Wednesday, February 18, 2026

பள்ளிகொண்ட புரம் - ந. முத்துசாமி :: கசடதபற 8: மே 1971

 பள்ளிகொண்ட புரம் - ந. முத்துசாமி ::
கசடதபற 8: மே 1971
===========================
ஆசிரியர்: நீல. பத்மநாபன், வாசகர்வட்ட வெளியீடு, சென்னை -17. விலை: 6.75.
=======================================
"போர்க்களத்துப் பிணங்களைப் போல், மனித உடல்கள் தாறுமாறாய்க் கிடந்து நித்திரை கொள்ளும் தரித்திர கோரம்...'

விமர்சகர்களால் இலக்கியத்தரமான நாவலாசிரியர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நீல. பத்மநாப னின் இரண்டாம் நாவல் இது. இவருடைய முதல் நாவலான 'தலை முறைகள்' தமிழில் நல்ல நாவலென்று ஒருமுகமாகப் பெயர் பெற்றதே இவருக்கு தரமான ஆசிரியர் என்ற பெயரைத் தேடித்தந்தது. கேரளா வின் சூழலை சமூகப் பழக்கங்களை வைத்து எழுதும் இவர் எழுத்து தமிழுக்குப் புதிய பரிணாமத்தைச் சேர்க்கும்படி அமைகிறது. மொழியால் இலக்கியம் வளர்கிறது; இலக்கியத்தால் மொழி வளர்கிறது. இலக்கிய வளர்ச்சிக்கு தன் மொழியால் இவர் உதவிக் கொண்டிருப்பவர். சமுக இயல் பார்வையை அடிப் படையில் கொண்டிருக்கின்றது இவர் எழுத்து. அதன் அழுத்தமான பதிப்பு 'தலைமுறைகளில்' தெரிந்தது. அதுவே 'தலைமுறைகளை' மேன்மைப் படுத்திற்று. பள்ளிகொண்ட புரத்திலும் இவருடைய அடிப்படை நோக்குத் தென்படுகிறது. ஆனால், அதுவே நாவலாக இல்லாமல் வேறுபட்ட பல பார்வைகளின் அழுத்தம் இடத்திற்கு இடம் மாறு கின்றன. இது நாவலை வெகுவாகப் பாதித்திருக் கிறது.

அனந்தன் நாயரின் மனைவி அவரை விட்டு, ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகளை விட்டு விக்ரமன் தம்பி என்ற தாசில்தாரைச் சேர்ந்ததை வைத்து, குழந்தைகள் இருவரும் வளர்ந்து தனி சமூக வாழ் நர்களான நிலையில், ஒரு நாள் விடியுமுன் னிருந்து, மறு நாள் விடிவை நோக்கும் நேரம் வரை கிட்டத்தட்ட 48 மணி நேரத்தில் தூக்கத்தில் கழிந்து சில மணி நேரங்களைத் தவிர்த்த பொழுதில் அனந் தன் நாயரின் மனப் போராட்டமாய் நாவல் நடத் தப்பட்டிருக்கிறது.

அவராக இருந்த நேரயோசனை கள், பார்த்தவை தூண்டும் நினைப்புக்கள், சந்தித்தவர் கிளப்பிய உரையாடல்கள், தன் மக்களிடத்தில் பேசி தீர்வு காண முனைந்தவை என்று நடத்தப்படுகிறது. ஆரம் பத்தில் நாயர் சமூகப் பழக்கங்கள் ஒரு சமூக இய லாளனின் நோக்குடன் இந்நாவலில் ஆராயப்படப் போகிறது என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி நாலாந்தர தமிழ் நாவலின் கதைப்போக்கில் நாவல் திரும்பிவிடுகிறது. அங்கங்கே மட்டும் அவ ருடைய அடிப்படைப் பார்வை தலைகாட்டி வாசகனின் முழு நம்பிக்கை இழப்பிலிருந்து அவரை மீட் கின்றது.

