தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, September 29, 2018

வன சாட்சி - யூமா. வாஸுகி :: கணையாழி - ஜுன் 1995

வன சாட்சி - யூமா. வாஸுகி
வானம் பாதி விழிகள் மூடிய கிறக்கத்தின் உபரி வெளிச்சம் தன் வெளிர் சாம்பல் சருமத்திற்குள் சூழலைத் திணித்திருந்தது. சதுரக் காகிதத்தின் ஒரு முனையில் மட்டும் தொட்டு எழுகின்ற சுவாலை போல அந்தரத்தில் நிலைத்திருந்தது பெருஞ்சுடரின் கூர்மை. ஒளிப்புள்ளிகளைக் கணக்கற்று பிறப்பித்து, மாயைக்குள்ளாக எறிந்து கொண்டிருந்த துளை. அமானுடக் கருவிலிருந்தது . சப்தங்கள் மாய்ந்திருந்தன. அந்த ஜனக் கூட்டத்திற்கு முன்னே நீளும் ராஜபாட்டையின் முடிவில் ஸ்திர இருக்கையிலிருந்தது இலக்கு. தலையசைத்த கட்டளையால் அழைத்தது. - எவற்றாலும் வரையறுக்கப்பட்டு விடாதபடி மாற்றங்கள் தொடர்ந்த முகம். | தோற்றங் கள் - எதுவாயினும் தனக்குத் தானே. செதுக்கிக் | கொண்ட ஒரே பாவனை... தாகம். மற்றொன்று. இன்னும் ஒன்று. மீண்டும் உயிர். அதன் ஆயுதத்தின் கால் பகுதியும் உயிர் நிரம்பவில்லை . | ஏராளமாய் மீதமிருந்த இடத்திற்காக ஜனக் கூட்டம் அசைந்து முன்னேறியது. "

சவ லட்சணம் மெழுகிட்ட திரள் முகங்கள் நிதானமாய் நகர்ந்தன. அவற்றின் மருட்சியான "முறுவலிப்பு. நிகழும் இறுதிக் கணங்களைப் பற்றிய நிஜத்தில் மனந்திரிந்து போனதை வெளியாக்கிற்று.

- அறிந்தது முதல் அனுபவித்த காலத்தின் பழைய செதில்களுள் ஒன்றைத் தேர்ந்து கடைசியாக புதுப்பித்துக் கொள்ள விரும்பினார்கள். காலடியில் மிதிபட்ட பிணங்களின் சிதைந்த உறுப்புகள் முயற்சிகளைத் தடுத்தன, தவறித் தோன்றிய ஒன்றிரண்டு நினைவுகளும் அது நடந்த காலத்தின் பரவசத்தை நிரூபிக்கும் வலுவற்றுத் | தொய்வடைந்திருந்தன. நிராகரிக்கப்பட்ட தளர்ந்த உடல்கள் தெருவின் உதிரத் தேமல்களின் மேல் கால் படாத கவனத்தோடு சென்று கொண்டிருந்தன. தப்பிக்கின்ற வாய்ப்பு வைத்திருந்த மற்ற திசைக் கூறுகளை, இலக்கு, புகை நூற்கின்ற தன. சிலந்தியைக் . கொண்டு மறைத்திருந்தது புகைத் திரையால். மரணித்துக் கிடந்த உடல்களைக் கடந்து இலக்கடையும் தூரம் வரைதான் இருப்பிலிருந்த வாழ்க்கை . ஒருவர் தீர்ந்த கணமே வரிசையின் முடிவு வரையும் அதன் அதிர்வு - நீண்டது. முன்னே செல்பவர்களோடு இடித்துக் கொள்ளாமலிருக்க பின் தங்கி நடந்தார்களே தவிர எவருக்கும் தயக்கமில்லை . ஏனெனில் இலக்கின் அழைப்புக் கட்டளை யானது. அவர்களின் உணர்வாழத்தில் நின்று. அனுமதிக்கப்பட்ட வுழியைச் சுட்டியது.

