தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, November 28, 2018

லங்காபுரி ராஜா - பிரமிள் :: மகுடம் இதழ் - 10

லங்காபுரி ராஜா - பிரமிள் :: மகுடம் இதழ் - 10

இரவு பனிரெண்டுக்கு மேலாகிவிட்ட அந்த அகாலத்தில் கோபால கிருஷ்ணன் விழிப்படைந்து விட்டான். மணி 12 - 49.

பெட்ரூம் லைட் வெளிச்சத்தில் 1984 இறந்து 1985 பிறந்து விட்டதை அந்த எலெக்ட்ரானிக் சுவர்க் கடிகாரம் கொள்ளிக் காந்தியுடன் பிரகடனம் செய்தது. 12க்கும் 49க்கும் நடுவே இருந்த மேல் கீழ் புள்ளிகள் இரண்டு ரத்தத் துளிகளாக மறைந்து தோன்றித் துடித்தன.

பத்மினியும் அபிராமனும், குழந்தை அபிராமன் ஐந்து வயது தாண்டுவதற்குள்ளேயே பத்மினி இரண்டாவது கர்ப்பம் சிதைந்து மறைந்து விட்டாள். இது நடந்து பதின்மூன்று வருடங்களாகிவிட்டன. அபிராமனும் மறைந்து விட்டான். ஆனால் மரணத்தினுள் அல்ல. அப்படி மறைந்திருந்தால் ஞாபகம் மட்டும் அவ்வப்போது தோன்றி பத்மினிக்காக விசும்புவது போல் விசும்பிவிட்டு அடங்கி விடும். இப்போது குவிந்திருக்கும் பிரைவேட் நில அளவைகளில் மூழ்கித் தன்னை மறந்திருப்பான், அரசாங்கத்திலிருந்து ரிடையரான சர்வேயர் கோபால கிருஷ்ணன்.

பதினேழு வயது ஆகி இராத பருவத்தில் இப்போது கண் காணாமல் போய்விட்ட அபிராமனின் மறைவு, அவனது குழந்தைப் பருவத்திலேயே ஒரு தடவை கோபாலுக்கும் பத்மினிக்கும் சகுனம் காட்டி இருக்கிறது.

அது நடந்தது சிங்களக் காட்டுப் பிரதேசமான லங்காபுரியில் நேற்று நடந்தது போன்ற வீர்யத்துடன் அந்த ஞாபகம் மோதி வந்தது. அப்போது சர்வே டெண்ட் வாசலில் கிராமத்துச் சிங்களக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த அபி , தன்னை ராஜா என்று சொல்லிக் கொண்டான். லங்காபுரியின் ராஜா, அந்த வனப்பிராந்தியத்தை ஆள்கிற ஓர் அபூர்வமான யானைதான் என்பது கிராமவாசிகளின் பரம்பரை நம்பிக்கை. கரும்புத் தோட்டங்களைக் கொண்ட கிராமம் அது. கரும்பினால் இழுக்கப்பட்டு வரும் யானைகள் எதுவும் கிராமவாசிகளின் மிரட்டல் டெக்னிக்கைத் தாக்குப் பிடித்து நிற்காது. லங்காபுரி ராஜாவின் விஷயம் வேறு. அது நிலை கலங்கியதில்லை . தொடுவானத்தில் உதித்தெழுந்து, அசையாமல் நிற்கிற பர்வதம் போல் அது கரும்பு வனத்தை மீறி எழுந்து தோன்றி நிற்கும். ஒரு லாரி அளவு கரும்புக்கு மேல் அது தின்றதுமில்லை அடிக்கடி கரும்பு வனத்தில் தோன்றுவதுமில்லை.

ஒரு சம்பிரதாயத்துக்காக, அல்லது உண்மையில் இது ராஜாதானா என்று பரீட்சிப்பதுக்காக, இந்தச் சமயத்தில் அதிர்வேட்டு விடுவார்கள் கிராமவாசிகள். வேட்டு சத்தத்தைக் கேட்டு எந்தக் கொம்பன் யானையாக இருந்தாலும் வாலைக் காட்டிக் கொண்டு திமுதிமுவென்று ஒரே ஓட்டமாக ஓடிவிடும். ராஜா என்றால், அதன் பிரமாண்டமான நீண்டு வளைந்த தந்தங்கள் வெடி வந்த திசையை நோக்க ஒரு விசாரணைக் குறிப்போடு திரும்பும். கிராமத்தார்கள் கண்டு கொள்வார்கள். பிறகு ராஜாவை பய பக்தியுடன் தரிசிக்க வந்து நிற்கும் கும்பலாகி விடுவார்கள். இவ்வளவுக்கும் அவர்கள் அதனைப் புகை உருவமாக வெகு தூரத்தில் கண்டதுமே இது ராஜாதான் என்று அடையாளம் கண்டு விடுகிற மக்கள். அதிர்வேட்டு ஒருவகையில், இந்த யானையைப் பொறுத்த அளவில், கிராமத்தையும் யானையையும் பிணைப்பதுக்கான அனுஷ்டானம் என்று தான் சொல்ல வேண்டும்.

ராஜாவை, குழந்தை அபிக்கு மூன்று தடவை பத்மினி காட்டி இருக்கிறாள். சில விசித்திர மனோ நிலைகளில் அபி இருக்கும்போது, ராஜா என்றுதான் அவன் அழைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கைக்கு அகப்பட்டவை எடுத்து வீசப்படும். இப்போது அபியைப் பிடித்த மனோ நிலை ஏறத்தாழ இதுதான். ஆனால் இது கிராமத்தையே கலக்கி விட்டது. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அபி , அரைநிஜாருடன் தப்தப் என்று நடந்து, கோபாலகிருஷ்ணனின் பார்வையிலிருந்து மறைந்து விட்டான்.

''அபி எங்கே? என்று அவன் கேட்டபோது, "ராஜா காடேறி விட்டான்." என்றன குழந்தைகள்.

குழந்தைகள் இதைச் சொன்ன முதிர்ந்த தோரணையில் தானோ என்னமோ கோபால் திடுக்கிட்டான். டெண்டை விட்டு வெளியே வந்தபோது குழந்தையைக் காணோம். மற்ற குழந்தைகள் காட்டிய திசையில் தெருவைக் கடந்து, "அபி அபி'' என்று குரல் கொடுத்தான். தெருவின் மறுபுறத்தில் திடீரென, புதர் அடர்ந்த காடு ஆரம்பித்து விடுகிறது. கோபாலின் குரலில் கூட்டம் கூடி நாலு புறமும் புதர்களுக்குள் ஆண்களும் பெண்களுமாகக் குழந்தையைத் தேடினார்கள். பத்மினி பேயறைந்தவளைப் போல் வந்து தெருவில் நின்று கொண்டிருந்தாள். கிராமத்துத் தலைமைக் கிழவர் சார்ளிஸ் உடவத்த, "ஒருவரும் கூச்சல் போடாதீங்க." என்று சப்தத்தை அடக்கினார். தமது குரம் மட்டும் ஒலிக்கும் அளவு நிசப்தம் தோன்றியதும், "ராஜா" என்று சுபாவமான குரலில் கூப்பிட்டார். உடனே அபியின் கீச்சுக்குரல், யானைப் பிளிறலின் ஒலியை எழுப்பிய பதில் கேட்டது. அபி , கரும்பு வனத்தை நோக்கிப் போகும் பாதை ஓரத்தில் பாதத்தில் குத்தியிருந்த முள்ளை அழாமல் உட்கார்ந்திருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தான்.

இது நடந்து பனிரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் அபி மறைந்து விட்டான். ஸ்கூல் பைனல் பாஸான செய்தியை அறிந்து கொள்ளக்கூட அவன் தனது நண்பர்களையோ ஹைஸ்கூலையோ தொடர்பு கொள்ளவில்லை. அடிக்கடி தந்தைக்கும் மகனுக்குமிடையே தலைகாட்டும் இலங்கை அரசியல் பிரச்சினைதான் அவன் மறைந்த திசையைக் காட்டியது. சிங்கள ராணுவ மூர்க்கத்திலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதமுனை மூலம் மட்டும்தான் விடுதலை கிடைக்கும் என்ற அபிராமனின் பார்வை முரட்டுக் குழந்தைப் பார்வையாகவே கோபாலுக்குத் தோன்றிற்று. அபி , சிங்களக் காட்டுக் கிராமமான லங்காபுரியைக்கூட இப்போது மறந்துவிட்டான். தாய் கொழும்பில் இறந்ததைத் தொடர்ந்து சொந்த ஊரான திருக்கோணமலைக்குத் தந்தை மாற்றலாகிவிட்ட பிறகு, அவ்வப்போது அவன் நினைவில் எழுந்த "லங்காபுரி ராஜா" இப்போது அபியின் பிரக்ஞையில் இல்லை. குழந்தைப் பருவத்தின் அந்த ஞாபகம் அபியின் மனசில் ராஜாவைப் பார்த்த அபூர்வ அனுபவமாகப் பதின்மூன்று வயதுவரை பதிந்திருந்தது. பதின்மூன்று வயது சமயத்தில் ஒரு நாள் தந்தையிடம் அபி தனது தாய் இறந்த விதத்தைப் பற்றிக் கேட்டான். அபார்ஷன் விஷயத்தை அபி நம்பவில்லை. ''லங்காபுரி கிராமத்தில் 
அம்மா கொலை செய்யப்பட்டிருக்கிறாள்."

அபியின் இந்த வாசகத்தில் நிலை தடுமாறிய கோபால், பத்மினியின் மரண சர்டிபிகேட் அடங்கிய பைலை உருவி மகனின் முன்னால் விட்டெறிந்து, ''பாரடா உன் கண்ணாலேயே.'' என்று கத்தினான்.

எத்தனை தாய்மார்கள், பெண்கள் கேவலப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் - என்ற பொருளில் அபி தொடுத்த அடுத்த அஸ்திரத்துக்கு கோபாலினால் பதில் தர முடியவில்லை. பதின்மூன்று வயதுப் பிஞ்சு உள்ளம், பழுக்கும் முன்பே இறுகிக் கல்லாகி விட்டிருக்கிறது. கோபால் மகனை ஏறெடுத்துப் பார்த்தான். கிழக்கு மாகாணத்து ஸ்கூல்களினுள்ளேயே ஒரு ஸ்டாராகிக் கொண்டிருந்த புட்பால் வீரன் அபிராமனுக்கு, பதின்மூன்று வயதிலேயே உடல் பதினேழு வயது வளர்ச்சி காட்டியது. புருவங்கள் அடிக்கடி கண்களின் குழந்தைமையினை முதிரவைக்கும் அந்தரங்க அவஸ்தையில் சுருங்கின. ரத்தினபுரியில் சிங்கள வெறியர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்தான் அபியின் மிக நெருங்கிய பள்ளித் தோழன்... சந்திரசேகரனின் பிஞ்சு மனம் கண்ணெதிரிலேயே தாய் குதறப்பட்டபோது, கனியுமுன் கல்லாகிவிட்ட ஒன்று. அபியின் உள்ளத்திலும் இந்த கல் தன்மை பரவி இருக்க வேண்டும்.

பதின்மூன்று வயதிலேயே அபி ஏதோ ரகசிய சரீரப் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகக் கோபாலுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. அபியின் கண்களில் பதினாறு வயதுக்குள் ஒரு தொலைதூரப் பார்வை வளர்ந்து வருவதைக்

கோபால் கிலேசத்துடன் கவனித்தான். எப்போதோ, திடீரென குழந்தை அபி வாலிபனாகி விட்டிருந்தாலும் இந்தத் தொலைதூரப் பார்வையை கோபாலினால் ஆழம் காண முடியவில்லை . ஏதோ அவசரத்தில் உடலின் குணத்தையே முடுக்கினாற்போல அபி ஒரு முழு மனித உயரத்துக்குப் பதினாறு வயதிலேயே வளர்ந்து விட்டான். ஒருநாள் ஸ்டேடியம் வரை போய் வருவதாகச் சொல்லி விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு போன அபி திரும்பவில்லை.

பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதிலக்கே, அபியின் உடைமைகளைத் தடயத்துக்காகப் பரிசோதித்துவிட்டுக் கோபாலிடம், "கோபித்துக் கொள்ளாதீர்கள் சர்வேயர் - உங்கள் குழந்தை ஏதாவது ஆக்ஸிடென்டில் எங்காவது மாட்டியிருந்தால் மட்டும் நாங்கள் சந்தோஷமாக உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்." என்றபடி அபியின் தலையணைக்குள்ளிருந்து உருவிய சில புத்தகங்களைக் கோபாலின் முன்னால் போட்டார். அமில்கர் கப்ரால், பிரான்ஸ் பனன், நெல்ஸன் மண்டேலா - யார் இந்த எழுத்தாளர்கள்?

"நான் புத்தகப்பூச்சி அல்ல" என்றார் இன்ஸ்பெக்டர். "ஆனால் சில விஷயங்களைப் பற்றித் தகவல் தெரியும். இவர்கள் எழுத்தாளர்கள் அல்ல. ஆயுதப் புரட்சிக்காரர்கள். எங்கள் தகவலின்படி பயங்கரவாதிகள். மூவருமே ஆபிரிக்கர்கள்"

கோபால் நிமிரவில்லை. கண்கள் திடீரென எரிந்தன. கல்ராலின் தெளிவான சிரிப்பன் மீது அவனது கண்ணீர்த்துளி வீழ்ந்து, புத்தக அட்டை நனைந்தது.

முதலில் தனியாக அதுவும் மப்டியில் திடீர் திடீரென சினேக பாவத்துடன் வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜெயதிலக்கே போகப் போகப் பொறுமை இழக்க ஆரம்பித்த குறிகள் தெரிந்தன. தன் குழந்தையைத் தேடிப் பிடித்து ஒப்படைக்க வேண்டிய போலீஸ் தன்னிடம், உன் குழந்தை இப்போது எந்த மறைவிடத்தில் இருக்கிறான் என்று கேட்காமல் கேட்கும் அறிகுறி ஆரம்பித்தது.

இரண்டொரு தடவை அகாலத்திலேயே, அதுவும் யூனிபாரத்துடன் உருவிய ரிவால்வரும் கையுமாகத் திடீர் விஜயம் செய்திருக்கிறார் ஜெயதிலக்கே. அவருக்குப் பின்னால் ஜீப் - ஆயுதம் தாங்கிய போலீஸ். "அபிராமன் எங்களைப் பொறுத்தவரை குழந்தையல்ல சர்வேயர். சார்லஸ் அன்டனி என்ற சீலனிடம் இங்கே திருக்கோணமலையில் நேரடியாகப் பயிற்சி பெற்ற முதல் வரிசைப் பயங்கரவாதி. இங்கே உங்களைத் தேடி அவன் மரணகாயம் பட்டால் மட்டும் தான் வருவான். திரியாய் போலீஸிக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது. எதற்கும் இங்கே செக் பண்ணலாம் என்று வந்தோம்..."

