தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, May 01, 2016

முள் முடி - தி. ஜானகிராமன்

முள் முடி - தி. ஜானகிராமன்

https://archive.org/download/orr-10265_Mull-Mudi/orr-10265_Mull-Mudi.pdf

"அப்ப, எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்துகொண்டது.

"நான் வரேன் சார்”

"நான் வரேன் சார்”

"சார்போய்ட்டுவரேன் சார்”

நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக்கண்களில் ஒற்றிக் கொண்டான். சட்டென்று காலை இழுத்துக் கொண்டார் அனு கூலசாமி.

"அட, இதென்னடா தம்பி"

“செய்யட்டும் சார்-இந்த மாதிரி யார் கிடைக்கப் போறாங்க அவங்களுக்கு? நல்லாயிருக்கணும்னு உங்க வாயாலே சொல்லுங்க, நடக்கும்" என்றார்கண்ணுசாமி.

அந்தப்பையனைப் பார்த்து மற்றப்பையன்கள். அத்தனை பேரும் அவர் காலைத் தொட்டுத்தொட்டு ஒற்றிக்கொண்டார்கள்.

அனுகூலசாமி குன்றிப்போய் நின்றார்.

"இதெல்லாம்.?” என்று அவர் இழுப்பதற்குள் கண்ணுசாமி இடைமறித்தார்: "அனுகூலசாமி, நீங்க நிஜமான கிறிஸ்தவர். முகத்துக்குச் சொல்லலே. முப்பத்தாறு வருஷம் பிரம்பைத் தொடாம, அதிர்ந்து ஒருவார்த்தைசொல்லாம,வாத்தியாராய் இருக்கிறதுன்னா, அந்த தெய்வத்தை விழுந்துகும்பிட்டாத்தான் என்ன?”

"அதெல்லாம் சொல்லாதீங்க”

"நான் சொல்லலே.ஊர் முழுக்கச் சொல்லுது கடைத்தெருவிலே உக்காந்துநானும் விசாரிக்கிறேனா?வயத்திலேபொறந்தபிள்ளையைக் கூட ஒரு அடியாவது எப்பவாவது அடிக்காம இருக்கமாட்டாங்க ஒரு வெசவாவதுவெய்வாங்கஅதுகூடஇங்கேபேசப்படாது இந்தமாதிரி யாரால் இருக்கமுடியும்? குழந்தையும் தெய்வமும் கொண்டாடற இடத்திலே இந்தக் குழந்தைகளை, இன்னும் எத்தனையோபுள்ளைங் களை மனுஷப் பிறவிக்குக் கொடுக்கிற மரியாதை கொடுத்து மதிச்சீங்க."

கண்ணுசாமி பேசும்போது பையன்கள் குனிந்து கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அனுகூலசாமிக்கு வாயைத் திறக்கவே முடிய வில்லை. வாயைத் திறந்தால் குரல் உடைந்து நாக்குப் புரளும் போலிருந்தது.

"நான் வரட்டுமா.அப்ப?”

"செய்யுங்க” என்று சிரமப்பட்டுவாயைத் திறந்து, உடனே மூடிக் கொண்டார்.அவர்.

“எங்களுக்கும் உத்தரவு கொடுக்கணும்” என்று முற்றத்தில் நாயனக்காரர்கும்பிட்டார். அதற்கும் அவரால் தலையசைக்கத்தான் முடிந்தது.

கூடத்துக் கூட்டம் முழுவதும் வாசற்படி வழியாக வெளியேற இரண்டு நிமிஷமாயிற்று.

இரண்டு மூன்று பையன்கள் கிசுகிசுவென்று பேசிவிட்டு,"சார், விளக்கு ரண்டும் இங்கியே இருக்கட்டும் காலமே வந்து எடுத்துக் கறோம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.

வாசல்வரை கொண்டு விட்டுத் திரும்பி வந்தபோது கூடம் வெறிச்சிட்டுக் கிடந்தது. அந்தச் சூன்யமும் நெஞ்சைப் பிடுங்குகிற ஏக்கமும் முன்னே ஒரு தடவை வந்ததுண்டு. பத்துவருடம் முன்னால் லூயிசாவை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வரும் போதுவந்த அதே சூன்யம் அதே ஏக்கம்.

புஸ்ஸ் என்றுபெட்ரோமாக்ஸ் இரண்டும் சூன்யத்தை நிரப்பிக் கொண்டிருந்தன.

தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நாளைக்கு புதன் கிழமை. ஆனால் அவருக்கு சனி, ஞாயிறு, நாளை மறுநாள் அதற்கும் மறுநாள்-இனிமேல் எப்போதுமே சனி, ஞாயிறுதான். பள்ளிக் கூடத்துக்கு இனிமேல்போகமுடியாது.அவருக்கு வயது அறுபதாகி விட்டது. ஒய்வு கிடைத்துவிட்டது.

ஊஞ்சல் மீது உட்கார்ந்துகொண்டார்.அவர் பக்கத்தில் ப்ரேம் போட்ட ஏழெட்டு உபசாரப் பத்திரங்கள். ஒரு வெள்ளித் தட்டு, ஒரு பேனா. கடையில் நாலு ரூபாய் விலை. ஆனால் இங்கு இந்தப் பேனாவுக்கு விலை கிடையாது. நாலு லட்சம், நாலுகோடி பெறும் என்று சொன்னால் வீண்வார்த்தை ஏதோ இரண்டும் சமம் என்று ஆகிவிடும்.

கொர்னாப் பட்டையும் வெள்ளி நூலுமாக நாலைந்து ரோஜா மாலைகள் சுருண்டு கிடந்தன.

ஊஞ்சல் சங்கிலி இரண்டையும் பிடித்துக் கொண்டு நின்றாள் மகிமை பேசவில்லை; அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். இத்தனைமேளதாளங்களும்தழதழப்பும் தனக்குக் கிடைத்தாற்போல ஒரு பார்வை ஒரு நிமிஷம் அவரைப் பருகிக்கொண்டு நின்றவள், சட்டென்று வாசலுக்குப் போய்க் கதவைத் தாழிட்டு வந்து, மாலை களை ஒவ்வொன்றாக அவர் கழுத்தில் போட்டு, தோள்களைப்பற்றி முகத்தைப் பார்த்துக்கொண்டேநின்றாள்.

“என்னைக் கூடத்தான் நீங்கஅடிச்சதில்லே.அதிர்ந்து சொன்ன தில்லே' என்று மார்பில் தலையைச் சாத்திக்கொண்டாள்.

 “உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்ச சாலம், ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல. அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுகிட்டுப் போக்கணுமா? அடிச்சு யாரைத்திருத்த முடியும்?"

“ராட்சசன் மாதிரி கோச்சுக்க வாணாம். ஆம்பிளையா இருக்கறதுக்காவது ஒருதடவை கோபம் வரவேணாம்?"

"வராமயா இருக்கும்?"

“வெளியிலே காமிக்கணும்”

"அதுக்குத்தான் பால்காரி,வேலைக்காரி எல்லாம் இருக்கறாங்க உனக்கு நான் வேற கோச்சுக்கணுமா?"
-
“பள்ளிக்கூடத்திலே அடிக்காம அதட்டாம இருக்கமுடியுமா?

"இருக்க முடிஞ்சுதே' பரவசமாகப் பார்த்துவிட்டு, அவர் மீசையை இழுத்து விட்டு, “காபி சாப்பிடlங்களா?"என்று நகர்ந்துநின்றாள் மகிமை,

அவள் உள்ளே விரைந்தபோது தன் பிராணனே இன்னொரு உடம்பு எடுத்து விரைவதுபோலிருந்தது.மேலே சுவரைப்பார்த்தார். முள் முடியுடன் அந்த முகம் கருணை வெள்ளமாகப் பொழிந்து கொண்டிருந்தது.நாலைந்து படம்தள்ளி இன்னொரு படத்தில் அதே முகம் ஒரு ஆட்டுச்சிசுவை அனைத்துக்கொண்டிருந்தது.

கண்ணுசாமிசொன்னது அப்படியே உண்மைதான்.முப்பத்தாறு வருஷ உத்தியோகத்தில் ஒரு பையனைக்கூட அடிக்கவில்லை; அதட்டிப்பேசவில்லை அவர்.

சுபாவமே அப்படி.லூயிசா பிறந்து,பள்ளிக்கூடம் சேர்ந்து, ஆறு வயதில் ஏதோ விஷமம் பண்ணியதற்காக வாத்தியாரிடம் அடிவாங்கி விட்டது. அந்த வாத்தியார் ஸ்கேலால் அடித்தபோது சட்டைக்குள் இருந்த கோடைக் கட்டியின்மீது பட்டு.அப்பப்பா: அன்று துடித்த துடி! அதைப் பார்த்ததும் சுபாவத்தை சங்கல்பமாகச் செய்து கொண்டார் அனுகூலசாமி.எல்லோரும்செய்த பாவங்களுக்குத்தன் உயிரை விலை கொடுத்தானே, அவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்தான்.

