தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, May 30, 2016

மெளனியின் மெளனம் கலைகிறது - துர்வாஸ ஜே. வி. நாதன் பேட்டி




மெளனியின் மெளனம் கலைகிறது

மெளனி அவர்களை பேட்டி கண்டவர் : துர்வாஸ ஜே. வி. நாதன்

கண்ணதாசன் இதழில், மறுபதிப்பு கணையாழி

சுறுசுறுப்பு நிறைந்த, 68 வயது இளைஞரான மெளனியைச் சமீபத்தில் சிதம்பரத்தில், அவர் இல்லத்தில் சந்தித்தேன். எழுத்துக்களைப் போலவே அவருடைய பேச்சும் ஒரு உன்னதமான அனுபவமாக மிளிர்கிறது. "உங்களுக்காக நான் பேசவில்லை. என்னையே நான் clarify பண்ணிக்கிறேன்" என்று கூறிக்கொண்டு அவர் பேசுகையில்... எனக்குப் பிரமிப்புத்தான்.

படைப்பவனுக்கும் (கலைஞன்) அவனது படைப்புக்கும் உள்ள சம்பந்தம்பற்றி மெளனி கூறினார் : ஒருவன் தன் பிள்ளை கலெக்டராகப் போக வேண்டும் என்று நினைத்து பிள்ளை பெற்றெடுக்கலாம். அவன் வளர்ந்த பின் ஜெயிலில் இருக்கலாம். தகப்பன் எவ்வளவு தூரம் தன் எண்ணம் ஈடேறாததைக் குறித்து நொந்து கொள்ள முடியும், எந்த விதத்தில் கொள்ள வேண்டும் பிறந்த பிள்ளை தனி object. தனி உயிர் பெற்றது. அது நன்றாக இருக்குமானால் படைப்பாளி தன் மார்பை எப்படி பெருமிதத்துடன் உயர்த்திக் கொள்ள வேண்டும் அல்லது ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு உயரிய கதை எழுதி அனுப்பி திரும்பப் பெற்றால் எந்த மனோபாவம் கொள்ளவேண்டும், psychological mistake என்று சொல்லக் கூடிய தரமற்ற பத்திரிகைகள் அவை என்று தூற்றுவது rational ஆகுமா ? அவை அப்படி இருக்கலாம். ஆனால் இவன் இந்த முடிவிற்கு இந்தக் காரணம் முன்னிட்டுக் கொள்வது logical? தற்போது அநேக குழுவினரையும். ஒரு reaction விளைவாகத்தான் நான் காண முடிகிறது.

படிப்பகம்

________________

www.padippakam.com

159

நான் இப்பல்லாம் ஏன் எழுதறதில்லைன்னு எல்லோரும் கேட்கிறார்கள். எழுத நிறைய விஷயம் இருக்கு. I am a writer and artist always. எனக்கு சுயவிமர்சனம் அதிகம் (self criticism) அதிகம். வரவர விமர்சனப் பார்வை அதிகமாவதால் முன்பு எழுதியவதைவிட இப்போது எழுதினால் இன்னும் புரியாமல்தான் போகும் என நினைக்கிறேன். கலை வெளியீட்டுக்கு (expression) தமிழ் மொழி இப்போதுள்ள நிலையில் செயல்பட முடியாது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதத் தொடங்கிய போது இருந்ததைப்போலவே, விருத்தியடையாமல் தமிழ் இருக்கிறது. எல்லாவற்றையும் in and through words சொல்லியாக வேண்டியிருக்கு. என் மூளை எழுதிப் பார்க்கிற சில அபூத impression களை express செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது.

கலை என்பது என்ன?

அனுபவ வெளியீட்டை அழகாகச் செய்தால் கலை ஆகும். அனுபவம் என்பது வார்த்தையற்றது: உணர்வால் பெறப்படுவது. Experience should be aesthetic. பிருமத்தின் manifestationதான் நாமெல்லோரும். அரூப பிரம்மத்தின் குணங்கள் சொல்லப்படும்போது பல்வகைப்படும். முக்கியமாக, சத் (exists) சித் (consciousness) ஆனந்தம் (enjoyment). மாயை என்பது சம்பந்தப்படும்போது நாமரூபங்கள் 5 வித குணமுடையதாக ஏற்படுகின்றன. நாமரூப பேதமே உலகை விதம் விதமாகக் காட்டுகின்றது. அதனால்தான் அனுபவங்களும் விதம் விதமாக ஏற்பட இருக்கின்றன. பிரத்யட்ச அனுபவத்தில் நான்கு வகையாகப் பிரித்து தனியெனக் காண வகையுண்டு. (1) cognitive mode of experience, (2) Moral code, (3) Religious mode and (4) Aesthetic mode. இதன் அடிப்படையில் பிரத்யட்ச ஞானம் இல்லாத போதும் பழைய அனுபவ ஞாபகத்திலிருந்து - imagination

படிப்பகம்

________________

www.padippakam.Com

160

sublimate ஆகி, symbolical ஆக எழுத்பாது மூலம் படைப்பாக  வெளிவரலாம். இப்படியாக வெளி வியாபகத்திற்கு ஒரு passion மிகத் தேவை. Passion இல்லாத அநேக பெரிய artists அரிய aesthetic experienceஐ அனுபவிக்க முடியும், எழுதாமலே. அநேகமாக இப்படித்தான் என் காலம் இப்போது போய்க்கொண்டிருக்கிறது. அச்சமயம் யாருடனாவது பேசினால் நான் எதை எதையோ, வார்த்தைக்கு அப்பாலிருந்து வார்த்தை மூலம் ஒரு அனுபவத்தைக் கொடுப்பதாகிறது. யார் எவரிடம் என்பதன்றி - அவர்கள் மனோபாவத்தை, விசாலத்தைப் பொறுத்து - எதையும் நினைக்க இருக்கலாம்.

