தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, May 18, 2017

நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச்சிமிழ் - கோணங்கி

நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச்சிமிழ்  - கோணங்கி

Scanned by CamScanner & Google-OCR

ஆந்தை இறகு பூனையிடம் கேட்டு எழுதிவரும் இந்தநூல் சுவடிகளை ரவுக்கை போட்ட எலிகள் கடத்திச் செல்ல வந்து மறைந்தவற்றைத் தேடுமாறு காக்கையிடம் சொல்வீர் வாசகரே நீரூரில் பதம் பொருளாய் ஒளிகள் வீசக் கோட்டுர் சித்தர் வாசியா நின்ற நக்ஷ்த்திரவாஸியின் இடது பாத லிபிகள் காப்பு

சில்பியின்நரகம் விழித்த கிளி கிருதமாய் நதி ஏவி நீர்படரும் தடாதகையின் தோளில் அமர்ந்து தனிமொழி பேசி படபடத்த கண்ணால் தேடும் பாசுரங்களின் ஆதார ஊற்றில் பைந்துழாய் முகம் பிறந்த ஆண்டாளின் நீர் நகரில் அலைவுற்ற கவிசிறிய விரலில் கால்வைத்து சூடிக்கொடுத்த மாலையில் குழல் கேசமொன்று மார்கழித் தெருவாய் நீண்டு மனக்கோட்டை நோக்கி படர்ந்து செம்பு மணல் நடுங்க எழுந்த ஆங்கார யாளிகள் அடக்கிய நாகசுர மூச்சில் நட்டுவனார் இசைத்த தொன்மத்தில் தவில் முழக்க எமன் தோலில் பிறந்த சொல் டமருகத்தில் மோத வாய்பிளந்த தேவாசுர யுத்தத்தில் சிதறிக்கிடந்த நக்ஷ்த்திர அண்டகோள விலாசம் உருத்திரண்டு கண்ணாடியுள்ளிருந்து எழுந்தான் நக்ஷ்த்திரவாஸி. மீண்டும் கவிதை உன் கை மண்ணில் நக்ஷ்த்திரக் குவியல் கொறிக்கும் சிவப்பு அலகுடன் பச்சை சிறகு

கபால வழி திறக்க பூனை உருட்டிய மண்வீட்டுப் பானைகளில் தவச வாடையில் கிடைத்த சுவடிகள் குதிரைவாலித் தவசமாய் மாறியதால் 'சேற்றில் விழுந்த சொற்கள் தானியமாயின. மாளிகையோ குடிசையோ என்றெனக்குத் தெரியாத ஒரு பூமித் தளத்திலே குழந்தைகளாயின தானியம் கனிந்து உயர விடிந்தது'. தானியத்தில் மறைந்த ஏடுகள் எரியும் கலப்பை மேழிகளில் திணறுவதை உழுதவாறே வெறுமை புறளும் மண்கட்டிகளில் வளரும் குதிரைவாலி நாற்றில் பச்சைக்கோடு கோடாய் வாக்கியங்கள் விரிவதை வாஸிப்பிரே! 

ஆயிரம் கபாலங்கள் நெருப்பில் விழாமல் பிடித்தவாறே ஸ்திரிகள் பஞ்ச மூலகமாய் வாசனைகளில் அலையலையாய் உரையாடும் மெளனம் பூனைசொன்ன ரஸவாது மூலிகை மை ஈரம் உலராமல் எழுதிவந்த ஏடுகளால் கூரைவீடே எரிந்து ஏடுகள் பற்றி நெருப்பு ஒலமிட அணைக்கவந்தவர் மீது ரஸவாதியின் அட்ஸரங்கள் தொற்றி விரட்ட எரிந்த கூரையின் மொட்டைமச்சில் மீந்த ஏடுகளை இந்த துண்டுகளை நெருப்பின் இருளில் புதைத்த வார்த்தைகளை எட்டுக் கழுதைகளில் சுமந்துபோன ஏகாளி வாஸிக்க வாஸிக்க ஒடும் ரஸவாத பாதரஸமொழி பித்தத்தின் எரிகொம்புகளாகி ரஸஎழுத்தின் துடி பொறுக்காமல் மாண்டுபோன பலரும் வெள்ளி நாயின் ஊளையைத் தொடர எழுதுவதைவிட்டு ஆந்தை ஓயாமல் கனியுண்ணத் துயில் கனவை சூட்சும சக்கரத்தில் தீட்ட ஆந்தைக் கண் ஏடுபார்த்து பிரமை கொள்ள வேண்டாம் வாசகரே!

63

பக்கங்களினுள்ளே ஆழ ஒடும் இருட்குகையில் நிறுத்திவிட்டு மறைந்துவிடும் மனவுலகினுள் உலவி எழுதும் மெளனியின் சொல் அமைப்பு தேவரடியார் தந்த பூர்வீக இசை மூலத்தின் வலுநடையால் தலைகீழ் சுடரின் நிழலாய் இருளின் கால்களுடன் யாளிகள் வருகின்றன பின்னே புறவுலகைக் கிழிக்கும் விஷக் கணையானால் உருவம் தான் வேகம் அதுவரையான வெற்று வாஸிப்பில் ஓயாத பெரும் சப்தம் நிற்காது தலைக்குள் கூச்சலிடும் பகலைத் தாண்டி கால் நிற்கிறது எல்லையற்ற அந்தகாரத்தில் சப்தப் பிழைகளைவிட்டு நழுவி விலகித் தென்படும் உன்னத இசையின் குரலை தனித்து உணரும் சுரணையாக ஏற்பட்ட விழிப்புத்தான்  ‘சில்பியின்நரகம்’

கடந்த உலகுக்கும் தாவரங்களுக்குமிடையில் மறு நூற்றாண்டுகளின் கலைந்த அடுக்கில் காந்தள் கருவுற எறிந்த படிமம் வீழ்பணிவாய் தழல்கொள்ள பாறைப் படிவுகளில் வெளிச்சம்புகாதவனத்தில் கடல்மடுவில் யுகாந்தவெளியில் கானகத்தில் பசுமைச்சாறு பொங்க விளைந்து கொண்டிருந்தது படிமம். கேழ்ஏவரையும் இல்லோன் கபாடபுரக்கிளி அன்ன யாழ் ஏர்மொழிப் படிமம் வீசி வீசிச் சுழலும் நக்ஷ்த்திரவாஸி, ஐந்து தானிய அடர்விலிருந்து 1888 தானிய நிறை சேர விளைந்த கடல்முத்து சுடரப்பிறந்த படிமடலகம்.

மிதக்கும் கீழ்திசைத் தீவிலிருந்து முளைத்த வெள்ளி கைப்பிடியளவு கடலில் விரிந்தது. இப்போதும் ஸப்த சமுத்திரங்கள் மணல் காணும்ஆழத்தில் நக்ஷ்த்திரவாஸியின் ஈமப்பேழையுள் வசிக்கிறது கபாடபுரக்கிளி

ஐந்துநிறங்கொண்ட திணைகளில் அமர்ந்திருக்கும் அறுபத்திநாலு புராணக் கிளி நகரத்திரங்களோடு சூதாடி திசைநான்கில் பறக்கும் லங்காபுரியானையின் தந்த மொழி பேசும் ரத்தத்தின் குணரூபமான உன்னை எதிரியாக்கும் சனாதன வக்ரப் பார்வையில் தப்பி பிறை கவ்வி மலை நடந்தது கண்ணுக்குள் கண் சுற்ற கண்ணாடி ஒன்றுக்குள் ஒன்று மாறிச் சுற்றிவரும் கபாடபுரக்கிளி இறகு ஆறு கோடிழுத்து கண்ணாடி பனிரெண்டாகி ஆடியுள் ஆந்தை இறகு ஆறுகோடிழுத்து அறுபத்தி நாலு கிளிகளுக்கும் கூடு வரைந்து திசைக்கொரு ரஸஆடி கிழக்கு முதலாய் திக்குகள் எட்டும் விரிய கிளியைப் பூனை கவ்வவர எதேச்சையில் நின்ற கலையின் ஆருடச் சக்கரத்தில் யானை முயல் காகம் பாம்பு எலி கருடன் பூனை கொக்கு காடை நரி குருவி மாறிமாறித் தோன்றும் ஆடி சுழல கதித்தகுரல் வல்லூறு வீழ்திசை மாயத்தில் கண்ஏடு திரும்பும் பக்கங்களில் நக்ஷ்த்திரவாஸியின் சிறகு நீட்டித் தொட சக்கரம் நின்ற கட்டத்தில் சரசப்பொற்கோழி தீபச்சிமிழுக்குள் மறைய மையிருட்டில் ஆந்தைக் கண் ஏடு புரண்டு நின்ற பித்தனும் மெளனியும் ஜிப்சிகளின் டேரட்கார்டுகளை குலுக்கியவாறு கைதட்டிக் கைதட்டிக் கதை கூறும் நவீன சதுக்கத்தில் புத்தகப் பலகை விரிந்து மாறும் எழுத்துக்கள் பொற்கோழி மஞ்சநிறப் பாவையாகி கண்ணாடிச் சிம்ளிக்குள் மெல்ல சுடர ஏட்டுப்பலகையில் உதிரத் தொடங்கிய திணைகள் உருண்டுருண்டு நிலத்தில் மறைந்து பின்சென்ற வாசகர் கண்ட ரகஸியப் பேழையில் மாபெரும் இறகுடன் எழுதிக்கொண்டிருக்கிறான் நக்ஷத்திரவாஸி,

நக்ஷ்த்திரவாஸி வார்த்தையில் திறந்துகொண்ட கபாடபுரம் ஞாபகம் காண மறதியைத் தேடுவதில் ஜடமென இருநூறு வருஷங்கள் நாற்காலிகளில்  
வீற்றிருந்தார்கள் எழுத்தாளர்கள் கபாடபுரமெங்கும் வரில் படரும் நகர்த்திர வாஸியின் ஒளிகண்டு கண்ஏடு திறக்க எதார்த்தவாதக்கதை உலை இருள் கொண்டுவிட்டது.கபாடபுரத்திலிருந்து திரும்பிப்பார்க்கிறான் நக்ஷ்த்திரவாஸி அறுபத்திநாலுகிளிகளும் கபாடபுரப்பொந்துகளில் இருந்தவாறே ஒவ்வொரு கிளியாக நக்ஷ்த்திரவாஸியின் கனவுகளின் தனிமொழியால் உதிரும் ஏடுகளை மொழிய முகச்சாயல் பார்த்து முற்பிறப்பின் கதை கூற பூனையிடம் சொல்லாததை சுருட்னிடம் கேட்டு சிங்கத்தை அடைக்க முதலையிடம் மந்திரம் கேட்டு கட்டிலைவிட்டிறங்காக்காதலியிடம் ரவுக்கை கேட்ட எலிகளின் தந்திரத்தை எழுதி மறையும் யானையை முயலிடம் பார்த்து வேதாளம் சொன்ன கதையில் விடுவிக்கப்படாத புதிரை அடுத்த கதைக்கு நகர்த்தி பாம்பின் சுருள் எழுத்து ஊர்ந்து நீண்டுவரும் கனவு சுருள நாயின் தடம் பதிந்த மொழிபேசி நரி ஏமாந்து ஊளையிட்ட திராட்சைத் தோட்டத்தில் புளித்த சுரைக்குடுவைக்குள் புதைந்து ஊறும் கதைஏடு கபாடபுரத்தின் புராதன நரம்புகளோடி பிரின்நிறத் திராட்சை நிறமாகிக் கால மயக்கத்தில் மூழ்கிய கபாடபுரவாஸிகள் இழந்த பொற்கோழியை தொல்கதையில் தேடித்தேடி தோற்றுப்போனார்கள் நிலவில் பழுத்த கபாடபுரத்தின் மாய விளக்கின் பன்முகவாசலில் வெவ்வேறு அர்த்தப்புனைவில் சுடர்ந்த பிரதிமைகள் ஒளிநாவுகளாய் சுழல மாயவிளக்கில் மறைந்து கூவியது பொற்கோழி விநோதக் கண்ணாடியிலிருந்து ஓடிவந்த கருப்பு வர்ண நூல் பொம்மை தன்மார்பில் ஒளித்துவைத்த ஒரு பொன் முட்டையை கையில் ஊதியபடியே 'பிறப்பதற்கு வாழும் கணமே சாவாக வேண்டும் இருபத்திநாலு மாயச்சிமிழ் வித்தையே கவிதை என கருப்பு மேஜிக் புத்தகமாகிச் சுற்றிய முட்டைமேல் பாஷாண மையினால் நீண்டவால் பூனையை வரைந்துவர இராவிருட்டில் முட்டை மேலோடு விம்மி வட்டமான புத்தகமாய் சுழல சித்திரப்பூனை நகர்ந்து சிரித்தவாறு முட்டைக்குள் மறைய நீந்திய சிரிப்பு மட்டும் பூனையின் பிரதிமைகளாய் உள்ளுறைந்த பழுப்பு நகரைச் சுற்றி பூனைவால் மட்டும் நுழைந்து கபாடபுரத்தின் தெருக்களில் திரிந்த ரவுக்கைபோட்ட எலிகளைத்தேட சந்துபொந்துகளில் மூக்கைப் புதைத்து நகருக்குள் ஊர்ந்துவரும் நீண்டவால் பூனையின் சிரிப்பு மறையாமல் இருப்பதை துயிலும் கபாடபுர வாஸிகளுக்குத் தெரிவிக்க ஓடோடிவிட்டன. ஒளிவீசித் தொட்ட மாயவிளக்கிடம் மாட்டிக் கொண்ட எலிகள் தொட்டதும் அழகான இளவரசியாகத்தான் மாறியது பொற்கோழி, இளவரசி பார்த்த கண்ஏடு கபாடபுரத்தின் புராதன ரஸ ஊற்றில் மொழிமாறிக்கொண்டே இலைகளும் கொடிகளும் படர்ந்த லிபி பாசிகளுக்கிடையில் கண்கள் ஆயிரம் முளைத்த வெள்ளித்தாவரங்கள் எட்டி வளைந்து மேருமலை மீது உதிர்ந்த படிமம் மந்திரச் சிமிழில் சுழன்றது தலைகீழ்சுடராய், மாயவிளக்கை அரசாளும் கழுகிடம் அடிமைகளாகி கிழக்கழுகரசன் காத்துவரும் நக்ஷத்திரவாஸியின் ஈமப்பேழையில் மறைந்தது பொற்கோழி தேடித்தோற்றவர்கள் ஏழுகன்னிமாரின் சமையலறை ஏவல் பணியாளர்களாய் உருவிழந்து சாயைகளாய் மந்திரலுநாய்களின் பிளந்த வாயிலிருந்து தலைநீட்டி ஏழுகன்னிமாரிடம் சாபவிமோசனத்திற்காய் நிமித்திகம் கேட்டு வாய்மொழியின் ஸப்தாக்ஷரத்தைக் கிளியாக்கி அகத்தியர் வகுத்த எல்லா ஏடுகளின் வெள்ளித்தாவரங்களின் உரையாடலைத் தொடங்கியது கபாடபுரக்கிளி போகரின் தொடுகுறியும் கூற எழுதா மொழிப்பாதையில் கிளம்பிவந்த அரூபமானவர்கள் மரணத்தின் பின்னும் ஞாபகம் தனியே விலகி நடமாடத் துவங்கியது

கண்ஏடு பார்த்துக்கூற கடுகு ராஜியத்தின் இளவரசி காதலால்கனிந்த அலகு சிவந்து ஆரூடம் மொழிந்த கிளியிடம் காகங்கள் கூடி வாக்குவாதம் செய்து சாவில் விழுந்த தீக்கனவில் காக்கை முக்கை நீட்ட செஞ்சேவல் பறந்து சென்று துயர இருள்வீசும் யாழ்நகரின் குருதிதோய்ந்த மதில் மீது இறகுநீட்ட எழுதிச் செல்கின்றான் அடையா விடுதலையின் தேசீய கீதத்தை லங்காபுரி யானையாகிப் பறக்கும் திசை நான்கில் நக்ஷத்திரவாஸி

