தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

பிரம்மராஜன் கவிதைகள்

Thanks to http://brammarajan.wordpress.com


என்னை ஆர்வமூட்டும் கவிஞர் http://maatrupirathi.blogspot.in



பிரம்மராஜன்

.................................................................................


அறிந்த நிரந்தரம்


ரேடியம் முட்களெனச் சுடர் விடுகிறது விழிப்பு

இரவென்னும் கருப்புச் சூரியன்

வழிக்குகையில் எங்கோசிக்கித் தவிக்கிறது

நெட்டித் தள்ளியும் நகராத காலம்

எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது

அரைத் தூக்கத்தில் விழித்த காகம்

உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்

கேட்காமல் மறதியில் கரைகிறது

இதோ வந்தது முடிவென்ற

சாமச் சேவலின் கூவல்

ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக

Balu mahendra film society

முத்தமும் எச்சமும் மிச்சம்
===============================================
எனக்காகும் எச்சிலில் பிறர்க்கான முத்தம்
உள்ளத்துக்கான வித்துகளில் உவர்களின்
எண்ணெய்த் திரவியம்
என் மழைக்கான உக்கிரம் உன் வெய்யிலின் தியானம்
இந்தக் குதிரையின் தாகசாந்தியில்
அம்மனிதரின் அபானம்
பிறர்க்கான நஞ்சிலிருக்கும் கட்டுச் சோற்று மூட்டை எனது
அவரின் ஊர்திகளில் என் பிராணன் மறிக்கும் கடுவெளி
மறப்போர்க்கான நினைவுகளில் ஞாபகச் சிடுக்குகள்
உலர்ந்த என் படுக்கையில் நத்தையூரிப் போகிறது
அவளின் காலைப் போதுகளில் என் சந்தியாகாலக் கிருதிகள்
ஈருடம்பும் ஒன்று போல விழிக்காது கொற்றவா
தாமதித்து உறங்கி நிதானித்து இறக்கும்
என்றாலும்
என் கதிர்களை மறைக்கும்
காலம் அவர்களின் தாளடியிலிருக்காது
என் தேனீக்களின் யாகசாலையில் அவன் உலைக்கலம்
உடலத்துக்கான என்னுடையில்
மறவரின் சடலத்துப் போர்வைகள் கிழிபடலாகும்
வாளின் முனைக் கருணையில் மின்னும் சாரைச் சேதில்
இந்த நெல் சூல்கொள்ள
பூக்கிறது என் மூங்கில் வனம்
- பிரம்மராஜன்
The Kiss (Lovers), oil and gold leaf on canvas, 1907–1908.[1] Österreichische Galerie Belvedere, Vienna, 180 cm × 180 cm


பழம்நீயாகாத ஊர் - பிரம்மராஜன்


யாத்ரீகனாயிருந்தும் ஆற்றுப்படுத்துவாரில்லை

நாயகியின் உதட்டுச் சிவப்பினைச் சொன்னால்

அதென்ன அடையாளமோ

மயானக் கரையோரம்

நகைப்பார்கள் எள்ளி

வடக்கா வடமேற்கா

வாழ்தொழிலே காதலென்றால் நம்புவார் யாரிங்கு

உடல் வறண்டு செங்கல் நிறத்தில் சிறுநீர் கழித்து

பருகுநீர் விற்கும் கடை தேடிச்

சஷ்டி அனுஷ்டிக்கும் பேருந்துகளின் சந்தடியில்

புழுதிப் பாங்கோடு

விவரிக்கச் சொன்னார்கள்

காசில்லாதவன் கடவுள் போன்றவன்

கனியே

ஒரு கணம் உன் முகம்

மறுபுறம் உன் பின்புறம்

மோஹநிவாரணி

உனக்கென்ன பைத்தியமா

சகலருக்கும்தான்

எல்லாம் விவரி சொல்லி ஒழி

ஒரு கோடையின் மாலையில்

பசி மறந்தவள் என்னால்

எல்லோரும்தான் உய்விடம் உணவற்றவர்கள்

வேறு எட்டுத் திசையிலும் . . . தந்தையுமானவர்

சொந்த ஊர்?

இந்த ஊரின் பெயரையே அவளுக்கு வைத்திருக்கலாம்

என்னை உந்திக்கொள்கிறேன்

இந்த ஊரை விடுத்து


தென்மேற்கில்



கடலின் அனுமதி


அனுஷ்டானம் அதற்கில்லை

எச்சில் கீழ்மேல் உன்னதம் விலக்கு

உருப்படி செருப்பின் தீட்டு

வகுத்த கோடு மீறப்படினும்

பற்றி எழாது தண்டனைத் தீ

காலடிகளின் அழுத்தமே பிரதானம்

ஏன்கால் யார் அணிகிறார்

பாகுபடுத்தியதில்லை

பாதங்கள் கழுவும் சாதியுமற்று சமயம் துறந்து

தோணியும் எரிந்த தீக்குச்சியும்

துரப்பணக் கப்பலின் அமானுஷ்யமும்

மிதவைகள்தான்

தராசு முள்ளின் மையத் துல்லியமாய்

பூக்கொண்டும் போகலாம்

திக்கெட்டிலும் திறந்தே வைக்கலாம்

பூட்டலாம்

திறவுகோல் மறந்த உலோபிக்குத் திறன்பிக்கவில்லை

கடலின் கதவு

உருண்டைப் பாறைமீது பாசி படிந்த கோட்டை

அந்தரத்திலிருந்து கடலில் விழுந்த வண்ணமாய்

நிறுத்துங்கள் ரெனே மகரித்

உரைநடை எழுதத் தெரியாதவனும்

பெயர்ந்த மொழி சரளிக்காதவனும்

விதேசி பாஷையில் லகு கிடையாது இவனுக்கு

இருப்பினும்

இக்கடையோரும்

தென்னாடு உடைய சிவனும்

கால்வைக்க அனுமதியும்

கரையில் நுரை விரித்து


கடலின் காருண்யம்

என்னை நானே தொலைத்துக்கொண்டு

தேடவேண்டிய முகாந்திரம் இருந்தும்

புரட்டிப் புரட்டிக் கொண்டுவந்து சேர்க்கிறது

என்ன வேண்டும்

040என்பது எனக்கே தெரியாமல் அலைக்கழிய

இந்த சமுத்திரத்தின் குவளை விளிம்பிலிருந்து

புவி ஈர்ப்பு உதறிய தக்கையாய் மிதந்து வரும்

சமயம்

தற்கொலை செய்துகொள்ள வந்த

அயற்கடல் திமிங்கிலத்தைப் புரட்டும் அலைகள்

சரம் பட்டாசுகளை உயர்த்தி வீசி வெடித்து

பறைக் கொட்டுகள் சுதேசிச் சாராய முருக்கத்துடன்

என் மரிப்பினை

நாடகித்து நிம்மதித்தவர் மரண பீதி பெற

அவதரித்தலின்

அத்தியாவசியம்

திறக்கப்படும்

ஏழு கதவுகள்

எல்லைகளை ஏளனிக்கும் புயற்பருந்து

அலை நீராடிய எருமைகள் திரும்பும் நேரம்

நீ பெண்ணாகத்தான்

என்றும் விரித்த படுக்கையில்

என் அருகாமையில்

மிக.


கடலும் கடவுளும் பெண்


பெயர்ப்பு மொழியில் உதிர்க்க முடியா உப்புத் தாவரத்தை

எழுதுவதாகிறது அலை உடைந்த கடல்

040எழுதப்படாதிருப்பவை

பூமியின் சிகரங்கள் தோற்கும் தன் வயிற்று மலைகள்

உஷ்ண நீரோட்டப் பெருஞ்சாலைகள்

தாவரமா ஜந்துவா

சொல்வதற்கியலாது

ஒடிந்தால் குருதி வெண்மை ஒழுகும் பவளப் பாறைகள்

மின்சார ஈல்களின் பாம்புச் சவுக்குச் சொடுக்கு

மனக் கணக்கின் சமன் கனவுகளைத் தவறாக்கும்

தீவுகள் உறுத்தும் நிஜம்

திருடிவந்து தெப்பம் கட்டி

வளர்க்கும் மானுடரின் செயற்கை முத்துகள்

தைத்தவுடன் விஷத்தின் சாவு நொடி நொடியாய்

துடித்து உயரும்

நங்கூரப் படிமத் திருக்கை மீனின் முள்

நீ அறியாததையா எழுதிவிடமுடியுமா

நேற்றின் நிழல்களை

இன்றின் இசைவுகளை

சர்வ நில்லாமை மிக்க அம்மையே

பாலித்தருள் தெரிந்தும் தெரியாமலும்

கதிரியக்கக் கப்பல்களின் மூன்று சமாதிகள்

உன் கருவறைக்குள் செலுத்தி நாளாகிறது

கருப்பை அழற்சி கடவுளுக்கு இல்லை

ஒலியின்றி எழுத முடியும்

கத்தலின்றி பாட முடியும்

பரிசுகளைக் கைம்மாறு ஆக்காது

தொடர்ந்து தத்தம் செய்யும்

முத்தக் கடவுள்


கடல் வீடு-ஓர் அறிக்கை


கடல் ஒரு வீடாகுமெனக் கற்றதில்லை கனவிலும்

040குடியிருப்போ கல்கூடோ இன்றி

எட்டடிக் குச்சுக்குள்

இருந்ததாயிருக்கும் பழக்கம் காரணம்.

பெயர் தெரியாக் கொடிகள் வரியோடிப் போர்த்திய

மணல் முற்றம்

சோடியங்களில் இருந்து சொட்டும்

செங்கல் நிறப் பனித்திரை

உம் துவாலை பற்பசை மாற்று உள்ளாடை

தலைவாரும் காற்று

நிமிஷத்திற்கு இருமுறை கலைக்கும் திருத்தும்

காலைக்கடன் மாலை உடன் எங்கெங்கிலும் விரும்பியவாறு.

நிதமும் புத்திய அறைகள்

நுரையீரல் பலூன் நிறைந்து விரியும் தூய பிராணன்.

கூரை தலைதான் அன்றேல் விரித்த குடை

கூரையற்றது குட்டிச்சுவர் என்பவர்

முகத்து மீசை வழிகிறது கூழாக.

நிலவின் நித்திரைக் காலத்தும் உச்சத்து முத்திரையிலும்

கால் கொண்ட அறைகள் நகர்ந்துவிடும் பின்னுக்கு.

அலைகள் அன்பளித்த தெளிவு

செங்கற்கள் கல்லாது.

மீன்கள் உம் பசிக்கு

மீதமும் உண்டு கடல்பாசி.

காலி செய்ய அச்சுறுத்தல் இல்லை

கார்மழைதான் எச்சுறுத்தும்

அறிக்கை என்பதையும்

அறியாது அலைகிறது கடல்.

அறிந்த மொழிகளை எண்ணிக் கணக்கு வைத்திருப்பதில்லை அது.


வண்ணப் புகைப்படத்துக் கடல்


இந்தப் புகைப்படத்தில் எழுதியிருப்பது

040எனது கடல் அல்லவென்று சொல்வதியலாது எனினும்

சிவந்த நீர் அலைகள் இவை நீலம் மறந்தவை

என்பது தவிர யாதான கடல்போல் தான் தோன்றுகிறது

தரைக்குத் தூண்டிலிடும் அடர்த்தி மிகும் தென்னை ஓலைகள்

அறுந்த சூரியன் நனைந்து கொலையுண்டாயிருக்கும் அலைகள்

குற்றுத் தாவரங்கள் அழிபட்ட மொட்டைக் கரை

இதுவல்ல எனது

மாக்கடலின் வலது விலாவில் ஏதோ ஒன்றில்

அது இருப்பது நின் சுயம்போல் நிச்சயம்

இலையுதிர்கால கைச்சாலையின் சருகுகள் பெருக்கி

தூய்மை என்று அறிவிப்பு தரும் துன்பத்தை உவக்காதபோது

இது எப்படிக் கடல் வீடாகும்

எருமைகள் கோடிட்டுச் சென்ற மூத்திரத் தடம்

அலைகட்குத் தெரியாமல் அழித்து நிரவப்பட்டிருக்க

அபரிமித நேரத்தில்

இது மானுஷ்யம் கழன்ற தொட்டில்

காகிதத்தை அசைபோடும் தார்த்தாரி மாடுகள்

பவுண்டில் அடைக்கப்பட்ட பிறகு பதிப்புற்ற

செயற்கைக் காட்சியில்

படுத்த இடத்து மணல் மடிப்பும்

நேராகி நிற்கிறது

மனிதர் குரலைப் பாவனை செய்யும்

பறவையோ பூச்சியோ

இதில் சுற்றம் பெறவில்லை

பச்சை ஒட்டுப் பாலித்தீன் போர்த்திய குப்பத்துக் குடிசையின்

இம்மியும் பதிவாகாத கச்சிதத்தில்

குவிமையக்காரனின் தொழில் நேர்த்தி இழிவாகிறது

கட்டுமர ஒடிசல்

கயிற்றுத் துண்டுகள்

ஓட்டை நைலான் வலைகள்

தோணி நிற்றலின் கோணம்

எதுவும் அது போலல்ல

சர்க்கரை ஒவ்வாத நாவில் டன் கற்கண்டு

இது என் கடலும் கரையும்

ஆகாது

தகாத கீதமானாலும்

என் கோணல் மணல் கடற்கரையைத்

தந்து விடல் தகும்.