கோபால் ஒதுங்கி நின்றான். போலீஸ் போன பிறகு வீட்டைச் சீர்படுத்த கோபாலுக்கு இரண்டு நாட்கள் பிடித்தன.


ப்போது கதவு இந்த அகாலத்தில் தட்டப்பட்ட போது, இன்ஸ்பெக்டரின் விஜயம்தான் மீண்டும் நினைவுக்கு வந்தது. ஆனால் தட்டும் சப்தத்தில் ஒரு வேறுபாடு, ஒருவித திருட்டுத் தட்டல் அது. கோபாலுக்கு இது முதலில் தூக்கத்தினூடே கேட்டுத்தான் விழித்தான். விழித்த பிறகு ஏன் விழித்தோம் என்பது மறந்து விட்டது. ஆனால் மீண்டும் கதவு தட்டப்பட்ட போது தன்னை விழிக்க வைத்ததே இது தான் என்று புரிந்துவிட்டது. மணி 12.49

அபியாக இருக்கக்கூடாது, அல்ல அபியாக இருக்க வேண்டும். மரணக்காயம் பட்டால் மட்டும்தான் வருவான். மனமும் உடலும் பதறி எழுந்த கோபால், லைட்டைப் போடாமல், முன் கதவைத் திறந்தான். அபி அல்ல என்றதில் ஒரு ஆழ்ந்த வேதனையும் அதே சமயத்தில் நிம்மதியும் பிறந்தன. இது யார்?

இருளினுள் சற்றே உயரக் குறைவான ஒரு உருவத்தின் தீவிரமான கண்கள் மட்டுந்தான் கோபாலுக்குத் தெரிந்தன.

"யார்? என்ன வேணும்,'' என்று தமிழில் கோபால் கேட்டவுடனேயே உருவம் விசித்திரமாகச் சிரித்தது.

"அதே கோபால் மஹாத்மியா, அதே குரல். உங்களுக்கு என் புது வருட வாழ்த்துக்கள்”.

கோபால் லைட்டைப் போட்டான். அங்கே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார், லங்காபுரிக் கிராமத்தின் தலைமைக் கிழவரான சார்ளிஸ் உடவத்த. பன்னிரண்டு, பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு லங்காபுரியின் திவலை ஒன்றை கோபால் மீண்டும் சந்திக்கிறான், "உள்ளே வாங்க''

உடவத்த கோபாலை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "அபிராம ராஜா எங்கே?' என்றார். கோபால் ''முதலில் சிரம் பரிகாரம் செய்யுங்கள். இங்கே எங்கே வந்தீர்கள்? சேருவாவிலைக்கா?'

"அதற்கும் தான். ஆனால் எனக்கு இந்த சேருவாவில் ஒரு பெரிய ஸ்தலமல்ல. இதெல்லாம் தமிழனுடைய இடத்தை சிங்களவன் பிடிக்கிற தந்திரம். நான் புத்தகயாவுக்குப் போய் வந்தவன்." என்றார் உடவத்த, சிங்களத்தையும் தமிழையும் கலந்து, பிறகு தமிழிலேயே, "உங்களையும் அபியையும் பார்க்கிறதுக்குத்தான் முக்கியமாக நான் வந்ததது. அவன் எங்கே?' என்றார். கோபால் அவரை உட்கார உபசரித்து, அந்த வேளையினுள் தன்னைச் சுதாரித்து, "அபியை படிக்கிறதுக்கு மெட்ராஸ் அனுப்பி விட்டேன்." என்றான்.

"நல்ல வேலை செய்தீர்கள். இங்கே ஸ்ரீலங்கா தூள் தூளாகிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அவனோடு போயிருந்திருக்கலாம். இதெல்லாம் நடக்கப் போவது

எனக்கு முந்தியே தெரியும்" என்றவர் கோபாலைக் குறிப்பாகப் பார்த்தார், "லங்காபுரிராஜா விஷயம் தெரியுமல்லவா? அதில் தான் எல்லா சகுனமும் அடங்கியிருந்திருக்கிறது."

"ஒன்றும் புரியவில்லை " என்றான் கோபால், "இந்த வருஷப் பிறப்பு, இதற்கு முந்தியது, இரண்டுக்குமே ஊரடங்குச் சட்டம்" "பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே இங்கே வந்தீர்களா? விலாசம் எப்படிக் கிடைத்தது.'' ''உங்களிடம் முந்தி வேலை செய்தானே பியதாஸ். அவன் இப்போது என் மருமகன் . நாளனியை லவ் பண்ணிக் கல்யாணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நாளனி குழந்தைக்கு பத்மினி என்று பெயர் வைத்திருக்கிறாள். விலாசம் எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களே! சார்ளிஸ் உடவத்த, கோபால் பரிமாறிய பிஸ்கட்டைக் கடித்தார். "உலகம் அழியட்டும். ஆனால் நீங்களும் நானும் ஒருவரையொருவர் தொட்டுக் கொண்டு லங்காபுரி ராஜாவின் முன்னால் நின்றிருக்கிறோம். உங்களுக்கு ராஜா மகாபரிநிர்வாணமானது தெரியாதா? சாதாரண பாஷையில் சொன்னால், லங்காபுரி ராஜா என்ற யானை செத்துப் போய்விட்டது என்பது தான் செய்தி. ஆனால் புத்த பிரானுக்கும் அவரைப் போன்று அர்ஹத் நிலை அமைந்தவர்களுக்கும் தான் மரணம் மகாபரிநிர்வாணமாகும்.”

கோபால் கையில் எடுத்த பானத்தை மேஜையில் வைத்தான். "அவ்வளவு வயதா ராஜாவுக்கு?' "வயதா அந்த யானை இன்னும் ஐநூறு வருஷம் இருக்கும். அவ்வளவு உக்கிரமான பலம் அதுக்கு. நாலைந்து நாட்களாக, தூங்காமல் ஒரு கானகமளவுக்கு நூறு இருநூறு மரங்களை அது பிடுங்கி எறிந்து விட்டுத்தான் மறைந்திருக்கிறது.''

"ஏன் அதற்கு ஏதும் பைத்தியம் பிடித்திருந்ததா? சார்ளிஸ் உடவந்த ஒரு கணம் கோபாலைக் கோபத்துடன் பார்த்து விட்டு உடனே வாய்விட்டுச் சிரித்தார். "மஹாத்மியா, நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அது யானை அல்ல. மனிதனைவிடப் பெரிய மனிதன். அதற்கு எப்படிப் பைத்தியம் பிடிக்கும்? நடந்ததைக் கேளுங்கள். அப்போதுதான் ஸ்ரீலங்கா இன்றைக்கு ஏன் இப்படித் தூள் தூளாகிக் கொண்டிருக்கிறது என்று புரியும்.''

சார்ளிஸ் உடவத்த நிறுத்தித் தொடர்ந்தார். "இப்போது தமிழர்கள் மேல் சிங்கள ராணுவத்தை அவிழ்த்து விட்டிருக்கிறானே லலித் அதுலத் முதலி? அவனுடைய ஒன்று விட்ட அண்ணா சிரில் திஸ்ஸ் நாயக்க. இந்தச் சிரில், யானைகளைப் பிடிக்கும் அரசாங்கக் காண்டிராக்ட் ஒன்றை வாங்கி கொண்டு லங்காபுரிக் கிராமத்துக்கு வந்து கூடாரம் போட்டான். இதெல்லாம் நியூஸில் வரவில்லை ."

"நாங்கள் கிராமத்தார்கள் சிரிலிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் - இங்கே யானை பிடிக்காதீர்கள். ராஜா அதை அனுமதிக்க மாட்டான் என்று சொல்ல வேண்டிய மாதிரி எல்லாம் சொன்னோம். கிராமத்தில் பாதிப் பேர் ஊரைவிட்டே குடிபோகத்துவங்கி விட்டார்கள்.

''சிரில் திஸ்ஸநாயக்க அசைந்து கொடுக் கவில்லை. ஒரு தடவை மேஜைக்கு அடியிலிருந்து பெரிய ரைபிள் ஒன்றை எடுத்து எனக்கு குறிவைத்து 'இடத்தைக் காலி பண்ணடா கிழவா' என்று மரியாதை இல்லாமல் கத்தினான். "சீ, மனிதனாடா நீ," என்று நான் பதிலுக்குக் கத்திவிட்டு நாளனியிடமும் பியதாஸவிடமும் போய் அவர்களைக் கொழும்புக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். ஆனால் நான் மட்டும் போகவில்லை. என்னை போல சிலர் லங்காபுரியிலேயே இருந்து விட்டோம்.

இதற்குள் யானை பிடிக்கிறவர்கள் ஆயிரக்கணக்கில் ரூபாய் போட்டு, பிரம்மாண்ட மரங்களை மெஷினால் வெட்டினார்கள். பிறகு காட்டுக்குள் மரங்களை வளைவான வரிசைகளில் நட்டு யானைகள் உள்ளே போனால் வெளியே வர முடியாதபடி கூடுகளை உண்டாக்கினார்கள். எங்களால் என்ன செய்ய முடியும்? லங்காபுரிக் கிராமத்தவர்களிடம் யானை பிடித்திறவர்களின் ஆதிக்கம் வேறு. ராஜாவைப் பற்றி நாங்கள் சொன்ன போது, கரும்புத் தோட்டங்களை வெட்டியாக நின்று தின்று விட்டுப் போகும் மிருகம் தானே, அதைப் பிடித்து விடுவோம், பிறகு நீங்கள் ஒரு கவலையும் இல்லாமல் கரும்புப் பயிர் போடலாம் என்றார்கள் சிரிலின் ரைபிள் எப்பேர்ப்பட்டது என்று புளுகினார்கள்.

"தட்டு வாத்தியங்கள் ஒரு மாசத்துக்குள்ளேயே ஒலிக்க ஆரம்பித்து விட்டன. யானைக் கூட்டத்தை மோப்பம் பிடித்து, குறிப்பான இடங்களில் டமாரக்காரர்களை நிறுத்தி அடிக்க வைத்தார்கள். மற்றவர்கள் புதர்களுக்குள் வரிசையாக நின்று கூக்குரல் கொடுத்து யானைகளை விரட்டினார்கள் சிரிலின் திட்டப்படி யானைகள் ஓடிப்போய்க் கூட்டுக்கள் நின்று கொண்டன. உள்ளே போனால் வெளியே வர முடியாத வளைவுகள் உள்ள பிரமாண்டமான கூடு அது. அப்படியே யானைகளைப் பட்டினி போட்டு அடக்கி, பிறகு உணவு கொடுத்து வசக்கும் முறை இது என்று யானை பிடிப்பவர்கள் விளக்கம் சொன்னார்கள். ஆனால் யானைக் கூட்டத்தில் ” "லங்காபுரி ராஜா" இல்லை . இது கிராமத்தவர்களுக்குத்தான் தெரியும்.

"அன்று இரவு யானைகள் பிளிற ஆரம்பித்தன. சுமார் அரைமணி நேர பிளிறலுக்குப் பிறகு ஒரு திடீர் நிசப்தம். யானை பிடிக்க வந்தவர்களுக்கு இந்த நிசப்தம் ஏன் என்று புரியவில்லை . அவர்கள் கணக்குப்படி யானைகள் களைக்கிறவரை நாட்கணக்காகப் பிளிறிக் கொண்டிருக்க வேண்டும். நடுஇரவு யானைக் கூட்டிற்கு

காவலிருந்தவர்கள் 'வாள் வாள்' என்று அடிபட்ட நாய்கள் மாதிரி கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். ஒரு பிரம்மாண்டமான யானை, இரண்டு யானை உயரத்துக்கு ஒரு யானை, கூட்டு வளைவுகளின் மரங்களை வெளியே நின்று பிடுங்கி எறிவதாக அவர்கள் உளறியதிலிருந்து தெரிந்தது.

"வெகு தூரத்தில் வனாந்தரத்துக்குள், ஒரு பர்வத சொரூபம் பற்களைக் கோபத்தில் நறநறவென்று கடிக்கும் சப்தம் - மரங்கள் முறிக்கப்படும் சப்தம் அது. நானும் காட்டுக்குப் பழகினவர்களுமாக குறுக்கு வழி பிடித்துப் போய்ப்பார்த்தோம்.

"இருளுக்குள் இருளாக ராஜா, யானைக் கூட்டை உடைக்கிறான். கூட்டின் மத்திய பாகத்தை அடைய நான்கு வளைவுகளையாவது உடைக்க வேண்டும். ஒவ்வொரு மரமும் பிரம்மாண்டமான யந்திரங்களினால் தள்ளி நட்டப்பட்ட மரம். நாங்கள் பார்த்த போது ஏற்கனவே இரண்டு யானைகளின் அகலத்துக்கு முதல் வளைவு உடைக்கப்பட்டு விட்டது. அப்போது இரவு மூன்று மணி. காற்றில் ராஜாவின் கோபம் புயலடிக்கிறது. இதில் நாங்கள் பயந்து கிராமத்துக்கு ஓடி வந்து விட்டோம்.

"முதலில் சிரில் திஸ்ஸநாயக்க இது பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு வளைவை உடைத்து உள்ளே போனாலும், யானை உள்ளேயே அகப்படும்படியாக இரு புறமும் அடித்த மரவேலி வளைவு வழியே மையக் கூட்டுக்குப் போய்விடும் என்பது அவன் கணக்கு. அவனுடைய பழைய அனுபவம் அப்படி

"நாட்கள் இரண்டாகி விட்டன. மரம் முறிகிற சப்தம் நின்று விட்டது. பயத்தில் எவருமே கானகத்துக்குள் போய் என்ன நடக்கிறது என்று வேவுபார்க்கவில்லை. இப்போது யானைகள் மீண்டும் பிளிற ஆரம்பித்தன. சிரில், பெரிய யானை அகப்பட்டு விட்டது என்று சொல்லி, உடைந்திருந்த அடைப்பை மூடுவதற்கு மீண்டும் மெஷின்களை ஏவினான். அங்கும் இங்கும் தாறுமாறாக வீசப்பட்டிருந்த பிரம்மாண்டமான முழு மரங்களை மெஷின் ஒன்று தூக்க ஆரம்பித்த வேளை. பகல் பதினொரு ஜீப்புக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். எங்கோ மர அடர்த்திக்குள் ஒளிந்திருந்த ராஜா குபீலென்று வெளிப்பட்டு மெஷினை நோக்கி ஓடி வந்தான் சிரில் ஓடிப்போய் ஜீப்பில் ஏறிக் கொண்டான். ராஜாவின் தலை, வரும்போதே தாழ்ந்து, கொம்புகள் டாங்கி போன்ற வடிவத்திலிருந்த ஒரு மெஷினின் சங்கிலிச்சக்கரங்களிடையே பாய்ந்தன. ஒரு வீடளவு பெரிய ஜெர்மன் மெஷின். அதை ராஜா ஒரே எற்றில் பக்கவாட்டாகத் தூக்கினான். மெஷின் விகாரமாக அர்த்தமில்லாதபடி உறுமிக் கொண்டு மல்லாந்தது. ராஜா குறி வைத்த மாதிரி சிரில் திஸ்ஸஸ் நாயக்கவை நோக்கி திரும்பினான். சிரிலினால் ஜீப்பை ஸ்டார்ட் பண்ண முடியவில்லை. பக்கத்திலிருந்த ரைபிளை எடுத்துக் கொண்டு ஜீப்பை விட்டுக் குதித்து ஓடினான். கூட்டை உடைப்பதை ராஜா ஏன் பாதியில் நிறுத்தினான் என்பதை அப்போதுதான் நாங்கள் புரிந்து கொண்டோம். ராஜாவின் நோக்கம் கூட்டுக்குக் காரணமானவர்களையே அழிப்பதுதான்.

