரப்பாகப் பேசப்பட்ட எனது முக்யமான கூற்று இது, முகுந்தனின் நுரையீரல் புற்றைப் பற்றிய அதே பரப்புடன்.
- சிகிச்சையால் பயனில்லை என்பது நிச்சயமாகி விட்டது. அதே சமயத்தில் பழைய தலைமுறையின் வைதீக உள்வட்டத்து எழுத்தாளர்களும், காந்தீயத்தி லிருந்து மனுதர்மத்தை நோக்கித் திசைதிரும்பியவர்களும், அவர்களது அடியொற்றிகளான புதிய தலைமுறையினரு மாக என் வியாபக வட்டமும் பெருகி விட்டது. பார்
புதிதாக கார் ஒன்றை வாங்கியும் விட்டார் அப்பா..
முகுந்தனைப் பார்க்க அப்பா போகும் வேளை வேறு, காரில் அவர் திரும்பியபின் நான் போகும் வேளை வேறு. முகுந்தனிடம் அப்பா ஏதும் பேசுகிறாரோ அதுவும் என்னைப்பற்றி என்று தோன்றும், அவ்வப்போது தோன்றி மறையும் வெங்குமாமா அவருடன் போய் குமுந்தன் ரூமில் உட்கார்ந்திருப்பார். இது எனக்குத் தெரியும். ஒரு தடவை அவருடன் பேச்சு வந்தபோது, ''அப்பா முகுந்தனுடன் முன்பு போலத்தான்...' என்று என் கேள்விக்கு ஒரு முன்னுரையை ஆரம்பித்தேன். வெங்குமாமா சம்பந்தா சம்பந்தமில்லாமல், வேறு எங்கோ பார் த் த ப டி, க (கம்யூனிஸமோ, காந்தீயமோ, வேதாந்தமோ - எல்லாம்

அததைப் பின்பற்றுகிற உங்ளங்களினால் தான் பவித்திரம் பெறணும்' என்றார்.
நான் பதில் பேசவில்லை . கொஞ்ச நேர மெளனம்.
பிறகு என் தோளைத் தட்டி, 'இது நேற்று அப்பா விடமும் என்னிடமும் முகுந்தன் சொன்னது'' என்று கூறி விட்டுப் போய்விட்டார். அதற்கு அப்புறம் ஏனோ அவருடன் இன்டலெக்சுவலாகப் பேசுவதற்கு கூச்சம் எற்பட்டுவிட்டது எனக்கு.
இருந்தும் முகுந்தனின் மேற்படி கூற்றைப்பற்றி அவனிடமே கேட்கவேண்டும் என்று தோன்றிற்று. நேற்று அவன் முன்னாடி உட்கார்ந்தபோது சட்டெனத் தோன் றியதுதான் இதுவும்.
அவ்வப்போது அவனுக்கு வாய்வழியாக ரத்தம் கொட்டும் என்பது எனக்குத் தெரியும். என் முன்னால் இது நடந்துவிடுமோ என்று எனக்கு ஒரு கிலேசம். இருந்தும் இதுவரை அது நடக்கவில்லை .
அவனது செந்நிற உடல் கருத்து உச்சிவேளையை நெருங்கும் நிழலாகக் கண்ணெதிரிலேயே சிறுத்துக் கொண் டிருந்தது. மறுபுறம் அவனது உயிரின் முழு தீட்சண்யமும் கண்களில் ஏறிக்கொண்டிருந்தது. எனக்கும் அவனுக்கும் இடையே, கண்ணில் பட்டும் படாமலும் ஓரமாக கட்டில் தலைமாட்டுக்குக் கீழே நின்ற செப்புப் பேழையில் இருண்டு கொண்டிருந்தது அன்று அவன் கலக்கிய ரத்தம்.
நான், 'கம்யூனிஸமோ, காந்தீயமோ, வேதாந்தமோ - எல்லாம்...'' என்று தொடருமுன் அவன் குரலுக்குக்குள் யாளிவாய்க் கல்லாக ஏதோ கடகடத்து உருண்டது. அவன் ரத்தக் கக்கிவிடப் போகிறான் என்ற பீதிமேலிட நான்

சொன்ன அவனுடைய மேற்கோளைப் பாதியிலேயே நிறுத்தினேன்.
முகுந்தன் கண்களை மூடிவிட்டுத் திடீரெனத் திறந் தான். கூடவே அவன் குரல் சீறிற்று, ''எனக்கு விஷம் கொடு!'' அவன் கண்கள் என்னை ஊடுருவி ஜொலித்தன. என் தலை என்னையறியாமலே மாட்டேன் என்று ஆடிற்று. முகுந்தன் சிரித்தான்.
''உன்னால் முடியாது. அப்புறம் உனக்கு எதற்கு இந்த வெத்து வேட்டு ஆராய்ச்சி? கம்யூனிஸம், காந்தீயம், வேதாந்தம்..' அவனது சிரிப்பில் அப்போது இருந்த தீவிரமான கூர்மை முன்பு எப்போதும் நான் எங்குமே கண்டிராத ஒன்று. என் உடலில் ஒரு அருவருப்பு, அல்ல வெட்கம் என்றே சொல்லாம், சுய வெட்கம்!
"உன்னால் முடியாது. உன் அப்பனால் முடியாது. எவனாலும் இங்கே இது முடியவில்லை. ஆனால் ஒருவரால் முடிந்திருக்கும். உன் அப்பனுக்கு அப்பன்"
நான் ஒரு மந்திர வலையில் அகப்பட்டவன் போல் முகுந்தன் பேசுவதைக் கேட்டேன்.
எங்கள் தாத்தாவைப் பற்றிய நினைவு எதுவும் எனக்கு இல்லை. எனக்கு விபரம் தெரியு முன்பே அவர் மறைந்து விட்டவர். அவர் பேச்சு எதற்கு ?
"ஏன் இப்படி பேசறே?'' என்று ஏதோ சர்வ சாதாரணமான பந்தி போஜனத்தில் உட்கார்ந் திருக்கும் தோரணையில் என்னையறியாமலே கேட்டது என் குரல். முகுந்தன் ஒரு சீறலுடன் பேச ஆரம்பித்தான். அவன் பேசவே கூடாது என்பது டாக்டரின் கண்டிப்பான உத்தரவு - ஏதோ அவன் பேசாமலிருப்பது அவன து பூரணாயுசுக்கு உத்தரவாதம் என்பது போல.

முகுந்தன் பேசி முடிக்கும்வரை அவனது பயங்கரமான நோய் கூட மெளனித்து நின்றது. ஆரம்பத்தில் அவனது தரவில் உரமிய பாளி என்னைத் தொடர்ந்து விரட்டிற்று. அவனது குரலில் ஒரு வெக்கை வெறிச்சிட்ட கோடை வெய்யிலில் ஆள் நடமாட்டமில்லாத பொட்டல் வெளியின்
வெக்கை.
""உன்னுடைய “ நீர்நிலை'யின் நாயகனை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் உன் அப்பா என்னிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். பைரவனைப்பற்றி உனக்குத் தெரியாத விஷயங்கள், நீ தெரிந்து கொள்வதுக் காகத் தேடிய விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். உன் அப்பாவின் அப்பாவுக்கும், அவர் ரகசியமாக வைத்திருந்த ஒரு பறைச்சிக்கும் பிறந்தவன் பைரவன். ஆமாண்டா பாலூ! பைரவன் உன் சித்தப்பன்டா தப்பாண்டி, என்ற தோரணையில் அல்லாமல் அவனுக்கு
! சேவுகன், சனியன், பைரவமூர்த்தி என்று பெயர் வைத்தார் உன் தாத்தா. அதோடு அவனுக்கு நிலபுலம் வீடு எல்லாவற்றிலுமே பாதியை எழுதியும் வைத்திருக்கிறார். ஆனால், அந்த எழுத்தை அதுவும் அன்றைக்கு நிறைவேற்றிவிட முடியுமா? இருந்தும் பைரவமூர்த்தி விடவில்லை. உங்களை, உன் அப்பனை, உன் அம்மையை, உன் அங்கச்சி அக்காளை, உன்னை சேவிப்பதுக்காக அல்லடா பாலு, அவன் அங்கே உங்கள் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்தது. அப்படி பானால் ஏன்? அவன் அங்கே நின்றதுக்குக் காரணம் நில உரிமை. சொத்துரிமை. நாளாந்தம் நடு வெய்யிலில் அவன் நின் றது தன்னுடைய சொந்த நிலத்தில்! இவ்வளவுக்கும் அவன் கோர்ட்டுக்குப் போகவில்லை. போகமுடியாது. அவனது கேஸை எடுக்கவே ஆள் இல்லை வார்த்தை பேசவுமில்லை. அவன் பேச்சு பிறக்கு முன்பே
. அவன் ஒரு செவிகள் செவிடுகளாகிவிடும். எனவே அவன் தனது பங்கைக் கேட்டது தனது இருப்பு நிலையை உங்கள் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் தான். 'இதோ நான்' என்ற

தனது பிரசன்னத்தின் மூலம் மட்டும்தான். இந்த நிலையை உருவாக்சியவர் உன் தாத்தா. அவரால் முடிந்திருக்கிறது, உங்களால் முடியாது.''
குரல் தான் முகுந்தனுடையது. கருத்துச் சிறுத்த அவனு டைய உருவத்தில் தோன்றி நின்றதுவோ, உச்சிக்கோடை வெய்யிலின் உச்சிவேளையை நோக்கிக் குறுகிக் கொண்டி ருக்கும் பைரவ மூர்த்தியின் நிழல்.
நான் சாவதானமாக்க் கூறினேன், ''நீ பேசக் கூடாது என்பது டாக்டரின் கண்டிப்பான உத்தரவு. அப்படியும் நீ என்ன சொல்கிறாய் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை.''
அவன் தனது வழக்கமான ஏளனப் பார்வையை என் மேல் வீசினான். ''புரியவில்லை ? உன் அப்பா எதற்காக போன வருஷம் பெரும் புதூரில் இருந்த உங்கள் வீடு நிலம் யாவற்றையும் அவசரமாக விற்றுவிட்டு இங்கே நாகேஸ் வரத்துக்கு வந்தார்? அதுவும் புரியவில்லை உனக்கு? புரியும். போ. பெரும்தூருக்குப் போ. நாளைக்குச் சரியாக மத்தியான்னம் பன்னிரண்டு மணிக்கு அங்கே போய் நில். புரியும்.''
இதற்குள் என் பகுத்தறிவு விழித்துக் கொண்டது. உயர இருந்து வந்தது அதன் புன்னகை. "சரி!'' என்றபடி எழுந்தேன். அதற்குள் முகுந்தன் ஒரு பரம களைப்பில் கண் களை மூடிக் கொண்டுவிட்டான்.
மணி பன்னிரண்டைத் தாண்டவில்லை. நான் மின்விசிறியை நிறுத்திவிட்டு காரின் கதவைத் திறந்து வெளியே இறங்கினேன். வெட்டப்பட்ட வாசல்புற மரத்தின் வடுவை என் கண்கள் தேடின. வீடு இருந்த இடத்தில் தாறுமாறாகத் தோண்டப்பட்ட த

மேவி நிரம்பிக் கொண்டிருந்தது. நடு நிசியும் நடு மத்யான மும் ஆவிகளுடையவை என்ற பூர்வ குடித்தனமான குருட்டு நம்பிக்கை மரணத்தின் விளிம்பில் நிற்கிற முகுந்தனு டைய பிரக்ஞையில் பூதாகாரமடைந்திருக்கலாம். இதனை என் தீர்க்கமான பகுத்தறிவினால் ஏளனப்படுத்தி விட்டால் அது காலம்வரை முகுந்தன் என் மீது சொரிந்த ஏளனத்துக்கு ஒரே வீச்சான பதிலாக இருக்கும். நான் எங்கள் வீட்டைச் சுற்றி இருந்த வேலியின் அடையாளம்கூட அற்றுவிட்ட எல்லையைத் தாண்டி கால்வைத்தேன்.
ஒரு ஆழமான கனத்த ஆண் குரலில் இருந்து பிறந்த களுக் என்ற நகைப்பின் ஒலி கேட்டு அடங்கியது. என்னை யறியாத பீதியின் மயிர்க்கூச்சலுடன் நான் பைரவன் நின்ற இடத்தைப் பார்த்தேன். நான் அங்கே எதிர்பார்த்தது ஒரு குழியை, அல்ல, அங்கே குழி இருந்த அடையாளமே இல்லை. மாறாக ஒரு குழியிலிருந்து மணல்நிறமாக எழுந்து பரவிய ஏதோ ஒரு கனமான திரவத்தின் உலர்ந்து போன வட்டம் தான் தென்பட்டது. அதன் மையத்தில் ஒரு பெரிய மணற்குமிழ் எழுந்து உடைந்த தடயம் மெள்ளக் கரைகிறது. அந்தக் குமிழ் தோன்றி உடைந்த சப்தம் தான் நான் கேட்ட நகைப்பொலி.
ஒரு மின் வீச்சுடன் அன்று வரை என் பிரக்ஞையில் உறைத்திராத விபரம் ஒன்று மோதி வந்தது. வீட்டை அப்பா விற்றதின் காரணம் அக்காளின் மரணம் அல்ல. முன் வாசலில் இருந்து பின்வாசல் வரை வீட்டின் நடுவே கிமெண்டுத் தரையில் ஓடிய ஒரு மின்னல் கோடு போன்ற வெடிப்பு! வீட்டையே இரண்டு படுத்தும் தோரணையில் ஓடிய அந்த வெடிப்பை சரிசெய்ய மேஸ்திரியைக் கூப்பிட வேண்டிய என்சிறிய பொறுப்பை யோசித்ததுக்கு மேல் அதுபற்றி மனம் சிரத்தை எடுக்கவில்லை. உண்மையில் அந்த இடத்தின் வழியே நிலம் சொத்தாகப் பிரிந்து சரிந்திருக்கிறது. - அதாவது, நிலத்
 ைப ர வ னி ன் தின் அடியில் எங்கோ மறைந்திருந்த அநாதியான பூமியின்

