தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, May 28, 2016

சிதைவுகள் - அஸ்வகோஷ் (ராஜேந்திரசோழன்)

தற்செயல் சிறுகதை தொகுப்பிலிருந்து

www.padippakam.com

சிதைவுகள் - அஸ்வகோஷ்(ராஜேந்திரசோழன்)

வாழ்க்கையை கற்பனை மயமான புஸ்தங்களில் மாத்திரமே படித்து பிரேமைகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப்பற்றிச் சொல்கிறேன். இப்போது நினைத்தாலும் அது எவ்வளவு விடலைத்தனமாது என்று தான் தோன்றுகிறது என்றாலும் ஆப்பது இது அநுபவம் நேர்ந்தது என்பதை என்னால் சொல்லாமலிருக்க முடிய வில்லை.

நான் பி.யூ.சி. பெயிலாகி விட்டோடிருந்தது. படித்துக் கொண்டிருந்த சமயம் அது. எனக்கு எதிர் விட்டுக்காரியாயிருந்தாள் அவள். நல்ல அழகு. பார்க்கும் போதே இன்னொரு தடலை பார்க்கத்துரண்டும். பார்த்துக் கொண்டே இருக்கலாமா என்று தோன்றும்.

அவளைப் பார்க்கும் போது மனசு என்னிடத்தில் இருக்காது. எங்கோ மிதக்கிற மாதிரி இருக்கும். எப்போதோ ஒரு காலத்தில் நான் அவளோடு மிக நெருங்கிய செளஜன்யம் வைத்திருந்தது மாதிரி. அதற்குக் காரணம் எனக்குத் தெரியாது. எந்தக் காலத்திலும் அவள் எனக்கு பழக்கமானவளல்ல என்பது என்புத்திக்குத் தெளிவாகவே தெரிந்தாலும் அவள் எனக்கு அந்நிய மானவள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 27

இத்தனைக்கும் அவள் கல்யாணமானவள். புருஷன் உள்ளூர்ப் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் வேலை செய்கிறான்.

என் வீட்டுக்கு நேரே தெரு. தெருவைத் தாண்டினால் அவளுடைய வீடு. முழங்கால் உயரச் கற்றுச்சுவர்களுக் கிடையே முற்றம். முற்றத்துக்கு அப்பால் கதவு. முற்றத்திலே அவள். சாயங்கால நேரத்தில் புருஷனின் வரவுக்காக காத்துக் கொண்டு நிற்பாள்.

மழுங்க வாரி படிய விட்ட தலை. எண்ணெய்ப்பூச்சு கறுகறுவென்று பளபளக்கும். காதோரங்களில் சிலுப்பி வளைந்திருக்கும் கறுப்பு மயிர். சிவந்த கன்னம், சின்ன மூக்கு. கண்கள் எப்படியிருக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. சாதாரணமாய் இருக்கும். எதையும் புரிந்து கொள்ள முடியாது.

முன்பக்கம் சார்ப்பு இறக்கிய மரத்துரணில்சாய்ந்து பின்வாகாக கைகளைத் துர்க்கி தூணைக் கட்டிக்கொண்டு நிற்பாள். அக்குளின் ஈரமும் இளமையின் செழுமையும் தெரியும். பக்கவாட்டில் இடுப்பு பளபளக்கும் முழங்கைக்கு மேலே சிவந்த தளதளப்பான சதைகளை ரவிக்கைப் பட்டை இறுக்கிப் பிடித்திருக்கும்.

திண்ணையில் உட்கார்ந்தபடி புஸ்தகம் படிக்கிற சாக்கில் அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். என் பக்கம் அதிகமாய்த் திரும்ப மாட்டாள். திரும்பினாலும் எனக்காகத் திரும்பின மாதிரியிருக்காது. அகஸ்மாத்தானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதனாலெல்லாம் எனக்கு சலிப்பு ஏற்படவில்லை. அவள் பார்க்கா விட் உால் பரவாயில்லை. அவள் அங்கேயே நின்று கொண்டிருக்க வேண்டும். நான் பார்த்துக் கொண்டே யிருக்க வேண்டும். -

வீட்டில் அவளும் அவள் புருஷனும் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த வீட்டுக்கு அவர்கள் வந்து கிட்டத்

படிப்பகம்

________________

www.padippakam.com

28 அஸ்வகோஷ்

தட்ட ஒரு வருஷம் ஆகிறது. இந்த ஒரு வருஷத்தில் விருந்தாளிகள் யாரும் வந்ததாகவோ போனதாகவோ நான்பார்த்தது இல்லை. அவர்கள் ரெண்டே பேர்கள் தான் எல்லாம்.