தன்னைக் குறிவைத்துவிட்டது யானை என்று கண்டு கொண்டான் சிரில். நிலத்தில் ஒரு மத்த கஜத்துக்குக் குறிவைத்து இரண்டு தடவை வில்லை அழுத்தினான். ரைபிள் கல் பிளந்தது போல் வெடித்து ஒலித்தது. ராஜாவின் நெற்றியில் பட்டென இரண்டு சிவப்புத் திலகங்கள். உடனே சிரில் ரைபிளை நிமிர்த்தி எழுந்தான். அவனுடைய ரைபிளும் ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட மெஷின்தான், கால் மைல் தூரத்துக்குப் பறந்து தாக்கக் கூடியது அதன் புல்லட், டெலஸ்கோப் பூட்டி குறி வைக்கிற தூரதிருஷ்டிப்படை அது. இதனால்தான், யானையின் மூளைக்குள் குண்டுகள் பாய்ந்து விட்டன என்று சிரில் திஸ்ஸநாயக்க எழுந்து நின்றான். இந்நேரம் யானை முழுங்கால் மடிந்து சரிந்து வழுந்திருக்க வேண்டும். ஆனால் இது யானையல்ல என்பதை மடையன் சிரில் உணரவில்லை. ராஜா மூளையினுள் பாய்ந்த புல்லட்டுகளுடன் முந்திய வேகம் தணியாமல் இரண்டு எட்டில் சிரிலை அணுகி விட்டான். சிரிலின் கையும் காலும் விறைத்து விட்டன. அவன் வாய் மட்டும் வீல் என்று பயப்பிராந்தியில் அலறியது. மறுவிநாடி, துவம்சம். சிரில் திஸ்ஸநாயக்கவை ஒரு வாரம் கிழத்து இரண்டு பிளாஸ்டிக் வாளிகளில் அள்ளிக் கொண்டு போனார்கள் சொந்தக்காரர்கள்.

"சிரிலை துவம்சம் செய்த ராஜா அதே வேகத்தில் திரும்பினான் கூட்டை நோக்கி. பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு மயிர்க் கூச்சமிட்டது. ராஜா மீண்டும் கூட்டை மரம் மரமாகப் பெயர்த்தெறிய ஆரம்பித்தான். ஒவ்வொரு மரமும் இரண்டு மூன்று நிமிஷங்கள் ராஜாவின் தாக்குதலிக்குத் தாக்குப் பிடித்துத்தான் சரிந்தது. மத்த கஜத்துத் திலகங்களிலிருந்து கிளைகள் விட்டு ரத்தம் இறங்கியபடி இருக்க ராஜாவின் போர் தொடர்ந்து. பார்த்துக் கொண்டே இருந்த எங்களுக்குத்தான் பசியும் தாகமும். யானை பிடிக்க வந்தவர்கள் பறந்து விட்டார்கள். எஞ்சியது நானும் லங்காபுரிக்காரர்களும் தான். மாலைக் கருக்கலில் நாங்கள் கிராமத்துக்குத் திரும்பி விட்டோம். இரவு முழுவதும் மரங்கள் முறிகிற கோரமான ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. காலை எழுந்ததும், ரொட்டி வாழைப்பழம் என்று எதையோ அவசரமாக விழுங்கிவிட்டு மீண்டும் போய் ராஜாவின் சளைக்காத யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அதன் நெற்றி பிராவும் ஒரே ரத்தப்படலம். ஒரு கொம்பின் நுனி பிளந்து விட்டிருந்தது. கொம்புகள் வாயினுள் பொருந்திய இடத்தில் கருமையான ரத்தம். நான் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டேன்.

" அன்று மாலை வரை நான் தண்ணீர் கூடக் குடிக்காமல் அங்கேயே கிடந்திருக்கிறேன். ஆனால் நேரம் போனது தெரியவில்லை. ராஜா நேரே கூட்டின் உள்வளைவுக்குப் போய் விட்டிருந்ததால் அவனைப் பார்க்க முடியவில்லை. கிராமத்துக்குத் திரும்பி விட்டோம்.

"அன்றிரவு ராஜா பிளிறிய சப்தத்தில் விழித்துக் கொண்டேன். என கபாலத்தின் உள்ளிருந்து இரண்டு கொம்புகள் தலையை தகர்ப்பது போன்ற பயங்கர வலி, பிளிறல் ஏதே பிரமை என்று நினைத்து நெற்றியில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு தூங்க முயன்றேன். உடம்பு ஜிவ்வென்று கொதிக்து நடுங்க ஆரம்பித்து. ஜூரம். நாளனியும் இல்லை . ஒரு விதமாக நானே கஷாயம் பண்ணிக் குடித்துவிட்டுப் படுத்தேன். அன்று 1982ம் ஆண்டு முடிந்து 1983 துவங்குகிறது. பிளிறல் கேட்ட சமயம் சரியாகப் பனிரெண்டு மணி என்று என்கு நிச்சயமாகத் தெரியும்.

என் சுவர்க் கடிகாரம் அதே சமயம் பனிரெண்டு அடித்துக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு நடுவே, இரண்டு வருஷங்களுக்கு நடுவே இரண்டு சகாப்தங்களுக்கு நடுவே பிளந்த காலமற்ற இடைவெளி அது. ராஜாவின் பிளிறல் அந்த வெற்று வெளியுள் ஓடி மறைந்து விட்டது.

"மறுநாள் நான் தட்டு தடுமாறி நடந்து போய் யானைக் கூட்டைப் பார்த்தேன். கொம்பன்களும் பெண்யானைகளும் குட்டிகளுமாகக் கூட்டுக்கு வெளியே அநாதரவாய் நின்று சிதறிக் கொண்டிருந்த காற்று ஹேவென்று ஓலமிட்டு அழுது கொண்டிருந்தன. நான் மர அடர்த்திகளுக்குள் மாறி நடந்து போய் உடைபட்ட கூட்டின் வாசலுக்கு எதிரே நின்று பார்த்தேன். நான்கு வேலிகளும் சீராக ஒரே வரிசையில் உடைக்கப்பட்டு இருந்தன. உள்ளே அடைபட்டிருந்த யானைக் கூட்டம் வெளியேறி நிற்கிறது. ஆனால் அமைப்பின் இருட்டுக்குள் ஆகாயத்தை நோக்கி உட்கார்ந்தபடி கிடந்தது ராஜாவின் உடல் வலது கொம்பு சிதறி உடைந்திருந்தது. கொம்புகள் தலை முழுவதும் ஒரே உதிர படலங்கள் என் உடலும் ஒரேயடியாகப் பலமிழந்து விழுந்து விட்டது. கிராமத்துப் பயல்கள் பிரக்ஞையில்லாமல் கிடந்த என்னை தூக்கிக் கொண்டு வந்திராவிட்டால் அப்போதே நிம்மதியாகச் செத்திருப்பேன். பிறகு இந்தப் புதிய பயங்கர சகாப்தம். 1983ன் ஜூலை . கொழும்புத் தமிழர்களை சிரில் மத்தியூ, கேமினி திஸ்ஸநாயக்க இரண்டு பேரின் ரெளடிப் படைகள் சின்னா பின்னமாய்க் குதறியதுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன். நான் அப்போது கொழும்பில் இருக்க வேண்டும் ராஷஸர்களை நேரே பார்க்க வேண்டும் என்று எனக்கு விதி. புத்தகயாவுக்குப் போய் தரிசனம் பண்ணிய கண்கள் மூலம் நிஷ்டூரத்தின் முழு வடிவமும் காணப்பட வேண்டும். இதுதான் தெய்வத்தின் தர்க்கம்." குரல் சிதறாமல் பேசி வந்த உடவத்தின் முகம் எப்போதோ சிதறிவிட்டிருந்தது.

வன்...” என்று குறுக்கிட்டு, தெரியும்” என்கிறீர்

லங்காபுரி ராக இறங்கியதும் எங்கனுப்பியது.

பஸ்ஸின் ராஜாதைத் துல

கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கரடு முரடான பாறைகளின் மேடு பள்ளங்களைப் போன்ற முகச் சதை மடிப்புகளில் ஏறி இறங்கி வழிந்தது. கோபால் நெற்றியை எவ்வளவு சுருக்கி அடக்க முயன்று அவனால் கூட கண்ணீரை அடக்க முடியவில்லை . தன் முன் சிதறிய முகத்தைப் பக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், "அபிராமராஜாவை, நான் மெட்ராஸ்க்கு அனுப்பவில்லை. உண்மையில் அவன்...” என்று ஆரம்பித்தான்.

உடவத்த குறுக்கிட்டு, "எனக்கு இந்த வாசற் கதவைத் தட்டு முன்பே அது தெரியும்,'' என்றார். கைகள் முகத்தைத் துடைத்தன. "என் கண்ணீர் லங்காபுரி ராஜாவுக்காக மட்டுமல்ல. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் எங்களை ஒவ்வொருவராகப் போலீஸ் விசாரித்துத்தான் அனுப்பியது. உங்கள் விலாசத்தை நான் சொன்னதும் எனக்கு மட்டும் ராஜ மரியாதை நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப்பில் கொண்டு போய் நான் சொன்னதையெல்லாம் பதிந்து கொண்டார்கள். ஒரு இன்ஸ்பெக்டர் என்னிடம் அபிராம ராஜாவைப் பற்றிச் சுற்றி வளைத்துச் சொல்லி விட்டு, உங்களிடம் அவனைப் பற்றி உளவு கண்டு பிடிக்க முயற்சிக்கும்படிக் கூறித்தான் இங்கே ஜீப்பில் கொண்டு வந்து விட்டார்கள். இதற்குதான் "சிங்களயா மோடயா" என்று நாங்களே சொல்கிறோம். என்னையே உங்களிடம் வேவு பார்க்க அனுப்பியிருக்கிறார்கள். நான் ஒன்றுதான் உங்களுக்குச் சொல்ல இருக்கிறது. லங்காபுரி ராஜாவின் கதையை நான் எனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் தேடி பிடித்து நேரில் சொல்கிற யாத்திரையில் இருக்கிறேன். அபிராமன் லங்காபுரியில் பிறந்தவன். அவனுடைய யாத்திரையும் ராஜாவின் தர்மத்துக்கு அப்பாற்பட்டதல்ல.

Tuesday, November 27, 2018

பாழி - கோணங்கி :: 18. மஞ்சப் பூத்தெரு

* கோணங்கி

18. மஞ்சப் பூத்தெரு 


பிறக்கும் முன்பே மறைந்த வீடுகளின் மாடித்திருப்பங்களில் அமர்ந்திருந்த தேவதாசிகளின் விதி பார்த்துக் காத்திருந்த முட்டை அகழ்விளக்கின் சுடரில் பதிந்த சுவர்பல்லி குமிழ் நீர் உமிழக் கூறி நிமித்திகத்தில் முன் நடந்தவற்றின் தீவினையும் நடக்க இருப்பதின். துர்சகுனத்தின் சப்தங்களை கவனமாகக் கேட்ட கிழத்தாசி அமிர்தம் நீண்டகாலம் முன்பிருந்த அழகான ருத்திரகணிகையர் விதியில் பூத்த மஞ்சப்பூத் தெரு வழியே பூக்களற்ற களைகள் முளைத்த வீடுகளைக் கடந்து புலம்பியவாறு தனிமை கொண்டிருந்த சாவின் அருகே சென்று உரையாடினாள் பயத்தில்.

'போ... போ சாகுருவியே இங்கிருந்து. துயிலும் நாயனத்தை எழுப்பாதே. புனுகு பனிநீர்களபம் பூசிய கணிகை யாருமில்லை. சதங்கைகட்டி தளியிலார் மரபில் வந்த பொட்டுக்கட்டிய சிறுமிதான் துயில்கிறாள் தெருவில் விளையும் மாக்கல்லில் வடித்த பாரி நாகஸ் வரம் இருந்த வீட்டில் யாருமில்லை . ஊமத்தம் பூவில் மறையும் அன்னாவிமார் காற்றில் உலவும் நேரமிது போய்விடு சாகுருவியே'

'களிம்பேறியசதங்கைகள் உருள்கிறதே. சிறுமியின் கற்பகப் பூதளிரடியில் சிவன் புகுந்து ஆவிகொண்டானோ. புவனமெங்கும் சிறு பாதங்களின் ரேகை படர்கிறதே. பிரம்படி பட்டும் உணரவில்லையா சிறுமியும். அரவங்கள் விசும்பி நெளிவதைப்பார்த்தேன் தெருவில். யாரோ நாகஸ்வர ஏழுகண்களில் அடைக்கிறார்கள் விரலால்'

'யாருமில்லை சாயைகள். கனவில் உலவும் அரவுதான் போய் விடு சாவே'

'மோதிரப்பாம்பின் ரகஸியமே தேவதாசி. மயக்கும் இசைதான் பாம்பு. நெளிவுதான் சாவின் அசைவெனத்தெரியவில்லையா தந்திரக் கிழவியே'

'பின்னொரு இரவும் வந்து பாம்பு நெளிவு மோதிரத்தை கொண்டு போ. ருத்ர வீணை நாண்களில் நுண்ணிய அலைகளைத் தடுத்தால் உன்மீதே வரும் பழி. அவளிடமிருந்து பிரிக்காதே மோதிரத்தை கணிகை தலைமீது பறந்து சா.. வென சாபமிடாதே பயமாக இருக்க? தெனக்கு' என்றவாறு சேலை முந்தியால் தலையைமூடி அதன் பின் படாமல் நகர்ந்தாள்.

'சா... சா...' வெனப்பறந்து சிரித்தது சாகுருவி.

தேவதாசி விரல்களில் இருந்த இசையின் உள்ளுணர்வுகள் என்றுமே உறங்குவதில்லை. மோதிரத்தில் இல்லை இசை. ஒரு பாம்பு நெளிவில் மறையக்கூடும் போய் விடு'

'விதியால் வந்தேன் தேடி , தடுக்காதே என்னை

'இசைதான் விதி நாணில் அதிரும் சாவின் விதியை மஞ்சள் பூவிடம் கேள், சா... வெனக் கத்தி இசை வீதியை மூடாதே. பயிர்களும் பூச்சிகளும் விரல்கள் அசையும் நரம்பின் கானத்தில் ஜனிப்பதால் போய் விடு. உணர்வில்லையா நீயும் பூச்சியென'

'சா... சா...' வென இருட்டி அலறித் தெருவின் குறுக்கே பாய்ந்தது சாகுருவி.