ஓடிப்போன தன் மனைவியை நினைந்து நினைந்து அழுங்கும் ஒரு கணவனின் நினைவுகள் ஒரு முக்கிய கட்டப் பிரதிபலிப்பாக வேண்டிய தற்குப் புறம்பாக எழுதப்படுகிறது. அவள் போன இடத்தில் அதிருப்தி யுற்றுத் திரும்பி வருவதாக, இவர் ஆன்மீக மார்க் கத்தில் ஈடுபாடு கொண்டு ஒரு பிரமாதமான புரிந்து கொள்ளலில் அமைதி கொண்டிருந்த நேரத் தில் இவரிடம் கேட்டதற்கு இவர் அங்கேயே தங்கி இருக்கும்படி உள்ளக் கிளர்ச்சியில்லாது சொன்னது நாவலில் இவர் மன ஓட்டத்தில் எந்தப் பாதிப்பை யும் காட்டவில்லை.

பிரசவ, மயான வைராக்கியங்களாகக் கடந்து போகிற சாதாரண மன நிலையாக அவள் அவரை முதல் முறை, விலகிப் போன பிறகு வந்து சந்தித்த சம்பவமும் சித்தரிக்கப்பட வில்லை. அது வாழ்க்கையைப் பிரமாதமான ஒரு புரிந்து கொள்ளல் அவர் அமைதி கண்ட விதமாக வாசக மனம் நம்பும்படி அழுத்தமாக சித்தரிக்கப்படுகிறது. மற்ற இடங் களில் சாதாரணமனிதனின் போராட்டங்களில் கிடந்து அழுங்குகிறார் அனந்தன் நாயர். அவர் மனப்போராட் டத்திற்கு ஆளாகி இருந்தும், பல இடங்களில் மனோ தத்துவ உண்மை யோடு ஒட்டியிருந்தும், இந்தச் சந்திப்புகள் பாதிப்பு முடிவில் வெளியிடப் படும்போது மொத்த மனோதத்துவத்திற்கு முரணாகி முன் போன வைகளை பாதித்து அவரை உருட்சிப்படுத்தாது தட் டையாகக் காட்டு கிறது. இந்தச் சந்திப்பை ரகசிய மாகக் காப்பாற்றி, தாயை மகனும் மகளும் சந்தித் தது முடிவில் வெளிப்படும்போது நாவல் முடிவுக் காகக் காப்பாற்றியது போல் நினைக்கத் தோன்று கிறது.

மகன் அம்மாவை நிந்திக்காமல் தனி சமூக வாழ் நாளில் தீர்க்கத் தோடு ஏற்றுக் கொள்வதும், பெண் அம்மாவை இதே தீர்க்கத்தில் நிந்தித்து தந்தையை ஏற்றுக் கொள்வதும், ஃபிராய்டின் பெண் தந்தையை மகன் தாயை விரும்பும் மனோதத்துவ விவகாரங்கள் என்று எண்ணத் தூண்டு கின் றன. ஆனால், அவை மறைவாக இருந்தும் சூசகமற்று, நாவலைப் பாதிக்காமல் அந்தக்கட்ட ஆசிரிய மன நிலை யில் எழு தியதுபோல் தோற்றம் கொள்கிறது. இதற்கு மாறாக மகள் தாயையும், மகன் தந்தையையும் ஏற் றுக் கொள்வது என்றால் 'நூலைப் போல சேலை; தாயைப் போல புள்ளே" 'தாயே தண்ணித் துறையிலே பாத்தா பெண் ணெ வீட்டுலே பார்க்க வேண்டாம்' என்னும் வியாக்யான சாத்தியத்திற்கு ஆளாக்குகிறது என்பதை ஏற்றுக் கொண்டே தான், அவர் எழுதிய விதம் ப்ராய்டின் வழியில் வாசக (இன்னொரு ) வியாக் யானத்திற்கு

இடமளிப்பதாக, துருத்தலாக அன்றி ஒளிப்பரவலாக நாவலில் காட்டப்பட்டிருந்தால் கன மேற்பட்டிருக்கும் என்றும் தோன்றுகிறது. அனந்தன் நாயரின் அக்காள் பையன் (ஆன் மீகம்) உருவான அளவு மகன் உருவாகவில்லை. அவன் ஆன்மீகத்தில் துளை பவனானால் இவன் வாழ்க் கையைப்பற்றித் திடமான ஒரு கொள்கையுள்ள வனாக இருக்கிறான். இருப்பதை இருக்கிறபடியே ஏற்றுக் கொள்ளும் மன நிலையுள்ள இவன் உருவாகாமல் போனதும் இதற்கு நாவலில் இடமில்லாது போன தும் ஒரு உருவச் சிதைவு.