அந்த உறுதி முப்பத்தாறு வருஷமும் ஒரு மூளி விழாமல் பிழைத்துவிட்டது. இல்லாவிட்டால் பதவியைவிட்டு ஒய்வு எடுக்கிற எந்த வாத்தியாரை மேளதாளத்துடன் வீடுவரை கொண்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்?

பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்த பாராட்டுக்கள் போதா தென்று, அவர் வகுப்பு என்று நாற்பது பையன்கள் இருக்கிறார்களே அவர்கள் நினைத்திருக்கவேண்டும். இன்று நடந்தது அந்தக் கூட்டம்தான். மாலை மாலையாகப் போட்டார்கள். மடல் மடலாக வாசித்துக் கொடுத்தார்கள். இருந்தாற் போலிருந்து வராந்தாவில் “உம்” என்ற ஒத்தும், தொடர்ந்து தவுலும் ஒலித்தன.
“என்ன தம்பி, இதெல்லாம்?"

“வேற யாருக்கு சார் செய்யப் போறோம்? வாங்க சார்” என்று நாட்டாண்மை மாதிரி நின்ற பெரிய பையன் அவரை அழைத்தான். அந்த ஆறுமுகத்துக்குவயது இருபத்து மூன்று.இன்னும் பள்ளிக்கூடப் படிப்பு முடியவில்லை. வெகுகாலமாக வாசிக்கிறான். மற்றபடி உலக ஞானம் அதிகம். அனுகூலசாமி பதில் சொல்லாமல் அவன் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு விட்டார். இல்லாவிட்டால் மற்ற வாத்தியார்களைப் பற்றி ஆரம்பித்துவிடுவான். நாலு வார்த்தை சொல்லிக்கூடவிட்டான்.

“எங்களுக்குத் தெரியாதா சார்?நான் ரிடயராகப்போறேன்: நிதி திரட்டுங்கன்னு நீங்க சொல்லலே, கில்ட்டு நகையை வச்சுக் கடன் வாங்கல்லே, கடுதாசைக் காட்டிக் கடன் வாங்கி ஊர்ப் பாவத்தைக் கொட்டிக்கலே."

“சரி-கொஞ்சம் தண்ணி கொண்டுவா” என்று என்னமோ சொல்லி அவனை அனுப்பிப்பேச்சை மாற்றவேண்டியிருந்தது.

அவன் வாயை அடைக்க வேண்டியிருந்ததே தவிர, சொன்னது என்ன மோதப்பில்லை.ஊர்பாவத்தைக் கொட்டிக்கொண்டதில்லை. ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன, கடனை நாமம் சாத்தினால் என்ன?. எல்லாம் ஒன்றுதான். அந்த ஹிம்சையும் அவர் கொடுத்ததில்லை.

நாரணப்பய்யரும் அவர்மாதிரிதான். சம்சாரம் அதிகம் இல்லை. ஒரு பிள்ளை, ஒருபெண்.ஆனால் மனுஷனுக்கு நவத்துவாரமும் கடன். ஜவுளிக் கடையிலிருந்து கொத்தமல்லிக்காரி வரை காலணாவுக்கு மதிக்க முடியாத நிலை வந்து விட்டது. இந்த நிலையிலும் நாரணப்பய்யர் சும்மா இருக்கவில்லை. பட்டணத்தில் கல்வி டைரக்டர் ஆபீசிலே வேலை செய்கிற யாரோ உறவுக்காரன், உங்களை இந்த வருஷம் பரீட்சை அதிகாரிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருக் கிறார்கள்.உத்தியோக பூர்வமாக இன்னும் இரண்டுவாரத்தில் கடிதம் வரும்” என்று ஒரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தைக் காட்டியே, ஐம்பது எழுபத்தைந்து என்று இருபது பேரிடம் கடன் வாங்கிவிட்டார். அந்த வேலைக்குக் கிடைக்கப் போகிற கூலி என்னமோ இருநூற்றுச்சொச்சம்தான்.கடைசியில் கடிதம் பொய்த்து விட்டது. அவ்வளவுதான் ஷராப் கடை நாயுடு நாரணப்பய்யரை வளைத்துக்கொண்டு சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டுவிட்டார், ஏமாந்தகோபம்பிடுங்கினதா பெரிது? சைக்கிளை ஒட்டுகிறது யார்? வாத்தியாராயிற்றே நாரணப்பய்யரே, உம்மால் இந்த இனத்துக்கே அவமானம்!