Aesthetive mode of experience என்கிறபோது subjective-objetive மறைந்து போய் mystic levelல்; self contained ஆக சஞ்ஞாரம் பண்ணின்டு universal ஆக place, time எல்லாம் மறைந்து போய்விடுகிற இடம் - அதுவே spontaneous overflow ஆக மாறிவிடுகிறது.. உண்மையான கலைஞனுக்கு அனுபவம் வெளியீடு ஆகும் போதும் வார்த்தைகள் தாமாகவே வந்து விழுகின்றன. நாயைக் கட்டியிழுப்பது போல் வார்த்தைககளைக் கட்டி இழுப்பதெல்லாம் timeல் அடிபட்டு போய்விடக்கூடியவை. 

ஒரு எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரிந்திருப்பதை விட, எதை எழுதக்கூடாது என்று அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்த artistic restraintதான் அவனைக் கலைஞன் அளவுக்கு உயர்த்த முடியும் (consciousness proposes- l d disposes)

என் சிறுகதைகளில் சில வரிகளைப் பாருங்கள் :

விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவதுதானா ஆடவர் வாழ்க்கை கிட்டே நெருங்க கவர்ச்சி கொடுக்காது இருக்க எப்படி முடியும் பெண்களால் இருட்சுடரைக் கொண்டு விளக்காக முடியுமா?" (சாவில் பிறந்த சிருஷ்டி)

படிப்பகம்

________________

www.padippakam.com

161

"நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?" (அழியாச்சுடர்)

ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவாகும் கற்பனைக் கோட்டை" (மனக்கோலம்)

நினைப்பதால் உருவாகிற கோட்டை, நினைப்பதால் இடிகிறது. இரண்டுக்கும் நினைவே காரணமாகிறது.

இந்த வரிகள் யாவும் subjective-objective இரண்டும் ஒன்றாகிக் கலந்து symbolicalஆக மேல் நிலைக்குப் போகிற constructions. வலிந்து கட்டிக் கொண்டு, வார்த்தைகளைக் கோர்த்து இவற்றை உருவாக்கிவிட முடியாது. தானாக, அர்த்த அழுத்தத்துடன் தோன்றி உதிர்ந்தவை இவை.

வார்த்தைகளை வலிந்து அடுக்கி, சுழற்றி மேற்பூச்சு நகாசு வேலை செய்பவன் artist ஆகமாட்டான். அவன் ஒரு artisan அவ்வளவுதான். அதிலும் மொழியின் இலக்கியப் பிரயோகத்தைப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முடியாமல், மேற்போக்கு நகாசுக்கான pliable medium தான் மொழி என நினைப்பவன், (பொற் கொல்லனுக்குத் தங்கம் மாதிரியாக) மொழி மூலமாக creative process எப்படி இயங்குகிறது (symbolical ego) என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவன் கலைஞனாவது முடியாத காரியம்,

"நனவோடை எழுத்தாளர்' என்று சிலரைக் குறிப்பது பற்றி...?

Stream of consciousness என்பது unorganised primary data of experience or perception from an artist. பளீர் பளீரென்று artistஐக் வாட்டக்கூடியது. நமக்கு ஒரு aesthetic satisfactionஐ கொடுக்கக் கூடியது. புரியாததை  தான் தெரிந்தவன் எனக் காட்டத் தெரிந்ததென இரண்டொரு வார்த்தை பிரயோகங்களை தனக்கு இஷ்ட

படிப்பகம்

________________

www.padippakam.Com

162

தேவதையான சில கதாசிரியர்களுக்கு சேர்த்து அடிக்கடி உபயோகப்படுத்துவதால் நிகழும் அபத்தங்களில் ஒன்று இது.

எழுதுவதற்கு, experience பண்ண வேண்டும் என்பது அவசியத் தேவையா?

மனைவி செத்துப்போன ஒருவனின் மனநிலையை மாறுதல் சிறுகதையில் எழுதியிருக்கிறேன். இதோ என் மனைவி உயிருடன் இருக்கிறாள். அனுபவத்தால்தான் எழுத வேண்டுமா என்பது இருக்கட்டும், experience பண்ணுகிறபோது எழுதமுடியுமா...?

குடிகாரன் மாதிரி ஒருவன் நடிக்கிறான். குடித்து விட்டு ஒருவன் மண்ணில் விழுந்து கிடக்கிறான். முன்னது குடிகாரனது நிலை வெளியீடு, பின்னது குடிகாரனின்' வெளியீடு. என் காதல் சாலை சிறுகதையில் ஒரு  குடிகாரன் வருகிறான். அது Drunken states's aesthetic experience ஆகும் - இது ஒரு paradox.

கண்ணதாசன் (செப்டம்பர்-73) எம்.வி.வி. பேட்டியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தவைகளில் சில தவறுகள் நேர்ந்துள்ளன. தேனீயில் வெளிவந்த என் இரண்டு சிறுகதைகள் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டவை, தரப்பட்டவை என்பதைச் சொல்கிறேன்.

'மனக்கோலம் (1948) கதையை என் வழக்கப்படி திருப்தியின்றி வெவ்வேறு script ஆக பதினைந்து தடவைக்கு மேல் எழுதிக் கிழித்தும், கடைசியாக நான் பக்கம் பக்கமாக எழுதிப்போட, கரிச்சான்குஞ்சு அருகிலிருந்து வாங்கிக் கொள்ள மகளின் திருமணம் முடிந்த அன்று நள்ளிரவு ரயிலில் சிதம்பரம் திரும்பியாகவேண்டிய அவசரத்தில் - கரிச்சான்குஞ்சு, கதையின் கடைசிப் பக்கத்தை இன்னொரு தடவை படித்துவிட்டு, வேறு எழுதக் கோரியபோது "அவ்வளவுதான்-அதைத் திருப்பிப் பார்த்தால்-எல்லாமே எனக்குத் திருப்தி தராமல் கிழித்துப்

படிப்பகம்

________________

www.padippakam.com

I63

போட்டுவிட்டு வேறு எழுதத் தோன்றிவிடும். நான் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும்" என்று கிளம்பி விட்டேன்.