காலையில் அவன் ஆபீஸுக்குப் போய்விடுகிறான். மத்தியானம் வந்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் போய் விடுகிறான். அவள் மட்டுமே தனியாகக் கிடக்கிறாள். பாவம் பேச்சுத் துணைக்குக்கூட யாரும் கிடையாது. யார் கூடவும் பேசவும் மாட்டாள் போலிருக்கிறது.

அவளைப் பார்க்கும் போது மனசு ரொம்ப இளகி விடுகிறது. அவள் மீது எனக்கு எந்த விதமான பிரியம் என்றோ எந்த அளவுக்கு நான் அவளை விரும்பினேன் என்றோ, அப்போது எதுவும் _ எனக்குத் தெரியாது. அவளோடு பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும்! அன்பாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. அவள் ஏதாவது பிரியப்பட்டுக் கேட்டு அதையெல்லாம் நான் வாங்கிக் கொண்டுவந்து கொடுக்கவேண்டும் போல் இருக்கிறது.

சிலசமயம் இதெல்லாம் பயித்தியக்காரத்தனம் மாதிரித் தோன்றும். ஆனால் அது கொஞ்ச நேரம் தான். பொழுது போகப் போக அப்படித் தோன்றிய தெல்லாம் அர்த்த மற்றதாகி விடும். அவளையே பார்த்து உருகிக்கொண் டிருப்பேன். எப்போதாவது நண்பர்களோடு எங்காவது வெளியூர்போய் விட நேர்ந்தால் கூட சாயங்காலமானால் மனசு வதையும். அவளைத் தனியே தவிக்கவிட்டு வந்து விட்ட மாதிரி கிடந்து வாடும். சீக்கிரமே விடு வந்து சேர்ந்து விட வேண்டும் போல் இருக்கும். வந்தால்தான் நிம்மதி:

சாயங்கால நேரங்களில் மட்டும்தான் அவளை இப்படிப் பார்க்கமுடியும். பகல் நேரங்களில் அவனை

படிப்பகம் -

________________

www.padippakam.com

தற்செயல் 29

வெளியே பார்ப்பதே அபூர்வம். எப்போதாவது வந்தாளானாலும் இந்த மாதிரி நிற்க மாட்டாள்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தியிருள் பரவும். தெருவும் வீடும் லேசாய் மங்கும். பூவரச மரத்தில் இருள்?உறையும். நடுநடுவே வெள்ளை வானம் திட்டுத் தெரியும். அவள் தோற்றம் நிழல் உருவாய்க் கலங்கும். முகமும் முழங்கைகளும் மறைந்துவிடும். புடவை வெளுப்பும், ரவிக்கை வெளுப்பும் கம்மலாய்த் தெரியும். இன்னமும் அவள் அங்கேயே நிற்கிறாள் என்பதற்கு அது தான் அடையாளம்.

நான் திண்ணையை விட்டு அசையவே மாட்டேன். மனம் வராது. ஒளிமங்கிய மோகனகரமான பிஞ்சு இருளில் தேவ கன்னிகை மாதிரி அவள் நின்றுகொண்டிருக்கிறாள். நேரே எழுந்து கிட்டேபோக வேண்டும். பக்கத்தில் நிற்க வேண்டும். நெருங்கி இறுக்காமல் விலகியே வாயில் சேலையை மட்டும் வருடி அதன் ஸ்பரிசத்தை சுகிக்க வேண்டும். மேலே இதமாய் அவளைத்தாங்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் மனசு கிளுகிளுக்கும்.

அவன் வருவான்.

கொரட்டுப் படியேறிப் போவான்.

அவள் என்னமோ கேட்பாள். எதுவும் தெளிவாய்க் காதில் விழாது. வெறும் குரல் மட்டும் தான் கேட்கும்.

இரண்டு பேரும் உள்ளே போய்விடுவார்கள். கதவு மூடப்படும்.