இந்த விபரீத வக்ரம் பைரவன் பகுதியை உள்வாங்க ஆரம் பித்திருக்கிறது. அப்பாவைக் கிலிகொள்ள வைத்தது வீட்டைச் சரிபாதியாகப் பிளந்த ஏதோ ஒரு அமானுஷ்ய
அ க் க ா ளி சக்தியாகத்தான் இருக்க வேண்டும்.
ன் மரணத்தைவிட இதுதான் அவரைப் பயங்கரமாகத் தாக்கி இருக்கும். என் கம்யூனிஸத்தினால் பைரவனின் பங்கை நான் அங்கீகரித்து விடுவேனோ என்ற பயமும் அப்பாவுக்கு வந்திருக்கலாம்.
யார் மீது, ஏன் என்றில்லாமல் வெறுப்புற்று அதே வேகத்தில் குனிந்து ஒரு கல்லைப் பொறுக்கி குமிழ் எழுந்த வட்டத்தின் மையத்தை நோக்கி வீசி எறிந்தேன். கல் அருவருப்பான 'சக்' என்ற ஒசையுடன் விழுந்த இட த் தி ல் ஒட்டிக்கொண்டது. புதையவில்லை அது விழுந்த இடத்திலிருந்து திரவமோ ம ண லோ எதுவும் சிதறவுமில்லை. ஆனால் நான் பார்த்திருக்கும் போதே கல் உயிர் பெற்று நகரத்துவங்கிற்று. அல்ல, அது மெள்ளச் சரிகிறது. பாரம் அதிகமாக இருக்கும் பகுதி
முதலில் புதையும் சரிவு அது. அதையே நான் பார்த்துக் கொண்டிருந்ததில் எங்கெங்கெல்லாமோ இருந்து வந்த சிறுவர் சிறுமியரும் மனிதர்களும் திடீரென என்னையும் அந்தப் பிராந்தியத்தையும் சுற்றி தரையிலிருந்து முளைத்து எழுந்து நின்றவர்களாகத் தோன்றினார்கள்.
பார்த்ததுமே அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்று தெரிந்தது. அப்படியும் கருத்த சிறுவர் சிறுமியர்களின் முகங்களில், பரட்டையாய் எண்ணெய் காணாமல் சிதறிக் கிடந்த தலைமுடிப் புதர்களினுள்ளிருந்து குழந்தைமையின் பரிசுத்தமான புதுமலர்ச்சியோடு என்னைத் துருதுருத்துப் பார்த்தன கண்கள். பெரியவர்கள் என்று ஓரிருவர்தான். அவர்களுள் ஒரு கிழவன், லேசான கூன லோடு என்னை நோக்கி, விடாமல் பின் தொடரும் நோக்கத்தோடு வருபவன்போல் ஒரு கைக்கழியோடு வந்து

கொண்டிருந்தான். கைக்கழி அவனது ஊன்று கோலாக இருக்கலாம். ஆனால் இப்போது அதை அடிப்பதற்காகத் தாக்கிய பாவனையில் பிடித்திருந்தான். அதன் நுனியில் ஏதோ நார்த்துண்டுகள் போல் முடிச்சுப் போடப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன. என் முன் வந்து நின்ற அவன் நிமிர்ந்து என் கண்களை ஊடுருவிப் பார்த்தான். வழுக்கைத் தலையைச் சுற்றிச் சிதறிக் கிடந்த நீளமான நரையும் ஜடையுமான தலைமயிர். முகத்தில் கருப்புத் தோல் சூரியனால் பதனிடப்பட்டு உழுத நிலமாக எண்ணற்ற கீறல்களுடன் முக எலும்புகளிலிருந்து தொங்கிற்று. மூக்கு ஆச்சர்யமாக நான் எங்கோ ஒரு கோவிலில் கண்ட ரதமண்டபத்தினது கல்யானைபோல் திமிறியபடி முகத்திலிருந்து புறப்பட்டு நின்றது. புதர் மண்டிய புருவத்தின் கீழே ஒரு இருண்ட ஆழத்தில் தேடிக் கண்ட ஜலமாக மின்னின கண்கள். அப்படியும் கிழவனுக்கு பார்வை கம்மி-- என் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு என் தலையிலிருந்து கா ல் வ ரை குனிந்து இருட்டில் தேடுபவனாகப் பார்த்தான். சட்டென இரண்டு எட்டு பின்னே வைத்தான்.
"பாத்தியா தாத்தா? முகுந்தன் மாமா இல்லே! இது ஆரோ!" என்றது என் முதுகுத் தண்டுக்கு நேர் பின்னாடி ஒரு சிறுவனின் குரல்.
கிழவன் குறி தவறாமல் மிக மிக மெதுவாகப் புதைந்து கொண்டிருந்த என் க ல்  ைல ச் சுட்டிக் காட்டி '' கல்லடிச்சயா?'' என்றான்.
“ஏன் கேக்கறே?'' ஆணித்தரமாக, ஒருவித அதிகாரத் துடன் இந்தப் பதில் கேள்வியை நான் கேட்டபோது என் குரலின் நடுக்கம் எனக்கே ஆச்சர்யம் தந்தது. குரலைச் செறுமிச் சரிசெய்து கொண்டேன். ஏனோ அவர்களுக்குத்

தெரிந்த முகுந்தனை எனக்கும் தெரியும் என்று சொல்லி ஏதும் அசம்பாவிதத்திலிருந்து தப்பிக்கத் தோன்றவில்லை.
என் பின்னாடி மீண்டும் அதே சிறுவனின் குரல் எனக்குப் பதில் சொல்லிற்று, ''சரியா பகல் பனிரெண்டு மணிக்கு பூமி கொப்பளிக்கும். முகுந்தன் மாமா தான் இதைக் காட்டினாரு, இது பைரவ மூர்த்தியின் பூமின்னு சொன்னாரு. கல்லடிக்கக்கூடாது. கும்பிட ணும்.' நான் திரும்பி பதில் சொன்னவனைப் பார்க்காமல் கார் கதவைப் திறந்து ஏறி ஸ்டார்ட் பண்ணினேன். பின்னடித்து எங்கள் பழைய நிலத்துப் புறமாக காரின் பின் புறத்தைத் திருப்பி மீண்டும் முன்னேறி மெயின் ரோடை நோக்கித் திரும்பினேன்.
காரை ஓரளவுக்கு வேகம் ஏற்றியதுமே கார்மீது ஆலங் கட்டி மழை பொழிந்தது போல சிறு சிறு கற்கள் வந்து விழுந்தன.
ஒரு கல் மட்டும் கார் ஜன்னலூடே பறந்து வந்து என் தலையின் வலப்புறத்தைத் த ா க் கி ய து. நான் வலியைப் பொருட்படுத்தாமல் அந்தப் பிராந்தியத்தை விட்டே ஓடிவிடுவதில் கவனத்தைக் குவித்திருந்தேன். இதனால் என் தலையில் இருந்து கசிந்த ரத்தத்தை நான் முதலில் கவனிக்கவில்லை .
*****

II. சிரோமணி வெங்கடேசன் எழுதியது (தட்டச்சு : ரா ரா கு)


மேலே உள்ளவை அடங்கிய ஒரு பைலை நான் என் சகோதரி வீட்டில் ஒரு ரசீதைத் தேடும் போது பார்க்க நேரிட்டிருக்கிறது. அதுவும் முகுந்தன் எந்த விநாடியும் உயிர் நீத்துவிடக்கூடிய நாள் என்று நாங்கள் நினைத்திருந்த சில நாட்களுள் ஒன்று அது. என் சகோதரியின் மகன், அதாவது என் மருமான், ‘ பாலு ’ என்ற பாலசுப்ரமணியம் மேலே தந்துள்ளவற்றில் சில விஷயங்கள் தெரிந்தே மறைக்கப் பட்டுள்ளன. பாலு ஒரு எழுத்தாளன் இருந்தாலும் ஒரு மனிதன். அதிலும் சில்லரை மனிதன். எனவேதான் தமது தந்தையின் தந்தையான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் ஆயுர்வேதத் துறையில் நன்கு தெரிய வந்துள்ளவர். ‘ நீலகண்ட நவநீதம் ’ என்ற சமஸ்கிருத நூலின் ஆசிரியர். பாலு இந்த விபரங்களை மழுப்பியதற்குக்  காரணம் உண்டு.


ஸ்வர்ண சாஸ்திரிகளின் ஏழாம் தலைமுறைப்பிள்ளை ருத்ரமூர்த்தி. ஆறு தலைமுறை வரைதான் சாஸ்திரி என்ற பட்டம் தொடர முடியும். வீட்டுக் கல்வியின் வீக்ஷண்யம் அத்துடன் கலைகிறது. ஏழாம் தலைமுறைக்காரன் மீண்டும் வேதத்யயனாதிகளையும் இதர சாஸ்திரங்களையும் ஒரு குருவின் கீழ் கற்று சாஸ்திரிப்பட்டத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் திருவிடைமருதூர் கிருஷ்ண சாஸ்திரிகளிடம் அமர்ந்து கற்றுத் தெளிந்து சாஸ்திரியாகிவர் ருத்ரமூர்த்தி. இவரது மூத்த பிள்ளையான நாகையர் இரண்டாம் தலைமுறையினராதலால் சாஸ்திரி என்று அழைக்கப்படுவதில் தடை இராது. ஆனால் அவர் அழைக்கப்பட்டது ‘ஹிட்லர்’ என்றுதான். இந்தப் பட்டத்தை நாகையருக்கு வழங்கியவர் அவரது பிதாவான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளே என்பதும் இது பாலுவுக்கு, சுயமாகத்தெரியாவிட்டாலும் என்னைப் போன்றவர்கள் மூலம் நன்றாகவே தெரியவந்த விஷயம் என்பதும் கவனத்துக்கு உரியவை. இந்தப் பட்டத்தை ஒரு சாபம் போன்று தமது மூத்தபிள்ளையின் மீது வீசிவிட்டு சாஸ்திரிகள் வெளியேறியது 1939ல். பிறகு அவர் வீடு திரும்பவில்லை. சந்யாசியாகி விட்டதாக ஒரு வதந்தி எழுந்து நிலைத்து விட்டது. 1939ல் பாலுவுக்கு வயது ஏழு. குடும்ப உலகில் வெடித்து ஊரில் மோதி அதிர்ந்த இந்த நிகழ்ச்சியை மறந்திருக்கக் கூடிய வயது அல்ல அது.

ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் வெளியேறிய மறுநாளே பாலுவின் விறைத்த விரல்களில் இருந்து ‘பைரவன்’ என்றும் ‘அவன்’ என்று்ம் புறப்படுகிற மஹாகனம் பிரம்மஸ்ரீ பைரவமூர்த்தி சாஸ்திரிகள் நாகையரின் வீட்டு முற்றத்தில் தமது மௌனப்போரை ஆரம்பிக்கிறார். அவர் ஏன்  அங்கே அவ்விதம் நின்றார் என்பது பாலுவுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியவந்து ஆழ வேரூன்றி உறுதி பெற்றுவிட்ட விஷயமாகும். இதை தமது விவரணையின் சுவாரஸ்யத்துக்காவே மறைத்து முகுந்தன் மூலம் இறுதியில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் கதாசிரியர் பாலு என்று நியாயப்படுத்தலாம். ஆனால் எப்போதுமே சுத்தமான பஞ்சகச்சதாரியாக விளங்கிய பைரவசாஸ்திரிகளுக்கு ஏன் வாழைமடலாடை கட்டி இருக்கிறார் பாலு? என்ன இருந்தாலும் பைரவர் ஒரு பறையர் என்று காட்டி, அந்தப்பறையர் மீது தமக்கு மட்டும் ஒரு புரட்சிகர அக்கறை இருக்கிறது என்று பந்தாபண்ணுவதற்குத்தான் என்கிறேன். இதற்கு அத்திவாரமாகவே பைரவரின் சாஸ்திரீய ஆளுமையைக் கூட மறைத்திருக்கிறார் ஸ்ரீமான் பாலு. இதற்கும் அடியில் கிடந்து பாலுவை அரிக்கும் விஷயம் அவரது பிதாவான நாகையரை ‘ஹிட்லர்’ ஆகக்கண்ட அதே தாதரான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள், ஒரு பறையனை சாஸ்திரியாக்கி இருக்கிறார் என்பதுதான். இதில் பயங்கர கொதிப்பு அடைந்திருந்த பார்ப்பனர், முதலிகள், பிள்ளைகள் பலருடன் பாலுவுக்கு நல்ல கொண்டாட்டம் உண்டு. இதனால்தான் அவரது புரட்சிகர கம்யூனிசப் போக்கை நான் மதித்ததில்லை.

தமது பிதாவின் மூலம் தமக்கு இயல்பாக வந்து விழுந்திருக்கக் கூடிய சாஸ்திரிப்பட்டத்தை இழந்தமையாலேயே புதிய புரட்சிகரப்பட்டங்களைத் தேடி ஓடியிருக்கிறார் பாலு. இதோடு, இந்தப் புரட்சிவாதிகளின் அதே இருட்டடிப்பு முறையைப் பின்பற்றி தமது தாதையாரான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளின் பெயரையே சரித்திரத்தில் இல்லாமல் பண்ணியிருக்கிறார் ஸ்ரீமான் பாலு, நிற்க!

ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளின் அதேவிதமான ஆழ்ந்த மனோபாவம் கொண்ட அறுபது பிராம்மணர்களின் முன்னிலையில் பைரவமூர்த்தி என்ற இருபத்தொரு வயதுப் பறையர், சமஸ்கிருதத்தில் தமது சாஸ்திர ஞானத்தை நிரூபித்து தந்தையின் பட்டத்தை சுவீகரித்தார். தலைமுறை வழியில் சுதாவாகவே இதை சுவீகரித்திருக்கவேண்டிய நாகையர் தமது தந்தையினால் சாஸ்திரியாகப் பட்டம் பெற்ற பைரவரை ‘தீண்டத் தகாதவன்’ என்று ஓயாது தலையை ஆட்டி ஆட்டி, தந்தை முன் விரலை நீட்டிக் காட்டிக் காட்டி தமது நாக்கின் விறைப்பை நிரூபித்து, ஹிட்லரானார்.