செஞ்சேவல் மதில் மீது நின்று கூவ நகருக்கு வெளியே பொட்டணங்களோடும் கால்நடைகளின் எலும்புதுருத்திய நடையோடும் இறந்த மாட்டின் தோலில் சுருண்ட பசியுடன் கூட்டமாய் பெருஞ்சுவர் நோக்கி வளைந்த முதுகுகளில் பாரங்களோடு வண்டிகளை இழுத்து நகர்கிற பாதையில் துப்பாக்கிகள் தோட்டாக்களில் கரு வெடித்தது. அழிவு இப்படியாக ஆயிரம் பறவைகள் தலைகீழாய் குதித்த அலகு எரியும் கபாடபுர மொழியின் தீநிழல் போர் முன்இருளாய் அசைய விஷம் சுமந்த கண்டத்தில் கடித்தகுப்பிகளில் கழுவக் கழுவ கை விரலில் எஞ்சியது சாம்பல் நீலக்குருதி

உயிர் மாய்ந்த கபாடபுரக் கிளிக்கூட்டம் தேடிப் பறந்து வந்த செஞ்சேவல் நெருப்பாய் உமிழ்ந்த கண்ணீரில் உள்சுழல்கிறது பரிதியின் செங்கோளம் "தீகருக்க சுவரெங்கும் நிழல் கீறி விரிசல்களாயிற்று’ காலெடுத்துப் பரந்து வந்தசெஞ்சேவலை ஆந்தைக்குக் காகம் சொல்ல நீர்க்கரையான் அரித்த ரஸவாதச் சுவடிகளைப் புரட்டிப்புரட்டி வரிவரியாகத்தெரு எரியப் பொல்லாச்சாவே சாம்பல் மூட கண்ஏட்டில் செஞ்சேவல் சித்திரத்தில் பாஷாணமுலிகை தடவிய எழுத்தை ஆந்தை இறகு எழுதி நகர ராஸிமண்டல ஸ்ருதிகளை இருபத்திநாலாய்ப்பிரித்து குறிஞ்சியாழில் எட்டுக்கிளிகளும் நெய்தல் யாழை அடுத்த எட்டும் மருத யாழில் பாலையில் அறுபத்திமூன்று கிளிகளும் மாறிமாறி மொழிந்த சுரப்பாதைகளை துளசியில் பிறந்த ஸ்திரியின் பாசுரங்களை பிரித்துப்பாட பூவில் மறையும் நகரங்களை திறந்து காட்ட ஏதோ வெண்பூ விரிந்து செவந்திப்புராணத்தில் சிவன்பாதம் தூக்கி எல்லையற்ற ராத்திரியில் நிற்க காகம் செம்புநிறமாகி கிளி கொறிக்கா ஒர் நெல்லின் அடியில் புதைந்த கன்னியின் தலை மட்டும் பீடத்தில் ரத்த விளாராய் பிய்த்தெடுத்த நரம்புநாண்களுடன் உதிரம் தோய்ந்த கேசம் படர்ந்தது திரிசடையாய் கபாடபுரத்தின் தனிப்பாடலை ஊமையான ருத்ரகணிகையொருத்தி வில்மேல் தெறித்த தென்முத்து சுழன்று ஹிரண்ய ஹர்ப்பத்தில் துளைந்து ஒளியுமிழப் பறந்தது சென்று ருத்ரகணிகையர் நெஞ்சறுக்கும் பெண் சோகத்தில் எல்லாக் காலத்திற்குமான அனந்தத்தின் களிவெயில் இசைத்த யாழில் திரிபுரம் எரிந்து சுழல்கிறது.

"உவமை, உருவகம்,மூர்த்திகரம், திறக்கும் கற்பனை வேகத்தில் இழையும் பித்த நிலையே படிமம் என்றான். மிருகங்களின் காலடிகளும் பறவையின்         நக்ஷத்திர தடங்களும் காற்றின் மிக மெல்லிய துயரமும்படிய மணல் பாதையில் காத்திருக்கும் சாவை தள்ளிப் போட்டவாறு தனிமை குடித்தி நக்ஷத்திரவாஸியின் மூச்சில்விலகும் விண்கோள்களும் உரசும் சுற்றுவிதிகளும் தாண்டி மெளனத்தில் கலந்து சாவின்அமைதியில் இறகுகளை மாற்றிப் அசைவின்றி மிதக்கும் அரூபத்தில் கரைகிறான் நக்ஷத்திரவாஸி.

அகநானூறு மன உலகப்பரிசோதனைகள் இடைக்கால இருளின் முன் மறக்கப்பட்டுவிட இன்று ஒரு புதுவிழிப்பில் முழுசாகாஉணரப்படாமல் பண்டிதப் படிப்பு அகவலக ஓட்டத்தை எட்டவில்லை எனினும் மூதாதைக் கவிகளைப் போல் இயல்பிலேயே  சுரணையுள்ள படைப்பாளி  உணர்ந்துகொண்டான். அகநானூறின் மனஉலகம் இந்தப் பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால் பித்தனும் மெளனியும் புரியவில்லை தெளிவில்லை என சொல்லமாட்டார்கள்" என்றான் வேகத்தில். இந்த நூற்றாண்டு முடிய இன்னும் இரண்டுதப்படிகளே எஞ்சியுள்ள தருணத்தில் இரண்டுதப்படிகள் சந்தித்த சாவின் நீலநிறக் கண்முலம் பார்த்துக் கொண்டிருக்கும் நக்ஷத்திரவாஸி தனிமொழியின் நிலப்பரப்பில் மேல் நோக்கி பயணம் உலக மொழிகளுக்கு மாறி படிமம் கழலும் கிரகவிதியின் கணிதார்த்தமாக எண்களை மாற்றி கடந்து சென்றான் பெயர்களை அகரர் இளம் பதிந்து வைத்த கீழ்திசை சுவடி அறையில் நக்ஷத்திரவாஸி குருதியின் ரகசிய இழையில் பயணமாகிறான். கருப்புநகரின் கடற்கரையில் நடந்து அப்பால் இருந்த தீவைப்பார்த்து யானைகள் ஒளிவெள்ளத்தில் பறக்கும், தொலைந்துபோன லெமூரியாவின் அதிஅற்புதக் கற்பனை கொண்ட எழுத்துமுறை கண்ணாடியுள்ளிருந்து லெமுரியாவைத் தாக்கிய சுருள் மின்னல் வில் அதிரும் காலாந்தத்தில் சரிந்து வெடித்துச் சுழலும் கவிதை விண்மீனிலிருந்து இன்னொரு விண்மீனுக்குத் தாவும் படிமம் மாபெரும் துணைக்கண்டத்தின் அடியில் விலகிய சிறுநிலத் துண்டின் ’சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்’ வரைந்து கொண்டிருக்கும் மனித முழு விடுதலைக்கான கவிதையை மறை பொருளாகவுள்ள மொழியின் நூற்றாண்டுகளுக்குப் பின் முன் உருகி நகரும் விடுதலைக்கான தேடலின் தொடர் கண்ணியை காணும் வேட்கையில் அருபத்தில் கரைகிறது உயிர் மரபின் தொடர்ச்சியை இயல்பிலேயே சுவீகரித்துக் கொண்டவன் இனகாழ்ப்புணர்ச்சியும் வர்ணாசிரமகாழ்ப்புணர்ச்சியும் ஓநாய்களாய் விரட்டிய கருப்புநகரின் சந்துகளில் தப்பித் திரிந்த வருஷங்கள் வக்ரமன விகல்ப்பர்கள் பின் துரத்த மௌண்ட்ரோட்டில் பட்டினியும் வறுமையும் உருவெடுத்து மறித்த இடம் விலகி நகர்கிறான் நக்ஷத்திரவாஸி. அன்றாட மனிதனின் மலம் மக்கும் குடலில் அறுத்தெடுக்கமுடியாதது கலையென்று குரூர மனவிகாரங்கள் வளைத்துக் கொண்டபுறத்தின் எல்லை தாண்டி அனாதியான கானகத்தில் மறைகிறான் நீலநக்ஷத்திரவாஸி. மெளனத்தின் அடியில் நொறுங்கிய சிருஷ்டிகளின் அதிர்வு கரையான் நின்ற ஏடுகளில் கோர்த்துச் செல்கிறான் அடுத்த வாக்கியங்களை இருளில் புகுந்து அடிக்குரலில் குமுறும் கபாடபுரப்பறவை ஒன்றின் சோகமென ஊமையான அவன் முகம் மரணத்தின் ஆழத்தில் கண்கள் புதைந்து உள்ளே சஞ்சரித்துக் கரு வெடித்துப் படரும் இன்னொரு உலகைக் கருக்கொண்டு

சரிந்து விழும் கதைகள் சுவர் எழுப்பிய கபாடபுரம் கண்முன் ’மண்டபத்தின் கீழ்மேல் தரைக்கூரை எதிரொலிக்க நகைத்தது பெண்குரல்’ செவிப்புலனாம் ஓசைகேட்டுக் கட்புலனாம் பொருளுனரும் தொல்லோர் திணைப்புக்களின் வாசனைக்குள் 'அனுகி அலைந்த சிரிப்பின் கலீர் ஒலி தீண்டி கவர்கள் பதறின.’

நக்ஷத்திரவாஸியின் பேழை திறந்தது பாதங்களின் கீழ் நக்ஷத்திரவாஸிகள் திரும்பின. அவன் உடல் எங்கும் ஆயிரம் உதிரநிறங்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்த அதிரொளி ஞாபகங்களின் தும்பிகனை நீட்டி உறிஞ்சிய ஈர்ப்பில் நிலங்களாய் விரிந்த படிமகோளங்கள் விருட்சங்கள் பர்வதங்கள் நவகண்டத்தின் பிரமாணமும் மடுஉய்யானங்களும் தும்பிகள் உதிரவீச்சில் பறந்து வருகின்றன அவனை நோக்கி வாசம் பொருந்திய புஷ்பத்தின் மது உள்ளறைகளில் சுருளும் தும்பிகளின் முகவாசனை

ஈசனார்பதிக்கு தென்பாற் சிகரத்தின் மேல் மொழிகீறிய அம்புடன் நக்ஷத்திரவாஸி

மரணமடைந்தவர் சொல்லாதின்ற சித்திரபுத்திரர் சொற்படிக்கு அதட்டி விரட்டி அடிக்கிற காலதூதர்கள் சூழ் சம்யமணியாகிய எமபுரத்தில் சுவடி ஏந்திய பித்தன் "அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவரஸத்தை தடவு" என்றான். 'மின்னல் சட்டச் சடசடாவென கம்பிகள் வழியாகப்பாய்ந்து குகைமுழுவதும் ஒரே பிரகாசமாகிக் கண்ணைப் பறித்தது. நன்னயப்பட்டன் முகமும் உடலும் கோர உருப்பெற்றது பேய்ப்பாய்ச்சலில் சென்று மறையும் ஒரு பெண்ணுருவின் சடையைப் பிடித்துத் திரும்பி குகையுள் மறைந்தான். வெளியே குமுறும் இடியும் மின்வலும் எங்கிருந்தோ வந்து கவிந்தன. குகைக்குள்ளே பேயுருவில் நடமாடுகிறான் நன்னயப்பட்டன்.

நக்ஷத்திரவாஸி வார்த்தையில் கபாடபுரத்தின் மறையாத யார் யாருடைய  
காலடிகளின் வளைந்த ரேகை நக்ஷ்த்திரவாஸியின் இடதுபாத லிபி முன்னோர் கலாச்சாரம் மூழ்கிய கடலினுள்ளே தொல்காப்பியத் திணைப்பூவில் விரியும் கடல் கொண்ட கபாடபுரம் வெறுமையாகி நின்ற தெருக்களில் உலவும் முன்னறியாத கதைகள் யுகங்களை விழுங்கி கிழக்கோட்டானாய் தனிமொழியில் சொல்லத் தொடங்கிய ஞாபகங்கள் மோதித் தெருக்கள் எதிரொலிக்கின்றன. கபாடபுரத்தின் தெருவில் நக்ஷ்த்திரவாஸியுடன் பேசுகிறது நகரம் கடல் கொண்டழிந்த தெருக்களில் வசித்தது தனிமை. மெளனியின் எட்டிய வெளிக்கும் அப்பால் கபாடபுரம் விரிவதைப் பார்வை கொள்ளச் சிறிது நேரம் ஆகியது போலும், பின்னும் முன்னும் இழந்து கொண்டிருக்கும் பிரம்மாண்ட கலாச்சாரத்தின் பாழ் தோற்றம் நீரடிப்பாதையில் புதைந்த சுடுமண் தாழியில் செதிலாய்த் தோல் சுருண்ட நக்ஷ்த்திரவாஸி விரல்களில் கிளி நகங்கள் முளைத்து இறகடர்ந்த கபாடபுரக்கிளியாகி பச்சை குத்திய மீனராசிமண்டல வடிவம் உடலெங்கும் நகர்ந்து தாவரங்களும் இலை நரம்பின் வெப்பமும் சர்ப்பவளைவில் விழுங்கப்பட்ட சந்திரப்பெண்ணும் சுருண்ட ஸர்ப்பமூச்சின் பயமும் தொட மின் செதில் குத்திட்டு அசைய நக்ஷ்த்திரவாஸி இடது பாத மொழி பிறப்பின் ரகஸிய உரையாடலாய் உயிரைத்தொட சாவில் கால் நீட்டி அசைந்து கொண்டிருந்த லிபிகள் அருகிருந்த பஞ்சலோகப் பட்சி காரண்ட இருள் வீசிப் பறக்க பிறையும் நக்ஷ்த்திரரமீன்களும் உதயமாகிப் புலப்படாத கிரககோளத்திலிருந்து வந்த நக்ஷ்த்திரவாஸி வளர் சடை இருள் விரிக்க சிரசு ஆந்தையாக எலிகள் விலாவில் சேர சீழ்முதுகு விரிந்த சிறகுடன் இருபத்திநாலு கழுகெலும்புகளாய் கோர்த்திருக்க மேல்முதுகு கருடனாய் காலும் கையும் அன்னமாய் முட்டுகுருவி காட்டாணிவிரல் எழுத்தாணியாய் எழுத்தோ ஸர்ப்பமாய் சடை முடிவிலா கானகமாய் அலைபடும் ஆழி வளர்சடை சுபாடபுரமாய் கோடு சுருள் முடி சுழிந்து புகுந்த கனவு திறந்த கோர வல்லுறுவாய்திறக்க விரிந்தது கபாடபுரம் . உறைநிலையில் இருந்த பூதக ஏடுகள் நுரைபொங்கிவர நக்ஷ்த்திரவாஸியை இழுத்த சர்ப்ப அலைகளால் விழுங்கப்பட்டு மீண்டும் சர்ப்ப வாய் திறந்து வெளிப்பட்டான் ஞாபகங்களில் ஊர்ந்து வரும் ஏடுகளில் நிழல் கோடுகள் எதிரே ஒளிபடர்ந்த தரையில்  ஆடும் நிழல்கள். எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ஊழிப் பருவ வெட்டி வெட்டிப் போன எழுத்துக்கள் நிழல்களாகி விரட்ட கூட்டமாய் கடலுக்குள்ளிருந்து நுழைய கபாடபுர நிழலின் அசுர ஓட்டத்திலிருந்து தப்பி ஓடுகிற நிழல்கள் தவளைகள் குரல் சுழற்சியில் உருவெடுத்த கபாடபுரம் நீருக்குள் சுழி சுழியாய் சுழல்கிறது. நகரும் பவளப் பாறைகளில் பிசாசுப்பாறையில் இடம்மாறி நகரும் நாவலந்தீவு எட்டுத் துதிக்கைகள் கொண்ட கடல்ராஸியாக மாறிய நாவலந்தீவு தோன்றி மறைய பித்தன் தலையில் விழுந்த துதிக்கையின் ஸ்பரிசம் பட்டு கற்பனைத் தீவுகளின் விசித்திர நீர்ச்செடிகள் ஒளிர்வடைந்து புதைபாதையில் சுழற்றி இழுத்தது பித்தனை செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இருட்டு சிந்தை அறிவினிலும் தனி இருட்டு பித்தன் தானே விசித்திரப் பிராணியைத் தேடிப்போகிறான்.