எனக்கு வேதனையாய் இருக்கும். பெருசாய் பெருமூச்சு வெளிப்படும். பேசாமல் எழுந்து எங்காவது வெளியே போய் உலாவி விட்டு வரலாமா என்று புறப்படுவேன். உலாவலிலும் மனம் லயிக்காது. வீட்டுக்கே திரும்பி விடுவேன்.

படிப்பகம்

________________

www.padippakam.com

30. அஸ்வகோஷ்

இரவு சாப்பாட்டுக்கு மேல் இருவரும் கொஞ்ச நேரம் வெளி முற்றத்தில் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். நிலாக் காலமானால் அது கூட கொஞ்ச நேரம். இல்லாவிட்டால் சீக்கிரமே உள்ளே போய் விடுவார்கள்.

எனக்கு ஏக்கம் பிடித்து விடும். மனசில் நிம்மதி இருக்காது. இத்தோடு மறுநாள் சாயங்காலம் தான் என்ற நினைவே நெஞ்சை அரிக்கும். இரவு வேண்டாததாய் கிடந்து நீளும். எப்போது விடியும் என்று இருக்கும்.

சில சமயம் சீ, என்னமாதிரிப் புத்தியிது. அசிங்கம்! இப்படியெல்லாம் தோணலாமா, தப்பு இல்லையா என்றும் தோன்றும். எல்லாம் ராத்திரியோடுதான். பொழுது விடிந்தால் மீண்டும் அவள் எதிர் வீடுதான்!

இப்போது கொஞ்ச நாளாய் முழுகாமல் இருக்கிறாள். ஏறக்குறைய மாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதல் பிரசவமாக இருக்கலாம். முன்னைவிட அழகாக இருந்தாள். கைகளும் கால்களும் கதனை கதனையாக அளவோடு பூரித்திருந்தன. முகத்தில் ஒரு அசாதாரணக் களை. கன்னம்-கழுத்து, இடுப்பு, வயிறு எல்லாமே பசபசப்புத் தட்டிப் போய் பச்சென்று பசுமையான புல்தரையைப் பார்ப்பது மாதிரியிருக்கிறது அப்படியே ஆசையாய் மேனி பூராவும் தடவிப் பார்க்க வேண்டும் போல் தூண்டுகிறது.

சாயங்காலத்தில் முன்னே மாதிரி அவள் நிற்பதில்லை. உட்கார்ந்து கொண்டு விடுகிறாள். தூக்க முடியாத பாரத்தைத் துக்கிச் சுமப்பது போல அவள் நடந்து வருவதும் உட்காருவதும் விசித்திரமாய், ஒரு வயிறு பெருத்த செரிமானம் ஆகாத குழந்தையை நினைவூட்டு கிறது.

பார்க்கப் பார்க்க கனிவு சுரக்கிறது.

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 31

தலைப் பிரசவமாயிற்றே! யாராவது வந்து அழைத்துப் போய் விடுவார்களோ! என்று பயமாகவும் இருக்கிறது.

ஆனால் யாரும் வரவில்லை,

பாவம்! சொந்த பந்தம் எதுவும் கிடையாதா? யாருமே வந்து பார்த்துப் போகவில்லையே. எப்படி கூடவே இருந்து பூச்சு பூச்சு என்று மேனி நலுங்காமல் பதுவிசாய் வைத்துக் காப்பாற்றவேண்டிய நேரம். இப்படி அநாதரவாய் விடப்பட்டுக் கிடக்கிறாளே. வீட்டில் எல்லா வேலைகளையும் அவளே தான் செய்கிறாள் போலிருக்கிறது லேசாய் அவளோடு பழக்கமிருந்தால் கூட, கூட மாட ஒத்தாசையாக அவளோடு சேர்ந்து வேலை செய்ய லாம். வெந்நீர் வைத்துக் கொடுக்கலாம்.

அவன் என்னத்தைக் கவனிக்கிறானோ! அவள் மட்டும் என் வீட்டிலிருப்பவளானால் அவளை எப்படி யெல்லாம் வைத்திருக்கலாம். தொட்டுக் குனிந்து ஒரு வேலை செய்யவிடாமல்.

மனம் கசிகிறது. அவள் குந்தியிருப்பதைக்கான யார் பெத்த பெண்ணோ” என்று அநாதையாய் தோன்று கிறது.

