தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, January 21, 2018

சாவித்ரிபாய் புலே ஜோதிபா புலேவுக்கு எழுதியது & டொப்ரிஞ்சா முற்றுகையின் பத்தொன்பதாம் நாள் ஆங்கிலத்தில் : நெழாத் இப்ரீசீமோவிச் தமிழில் : ரவிக்குமார்

WWW.padippakam.Com
கடிதம்

சாவித்ரிபாய் புலே ஜோதிபா புலேவுக்கு எழுதியது

சாவித்ரிபாய் புலே (1881-1897) மகராஷ்டிராவின் முதல் ஆசிரியை, தனது ஒன்பதாவது வயதில் ஜோதிபாபுலேவை ம ண ந் தா ர். அவரது உந்துதலால் கல்வி கற்று 1848-ல் புலேவுடன் சேர்த்து பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கினார். ஐந்து பள்ளிகள் அவர்களால் நடத்தப்பட்டன. 1851-ல் மாங், மஹர்சாதிப் பெண்களுக்கென ஒரு பள்ளியைத் துவக்கி, 1856-ல் தாம் கடுமையாக நோய் வாய்ப்படும்வரை அதில் ஜோதிபாபுலே தனது தோழி ஃப்ாத்திமா ஷேக் ஆகியோ ருடன் சேர்ந்து கல்வி கற்பித்தார். இந்தக் கடிதம் 1856-ல் அவர் நோயுற்று தனது தாய்வீட்டில் இருந்தபோது எழுதியது.

சாவித்ரி ஒரு கவிஞரும் கூட, அவரது 41 கவிதைகள் அடங்கிய, "காவ்ய புடல' என்ற கவிதைத் தொகுதி 1854-ல் வெளியானது. ஜோதிபா புலேவின் வாழ்க்கை வரலாற்றை கவிதைகளால் எழுதி அவர் 1892ல் வெளி அதே ஆண்டில் அவரது உரைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றும் வெளியானது.

uáLL厅行,

பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் தலித்துக்களுக்காகப் பாடுபடும்போது எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் சிலவற்றை இங்கே தரப்பட்டுள்ள கடிதத்தில் நாம் உணர (pig-il D.இது மட்டுமன்றி நவீன பெண்ணியல்வாதி களான ஹெலன் சிஷி, லூஸி எரிகாரே போன்றோர் குறிப்பிடும் பெண்களுக்கே உரித் தான மொழியை, வெளிப்பாட்டு முறையை நாம் இதில் அடையாளம் காண்கிறோம்(?) வெவ்வேறு விதமான வாசிப்புகளில் வெவ்வேறு சுவடுகளை நாம் இதில் கண்டுபிடிக்கும்போது இந்தக் கடிதம் இலக்கியமாக இருப்பதை உணரலாம். -

கடிதத்தை மராத்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு

மொழியாக்கம் செய்தவர் : மாயா பண்டிட்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : ரவிக்குமார்

56ör só : Women writings in India - Vol 1 Ed. Susie Tharu, K. Lalita, Oxford Univ Press. 1991.

0 நிறப்பிரிகை

10, அக்டோபர் 1856

உண்மையின் வடிவமான எனது பிரபு ஜோதி பாவுக்கு சாவித்ரியிடமிருந்து பணி வா ன வாழ்த்துக்கள் பல.

ஏராளமான சிரமங்களுக்குப் பிறகு கடைசியில் எனது உடல்நலம் சரியாகிவிட்டது. பாவ், நான் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் எவ்வித சலிப்புமில்லாமல் கவனித்துக் கொண் டான். உண்மையில் அவன் எவ்வளவு அன்பு டையவனாயிருக்கிறான் என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது! நான் பூரண குணமடைந்ததும் உடனே நான் பூனாவுக்கு வந்துவிடுகிறேன். என்னைப்பற்றி எவ்வித மான கவலையும் படாதீர்கள். இது ஃபாத்தி மாவுக்கு மிகவும் தொந்தரவு தரும் ஆனால், அவள் நிலமையைப் புரிந்துகொள்வாள், முணுமுணுக்கமாட்டாள் என்று நம்புகிறேன்.

ஒருநாஸ் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது பாவ் சொன்னான், ! நீயும் உன் கணவரும் நிச்சயம் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப் படுவீர்கள், மாங்குகள், மஹர்கள் போன்ற தாழ்ந்த சாதியினருக்கு நீங்கள் உதவு கிறீர்கள், இது சந்தேகத்துக்கிடமில்லாமல் பாவகாரியம்தான். நம் மு ைடய குடும்ப கெளரவத்தையும் தீங்கள் சகதியில் தள்ளி விட்டீர்கள். இதனால்தான் நான் சொல் கிறேன். நம்முடைய சாதி வழக்கப்படி நடந்து கொள்ளுங்கள், பிராமணர்கள் சொல்வதைப் பின்பற்றுங்கள்'. இந்த ப் பொறுப்பற்ற மோசமான யேச்சுைக் கேட்டதும் அம்மாவுக்கு முகம் வெளுத்துவிட்டது. பாவ் மற்றபடி அன்பான வன்தான், ஆனால் அவன் ரொம் பவும் குறுகிய புத்திக்காரன். நம்மை விமர் சிக்கவோ, வசைபாடவோ அவன் தயங்குவதே இல்லை." அம்மா மிகவும் வருத்தப்பட்டார்கள். அவனை அவர்கள் திட்டவில்லை, நியாயமாக எடுத்துச் சொன்னார்கள்.

** இனிமையாகப் பேசும் ஆற்றலை கடவுள் உனக்குத் தந்திருக்கிறார் அதை இப்படி வீணாக்கலாமா ?' என அம்மா அவனிடம் கேட்டார்கள். அதைக் கேட்டதும் அவனுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது, அவன் ஒருவார்த்தைகூட பேசவில்லை. அவனது வாதம் தவறானதென நிரூபிக்க நான் சொன்னேன்: 'பாவ் உன்னுடைய அணுகுமுறை மிகவும் குறுகிய ப ா ர் ைவ கொண்டது, பிராமணர்களின் உபதேசங்களைக் கேட்டு உனது அறிவும் மங்கிவிட்டது. நீங்கள் ஆடு மாடுகளைக்கூட வைத்து சீராட்டுகிறீர்கள். நாகபஞ்சமி வந்தால் விஷமுள்ள பாம்புகளைக் கூடப் பிடித்து அவற்றுக்குப் பால்வார்க் கிறீர்கள். ஆனால் உங்களைப் போலவே மனிதர்களாயிருக்கும் மாங்குகளையும், மஹர் களையும் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்குகிறீர்கள். இதற்கு ஏதேனும் காரணம் சொல்லமுடியுமா ? பிராமணர்கள் உங்களை தீண்டத்தகாதவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். நீங்கள் தொட்டுவிட்டால் தீட்டாகி விடும் என்று அஞ்சுகிறார்கள்'. இதைக் கேட்டதும் அவனது முகம் சிவந்துவிட்டது, என்னைப் பார்த்துக்கேட்டான் : "நீங்கள் மாங்குகளுக்கும் மஹர்களுக்கும் ஏன் கல்வி கற்றுத் தருகிறீர்கள் ? யாராவது உங்களைக் குற்றம் சொன்னாலேர் தி ட் டி னா லே ர என்னால் தாங்க முடியவில்லை ' நான் ஆங்கிலேயர்கள் மா த கு க ரூ க்கு ம் மஹர் களுக்கும் என்ன செய்கிறார்கள் என்பதை அவனிடத்தில் விளக்கினேன் கல்வியறிவு இல்லாமல் இருப்பது மிருகத்துக்கு சமமானது. அறிவு பெற்றிருப்பதால்தான் பிராமணர்கள் இப்படி மேன்மையான இடத்தில் உள்ளனர்.