பனையோலைச் சுவடிகள் நீந்திவர ஓங்காரமிட்டு அலறித்துடிக்கிறது கடல் இருள் படிகளில் புதுமைப்பித்தன் உள்ளே மெளனி வடித்த பெண் சப்தம் "யார் நீ என்றேன். நீ முளைத்த நாளன்றே முனைத்து முளைத்துன் முகத்திசைக்கு எதிர்திசை நோக்கி விழித்திருப்பவள் என்றாள் ஜலத்தின் கதவுகள் அலையோடித் திறக்க’ கேட்டு கேட்டு மறையும் பிரபஞ்சகானம் என்றான் நக்ஷ்த்திரவாஸி வான வெளிச்சம் ஜலப்பரப்பின் மேல் படர்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. மெல்லெனக் காற்று விசியது அல்லிப்பூக்களின் தலைகள் ஆடின. பிரபஞ்சகானம் அவளுள் அடைபட்டு விட்டது அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ள வெளியுலகம் கொஞ்சமாய் மாறுதல் அடைந்தது. தலை சிறுசிறுத்தது. ஒன்றும் புரியாமல் இவன் தூனோடு தூணாகி விட்டான். அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜவ உணர்ச்சிக் கற்பனைகள் காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாய் மரணத்தைவிட மனதைப் பிளப்பதாய் அலைகள் வந்து வந்து மோதிச் செல்கின்றன. கபாடபுர இசைப்பறவைகளின் எச்சம் வழிவழியாய் குரல் கொடுக்கும் கோயில் பிரகாரங்களில் நடந்து போகின்றான் மெளனி. சிலைகள் உருவெடுத்து மறையும் கோபுரமெல்லாம் மூளிக் கலசங்கள் மோதும் சிறகுகளோடும் காதல் வடித்த கண்களோடும் கபாடபுர இசைப்பறவை பறந்து பறந்து துடிக்கும் குரல் பித்தனை எந்த யுகத்திலோ பின் தொடர்பவள். பேசாமடந்தையாகி கடல் கொண்டும் கல்லா கல்லாந் கன்னியே கண்மூடிப் பொய்ப்புன்னகை புரிந்து நிற்கிறாள் எதையோ கல்பதுமையிடம் இழந்த பித்தன் கதறுகிறான். கர்ப்பகிருஹ இருட்டு துயரங்களில் மூழ்கிக் கிடக்கிறது. இருளை மீறி முனகல் கேட்கிறது. மனம் கீறும் கண்களோ, இரு தீப்பொறிகள் உள்ளே தெறிக்கின்றன. நிருதியின் திசையிலிருந்த பலிபீடத்தின் மீது தலை அமர்ந்திருந்து கன்னியின் தலை, பீடத்தில் பலியிடப்பட்டு கடலில் எறியப்பட்ட சப்த கன்னிமாரின் எலும்புகளின் குமுறல் அறைகளுக்குள் அடைபட்ட கடலாய் சிறுகிறது. கன்னியின் சிரசு கல்லாகி ஆமையோட்டு நிறத்தில் அவள் எல்லா முகத்தோற்றங்களையும் காட்டுவதாக பித்தன் பார்த்தவாறு நிலைகுத்தி
வெறித்தான். அவனது தந்தையின் தந்தை முகத்தை நினைத்துப் பார்த்து அதில் பிரதிபலிக்கக் கண்டான். பிறகு பாட்டியின் முகத்தோற்றத்ததை நினைக்க அதுவும் இருத்தது தாய் முகம் அத்தை முகம் புராதன முகங்களையெல்லாம் காண இருந்தது. அனுபவத்திற்கு அப்பாற்பட்டதையும், அதில் காண முடியும் பித்தன் கற்பனையில் வாழ்ந்தவர்கள் கடந்த காலத்தைச் சேர்ந்த கட்டுக்க தைகளின் வீரர்களது முகத்தோற்றங்கள் கேள்விப்பட்ட கதைகளிலுள்ள அதிமானுடர் தனது சாயலில் பிரம்மராக்ஷஸ் தோற்றம் கொள்ள எல்லா முகங்களின் ஒரே முகமாகக் கன்னியின் உதிரத்தெடதுடு குரல்களில் விரிந்து வந்த நிலத் தோற்றங்களைப் பார்வை கொண்டு கரிய கடலான இருளில் உறைந்து போன கற்கள்கனம் வில நகர்கின்றன. கணநிலையாகத் தங்குகின்ற கரியநிற இருளடைந்த கடல் துளி விரிந்து துளிக்குள் விரியும் கபாடபுரம் பயங்கரம் நிரம்பி மங்கலாய் தெரிகிறது நகரம் நீரில் அசைகிறது. பித்தனின் வார்த்தையில் உயிர்க்கும் கபாடபுரம்,

இருக்கும் கன்னியின் சிரக அதன் அலகபாரம் ரத்த விளாறாகப் பலிபீடத்தில் விரிந்து கிடக்கிறது. அவள் கூந்தல் வளர்ந்தபடியே இருந்து கட்டுக் கட்டாய் அலையலையாய் வெளியேறிப் போனது அவள் அரூபத்துடன், கானகங்களில் மிருகங்களின் புராதன மூச்சின் மேல் துயில்கிறாள் கன்னி பூத்த உடைமரக் கு-ைமுள் படுக்கையில் குத்தும் இராவிருட்டு திரும்பவும் கடலில் புகுந்து பலிபீடத்தில் தலையாகி விடுகிறாள் மனிதவம்சத்தின் ஞாபகச் சரடாய் இருந்து வருகிறாள் பலிபீடத்தில் பேசுகிறது தலை, சண்பகப்பூவின் வாசம் கலந்த மெல்லிய காற்று ஊசலாடியது பலிபீடத்தில் காற்று எங்கிருந்து வருகிறது. கற்குகைக்குள்ளே தோன்றி அதனுள்ளே மடிகிறது போலும்,

’இம்மாதிரிக் காற்றடித்தால் சூரியோதயமாகிவிட்டது என்று அர்த்தம் அஸ்தமன மாகும் போது மல்லிகையின் வாசம் வீசும்’ என்றது கன்னியின் தலை

“நீ யார்?."

"மூன்று கர்ப்பகாலம் கடந்துவிட்டது. எத்தனைகாலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழமுடியும்

சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.

உடல் இழந்த வாழ்வு ஏற்பட்டதை கேட்காதே ரகஸியம் உனக்குக் கிடைக்காது. பரம ரகஸியமாய் ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. இது திசைகள் அற்றுப்போன இடம் எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதான்.

பிலத்திலிருந்து எழுவதும் மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கு அடியிலிருக்கும் எரிமலைதான் இப்படி அக்னி கக்கும் தென் வீழ்திசையில் இரண்டுதலையும் மூன்று கால்களும் நான்கு கொம்புகளும் செம்பூ சிவந்த ஆறு கண்களும் ஏழு நாக்கும் ஏழுகைகளும் உடைத்தாகி அசவாகனமும் சுதை சுவாகா எனும் பாரியையுடைய புகையைத்தானே கொடியாகக் கொண்ட அக்கினி கரைவிதைப் பற்கள் நெறுநெறுக்கக் கோபத்தில் உமிழும் ஒளிப்பிரவாகத்துடன் மண்டபத்தூணில் நிலைபெயர்ந்து ஆட பூமியின் அடியில் கபாடபுரத்தின் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. பிலத்துக்குள் சென்றான் பித்தன்.

ஒரே இருட்டு.

கடல் குகைக்குள் மறதியில் மூழ்கிய கபாடபுரவாஸிகள் தங்கள் தனிமொழியால் இசைக்கும் மகரயாழில் மறைந்த வார்த்தையின் சங்கேதப்பாடலை இசைக்கிறார்கள். அவர்கள் கையிலிருந்தது ஐந்து தானிய நிறைகொண்ட தென்முத்து மட்டும்தான். ஒவ்வொரு பூவைச்சேர்ந்த தானியத்திலும் ஒரு கன்னியின் தனிப் பாடலை இசைத்தார்கள்.அந்த வடிவங்களைக் கேட்கக் கேட்க பல குளிர் காலங்களுக்கு கூடலிழைத்தல் சுடரொடு புலம்பல்,  மின்னிடை மடந்தை அன்னமோடாய்ந்தது தேர்வழி கடலொடு கூறல் கூதிர் கண்டு கவர்ந்தும்  முன்பனிக்கு நொந்துரைத்தது யாழ்.    கோடைகளுக்கு பாலைகளின் பாதைகளுக்கு இருங்கூதிரெதிர்வு கண்டு கருங்குழலி கவலையுற்றது. பின்பனி நினைந்திறங்கி இளவேனில் கண்டு இன்னலெய்தியது பாலையாழ் மென்னகைப் பேதை கையில் யாழின் மொழி இருளா நின்ற கோகிலம் ஒரு காலைக் கொருகால் நிறம் பெற்று இருளா நின்றன குயில்கள். முல்லை நிலங்களுக்கு மருதநில மரங்களின் வளைவில் ரம்பையர்கள் போகமுற்று வேணல்சார் பாலையாழில் வண்டு உழுது சப்தியாதின்ற அகில் விருட்சங்களும் செண்பகப்பாலையும் ஆகாசமளாவி அசைந்தது. குமரிக் கண்டத்தில் சிலா நதிக்குத் தெற்கிருந்த நெய்தல்யாழில் முத்து ஊர்ந்து ஒளியுமிழ்ந்தது மொழியாய் மந்திரவயப்பட்ட குறிஞ்சிக்கு நெய்தலின் தீராத அலைகளுக்கு அவர்களது தனிப்பாடல் இழுத்துச் சென்றது. கடல் குகையின் கதகதப்பான சுவர்களில் இருந்த பெருமுச்சில் விரிந்த யாழின் நரம்புகள் தீரவே தீராமல் அதிர்ந்து கொண்டே இருக்கவும் இதயத்தை அறுக்கும் சோகத்தை இசைக்கவும் மகரயாழ் கல்லில் மோதி விழுந்தது. கை தவறிவிட்ட மகரயாழ் கடலில் மூழ்கியபடியே அலைகளால் அதிர்கிறது. தானே வாசித்துக் கொண் டிருக்கும் யாழ் முழ்கிய இனக்குழுவின் தனிப்பாடலின் அடியில் மெளனித்து 


உள்போய் உள்போய் குமுறிக் குமுறிக் கதறுகிற யாழ் பாறையில் மோதி யாழ் அலைகள் அழி அழி எனக் கதறும் வானளாவிய கோபுர நிழல்களைக் கடல் அரிக்கிறது. கடல் மோதி மோதி கோபுரத்தைக் கொல்கிறது. கோபுரம் உருவெடுத்துப் பெருகி வளர்கிறது. கபாடபுர வீடுகளில் கருமையான கடல் பாறைகளில் பாதம் படர்ந்து கடல் நீலமாகிவிட்ட பித்தன் எப்போதுமே கடலின் மேல் நடமாடுகிறான். கபாடபுரம் ஒளியில் லேசாய் மினுக்கும் சில ஜன நடமாட்டம் தெரிகிறது. தெருக்களில் மீண்டும் நடமாடும் அரூபமானவர்கள் கபாடபுரத்தில் இன்னமும் எஞ்சிப் போயிருக்கிறார்கள் எங்கோ மறைந்துபோய் ஆள் அருவம் கேட்டு கடல்கோட்டையில் மறைகிறார்கள். என்றைக்குமான மனிதர்களுடன் பேசிப் பேசி வார்த்தை இழந்து நிற்கின்றன. கபாடபுரத்தெருக்கள்  சுருக்கங்களே முகமாகிப்போன மனித அருபங்கள் படபடத்து தெருக்கள் ஊடுருவி நகரும் கரும்பூமி கபாடபுரத்திலும் உண்டுதானே. அங்கே மொழி கருத்துப்பிறந்த கதைகள் கொடிகற்றிக் கொள்ளும் சில இழந்த கோயில்களில் சிலை செதுக்கும் சப்தம், கல்லின் வறண்ட ஊற்றை நோக்கி கோயில்களில் உளிகளில் அலைகள் கோடு கோடாய் சுழலும் நாக்கி உளிகள் நகரும்.

கடல்பறவை கூட்டம் கூட்டமாய் அமரும்`  கபாடபுர மதில்கள் மணல்வெளியில் கால்வைத்து மணல் கொறிக்கும். பாழ் வெளியே சிறகு முளைத்து மணல் சிறகில் பறந்து செல்லும் கபாடபுரக்கிளி அலகில் வளைந்த நூற்றாண்டுகளான தனிமை வாசத்திலிருந்த ஒரு மஞ்சள் தானியம் `_

இரவின் இருள்வழியே உருவற்று ஊளையிட்டோடியது எட்டிப்போகும் நரி தொன்மக்கதைகளுக்கு ஊசியாகும் முள்ளெலிகளோடு வருகிறான் நக்ஷ் த்திரவாஸி கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாக சர்ப்பங்கள் கடல்வேடன் கொண்டு செல்கிறான் நக்ஷ்த்திரவாஸியின் ஈமப்பேழையை அதில் கபாடபுரக்கிளி வந்து காகம் செத்துவிழக் கண்ட கனவுகூறி நக்ஷ் த்திரவாஸி நாடிகளுக்குள் பஞ்சபூதங்கள் சுழன்று அவன் பிரதிமைகளாய் அசையும் ஏழு கன்னிமாருடன் நிலப்பட்சி கடந்து வந்த புலத்தோற்றங்களில் கபாடபுரக்கிளி மறைய ஆந்தை சிவப்பான கண்கொண்டு பார்த்த பச்சைநிற இறகடர்ந்த நக்ஷ்த்திரவாஸி உடல்தோலில் சுற்றிப்படர்ந்தன படபடத்து உறங்கும் நாழிகையில் நக்ஷ்த்திரவாஸி இடதுபாத லிபி கீறி நகர கெடுதியறிகுறி கண்ட கல்லாந்தையொன்று தெற்காகப் பறந்து இருள் வீசி சிறகுகளை மடித்து கபாடபுரம் ஏகியது. நரியின் ஊளையில் புரளும் நாக சாரைகளின் காட்டுக் கலவி புறங்களில் விம்ம ஒலிபுரளும் உறுமிக்குள் சாரைகளின் சீற்றம் இருளின் கால்கள் திரியும் வேட்கையில் ஊளையிடும் அரூபவனம் விட்டுக் கேட்கும் உருவற்ற ஊளை, மரண நடனமிடும் முள்ளெலிகளுடன் நரிகளும் தொடர இடுகாட்டில் மூதாதையின் எலும்புகள் உறுமும் ஆயிரம் கபால வழிதிறக்க குறுக்கோடும் வெருகுப்பூனை கபால வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்து கண்ணாடியுள்ளிருந்து நக்ஷ்த்திரவாஸி வருகிறான். தொலைதூர நரியின் குரல் தேய உடனே இடதுபாதத்தில் ஊறும் லிபி, உறுமியில் பற்றும் தூக்கிய பாதச்சொல் தோலில் நகர்ந்து அதிர பிரபஞ்சகானமது நரியின் ஊளை எழுத்தாவிகளின் இருள் கூட்டம் முற்பிறப்பு எலும்புகளில் சுற்றிச் சுழல கண்களைப் பறிக்கும் எலும்புத்துகள்கள் மணலில் சுற்றி உலகத்து ஜீவராசிகளின் எலும்புக்கூடுகள் பாதி புதையுண்ட மொழி மணிபல்லவத்தில் மாந்திரீகப் பாத்திரத்துடன் ககனங்கள் துகளாகும் வெறியுடன் பிறந்தகோலத்திலே வாலைக் கனிவு குன்றாத கன்னியுருவம் அசைவற்று நிற்கும் உருவத்தின் முகத்தில் புன்னகை உயிர் குடிக்கும் கொடுர உணர்ச்சிக்கும் அப்பால் வேட்கை பெருக்கெடுக்கும் இதழ் நடுக்கம் சப்த உலகங்களும் மோதுவனவாகும்பேரிடி .உருவம் இருந்தாற்போல் ஏய்த்து உருமீறி திசைகலங்கிப் புலனொடுங்க குரலற்று உறுமும் பெயரற்ற மிருகம் வெற்றுவெளியில் ஒளியின் பிலம் கானத்தில் நாயின் ஊளை திருகத் திருக நக்ஷ்த்திரவாஸி பாறை ஊசிகள் இருகூறாகப் பிளக்க மாட்டுத்தோலில் உறுமும் பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்சகானம்