பாலு இந்த விஷயங்களை மறைத்திருப்பதை நியாயப்படுத்தினாலும் கூட ‘பைரவமூர்த்தி கோயில்’ என்று அவர் தமது விவரணை முடிவில் குறிப்பிடும் இடமான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளின் பூர்வீக நிலத்தில் நடந்ததாக பாலு எழுதியுள்ள ஒரு நிகழ்ச்சி பெரியதொரு பொய்யாகும். பாலுவின் கார் மீதோ, அவர் மீதோ, எவரும் கல் வீசவில்லை. இந்த எனது கூற்றுக்கு நம்பகமான சாட்சியத்தை என்னால் ஆஜர்படுத்த முடியாது என்று பாலு கூறுவாரேயானால், அந்த இடத்தை கோவில் என்று கூறிய சிறுவனை அவர் திரும்பிப் பார்க்காதததை நினைவூட்டுவேன். பார்த்திருந்தாரேயானால் சிறுவனருகே நின்றுருந்த என்னை அவர் கண்டிருப்பார்.

இவ்வளவு தூரம் விஷயம் வெளிப்பட்டுவிட்ட பின்பு கீழே நான் தருகிற இரண்டு கடிதங்கள்  ரகசியமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நீலகண்ட நவநீத’த்தினை தான் தமிழாக்கம் செய்யவேண்டும் என்றும், அதன் முன்னுரையில் இந்த கடிதங்கள் மூலம் வெளிப்படும் விஷயம் தரப்படவேண்டும்  என்றும் முகுந்தன் யோஜனை சொல்லி இருந்தார். ஆனால், ஸ்ரீமான் பாலு செய்தள்ள கைங்கர்யத்தினால் இந்தக் கடிதங்களை இப்போதே வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. எதற்கும் முகுந்தனிடம் ஒரு வார்த்தை சொல்லி விடலாம் என்று நினைத்த போது பாலுவே போன் பண்ணினார் - முகுந்தனை இனி எந்த வார்த்தையும் இனி எட்டாது.






III. முகுந்தன் கடிதம்




                                                                                                   விருதுநகர்க் கொடி, 25-11-59


மஹாகனம் வெங்கு அவர்களுக்கு முகுந்தன் நின்று கொண்டு அவசரமாக எழுதியது. இதற்குரிய பதிலை நாகேஸ்வரத்துக்கு விபரமாக எழுதி அனுப்ப வேண்டும். மறந்து விட்டது! அநேக நமஸ்காரங்கள்.

ஹிட்லாராத்து சமாச்சாரம் ரொம்ப ‘டீப்’ என்றீர்கள்! ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனவன் வந்திருந்த பாலுவை தற்செயலாகப்  பார்த்தேன். வயிற்றில் தடிக்கம்புக் குத்தோடு பைரவ சாஸ்திரிகள் கிடந்தபோது நீங்கள் போய் பார்த்திருக்கிறீர்கள் என்பது எனக்கு நீங்கள் சொல்லி தெரியும். ஆனால் விருதுநகருக்கு நான் ஏறிய தூத்துக்குடி பாஸஞ்சர் நகர ஆரம்பித்ததும், என் ஜன்னலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் நடந்து வந்தபடி பாலு அடிக்கோடு போட்டான். --“ வெங்கு மாமா போய்ப்பாரத்து பேசினார்.’ அடிக்கோடு ‘பேசினார்’ என்ற பதத்தில்  உங்கள் ‘டீப்’ ரயிலின் கடகடப்பாக எனக்குள் தத்தளிக்க ஆரம்பித்தது.

எனக்கு சொல்ல வேண்டியதை எல்லாம் ஹிட்லர் சொல்லி விட்டாரே என்ற ஹோதாவில்தான் அப்படிப்பேசினேன். ஆனால் சாஸ்திரிகளுடன் ஹிட்லர் பேசியதில்லை. நீங்கள் பேசி இருக்கிறீர்கள். அதுவும் அவரது கடைசி நாட்களில். இதில்தான் நீங்கள் குறிப்பிடும் விஷயம் இருக்க வேண்டும். இந்த ஏழு நாட்களுக்குள் நான் மீண்டும் திருநெல்வேலி வரமுடியாது, இங்கே ஒரு உர ஏஜண்டுடன் பேசிய பிறகு ஊரில் கணக்கு  வழக்குகளுக்காக அலைய இருக்கிறது. எனவே பதில் எழுதவேணும். தமியோனை க்ஷமித்து, விபரங்களுடன்

                                                                                                                 தங்கள் ஆத்மபுத்ரன்
                                                                                                                        அ.கி.முகுந்தன்

IV. வெங்கடேசன் கடிதம் 
திருநெல்வேலி, 30.11.1959 சிரஞ்சீவி முகுந்தனுக்கு அநேக ஆசீர்வாதங்கள். வீட்டில் யாவரும் க்ஷேமம், ஆனால் அது பற்றி நீ கேட்டு எழுதவில்லை. காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிண்டிருந் தாயானால் கேட்டிருப்பாய். விடு.
பைரவ சாஸ்திரிகள் சம்பந்தப்பட்ட இந்த விஷயம் இப்படி கடுதாசியில் ஏறி உட்காருவது நல்லது என்பதால்
லங்காபுரி ராஜா
பதில் எழுதுகிறேன், ஆனால் இது பாலுவுக்கு தெரிந்து விடுகிற மாதிரி உன் வாய் உளறிவிடப் போறது. அவனுக்கு இது ளிஷயங்கள் புரிகிற மனோபாவம் இல்லை ,
ருத்ர மூர்த்தி சாஸ்திரிகளின் பச்சிலைகளையும், ஸ்புடங்களையும் பற்றிச் சொல்லி இருக்கிறேன். அவரது நிபுணத்துவம் பச்சிலையில் தான், வாகடங்களில் சொல்லப் பட்ட மூலிகைகளுள் அது வரை வைத்யப் புழக்கத்தில் இருந்திரா தவற்றை தாமே பணம் செலவு பண்ணி தேடி அலைந்து கொண்டு வந்திருக்கிறார். இ த ற் க ா க பாரதவர்ஷ த்தின் அபாயகரமான வனாந்தரங்களிலும் மலைகளிலும் பராக்ரமத்துடன் சஞ்சரித்திருக்கிறார். இதன் விளைவாக அவர் மூலம் மூலிகை ஞானம் விரிவு பெற்று ஆயுர் வேதத்துறை புனர்ஜனனம் பெற்றிருக்கிறது, ஆனால் இரும்பைப் பொன்னாக்கும் ரஸவாதத்துக்கான மூலிகை எதையோ தேடித் தான் அவர் பைத்யம் பிடித்து அலைந் தார் என்று ஒரு அவதூறு உண்டு. இதை ஹிட்லர் உன்னிடம் சொல்லியிருப்பாரே? ஏனென்றால் பிதாவைப் பற்றிய இந்தப் புரளியின் பிதாவே ஒஹிட்லர் தான்,
ஹிட்லர் கண்ட பிதா அது என்றால், பைரவ சாஸ்திரி கண்ட பிதா முற்றிலும் வேறு விதமான வர். நான் தம்மை வந்து பார்க்க வேண்டும் என்று பைரவ சாஸ்திரி சொல்லி அனுப்பினதை பாலு உனக்குத் தெரிவித்திருக்க முடியாது. ஏனென்றால் அதை நான் பாலுவுக்குக் குறிப்பிடவில்லை,
*பேசப்படாது' என்ற வைத்தியக் கட்டுப்பாட்டையும் மீறி என்னிடம் பைரவர் தான் பேசினார். நான் பேச வில்லை, போய் அவருடைய கட்டிலருகே நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தேன். கில காந்திக்காரர்கள் மாறி மாறி அவருக்கு உதவியாக இருப்பதைப் பார்த்தேன். பைரவ சாஸ்திரியின் கால்மாட்டில் தாயார் பெ த் தம்மை உட்கார்ந்திருந்தார்கள், அவரது முகத்தில் கவிந்திருந்த புத்ரசோகம் ஒரு அபாரமான உக்ரத்தின் உள்ப்பிழம்பில் விஸ்வ வேதனையாக வடிவெடுத்திருந்தது. அ வ ன ர க காட்டி, "அம்மா" என்று பைரவர் அறிமுகப்படுத்திய போது “நமஸ்காரம்" என்று கைகுவித்தேன். அவர் தமது குழந்தையின் பாதங்களில் தேங்கிக் கிடந்த கைகளைச் சேகரித்து உயர்த்தி பதிலுக்குக் குவித்தார்.
"உங்களிடம் இதைச்சொல்லி விடவேண்டும் என்பது அம்மாவின் உத்தரவு'' என்று லகுவான பரிகாசத்தோடு ஆரம்பித்தார் பைரவர். "உங்கள் சம்பந்தி வீட்டு வாசலில் நான் நின்ற இடத்தில் குழி ஒன்று பறிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறார் அ ம் ம ா, அது தான் அவரது இந்த உத்தரவுக்குக் காரணம். முதலில் அவர் கேள்விப் பட்டது உண்மை தானா என்று தெரிய வேண்டும்!''
"உண்மை தான்" என்றேன் ந ா ன், உ ட லி ல் வெட்கத்தின் அருவருப்பு ஒடியது, குழிக்குள் குப்பை போட்டு எ ரி க் க வு ம் படுகிறது-எரிப்பவன் பாலு-- என்பதையும் நான் சொல்லி இருந்திருக்கலாமா என இப்போது தான் நினைக்கிறேன்.
சரி அப்படியானால் இதை உங்களுக்குச் சொல்லிவிடுவது அவசியம்'' என்ற பைரவ சாஸ்திரிகள் பின் வரும் விபரங்களை மெதுவான கு ர வி ல் சாவதானமாகச் சொன்னார். விபரப்பூர்த்தியை மு ன் னி ட் டு நான் அங்கங்கே விரிவு செய்திருக்கிறேன். இந்த விரிவுகூடப் போதாது தான்,
ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளின் மூலிகை (வேட்டைக்குத் துணை யாக தைரியம் கொண்ட சீடர்கள் தான் பெரும் பாலும் போவதுண்டு. சில வேளை யாரேனும் ஓரிரு மூட்டை தூக்கிகளை கூலிக்கு அமர்த்திக்கொண்டு தனியாகவே கிளம்பிவிடுவார். இப்படிக் கிளம்பிய ஒரு சமயத்தில் இங்கே திருநெல்வேலிக் காட்டருகே இரண்டு கூலிகளுள் ஒருவனை நாகம் தீண்டி விட்டது. உடனே
அவனுக்கு கைவைத்யம் செய்து, மற்றவனின் கைத்தாங் கலோடு திருப்பி அனுப்பி விட்டு எதிரில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒருவனிடம் இங்கே மூட்டை தூக்க ஆள் கிடைக்குமா?' என்று சாஸ்திரிகள் விசாரித்திருக்கிறார். * "நானே தாக்கறேனுங்க சாமி. எனக்கு காடு மேடெல்லாம் அத்துபடி சாமி" " என்று அவன் அன்றைய வழக்கப்படி வார்த்தைக்கு வார்த்தை 'சாமி' போட்டுக் கூறியபடி குழைந்திருக்கிறான், உன் ஜாதி என்ன?' என்றார் சாஸ்திரிகள்,  ''நான் சாதியில்லாத மனுசனுசாமி பறையனு சாமி!''
சத் தி சாலையமாக கத்துத் )
என்படக்கூடிய தலம். மேலும் இது என்னைப்
ரு த ர மூர்த்தி சாஸ்திரிகளுக்கு இதில் வியப்பு: பிராம்மணனின் முன் தைரியமாக கண்காண் நின்று அவன து மூட்டையை வேறு ஸ்பரிசித்துத் தூக்கிப் போகிறானாம். ஆனால் தான் பறையனாம், அவனுடன் ஏற்படக்கூடிய தீண்டுதல் எதையும் மந்திரங்களின் ஜ்வாலை நீறாக்கி விடும், மேலும் இது கலி காலம். தீபங்களே தலைகீழாக எரிவதை அவர் சென்னைப் பட்டிணத்தில் பார்த்துவிட்டு வந்திருக்கிருர், '' சரி தூக்கு!'' என்று மூட்டையைக் காட்டிவிட்டு கைத்தடியுடன் முன்னே நடந் தார் சாஸ்திரிகள், ஓரளவு வயோதிபனானாலும் ப னி  ெர ண் டு வயதுச் சிறுவனின் உற்சாகத்தோடு மூட்டையைத் தூக்கியபடி சாஸ்திரிகளை முத்திக்கொண்டு முன்னே ஓடுவதும், நின்று கடைக்கண்ணால் அவரைப் பார்ப்பதும் அவர் கண்டித்தால் அவர் பின்னாடி கொஞ்ச நேரம் ஒழுங்காக வருவதும் மீண்டும் ஓடுவதுமாக அவன் தொடர்ந்தான். ஆனால் பாதை காட்டுவதிலும் சில பூண்டுகளைக் கொண்டு அங்கே சஞ்சரிக்கும் மிருகங்களை இனங்காட்டுவதிலும் அவன் வெளிப்படுத்திய பிரதேச ஞானம் சாஸ்திரிகளுக்கு அவனை இன்றியமையாதவனாக் கிற்று. ஏற முடியாத பாறைகளின் உயரத்து இடுக்குகளில் கண்ணுற்ற மூலிகைகளைச் சேகரிக்க அவர் தவித்தபோது அவன் அவரைத் தனது தோள்மீது ஏற்றி நின்று மூலிகை எட்ட உதவினான். இரவு வேளைகளில் சுற்றிலும் தீமூட்டி நடுவே சாஸ்திரிகளைத் துயில் வைத்து காவலிருந்தான். குடுவையில் நீர் தீர்ந்து விட்டால் எங்கே சுனை இருக்கிறது என இடமறிந்து வழிகாட்டினான். அது வரை சாஸ்திரி களுக்கு இவ்வளவு நிபுணத்துவம் உள்ள மூட்டைத் தூக்கி கிடைத்ததில்லை . கா ன க த் தி னு ள் வ ா ம் ந ா ள்
முழுவதையும் கவலையில்லாமல் கழிக்கக்கூடிய அளவு நீர், உணவு, பாதுகாப்பு யாவற்றையும் அவனிடமிருந்து ஒரு சுக்லபக்ஷத்திலேயே கற்றுவிட்டார் சாஸ்திரிகள்.