- அவர்களோடுதான்,, அவர்களில் ஒருவனாக அவர்களைப் போலவே , அவனும் நடந்து கொண்டிருந்தான். " வழி தவறி • இவர்களோடு இணைந்தவன . புதிர்களையும், பயங்கரங்களையும் சுவைக்கக் கற்று விழியிற் தெரிந்தது அனுபவச் சுமை. தேசங்கள் தன் மேன்மையை இவனிடத்திலே இறைஞ்சக் கூடும். இவன் மரம் வரைபவன். பறவைக் கூடுகளின் எளிமையால் நெய்யப்பட்டிருந்தது இவனுடைய ஆன்மா. தொலைவான இருட்கானகங்களின் மரங்களுடாக சலசலத்தோடிய காற்று. அவனைத் தேடிக் காணாமல் சலிப்புற்று, ஏக்கமாய் அருவிச் சாரலோடு கலந்து மலையுச்சிக்குப் போனது. காற்றுப்போக்கில் உராய்ந்து அவன் அண்மைக்காக முனகியது, தன் உள்ளீடற்ற உடம்பில் அவன் பெயரை நிறைத்த மூங்கில் . | சாலைகளின் , கட்டிடங்களின் மேலாகப் பறந்து. . அவனது வரவுக்காகக் காத்திருந்தன இருப்பிடங்களைக் கைவிட்ட பறவைகள். அவைகளின் பார்வைக்கும், ராஜபாட்டையை மறைத்திருந்தது சிலந்தியின் திரை. மையமிழந்து சோம்பின தாவரங்கள், மரங்களின் ஆராதனைக்கென  ஒரே சாதகமாய் தூரிகையிருந்தது . தூரிகையின் இழைக் குச்சங்கள் எப்போது இயக்கப்படுமோ அப்போதெல்லாம் அவனது கித்தான்களில் பெயர்ந்து வாழ்வதற்கு ஆயத்தமாக இருந்தன எல்லாமும்.

- - அருகில் வந்தவர்களோடு, நட்புத் தன்மையான பேச்சைத் தொடங்குவதற்கும் தடையாயிருந்தது ஒளிப்புள்ளிகள், இறப்பு நோக்கிய ஈர்ப்பு சிந்தனையுள்  புகாது கொஞ்ச நேரம் நீடித்தது "சுதந்திர உணர்வு. மிகு தூரத்தில், கண் தெரியாத இடங்களில் புஷ்பிக்கும் மலர்களின் வாசனையை. இருப்பிலேயே நுகரும் புலன் மேய்ந்தது பச்சை உதிர வாடையை. சமரசம் அல்லது உடன்படிக்கை ஏற்பட்டுவிடக்கூடுமென்ற அச்சம் புரிய ஆரம்பித்தது. அவனது "ஒரு தலை தாழ்ந்த வணக்கம் மீட்சிக்கான அமரத்துவச் செய்திகளின் பிரகடனத்தை முறியடிக்கும். வளையக் கூடாதவனாய் பிறப்பித்திருந்தது இயற்கை . முதன் முதலாக தப்பித்தலின் அவசியம் ஆளுமை அற்ற மார்க்கங்களின் பால் உறிஞ்ச முயன்றது. ஒரு சாவு நடந்த அடுத்த வினாடி அனைவருக்கும் ஏற்பட்ட திடுக்கிடல், நடுக்கம் அவனையும் தொற்றியது. ' '

| மரம் வரைபவள் நெருங்கிக் கொண்டிருக்கிறான். சமீபத்திலிருக்கிறது இலக்கு. பலி வேட்கையில் விரிந்து மின்னும் விழிகள்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மரணம். சிரம் துண்டிக் கப்பட்டு- அவயங்கள் சிதைக்கப் பட்டு வெறுமனே நின்ற இடத்திலேயே உயிரற்று விழச்செய்து நடந்தேறியது. இலக்கு ஒருவனது | தொண்டைக்குள் தன் நாவைச் செலுத்த அது நீண்டு உள்ளிறங்கி, குடலையும், பிறவற்றையும் தன் சுழற்சியால் அறுத்தது. மூன்றாவதாகவோ அல்லது நான்காவது ஆளாகவோ லெக்கிளி தரிசனத் திற்குட்படப்போகிறான் வரைபவன்.