வாலைக்கனிவு குன்றாக் கன்னியிடம் அடைபட்ட உன்னத கானம் பாம்பு மணி உமிழப் பணியிருள் ஒளிர்ந்து ஆம்பல் எனும் பண்ணில் ஐம்பது பதிவிரதைகளின் நாத ஒலி எட்டாத் தொலைவில் நரியின் ஊளை பிரபஞ்சகானம் அவளுள் அடைபட்டு வெளியில் படரும் நாளை வேண்டிக்கூறும் பிரலாபிப்பே என விழுந்த மெளனி காதில் உரசும் மாட்டுத்தோல் உறுமி ஒரே இடத்தில் படபடக்கப் பதிந்து பரவும் மிகக்கோரமான பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்சகானம் வசிகரமென தோலின் மீது எழுதப்பட்ட மாந்திரீகமொழி நக்ஷ்த்திரவாஸியின் இடதுபாத லிபி, கட்புலனுக்கு அடைபடாத பறைச்சேரி எமன் தவில் முழங்க நான் முதுகெலும்பு வளர்ந்து நாதவித்தாய் ரூபடையும் தொன்மம் வர்ணபேதங்கள் சிற்பசெளந்தர்யங்கள் சக்திப்பிரளயம் காவல்தெய்வம் இருட்டு பின்தொடரும் ஞானக்குகை சப்த நுணுக்கங்களில் சஞ்சரிக்கும் கிரியாசத்தி மோப்பம் தொன்னூற்று ஆறுவகை ஞானம் மனிதனைக் கடைசிவரை தொடரும்  
அனுபூதியென நாயின் மூக்கால் எழுதிச்சென்றான் நவீனன். இந்த ஊரில் மேட்டுத்தெரு என வீதி வண்ணான் குடி கசாப்புக்கடை மனித சமூகத்தின் எச்சங்கள் தெருநாய்கள். காகாவென கத்தும் விகாரமான காகங்கள். கோடியில் நின்றுபார்த்தால் மறுகோடியில் பார்ப்பனர்கள் மயானம் எட்டியவெளி சாம்பல்

பிணம் தள்ளும் கோலுடன் சுடுகாட்டுச் சாம்பலில் புரண்டு நிணம் எரிய கோடி
 கோடி யோனி பேதங்களில் துவாரங்கள் சுருண்டு ஊளையிட அனந்த கோடி ஜீவராசிகள்   பட்சிஜாலங்கள் இரைச்சலும் ஊளையும் தொடர வருகிறான் நக்ஷ்த்திரவாஸி. மயான பூமி இடிபட அவாந்திரவெளியில் நெருப்பாறு பாய நசஷ்த்திர மண்டலங்கள் திறந்து அப்போது துக்க ஒலத்தில் வாடைக்காற்றுடன் அவர் கோடியில் நாயின் ஊளை முன்வரிகளின் மும்பலின் மேல் நக்ஷத்திரவாஸியின் இடதுபாத விபி முகில் கூட்டம் புகைந்து மேலோங்க தொலைவில் நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச்சிமிழ். சுற்றிவந்து தலைதூக்கி ஊளையிடும் உருவமற்ற  நரிகள் கபாடபுரக் கிளிகள் மறைந்துறையும் ஈமப்பேழையில் நக்ஷத்திரவாஸி

                                                                                                மாசி-பங்குனி
                                                                                                தாது வருஷம்

Monday, May 15, 2017

வாசனை - சுந்தர ராமசாமி

வாசனை - சுந்தர ராமசாமி
GOOGLE-OCR 

சாம்பசிவன் தன் மனைவி லலிதாவுடன் அந்தப் புண்ணிய ஸ்தலம் வந்து சேர்ந்தபோது காலை வெயில் உக்ரம் கொள்ள ஆரம்பித்திருந்தது. அவர்கள் அதிகாலையில் சேர இருந்ததை எண்ணி வந்தவர்கள். வாகனங்கள் ஏமாற்றிப் பிந்திப்போனதில் அலுப்படைந்து வேறு பல அசெளகரியங்களையும் வழி நெடுக வார்த்தையாடி மனதில் உப்பவைத்து வந்து சேர்ந்தனர். ரயிலிலிருந்து வெளிப்பட்டது தப்பித்து விரையக் குதிப்பது போலிருந்த்து.


எதிர் வெயிலில் உடல் முன் சரிய, ஒருவர் முகம் ஒருவர் பாராமல் துரிதமாக நடந்தனர். ஆடைகள் வேர்வையில் நனைந்து முதுகில் ஒட்டி பிசுபிசுத்து வெறுப்பூட்டிற்று. கோயிலில் அப்பொழுது நடை சாத்தியிருக்கக்கூடும். இருந்தாலும் வெளிப் பிரகாரத்தில் விக்ராந்தியாய்ச் சுற்றி மண்டபத்தில் படுத்துப் பேசி கடற்காற்றில் இளைப்பாறலாம் என்பதை ஓரிரு வார்த்தைகள் விட்டுக்கொண்டதிலேயே அவர்கள் மனதில் சுகந்தரும் காட்சிகள் விரிந்தன. ஒட்டல் அறை ஒன்றை அமர்த்தி, குளித்துப் புதுசு உடுத்திக்கொண்டு கிளம்பியபோது பார்ப்போர் இஷ்டப்படும்படி இருவரும் இருக்கிறோம் என்ற எண்ணமும், பரஸ்பரம் பிரியமும் அதனால் ஒரு மிதப்புணர்ச்சியும் ஏற்பட்டன.

லலிதா மாடிப்படிகளில் நாகரிகப் பாங்காக இறங்க ஆரம்பித்தாள். சாம்பசிவனின் அடிகள் அவளுடைய அசைவுகளுக்கு அனுசரணைப்படாமல் வேறுபட்டு லலிதாவின் கற்பனையை உறுத்திற்று. பூண் கட்டிய அவன் ஊன்றுகோல் வெற்று மரப் பலகைப் படிகளில் மிகையாக சப்தித்தது அவளுக்கு மனக் கூச்சம் உண்டாக்கிற்று. லலிதாவின் உணர்ச்சி இதனால் பாதிக்கப்பட்டு, கீழே நிற்காத பலர் அவளைப் பார்த்து பரிதாபம் கொள்வது போல் மனக் காட்சிகள் விரிய தன்னிரக்கம் கொண்டாள். இக்கற்பனை மறு கணம் கலையவும் விபத்தில் ஊனமாகிவிட்ட கணவனுக்கு சிச் ரூஷை செய்து நலியும் திரைப்பட நாயகியாகத் தன்னை பாவனை செய்துகொண்டாள். இப்பொழுது பலர் சேர நின்று அவர்களைப் பார்க்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. நிகழவிருக்கும் விபத்தைத் தடுக்க ஜாக்கிரதை கொள்வது போல் அவன் அருகில் அவள் நெருங்கிக்கொண்டாள். தன்னுணர்வின்றி அவளிடம் ஒரு புன்சிரிப்பு வெளிப்பட்டது. சாம்பசிவன் இதை கவனித்ததும், எதற்கு என்ற அர்த்தத்தில் "ம்?" என்று கேட்க, 'ஒண்ணுமில்லை' என்றாள் அவள் அவன், எதற்குன்னே தெரியாத சந்தோஷமா? நான் கேடறது உனக்குக் கிடைச்சுட்டுதா?’ என்றான். லலிதா சிரித்தாள். மிதப்பும், திரைப்பட உணர்வுகளும் அவள் மனதில் குழம்பிப்போலிச் சந்தோஷத்தை அளித்தன.

வெளியே வெயிலின் பிரகாசமும், உஷ்ணக் காற்றும் சகிக்க முடியாமல் இருந்தது. அந்த அக்கிரகாரம், கோயிலின் புதுப் பிரபல்யத்தில் கடைத்தெருவாய் மாற்றமடைந்து, சொற்ப வீடுகளே மிஞ்சியிருந்தன. அங்கு குடும்பக் காட்சிகள் வியாபாரச் சந்தடியில் குழம்பிக்கொண்டிருந்தன. கடையோரச் சிறு நிழல்களில் ஆண்கள் கூடி அரசியல் கத்திக்கொண்டிருந்தனர். எளிய வீடுகள் முன் போடப்பட்டிருந்த கோலங்களை முரட்டுப் பாதங்கள் மிதித் துச் சிதைத்திருத்தன.

உடம்பில் படாமல் கீழ் மட்டத்தில் அடித்துக்கொண்டிருந்த உஷ்ணக் காற்று புழுதி சுருட்டிக் குப்பைகளைச் சிதறச் தள்ளிக்கொண்டிருந்தது. மறுகாற்றுக்குக் குப்பைகள் மீண்டும் மேலெழுந்து பறந்தன. நின்று. தெருவின் இருபக்கமும் பார்த்து விட்டு சாம்பசிவன் தன் அசைவுகளைத் துரிதமாக்க ஆரம்பித் தான். அவன் கைக் கழி அவன் முன் குத்திப் புழுதி கிளறிப் பின் நகர்ந்து அவனை முன் பக்கம் நகர்த்திற்று இரு கைகளும் கைத்தடி பிடித்திருக்க, அடி வயிற்றை அதன் மேல் சாய்த்து உன்னி அவன் சென்றுகொண்டிருந்தான். 'எத்தனை மைல் வேணும்னாலும் இப்படியே போகலாம். ஒண்னும் சிரமம் இல்லை' என்று அவன் லலிதாவிடம் சொல்லியிருக்கிறான். கூடாது என்று எப்பொழுதும்போல் நினைத்துக்கொண்டபோதே, அன்றும் அவள் பார்வை அவன் பதித்துச் செல்லும் ஒற்றை அடிக்கவட்டில் பதிந்தது. தனக்கும் தன் கணவனுக்குமான இடைவெளி விரியப் பயப்படுவதுபோல் தன் வேகத்தை அனுசரணைப்படுத்தி பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் தலை மயிர் ஈரம் காய காற்றில் பறந்தது. குங்குமத்தின் சில சிதறல்கள் அவள் புருவத்தின் மேல்பக்கமும் முக்கின் துனியிலும் உதிர்ந்திருந்தன. மங்கல உணர்வையும். ஆலிங்கனம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசையையும் பார்ப்போருக்கு எழுப்பும் விதமாய் அவள் தோற்றம் இருந்தது.
o

"பாப்பாத்தி. வாடி ராஜாத்தி. ''

ஒரு காட்டு மிருகத்தின் சப்தம்போல் மற்ற இரைச்சலினின்று தூக்கலாயும் கரகரத்தும் அவ்வார்த்தைகள் சாம்பசிவன் காதில் விழுந்தன.

சாம்பசிவனின் அசைவு நின்றுபோக அவன் பக்கவாட்டில் பார்த்தான்.

'பாப்பாத்தி, வாடி ராஜாத்தி.'

குரல் கீழ் ஸ்தாயியில் இறங்கி, இம்முறை அதில் இளப்பமும் கொஞ்சலும் கலந்திருந்தது.

டீக்கடை முன் அந்த ஆசாமி நின்றுகொண்டிருந்தான், நாலைந்து சிறுவர்கள் அவன் முன்னால் சிதறியிருந்தனர். மொட்டைக் கைகளை அந்தரத்தில் அசைத்து. பார்வைக்குப் புலனாகாமல் பறக்கும் ஈக்களைச் சாகடிப்பதுபோல் அவன் கைகள் சேர்த்து தட்டிக் கொண்டிருந்தான். நாசித் துவாரம் சிதைந்து வாய் மடையில் வழிந்திருந்தது. முகத்தில் பல இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஈரத்தொளைகள் தெரிவதுபோல் தோன்றிற்று பாதங்கள் வீங்கி அழுகிக்கொண்டிருந்தன. கட்டுப் போட்டுச் சுற்றியிருந்த துணியில் சீழ் பட்டுக் கறை படிந்திருந்தது. கால் விரல்கள் திருகி ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டிருந் தன. கழுத்தில் அழுக்குக் கயிற்றில் தொங்கிய தகரக் குவவை விலாவுக்கும் தொப்புளுக்கும் ஆடிக்கொண்டிருந்தது. -

சாம்பசிவத்தின் பார்வையை சந்தித்ததும் ஒர் இயந்திரத்தின் முடுக்கல்போல் அவன் சிரித்தான். அச்சிரிப்பு வெட்கம் கெட்டதாய், பரிகாசமாய் எடுத்துக்கொள்ளும்படி இருந்தது.

சாம்பசிவனின் கவனம் லலிதா பக்கம் திரும்பியது. அவன் நின்றபோது அவள் கால்களும் நின்றுபோயிருந்தன. அவன் மனம் அந்தப் பிராந்தியத்தில் இல்லை. அவன் பார்வை கோயில் வாசலில் நுழைவோர் மீது படிந்திருந்தது. லலிதாவின் கவனமின்மை சாம்பசிவனுக்கு ஆறுதல் அளித்தது. நின்றதற்குச் சாக்குப்போல் கோபுரத்தைக் காட்டி, நியான் போட்டுக் கெடுத்து விட்டார்கள்' என்று தேசலாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். தன் அங்கஹீனத்தை அவன் பயன்படுத்திக்கொண்டதாக சாம்பசிவன் மனதுக்குப்பட்டது. அதற்கு என்பது யோசித்துப் பக்கம் அவனுக்குப் பிடிபடவில்லை. லலிதா , காதில் விழுந்திருந்தால் அருவருப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி அவள் காதிலும் விழுந்திருந்தால் என்ன செய்ய முடியும் என்று அவன் யோசித்துப் பார்த்தான். கெட்ட வார்த்தைகளில் தன்னால் அவனை மிஞ்ச முடியும் என்று எண்ண இடமில்லை. மேலும் கெட்ட வார்த்தைகளை  ஒன்றின் பின் ஒன்றாய் தடங்கல் இல்லாமலும் விஷ. ஊசி போலவும் அக்ஷர சுத்தமாயும் பயன்படுத்தச் சிறு வயதிலேயே பயிற்சி பெற்றிருந்தால்தான் முடியும் என்று அவனுக்குப் பட்டது. அப்படியே சொல்ல முயன்றாலும்கூட தன் உச்சரிப்புகள் தன்னையே நாண வைக்கும் என்று தோன்றியது. தான் மறைத்து வைத்திருந்த வார்த்தைகளை ஏக காலத்தில் லலிதா கேட்க தேர்ந்து தரக்குறைவாய்த் தன்னை எண்ணிவிடுவது அவனை சங்கடப்படுத்தும். தான் ஊர்விட்டுப்போவதற்குள், அந்தப் பிச்சைக்காரன் தன்னை மீண்டும் ஒருமுறை அவன் முன் வெளிப்படுத்திக் கொள்வான் என்று சாம்பசிவனுக்கு உறுதியாய்ப்பட்டது. அவ்வாறு நிகழ்ந்தால் மனங்கூசி ஒதுங்காமல் தைரியமாய் அதை சமாளிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். லலிதா தன்னுடன் இருப்பது சாம்பசிவனுக்கு இடையூறாய்ப் பட்டது. லலிதா மீது வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தவும், அவள் உள்ளூர சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பதற்கு நேர் மாறாக, நெருக்கடி ஏற்பட்டால் அவனால் அவளுக்குப் போதிய பாதுகாப்புத் தர இயலும் என்பதை நிரூபிக்கவும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனை அவனுள் மூண்டது.