படிப்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது. யார் ஒருத்தர் படிக்கிறார்களோ அவர்கள் சமூக அந்தஸ்தில் கீழ்நிலையிலிருந்து மேலே உயர்ந்து வி டுகிறார் கள். எனது பிரபு கடவுளைப் போன்றவர், இந்த உலகத்தில் அவருக்கு இணையானவர்கள் யாருமில்லை. என் ஸ்வாமி ஜோதிபா அந்த கேடுகெட்ட பிராமணர்களைப் பகைத்துக் கொண் டு சண்டை போட்டுக்கொண்டு மாங்குகளுக்கும் மஹர்களுக்கும் கல்வி கற்பிக்கிறார். ஏனென் றால் அவர்களும் மனிதர்கள்தான் அவர்களும் மற்றவர்களைப் போல வாழ த் தகுதி யுள்ளவர்க்ள் தான் என்று அவர் நம்புகிறார். எனவே, அவர்கள் படிக்கவேண்டும், அதனால் தான் நானும் அவர்களுக்கு படிப்பு சொல்லித் தருகிறேன். இதில் என்ன கெடுதல் இருக்கிறது? ஆமாம் ! நாங்கள் பெண்களுக்கு, மாங்குகளுக்கு, மஹர்களுக்கு ப் படிப்பு சொல்லித் தருகிறோம்தான். பிராமணர்கள் இது அவர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும் நம்புகிறார்கள் அதனால் தான் " அபிராமணியம் " (புனிதமற்றது) "அபிராமணியம் ' என்ற மந்திரத்தை ஓதிக்கொண் டிருக்கிறார்கள். எங்களை நிந்திக்கிறார்கள், உன் ைன ப் போன்றவர்களின் மனதில் விஷத்தை ஏற்றுகிறார்கள்.

6T6).

"ஆங்கிலேய அரசாங்கம் என் கணவரது சேவைகளை பாராட்டி ஒரு விழாவை ஏற்பாடு செய்ததையும் இந்த அற்பமான மனிதர்களை அவமானப்பட வைத்ததையும் நீ ஞாபகம் வைத்திருப்பாய். உன்னைப்போல, கடவுளின் பெயரை ஓதிக்கொண்டு புனிதஸ்தலங்களுக்குப் பிரயாணம் செய்துகொண்டு ஒரு காலமும் என் கணவர் இருக்க மாட்டார். கடவுள் செய்ய வேண்டிய காரியங்களைத் தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். நான் அதி ல் உதவி செய்கிறேன். இது எவ்வளவு அருமையான காரியம் தெரியுமா ! எனக்கு இதில் கிடைக்கும் ச ந் தோ ச ம் அளவிட முடியாதது. அது மட்டுமல்ல, ஒரு மனிதப் பிறவி எட்டக்கூடிய எல்லை எதுவென்பதையும் இது உணர்த்து கிறது". அம் மா வும், பாவும் என்னையே கவனித்துக் கொண்டு இருந்தார்கள். பாவ் தான் சொன்னதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான். 'சாவித்ரி, சாட்சாத் சரஸ்வதியே தான் உன் வழியாகப் பேசியிருக்கவேண்டும். உன்னுடைய புத்தி கூர்மையைப் பார்த்து நான் ரொம்பவும் சந்தோசப் படுகிறேன்' என்றாள் அம்மா. பூனாவைப் போலவே இங்கேயும் உங்களுக்கு எதிராக மனிதர்களிடம் விஷமூட்டி வைப்பவர்களைப் பற்றி கேட்கும் போது எனக்கு தவிப்பாயிருக்கிறது. ஆனால் இந்த மாதிரி மனிதர்களுக்குப் பயந்து நம் முடைய பணிகளை நாம் ஏன் விடவேண்டும் ? அதற்குப் பதில், இன்னும் அந்தப் பணிகளில் ஆழ்ந்து விடுவதுதான் சரி. எதிர்காலத்தில் வெற்றி நமக்குத் தான். -

இன்னும் என்ன எழுதுவது ?

மிகவும் பணிவான வாழ்த்துக்களோடு.

纽_危j岛町

சாவித்ரி

***************************************************************

டொப்ரிஞ்சா முற்றுகையின் பத்தொன்பதாம் நாள் ஆங்கிலத்தில் : நெழாத் இப்ரீசீமோவிச் தமிழில் : ரவிக்குமார்


டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினாலாம் நாள் 

ஆதெம் கரிமான் ஒரு புத்தம் எழுதிக் கொண்டிருந்தார். அவர் வசிப்பது ஐந்தாவது மாடியில் நான் இருப்பது நான்காவது மாடியில். எங்களது சன்னல்களின் வழியாகப் பார்த்தால் சரயேவோ விமானநிலையமும் இக்மான் மலைகளும் தொலைவில் தெரியும்
அந்த மலைகள் தொடர்ந்து நிறம் மாறிக்  கொண்டேயிருக்கும், இரவுபகலாக, எப்போதும்  :  அழகாக, ட்ர்ெஸ்கா விசா மலையின் பணி போர்த்திய சிகரம் மூடுபனிக்கூடாக சிலசமயம் தெரியும். ஆதெமுக்கு பணியென்றால் பிரியம்.  அவருக்கு ஐம்பத்திரெண்டு வயது. கடந்த காலத்தில் நடந்துவிட்ட குற்றங்களைத் தடுத்து நிறுத்தப்போகிற ஒரு புத்தகத்தை அவர் எழுதவிரும்பினார்.

ஆதெம்கரிமான் என்னமாதிரி மனிதர் ? அவர் பிறந்தது சரயேவோ வில். அப்படிச் சொல்வது கொஞ்சம் குழப்பக்கூடியதுதான்: சரயேவோவில் எப்படி ஒருவர் பிறக்கமுடியும்? அவர் நல்லநிறமாக இருக்கவில்லை. ஆனால், அதுவும்கூட சரியானதல்ல. இப்படிச் சொல் வது பொருத்தமாக இருக்கலாம் : சாம்பல்நிற தலைமுடி ; மீசையோ தாடியோ கிடையாது, சாதாரணமான உருவம் : தனியான அடை யாளம் எதுவுமில்லை.

மனிதன் என்பவன் இரண்டு கால்கள் உள்ள இறகுகள் இல்லாத ஒரு உயிரி என்று பிளாட்டோ சொன்னார். தமாஷாகச் சொன்னால் இந்த விவரிப்பு ஆதெம் கரிமானுக்குப் பொருந்து ம். ஆதெமின் உயிர்ப்பு அவரது உடலின் மேல்பகுதியில் தான் இருந்தது : அவரது இதயத்தில், அவரது தலையில் அவருக்கு ஒரு ஆன்மாவும் இருந்தது, அவர் நுட்பமான உணர்வு கொண் டவர், நேர்மையானவர். ஒரு மனிதனை அவன் பேசுவதற்கு முன்பே புரிந்துகொள்ளும் திறமையும், வரப்போகிற தீங்குகளை முன்பே உணர்ந்து கொள்ளும் ஆற்றலும் அவருக் கிருந்தது. தனி ைம யி ல் இருக்கும்போது மக்களைப் பற்றிய எண்ணம் ஆதெமைக் கிலி கொள்ளச் செய்யும். எல்லா மிருகங்களுமே ஆதெமுக்குப் புரிந்து கொள்ள முடியாதவை தான், ஆனாலும், அவற்றைக் கவனித்துக் கொண்டிருப்பதில் அவருக்குப் பிரியம், ஆதெம் கரிமான் என்னமாதிரி எழுத்தாளர் என விவரிப்பது ஒரு விதத்தில் எளிதானது : நல்ல எழுத்தாளர், ரொம்ப நல்ல எழுத்தாளர், ஆனால் யாருக்குமே தெரிந்திராத எழுத்தாளர்

ஆதெமின் புத்தகத்தில் முதல்வரி இதுதான் ;

1942ல் சேத்னிக்குகள் ஃபோஸரிவைச் சேர்ந்த ஹாஜி தஹிரோவிச்சின் 'முதுகுத்தோலை உரித்தார்கள். அந்தத் தோலை அவனது தலைமேல் இழுத்து மூடிவிட்டு ஒரு சீட்டை அதில் செருகி விட்டுப் போனார்கள் அந்த சீட்டில் இப்படி எழுதியிருந்தது : முக்காடு போட்ட முசுலீம் பெண்".

