சூர்யன் தகித்த நிறம் 
லட்சுமி கண்ணன் (காவேரி)
மேலே சூர்யன்எரிந்து -
அமானுஷ்யமாக,
இருந்தும் இச்சூர்யனை 
ஆர்யன் என்கிறார்கள் -
முக்கியமான எல்லாமே 
விந்தியத்துக்கு அப்பால் வசிப்பவர்போல 
ஆர்யரான கதையாக!
வெளிறிய அவரது தங்க நிறத்தோல் 
உயரம் உச்சரிப்பு எல்லாம் 
எல்லாமே ஆர்யன்!
நாங்களோ நம்பிக்கை கொண்டு 
சூர்ய காந்தியின் ஈடுபாட்டுடன் 
முழு முகத்தையும் கொண்டு 
சூர்யனை நோக்கினோம் 
எரித்து வீழ்த்தப்பட்டோம்.
பின்பு கிடைத்தது கல்வி -
மன்னிப்புக்  கேட்கும் படிப்பினை -
உள்ளுறவுகள் கொண்டு பெருகியதற்காக;
பெருக்கிய முற்றத்தில் 
சிறுசிறு இருண்ட குழந்தைகளான  எங்களுக்கு 
நாட்டுக் கதைகளின் 
உப்புச் சுவை கலந்த சோறும் தயிரும் 
கம்பனும் கலந்து ஊட்டிய பாட்டிமார்களுக்காக.
இன்று அந்நிய உச்சரிப்புடன் பேசும் 
ஆபீஸ் காரர்களுக்கு  இடம்விட்டு 
பின்னடையும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறோம் -
அவர்கள், சூர்யனால் 
எரித்து வீழ்த்தபடாதவர்கள்.
ஆமாம், ஒரு ஆர்யனைப் பற்றிச் சொன்னேனே,
அவ்வப்போது ஆளுக்குப்  பண்பாடு கூட வருகிறது;
ஒருநாள் சொல்கிறான் மனிதன் :
ஒண்ணு தெரியுமா? நீ 
பார்க்கறதக்கு நல்லாத்தான் இருக்கே -
தெற்கேயிருந்து வந்தவளாய் இருந்தாலும் கூட.
தமிழில் :  பிரமிள் 
சூர்யன் தகித்த நிறம் 
லட்சுமி கண்ணன் (காவேரி)
மேலே சூர்யன்எரிந்து -
அமானுஷ்யமாக,
இருந்தும் இச்சூர்யனை
ஆர்யன் என்கிறார்கள் -
முக்கியமான எல்லாமே
விந்தியத்துக்கு அப்பால் வசிப்பவர்போல
ஆர்யரான கதையாக!
வெளிறிய அவரது தங்க நிறத்தோல்
உயரம் உச்சரிப்பு எல்லாம்
எல்லாமே ஆர்யன்!
நாங்களோ நம்பிக்கை கொண்டு
சூர்ய காந்தியின் ஈடுபாட்டுடன்
முழு முகத்தையும் கொண்டு
சூர்யனை நோக்கினோம்
எரித்து வீழ்த்தப்பட்டோம்.
பின்பு கிடைத்தது கல்வி -
மன்னிப்புக் கேட்கும் படிப்பினை -
உள்ளுறவுகள் கொண்டு பெருகியதற்காக;
பெருக்கிய முற்றத்தில்
சிறுசிறு இருண்ட குழந்தைகளான எங்களுக்கு
நாட்டுக் கதைகளின்
உப்புச் சுவை கலந்த சோறும் தயிரும்
கம்பனும் கலந்து ஊட்டிய பாட்டிமார்களுக்காக.
இன்று அந்நிய உச்சரிப்புடன் பேசும்
ஆபீஸ் காரர்களுக்கு இடம்விட்டு
பின்னடையும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறோம் -
அவர்கள், சூர்யனால்
எரித்து வீழ்த்தபடாதவர்கள்.
ஆமாம், ஒரு ஆர்யனைப் பற்றிச் சொன்னேனே,
அவ்வப்போது ஆளுக்குப் பண்பாடு கூட வருகிறது;
ஒருநாள் சொல்கிறான் மனிதன் :
ஒண்ணு தெரியுமா? நீ
பார்க்கறதக்கு நல்லாத்தான் இருக்கே -
தெற்கேயிருந்து வந்தவளாய் இருந்தாலும் கூட.
தமிழில் : பிரமிள்
லட்சுமி கண்ணன் (காவேரி)
மேலே சூர்யன்எரிந்து -
அமானுஷ்யமாக,
இருந்தும் இச்சூர்யனை
ஆர்யன் என்கிறார்கள் -
முக்கியமான எல்லாமே
விந்தியத்துக்கு அப்பால் வசிப்பவர்போல
ஆர்யரான கதையாக!
வெளிறிய அவரது தங்க நிறத்தோல்
உயரம் உச்சரிப்பு எல்லாம்
எல்லாமே ஆர்யன்!
நாங்களோ நம்பிக்கை கொண்டு
சூர்ய காந்தியின் ஈடுபாட்டுடன்
முழு முகத்தையும் கொண்டு
சூர்யனை நோக்கினோம்
எரித்து வீழ்த்தப்பட்டோம்.
பின்பு கிடைத்தது கல்வி -
மன்னிப்புக் கேட்கும் படிப்பினை -
உள்ளுறவுகள் கொண்டு பெருகியதற்காக;
பெருக்கிய முற்றத்தில்
சிறுசிறு இருண்ட குழந்தைகளான எங்களுக்கு
நாட்டுக் கதைகளின்
உப்புச் சுவை கலந்த சோறும் தயிரும்
கம்பனும் கலந்து ஊட்டிய பாட்டிமார்களுக்காக.
இன்று அந்நிய உச்சரிப்புடன் பேசும்
ஆபீஸ் காரர்களுக்கு இடம்விட்டு
பின்னடையும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறோம் -
அவர்கள், சூர்யனால்
எரித்து வீழ்த்தபடாதவர்கள்.
ஆமாம், ஒரு ஆர்யனைப் பற்றிச் சொன்னேனே,
அவ்வப்போது ஆளுக்குப் பண்பாடு கூட வருகிறது;
ஒருநாள் சொல்கிறான் மனிதன் :
ஒண்ணு தெரியுமா? நீ
பார்க்கறதக்கு நல்லாத்தான் இருக்கே -
தெற்கேயிருந்து வந்தவளாய் இருந்தாலும் கூட.
தமிழில் : பிரமிள்
By Lakshmi Kannan
From: Encounter, June, 1980