கடலின் விச்ராந்தி


040முற்றிலும் முழுமை இத்துணைக் காலம் மறதியுற்று

சிக்காது

அலைகள் செய்யும் எச்சரிப்பு

கண்ணீரின் உப்பு

உதடுகள் வாங்கி நாவின் சுவை மொட்டுகள் பெற

இளகிழ்ந்துவிடும் சுயநல அரக்கனின் மனசும்

இனிக்கும் கனிமை காதுமடல் கூற

கள் ஒரு லஹரியாகக் குமிழும் உமிழ்நீரும் தெரிவிக்கவும்

புதுச் சாரலுக்கு சிலிர்ப்பூத்த புற்களாய்

தேகத்து மயிர்க்கால்கள்

எங்கே இருந்து வரப்போகிறதாம்

நீயின் இசைவிழைவும்

நானின் ஈதலில் தடங்கலும்

ஆன பெரும் பேறு அப்படி

வானத்து அலைக்கு மேல் சிமெண்ட் நிற மேகம்

அசுரன் வாய்ச் சிரிப்பு

விரிசல் உறும் மின்னல் சிமிட்டல்

இந்தத் தூறலில்கூட

உனக்குள் விதையுற்று முளைத்துக் கிளைத்துவிடுமா

சிறகு பறக்கும் மரம்

நின் விச்ராந்தியே என் குரல் பெறும் ஓய்வு

கடல் மலை விளிம்பிலிருந்து

ஏகிப் பறக்கும் பெயரற்ற பறவையின் ஏகாந்தமாய்

முடிவற்ற ஆழத்தில் முற்றற்று வந்து இறங்கும் மிதப்பாய்

என் உயிர் தேம்பித் தேறும்

விச்ராந்தியாய்

தூரத்து இடியின் பின்னணியில்

நீளும் சாலையாய்

இனியும் ஓர் உச்சம் இருக்குமே இனிக்கும்



கடலின் மனநிலை மாற்றங்கள்


040என்ன எழுத சொல்லி அழ

விக்கித்து விம்ம?

கடலின் தாட்சண்யமற்ற

கோரஸ் குரல்களில் என் பாடல்

கள்ளக் குரலாகி உப்புச் சிரிக்கிறது.

ஸ்ருதிதானா எனதென்ற ஐயம் எழும்.

ஒருமுறை மடியில் மற்றெல்லா அசேதனங்களுடன்

என்னையும் சிறை வைத்திருந்து

உறக்க ஓய்வுச் சாகரத்தில் கால் நனைகையில்

கரை மடித்து இடுப்பில் செருகச்

சரிந்து

புகை சீறிப் பதறவைக்கும்

வாகன அடர் சாலையில் நான் கிடக்க

எங்கே என நிதானங்கொள்ளுமுன் இல்லையில்லை

இப்போதிருந்து ஆட்டம் புதிதென்று

பிள்ளை விளையாட்டாய் அடம் கொண்டு

தன் தடத்தில் ஈர்த்து

விண்மீன்கள் பார்க்க மடிதர

சுருதி சேர கானம் ஊர

மடி உறுத்துவது பற்றி உணர்வற்றுப் போய்

ஆகாயத் திறப்பின் ஊடே சஞ்சரித்த

பிரக்ஞை திரும்புகையில் மட்டும்

புரண்டு முதுகாற்றும்

குழந்தையாய் எனை அமர்த்தி, கிடத்தி, நிறுத்தி,

கலைதலையைச் சீராக்கி

உறுத்தும் மணல் துகள்களை நாவால் துடைத்து

பசியறிந்து அனுப்பிவைக்கும்

பெப்சி உறிஞ்ச.

மீண்டும் கண்ணிமைப் பொழுதில்

அதன் பின்க் நிற மார்பில் பால் தேங்கி கனத்திருக்க

இதழ் குவித்து திரும்பி வரக் கேட்கும்.

அம்மணம் நிர்வாணம் பற்றிய சொல் ஆய்வில்

குன்றி மணி வித்தியாசம் பாராட்டும்.

எல்லா நானும் அளந்தும்

அமிழத் தெரியாதபோழ்து

நீந்துதல் கற்றல் பற்றாது

கதவு மூடிக்கொள்ள

கால் கொண்ட வழியில் என் கூடடைவேன்

இல்லை கார் கொண்டு.

கடல் என்றும்போல்

தன் வழியில் நின்று விடும்.




கடல் பாய் விஷம் ஹிந்தோளம்


அலை எழில் கடையைப் பெற்று உப்புங்கடல்

கரையைத் தழுவுகையில் ஹிந்தோளமே

040விஷமாகிப் பரவ

நுரைகளும் ஆலாபிக்கும்.

உயர் தாயின் மிகு தயாபரம்

புரிந்த உயிராயினும் நீ

பனைத்துனைப் பரிசுகளைத் திருப்பி விடுதவதை ஒப்பாதவை.

உன் சாதுர்யங்கள் செயல் மழுங்கும்.

அவற்றின் அதீதமும்

காலமும் தாளமும் கேட்டு மலர்கையில்

அச் ஷணத்து நவமணிகளை

இதழ் பிரித்தோ இரு கை குவித்தோ

ஏந்தி இருப்பாய் மெய்யாய்.

உன் இலைநிறத் தொப்பியும்

கால்களை மென் அணைப்பில் எடுத்துக் கொள்ளும் பூட்சுகளும்

பிலாஸ்டிக் டம்ளர்களில் பிடிக்கப்பட்ட பெப்சி ஊற்றுகளும்

வாபஸ் தர முடியாதவை.

பிணக்குகளை எப்படிக் கணக்கிட்டுக் காட்டினும்

தெளிந்துவிடுவாய்

விஷம் கேட்டு.

ராமனாதனோ மணி அய்யரோ போல்

உன் இசை மிஷினை நிறுத்தம் செய்தவுடன்

நெஞ்சுக் கூட்டினை

மண்டையின் திருகுகளை

வருடிக்கொண்டிருக்காதவை இவை.

உடல் உடை இடை மூச்சு மூளை

இவற்றில் ஆரஞ்சு நஞ்சு

கரை நீங்கிய பின்னும்

ஒளிரும் அறிவிப்புப் பலகையாகும்.

மறுத்த பின் மற்றொரு தரம்

இம்மடியில் இளைப்பாறுதல்

உனக்கு இனி? என்பதே சந்தேகம்தான்.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்

விஷத்தை விஷத்தால்.




தாஓக் கடல்


040துணை அணைப்பும் காலைக் குயிலின் திக்கல் குரலும்

நொந்த கந்தலின் பட்டுப்போலும் சாம்பல்.

எத்துணை அணைப்புத் தனித்ததோ

கடல் சிலிர்ப்பு கூடுதலாகும்.

செலவான இளமைத் தகிப்பு

நுரைத்து முற்றி வரும் நரைப் படலம்

கோரைக்கு ஒரு நாள் பாய் நினைவாக

சகித்தலுக்கு இட்ட புள்ளி முற்றினால் தகும்.

அணிந்தும் அணிவித்தும் துன்பித்த

முற்றைய நாள் மனச் சட்டகம் உதிரும்.

இகரமே தகித்து வரண்டு

உன் ஞாபகம் வளர்கையில் தீப்புண் கொப்பளிக்கும்.

கால் வாங்கி எஞ்சிப் போன முள் துணுக்கு

சீழ் மூட்டம் சுடுவிரல் தடவ

நோவும் இனித்த காலை இனி உதிக்கத் தயக்கமுறும்.

எந்த மணல் கோட்டையைத் தற்காக்க

அற்ப நுணுக்கத் திட்டம்

அறுபடும் சிலந்தி எச்சில் என

அன்பைக் கொண்டே வா

மறதி கொண்டிருக்கும் தூரத்தைத் தூர்க்க

கடவுளையும்

கட்புலனையும்

கட்டவிழ்க்கச்

சொற்றொடரில் அலையவதாரம் சற்றே

அக்கரத்தின் அகரமாகும்

கடல் இறுதி

புள்ளியற்றுத்

தா.



கடலின் மறதி


அவ்வலைகள் அத்தினமே மறதியுள் புதைந்திருக்க முடியாது

040இணைத்துணை இதுவல்ல என்றவை வீரிட்டபொழுது

காதலை வரிசையை கேளின் பூஜ்யத்திற்குக் குறைத்துவிட்டாய்

பக்கவாட்டு நகர்வில் சலியாத

நண்டுகள் புரிந்து கொண்டிருக்கும்

எண்ணெய்ப் பீப்பாய்களைக் கொண்டு வந்த கப்பல்

வெளிச்சமிட்ட விளையாட்டுப் பொம்மையாய் மிதந்த மங்கு மாலை

உலோகப் பருந்தாகும் ஜெட் உறுமலிலும் கூட

தன் சுருதி பிசகாது பீம்சேன் ஜோஷியுடன்

பாடிக்கொண்டிருந்தன நெருக்குருகி

தலைப்பிற்குள் புதைந்த முகத்தை அகற்ற மனமில்லை

குருதித் தாளமும் ஜோஷியின் தேஷ÷ம் மீன்வாடையும்

ஆற்றைத் தாண்டியும்

கேட்டுக்கொண்டிருந்தன

நுகர்வில் பதிந்துபோன நுரைமுகமும்

உயிர் கசிந்த உன் பாடலும்

கடலற்ற இற்றை நாளிலும்

தோணியில் மிதக்கத் தோதாயின

க்ளட்சுகளை மாற்றிக்கொண்டிருப்பினும்

தோணியை நகர்த்தும் துடுப்பின் ஸ்பரிசமே

இந்தத் தார்ச் சாலையை அலைக் குரலாய்

மாற்றிக்

கொண்டிருக்

கிறது.



கடலோரத் தொட்டில்


முற்றுப்பெறா வாக்கியத் தொடர்களின் முற்றத்தில்

சொட்டும் புள்ளிகளாக ஆகாமல் இருக்கலாம்

040ஆனால் தோல்வியை அகராதியில் பதிக்காத

தொடர் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும்

அலைகளின் முரணற்ற பாஷையில்

உனக்கான ஆறுதல் உண்டாகிறது

எல்லா நீயும் கிளைநதிப் பெருக்காகி உருகி வழிதலைப்

புரிகின்றன அவை

நேற்றில் விதையிட்டு இன்றுவில் பழுத்துவிடும்

பழங்களின் பாங்கினை அறிந்ததில்லை

சூத்திரங்கள் எழுதிய சாது வேண்டுமானால்

எழுதியிருப்பான் அவற்றுக்குப் புரிந்துவிடக்கூடாதென

தொடுதலில் ஊற்றுப் பெரும் உன் முழுமை

உன் செழுமை கைக் கற்றுப்பாட்டுக்கு உட்படினும்

நாணிய மணற் போர்வைகள் வீசி

உனை மறைத்துக் கொள்ள வரும் அலைகள்

மணற் துகிலினை பிரித்து உணர மீண்டும் தந்துவிடுகிறாய்

கடைசியாய்த் தாரை வார்த்து

இன்று என் பாரம் ஊடுருவ மணல் வழி நீ என்பினும்

செல் மறு செல்லாக

சொல் அடர் சொல்லாக

உன் உயிர்க் கிணற்றின்

தெளீர்ப் பளிங்கினை

உனதே எனதாக்க

நாள் தேடும் லேஸர்

ஊனமென நீ வருந்தும் மனதினை அழித்தெழுதும்

அதுவரை அலைகள் அசைவிக்கும்

இத்தொட்டிலில்

விட்டுச் செல்கிறேன் உன்னை.