எம். வி. வி. தன் பேட்டியில் முதல் கதையை நேரில் கொண்டு வந்து தந்தார். திருத்திப் போடு என்று சொல்லி விட்டுப் போனார், என்று கூறியிருப்பதற்காக இதனைக் கூறுகிறேன்.

இரண்டாவது சிறுகதையை நான் தேனி’க்குத் தந்த கதை இது: அப்போது க. நா. சு. பொறுப்பேற்று நடத்திய சந்திரோதயம் பத்திரிகையின் ஆண்டும் மலர் ஒன்று கொண்டு வரப் போவதால் என் கதை வேண்டு மெனக் கேட்க நான் எழுதிக் கொடுத்த கதை: நினைவுச் சுவடு (1948). சந்திரோதயத்தில் அப்போது உதவி ஆசிரியராக சி. சு. செல்லப்பாவும், ஒவியராக சாரதியும் இருந்தார்கள். சந்திரோதயம் மலர் வெளியிடும் முன்பே நின்று விட்டது. அச்சமயத்தில் எம்.வி.வி. தேனீ! பத்திரிகைக்கு என் கதை அவசியம் தேவையென்று கேட்க நான் க.நா.சு.விடம் வெளியிடாமல் வைக்கப்பட்டிருக்கும் என் கதையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். க. நா. சு. அந்தக் கதைத் தாள்களை கறையான் அரித்துவிட்டதாகக் கூறியதால், மறுபடியும் எம்.வி.வி. என்னை வந்து துளைத்தார். நினைவுச் சுவடு' கதையைத் திருப்தியின்றி மாற்றி மாற்றி எழுதிய கடைசி versionக்கு முந்திய பிரதி தற்செயலாக அகப்பட, அதை அவருக்குக் கொடுத்தேன். அதுவே தேனி'யில் வெளிவந்த எனது இரண்டாவது சிறுகதை.

நான் கதை எழுதுவது என்பதே நாள் கணக்கில் ஏற்படுகிற - சிரமமான விஷயமாக இருக்க, 'கதை எழுதி வைத்திருந்து விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பி திரும்ப வந்துவிட்டது” என்று நான் வருத்தப்பட்டதாக(!) எம்.வி.வி. தன் பேட்டியில் கூறியிருப்பது உண்மையில்லாத விஷயம்.

படிப்பகம்

________________

www.padippakam.com

154

மேலும் அவர் கூறியிருந்தார் : 'மெளனி ஒரு கதைக் கான plot இருப்பதாகவும், எழுதப்போவதாகவும் சொன்னார். plot ஐயும் சொல்க்கொண்டே வந்தார். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சொல்லாதீர்கள். நானே எழுதிவிடுவேன் போலிருக்கிறது' என்று தடுத்தேன். "எழுதேன், அதனால் என்ன? நானும் எழுதுகிறேன்' என்றார். அவர் சொன்ன கதைக் கருவிலிருந்துதான் கருகாத மொட்டு' என்ற என் கதை தோன்றியது. அவர் அதே பிளாட்டைப் பயன்படுத்திக் கதை எழுதுகிறாரா என்று எனக்குத் தெரியாது” - -

எம். வி. விக்கு நான் கூறிய பிளாட்டை வைத்துத் தான் பிரக்ஞை வெளியில் (சரஸ்வதி-1960) என்ற என் சிறுகதை எழுதப்பட்டது.

கருகாத மொட்டு, பிரக்ஞை வெளியில் - இவ்விரு கதைகளுடன் ஜெயகாந்தனின் உடன்கட்டை சிறுகதையையும் சேர்த்துப் படியுங்கள்!

அதே போல, என் எங்கிருந்தோ வந்தான் கதையைப் படித்துவிட்டு, புதுமைப்பித்தனின் காலனும் கிழவியும்’ கதையைப் படியுங்கள். எங்கிருந்தோ வந்தான் சிறுகதையின் இரண்டு வரிகளைக் கொண்டு மிகவும் புத்திசாலித் தனமாக அக்கதையை புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். உண்மையிலேயே அது நல்ல கதையாக அமைந்துவிட்டது.

'ஹிந்து உள்பட முக்கியமான தினசரிகளில் மெளனியைச் சந்தியுங்கள்' என்று எம்.வி.வி. விளம்ரம் கொடுத்தது, கண்ணதாசன் இதழைப் பார்க்கிறவரை எனக்குத் தெரியாது. 

விமர்சகன்  யார் ?

விமர்சகன் என்பவன், தன் மனச்சாயையினைத் தவிர்த்து objective ஆகப் பார்க்கக் கூடியவனே object என்பது தனித்து எதிரில் உள்ளது. அதுபற்றி விமர்சகன்

படிப்பகம்

________________

www.padippakam.com

165

objective validity ஆகக் கொடுத்து value judgement பண்ண வேணுமே தவிர, முன்னதாகக் கொண்ட அபிப்ராயங்கள், தன் மனச்சாயை போன்றவைகளை அளவுகோல்களாகக் கொள்வது அறவே கூடாது (factual judgementக்கு objective validity இருப்பது போன்று value judgementக்கு objective basis உண்டா என்பது ஒரு நிரடான பிரச்சினை...) அந்தக் காலத்தில் நாங்கள் இலக்கியம் பற்றிய விஷயங்களைக் காரசாரமாக விவாதிப்போம். ஒருவர் கதை சரியில்லை என்றால் முகத்துக்கெதிரே சொல்வதில் தயக்கமோ, கேட்பதில் அவருக்குக் கோபமோ வராது.