தாவரப் பிரபஞ்சமாகப் பரவிச்செறிந்த கானகத்தின் பசிய இருளினுள் தன்மயத்தினது வக்ரமான சுயமுக ரஸனைகள் மடிந்துபடுகின்றன. கொடிய விலங்குகளின் பதுங்கு பிலங்களில் இருந்து பிறந்து ஒரு தைலதாரையாக விரிந்தபடி இருக்கிறது மரணவெளி. அதற்கு அஞ்சுவோன் கானகத்தின் எண்ணற்ற இரைகளுள் ஒன்று. அஞ்சாத உள்ளத்தினுள் மரணம் தியான போதம் பெறுகிறது. உயிரின் மிகத்தீவிரமான விழிப்புணர்வு பெற்ற உள்ளங்கள் அத்தகைய கானகங்களை சாந்நித்ய கேந்திரங்களாக்கின்றன. அந்தக்கேந்திரத்தில் பறையனும் இல்லை பிராம்மணனும் இல்லை. ஆனாலுங்கூட மூட்டை தூக்கியின் ஸ்பரிசத்தை நீறாக்கும் மந்திரங்கள் சாஸ்திரிகளின் மனநாக்கில் இடையறாது உருண்டபடிதான் இருந்தன.

சில மூலிகைகளை இனம் காணுவதற்கும், அவை இருக்குமிடங்களை அறிவதற்கும் உள்ளுணர்வு, அல்லது வாகட வித்வம் வேண்டும். நிச்சயமாக மூட்டை தூக்கிக்கு வாகடம் பற்றி எதுவும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இருந்தும் அபூர்வ மூலிகைகளைக்கூட இனம் காணும் சக்தி மூட்டை தூக்கிக்கு இயல்பாகவே அமைந்திருப்பதை கவனித்தார் சாஸ்திரிகள். சிறுபுலிக்காலிலை, விஷ தாழையிலை போன்று, வாகடங்களிலேயே அபூர்வமாகக்  குறிப்பிடப்படும் மூலிகைகளின் பெயர்கள் தெரியாவிட்டாலும் பல்வேறு சிறு தாவரங்கள் பின்னிப்பிணைந்த புதர்களினுள்கூட ஒளிந்திருந்த அவற்றை மூட்டை தூக்கி குறிபார்த்துக் கைநீட்டி வேரோடு கல்லி எடுத்து சாஸ்திரிகளின் முகத்துக்குக்காட்டி, “சாமி! இது?” என்று குழந்தைபோல் காட்டிக் கேட்டபோது “இது எப்படி” என மனம் குழம்பினார். மூட்டை தூக்கியின் ஸ்பரிசத்தை நிர்த்தாரணம் செய்ய அவர் மானசீகமாக உருட்டிய மந்திரங்கள் மூலாதாரத்தை நோக்கி வெட்கிச்சுருண்டன. தொடர்ந்து நடந்தார்கள்.

கானக விருட்சங்கள் அபூர்வ ஜாதி மரங்களாகச் செறிந்து ஈவு இடை குறைந்து கொண்டிருந்தது. சாஸ்திரிகளுக்கு திக்குத்திசை பிசகிவிட்டது. ஆனால் மூட்டை தூக்கிக்கு எதுவுமே பிசகவில்லை. அவர்கள் ஆரம்பித்த கிராமத்தின் திசை, தூரம், அந்த வேளையில் எத்தனை நாழிகை என்ற கணக்கு உட்பட அவன் ஒருதடவை அவரை நோக்கித் திருப்பித் திடீரென ஒப்பித்தபோது, அவரது மனக்கிலேசத்தை எப்படியோ உணர்ந்து ஆசுவாசம் தரும் தோரணை தெரிந்தது.

அப்போது அவர்கள் வந்துகொண்டிருந்த இடத்தில் விருட்சங்களின் வயது ஐநூறாண்டுகளைத் தாண்டியிருக்கலாம். அவற்றுக்கும் முந்திய மரங்கள் முதுமையினால் இறுகிக்கல்லாகிக் கொண்டிருக்கும் நிலை. எங்கும் மரப்பாறைகளின் திடீர்த்தோற்றங்கள் ஒரு எல்லையற்ற அநாதியான கோவிலின் சிதைவினூடே இந்த ஆரண்யம் தலையெடுத்தாற்போன்ற உணர்வைத் தந்தன. ஒவ்வொரு மரமும் மாபெரும் கோபுரங்களின் சுற்றளவுக்குப் பருத்து, அருகே நின்று அண்ணாந்து பார்த்தால் செங்குத்தான மலைச்சரிவு போல் எழுந்து உயரத்தில் எங்கோ ஒரு தூரத்தில் கிளைகள் வீசிச்செறிந்த இலைகளுடன் நின்றன. மரங்களிடையே பின்னிப் படர்ந்து உயரத்துக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த கொடிகளின் பருமனை ஒரு மனிதனது இரண்டு கைகளினால்கூட வளைத்துப் பிடிக்க முடியாது. உச்சிவேளைச் சூரியனின் வெளிச்சம்கூட சரிவர ஊடுருவாத கர்ப்பக் கிருகத்து அரை இருள் அங்கே நிலவியது. எங்கோ, அருகில் காலதேச வரம்புகளை மீறிய மகாசக்தி ஒன்று இடையறாது தோன்றியபடி நிற்கும் உணர்வு. தமக்குப் பின்னால் நின்ற மூட்டை தூக்கியை சாஸ்திரிகள் திடீரென திரும்பிப் பார்த்தார். உடனே அந்த அபூர்வ உணர்வு மறைந்தது. அதுவரை அவரையே பார்த்தாற்போன்று நின்ற அவனது பார்வையும் சடாரென அவரை விட்டுத்திரும்பியது.

திரும்பியவன் பெரும் பொதியாகி விட்ட மூட்டையைத் திடீரென வீசிவிட்டு      “கைத்தடியை வீசி எறி! கும்புடு! ” என்று உத்தரவிடும் குரலில் கூவியபடி கைகளைக் குவித்து சிரசில் வைத்தான். ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள்  தம்மை மீறியே உத்தரவை நிறைவேற்றுகிறவராக கைத் தடியை நழுவ விட்டார். அதன் வெண்கலப் பூண் ஒரு மரப்பாறையில் நங் என்று விழவும் அவரது கண்கள் கொடி மரங்களில் தனது தோற்றத்தைச் சுருட்டி  தரையில் பாதி இறங்கி நின்ற அதன் சலனமற்ற பனிரண்டு அடி நீளமுள்ள கிருஷ்ண நாகத்தைக் கண்டு விட்டன. தரையிலிருந்து நாலைந்து அடி உயரம் எழுந்து படமெடுத்து நின்ற அதன் சலனமற்ற கழுத்துக்குப் பின்னால்  கொடிகளினிடையே பிடித்திருந்த நீண்ட உடல் சப்தமற்ற பாதரஸக் குழம்பாக  ஒழுகி இறங்கிக் கொண்டிருந்தது. அதைக்கண்டதும் அவரது கைகள் எழுந்து தற்காப்பின் அவலத் துடிப்புடன் எதிரே கண்டதை மாற்றியமைக்கும் ஜால வித்தை ஒன்றைச் சாதிக்க முயன்றவை போல் உதறின. உடனே நாகம் லேசாக வாய்பிளந்து அவரது முகத்தை நோக்கிச் சீறிற்று. நாகத்துக்கும் அவருக்குமிடையே இருந்த சுமார் பதினைந்து அடி தூரத்தினைத் தாண்டி, இடையில் ஒரு கிரணக் கோட்டில் வைரத்தூசிகள் போல ஒளிர்ந்து அவரது முகத்தில் ஒரு மெல்லிய தூவானம் விழுந்தது. உடனேயே சாஸ்திரிகளுக்குக் கண்கள் எரிந்து இருண்டன. அப்படியே விழுந்து விட்டார்.

இவ்விடத்தில் நான் குறுக்கிட வேண்டியதாகிறது. இந்த நாகம் எந்த வகையைச் சேர்ந்தது என்று புரிய வில்லை. ராஜநாகம் என்றும் கிருஷ்ண நாகம் என்று குறிப்பிடப்படும் வகை என்றே பைரவ சாஸ்திரிகள் தந்த விபரத்திலிருந்து தோன்றும். ஆனால் யானையைக்கூட நிமிஷங்களுள் கொல்லுகிற அளவு விஷத்தைச் செலுத்த கூடிய இந்த மகா நாகத்தினால் சீறலின் மூலம் விஷத் தாக்குதல் செய்ய முடியாது. இவ்விதம் தூரத்தே நிற்கும் பிராணியின் கண்களுக்குக் குறிபார்த்து விஷத்தைச் சிறு சக்தி கொண்டது புள்ளி நாகம் மட்டும் தான். இது சாதாரண நாகத்தின் நீளத்தையே ஒத்தது. மேலும் ஒன்று. புள்ளி நாகம் இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவுக்கு மட்டுமே உரிய வகை. இந்தியாவில் இது காணப்பட்ட தில்லை . பைரவ சாஸ்திரிகள் தந்த விபரம் சரியானால். புள்ளி நாகத்தின் குணத்தைக் கொண்ட வேறு பெரிய வகை ஏதோ தான் ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளைத் தாக்கி இருக்க வேண்டும். இது இந்தியக் கானகங்களில் இது வரை இனம் காணப்படாத ஒன்றாக இருக்க சாத்யம் உண்டு.

ருத்ர மூர்த்தி சாஸ்திரிகளுக்கு பிரக்ஞை திரும்பிய போது ஒரு மாய வலையைப் போல இரவு கவிந்து விட்டது. அன்று பெளர்ணமி. மரக்கிளை இடுக்குகளில் சந்திரன் சிக்கி உடைந்து திட்டுத்திட்டாக கானகத்தினுள் ஒளியைச் சிந்தி இருளைப் பெரிது படுத்திக் கொண்டிருந்தான். மேலும் பிரக்ஞை விரிவடைந்தபோது தாம் குப்புறக் கிடப்பதையும் தமது நெற்றியை ஒரு கை தூக்கி முகத்தை லேசாக நிமிர்த்திப் பிடித்திருப்பதையும் உணர்ந்தார். அவரது முகத்துக்கு முன் இன்னொரு கை சந்திர வெளிச்சத்தை ஏந்திய வெறும் கையாக, ஆனால் ஏதோ திரவத்தை உள்ளங்கையில் கொண்ட பாவனையில் அவரது இரண்டு கண்களுக்கும் மாறி மாறி ஆடிற்று. கண்களை விரித்த படியேதான் அவர் மூர்ச்சையாகி இருக்கிறார். இப்போது இரண்டு கண்களும் எரிந்து, குளிர்ந்து, எரிந்து, குளிர்ந்தன, கண்ணுருண்டைகளில் முகம் கொண்டு உட லி னு ள் நீண்டிருந்த ஒரு தழல் கண்வழி காற்றாக இறங்கி கொண்டிருப்பதை உணர்ந்தார். மூட்டை தூக்கியின் குரல் இதைக் கண்ணாலே பாரு சாமி! நான் கையில வச்சிருக கதை'' என்று மென்மையாகக் கூறியது.

ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளுக்கு மூட்டை தூக்கியின் கை மட்டுமே தெரிந்தது. மிகச் சிரமப்பட்டு, வரண்டு மேலண்ணத்துடன் ஒட்டிவிட்ட நாக்கை அவர் அசைத்த போது புறப்பட்ட ஒரே வார்த்தை , ''தீர்த்தம்!'' ஆனார் மூட்டை தூக்கி தனது பரிகாரத்திலிலிருந்து அசைய வில்லை. நெடுங்காலம் போன்று கழிந்த ஒரு நாழிகைக்குள் சாஸ்திரிகளுக்கு எழுந்த தாகம் கூட அடங்குமளவுக்கு உடலின் திரவதத்துவம் சமாந்திரம் பெற்றுவிட்டது. எழுந்து உட்கார்ந்து கலைந்த குடுமிச் சிகையை உதறி முடிந்து கொண்டார். தமது மூளை என்றுமில்லாத உக்ரத்துடன் கொந்தளிப்பதை உணர்ந்தார். உடல் பூராவும் புதிய சக்திகள் ஊடுருவி உலவிக்கொண்டிருந்தன, கை ஒன்றில் எதையோ குவித்துத் தூக்கிய நிலையில் நின்ற மூட்டை தூக்கியிடம் அதைத் தமக்குக் காட்டும்படி சமிக்கையிட்டு அழைத்தார்.
அவர் முன் உட்கார்ந்த அவன் தனது கையை சந்திர வெளிச்சத்தில் அவர் முன் நீட்டினான். அவனது கையின் குவளையுள் சாஸ்திரிகள் கண்டது வெறுமையைத் தான். அல்ல ! வெறுமைமைத் க ண் டி ருந் தால் கூடப் பரவாயில்லை அவனது கைக்கு மேல் அந்தரத்தில் சந்திர வெளிச்சத்தைப் பிரதிபலித்து மெள்ளத் தோன்றிக் கொண்டிருந்தன சில துளிகள். ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளுக்கு உடல் புல்லரித்தது. சற்று முன் அவரது கண்களில் இருந்து உறிஞ்சப்பட்ட விஷத்தின் துளிகள் அவை. ஆனால் உறிஞ்சிய விஷத்தை இப்போது கக்கிக் கொண்டிருக்கும் அந்த ஏதோ ஒன்று மட்டும் சாஸ்திரி களின் கண்களுக்குப் புலப் படவில்லை .