| வேர்களின் விசித்திர முடிச்சுகளையும், மரப்பட்டை பிளவுகளிடையே கசிகின்ற திரவத்தையும். கிளைகளின் தேடல் பாஷையையும் உள்ளடக்கிய அற்புதங்களின் பட்டியல் கிழிபடப் போவதற்கு முன்னதாக ஒரு முறை நிமிர்ந்ததில் கழன்று விழுந்தது

அச்சம். அந்த நிமிடத்தில் மகிமைக்குப் புறம்பான விஷயங்கள் எல்லாருடைய மனங்களிலிருந்தும் சில நொடிகள் விலகி நின்று திரும்பவும் இணைந்து கொண்டன. இயற்கை நிலைப்பின ரூபங்களிட' மிருந்து உருவகிக்கப்பட்ட தீர்க்க தரிசன மிக்க ஆறுதல், பின், நடப்புகளை மரம் வரைபவனிடம் . கட்டி முடித்தது. "

- ஒவ்வொரு பலி முடிந்த பிறகும் முன்னிலும் அதிகமான சக்தியைக் கொண்டது இலக்கு. அடுத்ததை தலையிலிருந்து இடுப்பு வரைசரிபாதியாகப்பிளப்பதென்ற முடிவு. மேலோங்கிய ஆயுதம், உயர்ந்த நிலையிலேயே உறைந்தது. இறுகிய கண்ணாடிக் குழம்பா இருந்த இலக்கின சிந்தனையுள் புழு ஒன்றுதானித்து அதன் நெளிவுகளில் ஏற்பட்ட சன்ன விரிசல்கள் எதிர் நின்ற வரைபவனுக்கு பூகமானது. இலக்கு ஆயுதத்தைத் தாழ்த்தியது. இடது கையை உயர்த்தி, விரித்த விரல்களின் முனைகளில் இது காறும் சப்தங்களை விழுங்கிக் கொண்டிருந்த ஒளிப்புள்ளிகள் ஓட்டிக்கொண்டன. இப்போதுதான் ஓசை பிறந்தது.

யார் நீ

அவளைப்பற்றியும், அவன் சார்ந்தவைகளைப் பற்றியும் சொல்லத் தகுதியான வார்த்தைகளை ஆராய்ந்து களைப்படைந்தான். சம்பிரதாயமாக்கப்பட்ட வார்த்தைகளின் மீது ஏற்பட்ட அவ நம்பிக்கை, வினயமற்ற மோனத்தைக் கொடுத்தது. பதிலுக்கென நீளும் அவகாசத்தை இடை முறித்துச் சொன்னது இலக்கு.'

| 'போகலாம் ' நீ... வழி பாட்டுக்குரியவர்களை - நான் கொல்வதில்லை'.

அவன் புன்னகை தடவிய உதடுகளோடு ஏறிட்டுப் பார்த்தான். கண்ணாடிக் குழம்பின் விரிசல்களுக்கிடையில் புழு இப்போது ஆழமான கீறலொன்றை உண்டு செய்திருப்பதை விளங்கி, இலக்கைக் கடந்து மெதுவாக நடக்கத் தொடங்கினான். மீண்டும் வெளியில் தவழ்ந்தன ஒளிப் புள்ளிகள். அடுத்த பலியிலிருந்து தெறித்த ரத்தம், வரைபவனின் பிடறியில் பட்டு வழிந்தது. , ,

- கவிழ்ந்திருந்த புகை ஒடு பிரிந்து மெதுவாக எங்கும் துலக்கமாகிக் கொண்டிருந்த போது எதிர்ப்பட்ட முதலாவது குடிசைக்குள் நுழைந்தான் . யாருமற்ற உள்ளிடத்தில் புனிதமும், தூய்மையுமான மணம் விரவி இருந்தது. அதன் கவர்ச்சியான மயக்கம் மனுஷ அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட பேருணர்வை பிரத்யகப்படுத்தியது. அவயங்களின் இணைப்புகலெல்லாம் வியப்பின் கணுக்களாக்கி வரைபவன் நின்று கொண்டிருந்தான். உடல், உடைமடிப்பிலிருந்து உதிர்ந்தளிப்புள்ளி ஒன்றிலிருந்து அதையொத்த பல நூறு புள்ளிகள் பெருகிச் சுழன்றன. குடிசையின் சுவர்; கடல் திரவம் போலாயிருந்தது. குளிர் மென்மையின் நீல நிற "விசாலத்தினூடே புலப்பட்டுக் கொண்டிருந்தது பெண்ணுருவம். | தோன்றிக் கொண்டிருக்கையிலேயே அவள் உடல் நெளிவுகளில் பீறிட்ட , நவயௌவன வசீகரம் அவன் நினைவுகளை முற்றுமாய்க் கைப்பற்றியது. உருவம் பூர்த்தியாகும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் - அவள் இமைத்தாள். அந்த மோகனச் சிமிட்டலுக்கு வயப்பட்டு ஓரடிமுன் நகர்ந்து, அவளை ஏந்திக் கொள்ளத் தயாராயிருந்தான் . கடைசியாக புருவமும், உதட்டின் வரிகளும் துல்லியமடைந்த பின்னர் அவள் முழுமையான வடிவெடுத்து அவனின் அனுஷ்டானத்திற்குத் தன்னைச் சமர்ப்பித்து நின்றாள்.