சே த் னி க்கு க ள் ஹாஜி தஹிரோவிச்சின் தோலை ஏற்கனவே உரித்துவிட்ட பிறகு எப்படி அதை ஆதெம் கரிமான் த டு க் கப் போகிறார்?

ஆதெம் அவரது புத்தகத்தை இந்த வருடம் ஏப்ர லி ல் எழுதத்தொடங்கினார். அதே மாதத்தில்தான் அதுவும் நடந்தது. ஒரு ஆள்அவரும் புத்தகங்கள் எழுதுபவர் தான் ஒரு பேராசிரியர், அவர் தபாஸி என்ற கிராமத்தில் ஒரு மனிதத்தலையை உதைத்து உரு ட் டினார். தற்செயலாக, தபாஸியும் ஃபோஸா வைச் சுற்றியுள்ள மலைகளில் உள்ள ஒரு ஊர்தான்.

அந்தப் பேராசிரியர் அவராக அந்தத் தலையை உதைக்கவில்லை. போஸ்னிய அரசின் அமைச்சர் ஒருவர் அங்கிருந்தார்அல்லது யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு சமயத்தில் அந்தத் தலையை உதைக்கத்தான் போகிறார்கள்; அதைத் திருப்பி உதைத்து விளையாட இன்னும் யாரோ இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி உதைத்து விளை யாடிய பிறகு அவர்கள் தங்களது ஷிக்களை கழுவிக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பேன்ட்களை சுருட்டிவிட்டுக் கொண்டிருந் தால் ஆச்சரியம்தான்.
அந்த போஸ்னிய அமைச்சர் உதைத்துப் பேராசிரியர் பக்கம் தள்ளியதும் அவர் திருப்பி உதைத்து அமைச்சர் பக்கம் தள்ளியதுமான அந்த மனிதத்தலை, ஒருகாலத்தில் அந்த கிராமத்தின் விவசாயி ஒருவரது கழுத்தில் இருந்தது அந்த விவசாயிக்கு ஒரு ஆட்டு மந்தை இருந்தது. அவரது ஆடுகளின் செழுமை அந்த வட்டாரத்துக்கே தெரியும், அவர்கள் அவரை நேரடியாக சிரச்சேதம் செய்துவிடவில்லை : முதலில் அவரிடம் பத்து ஆட்டுக்குட்டிகள் கேட்டார்கள், அப் புற ம் பிராந்தி கேட்டார்கள் நிறைய பிராந்திஅப்புறம் முப்பது ஆடுகள் கேட்டார்கள். அவர்கள் எல்லோருமே அந்த விவசாயி வீட்டு மேசைக்கு எதிரே மரபெஞ்சுகளில் வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள் - அந்த அமைச்சர், அந்த பேராசிரியர், அப்புறம் எழுசேத் னிக்குகள். அந்த விவசாயி ஆடுகளைத்தர மறுத்துவிட்டார். அவர்கள் பணம் தருவ சொன்னார்கள் மறுபடியும் அவர் மறுத்துவிட்டார். ஆகவே, மூன்று சேத்னிக்குகள், அவரது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். அங்கேதான் அவரை அவர்கள் கொன்றது.

தாகச்

அதற்கு இன்னொரு காரணமும் கூட இருந்தது; அவர் ஒரு செர்பியர் இல்லை. அந்த ட்ரினா ஆறு அந்த விவசாயி எந்த ஆற்றங்கரையில் வசித்துவந்தாரோ அந்த ட்ரினா ஆறு - செர்பியர்களுக்கு மட்டுமே சொந்தம், பெல்கிரேடில் உட்கார்ந்து கொண்டு புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கும் மனிதர்கள் குறைந்தபட்சம் இப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினைந்தாம் நாள் :

"நான் எழுதத் தொடங்கிறேனே அந்த புத்தகத்தtல்' என்றார் ஆதெம் "ஆனால் அது சாத்தியமில்லை' * அந்த முதல்வரியை நீ படித்தாயா?" "ஆமாம், படித்தேன்' 'ஹாஜி தஹிரோவிச்சின் தலைவிதியைப்பற்றி அதை ப் படிப்பதற்கு மு ன்பு உனக்குத் தெரியுமா?"

'இல்லை, எனக்குத் தெரியாது' 

'சரி உனக்கு இப்போது தெரிகிறதா? 
"ஆமாம் தெரிகிறது" 
" உனக்கு அவனைப் பார்க்கமுடிகிறதா?" 
"ஆமாம், பார்க்கமுடிகிறது" 
'அவனைப் பிணமாகவா பார்க்கிறாய்?" '
இல்லை, அந்தக் கொடூரமான சூழ்நிலையில் உயிரோடுதான் பார்க்கிறேன்'.
 "அதுதான்!' என்றார் ஆதெம்,
 'இப்போது நான் செய்ய வேண்டியதெல்லாம் அவனது தோலை உரித்து விடாதபடி அவர்களைத் தடுக்க வேண்டியது, அவ்வளவு தான்' 
'ஆனால் எப்படி ?" 
'அது சாத்தியமில்லாமல் இருக்கலாம் ஆனால் குறைந்தபட்சம் நான் முயற்சியாவது செய்கிறேன்' என்றார் ஆதெம் கரிமான்,

அதே நாளில், சேத்ணிக்குகள் ரோகாடிலாவுக்கு மேலேயுள்ள ஒரு கிராமத்தில் புகுந்து அங்கிருந்த ஆண்களையெல்லாம் இழுத்து வந்து ஒரே இடத்தில் நிறுத்தினார்கள். பிறகு அவர்களையெல்லாம் உயிரோடு எரித்துக் கொன்றார்கள்,

குறிப்புகள் :

சேத்ணிக் படைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் சோடா' (CETA) என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை, சேத்னிக்குகளுக்குப் பல குணாம்சங்கள் உள்ளன அவர்கள் பொய் சொல்வார்கள், அவர்கள் செர்பியர்கள். அவர்கள் போஸ் னியர்களை அழிப்பார்கள் அப்படி அழிப்பதன் மூலமாக - அதாவது துண்டு துண்டாக

*ஏற்கனவே நடந்துவிட்ட குற்றங்களை தடுத்துவிடலாமென்று எ ப் படி நினைக் கிறீர்கள் ? நான் ஆதெம் கரிமானைக் Gë si Gë Lisit,