தாய், தந்தை, மகன், மகள் உள்ளப் போராட் டம் விரிவுபடவில்லை. முடிவில் கொண்டு குறுக்கப்படு கிறது. இது நாவல் முழுதும் வியாபகம் கொண்டிருக் கலாம் என்று அங்கங்கே எண்ணத் தோன்றும் பல பார்வைகள் நாவல் முழுதும் தென்படுகின்றன.
ஆன்மீகப் பார்வை வந்து போகிறது; வியா பிக்க வில்லை. எல்லாவற்றிற்கும் மேலாகப் பள்ளிகொண்ட புரம் என்ற தலைப்பின் வியாக்யானமாகவும் பரிண மிக்கவில்லை. ஆனால், கதை சொல்ல ஏற்றுக்கொண்ட உத்தி பள்ளிகொண்டபுரமாக வியாக்யானம் கொள்ள உதவக் கூடிய உத்தி. ஆரம்பத்தில் பின்பற்றப்பட்டு பின்னர் நழுவி விடுகிறது. பள்ளி கொண்டபுரம் ஒரு பிரதேசமாக இன்றி உலகாக விரிந்ததாகவும் இல்லை.

இவர் மிகவும் பிரக்ஞையுள்ள ஆசிரியர். மகள் தன் சிநேகிதி இறந்த சம்பவத்தைப் பற்றித் தந்தையிட் மும் அண்ணனிடமும் சொல்லும் போது உணர்ச்சி வசப்பட்டுச் சொல்கிறாள். அண்ணன் சொல்கிறான் 'ட்டூ ஸென்டி மெண்டல்' என்று. அவள் 'இருக்க லாம் சேட்டே...! பெண்கள் எங்க வாழ்க்கையே ஸென்டிமென்டலாகத்தானே இருக்குது .... பிறகு விலாஸினியும், நானும் மட்டும் விதிவிலக்காகவா போகிறோம்....?' என்பது ஆசிரியர் வாசகனுக்குச் சொல் லும் சமாதானமாகத் தோன்றுகிறது. ஆசிரியரின இப்பிரக்ஞை நிலை ஆக்கபூர்வமாக நாவல் முழுதும் காட்டப்பட்டிருக்க வேண்டும்.

இவ்விதமாகக் கேள்விகள் கேட்கத் தோன்றாமல் எழுத்தாளனுக்கு யோசனை சொல்லத் தோன்றாமல், எழு தியதை எழுதிய விதமாகவே ஏற்றுக்கொள்ள வைப்பது தான் எழுத்தின் வெற்றி. இத்தனைக்குப் பிற கும் ஒன்று மாறாமல் நிற்கிறது. அது அவர் எழுத்து தமிழுக்குப் புதிய பரிணாமத்தைச் சேர்க்கும் உண்மை . அவர் தன் அடிப்படைப் பார்வையில் புரிந்து கொண்டு, அதை முற்றிலும் எழுத்தில் கொண்டு வருவாரானால் அவர் வெற்றி முழுமையாகும்.

இவ் விமர்சனத்தைக் கொண்டு எந்தத் தீவிர வாசகர்களும் பள்ளி கொண்டபுரத்தைப் படிப்பதற்குத் தயங்க வேண்டியதில்லை. நாவலாக அது வெற்றி பெறவில்லை என்று நான் நினைப்பதற்கு மேலாக வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் அதில் இருக்கின் றன.

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும் rrn.rrk.rrn@gmail.com இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து translate.google.com, docs.google.com, msword translateஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்