திடீரென திருவண்ணாமலையில் பகவான் ரமணமகரிஷியிடம் அவர் பேசிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், கூட இருந்த பெயர் தெரியாத ஜடாதாரி ஒருவர் குறிப் பிட்ட ' நீலகண்டம்' என்ற சூஷ்ம மூலிகை பற்றிய விவரம் இப்போது நினைவுள் மோதியது. வாகனங்களில் கூடக் குறிப் பிடப் படாமல், சித்த மரபில் செவி வழிச் செய்தியாக மட்டுமே அதுபற்றிய விபரங்கள் காப்பாற்றப்பட்டிருக் கின்றன. பரிசுத்தமான கண்களுக்கு மட்டுமே அது தென் படும், அதுவும் தன்னையே அது காண்பித்தால்தான் உண்டு. இது எங்கோ ஒரு சில அமானுஷ்யமான இடங் களில் அதுவும் அபூர்வமாகத் தோன்றும். இயற்கைக்கும், இயற்கைக்கு ஆதாரமாக அதற்கு அப்பால் நிலவும் தத்து வங்களுக்கும் இடைப்பட்ட பரிமாணமே நீலகண்டத்தின் கேந்திரம். எனவே இதற்கு ஊட்டம் தருவது நிலமுமல்ல நீருமல்ல, காற்றுமல்ல - ஒளி, ஆகாயம் போன்ற சூஷ்ம போஷணைகள்கூட அல்ல. மனோமயமான இதற்கு ஊட்டம் தருவது தன்னை அறிந்து அகவிடுதலை பெற்ற ஒருவனது ப்ரஸன்னம் மட்டுமே. அத்தகையவன் ஒருவனேனும் உலகில் உள்ளவரை இது எங்கிருந்தாலும் செழித்துப் பரவும். இன்றேல் உலகிலிருந்தே மறையும். இதன் ஓளஷத சக்திகள் மர்மம் பொதிந்தவை. வெறும் சரீர உபாதைகளையும் தாண்டிய கர்ம வெளியைக்கூட இது தீண்டும். ஒருபுறம் சிகிச்சையாக விளையக்கூடிய இதன் பாதிப்பு மகா குரூரமான ரோகமாகவும் மறுபுறம் வடிவெடுக்கும். அந்த வேளையில் இது அகமுகச் சிகிச் சையை நிறைவேற்றுகிறது. இது தோன்றிய ஒன்றல்ல. பிரபஞ்சத்தின் தாதுக்களைப் போன்று இதுவும் அநாதி யான ஒன்று. இதஸன எடுத்து ஒளஷதமாகப் பிரயோகிக்கக் கூடிய சக்தி தன்னை அறிந்து தாண்டிய நிஷ்டாபரர்களுக்கே உண்டு.
அந்த பெளர்ணமியன்று தான் ருத்ரமூர்த்தி சாஸ்தி ரிகள் தமது ஆன்மிகத் தகுதியின் சரியான எடை என்ன என்பதை அறிந்தார். மூட்டை தூக்கியின் கரிய திரை யோடிய முகத்தில் நின்ற பெரிய கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அங்கே சுரந்த கருணையும் பயமற்ற பணிவும் அந்தப்பறையனை ஒரு சூஷ்மமான சக்கரவர்த்தியாக்கின. அதற்குப் பிறகும் மூட்டையை தான் தூக்கியே ஆக வேண்டும் என்ற அவனது பிடிவாதத்தில் ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் உள்ளுரக் கலங்கினார்.
ஆரம்பித்த இடத்துக்குத் திரும்பினார்கள் இருவரும். சிலவேளை ஜாதி ஹிந்துக்களைக் கூடக் காப்பாற்றும் மருத்துவனாக அங்கே பறைச்சேரியில் வாழ்ந்து வந்தவன் அந்த மூட்டை தூக்கி என்பது சாஸ்திரிகளுக்குத் தெரிய வந்தது. தந்தைக்கு கூடமாட உதவியாக பச்சிலை அரைத்தல், சூரணம் செய்தல் முதலிய வேலைகளைச் செய்து கொண்டிருந்த பெத்தம்மாளை சாஸ்திரிகள் கண்டது அதே சேரியில் தான்
ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் பெத்தம்மாளை ஏதோ மோகத்தில் மணந்து கொண்டதாகப் பரப்பப்பட்ட வதந்திகள் ஆதாரமற்றவை. தமது மூத்த தாரத்தினளைவிட வைத்ய விஷயங்களில் பெத்தம்மாள் காட்டிய ஈடுபாடுகள் தான் சாஸ்திரிகளுக்கு அவளை இன்றியமையாத துணைவியாக்கிற்று. இதை ஏதோ கலப்பு மணத்துக்கு முன்னோடி யாக சாஸ்திரிகள் 'பண்ணிக்காட்டியதாக சில முற் போக்குகள் பறைசாற்றுவது கூட இதனால் அர்த்த மற்றுப் போகிறது. இந்தப் பறைசாற்றல்கள் நாக பால சுப்ரமணியனைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்காக அவரது தாத்தா பற்றி அரைகுறையாகத் தெரிந்த சில இலக்கிய ரசிக சிகாமணிகளிடம் கூட இருந்து கிளம்புவதுண்டு. ஆனால் பாலுவுக்கு கோத்திரம் முதலிய ஜாதீய எல்லைக்குள் தான் பெண்பார்க்கப்படுகிறது என்பதுப் அந்த எல்லைகளை பாலு மீறமாட்டார் என்பதும் எனக்குத் தெரியும். எவ்வித அர்த்தபூர்வமான தேவையும் கூட அவரை இது விஷயத்தில் மாற்றி அவரது தாத்தா வாக்கி விடாது!
''ரூத்ரமூர்த்தி சாஸ்திரிகளுக்கும் பெத்தம்மாளுக்கும் மணவினை முடிந்த உடனேயே மூட்டை தூக்கி கானகத்துள் சென்று மறைந்து விட்டான். எவ்வளவு தேடியும் மீண்டும் அவனைக் காண முடியவில்லை,
இவ்வளவையும் பெத்தம்மாளின் இடையீட்டு விளக்கங் களுடன் சுருக்கமாகக் கூறி முடித்த பைரவ சாஸ்திரிகள் மீண்டும், ''நாகையர் வீட்டு முற்றத்தில் நான் நின்ற இடத்தில் குழி தோண்டம் பட்டிருக்கிறது என்கிறீர்கள். தோண்டியவர் யார்?' என்றார். இது எனக்குத் தெரியாத விபரம். யாராவது வேலையாளாகத்தான் இருக்கும். இருந்தும் யாரென்று தெரியாததால் அது பற்றி விசாரித்துத்தான் அறியவேண்டும்" என்றேன்.
''தாத்தாவின் கண்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த நீலகண்ட மூலிகை ஸ்ரீதனமாக அப்பாவிடம் தரப்பட்டது. என்று தொடர்பற்றுத் தொடர்ந்தார் பைரவ சாஸ்திரிகள். அது என் கண்களுக்கு சிறு பராயத்தில் குறிப்பான சமயங் களில் தெரிந்திருக்கிறது. நாகையரையும் அவர் சிறுவராக இருந்த போது அழைத்து வந்து காட்டியிருக்சிறார் அப்பா.. ஆனால் நா கை ய ரு க் கு எதுவும் புலனாகவில்லை இதனாலேயே வைத்யப் பயிற்சியுடன் வேதப்பயிற்சியையும் எனக்குத் தரத்துவங்கினார் அப்பா. சாஸ்திரீயமாகக்கூட இதற்கு சமாதானம் உண்டு.
வேதங்கள் பாடப்பட்ட ஆரம்பப் பருவத்தில் வர்ணம்' என்பது தோலின் நிறத்தைக் குறிக்கவில்லை. 'வர்ணம் என்பதற்கு தேர்வு' என்று ஒரு பூர்வீக அர்த்தம் உண்டு. பூர்வ காலங்களில்கூட தோலின் வர்ணத்தைக் கொண்டே ' தேர்வு செய்யப்பட்டதாக இதனைத் திரிபு செய்யலாம். அனால் வர்ணம்' என்பது இ ைட ற ா து ஓடிக்கொண்டிருக்கும் ஒளியுட லை யும் அதன் நிறத்தையுமே குறிக்கிறது. இந்த ஒளியுடலின் நிறத்தைக் கொண்டு அன்றைய ரிஷிகள் தேர்ந்திருக்கிறார்கள். ஒரு வகையில் என்னையும் அப்பா நீலகண்ட பரீட்சையின் மூலம் இவ்விதமாகத்தான் தேர்ந்து எடுத்தார். நான் வளர வளர என் கண்களுக்கு நீலகண்டம் அபூர்வமாகவே தென்பட்டிருக் கிறது. இருந்தும் அது என் ஸ்பரிசத்தில் எப்போதும் படும். அது இருக்கும் இடத்தைச் சுற்றி ஒரு கனமான திரவக்குமிழ் போன்ற சக்தி நிலவுவதைக் கூட நானும் அப்பாவும் அம்மாவும் உணர்ந்திருக்கிறோம். ஆனால் தற்செயலாக வேறு யாரேனும் நாங்கள் அதைப் பத்திரப்படுத்தியிருந்த தோட்டத்து மூலை வழியாக நடந்தால் அவர்களுக்கு அந்த இடம் வெறுமையாகவே இருக்கும். இவைகளை நான் சொல்வதற்குக் காரணம் உண்டு.

அப்பாவின் உத்தரவின் பேரில் நான் அவரது நிலத்தில் பங்கு கேட்டேன். எனக்கு அது கிடைக்க வேண்டும் அல்லது நாகையரின் கையினால் நான் கொல்லப் படவேண்டும், என்பது அப்பாவின் தீர்மானம். ஆனால் அப்புறம் மகாத்மா காந்தியின் இயக்கத்தில் சேர்ந்த பிறகு அப்பாவின் உத்தரவைத் தொடர்ந்து நிறைவேற்ற என்னால் முடியவில்லை. வேதமன்னங்களை மனசில் உருட்டியபடி வெய்யிலில் வெட்டியாக நிற்பது எந்த விதமான செயல் முறையிலும் அடங்குவதாக எனக்குத் தோன்றவில்லை. நாகையரோ என்னை கண்டு கொள் ளாமல் விட்டதன் மூலம் என் மெளனப் போரை ஆனரயாச மாக முறியடித்துவிட்டார். அப்பாவிடம் பேசி நிலை மையைச் சீர்திருத்தலாம் என்றால் அவர் போன இடம் தெரியவில்லை. திருவனந்தபுரத்தில் மகாத்மாகாந்தி தங்கியிருந்தபோது அவரிடம் நண்பர்கள் என்னை இட்டுச் சென்றார்கள். அவர்கள் மூலம் என் கதை பூராவும் மகாத்மாவுக்குக் தெரிந்திருந்து. 'வாருங்கள் சாஸ்திரிகள்' என்ன தமிழில் உபசரித்து குழந்தைபோல் தமது தமிழுக்கு தாமே குதூகலித்தார். அவரிடம் என் தந்தையின் உத்தரவைப் பற்றிக் கூறினேன். ‘உங்களுக்கு உரியது உங்களுக்குத் தரப்படாவிட்டால் உங்களுக்கு உரியதையும் கொடுத்து விடுவதுதான் உயர்ந்த எதிர்ப்பு’ என்றார் காந்தியடிகள் ஆங்கிலத்தில். எனக்கு அந்த மொழி தெரியாது.நண்பர்கள் மொழிபெயர்த்தார்கள்.  நான் திரும்பி வந்து அம்மாவின் அனுமதியோடு நீலகண்டத்தை இரண்டு கைகளாலும் இடம் தேடி அள்ளினேன். கைகளுக்கு மேலே அந்தரத்தில் நின்று உருளும் மின்காந்தம் ஒன்று என் கைகளூடே பரவி உடல் முழுவதையும் ஆட்கொண்டது. அந்த சமயத்தில் எனக்காகப் பயந்து, என் முதுகின் மீது கை வைத்திருந்த அம்மாவின் உடலூடேயும் இந்த சக்தி பரவியதாக அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் இருந்த இடம் பெரும் புதூரிலிருந்து வடக்கே இரண்டு கல் தூரத்திலிருந்த கானக விளிம்பிலாகும். அங்கிருந்து நானும், என் பின்னால் அம்மாவுமாக ஓட்டமும் நடையுமாக நீலகண்டத்துடன் புறப்பட்டோம். வழியில் ஓரிருதடவைகள் என் உடல் பதறிற்று. அந்த சந்தர்ப்பங்களில் உலகத்தோற்றங்கள் யாவும்  மறைந்தன. வெறும் சக்திகள் மட்டும் முட்டி மோதிச் சஞ்சரிக்கும் வெற்றிடம் ஒன்றினூடே என்னை ஈர்த்தபடி முன்சென்று கொண்டிருந்தது நீல மின்னல்களாகப் பின்னி உருக்கொண்ட அற்புதக் கோளம் ஒன்று. அதே சமயம் ஒரு தடவை அம்மாவின் குரல் என்னை அழைத்து அலறக்கேட்டடேன். அவன் கண்களில் திடீரென மறைந்துவிட்டதாக அவர்கள் பின்னாடி கூறுகிறார்கள். அவர்களது அலறலுக்கு உள்ளம் வீழ்ந்ததும் நான் பாதை பிசகாமல் அம்மா பின் தொடர ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது. இரண்டாம் மூன்றாம் தடவைகள் இது நடந்தபோது அம்மா அலறவில்லை. பெரும்புதூரை அடைந்து விட்டதாக உணர்ந்தோம். அப்போது உச்சிவேளை. சுமார் ஒரு மணி நேரத்துகுள்ளேயே நாகையரின் கதவை அணுகி விட்டோமெனினும், யுக யுகாந்திரங்களினூடே நானும் அம்மாவும் கைக்கெட்டி, எட்டாத ஒரு லட்சிய சக்தியைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாற் போலத் தோன்றியிருக்கிறது. அப்பா எழுதிவைத்துள்ள ‘ நீலகண்ட நவநீத’த்தில் இந்த அம்சங்கள் விவரிக்கப்படவில்லை. நீங்கள்தான் இவற்றை அவசியம் என்றுபட்டால் உங்கள் சேர்க்கையாக எழுதிக்கொள்ள வேண்டும். கதவை அம்மா திறக்க நான் உள்ளே சென்றேன். என்னை நாகையர் தமது தோட்டத்துக்குள் வெட்டிப் போடக்கூடும் என்பதுக்கு அஞ்சாதிருந்த அம்மா இப்போது என்னை தனியே விட விரும்பாமல் உள்ளே என்னுடனேயே வந்தார்கள். நாகையர் வீட்டு முற்றத்தில் நான் நின்ற இடத்தில் குனிந்து நீலகண்டத்தை ஊன்றி பின்பு கைகளை அகற்றி குவித்தேன். அம்மா என்னைத் தொட்டு ‘மேலே’ என்றார்கள். நான் அண்ணாந்தேன். என் கையை நீத்தது தரையில் இறங்கவில்லை. தன்னிச்சையாக மேலேழுந்து எத்தனை மைல் தூரம் என்று கணக்கிடமுடியாத தூரத்தில் ஒளிப்புள்ளியாக ஓடி மறைந்தது.‘ஆம்’ என்று மனம் தனது சுமைகள் இறங்கியதில் ஆசுவாசம் கொண்டது. திரும்பி நடந்த எங்களுடைய கண்ணீர்த்திரையினூடே வீட்டு ஜன்னலில் ஒரு முகம் கண்ணீரினால் பிளவுண்டு இரண்டானாற்போல வேவு பார்ப்பது தெரிந்தது. அந்த முகம்-அல்லது முகங்கள், அவையும் நாங்கள் கண்டதைக் கண்டிருக்கக் கூடுமோ? கண்டதைத் தேடித்தான் குழி தோண்டினார்களோ?” இவைதான் என் முன் பைரவ சாஸ்திரிகள் கூறிய இறுதி வார்த்தைகள். அதுவரை சிரித்தே அறியாத உக்ரத்தில் தோயந்தாற் போலிருந்த பெத்தம்மாளின் முகம் மகனின் இந்த இறுதிச் சொற்களில் இளகி புன்னகைத்தது. அவர்கள் முகத்தில் அப்போது ஒரு சிறுமியின் விஷமத்தனம் தோன்றி மறைந்தது.