கடலின் மரகதம்


கனவில் வியர்த்து நினைவில் பரவும்

உறக்கம் துறந்த மறதித் தாவரம்

திரிந்த மாலைக்கும் அப்பால்

தொங்கும் தொடுவானில் ஊதாவின் தென்னம்பாலை

கிளிப்பிள்ளை நரிப் பேச்சு

தணல் பிழைத்தெழுந்த தன்னுடலைச் சவம் எனக்

கூறுபவன் இருப்பான் இல்லை

என்பின் எண்ணித் திருகிய தலைகள் எக்கோடி

எழுந்து உயிர்த்த ஒற்றை முலை சிலிர்த்த சூரியகாந்தி

கோணிய நாணல்

புல்லும் ஒருகால் மூங்கில் மற்றதில் சோறுடைத்து

சொற்போரே மற்போர்

தேள் கண்டது திகட்டும் பிழம்பு

விண்ணை உடைத்து வெளிக்குள் கைநீட்டில்

தொடுபடும் பால் சுரபி கள் மண்டலம்

கட்டுடைத்தும் பிளவுறாச் சொற்படலம்

நிற்கும் நில் என்றால்

சரியும் வேல் ஒன்றால்

எங்கிருந்தோ ஊடுபாயும் களர் நிலத்திலும் கத்தரிப்பூ

காற்று மாற்றி மாற்றிச்

சிரித்துக் கூறினாலும்

கூறப்படாததே

கூறப்பட்டது

மலையடிவாரத் தொட்டிலில்

எட்டிப் பாராது நின்ற

கடல் ஏரி

கழுத்தின் மரகதம்.

040



கடல் சார்ந்த பாலம்


இதழ்கள் உலர்ந்தும்

வாழ்வு நகர்கிறது

பூ வீழ்கையில் மின்னலின் ஷணம்

கபாலம் பிளக்கக்

கங்குகள் மங்க

வாழ்வு குளம்பு ஒலித்துப் போகிறது

நிறங்கள் நீர்க்கக் கான்க்ரீட் இறுக

அல்லது அப்படித்தான் சொல்கின்றனர் அவர்கள்

நம்மைச் சுற்றி உயர்ந்திருக்கும்

வேறுபட்ட கோடைப் பருவங்களின் புற்கள்

வெளிர் மஞ்சளாகும் காற்றில்

அடர் செங்கல் இரவு சஞ்சரிக்கு முன்

நரகரின் நரகல்கள் கால்வாய்களை அலங்கரிக்க

கடந்து செல்கிறோம்

மணல் ஒத்த மாதா கோயிலை.

கோர்க்கப்படாத வலது கையில்

உன் மார்மீது சிலுவை இடுகிறாய்

நானோ பிக்ஷாடன மூர்த்தி

யுகாந்திர மறதியில் இருந்து

நம்மைத் தாங்கும் மணற் புடைப்பின்

அடியாழத்தில் இளம் யுவதியின் எலும்புகள் சிலிர்க்கும்

உன் உடல் வாசமோ

என் மார்பின் வியர்வையோ

கிளர்ச்சியின் தளிர்க்காரணங்களில் ஒன்றாகலாம்

மலர்ந்த இடிபாடுகளுக்கு இடையில்

நாம்தான் நடந்து

மறுபக்கத்தை இணைக்கும் பாரமின்றி

ஆள்காட்டி விரலெனத்

துருப்பிடித்து இற்று நிற்கும்

பாலத்தைக் கடக்க முயல்கிறோம்

கழிமுகத்து நீர் ஆடியில்

அலைகிறது உன் பயம்

நாக்கும் இதழ்களும் பாலமாகும்

அச்சமயம்

கடல் இருவரையும் இணைக்க

கல் மீன் நீந்தத் தொடங்கும்




கடலின் சீர்திருத்தம்


கடலைச் சீர்திருத்தச் செல்வோம் நிலவின் பின்புறம்

வாரிய தலையைச் சிலுப்பிச் சிணுங்கும்

மணல் வியர்த்தணைத்த மட்கிய சங்கும்

040கண் நிரப்பும் மனம் வழிய

மழை முடிவுத் தோற்றுவாய்

உப்பரித்த காற்றில் தலைநிமிரும் புராதனக் குடியிருப்பில்

சவங்கள் உயிர்த்தாற்போல்

தோட்டத்துக் கதவில் உறைந்துபடர் மனிதச் சட்டகம்

தானா கேள்

கதிகலக்கம் நிற்பட

நிற்பவன் கல்தானே

அலைகள் கூறிய பொய்யை

செய்வதற்கில்லை நம்பிக்கையின்மை விசாரணை

உன் கூந்தல்

என் பூகோளப் பரப்பில்

விழும்

விழுதுகளாகும்

மறுக்கத் தெரியாத மண்

உன் அடர் வழி நினைத்துக் கலங்கும்

தொலைவு தொலைந்துகொண்டிருக்கும்

கடுகாய்ச் சிறுக்கும் மஹா விருஷம்

அகண்ட வருஷம்

ஒரு சாண் இடுப்பில் ஒடுங்கிவிடும்.



மஹா மௌனக் கடல்


கடலின் சாளரக் கண்ணாடிகள் சர்வமும்

நொறுங்கி நொதிக்கின்றன

உனக்குப் புரியாதது அல்ல அதன் பிரயாசை

040ஆகர்ஷணம் வெப்பம் மௌனம் இப்படியாக

தளும்பாது கை இரண்டில்

சோதனைக் கூடத்து அதிகவனம்

ஏந்துகையிலும்

சுழற்சியில் பைத்தியம் பிடித்து

தீராத பாடலைத்

தீர்த்து விடத் தேடுகிறது

அதன் ‘மஹ்ஹா’ மௌனம் குறித்து

முதிர்ந்த கவிஞன் எழுதியது

புரிந்ததா எவனுக்கும்

என்றும் தெரிந்தபாடில்லை

என்றுதான்

குறுமுலைப் ஸ்பரிசமும் காம்புகளைச் சுழன்று முகிழ்க்கும்

ஹார்மோன் துளிகளும்

இன்னும் கரைகடந்து இனிக்கின்றன

என்கிறாய் என்பினும்

உன் பூம்பாரம் எழுதப்படாது கனக்கிறது

பட்டுவிட்டால்

பற்றிவிட்டால்

கழுத்தில் தொங்கும் பாறை எனச் சொல்வாயோ

அறியேன்

தாகம் தகிக்கும்

தீர்த்தலின் தவித்தலின்றி

சிவனை நினைத்துக்

கர்ஜிப்பதாகும் சிற்சில அலைவரிகள்

சந்திப்புக் கோடுகள்

மையப்பட்டு நோயறுக்கையில்

இருபத்து கைகள் உடையோனே கலைஞனும் ஆக

அவன் எதிரி புலைஞன் ஆவான்

முத்தும் சங்கும் உடம்பு வெடித்த ரப்பர் செருப்பின் ஒற்றையும்

மனிதக் கழிவும் நைலான் மீன்வலையும்

நீயும் யாவும்

நானும்

ஒன்றும் இல்லை

அதற்கு

ஒன்றுமே



கடலும் மகளும்

(மகள் தன்யாவுக்கு)


040உன் நினைவகலப் பார்க்க

மீண்டும் முகத்துடன் பொருத்திக்கொள்கிறேன்.

உன் வயதுச் சிறுமி யாரோ வலியில் விளித்த குரல்

உனதாய்க் கேட்க

பதைக்கும் மனம்.

உன் முகம் நோக்க முயன்றும் முயன்றும்-

இப்பொழுது

என்ன விளையாட்டு விளையாடிக்கொண்டிருப்பாய்?

உன் மனதில் கீர்த்தனைகள்

மிச்சப் பதியன்கள்

மழலைத்து முணுமுணுப்பாயோ?

புதிய உன் ஊஞ்சலில் பசியும் மறந்து பறப்பாயோ?

உன்மத்தமும் கள்வெறியும் என் நெஞ்சில்

நோகத் தொடங்கிவிட்டது பால் கட்டிய மார்பாக.

சொல் பொறுக்காத செல்வம் நீ.

உனக்கேயான ஷாந்திநிகேதனைச் சிருஷ்டித்து

திருத்தி, மாற்றி, திருப்திப்படுகிறேன்.

பீர்க்கங்கொடி என வளர்கிறாய்.

பொறுப்பற்ற தகப்பன்-

பட்டயம் மட்டும் எனக்கு நிலைக்கிறது.

எனக்குப் புரிந்துபட்ட கடலினை

உனக்கு அறிமுகப்படுத்தவில்லை.

பதைப்பும்

திசையற்ற கோபமும்

பயணத்தின் பாதுகாப்பின்மையும்

என்னைச் சீரழித்த காலத்தில்

நான் காட்டிய தங்க மணல் கடலும்

கடல் காக்கைகளும்

உன் பிராயத்தினால் மறந்துவிட்டிருக்கும்.

இரு கைகளிளும் உன்னை அள்ளி எடுத்த நாள் நகர்ந்து

இன்று என் மன இணையாக

காலோரம் அலைகள் விளையாட

முடிவே இல்லாத பீச்சில்

முடியும் வரை

உன் பிஞ்சுக் கை பற்றி

அவ்வளவு அழகாயில்லாத

இந்தக் கரையிலும்

கடல் கற்போம்.



கடல் இடை மலைகள்


கரையில் உவர் மணல்

ஆடல் புரிந்து ஆடினார்

ஒருவர்

040அரைகெழு கோவண ஆடையில்

பாம்பு இரைக்க

இலங்கை மன்னன்

இருபது தோள் அறுபடும் கதிபட

இளமை கைவிட

பிறகு ரேயும் பாலசரஸ்வதியும்

உடம்பைத் தொலைவித்து

அரணிலா வெளியில்

அண்டமே பூண்டாக

அங்கமே ஓர் அணுவாக

அதையும் மண்ணுக்கு ஆக்கி

ஆடவும்.

அரும்பும் செவிட்டுச் சூரியன்

குருதி கொதிக்கும் அலைகள்

கடல் இடை மலைகள்

அலை உளர் மென் புயல்

உமை முலை அவர் பாகம்

இருளாய கரையில்

அருளாகும் நின் தேகம்

எண்ணற்ற வண்ணத்து LED

ஒளிரும் என் அகம்.


சித்ரூபிணி -1 - பிரம்மராஜன்


நினைவின்  மூன்றாம் ஜாமத்திலும்

உடுக்காத உன் உடற்கூறுகளின் ஊடாக

ஒளிமைப்படுத்தி ராட்சதச் சுவர்கள்

தசையின் இன்மையிலும் பிம்பமாக்கும் விருப்பக் கடன்

உன் குரல் கொஞ்சம் வர்ணத்தினை வசீகரித்து

சப்தநாடிகளும் ஒரே மனத்திற்குள்

அறிதல் அனைத்தும் ஆள்காட்டும் விரலாகி

கிரேக்க மூக்கின் மேல் முத்திட்டு நிற்கும்

பனித்துளியைத் துடைக்கும்

எண்முகத்தை எட்டு திசைகளிலும் திருகி

காண்பேன் உன்னை

சிற்றிடை நாயகி

வாடா முலையே

நித்திய சரணம் சாத்தியம்தான்

கடைசிக் கூளத்தையும் கொட்டிக்கொடுத்து

முத்தங் கண்டு சொல்பித்த வார்த்தைகள் அல்லவே

இவை என்பினும்

நானுமோ ஒரு கல்லுளி மங்கன் துயிலின் காதலன்

உன்னைச் சிறைபிடித்து சிற்பித்து

பிரதிஷ்டை செய்யப் புறப்பட்டவன்

பேதையிலும் பேதை

உன் உதரக் கள்  விரும்பாத விரதன்

என் உதடுகளும் சர்வாங்க தகனமாகட்டும்

இச்சை கொன்ற காமித அக்னியிதில்

அப்பொழுதாவது  அதன் சிவப்பு விதையும் ஆரஞ்சு சதையும்

தெரியம்படி பிளக்கப்படும் ஜாதிப்பழமென

என்னை மலர்த்து

நீ பகிரும் பொருட்டாவது.


Mindscape Maiden-II



Rajaram Brammarajan


Were you the one who passed orders for the slaughter of the pain filled sorrow stricken animals?

Aren’t you the one after the yield of the last fruit the white ants having nibbled the rest

who allowed the break of mid rib bringing the canopy down?


Or else are you the one in the flowery seat of one your incorporeal reproductions

entrapping me in the eddy of intoxication

Or else are you the one who directed me to glorify the indivisible?

Were you or some one else who was that who forbade viewing the pulsating stars beckoned me to worship your growing breast?

As for me I am the one who becomes what I come into contact now turn into an incarnation of crocodile gra bbing your feet?