பாங்க் ஏஜெண்ட் அய்யங்கள்ரையாராவது ஏமாற்றமுடியுமோ? கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கிறவர். அவரிடம் இந்த சாமிநாதன் கைவரிசையைக் காட்டினாரே! வாத்தியார் என்று நம்பி சாமிநாதன் கொடுத்த சங்கிலியை எடைபோட்டு ஒன்பது பவுனுக்கு முன்னுறு ரூபாய்கடன் கொடுத்தார்.அய்யங்கார். சாமிநாதன் பேசாம் லிருந்திருக்கலாம். பதினைந்தாம் நாள் இன்னொரு சங்கிலியைக் கொண்டுபோனால் அதையுமா உரைத்துப் பார்க்காமல் பணத்தைத் துக்கிக் கொடுப்பார்கள்? சங்கிலியை உரைத்துக் கொண்டே புன்சிரிப்புடன், “என்ன அய்யர்வாள் பள்ளிக்கூடத்திலே பையன் சந்தேகம் கேட்டால், சீ அதிகப் பிரசங்கி உட்காருன்னு அதட்டி, நம்ம அஞ்ஞானத்தை மறைச்சுக்கலாம். ஆனால் கடைத் தெருவிலே அது செல்லுமோ என்னமோ? எனக்குத்தான் சரியாகத் தெரியலையோ என்னமோ? சித்தே இருங்கோ, பத்தரை அழைச்சிண்டு வரேன்” என்று வெளியே எழுந்து போனாராம் அய்யங்கார் சாமிநாதய்யருக்கு வயிற்றைப் புரட்டியது. பத்தரைக் கூப்பிட ஆள் இல்லையா? என்ன சமாதானம் சொல்லலாம் என்று அவர் தேடுவதற்குள் பத்தர் வந்துவிட்டார். "ஏட்டு”ம் வந்துவிட்டார். அந்த சாட்சிகளோடு கஜானாஅறையைத் திறந்து பார்த்தபோது, போனதடவை கொடுத்த சங்கிலியும்:' நான்பித்தளை என்று பல்லை இளித்துக்கொண்டிருந்தது. அந்தச்சமயத்திலேகூட அய்யங்கார் வாத்தியார் குலத்துக்கு மதிப்புக் கொடுத்துவிட்டார். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் சாமிநாதய்யரின் அப்போது குழித் தோட்டத்தை எழுதி வாங்கிக்கொண்டு ஆளை விட்டுவிட்டார்.நல்ல வேளை, "ஏட்டு”ம் உடையில் வராமல் வேட்டி சட்டையோடு போயிருந்தார். கூட்டமில்லை; ஊர் சிரிக்காமல் போயிற்று.

இன்னும் நாலைந்துபேரின் நினைவு வந்தது. “ஏண்டாலெ! ரிடையராயாச்சு: இன்னமே கால்வயிறு சாப்பாடுதான். அந்தநாள்ளெ எங்க வாத்யாருக்கு நிதி திரட்டிக் கொடுத்தோம் நாங்க” என்று ஒரு பையனைக் குழையடித்து வசூலுக்குக் கிளப்பிவிட்டார் ராமலிங்கம்

காப்பியை எடுத்துக்கொண்டுவந்தாள் மகிமை,

“என்ன யோசனை? சாப்பிடுங்க, சூடு சரியாயிருக்கு” என்று உபசாரப்பத்திரங்களை ஒவ்வொன்றாக வாசித்துக்கொண்டிருந்தாள். நடுநடுவே பெருமையுடன் அவரை நிமிர்ந்து பார்த்துக்கொண்டாள்.

“அதெல்லாம் நெசம்னு நெனைச்சுக்காதே, இனிமே வேலைக்கு வரமுடியாதுன்னா அளப்போறானேன்னு உளுவாக் காட்டி யிருக்காங்க சக்கரை முட்டாயி”

“தெரியும்.ஆனால் நெசத்தை மட்டும் எல்லாரும் சொல்லியிருக் காங்க” என்றாள் மகிமை."உங்கள் கைநீளாம.குரல்வெடுவெடுக்காம இருந்தது:நெசம்”

“த்ஸ்-பெரிய நெசத்தைக் கண்டுபிட்டாங்க”

"திறமைன்னு சொல்றதும் நெசந்தான்” என்றாள் மகிமை, "தடியெடுக்காம, அதட்டாம, அப்படியே கெட்டிக்காரன்னு பேர் எடுக்கறதும் கஷ்டம்தானே?”