மறுநாளே பைரவ சாஸ்திரிகள் காலமானார். என்னிடம் மிஞ்சியது நீலகண்டத்தின் இயற்கையைப் பற்றிய விசாரம் தான். அவர் கேட்ட ஓரிரு கேள்விகளுக்கான பதிலில் இவை பூர்த்தி பெறலாம். ஆனால் நாகையரின் வீட்டினர் எவரும் வெட்டப்பட்ட குழிபற்றிய எந்தக் கேள்விக்கும் பதில் தரவில்லை. இப்போது ஏனோ நாகையரின் வீட்டினர் எவரும் வெட்டப்பட்ட குழிபற்றிய எந்தக் கேள்விக்கும் பதில் தரவில்லை. இப்போது ஏனோ நாகையர் திடீரென்று தமது தோட்டத்தை விற்பதற்காக முனைந்து நிற்கிறார். வாங்குவதற்கு நான் முன் வந்தபோது அக்காளுக்கு ஆஸ்துமாவே வந்து விட்டது. “ வேண்டாண்டா ! உனக்கு இது வேண்டாண்டா வெங்கூ !” என்கிறாள்.

ஒன்று செய்யேன். நாகையரின் நாக்கில் நீதான் கஞ்சிரா வாசிக்கிறவனாச்சே. பாலு உன்னைத் தன் சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் குச்சிமிட்டாய் என்று வேறு நினைச்சுண்டிருக்கிறார். ஏன் பைரவரின் கேள்விகளுக்கு நீயே பதிலைக் கண்டுபிடிக்கக் கூடாது ? முன்பே இதுபற்றி உன்னிடம் கேட்டிருக்கலாம் தான், ஆனால் நானே கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நாட்கள் போய்விட்டன.
                                                                                                மீண்டும் ஆசிர்வாதங்கள்                                                                                                             சிரோமணி வெங்கடேசன்

V. முகுந்தன் கடிதம் 
நாகேஸ்வரம்
(தேதி இல்லை )
அநேக நமஸ்காரங்கள். உங்கள் கட்டுரைக் கடிதத்தை நேற்று மாலை தான் படிக்க முடிந்தது. இரவு முழுவதும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்தபடி இருக்கும்படி பண்ணிவிட்டீர்கள். இப்படி முடிவதற்குத்தான் எல்லாமே ஆரம்பித்திருக்கின்றன என்று நிச்சயித்துக்கொண்டு மீண்டும் ஒரு இரவு தாண்டி உ ங் க ள் கடிதத்தைப் படித்தேன். நீங்கள் தேடும் பதில் என்னிடமே உள்ளது.

ஏதோ குழப்பமான நிகழ்ச்சியாக ஞாபகத்தினால் உதறிவிடப்பட்ட விஷயம் இது. எனவே நாள், தேதி நினைவில்லை . பா லு வு ம் நாகையரும்-தந்தையும் தனயனும் - என்றுமில்லாத காட்சியாக எதிரும் புதிருமாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி தங்கள் முற்றத்தில் நின்ற போது நான் தகரக்கதவைத் திறந்து அவர்களைப் பார்த்தேன். உள்ளே நான் நுழையுமுன்பே நாகையர் தமக்கும் தனயனுக்கும் நடுவே நிலத்தில் ஒரு இடத்தை எனக்குக் காட்டி, “ஏன் என்று கேட்காமல் இந்த இடத்தில் ஒரு குழி பறிக்கிறாயா ?' என்றார்.

எனக்கு விஷயம் புரிந்து விட்டது. உங்களுக்கும் புரிந் திருக்கும். அந்த இடத்தில் செய்வினையோ சூனியமோ பண்ணப்பட்டிருக்கிறது. வாய் பேசாமல், ஏன் என்று கேட்காமல் அந்த இடத்தை மண்வெட்டியால் தோண்டி விட்டால் சாந்தியாகி விடும். இதுமாதிரி விஷயங்களை நாகையர் தமது திமிரினாலும், தனயன் ஃபாலு தமது கம்யூனிஸ லோ காயதக் கொள்கையாலும் தூக்கி எறிந்து பேசுகிறவர்கள். இருந்தும் இப்போது...? நான் ஏனென்று கேட்கவில்லை. ஷர்ட்டைக் கழற்றி வேலியில் மாட்டி விட்டு, வேஷ்டியை மடித்துக் கட்டி, தயாராக அருகே இருந்த மண்வெட்டியை எடுத்தேன். த ந் தை யு ம் தனயனும் விலகினார்கள். மண்வெட்டியை நான் ஓங்கியது தான் புத்தி சுவாதீனத்துடன் சம்பந்தப்பட்ட அடுத்த ஞாபகம். ஓங்கிய மண்வெட்டியை நான் நிலத்தில் பதித்து மண்ணிற்குள் தகடு புதைந்து நிலம் அதன் நாக்கில் அள்ளுண்ட நிலை அடுத்தது. ஓங்கியதுக்கும் இந்நிலைக்கும் நடுவே ஏதுமே நடக்காதது போன்றிருந்தது. சற்றே தயங்கிய நான் உடலை வேறு எதுவோ ஆட்கொண்டாற் போல விருவிருவென்று குழிபறிக்க ஆரம்பித்தேன்.

பிறகு உடலை அலம்பி காபி சாப்பிடும்போது என்னிடம் தனியாக மாட்டிக்கொண்ட பாலுவிடம், ''நீதான் மார்க்ஸிய லெனினியம் படித்தவனாயிற்றே. மண்ணைக் கொத்தி வீசி விளையாடுவதற்கு என்ன ? என்றேன். அந்தக் கணம் பாலுவின் முகத்தில் பரவிய கிலி அசட்டுச் சிரிப்பாக மாறுவதற்குள் நானே பேச்சை மாற்ற வேண்டியதாயிற்று, அவரோ மீண்டும் விஷயத்துக்குத் திரும்பி, ''இதிலென்ன இருக்கிறது ? எனக்கு மூட்டுப் பிடிப்பு. வேறொன்றுமில்லை" என்று அலட்சிய பாவ அபிநயங்களில் இறங்கினார்.

பைரவ சாஸ்திரிகள் கேட்ட 'யார் ? ஏன் ?' என்ற கேள்விகளுக்கு இங்கே நான் தந்திருக்கும் பதில்கள் எளிமை யானவை. இவற்றில் ஒன்றும் இல்லை என்றே நினைக் கிறேன். இருந்தும் அன்று இரவு துயிலில் பிளந்த பூமியின் பேராழத்தினுள் ஒரு தூரத்து கர்ஜனை கேட்டது. நான் எனக்குள்ளேயே கிடந்த ஆழங்காண முடியாத கிணறு ஒன்றனுள் தலைகீழாக விழுந்து கொண்டிருக்கிறேன் எனது பின்புறக் கபாலம் உடைந்து விட்டது. அதனூடே சொல்லொணாத வகையான அழுக்கு எதுவோ உருவற்று வெளிப்பட்டு பின்வாங்கியபடி இன்றிலிருந்து நேற்றாக மாறும் காலப்பாதையாக ஓடிக்கொண்டிருக்குறது. உடல் சிலிர்த்து சிதறத் துவங்கியபோது திடுக்கிட்டு அலறியபடி எழுந்தேன். விழித்தபோது வாயிலிருந்து அலறல் எழ முடியாதபடி பொத்திப் பிடித்தாற்போல் கட்டுப்படுத்திய சக்தி ஒன்று மறைந்தது. இதற்குப் பிறகு என் தூக்கம் எப்போதுமே சாதாரணமானதாக இல்லை. இதற் கெல்லாம் இப்போதுதான் அர்த்தம் காண்கிறேன். உங்கள் கடிதத்துக்குப் பிறகு, விழிப்பு வேளைகள் என்னவோ எப் போதும் போல் தான் ஓடிச்கொண்டிருக்கின்றன. ஆமாம் -

மாமிக்கு நமஸ்காரம் தெரிவிக்க மறந்துவிட்டேன். என் திருக்கல்யாணம் பற்றி ஒரு வரி கீறி இருக்கிறீர்கள். உடனே, இப்போது ஏனோ அது எல்லாம் வேண்டாம்  என்று தோன்றுகிறது. சிலவேளை எதுவுமே வேண்டாம் என்றிருக்கிறது. கொஞ்சம் புகை, போதை என்று இறங்கிப் பார்த்து அதில்கூட அர்த்தம் காணமுடியாமல் தொடர்ந்து என்ன, விட்டு என்ன என்று இருக்கிறேன். நல்லது கெட்டது மட்டுமல்ல சரி தவறு என்ற இரட்டைகூட தங்கள் வெளிக்கோட்டுருவங்களை இழந்து ஒற்றைப் பிலமாகின்றன.

தங்கள் ஆத்மநேயன்,

கையெழுத்து வைக்குமுன் திடீரென உச்சிக்கபாலத்தில் ஏதோ பலமாக விழுந்த உணர்வு. நிமிர்ந்து பார்த்தேன், இது என் உரக்கிடங்கு. இதற்குள் என்னைத் தவிர வேறு யாருமில்லை .

VI. தொகுப்புரை 
''முகுந்தனின் கடிதம் கையெழுத்தில்லாமலே முடிவுறு கிறது" என்றேன் நான்.

ஸிரில் ராபர்ட்ஸன் என்ற, நீலகண்ட ப்ரேமி பழுத்து வெளுத்த தாடிக்குள் புன்னகைத்தார். வெளியே, ஆசிரமக் குடிலின் கதவினூடே, திருவருணையின் தென்புறத் தோற் றம். நான் மலையைப் பார்க்கவில்லை. நிலத்தைப் பிளந்து எழுந்து யாளி உருப்பெறுமுன் தனது பூர்வரூபத்திலேயே உறைந்து நின்றது போன்ற பிரம்மாண்டமான ஒரு பாறை யின் கீழ் நாய்கள் புடைசூழ உட்கார்ந்திருந்த பெத்தம்மை யைத்தான் பார்த்தேன். எங்கோ பராக்குப் பார்ப்பவளாக எந்தக் சிழவியையும் போல குந்துக்காலிட்டு உட்கார்ந்திருந் திருந்தாள். ஆயினும் குறுகிய சிகையுடன், மனிதார்த் தத்தைக் கடந்து, ஆண் பெண் என்ற பேதங்களைக் கடந்து, வயோதிபத்தையும் கடந்து அநாதியான ஒரு தகிப்பில் உக்ரம் பெற்ற அவளது முகம், வெளியே தெரிந்த இயற்கை முழுவதுமே அந்த முகத்தினூடே புனர் ஜனனம் பெற்ற தோற்றத்தை அளித்தபடி என் கண்களை ஈர்த்தது. என்னை அவள் பார்க்காவிட்டாலும் நான் பார்ப்பதை அவ்வளவு தூரத்தில் கூட உணர்ந்தவளாக அவள் கூச்சம் கொள்வதை அவளது மென்மையான பாவனைகளிலும், நகர்ந்து, திரும்பி உட்காருவதிலும் உணர்ந்தேன்.

''ஏன்?' என்றார் நீலகண்டப்ரேமி. எண்பதைத் தண்டிய மு க த் தின் தோல் சுருங்கங்களும் அடர்ந்து நரைத்துத் தொங்கிய புருவங்களும் தாடியும், சிகையும் ஆங்கிலேயத்தன்மையை இழந்து இந்தியாவின் அநாதித் தன்மையைச் சுவீகரித்து விட்டிருந்தன. வட இந்திய பாணியில் சுத்தமான குர்த்தாவும் கமீஸம் இறுகி உலர்ந்த உறுதியான உடலுடன் ஒட்டி நின்றன.