It is you yourself who brought the cool rainsto extinguish the raging fire of the incense-mast of front temples

When the time came you first smelt that it could be you who isand became what you are now

There I became a destitute infant looking for your lap but you with your betel tinged red lipstightened your bodice decidedly so that you could dance

But you blanched the rays of my dreams barren and turned them to your sculpted profile

Were you the who changed the deceptive slumber that failed to sleep to ones of real sleep and gave the immaculate

Or else were you the one who became solidified in the undersea floor of my ocean with those bacteria that never see the light for years

Or else was it the shadow of your yoni or a sculpted Yaali of the tomb?

You of course were the one who made the stuck up thorn-stub growalong with the cells made me aware of my pain?

Yours was the voice which made mine shudder at once when you beckoned me

You the one who becomes you alone could be the raga hindolam in the two temposas female in the male

Not comprehending anything I stand with bewildered eyespopping outYou are now me ever your you could be


Translated from Tamil by Latha Ramakrishnan


சித்ரூபிணி -2


நீதானா வலி முற்றிய துயர் மிகுந்த விலங்குகளைக்

கொல்ல கட்டளை கொடுத்தது

நீதானே கடைசிக் கனி விட்டதும் கறையான்கள் அரித்து

இடுப்பு இற்றுவிழ குடை சரியவிட்டதும்

அன்றியுன் அரூபப் பிரதிகளில் ஒன்றின் மலர் மிசையில்

என்னை மயக்கத்தின் சுழலில் வீழ்த்தியது

அல்லது நீயோதான் பகாபதத்தினை மகிமைப் படுத்த

திசைப்படுத்தியது

விண்மீன்களையும் நோக்கவிடாது உன் வளர்முலையை

வணங்கச் சொன்னது நீயோ யாரோ

நானோ எதைப்பிடித்தாலும் அதுவாகும் வடிவ வஸ்துவாகி

உன் பாதத்தினைப் பற்றும் முதலைப் பிறவியானவன்

நீயேதான் உன் குளிர்மழையை எனது தூப ஸ்தம்பத்தின்

கடுந்தழல் மீது அவியவைத்து

நீயேதான் நீ என்று முதன் முதலில் நுகரும் பருவகாலம்

வந்தபோது நீ நீயோ ஆனாய்

அங்கில் நான் ஏதற்ற குழந்தையாய் உன் மடிநோக்க

தாம்பூல அதரங்கள் சிவக்க கச்சைகளை இறுக்கி நடனமிடத்

தேர்ந்தாய்

நீயோ என் கனவுகளின் ஒளிக்கிரணங்களை மலடாக்கி உன்

சிற்பமுகத்தினை நோக்கி நிமிர்த்தியது

நீயோதானா உறங்காது போலிருந்த போலி உறக்கங்களை

நித்திரையாய்  மாற்றி நிர்மூலம் தந்தது

அன்றி என் சமுத்திர இருட்தரையில் ஒரு வருடமும் சூரியன்

பார்க்காத கிருமி நுண்ணிகளுடன் வீழ்படிவமாய்ச் சமைந்தது

உன் நிழல் யோனியா நிஜத்தின் கல்லறை யாளியா

நீதானே தைத்த முள்ளினை சதையுடன் நிணமாக வளர்த்து

வலி தடவி நினைவு புகட்டியது

என் குரல் நடுங்கக் கூப்பிட்டது உன் குரலேயல்லவா

நீயாகும் நீதான் ஒரு ஹிந்தோள ராகத்தின் இரு

பிரஸ்தாரங்களில் ஆணில் பெண்ணாய் லயம் மோகித்து

யாதுமே விளங்காது விழிபிதுங்க வழிவேண்டி நிற்கும் உன்

நீயோ நான்

என்றுமே உன் நீயோதான்


சித்ரூபிணி -3


அந்த நாள் வந்துவிட்டதாக

இந்தக் குருவிகள் கூறுவது எவ்விதம்

பூர்வகாலத்தில் இருந்ததுபோல

படிகப் பச்சை வர்ணம்

தலைக்கு மேலான மண்டலத்தில் அக்னிமயம்

கழுத்துக்குக் கீழே நீல ரத்தினம்போலும் சாயல்

வாழ்வின் நீர்ச்சுனை உலர்ந்து

முகங்கவிழ்ந்து விழுந்தேன் கண்டேன்

வெளிப்பிரகாரத்தின் தூணோரங்களில்

கின்னரர்களின் கருவிகளிலிருந்து கிளம்பும்

தாய் ராகத்திலேயே தொடுவான் கீற்றுப் போல் தீபகம்

தெரிந்திருக்கிறது

என் காதுகளுக்கு

சந்நிதியின் பீடம்

இதற்கு மேலெப்படி கண்ணாடிக் கூரையில் விழுவதுபோல்

கெட்டித்த மழை விழுவதாயிற்று?

அர்த்தத்தை விடுவிக்காத அந்த முகத்தின் கதவுகளைக்

கிரீச்சிட்டுத் திறக்க

ஏனோ ஒரு பயம்  பிணித்த கலக்கம்

பின்னும் காற்றோடையின் சலசலப்பும்

கூடவே அந்தப் பட்சிகளின் பிராணனை வாட்டும்

சலம்பலும்

பசியின் துயரமா அன்றி உயிருடன் உயிர் ஒன்ற வேண்டிய

அத்தியாவசியக் கூக்குரலா

எனப் பிரித்துரைக்கவிடாது

மீண்டும் உப்பில் உவர்க்கும் மழையால் யாதொருவருக்கு

என்ன விளையும்

தீயில் வாட்டியதாகும் உடல்களைக் குளிர்விக்க ஒரு

மிடறாகுமோ

அன்றி மரணத்திற்குச் சற்றே முன்னான தான்யத்தின்

வாழ்வுக்குள் விழும்

உயிர்த் தண்ணீ ருமாகுமோ

அதுவாகவே நீ

இன்று பெய்து நின்று நாளையும் பெய்து பிரளயம் வருமுன்

நின்றுவிடும்

என்று நீ அறுதியிட்டுத் தாரை வார்த்த உண்ணாத

முலையின் தீர்த்தமாகிறாய்.


சித்ரூபிணி -4


எங்கோ ஒரு பிறந்த தினத்தில் நடப்பட்ட ஒரு விருட்ச வித்து

உன் கருவறையில் பெருகி

நிகில லோகத்தினையே தன் சிரசால் மூடிவிடும் போலிருந்த

இருட்பொழுதில்

தந்தத்தின் நிறமே மங்க வந்தாய்

நீர்ச்சுழி போலவோ அக்னியின் அட்சரம் எனும்படியோ

உனது உந்தியும்

குரும்பை முலையும்

வெண்ணிறப் பட்டில்

கொடியோடும் நாளங்களின் பின்னல் வலைகளை

புறங்களில் கண்ணுறலாம் என்றவாறும்

உன்னைத் தளைப்படுத்தியாள்வதற்கான கற்பனையில் நான்

யத்தனிக்க

நீ காற்றுடன் இரண்டறக் கலந்த சிற்பமாகிவிட

பனிப்பாளமாகக் கிடக்கிறதென் குறை மனம்

மீட்டிக் குருதியிசைக்க நான் கேளாதிருந்தும்

நீ ஈன்ற குழந்தைகளை என்ன செய்வது?

கானகத்தில்

அறாத நாணையும் முறியாத வில்லையும் தீராத அம்பராத்

தூணியையும்

கொண்டவர்கள் பயில்வதை வாளோரத்துக் குரூர

தரிசனமாய்க் காண்பதும் நான்

அம்மகவுகளைப் பிறப்பித்தும்

பிணைக்கும் என் விருப்புகளை அறுத்தும்

கன்னியும் சநாதநியும் ஒன்றாகி நீயாகி

மேலும் வயிறு உட்குழியவும்

மார்பகங்கள் வாடலை மறக்கவும்

தளர்வுறாச் சருமத்துடனும்

என் சயனத்தில் உடன் இருப்பதான சாட்சாத் உறுதியுடன்

விழிகள் பிரிய

உன் உடலார்ந்த பரிமளம் இழந்த வெற்றம்பலம்

பற்றி அறிந்து விட்டதாக

ஏதோ ஒரு கற்பகாலத்தில்

ஒருவன் இங்கிருப்பதாக

.


சித்ரூபிணி - 5


மூலாதாரப் பயிர்கள் கோரைகளுக்கிடையிலிருந்து

திடீரெனத் தலை நிமிர்த்திய

நீல ஆம்பல் நீ

கானங்களின் தலைவியும் என்றறியாதே நான்

செவி கொண்டேன்

விடியல் பண்ணின் மனையாட்டி என்பதையும்

உன் சாயல்களை

சொப்பனங்களில் மாறுதலுறும் நிலையற்ற முகம்போல்

மாற்றுகிறாய்

அதற்கிணையான மனநிலை மாற்றங்களைக்

காண்பிக்கிறது என் கந்தக பூமி

எரிதல் குறைக்கவோ

வெறுப்பினால் நிறைந்து கசந்தவனாய் மனிதரைத்

துறக்கவோ

வலையைக் கைவிட்ட மீனவன்

ஏர்சாலில் கிடந்த கலப்பையைக் கரையான் தின்ன விட்ட

பயிர்த்தொழிலாளி

இவர்களில் எவன் நான் எனக் குழம்பித் தீர

உன்னுடன் பிறந்தவளின் லட்சணங்களை மோகித்திருந்த

மாதங்களில்

நீதான் பதுமினி என்பதை உற்றுணரும் கதியற்றிருந்தேன்

ஆகிலும் எனக்குள் ஒருவன்

உன்னை வனைந்து வடிவமைத்துக் கொண்டிருந்திருக்கிறான்

நீரின் நுகத்தின் நிழலிலும்

மந்திரங்களினால் பல்கிய தான்யக் கதிர்களிலும்

உன் ரூபம் தெளிகிறது

அண்டங் காக்கை கொத்திச் சென்ற வெண்ணிற

எருப்புழுவிலும்கூட

தாந்தேவின் காதலியும் நீதானாக

உன்னைச் சுகிக்கத் தந்த

என் உடலின் விமோசனியும்

தாமதித்து அந்திமத்தில்

முற்றிய காபிச்செடிமீது மொய்க்கும் மின்மினியும்

ஆக.