லலிதா எத்தனை பிரியத்துடன் தன் மீது ஒட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதை சாம்பசிவன் நினைக்க ஆரம்பித்திருந்தான். மன ஒதுக்கம் என்பதே அவளிடம் இல்லை. அதுபோல் இறுக்கமாக அவள் மீது கவிய அவனால் முடியவில்லைதான். அவள் இயல்புக்குத் தன் குணம் சமமாய் அமையவில்லை என்று அவனுக்குப்பட்டது. வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தெரியவில்லையே தவிர மற்றபடி லலிதா மற்றபடி' என்று சில சமயம் அவ விடம் அவன் இழுப்பான் 'சரி சரி, யாரு இல்லைனு சொன்னா இப்போ " என்று அடக்குவாள் அவள். அது சாதாரணமாக சரியாகவும் இருக்கும். பிரியமாகவும் தெரியும். கேலி மாதிரியும் அர்த்தம் கொடுக்கும். லலிதா தன் மீது கொண்டுள்ள பிரியம் உடல் உறவை மையமாக வைத்து வேர்விட்டு வேறுபல மையங்களை கிளை வீசி இணைத்துக்கொண்டுள்ளதாக சாம்பசிவன் எண்ணினான். அவளுடைய வேட்கை மிகுதியானது என்பதை விடவும் குருட்டுதனமான வெறி என்பதில் அவனுக்குத் திருட்டு சந்தோஷமுண்டு. உடலுறவு கொள்ளும்போது பின்னால் நினைத்துக் கூசும்படி அவளிடம் உணர்ச்சியின் கற்பனைகள் வெடிக்கும். அதிகாலைகளில் அவள் மீது வெட்கம் பல சமயம் கவிந்திருக்கும் என்றாலும் வாய்விட்டு எதுவும் பிரஸ்தாபித்து அவளை அவன் நாண அடித்தது கிடையாது. இது தன்னை ஒத்த கனவானின் இயல்பு என்று அவன் மனதில் கூறிக்கொண்டாலும், உண்மையான காரணம் அதைப்பற்றி பிரஸ்தாபித்தால் அவள் வெட்கம் அடைந்து காதல் விளையாட்டில் தன் உணர்ச்சியைத் தணித்துக் கொண்டு விடுவாளோ என்ற பயம்தான். இவ்வளவு ஆசைகளுக்கும் நடுவில் லலிதாவால் தன் உடற் குறையை மிச்சமின்றி விழுங்கவும் முடியவில்லை என்பதும் சாம்பசிவனுக்குத் தெரிந்திருந்தது. இருவரும் ஒன்றாகத் தெருவில் நடக்கிறபோது, (இதுபோன்ற சந்தர்ப்பங்கள் உருவாவதற்கு முன்னாலேயே லலிதா சாதுரியமாகக் கலைத்துவிடுவதுண்டு) தன் குறையைக் கவனிக்கும் பார்வைகளைத் தவிர்ப்பதற்காகத்தான் அவள் தூரத்தில் பார்வை குத்தி விறைப்புற்று செல்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும்.

சாம்பசிவனை ஒரு விசித்திரப் பிறவி என்று கற்பனை செய்துகொள்ள லலிதாவுக்குப் பிடித்திருந்தது. வேறு யாருக்கும் அடங்காத அவன் தன் மந்திரத்துக்குக் கட்டுண்டு கிடப்பதாக எண்ணம் கொள்வாள். சாம்பசிவனைப் பற்றித் தன் தாயாரிடம் 'இரண்டு ஜென்மம் அதுகூட வாழ்ந்தாலும் இன்ன சமயத்தில் அதுக்கு இன்னமாதிரி மூளை வேலை செய்யும்னு கண்டுக்கவே முடியாதம்மா...' என்பாள். இவ்வார்த்தைகளை அப்படியே வெள்ளையாக எடுத்துக்கொண்டு அவள் தாயார் அலுத்துப் பேசும்போது அவளுக்கு உள்ளுர ஒரு சந்தோஷம் கிளம்பும். இதுபோன்ற மன விளையாட்டுகளில் ஈடுபடும் நாட்களாகவே லலிதாவுக்கு வந்துகொண்டிருந்தன என்பதில்லை. சாம்பசிவன் சிறுகச் சிறுக பல மன மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருந் தான். அவனது ஆசையும் கவனமும் ஆத்மீகப் பாதையில் திரும்பிக் கொண்டிருந்தன. பிரம்மச்சரிய நெறியை மிகுந்த வைராக்கியத்தோடு அவன் பின்பற்றினான். இதில் சில சறுக்கல்கள் அவ்வப்போது ஏற்பட்டுப்போயின என்றாலும் அவன் வயதுக்கு அவன் கொண்டிருந்த வைராக்கியங்கள் சாதாரணமானவை என்று சொல்லமுடியாது. இதற்கு அனுசரணையாக வேறு பல மனப் பயிற்சிகளும் உடல் அப்பியாசங்களும் அவன் அன்றாட வாழ்வில் இடம்பெற்று நீண்டநேரங்களை விழுங்கிக் கொண்டிருந்தன. விட்டில் தனது ஆத்மீகப் பயிற்சிகளுக்கென மேலும் ஒரு தனி அறை ஒதுக்கிக் கொண்டான் லலிதாவுக்கு அவ்வறையில் பிரவேசனம் கிடையாது என்பது வழக்கத்தில் ஆகியிருந்தது. அவனுடைய ஆத்மீக விசாரம் அவனை முழுசாக ஸ்விகரித்துக் கொண்டு தன்னை ஒதுக்கிவிடுமோ என்ற உள்பயம் அவளுக்குத் தட்ட ஆரம்பித்திருந்தது. முதல் குறைப் பிரசவத்துக்குப்பின் அவள் கருவுறவில்லை. மாசாமாசம் போய் உக்காந்துக்கோ பெத்தேனே பொண்ணை’ என்று அவளையே முழுப் பொறுப் பாக்கி அவள் அம்மா நெஞ்சில் தட்டிக் கொள்வாள். அவனுடைய ஆத்மீக வாழ்க்கைபற்றி சில சமயம் சாம்பசிவனே அவளிடம் மறைமுகமாக அபிப்பிராயம் ஆராய்வான்.  உங்க குடும் பத்துக்கு இது புதுசா பெரிய அண்ணா உங்களை இருகிளை வாரிஸு அப்டீன்னு சொல்வாராமே" என்பாள் லலிதா.

பெரிய அண்ணா என்று லலிதா குறிப்பிட்டது அவளுடைய மாமனாரை தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அவர் பெயர், வித்தியாசம் இல்லாமல் அதுதான். எஸ் எஸ். அய்யர் என்பது தஸ்தாவேஜகளில் இடம்பெற்றிருந்ததோ என்னவோ, ஊரில் தனி கவுரமும் வித்தியாசமான வாழ்க்கை முறைகளும் பெற்றுப் புகழடைந்த குடும்பம் அது. நில புலன்கள் இருந்தன. ஆனால் இரண்டு தலைமுறைகளில் அவர்கள் வீட்டில் யாரும் லெளகீகம் பார்க்கவில்லை. விளைந்துவந்த வரையிலும் சரிதான் என்று விட்டிருந்தார்கள் இந்த குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவர் சந்தியாசியாகச் சென்றுகொண்டிருந்தார்களாம். பெரிய அண்ணாவின் தகப்பனார் கணபதி அய்யர் தனது நாற்பதாவது வயதில் ஞான வாழ்க்கை தேடி வடக்கே சென்றுவிட்டார். பின்னால் அவரை உறவினர் யாரும் பார்க்கவில்லை. அவரைப்பற்றி யாரோ எழுதிய ஆங்கிலப் புத்தகத்தையும் அதனுள்ளே பழுப்பேறிய ஆர்ட் தாளில் அவர் படத்தையும் லலிதா சாம்பசிவனின் புத்தக அலமாரியில் பார்த்திருக்கிறாள். பெரிய அண்ணா தன் வாழ்நாளின் சத்தான பகுதியைப் பூராவும் காந்தி அடிகளைப் பின்பற்றிச் செலவழித்தவர். அவர் குடும்பம் கைதுசெய்து அழைத்துச் செல்லப்படுவதை லலிதா தன் விட்டில் சாத்தப்படும் வாசல் கதவுக்குப் பக்கத்திலுள்ள ஜன்னல் வழி பார்த்திருக்கிறாள்.

பெரிய அண்ணாவின் குடும்பம் தெருக்காரர்களின் மானசீக ஒதுக்குதல்களுக்கு ஆளாகியிருந்தாலும் லலிதாவின் சிறுவயது நினைவுகளில் இக்குடும்பம் விசேஷக் கவர்ச்சி பெற்றிருந்தது. அவளுக்கு அந்த வீட்டுக்காரர்கள் பேரில் ரொம்பவும் ஆசையாக இருந்தது. அவர் குடும்பத்தைச்சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த உறவுகளிலும், அந்த வீட்டின் பகுதிகள் மீதும் அவளுக்கு ஆசையாக இருந்தது. பெரிய மா மியைத் தவிர - அவர்கள் வீட்டில் எல்லோரும் - தரை சிறுவயதிலேயே குருடாகிவிடுவார்கள் என்று அவள் நினைத்திருந்தாள். . பின்னால், சாம்பசிவன்அவளை மணந்து கொண்டபின் அவனுக்கு தெரியாத மறைந்துபோயிருந்த - குடும்ப காட்சிகளையும் விஷயங்களையும் செய்திகளையும் '' நினைவுறுத்தியிருக்கிறாள். பல காட்சிகளை நடித்தும் காட்டியிருக்கிறாள். பெரிய அண்ணா சிறுவயதில் விதவையாகி விட்ட தன் தங்கை ஜானகியை மேல்படிப்பு படிக்கவைத்து தன் கிருஸ்துவ நண்பருக்கு கல்யாணம் செய்துவைத்திருந்தார். அவர்கள் இருவரும் திருச்சியில் கல்லூரியில் ஆசிரியர்களாக வேலை பார்த்தனர். விடுமுறை நாட்களில் சாம்பசிவனின் ஜானகி அத்தை காரை அவளே ஒட்டியபடி பெரிய அண்ணாவின் @ు 蠶 இறங்குகிறபோது, கூடி வேடிக்கை HTఉల్త్ లే o லலிதாவும் நின்றிருக்கிறாள். ஜானகி மாமியின் ---- தோற்றமும், காரிலிருந்து திண்னைக்கு இறக்கப்படும். _ெ. ஞம், தலையணை உறைகளும், மாமியின் கைப்பையும, செருப் பும், சங்கிலி தொங்கும் தண்ணீர்ப்புட்டியும் - ஒவ்வொன்று-ே லலிதாவிடம் விவரிக்க முடியாத கனவுகளை விரிக்கும். ! Tx டாவிலும் நடுக்கூடத்தின் வாசலிலும் குழந்தைகளின் அடைசல் பெரிய இம்சையாகிப்போகிறபோது, உள்ளே இருந்து யாராவது வந்து போயுட்டு அப்புறமா ஹாங்கோ' என்று குழந்தைகளை வெளியே நக்ர்த்தி விடுவார்கள். தான் பார்த்ததை எல்லா தாயாரிடம் சொல்ல லலிதா ஒடிப்போவாள். அவள் சொல்ல ஆரம்பித்ததுமே, போகச்சொல்லு அந்த முண்டையை என்பாள் லலிதாவின் தாயார். அப்போது தன் தாயாரின் முகம் படுத்திய வெறுப்பையும், வலிப்பையும் லலிதா நடித்திருக்கிறாள். அதைப் பார்த்து அவன் கடகடவென்று சிரிக் கிறபோது நிஷ்களங்கமான அவன் குணத்திற்காக அவனை அங் கேயே அனைத்துக் கொள்ள அவள் மனதில் ஆசை எழும். நாவிதன் ராமசாமியை பெரிய அண்ணா வாங்க, போங்க என பன்மையில் அழைத்துப் பேசுவதை ஊர்க்காரர்கள் கேலிசெய்து பேசுவார்கள். வெற்றிலைப்பெட்டியை அவனுக்கு நகர்த்துவா தாம் பெரிய அண்ணா. பெரிய அண்ணாவின் தம்பி சின்னண்ணா தன் தகப்பனாரைப் பின்பற்றி, மேலும் சற்றுத் தீவிரமாக, கல்யாணத்திற்கு முன்பே புதுச்சேரி சென்று அரவிந்த யோகி யுடன் இணைந்து கொண்டார். அப்போது சாம்பசிவன் சிறு குழந்தை சாம்பசிவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது அவனுக்கும் சின்ன அண்ணாவுக்கும் விட்டுப் போயி ருந்த தொடர்பு கடிதம் மூலம் புதுத் துவக்கம் கொண்டது. அவ்வப்போது சின்ன அண்ணா அனுப்பிவைத்த புத்தகங்களும் அவனுக்குத் தபாலில் வந்தன. நாள் செல்லச் செல்ல சாம்பசிவ னின் ஈடுபாடு ஆத்மீகத் துறையில் வளர்ந்து விடவே, சிவராத்திரி தோறும் அரவிந்தர் தரிசனத்துக்கு அவன் புதுச்சேரி போய் வந்தான். ஊர் திரும்பியதும் சாம்பசிவனிடம், சித்தப்பாவைப் பார்த்தேளா?' என்று லலிதா கேட்பாள் இப்போ அவர் எனக்கு சித்தப்பா இல்லேடி, அசடே' என்று அவன் பதில் சொல்வான்.


__________________



"நான் உன் புருஷன் இல்லேடீ அசடே அப்டீனு என்கிட்டேச் சொல்ல கத்துத்தந்தாரா? என்று லலிதா தொடர்ந்து கேட்பாள். அதற்கு அவன், 'இது கத்துத் தெரிஞ்சுக்கற சமாசாரம் இல்லேடீ" என்பான்.



சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே ஒய்ந்து விட்டோடு ஒதுங்கிவிட்டார் பெரிய அண்ணா. வயோதிகம் கவிந்து உடல் கட்டு விட்டு ஆட்டம் கண்டுவிட்டிருந்தது. ஒருநாள், வாடிக்கைப் பாலை பித்தளைச் செம்பில் வாழை இலைபோட்டு மூடி எடுத்துக் கொண்டு லலிதா பெரிய அண்ணா வீட்டுக்குப் போனாள். ஹாலில் நுழைய முடியாதபடி வழிமறித்து உட்கார்ந்தபடி சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பெரிய அண்ணாவும் மூத்த மாட்டுப்பெண் சுசியும் ஒரு கட்சியாகவும், மூத்த பிள்ளையும் கடைசிப் பெண்ணும் மறு கட்சியாகவும் ஆடிக்கொண்டிருந்தனர். தைலம் பூசியிருந்த தன் காலை நீட்டி வைத்துக்கொண்டிருந் தார் பெரிய அண்ணா. மாட்டுப் பெண்ணைச் சமமாக 5 lia, TJ வைத்துச் சீட்டு விளையாடும் பெரிய அண்ணா மீது லலிதாவுக்கு மிதமிஞ்சிய பிரியம் கவிந்து அவருக்குப் பணிவிடை செய்வதில் தன்னைப் புகுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்ற ஆரம் பித்தது. சாம்பசிவன் ஊஞ்சலில் கவிழ்ந்து படுத்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். அவன் வலது கால் வேஷ்டிக்கு வெளியில் தெரிந்தது. கால் கும்பியிருந்தது. மற்ற இடங்களை விடவும் அக்கால் பெரிய மறுப்போல் கறுத்தும், சொரசொரப் பாகவும் ரோமம் படர்ந்தும் இருந்தது. பாதம் குறுகி சிறு குழந் தையுடையது போலிருந்தது. அவள் வந்து நின்றுகொண்டிருந் தது யாருடைய பார்வையிலும் விழவில்லை, அப்படியே நின்று கொண்டிருக்கத்தான் அவளுக்கும் ஆசையாக இருந்தது. தன் கற்பனையில் பெரிய அண்ணாவின் பிள்ளையும் மாட்டுப்பெண் ணையும் தள்ளிவிட்டு, தன்னையும் சாம்பசிவனையும் அந்த இடங்களில் இருத்தி அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பெரிய அண்ணா கட்சி, அவளுடைய இறக்கம் ஒன்று வெகு வாய்ப்பாக அமைந்துபோக, 'சபாஷ்டீ பெண்ணே, இந்தப் பயலைத் தொலச்சுப்புடறேன்' என்று அவர் சாம்பசிவனைப் பார்த்துக் கத்துகிறார். சாம்பசிவனை அடைந்துவிட வேண்டும் என்று தான் முடிவுசெய்தது அநேகமாக அந்த நிமிஷமாகத்தான் இருக்கும் எனப் பின்னால் லலிதா நினைத்துக் கொள்வதுண்டு. சாம்பசிவனும் லலிதாவும் கோயிலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். சாம்பசிவனுக்கு அவசியமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் நினைவாகவே இருந்தது. அவன் மீண்டும் தன் முன் எதிர்ப்படப் போகிற இடத்தையும் நிமிஷத்தையும் எதிர்

DJ TF52 5T 465

பார்த்துக்கொண்டே வந்தான் அவன். அவன் c6tb பிரக்ஞை குறைந்து உறைந்துபோயிருந்தது. லலிதா நெகிழ்வாகவும் கலகலப்புடனும் இருந்தாள். நிறைய ஆசைப்பட்டு சிறு விஷயங்களை விரித்தும் நீட்டிக்கொண்டும் இருந்தாள். நீடித்த குடும்ப வாழ்க்கை தனக்கு அளிக்கப்பட வேண்டுமென்ற பிரார்த்தனையை தெய்வ சந்நிதியில் சமர்ப்பித்த பின், தன் மனச் சுமையை சேர வேண்டிய இடத்திற்குத் தள்ளி விட்டோம் என்ற நிம்மதியில் அவள் இலேசாகியிருந்தாள். ಆTLசிவனுக்குக் காதில் ஏதோ சத்தம் விழுந்துகொண்டிருந்ததே தவிர, அதன் பொருளை கிரகித்துக் கொள்ள அவன LC50 LO ஒத்துழைக்கவில்லை. தன் கவனக் குறைவு பட்டவர்த்தனமாகாத படி, அவள் பேசி நிறுத்தும்போதெல்லாம், " சரிதான் 墨 சொல்வது ரொம்ப சரி'; 'இல்லாவிட்டாலும் அப்படித்தானே என்றெல்லாம் பொதுப்படையாக உளறிக்கொண்டிருந்தான்.

டீக்கடை வாசலில் இப்போது ஒரு சிறுகூட்டம் கூடியிருந் தது. வயது வந்தவர்களும் நின்றுகொண்டிருந்தனர். வியாதிக் காரன் வாய்கிழியக் கத்திக் கொண்டிருந்தான். சில கெட்ட வார்த்தைகள் சாம்பசிவன் காதில் விழுந்தன. அவன் தெருவின் மறுபக்கம் நகர்ந்துவிட உத்தேசித்து குறுக்காகத் தாண்டுவது தோல்வி என்று நினைத்து, இயற்கையாய் நகரும் பாவனையில் சரிவாகத் தாண்டி இடதோரம் சென்றான். அவனும் லலிதாவும்

பிச்சைக்காரனுக்கு நேராக எதிர்ப்பக்கம் வந்தபோது, '' it பாத்தி ஒதுங்கிப்போறா பாரு. ஒதுங்கி போறாப்லே ஒதுங்கிப் போய்.” மீதி சாம்பசிவன் காதில் விழவில்லை. கூட்டத்தில்

பலர் சிரித்தனர்.

சாம்பசிவன் அறைச் சாவியை லலிதா கையில் கொடுத்து, "நீ போய் ரூமைத் திற, பின்னாலே வறேன்' என்றான். தாண்டி எதிர்ப் பெட்டிக் கடைக்கு அவன் போகப்போவதாக அவள் அனுமானித்து, 'பெட்டியிலே சிகரெட் இருக்கு’ என் றாள். 'இல்லே, நீ போ, வறேன்' என்று சொல்லிவிட்டு அவன் தெருவைத் தாண்ட ஆரம்பித்தான். நடுவில் வந்ததும் திரும்பிப் பார்த்தான். லலிதா லாட்ஜில் நுழைந்து கொண்டிருந் தாள்.

கூட்டத்தின் பின்வரிசையை அடைந்ததும் சாம்பசிவன் தலையை உயர்த்திப் பிச்சைக்காரனின் கண்களைப் பார்த்தான்.

"எப்படி இந்த வியாதி வந்ததுன்னா கேக்கறாங்க. இப் பொப் போனா பாரு அதே மாதிரியா ஒரு பாப்பாத்தி ஆசையாக் கூப்பிட்டா. போனேன் . ஒரே ஒரு நா ராவுதான். இதைத் தந்துப்புட்டா சண்டாளி.'___________________


அவன் தன் மொட்டைக் கைகளை அரைவட்டத்தில் கூட்டத்தினர் முன் நகர்த்திக் காட்டினான். சிரிப்பொலிகள் எழுந் தன. சிலர் பின்பக்கம் திரும்பி சாம்பசிவன் முகத்தைப் பார்த்தனர்.

"தந்தையே தேவிடியா, திரும்ப எடுத்துண்டு போயேன்னு வாற போற பாப்பாத்தி ஒவ்வொருத்தியையும் கொஞ்சிக் கொஞ்சிக் கூப்புடறேன். தேவிடியா தாண்டித் தாண்டிப் போறாளே ஒழிய வரமாட்டேங்கறாளே. யாருகிட்டெச் சொல்லி அழ."

சாம்பசிவன் அறைக்குள் நுழைந்ததும், "எங்கே போனேள்?" என்று லலிதா கேட்டாள்.

சாம்பசிவன் சட்டையைக் கழற்றி நாற்காலிமேல் போட்டான். கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். முகஞ் சிவந்து நெற்றியிலும் மூக்கிலும் வேர்வை அரும்பியிருந்தது. மார்பும் கழுத்தும் மிகவும் உஷ்ணமாக இருப்பதாக உணர்ந்தான். துண்டால் முகத்தையும் மார்பையும் துடைத்துக் கொண்டான்.

"என்ன விஷயம்?"

"எங்கே

"என்னது என்ன விஷயம்? ஒண்ணுமில்லை." சாம்பசிவன் நாற்காலியை வராண்டாவில் இழுத்துக் கொண்டான். அறைப்பக்கம் பார்த்து, "நீ தூங்கறதுன்னா தூங்கு" என்றான்.

'நீங்க ராத்திரி கண் கொட்டலியே." 'தூக்கம் வரலே.' 'படுத்துண்டு ரெஸ்ட் எடுத்துக்கலாமே." அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. 'அங்கே என்ன பாக்கறேள்?" லலிதா அறையிலிருந்து வெளியே வந்தாள். டீக்கடை முன் பிச்சைக்காரனுடைய கத்தல் உச்சக்கட்டத்தில் ஏறி களைக்கட்டிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்கள் நெகிழ்ந்து சிரித்துக் கொண் டிருந்தனர்.

"என்ன சொல்றான் அவன்?" 'நீ போய்ப்படு' என்றான் சாம்பசிவன். அவன் சொன்ன தோரணை அவளுக்கு உறைத்துவிட்டது. தன் எதிர்ப்பைப் பின்திரும்பிச் சென்ற அசைவுகளில் காட்டிய படி அறைக்குள் நுழைந்தாள். பெட்ஷீட்டைத் தரையில் விரித்து, லைட்டை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

திடீரென்று விழிப்புத் தட்டியபோது வெகுநேரம் அடித்துப் போட்டாற்போல் தூங்கிய சுகம் தனக்குக் கிடைத்திருந்ததை லலிதா உணர்ந்தாள். எழுந்திருந்து பாத்ரும் போய்விட்டு வந்த போது பாத்ரூம் விளக்கொளியில் கட்டில் காலியாக இருப்பது தெரிந்தது. பரபரப்புடன் அறை விளக்கைப் போட்டாள். கட்டில் மெத்தையில் ஒரு உடல் சரிந்த அடையாளமே இல்லை. மேஜை மீதிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்று. சாம்ப சிவனின் சட்டையைக் காணவில்லை. கதவுப் பக்கம் நகர்ந்து வந்தாள். அடித்தாழ்ப்பாள் கீழே தள்ளப்பட்டு வெளியே இழுத்து கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை திறக்கலாமா என்ற தயக்கத் திலேயே சில நிமிஷங்கள் சென்றன. இருமிக்கொண்டே கதவை சிறிது திறந்து எட்டிப்பார்த்தாள். வராண்டா விளக்கில் பல்பு பொருத்தப்பட்டிருக்கவில்லை. வீதியில் ஒரு லாறியின் டயரைக் கழற்றி ஏதோ ரிப்பேர் செய்துகொண்டிருந்தனர். ஒரு சிறுவன் குப்பையைக் கூட்டி எரித்து அவர்களுக்கு வெளிச்சம் தந்துகொண் டிருந்தான். காற்றிற்காக சாம்பசிவன் வராண்டாவில் படுத்திருக் கலாம் என்ற நம்பிக்கையும் இப்பொழுது குலைந்து விட்டது. நாலைந்து அறைகள் தாண்டி ஒரு ரூமில் ஜன்னல்வழி விளக் கொளி வராண்டாவில் விழுந்துகொண்டிருந்தது. மன உந்துதலை வரவழைத்துக்கொண்டு அரைச் சுவர் ஒரமாய் ஏணிப்படிகள் வரை யிலும் அவள் நடந்து வந்தாள். விளக்கு எரிந்த அறையில் ஒரு வன் அண்டர்வெயர் அணிந்து வேஷ்டியின் கிழிசலுக்குத் தையல் போட்டுக்கொண்டிருந்தான்.

ஜன்னல் வழி அவன் லலிதாவைப் பார்த்தபோது அவள் மனதில் பீதி புகுந்துகொண்டது. விரைவாக நடந்து அறைக் குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். தைத்துக்கொண்டிருந் தவன் இப்பொழுது தன் அறைமுன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. விளக்கைப் போட்டு மேஜையைப் பார்த்தாள், மணி பர்ஸ் இரவு வைத்த இடத்திலேயே இருந்தது. தலையணை களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதில் சாய்ந்துகொண் டாள். விளக்கொளியில் தனிமையில் அப்படி உட்கார்ந்து கொண் டிருக்கவும் கஷ்டமாக இருந்தது. பலர் பார்க்கத் திறந்த வெளியில் படுத்துக்கிடப்பது மாதிரி இருந்தது. தைத்துக் கொண் டிருந்தவனிடம் போய் விஷயத்தை சொல்லலாமா என்று யோசித் தாள். அவன் மீது சந்தேகமாக இருந்தது. தன்னை எழுப்பிச் சொல்லிவிட்டுப் போயிருக்கவேண்டியதுதான் எந்த விதத்திலும் நியாயமாகப்பட்டது. தன்னுடைய உணர்ச்சிகளை அவன் எப் போதுமே மதித்ததில்லை என்று நினைத்துக்கொண்டாள். இது பற்றிப் பேச்சு எழும்போது இவ்வாறு கலவரம் அடைந்தது ரொம்பவும் அசாதாரணம் என்று அவனால் ஆக்கிவிட முடியும். அதற்கு அவசியமே இருக்கவில்லை என்று வாதாடவும் அவனால்S சுந்தர ராமசாமி

முடியும். என்ன அவசரம் என்பதை அவளால் யோசித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவளால் யோசிக்கவே முடிய வில்லை. "இப்படிச் செய்திருக்க வேண்டாம்' என்ற ஒரு வாக் யத்தையே அவள் மனம் ஜபித்துக்கொண்டிருந்தது. சாம்ப சிவனின் தாத்தாவும், சின்ன அண்ணாவும் ராத்திரியில் காணாமல்போனார்கள். ஆனால் அவர்கள் வீட்டிலிருந்து மறைந்து போனார்கள். வெளியூரில் ஒரு ஒட்டல் அறையில் தன்னை சாத்திப்போட்டுவிட்டு அவள் கணவன் மறைந்து போவான் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

அவளுக்குத் தூக்கம் வந்தது. அது எப்பொழுதும் வரும் தூக்கமல்ல என்றும் மயக்கம் தான் வருகிறது என்றும் அவள் நினைத்துக் கொண்டாள். கதவு சாத்தியிருக்கும் நிலையில் மயக் கம் போட்டுவிட்டாலும் கூட ஆபத்து எதுவுமில்லை என்று அவளுக்குத் தோன்றிற்று. அவளுக்கு பெரிய அண்ணாவின் நினைவு வந்தது. இன்று அவர் உயிரோடு இருந்து இதுபற்றி அவள் சொல் லியிருந்தால் "மடையன், மடையன் படிச்சமுட்டாள்' என்று சாம்ப சிவனைத் திட்டியிருப்பார். அவர் அந்த அறையில் அவளுடன் தன் கண்களுக்குத் தெரியாமல் இருப்பது மாதிரித் தோன்றிற்று. வீட்டு ஹாலிலிருந்த அவருடைய படத்தை மனசுக்குள் கொண்டு வந்து, அவர் உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தது என்பதை நினைத்துப்பார்க்க முயன்றாள்.

கதவை விரலால் சுண்டும் ஓசை கேட்டது.

"யாரு?"

"நான் தான்."

சாம்பசிவன் குரல்தான்.

லலிதா கதவைத் திறந்தாள்,

சாம்பசிவன் உள்ளே வந்து தன் ஊன்றுகோலை உயர்த்தி, 'இதால் அவனைத் தாக்கினேன்' என்றான்.

லலிதாவுக்கு சட்டென்று புரிந்தது.

என்ன அசட்டுத்தனம்? ஏன்? எதுக்கு?

சாம்பசிவம் விளக்கை அனைத்துவிட்டு அவளை இறுகத் தழுவியவாறு கட்டிலில் சாய்ந்தான். அவனுடைய அந்த இரவு நடததைகள தன கணவனுடையதாக அவளுக்குப் படவில்லை. ஒரு தாக்குதலாகவே அது ஆரம்பமாயிற்று. ஒரு முரட்டு ஜென்மம் அவன் உடலில் புகுந்துகொண்டு வந்திருப்பது மாதிரிப்பட்டது. அவனுள் ஏதோ ஒன்று உடைபட்டது போலிருந்தது. அவனும் ೨೩೮. தாத்தாவும் சின்ன அண்ணாவும் கட்டிக்காத்த எல்லா விரதங்களையும் அவன் அவள் உடல் மூலம் கிழித்துக்கொண்டிருப்பது மாதிரிப்பட்டது. மூச்சுத்திணறித் தான் இறந்துபோகக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியது. தன் உடலில் பல இடங்களில் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதுமாதிரி அவளுக்குப் பட்டது. தன கைகளால் அவன் மார்பைப் பலங்கொண்ட மட்டும் பிடித்துத் தள்ளினாள். அவளால் அவனைத் தள்ள முடியவில்லை.