வெட்டிக் கொல்லுதல், கொலை செய்தல், தீயிட்டுக் கொளுத்துதல், பெண்களைக் கற் பழித்தல், கொள்ளையடித்தல் மூலமாக - போஸ்னியாவை வென்றுவிடலாமென சேத்னிக்குகள் நம்புகிறார்கள். அந்த சேத்னிக்குகள் செர்பியர்களின் நலன்களை பாதுகாப்பவர்கள். செர்பியர்களின் நலன்களென்றால் -செர்பிய ஆண்கள், பெண்கள், பறவைகள், மீன்கள், தாவரங்கள், இன்னும் சொன்னால் செர்பியக காக்கைகள் என்றும் கூட அர்த்தமாகும். டாக்டர், ஸ்வெதிஸ்லாவ் ஸெக் எ ன்ப வர் தனது, செர்பிய இயற்கை பற்றி (on serbain Nature, Zemum - 1938) என்ற நூலில் தெரிவித்துள்ள கவலையைக் கவனியுங்கள் :

'கடந்த முப்பது ஆண்டுகளில் செர்பியக் காக்கைகள் பறப்பதற்கு மிகவும் சோம்பல் படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தமாதிரிப் போக்கு நீடித்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் செர்பியக் காக்கைகள் பறப்பதையே நிறுத்திவிடும் " அது காக்கை என்பது அல்ல பிரச்சனை, அது செர்பியக் காக்கை என்பதுதான் கவலைக்குரிய விசயம்,

போஸ்னியாவின் தலைநகர், மசூதிகள், திருச்சபைகள் தேவாலயங்கள் நிரம்பிய இடம். (பாடகர்களையும், நடிகர் களையும் பற்றி சொல்லத் தேவையில்லை). அந்த நகரம் மலைகளால் சூழப்பட்டது : அதன் வழியேதான் மில்ஜாக்கா ஆறு ஓடு கிறது, உயரமான் வெள்ளை மதில்களால் சூழப்பட்டு இடையிடையே நீர்வீழ்ச்சிகளும், பாலங்களும் கொண்ட நகரம், பாலங்கள் ஒவ்வொன்றும் அரண்மனைகளின் நுழை வாயில்கள் போல அவ்வளவு அழகாயிருக்கும், சரயேவோ என்ற சொல் துருக்கிய வார்த்தை யான சராஜ்’ (SARAJ) என்பதிலிருந்து உண் டானது சராஜ் என்றால் அரண்மனை என்று பொருள், சரயேவோ என்ற சொல் 1507 ல் தான் முதன்முதலில் புழக்கத்துக்கு வந்தது

சரயேவோ :

1897-ல் யூகேன் சாவோஜ்கி சரயேவோவை

சூறையாடித் தீ யி ட் டான். அடுத்து வந்த முன்னூறு ஆண்டுகளில் சரயேவோ ஐந்து முறை தீக்கிரையாக்கப்பட்டது. இப்போது த்ரெபெவிச் ம ன ல களுக்கு அப்பால் டொப்ரிஞ்சா வரை இந்த நகரம் விரிவடைந்து, நானும், ஆதெம் கரிமானும் வசிக்கின்ற டொப்ரிஞ்சா வரைக்கும்.

போஸ்னியா : ஒரு நல்ல நாடு

81/rஸ்fைur ஹெர்ஸ் கிகாவீனா அதே போலத்தான். ஹெர்ஸகொவீனாவில் உள்ள மலைகள் வெறுமையாய் இருக்கின்றன என்பது தவிர.

ட்ரீனா அழகிய குளிர்ந்த ஆறு. அதுதான் செர்பியாவிலிருந்து போஸ்னியாவைப் பிரிப்

பதும், இணைப் பதும், சொர்க்கத்தின் உதாரணங்கள் என நான் நம்புகின்ற அழகிய தோட்டங்கள் அந்த ஆற்றின் கரையெங்கும் உள்ளன. அதற்கு அப்புறம் உள்ள மலைகள் உயர்த்து, கம்பீரமாக காட்சி தருகின்றன, மெல்லிய தென்றல் அவற்றிலிருந்து வீசும்,

டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினாறாவது நாள் :

ஹாஜி தஹிரோவிச் இன்னமும் வலியில் கதறுகிறானா?" நான்கே ட்டேன். எனக்குக் கவலையாக இருந்தது.

கதறுகிறான்" கரிமான் பதில் சொன்னார், இதைப்படி' என்றார்.

1942 மார்ச் மாதத்தின் கடைசி வியாழக் கிழமை அதிகாலையில் சேத் னிக்குகள் *மிலிசி"க்கு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள விர்சிஞ்சே கிராமத்தில் நுழைந்தார்கள் கண்ணுக்குத் தென் பட்ட மனிதர்களை யெல்லாம் ஒரு இடத்துக்கு இழுத்துவந்தார்கள் அவர்களையெல்லாம் ஒரு மஸ்ஜிதுக்குள் அதைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள், அந்த கா ைல யி ல், உயிரோடு நூ ற் று எண்பத்து மூன்று மனிதர்கள் விர்சிஞ்சேவில் இறந்தனர். தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். அந்த நூற்று எண்பத்து மூன்று பேர்களில் அந்த ஊரின் முவல்லிம், ஹீசைன் எஃபின்டி தலோவிச் என் பவரும் அவருடைய குடும்பத்தினரும் அடக்கம் : அவரது மனைவி, அவரது நான்கு மகன்கள், ஒருமகள்.

தள்ளிப் பூட்டினார்கள்,

இ ைத த் தடுக்கமுடியாவிட் டால் ' நான் கேட்டேன் : இதில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை’ முன்பே நிகழ்ந்து விட்ட குற்றங்களை ஆதெம் த டு க் க ப் போகிறார் என்பதுதான் மொத்த திட்டமும்

g66

*மழை" ஆதெம் அமைதியாகச் சொன்னார். "பலத்தமழை தீயை அணைத்துவிடும் ! அவர்கள் காப்பாற்றப் படுவார்கள்!"

"ஆமாம்! ஆனால் அது உங்கள் புத்தகத்தில் மட்டும்தான் நடக்கும்'

* எல்லாம் ஒன்றுதான்' ஆதெம் சொன்னார்.

திடீரென ஆதெம் என் கைகளைப் பிடித்து இழுத்துத் தரையில் வீழ்த்தினார். அவரும் பதுங்கிக் கொண்டார். வெளியில் துப்பாக்கி வெடிக்கும் சப்தங்களை நாங்கள் கேட்டோம். குண்டுவீச்சு மீண்டும் தொடங்கிவிட்டது. லுகா விஸ்ா தளத்திலிருந்து டொப்ரிஞ்சாமீது குண்டுவீசப்படும் பதினாறாவது நாள் இது. நாங்கள் கூடத்துக்குத் தவழ்ந்து போனோம். அதுதான் நாங்கள் பாதுகாப்பாக உணரும் Lu (55).

"குண்டுவிசத் தொடங்கிய புதிதில் . '

ஆதெம் கிசுகிசுத்தார், "சிட்டுக்குருவிகளின் சப்தத்தை நீ கேட்டிருக்கவே முடியாது - கவனித்தாயா? அவ மொத்தமும் பாடுவதை நிறுத்தி விட்டன. ஒருவாரம் போனதும் அவை திரும்பவும் பாடத் தொடங்கின. துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தங்களுக்கு இடையே நீ கேட்டிருக்கலாம் இப்போது அ ை வ தொடர்ந்து பாடுவதை நீ கேட்கலாம். வேட்டுச்சப்தங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி.