அனுகூலசாமி யோசித்துப் பார்த்தார்.அதுவும் உண்மைதான் என்று பட்டது. அவருக்கு கர்வப்படக்கூட உரிமை உண்டு என்று தோன்றிற்று.
“ஒரு கஷ்டமும் இல்லே. பால்காரி, கூட்டுக்காரி கிட்டயும் அப்படி இருக்கலாம். மனுஷனாப் பொறந்தவன் யாரும், புத்தி யிருக்கறவன் யாரும் அடியிலே நம்பிக்கை வைப்பானா?”

"எல்லாருக்கும் முடியாதுங்க”

"என்னமோ நான் இருந்துட்டேன்” என்றார்.அவர்

"சார்”என்று வாசற் கதவைத் தட்டுவதுகேட்டது.

“யாரு?"

"நான்தான் சார்?"

மகிமை போய்த் திறந்தாள்.

'சார் இருக்காங்களா?”

"இருக்காங்கயாரு?.ஆறுமுகமாவா"

ஆறுமுகம்மட்டும் வரவில்லை.இன்னொரு பையனும் வந்திருந் தான்.அவர் வகுப்பில் படிக்கிற பையன்தான்.கூடஒரு அம்மாள்.வயது நாற்பது நாப்பத்திரண்டு இருக்கும். நெற்றி, காது, மூக்கு கைகளில் ஒன்றுமில்லை.அனுகூலசாமி எழுந்துநின்றார்.

"என்ன சேதி, சின்னையா?”

"சின்னையன் அம்மா சார், இது”என்றான் ஆறுமுகம்

"வாங்க!”

ஆறுமுகம் யாரையாவது அழைத்து வருவதென்றால் சிபார்சு என்றுஅர்த்தம் இருபத்துமூன்றுவயதில் இன்னும் பள்ளிக்கூடத்தை முடிக்காத பையன்! நாட்டாண்மைக்காரன் மாதிரி ஒரு அந்தஸ்து உண்டு அவனுக்கு எதற்கு வந்திருக்கிறானோ? பரீட்சைப்ப்ேப்பர்கூட இல்லையே!

“என்ன ஆறுமுகம்”

"சின்னையன் பார்க்கணும்னான் சார்”

"என்ன சேதி. சின்னையா?”

சின்னையன் பதில் பேசவில்லை. தலை குனிந்து நின்றான்.கேட்டு அரை நிமிஷம் ஆயிற்று: குனிந்த தலைநிமிரவில்லை. அழுதான்.

"சொல்லுடா” என்றாள்.அந்த அம்மாள்.

உற்றுப்பார்த்தார் அனுகூலசாமி.

பையனின் முகச்சதை கோணிற்று உதடுநடுங்கிற்று.

"சொல்லேண்டா” என்றான் ஆறுமுகம்

"ஒரு வருஷமாத் துடிச்சுப் போயிட்டுதுங்க அது” என்றாள் அம்மா.

"ஒருவருஷமாத்துடிச்சுப்போயிட்டுதா?”

"ஆமாம் சார்”என்றான்.ஆறுமுகம்."நீங்க இனிமே பேசலாம்னு சொல்லிடுங்கசார்'

"நல்லாச் சொல்லேண்டா. எனக்கு ஒன்றும்புரியலியே!”

"சாருக்கு மறந்துபோச்சு" என்று அந்த அம்மாளையும் மகிமை யையும் பார்த்தான் ஆறுமுகம்.

எனக்கு என்ன மறந்துபோய்விட்டது?-அனுகூலசாமி யோசித்து யோசித்துப் பார்த்தார்; ஒன்றும் ஞாபகமில்லை.

ஆறுமுகம் சொன்னான்; ‘சார் போன வருஷம் இவன்காயா ரோகணத்தோட இங்கிலீஸ் புஸ்தகத்தைத் திருடிட்டுப்போயி, வேற பேர் ஒட்டி கடையிலே பாதி விலைக்குவித்துப்பிட்டான். நான்தான் அதைக் கண்டுபிடிச்சு உங்களிட்ட கொண்டு நிறுத்தினேன்.”

பையன் விகம்பி விசும்பி அழவே, "சும்மா இருடா” என்று தாயார் அவனைச் சமாதானம்செய்தாள்.