'சாவின் ஆழத்தில் ஒலிக்கும் உன் குரலின் பயங்கரத்தில் தெரு மயங்கிவிடப்போகிறது காலத்தை விட்டு. தூங்கா விளக்கில் என் இளமையும் கரைந்தது இற்று. என்விதி நீ. இருந்துவிடாதே வராமல்' என வளைதடியால் விரட்டினாள் சாகுருவியை. துயிலும் பறவைகள் கூட்டமாய் சேர்ந்து மெல்லிய இறகுக்கோடுகளைத் தெருவில் பதித்து இசையில் உருகும் தாசி உயிருக்காக எழுதிச் சென்ற லிபிகள் அழுதன உயிரில். இசைக்கருவிகளின் துவாரங்களில் கண்வைத்து விழித்திருக்கும் தேவதாசிகளின் தந்திர விளக்கின் சுடரில் உருகிக்கேட்ட இசை மங்கிய வெளிச்சமாய் அறையிருளில் கலந்து இரவின் நிசப்தத்தில் மயங்கிய வாறு உள்ளுணர்வுகள் தூண்டப்பட்டு புல் பூண்டுகளின் முனகலைக் கேட்டார்கள் துயரில்,

என்றோ மறைந்த அன்னாவியின் நாயனத்தில் உயிர் கொண்ட விருட்சங்கள் காசி அன்னாவியாரின் சமாதியில் கிளைபரப்பி ஆங்காரத்தில் உயர எழுந்து பாழ்பட்டு தேடும் நாயனச் சுருள்காற்று மஞ்சப் பூத்தெருவில் அகாலத்தில் விரிவுகொள்ளும். பூவரும்புகள் இருளில் நாகதாளி மரங்களில் ஜனித்ததும் பொட்டுக்கட்டிய தளியிலார் மரபின் நாத உறிஞ்சலில் முலைக்கண் திறந்து பாலூட்டும் தாசியின் ஒலி முகவாசலில் சப்தாஸரங்கள் கோர்த்த சுரைக்கூடுகள் பேய்ச் சுரை முலைகளாய் விம்மி கொடிகளில் மஞ்சள் பூ இதழ் விரியும் ராகவி போதம்.

துளசிச்சுடர் அசையும் தெருமுனையில் நாழி ஓடு கருத்த வீடுகளில் இசை நூல்கள் உதிரும் சுவர் மடிப்பில் பித்த உருக்கொண்ட யாளிமுகவீணையின் தந்திகளில் நாதபேதம் உயிர்ச்சரத்தில் ஓட அசையும் தாவர ரூபங்களில் வளைந்த ஆவி கரையும் தனம் எனும் துளசியில் பிறந்த தேவதாசியை கண்களில் ஊடுருவி அழைத்தாள் கிழத்தாசி அமிர்தம். நடுங்கும் விரல்களில் ஓடிய நரம்புகள் பச்சையாய் வேதிவினைபுரிய வெளிறிய ரேகையில் பாழ் இசை. இடைவிடாத உயிரின் மோனத்திலிருந்த பாம்பு நெளிவு மோதிரத்தால் எட்டாவது பஞ்சமும் ஒன்பதாவது கோமள தைவதமும் சுருதி நுட்பம் கூட.. யாளி முகத்தில் உருக்கொண்ட துயர் ராப்பாடிப்பறவையென குரல் அதிர்ந்து கண்ணாடிப் பந்தாகச் சுருள் கொள்ளும் பிரதியொலி கீழ்பாய்ந்து கோமள ரிஷLJமும் தீவிரகாந்தாரமும் ஆறாவது தீவித மத்திமமும் தந்திகள் தழுவிய எதிரெதிர்ராகமும் நாதபேத ஆதாரம் காலபருவங்கள்-சுற்றிப் புலர்பொழுதுகளின் குளிரையும் உதிரும் தெருவையும் வெளிப்படுத்தியது. மரணத்தருகில் நினைவிழந்த தனம் நோயின் ஆழத்தில் தன் முதுவுடலுள் தண்டுவட எலும்பில் வடிவம் கொண்ட யாழ் மீட்டி திணைமயக்கத்தில் மறைந்த இனத்தின் தனிப்பாடல் இசைக்கநீர்வீதி திறந்து சப்தகன்னிகள் ஐந்துவகை நில உடல் கொண்ட, யாழ் தடவி முன் அறியாத விதியில் கடல்கோளில் சந்திர சூரியர் சுருதி தும்புருநாரதர் பாடகுடுக்கை இமயனும் மத்தளம் தந்தீஸ்வரனும் விம்மும் தாளம் ஜெனிக்கத்தாக்கிய பாதம் நீர்சுழியில் மறைய முதற் சங்க அசுரர் இசை நூல்கள் மூழ்கி நீர்வரிகொண்ட ஒரு துளி நீரில் சுழலும் நகரம் விரிவுகொண்டு திக்குகள் எட்டும் நீர் அலையும் ஏடுகள் வாஸிக்கும் துளைமூங்கில் கண்களை கணிகையர் விரல் மூடி ஒவ்வொரு  கண்ணிலும் பார்வை கொள்ள மறைந்த நிலத் தோற்றங்களின் துயிர் உயிர்கொள்ள தேவதாசிகண்கள்  துவர்ந்து கரையும் தெரு.

நீர்நகரில் அலைவுற்ற பாசுரங்கள் கீறி உருவெடுத்த மஞ்சம் தெரு. தீபச்சுடரின் பின்னே மூழ்கிய மிருகங்களை ராட்சஸ சாயை கொள்ள வைத்தது நீர். மஞ்சப்பூத்தெருவில் விரியும் கருணாமிர்த சாகரம் ஏதோ மஞ்சள் வெளிறிய நிலவெளியில் நெல் ஆறு திறந்து காகம் செம்புநிறமாகி கிளிகொறிக்கும் ஒர் நெல் மூடி திறந்து தனம் எனும் சிங்கமுகவீணை ஜாதிப்பெண் விளக்குகளுக்குப் பின்னால் மங்கிய தெருவில் ஸங்கீதபாரிஜாதப் பூவில் மறைந்தாள்.

பழங்காலச் சுருள் திறந்து புலி எலும்பு துருத்திய ரபாப் கருவியின் பதினெட்டு உலோகத்தந்திகளின் ஒலித்தளத்தில் இடம்மாறும் குதிரைகள் கால் தூக்கி நிற்க சுடரில் நிழல் பெரிதாகி அசையும் அலைக்குள் தங்கியிருந்த கடைசி நெல்லின் அடியில் தேவதாசி சுரங்களால் ஆன ரபாப் நரம்புகள் சுழற்றிச் சென்ற தனிமைப்பிரதேசத்தில் முன்னிருந்த தாவரங்கள் எதிர்காலம் வரை நீண்டு படர்ந்து பூத்த ஒரு மஞ்சள் பூ விளக்கொளிமேல் விரிந்த விரல்கள் யாரையோ நகரம் தாண்டி அழைக்கும். வேறு தெருவில் சுண்ணாம்பு உதிரும் சுவரில் கீறியிருந்த தேவதாசியின் பெயரைத் தனிமையாய்த் திரியும் வழிப்போக்கன் வாஸித்து, வறித்த பார்வைமுன் ஏதுமற்ற வெறுமையில் உருக்கொள்ளும் வெளிறிய மஞ்சள்முகக் கணிகை. விலகிப்போன காலத்திற்குள் வராத உரையாடலை விதியுடன் போட்டுத் திரிகிறாள் அவளும். என்றோ போன வழிப்போக்கன் விட்டுச் சென்ற தொடர்பில்லாத வாக்கியங்கள் கனவுக்குள் கேட்டு விழித்து தெருமுனையில் அவனைக் கூவ திரும்பாமல் போகிறான் அவனும், நீர் நகரை விட்டு வெளியேறிய பாஸ்கர தாஸின் நிழல் அசைந்தது ஐட்காவில் விளக்கின் பின்னே. அனுமந்தராயன்தெரு வீட்டில் இருந்த விஜயாளைப் பார்க்கத் திராட்சை நிறவயலின் வில்லுடன் இருந்தது. மதுராவிலிருந்து தொடுவானம் தாண்டி மெளனமாக இறங்கியது வாசலில், பொட்டுக்கட்டிய சிறுமி விஜயாளின் கபில நிறக்கண்கள் தழுவிய திராட்சை  வயலின் உள்ளே துயர நுரைபொங்கிய பாடல். மீன் செதில்கள் துடிக்க அசையும் முள்ளின் அடுக்கில் குத்தும் ஸ்வரவரிசையில் சுயேச்சையான வெள்ளரி விதைகள் நீர்கோர்த்து பழுப்புத் தடமாய் ஒட்டும் இசையில் பேசியது மதுரா வயலின். மாசிவிதிகளில் வளைந்து திரும்பிய ஜட காவுக்குள் கருக்கிருட்டில் தனிமையான வர்ணமெட்டு ஜட்காவுடன் சேர்ந்தசையும், பாஸ்கரதாஸின் கருப்புக்கோட்டுக்குள் தேவதாஸிகள் துயில்கிறார்கள். மஞ்சப்பூத்தெரு முளைத்த விருட்சங்களில் உதிர்ந்து உடையும் கணிகை உடல் தழும்புகளில் இசைவிரல்கள் நாண்தட விரணத்தின் பாதையில் செல்லத் துரதிருஷ்டத்தை கொண்டுவரும் ஜட காமனிதர்களின் மெய்யுடுக்கி நோயில் துவளும் எளிய தாசியின் நாழி ஓடு மூடிய மரவீட்டில் புகைக்கூண்டு வழியே அலையலையாய் சுரியும் பிரபஞ்ச சுதிகானம் ரகஸியமான மஞ்சள் பூவிலிருந்து மெலியும். விசாரத்தில் ஆழ்ந்த தேவதாசியின் பூர்வீக இசைவீடு ரகஸியமாய் கமலவேணி, விஜயாளிடம் சொன்ன தாஸின் வர்ணமெட்டு இருந்து கொண்டிருந்த பாதரஸப்பேழையில் எரியும் சிமிழிக்குள் பறவைகள் மூக்கை நனைத்து நாசியில் பாடும் சிறுபறவைகளிடம் உதிர்ந்து பரவிய கருப்புக்கோட்டில் அலகு கொத்தி இசைநூல் பிரதியொலி பறித்து இடம் விட்டு இடம் மாறி செல்லும் இசை.

கே. எல். சைகாலிடமிருந்து வந்த கடிதங்களின் பழுப்பு நிறப்பாசி எழுத்து. முத்திரைத்தடத்தில் தாஸ் மீது பாடகனின் நட்பு உரையிடப் பட்டிருந்தது, மரவாசனை பரவிய தாஸின் ரங்கூன் பெட்டிகளில் அடுக்கிய பழுத்த வஸ்திரங்களில் தீபஒளியில் வெளிர் மஞ்சள் இற்ற காலத்துடன் ஒட்டும். தீபச்சிமிழில் மறைந்த சரசப்பொற் கோழி மஞ்ச நிறப்பாவையாகி சிமிழிக்குள் நடனமாது மெல்ல சுடர் மிருது வான உடல்கதிர் மரக்கூடமெங்கும் மாய இழைகளாய் அவள் சாயை உருமாறி சதுர்தண்டிப்பிரகாசிகை ஒளிநூலாய் ஆனது. மலார்ராகம் முடிந்த அரக்குமரக் கூடத்தில் வயதான அமிர்தம் கிழிந்த கருப்புக் கோட்டை ஊசிஒளியால் தைக்க உதிரும் நூலில் தாஸின் வரி சிதைந்து கருப்பு இசைத்தட்டில் சுழலும் கடந்த பாடல். கல்கத்தாப் பெட்டிகளின் மரக்குமிழ் மீது தைல மினுப்பில் ஒட்டிய தாஸின் விரல்ரேகை அச்சு மறையாமல் அப்படியே விட்டிருந்தாள் கிழத்தாசி' அமிர்தம். அவரது கல்கத்தா நண்பன் கே.எல்.சைகாலோடு டிராம் ஏறிப்போன பல பகல்வேளை மறையாமல் கருப்புக்கோட்டில் படிந்திருக்கக் கூடும். சைகால் கொடுத்த கல்கத்தா புகையிலை கூடும் பைப்பும் கோட்டும் கருப்பு அகலும் பத்திரமாய், தெருவில் இறந்து கிடந்த சைகால் சேரிக்குள் பாடிய இசைத்தட்டுகளில் கோடு மெல்ல வெளியேறுகிறது குரலுடன். அவள் கண்ணீரின் நிழலில் உயிரின் அனந்தத்தை இசைக்கவும் மஞ்சப்பூத்தெரு வாசனை ரகஸிய உள்ளுணர்வுகளைத் தூண்ட மறைக்கப்பட்ட தேவதாசிகளின் விரல்கள் பிரபஞ்ச அசைவில் இருக்கவும் விரும்பினாள் தனம். அத்தெருவில் மறைந்து போன இசை எளிய வாழ்வின் விதியாக இருக்கவும் இவ்வுலகின் நுரையீரலில் நிரம்பிய காற்று தாவரப் பாசிகளில் மச்சங்களில் நீரின் ஆத்மாவுக்குள் ஊடுருவிச் சென்று தனத்தின் மிகப்பழைய வீணையின் கிளர்ச்சியிலிருந்து முத நூலின் அசுர மெட்டு உயிர்பெறவும் வீணையின் ஆழத்தில் அவள் உயிர் கசிந்து வெளிப்பட ட சாயைகள் மெல்ல உடலாய் உருக்கொள்ளப் பார்த்திருந்தது மஞ்சப்பூதெரு.

கிரகங்களின் பெயர்ச்சியில் மாறும் சுரங்கள் கடல் ஆழங்களில் சாவின் மெளனம் கலங்கப்படாதிருக்குமாறு சந்திர சூரியர் துந்துபி கதிரெதிர் நரம்பு மயக்கத்தில் அமிர்தத்தின் ஆவீமீன் நீந்தி சுரங்களில் வால் சுழற்றும். ஒலிகளை விழுங்கும் ஆவிமீன் ராட்சத வடிவத்தை அடைந்து அசுரகண மூதாதையானது. கடல் பாய்களின் நிழல் விழா ஆழத்தில் என்.எஸ்.எஸ். இர்வின் லாஞ்சி ஏறிய தாஸ் தலைமன்னாரில் தேவதாசிகளுடன் இசைப்பேழையைக் கொண்டு கதிர்காமத்தில் நிகழ்த்திய மெல்லிய திரைச் சீலைகள் பின்னே இசைத்த உருவங்கள் லாந்தர் விளக்கில் அசைந்தது. உயிரினங்களுக்கான ரகஸிய பாஷையில் விஜயாள் திராட்சைநிற வயலின் வில்லின் நாணைமுறுக்கி காலத்தை திருகிமறைகிறாள் என் கொழும்பில். எஸ்.எஸ். இர்வின் லாஞ்சி திரும்பிய நகர்வுகளோடு சேர்ந்து ஊர்ந்துவரும் ஆவிமீன்களுக்கு கொஞ்சிய வாறு விஜயாள் சொன்ன நால்வகை யாழின் வட்டப்பாலையைச் சுழற் றிய நீர்ச்சுழியில் பாஷைகளுக்கு முந்தியசமிக்ஞைகள் இருக்கக்கூடும்.