குறிப்புகள் :

விர்சிஞ்சீச சில குடிசைகள், சில வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் ஆகியவை கொண்ட ஒரு கிராமம். சுற்றிலும் அராபியாவில் உள்ளது போலவே மலைகள்,ஆனால்இவைபசுமையாக இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால் விர்சிஞ்சேவில் உள்ள மலைகள் குளிர் காலத்தில் வெண்மயாக இருக்கும். அராபியாவில் அப்படி இருக்காது. அர்ாபியாவில் குளிர் காலத்தில் பணி பெய்வதே இல்லை.

மஸ்ஜித் : கோபுரம் போன்ற அமைப்பும் வேறு சில அமைப்புகளும் இல்லாத மசூதி, எவை யெவை இருக்காது என்பதை நான் இங்கு பட்டியலிடப் போவதில்லை. ஏனெனில் பிறகு அதை நான் விளக்கவேண்டியதிருக்கும், மசூதியில் தான் 183 பேர்களை சேத்னிக்குகள் எரித்துக் கொன்றது. அந்த 183 ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சேத்னிக்குகளால் தான் எரித்துக் கொல்லப்பட்டாாகள். கம்யூனிஸ்டுகளால் அல்ல என்ற போதிலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக விர்சிஞ்சேவின் மக்கள் அந்த ம சூ தி யை மீண்டும் கட்டிக்கொள்வதற்கு கம்யூனிஸ்டுகள் அனுமதிக்கவே யில்லை.

மூவல்விம் : மதகுரு

பார்டி சான்கள் : டிட்டோவின் வீரர்கள்



குறிப்புகளைப் பற்றிய குறிப்புகள் :

ஜோஸ்ப் ஃப்ராஸ் டிட்டோ :

1945-ல் சேத்னிக்குகளையும் உஸ்தஷாக்க ைளயும் தோற்கடித்த பார்டிசர்ன்களின் தலைமைத் தளபதி அவர்தான். 1980-ல் அவர் இறந்த பிற்பாடு அவரது நாடு பிளவு பட்டது. செர்பிய சேத்ணிக்குகள் அவரது ராணுவத்தின் அத்தனை ஆயுதங்களையும் கொண்டுபோய் விட்டார்கள். இரண்டாவது உலக யுத்தத்தின் துவக்கத்தில் பாசிஸ்டுகளை எதிர்த்த போரின் போது பார்டிசான்களோடு சேரும்படி சேத்னிக்குகளை டிட்டோ இரண்டு முறை அழைத்தார். அவர்கள் சம்மதித் தார்கள் பொய்யாக,

9 (5 வசந்தகால காலை நேரத்தில், க்ரெபோல்ஸ்கோ மலையின் சரிவில் பார்டிசான்களின் குழு ஒன்றும், சில செர்பியர்களும் முஸ்தபா தொவாட்ழியா என்ற பெய ருடைய ஒரு முசுலீமும் நின்று கொண்டிருந் தனர்.

எங்களோடு வந்து செர்பிய பார்டிசான்கள்

* அன்புத்தோழரே, சேர்ந்து கொள்' வாஞ்சையோடு அழைத்தனர்.

முஸ்தபா எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் அவர்களோடு போனார். சற்றுநேரத்திற்லெல்லாம் அந்த பார்டிசான்கள் சேத்னிக்கு களாக மாறிவிட்டார்கள். முஸ்தப ா ைவ உயிரோடு கழுவிலேற்றினார்கள். அது நடந்தது 1942 மே மாதம் இர ண் டா ம் தேதியில்.

நோபல் பரிசு பெற்ற நமது எழுத்தாளர் 48

இவோ ஆன்ட்ரிச் அதை இப்படித் தான் விவரித்தார் :