ஆயினும் அவரது தமிழின் உச்சரிப்பு என்னுள் ஒரு பள்ளிப்பையனின் கிண்டலை எழுப்பியதால், 'நாம் ஆங்கி லத்தில் பேசுவது நல்லது' என்று தீர்மானித்து அவரையும் ஓரளவுக்கு ஏற்க வைத்துவிட்டேன். ஆனால் ஏன்?'' தமிழில் தான் பிறந்தது.
''ஒன்று அந்த விநாடியில் முகுந்தன் இல்லை அல்லது?
.
நான் தொடர்வதுக்குள் அவர் கையை உயர்த்தி என் சித்தாந்த டிராபிக்கை நிறுத்தினார். ''அந்தக் கணத்தில் முகுந்தன் இல்லை! அவ்வளவு தான்'' என்றார்.

எனக்கு மட்டும் ஒரு குவளையில் பானக நீரைக் கொண்டு வந்து வைத்த அன்பரை உட்காரும்படி சமிக்ஞை செய் தார் ப்ரேமி. உட்கார்ந்தவரின் கை ஒன்றை பிடித்துக் கொண்டு 'என் பொறுப்பை ஏற்று உங்களுடன் கடிதத் தொடர்பு கொண்ட சிரோமணி வெங்கடேசன்'' என்றார். எனக்கு தி ரு வ ண் ண ா ம லை யி லி ரு ந் து சென்னைக்கு வந்த கடிதங்களில் 'ஸ்ரீ நீலகண்ட ப்ரேமிக்காக, V'' என்று மட்டுமே இருந்திருக்கிறது. வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டோம். சிரோமணி யிடம் ஏனோ எல்லாவற்றையும் உற்றுப்பார்ப்பவர் போன்ற தீவிரம் தெறித்தது. மொட்டை போடப்பட் டிருந்த தலை. மழமழப்பான தாடை ஸ்கூல் பையன் தன் மான ஒரு களங்கமற்ற, ஆனால் விஷமத்தனமான, பெர்ஸனாலிட்டி. வயோதிபத்தை எட்ட நிற்கவைக்கிற கெட்டிந்த கம்பீரமான உடல். காவிப் போர்வை. உள்ளே பனியனிலும் கீழே வேஷ்டியிலும் சுயச்சலவையின் மங்கிய வெண்மை.

'எனக்கு அனுப்பப்பட்டிருந்த நாக பாலசுப்ரமணியனின் விவரணை, அதற்குப் பதிலாக சிரோமணி வெங்கடேசன் எழுதியது, முகுந்தன் சிரோமணி கடிதங்கள் எல்லாம் என்னால் படிக்கப்பட்ட பின்பு திருவண்ணாமலைக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

நா. பா. வின் விவரணையில் குறிப்பிடப்படும் (விமர்சகப் பயல்' அடியேன் தான் என்று கண்டுபிடித்து என்னிடம் மேற்படி விஷயங்களைப் பிரசுரிப்பது பற்றி ஆலோசனை கேட்கவில்லை ப்ரேமி. எனக்கு முகுந்த னுடன் ஏன் நா. பா. வுடனும் தான், முன்னொரு சமயம் நெருங்கிய கடித நட்பு இருந்திருக்கிறது. நா. பா. வுடன் என் தொடர்பு சிதைந்தபோது முகுந்தனின் தொடர் பையும் நான் விட்டுவிட்டேன். இதன் பின்னணியில் நடந்த தமிழ் இலக்கியக் கூடாரத்து குத்து வெட்டுக்களை வாசக உலகம் அறியும். ப்ரேமியும் சிரோமணியும் அறிந் திருக்க முடியாது. இவர்கள் முகுந்தனின் பைல்களில் இருந்த என் கடிதங்களில் தென்பட்ட விலாசத்தின் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இவற்றைப்
லங்காபுரி ராஜா - பிரசுரிக்கலாமா? நா. பா. வின் விவரணையினது நோக்கம் இலக்கியச் சரடுதிரிப்பா , சமூக அரசியல் கிசு கிசு வா? என்பது போன்ற கேள்விகளுடன் விஷயங்களின் ஜெராக்ஸ் காப்பிகள் எனக்கு அனுப்பப்பட்டிருந்தன. கூடவே, ''நன்மை தரும் என்றால் பிரசுரிக்கலாம்" என்று நா. பா. தமது லிஷயப் பிரசுரத்துக்கு தந்த அனுமதியுடன். என் பதிலில் இருந்து : " நா கபாலசுப்ரமணியன் நுண்ணர்வுள்ள எழுத்தாளர். ஆனால் அவரது நுண்ணுணர்வினை பிராம்மணீய அரசியல் கலந்த இலக்கிய மனோபாவம் மழுங்கடித்து விட்டது. பிரஸ்தாப விவரணையில் இந்த நுண்ணுணர்வு ஒரு வாக்குமூலக் குரலில் பேசுவதையும், நா. பா. வின் அரசியலுணர்வு அதனை மழுப்புவதையும் உணர முடிகிறது. ஏதோ ஒரு அந்தரங்கமான சுமையை இறக்கும் நோக்கம் கூட தென்படுகிறது. தன்னை அம்பலப்படுத்தும் சுய வெட்கம் போன்ற விபரங்களையும் அவர் தருவது இந்தச் சுமையின் அழுத்தத்தினால் தான். நா. பா. வுக்கும் தந்தை நாகையருக்கும் இடையே ஒரு மதில் கூட எழும்புகிறது. ஏன் இந்த மதில்? சிரோமணி யின் விபரத்தில்கூட இதற்கு திருப்திகரமான பதில் இல்லை . நிச்சயமாக பைரவசாஸ்திரிகளுக்கு சொத்து விஷயத்தில் நாகையர் இழைத்த அநீதி 'பாலு ' வின் (நா. பா. வின்) இளம் உள்ளத்துக்குப் புரிந்திராது. எனவே நா. பா. வும் சிரோமணியும் இந்த மதிலுக்கான உண்மையான காரணத்தை மறைக்கிறார்கள். 1939-ல் ஹிட்லரின் இனவாதமும் கொடுங்கோன்மைப் போக்கும் அவ்வள வாகத் தெரியவராதவை. இருந்தும் ருத்ரமூர்த்தி சாஸ்திரி களுக்கு இது தெரிந்திருக்கிறது. எப்படி? இவற்றை லிசித்திரமான விஷயம் நா. பா. சிரோமணி இருவரும் விட செய்துள்ள காலக்குளறுபடி 1939-ல் 'பாலுவுக்கு ஏழு வயது. அப்போதிருந்து பைரவசாஸ்திரி மெளனப் போர் செய்தபடி நாகையரின் முற்றத்தில் நிற்கிறார். பிறகுதான் காந்திஜியின் ஆலயப்ரவேச இயக்கத்தில் சேர்ந்து தந்தை யின் உத்தரவுக்கு பரிகாரத்தை திருவனந்தபுரத்தில் காந்திஜியிடம் பெற்று அதனை நிறை வேற்றுகிறார். நா. பா. எழுத்தாளரானது அவரது இருபத்து மூன்றாவது வயதில். அதாவது 1955- வாக்கில், இதற்கு சற்று முன்புதான் ஓரிரு வருஷத்துக்குள், 1954 - வாக்கில், பைரவசாஸ்திரிகள்  நடந்த தடிக்கம்புக் குத்துப்படுகிறார். அதுவும் என்றோ .'' ஆலயப்ரவேசப் பழங்கதைக்காக? நம்ப முடியவில்லை

பதில் வந்தது ஸிரில் ராபர்ட்ஸனின் பிரிட்டிஷ் கையெழுத் தில், ஆங்கிலத்தில் : “நன்றி. கூர்மையான ஷவரக்கத்தி ஒன்றை மூளையாகப் பெற்றிருக்கிறீர்கள். மற்றவர்கள் மழிப்பார்கள். நீங்கள் ஊடுருவுகிறீர்கள். நேரில் வரவும். ஆசிரமத்தில் தங்க இடமில்லை. ரூம் எடுத்துக் கொள்ளவும். செலவு எங்களுடையது. வருகை தாமதமாகுமானால் உடன் பதில் - நட்புடன், நீலகண்டப்ரேமி- முன்னாள்,  ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளின் சீடன், ஸிரில்.'

1939-ல் ருத்ரருக்கு ஹிட்லரைப் பற்றிய உள்விபரம் எப்படித் தெரியவந்தது என்ற பிரச்னையை இந்த விளக்கமான கையெழுத்து தீர்த்து விட்டது. அன் றே பஸ்ஸைப் பிடித்தேன்.

பஸ் பிரயாணத்தின் போது ஏற்பட்ட மனோவேகத் தில் என் ஊகத்துக்கு அகப்பட்ட இன்னொரு விஷயம்: நாகையர் கணக்கப் பிள்ளையாக இருந்த பெட்ரோல் பங்கின் வெள்ளைக்கார உரிமையாளரும் இதே ஸிரில் ராபர்ட்ஸனாக இருக்கலாம். இன்னும் ஊர்ஜி தப்படாத ஊகம்.

ஆசிரமப் பிராந்தியத்தைத் தேடி கால்பங்கு கிரிப்ர தட் தணம் செய்தபின்பு நான் முதன் முதலில் கண்டது பெத்தம்மை என்று உடனே தெரியாத இந்த ஆச்சர்யமான கிழவி யைத்தான். மதிய போஜனத்தை அவளுக்கு ஒரு வயதான மடியான வயோதிபர் ஊட்டுகிறார். அவளோ தனக்கு அட்டப்பட்டதில் பாதியை அவ்வப்போது கையில் கக்கி  எடுத்து நாய்களுக்கும் தனக்கு உளட்டிய வயோதிபருக்கும் ஊட்டுகிறாள். உணவு வேளையின் போது பயங்கரமாக உறுமி ஒன்றை ஒன்று குதறும் நாய்களின் கூட்டத்தில் ஒரு அற்புத மெளனம் அவற்றுள் ஏதேனும் ஒரு சிறுசு லேசாக உறுமினாலும் சரி, பெத்தம்மை கண்டிப்புடன் அதை நோக்கி 'ஊஹூம் போட்டு அடக்கி விடுகிறாள். இவ்வள வுக்கும் அந்த பதினைந்து இருபது நாய்களுள் எல்லா வற்றுக்கும் உணவு கிடைக்கவும் இல்லை. சாப்பிட் டானதும் மனிதர் பெத்தம்மைக்கு நீர் புகட்டி வா யைத் துடைத்துவிட்டு தள்ளி இருந்த குடிலை நோக்கி நடந்தார். குடிலுக்குச் சமீபமாக 'பெத்தம்மை ஆஸ்ரமம்' என்ற போர்டு.

உள்ளிருந்து வந்த ஒரு ஊழியரிடம் "நீலகண்ட ப்ரேமி...'' என்று ஆரம்பித்தேன், ''நீலக்கண்ணுச் சாமிங்களா ? இருக்காரு. போங்க.' என்று சொன்னபடி நடந்தார் அவர்.
 ஃஃஃஃஃ

''ஓரளவுக்கு நான் எழுப்பிய அதே சந்தேகங்களைத் தான் நீங்களும் எழுப்பியிருக்கிறீர்கள்.'' என்றார் ப்ரேமி , சிரோமணியின் கையைப் பிடித்த பிடிவிடாமலே, ஆனால் வெங்குவினால் முழுவதையும் எழுத முடியவில்லை . அபச்சாரம் என்கிறான். நான் சொல்லியிராவிட்டால் - அப்போது இந்த ஆ ஸ் ர ம ம் திருநெல்வேலியிலேயே இருந்தது - நான் சொல்லியிராவிட்டால் இவ்வளவு கூட எழுதி இருக்க மாட்டான்.
"முகுந்தனுக்கு உங்கள் திருநெல்வேலி ஆசிரமத்துடன் தொடர்பு இருந்ததுண்டா?'' என்றேன் தயக்கத்துடன்.

'ஆசிரமத் தொடர்பு நான்ஸென்ஸ் ! முகுந்தன் தீண்டப்பட்டார். ஆனால் இவ்விடத்தில் தலைகுனிந்து தாமதித்தார் ப்ரேமி, ''நீ அதனால் தீண்டப்பட்டால் நங்கூரத்தை அதனுள் நிறுத்த வேண்டும். இன்றேல் சிதறடிக்கப்படுவாய்.''

''ஜே, கிருஷ்ணமூர்த்தியின் இறுதி வாசகங்களுள் ஒன்று" என்றேன் நான் எங்கிருந்தோ விகஸித்த மெளனத்தின் அலைக்கு மேலே பேச்சின் தலையைத் தூக்கியபடி.

''எனவே முகுந்தனை மறந்து விட்டு விஷயத்துக்கு வருவோம். உங்கள் கடிதத்தில் நீங்கள் எழுப்பிய கேள்வி களுக்கு வெங்கு பதில் தரவிரும்பினால் தரட்டும்.''