கிழத்தாசி அமிர்தத்தின் ஆவிமீனின் கண்கள் இசையின் எல்லா அமைதியையும் விரித்து தனிமொழியின் அடையாளங்களை தன்னுள் கொண்டிருந்தது. அவள் உடல் நட்சத்திரச் செதில்களால் ஓணானின் பழுப்பு நிறத்தில் சுருங்கிவந்தது. எல்லோருமே தாவரப்பாசியின் மெதுவான குறத்தில் இசையாக இருந்த சூனியத்தின் ரகஸியத்திலிருந்து வந்தார்கள்' என ஆவிசொன்னது. நீரில் விரியும் இலைமடல்களில் பிறந்த பெண்சிசுக்கள் அமிர்தாளின் உடலில் ஒட்டி குருதியின் மிருதுவான இசை வட்டத்தில் நீந்தியவாறு கனவுக்குள் மறைகிறார்கள். காலான்களில் இருந்த வரி கொண்ட அவள் தேகம் பழுத்துவந்தது நரம்பு தெறித்து. இல்லா தபலரும் தாவர இருளில் வளைந்து எட்டிப் பார்க்கிறார்கள் அவளை. அமிர்தாளின் கால்கள் அசைவதைப்பார்த்து மிரண்டுபோன விஜயாள் பச்சிலையை விளக்கில் வாட்டி சூட்டுடன் ஒட்டவைத்தாள் அவள் கால்களில். வெற்று அசைவில் பாதவிரல்கள் மெளனமாகச் சொன்ன தாள அமைதியின் விரிவுபுவனமெங்கும் ரேகை யாக கோடு சுற்றியது. உறக்கத்திலிருந்தவாறே மறைந்த சகோதரிகளை கூவுகிறாள். இறந்து கொண்டிருக்கும் சதங்கையின் உயிர் காலத்தை வசப்படுத்தி எங்கோ கொண்டுபோனது. மெலிவான ஒளிமேலே. கரு மையும் வெளிச்சமும் மிகுந்த இலைகள் காற்றில் தத்தளித்து அதிர்கிற ஓசை. மெல்ல மெல்ல மண்ணில் இறங்கி கீழே புதைவுகொண்ட எலும்புகளின் அசுர இசையில் கரைந்து கொண்டிருந்தாள் அமிர்தம்.


பொட்டுக்கட்டிய சிறுமிகள் பாசுரம் முளைத்த துளசி என்பவளை அழைத்து வருகிறார்கள் தெருவுக்கு. அமிர்தம் அருகே போய் அவள் கைக்குள் மூடியிருந்த மஞ்சள் பூவைப் பார்த்தாள் துளசி. குளிர்ச்சியான அந்தப்பூ எலும்புகளின் இசையில் எரிந்து பிரகாசமடைந்து நட்சத்திரவடிவமாகமாறி வேகமாக மறைந்தது ஒளியாய். காரை வீட்டு மாடித்திருப்பங்களிளெல்லாம் பரவிவந்த அந்த ஒளியில் பாசுரங்களைப் பறிமாறிக்கொண்டாள் துளசி. பூமியில் கலந்துவிட்ட இசை அலைகளில் மஞ்சள் பூஅந்தரங்கமாக தாவர உலகுடன் சேர்ந்து வருகிறது மேலே வளைந்து. வாடி உலர்ந்து போய் நின்றிருக்கும் ஓரிரு பூவரச மரங்களின் பின்னால் வந்துபோன ஒருவனுக்கு முதல் காதலை அளித்த கள்ளம் கபடறியாத அமிர்தம் துயரமான காற்றாகிபூவரசுகளை அசைத்தவாறிருக்கிறாள். தாஸின் கருப்பு கோட்டு சாம்பல்வெளிறிய பாசிமுளைத்து இலைகள் படர்ந்து வாசனைகொள்ளும் மரக்கூடம். பூர்வீக இசைவீட்டின் உள்ளே அமிர்தம் மஞ்சப்பூத் தெருவின் எல்லா அடையாளங்களும் நூலில் பின்னிக் கண்டாள். வெள்ளைப் பூக்கள் கோட்டில் பறித்து பாதரஸப்பேழையில் வைக்கவும் உலர்ந்த கண்ணாடியில் திரும்பவும் அவள் பேர் சொல்லி அழைத்தவாறு யாரோ மறைந்திருக்கிறார்கள் சுற்றி. மஞ்சப்பூத் தெருவில் கிடந்த குருத்து மணலில் கால் விரல்பதிய சிறுமி சதங்கை ஒலி மணல் சுழியில் சுற்றி வீடுகளுக்குள் வரும் காற்று. அந்த வீடுகளின் கணிகைகளால் வளர்க்கப்பட்ட துளசி அலையாக இருக்கிறாள் சமையலறையில்.

 சமைந்த கன்னி மெல்ல சுடர மிக உயரமான சமையலறையில் உதிரத்தொடங்கிய குரல்கள் ஆண்பார்வைபடாத பதிமூன்று கணிகையரின் ஆவி உருகும் சுரசாதகத்தில் மெலிந்த குரல் விட்டு விட்டு கேட்கும். கன்னிச் சுடர் மீது புகைவளையம் சுழன்று உயர எழுந்து படர்ந்தது கண்ணாடிச் சட்டத்தில். புகையின் அடியில் மங்கிய புகைப் படத்துக்குள் திறந்திருந்த கமலவேணி கண்களின் அமைதியில் நகரும் மூங்கில் நதி. கபிலநிறக் கண்களின் உள்ளே நிழல்படமாய் உறைந்த கணம் நின்று சதங்கைக்குள் சுருளும் காற்று. மூங்கில் நதி உருளும் நீர் குழல்கள் அலைகோர்த்து தத்தளிக்கும் மாயநீர் இசை. குழல் முளைத்த வேர் குருத்தில் இசைவிரல் தொடு கணம் உறைந்த செப்பியார்டோன் புகைப்படம் உ.திராத அறையில் தானே கழன்றுதிரும் மஞ்சள் பூத்தெருவொன்று அசையா மனக்காற்றுள் வண்ணத்துப் பூச்சி பதுங்கிய வீணை நாண்களில் படபடக்கும் இறகு சுரஸ்தானத்தில் பலவித ரஞ்சகமுள்ள சுரங்களில் இமை பட...க்கும் தாசி கை விரலின் அசைவினாலும் அழுத்தத்தினாலும் சிக்கிய வர்ணப்பூச்சி சாவிலும் நுண்ணிய பேத ஒலி வித்துகளில் தாசியின் மரணம் இமை மூடு கணத்தில் தனித்தனி நிறமாக மறையும் தம்பலப்பூச்சி. மிகப் பழைய பாடலின் வெல்வெட்ட நிறம் உதடுகளில் துடித்திருந்தது. அறையின் மெழுகிருள் உருகி செர்ரி நிற பிரேம் சட்டத்தில் நெளியும் கொடியும் இலைகளும் சிறகு முளைத்த நிறங்களைப் பூண்டு உருமாறி பாம்புச்சட்டையுள் புகுந்த சருகுலயத்தில் திரைச்சீலையின் பின்னே உருளும் அபினயத்தில் படமெடுத்து ஆடிய முக சூலத்தில் பொடி தேகம் படர்ந்து வெண்டில் மண்பரப்பில் விஷம் முகர்ந்து ஆடும் ஸர்ப்ப துள்ளல். ஸ்திரீகள் நுனி நாக்கில் தீண்டிய மகுடிக் காற்றிழைகள் கண்ணிருட்டில் கணம் சுழல கால் சதங்கை வியாபகம் கொள்ளும் மாயம். சர்ப்பம் சிலம்புகளாய் கால் சுற்றி விழித்த கருங்கணத்தில் தனித்தனி விழியாக ஊடுருவி வரும் சிலம்பு, ஒலிநாவுகள் அறுபத்திநாலும் சீறும் தவளை நீர் நாவுகளில் கூட்ட உணர்ச்சி ஒன்றையொன்று தொடர்ந்துவர ஒத்திசையின் சுர அடுக்கில் காலக் கவை முள் உடல்குத்தி வெப்பமாய் தாவும் உதிர இசை பிடில் தந்திகளில் தவளையின் கூட்டு நாதத்தை ஒலிப்ப செவித்தோலில் தடவும் மிருதுவான தவளையின் சுருள்நாக்கு நீர் உலகின் ஆழங்களில் மெளன அசைவில் நீந்தும். மயங்கவைத்து ஒப்பனைத்திரைக்குள் மறைவான வாசனை உதிரும் சாந்துச் சுவரில் சட்டமிடப்பட்ட கண்ணாடிக்குள்ளிருந்த ஸ்திரீபார்ட நடிகன். பூச்சிகள் அளித்த செப்பி யார் டோன் புகைப்படங்களில் இருந்த கங்கா பாய், பஞ்சரத்தினம், கமலா, நாஸிகாவதி, தானரூபி அனுசுரங்களைப் பிடித்த விரல்களுக் கிடையில் சிலந்தி நூல்கோர்த்தபின்னல் கால்களால் நெய்து நுண்ணிய கால அடுக்கில் ஊடுநூல் பாவிச்சென்றது பூச்சி.

மரபீரோவின் தைல வண்ணத்தில் பர்மா ஈட்டிமர ஆசனங்களில் தாஸ் அமர்ந்த தடம் பதிவு மாறாமல் இருக்கும். முக்காலிமீது தைல விளக்கு கசியும் கூம்புவடி வ சிம்ழி நீண்டு சுடர் உயரமாய் பளிங்கில் பிரதிஒளி அசைந்தது. கடல் சிப்பிகளில் பச்சை நிறம்படர்ந்த நாரில் செராமிக் கல் பலகைகள் வர்ணம் பூசிய செடி ப்பூக்களுடன் நடுக்கியது வெளிச்சத்தில். மர அலமாரிகளில் தேவதாசிகளுக்குச் சன்மானமளித்த நாட்டிய ஆடைகள் நிஜமுத்து பதித்த வி : 30:ரிகள் களிம் பேறிய சதங்கைகள். புஸ்பராகக் கல்பதித்த நெற்றிச்சுட்! இலைமிடி தாமிரப் பூண் போட்ட குச்சி வளை முங்கில்லில், மான் தோலில் புத்தரை நோக்கித் தவமிருந்தாள். அமிர்தாள் பர்மாவிலிருந்து கொண்டு வந்த புத்தசிலை அது. பெல்ஜியம் கண்ணாடியின் ஓவல் வடிவத்தில் பதிந்த தாசிமுகங்கள் நாய் மண்டையோட்டை நீரிலினடித்த வெளிர் சூடி முன் உருமாறும் ஸ்திரி. தாசி தோன்மீதமர்ந்த தாசிமுகங்கள் நாய் மண்டையோட்டை நீரிலிழைத்த வெளிர் ஆடிமுன் உருமாறும் ஸ்திரீ. தாசி தோள்மீதமர்ந்த தேவாங்கு தலைப்பேனை உருவி நகத்தில் இருக்கி கண்ணாடியில் முகம்பார்க்க இந்திரகோப்பூச்சி விளையாடியது ஆடியில். கருப்பு நாயின் பக்கவிலாவில் பாகாக்கை அமர்ந்து கூறிய அந்தரங்க வெளி ஆடியில் தோன்றி தாசிமுகங்கள் மாறிமாறி ஜடைப் பின்னல் பார்த்து கூந்தல் விரித்து அரிதாரம் கழுவும் தைலம் பூசிப் பிரிக்கிறாள் நாட்டிய முகத்தை. முதிய கீறல் துணுக்குற பாலுண்ணி களின் பார்வையால் சலனமாகிறாள். கண் இமையடியில் கருத்திருந்தது காலம். எதையோ நினைத்துச் சலிக்கும் பெருமூச்சு கண்ணாடியில்  குழந்தைகள் ஏந்திய சிண் ணங்களில் திரா1 சை ஒளிவரி சுழன் று கண்ணாடிப் பரப்பில் இலைகளில் சூன்யச் சிலந்தி வலை பின்னிய நூல் குறுக்கு அடுக்காய் அதிரும். கமலவேணி முகத்தில் சிலந்த வெள் ளி வலை விரித்தவாறு நெய்து கொண்டி ருந்தது. வலையை ஊடுருவிய அவள் கண்திரா" சை 4,ரல் வண்டுகளாய் அறையினூடு ரீங்கரித் துச் சுழன்று சுற்றி குழல் மூங்க : ர், துளைகளில் கண்களாக பொருந்தி பார்வை தனியே யாரும் அறைகளில் பார்த்தது. கண்ணாடித் தொட்டிகளில் பாசிண்டை நீர்த்தாவரங்களில் செதில் சிவந்து காற்றசைக்கும் கரு வள்ளை மீனின் இமை மூடாத பார்வை அறைகள் சுழல் சுற்றுடைய நீருக்குள் இருப்பதாகப் பார்த்தது தோற்றம். பழவகை கொட்ட. டை கள் தானியம் வைக்கும் ஆதிகால ஏழை கிராமங்களிலிருந்து வந்த அடுக்குப்பானைகளில் அப்ஸரஸின் தன்யங் கள் ஒளிந்திருக்கும். பழவகை வாசனையில் மூழ்கிய சயன அறையில் பரம்பரையான தாம்பத்தியக் கட்டிலில் விருத்தாப்பியப் பருவத்தில் கிடந்த தாஸின் முனகல் வரும். மரத்தோப்பின் மொடு மொடுவென்ற சத்தம் வரும் கட்டில் சட்டங்களில். பரம்பரையான தாசிகள் கட்டி, லை விட்டிறங்காமல் காத்திருந்தனர் அப்ஸரஸின் பாதரஸதன்யங்களே கட்டில் குமிழ்களாகி மனிதப் பாலின் கொச்சை நெடி வந்தது கட்டிலில் நினைத்தபடி யெல்லாம் பேசும் கட்டிலது. மருந்தீடு மயக்கம் அலை வுறும் தாம்பத்தியக் கட்டில் காலில் பெண்ணுருவஞ் செய்து சித்திர மூலக்கொடி சுற்றி அசைய பேசும் வசியத்தில் மையை எடுத்து எந்தப் பட்சி இறகில் தடவினாலும் அந்தப் படசி வந்து கட்டில் மீதமரும். பட்சி அரசாயிருக்கும் ராத்திரி ஏர் வெள்ளிகள் வெகு தூரம் போய் திரும்பிக் கட்டில் அருகில் அப்ஸரஸின் தன்யங்களில் மறையும். பருத்திப் பஞ்சினால் ஆமணக் கெண்ணை விளக்குத்திரி ஒளிகருகும் இரவில் தெரியும் பச்சைப்பாம்புகள் தோன்றி மதனப்பூவடி வில் கல்வி கொள்ள மேயப்போன சர்ப்பங்களும் ஒளித்திரி கருகச் சேர்ந்து கொள்ளும் உடல் இல்லாத தேவதாசிகள் கட்டில் காலில் தோன்றி மச்சகந்தி உருவில் நீர்யாழில் அலைவுற்ற ராகல.. சணம் வளைவுகள் கமகங்கள் சுரங் களைப்பிடிக்கும் வழியில் அனுசுரங்கள் ஒருங்கு சேர்ந்து ராகமுண்டாக் கினர் தாசியர். பளிங்குத் தளத்தில் புலர்பொழுது நாட்டியம் பயிலச் சிறுமிகள் நடமாடும் பாதங்கள் விதவித மென்மையான குருத்து விரல் களின் பதிவு மாறாமல் உயிர் பெற்று வரும் மஞ்சப்பூத்தெரு.