'இரண்டரை மீட்டர் நீளமுள்ள ஒக்மரக்கம்பம் ஒன்று தரையில் நடப்பட்டிருந்தது. அதன் முனையில் இரும்பாலான கூர்நுனி பொருத்தப் பட்டிருந்தது. அவர்கள் முஸ்தபாவை தரை யில் படுக்கச் சொன்னபோது அவர் தலையை கவிழ்ந்து கொண்டார். பிறகு சேத்னிக்குகள் அவரை அணுகி அவரது கோட்டயும், சட் ைட ைய யும் கழற்றினார்கள். எதுவும் பேசாமல் அவர் குப்புறப்படுத்துக் கொண்டார். அவர்கள் அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்தார்கள், அவரது கால்களை இரண்டு சேத்னிக்குகள் விரித்துப் பிடித்துக் கொண்டார்கள். அதே சமயத்தில் யோவான் என்கிற இன்னொரு சேத்னிக் அந்தக் கம்பத்தை இரண்டு மரத்துண்டுகளுக்கு எதிரே வைத்து அந்த கம்பத்தின் கூர்நுனி முஸ்தபாவின் கால்களுக்கிடையில் இருக்கும்படி அமைத்தான். "பெல்ட்'டிலிருந்து சின்ன அக ன் ற கத்தி யொன்றை எடுத்தான், கிடத்தப்படிருந்த முஸ்தபாவின் கால்சட்டையில் சூத்துப்பக்கமாக கிழித்து அந்தக் கம்ய்த்தின் முனை நுழையு மளவுக்கு ஒ ட் ைட போட்டான். கட்டப் பட்டிருந்த அவரது உடல் அந்தக் கத்தியின் சின்னக் குத்து விழுந்ததும் உதறியது, எழுந் திருக்கும்விதமாக மேல் பகுதியை உயர்த்தியது ஆனால் தி ரு ம் பவும் தரையில் விமுந்து மோதியது. அந்த குரூரமான வேலையின் ஒரு பகுதி முடிந்தது. யோவான் பின்பக்கமாக தாவி எழுந்தான். ஒரு மரசுத்தியலை எடுத்து அந்தக் கம்பத்தின் அடிப்பகுதியில் மெதுவாக ஒரே சீராக அடிக்க ஆரம்பித்தான். நிறுத்தி விட்டு அந்தக் கழுமரம் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் உடலைப் பார்த்தான், கயிறுகளை ஒரேசீராக மெதுவாக இழுக்கும்படிக் கூறும்விதமாக பக்கத்திலிருந்த இரண்டு சேத்னிக்குகளைப் பார்த்தான், செருக பட்டிருந்த அந்த மனிதனின் உடல் ஒவ்வொரு அடி விழும்போதும் இறுகியது. அவரது முதுகெலும்பு வளைந்து குனிந்தது, ஆனால் இழுத்து ப் பிடிக்கப்பட்டிருந்த கயிறுகள் இறுக்கி அவரை மீண்டும் நிமிர்த்தின. அந்த சபிக்கப்பட்ட மனிதர் எப்படி தனது தலையை தரையில் மோதிக் கொண் டார் என்பதை ஒருவர் கேட்டிருக்கலாம், அந்த வினோதமான சப்தத்தையும் கூட. அது ஒரு அலறலோ, அழுகையோ அல்லது மரணக்கூச்சலோ அல்ல; அது ஒரு மனிதசப்தமோ கூட அல்ல. கழுவேற்றப்பட்ட, சித்ரவதை செய்யப்பட்ட அந்த உடலிலிருந்து வந்த சப்தம் ஒரு கிறிச் ஒலி, அல்லது ஒரு வெடிப்பு, யாரோ வேலி அ டை க் க மரக்கட்டைகளில் முளைகளை வைத்து அடிக்கும் போது உண்டாவதைப் போல ஒவ்வொருமுறை அடித்ததும் யோவான் இப்போது அந்தக் கழுவேற்றப்படும் உடலை அணுகிப் பார்த்தான், தடி சரியானபடி போகிறதா என் ஆராய்ந்தான், முக்கியமான பாகங்கள் சேதம் ஆகாமல் இருக்கின்றனவா என உறுதி செய்துக் கொண்டான், மீண்டும் தனது பணியைத் தொடர்ந்தான். ஒருகணம் அடிப்பது நிறுத்தப்பட்டது. வலது தோள் பட்டையின் தசை இறுகிப் போயிருப்பதையும், தோல் மேலே கிழித்துக் கொண்டு வருவ தையும் யோவான் பார்த்து விட் டான். உடனே அந்த உடலை அணுகி உப்பிக் கொண்டுவந்த பகுதியைக் குறுக்காகக் பத்தி யால் கிழித்தான். வெளிறிப்போன ரத்தம் முதலில் கசிந்தது, அப்புறம் பீச்சியடித்தது. மெதுவாக கவனமாக இரண்டு மூன்று முறை அடிக்கப்பட்டதும் அந்த கம்பத்தின் இரும்பு கிழிக்கப்பட்ட பகுதி வழியாக நீட்டிக்கொண்டு வந்தது. அந்த இரும்பு நுனி வலது புறக் காதுக்கு அருகில் வரும்வரை மேலும் சில முறை அடித்தான். வாட்டுவதற்க்ாக கழியில் கோத்துத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல அந்த மனிதன் கழுயேற்றப்பட்டான் ஒரேயொரு வித்தியாசம் கழியின் நுனி அவன் வாய்வழியே வருவதற்குப் பதில் முதுகுப் பக்கமாக வந்து விட்டது, அவனது உள் உறுப்புகளை இதயமோ நுரையீரலோ எதுவுமே பாதிக் கப்கப்படவில்லை. சுத்தியலைத் தூர எறிந்து விட்டு தரையில் கிடந்த அந்த மனிதனை நோக்கிச் சென்றான், யோவான், அந்த உடலை சோதித்துப் பார்த்தான், கம்பத்தின் நுனி வெளியேவந்திருந்த இடத்திலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு குளம் போல ரத்தம் கீழே தேங்கியிருந்தது. அந்த இரண்டு சேதனிக்குகளும் விரைத்துப்போன அந்த உடலை மல்லாக்கப் புரட்டினார்கள் அந்த உடலின் கணுக்கால்களை அந்தக், கம்பத்தோடு வைத்து சேர்த்துக் கட்டினார்கள். அதே சமயம், அந்த மனிதன் உயிரோடிருக் கிறானா என யோவான் சோதித்துக் கொண் டிருந்தான், அவரது முகத்தைப் பார்த்தான். அது திடீரென்று வீங்கி உப்பிப்போயிருந்தது, கண்கள் விரிந்து துடித்துக் கொண்டிருந்தன, ஆனால் பார்வை அசையாமல் நிலைகுத்தி யிருந்தது, உதடுகள் வலிப்பு வந்தது போல இறுகியிருந்தன, கிட்டித்துப்போன பற்கள் உதடுகளுக்குப் பின்னே பின்னிக் கொண்டிருந் தன. அவரால் முகத்தின் தசையில் சில பகுதிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை, அவரது முகம் ஒரு முகமூடியைப் போல காட்சியளித்தது, வேகவேகமாக மூச்சுவிட்டதில் அவரது நுரையீரல்கள் அடித்துக் கொண்டன. சமைப்பதற்கு எடுத்துச் செல்லும் விலங்கைத் தூக்குவதுபோல அந்த இரண்டு சேத்னிக்கு களும் அவரை மெதுவாக தூக்கினார்கள். ஜாக்கிரதையாகத் தூக்கும்படியும், கவனமாக நிமிர்த்தும்படியும் அவர்களை நோக்கிக் கத் தி னா ன், அவனும் உதவி செய்தான். அந்தக் கம்பத்தின் அடிப்பகுதியை அவர்கள் தரையிலிருந்த குழிக்குள் நட்டார்கள். பின்புறமாக ஒரு கட்டையால் முட்டு கொடுத்து அதை அந்தக் கம்பத்தோடு சேர்த்து ஆணி அடித்தார்கள்.

யோவான்



அந்த மூன்று சேத்னிக்குகளும் அங்கிருந்து விலகிக் குழுவின் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டனர். அந்த வெற்றிடத்தில் முஸ்தபா தோவாட்ழியா அந்தக் கம்பத்தில் தனித்து இருந்தார், தரையிலிருந்து ஒரு மீட்டர் மேலே. மார்பு பிளந்து. இடுப்பு வரை நிர்வாணமாக, தொலைவிலிருந்து பார்க்கும்போது, அந்தக் கம்பம் அவரது உடலின் வழியே செருகப்பட் டிருப்பதையோ, அவரது கணுக்கால்கள் அத்துடன் பிணைக்கப் பட்டிருப்பதையோ அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருப் பதையோ யாரும் அனுமானிக்க முடியாது.

சித்ரவதைக்கு ஆளான அந்த மனிதரை சேத்னிக்குகள் நெருங்கிப் பார்த்தார்கள். கம்பத்தின் வழியே மெலிதாக ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவர் இன்னமும் உயிரோடிருந்தார், நடப்பது என்னவென்ற உணர்வோடு அவரது உடலின் பக்கவாட்டுப் பகுதிகள் உயர்ந்து, தாழ்ந்து கொண்டிருந்தன, அவரது கழுத்து நரம்புகள் புடைத் துக் கொண்டிருந்தன. அவரது விழிகள் மெதுவே சுழன்று கொண்டிருந்தன. ஆனால், அவரால் பார்க்கமுடிந்தது. கிட்டித்துப்போன அவரது பற்களுக்கிடையிலிருந்து ஒருவகை யான இழுப்பும், உறுமலும் வெளியில் சிதறிக் கொண்டிருந்தன, அதிலிருந்து ஒரு சில வார்த்தைகளை மட்டும்தான் ஒருவர் புரிந்து கொள்ள முடியும் : : சேத்னிக்குகளே. சேத்னிக்குகளே' அவர் விம்மினார். "நீங்கள் நாய்களைப்போல சாகவேண்டும் . நாய் களைப் போல சாகவேண்டும் !"

அது 1992-ன் ஜூலை பதினொன்றாம் தேதி,

குண்டுவீசித் தாக்கினார்கள். நான்கு குழந்தைகளைக் கொன் று பத்து குழந்தைகளைக் காயப்படுத்தினார்கள்.

டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினெட்டாம் நாள் 
ஆதெம் சொன்னார் : முதலில் அவர்கள் டாங்குகளால், எந்திரத் துப்பாக்கிகளால், விமான எதிர்ப்பு பீரங்கிகளால் குடியிருப்பைத் தாக்கினார்கள். அப்புறம் கட்டிடத்துக்குள் நுழைந்தார்கள். நீ உயிரோடு கிடைத்தால் உடனே மரணம் அவர் கள் உனது குரல் வளையை அறுப்பார்கள், உனது வீட்டைக் கொள்ளையடித்து விட்டு அதைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். நீ மாட்டிக் கொள்ளாதே. நீ டொப்ரிஞ்சாவுக்குள் நழுவிவிடலாம். ஒரு நண்பருடனோ தெரிந்தவர்களுடனோ தங்கலாம். ஆனால் சேத்னிக்குகள் உன்னைப் பின் தொடர்ந்து வருவார்கள். நீ நிலவறைக்குள் பதுங்கலாம் - தவறா? இப்போது அவர்கள் குண்டுவீசி அங்கேயே உன்னை இருத்தி விடுவார்கள்: வெளிச்சம் கிடையாது, தண்ணீர் கிடையாது, உணவு கிடையாது, உன்னால் தாக்குபிடிக்க முடியாமல் போகும்போது நீ வெளியே வருவாய், கீரைகளைப் பறித்து சமையல் செய்யலாமென. நீ பதுங்கு குழி யிலிருந்து சுடப்படுவாய் ! காயமுற்று, கொல்ல LLITLDs).