ஒரு தடவை ந. முத்துசாமி பத்திரிகை ஆரம்பிப்பது பற்றிப் பேசியபோது நான் சொன்னேன்: எந்த articleஐ யார் எழுதிய போதிலும், அதில் ஒரு வார்த்தைகூட அனாவசியம் - சரியல்ல எனில் அந்த articleஐ தூக்கி எறிந்துவிட்டு - தரமான விஷயம் கிடைக்கவில்லையானால் பக்கங்களை வெள்ளையாக விட்டுவிடும் தைரியம் இருந்தால் ஆரம்பிக்கலாம்." - -

நான் சிறுகதை எழுதுகிற process ரொம்ப சிரமம் தருவது, ஒரு தடவை எழுதி முடித்த முழு versionஐ மறுபடியும் மாற்றி எழுதுவேன். திரும்பத் திரும்பப் பலமுறை எழுதுகையில் ஒவ்வொரு தடவையும் கதையின் version புதிதாக மாறியிருக்கும். எப்படி - எத்தனை தடவைகள் எழுதிய போதிலும் திருப்தி ஏற்படுவதில்லை. பத்திரிகையில் வந்த பிறகும், இதைவிட நன்றாக எழுதி யிருக்கலாம் என்ற தோற்றம் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஏதோ ஒரு versionஐ கேட்டவருக்கு அனுப்பி வைத்துவிடுவேன். என் கதைகள் ஒன்றுக்குக் கூடத் தலைப்பு நான் வைத்ததில்லை. எழுதிய கைப் பிரதிகளையோ, அச்சில் வந்தவைகளையோ பாதுகாத்து வைக்கிற பழக்கம் எனக்கில்லை. ..

படிப்பகம்

________________

www.padippakam.com

166

இப்போதெல்லாம் என்னைத் தெரிந்த நிறையப் பத்திரிகைகள் அனுப்பப்படுகின்றன - என் பழைய விலாசத்திற்கு எப்படியோ அவை என் புது முகவரிக்கு வந்து சேர்கின்றன. அநேகம் வராமலும் இருக்கலாம். பத்திரிகைகளில் கவிதைகள் அதிகம் வெளிவருவதாகத் தெரிகிறது. என் கண்களில் cataractக்கும் Retina detachmentக்கும் ஆபரேஷன் செய்த பிறகு படிப்பது ரொம்ப ரொம்பச் சிரமமான விஷயம். எழுதுவது அதைவிட சேர்ந்தாற்போல் 10 நிமிஷங்கள் படித்து முடித்து 10 நிமிஷம் கண்களுக்கு ஒய்வு கொடுத்துத் திரும்பவும். இப்படித்தான் இப்போதும் நாளைக்கு இரண்டு மணிக்குக் குறையாமல் ஏதாவது செய்கிறேன்.

எது கவிதை?

என் சிறுகதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் கவிதையே. poem is a linguistic artifact whose function is to organise the primary data of experience that can be exhibited in and through words.

சிறுகதை எழுதுவதன் குறிக்கோள் என்ன?

நான் இதற்கு என்ன பதில் கூறவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? காசுக்காக-புகழுக்காக-கலை, கலைக்காக-என்றெல்லாமா? இதே கேள்வியைச் சற்று மாற்றி ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் எனைக் கேட்டார். "Why do you write?" என்று அவருக்குக் கூறிய பதிலையே கூறுகிறேன் “என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லைஅதனால் எழுதுகிறேன்..."

நான் நிறைய எழுத வேண்டும். சிறுகதைகளாகஎன் இலக்கியக் கொள்கைகளைக் கட்டுரையாக என்றெல்லாம் வற்புறுத்துகிறார்கள். எழுத வேண்டும் என்ற வேகமும் எனக்கு இருக்கிறது. இப்போதுள்ள

படிப்பகம்

________________

www.padippakam.com

167

தமிழ், வெளியீட்டுக்கு சரியான அளவில் துணை புரிய முடிவதில்லை, சிரமப்பட வேண்டியிருக்கிறது - எப்படியும் எழுதுவேன்.

'தீபம்’ பட்டிமன்றத்தில் 'தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரிந்துவிடக் கூடாது என்று எழுதுபவர்' என்று என்னைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். "ஞானரதம் பத்திரிகையில் சுயதரிசனம் என்று தான் பேசியதைத் தொகுத்து எழுதினார்கள். அக்கட்டுரையில் பல பிழைகள்... என் எழுத்தே எனக்குப் புரியாததை பிறருக்குப் புரியாத வகையில் இருப்பதாக இருக்கிறதே! நான் பேசுவது புரிந்தவர்கள் பிறருக்குப் புரிய எழுதுவது எப்படியிருக்க முடியும்? இப்போது நான் பேசியதைப் புரிந்து நீங்கள் எழுதி வெளியிடப் போவதாகச் சொல்கிறீர்கள்...?!

நான் பெயரளவில்தான் மெளனி எனவும், ஓயாமல் பேசுவேன் என்றும் எம். வி. வி. தன் கண்ணதாசன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். நான் நிறைய பேசுவேன். பேசுகிறேன். பேசுவது எதிரில் இருப்பவர்களுக்காக அல்ல. என்னால் சுவற்றுடன் பேச முடிய வில்லை. வார்த்தைகள் மூலமாக self clarification பெறும் நோக்கமே என் ஓயாத பேச்சுக்குக் காரணம். என் சிறுகதைகளை நான் பலமுறை ஏன் எழுதிப் பார்க்கிறேனோ, அதே காரணம்தான் என் பேச்சுக்கும். எதிரில் இருப்பவர்களுக்குப் புரிய வைப்பது என் வேலையென்று நான் நினைக்கவில்லை In and through wordsல் எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. பேச்சில், எழுத்தில் என் impressionகளை, experienceகளை சரியாக express செய்ய நான் பெரிதும் பாடுபடுகிறேன்.