இருட்டில் நிற்கும் மூலிகைச் செடிகளின் மயக்கத்தில் கஸ்தூரி மணக்கும் அந்தத் தெருவில் இருளில் தூண்டப்பட்ட சதங்கைகளின் சீற்றம் தக்கித் தக்கிட கிட தகிதா தாதிர துரதா... மென்றதிர ஸ்திரி சாடை உயிர்பெற ஜனனத்தில் தொடங்கினான் போலும் புனைந்த ஸ்திரீ முகம் கண்ணாடிக்குள் மறைகிறது. அரும்பிய மீசையை சவரக் கத்தியால் மயிர்கட்டை கணுவில் கீற ஆண்மறைந்து வேறு வேறு வடி வ கணிகையாகி மர அலமாரிகளில் அடுக்கிய துகிலை ஆபரணங்களை படிந்து உள்சென்ற பாதரஸ தாசியைத் தேவாங்கு அழைத்த படி கூண்டில் புலம்பும். உடல்மீதுநகரும் ரோமச் சுழியில் மயங்கி மறைந்த யுவனை நினைத்து திரும்புகிறாள்.

தீவு தீவாந்தரங்களில் கிடந்த அம்மண ரூப்புத்தர்சிலை யொன்று தந்தத்தில் வடித்த நிசப்தத்தில் இமை மூடிப் பார்வை அக விளக்கம் கொள்ள கண்விழுந்த இடமெல்லாம் பட்டணங்களும் நான்கு திக்கு களிலும் போன பார்வையில் விதிகளும் தாசி தலைமுடி நீளத்தில் நீட்டி கிடந்தது. பாதரஸத்தில் தோன்றும் வேப்பமரக் காக்கைக் கூட்டின் வடிவத்தில் உற்பத்தியான பட்டிணத்தில் மந்திர வாதியான காக்கை மூக்கால் அடைக்கும் கூட்டு நரம்புநார் சருகு முள்வேர் உலர்ந்த செடிக்கவையில் புலம்பும் மொழிபுகா இசைக்கு நோயாளிகளும் குழந்தையும் கனவினூடே கண்ட காக்கைச் சிறகில் தொடுகி றார்கள் துயிலில். அம்மணரூப் தந்தச் சிலை நாணத்தில் எரியும் மேனியுடன் கரைகிறது மெல்ல, தந்த உடல் வரியில் ருத்ரகணிகை ரேகை தொட்டுத் தேயும் நிர்வாணம். தாஸின் கருப்பு இசைத்தட்டுகள் அடுக்கி அடுக்கிச் சரிந்த நாட்கள் கோடு சுற்றிவிழுந்த கிராமபோன் ஊசி பர்மாவி லிருந்து வந்த புத்தர் சிலைமுன் சிதறிக்கிடந்தது. கரும்பூனை உலவும் அறைகளில் யாருமில்லை. ரெட்டைவால் அரணை ஊர்ந்து செல்ல நுனிநாசியில் கல்வத்தில் இருந்த பாவை வாசனை வர செப்புச் சிமிழில் விளையாடும் பொம்மைகள் அரணைப் பார்த்து கூப்பிட பாழ் சுவர் களில் மறைந்தது பூச்சி.

ஒற்றை மாடிச் செங்கல் தெருவின் வளைந்த படி களில் சாயல் கொண்ட தாசி நவரட்சணம் முலைப்பால் இழைத்துக் கோர்த்த மெய்யுருகும் சகோட யாழ் கேட்டு சிங்கங்கள் வசப்பட்டு அசைவற்று நிற்க அவள் தன்யங்கள் கசிந்த கவிச்சிட்டால் ஒளிகொள்ள அனாதைக் குழந்தைகள் கூடி நிர்வாணமாய் மடிபுகுந்து பசியாறவிரல் அசைக்கும் சகோட யாழ் அதிர்வுகளில் உருவடைந்த சிங்கம் காற்றில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி ராகத்தில் மறையும். கண்ணால் பார்க்காத மிருகம் நாககரத்தில் தோன்றி ஆயிரக்கணக்கில் உணர்ச்சிகளில் பல திற ஆழங்களில் நுட்பத்தின் கவை கொண்ட சிங்கம் சுர இடைவெளியில் அலைவுறும். பூதசதுக்கத்தின் கையில் இருந்த ஆன்மாவை உருக்கும் நாகசுரம் வாடியபயிரில் கலந்து சிருஷ்டியில் ஓரறிவினத்தின் உயிரில் நத்தையில் தும்பியில் பல்லியில் சிலந்தியில் நுண் உயிரில் அணுத்திரைந்து பரவி ஒலிநாவுகளில் புலனாகி மேல் சுரத்திற்கும் கீழ் சுரத்திற்கும் இடைவெளியில் எரியும் காற்றாகிறது. செங்காலி ஆம்பல் செம்மரம் கடம்பம் தோதகத்தி வார்த்துளை தோல் புடை பறைகள் உலர்ந்து வரும் அறையில் நோயிலாப்பசுந்தோலும் உடும் புத்தொலி அருந்தியர் தெருவில் உலர்த்திய ஆயிரத்து மூன்று ஐந்து மிருக நார்த்தொலி தாளின் மரக்கூடத்தில் மௌனமாய் காய்ந்து வரும். மிருக உடல் உரிக்கும் கருப்புவிரல்கள் இந்த தோலில் மறைந்து விடைத்த பறைமுழக்கம்
ஊருக்கு ஒதுங்கிய ஒரு இருளில் நாயும் வால்நரியும் ஊளையிடும் குரல் ராகம் கேட்டுப் பிச்சாடணர் வரை போட்டுடன் பைத்தியக் கூத்தில் எரியும் திசையொலியில் மயானம். எரியும் உடல் எழுந்து ஊளையிட்ட நாத ஊண் வாட்டிய சக்கிலியத் தோல் வளையவாயமர்ந்து மரித்த மாடுகளின் தொலி துடிக்க மூட்டிய தொலிவாரில் உறுமும் ஊமையன் பிணந்தள்ளும் கோல் எலும்பில் விழுந்த ஓசைசாவுக் கூத்தாடும். கருத்த முகில் கூட்டம் தெற்கே இறங்கிபிளந்த ஒலியில் கன்னியொரு பாகமாய் ஆதியில் ஊழி நெருப்பாற்றில் இருந்த நூத்தி எட்டுக் கரண முடைய அரங்கில் மூங்கில் கண்கள் நெருப்பு உமிழ தீக்கணம் நடுங்கும் முதல் ஊழி.

உத்தீக்கணம் பந்தங்கள் கழற்றி எரியும் கடல்கோளில் முதற் சங்க ஏடுகள் கீறும் அசுரப்புலவரும் முனிகளும் இயற்றிய சரபலீலையில் ஆதித்தாண்டவம். அருவமேனி நடுநின்ற முதல் சபையில் நிழல் எனும் தாண்டவம் கால் மாற தனம் வீணைத் தந்தி எரியும் நீரில் சிரவகை பதினான்கும் கண்வகை பதினைந்தும் நவநாதன் காரணம். தாசியெனும் அரூபவசீகரத்துள் கல்தச்சன் உயிர் உருகி மெலிந்த சுரப்பிர தேசத்தில் உடல்தானே... நிழலா... சாயைகளா கல்லில் பதுங்கிய முகபேதம் சித்திர கரணம் சிதையாமல் சிற்பவரிதிரிய திரிபுவன அடிக்கல் மிருகங்கள் கோபுரத்தை நகர்ந்த குகைக்குள் தீட்டிய நாகவீணையின் முகமாய் பதிந்து சீறும் தந்திகளைத் தன் தோலால் மூடிய தேவதாசி குகை விதானத்தில் சித்திரம் கொள்ள மிருக வீணையின் ஜீவநாண்களில் அதிர்வுகண்டான் நிச்சயமின்மையின் கணநேரத்தில்.

திருவிடைமருதூர் மேற்குவாசலில் நாயுடன் நின்றவன் வரை யோட்டை நாய் மண்டையில் போட்டுடைத்து நூற்றி ஆறு உள்ளு ணர்வு கொண்ட நாய் மண்டை எலும்பேந்தி நிற்கிறான். விலங்கு பூட்டிய ஸ்திரீகளைப்பிரகாரம் சுற்றிவரும் தலைமுறைக் கோட்டி ஒருவனை ஜன்னலில் பார்த்தான் பிரமகத்தி. உள்வெளி பிரகார நீளத்தில் நீட்டிய பித்த நீட் சியில் பூச்சிகளின் இரைச்சலைக் கேட்: கும் பிரமகத் தியின் ஜன்னலில் பூக்கள் கூவிச் சிரிக்கும். சப்தங்களை கவனமான தடங்களில் விட்டுச்சென்ற தாசி உடல் குகையுள் வில்நாணில் சேர்ந்து கோடு கொள்ள குரங்கு விரல்கள் நீண்டுவரும் குகை இருளில் ஐந்துக் களின் தோல் உரசலில் புடைத்தபாறை ஓசை. குரங்கின் மிருதுவான கை ஸ்பரிசம் பட்ட. ராவெள்ளி எரிந்து சரிந்து வம்பி துடைப்புடவில் விஷத்துள் புகுந்து உள் சுழல்கிறது மஞ்சள்பூ

சாயைகள் சதாவும் மோனத்தில் பரவிவர தெருவில் உயிர் கொண்ட இசையும் நாட்டியமும் நெற்றிக்கும் உந்திச்சுழிக்கும் ஒரு நூல் பிடித்தும் அந்நூலை பனிரெண்டங்குலமாய் பாதம் பகிர்ந்திருந்தது மண்டலம். பாதம் போனவழி கைசெல்ல விரல் அசைவில் விழி செல்ல பாதாதிகேசம் சுழித்து ஆடுகிறாள் கமலவேணி. மஞ்சப்பூத் தெருவின் - ஞாபகமாய் எங்கோ மறைந்த கமலவேணி அரூப வாசனைகளில் பூக்கார வீடுகளில் தோன்றி மறைகிறாள் தினம். கல்மண்பத்தில் வரைந்த கோடு களில் காமக் கோட் டி பிடித்த சித்திரத் திரள் விதானங்கள் உருமாறு கின்றன நினைத்தபடி . மறைந்தவன் சாயையும் மண்ட், பக்குளிரில் கோடுகொள்ள தாசிகள் உயிர்பெற்று வருகிறார்கள் தூண்களில். நட்மாட்டமில்லாத மண்டபத்தில் தூண்களாயிருந்த வேறுவேறு கல் வகையில் தோன்றிவிடும் கண்ணுக்குப் புலப்படாத வேங்கையுரித் தோலும் நாகம் சுற்றிய கழுத்தும் விஷம் சுமந்த கண்டத்துடன் சமசிர லட்சணம். நவரஸபேதம் பிரிய சிவன் பாதம் தாக்கியதெல்லாம் தாளம். திரிபுரங்களைச் சட்டெரித்த உகாந்தகால ருத்ரவீணை தாசி கையில். தேவதாசிகளின் பல்லுருவம் பெயர்ந்து கொடு கொட்டி ஆடும் நர்த்தனரூபம். கணிகை கீறிய இசைஏட்டில் கழன்றுதிர்ந்த லிபிநீரில் மிதற்று நீலகண்டத்தில் பாம்பின் சூலத்தில் தாக்கி இசைகூடி தேவ தாசி வீணையின் கனராகம் நீர்ப்பாசியில் முளைக்கும். தா சித்தொரு நால்வகையாழ் வட்டப்பாலையில் சுற்றி கிரகம் மாறுவதில் இடமுறை திரிபென வேனிற்காதையில் தாள அமைதி கீறிய கல்தச்சன் சீர்தாளம் தந்து நிலைகுலைந்து அழிவின் ஊழிக்காற்று சூழ ஒடுங்கிக்கொண்ட உமையின் நீர் உரு சலனமாகும் இசையில். எரியும் கல்லில் கீறிய நெற்றிக்கண் உள் பார்வைச் சல்லடை ஆயிரம் கண் விழித்து ஊர்ந்து விண்பரப்பில் சுழலும் நட்சத்திர ராசிகளிடையே மஞ்சப்பூத்தெரு வீடுகளில் புலித்தோல் போர்த்திய தனம் வீணை. விதிமேல் தாக்கிய பாசுரத்தில் திரிபுரமெரித்து பொட்டுக் கட்டிய சிறுமிகால் ரேகைக்குள் புகுந்தான் வேங்கை உரியுடன்.

அத்தி இலுப்பை செண்பகவிருட்சம் அரசிருந்த இரவில் தேய் பிறைக்குள் வந்த மங்கிய வெளிச்சத்தில் மேல் தூக்கிப்பார்க்கும் குரும்பை முலை சிப்பி முலையில் உதிர நிறம் ஒளிர இருள் கூந்தல் மூடி தன்யங் களில் நெளிய சிப்பிவரிக்கோடுகளில் பூசிய மருதோன்றி இலை முற்றி கண் நரம்பு அசையும் மிருதுவான இலை மிடியை மூடிய இலைக் கண் வெளிச்சமடைந்து அசையும் இலை இறகு அடர்ந்த அறுபத்தி நாலு கிளிகளும் சுவர் பொந்துகளில் இருந்தவாறே மறைந்த கணிகையின் கனவுகளில் ஆரூடம் சொல்லும். மிருதுவான கன்னிகளின் நடமாட்டத் தைப் பார்த்த செடிகள் அவர்கள் உடலில் குருத்து ரேகை மாறுவதை தெளிவாகப்பார்த்தன. உயரமான சமையல்கட்டு ஓடுகளில் இருந்த இருட்டு கீறல் விழுந்து வெளியேறிக்கொண்டிருந்த ரகஸியங்களை நீர் நகரின் இலைவீடுகளில் குடியிருந்த கம்பளத்தார்கள் புகைக் கூண்டு வழியே பார்த்தார்கள். பொட்டுக்கட்டிய வமிசத்தாருக்கு ஆபத்து நேரப்போவதை சாமக்கோடாங்கி முன்னுணர்ந்து சொல்லி விட்டுப் போனான். சுடுகாட்டுச் சாம்பலில் புரண்டு மயான ருத்திரனை அழைத்து பூசைபலியிட்டு சாரைப்பாம்பு சட் டை சுற்றி சமாதி வைத்த தலைச்சன் எலும்புப்பிடியில் மை சேர்த்து கண்ணில் தீட்டிப் பார்த்தால் உரை நோக்கி மேற்குத் திசையிலிருந்து வால் நட்சத்திரம் சரிந்துவரக்கண்டு கம்பளத்தார் சொன்னகுறி விண்ணில் சரிந்து வந்தது.