கிட்ட போய் பக்கத்தில் குந்தி ஆறுதல் சொல்ல வேண்டும். தொட்டு, தொட்டு, பட்டு மாதிரி அணைத்து. கைகால்களை அமுக்கிவிட்டு, வயிற்றைப் பிரியத்தோடே தடவி: கொஞ்சி, நெஞ்சை நீவிட்டு எந்த நேரமும் பக்கத் திலேயே கிடந்து அணைத்து நெருடிக் கொண்டு. ஏதோதோ தோன்றுகிறது.

எண்ணங்களால் கரைகிறேன்.

இருள் வருகிறது. இருண்டு இரவாகிறது.

வீட்டில் நான், அம்மா, ரெண்டாங்கிளாஸ் படிக்கிற ஒரு பாப்பா மட்டுமே, அம்மாவும் பாப்பாவும் உள்ளே

படிப்பகம்

________________

www.padippakam.com

32 அஸ்வகோஷ்

படுத்துக் கொள்ள்ார்கள். நான் மட்டும் காற்று வாட்டத் துக்காக வெளியே படுப்பது. திண்ணையில். நல்ல தூக்கம்: யாரோ எழுப்புகிற மாதிரி.

"gsr庁。.. 写7庁...""

"யாரவது" என்று எழுந்திருக்கிறேன்.

"நான் தான் சார் எதிர் வீடு தூக்கத்ல எழுப்பிட்டேன்னு ஒண்னும் நெனச்சிக்காதிங்க'

ரொம்ப கூச்ச சுபாவம் மாதிரித் தெரிகிறது.

'பரவாயில்லைங்க?? என்கிறேன்.

"கொஞ்சம் சைக்கிள் கொஞ்சம் வேணும் சார். மிட் ஒய்ஃப் ஊட்டு வரிக்கும் போய் வரணும். ஊட்ல மோசமாயிருக்குது:

தூக்கி வாரிப் போடுகிறது எனக்கு.

அவளுக்கு மோசமா?

“என்ப்டியிருக்குது" என்கிறேன். அதற்குள் துடித்துப் போய் விடுகிற மாதிரியிருக்கிறது.

"ஒண்னுமில்லிங்க பெயின் அதிகமா இருக்குதாம் ரொம்ப முடியாம இருக்கறா அதான் இட்டாந்துட லாம்னு’

திண்ணையில் இருள். அவன் உருவம் மங்கலாய்த் தெரிகிறது. ஊர் சுமாரானதுதான். கவர்ன்மெண்ட் ஆல்பத்திரி இருக்கிறது ஆனால் ஊரை விட்டு தள்ளி ஒரு முககால் மைலில். ஆஸ்பத்திரி, எல்லோருக்கும் குவார்ட்டர்ஸ் எல்லாம் அங்கேதான்.

"எப்படி போய் கூப்டுக்ணு வந்திடப் போறிங்களா?:

"ஆமா சார்:

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 33

"சரி. தோ இருங்க” கதவைத் தட்டுகிறேன்.

சைக்கிளை வழக்கமாய் பூட்டி வைப்பது. சாவி உள்ளே இருக்கிறது. அம்மாவை எழுப்புகிறேன். கதவைத் திறந்தாள் அம்மா. "என்னடா:

எதிர் வீட்டுக்காரர் இல்ல. அவுங்க சம்சாரம்"

"எப்படியிருக்குதாம்?"

அம்மாவிடம் பதில் சொல்லி சாவியைக் கொண்டு வந்து தருகிறேன். கிளிக் என்று பூட்டைத் திறந்து, ஸ்டாண்டைத் தள்ளி சைக்கிளைத் திருப்புகிறவன் 'சார்' என்கிறான்.

1 என்னங்க’

"ஒண்ணும் இதுவா நெனச்சிக்காதீங்க. ஊட்ல அவ தனியாக இருக்கறா. கொஞ்சம் பாத்துக்கோங்க. வர்ரவரிக்கும்.”

'ஜிவி ஜிவு’ என்று உடம்பெல்லாம் என்னவோ ஏறு கிறது. இந்த சந்தர்ப்பத்திலாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளப் போகிறோமே.

"அம்மா’’ என்கிறேன்.

அவன் சொன்னது அம்மாவுக்குப் புரிகிறது.