அறைக் கதவை யாரோ தட்டினார்கள். விடிய ஆரம்பித்திருந்தது. லலிதா எழுந்திருந்து பாத்ரும் கதவுக்குப் பின்னால் மறை வாக நின்று கொண்டாள்.

அவன் பாத்ரூம் வாசலில் வந்து நின்றான். அவள் சாரியைச் சுற்றிக்கொண்டிருந்தாள்.

'போலிஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வந்திருக்கிறதாம். பேசிவிட்டு வறேன்' என்று சொன்னான் அவன்.

அவன் வராண்டா வழி செல்வதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு அவன் உருவம் மறைந்ததும் லலிதா அறைக் கதவைச் சாத்திக்கொண்டாள். O

ஞானரதம் 1973

Last 6 pages  Scanned by CamScanner


பா. வெங்கடேசன்
21 hrs
கூத்தியா !
அப்பா அவளை கை விட்டிருக்க கூடாது என்றே தோன்றியது.அந்த நள்ளிரவு நாளில் கையில் துண்டு சீட்டில் விலாசம் எழுதிக் கொண்டு சென்னையில் அப்பாவை தேடி எப்படி வந்தாள் ஆச்சரியமாக இருந்தது.
அவளுக்கு அப்பாவின் மீது மரியாதை இருந்தது.அதையும் தாண்டி அளவுக்கு அதிகமாக அன்பிருந்தது.எனக்கு நன்றாக நினைவிருந்தது.என் பெயரைச் சொல்லிதான் கதவை தட்டினாள்.அம்மா தான் கதவை திறந்தாள்.சக்காளத்தி இங்கேயும் வந்திட்டியா அம்மா முடியை கொண்டையிட்டு கூச்சலிட்டாள்.திடுக்கிட்டு எழுந்த அப்பா அவளை கூட்டிக்கொண்டு தெருவுக்கு நடந்தார்.அப்பா பின்னாடியே நானும் எழுந்து ஓடினேன்.
தெரு விளக்கு கூட எரியாத அந்த கும்மிருட்டில் அவள் கையை பிடித்துக் கொண்டு அப்பா கெஞ்சினார்.தயவு செய்து இனி என்னை தேடி வராதே.இதெல்லாம் இனி சரிவராது.இப்போதுதான் இங்கே வந்து செட்டில் ஆகிருக்கிறோம்.பசங்களை இங்கயே ஸ்கூல் சேர்த்தாச்சு.இனி அவங்க கூட நானிருக்கனும்..உன்கூட வந்து வாழ முடியாது என்று கெஞ்சினார்.
வழக்கமாக அம்மாவிடம் எகிறும் அப்பாவா இது? எனக்கு வித்தியாசமாக தெரிந்தார்.ஏன் இவளிடம் கெஞ்ச வேண்டும்.கோவமாக பேசி விரட்ட முடியாதா யோசித்தேன்.அப்பாவின் தோளில் சாய்ந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் அவள்!
நான் சும்மாதான்யா இருந்தேன்.நீதானே என்னவெல்லாம் பேசி பேசி மனசை கலைஞ்சி விட்டே.இவ்வளவு தூரம் ஒன்னோடு ஒன்னா வாழ்ந்துட்டு இப்ப நடுரோட்டில் விட்டுட்டு போறியே நியாயமா அழுதாள்.
அந்த இருட்டில் அப்பா அழுதாரா என்று தெரியவில்லை.ஆனால்,அவர் குரல் உடைந்து போயிருந்தது.அழுவதற்கு முன்னாலும் அழுத பின்னரும் குரலில் ஒரு சோகம் இருக்குமே அந்த சோகம் இருந்தது.புள்ளைங்களை கிணத்துல தள்ளிட்டு அவளும் செத்து போயிடறேனு மிரட்டறாடி.நான் என்ன பண்ணட்டும்.காலம் பூரா கொலைக்காரன் பட்டத்தோட உன்கூட வந்து வாழ சொல்லறியா?சொல்லு இப்பவே வரேன் என்றார்.
அவ மட்டும்தான் செத்து போவாளா?உனக்காக நான் சாக மாட்டேனா.இப்ப சொல்லுய்யா.உன்னை பிடிக்கலைனு சொல்லுய்யா.ஊர்ல போய் ஒட்டந்தழை வேய்ச்சி குடிச்சிட்டு சாவறேன்.நான் உயிரோட இருக்கறதே என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்தான்ய்யா!
நீயே வேணாம் சொல்லும் போது இந்த உலகத்துல என்ன சுகம் இருந்திட போகுது.போறேன்ய்யா.உன் பொண்டாட்டி புள்ளைங்க கூட சந்தோஷமா இரு.கை செலவுக்கு காசு வைச்சி இருக்கியா? புதுயிடத்துல யாருகிட்ட பணத்தை புரட்டுவே?நகை வித்து அஞ்சு ஆயிரம் எடுத்திட்டு வந்திருக்கேன்.இந்தாய்யா வைச்சுகோய்யா அப்பா பாக்கெட்டில் திணித்தாள்.அப்பா மறுக்கலை.வேணாம் சொல்லலை.உனக்கு பஸ்க்கு துட்டு இருக்கா என்றார்.உன்னை நினைச்சிட்டே நடந்தால் ஊரு வந்துடும் அழகையோட சிரித்தாள்.இப்போது ஏனோ அப்பா அழுதார்.
என்னை அருகே கூப்பிட்டாள்.பிஸ்கெட் பாக்கெட் இரண்டை கொடுத்தாள்.என்னை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.தூக்கி முத்தமிட்டாள்.அக்காக்களோடு சண்டை போடக்கூடாது சரியா?எனக்கும் பத்து ரூபாய் கொடுத்தாள்.உன்னை விட்டு போயிட்டு வேற ஓருத்தன் கூட படுத்துப்பேன் நினைக்காதே.புருசனை விட்டுட்டு தான் வந்தேன்.ஆனால் காசுக்காக வரலை.உடம்பு சுகத்திற்காக வரலை.உனக்காக தான் வந்தேன்.என்னை இறக்கி விட்டுட்டு அப்பாவிடம் சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள்.
எனக்கு அவளை ஊரிலே தெரியும்.அப்பாவிற்கு கூத்தியா என்றுதான்
ஊரே அவளை சொல்லும்.
வீட்டில் நாங்கள் தூங்கிய பிறகு
பின்னிரவில் இது சம்பந்தமாக அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் நிறைய சண்டைகள்
வெகுநேரம் நடக்கும்.
பேய்கனவுகள் பாதியிலே கலைந்த
நிலையில் விழிந்து பார்க்கையில்
அம்மா தலைவிரிகோலமாய்
பேய்போல இருப்பாள்.என்கிட்ட இல்லாத ஒண்ணு அந்த தேவிடியா கிட்ட என்ன இருக்கு புடவையை அவிழ்த்து போட்டு கத்துவாள்.
ஒன்றும் புரியாமல் மீள்தூக்கம்
ஒன்றை தழுவிவிடுவோம்.
நிறைய முறை பார்த்திருக்கிறேன்.அப்பாவின் சைக்கிள் அந்த வீட்டின்
முன்தான் வெகுநேரம் நிற்கும்.குளிர் காலங்களில் விடிய விடிய சைக்கிள் நின்றுக் கொண்டிருந்ததில் சீட்டில் பனி படர்ந்திருக்கும்.இன்னும் சைக்கிள் அங்கதான் இருக்கா பார்த்துட்டு வாடா
அம்மாவின் தூதுவனாய் நானும்
அந்த வீட்டிற்கு போனதுண்டு.
மீன்குழம்பும் கறிகுழம்பும் வாசமாய் அப்பாவின்
சிகரெட்டு துண்டுமாய் அந்த
வீடு நிறைந்து இருக்கும்.குடித்து மீதியாய் கிடக்கும் பிராந்தி பாட்டில்கள் கிடக்கும்.அவளொரு ரேடியோ கூட வைத்திருந்தாள்.அதில் பாட்டு கேட்பது ரொம்பவும் பிடிக்கும் அவளுக்கு.என்னை அவள் மடியில் போட்டு தட்டிக் கூட பாட்டு கேட்டுக்கொண்டு தூங்க வைத்திருக்கிறாள்.ஒரு முறை அம்மா உன்னை கூட்டிட்டு வரச்சொல்லுச்சுனு அப்பாவை தேடி வந்தபோது அப்பா கூட அவள் மடியில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.அதே ரேடியோவில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
என்னை நிறைய முறை அழைத்து
மடியில் அமர வைத்து உச்சத்தலையில்
முத்தமிட்டு கறிசோறு ஊட்டியிருக்கிறாள்.நிறைய இரவில் அவள் வீட்டிலே தூங்கியிருக்கிறேன்.
அப்பாவும் அவளும் வெகுநேரம்
சிரித்து பேசிக்கொள்வார்கள்.
எனக்கொன்றும் புரியாமல் காலையில் வீடு திரும்புவேன்.
அப்பா மீதிருக்கும் கோவத்தில்
என்னை அடிப்பாள் அம்மா.
உன் அப்பன் அங்கே விடிய விடிய என்ன கூத்தடிக்கிறான்
அம்மா கேட்கையில் நான் உண்மையை
சொல்வேன்.
அப்பா அங்கே சந்தோஷமாக
இருக்கிறார் அம்மா.
பா.வெங்கடேசன்.

Saturday, May 13, 2017

நிகழ்வுகள் - ழாக் ப்ரெவர்

நிகழ்வுகள் - ழாக் ப்ரெவர் மொ.பெ வெ.ஸ்ரீராம்

 CAMSCANNER Android App and Automated Google-OCR
crea

சிட்டுக்குருவி ஒன்று ஆகாயத்தில் பறக்கிறது
தன் கூட்டை நோக்கிப் பறக்கிறது
குஞ்சுகள் இருக்கும் கூட்டை நோக்கி
அவற்றுக்காக ஒரு குட்டிக் குடையையும்
புழுக்களையும் டான்டிலியோன் மலர்களையும் கொண்டுவருகிறது
கூடு இருக்கும் விட்டிலுள்ள
குழந்தைகளை மகிழ்விக்க
எராளமான பொருட்களைக் கொண்டுவருகிறது
தன் கட்டிலில் ஒரு இளம் நோயாளி
மென்மையாக இறந்துகொண்டிருக்கிறான்
தன் கட்டிலில்
கதவுக்கு முன்னால்
நடைபாதையில் கரிய நிறத்தவன்
ஒருவன் கதவைத் திறந்து நிற்கிறான்
கதவுக்குப் பின்னால் ஒரு பெண்னை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறான் ஒரு பையன்
இன்னும் சற்றுத் தொலைவில் தெருக்கோடியில் ஓரினச் சேர்க்கையாளன் ஒருவன்
மற்றொரு ஓரினச்சேர்க்கையாளனைப் பார்க்கிறான்
கையை அசைத்து அவனிடமிருந்து விடைபெறுகிறான்
இருவரில் ஒருவன் அழுகிறான்
மற்றவன் பாசாங்கு செய்கிறான்
அவன் கைவில் ஒரு சிறிய பெட்டி
தெருமுனையில் திரும்பிச் செல்கிறான்
தனியாகப் போனவுடனேயே புன்னகை செய்கிறான் சிட்டுக்குருவி மீண்டும் ஆகாயத்தில் கடந்து செல்கிறது ஓரினச்சேர்க்கையாளன் அதைப் பார்க்கிறான்
அதோ ஒரு சிட்டுக்குருவி. ...


தன் வழியில் அவன் தொடர்கிறான்
தன் கட்டிலில் இளம் நோயாளி இறந்துவிடுகிறான்
சிட்டுக்குருவி சன்னலுக்கு முன்னால் பறக்கிறது
சன்னல் சட்டம் ஊடாகப் பார்க்கிறது
அதோ, ஒரு இறந்த மனிதன். . . ...
இன்னும் ஒரு மாடி உயரே பறக்கிறது
கண்ணாடிச் சன்னல் வழியாகப் பார்க்கிறது
தலையைக் கைகளில் ஏந்தியிருக்கும் கொலைகாரனுக்கு இதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியவில்லை
எழுந்து சென்று ஒரு சிகரெட்டை எடுக்கிறான்
சிட்டுக்குருவி அவனைப் பார்க்கிறது
அதன் அலகில் ஒரு தீக்குச்சி
 சன்னல் சட்டத்தைத் தன் அலகால் தட்டுகிறது
சன்னலைத் திறக்கிறான் கொலைகாரன் தீக்குச்சியைப் பெற்றுக்கொள்கிறான்
சிகரெட்டைப் பற்றவைக்கிறான்
இது கூடவா செய்யக் கூடாது
மிகச் சாதாரண விஷயம் இது
என்கிறது சிட்டுக்குருவி

 பிறகு விருட்டென்று பறக்கிறது.
 சன்னலை மூடுகிறான் கொலைகாரன்
நாற்காலியில் அமர்ந்து புகைக்கிறான்
கொலையுண்டவன் எழுந்து பேசுகிறான்
இறந்தவாறிருப்பது பெரும் சங்கடம்

*ஒரேயடியாக ஜில்லிட்டுப்போய்விடுகிறது
இதைப் புகைத்து சூடேற்றிக்கொள் என்றபடி
கொலைகாரன் அவனுக்கு சிகரெட்டை அளிக்கிறான்
தயவுசெய்து கொடுங்கள் என்கிறான் கொலையுண்டவன்
மிகச் சாதாரண விஷயம் இது என்கிறான் கொலைகாரன் உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேனே
தொப்பியை எடுத்துத் தன் தலையில் அணிகிறான்
புறப்பட்டுச் செல்கிறான்
தெருவில் இறங்கி நடக்கிறான்
திடீரென்று நிற்கிறான்
அவன் ஒரு காலத்தில் தீவிரமாகக் காதலித்த
பெண்ணை நினைத்துப்பார்க்கிறான்
அவளுக்காகத்தான் கொலையைச் செய்தான்
இனி அப்பெண்ணிடம் அவனுக்குக் காதல் இல்லை
ஆனால் அதை அவளிடம் சொல்ல
அவனுக்கு ஒருபோதும் துணிவிருந்ததில்லை
அவளை மனம் நோகச்செய்யவும் விருப்பமில்லை
அவ்வப்போது யாரையாவது அவளுக்காக
அவன் கொலைசெய்கிறான்
அது அவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது
அந்தப் பெண்ணிற்கு
அவளை வருந்தச்செய்வதைவிட
அவன் இறந்தேபோகத் தயார்
தன்னுடைய வருத்தம் கொலைகாரனுக்குத்துச்சம்
ஆனால் வருந்துவது மற்றவர்களாயிருந்தால்
அவனுக்குப் பைத்தியமே பிடிக்கிறது
நிலைகுலைந்து