ஒன்றினது மற்றொன்றின் ஆளுகையென இரு பிழம்புகளின் ஆவேசக் கலப்பில் தோன்றிய சிரேஷ்டக் கிரணங்கள், குடிலெங்கும் தெய்வ சஞ்சாரத்தின் அடையாளங்களைச் சம்பவித்தன. உடல் அதிர்வுகளில் பூத்தெளிப்பாய் ஆன்மா சிலிர்த்து விழித்தது. முயக்கத் தொடர் அலையின் எழுச்சி, துளைத்துச்சென்றது சகல தப்பிதங்களையும். உடல்கள் குழைந்தன. இறுகின. நெட்டுயிர்த்தன.பாதாளத்திற்கும் - சிகரத்திற்குமான ஊசலாட்டம், காம பரிபாலனத்தை நடத்திச் சென்ற இச்சையின் நிவர்த்தி. தொலைவே நின்று கொண்டு. வனப் பதாதைகளை வீசி நர்த்தனமாடியது. வேகமான மூச்சுக் காற்று. மலைகளில் தூர்ந்து கிடந்த நீர்ச்சுனைகளை எழுப்பி பொங்கச் செய்தது. கரங்களின் வலுவான ஸ்பரிசத் தேடுதலில் கரை உடைந்து எட்டிய இடத்தில் பாய்ந்தது மகிழ்வு. சூன்யத்தில் நிர்ணயமான வாயில்களிடையில் அடங்கியும், ஆர்ப்பரித்தும் மென் துகிலொன்று இரண்டுடற் கலந்த | மாம்ச வாசனையியற்றி களிப்பில் மிதந்தது.
பிணை நிறுத்தி புணரச் செய்து போன ' யதார்த்தம் திரும்புகையில், சொப்ன உலகு, தன் அளப்பரிய விரிவைச் சுருக்கி மறையும் தருணம் நெருங்கிக் கொண் டிருந்த போது, ஏக காலத்தில் பனி உருக தீவிரங் குறைந்தது அக்னியும். களைப் படைந்து சயனித்தவளின் விலாப் புறங்களில் சிறகுகள் முளைக்கத் தொடங்கின . சிறகுகள் முழு வளர்ச்சி அடைந்த பின் பறந்து போக எத்தனித்த அவளைப் பற்றியிழுத்து இறுதியாக இமைகளில் முத்தமிட்டான் மரம் வரைபவன். அவள் இமை ரோமங்களில் சில, அவன் உதடுகளோடு தங்கியது. அவளின் குழந்தைச் சுவாச மணத்தை ஆழநுகர்ந்து இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்ட பின் குடிலின் கதவைத் திறந்தான். வெளியே முன் பார்த்த எதுவுமின்றி செழிப்பின் ஜீவனோடு சூரியனைக் கலந்து. ஆரவாரமாய்க் குலுங்கி' அவனை வரவேற்றது பெருங் கானகம், வனங்களின் சாட்சியானவன் திரும்பவும் காட்டிலேயே தன் உலவுதலைத் தொடங்கினான். காப்பிலிருந்த அவளின் இமை | ரோமங்கள், இலை நரம்புகளின் நுட்பத்தைச் சொல்வதற்கு ஒரு தூரிகைப்பொருளாக உதவக்கூடும்

No comments:

Post a Comment