'இங்கதான் இர்ரா. பாப்பா தனியா கெடக்கறா. அலண்டு அழப்போறா. எப்படியிருக்குதுனு போய் பாாத் துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

தெருவில் மங்கிய நிலா வெளிச்சம். எதிர் வீடு மங்கி யிருக்கிறது. திறந்த சன்னல் வழியே வெளிச்சம் தெரி கிறது. விளக்கு வெளிச்சம் உள்ளே அவள் இருக்கிறாள். என்னமாய் இருக்கிறாளோ! ரெண்டு வீட்டையும் பார்த்த மாதிரி சும்மா தெருவிலேயே இருக்கிறேன்.

*- படிப்பகம்

________________

www.padippakam.com

34 அஸ்வகோஷ்

லேசாய் அவள் முனகுவதும் புரள்வதும் காதில் சலனப்படுத்துகிறது. அம்மா அவளோடு ஏதோ பேசு கிறாள். பதில் குரல் தீனமாய் கீச்சு கீச்சென்று ஒலிக்கிறது. போய் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

"சுகு' என்கிறாள் அம்மா. என்னைத்தான்.

"என்னம்மா வீட்டை நோக்கி நாலடி எடுத்து வைக் கிறேன்.

'அந்த வெத்தலஒலப் பெட்டிய எடுத்துக்ணு வா. தல மாட்டுல இருக்கும் பாரு..

அம்மாவால் வெறும் வாயோடு கொஞ்ச நேரம் குந்தி பேசிக் கொண்டிருக்க முடியாது.

ஒலைப்பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழை கிறேன்.

நடையிலே சுவற்றோரம் அவள் வெறும் கோரைப் பாயிலே படுத்துக் கிடக்கிறாள். முகம் வேதனையாலும் கலவரத்தாலும் பிசைந்தெடுத்தமாதிரி வலி ரொம்பத் தான் இருக்கும்போலிருக்கிறது._பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறாள்.

‘என்ன ஆகுமோ என்று பயம். "நல்ல படியாய் முடிய வேண்டுமே என்ற ஆர்வம். பக்கத்தில் குந்தி என்ன கண்ணு. எப்டிமா இருக்குது. எங்கம்மா வவிக்குது என்றெல்லாம் கேட்க வேண்டும் போலிருக்கிறது.

இரண்டு கையாலும் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நெளிகிறாள். நான் வந்தது தெரியுமோ தெரியாதோ

நானெல்லாம் அவளுக்கு ஆதரவாய் இருக்கிறேன் என்று தெரிந்தால் வலி குறையுமோ என்னவோ!

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 33

பேசாமல் நிற்கிறேன். தவிப்பு கொள்ளவில்லை.

‘ஏண்டா. ஊட்ல போய் இரு. ஏன் இங்க நிக்கிற?" என்கிறாள் அம்மா.

அவள் வலியினால் அவதிப் படுகிறாள். பக்கத்தில் இருந்து ஒத்தாசை செய்வதற்கில்லை. பேசாமல் வந்து விடுகிறேன்

பிரசவம் நல்ல படியாய் முடிந்து விட்டது. இன்னும் எழுந்து நடமாட ஆரம்பிக்கவில்லை அவள், இள்னும் பத்து நாட்களாவது ஆகுமாம். படுத்த படுக்கையாகத் தான் கிடக்கிறாள். அம்மா அடிக்கடி போய்ப் பார்த்துக் கொண்டு வருகிறாள்.

பிரசவித்த பலகீனம், ரொம்ப மோசமாகிப் போயிருக் கிறாள். பார்க்கவே என்னமோ மாதிரி யிருக்கிறது. கசங்கிய புடவையும் கலைந்த தலையும், நோய்ப் பிடித்தாற் போன்ற இளைத்த தேகமும் ஆளே உருமாறிப் போயிருக்கிறாள். முகத்தில் களையோ ஒளியோ இல்லை ஜீவனில்லாமல் இருக்கிறது.

எனக்குள் எதையோ இழந்துவிட்ட மாதிரி வெறுமை யுணர்ச்சி, ஏனென்று தெரியவில்லை. எப்போதாவது சில சமயம் அம்மா அவள் வீட்டில் குந்திக் கொண்டிருக்குக் போது மட்டும் போகிறேன். சாப்பாடு போட அம்மாவைக் கூப்பிடுகிறேன்.