ஜென் மயில்


புன்னை மயில் விரைந்தது

ஜென் காரின் குறுக்காய்ப் பறந்து

குருதியொத்த நிறம்

சேதாரம் எதுமில்லை

கேட்டுத் திரும்பின கால்கள்

மைனாக்களின் உலோக ஸிம்பனியை

மடையான்களின் மாலை சாதகத்தை

ஸெல் கோபுரம் முற்றும் உச்சியில்

இருவரின் ஸ்பானர்கள் இயங்கும்

வெள்ளி வெளிச்சத்தில்

கைகள் ஒயக்காத்திருந்து

கடவுள் கயிறுகளை சற்றே

மேலே இழுத்து விடுகிறார்

கால்கள் கண்டன

விளக்கற்ற அடுக்களையில்

உறுகாய்ப் பாட்டிலின் மீதிருந்து

கொசுக்களைப் பிடித்துண்ணும்

மரத்தவளை


புத்திப் புலன்


புள்ளிக் குயிலொன்று நுணா மரத்தில்

கண்கண்ட காட்சி புத்தி பாராது

அருகாமைக் கூந்தப்பனையிலமர்ந்து கூவியது

திக்கித் திக்கி

புத்திக்குப் புலர் நேரம்

அகன்றுயர் ஆண்பனையில் அமர்ந்தது

நடுநெஞ்சிலிருந்து

விருட்டென்று பறந்தகன்றது வல்லூறு

இலக்கை இழக்க

விரும்பாது


செங்கோணச் சமதளம்


சாபமும் மறதியும் சகதியாய்க் குழைந்து

நதியாகத் தவறி கிழக்கு மேற்கில்

குப்புறத் தூங்கும் சாக்கடை

துருவங்களில் வரைவளைவுகாய்

நீந்தும் நீர்ப்பாம்புகள்

தகவமைப்பின் உச்ச இலக்கணம்

பொரியளவேயாகும் மீன் குஞ்சுகள்

வரைவளைவுகளை வெட்டிச் செல்லும்

செங்கோணங்களும் பிறவும்

நீர்மறந்த ஏரிகள் நிராகரித்த

சிலந்தி இழைவழி இறங்குவது போல்

எரிபொருள் வற்றிய ஹெலிகாப்டராய்

சாம்பல் நிறக் கொக்கு

துணுக்கு மீன்கள்

நீந்தி ஒயும்

ஒளியும்

தென்வடலாய் இந்த வாயில்

கைப்பிடிச்சுவரில்

மந்திரக்கோலாகக் காய்ந்த குச்சி

தார்வேலையில் மிஞ்சிய ஒரு பாறையெச்சம்

இரண்டிலொன்றைத்

தேர்ந்து

குறிபார்க்க

யாருக்கென்ன

யோக்யதை


பெற்றே தீர்தல் மீண்டு


பிரயாணம் முடிந்து ஊர்வந்து

தேர்நின்ற பின் பயணவழிவரைபடம்

பார்த்து சென்றவழியெல்லாம்

எறும்பாய்த் தேய்ந்து செல்கிறபோது

பனையும் தென்னையும் மயங்கும் புலம்

மணலில் மறைந்து கிடக்கிறது

காரை நிறுத்தும் சோதனைச் சாவடிகள்

ஆவணங்களை மேயும் ஆயுதபாணிகள்

சரிசரியெல்லாம் போகலாம் போவென்றாலும்

மேலதிகாரியின் ஜோபிக்காக இன்னும்

கார் தயங்கித் தடங்க

காகிதக் காசுகள் கைமாற

இழப்பொன்றுமில்லை

ஒர் சூர்யாஸ்தமனம்

உருண்டைப் பாறையில் மாறிமாறிக் குந்திய

கடல் காகங்கள்

எறும்பு மீண்டும் பாதை தொற்றிச்

செல்கிறது

மேலதிகாரியையும் சீருடையாளரையும்

வரைபடத்தில்

போடுவதில்லை

என்பதை அறியாது



நவீனக் குறுஞ்செய்தி


மணியன் என்பவன் சொன்னதென்ன என்று கேட்டேன்

அந்த தபால் கார்டு புரியாமல்

அடுத்த நாள் ஆயிரம்

வரைந்தீர் அத்தனையிலும் அதே

கொக்கிகளைக் கோர்த்துச் சாய்த்தது போல

சொன்னதென்ன என்றேன் அடுத்து

விடுத்தீர் அயிரத்தெண்ணூறு இன்லாண்டுகள் மாற்றமிலாது

பிறகு தினத்திற்கு 22 தந்திவீதம் பெற்றவள் வாங்கி வைத்தாள்

அதே மூன்று வரிகள் ஒன்றிலும் சாவியில்லை

அவன் சொன்னதென்ன என்றேன் எட்டவில்லை உமக்கு

உம்மிடம் யூடியூப் செல்ஃபோன் சாதாஃபோன் கேமராஃபோன்

ஏதுமில்லை அவன் என்ன சொன்னான் நாம் நம்மைப் பற்றியா

படித்தும் படிக்காமல் விட்ட புத்தகங்கள் பற்றியா

வாங்க நினைத்து வாங்காது விட்டவை பற்றியா

வாங்கியும் பிரிக்காது விட்ட நூல்களையா

படித்துவிட்டது போல பாசாங்கு செய்தவை

‘பவர் ரீடிங்’ என்று சொல்லி நீர் 10 பக்கங்களைத் தள்ளிவிட்டு

வாசித்ததையா

முப்பது முறை தொடங்கி ஒருபோதும் முடிக்காது விட்டவை

பிறகும் கடிதங்கள் எப்போதும் போல்

இருவர் பிடித்திழுத்து ஸ்பிரிங்குகளை

தளர்த்தியது போலிருந்த எழுத்துக்கள்

உமது டைப்ரைட்டருக்கு வலிக்காதென்று

எண்ணித் தட்டுகிறீர்

நீர் மறைந்தும் உம் டைப்ரைட்டரிலிருந்து

எப்படி எண் இ-மெயில் பெட்டிக்கு

அந்த மூன்று வரிகள் வருகின்றதென்று தெரியவில்லை

‘ஸ்பாம்’ பாதுகாப்புக்கு மிஞ்சியும்


அன்னம் உன் ஓவியம்


தந்தையைத் தீட்டுவது கடினமில்லை

பக்கவாட்டில் எழை வீடொன்றைப்

பார்த்துக் கொண்டிருந்தார் கண்மூடி

தங்கையின் பின்புறம் கூட உறுத்தவில்லை

திறந்த கண்ணாடி ஜன்னல்

பாய்மரமேறிய ஒற்றைத் தோணியைக் கண்டாள்

வெண்ணிற உடுப்பில்

அடுத்த அடி எடுப்பது போலிருந்தன கால்கள்

ஃபிராய்டை கரியநிறக்

கம்பிக் கூட்டுக்குள் போட்டாயிற்று

அம்மாவை வரையும் உக்கிரமில்லை

காதலியின் கணவனைச் சித்திரிக்க சலிக்கவில்லை

கார்க்கியின் சொட்டைத் தலைமேல் ஆறால்மீன்

சிறுமி எப்போதும் மாதாகோயிலின் மணியாய்

குழந்தைப்பெண் குழந்தைக் காதலிக்கு நகப் பூச்சு

ஒரு ரோல்ராய்ஸ் கார்

தலையில் குத்தீட்டி எறிய குதிரை

மோனாலிஸாவும் நெப்போலியனும் அருகருகே

பிக்காஸோவின் மூளை பிடறி வழியாக நாக்கை ஆராதிக்க

ஒரு வாசிக்கப்படாத மேண்டலின்

உன்னை வரையும்போதுதான்

மூளை சுக்கல்சுக்கலாக

முற்றாத சலவைக் கல்லை கைதவறிக் கீழேவிட்டீர்போல்

தரையில் கால்பாவாது உன்னை எற்றி வைக்க

வேண்டியிருக்கிறது

பாய்ந்து கிழித்தெறியத் தயாராகி

முடியாத வேங்கைகள் அவற்றைக் குறிபார்க்கும் துப்பாக்கிகள்

எல்லாம் சமைந்து நிற்க

ஈயாடாது

எறும்பசையாது

சிகரெட் புகை சுழலாது

அசைவற்ற மோட்டார் பைக் சுற்றி நாலைந்து பேர்

தேனீ ரீங்கரிக்காது

சமுத்திரங்கள் எல்லாம் வெட்டப்பட்ட காலத்தில் போல

மௌனிகளாய் ஸகரன் ஸகரன் எண்று நாமாவளியை மனதில் ஜபிக்க

உன்னருகே முட்டையிலிருந்து

மூன்று குஞ்சுகள்

அன்னமே


0


அந்தரத்தில் மிதப்பதென்பதால்

அதைக் கூடென்றோ கோளென்றோ

சொல் தளராது வீடென்று கொள்

விண்ணில் விதைத்த விதை

மண்ணில் விழுந்து வீறிட்டாக வேண்டுமே

மலரும் தோட்டக்காரனும்

ஒருவரேயென்றாலும்

துரிதம் குறைவுறு தெளிப்பான்கள்

மறைக்காட்டுக்குச் சொல்வதுண்டாம்

எடை ஈரம் வடிந்து

ஈய வைக்கோல் காய்ந்து

சுழன்றடிக்கும்

தர்க்க நாணல்

ஒரு நாள்

ஒரே

நாளில்


0


செய்நேர்த்தி கண்ட உமத்தை வித்துக்களை

களவு செய்த குரங்குகள்

உண்டிருக்க 120சதம் இல்லை வாய்ப்பூட்டு

கசந்த சுவை விற்பன்னர்கள்

காற்று திசை முகர்ந்து

பருவத்தே பயிர் முடித்து

கருஊதா மலர் விரியக் காத்து

பிய்த்தெறிய

வியலும்

சிலந்தி விரல்களால்

பொறுமையின் தெர்மாமீட்டர்

அனுமதிக்க


0


அங்கே நிற்பாட்டியிருக்கும்

வண்டியைக் கண்டு ஐயம் திரிபு அகற்று

ஐம்பொன்னால் அனது பீரங்கி

மல்லர்கள் புஜக பூஷணர்கள்

அசைக்கவியலாதது

ஒன்பதிலிருந்து பூஜ்யம்வரை

எண்ணிக் கழிக்க ஆள்வரக் காத்து

கள்ளிப் பெட்டியில் நிறைகொண்டிருக்கும்

ஐந்தே கல்குண்டுகளும்


ஒரு கோணிப் பை கரிமருந்தும்

அதிக ஆசையில்லை

பொடித்துத் தூளாக்க வேண்டி

உதித்திருப்பது

மேற்குவானில்

ஒரு சுக்கிரன் மாத்திரமே




நெய்தல் தேசம் - பிரம்மராஜன்


நீயும் ஒரு கடல் காக்கையும்

நினைவுகொள்ளும் நெய்தல் தேசம்

எட்டு வைரப் படிமம் கடந்து

தூய வலியால் திகழும் அலுமினியச் சிறகிரண்டு

படபடக்கும் நெஞ்சின் மீதிப்பீதி

கூசும் மின்னொளி இன்றின் உண்மையை

நாளையின் பொய்யைச் சொற்கூடுடைக்கும்

நெடுநல் வாழ்வின் ஓற்றைக் கவிதை

புல்லரிசி உண்போரின் கண் உருளை

சித்திரக் கோட்டில் புரண்டு படுக்கும்

ஒற்றையடிப்பாதை

துணித்த கிளைவெட்டோரப் பிசினில் வழியும்

இலைப் புனல் ஓயும்

வெட்டுக்கிளி நறுக்கிய மதிய கிராமத்தில்

தீ எழுதும் உறக்க மலர்

ஞாபகப் பிரதிகளும் நிலையாடிகளும்

நனைந்த மீதிப் பயணக் குறிப்பும்

நமது அதேயில்

காணி நிலம் எதுவுமே

கனவுடைந்த இடது பாகம்

அவன் விளைந்த இடத்தில் அழிந்த பயிர்

வில்லாளியோ விடுபட்ட அம்போ

காற்றுத்திரட்டும் கற்பனை

மிகவும் ஒன்றுபோல் ஸ்ருதி சேர்க்கிறாள்

பெண்ணுடலை ஓர் யுவதி


... உபாசனை செய்ததுடன் கிரிராஜன் சேகரித்து வைத்திருந்த ஸங்கீத ரத்நாகரம், நாரதீயம் முதலிய நூல்களைப் பயின்று சுருதிகள், பிரக்ருதி விக்ருதி ஸ்வரங்கள், 21 மூர்ச்சனைகள், 72 மேளகர்த்தாக்கள் தசவிகித கமகங்கள், ஜன்ய ராகங்கள் இவற்றின் மர்மங்களைத் தம்முடைய முயற்சினாலேயே


 மூளை அகன்று விசும்பு விரியவேண்டும்

இப்போது இல்லை

சோற்றின் நிஜமாய்க் கவலை

அவர்களின் மழை மதியம் நமதென்றால்

இலைவழிப் பாட்டில் செவியின் ஓவியம் எந்நிறம்

மண்ணும் சதையும் மதிலின் வரட்டியும்

கதிர்ச் சுடரின் கட்டிடக்கலை

மலைகளின் நாடித் துடிப்பை

விரல் தொட்டுணர

ஐம்புலன் தெரியும்.


கூழாங்கல்லின் சந்தோஷம்போல்

காற்று வரத் தொடங்கிய செப்டம்பர்

இன்னும்

மிருகக் கூறுபாடு

மறக்கப்பட்ட சரித்திரம்

விற்பனைக்கான க்ளோஸப்

சொற்களுக்காகப் புறவிருள்

மரமாகும் பயப் பதியம்

உன் விழைவுப் புழுதி நீயாக

பாவம் அந்தப் பட்டாம்பூச்சி

இதுவரை காகிதப் பதுமை

காண்பொருளைத் திறந்து நனவேற்றி

உலர்ந்த அறைகளை ரணமாக்கித்

துகில் திரை விலக்கி

வெப்பநிலையும் கவலையும் ஒரே வாயிலில்

வந்திறங்க

புரியாது தடுமாறும் மனப்பதம்

உஷை  உணராச் சாயுங் கால விரல் ரேகை

பதியும் உன் முகத்திலொரு வயலின் மொழி

எதுவும் உறங்கா இந்நகரின் இரவில்

மாநரகரின் மௌனம் அலறும் குரல்வளை

மாற்றிடம் வெற்றிடமாகாது

மீன்பிடிப்பு ஆபத்தானது திறந்த தோணிகளில்

ஆண்களின் 20 மணி வியர்வை

உயிரிழப்பு அதிகம் வேலைப் பாதுகாப்பில்லை

ஊழின் கரிப்பினை அறிந்திலர் அநேகர்.