''சொல்கிறேன்'' கணீரென்று இருந்தது சிரோ மணியின் குரல், "பைரவ சாஸ்திரிகள் என்னிடம் சொன்ன தாக நான் எழுதியுள்ளவற்றில் நீங்கள் குறிப்பிட்ட காலக் குளறுபடியைத் திணித்தவன் நான் தான். உண்மையாக நடந்ததில் அவ்வளவு எளிமை இல்லை . முதலாவதாக, சாஸ்திரிப் பட்டம் பெற்ற புதிதில், 1925- 30 வாக்கில் காந்தியடிகளை பைரவர் சந்திக்கிறார். தமது சொத்துப் பிரச்னையை பைரவர் குறிப்பிட்ட போது காந்தியடிகள் தந்த நிவர்த்தியை பைரவர் 1939-ல் நிறைவேற்றினார். இந்த நிறைவேற்றலைத் தூண்டிய நிகழ்ச்சிதான் பாலுவின் விவரணையிலும் என் விவரணையிலும் தவிர்க்கப்பட்டிருக் கிறது, இருவரும் வெவ்வேறு மனிதர்களைப் பாதுகாப் பதுக்காக இதனைச் செய்தோம். பைரவருக்கு சாஸ்திரிப் பட்டம் தந்த அதே முகூர்த்தத்தில் அறுபது பிராமணர் களின் முன்னிலையில் அ வ ரு க் கு தமது சொத்தில் பாதியையும் பிதுரார்ஜிதம் செய்து செப்புத்த கட்டில் எழுதி வைத்து விட்டார் ருத்ரர். இதற்கு மேல் சுமார் பதினைந்து வருஷமாக விஷயம் நகரவில்லை. நாகையருக்கு சார்பான பிரமுகர்களின் சக்தி இதற்குக் காரணம். 1939-ல் இரண்டில் ஒன்று காணும் முடிவோடு பைரவருடனும் தமது சாக்ஷிகளுடனும் நாகையரிடம் போனார் ருத்ரர். அங்கே  பைரவரை முற்றத்தின் இடப்புறத்தில் நிறுத்திவிட்டு 'இது இவனுடைய நிலம்' என்று பிரகடனம் செய்திருக்கி றார் , உடனே நாகையர் என்னால் சொல்ல முடியாத தூஷணைகளுடன் ஒரு சிலம்பக் கழியை ஓங்கியபடி ஓடி வந்து பைரவரின் தலை, முதுகு, கால் முட்டி என்று ஓங்கி அடித் திருக்சிறார். இதைப் பார்த்தபடி நின்றவர்களுள் எழு வயது பாலு ஒருவன். பதினாறு வயதான ந ா ன் இன்னொருவன். தந்தைக்கு எதிராக பாலுவின் சுவர் எழுந்தது அந்தக் கணத்தில் தான். பைரவர் ஓடவில்லை . விழவில்லை, சலனமற்று நின்றார். இந்த உறுதி பாலுவை ஆட்கொண்டிருக்கிறது. பைரவர் அடிபட்டதை எழுதவே கூசிய நான் அதைத் தவிர்த்து எழுதியதுடன், வேறு ஒரு விஷயத்திலும் பாலுவின் எழுத்து விபரத்தைப் பின்பற்றி இருக்கிறேன். அதாவது 1939-ல் மேற்படி சம்பவத்தின் போது நாகையருக்கு ஹிட்லர் பட்டத்தைத் தந்துவிட்டு சந்நியாஸியாகவோ, ஏதோ, ருத்ரர் மறைந்த பின்பு, நாகையரின் முற்றத்தில் பைரவர் மெளனப் போர் நடத்தியபடி நின்றதாக பாலுவும் எழுதியிருக்கிறார். அப்படி தாம் நின்றதாக பைரவர் என்னிடம் சொன்னார் என்று நானும் எழுதி இருக்கிறேன். உண்மையில் பைரவர் அப்படி நிற்கவுமில்லை நின்றதாக என்னிடம் அவர் சொல்லவுமில்லை. ருத்ரர் மறைந்த உடனேயே காந்தி யடிகள் சொன்ன நிவர்த்தி ஞாபகத்துக்கு வரப்பெற்ற பைரவர் தமது விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டு போய் நாகையரின் முற்றத்தில் தாம் நின்று அடிபட்ட இடத்தில் வைப்தார். இதைப்பார்த்த ஒரே சாக்ஷி பாலுவின் தாய், என் சகோதரி. உண்மையில் இதற்குப் பிறகு நாகையரின் முற்றத்துக்கு பைரவர் போக வில்லை. தமது வைத்யத் தொழிலிலும் காந்தீய இயக்கத் பணிகளிலும் தான் ஈடுபட்டிருந்தார். ஸ்ரீ நீலகண்டப்ரேமி போன்ற, தந்தையின் மாணாக்கர்களின் சாஸ்திரப் பயிற்சி யையும் பொறுப்பேற்றிருந்தார். ஆயினும் ஒவ்வொரு நாளும் நாகையரின் முற்றத்தில் சூர்யவெளிச்சம் விழுந்த  உடனேயே ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.  ஒரு சில நிமிஷங்கள் நின்று அடிபட்ட இட த், தி பேச, அவரால் நிரந்தரமாக நீலகண்டம் பி ர தி ஷ்டை செய்யப்பட்ட இடத்தில் விழுந்த சூர்யகிரணம் மனித உரு பெற்று பைரவமூர்த்தி சாஸ்திரிகளாக நின்றது.

முதல் தடவை இது நா கையருக்கு புலப்பட்டு அவர் வெற்று வெளி மீது தடியடி, செய்த ரஸமா ன விஷயம் அவரது மனையாளான என் சகோதரி மூலம்  எனக்கும் தெரியும் குழந்தைகளுக்காக ஒன்றைச் சொன்னாலும் உள்ளூர என் சகோதரி என் விளக்கங்கள் மூலம் விஷயத் தைப் புரிந்து வைத்திருக்கிறாள், போகப் போக அவளுடைய ஆஸ்துமா இழுப்பு மந்தித்து இப்போது பூரணமாக, சொஸ் தமாயிருக்கிறது. ஆனால் தந்தை நா கையரின் அடியொற்றியான அங்கச்சி,  ைப ர வ சொரூபமான நீலகண்டத்தின் மீது காறித் துப்பி இருக்கிறாள் அப்பாவின் பேச்சைக் கேட்டு. இதில் ஆத்திரமடைகிற போ து தானே பாலு அவளுடைய ரப்பர்களை அறுத்தெறிவது என்று என் சகோ தரி சொல்கிறாள். அந்த ச ந் த ர் ப் ப த் தி ல் நீலகண்டத்தின் திசையிலிருந்து 'களுக்' என்ற சிரிப்பொலி கேட்கும் என பாலு தரும் நுட்ப விபரம் மயிர்க்கூக்சவிட, வைக்கிறது இப்பவும் எனக்கு. இது பாலகன் பாலுவின் கற்பனையா? அல்லது அங்கே தோன்றி நின்ற பிரதிமைக்ரு, மானுடப் பரிமாணத்தில் பதில் சிரிப்புத் தரும் சுபாதீன சக்தி இருந்திருக்கிறதா ? இல்லை, ஸ்ரீ நிலகண்டப்ரேமி விளக்குவது போல், பாலுவின் மனோநிலைக்கு ஏற்ப அது பதில் சிரிப்பு தந்ததா? -- புரியவில்லை தனக்குக் கிடைத்த தர்சனத்தின் தாத்பர்யத்தை பாலு
. உண்மையில் அன்றே உணர்ந்திருந்தால் அவனது விவரணையில் அந்த குழப்பங்கள் ஏற்பட்டிராது."

சொல்ல வந்தவை முடிந்து விட்டன என்ற தோரணையில் நிறுத்தினார் சிரோமணி,


''முகுந்தனை அந்த இடத்தில் குழி பறிக்கும்படி கூறிய விஷயம் புரியவில்லையே' என்றேன் நான். பிறகு துணிந்து ''இந்த தடிக்கம்புக் குத்து விஷயம் வேறு...' எனச் சேர்த்துக் கொண்டேன். இதைக் கவனிக்காதவர் போல சிரோமணி தொடர்ந்தார்.

"திடீரென ஒரு உச்சிவேளைப் போது- வருஷம் ஞபாகமில்லை -சூர்யகிரகணம் ஏற்பட்டது. சூர்யன் முகிலில் மறைந்தாலும் மறையாத பைரவ சொரூபம் சூர்ய கிரகணத்தின் போது மறைந்து விட்டது. பின்பு அது தோன்றவே இல்லை. இதற்குள் சொரூபத்தின் மாயத் தன்மை பாலுவுக்கு தாய் மூலம் தெரிந்து விட்டாலும் கூட தனது சுபாவப்படி முந்திய பிரதிமையையே அவன் தனது விவரணையில் தந்திருக்கிறான். சூர்ய கிரகணத்துக்கும் சொரூபத்தின் மறைவுக்கும் இருந்த சம்பந்தத்தை பைரவர் தான் அது வும் ஸ்ரீ நீலகண்டப்ரேமிக்கு விளக்கி இருக்கிறார். எனக்கு இது விஷயம் சமீபத்தில் தான் சொல்லப்ட்படிருக்கிறது. பைரவ சொரூபம் மறைந்த பிறகு அந்த இடத்தில் குழிபறிக்கும்படி வேலையாட் களிடம் கூறி இருக்கிறார் நாகையர், வீட்டிலும் பராபரியாக ஊரிலும் நாகையரின் முற்றத்து அற்புதம் ஒவ்வொரு விதங் களில் எதிரொலித்திருந்ததால் 'நாங்க மாட்டோம் சாமி' என்று வேலையாட்கள் ஓடிவிட்டார்கள். தாமே குழி பறிக்க நாகையர் முனைந்தபோது முதல் தண்டவையாக அவரை எதிர்த்திருக்கிறான் பாலு. அந்த சமயத்தில் தகரக் கதவைத் திறந்து உள்ளே சென்றவன் தான் முகுந்தன். இவ்வளவையும் இப்போது தான் என் சகோதரி மனம் திறந்து சொல்லி இருக்கிறாள், தந்தையை மகன் எதிர்த்த விஷயத்தை சொல்லுவானேன் என்று தான் இதுவரை மறைத்திருந்தாளாம்.

''சூர்ய, சந்ர, பிருதிவிகளின் நேர்கோடும் முகுந்தனது மண்வெட்டி நாவின் கிழிப்பும் நீலகண்டத்தில் ஏற்படுத்திய  அதிர்வாக
 . நிலம் வக்ர மடைந்திருக்கிறது. வீடு நடுவே : பிளந்திருக்கிறது. பூமிக்கு அடியிலிருக்கும் பிருதிவியின் விபரீத  சக்திகளாக நீலகண்டத்தின் சொரூபம் மாற்றமடையலாயிற்று. இதைப் புரிந்து கொள்ளாத நாகையர், மேலும் , ஏதோ மந்திர தந்திரங்கள் மூலம் நமது நிலத்தை பைரவர் கெடுக்கிறார் என நினை த்து தாமே,
தமது கையால் பைரவரை தடிக்கம்பால் தாக்கினார், சாக்ஷிகள் பெத்தம்மையும் வேறு சில ஹரி ஜனர்களும்.. போலிஸ் கேஸை எடுக்கவே இல்லை . ஸ்ரீ நீ ல கண்டப்ரேமி தலையிட்டிருக்காவிட்டால் வேறு அப்பாவி ஹரிஜனங்கள் தாக்கியதாக ஜோடனை நடந்திருக்கும்,''  சிரோமணி குரலின் அழுத்தமான நிறுத்தலினால் புள்ளியிட்டார்

அவ்வளவுதானா?


நான் இன்னும் ஏதோ ஒன்றினை - நிகழ்ச்சிகளின் தர்க்க  நிறைவினை ---எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஆனால் தொடர்ச்சி ஓடவில்லை நிமிர்ந்து மெளனித்து விட்ட சிரோமணி உள்வாங்கியவராக உட்கார்ந்திருந்தார்.

என்னை ஒரு தர்மார்த்தச் சோர்வு பீடித்தது, * நாகையார்? நாகையர்? அவரை காரண காரியத் தர்க்கம் சூழ்ந்து பிடிக்கவில்லையா?' என்று தத்துவ மூலகங்களை ஏந்தியபடி அரற்ற ஆரம்பித்தது என்னுள் ஒரு பச்சைப் பருவத்துப் பழிக் குரல்.

 நீ ல கண்டப்ரேமியின் அடர்ந்த, வெண்புருவங்களினது ரோமப் புதரினூடே அவரது நீல நிறக் கண்கள் சுருங்கி விரித்து என்னைத் தாண்டி என் னைப் பார்த்துக் கொண்டி.ருந்தன. மெளனம் நீடித்தது. நான் எனது குரலின் சொற்களற்ற வெற்று உருளலின்  மூலம் மெளனத்தைக் கலைக்க  முயன்ற போது உள்ளிருந்து சந்தடியற்று வந்து நான் பானகம் பருகிய வெற்று டம்ளரைக் குனிந்து எடுத்தது ஒரு உருவம். சற்று முன்பு பெத் தம்மைக்கு உணவூட்டியபடி , அவள் அவ்வப்போது விழுங்காமல் கக்கித் தமக்கு ஊட்டியதை உட் கொண்ட வயோதிபர். நிமிர்ந்து தலை யைத் திருப்பி அவரைப் பார்த்த சிரோமணி " நாகுவா?'' என்றார்,

'என்னுள் உருண்டு குரலில் கமறிய பழிக்குரல் திடுக்கிட்டு ஒரு திடீர்த்தகிப்பில் கருகிய இருள்ரேகையாக மறைந்தது. வயோதிபர் களங்க மற்றுப் பொலிந்த குழந்தையின் பல்லற்ற புன்னகையினால் என்னை வினவுகிறவராகப் பார்த்தார். அவரது மூக்கு, ஆச்சர்யமாக, நான் எங்கோ கண்ட ரதமண்டபத்தினது கல்யானைபோல் முகத்திலிருந்து திமிறியபடி புறப்பட்டு நின்றது. புதர் மண்டிய புருவத்தின் கீழே ஒரு இருண்ட ஆழத்தில் தேடிக்கொண்ட தண்ணீராக மின்னின கண்கள். அவரது வினவல் சொல்லுருப்பெறுமுன் - எனக்குள்

‘வேண்டாம்’ என்று குறுக்கிட்ட வெட்கத்தின் நாசூக் வடிவான அறிவை மீறி விரிந்த இதயத்தின் உணர்வுக்கோளம் அழுகையின் உடைசலாகும் எல்லையில் விழிப்படைந்து ஸ்தம்பித்தது. சொல்லின் அளவைகளுக்கு எட்டாத ஏதோ ஒன்று இந்த உணர்வு மையத்தை தீண்டியும் தீண்டாமல் ஸ்பரிசித்தது, நிறமற்று, ஆழ்ந்தகன்ற நீல நுண்மையாய், யாருமறியா அந்தரங்க ஆதரவின் மகாமர்மமாய், தர்மாதர்மங்களற்ற இன்மையாய்.
                                                                                                       
  தீவ் கோஷ பூஜித்




தட்டச்சு : தீட்சண்யா ரா,  ரா ரா கு
மற்றும் ADOBE SCAN , GOOGLE-OCR



*********