டொப்ரிஞ்சாவைக் காத்து நிற்பவர்கள், உன்னைப் பதுங்கு குழியிலிருந்து சுட்டவனைப் டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினேழாவது பிடிப்பார்கள். அப்புறம் என்ன நடக்கும்? நாள், வானத்தின் ஒருபகுதியை, மலையின் சேத்னிக்குகள், பிடிபட்டவனை ஒப்படைக்கச் ஒரு பாகத்தை அடுத்த கட்டிடத்தின் ஒரு சொல்லிக் (345. L'Irfiss, டொப்ரிஞ்சாவும் பகுதியை நாங்கள் பார்த்தோம். டொப்ரிஞ் சரயேவோவின் பிறபகுதிகளும் அவர்களால் சாவுக்கு பக்கத்தில் ரஸ்னிகா குடியிருப்பில் முற்றுகையிடப்பட்டுள்ள நி ைல யி ல் ஒரு சேத்னிக்குகள் ஒரு மழலையர் பள்ளியைக் ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரிக்கு அனுமதிப்பதற்கு மாற்றாக பிடிப்பட்டவனை விடுவிக்கச் சொல்வார்கள். ஆக வே , நீ அவனை - உ ன் ைன சுட்டுக் காயப்படுத்திய அதே ஆளை-ஒப்படைப்பாய். அதே நாளில் நகரின் இன்னொரு பகுதியில், மொய்மிலோ' என்று வைத்துக் கொள்ளேன் அங்கே இன்னொரு சேத்னிக் ஒரு நர்சை சுட்டுக் கொல்வான். ஆக, கடைசியில் உன் புண்ணுக்கு மருந்து போட்டுக் கொள்வதற்காக ஆஸ்பத்திரிக்கு நீ போகும்போது அங்கே மருந்தும் இருக்காது, சாப்பாடும் இருக்காது, ஒரு நர்ஸ் தான் கிடப் ஆக, இன்னொரு ஆஸ்பத் திரிக்கு நீ மாற்றப்படுவாய். கூட்டம் நெரியும் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு; வறுத்த பன்றிக் கறியைத் தின்றுவிட்டு, பிராந்தி குடித்து விட்டுத் தங்களது பாடல்களைப் பாடியபடி சு ற் றி லுமு ள் ள மலைகளிலிருந்து சேத் னிக்குகள் குண்டுவீசிக் கொண்டிருக்கும் இன் னொரு ஆஸ்பத்திரிக்கு, அப்புறம், அந்த ஆம்புலன்ஸ் திரும்பிச் செல்லும், தடையைக் கடப்து செல்ல சேத்னிக்குகள் அனுமதித்த அந்த ஆம்புலன்ஸ் - சேத்னிக்குகள் அதன் டிரைவரைக் கொன்றுவிட்டு அதைச் திருடிச் செல்வார்கள். இதற்கிடையில் நீ பட்ட காயத் தி னால் ஆஸ்பத்திரியில் செத்திருப்பாய், உன்னை சுட்டானே அந்த காயத்தினால், ஆம்புலன்ஸ் வருவதற்காக உன்னால் திருப்பி

பாள்-பினமாக

ஒப்படைக்கப்பட்டானே அவன் சுட்டதனால் உண்டான காயத்தினால், இப்போது அவர் களால் திருடிச் செல்லப்பட்டதே அந்த ஆம்பு லன்ஸ், ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் உனக் பக்கத்துத் தோட்டத்தில் ஒருகுழி வெட்டுவார்கள், ஆனால் சேத்னிக்குகள் உன்
காகப்

சவப்பெட்டிமீது குருவை சுடுவார்கள் அடக்கம் செய்ய விரும்பிய துணிச்சல்மிக்க அந்த சில நல்லவர்கள் மீதும் இரவு கவியும்போது மலைகளிலிருந்த அவர்கள் உனது புதைகுழியின்மீது குண்டுவீசுவார்கள்.

சுடுவார்கள்,

முசுலீம் மத

உன்னை

சுடுவார்கள்.

**இந் த யுத்தத்தை எ ன் ன வெ ன் று நீ

சொல்வாய்?"

'ஹாஜி தஹிரோவிச்சின் காயங்கள் அவனை இன்னும் இம்சிக்கின்றன, அவனது வேதனை சகிக்கமுடியவில்லை நான் சொ ன்னே ன். "ஆமாம்' ஆதெம் மெதுவாகச் சொன்னாக் 'எனக்குத் தெரியும். ஆனால் விர்சிஞ்சாவைச் சேர்ந்த அந்த முல்லாவும், அவரது நான்கு மகன்களும், மனைவியும், மகளும் இன்னும் நூற்று எழுபத்தாறு பேர்களின் உயிர்களும் 'ரிக்கப்பட்ட அந் த மசூ தி யி லி ரு ந் து காப்பாற்றப்பட்டன '

"ஆமாம்' நான் சொன்னேன் "நேற்று ரோகடிஸாவுக்கு அருகில் ஆயிரம் வீடுகளை சேத்னிக்குள் கொளுத்தினார்கள். ஏராளமான வீடுகள்!" ஆதெம் கரிமான் சொன்னார். எனது உள்ளத்தில் ஒளியூட்டக் கூடிய வார்த்தைகள் ஜந்தே ஐந்துதான் உள்ளன' என்றேன் நான் போஸ்னியா ஹெர்ஸகெர் வீனாவின் பாதுகாப்பு ராணுவப்

LJ SOL

டொப்ரிஞ்சா முற்றுகையின் பத்தொன்பதாம் நாள்:

'உங்கள் புத்தகத்தின் ஆரம்பப் பகுதியைத் தான் நான் படித்தேன். ஆனால், ஏற்கனவே பலவிசயங்கள் பார்க்கமுடியாதபடி ஆகிவிட்டன விளக்கங்கள், விளக்கங்களுக்கு விளக்கங்கள் என நீங்கள் கொடுத்த போதிலும் பார்க்க முடியவில்லை.

** என்ன பார்க்க முடியவில்லை?' ஆதெம்

(34 l'UIT ff.

'டொப்ரிஞ்சாவைப் பாரக்க முடியவில்லை. விடுகளை மF களை, சந்துகளை, நாய்களைப் பார்க்க முடிய வி ல் ைல. எதையெல்லாம் பார்க்க முடியவில்லையென்று கணக்குப்போடிக் கூட என்னால் முடியவில்லை" என்றேன்.

O நிறப்பிரிகை

51

LILQCIL135LDWWW.padippakam.Com

இது ஒரு புத்தகம், சினிமா கிடையாது' என்றார் ஆதெம், புன்னகைத்தப்படியே சொன்னார் "ஒரு புத்தகமென்றால் புத்தகம் தான்'. "ஆனால் வாசிப்பவர்கள் எரிக்கப்பட்ட மசூதி யில் அந்த நூற்று எழுபததாறு உயிர்களைப் பார்க்கவில்லையே' நான் வலியுறுத்தினேன். "என்னுடைய புத்தகத்தை நீ எழுத விரும்பு கிறாயா?' ஆதெம் கேட்டார். *இல்லை ஆனால் எரியும் மசூதியிலிருந்து அந்த மக்கள் வெளியேறுவதை நீங்கள் பார்க்க கூட இல்லை. அவர்கள் எப்படி அந்த மசூதி யிலிருந்து வெளியேறினார்கள் எ ன் ப ைத நீங்கள் காட்ட முடியாதா ?”