செடிகளின் துயரம் இன்னதாக இருந்ததென்று அண்டைவீட்டார் உணர்ந்திருந்தார்கள். ருதுவான சிறுமி வயதான தாசிக்கு சம்ரக்ஷணை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்தாள்.

கமலையைக் குளிப்பாட்ட அங்ங்னக்குழிக்கு நகர்த்திக் கொண்டு வந்து மெல்ல படுக்க வைத்தாள் மேகலா. அங்ஙனத்தின் ஈரவாடையில் பல பெண்களின் வாசனை உறைநிலையில் படுத்திருந்தது. பெண்களின் கால் பதிந்த சுண்ணாம்புத் தரையில் இருந்த உயிரோட்டத்தை ஸ்பரி சித்தவாறு வெகுநேரம் ஸ்திரீகளின் தாபவேகத்தை நுகர்ந்தாள் கமலை. அவளைவிட்டு உதிர்ந்த பல வர்ணமெட்டு பீங்கான் கோப்பையில் படர்ந்த இஞ்சுக்கிழங்கில் காரமாய் படர்வதை பார்வை கொண்டு முளைவிடுவதைப் பார்த்தாள் நிதானமாய். காட்டில் மண!',த தளியி லார் மரபில்வந்த திகைப் பூண்டுகளும் தொட்டால் வாடியும் அமலைச் செடிகளும் மல்லிப்பூவும் அலைபாய்ந்து சுவாசத்தில் பட்டதும் நீர் நகர் தாண்டிய தூரக்காடுகளைப் பற்றி வலியுடன் முணுமுணுத்தாள். முற்பிறவிகளாய்த் தொடரும் எலும்புகளின் செந்நிறமாடங்களில் நிழலாக மறைந்து தோன்றும் மேகலா ஒளிர்வு கொள்ளும் கற்பளிங்கில் கன்னிமை காக்கப் பளிக்கறையில் மிதக்கும் பிம்பமாய் அலராகிப் பேசுகிறாள் பாட்டியிடம். நவநாதங்கள் இருட்டில் முளைவிட்டு வெளிறிவளர்ந்து பாட்டியை எட்டிப்பார்த்து உதய குமாரனை மறுத்து சுழல்வண்டாகி அவன் உவவனத்தில் பின் தொடர்வதினின்று விலகிக் கணிகையர் சுரத்தாவரத்துள் மறைகிறாள். மேகலா வைத்தேடிச் சுதமதி எல்லா ராகங்களிலும் யாழ் இசைக்க மணிபல்லவச் சிங்கமொன்று செந்நிற நில உருக்கொண்டு யாழ் அதிர்வுகளில் உலவி பாட்டியின் மனத்தில் உறுமும். மயக்கத்திலிருந்த கமலை ''அது என் பிறவி மிருகம்

எலும்புத்தொடரில் சுழன்று மறையும் நீர்ப்பரப்பில் மங்கலாய் மூதூர் தெரிகிறதே” என்றாள் சிங்கத்திடம். அவள் நாடித் துடிப்புகளை ஜீர வேகத்தில் உணர்ந்த சிங்கம் பாட்டியின் வெப்பமான குருதியில் படர்ந்து பூர்வப்பிறவியைத் தொடுகிறது. அரூபமாய் மூச்சுவிடும் மூதோரின் நீழல்கள் வந்தன. மனித மிருக பூதக முனிகளைத் தாவரங்கள் அடையாளம் காணக்கூடும்.

சமையலறையில் எட்டிப்பார்த்த தும் தனிமையில் திறந்து கொண்ட கதவுகளைத் தாண்டி துயரங்களின் இருட்டைட அழைத்துக் கொண்டு அண்ணாவிகளின் மாக்கல்லில் வளைந்த பாரி நாயனம் சுருளும் காற்றுடன் வால்நரிகளும் ஊளையிட்டு தொலைவில் சிரித்தன. குளியலுக்காக அங்ஙனத்தில் நிர்வாணமுதலையாகக்கிடக்கும் கமலையைத் தங்கள் புராதன மூச்சினால் சூடேற்றியது பாரிநாயனம். கருப்பு மரத்தண்டுத்துளைகள் திறந்து இசைச்சாகரத்தில் எல்லா மிருங்களின் நரிகளின் முக்கலும் முனகலும் இடை..விடாமல் கேட்டது. பனைமர உரசலில் காட்டு வேம்பில் கிசுகிசுக்கும் நூறு அடுக்கைக்கொண்ட காற்றிலிருந்தும் தேள்கொடுக்குவளைந்து விஷமேற்றிய தந்திகள்

உருண்டு சப்தித்தன ஆழத்தில். காட்டு முள்பூவின் வாடையால் மாட்டுத்தொலி விரிந்து பகடைவிரல் முழக்கம் பாட்டியின் காதுகளில் உரசியது. பற்றி இருவயதான கிழத் த்துவிட்டு காலடிகளில் வால் நரிகள். தெரு தாவர சீர்த் தொட்டிகள் அருகில் சமையலறையில் அசைந்து கொண்டிருந்த நூற்றி இருள தாசி கமலை உறுமுவதை தள்ளி நின்று பார்த்துவிட்டு காலடிகளில் சப்தமில்லாமல் வெளியேறிப்போயின தங்கவால் நரிகள்..

பேசிக் கொள்வதைக்

களின் மீது படிந்த பச்சைப்

நீள சர்ப்பராசிகளின் ரோகங்களில் அசைந்த சாவ

 வாடை காதுகளி,  -  நிழல்களில் தோன்றியது. இருட்டில் தண்ணீர்த் தொட்டிகள் ஆண்பார்வைபடாத ருதுக்கள் நீருடன் கரைந்து பேசிக் கேட்டாள் தாசிகமலை.. நீர்த் தொட்டிகளின் மீதுபடி பாம்பு ரஸத்தில் எரியும் அகலில் தோன்றிய நீளசர்ப்ப மூச்சும் நெளிவும் இசைஉள்ளில் பதுங்கிய ராகங்களில் அது தானத்தில் நீரில் விரல் நீட்டித் தொடுகிறார்கள் தாசிகள் . பாம்பின் திரிஒளிபடிந்த நீர் சிற்றலைகளாக காற்றில் பரவி வி-ே சாயைகளில் கமலையின் முன் உருவில் நகர்ந்து சென்றது நகர் நீக நீரில் மிதந்து வந்த பனைஓலை முறிகளில் கீறிய முதநூல்களின் இடை குறிப்பு சிங்கமுகயாழின் மந்திரத்தில் நரிவினாஞ் செடிகள் என சூரியக்கலையாகவும் பச்சைப் பாம்பு அரகிருந்தது இருட்டில், தொட்டிகளை எட்டிப்பார்த்து உரையாடும் ஸ்திரீகள் நீரில் ரோஜா சம்பங்கி இதழ்களைப் பிரித்து மிதக்கவிட்டு நீரில் இறங்கும் இகம் சாற்றில் தைலமெடுத்து கூந்தல் தடவுகிறார்கள் விரல்களால். நீரில் முகம்பார்த்த தேவாங்கின் தோலில் எழுதிய லிபிகள் நீரே வாசித்திருக் கும். உறையும் சப்தங்கள் மெல்லக் கரையும் நீரின் இசை சலனமான கணத்தில் கமலை வீடு இசை கொள்கிறது. தாழ்வாரத்தில் ஆ டும் தாக் கணாங் குருவிகளின் கீச்சொலிகள் நீரைக் கீறி வடித்த காட்டின் தாவரமொழி கமலை காதில் விழுந்தவாறிருக்கும் தீராமல், தானே திறந்தபல ஜன்னல்களில் மறைந்த ரூபங்களும் ஓணான்களும் பெரிய பல்லிகளும் ஊர்ந்து வந்து சுவர்களில் மூச்சு விட்டுக்கொண்டிருப்பதை கிழத்தாசியின் ரகஸியமான கண்கள் பார்த்தன. மறைவிடங்களில் திரியும் உயிரினங்களைக் கூவி அழைத்தாள் அடிக்குரலில். கீரிகளும் புனுகுப்பூனையும் கருநாயும் காட்டு அணிலும் மண்ணைக் கிளைத்த வாறு படைபடையாய் கனவின் வளமையில் பிரவேசித்தன வீட்டுக்குள். கருணாமிர்த சாகரத்தில் ஐந்துயிர்களின் உயிர் ஆவிசப்திக்கும் கூட்டி சையில் ருத்ரனின் கால் பாதத்தில் பல்லி ஊர்ந்து தன் நாசியில் இருந்த மூச்சினால் நாதத்தைத் தூண்டியிருக்கும்.

தேவதாசியின் கட்டளைக்கணக்கு

தேவதாசி முறை புத்தமதத்திலும் ஜைன மதத்திலும் பரவலாக இருந்து வந்திருக்கிறது. மத்தியகாலத்தில் இந்துக் கோயில்களிலும் புத்தமடங்களிலும் தேவதாசிகள் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. சீனாவிலிருந்து வந்த நாடோடி காமோஸ்டாவோவின் கூற்றுப்படி குஜராத் பிரதேசத்தில் நாலாயிரம் புத்தக் கோயில்கள் இருந்ததாகவும் அதில் இருபதாயிரம் நாட்டியப்பெண்கள் தினம் இருமுறை பாடி ஆடிப் புத்தர் சிலைக்குப்பூச்சொரிந்து உணவிட்டு வந்ததாகத் தெரிகிறது.
ஒரு ஊரிலே ஒரு தேவதாசிக்கு ஒருவராகன் விகிதமாய் அத்தேவ தாசிக்குப் பட்டினம் ஆளுகிற வம்பமெளரிய அரசனுடைய ஊழி யக்காரன் புத்தமடத்துக்கு வந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டான். அது எவ்வாறெனில் நாள் ஒன்றின் காலையும் மாலையும் புத்தர்முன் ஆடிப்பாடும் வேளை முடிந்ததும் இசை கற்பித்துத் தரவேண்டும். ஒரு திங்களுக்கு முப்பது வராகன் கட் டளையாகையால் என் கையில் ஐந்து மோதிரங்கள் இருக்கின்றன. அவை முப்பது வராகனில் செய்யப்பட்டவை. திங்கள் ஒன்றுக்கு நாள் முப்பதுக்கு ராகம் சொல்லி நடந்துகொண்ட நாளைக்கு ஐந்து மோதிரங்களிலும் உண்டான வராகன் கணக்குப்பார்த்து கொடுத்து விட்டுப் போகிறேன். அரிய ராகங்கள் அடங்கிய ஐந்து மோதிரங்களும் பிதிராய்ப் பல தேவதாசிகளின் கைமாறிவந்தது. அதை அணிந்து கொள்ளும் போது அவந்திகாபுரத்திலிருக்கும் பவிஷ்ய புராணத்தில் இந்து வழக்கப்படி கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டவள் சொர்க்கம் அடைவாள் என்பது புராண வாசகம். புத்தரை நாடிய தேவதாசியோ சொர்க்கத்தையும் கடவு ளையும் இசையில் படைத்துக்காட்டி அந்த ஐந்து மோதிரங்களுக்கும் கீழ் கண்டவாறு இசை கற்பித்துக் கணக்குத் தீர்த்தாள். அல்லாமல் அரசன் ஒரு வேளை வேறிடங்களுக்குப் பயணம் போகச்சொன் னால் இசை கற்பித்த நாளைக்கு ஐந்து மோதிரங்களிலும் உண்டான வாரகன் கணக்குப் பார்த்து கொடுத்து விட்டுப் போகிறேன். அரிய ஐந்து தேவதாசி மோதிரங்களும் எத்தனை வராகன் எடை, என்றால் 'க' வராகன் எடையில் 'க', 'உ' வராகன் எடையில் 'க' இருவராகன் எடையில் க' ஆக முப்பது வராகன் எடை என்ற வாறு தனது சீதள ஓலையில் எழுதியிருந்த கணக்கை நீட்டினான் டாவோ. அடுத்தமடிப்பில் செல்அரித்த புகார் தெரு வந்தது.


19. நீர்ப்பாழி


சாம்பல் நிறப்புகார் நகரில் இருந்த பவளப்பாறைகளில் புராண காலச் சொற்களின் ஒழுங்கு வரிசையில் புதிரும் ஒளியும் நிழலும் பின்னிப் பிணைந்த ஆமைகள் வெந்நண்டுகள் பழுப்புக் குளிர் நள்ளி கூர்மம் உப்பில் துவழும் ஏரலும் சுரிமுகக்கொம்பு நீட்ட கிளிஞ்சில் அப்பிய காளான் திட்டுகளில் பொங்கிய வெளுத்த கோரைகள் உயிர்ச் சிப்பிகளின் தடங்களில் ஊர்ந்து பதிந்தபுகார்க் கோடு நீரின் உருவாகத் தோன்றினான் மறலிப் பிச்சன். அவன் கல்சிரசில் சலஞ்சலச் சங்கும் சுரிமுகக்கோடும் மகரத்தின் சிமிழ்திறந்து கூன் முள் குத்த கவைமுட் கள்ளித் தலைகளுடன் அசையும் கபாலத்தில் பூத்த நெருஞ்சியே காயாகி ..............................

187 28

Wednesday, November 07, 2018

நரகம் சி. மணி

நரகம்
சி. மணி 
http_tamildigitallibrary.in_admin_assets_periodicals_TVA_PRL_0000838_ezhuttu_1962_04-43
தனிமை, விழியில்
விழுந்து விழுந்த இனிமை,
இடைவேளை யின்றி யின்றி
ஆசையதை நீட்ட நீட்ட,
கூடற் கனவைக் கூட்ட கூட்ட,
சகதி கிடைத்த கொசுவாய்
வஞ்சிக் குலையைப் பெருக்க பெருக்க,
பித்த மேறிய உடலாய்
உடலும் உள்ளமும் அரிக்க அரிக்க,
பசி தீண்டிய நாயாய்                                     10
தெருத் தெருவாய்
அலைக்க அலைக்க...

நான்கு விரல்குதி யிட்டயிவ்
வாண்டு செருப்ப ணிந்து,
சேலைத் தலைப்பை பட்டம் விட்டு,
இடவலமாய் மருங்கசைத்து,
சோரில் சோர்வெழுப்பும்
கோதை நீளம் அரையாக்கி
தொங்க விட்டக் குதிரைவால்
முன்னும் பின்னும் நடையோடு                        20
இசைந்தே அசைந்து வாவெனக் கை
அசைத்தே யழைக்க வலம் செல்லும்
பைங்கொடி நிறையருந் தெருக்கள் ....