அதனாலேயே நான் பெரிதும் நம்புகிறேன்: “My works will live, so long as Tamil lives”. *

ΔΔΔ

படிப்பகம்

https://tamilbooksdb.blogspot.com/2018/05/Mowniyudan-oru-nerkaanal-Interview.html

தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள் அண்மையில் நிறைவெய்தினார். சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் அவரை ஒருதடவை சந்தித்தாலே போதும், அவருடைய தும்பை மலர் போல் வெண்ணிறமான, அடர்ந்து திமிறி நிற்கும் தலைமுடியும்; சிற்பியின், ஓவிய விரல்களில் தினவு எடுக்கச் செய்யும் முகபாவமும், அவரின் உரையாடலும், அவரது உயர்ந்த கலைப்படைப்பைப் போலவே பசுமையாக நினைவில் நிற்கும்.

மெளனி அவர்கள் கணிதத்தில் பட்டம் பெற்றவர். ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர்; சங்கீதத்தில் பயிற்சி கொண்டவர்; தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்; மெளனியின் ஆளுமை, கணிதத்தால் ஏற்பட்ட அறிவுநுட்பமும், சங்கீதத்தால் உண்டான கலையுணர்வின் நளினமும், இலக்கியத்தால் வந்த கற்பனையும், தத்துவம் அளித்த தீர்க்க முடியாத தாகமும், இத்தனையும் உள்ளடக்கியது. அவருடன் உரையாடும்போது நம் மனக்கண் முன்பு ஒரு மாபெரும் உலகம் விரிகிறது.

உயர்ந்த இலக்கியப் படைப்பு ஒவ்வொரு தலைமுறைக்கும் புதுப் புதுப் பொருளையும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தையும், ஒருத்தருக்கே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறாகத் தோன்றும்படி இருக்கும் என ஆங்கிலக் கவி ஆடன் கூறியிருப்பது மெளனியின் இலக்கியப் படைப்புக்கு மிகப் பொருந்தும். அவர் எழுதி அச்சில் வெளிவந்தது மிகக் குறைவுதான். ஆனால், எழுதி வைத்து அச்சில் வராதது சுமார் 2 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன!

இரு உலகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காலத்தால் படைக்கப்பட்டது. இவ்வுலகத்தில் தவிர்க்க முடியாத தேவை, மாயை, துயரம், மாறுதல், அழிவு, இறப்பு யாவும் மாற்ற முடியாத சட்டங்களாக இருக்கின்றன. மற்றோர் உலகமோ ஊழுழியால், காலங்கடந்த நிரந்தரத்தால் படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே சுதந்திரம், அழகு, அமைதி கொலுவீற்றிருக்கின்றன. நம் சாதாரண அனுபவம் காலத்தால் படைக்கப்பட்ட அந்த முதல் உலகத்தில் நடைபெறுகிறது. ஆனால், அந்த இரண்டாம் உலகத்தின் காட்சி, தற்செயலான சுயமாய் எழும் நினைவாலும், ஆழ்ந்த த்யான உணர்வாலும், தோன்றும்போதே மறையும் அந்தக் காலத்துளிகளில், கணங்களில் புனையா ஓவியம் போல் தெரிகிறது. மெளனி என்னும் மாபெரும் கலைஞன் அந்தக் காலத்துளிகளின் மின்னொளியைப் பிடித்துக் காலத்துக்கு உட்பட்ட இவ்வுலக அனுபவத்தின் மேல் பாய்ச்சுகிறார். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்றாரே அந்த நிழல்களின் மேல் தெரியும் வினா விடைகளைக் காணலாம்.

தங்கள் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களாகவும், இலக்கியத் துறையுடன் தங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது பற்றியும் தீபம் வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லவா?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில், ஆங்கில இலக்கியத்தையும் பிற பாஷைகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உலக இலக்கியங்களையும், படித்து உணர்ந்து ரஸிக்கும் ஆர்வம் பலரிடம் இருந்தது. அவர்களில் நானும் ஒருவன். ஒருவகையில் என் மனோபாவத்தைப் பொறுத்து, ஏன் நாமும் அதைப் போலத் தமிழில் எழுத முயலக் கூடாதென்பதின் விளைவாக என் எழுத்து தோன்றியது போலும். வேறு ஒரு வகையிலும், நான் ஏன் அப்போது எழுத ஆரம்பித்தேன் என இப்போது என்னால் அனுமானிக்க முடியவில்லை. 1934லிலிருந்து முடிவிற்குள், அநேக அரைகுறை கதைகளையும், பூர்த்தியாகாத நான்கு ஐந்தையும், ஒரு நெடுங்கதையும் எழுதிவிட்டேன். என்னைப் பொறுத்த மற்றொரு விஷயம், உருவாகிவிட்டதென்பதற்கு, அச்சுக்குப் போகும் வரையிலும் பலப்பல உருமாறத்தான் திரும்பத் திரும்ப எழுதுவது வழக்கம். இவ்விதமான என் வழக்கத்தினால் என் கதைகள் ஒன்றுக்கும் ஒரு நகல் எனச் சொல்லும்படி என்னிடம் ஒன்றும் இருந்ததில்லை. அச்சில் வந்து எனக்கு அனுப்பிய பிரதிகளையும் நான் கவனமாகக் காப்பாற்றுவது கிடையாது… 1959ல் என் கதைகளை சேகரம் செய்ய க.நா.சுவும், சி.சு.செ.யும் எடுத்துக் கொண்ட முயற்சி நான் சொல்லுவதை மெய்ப்பிக்கும்.

‘மணிக்கொடி காலம்’ பற்றித் தாங்கள் வாய்மொழியாக விளக்கிக் கொள்ள வாசகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஒரு சிறிது கூறுங்களேன்?