அவர்கள் மெதுவாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்' என்றார் ஆதெம். " அப்படியா சங்கதி" என்றேன், கடைசியில் திருப்தியுற்ற உணர்வோடு, சற்று யோசித்து சொன்னேன் : " சரி, என்னைப் பொருத்த வரை, நான் சாட்சி சொல்லமுடியும், விர்சிஞ் சேவின் அந்த முல்லாவையும், அவரது நான்கு மகன்களையும் மகளையும் உயிரோடு நல்ல படியாக பார்த்ததாக அதை நான் பார்த் தேன்'

* நன்றி ' என்றார் ஆதெம். அது 1992 ஜூலை பதினேழாம்தாள் விசே

கார்டுக்கு அருகில் வுஸின் என்ற இடத்தில் எண்பது ஆண்களையும் பெண்களையும் ஒரு நிலறைக்குள் தள்ளி அடைத்து சேத் நிக்குகள் தீவைத்தது அதே நாளில்தான். நான் அதை ஆதெம் கரிமானிடம் சொல்லவில்லை, அவருக்கும் அது தெரியும் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும்,

முடியவில்லை. என்னால் அவர்களைக் காப் பாற்றமுடியாது, ஆனால் ஐரோப்பாவால் அவர்களைக் காப்பாற்ற முடியாதா - அல்லது மற்றப்படி அது தயாராக இல்லையா, என்னால் அவர்களைக் காப்பாற்ற முடியாது, ஆன ல் அமெரிக்காவிலும் முடியாதா - அல்ல து அ த ற் கு விருப்பமில்லையா, என்னால முடியாது, ஆனால் இந்த மொத்த

உலகும் கூடவா அவர்களைக் காப்பாற்ற முடியாது, அல்லது அதற்கும் கூட விருப்ப மில்லையா,

O ஆங்கிலத்தில் : நெழாத் இப்ரீசீமோவிச் தமிழில் : ரவிக்குமார்

01-19-1993

மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகள் : போஸ்னியா, ஹெர்ஸ்கொவீனா :

முன்னாள் யூகோஸ்லேவியக் குடியரசின் ஆறு உறுப்பு நாடுகளில் ஒன்று. 51280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், சுமார் 45 லட்சம் மக்கள் தொகையையும் கொண்டது. மொத்த மக்கள் தொகையில் 48% செர்பியர்கள்,35%முசுலீம்கள் 22% க்ரோஷியர்கள், நாட்டின் பாதிப் பகுதி காடுகளாலும், மற்றவை மேய்ச்சல் மற்றும் விவசாய நிலங்களாலும் ஆனவை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே இல்லிரியன் என்ற ஆதிவாசி மக்கள் வாழ்ந் துள்ளதாகத் தெரிகிறது. போஸ்னியா என்ற பெயர் அவர்களால் வைக்கப்பட்டதென கூறப் படுகிறது.

டொப்ரிஞ்சாவிலிருந்து நூற்று எண்பத்து மூன்று பேர்களைக் ஆதெமால் காப்பாற்ற நாட்டின் ஆட்சி மொழி யா க இருக்கும் முடியும்போது எண்பது பேர்களை ஏன் செர்போ-க்ரோஷிய மொழி லத்தீன், கிரில்லிக் என்னால் காப்பாற்ற முடியாது? என்று ஆகிய இருமொழிகளின் எழுத்துக்களால் நினைத்துக்கொண்டேன். ஆனால் என்னால் எழுதப்படுகிறது.

52 O நிறப்பிரிகை

படிப்பகம்WWW.padippakam.COIn

‘யூகோஸ்லேவியாவின் இதயம்' என்று அழைக்கப்பட்ட இந்த நாடு, ஆஸ்திரிய நாட் டின் தலைமைப் பிரபு ஃப்ரான்ஸ் ஃபெர்டி னன்ட் என்பவரை கேவ்ரிலோ ப்ரின்ஸிப் என்ற போஸ்னிய மாணவர் சரயேவோவில் வைத்து 1914-ல் கொலை செய்ததால் முதல் உலகப்போர் மூள்வதற்குக் காரணமாகி உலக அரங்கில் பிரபலம்பெற்றது,

கி. பி. முதல் நூற்றாண்டுக்குப்பின் இந்த நாட்டின் ஆட்சி, பைசன்டீனியர்கள், க்ரோதியர்கள், ஹங்கேரியர்கள், ரோமானியர்கள், செர்பியர்கள் என மாறி வந்துள்ளது. ஓட்டோமான் பேரரசு அமைக்கப்பட்ட பின் 1400 முதல் 1878 வரை துருக்கியர்களால் ஆளப்பட்டு 1918-ல் யூகோஸ்லேவியாவின் பகுதியாக மாற்றப்பட்டது.

2. இந்தப்பிரதி அச்சாகும் நேரம் போஸ்னியாவை மூன்றாகப் பங்கிட்டு அமைதித்தீாவு' ஏதும் எட்டப்பட்டிருக்கலாம், கடந்த இருபது மாதங்களாக நடந்துவந்த சண்டையில் என்ன நடந்தது . என்ன நடக்கவில்லை. என்பதை இதுபோன்ற பதிவுகள் சொல்லிக்கொண்டே யிருக்கும், கதை, கட்டுரை, வரலாறு செய்தி அறிக்கை இவற்றுக்கு இடையிலான எல்லைகளை அழித்து அழிவின் வெப்பத்தைக் கடத்தி வந்து நமக்குள் பரவவிட்ட இந்தப் பிரதியை எழுதியவர் ஒரு போஸ்னிய எழுத்தாளர். வேறு விவரம் தெரியவில்லை.

நன்றி: ஆங்கிலத்தில் வெளியிட்ட - GRAWTA 42,

WINTER 1992, LONOON,

அமெரிக்காவிலிருந்து அனுப்பிய -

கோ. ராஜாராம் படிக்கக் கொடுத்த - ராஜன்குறை.

0 நிறப்பிரிகை

நிறப்பிரிகை - 7

*************************************************************************



*****************************************************************
ஜனவரி -94 வழக்கம் போல 120 பக்கங்கள் விலை ரூ. 20/-

ܦ .

இந்த இதழில்.

O

O

نب

பெரியாரியம் - கூட்டு விவாதம்

வகுப்பு வாதம் - நான்கு கட்டுரைகள்

- அ. மார்க்ஸ்

மாற்று மருத்துவ முறையாக - ஓமியோபதி - . அ. மார்க்ஸ்

அந்தோனியோ இராம்ஹி மாற்றுக் கலாச்சாரம்-ஒரு பார்வை . ஆ.மா.

மாற்றுக் கலாச்சாரங்கள் - வாழ்விற்கான சாத்தியங்கள் பற்றிய சில மேலோட்ட மான வார்த்தைகள் . ராஜன்குறை

டங்கல் அறிக்கையும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் . கெயில் ஓம்பேத்

தலித்களுக்குச் சார்பாகவா பன்னாட்டு நிறுவனங்கள்? . எஸ். சி.



அந்த கூட்டு விவாத (மாற்றுக் கலாச் சாரம்) அறிவிப்பு முதலியன.

53

படிப்பகம்

**********************************************************