மரீனா மணற் பரப்பில்
வாரத்தில் ஏழுமுறை
மாலைக் கிளரும்
மாலை வேலையில்
அமைதி தேடிச் சென்றால்
எதிரொலிக்கும் கடலோரம்
கருமீர மணல் வெளியில்
ஆழியீந்த அணங்கை யெண்ணி                      30
கண்மூடி கால் கட்டி
மனதைத் தட்டிக் கொடுத்திருக்க
அவர்கை வினையெல்லாம்
ஓடையின் ஓலிசெய்ய,
துள்ளும் நகையெல்லாம்
இசைக் குழுவை நினைவூட்ட
செவிவழியே புகுந்த பெண்கள்
விழித்திரையை விலக்கிட ;
வாரிய குழலெல்லாம்
தென்றலில் மீனாகும்,                                       40
கண்களின் ஒளியெல்லாம்
வானின் வில்லாகும்,
விரிந்த இதழெல்லாம்
பிளந்த நெஞ்சாகும்.

கால் பட்ட மணலிலும்
கண் பட்ட மனதிலும்
பல சுவடு பதித்து,
பதித்த நிலை தெரியாது .
குதித்தோடும் ஒரு கும்பல் ;
அதைத் தொடரும் மற்றொன்று :                    50
இன்னல் தனித்த வராதா?

காலத்தின் கீற்றுகள்
வாசமாவில் மறைவதென
உள்ளங்கைக் கோடுகள்
இருளில் மறையும் வேளை
தந்த துணிவு செங்கையை
உந்த நின்ற தையலர்,
தலைவன் வரவும் சற்றே
உயரும் தலைவி விழியாக
மறைக்கும் சேலை சாண் தூக்கி,             60
காக்கும் செருப்பை உதறிவிட்டு,
கடலுக்கு வெம்மை யூட்ட
கிழக்கே அடிபெயர்ந்து ,
அலையை அணைக்க விட்டார்
ஓரடி ஒளிரும் கால்கள்
மாசறு மதங்கள் போல
வானுக்கு வழிகாட்ட .

பாழும் காற்றில்லை
தாவும் அலையில்லை
தெறிக்கும் துளியில்லை                       70
பரவையல்குல் ஒளி
புறத்தளிப்ப வில்லை.

துருப்பிடித்த இதயத்தை
துடைக்க வந்த நேரத்தில்
துருவேற்றுவோர் எத்தனை?
வளைந்திட்ட வாலை
நிமிர்த்த வந்த இடத்தில்
வளைத்து விடுவோர் எத்தனை?

மரீனா கடற்கரை
'லாங் பீச் ஆகாதோ ?'                                80
கூவமூறும் நகர்
சேய்னோடும் நகராகாதா?'
நானுழலும் இப்பகுதி
மேற்புறத்தில் இருக்காதோ ;
தென்கடல் தீவாக
இந்தியா இருக்காதோ ;

தமிழகம் கீழுமல்ல
முழுதும் மேலுமல்ல :
உலையேற்றி விட்டு
சோறாக்க மறியல் ;                                 90
பட்டினியும் அழிவுமே
கிடைத்த பயன் ;
பின்னாலும் போகவில்லை
முன்னாலும் நடக்கவில்லை;
நடுக்கிணற்றில் நிகழ்காலம்.
காழிட்ட மரபு
தாழிட்ட துணிவு
சிக்கலை வெட்ட
கைக் கொடுக்க மறுக்க -
செய்வ தென்ன ?......... 100

காமம் :
பல நோய் ஒரு மொழி
புற்று சோகை ஈளை
இரத்த அழுத்தம் இன்னுமென்ன
உண்டோ அத்தனை அத்தனையும்
காமத்துள் அடக்கம்..

வாங்கிய பாவம் போக்க
ஆடது வெட்டுதல் போல
தேங்கிய காமம் இறைக்க
திரைப்படம் தேடிச் சென்று                             110
அரங்கில் அடி வைத்தால்
தோகையர் குழாமும்
மைந்தர் சும்மையும்
துவன்றி யெங்கும்
காமனுக்கு ஓய்வில்லை
(வேண்டும் அவனுக்கு).
என தல்ல கலை வளையும்
என தல்ல காளையர்
குழாம் நீங்காப் பொழுது
எனக்கொண்டு மணியை                             120
முன் சேலைச் சரிவை யெண்ணி
அளந்திடும் குமரிக் கூட்டம் :
அதைச் சூழ்ந்து வளைத்து
புகைத்து இமைத்து சிரித்து
மறக்க முயலும் என் கூட்டம்.
ஒலியெழுப்பி, மறதி தேடி
வந்தோரை உலுப்பி, பணம்
கொடுக்கச் சொன்ன மணி
சிதறி தொடர்பை
நெறுக்கி சென்றது. 130

போன யுகத்தில்
படித்த தோழி
எவளா வதுஒருத் -
தீ
வரமாட்டாளா?

எட்டினால் தொட முடியும்
இதழ் தரும் சிரிப்பொலி
தெறித்து வளைந்து சுருண்டு
சுழன்று சுழியிட்டு வந்து
உந்திச் சுழிக்குத் தீயிட்டு                      140
முதுகுத் தண்டை எரியவிட்டு
மூளை நெளிவை நேராக்கும்
சூளையாய்த் தகிக்கும் சூட்டால்.

அரங்கத்தின் இருட்டில்
படம் பார்க்க யார்விட்டார்?
திரைப்படத்தைத் தோற்கடிக்கும்
மெய்ப்படம் சுற்றுமுற்றும்
காளானாய் பூத்திருக்கும்
பார்வைக்குத் தப்பிவிட்ட
பெருங் களிப்பில்                                             150
பள்ளியறை ஆக்கிவிட்டார்.
ஒரு நாள் :
பலவண்ண ஒலிகள்
பழங்கதை அசைவுகள்
இருளின்ப வகைக்கூவ
சகியாமல்,

வயதோ இருபத்தேழு
மணமோ ஆகவில்லை
இன்னும் எனக்கு
எனச் சொன்ன போதும்                           160
என்ன பயன்?

வயிற்றில் வளரும் கருவாய்
உதைக்கும் நெளியும் கிளர்ச்சி
ஊட்டும் காமமே நிறைக்கும்
எங்கும் .........

வேதனை குமிழியிட
இடுக்கண் களையும் வழிதேடி
எண்ணச் சிக்கல் பல போட்டு
வீட்டுச் சுவர்க்குள் முடிக்க வெண்ணி
தவமிருந்த காரணத்தால்                                170
தானியங்கி வரவும்,
சூடகத் தளிர்க்கைம் மாதரொரு
சிகரெட் பிடிகை மைந்தரும்
ஊடுற நெறுக்கி யேற்
சேவலே முன்னென் போரும், இல்லை
பெட்டையே முன்னென் போரும், இல்லை
வரிசையே நன்றென் போரும், ஏறுவோரும்
தேர்ந்ததே தேரினல்லால் யாவரே தெரியக் கண்டார்?

குழுமினர், துவன்றி முயல,
கால் மிதிப்பன, கைபிடிப்பன,                                 180
தோள் இடிப்பன, மயிர் இழுப்பன்,
பொய்யோ வெனும் இடையோடு
ஐயோவெனும் அரும்பினர்
கிடைத்தாரென நெறிப்பன்,
பாடியல் யானைப் பந்தியங் கடையின்
கூரியல் சாதனை நெறுக்கி ஆய்வன
எல்லாம் வண்டியில் அடுத்த கணம்
கலைந்த மழையுள; மறைந்த பூவுள் ;
தாங்கிய செங்கைத் தலைக்கண் மேலுள்ள ;
ஒலித்த வளையுள் ; ஓய்ந்த விரலுள;                     190
சரிந்த தலைப்பால் தெரிந்த பூவுள.

பாலூட்ட கிடைத்தனவோ? பால்
உணர்ச்சியூட்டிடவே
ஆழக் கழுத்தெடுத்து
நீளம் மிகக்குறைந்து
சேரப் பிடித்த சோளி,
நின்று கவனித்து சோர்வு
நடை பின்னச் செய்யும்........

வீட்டிற்கு வந்த உடன்
இலக்கியத்தில் தஞ்சம் புக
அருப்பேந்திய கலசத்துணையமுதேந்திய மதமா
மருப்பேந்திய எனலா
முலை வஞ்சி........ காவின்கீழ்
போத ரகடாரப் புல்லி முயங்குவேந்
முகடு காப்பியாத்து விட்டாங்கு ..........
சேர்ந்த மார்பில் கன தனம் யிரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற் றென்றெ அங்கையால் தடவிப் பார்த்தாள் ;
செவ்வரியால் சுடும் விழியால் அறையை வலம் வந்தேன்,
என் காண்பேன் என்னல்லால் யான்?
தாள் புரட்டுந் தொறும் பெரும்                              210
கிளர்ச்சி பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
போல வளர்கின்றதே
என் செய்ய?

கடலாடை நிலத்துக் கவிஞர்
காலமெலாம் கனவில் நனவில்
கற்பனையில் காணும் களிக்குளத்தை
வெட்டுண்ட புண்ணென விம்மிய
பருக்களென பட்டென்றுடனே
கதவாய் மூட வியலாதே.

உந்தாது நெய்வார்த் துதவாது தானெரியும்
நந்தா விளக்கின் நெடுஞ்சூடு
குளிப்பினும் சுடுமே குளிர்சாந்தம்
தெளிப்பினும் சுடுமே.........

மூட்டை யொழிக்க கொல்லி தெளிப்ப
முடுக்க வானொலிப் பெட்டியினை :
வாடிக்கை மறந்ததும் ஏனோ?
பார்த்தால் பசி தீரும்.

திடுமென் றோராண் வரவே
வாரிச் சுருட்டும் மரபு 230
வளர்த்த வொருமங்கையென
விரைந்தே யணைத்து விட்டு
பேயறைந்த நிலையில் வெறிக்க ,
ஈயிரண்டு ஒன்றும் நிலை கண்டு
துள்ளிப் பதறி தவிப்படங்க
இறையறைக்குள் நுழைந்தவுடன்
கடவுளைக் கண்டு கரம் குவிக்
காமலே திணறித் திடுக்கிட்டு -
முக்தி :
சிவனின் மிக வெளிய உருவச் 240
சிலையது உணர்த்துதல் தானோ?
காயெல்லாம் சிவலிங்கம்
கனியெல்லாம் சிவலிங்கம்
விழியினிலே படுமெல்லாம்
எழிற்கோலம் இணை கூடல்
அதை நினைவூட்ட வூட்ட,
பஞ்சணை போலரு ளாளன்
யாரினி யுண்டெனத் தேர்ந்தே
தஞ்சம்
அடைய எண்ணிச் செல் லுழி 250
தற்செயலாய் விழி
அத்தளை யில்லா வெளியொளி
பலகணி யூ டேக்
எதிர்வீட்டுக் குலவிளக்கு
தீராத் தீராப் புதிர்,
கோடை மஞ்சற் புல்வெளியில்
ஊரும் அரவின் மென் னொலியாய்
சேலை நடையால் சரசரக்க,
அடங்காக் குழற்சுருள் ஒன்றிரண்டு
மிடுக்காய்த் தழுவிக் கொஞ்சும் 260
மாசில் திங்கள் நெற்றியிலே
நால்வர் நோக்கைக் குவித்தீர்க்க
வாலம் திலகம் ஒன்றிட்டு,
ஏற்றத் தாழ்விக் குறையுலகில்
தேவை தேவை யெழிற்படுத்த
எனவே கூறும் நிறைவடிவு
கண்டோர் நெஞ்சாய் ஆட ஆட,
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும்
இரை நோக்கிய புலிவிழியாய்
கட்டிற் கூத்தை 270
முன்கண் டொளிர,
வாலைமலர்க் கொத்து கூந்தற்
கற்றையுடன் கவிதை பாட
கள்ள விழி அறியாப் பேதை
சந்தநடை யிட்டிரைந் தேக,
நெஞ்சு நினைவா யூறும்

நண்டு நுரைவா யோரம்
நீள்கடற் கரை மணல் விரிப்பில்
சேவடி புதைத்து புதைத்து
சிறுமணல் சிதற வெடுக்கும் 280
சந்தனக் குமரியின்
தேன் கூடு மறைக்கும்
சேலைத் தலைப்பாய்
காற்றடைத்த பை நடுங்க,
கேளா விழிதனைச் சினந்து
சுடுவிரலால் மிகவழுத்தி,
பொதிவண்டி இழுத்திடவே
பெருமுயற்சி செய்மாடென
தள்ளாடித் தள்ளாடி

படுக்கையில் விழுந்திட்டால் 290
துயிலழகி ஊடி நின்றாள்.
எரிக்கும் வெயிலதனில்
துடிக்கும் என்பிலதாய்
இப்படியும் அப்படியும்
தவி தவித்து மயங்கியபோது
உலகத்துப் பெண்ணெல்லாம்
அணங்காகி வெறியூட்ட
விழித்துயிர்த்து மயங்கியோர் கணம்
கழித்து விழித்து உயிர்த்து
நரகம் 300
பெரு நகரம்.

அருமைச் சேவல் தண்ணொலி எழுப்ப
விண்ணென் றெழுந்ததும் என்ன தெரிவது
பலகணி வழியே?
கொடுத்து வைத்தவன் தன்னொரு பாதி
வாயில் முன்னால் ஆடை நெகிழ
கூடல் மயக்கைக் கூட்டி யோட்ட
பொல்லாப் பெருமுயற்சி எடுத்தனள்.
பகல் பன்னிரண்டு மணி : பின்
இரவு பன்னிரண்டு : 310
நரகப் பகல், பெரு நரக
இரவு எத்தனை எத்தனை?
ஐயோ ..........
திரைப்பட வரங்கு நுழைவதற்கே
சீட்டு வழங்கும் அறைக்கதவு
திறப்பது எப்போ தெப்போதென
உளம்வெறி யேறப் பார்ப்பதுபோல்
தந்தைவாய் திறப்பதென்றோ
எனவயர்ந்து நோக்கி நோக்கி,

விளக்கணைப்பை வரவேற்பை 320
செய்திச் சுருளை திரைப்படத்தை
மனக்கண்ணில் ஓட்டும் நிலை ;
தானியங்கி ஏற நின்று நிற்காமல்
போவதை ஏங்கி நோக்கும் மலடி நிலை.

புணர்ச்சி மறத்தல் இன்றி
புறவொழுக்கம் உயிரினும் ஓம்பி
பேய்க்காற்று சீறும்போது
மொய்குழல் தொங்கு மலராய்
வீழ்ந்தொழிந் தாகவேண்டும் ; 330
தேய்புரிப் பழங்கயிறு
தாங்கவே தாங்காது
காலம் வரும் அதுவரை
காற்றிருந்தால். 334