பித்துப்பிடித்து
 ஆத்திரமுறுகிறான்
 எதை வேண்டுமானாலும் செய்கிறான்
 26
எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்
பிறகு தப்பி ஓடியே விடுகிறான்
ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை
சிலர் கொலைசெய்கிறார்கள்
சிலர் கொல்லப்படுகிறார்கள்
எப்படியாவது எல்லோரும் பிழைக்க வேண்டுமே
இதையா பிழைப்பு என்கிறாய்
மிக உயரத்திலிருந்து பேசிய கொலைகாரனை
கேள்வி கேட்ட அந்த ஆள்
நடைபாதையில் உட்கார்ந்திருக்கிறான்
அவன் வேலையில்லாதவன்
காலையிலிருந்து மாலைவரை அங்கிருக்கிறான்
நடைபாதையில் அமர்ந்தவாறு
இந்நிலை மாறுமென்று காத்திருக்கிறான்
நான் எங்கிருந்து வருகிறேனென்று
தெரியுமா என்று கேட்கிறான் கொலைகாரன்
மற்றவன் தலையை ஆட்டுகிறான்
நான் ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறேன்
எல்லோரும் இறந்துதானே ஆக வேண்டும்
என்று பதிலளிக்கிறான் வேலையில்லாதவன்
பிறகு திடீரென்று அவசரஅவசரமாகக் கேட்கிறான்
உனக்குச் செய்தி தெரியுமா?
செய்தியா, எதைப் பற்றி?
உலகைப் பற்றிய செய்தி
உலகைப் பற்றிய செய்தி... எல்லாம் மாறப்போகிறதாமே
வாழ்க்கை மிக அழகாக ஆகப்போகிறதாம்
எல்லா நாளும் நமக்கு உணவு கிடைக்கும்
நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும்
எல்லோரும் இயல்பான பரிமாணத்தில் இருப்பார்கள்
யாரும் இழிவுபடுத்தப் படமாட்டார்கள்
அதோ அப்போது திரும்பி வருகிறது சிட்டுக்குருவி
கொலைகாரன் சென்றுவிடுகிறான்
வேலையில்லாதவன் அங்கேயே இருக்கிறான் மெளனமாகிவிட்டான்
சில ஒசைகளைக் கேட்கிறான்
காலடி ஓசைகள் காதில் விழுகின்றன
அவற்றை எண்ணுகிறான்
இயந்திரத்தனமாக நேரத்தைக் கழிப்பதற்காக
1 2 3 4 5
இத்யாதி... இத்யாதி...
 நூறுவரை... பலமுறைகள்...
காகிதங்கள் நிரம்பியுள்ள ஒரு அறையில்
தரைமட்டத்தில்
குறுக்கும் நெடுக்குமாக உலாத்தும் ஒரு மனிதரின்
காலடி ஓசை அது
சிந்தனையாளர் என்ற திமிருடன் ஒருவர்
 ஷெல் ஃபிரேம் மூக்குக் கண்ணாடி
தான் ஒரு “சிந்திக்கும் நாணல்" என்ற திமிர்
குறுக்கும் நெடுக்குமாக உலாத்தித்
தேடிக்கொண்டிருக்கிறார்
அவரைப் பிரபலமாக ஆக்கப்போகும்
ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறார்
அவர் வீட்டுக் கதவை யாராவது தட்டினால்
யாரையும் பார்க்கப்போவதில்லை என்கிறார்
உலகம் முழுவதுமே அவரது கதவைத் தட்டலாம்
உலகம் முழுவதுமே மிதியடியில் கிடந்து உருளலாம் முனகலாம்
அழலாம்
கெஞ்சலாம்
குடிப்பதற்கு ஏதாவது கேட்கலாம்
28

குடிப்பதற்கோ சாப்பிடுவதற்கோ
அவர் கதவைத் திறக்க மாட்டார்...
தேடுகிறார்
தராசுகளை எடைபார்க்கும் புகழ்பெற்ற கருவியை
அவர் தேடுகிறார்
தராசுகளை எடைபார்க்கும் புகழ்பெற்ற கருவியை
அவர் கண்டுபிடித்தவுடன்
தன் நாட்டிலேயே மிக்க புகழ்பெற்றவராகிவிடுவார்
எடைகள் அளவைகளின் அரசர்
அதாவது பிரான்ஸ் நாட்டின் எடைகள் அளவைகளின் தனக்குள்ளேயே மெல்லிய கோஷங்களை
எழுப்பிக்கொள்கிறார்
என் அப்பா வாழ்க
நான் வாழ்க
ஃபிரான்ஸ் வாழ்க
திடீரென்று அவர் கால் விரல் கட்டில் காலில் இடிக்கிறது
கட்டிலின் கால் நல்ல உறுதி
ஒரு மேதையின் காலைவிட மிக உறுதி
ஆக, 'சிந்திக்கும் நாணல்" அதோ தரைவிரிப்பின் மேல்
வலிக்கிற அந்தத் துர்பாக்கியக் காலைத் தாலாட்டியபடி
வெளியே வேலையில்லாதவன் தலையை ஆட்டுகிறான் தூக்கமின்மையால் தாலாட்டப்பட்ட தன் துர்ப்பாக்கியத் தலையை அவனருகே வந்து நிற்கிறது ஒரு டாக்ஸி
அதிலிருந்து மனிதப் பிறவிகள் இறங்குகின்றனர்
அவர்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறார்கள்
சீரிய உடையணிந்து, கண்ணிர் வடித்தபடி
அவர்களில் ஒருவர் ஒட்டுநருக்குக் காசு கொடுக்கிறார்
ஒட்டுநர் புறப்படுகிறார்
தனது டாக்ஸியுடன்
மற்றொருவர் அவரைக் கூப்பிட்டு

 ....
ஒட்டுநர் நினைவில் பதிவாகிறது முகவரி
தேவையான நேரம்வரை அவர் நினைவில் அது இருக்கும்
எபபடிப் பார்த்தாலும் இது அர்த்தமற்ற வேலைதான்...
 ஒட்டுநருக்குக் காய்ச்சல் வரும்போதெல்லாம்
இருட்டியபின் இரவில் அவர் தூங்கும்போது
ஆயிரமாயிரம் முகவரிகள் விரைந்து வந்து
அவரது நினைவில் மோதிக்கொள்ளும்
அவருடைய தலை ஒரு டைரக்டரி போல் இருக்கிறது
ஒரு வரைபடம்போல
பிறகு அந்தத் தலையைத் தன் கைகளில் ஏந்துகிறார் கொலைகாரன் செய்தது போன்ற அதே சைகை
மிக மென்மையாகப் புலம்புகிறார்
222 வோழிரார் தெரு
33 மெனில்மோன்தான் தெரு
பெரிய அரண்மனை
சேன்-லசார் ரயில் நிலையம்
தெர்னியே-தெ-மோஹிகான் தெரு
மனிதனைச் சிதைக்க என்னவெல்லாம்
மனிதனே கண்டுபிடிக்கிறான்
என்ன பைத்தியக்காரத்தனம் இது
ஆனால் எல்லாமே அமைதியாகப்
போய்க்கொண்டிருப்பதால்
தான் வாழ்ந்துகொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான்
ஆனாலும் ஏற்கனவே அவன் கிட்டத்தட்ட
இறந்துவிட்டான்
ஆக நீண்ட காலமாகவே
சோகச் சூழல் பின்னணியில்
30
போய்வந்துகொண்டிருக்கிறான்
குடும்ப வாழ்க்கையின் வண்ணப்பூச்சுடன்
வருடத்தில் அன்றைய தினத்தின் வண்ணப்பூச்சுடன்
தாத்தா பாட்டியின் உருவப் படங்களுடன்
காதுகளிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டு
ஒரு பல்லைத் தவிர மற்றவற்றை இழந்துவிட்டிருந்த
மாமா ஃபெர்டினான்டின் உருவப்படத்துடன்
ஒரு கல்லறையில் மனிதன் உலாவிக்கொண்டிருக்கிறான்
சங்கிலி கட்டித் தன்னுடைய அலுப்பை அழைத்துச்
செல்கிறான்
எதையும் சொல்லத் துணிவில்லை
எதுவும் செய்யத் துணிவில்லை
எல்லாம் முடிந்துவிட வேண்டுமென்று அவசரப்படுகிறான்
ஆகவே, போர் மூளும்போது
அதில் சாகவும் தயாராக இருக்கிறான்
கொலைசெய்யப்படும் ஒருவனும்
பயம் தெளிந்தவுடன்
அப்பாடா, உங்களுக்கு நன்றி
இப்போது நான் விடுவிக்கப்பட்டுவிட்டேன் என்கிறான்
.........................................................................
ஆகவே, கொலையுண்டவன் தானாகவே உருளுகிறான்
தன் குருதியிலேயே முழுவதும் தோய்ந்தவாறு
மிக அமைதியாக இருக்கிறான்
இந்த அழகிய சிறிய இருப்பிடத்தில்
ஒரு மூலையில் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும்
இப்பிணத்தைப்
பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
சாவின் அமைதி நிலவுகிறது

உள்ளே நுழையும் ஒரு ஈ
இது நெஞ்சைத் தொடும்வண்ணம் இருக்கிறது
மாதாகோவிலில் இருப்பதைப் போல என்கிறது
ஈக்கள் எல்லாம் ஒன்றுசேர பக்தி சொட்டும் ரீங்காரம் கேட்கிறது
பிறகு அவை ஒரு குட்டையை நெருங்குகின்றன
ஒரு பெரும் ரத்தக்குட்டை
ஆனால் ஈக்களிடம் அவற்றின் மூத்த தலைவி சொல்கிறாள்
அங்கேயே இருங்கள், குழந்தைகளே
முன்னறிவிப்பின்றி அமைந்த இந்த விருந்திற்காக
ஈக்களின் கடவுளுக்கு நன்றி சொல்வோம்
நன்றி நவிலும் பாடலை எல்லா ஈக்களும்
ஒரு ஸ்வரம் பிறழாமல் பாடின
சிட்டுக்குருவி கடந்து செல்கிறது
புருவங்களைச் சுருக்கியவாறு
இப்போலி நாடகங்கள் அதற்கு வெறுப்பூட்டுகின்றன
ஈக்கள் பக்தர்கள்
சிட்டுக்குருவி நாத்திகவாதி
அது உயிர்த்திருக்கிறது
அழகாக இருக்கிறது
வேகமாகப் பறக்கிறது
ஈக்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார்
கறையான்களுக்கும் ஒரு கடவுள்
சிட்டுக்குருவிகளுக்குக் கடவுள் இல்லை
அவற்றுக்கு அவர் தேவையுமில்லை.
தன் பாதையில் தொடர்ந்து செல்லும் சிட்டுக்குருவி
திரைச்சீலை பாதி விலகிய மற்றொரு சன்னல் வழியாகப் பார்க்கிறது
இளைஞனின் பிரேதத்தைச் சுற்றி அமர்ந்திருக்கிற குடும்பம்
டாக்ஸியில் வந்துள்ளார்கள்
கண்ணீர் மல்க துக்கம் அனுசரித்து மிகச் சீரிய உடையில்
32
பிரேதத்தைச் சுற்றிக் காவல்காத்து
அங்கேயே இருக்கிறார்கள்
குடும்பம் அங்கே தங்கியிருக்கவில்லையென்றால்
பிரேதம் ஒருவேளை தப்பிச் சென்றுவிடலாம்
அல்லது வேறொரு குடும்பம் அங்கேவந்து
அதை எடுத்துக்கொள்ளலாம்
பிரேதம் ஒன்றிருந்தால் அதற்குச் சொந்தம்கொண்டாடுவது
இல்லையென்றால் ஒரு பிரேதத்தை விழைவது '
எவ்வளவு அல்பங்கள் இம்மனிதர்கள்
இல்லையா மாமா க்ராஸியென் அவர்களே
மக்கள் பொறாமைபிடித்தவர்கள்
நம் பிரேதத்திற்கு அவர்கள்
சொந்தம்கொண்டாடுகிறார்கள்
நமக்குப் பதிலாக அவர்கள் அழலாம்
அதுதான் பொருத்தமற்று இருக்கும்
ஒவ்வொருவரும் தங்கள் குளிர்பதன அலமாரியில் இருந்துகொண்டு
தாங்கள் அழுவதைத் தாங்களே பார்த்தபடி...
நடைபாதையில் அமர்ந்திருக்கும் வேலையில்லாதவன்
அகல நிழற்சாலையில் டாக்ஸி
ஒரு பிரேதம்
மற்றொரு பிரேதம்
ஒரு கொலையாளி
ஒரு பூவாளி
ஆகாய நிறத்திலேயே இருக்கும் ஆகாயத்தில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும்
சிட்டுக்குருவி இறுதியாகப் பெரும் மேகம் ஒன்று வெடிக்கிறது ஆலங்கட்டி மழையாக. கை முட்டி அளவு பெரிய ஆலங்கட்டிகள்

33

எல்லோரும் மூச்சுவிடுகிறார்கள்
அப்பாடா
அடிபட்டு விழுந்துவிடக் கூடாது
எதிர்கொள்ள வேண்டும்
சாப்பிட வேண்டும்
ஈக்கள் நாக்கால் நக்கிக் குடிக்கின்றன
சிட்டுக்குருவிக் குஞ்சுகள் டான்டிலியன் மலர்களைத்
தின்கின்றன
குடும்பத்தினர் உலர்ந்த இறைச்சியை
கொலைகாரன் ஒரு டப்பா சிவப்பு முள்ளங்கியை
தோல்பியாக் தெருவில்
மற்ற ஒட்டுநர்களைச் சந்திக்கும் டாக்ஸி ஓட்டுநர்
குதிரை மாமிசத்தின் மெல்லிய ஒரு துண்டை
ஆக, எல்லோரும் சாப்பிடுகிறார்கள்
ஓரினச்சேர்க்கையாளர்கள்... சிட்டுக்குருவிகள்...
 ஒட்டகச்சிவிங்கள்... ராணுவக் கர்னல்கள்...
 எல்லோரும் சாப்பிடுகிறார்கள்
வேலையில்லாதவனைத் தவிர
சாப்பிட ஒன்றுமில்லாததால் சாப்பிடாத வேலையில்லாதவன் நடைபாதையில் உட்கார்ந்திருக்கிறான்
மிகச் சோர்ந்துபோய்
எவ்வளவு காலமாகக் காத்திருக்கிறான் இது மாறுமென்று அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது அவனுக்கு
திடீரென்று எழுகிறான்
திடீரென்று புறப்பட்டுச் செல்கிறான்
மற்றவர்களைத் தேடி
மற்றவர்கள்
சாப்பிட ஒன்றுமில்லாததால் சாப்பிடாத மற்றவர்கள்
அவ்வளவு சோர்ந்துபோயிருக்கும் மற்றவர்கள்
34
நடைபாதையில் அமர்ந்திருக்கும் மற்றவர்கள்
காத்திருப்பவர்கள்
இவை மாறுமெனக் காத்திருந்து அலுத்துப்போயிருக்கும் மற்றவர்களைத் தேடிப் புறப்பட்டுச் செல்லும்
மற்ற எல்லோரும்
மிகமிகச் சோர்ந்துபோயிருக்கும் மற்ற எல்லோரும்
காத்திருப்பதால் சோர்வடைந்து
சோர்வடைந்து. ...
பாருங்கள் என்கிறது சிட்டுக்குருவி தன் குஞ்சுகளிடம் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்
குஞ்சுகள் கூட்டிலிருந்து தலையை வெளியே நீட்டி
நடந்து செல்லும் மனிதர்களைப் பார்க்கின்றன
அவர்கள் ஒன்றுபட்டு இருப்பார்களெனில்
சாப்பிட முடியும்
என்றது சிட்டுக்குருவி
ஆனால் பிரிந்து சென்றால் இறந்துவிடுவார்கள்
சேர்ந்து இருங்கள் ஏழை மனிதர்களே
ஒன்றுபட்டு இருங்கள்
என்று கத்தின சிட்டுக்குருவியின் குஞ்சுகள்
சேர்ந்து இருங்கள் ஏழை மனிதர்களே
ஒன்றுபட்டு இருங்கள்
என்று கத்தின குஞ்சுகள்
சிலர் அவற்றைச் செவிமடுக்கிறார்கள்
முஷ்டியை உயர்த்திக் காட்டுகிறார்கள்
புன்னகைக்கிறார்கள்.
35