இரவென்பது ஒரு பறவை

இரவின் ஆதாரம் ஸ்ருதியே

நள் என்று சொல்லும்

கொன்ற செய்தி கொணர்கிறான்

புகார்களைப் புன்னகையுடன் ஒப்பிட்டு


மகா ஸ்ருதியாகும் காதுகளில் ஓயாத சுத்தியல்

மீண்டும் ஆர்க்க வேண்டும் பாசி வயல்

எவரும் நவிலா ஒன்றை

மொழி மாற்றும் செயல் அது

காற்றின் வடிவூற்று

புயலும் மழையும் கலந்து வரைபெற்ற தெரு

வானத்தின் நினைவோ

கத்திரிப்பூ

வேறெப்படி நூற்பது இப்பனுவலை

இப்பொழுதில்லை மறுநாளில்

முளைத்தெழுக கற்பக விருட்சமே

எல்லாமே காத்திருக்கிறது

மறதியின் இறுதிப் புள்ளிக்காய்

இனியிலும் புல்மிளிரும் ஏரி

நித்திய மதியத்தின் யூரியாப் பிசுபிசுப்பு

மேகச் சிறகொழித்துத் திறந்திருக்கிறது

மாலைக் காதலின் வெளிர் நீலத்தாள்

நீ எழுதும் வேலை குடும்பம் எரிவாயு

தடங்கிப்போன கடிதம்

தினசரிகளின் கவிதை

அராஜகவாதியின் சாம்ராஜ்யம்

தெள்ளிய நீர்

நைட்ரிக் அமிலம்

உடைந்த ஸ்பிரிங்

மாத்திரை பிரிந்த பிளாஸ்டிக் கொப்புளம்

இரட்டைக் குவிமையக் கவிதை

யாருடன் எங்கென்பதும்

பொருட்டல்ல இத்தினம் ஆயினும் இதுவல்ல க்ஷணம்

கேஸட்டில் ஒலிக்கும் ஆத்மாநாமின் குரல்

காட்சிகளின் கோணம் தலைகீழாகப்

புகைப்படச் சாம்பல் காற்றில் அலையும்

காதலின்றிப் புணர்ந்து முப்பால் அறியாது

பிறப்பிக்கும் பூனைச்சாதி நாமல்ல

ஒரு கவலை பல துயரம் விலை மீறும்

இலையரிக்கும் புழுவே

வாழ்க்கையைத் தொங்கித் திருகிப்

பாவங்களைப் புண்ணியமும்

தண்டனையைக் குற்றமும் முயங்க

துருவத் தகராறு புனிதர் ஏசுவும் அறிவார்

துடிக்கும் சொற்களில் ஜடமுயிர்க்கும்

நாம் நாமின் நம்மால் நமதின் சமன்

மேற்கோள் முற்றும்


சமீபிக்கும் அவர்கள் முதுமை இப்போது

நொடிக்கும் அவர் இருக்கை

அவர்கள் பீதியில் தம் நாய்களுக்கு

நஞ்சிட விருப்பம் தெரிவிக்க

வீட்டுச் சாமான்களைக் கால் விலைக்கு விற்று

க்ஷாலைப் போக்குவரத்தின் தலை தெறிப்பை 0 ஆக்க

நாற்பதாண்டுகள் பகிராததை இன்று

க்ஷணத்தில் இரு நூற்றாண்டு வாழ்ந்ததை

வெளியிலிருந்து பூட்டப்பட்ட கதவின் பின்னால்

ஏதும் நடவாததுபோல்

இருவரும் பூர்வகாலத்திலும் அந்நியராய்

குரவர்களின் பறவை உறவு வலையளவு

காதலின் கதகதப்பை எழுத்துப் பிழைகளுடன்

எழுதி அயலார் ஒருவர்

மௌனமே பொருளாய்

மென்மையே வன்ம்மாய்

விற்க முடியாதிருப்பது

உன் இலக்கமிடா எலும்பு


ஒரு கவிதை அறிவை நிர்த்தாட்சண்யமாய்

நிராகரிக்கட்டும்

மனதுடன் உனது லிங்கத்தை

பிணைத்துக் காற்றில் ஊசலாடும் சங்கிலி

பிரண்டு படுக்கும் ஒற்றையடிப் பாதை

வாழ்ந்த வறுமை எலிவலை வெறுமை

கேள்விகள் செய்து தேற்றம் முடித்து

உன்னைப் பார்த்தால் 114 ஆண்டுகள்

வாழ்ந்தவன்போல் அவதி

தப்பிக்க வழிமுறை மரணத்தின் மொழி குறித்து

பதில்கள் சில

கடவுள் கேட்கிறாரா வார இறுதி ஓய்வு இன்னும்

சொல்லற்ற கதை சொல்


ஃபிரான்கோவின் சர்வாதிகாரத்தின்போது காட்டலோனியாவில் பெண்கள் எதிர்கொண்டது இருவகை அடக்குமுறை : காட்டலோனிய மொழியில் எழுதுவது தடைசெய்யப்பட்டது; பெண்களின் அறிவார்த்த செயல்பாடுகள் நிராகரிக்கப்பட்டன. 1976இல் ஃபிரான்கோவின் இறப்புக்குப் பிறகு காட்டலோனியாவில் மௌனமாக்கப்பட்ட 40 வருஷத்து இலக்கியம் இப்போது


உறங்கும் வயல்கள் இருவர் நாம்

மயங்கும் வரப்புகள்

கொக்கோ ஏரிக்காட்டில் பூச்சிக்கனவில்


புத்தாண்டு வாழத்தட்டையில்

நரைக்கும் உன் ஆயுள்

இக்கணத்தில் மெய் பற்ற

கிளைகளில்  சிக்கிய படிமம் தேடத்

தோண்டியகப்பட்டது வெண்கல முகம்

திறந்த வீட்டின் எளிய கனவு

உம் நெற்றியில் எம் பெருவிரல்


கண்ணிமைமேல் கனக்காத முத்தம்போல்

உறங்கியது தெரியாத உறக்கம்


நீரலை முகம் கோண

அறும் ஆறு சலனம்

தன் மெனோபாஸ் பருவத்தை யாரிடம் சொல்லும்

காயும் சூரியன்

துயிலெழுச்சிப் பாடலில் இணையாத இசை

உள்ளங்கையில் அள்ளிய அரிசி

என் நிலக்காட்சி


மொழி மீறிய காதல்(கள்) - பிரம்மராஜன்


இந்தச் செய்தியுன் யோனிவரை சென்று சேருமா

அன்றி அப்படி ஒன்றுனக்கு உளதா எனும் அறிதலின்றியே

கூட

பச்சை உடல்மீது வெண்மையில் மின்னிய தேமல்களின்

சருமத்தில்

எச்சில் அதரங்களை

குவித்துத் தொட்டேன்

உன் தாவரப் பெயர்

என் சகதியின் ஆழ் இருள் நரகத்தில் புதைந்துகிடக்கிறது

மொழி மீறியக் காதல்கள்

எழுதும் பலகையில் விரல்கள் தட்டும்போது

முதல் தொடுதலின் பதற்றக் காய்ச்சல் போல்

விரல்கள் பழுத்துவிட்டன எலக்ட்ரிக் பழங்கள்

மனிதச்சி ஒருத்தி சொன்னதை

என் தீட்டுப்பட்ட சொற்களை மீறி எப்படியாவது

வாழ்வின் பிராணன் ஊறிய என் தோல் செல்கள்

உனக்குத் தெரிவித்தாக வேண்டும்

உன் இதயம் உன் லிங்கத்தில் துடிக்கிறது ( முன்னவள்

சொன்னாள் )

தாவரக் காதலி

என் மனம் உன் பச்சையத்தின் தொடர் மூச்சுகளின்

ரிதம்களை

பின்வருடியும் செல்கிறது

ப வில் தொடங்குவதன்றி வேறெந்த வர்ணமும்

நமக்கிடையில் நுழையாது முடியாது

சக கிழத்தியாகக்கூட இந்த மலர்கள்

பெருந்திணை என்றுகூடச் சொன்னார்கள் இதை

வக்கிரப்பெருவழுதி நான்

எதை மறுப்பேன்.




அதுவாகும் நீ - பிரம்மராஜன்


நீ அது ஆகிறாய்

ஆம் அது நீயாவாய்

ஆனாய் அதுவாய் நீ

நீயே உனது மொழி

நிகர் என்றும் மொழியே உன்

பொருளாய்ப் பலவாய் மொழிந்து

பொருளே சொல்லாய் ஒன்றினுள்

என்றும்

அதன் பொருள்

யானே உனது நீ

அது நான் ஆனேன்

ஊனே உருகிய உள்ளத்துள்

ஆனாய் அது வாய் இனிமை

பொய்க்கலப்புடன் மெய்கலந்ததுவாய்

கை கலந்தும் வாய் கலந்தும்

சிரம் பற்றி

சிந்தை பற்றாது

நின்றவராய்

சென்றதென் மெய்வாய்

உன்றன் பொய்வாயுடன்

குழல் கடந்தேகத் தடங்கிய

குளத்துள் மெய்

யாகவிருந்தோம்

மெய் கலவாது

சற்றும்




முத்தமும் எச்சமும் மிச்சம்
===============================================
எனக்காகும் எச்சிலில் பிறர்க்கான முத்தம்
உள்ளத்துக்கான வித்துகளில் உவர்களின்
எண்ணெய்த் திரவியம்
என் மழைக்கான உக்கிரம் உன் வெய்யிலின் தியானம்
இந்தக் குதிரையின் தாகசாந்தியில்
அம்மனிதரின் அபானம்
பிறர்க்கான நஞ்சிலிருக்கும் கட்டுச் சோற்று மூட்டை எனது
அவரின் ஊர்திகளில் என் பிராணன் மறிக்கும் கடுவெளி
மறப்போர்க்கான நினைவுகளில் ஞாபகச் சிடுக்குகள்
உலர்ந்த என் படுக்கையில் நத்தையூரிப் போகிறது
அவளின் காலைப் போதுகளில் என் சந்தியாகாலக் கிருதிகள்
ஈருடம்பும் ஒன்று போல விழிக்காது கொற்றவா
தாமதித்து உறங்கி நிதானித்து இறக்கும்
என்றாலும்
என் கதிர்களை மறைக்கும்
காலம் அவர்களின் தாளடியிலிருக்காது
என் தேனீக்களின் யாகசாலையில் அவன் உலைக்கலம்
உடலத்துக்கான என்னுடையில்
மறவரின் சடலத்துப் போர்வைகள் கிழிபடலாகும்
வாளின் முனைக் கருணையில் மின்னும் சாரைச் சேதில்
இந்த நெல் சூல்கொள்ள
பூக்கிறது என் மூங்கில் வனம்
- பிரம்மராஜன்
The Kiss (Lovers), oil and gold leaf on canvas, 1907–1908.[1] Österreichische Galerie Belvedere, Vienna, 180 cm × 180 cm

பிரம்மராஜனின் கவிதைச் சிற்பம்

http://mubeen-sadhika.blogspot.in/2016/08/blog-post.html




('சொல்லும் சொல் பிரம்மராஜனின்'-நூலில் இடம்பெற்ற எனது கட்டுரை)


பிரம்மராஜன் தமிழின் மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் கவிஞர். அவருடைய மொழி ஆளுமை, ஞானத் தேடல், அறிவியல் முறைமைகள் கவிதைக்குள் தனி ஒரு வினையை நிகழ்த்துபவையாக உள்ளன. அவருடைய கவிதைகள் தமிழ் மொழியின் எல்லைகளை நீட்டித்தவை. கவிதையின் வாசிப்புக் கோட்பாட்டை மாற்றி அமைத்தவை. பன்முறை வாசிப்புக் கோருபவை. இவருடைய கவிதைகளிலிருந்து பின் நவீனத்துவக் கூறுகளை அடையாளப்படுத்த முடியும். தமிழில் கவிதையியிலின் பிரதிநிதித்துவங்களை முன்னெடுக்க பிரம்மராஜன் கவிதைகள் உதவுகின்றன. இந்தக் கட்டுரையில் அவருடைய ஒரு கவிதையின் வாசிப்பு இடம்பெறுகிறது.


'அறிந்த நிரந்தரம்' கவிதையில் இரு பகுதிகள் உள்ளன.

I.அறிந்த நிரந்தரம்

ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு. 

இரவெனும் கருப்புச் சூரியன் 

வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது. 

நெட்டித் தள்ளியும் நகராத காலம் 

எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது. 

அரைத் தூக்கத்தில் விழித்த காகம் 

உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக் 

கேட்காமல் மறதியில் கரைகிறது. 

இதோ வந்தது முடிவென்ற 

சாமச் சேவலின் கூவல் ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.

இரண்டாம் தஞ்சம் 

பொய் முகம் உலர்ந்தன ஏரிகள். 

நாதியற்றுப்போன நாரைகள் 

கால்நடைகளின் காலசைப்பில் 

கண் வைத்துக் காத்திருக்கும். 

எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்? 

தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த 

மனிதன் ஒருவன் 

ஒட்டடை படிந்த தலையுடன் 

வாசல் திறந்து வருகிறான் 

கோதும் விரல்களிடம். 