அவள் படுக்கையிலோ அல்லது சுவர் ஒரம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டோ இருக்கிறாள். குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். நான் உள்ளே நுழைவதாலோ, என்னைப் பார்ப்பதாலோ அவளிடம் எந்தவிதமான மாற்றமும் இருப்பதாகப் படவில்லை. குழந்தை வாயிலிருக்கும் மார்பை மட்டும் லேசாய் மூடிக் கொள்கிறாள். அதைத்தவிர வேறு எதுவுமே இல்லை. பரஸ்பரம் தெரிந்த முகங்களாய் சந்தித்துக் கொள்கிற

படிப்பகம்

________________

www.padippakam.com

36 அஸ்வகோஷ்

போது ஏற்படுகிற ஒரு மலர்ச்சிகூட இல்லை. சலனமில் லாமல் இருக்கிறது.

நினைக்க நினைக்க எல்லாம் சலிப்பாய் இருக்கிறது. எல்லாமே பறிபோய் விட்டது மாதிரித் தோன்றுகிறது. எனக்கென்று எதுவுமே இல்லை. எங்குபோய் விட்ட தென்று புரியவில்லை. வீட்டிலிருக்கப் பிடிக்காமல் வெளிய்ே போய் விடுகிறேன். எங்காவது போய்ச் சுற்றி விட்டு வருகிறேன். பழைய அவளை நினைத்துப் பார்க் கிறேன். எல்லாமே அர்த்தமற்ற அவளாய்த் தெரிகிறது. தளர்ந்து வீடு திரும்புகிறேன். அம்மா ஏதோ முனகுவது கேட்கிறது.

'இவ்வளோ இதுவா இருப்பான்னு நாங்கூட நெனைக் கல. ஒண்ணு கண்ணுல காட்ட மாட்டன்றாளே அந்த புள்ள கையில கூடப் பொறந்த தம்பியாயிருந்தா உடு வாளா பொண்ணு பெரிய வெண்தான். நாங்கூட என்னமோவாங்காட்டியும்னு நெனச்சேன். ஐயோ பாவம் மசமசன்னு கெடக்குதேன்னு. சும்மாவா சொன்னாங்க ஊம ஊரக் கெடுக்கும்னு'

"யாருமா” உள்ளே நுழைகிறேன்.

தோ அந்த எதுர் ஊட்டுப் பொண்ணு தாண்டா' அந்தப் பையன் பாவம். எவ்வளோ வேலை செய்யுது. அதுக்கு வயித்துக்கு போட்டா என்னடா, நறுக் நறுக்ணு தொடையப் புடிச்சுத் திருவிடறா. பாவம் புள்ள என்னமா துடிச்சிப்புடறான்'

எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவள் வீட்டில் கொஞ்ச நாளாய் ஒரு பையன். அவள் புருஷனுடைய தம்பியாம் ஏழெட்டு வயதிருக்கும். விடுமுறையில் அண்ணிக்கு ஒத்தாசையாக இருக்கும் என்று அழைத்து வந்திருப்பான் போலிருக்கிறது. பையனைப் பார்த்திருக்கிறேன்.

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 37

நல்ல பையன். அண்ணன் மாதிரியே முகம். சாது. கூச்ச நாச்சமெல்லாம் கூட அதே தான்.

அந்தப் பையனையா அவள் அடிக்கிறாள். அவளா?

"அந்த ஆள் ஒண்னும் கேட்டுக்கறதில்லையா' என்கிறேன்.

"ஆமா. கேட்டான் போ. அவன்தான் பொண்டாட்டி குத்துக்கு பிருமணையாயிருக்கிறானே'

அதற்குமேல் எதையும் காதில் வாங்கச் சக்தியில்லை. அம்மாவையும் எதுவும்கேட்கவிலலை. சாப்பிடஉட்கார்ந்த போதும் சாப்பாடு இறங்க வில்லை. மனசைப் போட்டு பிழிகிறது. எல்லாம் சூன்யம் மாதிரித் தெரிகிறது.

இரவெல்லாம் தூக்கம் இல்லை, வெகு உயரத்திலிருந்து கீழே உருட்டிவிட்ட மாதிரி அவள் காட்சி தருகிறாள். அகல விரிந்த விகாரமான கண்கள் கோரமாய் வெறித்து நோக்க கூர்மையான நகங்கள் பதித்த கைகளை நீட்டிக் கொண்டு வருகிறாள். ஏன் அப்படி யெல்லாம் வருகிறாளோ?