இந்தக் கேள்வியை நான் எப்படி விளங்கிக் கொண்டு பதிலளிப்பது என்பதில் கொஞ்சம் சிரமம் தோன்றுகிறது… ‘மணிக்கொடி காலம்’ என்பது 1932 – 38 வரை. (வ.ரா. பி.எஸ். ராமையா, பா.ரா. இவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு) வெளியான காலத்தைக் குறிப்பதென்று எண்ணி ‘மணிக்கொடி’யில் என்னுடைய பெரும்பான்மையான கதைகள் வெளிவந்ததென்பதை எண்ணிச் சொல்கிறேன். மேலே குறிப்பிட்ட ஆர்வங்கொண்ட அநேகருடைய கதைகள் அதில் வெளிவந்தன. அதிலும், பி.எஸ்.ரா. காலத்திலிருந்து சிறுகதைகளுக்கு எனவே வெளிவந்த பத்திரிகை என்பதில் அதிகமாகவே வந்தன. கதைகளின் புதுத் திருப்பமும், நோக்கும் அநேகர் கவனத்தை ஈர்க்க இருந்தன. அவைகளின் இலக்கியத் தராதரத்தை விமர்சகன் ஏற்று நன்கு தெரிந்து சொல்ல வேண்டியது கடமை. என்னுடையது என்பது என் அபிப்பிராயம். என் கதைகள் மணிக்கொடியில் வர நேர்ந்தது ஒரு எதேச்சையான சம்பவமெனத்தான் எனக்குத் தோன்றுகிறது. யார் யார் கதைகள் அதில் எந்த்ந்தக் காரணங்களுக்காக வெளிவந்தன என்பதை என்னால் சொல்ல இயலவில்லை. ஒருவகையில் என் கதைகள் வேறு எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவந்தோ அல்லது வெளி வராமலோ இருந்து இருக்கலாமெனக் கொள்ளலாம்…

தங்களுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நேராகவோ கடித மூலமாகவோ தொடர்பு இருந்ததா? புதுமைப்பித்தனைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?



மணிக்கொடியில் என் இரண்டாவது கதை வெளிவந்தவுடன், எங்கள் ஊர்வாசியான ந. பிச்சமூர்த்தி அவர்கள் (பழைய மணிக்கொடி எழுத்தாளர் என்பதில்) எனக்கு அறிமுகமானார். அதோடு கூட அவர் நண்பரான கு.ப.ராவும் என் வீட்டிற்கு சமீபத்தில் இருப்பவர்கள். முன்பே இவர்களைத் தெரியுமானாலும், நான் ஒரு கதாசிரியன் என்ற பாவத்தில் சொல்கிறேன். பிறகு நான் இவர்களை சந்தித்துப் பேசுவது வழக்கம். ந.பி. வக்கீலாகத் தொழிலாற்றிக் கொண்டிருந்தவர். அடிக்கடி அவரிடம் பேசுவது முடியாது. கு.ப.ரா. என்னைப் போன்றவர். அவரை அடிக்கடி சந்திக்கவும் பேசவும் வாய்ப்பிருந்தது… அநேகமாக இலக்கிய சர்ச்சைகள்தான். நானும் என்னை ஒரு விதத்தில் விமர்சகன் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டு. (அத்தொழிலை வெகுவாக என் எழுத்து வெளிவரும் முன்பு அதனிடம் உபயோகிக்கிறேன்). என் பேச்சில் சுவாரஸ்யம் கண்டவர் போலும். அதை எழுதித் தன்னிடம் கொடுக்கும்படி அநேக தரம் கேட்டதுண்டு. பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அடிக்கடி நான் அவரிடம் கூறுவதுண்டு. 

ஒருநாள் கு.ப.ரா. என்னை ஒரு கதை எழுதிக் கொடுக்கும்படி கேட்டார். 1937ல் தினமணி ஆண்டு மலரை வெளியிடும் பொறுப்பைப் புதுமைப்பித்தன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும், அவர் ஒரு துல்லியமான இலக்கிய உணர்வு கொண்டவர் என்றும், மேலும் அவரே ஓர் உயர் இலக்கியப் படைப்பாளி எனவும் சொல்லி, என்னுடைய கதையை அவர் போடுமாறு அவருக்கு அனுப்புவதாகச் சொல்லி கேட்டார். புதுமைப்பித்தன் பற்றியும், மணிக்கொடியில் எழுதுவதிலிருந்து எனக்குப் பெயர் பரிச்சயம் உண்டு. எனக்கு அப்போது எழுத ஒன்றும் தோன்றவில்லை. முடியவில்லை என்று சொல்லவும் இயலவில்லை. ஆரம்ப காலத்தில் எழுதியிருந்த ஒரு அரைகுறை கதை, பிறகு எழுதிய ஒரு அரைகுறை இவைகளை ஒன்றாக சேர்த்து (பின்பகுதி முன்னாலும் முன்பகுதி பின்னாலும் எழுதப்பட்டது) ஒரு பெரிய அளவில் (எனக்கு நீள அளவில் எழுதுவது வழக்கமல்ல) ஒரு கதையை அவரிடம் கொடுத்ததுதான் ‘எங்கிருந்தோ வந்தான்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 1939ல் ஒருதரம் சென்னை சென்றபோது அவரை நேராக சந்தித்தேன். பிறகு 1945 வரையில் அவ்வப்போது போகும்போது நேர்ந்தால் சந்திப்பது என்பதில் ஒரு நான்கைந்து தரம் சந்தித்துப் பேசியிருப்பேன். அதிகமான தொடர்பு இல்லை. எனினும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண்ட வகையில்தான் தோன்ற இருக்கிறது போலும். என்னைப் பற்றி 1946ல் வானொலியில் அவர் பேசியதும் எனக்குத் தெரியாது. சிதம்பரத்தில் வசித்த க.நா.சு. ‘பொன்னி’ என்ற ஒரு பத்திரிகையில் அதைக் காணா எனக்குக் காட்டியதுதான் தெரியும்.