காயும் நிலவிலும் கிராமக் குடிசை 

இருள் மூலைகள் வைத்திருக்கும் 

மறக்காமல் 

மின்மினிக்கு. 

வாழும் பிரமைகள் 

காலம் அழிந்து 

கிடந்த நிலையில் 

கடல் வந்து போயிருக்கிறது. 


கடிகாரத்தின் முட்களில் உறக்கம் பதிந்துவிட்டதால் விழிப்பும் அங்கிருந்துதான் நிகழவேண்டியிருக்கிறது. பகலெனும் வெளிச்ச சூரியன் என்பதற்கு எதிரான இரவெனும் கருப்புச் சூரியன், பகலில் சிக்கித் தவிப்பதில்லை ஆனால் இரவில் வழிக் குகையில் சிக்கித் தவிக்கிறது. இதுவரையிலான வரிகளில் காலம் வேறு வேறு வடிவம் எடுத்தது. கடிகார முட்களாய், இரவு என்ற குகையாய். இங்கு நெட்டித்தள்ளி நகராத நிலையை அடைந்துவிட்டது. நத்தைபோல் கூரைகளில் வழிகிறது.


நகரம் அல்லது கிராமத்தின் பிரதான பொருள் காலத்தின் பின்தொடர்தல்தான். அதுவே நிரந்தரமான வழமை. அந்த நிரந்தரத்தின் வன்முறை இப்படி முட்களாய், குகையில் சிக்கித் தவிப்பதாய், நத்தையாய் வழிவதாய் நகர்கிறது. நெட்டித் தள்ளி நகராத நிலையில் இருந்தாலும் இயந்திரத்தனத்தைத் தொடர்கிறது காலம்.


அந்த இரவின் முடிவில் முதலில் விழித்தது காகம். குழந்தையின் உறக்கம் அதன் ரோஜாப் பாதங்களில் இருப்பதை அது மறந்துவிட்டு கரைகிறது. காகம் மென்மை அறியாதது. குழந்தையின் மென்மை அதன் நினைவில் நிழலாடலாம். ஆனால் காலத்தின் சுமை அதை மறதியில் ஆழ்த்திவிடுகிறது. இரவின் முடிவு, சாமச் சேவலின் ஒலியில் உண்டாகிறது. அதுவும் ஓர் இசைக் கோர்வையாய். சேவலுக்குக் காலம் அழுத்தவில்லை. அதன் வழக்கம் ஒலிப்பது. ஒலித்தலை நயத்துடன் செய்வதைக் காலம் பொருட்படுத்தவில்லை.


ஏரிகள் உலர்ந்து விட்ட இரவின் பொழுது. விடியலில் பொய் முகம் காட்டுகின்றன ஏரிகள். ஒளியின் இரண்டாம் தஞ்சம் நீரின் பரப்பில் என்பதால் அவை பொய் முகம் காட்டி உலர்ந்து போயிருக்கின்றன. ஏரிகள் உலர்ந்து போன பின் நாரைகள் நாதியற்றுப் போயிருக்கின்றன. இரவில் தூங்காத நாரைகள் விடியலில் கால்நடைகள் தூக்கம் கலையக் காத்திருக்கின்றன. வெட்டுக்கிளிகள் பறக்கும் போதுதான் பகல் வரும். அதற்காகக் காலம் காத்திருக்கிறது. மனிதனுக்கு விடியும் போது தலை ஒட்டடை படிந்திருக்கிறது. உடனடியாக அன்பு அல்லது நேசம் எனும் பாவனை அவனுக்குத் தேவைப்படுகிறது. அது அவனுயை விரல்களோ வேறு யாருடைய விரல்களோ. அதனிடம் தஞ்சம் அடையவேண்டியதுதான் அவனுக்கு விதித்திருப்பது.


கிராமத்தில் விடியல் விரைவில் வந்து சேர்வதில்லை. அங்கு இருள் மூலைகள் எப்போதும் நிறைந்திருக்கின்றன. மின்மினிகளின் ஒளி அந்த மூலைகளில் தெறித்திருக்கும். காலம் எதை அழுத்திச் சொல்கிறது என்றால் வாழ்வதை. அதுவும் வாழ்வது போன்ற பிரமை தருவதை. அப்படிப்பட்ட நிலையில் காலம் அழிந்தால் கடல் அந்த இடத்தை நிரப்பிவிடும். அல்லது காலத்தை அழிக்க ஒரு பெரிய சக்தி தேவைப்படும். அது கடலிடம் இருக்கலாம். கவிதையின் நிரந்தர அறிதல் இந்த வரிகளில் சாத்தியப்படுகிறது.

காலம் அழியாமல் எல்லாவற்றையும் அழிப்பதில் கவனம் செலுத்துகிறது என்பதுதான் நிரந்தரமாக ஆகிவிடுகிறது. அப்படி காலம் அழியும் என்பதற்குப் பொருளாக அல்லது காலத்தின் அழிவை நிகழ்த்த ஒன்று நடந்திருக்கிறது. அது கடலின் பேரெழுச்சி. அது அழிவின் ஓர் வடிவம் போல் இருக்கிறது.. காலம் போல் கடல் அழித்திருக்ககிறது. காலத்தின் இடத்தை எடுத்துக் கொண்டது போல் கடல் பாவனை செய்திருக்கிறது.


II.கொடிக்கம்பியும் அலமாரியும் 

அம்மணமாய்ப் பார்த்து நிற்க 

வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல். 

நினைவின் சுவடாய்  உதட்டில் படிந்த கரிப்பும் 

காற்றில் கரைந்துவிட 

வந்ததோ எனச் சந்தேகம் கவியும். 

பெண்ணுடல்  பட்டுக் கசங்கிய ஆடைகள் 

மறந்த  மனதின் 

இருண்ட மூலைகளினின்று 

வெளிப்பட்டு 

உடல் தேடி  அலைவதால் 

எங்கும் துணியின் சரசரப்பு. 

அன்று பக்கவாட்டில்  நடந்து  வந்த மஞ்சள் நிலா 

தசைகளின் சுடரை 

நகல் எடுக்க முயன்று 

கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது. 

இறந்த நாள்களின் 

குளிர் நீளக் கைகள் 

நீண்டு வந்து 

மறதியைக் கொண்டு தூர்த்துவிட

கற்பனைக்கும்  சொந்தமில்லை 

கோலங்கள். 



கொடிக்கம்பி உடைகளின்றி இருக்கிறது. அலமாரியில் வைக்கவேண்டிய பொருள்களும் இல்லை. வீட்டுக்குள் வந்து விட்ட தடயம் வெளியில் இருக்கும் மணலை உதிர்த்ததில் மட்டுமே உணர்த்தப்படுகிறது. கடலின் கரையிலிருந்து எடுத்து வந்த மணலாக இருக்கலாம். அழித்து விட்ட கடலின் கரையிலிருந்து. கடலின் அழித்தல் போல், காலத்தின் அழித்தல் போல் ஏதோ ஓர் அழிவு நிகழ்ந்திருக்கிறது. அதைச் சொல்வதுதான் அந்த மணல் தடயம். கடலின் உப்புக் காற்று உதட்டில் கரித்தாலும் கடல் வந்து போனதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.


கடல் வந்தால் அழிவும் வந்திருக்கும். காலம் அழித்திருக்கும். காற்று எந்த நினைவையும் கரைத்துவிடும் என்ற வழிமுறையால் இந்தச் சந்தேகம் மேலும் வலுக்ககிறது. பெண்ணுடன் உறவில் இருந்த பிறகு காலம் முடிந்து போகிறது. தன் உடலைக் காலம் தொலைத்துவிடுகிறது. உடல் தேடி அலையும் போது உடைகளின் சரசரப்புதான் உடலாகத் தெரிகிறது.


காலம் இருள் மூலைகளில் சென்று சேராமல் மின்மினிகளை ஒளிர வைத்தது போல் மனதின் இருள் மூலைகளில் இன்னும் காலம் சென்று சேரவில்லை. உடல் என்னும் வெளிச்சம் எப்போது வேண்டுமானாலும் சாத்தியப்பட்டுவிடும். மஞ்சள் நிலா இன்னும் விடியா இரவின் இன்பத்தைக் கூட்டுகிறது. அது பெண்ணா நிலாவா என்று புரியாத நிலையில் அது தசையின் சுடரை நகல் எடுக்கிறது. மேலும் கோட்டுக் கோலங்களையும் செதுக்கியிருக்கிறது. இறந்த காலம் குளிர்ந்து போய்விட்டது. அதன் நீட்சி மறதியை தூர்த்துவிட்டது. இனி கற்பனைக்கும்கூட சொந்தமாக அந்தக் கோலங்கள் இருக்கப் போவதில்லை. இந்தக் கோலங்கள் அந்தப் பெண் வரைந்தவையாக இருக்கலாம்.


கவிதைக்குள் ஊடாடும் ஒரு பொருள், காலம்


முதல் பகுதியில் காலத்தின் சுழற்சி காட்டப்படுகிறது. இரண்டாவது பகுதியில் காலத்தினால் நிகழ்ந்த கோலம் காட்டப்படுகிறது. இரவு-பகல் என்ற எதிர்மைகளின் நிறைவும் குறைவும் கலந்து முதல் பகுதியில் நிலவ ஆண்-பெண் என்ற உறவின் ஊடாட்டம் இரண்டாம் பகுதியில் பரவுகிறது. முதல் பகுதியில் காலத்தை எதிர்கொள்ளும் உயிர்களின் நிதர்சனம் அறிவிக்கப்படுகிறது. இரண்டாம் பகுதியில் காலத்தின் விளைவு நிதர்சனமாகிறது.


காலம் முதல் பகுதியில் அழிக்கும் நினைவு, இரண்டாம் பகுதியில் ஓர்மையாகிறது. காலம் முதல் பகுதியில் நிரந்தரமான அறிதலைத் தர இரண்டாம் பகுதியில் நிரந்தரமின்மையின் அறிதலைத் தருகிறது. காலம் முதல் பகுதியில் விடியலில் தொடங்கி அழிவில் முடிகிறது. இரண்டாம் பகுதியில் உறவில் தொடங்கி பிரிவில் முடிகிறது. இரண்டு இணை கோடுகளாய்க் காலமும் காலம் சார்ந்த நிமித்தங்களும் கவிதைக்குள் சேர்கின்றன.


முதல் பகுதியில் காலம் வழக்கத்தின் ஒரு முறைமையைக் கூற இரண்டாம் பகுதியில் வழக்கமின்மையின் அடையாளமாகிறது. சின்னமாகிறது. முதல் பகுதியில் இயற்கையின் ஒரு நிகழ்வென காலம் கடந்து செல்ல இரண்டாம் பகுதியில் நிகழ்வுகள் காலத்தை உறையவைக்கின்றன. முதல் பகுதியில் காலம், பெண்ணாக உருவகம் கொள்ள இரண்டாம் பகுதியில் பெண் காலத்தை உருவகித்திருப்பதாகக் கவிதையில் வாசிக்க முடிகிறது.


காலம் எனும் புராணம்


காலம் என்பது கிரேக்கப் புராணப்படி  இந்த உலகத்தின் மீது ஆட்சி செலுத்தும் சக்தியாக கால தேவன் இருக்கிறான். இந்துப் புராணப்படி எல்லா ஆக்கத்திற்கும் அழிவுக்கும் காரணமானது காலம். இந்தக் கவிதையிலும் காலம் உயிர்களை உயிர்ப்பித்து இயங்க வைக்கிறது. காலம் இரவாகவும் பகலாகவும் மாறி மாறி ஒரு சக்கரத்தில் சுழல்வதன் சுமையை இங்கு கவிதையின் வர்ணிப்புச் சுட்டிச் செல்கிறது. மேலும் மறைமுகமாகக் காலத்தின் ஊடாகப் பயணிக்கும் மற்றொரு படிமம் கடல்.


கிரேக்கப் புராணத்தில் 'க்ரோனஸ்' எனப்படும் கடவுள் காலத்தைக் குறிப்பது போல் மற்றொரு பொருளில் உலகத்தை ஆளும் சக்தி படைத்தவனாக மாறுவதற்குத் தன் தந்தை யுரேனஸைக் கொன்று அவனது உறுப்பைக் கடலில் போட்டுவிடுவதைக் குறிக்கிறது. இந்த 'க்ரோனஸு'க்கும் அவனுடைய தங்கைக்கும் பிறக்கும் குழந்தைகளை 'க்ரோனஸ்' கொன்றுவிடுகிறான். இறுதியில் 'ஜீயஸ்' என்ற கடவுளால் கொல்லப்படுகிறான். இந்தப் புராணத்தில் வரும் கடல் என்ற பெரும்பேரெல்லை கவிதையில் மறைந்து மிகைக்கிறது. கடலில் போடப்பட்ட யுரேனஸின் உறுப்பிலிருந்து முளைக்கிறது 'அப்ரோடைட்' என்ற பெண் கடவுள். அதுவே காதலின், எழிலின் கடவுளாக விளங்குகிறது. ஆண்-பெண் உறவின் மயக்கமாய் கவிதைக்குள் பேசப்படுவதும் இந்த கிரேக்கப் புராணத்தின் விளைபொருளாக இருக்கலாம்.