"அப்புறம்'

"நீங்க அவனைச் சித்த நேரம்பாத்திங்க நம்மகிளாசிலே ஒருபய இதுவரைக்கும் இந்த மாதிரிப் பண்ணினதில்லே. இனிமே இந்தப் பயலோட ஒருத்தரும் பேசாதீங்கடான்னு சொன்னிங்க'

பையன் அழுகை நிற்கவில்லை. "அன்னிலேந்து இவனை நாங்க ஒதுக்கிப்பிட்டோம் சார்.யாரும் பேசறதில்லே. அப்புறம் இன்னக்கிப் பார்ட்டி நடத்தினோமில்ல? அதற்குரண்டு. ஒண்ணுண்ணு பையன்கள் கிட்ட வசூல் பண்ணினோம். இவனும் ஒரு ரூபா கொடுக்க வந்தான். வாண்டாம்னுட்டோம். பார்ட்டிக்கும் வரக் கூடாதுன்னிட்டோம். ஒண்ணும் பேசாத போயிட்டான் நேத்து. இப்ப இங்கே வந்திட்டு வீட்டுக்குப் போனேனில்ல, அவங்க அம்மாளை அழச்சிட்டுவந்து திண்ணையிலே நின்னுக்கிட்டிருந்தான். இவங்க அம்மாவும் சொன்னாங்க. அழச்சிட்டு வந்தேன்” என்று பயந்து,மென்று விழுங்கிக்கொண்டே சொன்னான்.

அனுகூலசாமிக்கு அந்தச் சம்பவம் ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் இவ்வளவு கடுமையான தண்டனையா விதித்தோம். ஏதோ சொல்லிவைத்தார்.ஆனால் இவ்வளவு கண்டிப்பாகவா அதை நடத்த வேண்டும்?

"சின்னையாஅழாதடாஏய்' என்றார்.அவர்.

"நாங்கள்ளாம்.அவனோடபேசலாம்னு சொல்லுங்கசார்,நீங்க”

"ஒரு வருஷமா அவன் சொரத்தாவே இல்லீங்க. எப்பவும் சிரிச்சுப் பேசிட்டு இருப்பான். இப்ப சரியாகப் பேசறதில்லே. ஒரு வார்த்தை பேசுவான், போயிடுவான். என்னமோ அதுங்க மனசிலே இருக்கிறது நமக்குத் தெரியுதுங்களா? தங்கச்சிகளோட சரியாப் பேசறதில்லை. இன்னிக்கிச் சாயங்காலம்தான் எல்லாத்தியும் சொன்னான்.ஊட்டுலே அதெல்லாம் விளையாடப் போயிருந்திச்சு. வாத்தியாரை இன்னிக்கிப்பாத்தாத்தான் உண்டுன்னான்.வந்தேன்.நீங்க பெரிய மனசு பண்ணுங்க”

அனுகூலசாமிகையும் களவுமாகப் பிடிபட்டுவிழித்தார்; புழுத் துடிப்பாக அவர் உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது.

"பையனைச் சேத்துக்கமாட்டேன்னுட்டாங்களாம். இதை உங்க கையாலே வாங்கிக்கங்க எல்லோரும் செய்யறப்ப அவன் மனசு கேக்குங்களாட்கொடுடா" என்றாள்.அம்மா.

பையனுக்கு அழுகை அதிகமாகிவிட்டது. கையில் வேர்த்துக் கொண்டிருந்த ரூபாயை நீட்டினான்.

"வாங்கிக்கங்கசார்” என்றுகெஞ்சினான் ஆறுமுகம்,

பேசாமல் வாங்கிக்கொண்டார். “ரொம்ப நல்ல பையன் சார், அன்னிக்கி ஏதோபுத்தி பிசகாப் பண்ணிட்டான்.அப்புறம் ஒரு புகார் கிடையாதுசார் அவன் மேலே”

"நீங்க சொல்லுங்க பெரிய மனசு பண்ணி கூட இருக்கறதுங்க பேசாம இருந்தா என்ன செய்யும்? சிறுகதாங்களே!” என்றாள் அம்மாள். –

"இந்தப் பயலுங்க இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரியாமே போயிடிச்சே எனக்கு" என்றார்.அவர்.

"நீங்கசொன்னதைத்தானே செய்தாங்க” என்றாள் மகிமை

"அது சரி” என்று லேசாகச் சிரித்தார் அவர் அழுகை தான் சிரிப்பாகவந்தது.மேலே படத்தில் தோன்றிய முள்முடி அவர் தலையை ஒருமுறை அழுத்திற்று.

1958
முத்துக்கள் பத்து - 75