ஒரு ஐரானிகல் ஆட்டிட்யூட் இயங்க ஒரு பிரமாதமான சாதனையைத்தான் புதுமைப்பித்தன் இலக்கியப் படைப்பில் காட்டியிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகில் அவருக்கு நிச்சயம் ஒரு ஸ்தானம் உண்டு. இலக்கியப் பார்வை என்பதில் ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’க்கு எந்த மதிப்பு என்பது விமர்சனத்திற்கு உரியது. அவர், க.நா.சு. சொல்கிறபடி அவருடைய ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’ இயங்கிப் பிரமாதமான சாதனை காட்டினாலும் ஒரு பூரண இலக்கியத்தன்மை உருப்பெறாத அளவில் ‘ஒரு மேதையைத் தமிழ்நாடு இழந்தது’ எனக் கொள்வது சரி. (‘ஐரானிக் ஆட்டிட்யூட்’டில் பூரண இலக்கியத்தன்மை உருப்பெற முடியாது என்ற சித்தாந்தம் இதைவிட ஓர் உயரிய ‘ஆட்டிட்யூட்’ இருக்கிறது என்பதைக் குறிக்கும். அதில் யாராவது இருக்கிறார்களா என்பதையும் விமர்சகர்கள்தான் கூறவேண்டும்). க.நா.சு. ஒருவரின் மதிப்பீட்டை ஒருவகையில் சரி என ஒப்புக் கொள்கிறேன். ”மேதைத்தன்மையும், கலையில் ஒரு பூரணத்துவம் காண முடியாதபடிக்கும், அவருடைய தனித்துவம் காட்ட முடியாதபடியும் ஆனதற்குக் கலையாக்குவதிலும், கட்டுப்பாட்டிலும் அவர் நம்பிக்கையற்ரவராக இருந்துவிட்டதினால்தான்” என்பதை நான் வேறு ஒரு வகையாகக் காண்கிறேன். அவர் ஐரானிக் ஆட்டிட்யூட்டில் இலக்கியம் படைத்ததனால் என்று கொள்ளும்படி எனக்குத் தோன்றுகிறது. இலக்கியப்படைப்பில் ஐரானிக் ஆட்டிட்யூட்தான் சிறந்ததெனச் செயல்பட முடியுமென்பது முடியாது. இந்தப் போக்குப் புத்தியைச் சார்ந்தது என்றும் மனதை சார்ந்து முழுமனிதன் செயல்பட இடம்கொடுக்க முடியாதென்பதையும் நான் ஒருவகையில் உணர்கிறேன். புதுமைப்பித்தனுக்கு இந்த மாதிரியான உணர்வும் அடிக்கடி தோன்றியிருக்கலாம். என்னைப் பற்றிய அவருடைய மதிப்பீடு வாசகங்களினூடே அதை நான் அனுமானிக்கிறேன். ஐரானிக் ஆட்டிட்யூட்டில் உயர்வகை இலக்கியம் ஒருவகையில் முடியும் என்பதைப் புதுமைப்பித்தனைப் போல எழுதும், எழுத ஆசை கொள்ளும் அநேக படைப்பாளிகளின் தரத்தை உணரும்போது நமக்கு விளங்கும். ஐரானிக் ஆட்டிட்யூட் இலக்கிய மதிப்பு ஒருவகையில் ரிலேட்டிவ் ஆகத்தான் இருக்க முடியும். அவர் கதைகளில் காணும் ஒரு அதிசய பிரமிப்பு முழுதும் பூர்த்தியாக செயல்பட முடியாதவாறு அனுபவமாவதில், இன்னும் சிறிது காலம் இருந்து அவர் ‘போஸ்’ என இந்த ஆட்டிட்யூட் மாறி வேறுவிதமான இலக்கியம் படைத்திருப்பாரோ எனவும் நினைக்க வேண்டியிருக்கிறது. சமய சந்தர்ப்பம் சூழ்நிலை இவைகளின் நிமித்தம் உண்டாகி ஒரு ‘போஸ்’ எனத் தோன்றியது. விடாது பிடிக்கும் நிலைமை அடைந்து அதை விட்டு விலக முடியாது. மேலும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இந்த நோக்கிற்குச் செயல்படுகிறது என்றும் சொல்லலாம்.

தாங்கள் நீண்ட காலமாக எழுதாமலிருக்கிறீர்களே ஏன்? புதுமைப்பித்தன் தங்களைத் திருமூலரோடு ஒப்பிட்டிருக்கிறார். இனிமேல் திருமந்திரம் ஒன்றாவது கிடைக்குமா?



ஏதோ ஒரு சமயம் எழுதியவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலில் என்னை இந்தக் கேள்வி கேட்டதற்கு நான் பெருமை கொள்கிறேன். அப்போது நான் எப்படி எழுதினேன் என்பதே இப்போது எனக்குப் புரியவில்லை. எனக்கு நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உண்டு. எப்படி எழுதுவது என்பது வர வர வெகு கடினமாகவே தோன்றுவதை உணருகிறேன்… இவ்வகையில் கடினமெனத் தோன்ற தமிழ்மொழி வெகுவாக என்னைப் பொறுத்தவரையில் தொண்டாற்றிக் கொண்டு வருகிறது. என்னைத் திருமூலருடன் ஒப்பிட்டது எதற்கென என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வாக்கியத்திற்குப் பிறகு அவர் சொன்னதிலிருந்து ஒருவகை அனுமானம் கொள்ளவும் என்னால் முடியாமல் இருக்கிறது. நான் திருமந்திரம் படித்ததில்லை… புதுமைப்பித்தன் உயிரோடிருந்தால் அவரை நான் பதிலளிக்கக் கேட்டிருப்பேன்.

தற்காலத் தமிழிலக்கியம் பற்றித் தங்கள் கருத்துக்கள் யாவை?