தலையை உலுப்பிக் கொள்கிறேன். ஒன்றும் பயனில்லாமலே போகிறது.

முற்றத்தில் அவள். காலை நீட்டிப் போட்டு குழந்தை யைக் காலில் குந்த வைத்து உட்கார்ந்திருக்கிறாள். எண் ணெய்ப்பிசுக்கேறிய கலைந்த தலை. கழுவாத முகம். கசங்கிய ரவிக்கை. புரட்டியெடுத்த மாதிரி புடவை. தொடை வரிக்கும் வழித்துவிட்டுக் கொண்டிருக்கிறாள். குழந்தை வெளிக்கிப் போகிறது.

நடுநடுவே மூக்கை உறிஞ்சிக் கொள்கிறாள். சத்தம்போட்டுச் சிந்துகிறாள். சிந்தியதை பக்கத்திலிருக்கும் சுவற்றில் மொழுவி கைகளை புட்டத்தில் துடைத்துக்

படிப்பகம்

________________

WWW.padippakam.com

38 அஸ்வகோஷ்

கொள்கிறாள்.

மாராக்கு விலகி தளர்ந்த மார்பு பக்கவாட்டில் தொங்குகிறது. பால் கசிந்து நனைந்த ரவிக்கை. ஈரமாய். மொப்பு அடிக்கும்.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு எழுந்திருக்கிறாள். பூவரச மரத்தடியில் படுத்திருக்கும் நாயைக் கூப்பிட்டு விடுகிறாள்.

நாய் நக்குகிறது. சளுக் சளுக் கென்று.

உள்ளே போய் செம்பில் நீர் கொண்டு வந்து குழந் தையைக் கழுவுகிறாள். முற்றத்தில் மீதி நீரை நாய்

நக்கிய இடத்தில் வீசுகிறாள். துடைப்பம் எடுத்துக்கூட தள்ளவில்லை.

புடவையிலேயே குழந்தையைத் துடைத்துக் கொள் கிறாள்.

அருவருப்பாய்த் தொண்டையைக் காருகிறாள். சத்தம் போட்டு காறிய சளியை ஒரம் துப்பி விட்டு உள்ளே போகிறாள்.

என் முகம் சுருங்குகிறது.

நான் நின்றதனாலோ, பார்த்ததனாலோ, அவளிடம் எந்த வித கூச்ச நாச்சமோ தயக்கமோ காணோம். குறைந்தபட்ட நாகுக்குக்கூட இல்லை. பவ்யம் தெரி யாதவள்.

நான் தலையைப் பிடித்துக் கொள்கிறேன். எவ்வளவு நேரமோ!

இருள் கவிகிறது. கவிந்து இருள்கிறது. எல்லாம் இருளாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் அவள் எனக்கு எவ்வளவு ஸ்வாரஸ்யமானவளாய்த் தோற்றமளித்தாள். அது எவ்வளவு மகோன்னதமான விஷயமாகவும், மோகன

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 39

ரசம் ததும்புவதாயும் இருந்தது. இப்போது எல்லாம் கனவுகளா! அவளை என் இதயத்துக்குள்ளேயே புனிதமாய் வைத்து பூஜித்து வந்ததும், வணங்கியதும் யாருக்குமே தெரியாத ரகஸ்யமாய் உள்ளேயே வெதும்புகிறது.

அம்மா விளக்கைக் கொண்டு வந்து மாட்டுகிறாள். எதிர்வீட்டில் பையன் அலறுகிற சத்தம் கேட்கிறது. 'இல்லண்ணி. இல்ல. இனிமே செய்ய மாட்டேன். கேக்காம தொடவே மாட்டேன். எடுக்கமாட்டேன் அண்ணி... எடுக்கமாட்டேன்...”

"பாவி. என்னமா போட்டு அடிக்கறா. பெத்த புள்ளையா இருந்தா இப்படி போட்டு அடிப்பாளா? நாலு எழுத்து படிச்சிருந்தாள்னா புள்ளைங்களோட அரும தெரியும் அம்மா சொல்கிறாள்.

அடி என் மேலேயே விழுவதுபோல் படுகிறது. நான் மெளனமாய் வெளியே கிளம்புகிறேன். 

"விழிப்பு’’ ...... D.

படிப்பகம்