இந்து புராணப்படி காலம் மறுஉற்பத்தியின் கண்ணியாக இருக்கிறது. தொடர்ந்து நிகழும் செயலுக்கான ஊக்க சக்தியாக இருப்பது காலம். மேலும் இந்து புராணப்படி காலத்தை நல்லது/அல்லது என்ற பிளவில் வைத்துப் பார்க்கும் பார்வையும் உள்ளது. இந்தக் கவிதையில் முள், நத்தை, காகம் என்ற குறியீடுகளின் வழியாகவும் தவிப்பு, கரைதல், நகர்தல் என்ற செயல்பாடுகளின் வழியாகவும் காலம் என்ற பரந்த குறித்தலாக்கம் நடைபெறுகிறது.


காலத்தின் கரும பலனாக விளைவதை உறவின் சேர்க்கையாகவும் பிரிவாகவும் காட்டுகிறது இந்தக் கவிதை. இந்த வாழ்தலைத்தான் பிரமை என்கிறது. காலம் நிற்கும் போது பிரமையும் முடிந்துவிடுகிறது. காலம் அழிதல் என்பது இறந்த காலம் ஆகுதல் மட்டும் அல்ல. காலம் நின்றுபோதல் அல்லது காலம் முற்றாதல் என்பதும்தான். காலம் நினைவாக முற்றிவிடுகிறது. காலத்தின் இயக்கம் நினைவின் சேகரமாகப் பெருகிவிடுவதையும் காலத்தின் நிரந்தரமாக அறியச் செய்கிறது இந்தக் கவிதை.


உதவிய நூல்கள்


1.Encylopedia Brittanica-Hinduism-Myths of Time and Eternity

2.The Postmodern Magus:Myth and Poetics-James Merrill, 2008


பிரேம் பிரேம்

https://www.facebook.com/profile.php?id=100005110006875&fref=nf


கவிதை: அறியப்படாத நிரந்தரமா? நிரந்தரம் அற்ற அறிதலா?

2000-2002 காலகட்டத்தில் பிரம்மராஜனுடன் பதிவு செய்யப்பட்ட எனது உரையாடல் பன்முகம் இதழிலும் பிறகு தொகுப்பிலும் வெளிவந்தது. உரையாடலின் அறிமுகமும் அதில் உள்ள இரு பத்திகளும்.

இறுதிப் பத்தி இன்றைக்கான மருந்து.

**

"அறிந்த நிரந்தரம் கவிதைத் தொகுதி மூலம் தமிழ்க் கவிதைக்கு அறிமுகமான பிரம்மராஜனின் ஐந்தாவது தொகுதியாக மஹா வாக்கியம் வெளிவந்தது. ஒரு கவிஞராக இருப்பதுடன் பத்திரிகை ஆசிரியராக மொழிபெயர்ப்பாளராக, கட்டுரையாளராக, தொகுப்பாளராக செயல்படும் இவரின் இலக்கியம் பற்றிய பார்வைகள் விமர்சனங்களின் மூலம் பதிவாகிறது. 1983-91 காலகட்டத்தில் வெளியான மீட்சி 35 இதழ்கள் வரை வந்திருக்கிறது. சிறுபத்திரிகை என்ற தளத்தையும் மீறி இலக்கிய வாசிப்புக்கு தேர்ந்தெடுத்த பங்களிப்பை செய்திருக்கிறது இது. இலக்கிய இயக்கங்கள், கோட்பாடுகள், இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஒரு அறிமுகத் தளத்தை மீட்சி அமைத்துக் கொடுத்ததற்கு பிரம்மராஜனின் இலக்கியத் தோ்வுகளே காரணமாக அமைந்திருப்பதை தற்போதைய அவரது எழுத்துக்கள் மூலம் அறிய முடியும். கலைந்துபட்ட பிரக்ஞைகளின் படிமங்களும், இடைவெளியுடைய நினைவுகளின் குறியீடுகளும் பிணைந்த ஒரு மொழி இவரது கவிதையாக மாறுகிறது. மையப்படுத்தப்படாத மொழி மற்றும் நிகழ்நிலை இரண்டையும் கவனப்படுத்தும் பிரம்மராஜனின் கவிதைகள் இடையீட்டு பிரதிக்குறிப்புகளை வெளிப்படையாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு சா்வதேச மொழிவலை சார்ந்த கவித்துவ மனோநிலையை கவனப்படுத்துகின்றன. இவருடனான உரையாடல் இவரது எழுத்துக்களை பல்வேறு பின்புலங்களில் விளங்கிக் கொள்ளவும், எழுத்துருவாக்கம் பற்றிய சில கூறுகளை பதிவு செய்யவுமாக அமைந்திருக்கிறது."

**

பிரேம் : வலி உணரும் மனிதா்கள், அறிந்த நிரந்தரம் இரு கவிதைத் தொகுதிகள் தொடங்கி வைத்த ஒரு வடிவ முயற்சி உங்களுடைய புராதன இதயம் தொகுப்பில் திடமாக வெளிப்பட்டது. புராதன இதயத்திற்கு பிறகு பிரம்மராஜன் கவிதைக்கான ஒரு நிலவரைபடம் அல்லது மொழி வரைபடம் கிடைக்கிறது என்று சொல்லலாம். இதில் ஒரு கவிதைத் தொழில்நுட்பம் பதிவாகி இருக்கிறது. உங்கள் கவிதைகளில் பொருள் என்பதை சூழலில் உள்ள பருண்மை என்பதை குறியீடுகளாக எடுத்து அவற்றை defamiliarize செய்வது அவற்றின் வரிசை முறையை, வைப்பு முறையை அல்லது தளத்தை மாற்றுவதன் மூலமாக நூதன நிலைக்கு ஒரு நிநோத நிலைக்குக் கொண்டு செல்வது என்பது ஒரு நிலை, நவீன ஓவியத்தில் பயன்படும் நிறங்கள், விளிம்புகள், கோடுகள், முரண் வண்ணங்கள், நிழல் வண்ணங்கள் போன்றவற்றிற்கு இணையாக மொழியைப் பயன்படுத்துவது, இந்த ஓவியக் கூறுகளை கவிதைக்குள் கொண்டுவருவது. இரண்டாவது நிலை, சில கவிதைகளில் தென்படுவது பெரிய பின்புலத்தில் கவிதையை உருவாக்கி அதன் பின்புலத்தை நீக்கிவிடுவதன் மூலம் உருவாகும் வெற்றிடமான முரண். இதில் கவிதைக்கான Theatricality கற்பனைப் பரப்பில் மறைத்து வைக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த பின்புதான் கவிதை அசையத் தொடங்கும்; இதுவும் உங்கள் கவிதை வடிவத்தின் ஒரு முக்கியப் பகுதி. அடுத்தது இசையின் தன்மை – நவீன இசையின் தன்மை – பல முரண்பட்ட ஓசைகளை ஒரு ஒழுங்கிற்குள் பன்மைத்தன்மையும் வித்தியாசங்களும் குறையாமலேயெ பொருத்துவது harmony இல் அமைவது போல உங்கள் கவிதைகளை விளக்க பயன்படுத்தலாம். இயற்கை மற்றும் இயற்கைச் கூழல் சார்ந்த ஒரு வரைபடம் உங்கள் கவிதைகளில் இருப்பது போலவே உயா்தொழில் நுட்பத்தின் இடையுடுகளும் உள்ளன. இவற்றினூடான ஒரு சோகம் தொடர்ந்து இணைப்பை உருவாக்குகிறது. சில காட்சிப்படுத்தல்களில்கூட இது ஊடாடி வருகிறது. இந்த இணைப்பாக்கம், Composition என்பதை எந்த விளைவுகளை ஏற்படுத்த நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். இவற்றை பிரக்ஞை புர்வமாகவே தொடக்கத்திலிருந்து செய்து வருகிறீர்களா?

*

பிரம்மராஜன் : சுற்றுச்கூழல், இயற்கை ஒழுங்கு என்பது எனக்குள் ஒரு உணா்வாகத்தான் முதலில் இருந்தது. என்னை அறியாமல் அதன் முக்கியத்துவத்தை நான் உணா்ந்துகொண்டே இருந்தேன். என் ஊரின் சூழல்தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. முன்பு அது தூய்மையான சுத்தமான அழகான கிராமமாக இருந்தது. அதன் தெருக்கள் அவை இணையும் இடத்தில் இருந்த கோயில். ஊரில் இருந்த குளம் அதைச் சுற்றி இருந்த எட்டி மரங்கள். இந்த இயற்கை அழகின் ஒரு பகுதியான அதன் மௌனம் நிசப்தம். இதிலிருந்து பிறக்கும் ஒரு இசை, இவை எனக்கு முக்கியமானவை. இசை எந்த ஒரு துயரமான நம்பிக்கையற்ற சூழலையும் வேறொரு அா்த்தத்திற்கு மாற்றிவிடுகிறது. எனக்கு என் கிராமத்தின் இன்றைய நிலையும் ஞாபகத்திற்கு வருகிறது. அவ்வளவு சீரழிவும் ஏற்பட்டுவிட்டது. சுற்றுச்சூழல் என்பதை ஒரு கோட்பாடாக இயக்கமாக நான் புரிந்துகொள்வதற்கு முன்பே எனக்குள் அது ஒரு உணா்வாக இருந்தது. அதே சமயம் அதனுடன் முரண்படக்கூடிய டெக்னாலஜி என்பதையும் ஒரு அழகியல் உணா்வோடு நான் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் தொடங்கினேன். அதைப்பற்றிய விமா்சனத்துடன் எனது கவிதைகளிலும் கொண்டு வந்திருக்கிறேன். தூண்மையான சுற்றுச்சூழல் அதன் மூலம் உருவாகும் மௌனம் அதிலிருந்து உருவாகும் இசை இவற்றை உருவாக்க மேலும் புரிந்து கொள்ள உதவும் உயர் விஞ்ஞானம் என்ற அளவில் harmony என்பதை structural ஆக எனது கவிதைகளில் நான் பயன்படுத்தி இருக்கிறேன். இசை பலவித முரண்பட்ட பகுதிகளை ஒருங்கிணைப்பது போல எனது கவிதைகளில் இவற்றின் முரண் தன்மைகளை ஒருங்கிணைக்கும் தன்மை உண்டு.

***

(“கண்டவரும் எழுதிக்குவிக்கும் காலம் இது, இலக்கியம் நாசமாகிவிட்டது. இணையம், வலைதளம் வழி எழுத்துகள் நச்சாகிவிட்டன, எழுதப்படுகின்றவை எல்லாம் இலக்கியமாகிவிடாது” என்ற ஒரே புலம்பலை பல வடிவங்களில் கேட்டு வருகிறோம். இது பாசிசத் திமிரின் பாசாங்கு கொண்ட ஒரு அக்கறை. புனிதவாதத்தின் இடம் மறுக்கும் தந்திரம். அனைவருமே எழுதவும், பேசவும் எதிர்ப்பேசவுமான உலகத்தை உருவாக்கத்தான் நவீன அரசியல் புரட்சிகள் மட்டுமல்ல இலக்கியப் புரட்சிகளும் நிகழ்ந்தன. காலத்தை வெல்லும் காவியங்களின் காலம் முற்று பெற்றது, இனி காலம் தோறும் உருவாகும் இலக்கியமே அக்காலத்திற்கான எழுத்துகள். பெருகும் எழுத்துகள் புனிதவாதத்தை உடைத்துப் பாயகின்றவை. எழுத அறியாத மனங்கள், எழுத்தைப் புனிதப்படுத்தும் சமூகங்கள் இரண்டு மூன்று திருஉருவங்களைச் சுமந்து நசுங்கிப் போகும். குற்றாலம் பதிவுகள் இலக்கியச் சந்திப்புகளின் போது (1989 -1993 ?) நான் விடுத்த அழைப்பு இதுதான்: வடிவங்கள் பெருகட்டும், ஒற்றைக் கதைகளில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் கதை சொல்லத் தொடங்குங்கள்... கவிதைகளும் கூட...உமக்குப் பிடிக்காதவை என்றாலும் உமது காலத்தின் எழுத்துகள் இவை.)