நான் எழுதுவதை சந்தர்ப்பம் நிர்பந்தத்தினாலல்லாது பிறருக்கு தெரியப்படுத்துவது இல்லை. ஒருவகையில் நான் எழுத்தாளன் எனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதில் வெட்கம் கொள்ளுபவன் என வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வகையில் ஆதி நாட்களிலிருந்து என்னை எழுத்தாளனாகத் தெரிந்தவர்கள், எழுத்தாளர்களிலேயே சிலர்தான் இருக்கிறார்கள். அதாவது ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா. சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி.சு.ம, ஆகியவர்கள்தாம். இப்போது சமீபகால இலக்கிய உலக நடப்புகளைச் சில சமீப கால நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்டதில் என் அனுமான அபிப்பிராயமெனச் (தற்கால தமிழ் இலக்கியத்தில் சிறிதுதான் பரிச்சியம்) சொல்ல, சமய சந்தர்ப்ப சூழ்நிலை சரியாகப்படவில்லை என்ற லெளகீக காரணத்தை முன்னிட்டு, முடியவில்லை என்பதற்கு மன்னிக்கவும்…

சிறுகதை இலக்கியப் படைப்பில் தங்கள் நோக்கில் தொழில் நுணுக்கங்களாக எவற்றை கூறுகிறீர்கள்?

எந்த அம்சம் தொழில் நுணுக்கமென, நான் என் சிறுகதைப் படைப்பில் கையாண்டேன் என்பது சொல்லும் வகைக்குத் தெளிவாக உணர்வு கொள்ளவில்லை. ஆனால், ஒன்று சொல்லலாம் என நினைக்கிறேன். எதைச் சொல்கிறோம் என்பது, எப்படி சொல்லுவது என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம். ஒன்றைவிட்டால் இரண்டும்கெட்டு ஒன்றுமே இலக்கியமெனத் தோன்ற உண்டாகாது.

தங்களின் இலக்கியப் பார்வை அல்லது தத்துவத்தைக் கூறுவீர்களா?

இலக்கியம் என்பதற்குப் பதில் கலை என்பதாகக் கொண்டு சிறிது கூறுவது ஒருவகையில் சுலபமாகத் தோன்றுகிறது. இது ஒரு வகையில் உங்களுக்கு ஆச்சர்யமாகப் படலாம். இலக்கியம் என்பது கலையின் ஒரு பிரிவு என்பதில்… ஆனால், இலக்கியம் என்பது வார்த்தைகள் மூலம் செயல்படுவதன் காரணமாக வார்த்தைகள் என்பது அதன் அருத்தத்தின் குறியீடு என்பதினாலும்… மொழி என்பது இலக்கியத் தத்துவத்திற்கு, என்ன உறவுடையது என்பது மிகவும் சிரமம் கொடுக்கக் கூடியது. சில காலம் முன்பு நான் கலை இலக்கியம் என்பதைப் பற்றி நன்கு உணர்ந்தவன் என்று இறுமாப்புக் கொண்டிருந்தேன். தற்காலத்தில் சில விமரிசனத் தோரணைகளும், தமிழ் மொழியில் விரிவும் நன்கு உணர ஏற்பட்டதிலும் மேலும் சமீபமாக சில ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க நேர்ந்ததாலும் இந்த எண்ணம் எவ்வளவு அறிவீனம் என்ற நினைவு ஏற்படலாயிற்று. நான் கண்ட கலைத் தத்துவம் இலக்கிய தத்துவத்துக்கு வேறு முரணாகத் தோன்றியதால் அல்ல வெளியீடு பற்றிய சிரமம், ஆங்கில மொழி விரிவையும் நம் மொழியின் குறைவையும் நான் வெகுவாக வருத்தத்துடன் காண நேர்ந்தது.

அதாவது ‘தான்’ தன்னை மங்கலாக உணர்கிறது. அது உண்மையும் அழகும் நிறைந்ததாயும் உணர்கிறது. அந்த நிறைவைத் தன் முன்னாலேயே ஒரு புறநிலைப் பொருளாக, தனக்கு எதிரான மற்றொரு ‘தான்’ ஆக இல்லாமல், பிரக்ஞை இல்லாமலே உருவாக்கிக் கொள்ளுகிறது. இப்படியாக, இந்த தான் மங்கலாக வெளிப்பட்டதை உண்மையென உணர்ந்து கொண்டே செல்லுகிறது. இந்த நிலையில் கலை, தத்துவம், சமயம் எல்லாமே ஒன்றாக இருக்கின்றன.

இலக்கியப் படைப்பில் படைப்பாளியும், இரசிகனும் ஒருவகையில் ஒன்றெனப்படுவார்கள். படைப்பாளி யாருக்காகவும் படைப்பதில்லை. இரசிகனும் பிறர் படைத்ததென உணர்ந்து படித்து இரசிப்பதில்லை… இலக்கியப் பொருள் என்றோ அழகிய பொருள் என்றோ ஒன்று இருப்பதாக எண்ணி அதைப்பற்றிச் சுற்றி வளைத்து எழுதுவது இலக்கியமாகாது… பிரத்திய அநுபவம் ஒரு நிலை ஒரு பார்வையில் கொள்வதில், அதில் ஒன்றியும், தன் மனம் புலன்கள் இரசித்து உணர்ச்சி வசப்படாது ஒரு நோக்கு காட்சியெனக் காட்டுவதுதான் உயர்ந்த இலக்கியத் தத்துவமெனப் படுகிறது.

‘தீபம்’ பற்றி தங்கள் கருத்தென்ன?

இலக்கியத் தரமான பத்திரிகை நீண்டகாலம் வாழ்ந்தது இல்லை. நீடித்து வாழ்வதெல்லாம் இலக்கியத் தரமாக இருப்பதில்லை என்று தோன்றி உருவாகிய ஒரு போலி நியதியைத் ‘தீபம்’ பொய்யாக்கும் என நம்புகிறேன்